2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 2 (Post No.6222)

 Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 3 April 2019


GMT Time uploaded in London – 15-39

Post No. 6222

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

பாக்யா 15-3-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இரண்டாம் கட்டுரை – அத்தியாயம் எண் 418

2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 2

ச.நாகராஜன்

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விஞ்ஞான விநோதங்களை அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 2018இல் அவர்கள் கண்ட விநோதங்களின் தொடர்ச்சி இது:

வெப்ப அலையால் வேக வைக்கப்பட்ட வௌவால்கள்!

ஒவ்வொரு ஆண்டும் பூமியின் வெப்பநிலை கூடிக் கொண்டே போகிறது. 2018, ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸில் வெப்பம் 111.5 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது. அதாவது 44.2 டிகிரி செல்ஸியஸ்! பறந்து கொண்டே இருந்த 200 வௌவால்கள் இந்த வெப்பத்தால் ஆகாயத்திலேயே உயிருடன் வறுத்தெடுக்கப்பட்டு தொபேரென்று  தரையில் இறந்து வீழ்ந்தன. கேட் ரையான் என்ற பெண் விஞ்ஞானி, “இவை உயிருடன் வறுக்கப்பட்டன. அவற்றின் மூளையை வெப்பம் தாக்கவே அவைகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இறந்து வீழ்ந்தன” என்கிறார்.

தீயைத் திருடும் ஆஸ்திரேலிய பறவைகள்!

ப்ரோமெதியஸ் என்னும் ஹீரோ கடவுளரிடமிருந்து தீயைத் திருடி மனிதர்களுக்கு அளித்தான் என்று கிரேக்க நாட்டில்  பழம் பெரும் கதை ஒன்று உண்டு. இந்தக் கதையைப் போலவே இப்போது ஆஸ்திரேலியப் பறவைகள் தீத் துண்டுகளை (தீ கங்குகள்) ஏற்கனவே காட்டுத் தீ பரவிய இடத்திலிருந்து தூக்கிக் கொண்டு இதர இடங்களில் சென்று போட்டு அங்கும் தீயைப் பற்ற வைக்கின்றன. ஃபயர்ஹாக் (firehawks) என்னும் பறவைகள் கூட்டாகவும் சில சமயம் தனியாகவும் இப்படி தீயைப் பற்ற வைக்கின்றன. அவை ஏன் இப்படிச் செய்கின்றன என்று விஞ்ஞானிகள் ஆராயப் புகுந்தனர். புல்வெளிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் அவற்றின் இரைகள், இப்படித் தீயைப் பற்ற வைப்பதால் வெப்பம் தாங்காமல் வெளியிடங்களுக்கு ஓடும். அப்போது அவற்றை அந்தப் பறவைகள் பிடித்துத் தங்களுக்கு உணவாக்கிக் கொள்ளும்.

தும்மலைத் அடக்காதீர்கள்!

தும்மலை அடக்கவே அடக்காதீர்கள் என்பது விஞ்ஞானிகளின் அறிவுரை. இதற்கான சம்பவம் ஒன்றை அவர்கள்  கூறுகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் தன் தும்மலை அடக்கப் பார்த்து மூக்கைப் பிடித்துக் கொண்டு வாயையும் மூடிக் கொண்டார். கழுத்தில் தோல் பகுதியில் குமுறுவது போன்ற உணர்வு ஏற்படவே டாக்டரிடம் ஓடினார். கழுத்துப் பகுதியில் தோலின் கீழ் காற்றுக் குமிழிகளைக் கண்ட அவர்கள் மேல் தொண்டைப் பகுதியில் அவை ஒரு ஓட்டையையும் போட்டு விட்டதைக் கவனித்தனர். நல்ல வேளையாக உயிருக்கு ஆபத்து இல்லாமல் அவர் பிழைத்தார். இரண்டு மாதங்களில் அவர் பூரண குணமடைந்தார். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தும்மலை அடக்காதீர்கள் என்ற அறிவுரையைப் பத்திரிகை வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.

விசித்திரமாக ஸ்பூனை விழுங்கியவர்!

‘Born with a Silver Spoon’ என்று அதிர்ஷ்டசாலிகளைச் சொல்வது வழக்கம். ஸ்பூனை விழுங்கிய ஒருவரைப் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியத்தால் அயர்ந்து போன சம்பவம் ஒன்றும் அக்டோபர் 2018இல் நடந்திருக்கிறது. மிஸ்டர் ஜாங் என்று அவரை அழைக்கின்றனர். சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில்  உள்ள ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு அவர் வந்தார். ஒரு ஸ்டீல் ஸ்பூனை தான் விழுங்கி விட்டதாகவும் ஒரு வருடமாக அது உள்ளே இருப்பதாகவும் இப்போது வலி ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கவே மூன்று டாக்டர்கள் சேர்ந்து இரண்டு மணி நேரம் ஆபரேஷன் செய்து மார்புக்கூட்டின் நடுவில் உள்ளே போய் மாட்டிக் கொண்டிருந்த ஸ்பூனை எடுத்தார்கள். அதன் நீளம் எட்டு அங்குலம். இப்படி ஒரு நபரை இதுவரை தாங்கள் கண்டதே இல்லை என்று கூறிய டாக்டர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

கராத்தே கிக் கரப்பான்கள்

ஒட்டுண்ணிக் குளவிகள் என்னும் ஒருவகை உயிரினம் கரப்பான்களைப் பொறுத்த வரையில் அபாயகரமான உயிரினம் என பிஎம்சி ஈக்காலஜி (BMC Ecology)என்ற அறிவியல் இதழ் தெரிவிக்கிறது. மரகதமணி குளவி (Emerald Jewel Wasp) என்ற இந்த உயிரினம் கரப்பான்களின் கால்களின் மீது ஒருவகை திரவத்தைப் பாய்ச்சுகின்றன. அது கரப்பான்களின் ரத்த ஓட்டத்தைத் தடுத்து மூளையைத் தாக்கவே அது செயலிழந்து உயிர் இருந்தும் ஜோம்பி போல அசையாமல் இருந்து அந்தக் குளவிகளுக்கு இரையாகுமாம். ஆனால் இப்போது இதை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள்,”இது வரை கரப்பான்கள் தப்பிக்கவே தப்பிக்காது என எண்ணி இருந்தோம்.ஆனால் ஒரு கராத்தே கிக்கைக் கொடுத்து தங்கள் மூளை செயலிழந்து போவதைச் சில கரப்பான்கள் தடுப்பதைப் பார்க்கிறோம். இந்த கராத்தே கிக் அவற்றின் நரம்புகள் செயல் இழப்பதைத் தடுக்கிறது” என்று ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.

மேட் மைக்கின் சாகஸம்!

2018 மார்ச் மாதம் 61 வயதான ஒருவர் தானே செய்த ராக்கெட்டை விண்ணில் ஏவினார். அவர் பெயர் மேட் மைக்(Mad Mike- பைத்தியக்கார மைக்).பூமி தட்டையானது தான் என்பதை நிரூபிப்பதற்காக இதை அவர் ஏவினாராம். பூமி உருண்டை என்று சிறு குழந்தை கூடச் சொல்லும்! ஆனால் அதை நம்ப மறுக்கும் பைத்திய மைக்கின்  ராக்கெட் 1900 அடி உயரம் வரை பறந்தது.’எனது அடுத்த ராக்கெட் இன்னும் அதிக உயரம் பறக்கும்’ என்கிறார் பைத்தியக்கார மைக்!

இப்படி எண்ணற்ற விநோதச் செய்திகளை 2018இல் கண்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சாம்பிளுக்காகச் சில சுவையான செய்திகளை மட்டும் இங்கு பார்த்தோம்.

Marc and Fielding

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஹோவர்ட்           ஃபீல்டிங் (Howard Fielding) ஐந்து வயது குழந்தையாக இருந்த போது அப்பா ஆல்ஃப்ரெட் (Alfred) கொண்டு வந்த பிளாஸ்டிக் பப்பிள் ஷீட்டை கைகளால் நோண்டி ஒவ்வொரு பப்பிளாக டப் டப் என்று உடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ பப்பிள் ராப் (Bubble Wrap) பாக்கிங் ஷீட்டைத் தயாரிக்கும் அவரது நிறுவனம் உலகளாவிய விதத்தில் உயர்ந்து நிற்கிறது. ஆல்ப்ரெட் பப்பிள் ராப் பிளாஸ்டிக் ஷீட்டை தற்செயலாகத் தான் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடிக்க முனைந்தது வால்பேப்பர் எனப்படும் சுவரொட்டி பேப்பர்களில் விதவிதமான டிசைனைப் போட்டு டெக்ஸர்ட் வால்பேப்பரைத் (Textured Wallpaper) தயாரிக்க வேண்டும் என்பது தான். 1957இல் இரண்டு பிளாஸ்டிக் திரைச்சீலைகளை வெப்பத்தினால் ஒட்டிப் பார்த்த போது அவர் நினைத்தது வரவில்லை. மாறாக காற்றுக் குமிழிகள் ஆங்காங்கே அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஷீட் தான் வந்தது. அதை என்ன செய்வது என்று முதலில் அவருக்கும் அவரது நண்பருக்கும் புரியவில்லை. என்றாலும் கூட அதற்குக் காப்புரிமை பெற்றனர். 1961இல் அது மிகப்பெரிய பாக்கிங் மெட்டீரியல் என்ற அந்தஸ்தைப் பெற்றது. முக்கியமாக கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம் அதை ஒரு வரபிரசாதமாகக் கருதியது.

bubble wrap

வெளிநாடுகளுக்குக் கம்ப்யூட்டர்களை அனுப்பும் போது அது உடையாமல் இருக்க நியூஸ்பேப்பர்களை உருண்டைகளாக்கி அவற்றைச் சுற்றி வைப்பது அதுவரை வழக்கமாக இருந்தது. ஆனால் நியூஸ்பேப்பர்களின் மோசமான தரமற்ற மை பாக்கிங் செய்யப்பட்ட பொருள்களின் மீது பட்டு அவற்றின் தரத்தைக் கெடுத்தது. இந்த நிலையில் பப்பிள் ராப் வந்தவுடன் அதை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் ஒரு வித புகாரும் வரவில்லை. இதைப் பார்த்த சிறு நிறுவனங்கள் அனைத்தும் பப்பிள் ராப் பிளாஸ்டிக் ஷீட்டை பயன்படுத்த ஆரம்பித்தன.இன்று உலகெங்கும் பப்பிள் ராப் ஷீட் சக்கை போடு போடுகிறது.

தற்செயல் கண்டுபிடிப்பு பாக்கிங் செய்யும் விதத்தில் பாதுகாப்பை உறுதி செய்தது ஆச்சரியம் தானே!

**

இந்திரஜால வித்தை செய்யும் உலோகம் கோபால்ட் – ரத்தசோகையை அகற்றும்! (Post No.6217)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 21 March 2019


GMT Time uploaded in London – 9-03 am


Post No. 6217

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

WHY DO HINDUS WORSHIP URSA MAJOR ON RISHI PANCHAMI DAY? (Post no.6215)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 20 March 2019


GMT Time uploaded in London – 18-43


Post No. 6215

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


Naga Panchami | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/naga-panchami/

1.      

4 Aug 2018 – Posts about Naga Panchami written by Tamil and Vedas.

HINDU FESTIVAL NAGA PANCHAMI AND ENVIRONMENTAL …



https://swamiindology.blogspot.com/2018/08/hindu-festival-naga-panchami-and.html

4 Aug 2018 – https://tamilandvedas.com/2012/04/28/are-mayas-indian-nagas/ … They celebrate Hindu festivals such as Dasara and Naga Panchami.

2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 1 (Post No.6192)

Written by S.Nagarajan


swami_48@yahoo.com


Date: 14 March 2019


GMT Time uploaded in London – 10-57 am


Post No. 6192

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽

8-3-2019 பாக்யா இதழில் வெளியாகியுள்ள அறிவியல் துளிகள் தொடரில் ஒன்பதாம் ஆண்டு முதல் கட்டுரை – அத்தியாயம் 417

 2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 1

ச.நாகராஜன்

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விஞ்ஞான விநோதங்களை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்கின்றனர்; வெளி உலகிற்கு அறிவிக்கின்றனர். 2018ஆம் ஆண்டும் ஏராளமான விநோதமான கண்டுபிடிப்புகளை வெவ்வேறு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் சில:

யுரேனஸுக்கு மட்டும் போகாதீர்கள்!

எந்த கிரகம் போனாலும் யுரேனஸுக்கு மட்டும் போக வேண்டாம் என்பது விஞ்ஞானிகளின் தற்போதைய அறிவுரை. ஏனெனில் நாற்றம் தாங்க முடியாதாம்.ஹைட்ரஜன் சல்பைடு தரும் நாற்றம் அனைவரும் அறிந்த ஒன்று தான். பூமியில் எல்லா சாக்கடைகளிலும் அடிக்கும் நாற்றம் தான் இது. ஹவாயில் அமைக்கப்பட்டுள்ள ஜெமினி நார்த் டெலஸ்கோப் யுரேனஸின் வளிமண்டலம் எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்து தந்த விவரங்களின் அடிப்படையில் விஞ்ஞானிகள் யுரேனஸ் நாற்றம் பிடித்த ஒரு கிரகம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். துரதிர்ஷ்டம் பிடித்த மனிதன் தான் அங்கு போவான் என்று ஜோக் வேறு அடிக்கின்றனர் அவர்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாட்ரிக் இர்வின் என்ற ஆய்வாளர் தனது அறிக்கையில் இந்த விவரங்களைத் தந்து விட்டு, “அங்கு மைனஸ் 328 டிகிரி பாரன்ஹீட் இருப்பதாலும் அந்த வளிமண்டலம் ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் மெதேன் வாயுக்கள் நிரம்பி இருப்பதாலும் ஒரே நாற்றமாக இருக்கும்” என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.

முகமில்லாத தவளை

கனெக்டிகட் காடுகளில் ஜில் ஃப்ளெமிங் என்ற பெண் ஆய்வாளர் ஒரு விசித்திரமான பிராணியைப் பார்த்து அதிசயித்தார். அது ஒரு தவளை. அதற்கு முகமே இல்லை. ஆனால்  தாவித் தாவி இதர தவளைகளைப் போல அது அங்கும் இங்கும் போகிறது!

 இதை இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் பார்த்தார்; தொடர்ந்து ஆராய்ந்தார் – இப்படி ஒரு பிராணி இருக்க முடியுமா என்று. வெவ்வேறு விதமான விளக்கங்கள் அவருக்கு வந்தாலும் எதுவும் திருப்திகரமான ஒன்றாக இல்லை. அது தூங்கிக் கொண்டிருக்கும் போது பறக்கும் பூச்சி ஒன்று அதைத் தாக்கி அதன் முகத்தை அழித்திருக்கலாம் என்பதும் ஒரு விளக்கம். முகம் மட்டுமே அழிக்கப்பட்ட நிலையில் இதர உடல் பகுதிகள் இருப்பதால் அதனால் தாவ முடிகிறது! அவருக்கு பல விளக்கங்கள் வந்தாலும் அதிசயமான முகமற்ற தவளை தாவித் தாவிக் குதிப்பதை வியப்புடன் தான் அவர் பார்க்கிறார்!

கல்லறையில் காண்பது புதுவகை உயிரினமா?

2004ஆம் ஆண்டு சீனாவில் சீன சக்கரவர்த்தி க்வின் ஷி ஹுவாங்கின்  பாட்டியான லேடி ஜியாவின் கல்லறை தோண்டி எடுக்கப்பட்டது.இவர் வாழ்ந்தது கி.மு. 259 முதல் 210 முடிய உள்ள காலம் ஆகும். அவர் கல்லறையில் ஏராளமான எலும்புக்கூடுகளும் எலும்புகளும்  இருந்தன. அவற்றை ஆராய்ந்து பார்த்ததில்,அவரது வளர்ப்புப் பிராணிகளாக அவை இருக்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது. இதில் ஒரு எலும்புக் கூடு மட்டும் உலகில் அறிந்திராத ஒரு வகை உயிரினத்தின் எலும்புக்கூடாக இருப்பது விஞ்ஞானிகளுக்கு பிரமிப்பை ஊட்டுகிறது. ஐஸ் காலத்தில் வாழ்ந்து அருகி மறைந்து விட்ட உயிரினமான ஜுஞ்ஜி இம்பெரியலிஸ் (Junzi Imperialis)ஆக இது இருக்கலாமோ என விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். இதன் எடை 6 கிலோ தான். இது பலவித இலைகள் மற்றும் பழங்களைத் தின்று வாழும் பிராணி. லண்டன் யுனிவர்ஸ்டி காலேஹ் புரபசரான ஹெலன் சாட்டர்ஜி என்ற பெண்மணி இதில் தன் ஆராய்ச்சியைத் தொடர்கிறார்.

நாயிடமிருந்து வந்த புது வகை பாக்டீரியா!

நாயை வளர்ப்பவர்கள் தங்கள் நாய்கள் ஒரு போதும் கடிக்காது என்று பெருமை பாராட்டுவது வழக்கம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக க்ரெக் மண்ட்யூஃபெல் என்ற விஸ்கான்ஸின் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்கர்  தன் நாயைத் தன் மேல் நக்க விட்டது தப்பு என்ற முடிவுக்கு வர நேர்ந்தது. அவரது நாய் அவரை நக்கவே அவர் காப்னோசைடோபாகா (Capnocytophaga) என்ற ஒரு புதுவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு விட்டார். அதனால் அவரது கால்களைத் துண்டிக்க வேண்டி வந்து விட்டது. கைகளிலும் ஒரு பகுதியைத் துண்டிக்க வேண்டி நேர்ந்தது. இந்த பாக்டீரியா வீட்டு வளர்ப்பு பிராணிகளில் பொதுவாகக் காணப்படும் ஒன்று. ஆனால் எந்த ஒரு பிராணியும் மனிதனை அளவுக்கு அதிகமாகச் சுரண்டி அந்த பாக்டீரியாவை இரத்தத்தில் கலக்கச் செய்தால் அபாயகரமான விளைவுகள் ஏற்படுமாம். இதில் நிபுணரான டாக்டர் சில்வியா முனோஸ் பிரைஸ் என்ற பெண்மணி, “இப்படி நேர்வது அரிதிலும் அரிது; என்றாலும் இப்படி நேர்ந்தால் விளைவு விபரீதம் தான்” என்கிறார். 99 சதவிகிதம் இப்படி ஏற்பட சான்ஸே இல்லை என்பதும் அவர் தரும் குறிப்பு.

இன்னும் சில விநோதக் கண்டுபிடிப்புச் செய்திகளை அடுத்துக் காண்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சார்லஸ் டார்வின் (பிறப்பு 12-2-1809 மறைவு 19-4-1882) தென் அமெரிக்காவிற்கு ஹெச். எம். எஸ். பீகிள் என்ற கப்பலில் 1831 முதல் 1836 முடிய பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டு தனது 27ஆம் வயதில் பிரிட்டனுக்குத் திரும்பினார். அதன் பின்னர் அவர் பிரிட்டனை விட்டு எங்கும் செல்லவில்லை. அவரது உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் 1842ஆம் ஆண்டு டவுன் ஹவுஸில் தனது சொந்த வீட்டிற்குச் சென்று விட்டார். அங்கிருந்த தோட்டம் வீடு உள்ளிட்டவற்றில் அவர் அதிக கவனம் செலுத்தலானார். நாற்பது ஆண்டுகள் கழித்து அவர் இறக்கும் வரை அவர் அந்த வீட்டை விட்டு வேறெங்கும் செல்லவில்லை.

எல்லா விதைகளும் உரங்களும் அவர் இல்லத்திற்கே வருமாறு செய்யப்பட்டன. அவர் இயல்பாகவே ஒரு தாவர இயல் நிபுணர். மலர்கள் மட்டும் ஏன் விதவிதமான வண்ணங்களுடனும் இதழ்களுடனும் அமைப்புகளுடனும் தோன்றுகிறது என்பதை எண்ணி எண்ணி வியந்தார். இந்த ஆராய்ச்சியில் வெகுவாக கவனம் செலுத்திய அவர் இது ஒரு இயல்பான தேர்வு (Natural Selection) என்ற முடிவுக்கு வந்தார். இதில் தெய்வீக கர்த்தாவின் கற்பனா வேலைக்கு இடமில்லை (natural selecation rather than the imaginative work of a Divine Creator) என்றார். இது கடும் எதிர்ப்புக்குள்ளானது.அனைவரும் அவரது இந்தக் கருத்தை எதிர்த்தனர்.

ஆனாலும் தன் வாழ்நாள் முழுவதும் இதே கொள்கையுடன் இருந்த அவர் இடைவிடாது மலர்களின் மீதும் அதன் விதவிதமான அமைப்புகளின் மீதும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த மலர் ஆராய்ச்சியைப் பற்றி அவர் தனது சுயசரிதையில் கூறுகையில்,  ‘எனது அறிவியல் வாழ்க்கையில் பல வண்ணமுடைய பசுமை மாறாச் செடிகளினுடைய அமைப்புகளின் அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் இருந்த ஒரு திருப்தி வேறெதிலும் எனக்குக் கிடைக்கவில்லை’ என்று எழுதினார். (“I do not think anything in my scientific life has given me so much satisfaction as making out the meaning of the structure of these plants.”).

ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி!

ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை தமிழ் நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பாக்யாவில் கடந்த எட்டு வருடங்களாக வெளியாகி வரும் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள அறிவியல் செய்திகளைக் காணொளிக் காட்சியாகக் காணலாம் என்பதே அந்தச் செய்தி.

ஆம், டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல்    ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெற்று வருகின்றன. எனது 3000க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் 108 புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சுவையான செய்திகளைத் தரும் இந்த முயற்சியில் கடந்த இரு மாதங்களில் இந்த சேனலில் சுமார் 150க்கும் மேலான  காணொளிக் காட்சிகள் (20 ஆங்கிலத்திலும் ஏனையவை தமிழிலுமாக) இடம் பெற்றுள்ளன. உலகின் தலை சிறந்த 4000 விஞ்ஞானிகளில் 10 பேரே இந்தியர்கள் என்ற செய்தி (டைம்ஸ் ஆஃப் இந்தியா 4-1-2019 இதழ்) வெளியாகியுள்ள இன்றைய நாட்களில் அறிவியல் வளர்வது இன்றியமையாத தேவையாகிறது. அன்பர்கள் அனைவரும் இந்தக் காணொளிக் காட்சிகளின் மூலம் பயன்பெற வேண்டுகிறேன். உலகெங்கிலுமிருந்து இவற்றிற்குப் பெருகி வரும் ஆதரவு நல்ல ஊக்கத்தை அளிக்கிறது. அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன் ச.நாகராஜன்

****

கட்டாயம் தேவைப்படும் பொட்டாசியம்! (Post No.6185)

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 12 March 2019


GMT Time uploaded in London –11-03 am


Post No. 6185

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–

புள்ளிவிவர இயலின் அடிப்படையில் ஜோதிடத்தை ஆராய்ந்தவர்! (Post No.6180)

Written by S.Nagarajan

swami_48@yahoo.com


Date: 11 March 2019


GMT Time uploaded in London – 11-57 am


Post No. 6180

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

இனி விண்வெளியில் மனிதன் வாழ முடியும்!(Post No.6161)

Written by S.Nagarajan

swami_48@yahoo.com


Date: 7 March 2019


GMT Time uploaded in London – 12-37


Post No. 6161

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா  1-3-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு ஐம்பத்தி இரண்டாம் கட்டுரை)அத்தியாயம் 416  

 இனி விண்வெளியில் மனிதன் வாழ முடியும்!

ச.நாகராஜன்

விண்வெளியின் பல தனித்தன்மைகளைக் கருதி அங்கு மனிதன் வாழ முடியுமா என்ற விவாதம்  பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மார்ச் 2015 முதல் மார்ச் 2016 முடிய அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி மொத்தம் 357 மணி நேரங்கள் விண்வெளியில் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (Internatinal Space Station)பல்வேறு சோதனைகளுக்கு உட்பட்டு சாதனை படைத்திருக்கிறார். தனது கடைசிப் பயணத்தையும் சேர்த்துப் பார்த்தால் அவர் விண்வெளியில் இருந்த நாட்கள் மொத்தம் 520. (இந்த சாதனையை ஜெஃப் வில்லியம்ஸ் மற்றும் பெக்கி விட்ஸன் ஆகியோர் முறையே 534 நாட்கள் மற்றும் 665 நாட்கள் இருந்து முறியடித்திருக்கிறார்கள்).

கெல்லியின் அச்சு அசலான இரட்டை பிறவியான மார்க் கெல்லியும் ஒரு முன்னாள் விண்வெளி வீரர் தான்!

கெல்லி 2016இல் விண்வெளி நிலையத்தில் இருந்த போது செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது வெளி உலகிற்கு வரத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து இவர் விண்வெளியில் இருந்ததால் மனிதன் விண்வெளியில் இருப்பது சாத்தியம் தானா என்பதை ஆராய்ந்து கொண்டிருந்த நாஸா விஞ்ஞானிகளுக்கு அப்பாடா என்ற நிம்மதி மூச்சு வந்தது; பல ஆய்வுகளை நடத்தி விண்வெளியில் மனிதன் இருப்பது சாத்தியம் தான் என்ற முடிவுக்கு அவர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

ரஷியா தனது விண்வெளிவீரர்கள் ஆறு பேரை விண்வெளி நிலையமான மிர் ஸ்டேஷனுக்கு அனுப்பி ஆய்வுகளை மெற்கொண்டது. ஆனால் அதைப் பற்றி ஒரு விவரமும் வெளி உலகிற்கு இன்றளவு தெரியாது.

கெல்லி ரஷிய விண்வெளிவீரரான மிஹெயில் கோர்னியன்கோவுடன் 11 மாதங்கள் இருந்த போது நாஸா மிக முக்கியமான 17 ஆய்வுகளை மேற்கொண்டது.

விண்வெளியில், மைக்ரோ கிராவிடி நிலையில்,  மனித உடலில் இருக்கும் திரவங்கள் எப்படி இயங்குகிறது என்பதை அறிவது ஆய்வின் முக்கிய நோக்கம். உடலில் உள்ள மைக்ரோப்கள் விண்வெளி வாழ்வை எப்படி தாக்குப் பிடிக்கின்றன என்பதையும் ஆய்வு மேற்கொண்டது. விண்வெளியில் நீண்ட காலம் தங்கி இருந்த பின் அவர்களது உடல் என்ன மாறுதலை அடைந்திருக்கிறது, இப்படிப்பட்ட ஒரு நீண்ட கால வாழ்க்கையை அவர்களது உடல் தாக்குப் பிடித்திருக்கிறதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் இன்னொரு முக்கிய நோக்கம் ஒரு மனிதனால் விண்கலத்தில் ஏறி செவ்வாய் கிரகத்திற்குச் சென்று திரும்ப முடியுமா என்பதைப் பார்க்கவும் தான்!

ஆகவே இப்போது விஞ்ஞானிகள் இந்த ஆய்வின் அடிப்படையில் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள். இன்னும் சில நீண்ட கால ஆய்வுகள் தேவை என்பதும் அவர்கள் கருத்து. இந்த ஆய்வின் முடிவுகளை வைத்து ஆறு மாதம் விண்வெளியில் தங்கும் வீரர்கள் 10 பேர், ஒரு வருடம் தங்குவோர் 10 பேர், இரண்டு  மாதம் தங்குவோர் 10 பேர் என முப்பது வீரர்களை அனுப்பி அவர்களின் மீது புதிய ஆய்வுகளை நாஸா மேற்கொள்ள இருக்கிறது.

இந்தச் செய்திகளை எல்லாம் 2019, ஜனவரி முதல் தேதியன்று வெளியான ஜர்னல் ஏரோஸ்பேஸ் மெடிசின் அண்ட் ஹ்யூமன் பெர்ஃபார்மன்ஸ் வெளியிட்டுள்ளது.

ஆக இனி விண்வெளி வாழ்க்கையும் மனிதர்களுக்கு உண்டு.

பூமி வாழ் மக்கள், விண்வெளி வாழ் மக்கள் என மனித குலம் அகண்ட இரு பெரும் பிரிவுகளாக ஆகப் போகும் காலம் விரைவில் மலரும்!

ஒரு சின்ன ரிவியூ!

கடந்த எட்டு ஆண்டு காலமாக அறிவியல் துளிகள் தொடரில் நாம் படித்ததை ஒரு மதிப்பீடு செய்து பார்க்கலாமா?

வெவ்வேறு இயலைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகள், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், அவர்களது சாதனைகள், நோபலுக்குப் போட்டியான வேடிக்கையான இக்நோபல் பரிசு பெற்றோர், விண்வெளி வீரர்கள், அவர்களது பயணங்கள், காலப் பயணம் சாத்தியமா, காட் பார்டிகிள், ஆவிகள் பற்றிய ஆய்வு, புனர்ஜென்ம ஆய்வு, சைபர்னெடிக்ஸ், க்வாண்டம் பிஸிக்ஸ், பட்டர்ஃபிளை தியரி உள்ளிட்ட பல புது கொள்கைகள், இசை தரும் மேன்மைகள், அறிவியல் மூலம் ஆரோக்கியம், சினிமாவில் நடைமுறைக்கு வந்துள்ள புது உத்திகள், ஆன்மீகத்தை நிரூபிக்கும் அற்புதமான அறிவியல் சோதனைகள்,விஞ்ஞான உலகில் உள்ள பெண் விஞ்ஞானிகளின் சாதனைகள் என்பன உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட வித்தியாசமான பொருள்களில் கட்டுரைகளைக் கண்டோம். அறிவியல் அறிஞர்கள் வாழ்வில் என்ற பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வாழ்க்கையில் நடந்த சுவையான செய்திகளைப் பார்த்தோம். ஐன்ஸ்டீன் போன்றவர்களின் வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் இதுவரை வந்துள்ள 416 அத்தியாயங்களில் உள்ளன. இந்தத் தொடரை தொகுத்து பைண்ட் செய்து வைத்திருப்போருக்கு இது ஒரு சிறந்த அறிவியல் கையேடாகத் திகழும். பல்வேறு பொருள்கள், விஞ்ஞானிகள் பற்றிய இண்டெக்ஸைத் தயாரித்து வைத்துக்  கொண்டால் எந்த அறிவியல் பொருள் பற்றி எங்கு வேண்டுமானாலும் ஆதார பூர்வமாக பேச முடியும்.

இந்தத் தொடரை உருவாக்கக் காரணமாக இணைய தளத்தில் உள்ள பலநூறு தளங்கள் உதவி செய்தன. அவை தரும் செய்திகளின் உண்மைத்தன்மையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டி இருந்தது.

முக்கியமாக நன்றி தெரிவிக்க வேண்டியது சான்ஃபிரான்ஸிஸ்கோவில் சன்னிவேலில் உள்ள நூலகத்திற்குத் தான்! பேரறிஞர்கள் எழுதியுள்ள நூல்கள் தாம் எத்தனை! எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம்; 21 நாட்களில் திருப்பித் தர வேண்டும், அவ்வளவு தான். சுமார் 2000 ரூபாயிலிருந்து 10000 ரூபாய்க்கும் மேற்பட்ட விலை உள்ள நூல்களைப் படிக்க வாய்ப்பு தந்திருக்கும் நூலகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்; அப்படி ஒரு அற்புத அமைப்பு!

அதில் எடுத்துப் படித்த பல்வேறு நூல்களும், அந்த நூல்களை எழுதிய விஞ்ஞானிகளிடம் தொடர்பு கொண்ட போது அவர்கள் உடனுக்குடன் தந்த ஆதரவும் வியக்கவைக்கும் ஒன்று. அந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தியா மேன்மையுற்று வல்லரசாக ஆக அறிவியல் அடிப்படையான தேவை. அதிலும் ரொபாட் இயல், விண்வெளி இயல், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு இயல், மூளை இயல்  ஆகியவையே எதிர்கால உலகை ஆளப்போகிறது. இந்திய மக்கள், குறிப்பாக தமிழர்கள் இவற்றில் தேர்ச்சி பெற்று முன்னணியில் நின்றால் நாளைய உலகம் நமதே!

***

படிகாரம் பற்றிய அதிசய நம்பிக்கைகள் (Post No.6154)

 


Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 5 March 2019


GMT Time uploaded in London – 9-48 am


Post No. 6154

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

 

INFORMATION TAKEN FROM WEBSITES:–

Usually, when you hear about alum it is in reference to potassium alum, which is the hydrated form of potassium aluminum sulfate and has the chemical formula KAl(SO4)2·12H2O. However, any of the compounds with the empirical formula AB(SO4)2·12H2O are considered to be an alum. Sometimes alum is seen in its crystalline form, although it is most often sold as a powder. Potassium alum is a fine white powder that you can find sold with kitchen spices or pickling ingredients. It is also sold as a large crystal as a “deodorant rock” for underarm use.

FROM WKIPEDIA

Potassium alumpotash alum, or potassium aluminium sulfate is a chemical compound: the double sulfate of potassium and aluminium, with chemical formula KAl(SO4)2. It is commonly encountered as the dodecahydrate, KAl(SO4)2·12H2O. It crystallizes in cubic structure with space group P a -3 and lattice parameter of 12.18 Å[4]. The compound is the most important member of the generic class of compounds called alums, and is often called simply alum.[5]

–SUBHAM–

 

மக்னீஷியம்- பேதி மருந்து! அக்னி வெடிகுண்டு!! (Post No.6137)

Written  by london swaminathan

swami_48@yahoo.com


Date: 1 March 2019


GMT Time uploaded in London – 9-21 am


Post No. 6137


Pictures shown here are taken  from different sources.

This is a non- commercial blog((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

லண்டனில் ஆர்க்கிட் (Orchids) மலர்க் கண்காட்சி (Post No.6133)

Written by london swaminathan

swami_48@yahoo.com


Date: 28 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 13-28


Post No. 6133


Pictures shown here are taken  by London swaminathan
This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–