கிரஹங்கள் நட்சத்திரங்கள் படைப்பு; மனு நீதி நூல்-பகுதி 3 (Post No.4417)

Written by London Swaminathan 

 

Date: 20 NOVEMBER 2017

 

Time uploaded in London- 21-18

 

 

Post No. 4417

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

முதலிரண்டு பகுதிகள் கடந்த இரண்டு தினங்களில் வெளியிடப்பட்டன.

 

கிரஹங்கள் நட்சத்திரங்கள் படைப்பு; மனு நீதி நூல்-பகுதி 3 (Post No.4417)

 

முதல் அத்தியாயம்

ஸ்லோகம் 21. அந்த பிரம்மானவர் வேதத்தில் சொல்லியபடி, அதனதன் அடையாளங்களுடன் மனிதனையும் பிராணிகளையும் படைத்தார். அதாவது படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் அதனதன் தொழில்கள், பெயர்கள், அடையாளங்கள் ஆகியவற்றை, வேதத்தில் சொல்லியபடி செய்தார்.

 

22.காமத்தை சுபாவமாகவுடைய இந்திராதி தேவர்களையும், சூட்சும ரூபமுள்ள சாத்திய தேவர்களையும், அழிவற்றதான யாகங்களையும், சராசரங்களையும் அந்தப் பிரபுவானவர் சிருஷ்டித்தார்.

 

  1. யாகங்கள் நிறைவேறும் பொருட்டு அக்னி, வாயு, சூரியன் ஆகியவற்றிலிருந்து ரிக், யஜூர், சாம வேதங்களை வெளிப்படுத்தினார். இவை அநாதியான வேதங்கள் (அதாவது ஆதி அந்தம் அற்றவை.)

 

24.பின்னர் காலத்தையும், காலத்தின் பிரிவான மாதங்களையும், நட்சத்திரங்களையும் நவக் கிரஹங்களையும், நதிகளையு, சமுத்திரங்களையும், மலைகளையும் மேடு பள்ளங்களையும் உண்டு பண்ணினார்.

25.தவம், வாக்கு, சுக துக்கங்கள் காம,  க்ரோதம் முதலியவற்றை, மக்களின் இனப்பெருக்கத்துக்காக உண்டு பண்ணினார்.

  1. கர்மத்தை அறிவதற்காக தர்மம், அதர்மம் மற்றும் அதைப் பின்பற்றுபவர்கள், அவர்களுக்கு வரக்கூடிய சுக துக்கங்களையும் உண்டுபண்ணினார்.

27.முன் சொன்ன பஞ்ச பூதங்களுடைய சூட்சுமமான தன்மாத்திரைகளால் இவ்வுலகம் கிரமமாக வளர்கின்றது. இந்த உலகம் சூட்சுமமாகவும், ஸ்தூலமாகவும் இருக்கிறது.

28.இறைவன் ஒவ்வொரு பிராணிக்கும் நிர்ணயித்த அதே குணங்களுடன் அவை மீண்டும் பிறந்து அதேபடி செயல்படுகின்றன.

29.கொலை செய்யும் குணத்தை சிங்கம் முதலிய மிருகங்களுக்குக் கொடுத்தார். மான்களுக்கு கொலையின்மையை அளித்தார். தயை என்னும் குணத்தை பிராமணர்களுக்கும், கொடுமை (போர்) என்பதை க்ஷத்ரியர்களுக்கும், குருவுக்குப் பணிவிடை செய்வதை பிரம்மசாரிகளுக்கும், அவர்களுக்கே மது மாமிச புசித்தல் எனும் அதர்மத்தையும், தேவர்களுக்கு சத்தியத்தையும், மனிதர்களுக்கு அசத்தியத்தையும் (பொய்) உண்டு பண்ணினார்.

 

30.வசந்தம் முதலிய பருவ காலங்கள் எப்படி மாறுதல் அடைகின்றனவோ அது போலப் பிராணிகளும் தம்தம் கர்மத்துக்குத்  தக்க  செய்கைகளைத் தாமே அடைகிறார்கள்.

 

எனது கருத்து:

டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு நேரடியான சான்றுகள் இல்லை. ஆயினும் இறைவன், தன்னுடைய விதையை முதலில் கடலில் வித்தித்தான் என்பது பரிணாமக் கொள்கையின் முதல் படியாக எடுத்துக் கொள்ளலாம். தசாவதாரத்தில் பரிணாமக் கொள்கை வரிசையாக இருப்பது போல இங்கு இல்லை.

 

மேலும் எதிர் எதிர் குணங்கள் இருந்தால்தான் (இன்பம்/துன்பம்; மகிழ்ச்சி- சோகம்) மனித இனம் வளர முடியும் என்பதையும் சொல்கிறார். எல்லோரும் ஒரே குணத்துடன் இருந்தால் வளராது என்று இப்படிப் படைத்தான். மின்சாரம் ஓடுவதற்கு பாஸிட்டிவ், நெகட்டிவ் மின்சாரம் (நேர்மறை, எதிர்மறை மின்சாரம் ) தேவைப்படுவது போல இது.

 

ஒவ்வொரு பிராணியும் அதே குணத்தோடு மீண்டும் மீண்டும் வரும் விஷயம் மரபியல் (Genetics) விஷயமாகும்

 

வேதம், யாக, யக்ஞம் ஆகியன ஆதிகாலம் தொட்டு  இருக்கின்றன. மனிதன், பிராணிகள் படைப்புக்குப் பின்னர் கிரஹங்கள், நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாக சொல்லுவது அறிவியலுக்கு முரணானது. ஆயினும் ஸ்லோகத்தின் அல்லது வாக்கியத்தின் வரிசைக் கிரமத்தை மாற்றுவதில் தவறு ஏதுமில்லை.

 

  1. But in the beginning he assigned their several names, actions, and conditions to all (created beings), even according to the words of the Veda.
  2. He, the Lord, also created the class of the gods, who are endowed with life, and whose nature is action; and the subtile class of the Sadhyas, and the eternal sacrifice.
  3. But from fire, wind, and the sun he drew forth the threefold eternal Veda, called Rik, Yajus, and Saman, for the due performance of the sacrifice.
  4. Time and the divisions of time, the lunar mansions and the planets, the rivers, the oceans, the mountains, plains, and uneven ground.
  5. Austerity, speech, pleasure, desire, and anger, this whole creation he likewise produced, as he desired to call these beings into existence.
  6. Moreover, in order to distinguish actions, he separated merit from demerit, and he caused the creatures to be affected by the pairs (of opposites), such as pain and pleasure.
  7. But with the minute perishable particles of the five (elements) which have been mentioned, this whole (world) is framed in due order.
  8. But to whatever course of action the Lord at first appointed each (kind of beings), that alone it has spontaneously adopted in each succeeding creation.
  9. Whatever he assigned to each at the (first) creation, noxiousness or harmlessness, gentleness or ferocity, virtue or sin, truth or falsehood, that clung (afterwards) spontaneously to it.
  10. As at the change of the seasons each season of its own accord assumes its distinctive marks, even so corporeal beings (resume in new births) their (appointed) course of action.

 

सर्वेषां तु स नामानि कर्माणि च पृथक् पृथक् ।

वेदशब्देभ्य एवादौ पृथक् संस्थाश्च निर्ममे ॥ 21

 

कर्मात्मनां च देवानां सोऽसृजत् प्राणिनां प्रभुः ।

साध्यानां च गणं सूक्ष्मं यज्ञं चैव सनातनम् ॥ 22

अग्निवायुरविभ्यस्तु त्रयं ब्रह्म सनातनम् ।

दुदोह यज्ञसिद्ध्यर्थं ऋच्।यजुस्।सामलक्षणम् ॥ 23  ॥

 

कालं कालविभक्तीश्च नक्षत्राणि ग्रहांस्तथा ।

सरितः सागरान् शैलान् समानि विषमानि च ॥ 24

 

तपो वाचं रतिं चैव कामं च क्रोधमेव च ।

सृष्टिं ससर्ज चैवैमां स्रष्टुमिच्छन्निमाः प्रजाः ॥ 25

 

कर्मणां च विवेकार्थं धर्माधर्मौ व्यवेचयत् ।

द्वन्द्वैरयोजयच्चैमाः सुखदुःखादिभिः प्रजाः ॥ 26

अण्व्यो मात्रा विनाशिन्यो दशार्धानां तु याः स्मृताः ।

ताभिः सार्धमिदं सर्वं संभवत्यनुपूर्वशः ॥ 27

 

यं तु कर्मणि यस्मिन् स न्ययुङ्क्त प्रथमं प्रभुः ।

स तदेव स्वयं भेजे सृज्यमानः पुनः पुनः ॥ 28

 

हिंस्राहिंस्रे मृदुक्रूरे धर्माधर्मावृतानृते ।

यद् यस्य सोऽदधात् सर्गे तत् तस्य स्वयमाविशत् ॥29

 

यथर्तुलिङ्गान्यर्तवः स्वयमेवर्तुपर्यये ।

स्वानि स्वान्यभिपद्यन्ते तथा कर्माणि देहिनः ॥30

 

 

–சுபம் சுபம்–

 

ஆஹா! அபார விஞ்ஞான வளர்ச்சி! ஆனால் மனிதன் .. ?! (Post No.4394)

Written by S.NAGARAJAN

 

 

Date: 14 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-20 am

 

 

Post No. 4394

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.

 

 

அறிவியல் தாக்கம்

 

ஆஹா! அபார விஞ்ஞான வளர்ச்சி! ஆனால் மனிதன் .. ?!

 

ச.நாகராஜன்

 

1

 

நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் தாக்கம் மனித வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும், எல்லா அம்சங்களிலும் வந்து விட்டது – ஆன்ம வளர்ச்சியைத் தவிர.

இதைப் பலரும் கவலையுடன் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

சாது டி.எல்.வாஸ்வானி 365 நாளுக்குமான தினசரி சிந்தனைகளைத் தனது “Breakfast With God” என்ற நூலில் தந்திருக்கிறார்.

அதில் பிப்ரவரி 22ஆம் தேதிக்கான நற்சிந்தனை இது:

 

The Modern man is proud of his progress, his science, his commerce and mechanical inventions.

 

This scientific age is, to many, the age of wonders; yet is man unhappy still! This age of wonders is, also, an age of deep unrest.

 

There is weariness in many hearts.

 

In this mechanical age man is becoming, more and more, a machine himself.

Not until he rises above the machine into a realm of the Atman may man be truly happy.

 

பொருள் பொதிந்த சிந்தனை அல்லவா இது! இயந்திரங்களைப் பயன்படுத்தப் போய் மனிதன் இயந்திரமாகவே இதயமின்றி ஆகி விடுவானோ?!

 

ரொபாட்டில் இனி இரு வகை இருக்குமோ? ரொபாட்,மனித ரொபாட் என்று??!!

2

ஹரி கிஷன் தாஸ் அகர்வால் (Hari Kishandas Aggarwal) என்ற சிந்தனையாளர் Peace  Of Mind  என்ற இரண்டு பாகம் கொண்ட நூலில் 775 பாக்களைப் புனைந்துள்ளார்.

அதில் சில:

 

Change

 

The Stone age has gone

The Iron age has gone

The bullock-cart age has gone

The Jet age has come

Contentment has gone

Discontentment has come (Verse 409)

 

Paradoxes of Materialism – I

Inventions have increased and the wants too,

The doctors have multiplied and the diseases too,

Weapons have grown and the wars too,

Production has doubled and the population too. (Verse 548)

 

Paradoxes of Materialism – II

Science has developed and the destruction too,

Employment has increased and the strikes too,

Wealth has increased and poverty too,

Education has increased and ignorance too. (Verse 549)

 

Paradoxes of Materialism – III

Vegetables have increased and the non-vegetarians too,

Politicians have increased and the problems too,

Leaders have increased and the labels too,

Religions have increased and the repulsions too. (Verse 550)

 

இவர் இப்படிக் கூறுவதெல்லாம் சரிதானே!

 

3

விஞ்ஞானம் வளர்கிறது. அதைக் குட்டிக் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டமா, என்ன?

பார்த்தார் ஒரு கவிஞர், குழந்தைகளுக்கான் ‘ட்விங்கிள், ட்விங்கிள், லிட்டில் ஸ்டார் பாடலைக் கூட விட்டு வைக்கவில்லை. பாடினார் இப்படி:-

 

Twinkle, twinkle little star,

How I wonder where you are:

High above I see you shine,

But, according to Einstein,

You are not where you pretend,

You are just around the bend;

And your sweet seductive ray

Has been leading man astray

All these years – O, Little Star,

Don’t you know how bad you are?

 

சரி, குழந்தைகள் ஒரு புறம் இருக்கட்டும், வாலிபர்களும், பருவ மங்கைகளும் விஞ்ஞானத்தால் வளர்ந்தார்களா?

ஒரு கவிஞர் பதிலிறுக்கிறார் இப்படி:

 

A girl at college, Miss Breese,

Weighed down by B.A.’s and Litt.D’s

Collapsed from the strain

Said the doctor, “’T is plain

You are killing yourself – by degrees.

 

4

சிந்திக்க வேண்டும் சற்று!

எதை எதை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அதை அதை அந்த்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.

அறிவியலுக்கு ஒரு இடம்; ஆன்மீகத்திற்கு முதலிடம்!

புரிந்தால் சரி!

****

ஆஷ் கொலை வழக்கு: பாரதியார் நூல்கள் – PART 42 (Post No.4364)

Written by S.NAGARAJAN

 

 

Date: 4 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-18

 

 

Post No. 4364

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 42

ஆஷ் கொலை வழக்கு – ரகமி எழுதியுள்ள ஆய்வுத் தொடர்

 

ச.நாகராஜன்

 

 

மஹாகவி பாரதியாரின் வாழ்க்கை பன்முகப் பரிமாணம் கொண்ட ஒன்று. சிறு வயதிலேயே அவர் மறைந்தார் எனினும் அவர் வாழ்க்கையில் அவர் சகோதரி நிவேதிதா, பால கங்காதர திலகர், மஹாத்மா காந்திஜி, அரவிந்தர், வ.உ.சி., வ.வே.சு. ஐயர் போன்ற ஏராளமான சரித்திரம் படைத்த பல பெரியோர்களைச் சந்தித்தார்.

சுதந்திரம் அடையத் தீவிரமாக உழைத்த புரட்சிவாதிகளிலிருந்து அஹிம்சை போதித்த காந்தி மகான் வரை அவரது வாழ்க்கை அனைவரையும் கண்டது. ஆனால் எதிலும் ஒரு சமச்சீர் தன்மையைக் கொண்டிருந்தார் அவர். அது தான் அவர் வாழ்க்கையில் நாம் காணும் ஒரு அற்புதம்.

இந்த வகையில் ஆஷ் கொலை வழக்கில் அவரும் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்பது சரித்திரம் தரும் தகவல்.

 

 

பழம் பெரும் எழுத்தாளரான ரகமி (முழுப்பெயர் ரங்கஸ்வாமி) தன் நேரம் உழைப்பு ஆகியவற்றை அர்ப்பணித்து ஆஷ் கொலை வழக்கு பற்றி முழுதும் ஆராய்ந்தார்.

 

 

அதன் அடிப்படையில் தினமணி கதிர் வார இதழில் 3-6-1984 தொடங்கி ஒரு நெடுந்தொடரை எழுதினார். இந்தத் தொடர் புத்தக வடிவில் வெளியிடப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

(கதிர் வார இதழிலிருந்து தொகுத்து வைத்துள்ள கட்டுரைகள் என்னிடம் பத்திரமாக உள்ளன.)

*

அந்த நூலிலிருந்து பாரதியார் பற்றிய சில முக்கியப் பகுதிகளை  மட்டும் இங்கு தருகிறேன்.

 

1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதியன்று கலெக்டர் ஆஷ் என்பவரை வாஞ்சி ஐயர் மணியாச்சி ஜங்ஷனில் சுட்டுக் கொலை செய்தார்.

 

1911, செப்டம்பர் 11ஆம் தேதி, சனிக்கிழமையன்று (இது பின்னால் பார்க்கும் போது – செப்டம்பர் 11 – பாரதி மறைவு நாளாக அமைகிறது!) ஆஷ் கொலை சதி வழக்கு கேஸின் முதல் நாள் விசாரணை துவங்கியது.

 

14 பேர்கள் குற்றம் சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டனர். அனைவரும் தங்கள் மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுத்தனர்.

 

பப்ளிக் பிராசிக்யூடர் நேபியர் தனது வாதத்தை முன் வைத்துக் கூறுகையில், “ திருநெல்வேலி கலெக்டர் ஆஷின் கொலைக்கு சதித் திட்டங்கள் புதுவையிலிருந்து ஆரம்பமாகியது என்று சொல்வதற்கு ஏற்றாற் போல, முதல் குற்றவாளி நீலகண்டன் புதுவையில் கவி பாரதியார் நடத்திய ‘இந்தியா’ பத்திரிகையில் சம்பந்தப்பட்ட பின் ‘விஜயா’ மற்றும் ‘சூரியோதயம்’ பத்திரிகைகளில் வேலை செய்த போது, அவைகள் சர்க்காரால் தடுக்கப்படவே, பின்னர் அவர், ‘கர்மயோகி’, ‘பால பாரதா’, தர்மா’ பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்.

 

 

புதுவையிலிருந்த தீவிரவாதிகளுடன் நீலகண்டனும், கொலையாளி வாஞ்சியும் நெருங்கிப் பழகினர். இதில் வி.வி.எஸ் ஐயர், சுப்பிரமணிய பாரதி, மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரி, நாகசாமி இவர்கள் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டிற்கு விரோதமான அபிப்ராயங்கள் கொண்டிருந்தனர். இதனால் இவர்கள் விலாசங்களுக்கு வரும் கடிதங்கள் வெளிநாட்டுப் பிரசுரங்களைப் பரிசீலனை செய்த பிறகே அவர்களிடம் பட்டுவாடா செய்யும்படி புதுவை போஸ்ட்மாஸ்டர் எம்.கே.ஸ்ரீநிவாசய்யங்காருக்கு, கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் அதிகாரிகள் உத்திரவு செய்திருந்தனர். இதன்படியே எல்லாக் கடிதங்களும் பரிசீலனை செய்தே அவர்களிடம் டெலிவரியும் செய்யப்பட்டு வந்தது. சில சமயங்களில் சுப்ரமண்ய பாரதியாரே தன் பெயருக்கு வரும் தபால்களை வாங்குவதற்காக தபாலாபீசுக்கு வந்து விடுவார். அவர் சற்று முன் கோபக்காரர். தபால்கள் பரிசீலனை செய்து சற்று தாமதமாகப் பட்டுவாடா செய்வதையும் பொறுக்காமல் கோபித்துக் கொண்டு, “சீ.. சீ..! கேவலம் நாயும் கூட இந்தப் பிழைப்புப் பிழைக்குமே” என்று சொல்வதுண்டு.

 

 

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்துப் புதுவைக் கடற்கரையில் வி.வி.எஸ். ஐயர், சுப்பிரமணிய பாரதி, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரி, வாஞ்சி இவர்கள் கும்பலாகப் பேசிக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாகத் திடீரென இவர்களைச் சந்தித்த போஸ்ட்மாஸ்டர் ஸ்ரீநிவாசய்யங்காரிடம் வி.வி.எஸ் ஐயர் தங்கள் பெயருக்கும் வரும் நிருபங்களைத் தாமதிக்காமல் உடனுக்குடன் டெலிவரி செய்ய வேண்டுமென்று சாதாரணமாகக் கூறினார். பக்கத்திலிருந்த வாஞ்சி, “எதற்காக நாம் போஸ்ட்மாஸ்டரிடம் கெஞ்சிக் கேடக வேண்டும்? அவர் ஒழுங்காகத் தபால்களைத் தாமதிக்காமல் தந்தால் அவருக்குத் தான் நல்லது. இத்தனையும் மீறி அவர் தாமதித்தால், நாம் அவரையே இந்த ஊரிலேயே தீர்த்துக் கட்டி விட்டால் போச்சு!” என மிக்க ஆத்திரத்தோடு சொன்னான்.”

 

நேபியரின் வாதம் இப்படி நீள்கிறது. (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 3)

 

*

 

பின்னால் நீலகண்ட பிரம்மசாரி என்று  அழைக்கப்பட்ட நீலகண்டன் (முதல் குற்றவாளி) தன் வாழ்க்கையில் வெறுப்புற்றதைக் குறிப்பிட்டு தன் ஸ்டேட்மெண்டில் கூறியது:

“கடைசியில் புதுவைக்குச் சென்று அங்கு நான் பழகிய தீவிரவாதி நண்பர்களிடமெல்லாம் என் நிலைமையைக் கூறினேன். எனக்குத் தகுந்த ஆதரவு இல்லை. மன விரக்தியடைந்த நான் சிலகாலம் ஹரித்துவாரத்திற்குச் சென்று  சிவனேயென அமைதியாக இருக்க எண்ணி என்னுடன் கூட வரும்படி கவி சுப்ரமணிய பாரதியாரைக் கூப்பிட்டேன். அவரும் என்னுடைய நிலைமையில் இருப்பதாகக் கூறினதும் நான் அவரையே என்னுடன் வட நாட்டிற்கு வந்து விடு என்றழைத்தேன். அதற்கு அவர் தன் பேரில் சென்னையில் ஏதேனும் புது வாரண்டுகள் பிறந்து அவைகள் பெண்டிங்கிலிருக்கிறதா என்ற விவரமறிந்து பின்னர் முடிவு கூறுவதாகச் சொல்லி, சென்னை போலீஸ் கமிஷனருக்கே பகிரங்கமாகக் கடிதம் எழுதிக் கேட்டார்.

 

 

போலீஸ் கமிஷனரிடமிருந்து வந்த பதிலில் வாரண்டுகள் ஒன்றும் புதிதாகப் பிறப்பிக்கப்படவில்லை என்று வந்ததும், அவருடைய குடும்ப நிலையின் காரணமாகத் என்னுடன் வட இந்தியாவுக்கு வரவில்லை.” (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 3)

 

*

 

கொலைவழக்கின் தொடர்ச்சியாக பிராசிகியூஷன் சாட்சியாக முன்சீப் பரமேஸ்வரய்யர் விசாரிக்கப்பட்டார். அவர் கூறியது:

“ போன வருஷம் ஜூலையில் நான் செங்கோட்டையில் மாஜிஸ்டிரேட்டாக இருந்தேன். கலெக்டர் ஆஷ் கொலை விஷயமாகப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரய்யரும், மதுரை இன்ஸ்பெக்டருமாகச் சேர்ந்து வாஞ்சியின் வீட்டைச் சோதனையிட்டபோது கூட இருந்தவன். துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றினோம்.

 

 

கிடைத்த அக்கடிதங்கள் மூலம் செங்கோட்டையிலுள்ள ‘சாவடி’ அருணாசலம் பிள்ளையின் வீட்டையும் சோதனையிட்டோம்.அங்கு ‘ஜென்ம பூமி’ புத்தகங்களும், சில பாடல்கள் அச்சடித்திருந்த நோட்டீஸ்களும் அகப்பட்டன. அப்பாடல்களில் கலெக்டர் விஞ்சை வெறி பிடித்தவன் போல சுதேசி மக்களை மதிப்பின்றிப் பேசுவதாக வெளியிட்டிருந்தது. சுதந்திரம் கேட்கும் பாரதவாசிக்கு ஆங்கிலேயன் கேட்கும் முறையில் கலெக்டர் விஞ்ச், வ.உ.சிதம்பரம் பிள்ளையைக் கேட்பது போல எழுதப்பட்டிருந்தது. நந்தன் சரித்திரத்தில் நந்தனுடைய சிதம்பர வாஞ்சையைப் பற்றி மற்றவர்கள் வந்து சொல்லக் கேட்டு, வேதியர் மகா கோபங்கொண்டு நதந்னை நோக்கிச் சொல்கிறார்: “சேரி முற்றுஞ் சிவபக்தி பண்ணும்படி வீட்டையாம் அடியிட்டையாம்” என்பது முதலான வார்த்தைகள் கூறிப் பயமுறுத்துகிறார். இதன் குறிப்பைத் தழுவி திருநெல்வேலி கலெக்டராகிய விஞ்ச், சிதம்பரம் பிள்ளைக்குக் கூறும் வரி இது

 

 

“நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் -கனல்

மூட்டினாய்”

 

பயமுறுத்திக் கேட்கும் கண்ணிகள் எழுதப்பட்டிருந்தன. இதற்குப் பதில் கூறுவது போல் கலெக்டர் விஞ்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை கூறும் மறுமொழியாக உள்ளது: “சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் – இனி -அஞ்சிடோம்”  என்று கூறியிருந்தது.

மூன்றாவதாக  சுயராஜ்யம் கேட்கும் பாரதவாசிக்கு  ஆங்கிலேய உத்தியோகஸ்தன்  சொல்கிறான்.

 

 

நந்தனார் சரித்திரத்திலுள்ள , :மாடு தின்னும் புலையா – உனக்கு

மார்கழித் திருநாளா?” என்று வரும் வர்ண மெட்டில் உள்ளது.

‘தொண்டு செய்யுமடிமை  – உனக்கு

சுதந்திர நினைவோடா?” என்னும் பாடலையும் சேர்த்து இம்மூன்று பாடல்களுக்கும் எக்ஸிபிட் நம்பர் கொடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது” என்றார்.

 

 

அச்சமயம் சீஃப் ஜஸ்டிஸ் அம்மூன்று பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கம் கேட்டார். அம்மூன்று பாடல்களும் ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பதைப் பப்ளிக் பிராசிகியூடர் நேப்பியர் கோர்ட்டில் எடுத்துக் காட்டினார். அதனை பப்ளிக் கோர்ட்டில் படிக்கும்படி உத்தரவிட இரண்டு பேர்கள் படித்தனர்.

 

ஒருவர் தமிழில் ஒரு வரியைப் படிக்க, இதற்குச் சரியான மொழிபெயர்ப்புடன், விளக்கத்தையும் மற்றொருவர்  ஆங்கிலத்தில் கூறினார்.

 

இம்மூன்று பாடல்களையும் படித்து முடிக்க  சுமார் ஒன்றரை மணி நேரமாயிற்று. கோர்ட்டு முடிவதற்கும் மாலை மணி 5 ஆவதற்கும் சரியாக இருந்தது. இத்துடன் கோர்ட்டு கலைந்தது. (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 7)

 

*

 

 

நீலகண்ட பிரம்மச்சாரி மாடசாமி பற்றிக் கூறும் தகவல்கள் சுவையானவை. மாடசாமி தப்பிப் போனவர் போனவரே. அவரைப் பற்றி இன்று வரை ஒரு தகவலும் யாருக்கும் தெரியாது!

 

நீலகண்ட பிரம்மச்சாரி தனது வாக்குமூலத்தில், :நான் மறுபையும் புதுவைக்குச் சென்று நான் எழுதிய கட்டுரைகளை கவி சுப்பிரமணிய பாரதியிடம் காட்டினேன். அவர் அவைகளை அப்படியே பிரசுரிக்க வேண்டாமென்று சொல்லி அதில் சிலவற்றைத் திருத்தித் தந்ததை புதுவையிலிருந்து வரும் பேப்பர்களுக்குக் கொடுத்து விட்டு மிகுதி கட்டுரைகளை புத்தகமாக வெளியிடச் சென்னையில் “கார்டியன்” பிரஸ்ஸில் கொடுத்தேன்’ என்கிறார் (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 9)

*

இப்படி ஆஷ் கொலை வழக்கு முழுவதும் சுவைபட நூலில் கூறப்பட்டிருக்கிறது.

 

அனைத்து ஆவணங்களையும் முறைப்படி ஆராய்ந்து அதை சுவை மிகுந்த சரித்திர நூலாக்கித் தருகிறார் ரகமி.

பாரதியார் பற்றிய பல விவரங்களை இதில் காண முடிகிறது.

ஆனால் கோர்ட் சாட்சியங்கள் என்பதால் இவற்றைப் பல்வேறு இதர பாரதி பற்றிய நூல்களுடன் ஒப்பிட்டு கொள்வன கொண்டு நீக்குவன நீக்கலாம்.

 

நூலை எழுதி பாரதி இயலுக்கு ஒரு அரிய சேவையை செய்துள்ள ரகமியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சுதந்திரப் போரில் தென்னக எழுச்சியையும் உச்சத்தையும் தொட்டுக் காட்டும் நூலாகவும் இது அமைகிறது.

 

பாரதி அன்பர்களுக்குச் சுவை பயக்கும் நூலாக இது இருப்பதால், உடனடியாக இதைத் தங்கள் பட்டியலில் இதை இணைக்க வேண்டுவது அவசியமான ஒன்று.

****

 

 

ஐந்து நிமிடம் கரகோஷம் பெற்ற புடினின் சின்ன உரை! (Post No.4361)

Written by S.NAGARAJAN

 

 

Date: 3 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-59 am

 

 

Post No. 4361

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

ஜிஹாதியே வெளியேறு

 

ஐந்து நிமிடம் கரகோஷம் பெற்ற புடினின் சின்ன உரை!

 

ச.நாகராஜன்

முஸ்லீம் மைனாரிடிகள் ஆஸ்திரேலியாவின் அரசியல் சாஸனத்திற்கு கட்டுப்பட்டு இருப்பதானால் இருங்கள்; இல்லையேல் வெளியேறுங்கள் என்ற ஆஸ்திரேலிய பிரதமரின் பேச்சைச் சில மாதங்களுக்கு முன்னர் கேட்டதை அனைவரும் மறந்திருக்க முடியாது.

 

ஆனால் ரஷிய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் தேதியன்று ரஷிய பார்லிமெண்டில் நிகழ்த்திய உரை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது மிகச் சிறிய உரை தொடர்ந்து ஐந்து நிமிடம் கரகோஷத்தைப் பெற்றது.

 

 

அதன் சாரத்தைத் தமிழில் கீழே காணலாம்:

 

“ரஷியாவில் ரஷியர்கள் வாழ்கிறார்கள். எங்கிருந்து வந்தாலும் சரி, எந்த மைனாரிடியாக இருந்தாலும் சரி, ரஷியாவில் வாழ விரும்பினால், ரஷியாவில் உணவு உண்ண விரும்பினால் ரஷிய மொழி பேச வேண்டும். ரஷிய சட்டத்தை மதிக்க வேண்டும்.

 

அவர்கள் ஷரியத் சட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்தால், முஸ்லீமாக வாழும் வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களை அப்படியான அரசியல் சட்டம் இருக்கும் இடங்களுக்குச் செல்லுங்கள் என்று நாங்கள் அறிவுரை கூறுகிறோம்.

ரஷியாவிற்கு முஸ்லீம் மைனாடிகள் தேவையில்லை.

 

மைனாரிடிகளுக்குத் தான் ரஷியா தேவையாக இருக்கிறது. அவர்களுக்கு விசேஷ சலுகைகளைக் கொடுக்க மாட்டோம். அல்லது அவர்களின் விருப்பத்திற்கிணங்க எங்கள் சட்டத்தை மாற்ற மாட்டோம்.

 

 

பக்ஷபாதம் என்று அவர்கள் எவ்வளவு உரக்க ஊளையிட்டாலும் சரி, மாற்ற மாட்டோம். எங்களது ரஷிய பண்பாட்டிற்கு அவமரியாதை  செய்வதைப் பொறுக்க மாட்டோம். ஒரு தேசமாக நாங்கள் இருக்க வேண்டுமெனில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து மற்றும் பிரான்ஸின் தற்கொலைகள் மூலம் நாங்கள் கற்க வேண்டியதைக் கற்றுக் கொண்டோம். முஸ்லீம்கள் அந்த நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களால் ரஷியாவை ஆக்கிரமிக்க முடியாது.

 

ரஷிய பழக்க வழக்கங்களும் பாரம்பரியமும்  முஸ்லீம்களின் காட்டுமிராண்டித்தனமான ஷரியத் சட்டத்தின் பண்பாடற்ற தன்மையுடன் ஒப்பிடவே முடியாது.

இந்த மேன்மை தகு சட்ட சபை புதிய சட்டங்களை இயற்றும் போது, முஸ்லீம் மைனாரிடிகள் ரஷியர்கள் அல்ல என்பதை அது கவனித்து, ரஷியர்களின் தேசீய நலன்களை முதலில் மனதில் இருத்த வேண்டும்.”

 

 

  • SOURCE :- TRUTH VOL.85 NO. 25 – 27-10-2017 ISSUE

 

ரஷிய அதிபரான மிகமிகச் சிறிய உரை  ஐந்து நிமிடங்களுக்கு நீடித்த கைதட்டலைப் பெற்றது

 

. (A February 2013 speech by Russian president Vladimir Putin demanding that Muslim immigrants speak Russian and conform to Russian culture is apocryphal.)

 

விளாடிமிர் புடின் உரையை அப்படியே ஆங்கிலத்தில் கீழே படிக்கலாம்.

The Russian view:

 

Vladimir Putin, the Russian President, addressed the Duma, (Russian Parliament) on February 04, 2013, and gave a speech about the tensions with minorities in Russia:

 

“In Russia live Russians. Any minority, from anywhere, if it wants to live in Russia, to work and eat in Russia, should speak Russian, and should respect the Russian laws. If they prefer Sharia Law, and live the life of Muslims then we advise them to go to those places where that’s the state law.

Russia does not need Muslim minorities. Minorities need Russia, and we will not grant them special privileges, or try to change our laws to fit their desires, no matter how loud they yell ‘discrimination’. We will not tolerate disrespect of our Russian culture.

 

We had better learn from the suicides of America, England, Holland and France, if we are to survive as a nation. The Muslims are taking over those countries and they will not take over Russia. The Russian customs and traditions are not compatible with the lack of culture or the primitive ways of Sharia Law and Muslims.

 

When this honorable legislative body thinks of creating new laws, it should have in mind the Russian national interest first, observing that the Muslim minorities are not Russians.

 

TRUTH VOL.85 NO. 25

 

 

The shortest ever speech by the Russian President invited the longest standing applause for 5 minutes. (A February 2013 speech by Russian president Vladimir Putin demanding that Muslim immigrants speak Russian and conform to Russian culture is apocryphal.)

 

 

ரஷியாவை வழிகாட்டியாகக் கொண்டு, ஆஸ்திரேலியா, முஸ்லீம்கள் ஆஸ்திரேலியா சட்டத்தை மதித்து வாழ முடியுமானால் இங்கு வாழலாம்; இல்லையேல் அவர்கள் வெளியேறலாம் என்று அறிவித்து விட்டது.

 

 

ஆனால் இந்தியாவிலோ ‘ஒரு நாடு; ஒரு சட்டம்’ என்பதற்கே போலி செகுலரிஸ்டுகளும் பிரிவினையை விதைக்க நினைக்கும் போலி கிறிஸ்தவ பாதிரிகள் உள்ளிட்டவர்களும், கம்யூனிஸ்டுகளும், ஜிஹாதிகள் உள்ளிட்ட பிரிவினை வாத மைனாரிடி முஸ்லீம்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

 

ஓட்டிற்காக போலி செகுலரிஸம் பேசும் இந்தியத் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; இந்திய மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டால் போதும்; இந்த நாடு அசைக்க முடியாத ஹிந்து நாடாக மிளிரும்.

(நன்றி: ட்ரூத், ஆங்கில வார இதழ் – 27-10-2017)

***

 

கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 4 (Post No.4324)

Written by S.NAGARAJAN

 

 

Date:22 October 2017

 

Time uploaded in London- 6–17 am

 

 

Post No. 4324

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அறிவியல் துளிகள் (ஏழாம் ஆண்டு 35வது கட்டுரை) தொடரில் பாக்யா 20-10-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 4

 

 ச.நாகராஜன்

 

“கோஹினூர் வைரம் ஒரு போதும் விற்கப்படவும் இல்லை; வாங்கப்படவும் இல்லை; ஆனால் அது எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒரு வைரம் – சாபி கோஷ்ரே  

 

 

     இங்கிலாந்து சென்ற துலிப் சஃபால்க் என்னுமிடத்தில் இருந்த எல்வெல்டன் ஹால் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார்.

 

அவருக்கு கார்டியனாக நியமிக்கப்பட் டாக்டர் ஜான் லோகின் என்ற சர்ஜன் தான் அவரை லண்னுக்கு அழைத்துச் சென்றார்.

முழு ஆங்கிலேயர் ஆகி விட்ட துலிப் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.

 

1864ஆம் ஆண்டு துலிப் ஜெர்மன் மிஷனரி ஒருவரின் மகளான வயதான பெண்மணியான பம்பா முல்லரை மணந்து கொண்டார். அவருக்கு மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன.

கோஹினூர் வைரமோ 1849 மே மாதத்தில் பத்திரமாக ஒரு லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது.

 

 

துலிப்பிற்கு அரண்மனைச் செலவு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. கடனுக்கு மேல் கடன். வங்கிகள் துலிப்பிற்கு எச்சரிக்கை நோட்டீஸ்களை அனுப்பிக் கொண்டே இருந்தன. அவற்றை எல்லாம் அப்படியே துலிப் விடோரியா மஹாராணியாருக்கு அனுப்பி வைத்தார்.

 

எல்லாம் ராணி பார்த்துக் கொள்ள மாட்டாரா என்ன!

ஆனால் ராணி ஒரு பக்கம் இருக்க வங்கிகள் இன்னொரு பக்கம் இருந்தன. கடன் எல்லை மீறிப் போனதால் எல்வெல்டன் அரண்மனையை விற்க வேண்டி இருந்தது.

இந்தச் சமயம் தான் துலிப்பிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.

பரம்பரை பரம்பரையாக வந்த ராஜ ரத்தம் சிந்தனையைத் தூண்டியது.

 

 

தான் வஞ்சிக்கப்பட்டதை நன்கு உணர்ந்தார் துலிப்.

தனக்கு திட்டமிடப்பட்டு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ராணியாருக்குக் கடிதம் எழுதினார். பலனில்லை.

பிறகு ஜெர்மனியில் இருந்த பிஸ்மார்க். ரஷிய ஜார் மன்னர், ஐரிஷ் விடுதலை வீரர்கள் ஆகியோரின் உதவியை நாடினார்.

பிரிட்டிஷாரை எதிர்க்க ஆரம்பித்தார்.

 

1886இல் பஞ்சாபில் நடந்த மதமாற்ற சடங்கு ஒன்றில் மீண்டும் தாய் மதம் திரும்பினார் துலிப்.

 

1887இல் மனைவி பம்பா இறக்கவே இருபது வ்யதே ஆன இளவயது மங்கையான அடாவெதரில் என்பவரை மணந்தார். அவர் மூலம் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

ராணி ஜிண்டானோ 1861இல் மகனைச் சந்தித்து அவரைப் பிரியவே மாட்டேன் என்று கூறி லண்டன் சென்றார். 1863இல் அவர் மறைந்தார்.

 

1893ஆம் ஆண்டு பாரிஸில் இறந்தார் துலிப்.

பஞ்சாபின் தீர மிக்க ரஞ்சித் சிங்கின் பரம்பரையின் கதை இப்படி முடிந்தது.

 

ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூரை விக்டோரியா மஹாராணியாருக்குத் தர விழைந்தது. அவரோ அதைப் பெற்று மனம் மிக மகிழ்ந்தார். அது அவ்ரது மேலடை அணிகலன்களில் ஒன்றாகச் (Brooch) சேர்ந்தது.

 

பின்னர் அதை ராஜ கிரீடத்தில் நடுவில் பதித்தார்.

விக்டோரியா மஹாராணியாரின் கணவரான பிரின்ஸ் ஆல்பர்ட் கோஹினூர் வைரத்தை மீண்டும் அறுத்து பாலிஷ் செய்தார். இப்போது வைரத்திலிருந்து அதிக பிரகாசமான ஒளி பிரதிபலித்து அனைவரையும் மயக்கியது

 

விக்டோரியாவின் மூத்த புதல்வரான ஏழாம் எட்வர்ட் மன்னரின் ராணியான க்வீன் அலெக்ஸாண்ட்ரியாவின் மகுடத்தில் அது பிரகாசித்தது. பின்னர் விக்டோரியாவின் பேரரான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மனைவியான க்வீன் மேரியின் மகுடத்தில் 1937இல் அது ஒளி வீசியது. க்வீன் மேரி தான் இரண்டாம் எலிஸபத்தின் தாயார்.

2002ஆம் ஆணு க்வீன் மதர் இறக்கவே அந்த இறுதிச் சடங்கில் சவப்பெட்டியின் மீது கோஹினூர் வைரம் வைக்கப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்தனர். கோஹினூரை அனைவரும் கடைசியாகப் பார்த்த தருணம் அது தான்!.

 

1947இல் இந்தியா சுதந்திரம் அடையவே நமது நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டவற்றின் பட்டியலைப் பற்றி நமது நாட்டு மக்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

 

எப்படியேனும் கோஹினூரை இந்தியாவிற்கு மீட்பது குறித்துப் பலரும் ஆலோசித்தனர்.

 

இந்தியாவிலிருந்து திருடப்பட்ட புத்தூர் நடராஜரை மீட்க உதவி செய்த பாஸ்கர் கோர்ப்படே என்பவர் இதில் தீவிரமான முயற்சியை எடுத்தார்.

இப்போது பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானில் தாலிபான் ஆகியவையும் கோஹினூரின் மீது உரிமை கொண்டாடுகின்றன.

ஆனால் அனைவருக்கும் இது இந்தியாவின் சொத்து என்பது நன்றாகவே தெரியும்.

 

 

2010இல் இந்தியா வந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரான் கோஹினூர் இங்கிலாந்தில் தான் இருக்கும். ஒருவருக்குத் திருப்பிக் கொடுக்க இசைந்தால் பிரிட்டிஷ் மியூசியமே காலி ஆகி விடும் என்று கூறினார்.

இருப்பினும் நீதி மன்றத்தில் வாத பிரதிவாதங்கள் அவ்வப்பொழுது நடந்து கொண்டே இருக்கின்றன.

 

 

இந்திய அரசு உறுதியான நிலைப்பாடு எடுத்து பிரிட்டனுடன் பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே ஒளி மலை நமக்கு மீண்டு வரும்!

 

வரலாற்று ரீதியாக கோஹினூரை ஆராய்ந்து ஆனந்த் மற்றும் டால்ரிம்பிள் ஆகியோர் எழுதிய “கோஹினூர்: தி ஹிஸ்டர் ஆபஃப் தி வோர்ல்ட் மோஸ்ட் இன்ஃபேமஸ் டயமண்ட் (Koh-i-noor: The History of the World’s Most Infamous Diamond by Anand and Dalrymple) என்ற நூல் இப்போது விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 

 

இந்த நூல் கோஹினூர் வைரத்தின் சரித்திரத்தை முழுமையாகத் தந்துள்ளது என்று கூறும் பெண்மணியான நூலாசிரியை ஆனந்த், அது இந்தியாவிற்கு வந்தே தீர வேண்டும் என்று கூறுகிறார்.

இவரை இந்தியர்கள் அனைவரும் ஆதரிக்கின்றனர்.

சொந்த நாட்டிற்கு கோஹினூர் வந்து சேருமா? காலம் செய்யும் ஜாலத்தை உற்று நோக்கினால் ஆம் என்ற விடை தான் மனதில் தோன்றுகிறது!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

பிரிட்டிஷ் வானவியல் விஞ்ஞானியான  சர் ஜான் ஹெர்ஷல் (Sir John Herschel)  ஒரு அபூர்வமான பெரிய டெலஸ்கோப்பைக் கண்டு பிடித்திருப்பதாக நியூயார்க்கிலிருந்து வெளிவந்த பத்திரிகையான நியூயார்க் சன்னில் அதன் நிருபரான ரிச்சர்ட் ஆடம்ஸ் லாக் (Richard Adams Locke) என்பவர் பரபரப்பான ஒரு செய்தியை வெளியிட்டார்.

 

பத்திரிகையின் சர்குலேஷன் சொல்லும்படியாக இல்லை.

அந்த டெலஸ்கோப்பை வைத்து ஹெர்ஷல் சந்திரனை ஆராய்வதாக அடுத்த செய்தி வெளியானது. மக்கள் ஆவலுடன் அதைப் படித்தனர்.

 

 

அடுத்த நாள் ஹெர்ஷல் சந்திரனில் மலர்களைப் பார்த்ததாகவும் அருமையான கடற்கரை பீச்களைப் பார்த்ததாகவும் செய்தி வெளியானது

 

இரண்டு கால் மிருகங்கள், அழகிய கொம்புள்ள கரடிகள் என்று இப்படி பலவற்றைச் சந்திரனில் ஹெர்ஷல் பார்த்ததாக அடுத்து செய்திகள் வந்தன.

 

இன்னொரு நாள் அரை மனிதன்அரை வௌவாலாக உள்ள மனிதர்கள் சந்திரனில் இருப்பதாகச் செய்தி வெளியானது.

பத்திரிகையின் சர்குலேஷன் எகிறியது.

ரிபோர்ட்டர் லாக் தனது மனதில் தோன்றியதை எல்லாம் செய்தியாக ஆக்கினார்.

 

ஹெர்ஷல் கேப் ஆஃப் குட் ஹோப்பிலிருந்து சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்த போதும் லாக் கூறிய எதையும் பார்க்கவில்லை.அவருக்கே தான் பார்த்ததாகக் கூறப்படும்சந்திர செய்திகள் புதுமையாக இருந்தன.

 

கடைசியில் லாக் தான் கூறியதெல்லாம் பொய் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் இதில் சுவையான விஷயம் என்னவென்றால் மக்கள் லாக் முதலில் சொன்னதைத் தான் நம்பினர். தான் பொய் சொன்னதாக அவர் கூறியதை யாரும் நம்பவில்லை.

 

நியூயார்க்கின் நம்பர் ஒன் பத்திரிகையாக நியூயார்க் சன் ஆக லாக்கின் சந்திரன் பற்றிய பொய்ச் செய்திகள் உதவின.

அறிவியலில் சந்திரனைப் பற்றிய செய்தியைத் தருவதில் ஒருபுதிய பாதையை வகுத்தார் லாக்!

 

 

 

கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 3 (POST No.4302)

Written by S.NAGARAJAN

 

 

Date:15 October 2017

 

Time uploaded in London- 5–51 am

 

 

Post No. 4302

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாக்யா 13-10-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 34வது) கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 3

 ச.நாகராஜன்

 

“மூன்று விஷயங்கள் மிக மிக கடினமானவை 1) எஃகு 2) வைரம் 3) தன்னைத் தானே அறிவது – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

 

 

பஞ்சாபின் தலை நகரான லாகூர் நகரமே சோகக் கடலில் மூழ்கியது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போக, கூட்டத்தில் இருந்தோரெல்லாம் ‘வேண்டாம், வேண்டாம் என்று கண்ணீரும் கம்பலையுமாக அழுதவாறே அரற்றிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு வந்த செய்தி சரியானது தான்.

தங்களுக்குப் பிரியமான மஹாராஜா ரஞ்சித் சிங் எரிக்கப்படும் போது அவரது ராணிகள் உடன்கட்டை ஏறப்போவதாக செய்தி நகரெங்கும் பரவி இருந்தது.

காவல் வீரர்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தி ஒழுங்கை நிலை நாட்ட முயன்று கொண்டிருந்தனர்.

ரஞ்சித் சிங்கின் உடல் அலங்கரிக்கப்பட்டு தங்க ரதத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ரதத்திற்குப் பின்னால் அவருக்கு மிகவும் பிரியமான் நான்கு ராணிகள் – இளம் விதவைகள் -தங்க நாற்காலிகளில் அமர்ந்து வர ஐந்து அடிமைப் பெண்கள் கூடவே நடந்து வந்தனர்.

உடல் மயானத்தை அடைந்தது.

நல்ல பட்டுப் போர்வையால் தன் உடலைப் போர்த்திக் கொண்டு ரஞ்சித் சிங்கின் பிரியமான மஹாராணி அவர் சிதைக்குத் தன் கையாலேயே தீ மூட்டினார்.

சந்தனக் கட்டைகளின் மேல் நெய் பொழிய தீ ஜுவாலைகள் வானளவு உயர்ந்தன. கூடவே கொஞ்சமும் கந்தகமும் அதில் சேர்க்கப்பட்டிருந்ததால் தீப்பந்து சுழன்று எழுந்தது. ராணிகள் நால்வரும் அடிமைப் பெண்கள் ஐவருடன் சிதையில் பாய்ந்தனர்.

அவ்வளவு தான்!

ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து போனது.

அனைவரும் கருகிச் சாம்பலாயினர்.

மஹாராஜா இறந்த மறு நாள் அவரது மகன் முடி சூட்டப்பட்டார். அவரோ போதை மருந்துக்கு அடிமையானவர்.

ஆறு வருடங்கள் சரியான தலைமை இல்லாமல் பஞ்சாப் அல்லோல கல்லோலப் பட்டது.

இதை விட ஒரு இனிய சந்தர்ப்பம் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு அமைய முடியுமா என்ன?

வெள்ளைக்காரன் பஞ்சாபின் மீது கண்ணை நன்கு பதித்தான்.நடப்பதை தனக்குச் சாதகமாக எப்படி ஆக்குவது என்பதே ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஒரே நோக்கமாக ஆனது.

      சரியாக பதினைந்தே மாதங்களில் மூடி சூட்டப்பட்ட மன்னனை அவரது மனைவியும் மகனுமே விஷத்தைக் கொடுத்துக் கொன்றனர். மகன் தானே முடி சூடிக் கொண்டான்.

ஆனால் அரசனாக அவன் ஒரே ஒரு நாள் மட்டும் தான் இருந்தான்.

உப்பரிகை இடிந்து விழ அவன் கொல்லப்பட்டான்.

ரஞ்சித்சிங்கின் இரண்டாவது மகன் ஷெர்சிங் 1841ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரியணை ஏறினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1843இல் அவர் மல்யுத்த மைதானம் ஒன்றில் மல்யுத்த நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த போது கொலையாளி ஒருவரால் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை நடந்து  முடிந்த சில நிமிடங்களிலேயே அவரது 12 வயது மகனும் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டான்.

அவர் மந்திரியும் இரண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

 

   ரத்தக் களரி தொடர்ந்தது.இந்த நிலையில் தான் இதுவரை பொறுத்திருந்த மஹா ராணி ஜிந்த் கௌர் (பிறப்பு 1817; மறைவு 1-8-1863) களத்தில் குதித்தார். இவரை மக்கள் ஜிண்டான் என்ற செல்லப் பெயரால் அழைத்தனர். ரஞ்சித் சிங்கின் மிக இளவயது மனைவியான இவர் பேரழகி. பெரிய புத்திசாலி. செயலூக்கம் மிகுந்த சுறுசுறுப்பான மஹாராணி ஜிண்டான் 1843 முதல்  மூன்று வருடம் அரசாண்டார்.

   இவரை புரட்சி ராணி என்றே சொல்லலாம். (இவரைப் பற்றிய தி ரெபல் க்வீன் என்ற படம் நியூயார்க் நகரில் பன்னாட்டு சீக்கிய திரைப்பட விழாவில் 2010ஆம் வருடம் திரையிடப்பட்டது)  பிரிட்டிஷ் அரசு இவரை அப்படித்தான் பார்த்தது.

   ரஞ்சித் சிங்கை அடுத்து அரியணை ஏறிய மூவரும் கொல்லப்பட்ட சூழ்நிலையில் ஜிண்டானின் குமாரரான துலிப் சிங் பட்டம் சூடினார். அப்போது அவருக்கு வயது 5 தான். ஜிண்டான் அரசாட்சிப் பொறுப்பாளர் (regent) ஆனார்.

 உள்ளூரில் சதி வேலை ஆரம்பித்தது. மஹாராணியை எதிர்க்க ராணுவம் துணிவு கொண்டது. கால்ஸா – அதாவது சீக்கிய ராணுவம் தக்க தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தது.

    அப்போது பிரபலமான ஒரு தளகர்த்தன் இறந்து விடவே இந்தக் கொலையில் மந்திரியை சம்பந்தப்படுத்தி அவரைத் தங்கள் முன்னே ஆஜராக உத்தரவிட்டது ராணுவம்.

    யானை மீது அம்பாரி ஏறி பாதுகாப்பிற்காக இளம் மஹாராஜாவைத் தன் மடியின் மீது அமர்த்தி பவனியாக வந்தார் மந்திரி. மஹாராஜாவை பத்திரமாக இறக்கி விட்ட ராணுவம் மந்ரியைக் குத்திக் கொலை செயதது.

ராணுவத்தை பயப்பட வைக்க வழி என்ன? அரண்மனையில் ஆலோசனை நடந்தது.

   எல்லையில் பலம் மிக்க எதிரி வந்தால் ராணுவம் அங்கே போய்த்தானே ஆக வேண்டும். பிரிட்டிஷாரை விட சிறந்த பலம் பொருந்திய எதிரி வேறு யார்?

ஒரு பிரிட்டிஷ் தளகர்த்தன் எல்லையில் போர் தொடுக்குமாறு செய்யப்பட்டான்.

கால்ஸா ராணுவம் எல்லைக்குச் சென்று போரிட ஆரம்பிக்கவே பெரும் போர் எழுந்தது. சீக்கிய ராணுவம் பெருமளவு அழிந்தது.

     தொடர்ந்து ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையை அடுத்து பிரிட்டிஷ் பிரதிநிதி அரசுப் பொறுப்பை ஏற்க மகாராஜா துலிப் சிங் அரசாட்சி செய்தார்.

மஹாராணி ஜிண்டான் பிரிட்டிஷார் தன்னைக் கைவிட்டுவிட்டதை எண்ணி மனம் நொந்தார். என்றாலும் அவரது வசீகரமும் அரசியல் சாதுரியமும் அவரை பலம் பொருந்திய ஒரு சக்தியாக ஆக்கவே, அதைப் பொறுக்க முடியாத பிரிட்டிஷார் அவரை கண்காணாத ஒரு கோட்டையில் சிறை வைத்தனர். பதிமூன்று ஆண்டுகள் கழித்தே அவர் தன் மகனைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

     1848ஆம் ஆண்டு நடந்த இன்னொரு போரில் கவர்னர் ஜெனரலான லார்ட் டல்ஹௌஸி,  மகாராஜாவின் பெரும் பகுதிச் சொத்தை விற்று விட்டார்.

 தனது பட்டங்கள், உரிமைகள், அதிகாரம் அனைத்தையும் படிப்படியாகத் துறக்குமாறு செய்யப்பட்டார் துலிப் சிங். சொத்தெல்லாம் பிரிட்டிஷார் வசம் போகவைக்கப்பட்டது.

அந்த சொத்தில் ஒன்று தான் கோஹினூர் வைரம்!

   கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கு பதிலாக வருடாந்திர பென்ஷனாக சுமார் 50000 பவுன் தர பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. அதன் இன்றைய மதிப்பு 20 லட்சம் பவுன்)

  வஞ்சக சூழ்ச்சிக்கு இரையான துலிப் சிங் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினொன்று.

   புதிய இடம் துலிப் சிங்கை ஈர்த்தது.புதிய நண்பர்கள், தோழியர் கிடைத்தனர். கிறிஸ்தவ மதத்தில் சேர முடிவு செய்தார் துலிப்.

  ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூர் வைரத்தை மஹாராணி விக்டோரியாவுக்கு அளிக்க முடிவு செய்தது.

       (வைரத்தின் சரிதம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

எட்வின் ஜி. க்ரெப்ஸ் (Edwin Gerhard Krebs — பிறப்பு :6-6-1918 மறைவு: 21-12-2009) அமெரிக்காவைச் சேர்ந்த உயிர் வேதியியல் விஞ்ஞானி (Bio chemist).

அவருக்குக் காது கேட்காது. இருந்தாலும் கூடத் தனது ஆராய்ச்சியில் முனைப்பாக இருந்து அபூர்வமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தார்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் மனித உடலில் உள்ள உயிரணுக்களின் இயக்கம் பற்றிப் பல புதிய கண்டுபிடிப்புகளைத் தெரிவித்தார். இதனால் ஹார்மோன்களைப் பற்றிப் பின்னால் நன்கு அறிய முடிந்தது.

தனக்கு இயல்பாக இருந்த காது கேளாமையை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். உலகின் பெரும் விஞ்ஞானி ஆனார்.

அவரது அரிய சேவையைக் கருதி 1992ஆம் ஆண்டு அவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி ஒரு சில நொடிகளில் உலகமெங்கும் டெலிபோன் மூலம் பரவியது.

ஆனால் அதைக் கடைசியாகத் தெரிந்து கொண்டவர் க்ரெப்ஸ் தான்.

ஏனெனில் அவர் டெலிபோன் மணி இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த போதும் அவரால் எடுக்க முடியவில்லை – அவருக்குத் தான் காது கேட்காதே!

சாதனை புரிய உடல் குறை ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த விஞ்ஞானிகளில் ஒருவர் க்ரெப்ஸ்.

****

 

 

 

மஹாத்மாவின் மரணம்: நான்காவது குண்டு! (Post No.4287)

Written by S.NAGARAJAN

 

 

Date:10 October 2017

 

Time uploaded in London- 6-47 am

 

 

Post No. 4287

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நான்காவது குண்டு!

 

ச.நாகராஜன்

1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மாலை மஹாத்மா காந்திஜி கோட்ஸேயினால் சுடப்பட்டார்.

ஹே ராம் என்று ராம நாமத்தை உச்சரித்த அவரை மரணம் தழுவியது.

 

வரலாறு நமக்குத் தரும் இந்தச் செய்தியைத் “தட்டிக்” கேட்கிறார் நவீன அபிநவ் பாரத்தின் தலைவ்ரான டாக்டர் பங்கஜ் பட்னிஸ்.

கோர்ட்டின் வாசலைத் “தட்டி”  நீதி கேட்ட அவரை ஹை கோர்ட் நிராகரித்து விட்டது – அவரது கேஸை டிஸ்மிஸ் செய்து.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு 8-10-2017 அன்று அவர் அளித்த பேட்டியில் பல கேள்விகளை அவர் எழுப்புகிறார்.

 

அவர் தந்த விவரங்களின் அடிப்படையிலான ஒரு சுருக்கம் இதோ:

  • காந்திஜி கோட்ஸேயின் குண்டுகளால் சுடப்பட்டு இறக்கவில்லை.
  • நான்கு குண்டுகள் சுடப்பட்டன. கோட்ஸே சுட்டது மூன்று குண்டுகளே.
  • நான்காவது குண்டு தான் அவர் மரணத்திற்குக் காரணம்.
  • இரண்டாம் உலகப் போரில் இயங்கிய பிரிட்டிஷாரின் சதிகார கவிழ்க்கும் பிரிவான ஃபோர்ஸ் 136 க்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்று ஆராய வேண்டும்.
  • ம்ஹாத்மாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.
  • சம்பவத்தை அருகில் இருந்து நேரில் பார்த்தவரான மனுபென் காந்தியை பிராஸிக்யூஷன் தரப்பு விசாரணையின் போது அழைக்கவே இல்லை.
  • ஜனவரி 30ஆம் தேதியன்று மதியம் மூன்று மணிக்கு அயல்நாட்டு சாது ஒருவர் மஹாத்மா கொலை செய்யப்பட்டது பற்றிய துண்டு பிரசுரத்தை விநியோகித்தார்.

(மஹாத்மாஜி மரணம் அடைந்ததோ மாலை 5.12க்கு!)

  • மஹாத்மா பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் செல்ல சம்மதம் தெரிவித்திருந்தார். அவர் மரணம அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் ஜின்னாவும் அவர் வருவதை ஏற்றுக் கொண்டார். இது பிரிட்டிஷாருக்குப் பிடிக்கவில்லை.
  • நான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது. பிரிட்டிஷாரின் சதி வேலையினால் தானா என்பதை ஆராய வேண்டும்.
  • கோட்ஸே சுட்ட மூன்று குண்டுகள் காந்திஜியின் உடலில் இருந்தன. துப்பாக்கியில் மொத்தம் ஏழு குண்டுகள்.

நான்கு குண்டுகள் துப்பாக்கியிலிருந்து கைப்பற்றப்பட்டன.

கணக்கு சரியாகி விட்டது. ஆதலால் நான்காவது குண்டைச் சுட்டவன் யார் என்பதை ஆராய வேண்டும்.

 

  • இது தவிர இந்த சதியின் அம்சமாக வேறு பல விஷயங்களும் அரங்கேற்றப்பட இருந்தது. ஆகவே விஜயலக்ஷ்மி பண்டிட், மற்றும் புனே கலெக்டரின் மனைவியான சரளா பாவே ஆகியோர் கூறியதைப் பற்றியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இப்படி வாதங்களை அடுக்குகிறார் பங்கஜ். ஆனால் அவரது கேஸ் தள்ளுபடியாகி விட்டது.

 

நமது கேள்வி: தேசத்தையே எழுப்பி, விழிப்புணர்ச்சி ஊட்டிய தேசத்தின் மாபெரும் மஹாத்மாவின் மரணம் குறித்து ஒரு அறிக்கை மூலம் பரபரப்பான வாதங்களுக்கு  முற்றுப்புள்ளியை நமது அரசு வைக்கலாமே என்பது தான்!

எதிர்காலத்திலும் வேறு யாரும் வேண்டுமென்றே பரபரப்பான செய்திகளை பரப்பாமல் இருக்கவும் இது துணை புரியுமே!

நான்காவது குண்டு புரளிக் குண்டா, பிரிட்டிஷ் குண்டா, தெரியவில்லை!

***

 

 

 

கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை- Part 2 (Post No.4284)

Written by S.NAGARAJAN

 

 

Date:9 October 2017

 

Time uploaded in London- 5-42 am

 

 

Post No. 4284

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாப ராட்ஸசர்கள் பட்டியல் – 2

கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை – ஒரே பொருளைத் தரும் மூன்று சொற்கள் -2

 

by ச.நாகராஜன்

 

 

ஒரே கட்டுரையில் முழுப் பட்டியலையும் தந்திருக்கலாமே என்றால் முடியவில்லை!!

 

15 பாப ராட்ஸசர்களின் பெயரை அடிக்கும் போதே உள்ளம் நொந்து விட்டது.

 

அதனால் மீதி ராட்ஸசர்களின் பட்டியலை இப்போது தருகிறோம்.

மனதைத் திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.

 

16) இடி அமீன் Idi Amin (1971-1979)

உகாண்டா

தனிநபர் சர்வாதிகாரம்

3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை பலி. ( தன்னை எதிர்த்தோர், அரசியல் எதிரிகள்)

17) ஜெனரல் யாஹ்யா கான் General Yahya Khan (1970-1971)

பாகிஸ்தான் சர்வாதிகாரி

ராணுவ சர்வாதிகாரம்

3 லட்சம் கிழக்கு பாகிஸ்தான் வங்காளிகளைப் படுகொலை செய்தார்.

18) பெனிடோ முஸோலினி Benito Mussolini (1922-1945)

இத்தாலி – பாஸிஸ சர்வாதிகாரி

2,50,000 பேர் பலி.

எதியோப்பியர்கள், லிபிய மக்கள், யூதர்கள்,அரசியல் எதிரிகள் ஆகியோர் படுகொலை.

19) ஜெனரல் மொபுடு செசெ செகோ General Mobutu Sese Seko (1965-1997)

ஜைரே, காங்கோ

தனிநபர் சர்வாதிகாரம் 2,30,000 பேர் பலி.

அரசியல் எதிரிகள்

20) சார்லஸ் டெய்லர் Charles Taylor (1989-1996)

லைபீரியா

தனிநபர் சர்வாதிகாரம்

2,20,000 பேர் பலி

அரசியல் எதிரிகள், ராணுவ எதிர்ப்பாளர்கள், சாதாரண பொது மக்கள்

 

21) ஃபோடே சாங்கோ Foday Sankoh (1991-2000)

சியார்ரா லியோன் Sierra Leone

தனி நபர் சர்வாதிகாரம்

2,10,000 பேர் பலி

(அரசியல் எதிரிகள்)

22) ஹோ சி மின் Ho Chi Minh (1945-1969)

வடக்கு வியட்நாம்

கம்யூனிஸ ஆட்சி

இரண்டு லட்சம் பேர் பலி

அரசியல் எதிரிகள், தெற்கு வியட்நாமியர்

23) மைக்கேல் மொகாம்பரோ Michel Micombero  (1966-1976)

புருண்டி Burundi

தனிநபர் சர்வாதிகாரம்

24) ஹாஸன் அல்டுராபி Hassan Alturabi (1989-1999)

இஸ்லாமிய சர்வாதிகாரம்

ஒரு லட்சம் பேர் பலி

அரசியல் எதிரிகள் – மதத்தை எதிர்த்தோ படுகொலை

 

25) ஜீன் – பெடல் – பொகாஸா Jean – Bedel Bokassa (1966-1979)

மத்திய ஆப்பிரிக்க குடியரசு / எம்பயர் Central African Republic / Empire

தனிநபர் சர்வாதிகாரம்

90,000 பேர் பலி

 

26) எஃப்ரெய்ன் ரியாஸ் மாண்ட் Efrain Rios Montt  (1982-1983)

குவாதமாலா Guatemala

ராணுவ சர்வாதிகாரம்

70000 குடியானவர்கள, அரசியல் எதிரிகள் பலி

27) ஃப்ராங்கோய்ஸ்/ ஜீன் க்ளாட் டுவாலியர் Francois/ Jean  Claude Duvalier ( ‘papa Doc’ பாபா -டாக் 1957-1971) பேபி டாக் ‘Baby Doc’ 1971-1986)

ஹைதி Haiti

தனிநபர் சர்வாதிகாரம்

60000 அரசியல் எதிரிகள் பலி

28) ராஃபேல் ட்ருஜில்லோன் Rafael Trujillo (1930-1961)

டொமினிகன் குடியரசு Dominican Republic

தனிநபர் சர்வாதிகாரம்

50000 அரசியல் எதிரிகள் பலி

29) ஹிசானே ஹாப்ரே  Hissane Habre (1982-1990)

சாட் Chad

ராணுவ சர்வாதிகாரம்

40000 அரசியல் எதிரிகள் பலி

30) ஜென்ரல் ஃப்ரான்சிஸ்கோ ஃப்ராங்கோ General Francisco Franco (1939-1975)

ஸ்பெயின்

பாஸிஸ ராணுவ சர்வாதிகாரம்

35000 அரசியல் எதிரிகள் பலி

31) ஃபிடல் காஸ்ட்ரோ Fidel Castro (1959-2006)

க்யூபா Cuba

கம்யூனிஸ ஆட்சி

30000 அரசியல் எதிரிகள் பலி

 

32) ஹபீஸ்/ பாஷா அலாஸாட் Hafez/ Bashar Alassad (1970-2000)

சிரியா

(ஹபீஸ் -1970-2000; பாஷர் – 2000–)

பலாத் கட்சியின் சார்வாதிகாரம் (Balath party dictatorship

25000 முதல் 30000 பேர் பலி (அரசியல் எதிரிகள் – உட்பிரிவு எதிரிகள்)

33) ஆயதுல்லா ருஹொல்லா கொமெய்னி Ayatollah Ruhollah Khokeini (1979-1989)

இரான்

இஸ்லாமிய சர்வாதிகாரம்

20000 அரசியல் எதிரிகள்/ மதத்திற்கு எதிரானவர்கள் பலி

34) ராபர்ட் முகாபே Robert Mugabe (1982)

ஜிம்பாப்வே

தனிநபர் சர்வாதிகாரம்

15000 அரசியல் எதிரிகள், ஆதிவாசி எதிரிகள் பலி

35) ஜெனரல் ஜார்ஜ் விடேலா General Jorge Videla (1976-1983)

அர்ஜெண்டினா

ராணுவ சர்வாதிகாரம்

13000 பேர் பலி

இடதுசாரி அரசியல் எதிரிகள்

36)ஜென்ரல் அகஸ்டோ பினோசெட் General Augusto Pinochet (1973-1990)

சிலி Chile

ராணுவ சர்வாதிகாரம்

30000 அரசியல் எதிரிகள் பலி

 

இந்தப் பட்டியலில் இன்னும் கொஞ்சம் பேரைச் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது சரி தான்! இதில் விட்டுப் போனவர்களை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

மனித குலத்தின் சாபக்கேடு இந்த் பாப ராட்ஸசர்க்ள்.

இஸ்லாமிய மதத்தின் பெயராலும், கம்யூனிஸத்தின் பெயராலும், தனிநபர் அதிகார ஆசையாலும் எத்தனை லட்சம் பேர் பலியானார்கள், பார்த்தீர்களா?

நமக்குத் தெரிந்த யாரேனும் இந்த கம்யூனிஸ கொள்கைக்கோ, இஸ்லாமிய தீவிரவாதத்திற்கோ துணை போனால் அவர்களை நல்வழிப் படுத்துங்கள்.

பாப ராட்ஸசர்க்ள் இல்லையேல் –

உலகம் சற்று நிம்மதி அடையும்.

அதற்கு சேது பந்தனத்தில் அணில் போல நாமும் சற்று உதவுவோம்!

***

இந்தத் தொடர் முற்றும்

 

 

 

கம்யூனிஸம்= ஜிஹாதி= வன்முறை (Post No.4281)

Written by S.NAGARAJAN

 

 

Date:8 October 2017

 

Time uploaded in London- 5-52 am

 

 

Post No. 4281

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாப ராட்ஸசர்கள்

கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை – ஒரே பொருளைத் தரும் மூன்று சொற்கள்

 

by ச.நாகராஜன்

ஒரே பொருளைத் தரும் சொற்கள் பல உண்டு.

வன்முறை எனப்படும் கொலை, கொள்ளை, கடத்தல், தீவிரவாதம் என்ற சொல்லுக்கும் கூட மறு சொற்கள் உண்டு.

கம்யூனிஸம், ஜிஹாதி ஆகிய இரு சொற்களும் அதே பொருளைத் தான் தரும்.

 

அபாயகரமான இந்த வழி முறை சமீபத்தில் கேரளத்தில் தலை விரித்து ஆடியது.

 

ஆர்.எஸ்.எஸ் பிரசாரக் ராஜேஷ் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

80 காயங்கள்- உடல் முழுவதும்.. கைகள் துண்டிக்கப்பட்டன.

தீவிரவாதிகளே பயப்படும் வன்முறை.

 

கேரள கம்யூனிஸ அரசின் 17 மாத காலத்தில் 17 படு கொலைகள்.

 

கம்யூனிஸ்டுகள் பற்றிய வரலாறைப் புரட்டிப் பார்த்தால் வருவது நீளமான ஒரு பட்டியல். ஜிஹாதிகளுக்கோ இவர்களுடன் வன்முறையில் போட்டி.

 

இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு உலகை நாசப்படுத்துகின்றனர். இத்துடன் சர்வாதிகாரிகள் வேறு.

இவர்களைப் பற்றிய சின்ன ஒரு பட்டியல் இதோ;

நீளமான பட்டியல் வேண்டுவோர் தாமே சுலபமாகத்  தொகுக்கலாம்.

சின்னப் பட்டியலை இங்கு காணலாம்.

1.மாசே துங்

சீனா 91949-1976)

பலியானோர் 600 லட்சம் பேர்

  1. ஜோஸப் ஸ்டாலின்

ரஷியா (1929-1953)

பலியானோர் 400 லட்சம் பேர்

  1. அடால்ஃப் ஹிட்லர்

ஜெர்மனி (1933-1945)

நாஜி சர்வாதிகாரம்

பலியானோர் 300 லட்சம் பேர்

 

  1. மன்னர் இரண்டாம் லியோபோல்ட் (King Leopold II) (1886-1908)

பெல்ஜியம்

காங்கோ காலனி ஆதிக்கம்

பலியானோர் 80 லட்சம் காங்கோ மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர்

  1. ஹிடேகி டோஜோ (1941-1945) (Hideko Tojo)

ஜப்பான் ராணுவ சர்வாதிகாரம்

இரண்டாம் உலகப் போரில் பலியானோர் 50 லட்சம் பேர்

  1. இஸ்மாயில் அன்வர் பாஷா 91915-1920) (Ismail Evver Pasha)

ஒட்டாமன் துருக்கி

ராணுவ சர்வாதிகாரம்

20 லட்சம் அமெரிக்கர்கள்,கிரேக்கர்கள்,அஸிரியர்கள் பலி

  1. போல் பாட் (1975-1979) (Pol Pot)

க்ம்யூனிஸ ஆட்சி (Khmer Rouge)

170 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள் பலி

  1. கிம் இல் ஸங் 91948-1994) (Kim Ilsung)

கம்யூனிஸ ஆட்சி

160 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள், பஞ்சம், பட்டினிச் சாவு

9.மெங்கிஸ்டு ஹைலே மரியம்(1974-1978) (Mengistu Haile Mariam)

எதியோப்பியா

கம்யூனிஸ்ட் எதேச்சாதிகார ஆட்சி

150 லட்சம் பேர் – எரிட் ரியர்கள், அரசியல் எதிரிகள் பலி

  1. யாகுபு கோவொன் (1967-1970) (Yakubu Gowon)

ராணுவ சர்வாதிகார ஆட்சி

நைஜீரியா

10 ல்ட்சம் பேர் பயாபரர்கள் பசியால் சாவு, உள்நாட்டுப் போரில் ராணுவ வீரர்கள் சாவு

  1. ஜீன் கம்பாண்டா (1994) (Jean Kambanda)

ருவாண்டா

ஆதிவாசி சர்வாதிகாரம்

ஹூடு

எட்டு லட்சம் பேர் – டுட்ஸிஸ் பலி

  1. சதாம் ஹுஸைன் 91979-2003) (Saddaam Hussein)

இராக்

சர்வாதிகார ஆட்சி

ஆறு லட்சம் பேர் பலி (ஷிலிட்டுகள், குர்துக்கள், குவைத் தேசத்தினர்,அரசியல் எதிரிகள் )

  1. ஜோஸப் ப்ராஸ் டிட்டோ 91945-1980) (Josheph Broz Tito)

யுகோஸ்லேவியா

கம்யூனிஸ ஆட்சி

5,70,000 பேர் பலி – அரசியல் எதிரிகள்

 

  1. சுகர்ணோ (1945-1966) (Sukarno)

இந்தோனேஷியா

தேசிய சர்வாதிகாரி

ஐந்து லட்சம் கம்யூனிஸ்டுகள் பலி

  1. முல்லா ஒமர் (1996-2001) (Mullah Omar)

ஆப்கனிஸ்தான்

இஸ்லாமிய சர்வாதிகாரம் – தாலிபான்

 

நான்கு லட்சம் பேர் பலி – அரசியல் மற்றும் மதத்திற்கான எதிரிகள்

 

இந்தப் பட்டியல் முடியவில்லை; இன்னும் கொஞ்சம் இருக்கிறது.

அதை அடுத்துக் காண்போம்.

 

இதை எழுதவே கை நடுங்குகிறது. படித்தால் கண்ணீர் வரும்.

ஆனால் … அனுபவித்தவர்களுக்கோ..

 

நல்ல உள்ளங்கள் சிந்திக்க வேண்டும்!

 

– தொடரும்

 

 

 

 

கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 2 (Post No.4275)

Written by S.NAGARAJAN

 

 

Date: 6 October 2017

 

Time uploaded in London- 7–25 am

 

 

Post No. 4275

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 2

 ச.நாகராஜன்

 

“அழுத்தம் இல்லையேல் வைரம் இல்லை – தாமஸ் கார்லைல் (No Pressure, No Diamond   – Thomas Carlyle)

 

 

கோஹினூர் வைரம் பற்றி அஹ்மத் ஷா எழுதி வைத்த குறிப்பு தான் முதன் முதலாக ஆதார பூர்வமாக எழுதப்பட்ட குறிப்பாகும்.

அதில் அவர் கூறியிருப்பது :- சிம்மாசனத்தின் வெளிப்புற குடை எனாமல் பூச்சில் ரத்தினங்கள் பதிப்பிக்கப்பட்டதாகவும் உட்புறத்தில் மாணிக்கக் கற்கள் மற்றும் செம்மணிக்கல் (கார்னெட்) மற்றும் இதர ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டதாகவும் . இதை மரகதத் தூண்கள் தாங்கி இருந்தன. ஒவ்வொஇருந்ததுரு தூணின் மேலும் நெருக்கமாக இழைக்கப்பட்ட ரத்தினக் கற்களால் ஆன இரண்டு மயில்கள் இருந்தன. இப்படி அமைக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டு மயில்களுக்கு இடையிலும் மாணிக்கம், வைரம், மரகதம். முத்துக்கள் ஆகியவற்றினால் ஆன மரம் ஒன்று இருந்தது.

இந்த அழகிய மயிலாசனத்தில் இரண்டு அபார மதிப்புடைய இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தன. ஒன்று,தைமூர் மாணிக்கக் கல் – முகலாயர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று, ஏனெனில் அவர்கள் வண்ணம் சார்ந்த கற்களைப் பெரிதும் விரும்பினர் – இன்னொன்று கோஹினூர் வைரம்.

இந்த கோஹினூர் வைரம் சிம்மாசனத்தில் உச்சியில் ரத்தினக்கற்களால் ஆன மயிலின் தலையில்  பதிக்கப்பட்டிருந்தது.

 

 

  இப்படி ஒய்யாரமாக கம்பீரமாகப் பதிக்கப்பட்டிருந்த கோஹினூர் வைரம் உலகளாவிய அளவில் அனைவரது வியப்பையும் (இதர மன்னர்களின் பொறாமையையும்) சம்பாதித்தது.

இந்த மயில் சிம்மாசனம் செய்யப்பட்டு ஒரு நூற்றாண்டுக் காலம் வரை முகலாய வமிசத்தின் தலைமையை அது இந்தியாவிலும் அதற்கப்பால் உலகெங்கிலும் பறை சாற்றிக் கொண்டிருந்தது.

‘ஆசியாவே செல்வக் களஞ்சியம்; அதன் தலைமையகம் டில்லி’ என்று அனைவரும் மனமார ஒப்புக்கொண்டு புகழ்ந்தனர். இருபது லட்சம் பேர் அப்போது டில்லியில் வசித்தனர். இது லண்டன், பாரிஸ் ஆகிய இரு நகரங்களையும் சேர்த்துப் பார்த்தால் ஜனத்தொகையில் அதை விட அதிகம்!

ஆனால் அபரிமிதமான இந்தச் செல்வமே அனைவரின் கண்ணையும் உறுத்தியது. பார்த்தான், பெர்சியாவைச் சேர்ந்த நாதிர் ஷா.

1739ஆம் ஆண்டு டில்லியின் மீது நாதிர் ஷா படையெடுத்தான். பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். ரத்த ஆறு ஓடியது. கஜானா காலியானது. டில்லி அழுதது.

நாதிர் ஷா கொள்ளையடித்த செல்வம் எவ்வளவு? கணக்கிலடங்காதது. அதைச் சுமந்து செல்ல மட்டும் 700 யானைகள். 4000 ஒட்டகங்கள், 12000 குதிரைகள் தேவையாய் இருந்தன. அதாவது இந்த மிருகங்கள் இழுப்பதற்குத் தேவைப்பட்டது; சுமப்பதற்கு அல்ல! அப்படியானல் இழுத்துச் செல்லப்பட்ட வண்டிகளுக்குள் இந்தியச் செல்வம் எவ்வளவு இருந்திருக்கும்!

இன்றைய நவீன யுக கம்ப்யூட்டர்கள் காட்டும் படங்களில் வரும் செல்வத்தை விட இது அதிகம்.

இப்படிப்பட்ட கொள்ளையில் நடுநாயகமாக அமைந்தது ஷாஜஹானின் மயிலாசனம். அதில் ஒய்யாரமாக இருந்தது கோஹினூர் வைரம்.

நாதிர்ஷா தான் கொள்ளையடித்ததில் தைமூர் ரூபியையும் கோஹினூர் வைரத்தையும் மயிலாசனத்திலிருந்து எடுத்துக் கொண்டான் – அவற்றைத் தன் கை கங்கணத்தில் அணிவதற்க்லாக!

இந்தியாவை விட்டு இப்படியாகக் கொள்ளையடிக்கப்பட்ட்ட கோஹினூர் வைரம் சொந்த நாட்டை விட்டு ‘கொள்ளை யாத்திரை’ போக ஆரம்பித்தது.

இதை எப்படியாவது மீட்க வேண்டும் என்று இந்திய ராஜாக்கள் ஒரு புறம் சபதம் எடுத்தனர். நாதிர் ஷாவிடமிருந்து இதை அபகரிக்க வேண்டும் என்று அண்டை நாடுகளின் அரசர்கள் தங்கள் பங்கிற்குத் தங்கள் ஆசையை வளர்த்தனர்.

 

ஆப்கனிஸ்தான் என்று பின்னால் அழைக்கப்பட்ட நாட்டில் கோஹினூர் வைரம் சென்றவுடன் ஏராளமான ரத்த ஆறு ஓடியது பல போர்களின் வாயிலாக. ஒவ்வொரு ஆட்சியாளரின் கையிலிருந்தும் இன்னொருவருக்கு இது மாறியது.

இவர்கள் பற்றிய வரலாறு மிகவும் சுவையானது. ஒரு மன்னன் தன் சொந்த மகனின் கண்களையே குருடாக்கினான். இன்னொருவனோ பண ஆசைப் பைத்தியத்தால் தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு தங்கத்தை உருக்கித் தன் தலையில் தடவிக் கொண்டு ‘தஙக மொட்டையன்’ ஆனான்.

இந்த சண்டைகளுக்கு இடையில் அவுரங்கசீப் ஆட்சி கவிழவே, அதிகார மையம் இல்லாமல் போய் இந்தியாவில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்த பிரிட்டன் தன் காலனி ஆசையைத் தீர்த்துக் கொள்ள இதுவே சமயம் என்று எண்ணி யது

ஈஸ்ட் இந்தியா கம்பெனி வந்தது; இந்திய சுதந்திரம் பறி போனது; பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியது.

முகலாயர்களின் கொள்ளை ஒரு புறம், பெர்சியா, ஆப்கன் கொள்ளை மறு புறம் என்று தன் செல்வத்தை இழந்திருந்த இந்தியா மீதி இருந்த அரிய செல்வத்தை பிரிட்டிஷாரிடம் இழக்க ஆரம்பித்தது. கூடவே தன் திறமையையும் அன்னிய ஆட்சியால் பல்வேறு துறைகளில் இழந்தது.

பல போர்களைப் பார்த்த கோஹினூர் வைரம் கடைசியாக இந்தியாவில் ரஞ்சித் சிங் அரசாண்ட போது அவரால் மீட்கப்பட்டது. 1813இல் கோஹினூர் வைரத்தை மீட்ட ரஞ்சித் சிங் அதை மிகவும் நேசித்தார். ஒருவழியாக இந்தியாவின் கௌரவம் மீட்கப்பட்டதாக அவர் கருதியதை மக்களும் ஆமோதித்தனர்.

1761இல் டில்லி கொள்ளையடிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுத்த சம்பவமாக ரஞ்சித் சிங் கருதியதோடு ஆப்கனை ஆண்ட துரானி வமிசத்திடமிருந்து இந்தியாவிலிருந்து அவர்கள் அபகரித்த ஏராளமான விளைநிலங்களையும் மீட்டார்.

 

வைரம் வந்த போது நிலங்களும் மீண்டன; கௌரவமும் திரும்பியது. என்று அவர் எண்ணியதில் தவறே இல்லை

பஞ்சாபின் சிங்கம் என்று புகழப்பட்ட சீக்கிய மன்னரான ரஞ்சித் சிங்கின் வரலாறு சுவையான ஒன்று.

1801ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஆட்சிக்கு வந்த ரஞ்சித் சிங் 1780ஆம் ஆண்டு பிறந்தவர்.

அம்மையால் பாதிக்கப்பட்டு இடது கண் பார்வையை இழந்தார். அசகாய சூரரான ரஞ்சித் சிங் பத்தாம வயதிலேயே தன் தந்தையுடன் முதல் போர்க்களத்தைக் கண்டார்.

மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட மாமன்னராக அவர் விளங்கினார்.

ஆனால் அவரது காலமும் ஒரு முடிவுக்கு வந்தது.பஞ்சாபின் துயரமான நாளாகக் கருதப்படும் 1839ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி வந்தது.

பஞ்சாபின் தலை நகரான லாகூரே அழுதது – தன் மன்னனை இழந்து. அன்று –

Mahatma Gandhi in London.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

அறிவியல் வளர்ச்சியால் எங்கு பார்த்தாலும் கிராமபோன் ரிகார்டுகள் பரவத் தொடங்கிய பழைய காலம்.

மஹாத்மா காந்திஜி வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்தார்.

கொலம்பியா கிராமபோன் கம்பெனிக்கு ஒரு ஆசை.எப்படியாவது காந்திஜியின் குரலை கிராமபோனில் பிடித்துவிட வேண்டும் என்று.

தனது தொழில்நுட்ப டெக்னீஷியனை அவர் பேச்சை ரிகார்ட் செய்ய அனுப்பி வைத்தது.

ஆனால் காந்திஜி அரசியல் பேச்சை ரிகார்ட் செய்வதைத் தான் விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறி விட்டா. ஆறுதலாக, ‘வேண்டுமானால் கடவுளைப் பற்றிப் பேசுகிறேன்’, என்றார்.

முன்னதாகவே தயார் செய்த தனது பேச்சை ஆறு நிமிடம் பேச அதை சந்தோஷத்துடன் பதிவு செய்தது கொலம்பியா கம்பெனி.

உலகெங்கும்  பரவலாக விரும்பிக் கேட்கப்படும் ரிகார்டாக அது ஆனது.

 

Gandhiji going to Round Table Conference in London.

 

விரும்புவோர் இன்றும் கூகிளில் அதைக் கேட்டு மகிழலாம்.

அறிவியல் செய்த பல நல்ல காரியங்களுள் ஒன்றாக மஹாத்மாவின் கடவுள் பற்றிய உரை நமக்கு நிரந்தரமாகக் கிடைத்துள்ளது!

***