அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்! (Post No.3028)

Hermann's tortoise shutterstock_78129739

Research Article written by london swaminathan

Date: 2nd  August 2016

Post No. 3028

Time uploaded in London :–  6-26 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

அகநானூற்றுப் பாடல் 361ல், வேள்விக் குண்ட ஆமை  (தித்தியம் ஆமை )  பற்றி சொல்லப்படுகிறதே; அப்படியானால் யாகத்தில் ஆமையும் உயிர்ப்பலியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று ஒரு வாசகர் கேள்வி கேட்டவுடனே, எனக்கும் முழுப் பொருள் தெரியாது, அதுவும் அகத்துறைப் பாடலில் இப்படி ஒரு உவமையைப் பயன்படுத்துவது பொருளற்றதாக இருக்கிறது என்று மார்ச் மாதக் கட்டுரையில் வியப்பு தெரிவித்திருந்தேன். இப்பொழுது யாக, யக்ஞங்கள் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிக்கையில் திடீரெனப் புதுப் பொருள் கிடைத்தது. அது, பாட்டில் உவமைக்கும் பொருத்தமாக இருக்கிறது.

அகநானூறு 361
‘தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,    (5)
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்’ என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர,     (10)
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,     (15)
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. –
எயினந்தை மகனார் இளங்கீரனார்

yaha kunda

 

“வாடாத மலரையுடைய தேவர் உண்பதற்காகத் தீ ஓங்கிய வேள்விக் குண்டத்தில் இடப்பட்ட ஆமை தான் முன்பு இருந்த நிழல் பொருந்திய பொய்கையில் போவதைப் போல………………………”

பாடல் வரி கரியாப்பூவின் பெரியோர்’ = வாடாத மலருடைய பெரியோர்கள்= தேவர்கள்

தித்தியம்= வேள்விக் குழி (யாக குண்டம்); வியப்பான விஷயம்! சுமார் 30,000 வரிகளையுடைய சங்க இலக்கியத்தின் 18 புத்தகங்களில், இந்த தித்தியம் என்னும் சொல், ஒரே இடத்தில்தன் கையாளப்பட்டுள்ளது!

 

நான் கண்ட புதுப் பொருள்:-

யாக குண்டம் கட்ட  செங்கற்களைப் பயன்படுத்துவர். இந்த நிகழ்ச்சிக்கு ‘அக்னிசயனம்’ என்று பெயர்’. பிரஜாபதியை உருவகப்படுத்தி ஆகவனீயம் என்ற தீயை அமைப்பர்; இது முத்தீக்களில் ஒன்று. ஐந்து மிருகங்களின் தலைகளும் அதில் பொருத்தப்படும்; அவைகளின் உடல்கள் நீரில்   எறியப்படும். அந்த நீரைக்கொண்டு செங்கற்கள் செய்யப்படும். எறும்புப்புற்று மண்ணையும், ஒரு குழியிலிருந்து கிடைத்த மண்ணையும் கொண்டு யாகம் நடத்துவோரின் மனைவி முதல் செங்கலைச் செய்வாள்.

 

யாகம் செய்பவர் மூன்று செங்கற்களையும் சட்டியையும் செய்வார். அதன் மீது புதிய செங்கற்கள் செய்யப்படும்.

தீட்சைக்குப் பின்னர், பல வகை வடிவங்களில்– கழுகு, பருந்து, தண்ணீர்த் தொட்டி வடிவங்கள்– யாக குண்டங்கள் அமைக்கப்படும். செங்கற்களும் பலவகை வடிவங்களில் செய்யப்பட்டு மந்திரபூர்வமாக ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கப்படும். இதற்கு கணித அறிவு தேவை.  மொத்தமுள்ள ஐந்து அடுக்குகளில் 1, 3, 5- அடுக்குகள ஒரு விதமாகவும் 2,4 அடுக்குகள  மற்றொருவிதமாகவும் இருக்கும்..

 

நூலை வைத்து அளப்பார்கள் (எகிப்திய பிரமிடுகளிலும் இம்முறை பின்பற்றபட்டதாலும் அங்கும் சூத்ர (நூல்) என்ற சொல் பயன்பட்டதாலும் எகிப்திய பிரமிடுகளைக் கட்டுவதிலும் இந்தியர்கள் உதவினார்கள் என்று முன்னரே ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன்.

இதற்குப் பின்னர் ஏர் கொண்டு உழுவார்கள்.

கீழ் மட்டத்தில் ஒரு மனிதன் உருவம் தங்கத்தில் செய்து வைக்கப்படும். ஐந்து அடுக்குகளிலும் சேர்த்து, 10,800 செங்கற்கள் இருக்கும்.

ஒரு அடுக்கில் ஒரு உயிருள்ள ஆமை வைக்கப்படும் என்று ஆபஸ்தம்ப ச்ரௌத சூத்திரம் சொல்லுகிறது. மற்ற பல பொருட்கள் வெ வேறு இடங்களில் வைக்கப்படும். இவை எல்லாம் எட்டு முதல் 12 மாதங்களில் முடிவடையும்.

ஐந்தே நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம்.

பல நூல்கள் இதுபற்றி உரைத்தாலும் சதபத பிராமணம் என்னும் நூலே விரிவாகப் பேசுகிறது அதனுடைய 14 காண்டங்களில் ஐந்து காண்டங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

tortoise

அகநானூற்றுப் பாடலின் பொருள்

இப்போது அகநானூற்றுப் பாடலின் பொருள் நன்கு விளங்கும்.

அதாவது பாலை நிலத்திலுள்ள தலைவனுக்கு யாக குண்டம் உவமை. அதிலிருந்து குளிர்ச்சியான சென்ற ஆமைக்கு தலைவன் உவமை. அது எப்படி குளிர்ச்சியான குளத்துக்குச் சென்று இன்பம் துய்க்கிறதோ, அது போல நீயும் இன்பம் துய்க்க இப்போது நினைக்க வேண்டாம் என்கிறார் புலவர்.

இதில் இன்னொரு விஷயமும் தெளிவாகிறது. உயிருள்ள ஆமையை அவர்கள் பலி இடுவதில்லை. அதை குளிர்ந்த நீர் நிலைக்குச் செல்ல யாகம் நடத்துவோர் அனுப்பினர். அப்படி பலியிட்டிருந்தால் அதை தலைவனுக்கு ஒப்பிடமாட்டார் புலவர்!

சங்க காலத்தில் யாக யக்ஞங்கள் ஆயிரக் கணக்கில் நடந்ததால் காதல் பாட்டில் கூட  யாக குண்ட ஆமை (யாமை) இடம் பெற்றுள்ளது!

ஆமை ரகசியம் அம்பலமானது!

buildings

சிந்து சமவெளி செங்கற்கள்!

சதபத பிராமணத்தில் மூன்றில் ஒரு பகுதி யாக குண்டம் அமைப்பது பற்றியது என்பது செங்கற்களின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். சிந்து சமவெளியிலும் ஏராளமான செங்கற்கள் இருப்பதும் யாக குண்டம் 10,800 செங்கற்களைக் கொண்டமைக்கப்படுவதும் இரண்டு நாகரீகங்களும் ஒன்றே என்றும் புலப்படுத்தும். சிந்து சமவெளியில்  காளைகளும் , வேதங்களில் பசு மாடுகளும் போற்றப்படுவதாலும் அதை வேத கால நாகரீகம் என்று சொல்லத் தூண்டுகிறது.

மேற்கூறிய சடங்குகளில் பல தகவல்களுக்கு இப்போது பொருள் சொல்லக்கூட ஆள் இல்லை. வேதங்களை நன்றாகப் படி தால் சங்க இலக்கியத்துக்கு மேலும் தெளிவான பொருள் காணலாம்.

முந்தைய கட்டுரை/ Previous Article

அகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! புரியாத புதிர்!!! (Post No 2607) Research article written by london swaminathan

Date: 7 March, 2016

–subham–

 

 

 

இலக்கியமின்றி இலக்கணமின்றே! இந்திய அதிசயம்!! (Post No.3007)

450px-agastyaprambananindonesia

Agastya in Indonesia

Research Article written by London Swaminathan

Date:26 July 2016

Post No. 3007

Time uploaded in London :–  16-45

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

agastya-in-london

Agastya in London V and A Museum

 

இலக்கியமின்றி யிலக்கணமின்றே

எள்ளின்றாயினெண் ணெயுமின்றே

எள்ளின் றெண்ணெயெடுப்பது போல

இலக்கிட்யத்தினின்றே பருமிலக்கணம்

 

என்று பேரகத்தியத்தில் ஒரு பாட்டுளது.

பொருள்:-

இலக்கியம் இல்லாமல் இலக்கணம் வராது. எள் இல்லாமல் எண்ணை வராது. எள்ளில் இருந்து எண்ணை எடுப்பது போல இலக்கியத்திலிருந்தே இலக்கணம் வரும்.

 

இது மிக அருமையான கருத்து. கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில்  வந்ததா? பதில் சொல்லுவது கடினம். கோழி இல்லாமல் முட்டை வராது. முட்டை இல்லாமல் கோழி வராது.

 

ஆண் முதலில் பிறந்தானா? பெண் முதலில் பிறந்தாளா? ஆணில்லாமல் பெண்ணில்லை; பெண்ணில்லாமல் ஆண் இல்லை. பதில் சொல்வது கடினம்.

 

ஆதாம், முதலில் வந்ததாகவும், அவரது இடது விலா எலும்பிலிருந்து ஏவாள் வந்ததாகவும் பைபிள் கூறும். இது இந்து மதக் கதை. ஆதாம் = அத்மா, ஈவ் (ஏவாள்)= ஜிவ்+ஆத்மா. அர்த்தநாரீஸ்வர ர்- சிவனின் இடப்பாகம் உமா. அதுதான் ஏவாள் .

 

சதரூபா-  பிரம்மா கதையிலும் இது வருகிறது. பிரம்மா தனது சொந்த மகள் மீதே காதல் கொண்டதாக புராணம் கூறும். இதன் உட்பொருள் ஆதாம் தானே உருவாக்கிய ஒரு பெண்ணுடன் கூடி மனித இனத்தை உருவாக்கினான் என்பதே இதன் உட்கருத்து.

 

முட்டையோ கோழியோ ஏதோ ஒன்று முதலில் வந்திருக்கவேண்டும். அதே போல் ஆணோ பெண்ணோ யாரோ ஒருவர் முதலில் வந்திருக்கவேண்டும்..

 

இலக்கணம் முதலில் வந்ததா?

 

இலக்கணம் முதலில் வந்ததா, இலக்கியம் முதலில் வந்ததா? என்பது மற்றொரு புதிரான கேள்வி இதற்குப் பேரகத்தியம் என்னும் நூலே பதில் சொல்லும்

agastyanepal-carole-r-bolon

Agastya in Nepal

 

இலக்கியமின்றி யிலக்கணமின்றே

எள்ளின்றாயினெண் ணெயுமின்றே

எள்ளின் றெண்ணெயெடுப்பது போல

இலக்கிட்யத்தினின்றே பருமிலக்கணம்

 

 

இலக்கியம்தான் முதலில் வந்தது. இலக்கணம் அதன் பின்னரே எழுந்தது. அப்படியானால் முதலில் எழுதியோர் இலக்கணமில்  லாமல் எழுதினரா? ஆமாம் அப்படித்தான். பின்னர் இதைப் பார்த்து இதிலுள்ள பொதுவான அம்சங்களை வைத்து இலக்கணம் எழுதினர். அதற்குப் பின் வந்தவர்கள் அதைப் பார்த்து, அதில் எல்லோரும் பின்பற்றிய விதிகளை வைத்து இலக்கணம் கற்பித்தனர். அதை ஒட்டி எல்லோரும் பிற்காலத்தில் எழுதினர்.

இந்தக் கருத்து சம்ஸ்கிருதத்திலும் உளது. மேலும் இலக்கணம், இலக்கியம் என்பன லக்ஷணம், லக்ஷ்யம் என்னும் வடமொழிச் சொற்களில் இருந்து பிறந்தவை!

 

தமிழ் மொழிக்கு அகத்தியர் என்னும் வடபுல முனிவர் இலக்கணம் எழுதினார். அவருக்கு முன்னரே தமிழ் மொழி இருந்தது . இலக்கியங்களும் இருந்தன. அதைப் பயன்படுத்தி அகத்தியர் இலக்கணம் யாத்தார். அகத்தியர் காலம் குறித்து பல கருத்துகள் உள்ளன. முதல் அகத்தியர் கி.மு 1000 வாக்கில் அல்லது கி.மு 700 வாக்கில் தமிழ் நாட்டிற்கு வந்தார். அப்படியானால் அவர் காலத்திலேயே தமிழ் மொழியும் இருந்தது; இலக்கியங்களும் இருந்தன. ஆயினும் அவை அனைத்தும் அழிந்து போயின. பிற்கால அகத்தியரின் சீடரே தொல்காப்பியர் எனக் கொள்ளல் வேண்டும் ஏனெனில் தொல்காப்பியர் காலத்தை கி.மு முதல் நூற்றாண்டு என்றே மொழியியல் காட்டுகிறது. ஆயினும் அவர் சொல்லும் ஏராளமான உவம உருபுகள் சங்க இலக்கியத்தில் இல்லாததால் அவருக்கு முந்தியிருந்த இலக்கியத்தில் இருந்தவற்றையே அவர் எழுதியிருக்கவேண்டும்.

 

பல அகத்தியர்கள் இருந்ததை சம்ஸ்கிருத இலக்கியமும் ஒப்புக்கொள்கிறது.

agastya

Agastya Statue

உலக மஹா இலக்கிய அதிசயம்!

இதே கருத்தை வடமொழிக்கும் பயன்படுத்தினால் உலக மஹா அதிசயம் வெளியாகும்.

 

தமிழ் மொழி இலக்கியத்தின் காலம் கி.மு முதல் நூற்றாண்டு. ஆனால வ்வேத இலக்கியத்தின் காலமோ கி.மு.1400 முதல் கி.மு,.6000 வரை என்று அறிஞர்கள் ஒப்புவர். அதற்குப் பின் ஏராளமான இலக்கண ஆசிரியர்கள் தோன்றினர். வேத இலக்கியத்திற்குப் பின் எழுந்த பாணினி என்னும் முனிவரின் இலக்கன்ணமே என்று எஞ்சி நிற்கிறது. அவர் கி.மு ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இன்றுள்ள இலக்கணங்களில் அவர் எழுதியதே பழமையான இலக்கணம். அவரே பத்து இலக்கணகர்த்தாக்களின் பெயர்களைச் சொல்லுகிறார்.

அபிசாலி, கார்க்ய,காஸ்யப, காலவ, சக்ரவர்மண,பாரத்வாஜ, சாகடாயன, சாகல, சேனக, ஸ்போடாயன.

 

இவர்களில் ஒருவர் எழுதிய இலக்கணமும் நமக்குக் கிடைக்கவில்லை. வேதங்களின்  பெரும்பாலான பகுதிகளும் ஆயிரக்கணக்கான சம்ஸ்கிருத நூல்களும் அழிந்துவிட்டன.

 

ஆயினும் வேதங்களில் இந்த முனிவர்கள் சிலரின் பெயர்கள் காணப்படுகின்றன.

 

ஆனால் ரிக்வேதத்திலேயே இலக்கணம் பற்றிய சொற்கள் இருக்கின்றன. இதனால் கி.மு 1400 அல்லது அதற்கு முன்னரே இலக்கணம் இருந்ததை அறிகிறோம். இன்றுள்ள மொழிகளில் மிகவும் பழமையான சம்ஸ்கிருதத்தில் இப்படி இருப்பது உலக அதிசயம் மட்டுமல்ல. உலக நாகரீகம் தோன்றியது இந்தியாவே என்பதை  ஐயம் திரிபற, உள்ளங்கை நெல்லிக்கனி எனக் காட்டும். ஏனெனில் ஒரு நாட்டின் மொழி வளர்ச்சி அந்நாட்டின் நாகரீக வளர்ச்சியின் அளவு கோலாகும். இலக்கியமும் இலக்கணமும் வேத காலத்திலேயே தோன்றியது என்றால் அதற்கு முன்னரே சம்ஸ்கிருதம் இருந்திருக்க வேண்டும்.

 

உலகில் மிகப்பரிய மொழி அதிசயம் இது;

உலகில் மிகப்பரிய இலக்கண அதிசயம் இது;

உலகில் மிகப்பரிய இலக்கிய அதிசயம் இது;

உலகில் மிகப்பரிய மொழி இயல் அதிசயம் இது.

 

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!
–Subham–

பழங்குடி மக்களின் மரபுச் சின்னங்கள் (Post No.2974)

tribe 11

 

மர்மம் நிறைந்த இந்தியப் பழங்குடி மக்கள் – பகுதி 2  

Research Article written by London swaminathan

 

Date: 15 July 2016

 

Post No. 2974

 

Time uploaded in London :– 17-59

 

( Pictures are taken from various sources; thanks)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Please read the first part published yesterday, where there is a detailed introduction

(( முதல் படம் “போர் அபோர்” இன மக்கள், பெண்ணின் படம். வடகிழக்கு இந்தியாவில் வசிக்கும் இனம். தலைமுடியை, ஆண்கள் கிராப் வெட்டுவது போல வெட்டிக்கொள்வர். ஏராளமான பாசிமணி, விலை மதிப்பு குறைந்த நீலக்கற்கள், பச்சைக்கற்கள் உடைய நகைகளை அணிவர்.))

 

பழங்குடி மக்களின் மரபுச் சின்னங்கள் –

மர்மம் நிறைந்த இந்தியப் பழங்குடி மக்கள் – பகுதி 1 கட்டுரையைப் படித்துவிட்டு இந்த இரண்டாவது கட்டுரையைப் படிக்கவும்.

 

உலகம் முழுதும் பழங்குடி மக்கள் மரபு அல்லது ஜாதி அல்லது குலச் சின்னங்களை (TOTEM SYMBOLS) வைத்திருக்கின்றனர். இந்த சின்னங்கள் உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே இருக்கிறது. ஆனால் நாகரீக முன்னேற்றம் காரணமாக அவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அதாவது அப்பொழுதே இந்திய சமுதாயம் அவ்வளவு முன்னேறிவிட்டது.

 

ஆனால் இன்று பழங்குடி மக்கள், நாகரீக சமுதாயத்துக்கு இடையே எப்படி வாழ்கின்றனரோ, அப்படி இதிஹாச காலத்திலும் பழங்குடி மக்கள் வாழ்ந்தனர். ராமாயண கலத்தில், கு ரங்கைச் சின்னமாகக் கொண்டவர்கள் வாழ்ந்தனர். அவர்களின் மன்னரே வாலி, சுக்ரீவன். அதே காலத்தில் கரடிச் சின்னத்துடன் வாழ்ந்தவர்களின் தலைவனே ஜாம்பவான். அதே காலத்தில் கழுகுச் சின்னத்துடன் வாழ்ந்தவர்களின் தலைவரே ஜடாயு. இவை எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததால், நமது புராண, இதிஹாச எழுத்தர்கள் அவர்களைக் குரங்கு, கரடி, கழுகு என்று சித்தரித்துவிட்டனர்.

 

இதற்குப் பின்னர், மஹாபாரத காலத்தில், கிருஷ்ணனும் அர்ஜுனனும், நாகர்கள் வாழ்ந்த காண்டவ வனத்தை எரித்தபோது,  நாகர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல தலைமுறைகளுக்கு நீடித்து, ஜனமேஜயன் காலத்தில் சர்ப்ப யாகம் நடந்து, பின்னர் ஆஸ்தீகர் என்பவர் மூலம் சமரச ஒப்பந்தம் நடந்தது. இதை இன்றும் பிராமணர்கள் தினமும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லி நாகர்களுக்கு நமஸ்காரம் செய்கின்றனர். இந்த நாகர் இன மக்களை, பாம்பு என்று நமது புராணிகர்கள் முத்திரை குத்திவிட்டனர். நாகர்கள் பின்னர் அமெரிக்கா சென்று மாயா, ஆஸ்டெக் நாகரீகத்தை நிறுவினர். இது பற்றி முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். காண்டவ வனம் என்பதை, அர்த்தமே புரியாமல், வெளிநாட்டினர், கோண்ட்வானா (காண்டவ + வன) என்று சொல்லி வருகின்றனர்.

 

 

மஹாபாரதத்தில் அயு என்ற மன்னனுக்கும் தவளை இனத்துக்கும் நடந்த சண்டை பற்றி கதை உள்ளது. உண்மையில் அது தவளைகள் அல்ல; தவளையை மரபுச் சின்னமாகக் கொண்ட மக்களே!

 

எங்கெங்கெல்லாம் பறவைகள், மிருகங்கள் பற்றிய கதைகள் வருகின்றனவோ அங்கெங்கெல்லாம் அவர்கள் குறிப்பிடுவது, அந்த பிராணிகளின் சின்னங்களை, மரபுச் சின்னங்களாகக் கொண்டவர்களையே.

tribe 14

((இரண்டாவது படம் சுலிகாடா மிஷ்மி ஆண் படம்))

மிகப் பழைய காலத்தில் இவை நடந்ததால் நாம் அதை மிருகங்கள் என்று நம்பத் துவங்கிவிட்டோம். ஆனால் வால்மீகி ராமாயணம் போன்றவற்றில் , அனுமன், நவ வியாகரணத்தில் வல்லவன்,  சொல்லின் செல்வன் என்றெல்லாம் வருணிகப்படும் போதே அவன் குரங்கு அல்ல, குரங்கைச் சின்னமாக உடைய வானர இனத்தில் பிறந்தவன் என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஜடாயு என்ற கழுகு இன மன்னன், தசரதனைத் தன்னுடைய தந்தை போன்றவன் என்று வருணிப்பதிலிருந்தே  ஜடாயும் மனிதன் என்றும், கழுகைச் சின்னமாகக் கொண்டவன் என்றும் புரியும்.

வேதத்தில் சான்று!

மண்டூக மகரிஷி என்றால் தவளை முனிவர் என்று பொருள். ஒரு காலத்தில் அவரது முன்னோர்கள் தவளையை சின்னமாக கொண்ட மக்கள என்பது தெரிகிறது.

 

இதே போல, காச்யப மகரிஷி என்றால் ஆமை என்றும் ,கௌசிக மகரிஷி என்றால் ஆந்தை என்றும் அ ர்த்தம். உண்மையில் இவர்கள் எல்லாம் அந்தந்த சின்னம் உடைய பழங்குடிகளில் பிறந்தவ ர் கள். சாண்டில்ய -பறவை (வேத கால ரிஷி)

 

 

கருடன் சின்னத்தை உபயோ கித்தவர்கள், எப்பொழுதுமே நாகர்களுக்கு எதிராக இருந்தனர். உலகம் முழுதும் மெக்ஸிகோ நாட்டு கொடி முதல் பல சின்னங்களில் இதை இன்றும் காணலாம்.

 

மஹாபாரத, ராமா யண காலத்திலேயே தேர்களில் கொடிகளுடன் சென்ற இந்துக்கள்தான் உலகில் சின்னங்கள், கொடிகள்  முதலியவற்றைத்  தோற்றுவித்தவர்கள். இது பற்றியும் முன்னரே ஒரு ஆராய்ச்சி க் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.

 

இப்போது பழங்குடி இனமக்களிடையே புழங்கும் ஜாதி/மரபுச் TOTEM SYMBOLS சின்னங்களைக் காண்போம்:–

 

ஒராவன் இன மக்கள்

டிர்கி- இளம் சுண்டெலி

எக்கா- ஆமை

கிஸ்போட்டா – பன்றி

லக்னா – கழுதைப் புலி

பாக் – புலி (மூலம் :- வ்யாக்ர என்ற சம்ஸ்கிருதச் சொல்)

குஜ்ரார்வ்யா- எண்ணை

ஜெடி-வாத்து

கொய்பா- காட்டு/ மரநாய்

மீஞ்சி – விலாங்கு மீன் ( மூலம் – மீனம்)

சிர்ரா- அணில்

 

ஒரு பழங்குடி இனத்திலேயே எத்தனை பிரிவுகள், எத்தனை சின்னங்கள் பாருங்கள்!

 

யாருக்கு எது சின்னமோ அதை அவர்கள் புனிதமாகக் கருதுவர்; அதை சாப்பிடவும் மாட்டார்கள்!

tribe 17

 

((இந்தப்படம் நாகா இன மக்க்ள் படம்; மணிப்புரி, குல்கி இன மக்கள் பேசும் மொழியுடன் தொடர்புடைய மொழி பேசுவர்.))

 

சாந்தல்  இன மக்கள்

எர்கோ – எலி

முர்மு – மான்

ஹம்ஸ்டா – குள்ள வாத்து (ஹம்சம் – அன்னம்_

மாவ்டி – புல்

பெஸ்ரா – கழுகு

ஹெம்ரோன் – வெற்றிலை

சாரென் – கார்த்திகை நட்சத்திரம் (மூலம்- சரவண)

சங்க – சங்கு ( சம்ஸ்கிருதம்)

குவா – பாக்கு

கரா – எருமை

 

இதில் பல சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதையும் பல சொற்கள் தமிழ், சம்ஸ்கிருதச் சொற்களில் இருந்து வந்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.

 

இந்தியாவில் ஒரே மொழிக்குடும்பம்தான், அதிலிருந்தே சம்ஸ்கிருதமும், பின்னர் தமிழும் வந்தன என்பதும், உலகிலுள்ள எல்லா மொழிகளுக்கும் இவ்விரு மொழிகளே தாய்-தந்தை என்பதையும் என்னுடைய முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மெய்ப்பித்துள்ளேன்.

 

 

பூம்ஜி இன மக்கள்

 

சால்ரிசி- சால் வகை மீன்

ஹன்ஸ்டா – வாத்து (க்ஹம்ச)

லெங் – காளான்

சாண்டில்ய -ப்றவை (வேத கால ரிஷி)

ஹொம்ரோன் – வெற்றிலை

துமரங் – பூசனி

நாக் – பாம்பு (நாக)

 

மஹிலி இனம்

துங்ரி – அத்திப் பழம்

டுரு – டுரு புல்

காந்தி – பிராணியின் காது

ஹம்ஸ்டா – வாத்து

முர்மு – மான்

 

இந்த இனத்தின் பிராணிகளின், தாவரங்களின் பெயர்கள் சம்ஸ்கிருதத் தொடர்புடையவை.

 

கோரா இன மக்கள்

காஸ்யப் – ஆமை (காஸ்யப ரிஷியின் பெயர்)

சௌலா – சால் மீன்

கசிபக் – கொக்கு

ஹம்ஸ்டா – ஹம்ச

புட்கு – பன்றி

சாம்பு – காளை

 

கூர்மி இன மக்கள்

கேசரியா – கேசரி புல்

டரார் – எருமை

டுமுரியா- அத்தி

சஞ்ச்முகுரார் – சிலந்தி

ஹஸ்டோவர்- ஆமை

ஜல்பனுவார் – வலை

சங்கோவர் – சங்கு

கதியார்- பட்டுத்துணி

பாக்பௌவார்- புலி

 

இப்படி ஒவ்வொரு இனத்திலும் பல குழுக்கள்; அவர்களுக்கு பல பிராணிகள், தாவரங்கள் மரபுச் சின்னங்கள். அவர்களுடைய பெயர்களில் பல சம்ஸ்கிருத மூலச் சொற்களின் திரிபு!

 

ஏன் இவ்வளவு இனம்? ஏன் இவ்வளவு உட்பிரிவு? இதற்கெல்லாம் வெளிநாட்டுக் காரர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏன் பல சம்ஸ்க்ருதப் பெயர்கள்?  ஒருவேளை உள்நாட்டு மக்களுடன் தொடர்பு ஏற்பட்டு மொழிக்கலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சப்பைக் கட்டு கட்டுவர் வெளிநாட்டார். அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை — என்ற கதைதான்.

 

இந்தப் படத்தில் காட்டிய ஒவ்வொரு பழங்குடி இன மக்களுக்கும் ஒரு சிறப்பியல்பு, பழக்க வழக்கம் இருக்கிறது. இந்த வேறுபாடுகள் எப்படி வந்தன? எல்லா வற்றிலும் ஆரிய- திராவிட இனவெறியைப் புகுத்தும் வெளிநாட்டினர், இந்த விஷயத்தில் பேந்தப் பேந்த முழிக்கின்றனர்.

 

–தொடரும்

 

 

யாழ்ப்பாண ஐயர் பழமொழிகள்! (Post No. 2953)

pararajasekara

Compiled by London swaminathan

Date: 8 July 2016

Post No. 2953

Time uploaded in London :– 17-11

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

“பரராஜ சேகரன் ஆண்ட காலத்தில் சுபதிருஷ்ட முனிவர் என்பவர் அவன் சபைக்கு வந்தார். மன்னன் எழுந்து நின்று அவரை உபசரித்து,  தனது எதிர்காலம் பற்றிக் கூறுமாறு வேண்டினான். முனிவர் சொன்னார்:-

நீ புண்ணியவான். உனது ஆட்சி குறைவின்றி நடக்கும். அதற்குப்பின் உன் மூத்த புதல்வனை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள். இரண்டாவது மகனை வெட்டிக் கொன்றுவிடுவார்கள்.

 

இரண்டாம் பத்தினியின் வயிற்றில் பிறந்த சங்கிலி அரசோச்சுவான். அவனது கொடுங்கோலாட்சியில் பறங்கியர் வசம் ஆட்சி ஒப்படைக்கப்படும்.  பறங்கியர் சிவாலயங்களை அழித்து தமது சமயத்தைப் பரப்பி நாற்பது வருஷம் கொடுங்கோலாட்சி புரிவர். அவர்களை ஒல்லாந்தர் (ஹாலந்து/ டச்சு) வென்று  அவரைப்போல் கொடியராக 120 ஆண்டுகள் ஆள்வர். அதற்குப்பின் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர்- ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதியாக அரசு செய்வர். உன் சந்ததிக்கு அரசு ஒரு காலத்தும் மீள்வதில்லை” என்றார்.

 

இதுவே சாரமான கல்வெட்டொன்று திரிகோணமலைத் தம்பத்திலுமுள்ளது

அது மிகவும் பழமையானது. பிற்காலத்தாரால் ஏடுகளில் மாற்றப்பட்டுத் திரிபுபெற்றுள்ள வைபவமாலைக் கூற்றுப்போல்வதன்று:-

 

முன்னாட்குளக்கோட்டன் மூட்டுந்திருப்பணியைப்

பின்னாட்பறங்கி பிடிப்பானே — பொன்னாரும்

பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய் மாற

மானேவடுகாய்விடும்.

 

இதனை வையா (வையாபுரி ஐயர்) பாடல் என்பர்.

வையாபுரி பாடல் பொய்யாதென்பது பழமொழி. வையாபுரி ஐயர் என்பது அவர் இயற்பெயர். அவர் பிராமண சந்யாசி. அவர் சுபதிருஷ்டர் சீடராகிய சித்தையர் என்பவருக்குச் சீடர்.

 

சித்தையர் இருந்து தவம் செய்த இடம் சித்தன்கேணியென்று வழங்குகின்றது. சித்தன்கேணிக் கிராமத்திலே அவர் இருக்கும் வரையில்  விஷப் பாம்புகள் செல்வதும், விஷம் தீண்டி இறப்பதும் இல்லையாம். வையாபுரி ஐயர் சீடர் கோவியத் திருமேனியுடைய கொற்றனார்.

 

ஐயருக்கு 12 மனைவிகள்!

 

அவர் சீடர் பெரியதம்பி ஐயர். அவர் கொற்றனார் கொடுத்த மூலிகையை உண்டு நரை திரை மூப்பு இன்றி 120 வயசில் இளமையோடிறந்தவர். அவருக்கு நான்கு பார்ப்பாரப் பெண்களும், நான்கு வேளாளப் பெண்களும், நான்கு கோவியப் பெண்களுமாக பன்னிருவர் பத்தினிமார் ஏக காலத்தில் இருந்தார்கள். இவருடைய அற்புத இளமையை நோக்கியே “பெரிய தம்பி ஐயர் வாலிபத்திலே” என்னும் பழமொழி வழங்குவதாயிற்று. பெரியதம்பி ஐயர் இருந்த வீடு வண்ணைச் சிவன் கோயிலுக்குத் தென் பாரிசத்தில் இன்றுமிருக்கின்றது. அவர் சந்ததியாருமங்கேயிருக்கின்றார்கள்”.

 

–ஆதாரம்: யாழ்ப்பாண சரித்திரம், ஏ.முத்து தம்பி பிள்ளை

 

மறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன? ஒரு யாழ்ப்பாணக் கதை (Post No 2943)

anthaka kavi 1

Written by London swaminathan

 

Date: 4 July 2016

Post No. 2943

Time uploaded in London :– 16-34

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

இது, மன்னன் ஏலேலனும் அந்தகக்கவி வீரராகவனும் சந்தித்தது பற்றிய  சுவையான கதை. கண்கள் பார்க்க முடியாதபோதும் ஏலேலன் திரை மறைவிலிருந்து கண்டதைக் கண்டுபிடித்துப் பாடியவுடன் ஏலேலன் அசந்தே போய்விட்டான். மனைவியுடன் கோபித்துக்கொண்ட கவிஞருக்கு ராஜ உபசாரம் கிடைத்தது.

 

 

கதை சுவையானாலும், ஒரு குறை உளது. அது காலவழுவமைதி ஆகும். ஏலேலன் காலம் வேறு. அந்தகக்கவியின் காலம் வேறு. இரண்டு கவிஞர்கள் ஒரே பெயருடன் இருந்திருக்கலாமே என்று வாதாடக் கூடும். ஆயினும் அந்தகக் கவிராயரின் பாடல், நடை முதலியவற்றைக் காணும்போது அது தற்காலத் தமிழ் நடையாகவே இருக்கிறது. ஏலேலன் என்ற மன்னனோ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்.

 

இது யாழ்ப்பாண சரிதம் என்ற பழைய நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

 

anthakakavi 2

anthaka kavi 4

 

anthaka kavi5

 

anthaka kavi 6

–subham–

 

பாரதத்தின் பெருமை! (Post No.2849)

IMG_3442

Article written by S.NAGARAJAN

 

Date: 29 May 2016

 

Post No. 2849

 

Time uploaded in London :–  5-53 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

பாரதத்தின் பெருமை!

ச.நாகராஜன்

 

பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம் என்று ஆனந்தமாக இந்தியர்கள் பாடினால் அது பொருள் பொதிந்த ஒரு விஷயமாகும்.

 

ஏனெனில் உலகில் உள்ள நாகரிகங்களில் எல்லாம் பழமையான ஜீவனுள்ள ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் மட்டுமே தான்!

 

எகிப்திய, அஸிரிய, ரோமானிய நாகரிகங்கள் உள்ளிட்ட பல பழம் பெரும் நாகரிகங்கள் அழிந்து பட்ட போதிலும் இன்றும் தன் இளமை மணம் மாறா நாகரிகமாக உலகில் இருக்கும் ஒரே நாகரிகம் ஹிந்து நாகரிகம் தான்!

 

பாரத தேசத்தின் பெருமையை விஷ்ணு புராணம் இப்படிச் சொல்கிறது:

 

1947_India_Flag_3½_annas

காயந்தி தேவா: கில கீதகானி

      தன்யாத் து தே பாரதபூமிபாகே

ஸ்வர்கார்பவர்காஸ்பதமார்கபூதே

      பவந்தி பூய: புருஷா: சுரத்வாத்

 

தேவர்களாயிருந்தும் கூட மனிதர்களாக பாரதவர்ஷத்தில் பிறந்தவர்கள் சந்தோஷமுள்ளவர்களே! ஏனெனில் கடவுளரும் அவ்ர்களது கீதத்தை இசைக்கின்றார்கள். ஏனெனில் அதுவே சொர்க்க இன்பங்களுக்கான நுழைவாயில் அல்லது முக்திக்கான பெரிய இன்ப வழியாகும்

தேவர்களும் கூட பாரதத்தில் பிறப்பு எடுக்க ஏங்குகின்றனராம்!

 

இதை ஹெச் ஹெச் வில்ஸன் ஆங்கிலத்தில் இப்படி மொழிபெயர்த்துள்ளார்:

 

 

Happy are those who are born, even from the conditions of gods as men in Bharatvarsha as the gods sings their songs and as that is the way to the pleasures of the paradise, or the greater blessing of final liberation . (H.H. Wilson)

 

பரம பூஜனீய குருஜி ஸ்ரீ எம். எஸ். கோல்வால்கர் தனது பஞ்ச் ஆஃப் தாட்ஸ்(Bunch of thoughts) என்ற நூலில் இந்த ஸ்லோகத்தை மேற்கோள் காட்டியதோடு பாரதத்தின் அருமை  பெருமையை மிக நன்றாக  விளக்கியுள்ளார்.

 

 

ஸ்வாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பி தாயகம் வருகையில் 15-1-1897 அன்று கொழும்பில் அற்புதமான உரை ஒன்றை ஆற்றினார். அதில் பாரதத்தின் பெருமையைக் கூறும் போது,

 

 

 

“If there is any land on this earth that can lay claim to be the blessed Punya Bhumi, to be the land to which all souls on this earth must come to account for Karma, the land to which every soul that is wending its way Godward must come to attain its last home, the land where humanity has attained its highest towards gentleness, towards generosity, towards purity, towards calmness, above all, the land of introspection and of spirituality — it is India. “

என்று உரைத்தார்.

 

பாரதத்தின் பெருமை உரைக்க ஒண்ணா ஒன்று. தேவர்களும் பிறக்க விரும்பும் புண்ணிய பூமி பாரதம்!

********

 

 

 

 

 

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803)

search in egypt1

Written  BY S NAGARAJAN

Date: 12 May 2016

 

Post No. 2803

 

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(பால் பிரண்டன் எழுதிய ரகசிய இந்தியா பற்றிய நூல், ரமண மகரிஷி, காஞ்சி பரமாசார்யாருடன் அவருடைய சந்திப்பு பற்றி ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.இங்கு எகிப்து பற்றி அவர் எழுதியது என்ன என்பதன் சுருக்கத்தை நாகராஜன் தருகிறார்- லண்டன் சுவாமிநாதன்.)

 

 

எகிப்து பிரமிடின் அமானுஷ்யம் – பால் பிரண்டனின் நேரடி அனுபவம்

எழுதியவர்- ச.நாகராஜன்

 

 
எகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம் என்றால் அது மிகையாகாது. இந்தியாவைப் போன்றே மிகப்பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்து ஆன்மீகத் தேடல்களிலும் சிறந்தே விளங்கியது. இன்றும் ஸ்பிங்க்ஸ¤ம், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களைத் தங்களுள் மறைத்து வைத்திருக்கின்றன என்பது பலருடைய ஆழ்ந்த நம்பிக்கை.

அதுவே பால் ப்ரண்டனை அங்கும் ஈர்த்தது. பால் ப்ரண்டன் இன்னொரு தேடலை எகிப்தில் தொடர்ந்தார்.

எகிப்தில் பிரமிடுகளைக் காக்கும் காவல் தெய்வமாகக் கருதப்படும் ஸ்பிங்க்ஸ் மனிதத்தலையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பு. அது எப்போது கட்டப்பட்டது என்பதை இன்றும் யாராலும் சரியாக ஊகிக்க முடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கும் முன் சுமார் 2500 ஆண்டுகளிலிருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்பிற்குள் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் அனுமானிக்கிறார்கள். மிகப்பழமை வாய்ந்த அந்த ஸ்பிங்க்ஸ் தேவதை மனிதனின் நுண்ணறிவையும், சிங்கத்தின் தேகபலத்தையும் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. அது ஏழு முறை பாலைவன மணலால் புதையுண்டது என்றும் ஏழு முறை அந்த மணல் விலகி மீண்டது என்றும் சொல்லப்படுகிறது

பால் ப்ரண்டன்   ஸ்பிங்க்ஸ் மற்றும் பெரிய பிரமிடு இரண்டிலிருந்தும் ஞானச் செய்தி பெற வேண்டும் என்று விரும்பினார். ஸ்பிங்க்ஸ் முன் பாலைவன மணலில் ஒரு நாளிரவு முழுவதும் தனியாக அமர்ந்து தியானம் செய்த பால் ப்ரண்டன் கடைசியில் அதிகாலை நேரத்தில் ஸ்பிங்க்ஸிடமிருந்து ஒரு செய்தி கிடைத்ததாகக் கூறுகிறார். “நீ உருவாகி அழியும் சதைகளால் ஆன உருவமல்ல மனிதனே. நீ அழிவில்லாத ஆத்மா! உன்னுடைய இதயத்தில் அது நீ கண்டடையக் காத்திருக்கிறது, இந்தப் பாலைவன மண்ணில் நான் காத்திருப்பதைப் போல். அதனால் உன்னையே நீ அறிவாய்…”

அடுத்ததாக உலக அதிசயங்களில் ஒன்றான பெரிய பிரமிடின் உள்ளே ஒரு நாள் இரவைக் கழிக்க எண்ணினார் பால் ப்ரண்டன். இங்கே பிரமிடுகளைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வது நல்லது. பெரிய பிரமிடு ஒவ்வொரு புறமும் 756 அடி நீளமும், 450 அடி உயரமும் கொண்டது. சுமார் இரண்டரை டன் எடையுள்ள கற்கள் 23,00,000 பயன்படுத்தி கட்டப்பட்ட பிரம்மாண்டமான அமைப்பு அது. சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. அக்காலத்தில் பிரம்மாண்டமான அமைப்புகளை அளக்க சரியான அளவுகோல் இல்லை என்றாலும் எவ்வளவு கச்சிதமாகக் கட்டப்பட்டிருக்கிறது என்றால் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கு இடையே உள்ள வித்தியாசம் எட்டு அங்குலங்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இது இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களை வியக்க வைக்கிறது.

பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து வைத்திருந்ததால் பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்த செல்வங்களை சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். எகிப்துக்குப் படையெடுத்தவர்கள், உள் நாட்டவர்கள் என பல்லாண்டுகள் வந்து கொள்ளையடித்துச் சென்ற பின் மிஞ்சியது விலை போகாத சவங்களும், சில பொருள்களும், எடுத்துச் செல்ல முடியாத பிரமிடுகளின் கட்டிடங்கள் மட்டுமே. ஆனால் பிரமிடுகளில் இருந்து கொள்ளையடித்துச் செல்ல முடியாத ஆன்மீக ரகசியங்கள் இன்னும் ஏராளமாக அவற்றில் உள்ளன என்பது உலகப் பெரியோரின் கருத்து. எனவே தான் பால் ப்ரண்டன் பெரிய பிரமிடினுள்ளே ஒரு நாள் இரவைக் கழித்து அந்த ரகசியங்களை அறிய விரும்பினார்.
ஸ்பிங்ஸ்
பெரிய பிரமிடு அரசாங்கத்தின் சொத்தாக இருந்ததால், நுழைவுக் கட்டணம் செலுத்தி சென்று பார்த்து வரும் உரிமை பார்வையாளர்களுக்கு இருந்தாலும் அங்கு ஒரு இரவு முழுவதும் தங்க வேண்டுமானால் அரசாங்க உத்தரவு வேண்டும் என்று அவருக்குச் சொல்லப்பட்டது. எனவே அரசாங்கத்தின் பழங்காலக் கலைப் பொருள் காப்பகத்தில் சென்று தன் விருப்பத்தை அவர் தெரிவித்தார். அந்த அதிகாரி நிலவுக்குச் செல்ல பால் ப்ரண்டன் ஆசைப்பட்டது போல் அவரைத் திகைப்போடு பார்த்தார். பின் அவரை ஒரு மனநோயாளியைப் பார்ப்பது போல் பார்த்து சொன்னார். “நான் இது வரை இது போன்ற கோரிக்கையைக் கேட்டதில்லை. ஆனால் இதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் என் கையில் இல்லை. உயர் அதிகாரியைப் பாருங்கள்”

 

அந்த உயர் அதிகாரி “அனுமதிக்க முடியாது” என்று உறுதியாகச் சொன்னார். அவருடைய பணிக்காலத்தில் இது போன்ற ஒரு கோரிக்கை வந்ததோ, அனுமதிக்கப்பட்டதோ இல்லை என்றார். பால் ப்ரண்டன் தன் கோரிக்கையில் விடாப்படியாக நிற்க அவர் “இரவு வேளையில் தங்குவது போலீசார் அதிகாரத்தில் தான் வருகிறது. அவர்களைப் போய்ப் பாருங்கள்” என்றார்.

 

போலீசாரும் இந்த வினோத கோரிக்கையை ஏற்க முடியாமல் தங்கள் தலைமை அதிகாரியிடம் அனுப்ப அவரும் திகைத்து முடிவெடுக்க ஒரு நாள் தேவை என்றும் மறுநாள் வந்து பார்க்கும் படியும் சொன்னார். மறுநாள் அவர் மறுபடியும் பழங்கால கலைப் பொருள் காப்பகத்தையே அணுகச் சொன்னார். கடைசியில் கெய்ரோ நகர ஜென்ரல் கமாண்டண்டைச் சென்று பால் ப்ரண்டன் தன் கோரிக்கையைச் சொல்ல அவர் பிரமிடுகளைக் காக்கும் போலீஸ் உயர் அதிகாரிக்கு அனுமதி வழங்குமாறு எழுதி அனுப்பினார்.

அந்தப் போலீஸ் அதிகாரி “நாங்கள் தினமும் மாலையில் பிரமிடின் நுழைவாயிலைப் பூட்டி வருகிறோம். நீங்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் மறுநாள் காலை வரை உள்ளேயே இருக்க வேண்டி வரும். சுமார் 12 மணி நேரம் உள்ளே இருக்க ஒத்துக் கொள்கிறீர்களா?”

பால் ப்ரண்டன் ஒத்துக் கொண்டார். மறுநாள் மாலை பால் ப்ரண்டன் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு பிரமிடினுள் நுழைந்தார். ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர் ஒருவர் அவர் உள்ளே சென்றவுடன் நுழைவாயிலைப் பூட்டிக் கொண்டு வெளியே பூட்டிக் கொள்ள தன்னந்தனியனாய் பால் ப்ரண்டன் தன் பயணத்தைத் தொடங்கினார். அந்தப் பிரமிடுக்குள் பல பாதாளச் சுரங்கங்கள் இருந்தன. சில மிகவும் குறுகலாய் இருந்தன. சில இடங்களில் அவர் தவழ்ந்து போக வேண்டி இருந்தது. உள்ளே சில இடங்களில் வௌவால்களும், எலிகளும் அவருக்குத் துணையாய் இருந்தன. வேறொருவராக இருந்திருந்தால் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து வெளியேற நினைத்திருப்பார். ஆனால் பால் ப்ரண்டன் மனம் தளராமல் அரசனுடைய உடலை வைத்துள்ள பிரபலமான சேம்பரை அடைந்தார்.

அங்கு சென்ற அவர் அங்கு சென்றதும் தான் கொண்டு வந்திருந்த தொப்பி, தேனீர் நிறைந்த ·ப்ளாஸ்க், தண்ணீர், நோட்டுப்புத்தகம், பேனா எல்லாவற்றையும் கீழே வைத்து விட்டு சம்மணமிட்டு அமர்ந்து தன் டார்ச் லைட்டை அணைத்து விட்டார். உடனே இருள் சூழ்ந்தது. மயான அமைதி அங்கு நிலவியது. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால் அதைப் பொருட்படுத்தாது அமைதியாகக் காத்திருந்தார். நேரம் செல்லச் செல்ல ஏதோ அமானுஷ்ய சக்திகள் தன்னைச் சுற்றி உலவுவதை அவரால் உணர முடிந்தது. அவர் அந்த இருட்டில் விழிப்புணர்வோடு சூட்சுமமாகக் கவனித்த போது அது கற்பனையல்ல நிஜம் என்பதை அவரால் உணர முடிந்தது. பயத்தில் அவர் உடல் மேலும் சில்லிட்டது.

search in egypt2

பிரமிடின் உள்ளே தனிமையில் நள்ளிரவின் கும்மிருட்டில் அமர்ந்திருந்த பால் ப்ரண்டனுக்கு ஏதோ சக்திகளின் நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. சில நாட்கள் விரதமும் தியானமும் இருந்து அவன் தன் புலன்களை கூர்மைப்படுத்தி இருந்ததால் அந்த சக்திகள் துஷ்ட சக்திகள் என்பதையும் அவரால் மிகத் தெளிவாக உணர முடிந்தது.

 

 

To be continued…………………………………..

 

 

வடகலை, தென்கலை நாமம் பற்றிய சர்ச்சை! (Post No. 2763)

truman1

Compiled by london swaminathan

Date: 28 ஏப்ரல், 2016

 

Post No. 2763

 

Time uploaded in London :–  19-40

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

தங்க யானை நாமம், குடை

1945 ஆம் ஆண்டில் தினமணிப் பத்திரிக்கை வெளியிட்ட நூலிலிருந்து இக்கட்டுரையை எடுத்துள்ளேன். இதற்கு முன் பிரிட்டிஷ் லைப்ரரியிலிருந்து எடுத்த ஒரு பெரிய தொகுப்பில், யானைக்கு நாமம் போடுவது பற்றி எழுந்த கோர்ட் வழக்கு சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களை பேஸ்புக்கில் வெளியிட்டேன்( சுமார் 20 பக்கங்களை மட்டும்). இது அக்காலத்தில் நடந்த பெரிய வழக்கு. பத்திரிக்கைகள் வாதப் பிரதிவாதங்களை வெளியிட்டன. இந்துமதத்தை வசைபாடிய திராவிடக் கட்சிகளுக்கு அப்போது இந்த வழக்கு, ‘வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல்’ போல வந்து சேர்ந்தது.

இதோ கோயில் பூனைகள் என்ற புத்தகத்திலிருந்து எடுத்த நாமச் சண்டை:–

 

vatakalai, tenkalai

 

tiruman2

 

tiruman3

 

tiruman4

 

tiruman5

 

tiruman6

 

tiruman7

 

tiruman8

 

tiruman9

–சுபம்–

 

100 மைல் நடந்து பல்கலைக்கழகம் சென்ற அறிஞர்! (Post No 2757)

carlyle book 2

Translated by London swaminathan

Date: 26 April 2016

 

Post No. 2757

 

Time uploaded in London :– 8-28 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Thomas Carlyle (1795-1881), Scottish Essayist, Historian, Philosopher, Satirical Writer and Teacher

 

carlyle stamp

தாமஸ் கார்லயில் பிரிட்டனின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்; பெரிய தத்துவ அறிஞர், வரலாற்று அறிஞர்; அங்கத எழுத்தாளர், ஆசிரியர். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.

அவர் சிறுவராயிருந்தபோது வீட்டையும் மற்ற குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அவருடைய தாயாரும் தந்தையும் அருகிலுள்ள மார்க்கெட்டுக்குச் சென்றனர். அன்று குளிர் அதிகமாயிருந்தது. அந்தக் குளிரைத் தாங்கும் அளவுக்கு ஆடையில்லாத பிச்சைக்காரன் ஒருவன் உடல் நடுங்க, பசியால் மெலிந்து, நடக்கமுடியாமல் தள்ளாடிக் கொண்டே வந்தான். கார்லயிலின் வீட்டிற்கருகில் வந்து நின்றான். அவனது தாங்கமுடியாத, தரித்திர நிலைமையைக் கண்ட கார்லயிலின் மனம் உருகியது.

 

உடனே கார்லயில், எனது தாய் தந்தையர் எனக்கு அவ்வப்போது கொடுத்த காசுகளை நான் மண் உண்டியலில் போட்டு சுவரின் உச்சியில் மறைத்து வைத்திருக்கிறேன். இப்போது அதை எடுத்துவந்து, அதை உடைத்து அதிலிருக்கும் காசுகளைத் தருகிறேன் என்று சொல்லி அவ்வாறே அவனிடம் கொடுத்தார். இதை கார்லயிலே ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னதால்தான் நமக்குத் தெரியும்.

thomas carlyle

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் அவரது திறமையை அறிந்த ஆசிரியர், அவருடைய தந்தையை அழைத்து உமது பிள்ளையை எடின்பரோ பல்கலைக்கழகத்துக்கு படிப்பதற்கு அனுப்புங்கள். அவன் உயர் படிப்பில் மிகவும் அக்கறையுள்ளவனாகக் காணப்படுகிறான் என்றார்.

 

தாமஸ் கார்லயிலின் தந்தையான ஜேம்ஸ் கார்லயில் அதிகம் படித்தறியாதவர். இருந்தபோதிலும் தன் மகனை எடின்பர்க் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பவேண்டும் என்று முடிவு செய்தார். அவரது கிராமத்தைச் சேர்ந்தோர், உன் மகன் படித்துவிட்டு அடங்காப்பிடாரனாக வந்து உம்மையே அடிப்பான் என்று சொல்லி எள்ளி நகையாடினர். ஆனால் அவரோ, அந்தப் பொறாமைக்காரர்களின் பேச்சைக் கேட்கவில்லை.

 

ஒரு நாள் மகனை எடின்பரோவுக்கு வழியனுப்புவதற்காக தாயும் தந்தையும் அவனுடன் ஊர் எல்லை வரை நடந்து வந்தனர். பின்னர், தந்தை ஏற்பாடு செய்த ஆளுடன் எடின்பர்க் நகரத்துக்கு நடந்தே சென்றார். அவர் நூறு மைல் தூரம் நடந்தே வந்து எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.

On_Heroes_and_Hero_Worship

விடுமுறையின்போது மகன் வீட்டுக்கு வருவதை அறிந்தவுடன் பல மைல்தூரத்துக்கு நடந்து சென்று மகனை எதிர்கொண்டு அழைத்துவருவார்.1814 ஆம் ஆண்டு அவர் பல்கலைப் படிப்பை முடித்தார்.

பின்னர் ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதினார். பிரெஞ்சுப் புரட்சி பற்றி அவர் எழுதிய புத்தகம் அக்காலத்தில் மிகவும் பிரபலமானது.அரசியர் விமர்சனங்களை அங்கத நடையில் எழுதுவதில் வல்லவர்.

 

—சுபம்—

வேதாந்த தேசிகர் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் (Post No.2730)

sri_vedanta_desika_makers_of_indian_literature_idg228

Written by london swaminathan

Date: 16 April, 2016

 

Post No. 2730

 

Time uploaded in London :– 8-50 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

DAYA-SATAKAM_BY_VEDANTA_D

வேதாந்த தேசிகர், ஸ்ரீ இராமனுஜர் காலத்தைத் தொடர்ந்து வந்த பெரிய வைஷ்ணவ ஆச்சார்யார்; தத்துவ வித்தகர்; கவிஞர்; பல நூற்கண்ட பெருமகனார். நூற்றுக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத நூல்களை யாத்தவர். மாலிக்காபூர் தலைமையில் வந்த முஸ்லீம் வெறியர்களின் தாக்குதலுக்குப் பின்னர், ஸ்ரீரங்கப்பெருமாளை கோவிலில் மீண்டும் ஸ்தாபிக்க ஊற்றுணர்ச்சி தந்தவர். இவர் இற்றைக்கு 750 ஆண்டுகளுக்கு முன் வழ்ந்தவர். வித்யாரண்ய ஸ்வாமிகளின் சம்காலத்தவர். இவருடைய பாதுகா சஹஸ்ரம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

 

காஞ்சீபுரம் அருகிலுள்ள தூப்புலில் அவதரித்த வேங்கடநாதன் (பிற்காலப் பெயர் வேதாந்த தேசிகர்) ஆதி சங்கரர் போலவே இளம் வயதிலேயே வேத, வேதாந்த நூல்களில் கரைகண்டார். அவரைப் போலவே கீதை, உபநிஷதம் முதலியவற்றுக்கு விசிஷ்டாத்வைத பூர்வமாக உரையும் கண்டார். (ஆதி சங்கரர் அத்வைத பூவமாக உரைகண்டர்)

 

 

ஒரு நாள் சிற்பி ஒருவன் தேசிகரிடம் வந்து நீங்கள் சிற்ப நூலிலும் வல்லவராமே; என்னை வெற்றிகொள்வீரானால் உமது ‘சர்வ தந்திர சுதந்திரர் – என்னும் பட்டம் நீடிக்கும் அல்லது உமக்களிக்கப்பட்ட பட்டத்தை விட்டுவிட வேண்டும் என்றார்.

இது சிற்பியின் வேலை அல்ல, தன் மீது பொறாமை கொண்ட கும்பலின் வேலை என்பது வேதாந்த தேசிகருக்கு நன்கு தெரியும். பெருமாளின் அருளுடன் போட்டியில் வெல்லலாம் என்ற நம்பிக்கையுடன் அவரும் போட்டிக்கு இசைந்தார். ஆனால் தான் செய்யும் மூர்த்திக்குப் பீடம் அமைத்து அதை நிறுவும் பணியைச் சிற்பி செய்யவேண்டுமென்று தேசிகர் பதில் நிபந்தனை போட்டார். அதைச் சிற்பியும் ஏற்றான்.

 

என்ன விக்ரகம் செய்வதென்று எண்ணியபோது, அவருக்கு ஆவேசம் வந்தது. இடது கையில் கோசமும், வலது கையில்  ஞான முத்திரையும் உள்ள கோலத்தில் அமைக்கவும் என்று ஸ்ரீரங்கநாதரே உத்தரவிட்டார். அப்படியே தேசிகர், ஒரு விக்கிரகமும் செய்து கொடுத்தார்.

 

விக்கிரகததை வாங்கிய சிற்பி, அதில் கண்பார்வை சரியில்லை என்று சொல்லி, அதைச் சரி செய்வதாக, விக்கிரகத்தின் கன்னத்தில் ஆயுதத்தால் தட்டினான். உடனே எதிரேயிருந்த  தேசிகர் கன்னத்தில் ரத்தம் கசிந்தது. அங்குள்ளோர் உடனே விக்கிரகத்தில் பிழை இல்லை, சிற்பி செய்த பீடத்தில்தான் தப்பு என்று சொன்னார்கள்.

உடனே தேசிகரே பீடத்தை வாங்கிச் சீராக்கி, அதில் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்தார். பின்னர் சிற்பி, அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, வந்த வழியே திரும்பிப் போனான்.

Xxx

eleven-rahasya-granthas-of-sri-vedanta-desika

டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் தமிழ் நாட்டிற்குப் படையெடுத்து வந்து, மதுரை ஸ்ரீரங்கம் கோவில்களைச் சூறையாடினான். கோவிலை இடித்து டன் கணக்கில் தங்க நகைகளைக் கொள்ளையடித்தான். ஆனால் இதை முன்கூட்டியே அறிந்த பட்டர்கள், மூலஸ்தான விக்கிரகத்துக்கு முன்னால் ஒரு போலிச் சுவர் எழுப்பி அதுதான் கோவில் என்பது போலவும் சிலைகள் வேறிடத்துக்கு மாற்றப்பட்டன என்பன போலும் காட்டினர். உற்சவ விக்கிரகங்களை திருமலை/திருப்பதிக்கு அனுப்பினர். அதை எடுத்துச் சென்ற குழுவில் தேசிகரும் ஒருவர்.

 

அக்காலத்தில் செஞ்சி பகுதியை  கொப்பணாரியர் என்பவர் ஆண்டுவந்தார். அவருடைய ஆளுகையிலிருந்த அழகிய மணவாளம் என்ற கிராமத்திலிருந்த  சிங்கப்பிரான் என்பவன், முஸ்லீம் படைத்தலைவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, அவருடைய நம்பிக்கையைப் பெற்றான். எல்லா செல்வங்களையும் கொள்ளையடித்து அவனிடம் ஒப்படைப்பதாகவும் சொன்னான். துருக்கப்படைகள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் வந்தது.

 

செஞ்சி அரசன் கொப்பணாரியனுக்குச் சிங்கப்பிரான் ஒரு ரகசிய கடிதம் எழுதி ஒரு குறிப்பிட்ட நாளன்று ஸ்ரீரங்கம் கோட்டைக் கதவுகளைத் திறந்து வைப்பதாகவும், செஞ்சி அரசன் படைகளுடன் வந்து அதைக் கைப்பற்றலாம் என்றும் கடிதத்தில் எழுதியிருந்தான். அந்தத் திட்டப்படி செஞ்சி அரசனும் திருவரங்கத்துக்குப் படைகளுடன் வந்து சேர்ந்தான். சிங்கப்பிரான், முன் ஜாக்கிரதையாக கண்ணனூரில் தங்கியிருந்த படைகளுக்கு மதுபான விருந்து வைத்து அதில் மயங்கி மூழ்கும்படி செய்து வைத்தான். கோட்டைக்குள் புகுந்து கோவிலுக்குள் வந்த செஞ்சி அரசன், அங்கு இருந்த மிலேச்சர்களை விரட்டிவிட்டு, வைணவ ஆச்சார்யார்களை மீண்டும் அழைத்து, கோவிலைச் சுத்தம் செய்து, அலங்கரித்து மீண்டும் உற்சவ மூர்த்திகளைக் கொண்டுவந்தார். மூலத்தானத்திலுள்ள கல்திரையை அகற்றி பெருமாள் சேவையை முன்போல் மீண்டும் துவக்கினார்.

 

திருவரங்கத்தில் நடந்த இந்த விருத்தாந்தங்களையெல்லாம் கேட்டறிந்த வேதாந்த தேசிகர் தம் பரிவாரம் புடை சூழவந்து பெருமாளைத் தரிசித்து ஆனந்தப் பரவசக் கடலில் மூழ்கினார். அப்பொழுது கோவிலிலிருந்த பட்டரின் வேண்டுகோளின்படி கொப்பணாரியர் செய்த அரும்பணியை இரண்டு ஸ்லோகங்களில் பாராட்டினார்.  அவை சேனை முதலியார் பிரகாரத்தில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன.

 

அவர் பாடிய பாடலின் பொருள்:-

“நீல நிறமான சிகரங்களோடு கூடி மக்களுக்குப் ப்ரீதியை உண்டாக்குகிற அழகிய மணவாளனை, உபய நாச்சிமாருடனும், திருமலையிலிருந்து இங்கே எழுந்தருளப் பண்ணி, (அதற்கு முன்) செஞ்சி  நாட்டிலே சில நாள் ஆராதனம் செய்வித்துப் பிறகு, துருக்கரை வெற்றி கொண்டு, பெருமாளை அவரது இடத்தில் எழுந்தருளச் செய்த, ஸ்படிகம் போல மாசுமருவற்ற புகழுடைய   கொப்பணாரியர் விசேஷமான பணிகளைச் செய்து ஸ்ரீரங்கத்தில் மீண்டும் கிருதயுகத்தை உதிக்கச் செய்தார்.”

VEDANTA_DESIKA_HIS_LIFE_WORKS_PHILOSOPHY_by_Satyavrata_Singh_Chowkhamba_Sanskrit_Series_1958

இதற்குப் பின்னர், தேசிகர் நாள்தோறும், அழகிய மணவாளனுக்கு மங்களாசாசனம் செய்துகொண்டு சுகமாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்தார்.

–சுபம்–