காட்டு வளம் காத்து வரும் ரிச்சர்ட் லீகி! (Post No.4367)

Written by S.NAGARAJAN

 

 

Date: 5 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-07 am

 

 

Post No. 4367

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

3-11-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 37வது) கட்டுரை

 

 

கால்களை இழந்தும் ஆராய்ந்தவர் – காட்டு வளம் காத்து வரும் ரிச்சர்ட் லீகி!

 

 

 ச.நாகராஜன்

 

 

எந்த நிலையிலும் மனம் தளரக் கூடாது என்பதை நிரூபிக்கும் புதைபடிமங்கள் மூலம் கால நிர்ணயம் செய்த ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் லீகி அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டவர். (Richard Leaky – பிறப்பு 19-12-1944; இப்போது வயது 73)

 

 

லீக்கி ஆப்பிரிக்காவில் பிரமாதமான கல்வி அறிவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவரது நுணுகிய ஆய்வுத் திறனும் அர்ப்பணிப்பு மனோபாவமும் அவர் பெயரை ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப்படக் கூடிய பெயராக ஆக்கியது.

 

 

லீகியின் தந்தையும் தாயும் படிமப் பாறைகள் பற்றிய துறையில் ஈடுபட்டிருந்தவர்களே. சிறு வயதிலேயே லீகி பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றை விற்க ஆரம்பித்தார். நாளடைவில் வன்விலங்குகள், வனப் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு ஆர்வம் அதிகரித்தது.

1967ஆம் ஆண்டு நைரோபியில் ருடால்ப் ஏரியின் மீது அவர் பறந்து செல்லும் போது எரிமலைப் பாறைகளைக் கீழே கண்டார்.

 

அந்த இடத்தில் ஆய்வு நடத்தினால் பழங்காலப் படிமப் பாறைகள் கிடைக்கும் என்று அவருக்குத் தோன்றியது.

 

 

   கோபி ஃபோரா என்ற இடத்தில் அவர் தனது ஆய்வுகளை ஆரம்பித்தார். இந்த ஆய்வு 30 லட்சம் வருடங்களுக்கு முன்னர் இருந்த புதை படிமங்களைக் கண்டுபிடிக்க இவருக்கு உதவியது. பழங்காலத்திய 400 எலும்புகளை இவர் சேகரித்தார். இதன் மூலம் மனித குல வரலாற்றைப் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்தன.

 

 

பிபிசியில் இவரது டாகுமெண்டரி தொடரான ‘தி மேகிங் ஆஃப் மேன்கைண்ட் ( The Making of Mankind) என்ற தொடர்

 அவரைப் புகழேணியின் உச்சத்தில் கொண்டு சென்றது.

 

 

     1974ஆம் ஆண்டு நேஷனல் ம்யூஸியம்ஸ் ஆஃப் கென்யாவின் டைரக்டராக அவர் நியமிக்கப்பட்டார்.

ஆப்பிரிக்காவில் தந்தத்திற்காக யானைகளைச் சுட்டுக் கொல்லும் நபர்கள் அதிகரிக்கவே யானைகளின் எண்ணிக்கை பாதியாக அதாவது ஆறு லட்சமாகக் குறைநதது.

‘கொல்ல வருபவரைக் கண்டவுடன் சுடு என்ற ஆணையைப் பிறப்பித்து யானைகளைக் காத்தார் லீகி.

 

1989இல் கென்யாவின் ஜனாதிபதி டேனியல் அராப் மொய் இவரை கென்யா வைல்ட்லைப் சர்வீஸின் தலிவராக் ஆக்கினார்.

இந்தப் பதவியை அவர் ஏற்றுக் கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.

 

ஏனெனில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது. 1980இல் அவரது சகோதரரும் அரசியல்வாதியுமான பிலிப் தனது சீறுநீரகத்தைத் அவருக்குத் தந்து உதவினார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பத்து ஆண்டுகள் பிலிப் தன் சகோதரருடன் முகம் கொடுத்துப் பேசியதே இல்லை. அப்படி ஒரு பகை. என்றாலும் அவருக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் ஓடி வந்து உதவினார்.

 

இந்த உடல் உபாதை எல்லாம் லீகியை ஒன்றும் செய்யவில்லை. சரியாக காலை 4 மணிக்கு எழுந்து தன் ஆய்வுப் பணீயை ஆரம்பிப்பார். தனது விமானத்தைத் தானே ஓட்டிச் செல்வார்.

 

 

காட்டு வளத்தைச் சுரண்டுவதில் இருந்த ஊழலை அவர் ஒழித்துக் கட்டினார். வனத்துறை ஊழலில் ஈடுபட்டிருந்த சுமார் 1700 பேர்களைத் தைரியமாக அவர் களையெடுத்தார்.

1993ஆம் ஆண்டு ஒரு விமானத்தை லீகி ஓட்டுகையில் அது கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. அதில் அவர் கால்கள் இரண்டும் நசுங்கிப் போயின. இரண்டும் அறுவைச் சிகிச்சையில் அகற்றப்பட்டன.

 

அவரை ஜனாதிபதி மொய் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து, “உங்களுக்காக நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.

 

அதற்கு லீகி, “ எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டாம். அதற்குப் பதில் கென்யா வனவிலங்குகள் சர்வீஸில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் திட்டங்கள் செயலாற்றப்பட உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அவருக்கு செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டன. மீண்டும் செயலாற்றலுடன் உழைக்க ஆரம்பித்தார்.

2013இல் அவருக்கு ஐஸக் அஸிமாவ் விஞ்ஞான விருது வழங்கப்பட்டது.

 

 

அவரது செயலூக்கம் மிக்க வாழ்க்கையால் கவரப்பட்ட பிரப்ல நடிகை ஏஞஜலினா ஜூலி அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய டாகுமெண்டரி ஒன்றைத் தயாரிக்கப் போவதாக சென்ற ஆண்டு (2016இல்) அறிவித்து அந்தப் படத்தின் ஷூட்டிங் கென்யாவிலேயே நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

 

   இன்று உலகில் வன வளத்தையும் வன விலங்குகளையும் காக்க வேண்டும் என்று மிக்க ஆர்வத்துடன் செயல்படும் அனைவரும் ரிச்சர்ட் லீகியை உத்வேகமூட்டும் முன் மாதிரியாகக் கொண்டு இயங்குகின்றனர்.

இதுவே அவரது வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்!

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . . ..

 

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானியான ஜேம்ஸ் ஜூல் (James Joule- 1818-1889) பல கண்டுபிடிப்புகளைக் கண்டவர். தனது விஞ்ஞானக் கருவி இல்லாமல் அவர் எங்கேயும் வெளியில் செல்ல மாட்டார்.

1847இல் 29ஆம் வயதில் அவர் திருமணம் செய்து கொண்டார். ஹனிமூனுக்காக நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் செல்ல ஏற்பாடானது.

அப்போதும் கூட தனது ஆய்வுக் கருவியான தெர்மாமீட்டரை அவர் கூட எடுத்துச் சென்றார்.

அவரது நோக்கம் நயாகரா நீர்வீழ்ச்சியில் நீர் விழும் போது மேலே இருக்கும் நீருக்கும் கீழே விழுந்திருக்கும் நீருக்கும் உஷ்ணநிலையில் வேறுபாடு இருக்கிறதா என்று ஆராய்வது தான்.

ஹனிமூனின் போது நயாகராவில் நடந்த ஆய்வை வைத்து அவர் கடவுள் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தார்.

 

 

இதை செயிண்ட் ஆன்ஸ் சர்ச்சில் (St. Ann’s Church) அவர் ஆற்றிய சொற்பொழிவு ஒன்றில் தீர்க்கமாக அறிவித்தார்.

 

 

காற்று வீசும் போது ஏற்படும் உராய்வினாலும் நீரில் எழும் கிளர்ச்சியினாலும் உருவாகும் வெப்ப அளவினால் பைபிளில் ஜெனிஸிஸில் கூறப்படும் கருத்துக்கள் உண்மை என்று ஆகிறது. கடவுளின் சக்தி ஓரிடத்தில் சேமிக்கப்படுகிறது என்பது உறுதியாகிறது. ஆகவே கடவுள் இருக்கிறார் என்றார் அவர்.

 

(He explained that the measure of the mechanical equivalent of heat created by the friction of the wind and agitation of the water gives experimental proof for the story of genesis as described in the Bible, to the effect that  God’s powers have been conserved),.

 
நயாகரா நீர்வீழ்ச்சியில் ஜூல் மட்டும் பரிசோதனைகளை நடத்தவில்லை. அமெரிக்க விஞ்ஞானி மேயர், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மாக்ஸ்வெல் உள்ளிட்ட ஏராளமான விஞ்ஞானிகள் நயாகரா நீர்வீழ்ச்சியின் மேலே உள்ள நீருக்கும் கீழே விழுந்த நீருக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டது ஒரு சுவையான தகவல்!

***

 

அழகிய மனம் – கணித மேதை ஜான் நாஷ்! (Post No.4342)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 6-19 am

 

 

Post No. 4342

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

27-10-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 36வது) கட்டுரை

 

 

ஒரு அழகிய மனம் – கணித மேதை ஜான் நாஷ்!

 

 ச.நாகராஜன்

 

 

உலகின் பிரபல கணித மேதையான ஜான் நாஷின் (பிறப்பு 13-6-1928; மறைவு 23-5-2015)) வாழ்க்கையச் சித்தரிக்கும் ‘எ பியூட்டிஃபுல் மைண்ட் (A Beautiful Mind) என்ற படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.

 

2001 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நாஷாக ரஸ்ஸல் க்ரோ நடித்திருக்கிறார்.

 

சில்வியா நாஸர் எழுதி 1998இல் வெளியான புத்தகத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் வெளியானது.

மிக அற்புதமான ஒரு விஞ்ஞானியின் சோகமான வரலாறு அழகிய முறையில் இதில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க கணித மேதையான் நாஷ் கேம் தியரியில் பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தார். அன்றாட வாழ்வில் பல விஷயங்களில் முடிவெடுப்பது குறித்த இவரது கொள்கைகள் உலகின் அன்றாட நடப்புகளை நல்ல முறையில் அறிந்து கொள்ள உதவியது.

 

1994இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை இன்னும் இருவருடன் இவர் பகிர்ந்து கொண்டு பெற்றார். இத்துடன் ஏபல் பரிசையும் இவர் பெற்றார்.

 

21ஆம் வயதிலேயே தனது அருமையான் ஆய்வுக் கட்டுரையை அவர் எழுதி விட்டார். ஆனால் பின்னால் தான் அதை உலகம் அறிந்து மதித்தது. சிறு வயதில் அவருக்கான செல்லப் பெயர் “பெரிய மூளைக்காரன்

 

ஆலிஷா என்ற பெண்மணியைச் சந்தித்து அவர் மீது காதல் கொண்டு அவரையே மணந்தார் நாஷ்.

 

இவர் பற்றிய ஒரு முக்கியமான விஷயம் இவர் புத்தி பேதலித்தவராக இருந்தது தான்! (paranoid Schizophrenia வியாதியால் இவர் பாதிக்கப்பட்டிருந்தார்)

 

 முக்கியமான ஒரு சொற்பொழிவை நிகழ்த்த இருந்தவர் அதற்குச் சம்பந்தமில்லாமல் ஏதோ பேச ஆரம்பிக்கவே இவருக்குள்ள வியாதி வெளிப்படையாகத் தெரிந்தது. உடனடியாக மனோவியாதிக்காக சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

 

 

     திடீரென்று டெலிபோன் மணி அடிப்பது போல அவரது மூளையில் இடைவிடா ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது.

அத்துடன் சிவப்பு டை கட்டிக் கொண்டிருந்த அனைவரும் பயங்கரமான கம்யூனிஸ சதிகாரர்கள் என்று அவர் நம்பினார்.

 

    நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அயல்கிரக்வாசிகளிடமிருந்து வரும் செய்திகளைப் பெற்று பிரசுரிப்பதாக அவர் நம்பினார். அந்த செய்திகளைத் தன்னால் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் நம்பினார்.

  தனது மாணவர்களின் ஒருவருக்கு எல்லா கிரகங்களிலும் வண்டி ஓட்டுவதற்கான லைசென்ஸைக் கூட அவர் வழங்கினார்!

  

    சிகாகோ பல்கலைக்கழகம் அவருக்கு பெறுதற்கு அரிய ஒரு பதவியை வழங்க முன் வந்தது. ஆனால் அவர் அதை மறுத்து விட்டாஎ. ஏன் தெரியுமா? அண்டார்டிகாவின் சக்கரவர்த்தியாகும் வாய்ப்பு தனக்கு இருப்பதாக் அவர் நினைத்ததால் தான்.

 

பெரிய சக்கரவர்த்தியாக ஆகப் போகிறவர் “சின்ன பதவிகளை ஒப்புக் கொள்ளலாமா?

 

  தன்னை மிக முக்கியமான ரகசியம் வாய்ந்த ஒரு நபராக அவர் நம்பி அதற்கேற்ப நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

    குறிப்பிட்ட சில எண்களைப் பார்த்தவுடன் அது சொர்க்க்த்திலிருந்து ஒரு பெரிய ரகசியத்தைத் தெரிவிக்க வந்திருப்பதாக அவர் நம்பினார்.

 

 

இப்படி பல விதமான மனச் சித்திரங்களால் அவரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட ஆரம்பித்தது.

எதையும் மனதில் பேட்டர்னாகப் பார்ப்பது இவருக்கு கை வந்த கலை.

 

    எதிரியின் சங்கேத குறியீட்டுச் செய்திகளை மனதில் சித்திர வடிவங்களாகப் பார்த்து அந்தப் புதிரை இவர் அவிழ்ப்பதை ஹாலிவுட் படம் திறம்படச் சித்தரித்துக் காட்டும்.

 

    நார்வே சென்று ஏபல் பரிசை வாங்கிக் கொண்டு மனைவியுடன் மீண்டும் நியூ ஜெர்ஸி திரும்பினார் நாஷ். .அப்போது அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழக்கவே அவர்கள் இருவரும் விபத்தில் சிக்கி இறந்தனர்.

 

     சாதாரணமாக இருந்திருந்தால் இவ்வளவு கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்திருப்பேனோ என்னவோ, இப்படி இருந்ததால் தான் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று நாஷ் பின்னால் ஒரு சமயம் கூறினார்.

ஒரு விஞ்ஞானி உடலிலும் மனதிலும் குறைபாடு கொண்டிருந்தாவராக இருந்தாலும் கூட அதிலிருந்து மீண்டு சாதிக்க முடியும் என்பதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் நாஷ்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

எக்ஸ் ரே மெஷினைக் கண்டு பிடித்த மேடம் க்யூரி அதை முதலாம் உலகப் போரில் போர்க்களத்தில் பயன்படுத்த முற்பட்டது ஒரு சுவையான செய்தி!

 

போர் மூண்ட போது அந்தக் கால கட்டத்தில் எக்ஸ் ரே எடுப்பது மருத்துவ மனைகளில் மட்டுமே முடியும்!

ஆகவே அவர் ஒரு “ரேடியாலஜிகல் காரை உருவாக்கினார். அதில் எக்ஸ்ரே மெஷினை நிறுவினார். அதை இயக்க  மின்சக்தி வேண்டுமே! அதற்காக ஒரு டைனமோவையும் காரில் நிறுவினார்.

 

பிரெஞ்சு ராணுவத்திடமிருந்து இதற்கென எந்த உதவியும் கிடைக்கவில்லை.

 

மிகவும் ஏமாற்றமடைந்த கியூரி பிரான்ஸில் இருந்த பெண்கள் சங்கத்தை நாடினார். அந்தச் சங்கமும் தேவையான பணத்தைக் கொடுத்தது.அதை வைத்து முதல் காரை உருவாக்கினார்.

 

     அதற்கு லிட்டில் க்யூஇ என்று பெயரிட்டார். அது 1914ஆம் ஆண்டு முதன் முதலாக போர்க்களத்தில் செயல்பட ஆரம்பித்தது. அவரே இதை ஓட்டினார். இதற்காக வண்டியை ஓட்டவும் அவர் கற்றுக் கொண்டார்.

    ஒரு முறை அந்தக் காரின் டிரைவர் அதை ஒரு குழியில் விடவே கார் கவிழ்ந்தது. க்யூரி சளைக்கவில்லை. காரை நிமிர்த்தி சேதமான காரின் பாகங்களை சரி செய்து காரை ஓட்டிச் சென்ரார்.

 

 

   போர்க்களத்தில் காயமடைந்த வீரர்கள் எக்ஸ் ரேயின் உதவியினால் அறுவைச் சிகிச்சையை உரிய விதத்தில் மேற்கொண்டு உயிர் பிழைத்தனர்.

போர்க்களத்தில் 200 எக்ஸ்ரே மெஷின்களை நிலையான இடங்களிலும் அவர் நிறுவினார்.

 

செயல் திறம் மிக்க அபூர்வமான பெண்மணியாக அவர் திகழ்ந்தார்.

****

 

 

கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 4 (Post No.4324)

Written by S.NAGARAJAN

 

 

Date:22 October 2017

 

Time uploaded in London- 6–17 am

 

 

Post No. 4324

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அறிவியல் துளிகள் (ஏழாம் ஆண்டு 35வது கட்டுரை) தொடரில் பாக்யா 20-10-2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 4

 

 ச.நாகராஜன்

 

“கோஹினூர் வைரம் ஒரு போதும் விற்கப்படவும் இல்லை; வாங்கப்படவும் இல்லை; ஆனால் அது எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒரு வைரம் – சாபி கோஷ்ரே  

 

 

     இங்கிலாந்து சென்ற துலிப் சஃபால்க் என்னுமிடத்தில் இருந்த எல்வெல்டன் ஹால் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டார்.

 

அவருக்கு கார்டியனாக நியமிக்கப்பட் டாக்டர் ஜான் லோகின் என்ற சர்ஜன் தான் அவரை லண்னுக்கு அழைத்துச் சென்றார்.

முழு ஆங்கிலேயர் ஆகி விட்ட துலிப் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.

 

1864ஆம் ஆண்டு துலிப் ஜெர்மன் மிஷனரி ஒருவரின் மகளான வயதான பெண்மணியான பம்பா முல்லரை மணந்து கொண்டார். அவருக்கு மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன.

கோஹினூர் வைரமோ 1849 மே மாதத்தில் பத்திரமாக ஒரு லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது.

 

 

துலிப்பிற்கு அரண்மனைச் செலவு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. கடனுக்கு மேல் கடன். வங்கிகள் துலிப்பிற்கு எச்சரிக்கை நோட்டீஸ்களை அனுப்பிக் கொண்டே இருந்தன. அவற்றை எல்லாம் அப்படியே துலிப் விடோரியா மஹாராணியாருக்கு அனுப்பி வைத்தார்.

 

எல்லாம் ராணி பார்த்துக் கொள்ள மாட்டாரா என்ன!

ஆனால் ராணி ஒரு பக்கம் இருக்க வங்கிகள் இன்னொரு பக்கம் இருந்தன. கடன் எல்லை மீறிப் போனதால் எல்வெல்டன் அரண்மனையை விற்க வேண்டி இருந்தது.

இந்தச் சமயம் தான் துலிப்பிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டது.

பரம்பரை பரம்பரையாக வந்த ராஜ ரத்தம் சிந்தனையைத் தூண்டியது.

 

 

தான் வஞ்சிக்கப்பட்டதை நன்கு உணர்ந்தார் துலிப்.

தனக்கு திட்டமிடப்பட்டு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ராணியாருக்குக் கடிதம் எழுதினார். பலனில்லை.

பிறகு ஜெர்மனியில் இருந்த பிஸ்மார்க். ரஷிய ஜார் மன்னர், ஐரிஷ் விடுதலை வீரர்கள் ஆகியோரின் உதவியை நாடினார்.

பிரிட்டிஷாரை எதிர்க்க ஆரம்பித்தார்.

 

1886இல் பஞ்சாபில் நடந்த மதமாற்ற சடங்கு ஒன்றில் மீண்டும் தாய் மதம் திரும்பினார் துலிப்.

 

1887இல் மனைவி பம்பா இறக்கவே இருபது வ்யதே ஆன இளவயது மங்கையான அடாவெதரில் என்பவரை மணந்தார். அவர் மூலம் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

ராணி ஜிண்டானோ 1861இல் மகனைச் சந்தித்து அவரைப் பிரியவே மாட்டேன் என்று கூறி லண்டன் சென்றார். 1863இல் அவர் மறைந்தார்.

 

1893ஆம் ஆண்டு பாரிஸில் இறந்தார் துலிப்.

பஞ்சாபின் தீர மிக்க ரஞ்சித் சிங்கின் பரம்பரையின் கதை இப்படி முடிந்தது.

 

ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூரை விக்டோரியா மஹாராணியாருக்குத் தர விழைந்தது. அவரோ அதைப் பெற்று மனம் மிக மகிழ்ந்தார். அது அவ்ரது மேலடை அணிகலன்களில் ஒன்றாகச் (Brooch) சேர்ந்தது.

 

பின்னர் அதை ராஜ கிரீடத்தில் நடுவில் பதித்தார்.

விக்டோரியா மஹாராணியாரின் கணவரான பிரின்ஸ் ஆல்பர்ட் கோஹினூர் வைரத்தை மீண்டும் அறுத்து பாலிஷ் செய்தார். இப்போது வைரத்திலிருந்து அதிக பிரகாசமான ஒளி பிரதிபலித்து அனைவரையும் மயக்கியது

 

விக்டோரியாவின் மூத்த புதல்வரான ஏழாம் எட்வர்ட் மன்னரின் ராணியான க்வீன் அலெக்ஸாண்ட்ரியாவின் மகுடத்தில் அது பிரகாசித்தது. பின்னர் விக்டோரியாவின் பேரரான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மனைவியான க்வீன் மேரியின் மகுடத்தில் 1937இல் அது ஒளி வீசியது. க்வீன் மேரி தான் இரண்டாம் எலிஸபத்தின் தாயார்.

2002ஆம் ஆணு க்வீன் மதர் இறக்கவே அந்த இறுதிச் சடங்கில் சவப்பெட்டியின் மீது கோஹினூர் வைரம் வைக்கப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்தனர். கோஹினூரை அனைவரும் கடைசியாகப் பார்த்த தருணம் அது தான்!.

 

1947இல் இந்தியா சுதந்திரம் அடையவே நமது நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டவற்றின் பட்டியலைப் பற்றி நமது நாட்டு மக்கள் சிந்திக்கத் தொடங்கினர்.

 

எப்படியேனும் கோஹினூரை இந்தியாவிற்கு மீட்பது குறித்துப் பலரும் ஆலோசித்தனர்.

 

இந்தியாவிலிருந்து திருடப்பட்ட புத்தூர் நடராஜரை மீட்க உதவி செய்த பாஸ்கர் கோர்ப்படே என்பவர் இதில் தீவிரமான முயற்சியை எடுத்தார்.

இப்போது பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானில் தாலிபான் ஆகியவையும் கோஹினூரின் மீது உரிமை கொண்டாடுகின்றன.

ஆனால் அனைவருக்கும் இது இந்தியாவின் சொத்து என்பது நன்றாகவே தெரியும்.

 

 

2010இல் இந்தியா வந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரான் கோஹினூர் இங்கிலாந்தில் தான் இருக்கும். ஒருவருக்குத் திருப்பிக் கொடுக்க இசைந்தால் பிரிட்டிஷ் மியூசியமே காலி ஆகி விடும் என்று கூறினார்.

இருப்பினும் நீதி மன்றத்தில் வாத பிரதிவாதங்கள் அவ்வப்பொழுது நடந்து கொண்டே இருக்கின்றன.

 

 

இந்திய அரசு உறுதியான நிலைப்பாடு எடுத்து பிரிட்டனுடன் பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே ஒளி மலை நமக்கு மீண்டு வரும்!

 

வரலாற்று ரீதியாக கோஹினூரை ஆராய்ந்து ஆனந்த் மற்றும் டால்ரிம்பிள் ஆகியோர் எழுதிய “கோஹினூர்: தி ஹிஸ்டர் ஆபஃப் தி வோர்ல்ட் மோஸ்ட் இன்ஃபேமஸ் டயமண்ட் (Koh-i-noor: The History of the World’s Most Infamous Diamond by Anand and Dalrymple) என்ற நூல் இப்போது விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

 

 

இந்த நூல் கோஹினூர் வைரத்தின் சரித்திரத்தை முழுமையாகத் தந்துள்ளது என்று கூறும் பெண்மணியான நூலாசிரியை ஆனந்த், அது இந்தியாவிற்கு வந்தே தீர வேண்டும் என்று கூறுகிறார்.

இவரை இந்தியர்கள் அனைவரும் ஆதரிக்கின்றனர்.

சொந்த நாட்டிற்கு கோஹினூர் வந்து சேருமா? காலம் செய்யும் ஜாலத்தை உற்று நோக்கினால் ஆம் என்ற விடை தான் மனதில் தோன்றுகிறது!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

பிரிட்டிஷ் வானவியல் விஞ்ஞானியான  சர் ஜான் ஹெர்ஷல் (Sir John Herschel)  ஒரு அபூர்வமான பெரிய டெலஸ்கோப்பைக் கண்டு பிடித்திருப்பதாக நியூயார்க்கிலிருந்து வெளிவந்த பத்திரிகையான நியூயார்க் சன்னில் அதன் நிருபரான ரிச்சர்ட் ஆடம்ஸ் லாக் (Richard Adams Locke) என்பவர் பரபரப்பான ஒரு செய்தியை வெளியிட்டார்.

 

பத்திரிகையின் சர்குலேஷன் சொல்லும்படியாக இல்லை.

அந்த டெலஸ்கோப்பை வைத்து ஹெர்ஷல் சந்திரனை ஆராய்வதாக அடுத்த செய்தி வெளியானது. மக்கள் ஆவலுடன் அதைப் படித்தனர்.

 

 

அடுத்த நாள் ஹெர்ஷல் சந்திரனில் மலர்களைப் பார்த்ததாகவும் அருமையான கடற்கரை பீச்களைப் பார்த்ததாகவும் செய்தி வெளியானது

 

இரண்டு கால் மிருகங்கள், அழகிய கொம்புள்ள கரடிகள் என்று இப்படி பலவற்றைச் சந்திரனில் ஹெர்ஷல் பார்த்ததாக அடுத்து செய்திகள் வந்தன.

 

இன்னொரு நாள் அரை மனிதன்அரை வௌவாலாக உள்ள மனிதர்கள் சந்திரனில் இருப்பதாகச் செய்தி வெளியானது.

பத்திரிகையின் சர்குலேஷன் எகிறியது.

ரிபோர்ட்டர் லாக் தனது மனதில் தோன்றியதை எல்லாம் செய்தியாக ஆக்கினார்.

 

ஹெர்ஷல் கேப் ஆஃப் குட் ஹோப்பிலிருந்து சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்த போதும் லாக் கூறிய எதையும் பார்க்கவில்லை.அவருக்கே தான் பார்த்ததாகக் கூறப்படும்சந்திர செய்திகள் புதுமையாக இருந்தன.

 

கடைசியில் லாக் தான் கூறியதெல்லாம் பொய் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் இதில் சுவையான விஷயம் என்னவென்றால் மக்கள் லாக் முதலில் சொன்னதைத் தான் நம்பினர். தான் பொய் சொன்னதாக அவர் கூறியதை யாரும் நம்பவில்லை.

 

நியூயார்க்கின் நம்பர் ஒன் பத்திரிகையாக நியூயார்க் சன் ஆக லாக்கின் சந்திரன் பற்றிய பொய்ச் செய்திகள் உதவின.

அறிவியலில் சந்திரனைப் பற்றிய செய்தியைத் தருவதில் ஒருபுதிய பாதையை வகுத்தார் லாக்!

 

 

 

தமிழர் கண்ட விஞ்ஞானம்- மரபியல் GENETICS அறிவு (Post No.4315)

Written by London Swaminathan

 

Date:19 October 2017

 

Time uploaded in London- 11-06 am

 

 

Post No. 4315

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

‘தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ – என்ற பழமொழி பற்றியும் அதற்கிணையான சம்ஸ்கிருத பழமொழியையும் ஏற்கனவே கொடுத்தேன் (அடிக்குறிப்பை காண்க)

 

தமிழர்களுக்கு மரபியல்  (GENETICS ஜெனெடிக்ஸ்) மீது ரொம்ப நம்பிக்கை என்றே தோன்றுகிறது. ஏனெனில் நாலடியாரும் பழமொழியும் கூட இதே கருத்தை உறுதி ப்படுத்துகின்றன.

‘மகனறிவு தந்தை அறிவு’ Nature Vs Nurture

ஒருவனுடைய அறிவுக்குக் காரணம் அவனுடைய தாய் தந்தையர் மூலம் வரும் மரபணுவா  (GENE) அல்லது அவன் வளர்க்கப்படும் சூழ்நிலையா என்று மேல் நாட்டு அறிவியல் இதழ்களில் (Science Journals) அடிக்கடி கட்டுரைகள் ( Nature Vs Nurture or Heredity or Environment) வரும். இரண்டுக்கும் ஆதரவான, எதிரான வாதங்கள் முன்வைக்கப்படுவதால் முடிவு எதுவும் சொல்ல முடியாது. ஆயினும் தமிழர்களுக்கு மரபணு  GENE) விஷயத்தில்தான் அதிகம் நம்பிக்கை என்று தோன்றுகிறது.

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான பழமொழியிலும் நாலடியாரிலும் இக்கருத்து வருவதால் அந்தக் காலத்தில் இப்பழமொழி  மிகப் பிரசித்தம் என்பது புலனாகும்.

 

செந்நெல்லா லாய செழுமு ளை மற்றுமச்

செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்

வயனிறையக் காய்க்கும் வளவயலூர!

மகனறிவு தந்தை அறிவு — நாலடியார்

 

பொருள்:-

அதிகமான செந்நெற் பயிர் வயல்கள் உடைய வயலூரா!

 

செந்நெற்களால் உண்டாகிய செழிப்பான முளைகள், பின்னர் அந்த செந்நெற் பயிர்களாகவே வளர்வது போல, ஒரு தந்தையினுடைய அறிவு போலவே மகனுடைதைய அறிவு அமையும்.

 

நெல்லின் முளையினால் அந்த நெல்லே விளைவது போல, தந்தையின் குணமே மைந்தனுக்கும் அமையும் என்பது கருத்து. இதே கருத்தை பழமொழி என்னும் நூலிலும் காண்போம். இது 1200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கருத்து.

 

இதே போல மகனைப் பார்த்தால், அவர்களுடைய தாய் தந்தையர் எப்பேற்பட்டவர் என்பதும் தெரியும். சில குழந்தைகள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும்  சண்டை போது பயன்படுத்தும் கெட்ட வார்த்தைகளை நாலு பேர் முன்னால் சொல்லிவிடும்; மற்றவர்கள் இதைக் கண்டும் காணாதது போல முகத்தைத் திருப்பிக் கொள்வர். ஆனால் அவர்களுக்குத் தெரியும் இச்சொற்கள் அந்த வீட்டில் நடந்த காரசார வாக்குவாதத்தின் போது உதிர்ந்த முத்துக்கள் என்பது; ஒரு குழந்தை வளரக்கூடிய தெரு, பேட்டை ஆகியனவும் இதன் மூலம் தெரியும்

“மகனுரைக்கும் தந்தை நலத்தை” என்ற தொடராலும்,  “தாயைத் தண்ணீர் தடத்தில் பார்த்தால் பிள்ளையைப் பார்க்க வேண்டியதில்லை” என்ற பழமொழியாலும் இதை அறியலாம். “தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” என்பது எல்லோரும் அறிந்த பழமொழி.

(பிள்ளை என்பது மகன், மகள் இருவரையும் குறிக்கும் சொல்)

 

நோக்கி யறிகல்லாத் தம்முறுப்புக் கண்ணாடி

நோக்கி யறிப; அதுவே போல் — நோக்கி

முகமறிவார் முன்ன மறிய வதுவே

மகனறிவு தந்தை யறிவு — பழமொழி

 

பொருள்:-

தன்னுடைய கண்களால் பார்த்து அறிய முடியாத முகத்தை, கண்ணாடியில் பார்த்து அறிவர்; அதுபோல ஒருவர் முகத்தைப் பார்த்தே அவர்கள் கருத்தை அறியலாம். மகனுடைய அறிவு தந்தையின் அறிவைப் போன்றது போல.

 

அதாவது மகனைக் கொண்டு தந்தையின் அறிவையோ, அல்லது தந்தையைக்  மகன்   கொண்டு  மகன்  அறிவையோ அறிந்து விடலாம் என்பது தமிழர் கண்ட உண்மை. புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா? என்பதும் இதன் அடிப்படையிற் பிறந்ததே.

 

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் (குறள் 706)

 

தாயைப் போல | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தாயைப்-போல/

 

வெள்ளை காகம் விலை இரண்டரை ரூபாய்!! white crow (2). கண்ணு! கண்ணு !! ஏ, கண்ணு!!! kannu kannu (2). தாயைப் போல பிள்ளைநூலைப் போல சேலை! poy thay …

 

–சுபம்–

 

 

 

கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 3 (POST No.4302)

Written by S.NAGARAJAN

 

 

Date:15 October 2017

 

Time uploaded in London- 5–51 am

 

 

Post No. 4302

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாக்யா 13-10-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 34வது) கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 3

 ச.நாகராஜன்

 

“மூன்று விஷயங்கள் மிக மிக கடினமானவை 1) எஃகு 2) வைரம் 3) தன்னைத் தானே அறிவது – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

 

 

பஞ்சாபின் தலை நகரான லாகூர் நகரமே சோகக் கடலில் மூழ்கியது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் போக, கூட்டத்தில் இருந்தோரெல்லாம் ‘வேண்டாம், வேண்டாம் என்று கண்ணீரும் கம்பலையுமாக அழுதவாறே அரற்றிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு வந்த செய்தி சரியானது தான்.

தங்களுக்குப் பிரியமான மஹாராஜா ரஞ்சித் சிங் எரிக்கப்படும் போது அவரது ராணிகள் உடன்கட்டை ஏறப்போவதாக செய்தி நகரெங்கும் பரவி இருந்தது.

காவல் வீரர்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தி ஒழுங்கை நிலை நாட்ட முயன்று கொண்டிருந்தனர்.

ரஞ்சித் சிங்கின் உடல் அலங்கரிக்கப்பட்டு தங்க ரதத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ரதத்திற்குப் பின்னால் அவருக்கு மிகவும் பிரியமான் நான்கு ராணிகள் – இளம் விதவைகள் -தங்க நாற்காலிகளில் அமர்ந்து வர ஐந்து அடிமைப் பெண்கள் கூடவே நடந்து வந்தனர்.

உடல் மயானத்தை அடைந்தது.

நல்ல பட்டுப் போர்வையால் தன் உடலைப் போர்த்திக் கொண்டு ரஞ்சித் சிங்கின் பிரியமான மஹாராணி அவர் சிதைக்குத் தன் கையாலேயே தீ மூட்டினார்.

சந்தனக் கட்டைகளின் மேல் நெய் பொழிய தீ ஜுவாலைகள் வானளவு உயர்ந்தன. கூடவே கொஞ்சமும் கந்தகமும் அதில் சேர்க்கப்பட்டிருந்ததால் தீப்பந்து சுழன்று எழுந்தது. ராணிகள் நால்வரும் அடிமைப் பெண்கள் ஐவருடன் சிதையில் பாய்ந்தனர்.

அவ்வளவு தான்!

ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து போனது.

அனைவரும் கருகிச் சாம்பலாயினர்.

மஹாராஜா இறந்த மறு நாள் அவரது மகன் முடி சூட்டப்பட்டார். அவரோ போதை மருந்துக்கு அடிமையானவர்.

ஆறு வருடங்கள் சரியான தலைமை இல்லாமல் பஞ்சாப் அல்லோல கல்லோலப் பட்டது.

இதை விட ஒரு இனிய சந்தர்ப்பம் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு அமைய முடியுமா என்ன?

வெள்ளைக்காரன் பஞ்சாபின் மீது கண்ணை நன்கு பதித்தான்.நடப்பதை தனக்குச் சாதகமாக எப்படி ஆக்குவது என்பதே ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஒரே நோக்கமாக ஆனது.

      சரியாக பதினைந்தே மாதங்களில் மூடி சூட்டப்பட்ட மன்னனை அவரது மனைவியும் மகனுமே விஷத்தைக் கொடுத்துக் கொன்றனர். மகன் தானே முடி சூடிக் கொண்டான்.

ஆனால் அரசனாக அவன் ஒரே ஒரு நாள் மட்டும் தான் இருந்தான்.

உப்பரிகை இடிந்து விழ அவன் கொல்லப்பட்டான்.

ரஞ்சித்சிங்கின் இரண்டாவது மகன் ஷெர்சிங் 1841ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரியணை ஏறினார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1843இல் அவர் மல்யுத்த மைதானம் ஒன்றில் மல்யுத்த நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்த போது கொலையாளி ஒருவரால் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை நடந்து  முடிந்த சில நிமிடங்களிலேயே அவரது 12 வயது மகனும் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டான்.

அவர் மந்திரியும் இரண்டு துண்டாக வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

 

   ரத்தக் களரி தொடர்ந்தது.இந்த நிலையில் தான் இதுவரை பொறுத்திருந்த மஹா ராணி ஜிந்த் கௌர் (பிறப்பு 1817; மறைவு 1-8-1863) களத்தில் குதித்தார். இவரை மக்கள் ஜிண்டான் என்ற செல்லப் பெயரால் அழைத்தனர். ரஞ்சித் சிங்கின் மிக இளவயது மனைவியான இவர் பேரழகி. பெரிய புத்திசாலி. செயலூக்கம் மிகுந்த சுறுசுறுப்பான மஹாராணி ஜிண்டான் 1843 முதல்  மூன்று வருடம் அரசாண்டார்.

   இவரை புரட்சி ராணி என்றே சொல்லலாம். (இவரைப் பற்றிய தி ரெபல் க்வீன் என்ற படம் நியூயார்க் நகரில் பன்னாட்டு சீக்கிய திரைப்பட விழாவில் 2010ஆம் வருடம் திரையிடப்பட்டது)  பிரிட்டிஷ் அரசு இவரை அப்படித்தான் பார்த்தது.

   ரஞ்சித் சிங்கை அடுத்து அரியணை ஏறிய மூவரும் கொல்லப்பட்ட சூழ்நிலையில் ஜிண்டானின் குமாரரான துலிப் சிங் பட்டம் சூடினார். அப்போது அவருக்கு வயது 5 தான். ஜிண்டான் அரசாட்சிப் பொறுப்பாளர் (regent) ஆனார்.

 உள்ளூரில் சதி வேலை ஆரம்பித்தது. மஹாராணியை எதிர்க்க ராணுவம் துணிவு கொண்டது. கால்ஸா – அதாவது சீக்கிய ராணுவம் தக்க தருணத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தது.

    அப்போது பிரபலமான ஒரு தளகர்த்தன் இறந்து விடவே இந்தக் கொலையில் மந்திரியை சம்பந்தப்படுத்தி அவரைத் தங்கள் முன்னே ஆஜராக உத்தரவிட்டது ராணுவம்.

    யானை மீது அம்பாரி ஏறி பாதுகாப்பிற்காக இளம் மஹாராஜாவைத் தன் மடியின் மீது அமர்த்தி பவனியாக வந்தார் மந்திரி. மஹாராஜாவை பத்திரமாக இறக்கி விட்ட ராணுவம் மந்ரியைக் குத்திக் கொலை செயதது.

ராணுவத்தை பயப்பட வைக்க வழி என்ன? அரண்மனையில் ஆலோசனை நடந்தது.

   எல்லையில் பலம் மிக்க எதிரி வந்தால் ராணுவம் அங்கே போய்த்தானே ஆக வேண்டும். பிரிட்டிஷாரை விட சிறந்த பலம் பொருந்திய எதிரி வேறு யார்?

ஒரு பிரிட்டிஷ் தளகர்த்தன் எல்லையில் போர் தொடுக்குமாறு செய்யப்பட்டான்.

கால்ஸா ராணுவம் எல்லைக்குச் சென்று போரிட ஆரம்பிக்கவே பெரும் போர் எழுந்தது. சீக்கிய ராணுவம் பெருமளவு அழிந்தது.

     தொடர்ந்து ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையை அடுத்து பிரிட்டிஷ் பிரதிநிதி அரசுப் பொறுப்பை ஏற்க மகாராஜா துலிப் சிங் அரசாட்சி செய்தார்.

மஹாராணி ஜிண்டான் பிரிட்டிஷார் தன்னைக் கைவிட்டுவிட்டதை எண்ணி மனம் நொந்தார். என்றாலும் அவரது வசீகரமும் அரசியல் சாதுரியமும் அவரை பலம் பொருந்திய ஒரு சக்தியாக ஆக்கவே, அதைப் பொறுக்க முடியாத பிரிட்டிஷார் அவரை கண்காணாத ஒரு கோட்டையில் சிறை வைத்தனர். பதிமூன்று ஆண்டுகள் கழித்தே அவர் தன் மகனைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

     1848ஆம் ஆண்டு நடந்த இன்னொரு போரில் கவர்னர் ஜெனரலான லார்ட் டல்ஹௌஸி,  மகாராஜாவின் பெரும் பகுதிச் சொத்தை விற்று விட்டார்.

 தனது பட்டங்கள், உரிமைகள், அதிகாரம் அனைத்தையும் படிப்படியாகத் துறக்குமாறு செய்யப்பட்டார் துலிப் சிங். சொத்தெல்லாம் பிரிட்டிஷார் வசம் போகவைக்கப்பட்டது.

அந்த சொத்தில் ஒன்று தான் கோஹினூர் வைரம்!

   கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கு பதிலாக வருடாந்திர பென்ஷனாக சுமார் 50000 பவுன் தர பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. அதன் இன்றைய மதிப்பு 20 லட்சம் பவுன்)

  வஞ்சக சூழ்ச்சிக்கு இரையான துலிப் சிங் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினொன்று.

   புதிய இடம் துலிப் சிங்கை ஈர்த்தது.புதிய நண்பர்கள், தோழியர் கிடைத்தனர். கிறிஸ்தவ மதத்தில் சேர முடிவு செய்தார் துலிப்.

  ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூர் வைரத்தை மஹாராணி விக்டோரியாவுக்கு அளிக்க முடிவு செய்தது.

       (வைரத்தின் சரிதம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

எட்வின் ஜி. க்ரெப்ஸ் (Edwin Gerhard Krebs — பிறப்பு :6-6-1918 மறைவு: 21-12-2009) அமெரிக்காவைச் சேர்ந்த உயிர் வேதியியல் விஞ்ஞானி (Bio chemist).

அவருக்குக் காது கேட்காது. இருந்தாலும் கூடத் தனது ஆராய்ச்சியில் முனைப்பாக இருந்து அபூர்வமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தார்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் மனித உடலில் உள்ள உயிரணுக்களின் இயக்கம் பற்றிப் பல புதிய கண்டுபிடிப்புகளைத் தெரிவித்தார். இதனால் ஹார்மோன்களைப் பற்றிப் பின்னால் நன்கு அறிய முடிந்தது.

தனக்கு இயல்பாக இருந்த காது கேளாமையை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். உலகின் பெரும் விஞ்ஞானி ஆனார்.

அவரது அரிய சேவையைக் கருதி 1992ஆம் ஆண்டு அவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி ஒரு சில நொடிகளில் உலகமெங்கும் டெலிபோன் மூலம் பரவியது.

ஆனால் அதைக் கடைசியாகத் தெரிந்து கொண்டவர் க்ரெப்ஸ் தான்.

ஏனெனில் அவர் டெலிபோன் மணி இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த போதும் அவரால் எடுக்க முடியவில்லை – அவருக்குத் தான் காது கேட்காதே!

சாதனை புரிய உடல் குறை ஒரு பொருட்டல்ல என்று நிரூபித்த விஞ்ஞானிகளில் ஒருவர் க்ரெப்ஸ்.

****

 

 

 

வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும், பஸ்ஸுக்கும் தீ………..(Post No.4288)

வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும், பஸ்ஸுக்கும் தீ………..(Post No.4288)

 
Written by London Swaminathan

 

Date:10 October 2017

 

Time uploaded in London- 14-56

 

 

Post No. 4288

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

SCIENCE BEHIND DEEPAVALI- Part 1 | Tamil and Vedas

SCIENCE BEHIND DEEPAVALI- Part 1

3 Nov 2012 – Science behind Deepavali (swaminathan’s Talk delivered today 03/11/2012) Actual Diwali falls on 13-11-2012 Good Evening,Namsthe …

 

SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!! | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/science-behind-diwali-2-175-sweet-ite…

Translate this page

3 Nov 2012 – SCIENCE BEHIND DIWALI-2 : 175 SWEET ITEMS!! Picture from Wikipedia : Making Fire Crackers. This is Second Part of my speech: swami.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி பற்றி இரண்டு நீண்ட கட்டுரை எழுதினேன். கட்டுரையில் விவரம் காண்க.

இளஞர்களை வெடி வெடிக்க அனுமதிக்காவிட்டால், வீட்டுக்கும் பஸ்ஸுக்கும் தீ வைப்பார்கள். ஏனெனில் நாம் எல்லோரும் பைரோமேனியாக் (PYROMANIAC) என்று விஞ்ஞான சஞ்சிகைகள் விளம்புகின்றன. இது பற்றி எனது கட்டுரையில் விளக்கியுள்ளேன். நாம் ஆதிகாலத்தில் குகைகளில் வசித்தோரின் வழி வந்தவர்கள். உணவு சமைக்கவும் இரவு நேரத்தில் வனவிலங்குகளை விரட்டவும், குளிர் காயவும் தீ மூட்டி பழக்கப்பட்டவர்கள். இது நமது மரபணுக்களில் (GENES) உள்ளதால்தான் நாம் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் சிறு வயதில் வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் நெருப்புப் பெட்டியுடன் விளையாடினோம். வெளியில் சொக்கப்பனை கொளுத்தினோம். ஆகையால் கோர்ட்டுகள் மூலமோ, அரசாங்க போலீஸ் மூலமோ இளைஞர்கள் வெடி வெடிப்பதை  — தீபாவளி பட்டாசு வெடிப்பதைத் — தடுத்தால் பந்த், ரகளை, கலாட்டாக்களின் போது வீட்டுக்குத் தீ வைப்பதும், பஸ், ரயில்களுக்குத் தீ வைப்பதும் அதிகரிக்கும்; குறிப்பாக ஆண்களுக்கு இந்த உணர்வு அதிகம்.

 

ஆகையால் தீபவளி வெடி வெடிக்கத் தடை வேண்டாம்.

ஆனால்……………………..

இந்துக்களிடையே சுய கட்டுப்பாடு (SELF CONTROL and SELF RESTRAINT) வேண்டும்; விஞ்ஞான அணுகு முறை (Scientific approach)  வேண்டும். அது என்ன?

அந்தக் காலத்தில் பரந்த நிலப் பரப்பில், சின்ன ஜனத்தொகை.

இப்பொழுதோ அடுக்கு மாடி வீடுகளில் 500 குடும்பங்கள்;

அருகே ஆஸ்பத்திரிகள்; அ லுவலகங்கள்.

வீட்டூக்குள் நோயாளிகள்1 வெடிகளுக்கு அஞ்சும் சிறு குழந்தைகள்!

இவ்வளவு பேரின் நலத்தையும் மனதில் கொண்டு இரவு 11 மணிக்கு மேல், காலை 5 மணிக்கு முன்னர் வெடிகளை வெடிப்பதில்லை என்று உறுதி பூண வேண்டும்.

இது போல கிராமப் பகுதிகளில், காட்டோரப் பகுதிகளில் பறவைகள், விலங்குகள் நலன்களை மனதிற் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் பல கிராமங்களில் பறவைகளின் நலனை மனதில் வைத்து தீபாவளியே கொண்டாடுவதில்லை- அதாவது வெடி வெடிபதில்லை. நல்ல உள்ளங்கள் !!

 

புறச்சூழல் கேடு வருமா?

தீபாவளியின் போது விஷப்புகை வெளியேறுவது உண்மையே; ஆனால் அதை விட கூடுதல் விஷப்புகை ஒவ்வோரு நிமிடமும் உலகெங்கும் புகைக்கப்படும் சிகரெட், பீடி, சுருட்டு மூல ம் வெளியாகிறது. இதனால் புகை பிடிக்காதவர்களுக்கும் புற்று நோய் (PASSIVE SMOKING IS MORE DANGEROUS)  வரும் என்று அறிவியல் நூல்கள் செப்பும்.

அமெரிக்காவும் மேலை நாடுகளும் விற்பனை செய்யும் ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் உலகில் எந்த ஒரு நேரத்திலும் 55 நாடுகளின் மோதல்களில் பயன்படுத்தப்படுகின்றன. மே ல் நாட்டுப் பத்திரிக்கைகளும் தார்மீக உணர்வு இல்லாத, அற நெறி அறியாத குருடர்களின் கைகளில்தான் இருக்கின்றன. இந்தியாவைப் (INDIAN MASS MEDIA) போலத்தான். பணம் ஒன்றே குறி.

 

உலகில் சண்டை சச்சரவுகள் இருப்பதையே விரும்புகின்றனர்.

லண்டனில் ஆண்டுதோறும் நடக்கும் ஆயுத விற்பனைக் கண்காட்சியில் எந்த பயங்கரவாத இயக்கமும் ஆயுதம் வாங்கலாம். உலகில் 55 நாடுகளில் யுத்தம் நடப்பதை ஊக்குவிப்பது மேலை நாடுகள்!!

அமெரிக்காவில் தினமும் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தும் எந்த அமெரிக்க ஜனாதிபதியும் ஆயுத விற்பனையை நிறுத்த முன்வரவில்லை; ஏனெனில் அங்கே மக் டொனால்டு (Mac Donald) உணவகத்திலும் துப்பாக்கி வாங்கலாம்; இவர்கள்தான் உலகில் மிகப்பெரிய புறச்சூழல் கேட்டை விளைவிக்கிறார்கள். ஆயுத விற்பனையை நிறுத்தினால் 55 நாடுகளில் வெடி குண்டுகள் வெடிக்காது. POLLUTION/ புறச் சூழல் கேடு குறையும்.

நாம் பறக்கும் ஜெட் விமானங்கள் கக்கும் புகையும், அவை எழுப்பும் ஒலியும் அதி பயங்கர POLLUTION!

 

உலகில் கடலில் மிதக்கும் கப்பல்கள், குறிப்பாக எண்ணய்க் கப்பல்கள், கடல் முழுவதையும் சாக்கடையாக்கிவிட்டன. மீன்களை சாகடித்து விட்டன அல்லது மீன் சாப்பிடுவோரின் உடல்களை விஷமாக்கிவிட்டன. ஆக இந்த கேடுகளைப் பார்க்கையில் ஒரு நாள் தீபாவளியில் ஒரு கேடும் வாராது. இந்தக் கப்பல்களையும் விமானங்களையும் தயாரிப்போர் மேலை நாடுகள்; அதில் பயணம் செய்வோரோ, மத்தாப்பு வெடிகளுக்கு எதிராகக் கூச்சல் போடும் மேல் நிலை வர்கம்!

 

பட்டாசுத் தொழில் குடிசைத் தொழில்

 

சிவகாசி போன்ற இடங்களில் பட்டாசுத் தொழில் குடிசைத் தொழில்– அவர்கள் வயிற்றில் மண்ணை அடித்து விடாதீர்கள். யாராவது புறச்சுழல் கேடு பற்றிப் பேசினால் அதை பீடி, சிகரெட் குடிப்போரிடம் சொல்லச் சொல்லுங்கள்; புற சூழலையும் கெடுத்து சிகரெட் குடிக்காதவர்களுக்கும் புற்று நோயை (PAASIVE SMOKING IS MORE DANGEROUS THAN ACTIVE SMOKING) உண்டாக்கும் அந்தக் கம்பெனிகளையும் ஆட்களையும் விரட்டி அடியுங்கள். பட்டாசு உண்டாக்கும் புறச்சூழல் கேடு– ஒரு கொசு அளவே!

 

ஒலிக் கேடு (NOISE POLLUTION)

தீபாவளி வெடிகளின் வீரியத்தை, சக்தியை வெளி நாடுகள் தடுத்துவிட்டன. ஆகையால் சட்டப்படி அதிக ஒலி கேட்கும் வெடிகளை வாங்கவும் இயலாது; விற்கவும் முடியாது; இது போன்ற கட்டுப்படுகள் அவசியமே

 

நாமும் வெடி வெடிக்க என்று சில இடங்க ளை ஒதுக்கலாம்.

லண்டனில் 33 கவுன்சில்கள் உள்ளன. பெரும்பாலான கவுன்சில்கள் பொது இடங்களில் பிரம்மாண்டமான வாண வேடிக்கைகளை நடத்துகின்றனர். பல்லாயிரக் கணக்கான பவுன்களுக்கு பட்டாசு வாங்கி வெடிக்கின்றனர். இது தவிர வீடுகளில், தோட்டங்களில் தனி. எல்லா பேட்டைகளிலும் வெடிகள், மத்தாப்புகள் வாங்கலாம். பெரும்பாலானவை வானத்தில் சென்று வெடிக்கும் வெடிகள்.

 

அமெரிக்கர்களுக்கு பெற்றோல் PETROL விற்பவர்கள் எல்லாம் நல்லவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பயங்கர வாதிகள் என்று சொல்லி ஏதாவது ஒரு வகையில் அவர்களை வம்புக்கு இழுத்து அழித்து விடுவர். எ.கா (சதாம் ஹுசைன், கடாபி)

 

 

அரபு நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படவில்லையாம். அவர்கள் சத்தியசந்தர்களாம்; ஏனெனில் பெற்றொல் PETROL கொடுக்கிறார்கள். பிரிட்டனைப் பொறுத்தமட்டில் அவர்களிடம் வணிகம் செய்ய வேண்டும்;

 

ரிக்வேதம் இத்தகையவர்களை தஸ்யூக்கள் என்று திட்டுகிறது. காளிதாசன் , திருடர்களை “தஸ்யூக்கள்: என்று தனது நூலில் திட்டுகிறான். ரிக் வேதம் இவர்களை பாணிக்கள் என்றும் திட்டுகிறது.

பிற்காலத்தில் சங்கத் தமிழ் இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் இவர்களை மிலேச்சர்கள் என்று திட்டுகின்றன. பாரதியாரும் இப்படித் திட்டுகிறார். ஆரியனாக (பண்பாடு உடையவானாக) இரு என்கிறார்.

 

சீனா தனது ஆலைகள் மூலம் வெளியே தள்ளும் புகை, முஸ்லீம்கள் நடத்தும் தோல் தொழிற்சாலை  தள்ளும் கழிவு, ஆகியன மிக மிக மோசம்.

 

அரசியல் கட்சிகள் ஒலிபெருக்கிகளில் அலற வைக்கும் பாடல்கள்  நமது காதுகளைச் செவிடுபட வைக்கும். முஸ்லீம்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளில் மசூதிகளில் இருந்து அலறும் தொழுகைக் குரல் நம் காதுகளில் அழுகைக் குரலாக ஒலிக்கிறது. காலை ஐந்து மணிக்கு நம் தூக்கத்தைக் கெடுக்கிறது. இவை எல்லாம் என்ன ஒலிக்கேடுகள் (NOISE POLLUTION) இல்லையா?

 

நமது கோர்ட்டுகளை நாம் நம்புவதில் பயன் இல்லை. முஸ்லீம் மசூதிகளின் ஒலி பெருக்கிக்கு எதிராகவோ, சிகரெட், தோல் தொழிற்சாலைகளுக்கு எதிராகவோ வழக்குப் போட்டால அடுத்த நிமிடம் அதைத் தள்ளுபடி செய்வார்கள்.

 

பட்டாசு வாங்குங்கள்; எங்கள் லண்டனைப் போல கட்டு திட்டங்களுடன் வெடியுங்கள்; நமக்கு நாமே கட்டுப்                    பாடு வைத்துக் கொண்டால் நம்மவர்களிடம் இருந்து எதிர்ப்பு வாராது.

 

பட்டாசு வாழ்க; சிகரெட் பீடி ஒழிக!

 

TAGS:–தீபாவளி பட்டாசு, மத்தாப்பு, புறச்சூழல் கேடு, ஒலி, விஷப்புகை

 

–subham–

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர் மீட்கப்படுமா? – 1 (Post No.4254)

Written by S.NAGARAJAN

 

Date: 29 September 2017

 

Time uploaded in London- 6-10 am

 

Post No. 4254

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாக்யா 28-9-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் (ஏழாம் ஆண்டு 32வது கட்டுரை)  வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 1

 

 

 ச.நாகராஜன்

 

 

“இயற்கையில் கிடைப்பதில் மிகவும் கடினமானது வைரமே. வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும் – அறிவியல் தகவல்

      இயற்கை நமக்கு அளிக்கும் செல்வத்தில் தங்கத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்புவது வைரத்தையே. இதில் மதம், ஜாதி, மொழி, நாடு, இனம், பால் என்ற பாகுபாடே இல்லை.

அனைவரும் விரும்பும் ஜொலிக்கும் வைரத்தைக் கண்டு அறிவியல் கூட வியக்கிறது.

வைரம் பல பில்லியன் ( ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) ஆண்டுகள் பழமையானவை. சில சமயம் 300 கோடி ஆண்டுகள் பழமையான வைரங்கள் கிடைக்கின்றன.

நூறு மைல் ஆழத்தில் பூமியில் புதைந்து கிடைக்கும் வைரம் எரிமலை வெடிப்புகளினால் மேலே வருகிறது.

வைரத்தில் இருப்பது ஒரே ஒரு பொருள் தான் – கார்பன் தான் அது. நூறு சதவிகிதம் கார்பன்!!

பூமியின் கீழே உள்ள அதீத வெப்பத்தினாலும் அழுத்தத்தினாலும் கார்பன் அணுக்கள் தனித்தன்மையினால் ஒன்றிணைகின்றன. அதிசயமான வைரமாக ஆகின்றன.

அடமாஸ் (adamas) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவான ஆங்கில வார்த்தை தான் டயமண்ட். இதன் பொருள் அழிக்க முடியாதது, ஜெயிக்க முடியாதது என்பதாகும். வைரத்தை முதன் முதலில் உலகில் கொண்டிருந்த ஒரே நாடு இந்தியா தான்.

கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே வைரத்தை இந்திய மக்கள் அணிந்திருந்தனர். தாங்கள் வணங்கும் தெய்வச் சிலைகளிலும் அதை அணிவித்திருந்தனர்.

      வைரத்தை அணியாத பெரிய மன்னனே கிடையாது. ஆடைக்கும் மேலாக வைரத்தை மன்னர்கள் மதித்து அதை அணிந்து வந்தனர். அரசவைகளில் எந்த அந்தஸ்து உள்ளவர் எப்படிப்பட்ட நவரத்ன மணியை எந்த விதத்தில் பதித்து அணிய வேண்டும் என்பதற்கு கடுமையான விதி முறைகள் இருந்தன.

   வைரத்தைப் பற்றி அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் பல அரிய, இரகசியமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

     இந்திய வைரங்களை உலகினர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். வைர நாடு என்றே இந்தியா அழைக்கப்பட்டது. வெனிஸ் நகரிலும் ஐரோப்பாவில் பல நகரங்களிலும் இந்திய வைரங்களை விற்கும் வைரச் சந்தைகள் இருந்தன.

1725ஆம் ஆண்டு தான் பிரேஜிலில் ஒரு வைரச் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.

ஆயிரத்தி எண்ணூறுகளில் தான் தென் ஆப்பிரிக்காவில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது கனடா, போட்ஸ்வானா, நமீபியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது.

     உலக வைரங்களில் பெரிய வைரம் தென் ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட கல்லினன் வைரம் தான். இதன் எடை 3106 காரட், (ஒரு காரட் என்பது 0.2 கிராம்). இது எட்வர்ட் மன்னனுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் இது ஒன்பது பெரிய துண்டுகளாகவும் நூறு சிறிய துண்டுகளாகவும் வெட்டப்பட்டது. மூன்று பெரிய துண்டுகளை டவர் அஃப் லண்டனில் உள்ள கண்காட்சியில் காணலாம்.

    ஆனால் இந்த வைரங்களில் எல்லாம் மிகச் சிறந்த வைரமாக இந்தியர்களின் உரிமைச் சொத்தாகக் கருதப்படுவது கோஹினூர் வைரம் தான்.

அதன் கதையே விசித்திரமானது; சுவையுடன் சோகம் கலந்த ஒன்று.

கோஹினூர் வைரம் இந்தியாவின் பரம்பரைச் சொத்து. அது இன்று இங்கிலாந்தில் இருக்கிறது.

வெள்ளையர் அடித்த கொள்ளையில் கோஹினூரும் ஒன்று. அதை மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாகப் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

 

கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள்.

இது எவ்வளவு பழமையானது என்பது யாருக்கும் தெரியாது.

இதன் பழைய காலப் பெயர் ஸ்மயந்தக மணி.சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றிலும் இதன் புகழ் மற்றும் அருமை பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணர் உள்ளிட்டோரால் இந்த மணி மதிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வழங்கி வரும் ஐதீகம்.

   அத்துடன் இந்த கோஹினூருடன் கூடவே ஒரு சாபமும் உண்டு என்று நம்பப்படுகிறது.

   ஆண்களிடம் இது இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தையே தரும். பெண்கள் இதை அணியலாம். இது தான் சாபம்.

  இதன் பழைய கால எடை 793 கிராம். இன்றோ வெட்டப்பட்டு வெட்டப்பட்டு சுமார் 105 கிராமாகச் சுருங்கி விட்டது.

   காகதீய வம்சம் இந்தியாவில் ஆட்சி புரிந்த போது ஆந்திர பிரதேச்த்தில் கோல்கொண்டா பிரதேசத்தில் இது மீண்டும் கிடைத்ததாக ஒரு வரலாறும் உண்டு.

மத்திய ஆசியாவிலிருந்து கைபர் கண்வாய் (இன்றைய ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளது இது) வழியே இந்தியாவினுள் 1526ஆம் ஆண்டு நுழைந்த பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார். அதிலிருந்து சுமார் 300 ஆண்டுகள் இந்த முகலாய ஆட்சி தொடர்ந்தது.

    முகலாய அரசரான ஷாஜஹான் 1628ஆம் ஆண்டு தனது சிம்மாசனத்தில் வைரங்களைப் பதித்தார். இதைச் செய்ய சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது.

இதன் விலையோ தாஜ்மஹாலுக்கு ஆன செலவைப் போல நான்கு ம்டங்கு அதிகம்! தாஜ்மஹால் கட்டப்பட்டு வந்த அதே காலகட்டத்தில் தான் இந்த சிம்மாசனமும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தியை அரசவை குறிப்புகளை எழுதி வந்த அஹ்மத் ஷா லாகூர் எழுதி வைத்துள்ளார்.

                        (கோஹினூரின் கதை தொடரும்)

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

பிரபல கணித மேதையான் ஆட்ண்ரூ வைல்ஸ் (Andrew Wiles)  358 ஆண்டுகளாக யாராலும் தீர்க்கப்பட முடியாமல் இருந்த ஃப்ரெமெட்டின் லாஸ்ட் தியரம் (Fermet’s Last Theorem) என்ற கணிதப் புதிரை விடுவித்தது உலகையே வியப்பில் ஆழ்த்திய ஒரு சம்பவம்.

1637ஆம் ஆண்டு  பிரான்ஸை சேர்ந்த சட்ட வல்லுநரும் கணிதத்தைப் பொழுதுபோக்காகக் கொண்டவருமான ஃபெர்மெட் ஒரு சாதாரணப் புதிர் கணிதத்தை கணித மேதைகள் முன்னர்  சவாலாக தீர்வுக்காக வைத்தார். அதை யாராலும் தீர்க்க முடியவில்லை.

ஆண்ட் ரூ வைல்ஸ் பத்து வயதில் சிறுவனாக இருந்த போதே இந்த தீர்க்கப்பட முடியாமல் இருந்த புதிர் மீது ஒரு கண்ணை வைத்தார். அதற்கான விடையை எப்படியாவது கண்டு பிடித்து விடுவது என்று தணியாத வெறியைக் கொண்டார். 1986ஆம் ஆண்டு பிரின்ஸ்டனில் கணிதத்துறையில் சேர்ந்தவுடன் மிகவும் இரகசியமாக இந்தப் புதிரை ஆராய ஆரம்பித்தார்.ஏழு வருடங்கள் ஓடின.

இங்கிலாந்தில் 1993இல் நடந்த ஒரு கணித மாநாட்டில் திடீரென்று தனது உரையின் மூன்றாவ்து பகுதியில் இந்தக் கணிதப் புதிரை தான் விடுவித்து விட்டதாகக் கூறவே உலகமே பரபரப்படைந்தது. மறு நாளே நியூயார்க் டைம்ஸ் இதைப் பெரிதாக வெளியிட்டது.

தனது 200 பக்க உரையை அவர் வெளியிடவே அது சரிதானா என்று ஆராய ஆறு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டனர். அனைவரின் சந்தேகங்களுக்கும் பொறுமையாக் விடையளித்தார் வைல்ஸ். உலகமே அவரைக் கொண்டாட ஆரம்பித்தது. எந்த ஒரு விஷயத்தையும் தணியாத ஏகாக்கிர சிந்தையுடன் அணுகினால் அதில் வெற்றி பெறலாம் என்பதை நிரூபித்து விட்ட மாமேதையாக இலங்குகிறார் வைல்ஸ்

***

பெண்கள் நட்சத்திரங்கள்! யஜுர் வேதம் முழக்கம்!! (Post No.4249)

Research article written by London Swaminathan

 

Date: 27 September 2017

 

Time uploaded in London- 7-03 am

 

 

Post No. 4249

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

நட்சத்திரங்கள் (stars) என்பன யாவை? அவைகள் என்ன? விஞ்ஞானம் சொல்கிறது- “அவை எல்லாம் சூரியன்கள்; சில நட்சத்திரங்கள் சூரியனை விட கோடி மடங்கு பெரியவை. அவற்றின் ஒளி பூமியை அடையவே பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பதால் நாம் கருகாமல் இருக்கிறோம்; சூரியன் என்பது மஞ்சள் ( a mediocre yellow star) வகை நட்சத்திரம்; அதாவது நடுத்தர நட்சத்திரம்”. இது விஞ்ஞான புத்தகத்தில் உள்ள செய்தி.

 

ஆனால் சமய நூல்கள் என்ன சொல்கின்றன? நட்சத்திரங்கள் புண்யாத்மாக்களின் ஆவி, ஆன்மா; இறந்து போன மன்னர்கள் நட்சத்திரங்கள் ஆவதாக எகிப்தியர்களும் கிரேக்கர்களும் நம்பினர். மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, அமேசான் காடு வாழ் பழங்குடி மக்களும் இதையே சொல்லுவர். ஆனால் அவர்கள் எல்லோரும் கெட்ட, நல்ல மனிதர்கள் எல்லோரும் இறந்த பின்னர் இப்படி ஆவார்கள் என்று சொல்லுவர். இந்து மதமோ புண்ய ஆத்மாக்கள் மட்டும் நட்சத்திரங்கள் ஆவர் என்கிறது.

 

 

மஹாபாரத வன பர்வத்தில் அர்ஜுனனின் விண்வெளிப்பயணம் (Inter Galactic Space Travel by Arjuna)பற்றிய சுவையான விஞ்ஞான விஷயம் வருகிறது. இதையே சாகுந்தலத்தில் காளிதாசனும் பேசுகிறான். மாதலி என்னும் விண்வெளி பைலட்டிடம் (விமானியிடம்) அர்ஜுனன் ஒரு கேள்வி கேட்கிறான்; அடக் கடவுளே! இது என்ன விண்கலத்திற்கு வெளியே நான், பறக்கும் ஒளிப் பிழம்புகளைக் காண்கின்றேனே! இவை எல்லாமென்ன?

 

மாதலி சொல்கிறான்: அர்ஜுனா! இவைகளைத்தான் மக்கள் பூமியில் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர். இவைகள் எல்லாம் இறந்து போன புண்ய ஆத்மாக்கள்”.

 

இது மிகவும் அபூர்வமான வருணனை. பிரபஞ்சத்தில் ஒரு நட்சத்திர மண்டலத்தில் இருந்து மற்ற ஒரு நட்சத்திர மண்டலத்துக்குப் போகும் வித்தையை இந்துக்கள் அறிந்திருந்தனர். ஐன்ஸ்டைன் (Einstein) முதலியோர் ஒளிதான் மிகவும் (Light is the fastest thing) வேகமான பொருள்; அதை மிஞ்சும் எதுவும் இல்லை. யாரும் ஒளியின் வேகத்தை நெருங்கக்கூட முடியாது. அப்படி பயணம் செய்தால் அவர்கள் நித்திய மார்கண்டேயர்கள்; அவர்கள் முதுமையே எய்த மாட்டார்கள் (Ever young, never die) என்று சொன்னார்கள். ஆனால் இந்துக்கள் மனோ வேகத்தில் செல்லும்– விண்வெளி பயணம் செய்யும் வித்தையை அறிந்து இருந்தனர். நாரதர் போன்றோர் திரி லோக சஞ்சாரி. நினைத்த மாத்திரத்தில் விண்வெளியில் (capable of Inter Galactic Travel) எங்கும் செல்லலாம்.

 

விஞ்ஞானிகளும் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறார்கள்; நாம் எல்லோரும் (We were all star dust once) நட்சத்திரத் துகள்களே; 1500 கோடி வருடங்களுக்கு முன்னால் பிரபஞ்சம் மாபெரும் வெடிப்பில் (Big Bang) சிக்கியது. அப்போது பறந்த துகள்களே சூரிய மண்டலம், கிரஹங்கள்; அதில் தோன்றிய நாம் எல்லோரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் பகுதியே”.

 

ஆயினும் இந்துக்கள் சொல்லுவது போல இறந்த ஆன்மாக்கள் என்பதற்கு அறிவியல் விளக்கம் கிடைக்கவில்லை. உலகில் இவ்விஷயத்தில் இந்துக்களே முன்னோடி. ஏனெனில் வடக்கு வாநத்தில் ஒளிரும் புகழ்மிகு, எழில் மிகு, நட்சத்திரக் கூட்டத்துக்கு சப்தரிஷி மண்டலம் என்று பெயரிட்டு ஏழு ரிஷிகளின் பெயரைச் சொன்னார்கள். இன்றும் பிராமணர்கள் த்ரிகால சந்தியாவந்தனத்தில் தினமும் மூன்று முறை அந்த ஏழு ரிகளை வணங்குகின்றனர். அது மட்டுமல்ல. அதில் வசிஷ்டர் அருகில் இருக்கும் அருந்ததி நட்சத்திரத்தை எல்லாப் பெண்களும் கற்புக்கரசியாக வணங்க வேண்டும் என்றும் கட்டளையிட்டனர்.

2200 ஆண்டுகளுக்கு முன் தமிழர் இயறிய புற நானூறும் அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரமும் சப்தரிஷி மண்டலத்தையும் அருந்ததி நட்சத்திரத்தையும் விதந்து ஓதுகின்றன. ஆக, தமிழர்களுக்கும் இவ்விஷயம் தெரியும்

அது மட்டுமின்றி துருவ நட்சத்திரம், (Pole Star) தென் வானத்தில் உள்ள அகஸ்திய (Canopus) நட்சத்திரம், திரி சங்கு (Southern Cross) நட்சத்திரம், சந்திரனின் பாதையில் உள்ள 28 (27+ அபிஜித்= 28)  நட்சத்திரங்கள்

ஆகியவற்றுக்கும் புனித அந்தஸ்து வழங்கியது இந்து மதமே.

மற்ற எல்லா கலாசாரங்களும் சப்த ரிஷி மண்டலத்தை பெருங்கரடி (Ursa Major= Great Bear) என்றும் பறக்கும்  பட்டம் (kite) என்றும் மன்னரின் தேர் (Dipper, Chariot) என்றும் அழைத்தன. நாம் மட்டுமே புனித அந்தஸ்து கொடுத்தோம்.

இப்போது யஜூர் வேதம் சொல்லும் செய்தி இவை எல்லாவற்றையும் விடச் சுவையாக உள்ளது. யஜூர் வேதத்தில் இரண்டு பகுதிகள் உண்டு அதில் சுக்ல யஜூர் வேதத்தின் ஒரு பகுதியான சதபத பிராமணத்தில் இந்தச் செய்தி வருகிறது.

சதபத பிராமணம் ஒரு பெரிய என்சைக்ளோபீடியா; அது சொல்லாத  விஷயமே இல்லை. ஆனால் எல்லாம் வேடிக்கையாக இருக்கும்; வெள்ளைகாரர் களுக்கு அதைப் பார்த்து ஏக குஷி! இதுதாண்டா, உலகிலேயே மிகப்பெரிய உளறல் மூட்டை; இதை வைத்தே இந்துமதத்தை ஒழித்துவிடலாம் என்று 100 ஆண்டுகளுக்கு முன் கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் கொக்கரித்தனர். ஆனால் இந்துக்களுக்கோ இது மிகப் பெரிய புனித நூல்; இதில்தான் அஸ்வமேத, புருஷ மேத, ராஜ சூய யக்ஞங்கள் பற்றி உள்ளன. ரிக் வேதம் மூன்று நட்சத்திரம் பெயரையே சொல்லும்; ஆனால் யஜுர் வேதமோ 28 நட்சத்திரத்தின் பட்டியலைத் தரும். உலகில் வேறு எந்த நூலிலும் — எகிப்திய , பாபிலோனிய, மாயன், சீன — நூல்களில் விரிவான பட்டியல் இல்லை. சீனர்கள் நம்மிடம் இரவல் வாங்கியதாக வெள்ளைத்தோல் “அறிஞர்களும்” செப்புவர்.

 

பெண்கள் ஸ்டார்ஸ்!!!

 

“ஸ்த்ரீகள் நட்சத்திரங்கள். தேவலோகம் செல்லுபவர்களுக்கு நன்மை செய்வார்கள்; புருஷர்களுக்கு இவர்கள் நட்சத்திரங்கள் போலா வார்கள்”- 6-5-4-9

 

இது ஜம்புநாதன் அவர்களின் மொழி பெயர்ப்பு (யஜூர்வேதக் கதைகள், பக்கம் 78)

 

ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள விஷயத்தை நான் பகர்வேன்:-

 

“தெய்வீக கிழவிகள், வெட்டப்படாத இறக்கைகளுடன், கடவுளுக்கு நெருக்கமாக இருப்பார்கள். அவர்கள் ஆங்கிரஸ் போல, சட்டியில், பூமியின் மடியில், சுடுவார்கள்; இப்போது அவர்கள் உதவியுடன் புரோகிதர்கள் வறுக்கிறார்கள்;  ஆனால் இவைகள் எல்லாம் நிச்சயமாக நட்சத்திரங்கள்.- பெண்கள் உண்மையிலேயே நட்சத்திரங்கள். சொர்க லோகத்துக்குச் செல்லும் ஆண்களுக்கு இவர்களே ஒளிகாட்டும் விளக்குகள்; இந்த நட்சத்திரங்களைக் கொண்டே அவர்கள் சுடுகிறார்கள் (வறுத்து எடுப்பர்).

 

 

ஒருவர் இப்படி மேல் உலகங்களுக்குச் செல்லுகையில் –அதுதான் சிறந்த புகலிடம்; அதுதான் லட்சியம். அங்கே சுட்டெரிக்கும் சூரியனே, இறந்துபோன நல்லவர்கள். அங்குள்ள மிகப்பெரிய ஒளி பிரஜாபதி அல்லது சொர்கம். இப்படி மேல் உலகங்களுக்குப் போனால் அதுவே சிறந்த அடைக்கலம்; அவர்கள் லட்சியத்தை அடைந்துவிட்டனர்.

 

–சதபத பிராமணம் 1-9-3-10

தைத்ரீய பிராமணமும் (1-5-2-6) நட்சத்திரங்களை கடவுளரின் வீடுகள் என்று கூறும். யார் இதைப் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் அந்த வீட்டை அடைவார்கள்.

 

சதபத பிராமணத்தில் உள்ள விஷயங்களை அப்படியே அர்த்தம் செய்யக்கூடாது; அதன் மறைபொருளை பெரியோர் மூலம் அறியவேண்டும். வேத இலக்கியம் முழுதையும் கற்றோருக்கே அதன் பொருள் விளங்கும்; வெள்ளைகாரர்களுக்கு அர்த்தம் புரியாததால் இதை மொழி பெயர்த்து சிரி சிரி என்று சிரித்து விட்டனர். ஆனால் இதில்தான் எல்லா விஷயங்களும் இருப்பதால் அவர்களால் இதைச் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. மொழி இயல், உளவியல், தாவரவியல், விலங்கியல், வானியல் என்று எல்லாவற்றையும் தொட்டுச் செல்லுகிறது சதபதம்; வெள்ளைக்கா ர்கள் கூட இதற்கு கி.மு 850 முத கி.மு 1000 வரை கால கணித்துள்ளனர். நாமோ  அனாதி காலம் தொட்டு வழங்கி வருவதாக நம்புகிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சதபத பிராமணம் சொல்லிய வழியே சோழ மன்னன் பெருநற்கிள்ளியும், கரிகால் சோழனும் ராஜசூய யக்ஞமும், பருந்து வடிவ யாக குண்டமும் வைத்த செய்தி புற நானூற்றில் உள்ளது (எனது பழைய கட்டுரைகளில் முழு விவரம் காண்க)

 

ராஜ சூய யாகத்தைப் பார்த்த அவ்வையாருக்கு பேரானந்தம்; “அடப் பாவி மகன்களே! எப்போது பர்த்தாலும் சண்டை போட்டு ஒருவனை ஒருவன் வீரம்பேசி அழிந்தீர்களே; இன்று சேர சோழ பாண்டிய மன்னர்களை ஒரே மேடையில் பார்க்கையில் எனக்கு வரும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை; இன்று போல நீங்கள் என்றும் ஒற்றுமையுடன் இருப்பீர்களாக” என்று அடி மன த்தின் ஆழத்திலிருந்து வாழ்த்திய செய்தியை புறநானூற்றில் காண்க.

 

வேதங்கள் புரிய வேண்டுமானால் புற நானூற்றையும், பதிற்றுபத்தையும், பரிபாடலையும் பயில வேண்டும்

சங்கத் தமிழ் நூல்களும், திருக்குறளும் உள்ளவரை இந்து மதம் வாழும்.

TAGS:– சதபத பிராமணம், பெண்கள் நட்சத்திரம், வனபர்வம், விண்வெளிப் பயணம்

–சுபம்–

 

 

ரிக் வேதத்தில் உலகம் வியக்கும் அறிவியல் சிந்தனை! (Post No.4237)

Written by London Swaminathan

 

Date: 23 September 2017

 

Time uploaded in London-  7-12 am

 

Post No. 4237

 

Pictures are taken from various sources; thanks.

 

 

உலகிலேயே பழமையான சமய நூல் ரிக் வேதம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை; உலகிலேயே மிகப்பெரிய பழங்கால கவிதைத் தொகுப்பு ரிக் வேதம் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. சரஸ்வதி நதி  கி.மு 2000க்கு முன்னரே மறைந்துவிட்டது என்று பாபா அணுசக்திக் கேந்திர விஞ்ஞானிகளும், நா ஸா (NASA) விண்வெளியிலிருந்து எடுத்த புகைப்படமும் காட்டியதால் ரிக் வேதத்தின் காலம் கி.மு 2000-க்கு முன் என்பது உறுதியாகிவிட்டது. அது மட்டுமின்றி துருக்கியில் கிடைத்த களிமண் க்யூனிபார்ம் கல்வெட்டில் ரிக்வேதத்தில் தெய்வங்கள் எந்த வரிசைக் கிரமத்தில் இருக்கிறதோ அதே வரிசைக் கிரமத்தில் இருப்பதை கி.மு.1400ல்  கண்டுபிடித்தவுடன் ரிக்வேதம் கி.மு.1400லேயே துருக்கிவரை சென்றதும் உறுதியாகிவிட்டது.

 

சரஸ்வதி நதி பற்றித் துதிக்கும் பாடல்கள் ரிக் வேதம் முழுதும் ஐம்பதுக்கும் மேலான இடங்களில் விரவிக் கிடக்கின்றன. ஆக ரிக் வேதத்தின் எந்தப் பகுதியையும் எவரும் .கி.மு2000க்குக் குறைத்து மதிப்பிட முடியாது. அதாவது மொஹஞ்சதாரோ, ஹரப்பாவுக்கு முந்தையது வேத கால நாகரீகம் (இதற்கு ஆட்சேபம் எழுப்பியோர் குதிரை, இரும்பு பற்றிக் கூறியவற்றுக்கு எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் பதில்கள் உள்ளன. கண்டு மகிழ்க).

 

இது பழைய மாக்ஸ்முல்லர் கொள்கையையும், மார்கஸீயவா(ந்)திகளின் கொள்கையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டது.

 

 

மாபெரும் வெடிப்பு BIG BANG!

 

இந்த பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? என்பதற்கு அண்மைக் காலத்தில் விஞ்ஞானிகள் விளக்கம் கண்டு பிடித்துள்ளனர். அவர்கள் சொல்கிறார்கள்– 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென்று ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அப்போது முதல், நட்சத்திரங்கள், பூமி, கிரஹங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியாகின. அந்தப் பிரபஞ்சம் இன்னும் பலூன் ஊதுவது போல பெருகிப் பரந்து விரிந்து கொண்டே போகிறது. முடிவு என்ன ஆகும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த மாபெரும் வெடிப்பு (BIG BANG) ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியாது – என்று அறிவியல் நூல்கள் செப்பும்.

 

இதில் ஒரு பெரிய விந்தை என்னவென்றால் ஒரு பிரம்மாவின் யுகக்கணக்கில் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதைய பிரபஞ்சம் தோன்றியதாக இந்து சமய நூல்களும் பகர்கின்றன. அது மட்டுமின்றி காலம் என்பது வட்ட வடிவில் (Cyclical, not linear) பயணம் செய்யும் ; ஆகையால் இது மீண்டும் சுருங்கி, மீண்டும் விரிவடையும் என்றும் இந்து சமய நூல்கள் விரித்துரைக்கின்றன. இனி நாசதீய சூக்தத்தில் உள்ள  அதிசய விஷயத்தைக் காண்போம்.

 

இப்பேற்பட்ட ரிக் வேதத்தில் கடைசி பாடலில் உலக சமாதானம் , உலக மக்கள் நலம் பற்றிய பாடல் இருப்பது – 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னரே — வேத கால ரிஷிகள் ஆடிப்பாடி ஆனந்தக் கூத்தாடி இருப்பது உலகையே வியக்க வைக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை உருவாகும் முன்னரே இப்படி ஒரு சிந்தனை எழுந்தது வேத கால நாகரீகம் ஒன்றே முதன்மையானது என்பதைக் காட்டிவிட்டது.

 

இப்படி பசு மாடு, குதிரை, டெஸிமல் சிஸ்டம் , உலக மக்கள் நலம் என்பதில் எல்லாம் முன்னொட்டியில் நிற்கும் விஞ்ஞானத்திலும் முன்னனியில் இருப்பது  எல்லோர் மூக்கிலும் விரலை வைக்கவைத்து விட்டது.

 

இதைப்படித்த வெளிநாட்டு “அறிஞர்கள்” வேதம் பற்றிய எல்லாப் புத்தகத்திலும் இதைச் சேர்த்துவெளியிட்டனர். நூற்றுக்கும் மேலான “அறிஞர்கள்” இது பற்றி பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கில, லத்தீன் மொழிகளில் உரை- வியாக்கியானம்- கருத்துக்களை மொழிந்துள்ளனர்.

 

இந்த துதியின் பெயர் நாஸதீஅய சூக்தம். ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் உள்ளது (10-129)

 

சரஸ்வதி நதி தீரத்தின் கரையில் 6000, 7000 ஆண்டுகளுக்கு முன்னர் உட்கார்ந்திருந்த ஒரு முனிவர் இரவு நேரத்தில் பல்லாயிரக் கணக்கான நடசத்திரங்கள் வான வீதியில் பவனி வருவதைக் கண்டார். உடனே இவை எப்படித் தோன்றின என்று ஞான திருஷ்டியில் கண்டார். அதை ஒரு பாடல் மூலம் வெளியிட்டார். அதுதான் நாசதீய சூக்தம் என்னும் துதி.

 

ஒரு விஞ்ஞானியோ நாஸ்தீக வாதியோ, மாபெரும் வெடிப்புக்கு (Before The Big Bang) முன்னர் என்ன இருந்தது? அதை யார் தோற்றுவித்தார்? அவர் எப்படி வந்தார் அல்லது அது எப்படி வந்தது என்று கேள்வி கேட்டுக் கொண்டே போனால் விடையே கிடைக்காது. ஒரு நேரத்தில் இப்படி யோசிப்பதை நிறுத்தாவிடில் வேட்டி சட்டையைக் கிழித்துக் கொண்டு பைத்தியம் பிடித்து அலைவார்.

 

ஆனால் ரிக் வேத ரிஷியோ மாபெரும் வெடிப்பை வர்ணித்துவிட்டு இது கடவுளின் இச்சையால் ஏற்பட்டது என்று மொழிகிறார். விஞ்ஞானிகள் காரணமே தெரியாது என்று சொன்ன இடத்தில் கடவுள் என்பவரையும் அவரது விருப்பத்தையும் பகர்ந்தவுடன் விடை கிடைத்துவிடுகிறது.

 

அதெல்லாம் சரிதான், ஐயா? 7000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வேத கால இந்துவுக்கு எப்படி இப்படி ஒரு அபூர்வ, அதிசய, அற்புத சிந்தனை பிறந்தது? அப்படியானால் அவர்கள் நாகரீகத்தின் சிகரத்தில் அல்லவா வாழ்ந்திருக்க வேண்டும்? மார்கஸீய வா(ந்)திகளும் வெள்ளைத் தோல் :அறிஞர்களும்” செப்பியது தவறு அன்றோ! கைபர் கணவாய் வழியாக மாடு மேய்த்து வந்த நாகரீகமற்ற நாடோடிகள் ஆரியர்கள் என்று கற்பனையை எழுதிய கயவர்களைக் கண்டு நாம் இன்று கைகொட்டிச் சிரிக்கலாமே!

 

இதோ அற்புதமான நாசதீய சூக்தம்:–

 

1.அப்போது எதுவுமே இல்லை; இல்லாமலும் இல்லை; ஏதுனும் இருந்ததுமில்லை; இல்லாமலும் இல்லை. அப்போது விண்வெளியோ ஆகாயமோ இல்லை; அதற்குப் பின்னரும் எதுவுமே இல்லை. என்ன நேர்ந்தது? எங்கே? யார் இதைக் கவனித்தார்? ஆழம் தெரியாத அளவுக்கு அப்போது தண்ணீர் இருந்ததா?

 

2.சாவு என்பதே அப்போது கிடையாது; மரணமில்லப் பெருவாழ்வு என்பதும் இல்லை. பகல் இரவு என்பதே இல்லை. ஆனால் ஒன்றுமட்டும் உயிர்மூச்சுடன் இருந்தது; காற்றே இல்லாவிடினும் அது தனது சக்தியால் சுவாசித்துக் கொண்டிருந்தது. அதைத்தவிர எதுவுமே இல்லை.

3.ஆரம்பத்தில் இருளை இருட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. எதையும் பிரித்துக் காட்டுவதற்கு எதுவுமே இல்லை. எங்கும் தண்ணீரோ! எல்லா இடமும் வெற்றிடம். அப்போது தவ சக்தியால், தவ (Heat) வெப்பத்தால் ஒன்று மட்டும் எழுந்தது (மாபெரும் வெடிப்பு BIG BANG இதுதான்)

 

4.துவக்கத்தில் அதற்கு ஆசை எழுந்தது. அதுதான் மனதில் விதைக்கப்பட்ட முதல் விதை; ஒன்றுமே இல்லாததில் ஒன்று இருந்ததை ஞானத்தை நாடும் தெய்வீக கவிஞர்கள் கண்டார்கள்.

 

5.அந்தக் கயிறு– இணைப்பு- எங்கும் சென்ற து ஆனால் கீழ், மேல் என்று ஏதாவது அப்போது உண்டா? விதைகள் தூவப்பட்டன. எங்கும் சக்தி. உயிர்த்துடிப்பு மேலும் கீழும்.

 

யாருக்குத் தெரியும்? யார் இதைச் சொல்ல முடியும்? அது எப்போது தோன்றியது? இந்த படைப்பு என்பது எப்போது ஏற்பட்டது ?படைப்புக்குப் பின்னரே (நாம் இன்று வணங்கும்) கடவுளர் வந்தனர். அப்படி இருக்கையில் இது எப்போது தோன்றியது என்பதை எவர் அறிவார்?

 

  1. எப்போது இந்தப் படைப்பு ஏற்பட்டது? அதுவே ஏற்பட்டதா? இல்லையா? யார் இதை மேலிருந்து கவனித்தாரோ அந்த உயர்ந்த சுவர்கத்துக்கே அது தெரியும்; தெரியாமலும் இருக்கலாம்.

 

இதை இந்துக்கள் கடவுள் உலகைப் படைத்தார் என்ற கருத்தில் எடுத்துக் கொள்ளுவர். நாஸ்தீகவாதிகள் இங்கு சந்தேக த்வனி இருப்பதாவும் எடுத்துக் கொள்ளுவர். இவ்விருவர் கோணத்தில் பார்த்தாலும் இப்படி ஒரு ரிஷி முனிவருக்கு ஒரு சிந்தனை 6000, 7000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதும், அதை வாய்மொழியாக 7000 ஆண்டுகளாக இந்துக்கள் பாடிப் பாதுகாத்து வைத்திருப்பதும் உலக மஹா அதிசயம். ஏனெனில் வேதங்க ளை எழுதக்கூடாது. வாய்மொழியாக மட்டுமே மூன்று ஜாதியினர் கற்காலாம். சங்கத் தமிழ் நூல்கள் வேதங்களை எழுதாக் கிளவி, எழுதா மறை, எழுதாக் கற்பு என்று போற்றுகின்றன.

 

மாபெரும் எடிப்பு என்பதை இறைவனின் தவ வலிமையில் பிறந்த இச்சை- காமம்- விருப்பம் -ஆசை என்று அற்புதமாக வருணிக்கிறார் வேத காலப் புலவர். கவிஞருக்கே உரித்தான பாணியில் சந்தேகக் கேள்விகளை எழுப்பி—அதாவது தடை எழுப்பி விடை காண்கிறார்.

 

நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் இருந்தால்தான் இப்படி ஒரு சிந்தனை பிற க்கும் அல்லது பாபிலோனியாவில் உள்ளது போல ஒரு லட்சம் கல்வெட்டுகளிலும் உப்பு, புளி, மிளகாய், எண்ணை வாங்கிய பழங்கால கணக்குகளை  எழுதி இருப்பார்கள். அல்லது ஜில்காமேஷ் “காவியம்” போல ஏதாவது பிதற்றி இருப்பர்!

 

சில வெளிநாட்டு அரை வேக்காடுகள் – ‘கடவுளரே படைப்புக்குப் பின்னர் தோன்றியதாக’ வரும் வரியை எடுத்துக் கொண்டு – படைப்புக்குக் கடவுள் காரணம் அல்ல – என்று பகர்ந்து தன் அறியாமையை வெளிப்படுத்துவர். ஏனெனில் இதே துதியில் “அந்த ஒன்று” உயிர்த்துடிப்புடன் இருந்தது; அது தவத்தினால் ( தவம்= வெப்பம்), இச்சையினால் இதைத் தோற்றுவித்தது — என்பது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

கவிகளுக்கே உரித்தான பாணியில் எழுதும் போது இப்படிக் கேள்விகளை எழுப்பி – உளதோ இலதோ — என்று புகல்வர். மாணிக்க வாசகரின் திருவாசகத்தைப் படித்தவர்களுக்கு இது இன்னும் நன்றாக விளங்கும்.

 

உருவம், அருவம் அருஉருவம் எல்லாம் உடையவன் அவன்!

 

TAGS: -மாபெரும் வெடிப்பு, நாசதீய சூக்தம், வேதத்தில் விஞ்ஞானம்

–சுபம்–

 

இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 3 (Post No.4233)

Written by S.NAGARAJAN

 

Date: 22 September 2017

 

Time uploaded in London- 6-27 am

 

Post No. 4233

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

22-9-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 31வது) கட்டுரை

 

 

இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 3

 ச.நாகராஜன்

 

 

“மின்னுவதெல்லாம் பொன் அல்ல – தமிழ்ப் பழமொழி

 

பண்டைய ரோமானிய நாகரிகம் தொடங்கி இன்றைய நாள் வரை இரஸவாதக் கலையில் நிபுணர்களாக விளங்கியோர் எண்ணிலடங்காத பேர்கள். ஆரம்ப காலத்தில் இந்தக் கலையை மாஜிக் என்றும் மாயாஜாலக் கலை என்றும் கூறி வந்தனர்.

இரசாயனத்துறை அறிவியல் ரீதியில் வளர ஆரம்பித்த போது இரஸவாதத்திற்குத் தனி ஒரு அங்கீகாரம் ஏற்பட்டது. விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்தனர்.

 

இதன் பக்க விளைவுகளாக பல நல்ல கண்டுபிடிப்புகளும் அரங்கேறின.

 

நூற்றுக்கணக்கானோர் இந்தக் கலையில் புகழ் பெற்றிருந்தாலும் கூட குறிப்பிடத்தகுந்த இருவரை மட்டும் இங்கு பார்ப்போம்.

 

 

 

ஜோஹன் ஃப்ரெடெரிக் பாட்கர் (Johann Friderich Bottger)

 

                18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாட்கர் ஒரு மந்திரவாதி என்றும் சுத்தமான பிராடுப் பேர்வழி என்றும் தூற்றப்பட்டவர். அவருக்கு பத்தொன்பது வயது ஆகியிருக்கும் போதே அவரை போலந்து மன்னனான ஃப்ரெடெரிக் அகஸ்டல் தனது அரசவைக்கு உடனே வருமாறு ஆணையிட்டான்.  மூல உலோகங்களை உடனே தங்கமாக மாற்றித் தருமாறு அவன் பாட்கருக்கு ஆணையிட்டான். ஆனால் அப்போது நாட்டில் நடந்த கலவரத்தால் பாட்கர் நாட்டை விட்டே தப்பி ஓடலாமா என்று நினைத்தார். ஆனால் அப்படி தப்பி ஓடும் போது அவரைக் கைது செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். மீண்டும் உடனடியாக அனைத்துப் பொருள்களையும் தங்கமாக மாற்றித் தருமாறும் இல்லையேல் அவரது தலை துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

ஆனால் மன்னன் சற்று தாராள மனம் உடையவன் என்பதால் அவர் கேட்ட படி கால அவகாசம் தந்தான். இந்தக் கால அவகாசம் என்பது பல ஆண்டுகளுக்கு நீடித்தது.

 1709 ஆம் ஆண்டு வந்தது. தங்கத்தை அவர் உருவாக்கவில்லை என்றாலும்வெள்ளைத் தங்கத்தை (White Gold) உருவாக்கிக் காட்டினார்.

 

வெள்ளைத் தங்கம் என்பது சீனாவில் போர்செலெயின் Porcelain) எனப்படும் பீங்கான் ஆகும்.

 

     இதை எப்படித் தயாரிப்பது என்பதை சீனர்கள் மிக மிக இரகசியமாகப் பாதுகாத்து வந்தனர். ஆயிரத்தி முன்னூறுகளில் பீங்கான் ஐரோப்பாவை எட்டிப் பார்த்தது. அது அங்கு தங்கத்தை விட மிக அதிக விலை மதிப்புடையதாக கருதப்பட்டது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்தால் மட்டுமே அது கிடைக்கும் என்ற நிலை இருந்ததால் அது கிடைப்பதும் கூட அரிதானது. ஆகவே அதன் மதிப்பு இன்னும் உயர்ந்தது. இதன் காரணமாக அதை மக்கள் வெள்ளைத் தங்கம் என்று கூறலாயினர்

 

 

இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டுமென்று பல நூற்றாண்டுகளாகப் பலரும் ஐரோப்பாவில் முயற்சி செய்து வந்த நிலையில் தான் இதை பாட்கர் உருவாக்கிக் காட்டினார். அவருடன் விஞ்ஞானியான எஹ்ரென்ப்ரைடு வால்தெர் (Ehrenfried Walther Von Tschirnhaus) இணைந்து முதலில் சிவப்பான கனமான ஒரு பொருளை உருவாக்கிக் காட்டினார். பின்னர் சீனாவில் இருப்பது போலவே பீங்கானை உருவாக்கிக் காட்டவே மன்னன் மிகவும் மனம் மகிழ்ந்தான். தங்கத்திற்கு அடுத்தபடியான ஒரு பொருளை உருவாக்கியதால் பாட்கர்  உயிர் பிழைத்தார்.

 

 

ஹென்னிக் ப்ராண்ட் (Hennig Brand)

 

    ஜெர்மனியைச் சேர்ந்த ஹென்னிக் ப்ராண்ட் தங்கத்தைக் கண்டு பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் கண்டு பிடித்ததோ பாஸ்பரஸை. 1630 ஆண்டு பிறந்த ப்ராண்ட் எந்த உலோகத்தையும் தங்கமாக மாற்றுவது எப்படி என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஜெர்மனி ராணுவத்தில் சிறிது காலம் பணி புரிந்த அவர் ஒரு பணக்காரப் பெண்மனியை மணந்தார். இரஸவாதக் கலையில் ஈடுபட்ட அவர் முதலில் கண்ணாடி தயாரிப்பதில் முனைப்புடன் இருந்தார்.

 

 

      முதல் மனைவி இறக்கவே, இன்னொரு பணக்காரப் பெண்மணியை மணந்து அவரது மகனை லாபரட்டரியில் தனக்கு உதவி புரிய அழைத்தார். அவரது ஒரே முக்கியக் கொள்கை நீர் தான் உயிர் வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதே. நீரில் பல அபூர்வமான மர்மமான குணாதிசயங்கள் அடங்கி இருப்பதாக அவர் கருதினார். ஆகவே அந்த நீரை மனிதன் அருந்தி அது மனித உடலில் சேரும் போது இன்னும் அதிக சக்தி வாய்ந்ததாக ஆகும் என்று அவர் நம்பினார்.

ஆகவே தனது ஆராய்ச்சியில் அவர் சுமார் 1500 காலன் (5600 லிட்டர்) சிறுநீரைச் சேகரித்தார்.

 

 

எப்படி இவ்வளவு பெரிய அளவில் அதைச் சேகரித்தார் என்பது இன்று வரை ஒரு விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது!

பீரை அதிகமாகக் குடிக்கும் நபர்களாகப் பார்த்து அவர்களின் சிறு நீரை அவர் சேகரித்தார் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில் பீர் குடித்தவர்களின் சிறு நீர் சற்று பொன்னிறத்தில் இருக்கும் என்ற காரணமும் கூறப்படுகிறது.

 

 

ஆனால் அதை வைத்து அவர் என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

 

 

ஒன்று, சோதனைகளில் அதைக் காய்ச்சி இருக்க வேண்டும் அல்லது சூரிய வெப்பத்தில் அதை ஆவியாக்கி இருக்க வேண்டும். இப்படி சிறுநீரைச் சுத்தப்படுத்தியபோது மிஞ்சி

இருந்தது வெள்ளை நிறப் பொடி. அதை காற்றில் காண்பித்த போது அது பற்றி எரிந்தது. தான் தங்கமாக ஆக்கும் சிந்தாமணிக் கல்லைக் கண்டுபிடித்து விட்டதாகவே ப்ராண்ட்  எண்ணினார்.

 

 

அதற்கு வெளிச்சம் தரும் பொருள் என்ற அர்த்தத்தில் பாஸ்பரஸ் என்று பெயரிட்டார்.

இன்றும் கூட தீப்பெட்டியில் திக்குச்சியை எடுத்து உரசி தீயை உருவாக்கும் அனைவரும் அதற்குக் காரணகர்த்தர் அவரே என்று அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நல்லவேளையாக பாஸ்பரஸை உருவாக்க அவர் பாணியில் இன்று சிறுநீர் தேவைப்படாமல் மாற்றுப் பொருள்களை வைத்து பாஸ்பரஸை உருவாக்குகிறோம்.

இப்படி இரஸவாதக் கலையில் ஈடுபட்டோரால் பல நல்ல புதிய கண்டுபிடிப்புகளும் ஏற்பட்டன.

 

ஈயத்தை அல்லது எந்த ஒரு உலோகத்தையும் தங்கமாக மாற்றுவது எப்படி என்பதை உலகில் இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் ஆராய்ந்து வருகின்றனர்.

இரஸவாதக் கலைக்கென நூற்றுக் கணக்கில் இணைய தளங்கள் உண்டு.

 

 

     குறிப்பிடத் தகுந்த ஒரு ஆராய்ச்சியாளராக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடம் மக்லீன் (Adam Mclean) திகழ்கிறார்.தங்கமாக மாற்றும் கலை சம்பந்தமான நூல்களின் 46 தொகுதிகளை வெளியிட்டிருப்பது இவரது தனிச் சிறப்பு. சுமார் 1083 அரிய நூல்களை – மிகப் பழங்காலத்திலிருந்து இன்று வரை உள்ள நூல்களை – இவர் சேர்த்து வைத்துள்ளார். இவர் தரும் விவரங்கள் மிக சுவாரசியமானவை. http://www.Alchemywebsite.com என்றே தனது இணையதளத்திற்கு இவர் பெயர் சூட்டியுள்ளார்.

 

    தங்கமான விஷயம் பற்றிப் பேச காலமும் போதாது; எழுதப் பக்கங்களும் போதாது. இந்தக் கட்டுரைத் தொடரில்  இரஸவாதக் கலை பற்றிய முக்கிய  குறிப்புகள் சிலவற்றைப் பார்த்த மகிழ்ச்சியுடன் இதில் ஆர்வமுள்ளவர்கள் மேலும் பல நூல்களைப் படித்து ஆய்வைத் தொடரலாம்.

  இத்துடன் இந்த அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 28-3-2014 மற்றும் 4-4-2014 இதழ்களில் வெளியான- அத்தியாயங்கள் 161,162 ஆகியவற்றில் மயக்கும் தங்கமும் வியக்கும் மனிதரும் என்ற கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களின் தங்க மோகம் மற்றும் தங்க வேட்டை பற்றிய சுவாரசிய தகவல்களை மீண்டும் படித்து மகிழலாம்

          தங்க ரகசியம் தொடர் நிறைவடைகிறது.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . ..

 

பிரபல விஞ்ஞானியான ஆப்ரஹாம் ஃப்ளெக்ஸனர் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வன்ஸ்ட் ஸ்டடியின் டைரக்டராக இருந்தார். அவரைப் பற்றியும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனைப் பற்றியும் ஏராளமான சுவையான சம்பவங்கள் உண்டு. அவற்றில் ஒன்று இது:

ஒரு முறை ஐன்ஸ்டீன் கையில் ஒரு தடியுடன் இன்ஸ்டிடியூட்டிற்கு வந்தார். முந்தைய நாள் இரவில் அவர் காலில் முன் பகுதியில் காயம் பட்டிருந்தது.

“இது போல ஐந்தாறு முறை ஆகி விட்டது. அறையில் இருட்டில் நடந்ததால் வந்த வினை இது என்று ஆதங்கத்துடன் ஐன்ஸ்டீன் ஃப்ளெக்ஸனரிடம் கூறினார்.

“இதில் மிக மோசமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு முறையும் காலில் எலும்பு எதுவும் முறியவில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள எக்ஸ்ரே வேறு எடுக்க வேண்டியதாய் இருக்கிறது என்று அங்கலாய்த்தார் ஐன்ஸ்டீன்.

 

 

ஃப்ளெக்ஸனர் ஐன்ஸ்டீனை நோக்கி, “ ஆமாம், அறையில் விளக்கைப் போட்டுக் கொள்ள வேண்டியது தானே என்று சாதாரணமாகக் கேட்டார்.

 

“அட, இது எனக்குத் தோன்றவில்லையே! என்று வியப்புடன் கூவினார் ஐன்ஸ்டீன்!

****