மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் எடை கூடுகிறதா? (Post No.4085)

Written by S NAGARAJAN

 

Date: 16 July 2017

 

Time uploaded in London:- 5-54 am

 

 

Post No.4085

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

திருநெல்வேலியிலிருந்து திரு ஆர்.சி.ராஜாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஹெல்த்கேர் மாத பத்திரிகையில் ஜூலை 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புதிய மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் உங்க உடலின் எடை திடீரென்று கூடுகிறதா?

ச.நாகராஜன்

ள்﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽ம்பிதவtsRSதிடீரென்று உடல் எடை கூடுகிறதே என்று கவலைப்படுபவர்களில் ஒருவர் நீங்கள் என்றால் உடனடியாக நீங்கள் ஏதேனும் மருந்துகளை உட்கொள்ள ஆரம்பித்தீர்களா என்பதைச் சரி பார்க்க வேண்டியதும் அவசியமாகிறது.

 

ஆம், சில மருந்துகள் உடலின் எடை கூடுவதற்குக் காரணமாக அமைகின்றன. பக்க விளைவாக உடல் எடையைக் கூட்டும் மருந்துகளைப் பற்றிய கவனம் தேவை.

On Planet Pluto

எடை குறைவாக இருந்தால், பரவாயில்லை சரி என்று விட்டு விடலாம்.ஆனால் ஏற்கனவே எடை கூடுதலாக இருந்தால் உடலின் எடை இன்னும் கூடுவது அபாயத்தில் அல்லவா முடியும்!

 

சிலருக்கு மாதத்தில் 5 முதல் 10 கிலோ வரை எடை கூடி விடுகிறது. டாக்டர்கள் குறிப்பிட்ட மருந்துகளை அவர்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தால் அவர்களின் நிலை என்னவாகும்?

 

பல ஸ்ட்ராய்ட் மருந்துகள் (Steroid Drugs) உங்களுக்குப் பசி உணர்வைத் தூண்டி விடுகிறது. அதே போல மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்குத் தரும் மருந்துகள் கூட – மனச்சோர்வு, schizophrenia போன்ற வியாதிகளுக்குத் தரப்படும் மருந்துகள் கூட – உடலின் எடையை அதிகரிக்கச் செய்யும்.

முதலில் இந்த மருந்துகள் பசி உணர்வைத் தூண்டுவதால் அதிகம் சாப்பிடத்  தோன்றும். இதன் விளைவாக உடலின் எடை கூடும். சில மருந்துகளோ உடலில் கலோரியை மிக மெதுவாகச் செலவழிக்க வைத்து உடல் கூற்றையே மாற்றும். இன்னும் சில மருந்துகளோ சர்க்கரைச் சத்தையும் சில ஊட்டச் சத்துகளையும் அவற்றை உறிஞ்சுவதிலும் சேமிப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தி அதன் விளைவாக உடலின்

எடையை அதிகரிக்கச் செய்யும்.

உங்களுக்கு சுவாசம் விடுவதில் சில மருந்துகள் சிரமத்தை ஏற்படுத்தினால் இயல்பாகவே நீங்கள் உடல்பயிற்சியை செய்ய விரும்ப மாட்டீர்கள். இதன் விளைவாகவும் கூட உடல் எடை கூடக் கூடும்.

 

இன்னும் சில மருந்துகளோ நீரை உடலில் அப்படியே தங்கச் செய்யும். அதன் விளைவாக உடல் எடை கூடலாம். உடலில் கொழுப்பு சக்தி அதிகம் இல்லை என்றாலும்  உடலின் எடையை இந்த நீர் அதிகரித்தே காட்டும்! இன்னும் சில மருந்துகளைப் பற்றி ஆய்வாளர்களே அவை ஏன் எடையைக் கூட்டச் செய்கின்றன என்பதை அறியாது  தொடர்ந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள்னர்.

உடலின் எடையைக் கூட்டும் மருந்துகளின் பட்டியல் இதோ:-

டயபடீஸ் நோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் இன்சுலின், Thiazolidinediones, Sulfonylureas போன்றவை

ஆன்ட்டி சைகாடிக் (Antipsychotic)மருந்துகள் எனப்படும் Haloperidal, Clozapine, Lithium போன்றவை

Anttidepressant drugs எனப்படும் மனச்சோர்வை அகற்றும் மருந்துகளான amitriptyline, paroxetine மற்றும் sertraline போன்றவை

 

வலிப்பு நோய்க்கான Valproate, carbamazepine போன்றவை

ஸ்ட்ராய்ட் ஹார்மோன் மருந்துகளான prednisone அல்லது குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள்

பீட்டா ப்ளாக்கர்ஸ் (Beta –blockers) போன்ற ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள்

 

 

ஒரு முக்கியமான விஷயம்; இங்கு குறிப்பிடப்படுள்ள இவை அனைத்துமே உடல் எடையைக் கூட்டும் மருந்துகள் என்பதில்லை. உதாரணமாக metformin என்ற டயாபடீஸுக்கான மருந்து உடல் எடையைக் கூட்டுவதற்கு பதிலாக எடையைக் குறைக்கவும் கூடும். மைக்ரேன் மற்றும் இழுப்புக்கான மருந்தான Topiramteம் கூட ஒருவரின் உடல் எடை இழப்பதற்கான காரணமாகக் கூடும். ஆகவே முடிவெடுப்பதில் கவனம் தேவை.

ஒருவரின் எடை கூடுகிறது என்பதற்கு பல காரணங்கள் உண்டு

 

ஒருவர் எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட மருந்து, அவரது வயது போன்றவற்றைச் சொல்லலாம்

முதலில் டாக்டரிடம் சென்று உடல் எடை கூடுவதைச் சொன்னவுடன் அவர் பல்வேறு காரணங்களைப் பகுத்து ஆராய்வார்.

 

இப்போது உட்கொள்ளும் மருந்து தான் காரணமெனில அவர் வேறு ஒரு மாற்று மருந்தை உட்கொள்ளுமாறு ஆலோசனை கூறலாம்.

 

அதே மருந்து தான் உங்கள் வியாதியைக் குணப்படுத்த தேவை எனில் அதன் உட்கொள்ளும் அளவை அவர் குறைக்கக் கூடும்.

 

சில வகையான கான்ஸர்கள் மற்றும்

உளவியல் ரீதியிலான வியாதிகள் போன்றவற்றில் மருந்துகளை மாற்ற முடியாத சூழ்நிலையில் டாக்டர் இப்படிப்பட்ட முடிவை பரிந்துரைக்கலாம்.

ஒரு மருந்தை உங்கள் டாக்டர் பரிந்துரைக்கும் போது அவரிடமே இதன் பக்க விளைவாக உடல் எடை கூடுதல் போன்றவை ஏற்படுமா என்று முதலிலேயே கேட்டுத் தெளிவு பெறலாம்.

நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள், உடல் பயிற்சியை மேற்கொள்வது போன்றவற்றால் உங்கள் எடையை எப்பொழுதும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது சாத்தியம்.

அவசரப்பட்டுத் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்து ஒரு முடிவை எடுப்பதோடு தொடர்ந்து உங்கள் எடை மீது கவனம் வைப்பது சாலச் சிறந்தது.

 

****

 

 

 

மறைந்திருக்கும் ஆற்றல்-2 (Post No.4079)

Written by S NAGARAJAN

 

Date: 14 July 2017

 

Time uploaded in London:- 6-01 am

 

 

Post No.4079

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

யோகிகளின் ஆற்றல்

 

மறைந்திருக்கும் ஆற்றல் : அலெக்ஸாண்டர் கானானின் புத்தகம் – 2

ச.நாகராஜன்

 

 

அலெக்ஸாண்டர் கானானின் ‘தி இன்விஸிபிள் இன்ஃப்ளூயன்ஸ் (The Invisible Influence): Alexander Cannon ) என்னும் புத்தகம் பளீர் பளீரென ஹிந்துக்களின் அபாரமான ஆன்மீக மற்றும் அமானுஷ்ய விஷயங்களின் மீதான விவரங்களைத் தருகிறது, புகழ்ந்து தள்ளுகிறது!

 

      அவர் முதல் அத்தியாயத்திலேயே தெளிவாக இப்படிக் கூறுகிறார்:

 

The science of Hypnotism and the Art of Telepathy, The Master of Destiny, date back more than three thousand years. The Aryan Hindoos devoted centuries to unraveling the secrets of the control of the human mind, and to divulge those secrets meant more than the  forfeiture of life itself. They realized that human intelligence is frail and finite, but life infinite; that to be forewarned is to be fore-armed. They knew that every moment of one’s life has to be accounted for; that they must lean on no one, yet not stand aloof; that rust destroys more than use. Their philosophy was and is one of deeds, not words; they understood that impossible is the adjective of fools; fear is the proof of a degenerate mind; speech is silvern, silence is golden; that one must be master of his own faculties and slave to none of his desires; that as a man thinketh in his heart, so will he become, and that every action is the result of preconceived idea. They taught that a great character founded on the living rock of principle, is a fact, not a solitary phenomenon, to be at once perceived, limited, and described. It is a dispensation of Providence designed to have not merely an immediate but a continuous, progressive, and never-ending agency. Such a character survives the man who possesses it, and leaves its imprint not only upon the sands of time,  but upon eternity.

 

These Hindoo adepts were a cultivated sect when Western people were almost barbaric. Music and all the refinements of taste, architecture and the like were in exquisite development when England was ruled by Boadicea, and had the Druids as the heads of their religious faith. These adepts of a Hindoo religious sect not only knew the secrets for the government and control of the mind of man, but they also held sway over the animal kingdom.

 

 

 

தெள்ளத் தெளிவாக ஒரு ஆங்கிலேயர் இப்படி அழகுறச் சொல்வதைப் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைகிறது. சாதாரணமாக ஹிந்து தத்துவங்களை இழித்தும் பழித்தும், திரித்தும், திருத்தியும் கூறுவது மேலை நாட்டோரின் இயற்கைக் குணம்.

 

மாறாக மேலை நாட்டினர் காட்டுமிராண்டிகளாக இருந்த போது மிகவும் உயரிய நாகரிகம் படைத்தவர்களாக ஹிந்துக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெளிவு படக் கூறுகிறார் அலெக்ஸாண்டர் கானான்.

 

தனது புத்தகத்தில் ஏராளமான சுவையான சம்பவங்களை கானான் கூறுகிறார்.

 

ஒரு சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.

ஒரு பெண்மணியின் கணவன் மரணப்படுக்கையில் இருந்தான். அந்தப் பெண்மணிக்கு குழந்தைகளே கிடையாது. அவளது கணவன் இறந்தவுடன் அவனது சொத்து முழுவதும் கணவனுடைய தம்பிக்குச் சேர கணவன் உயில் எழுதி வைத்து விட்டான்.

இதை அறிந்த அந்தப் பெண்மணிக்கு ஒரு தீய எண்ணம் வந்தது.

 

அவள் ஒரு மந்திரவாதியை அணுகினாள். ஆபிசார பிரயோகத்தினால் அவனை எப்படியாவது கொல்ல வேண்டுமென்றாள். அவனும் ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தால் அவனைக் கொல்ல சம்மதித்தான்.

இந்தச் செய்தி கணவனின் தம்பிக்கு எட்டியது. பயந்து போன அவன் ஒரு நல்ல மகானை அணுகினான். அவர் அவனுக்கு பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறியதோடு ஒரு மந்திரத்தை உபதேசித்து, இரவு முழுவதும் அதை இடைவிடாமல் சொல்லுமாறு கூறினார்.

 

ஒரு கணம் கூட விடாமல் சொல்ல வேண்டும்; இரவில் தூங்கி விடக் கூடாது என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

மகானின் அருளுரையை ஏற்ற அவன் மந்திரத்தை உச்சரிக்கலானான்.

அன்று நள்ளிரவு ஒரு பெரிய ராட்ஸச உருவம் ஒரு கறுப்புக் குதிரையின் மீது வந்து அவன் முன் தோன்றியது.

 

 

அந்த உருவத்தின் கையில் ஒரு பெரிய கத்தி இருந்தது.

அதை அந்த உருவம் கத்தியை ஓங்கியவாறே வந்து அவனை வெட்ட வந்தது.

மந்திர உச்சாடனத்தை அவன் நிறுத்தவில்லை. அருகில் நெருங்கிய உருவத்தால் ஓங்கிய கையை கீழே இறக்கி வெட்ட முடியவில்லை.

 

 

மூன்று மணி நேரம் நீடித்த இந்த முயற்சி தோல்வி அடைந்தது; அந்த உருவமும் அங்கிருந்து அகன்றது.

மறு நாள் தீய மந்திரத்தை ஏவிய ,மந்திரவாதி இறந்து கிடப்பதை அனைவரும் கண்டனர்.

நல்ல மந்திரம் நல்லவரைக் காப்பாற்றும். தீய மந்திரம் ஏவியவனையே சூழ்ந்து அவனுக்கு கெடுதி விளைவிக்கும்.

 

   இப்படி பல சுவையான நடந்த சம்பவங்களை சரி பார்த்து இந்தப் புத்தகத்தில் கானான் தந்துள்ளார்.

***

  இன்னும் இந்தப் புத்தகம் தரும் சில கருத்துக்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

 

 

ஒலியின் மஹிமை: ஆச்சரியமூட்டும் புதிய தகவல்! (Post No.4064)

Written by S NAGARAJAN

 

Date: 9 July 2017

 

Time uploaded in London:- 5-51 am

 

 

Post No.4064

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

மந்திர மஹிமை

ஒலியின் மஹிமை: விஞ்ஞானம் தரும் ஆச்சரியமூட்டும் புதிய தகவல்!

 

ச.நாகராஜன்

 

விஞ்ஞானம் முன்னேற முன்னேற எந்த மதம் பயந்தாலும் இந்து மதம் பயப்படாது.

 

அது கூறும் ஒவ்வொரு கொள்கையையும் விஞ்ஞானம் ஆராய்ச்சி மூலம் உறுதிப் படுத்திக் கொண்டே வருகிறது.

இதைக் கடந்த இருநூறுக்கும் மேலான ஆண்டுகளாக உலகம் பார்த்து வருகிறது.

 

‘ஹிந்து’ பத்திரிகையின் 27-6-2017 இதழ் வெளியிட்டுள்ள ஒரு புதிய செய்தி ஒலியின் மஹிமையை புதிய கோணத்தில் நம்மைப் பார்க்க வைக்கிறது.

‘Body Beats: Using Sound to spot Cancer’ – Passive Elastography is a technique that can non-invasively study tumours deep inside the body

 

 

என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி நம்மைக் கவர்கிறது.

ஒவ்வொரு உடலிலிருந்தும் இயற்கையாக ஒலி வெளி வருகிறதாம். அதை உரிய முறையில் பயன்படுத்தி கான்ஸர் இருக்கிற்தா இல்லையா என்பதை அறிய முடியுமாம்.

செய்தியின் சில பகுதிகளை மட்டும் இங்கு பார்க்கலாம். முழுச்செய்தியையும் பத்திரிகையில் படிக்கலாம்.

 

PRESS TRUST OF INDIA

LONDON

 

Natural sound waves made by the human body can be used to diagnose cancers and other diseases non-invasively at the earliest stages, scientists say.

 

Elastography, sometimes referred as ‘seismology of the human body’, is an emerging technology used to enhance medical ultrasound imaging.

 

The technology is used to measure the elasticity of biological tissue to diagnose cancer or liver disease more accurately, researchers said.

 

செய்தியின் கடைசி பகுதி தரும் தகவல் இது:-

 

The idea , as in seismology, is to take advantage of shear waves naturally present in the human body due to muscles activities to construct a shear elasticity map of soft tissues,” Mr Catheline said. ”It is thus a passive elastography approach since no shear wave sources are used,” he said.

 

Passive elastography is compatible with slow imaging devices.

 

   ஒலி அலைக்குச் சக்தி உண்டு. அதை முறைப்படுத்திச் சொல்வதால் உடல் இயக்கம் மேன்மையுறும்; ஆன்மீகத்தில் உயரிய நிலையைப் பெறலாம்.அவை பிரபஞ்சத்தின் வெவ்வேறு இயக்கங்களை மந்திர சக்தியின் ஒலி அமைப்புக்கேற்ப இயங்கச் செய்யும் என்று நமது முன்னோர்கள் கூறி வந்திருக்கின்றனர்.

 

வாயிலிருந்து வெளியாகும் ஒலியை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை நுணுக்கமாக பாணிணி ஆராய்ந்திருக்கிறார்.

 

ஒலியின் மன்னன் என்று அவரைச் சொல்லலாம்.

யாக்ஞவல்ய ஸ்மிருதி, ஒரு வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அழகுறச் சொல்கிறது.

 

 

யதா வ்யாக்ர ஹரேத் புத்ரம்

தஷ்ட் ராபிர்ன  பிதாயேத்

பிதா பதன் பேதாப்யாம்

தத் வர்ணம் ப்ரயோஜயேத்

 

“ஒரு பெண்புலியானது எப்படி தன் குட்டியைத் தன் வாயில் கவ்வி அதன் பற்களால் கடியுறாதபடி எடுத்துச் செல்கிறதோ அதே போல ஒருவன் ஒரு வார்த்தையை உச்சரிக்க வேண்டும்

இப்படி உச்சரிப்பைக் கூடச் சரியாகச் சொல்லும் உத்தியையும் அது தரும் பலனையும் உலகின் வேறு எந்த மொழியும் அறிவியல் ரீதியில் சொன்னதில்லை.

 

சம்ஸ்கிருத ஒலி மஹிமையோ தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது

 

22-3-2003 தேதியிட்ட ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில் (கல்கத்தாவிலிருந்து வெளி வரும் பத்திரிகை இது) எந்த ஒலியும் 360 டிகிரி சுழற்றப்பட்டால் அது நோயாளியின் நோயைக் குணமாக்க உதவும் என்ற செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

 

செய்தியின் ஒரு பகுதி இது:

 

Any sound, if rotated 360 degrees, can nurse chronically ill patients back to health,”pasycho-physicist” Sajal Bandopadhyay claims.

 

In a major breakthrough , Bandopadhyay had last year succeeded in rotating sound.  A team of psychologists had been researching the therapeutic potential of this discovery. Under the leadership of Dr Arnab Banerjee, they had tried out the rotating sound on patients at the Sevak Hospital.

 

 ஒலி சுழற்சி சிகிச்சையானது 4000 நோயாளிகளில் 99 சதவிகிதம் நோயாளிகளிடம் வெற்றியைத் தந்திருக்கிறது என்று இந்தச் செய்தி கூறுகிறது.

 

நாளுக்கு நாள் ஒலி பற்றிய புதிய அறிவியல் செய்தியைப் பெற்று வருகிறோம்.

 

ஒலிக்கு மஹிமை உண்டு என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டி வருகின்றன.

 

மந்திர சக்தி உடல் மற்றும் ஆன்மாவை உயர்த்த வல்லது என்ற நம்பிக்கையை இந்தச் செய்திகள் வலியுறுத்துகின்றன.

ஒலியின் மஹிமையை உலகிற்கு உணர்த்திய ஒரே மதம் ஹிந்து மதம் என்பதில் பெருமை அடைகிறோம்!

***

செயற்கை அறிவின் தலை நகரம் சியோல்! (Post No.4061)

Written by S NAGARAJAN

 

Date: 8 July 2017

 

Time uploaded in London:-  10-20 am

 

 

Post No.4061

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

7th year 19th article (no 331) published in Bhagya weekly dated 23-6-2017 in Ariviyal thuligal serial

அறிவியல் துளிகள்

 

செயற்கை அறிவின் தலை நகரம் சியோல்!

ச.நாகராஜன்

 

இனி உலகத்தில் பேசிக் கொண்டே உலகை வலம் வரும் ரோபாட்டுகளின் வருகையைப் பார்க்க முடிகிறது. கண்டுபிடிப்புகளின் பொற்காலம் இது! – டேவிட் ஹான்ஸன்

 

எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க விரும்புபவர்கள் உடனடியாக தென் கொரியாவில் உள்ள சியோல் நகரத்திற்குச் செல்லலாம்.

 

வாழ்க்கையே ஒரு மாயாஜாலம் போலத் தான் இருக்கும். ரஷியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க எழுத்தாளரான கேரி ஷ்டின்கார்ட் (Gary Shteyngart) பல விருதுகள் பெற்றவர். அவர் என்ன தான் இப்படி ஒரு புகழ் சியோலுக்கு இருக்கிறது என்று பார்க்க அங்கே போனார்.

தமிழில் உள்ள எல்லா பூக்களும் அவரை முழுக அடித்து விட்டன.

 

திகைப்பு.பிரமிப்பு.வியப்பு.மலைப்பு. இத்தனை ‘பு’க்கள் போதாதா அவர் கைவண்ணத்தைக் காட்ட. மீண்டும் சியோலைக் கண்டுபிடிக்கலாம் என்று ஒரு கட்டுரையை எழுதி விட்டார்.

அதில் அவர் குறிப்பிடும் பல செய்திகள் வியப்பை ஊட்டுகின்றன.50 வருடங்களுக்கு முன்னர் வட கொரியாவுட்ன் போரிட்டு அதன் காரணமாக உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக ஆனது தென் கொரியா. இன்றோ.. அறிவியலில் ரொபாட் துறையிலும், ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவிலும் உலகின் தலை நகராகத் திகழ்கிறது! நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், மதுரை உள்ளிட்ட வெகு சில் நகரங்களை உலகின் தூங்கா நகரங்கள் என்று கூறுவர். அப்படி ஒரு தூங்கா நகரமாகத் திகழ்கிறது இன்றைய சியோல்.

 

இரண்டரை கோடி பேர் சியோலில் வாழ்கின்றனர். அதாவது தென் கொரிய நாட்டில் உள்ள இரண்டு கொரியர்களுக்கு ஒருவ்ர் சியோல் அல்லது அதன் சுற்றுப்புறப் பகுதியில் வாழ்கின்றனர்.

வீடுகள் அதி நவீன முறையில் கட்டப்பட்டுள்ளன. ஒரு பாத்ரூம் டாய்லெட்டை எடுத்துக்  கொண்டால் அங்கு கண்ட்ரோல் பேனலில் மட்டும் இருபது பட்டன்கள் உள்ளன. பாத்ரூமைப் பயன்படுத்த எதை அமுக்குவது என்று தெரியாமல் நியூயார்க் வாசி கூடத் திகைக்கும் நிலை!

 

எல்.கே.ஜி. படிக்கும் குட்டிக் குழந்தைகள் கூட -GO-கோ- என்ற அதி நவீன புத்திசாலித்தனமான விளையாட்டை விளையாடுகின்றன.

அங்கு குடியிருப்பு வீடுகளினுள்ளே கார் சென்றால் அதன் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கார் வந்து விட்டது என்பதை அறிவிக்கிறது

வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்னர் வெளியில் கால நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிவிக்கும் கருவி ஒன்று, குடையை எடுத்துக் கொண்டு செல்லுங்கள், மழை வரப் போகிறது என்று அன்பான அறிவுரையைப் பகர்கிறது!

சமையலறையிலோ உலகின் அதி ருசியான பண்டத்தை சமைக்கும் விதத்தை டெமோவாகக் காட்டுகிறது இன்னொரு கருவி.

 

வீடுகள் இருக்கும் பகுதிகளில் நுழையும் போதே வந்திருப்பது யார் என்பதை அறிந்து கொள்ளும் முகத்தை அறியும் கருவிகள் தேவையானவர்களை மட்டுமே உள்ளே விடுகின்றன.

வீட்டின் சொந்தக்காரர்கள் கையில் ஒரு வாட்ச் போன்ற வளையத்தைக் கட்டிக் கொள்கின்றனர். அது தான் எல்லாமே- கதவைத் திறக்க, லிப்டை வரச் சொல்ல, வீட்டில் உள்ள குடும்பத்தினர் எங்கு இருக்கிறார் என்பதை அறிய!

 

வீட்டிற்கு பெற்றோர்கள் வந்தால் அவர்களை ‘முகம் பார்த்து” (ஃபேஷியல் ரெகக்னிஷன்) உணரும் கருவிகள்  அவர்களது போட்டோக்களை வீட்டில் உள்ளவர்களுக்கு அனுப்புகிறது.

 

காரை வரவழைப்பது, கதவைத் திறப்பது, வந்தவர் யார் என்பதைத் தெரிந்து கொள்வது எல்லாமே சுலபம். வயர்லெஸ் ஆபரேஷன்  மூலமாகத் தான்!

ரேமியான் என்ற கட்டிடக் கம்பெனி கட்டும் வீடுகளுக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் 14 விண்ணப்பங்கள் காத்திருக்கிறதாம். விலையோ உலகின் அதிக விலையைக் கொண்டிருக்கும் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள வீட்டின் விலை தான்!

அருகில் அமர்ந்திருப்பவர் 18 வயது பேரழகி என்று அசப்பில் பார்த்து நிர்ணயித்து விட்டு, அவர் எழுந்திருக்கும் போது பார்த்தால் தான் அவருக்கு வயது ஐம்பதுக்கும் மேல் என்பது தெரிய வரும். அப்படி ஒரு இளமைத் தோற்றம் எப்படி வருகிறது?

 

உலகின் பிளாஸ்டிக் சர்ஜரியின் தலை நகரம் என்று சியோலுக்கு ஒரு செல்லப் பெயர் உண்டு. அவ்வளவு பேரும் இளமையாக இருக்கலாம்! கண் இமைகளுக்கு சர்ஜரி, தொங்கும் கழுத்துகளுக்கு சர்ஜரி – இப்படி உடலை இளமையாக்கும் விந்தைகள் இங்கு  மட்டுமே உண்டு!

செயற்கை அறிவின தலை நகராக இதை பிரகடனப்படுத்துவது இங்குள்ள ஹ்யூபோ என்னும் ரொபாட் தான்.

 

அமெரிக்காவின் எம் ஐ டி மற்றும் நாஸா போன்ற நிறுவனங்க்ள் கலந்து கொண்ட போட்டியில் ஹ்யூபோ என்ற ரொபாட் வெற்றி பெற்றுள்ளது. உலகின் அதி உன்னதமான ரோபோவாக போற்றப்படும் ஹ்யூபோவின் புராணமே தனி. அதை அடுத்துக் காண்போம்..
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

 

1887ஆம் ஆண்டு ஸ்வீடன் மற்றும் நார்வேயின் மன்னராக இருந்த இரண்டாம் ஆஸ்கார் (King Oscar II) ஒரு முக்கியமான கணித பிரச்சினைக்குத் தீர்வு காண்பவருக்கு ஒரு  பரிசு தருவதாக் அறிவித்தார்.

 

சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் கிரகங்கள் போன்றவற்றின் பொருள்திணிவும் அவை செல்லும் திசையும் அவற்றின் வேகமும் தெரியும் போது நியூட்டனின் விதிகளைப் பயன்படுத்தி அவை செல்லுகின்ற பாதையைச் சொல்ல வேண்டும் என்றார் மன்னர்.

 

மன்னர் பரிசு அறித்தபின் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அதை வென்றார் பிரான்ஸை சேர்ந்த கணித மேதை ஹென்றி பாய்ன்கேர் (Henri Poincare 1854-1912).

பரிசை வென்ற பின்னர் தான் அவருக்குத் தனது கண்டுபிடிப்பில் ஒரு பெரிய தவறு இருப்பது தெரிய வந்தது. இன்னும் சில வாரங்களில் வரவிருக்கும் மன்னரின் பிறந்த நாளின் போது அவரது கண்டுபிடிப்பு நூல் வடிவில் வர இருக்கிறது. ஒரே குழப்பமாகி விட்டது அவருக்கு. நூலை வெளியிடுவதா அல்லது உண்மையைச் சொல்லி விடுவதா?

 

நல்ல மனிதரான அவர் மன்னரிடம் தன் தவறை ஒப்புக் கொண்டார். பிறகு ஒரு வருடம் கழித்து அவரது நூல் வெளியானது.

 

ஒரு சிறிய காரணமும் கூட மிக பிரம்மாண்டமான விளைவை ஏற்படுத்தும் என்பதை முதலில் கண்டவர் அவர் தான். பின்னால் பட்டர்ஃபிளை தியரி என்று பெரிய அளவில் இது பேசப்பட்டது. இப்படிப்பட்ட சிறிய காரணங்கள் காலநிலை மாற்றம் போன்றவற்றில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் அவர்.

 

கம்ப்யூட்டர்களின் வருகைக்குப் பின்னர் மின்னல் வேகத்தில் கணக்கிடுவது சாத்தியமான போது அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பது தெரிய வந்தது.

 

தனக்குத் தெரியாமலேயே பின்னால் கயால் தியரி (Chaos Theory) என்ற பிரம்மாண்டமான கொள்கைக்கு அவர் அஸ்திவாரமிட்டார்!

நாணயமான ஒரு விஞ்ஞானி பாய்ன்கேர்!

***

 

ஓளி மாசைத் தடுக்க சட்டம் (Post No.4055)

Written by S NAGARAJAN

 

Date: 6 July 2017

 

Time uploaded in London:-  5-20 am

 

 

Post No.4055

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

பாக்யா 30-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

ஓளி மாசைத் தடுக்க உலகில் முதன் முதலில் சட்டம் இயற்றிய நாடு!

ச.நாகராஜன்

“நான் நியூயார்க்கிற்கு வந்து  35வது மாடியில் இருந்த எனது அபார்ட்மெண்டின் ஜன்னலைத் திறந்து பார்த்த போது பனி மூட்டமும் ஒளி மாசும் சேர்ந்திருந்தது. வானத்தில் எனது நட்சத்திரத்தை என்னால் காண முடியவில்லை. ஆகவே அதை பேனாவால் என் மணிக்கட்டில் வரைந்து கொண்டேன். ஆனால் அது அழிந்து கொண்டே இருந்தது.பின்னர் பச்சை குத்தும் பார்லருக்குச் சென்று அதை பச்சை குத்திக் கொண்டேன்” – உலகில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் பிரேஜிலைச் சேர்ந்த பேரழகி சூப்பர் மாடல் ஜிஸ்லி பண்ட்சென்

*

ஓளி மாசு கூட உண்மையில் மாசு தானா? ஆம்! இயற்கை படைத்திருக்கும் அற்புதமான பிரபஞ்சத்தில் விண்ணில் மின்னும் கோடிக்கணக்கான தாரகைகளை நகரிலிருந்து பார்க்க முடியாமல் லட்சக்கணக்கானோரைத் தடுப்பது நகரில் மின்னும் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஏற்படும் ஒளி மாசு தான்!

இயற்கையான சூரியனின் ஒளியும் அது மறைந்த பின்னர் ஏற்படும் இருளும் பல்வேறு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

 

கடல் ஆமைகளுக்கு அதிக ஓளியினால் எங்கு முட்டைகளை இடுவது என்று தெரியவில்லை; விழிக்கின்றன! ஆண் வண்டுகளுக்கோ இன விருத்திக்காக பெண் வண்டுகளுடன் கூட முடியவில்லை. இடம் விட்டு இடம் செல்லும் பறவைக் கூட்டங்களோ வழி தெரியாமல் தவிக்கின்றன.

அதிக ஒளியினால் மனிதர்களும் அவஸ்தைப் படுகின்றனர்.

செக்ஸ் உறவில் ஆர்வமே போய்விடுகிறது. அதிகச் சோர்வு ஏற்படுகிறது. ஏன். தூக்கமின்மையுட்ன சில சமயம் கான்ஸர் வியாதி கூட ஒளி மாசினால் உருவாகிறது.

இருள் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்கிறார் கின்கென்பார்க் என்னும் விஞ்ஞானி. “யாரும் இல்லாத தேசம் போல இருளைப் போக்கி ஒளி மயமாக்குவது நல்லதல்ல’ என்கிறார் அவர்.

நாளுக்கு நாள் இந்த ஒளி மாசு அதிகரித்துக் கொண்டே போவதைக் கண்டு விழித்துக் கொண்ட முதல் நாடு செக்கோஸ்லேவேகியா தான். 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து அனைத்து விளக்குகளும் அது எந்த நோக்கத்திற்காக போடப்பட்டதோ அந்த இடத்திற்கு மட்டும் வெளிச்சம் தந்து இதர இடத்திற்குப் போகாதபடி பாதுகாப்பு ஷீல்டு  எனப்படும் ஃபிக்ஸர்களைப் போட வேண்டும் என்று அது சட்டத்தைப் பிறப்பித்தது.

உலகில் இப்படி ஓளி மாசைத் தடுக்க முதன் முதலில் சட்டம் இயற்றிய செக்கோஸ்லேவிகியாவைத் தொடர்ந்து பல நாடுகளும் இதே போல சட்டங்களை இயற்றின.

ஆனால் 2016இல் நடத்தப்பட்ட ஒரு பெரிய ஆய்வின் படி உலகில் மூன்றில் ஒரு பங்கு மனித இனத்திற்கு வானத்தைப் பார்க்கவே முடியவில்லையாம். பால் வீ தி எனப்படும் மில்கி வே அவர்களுக்குத் தெரிவதே இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 99 விழுக்காடிற்கும் அதிகமான  மக்கள் ஒளி மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதன் முதலில் 1988ஆம் ஆண்டில் இண்டர்நேஷனல் டார்க் – ஸ்கை அசோசியேஷன் (International Dark-Sky Association) உலகின் இருளைப் பாதுகாக்கத் தோன்றியது. ஒளியுடன் இருளையும் பாதுகாக்க இது பாடுபடுகிறது!

சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தவுட்ன் உலகின் பெரு நகரங்கள் அனைத்திலும் ஒளி விளக்குகள் செயற்கை ஒளியை உமிழ்கின்றன.

இருளை நம்பி இருக்கும் தாவரங்களும் பிராணிகளும் இன்னலுக்குள்ளாகின்றன.

உண்மையில் சொல்லப் போனால் உலகமானது சூரியனின் ஒளி-இருள் ஆகிய இந்த இரு நிலைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது! சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரமே பருவ கால நிலைகளைச் சரியாக ஏற்படுத்துகிறது. இயற்கையான சூரிய ஒளி இதற்கு இன்றியமையாதது. இது அதிகமாகவும் கூடாது; குறையவும் கூடாது!

ஆஸ்திரேலியாவில் மட்டும் பத்தொன்பது லட்சத்தி நாற்பதினாயிரம் தெரு விளக்குகள் உள்ளன. ஒவ்வொரு பத்து ஆஸ்திரேலியருக்கும் ஒரு விளக்கு! இதற்காகும் செலவு 2100 லட்சம் டாலர்கள். 115 லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடை இவை வெளிப்படுத்துகின்றன.பூமியை மாசு படுத்துகின்றன!

உலகெங்கும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் நான்கில்  ஒரு பங்கு விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் தான்! தேவையற்ற விதத்தில் விளம்பரங்களுக்கும்  இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும், தொழிலகங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்தப்படும் மின்சாரமோ மிக அதிகம். இத்தாலியைச் சேர்ந்த டெர்னா என்ற நிறுவனம் மாலையில் பகல் நேர வெளிச்சம் அதிகமாக இருந்த நேரத்தில் விளக்குகளைச் சற்று தாமதமாக எரிய விட்டதின் மூலமாக மட்டும் 6452 லட்சம் கிலோவாட் ஹவர் மின்சக்தியைச் சேமித்திருக்கிறது!

 தேவையற்ற விதத்தில் தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான் இடத்தில் ஒளியைப் பரவ விடுவது, தேவைக்கு மேல் மிக அதிக அளவிலான வெளிச்சம்  கொண்ட பல்புகளை எரிய விடுவது, கண்கள் கூசும் விதத்தில் விளக்குகளை எரிப்பது, மிக அதிக பல்புகளின் தொகுதிகளை ஒரே இடத்தில் எரிய விடுவது ஆகியவற்றால் ஒளி மாசு ஏற்பட்டு, அதன் மூலம் விபத்துக்கள், நோய்கள் உள்ளிட்ட பல அபாயங்கள் ஏற்படுகின்றன.

இவற்றைத் தவிர்க்கும் விதத்தில், உலகெங்கும் ஒளி மாசை நீக்க அனைவரும் நடவடிக்கை எடுத்தால்மின்சாரமும் சேமிக்கப்படும், பூமியும் பிழைக்கும்.

முயன்றால் வெற்றி தவிர வேறெதுவும் இல்லை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி லூயி அகாஸிஸ் (Louis Agassiz)  ஐஸ் காலம்  (Ice Age) பற்றிய தனது ஆராய்ச்சியால் மிகவும் பிரபலமானவர்.அவர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நெடுங்காலம் பணியாற்றினார். அவருக்கு அரிய வகை மீன்கள் கிடைத்தால் போதும், மிகவும் சந்தோஷப்படுவார். மீனவர்கள் அனைவருக்கும் தெரியும்,புதிய அரிதான வகை மீன் கிடைத்தால் உடனடியாக் அதை அகாஸிஸிடம் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று.

   ஒரு நாள் அவரது இருப்பிடம் வந்த பிரதம விருந்தினர் ஒருவர்,இது என்ன அகாஸிஸ் மீன் கடை நடத்துகிறாரா அல்லது இது ஒரு ரெஸ்டாரண்டா? என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். போஸ்டனில் அடிமை ஒழிப்பை ஆதரித்துப் போராட்டம் நடத்திய அமெரிக்க செனேடர் சார்லஸ் சம்னர் (Charles Sumner) க்வின்ஸி மார்கெட் என்ற சந்தையில் புதிய ரக மீன் ஒன்றைப் பார்த்தார்.அவ்வளவு தான், அதை வாங்கிக் கொண்டு ஓடோடி வந்து அகாஸிஸிடம் அதைக் காட்டி மகிழ்ந்தார்.

பாரிஸில் அகாஸிஸ்  இருந்த போது நடந்த சம்பவ்ம் இது : ஒரு செல்வச் செழிப்பான சீமாட்டி அகாஸிஸிடம் வந்து,எப்படி இப்ப்டிப்பட்ட ஒரு மேதை மீன்களை வெட்டி ஆராய்ச்சி செய்ய முடியும் என்று தான் ஆச்சரியப்படுவதாகக் கூறினார். அதற்கு அகாஸிஸ், “மேடம், குட்டி மீன்கள் நீந்தி ஓடும் ஒரு நீரோடை அருகில் என்னை வாழ விட்டால், அதை விட வேறு எதுவும் வேண்டாம் என்று அங்கேயே என் வாழ்நாள் முழுவதையும் கழிப்பேன் என்று கூறினார்.

அகாஸிஸ் ஒரு மீன் மேன்MAN!

***

 

செரிங்கட்டி விதிகள்! – 2 (Post No.4044)

 

Written by S NAGARAJAN

 

Date: 2 July 2017

 

Time uploaded in London:-  5-40 am

 

 

Post No.4044

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

16-6-2017 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

செரிங்கட்டி விதிகள்! – 2

ச.நாகராஜன்  

 

 

“நல்ல காடுகளே நமக்கு அறிவை வழங்கியுள்ளன. காடுகளே நம்மை மனிதர்களாக ஆக்கியுள்ளன. இங்கிருந்து தான் நாம் வந்திருக்கிறோம். ஒருவேளை, அதனால் தானோ என்னவோ நாம் செரிங்கட்டி என்னும் இந்த இடத்தின் மீது ஒரு அரிய பாசப்பிணைப்பைக் கொண்டுள்ளோம். இது நமது இளமையின் தேசம் – பாய்ட் நார்டன்

 

இரண்டாவது உலக் மகா யுத்தத்தில் ராணுவத்தில் பணியாற்றிய வால்டர் கனான் (Walter Cannon) என்ற விஞ்ஞானியே “எதிர்த்துப் போராடு அல்லது இடத்தை விட்டு ஓடு” என்ற பொருள் படும் “Fight or Flight” என்ற பொருள் பொதிந்த வாசகத்தை முதலில் உலகுக்கு அளித்தவர்.

 

போரில் காயம் பட்ட வீரர்கள் ஏன் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இறக்கின்றனர் என்பதை ஆராயப் புகுந்தார் அவர்.

காடுகளில் கொல்லப்படும் மிருகங்களில் காணப்படும் அதே விதமான அறிகுறிகளான அதி வேக நாடித்துடிப்பு, பிதுங்கிய விழிகள், உடல் முழுதும் வேர்வை வெள்ளம் ஆகியவற்றை இந்த ராணுவ வீரர்களிடம் அவர் கண்டார்.  நாடித்துடிப்பிற்குப் பதிலாக அவர்களின் இரத்த அழுத்தத்தை அவர் அளக்க ஆரம்பித்தார். அது மிக மிகக் குறைவாக இருந்தது. உடனே சோடியம் பைகார்பனேட்டை அவர்களுக்குத் தர, குறிப்பிடத் தகுந்த நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

 

இந்த ஆய்வுகளால் மனித உடலின் அங்கங்கள் இரட்டை விதமான நரம்பு மண்டலக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதைக் கண்டார்.

 

ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் இப்படிப்பட்ட கட்டுப்பாடு இயற்கையின் அனைத்து இடங்களிலும் உள்ளது.

 

இயற்கையின் கட்டுப்பாடு என்பது சுற்றுப்புறச் சூழல் அமைப்பு, அதில் உயிர் வாழும் உயிரினங்கள் என்ற அனைத்து அம்சங்களிலும் எதிரொலிக்கிறது.

 

இந்த அடிப்படையை வைத்தே விஞ்ஞானிகள் செரிங்கட்டி காடுகளில் தங்கள் ஆய்வைச் செய்து ஆறு விதிகளைக் கண்டனர்.

முதல் மூன்று விதிகளைப் பார்த்தோம். இனி அடுத்த மூன்று விதிகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

 

சிறிய மிருகங்களை பெரிய மிருகங்கள் அடித்துத் தின்பது என்பது அதன் பெரிய உடலாலும் சக்தியாலும் முடிகிறது. 1980லிருந்து 1987 முடிய சிங்கங்களும் நரி முதலிய மிருகங்களும் கொல்லப்பட்டதாலும் கடத்தப்பட்டதாலும் செரிங்கட்டியில் சிறிய மிருக வகைகள் எண்ணிக்கையில் உயர்ந்தன. இதை இடைவிடாது ஆராய்ந்த விஞ்ஞானிகள் சிங்க்ளேர் மற்றும் அவரது சகாக்கள் புதிய விதியைக் கண்டனர்.

 

செரிங்கட்டி விதி எண் 4

 

ஒரு மிருகத்தின் உடல் அளவு அந்த மிருக வகையின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான அம்சம்.

ஒரு மிருக இனத்தின் எண்ணிக்கை குறையும் போது தானாகவே அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. மிக அதிகமாகும் போது அவற்றிற்கான உணவுக்கு வழி இல்லை என்பதால் தானாகவே எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது.

 

 

சிங்க்ளேர் ஒவ்வொரு மிருக இனத்தின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதற்கு ஒப்பீட்டு வரைபடங்கள் தயாரித்து இதைக் கண்டு பிடித்தார். ஆக செரிங்கட்டியின் விதி எண் 5 உருவானது.

 

விதி எண் 5

மிருகங்களின் எண்ணிக்கையானது அதன் அடர்த்தியைப் பொறுத்து உள்ளது.

 

உணவுக்கு ஓரிடத்தில் வழி இல்லை என்னும் போது குறிப்பிட்ட மிருகங்களின் கூட்டம் இடம் விட்டு இடம் மாறுகிறது. விஞ்ஞானி சிங்க்ளேர் இரண்டு லட்சம் வரிக்குதிரைகளும் நான்கு லட்சம் ‘தாம்ஸன் மான்’களும் இப்படி ‘மைக்ரேஷன்’ எனப்படும் இடம் விட்டு இடம் பெயர்தலைக் கண்டு வியந்தார்.

 

ஆக செரிங்கெட்டியின் ஆறாவது விதி உருவானது.

 

 

விதி எண் 6

 

இடம் விட்டு இடம் பெயர்தலானது ஒரு மிருக வகையின் எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது.

டாக்டர் ஆஸ்கார் பாமன் என்ற ஜெர்மானிய விஞ்ஞானி 1892இல் செரிங்கட்டி காடுகளை ஆராய அதனுள் புகுந்தார்.

அன்றிலிருந்து இன்று வரை ஏராளமான சுவையான செய்திகளை செரிங்கட்டி காடுகள் மனித இனத்திற்கு தந்து வ்ருகின்றன.

அதில் இயற்கையின் இயல்பான கட்டுப்பாடு முக்கிய அம்சமாக இலங்குகிறது.

 

இந்த இயற்கை கட்டுப்பாட்டைப் பேணிக் காக்காமல் நமது செயற்கையான வழிமுறைகள் மூலம் இயற்கையைக் கெடுத்து விடக் கூடாது என்பது தான் விஞ்ஞானிகளின் ஒரே வேண்டுகொள்.

 

புவியை வெப்பமயமாக்கல், இயற்கை உயிரினங்களை பணத்திற்காக அழித்தல், கடத்துதல் போன்றவற்றை மனித இனம் விட்டு விட்டால் இன்னும் நூறாயிரம் ஆண்டுகள் இநதக் காடுகள் அழியாமல் வாழும்; மனித இனத்தையும் வாழ வைக்கும்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

கம்ப்யூட்டருக்கு முன்னோடியான  ‘மெகானிகல் எஞ்சினை’ உருவாக்கியவ்ர் சார்லஸ் பாபேஜ் (1792-1871) பாபேஜ் பெரிய மேதை என்பதால் லண்டனில் உள்ள இலக்கிய வட்டத்தில் பெரிதும் மதிக்கப்பட்டார். அங்கு உலகின் புகழ் பெற்ற கவிஞரான ஆல்ஃப்ரட் லார்ட் டெனிஸன் அவருக்கு நெருங்கிய நண்பரானார்.

தனது அருமையான கவிதையான ‘தி விஷன் ஆஃப் சின்’ (The Vision of Sin) என்ற கவிதையில்,  “ஒவ்வொரு கணமும் ஒரு மனிதன் இறக்கின்ற தருணத்தில், இன்னொரு மனிதன் பிறக்கிறான்” (Every moment dies a man, Every moment one is born) என்ற தனது கருத்தை அழகுற கவிதை நயத்துடன் உரிய சந்தத்தில் தெரிவித்திருந்தார்.

 

இதைப் படித்தார் கணித மேதையான சார்லஸ் பாபேஜ். கவிதையானாலும் கணிதத்தில் கோட்டை விடலாமா? நேரடியாக அவரிடம் வந்து அந்த வரியை மாற்றச் சொன்னார்.

 

“ஒவ்வொரு கணமும் ஒரு மனிதன் இறக்கின்ற தருணத்தில் ஒன்றும் ஒன்றின் கீழ் ஆறும் என்ற விகிதத்தில் மனிதன் தோன்றுகிறான்” (Every moment there dies a man, And one and a sixth is born) என்பதே சரியான உண்மை என்பது அவரது வாதம்.

 

 

ஆனால் இவ்வளவு துல்லியமாக மாற்றச் சொன்னாலும் தனது வரியிலும் கூட ஒரு கணிதப் பிழை இருப்பதையும் அவரே ஒப்புக் கொண்டார். அதாவது ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும் 1.167 (என்ற விகிதத்தில் இன்னொரு) மனிதன் பிறக்கிறான் என்பதே துல்லியமான உணமையாகும்!

“ஆனால் கவிதையில் யாப்பிலக்கணம் சந்தத்திற்கான விதியைத் தந்திருக்கிறதே! அதையும் நாம் அனுசரிக்கத் தானே வேண்டும்” என்று ஒரே போடாகப் போட்டார்.

 

அனைவரும் டென்னிஸனுக்கும் சார்லஸ் பாபேஜுக்கும் நடந்த இந்தக்  கவிதை கருத்துப் போரை வெகுவாக ரசித்துப் பாராட்டினர்!

 

மேதைகள் மேதைகளே!

*****

 

 

 

 

செரிங்கட்டி விதிகள்! – 1 (Post No.4041)

Written by S NAGARAJAN

 

Date: 1 July 2017

 

Time uploaded in London:-  6-11 am

 

 

Post No.4041

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

பாக்யா 2-6-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

செரிங்கட்டி விதிகள்! – 1

ச.நாகராஜன்

“பாலூட்டி இனங்களின் வகைகளிலும் எண்ணிக்கையிலும் ஆப்பிரிக்கா குறிப்பிடத்தகுந்த இடத்தை வகிக்கிறது… ஆனால் இங்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது? – ஜூலியன் ஹக்ஸ்லி

 

 

வாழ்க்கை எப்படி இயங்குகிறது? இயற்கையானது எப்படி சரியான எண்ணிக்கையில் சிங்கங்களையும் வரிக்குதிரைகளையும் இதர இனங்களையும் ஆப்பிரிக்க காடுகளில் படைக்கிறது? மீன்கள் சரியான எண்ணிக்கையில் எப்படி உலகின் பெருங்கடல்களில் உருவாகின்றன?

இவை அனைத்தும் ஏதோ தற்செயலாகப் படைக்கப்பட்டு உயிர் வாழ்வன அல்ல. இயற்கை எல்லாவற்றிற்குமே சரியான ஒரு அளவுகோலை வைத்துக் கொண்டே இயங்குகிறது; புவியை இயக்குகிறது.

இதை ஆராயப் புகுந்தார் பிரபல விஞ்ஞானி சீன் கரோல். (SEAN B.CARROL) தான் கண்டுபிடித்தவற்றை அழகுற ‘தி செரிங்கட்டி விதிகள் (THE SERENGETI RULES) என்ற நூலில் விளக்கியுள்ளார்.

அணுத்துகள் முதல் பெரிய சுற்றுப்புறச் சூழல் அமைப்பு வரை அனைத்துமே ஒரு தர்க்கரீதியான வகையில் இயற்கையால் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை!

இந்த இயற்கை மர்மத்தை விடுவிக்கவும் புரிந்து கொள்ளவும் ஏராளமான விஞ்ஞானிகள் தங்கள் ஆயுள் காலம் முழுமையும் அர்ப்பணித்து நமது சுற்றுப்புறச் சூழலை ஆராய்ந்து வந்துள்ளனர்.இப்படிப்பட்ட விஞ்ஞானிகளின் சரிதத்தை தொகுத்திருக்கிறார் சீன் கரோல்.

இயற்கையின் உயிரியல் படைப்பு மர்மத்தை ஆராயத் தகுந்த இடமாக விஞ்ஞானிகள் கருதியது ஆப்பிரிக்காவின் வட டான்ஜானியாவில் ஆரம்பித்து தென் மேற்காக கென்யா வரை பரந்துள்ள மிக அழகிய செரிங்கட்டி வன பிராந்தியம் தான்! சுமார் 12000 சதுர மைல்கரிள் பரப்பைக் கொண்டுள்ள இந்த இடத்தில் தான் செரிங்கட்டி சரணாலயம் உள்ளது.

உயிரியல் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பகுதி ஒரு ஆச்சரியகரமான ஆய்வுக் கூடம்.

1957ஆம் ஆண்டு டான்ஜானியா தேசீயப் பூங்காவின் அழைப்பின் பேரில் இங்கு வந்து சேர்ந்த பெர்னார்ட் ஜிமெர்க் மற்றும் அவரது மகன் மைக்கேல் இருவரும் இந்தப் பகுதியை ஆய்வு செய்து மிகச் சரியாக மிருகங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அசந்து போனார்கள்; அவர்களது ஆய்வு முடிவைக் கேட்டு உலகமே அசந்து போனது!

கொம்புகளை உதிர்க்காத ஒரு அரிய வகை ஆப்பிரிக்க மானினம் மட்டும் 99481. வரிக்குதிரைகள் 57199.கேஸல் வகை மானினம் 1,94,654. நீலமும் மஞ்சளும் கொண்ட புள்ளின மான்கள் 5172. அரிய வகை இம்பாலா மான்கள் 1717. எருமைகள் 1813. ஒட்டைசிவிங்கிகள் 837.யானைகள் 60. மொத்தமாக 3,66,980 பிராணிகளை அயராமல் அவர்கள் எண்ணி பட்டியலிட்டனர்.

செரிங்கட்டி என்றால் ஆப்பிரிக்க மொழியான மாசாய் மொழியில் முடிவற்ற சமவெளி என்று பொருள். ஆப்பிரிக்காவின் ஏழு அதிசயங்களுள் இதுவும் ஒன்று. உலகின் பத்து இயற்கை எழில் வாய்ந்த இடங்களில் இது ஒன்று. இங்கு தான் அதிகமாக சிங்கங்கள் உலவுகின்றன.

70 அரிய வகை பிராணிகளும் 500 பறவைகளின் அரிய இனமும் செரிங்கட்டியில் உள்ளன.

செரிங்கட்டியை நன்கு ஆராய்ந்த விஞ்ஞானிகள் இயற்கை பற்றிய ஆறு விதிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

முதல் இரண்டு விதிகள் ஜனத்தொகை பற்றியது. இந்த மிருகம் எண்ணிக்கையில் குறைந்துவிட்டது, அது கூட இருக்கிறது என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாதீர்கள். இயற்கைக்கு எதையும் நன்றாகவே சம அளவில் இருக்க வைக்கும் அபூர்வ சக்தி உள்ளது என்கிறது ஆய்வின் முடிவு.

முதல் விதி : எல்லா உயிரினங்களும் சம அளவில் படைக்கப்ப்டவில்லை.

எவ்வளவு தேவையோ அந்த அளவில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் உயிரினங்களை இயற்கை படைத்துள்ளது.

இரண்டாம் விதி: சில முக்கியமான உயிரினங்கள் தொடர்கூட்ட அளவில் மற்றவற்றின் மீது மறைமுகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

அதாவது குறிப்பிட்ட சில முக்கிய உயிரினங்களை மட்டும் கண்காணித்தால் போதும். அது ஏற்படுத்தும் மறைமுக விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.

மூன்றாவது விதி: சில உயிரினங்கள் பொதுவான ஆதார வளங்களுக்காகப் போட்டி போடுகின்றன.

ஒவ்வொரு உயிரினமும் தமக்கென ஒரு இடத்தையும் ஆதார வளத்தையும் கொண்டுள்ளது. உயிரினங்களுக்கு இடையே உள்ள போட்டியானது அதன் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறது. அந்த இனங்களின் பல்வேறு வகைகளையும் கட்டுப்படுத்துகிறது.

ஆக இயற்கை தனக்கென ஒரு கட்டுப்பாட்டை நியமித்துக் கொண்டு அதை யாருமோ அல்லது எதுவுமோ மீறாத வகையில் காத்தும் வருகிறது.

மற்ற விதிகளை அடுத்துப் பார்ப்போம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அமெரிக்க விஞ்ஞானியான தாமஸ் மிட்ஜ்லி (Thomas Midgely)  சென்ற இருபதாம் நூற்றாண்டில் தான் ஒருவராகவே அபாயகரமான இரண்டு கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர். ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியில் அவர் கெமிகல் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். கார்களின் எஞ்சின் அடிக்கடி ஸ்டார்ட் ஆகாமல் திணறவே அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வேலை அவருக்கு வந்தது. டெட்ரா எதில் லெட்-ஐ பெட்ரோலுடன் கலந்தால் எஞ்சின் சரியாக இயங்கும் என்பதை அவர் கண்டுபிடிக்கவே கம்பெனிக்கு ஏக லாபம். ஆனால் அந்த காரீயம் விஷம் என்பதால் அவர் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுப்புறச் சூழலின் கேட்டிற்கும் அந்தக் கண்டுபிடிப்பே காரணமாக அமைந்தது.

கம்பெனியின் துணைத் தலைவராக ஆன அவருக்கு அடுத்த ஒரு சவால் எழுந்தது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் ரெப்ரிஜரேட்டரில் விஷமுள்ள வாயுக்கள் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. அது கசியும் போது பலர் இறக்க நேர்ந்தது. அமெரிக்காவில் உள்ள ஓஹையோவில் க்ளீவ்லேண்ட் நகரில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் ரெப்ரிஜரேட்டரில் கசிவு ஏற்படவே நூற்றுக்கு  மேற்பட்டோர் இறந்தனர்.

விபத்து ஏற்பட்ட மூன்றே நாட்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வைக் கண்டார் மிட்ஜ்லி. அவர் கண்டுபிடித்த வாயு தான் ஃபிரியான். ரெப்ரிஜரேட்டர்களில் ஃபிரியான் வாயு பயன்பாட்டிற்கு வந்தது.

விஞ்ஞானிகளுக்கு முன்னால் தானே அதை அவர் சுவாசித்துக் காண்பித்தார். அத்தோடு மட்டுமின்றி அது எரியாது என்பதை விளக்க எரியும் மெழுகுவர்த்தி மீது அதை ஊதிக் காட்டினார்

அவ்வளவு தான், உலக கம்பெனிகள் அனைத்தும் ஃப்ரியான் வாயுவுக்குத் தாவினர். என்றாலும் கூட சமீபத்தில் தான் ஃப்ரியான் வாயுவும் கூட ஓஜோன் படலத்திற்கு தீங்கு விளைவிப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இது மட்டுமல்ல, இன்னும் 117 அபூர்வ கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்துள்ளார். ஆனால் அவரது கண்டுபிடிப்புகளில் ஒன்றால் அவர் போலியோ நோய்க்கு இலக்காகி கால்கள் விளங்காமல் படுத்த படுக்கையானார். அங்கும் சும்மா இருக்கவில்லை அவர்! தன்னைப் படுக்கையிலிருந்து சுலபமாக எழ வைக்க தன்னைத் தூக்கும் ஒரு கருவியைக் கண்டு பிடித்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு நாள் அந்தக் கருவியில் இருந்த இரண்டு கயிறுகளில் சிக்கி அவர் இறந்தார்.

அபூர்வமான விஞ்ஞானிகளுள் ஒருவர் தாமஸ் மிட்ஜ்லி!

***

 

லிப்ஸ்டிக்! ஸ்டிரா!! – கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்! (Post No.4020)

Written by S NAGARAJAN

 

Date: 21 June 2017

 

Time uploaded in London:-  5-44  am

 

 

Post No.4020

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

கம்ப சித்திரம்

 

இலங்கை மங்கையின் லிப்ஸ்டிக்! அயோத்தி மங்கையின் ஸ்டிரா!! – கம்பன் தரும் வியப்பூட்டும் சித்திரங்கள்!

 

ச.நாகராஜன்

 

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமாயணத்தில் ஏராளமான சுவையான செய்திகளைத் தந்துள்ளான்.

 

உற்றுக் கவனித்து ரசிப்போர் வியப்பது நிச்சயம்.

எடுத்துக்காட்டாக அவன் லிப்ஸ்டிக்கையும் ஸ்டிராவையும் குறிப்பிட்டிருப்பதைச் சொல்லலாம்.

 

இருபதாம் நூற்றாண்டில் நவ நாகரிக மங்கையர்  மேக் அப் செய்து கொள்ளூம் போது லிப் ஸ்டிக்கைப் பூசாமல் இருப்பது இல்லை.

 

இந்த உதட்டில் பூசும் அழகிய சாயம் பற்றி கம்பன் குறிப்பிடும் பாடல் இது:

 

 

குண்டலக் குழைமுகக் குங்கும கொங்கையார்

வண்டலைத் தெழுகுழற் கற்றைகால் வருடவே

விண்டலத் தகவிரைக் குமுதவாய் விரிதலால்

அண்டமுற் றுளதவூ ரழுதபே ரமலையே

     (அக்ககுமாரன் வதைப் படலம் பாடல் 42- வை.மு.கோ பதிப்பு)

 

 

இப்பாட்டின் பொருள் : குண்டலமென்ற காதணி அணிந்த செவி உடைய முகத்தையுடைய குங்குமக் குழம்பை அணிந்த மார்பகம் கொண்டவரான இராக்ஷஸ மகளிர்  வண்டுகளை அலையச் செய்து  மேல் எழுப்பப் பெற்ற கூந்தல் தொகுதி அவிழ்ந்து காலகளிலே விழுந்து புரண்டு கொண்டிருக்க நறுமணமுள்ள ஆம்பல் போன்ற செம்பஞ்சு ஊட்டிய வாய்களை திறந்து விரிவதனால் அந்த இலங்கையில் உள்ளார் அழுத பெரும் குரலோசை மேல் உலகம் வரை எட்டிற்று.

 

 

இலங்கை ராக்ஷஸ மகளிர் செம்பஞ்சுக் குழம்பை வாயில் அழகுக்காகப் பூசியதை கம்ப சித்திரம் காட்டுகிறது.

சிந்தாமணியிலும் கூட ‘அம்மலரடியுங்கையும் அணி கிளர் பவளவாயும் செம்மலர் நுதலு நாவும் திருந்தொளி யுகிரோடங்கே, விம்மிதப்பட்டு வீழ வலத்தகமெழுதியிட்டாள் என்று வருகிறது.

 

 

அலத்தகக் குமுதம் என்பது செங்குமுதம் ஆகும். அந்தக் காலத்திலேயே மகளிர் அனைவரும் செம்பஞ்சுக் குழம்பை வாயில் பூசிக் கொள்வது வழக்கம்  என்பது தெரிய வருகிறது.

அலத்தகம் என்பது தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் வருகிறது!

 

 Ms Lalita malar maniam of Kualalumpur enjoying tender coconut water with a straw.

 

ஆக லிப்ஸ்டிக்கை சுந்தர காண்டத்தில் கூறிய கம்பன். நாம் இன்று இளநீர் குடிக்கவும், குளிர் பானங்களைக் குடிக்கவும் பயன்படுத்தும் ஸ்டிரா பயன்பாட்டையும் பால காண்டத்தில் உண்டாட்டு படலத்தில் குறிப்பிடுகிறான்.

பாடலைப் பார்ப்போம்:

 

 

 

வான் துணை பிரிதலாற்றா வண்டினம் வச்சை மாக்கள்

ஏன்றமா நிதியம் வேட்ட விரவல ரென்ன வார்ப்பத்

தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தன ணுகர நாணி

ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால் ஒருத்தி உண்டாள்.

        (பாடல் 19)

 

 

தசரதனுடன் மிதிலை நோக்கிச் சென்றது அவனது சேனை.

அப்போது நடந்த நிகழ்ச்சிகளை வரிசையாகக் கூறுகிறான் கம்பன்.

 

பிரிய மாட்டாமல் ஆகாயம் வரை வண்டுகள்  மொய்த்துக் கொண்டிருக்கின்றன.கஞ்சனிடத்தில் இருக்கின்ற பெருஞ்செல்வத்தைக் கேட்க வந்துள்ள யாசகர்கள் போல அந்த வண்டுகள் ஆர்ப்பரிக்க சேனைக் கூட்டத்தில் சென்ற ஒருத்தி  தேனைச் சொரிகின்ற தாமரை மலர் போல உள்ள தனது செந்நிற வாயைத் திறந்து  மதுவைப் பருகுவதற்குக் கூசி, செங்கழுநீரின் உள் துளையுள்ள தண்டினால் கிண்ணத்தில் இருந்ததை உறிஞ்சிப் பருகலானாள்.

மதுவைப் பருக நாணிய அயோத்தி மங்கை செங்கழுநீரின் உள் துளை உள்ள தண்டை ஸ்டிராவாகப் பயன்படுத்தினாள். அந்தத் துளை வழியே மதுவை உண்டாள்.

 

 

ஆக லிப்ஸ்டிக்கும், லிப் மூலமாக உறிஞ்சிக் குடிக்கும் ஸ்டிராவும் கூட கம்ப சித்திரத்தில் இடம் பெற்று விட்டதை எண்ணி ரசிக்கலாம்; மகிழலாம்.

 

போகிற போக்கில் கம்பன் தரும் சின்னச் சின்ன தகவல்கள் இவை.

அந்தக் காலத்திலேயே லிப்ஸ்டிக்; அந்தக் காலத்திலேயே ஸ்டிரா!

அழகு தானே!

****

வேத காலம் கி.மு.4500 ஏன்? எப்படி? திலகர் விளக்கம் (Post No.4007)

Written by London Swaminathan
Date: 16 June 2017
Time uploaded in London- 15-49
Post No. 4007
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

பால கங்காதர திலகர் பெரிய சுதந்திரப் போராட்ட வீரர்; பத்திரிகையாளர்; சம்ஸ்கிருத அறிஞர்; எழுத்தாளர். அவர் 1856-ல் மஹாராஷ்டிர மாநிலத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். 1920ல் பம்பாயில் உயிர்நீத்தார். அவர் எழுதிய கீதா ரஹஸ்யம் என்ற நூலும்  ஓரியன் அல்லது வேத காலம் குறித்த ஆராய்ச்சி என்ற (The Orion or Researches into the antiquity of the Vedas) நூலும் மிகவும் புகழ்பெற்ற நூல்கள். அவர் வேத இலக்கியத்தில் குறிப்பிடப்படும் நட்சத்திரங்களின் நிலைகளை ஆராய்ந்து அவை கி.மு.4500-ஐ ஒட்டி எழுதப் பட்டிருக்க வேண்டும் என்கிறார். பெரும்பாலான பாடல்கள் கி,மு 3500-க்கும் 2500-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப் பட்டிருக்க லாம் என்பது அவரது துணிபு.

அவர் ஏன் இந்த ஆராய்ச்சியில் இறங்கினார் என்பதை அவரே தனது வேத கால ஆராய்ச்சிப் புத்தகமான ஓரியனில் (அரையன் என்றும் சொல்லுவர்) சொல்கிறார்

ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் திருவாதிரை, மிருகசீர்ஷம் முதலிய நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நூலின் முகவுரையில் திலகர் சொல்லுவதாவது:–

 

 

1893 ஆம் ஆண்டில் அவர் எழுதுகிறார்:- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தேன். அதில் “மாதங்களில் நான் மார்கழி” –  என்று கிருஷ்ணர் சொல்லுவதிலிருந்து வேத காலம் பற்றிய முக்கியமான தடயங்கள் கிடைக்கலாம் என்று எண்ணினேன். ஆதிகால காலண்டர் வேதங்களில் உள்ளது. அதுபற்றி லண்டன் மஹாநாட்டுக்கு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அதுவோ கட்டுரை அளவுக்கு நிற்காமல் புத்தகம் அளவுக்கு விரிந்தது.

அங்கே சுருக்கத்தை மட்டும் அனுப்பிவிட்டு புத்தகத்தை சில  மாறுதல்கள், பிற்சேர்க்கைகளுடன் வெளியிடுகிறேன்.

கட்டுரையின் தலைப்பிலிருந்தே நான் எதைப் பற்றி ஆராய்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது கி.மு.2400க்கு முன் வேத காலத்தைத் தள்ளுவதற்கு ஒரு தயக்கம் காணப்படுகிறது. ஆனால் வேதங்களில் குறித்துள்ள விஷயங்கள் இதை கி.மு.4000-க்குப் பின்னர் என்று சொல்லமுடியாத தெளிவான குறிப்புகளாக உள்ளன.

சம இரவு நாள் எனப்படும் Vernal Equinox வெர்னல் எக்வினாக்ஸ் அப்பொழுது ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் இருந்தது. இது தொடர்பாக வேத கால இலக்கியத்தில் உள்ள கதைகள், பாடல்களைக் காட்டுகிறேன். அவைகளை அறிவுபூர்வமாக விளக்குகிறேன். இதன் மூலம் வேதங்களில் உள்ள கதைகளுக்கு விளக்கமும் கிடைக்கிறது. மேலும் ஈரான், கிரீஸ் ஆகிய நாடுகளில் உள்ள புராணக் கதைகளுடன் இது ஒத்து இருக்கிறது இது இறுதியான ஒரு முடிவு என்று சொல்ல முடியாது. ஆனால் நான் புராணக் கதைகளையோ, சொல் ஆராய்ச்சி அடிப்படை யிலோ  என் வாதங்களை எழுதவில்லை . ஆகையால் அக்கதைகளை தவறு என்று காட்டினாலும் வேதகால இலக்கியம் முழுதும் சிதறிக்கிடக்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட எனது  வாதங்களைப் பாதிக்காது.

 

என்னால் முடிந்த அளவுக்கு புரியாத வானியல் (Technical) பதங்களைத் தவிர்த்துள்ளேன். ஆயினும் காலக் கணக்கீடு பற்றிய இந்திய முறைகளை அறியாதோருக்கு, இது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். என்னுடைய வாதங்களை ஏற்று,  ஒருவேளை இரண்டாவது பதிப்பு தேவைப்பட்டால் அப்பொழுது இந்த விஷயங்களைக் கொஞ்சம் விளக்கி எழுதுவேன்.

 

நான் வானியல் தொடர்பான விஷயங்களையே எழுதினாலும் பெண்ட்லியின் (Bentley) புத்தகத்தைப் பார்த்தவர்களுக்கு இது வான சாத்திரம் கூட அல்ல, சுலபமான ஒரு கட்டுரை என்று புரியும்.

ரிக்வேத காலத்தை நான் மிகவும் பழைய காலத்துக்குத் தள்ளுகிறேனோ என்று சிலர் நினைக்கலாம். ஆனால் வரலாற்று அல்லது விஞ்ஞான ஆராய்ச்சிகளில் உண்மையைக் கண்டுபிடிப்பதே நோக்கம் ஆதலால் அத்தகைய அச்சங்கள் தேவையற்றது.

 

ஏற்கனவே கோல்ப்ரூக், பெண்ட்லி (Colebrook, Bentley and others) முதலியோர் போன வழியில்தான் நானும் போகிறேன். ஆயினும் நான் சொல்லும் சம்ஸ்கிருத விளக்கங்கள் சரியா இல்லையா என்பதை சம்ஸ்கிருத அறிஞர்கள் தீர்மானிக்கட்டும்.

 

இன்னொரு விஷயம், இந்தப் புத்தத்தில் சேர்க்கப்படவில்லை. ராமனின் ஜாதகம், மஹாபாரதப் போர்க்கால கிரஹ நிலைகள் ஆகியவற்றைக் கொண்டு சிலர் ராமாயணம், மஹாபாரதம் ஆகியன கி.மு.5000 அல்லது 6000 என்று கணித்து, வேதங்கள் அதற்கும் முந்தையவை என்று வாதிடுகின்றனர். அதே குறிப்புகளை வைத்து ராமரின் ஜனனம் கி.மு. 961 என்று பெண்ட்லி காட்டுவதால் இந்த வகையான கணக்குகளும் அறிக்கைகளும் எவ்வளவு லேசானவை என்பதை அறியலாம். இப்போது நம்மியையே உள்ள முரணான விஷயங்களைக் கொண்ட புராணங்கள் முந்தைய பழைய வடிவத்தில் நம் கைகளில் தவழாமல் இருக்கலாம். மேலும் மஹாபரத போரின்  போதான கிரஹ நிலைகள் குழப்பமாக உள்ளன. நல்ல அல்ல கெட்ட கிரஹ நிலைகளைக் காட்ட அவர்கள் இப்படிச் சொல்லி இருக்கலாம்.

 

பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்து காத்திருந்ததை வைத்து அவர் கிருத்திகை நட்சத்திர காலத்தில் (Krithika Period)  வாழ்ந்தது தெரிகிறது. ஆனால் இப்போது நம்மிடமுள்ள பாரதம் போர் முடிந்து நீண்ட காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்டதாகும்

 

இதற்குப் பின்னர் திலகர் மாக்ஸ்முல்லர் முதலியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இறுதியில் ஒரு சம்ஸ்கிருதப் பழமொழியைத் தருகிறார் “ஒரு தங்கம் தூயதா இல்லையா என்பதை நெருப்பில் புடமிட்டுப் பார்த்தால் தான் தெரியும்”. இந்த வாசத்துடன் என் ஆராய்ச்சிப் புத்தக த்தை உங்கள் கைகளில் தருகிறேன். என்னுடைய மற்ற பணிகளால் (சுதந்திரப் போராட்டம்) எதிர்காலத்தில் இந்த ஆராய்ச்சிக்கு இவ்வளவு நேரத்தை ஒதுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. ஆயினும் நியாயமான ஓரச் சார்பில்லாத ஒரு விவாதத்துக்கு என் ஆய்வுக்கட்டுரை வழி செய்தால் அதுவே எனக்கு திருப்தி தரும். நம்முடைய நாகரீகத்தின் மிகப் பழைய பதிவுகள் நம்முடைய புனித நூலகளில் உள்ளன. அவற்றின் பழமையை ஆராய இது துணை புரியட்டும்.

 

புனா, அக்டோபர் 1893  பி.ஜி. திலக்

 

–Subham–

 

 

விடமின் டி பற்றாக்குறை உள்ளவர்களா நீங்கள்? (Post No.4005)

Written by S NAGARAJAN

 

Date: 16 June 2017

 

Time uploaded in London:-  5-46  am

 

 

Post No.4005

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

விடமின் டி பற்றாக்குறை உள்ளவர்களா நீங்கள்? (Post No.4005)

 

ச.நாகராஜன்

 

திருநெல்வேலியிலிருந்து வெளி வரும் ஹெல்த்கேர் மாத இதழில் மே 2017 இதழில்வெளியாகியுள்ள கட்டுரை

 

 

விடமின் டி ஆரோக்கியமான எலும்பைக் கொள்ளவும் உறுதியான பற்கள் மற்றும் தசைகளைக் கொள்ளவும் இன்றியமையாதது.

 

 

குளிர்காலத்திலும் இலையுதிர் காலத்திலும் தினமும் இதை துணை உணவாக எடுத்துக் கொள்ளுதல் நலம் என்று முன்னர் ஆரோக்கியத்திற்கான வழியாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். ஆனால் இப்போதோ பல ஆய்வுகளின் மூலமாக இதை தினமுமே எடுத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

 

ஆனால் விடமின் டி அபரிமிதமாகக் கிடைக்கும் ஒரு ஆதாரம் சூரிய ஒளியே.

 

 

சூரிய ஒளி செலவில்லாதது. எப்பபொழுதும் கிடைப்பது. பக்க விளைவு இல்லாதது. இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் சூரிய ஒளிக்குப் பஞ்சமே இல்லை. இதைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் அதைப் போன்ற பிரமாண்டமான தவறு வேறெதுவும் இல்லை.

 

 

,மீன் வகைகள், செறிவூட்டப்பட்ட ப்ரெட் ஆகியவற்றிலும் விடமின் டி உள்ளது.

 

சுவாசக் குழாய் சம்பந்தமான கோளாறுகளை விடமின் டி உள்ள துணை உணவுகள் நீக்கி விடும்.

இதன் மூலம் ஏராளமான அகால மரணங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.

 

சுவாசக் கோளாறு என்பதில் வறண்ட தொண்டை, தொண்டைப் புண், ஜுரம், தும்மல் உள்ளிட்டவையும் அடங்கும்,நிமோனியா போன்ற அதி தீவிர நோய்களும் அடங்கும்.

 

 

டாக்டர் ஜகி ஹாஸன் ஸ்மித் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர். அவர் தனது ஆய்வு பேப்பரில் விடமின் டி தசைகளின் வலிமையைக் கூட்டுகிறது என்பதைத் தெரிவிக்கிறார். எலும்புகளில் கால்சியம் படிந்து விடுவதையும் விடமின் டி தடுத்து நிறுத்துகிறது. எலும்புகளில் கால்சியம் படிவதனாலேயே ரிக்கட் வியாதி (எலும்புகள் வளைவது) தடுத்து நிறுத்தப்படுகிறது. அத்துடன் Ostomalacia எனப்படும் எலும்புகள் மிருதுவாகும் தன்மையும் தடுத்து நிறுத்தப்படுகிறது.

 

ஆனால் விடமின் டி வெகுவாக பற்றாக்குறையாக இருந்த்தெனில் துணைஉணவுகள் தேவைப்படும்.

 

 

நீஙகள் அபாயகரமான பிரிவில் சேர்ந்தவராக இருப்பின் அதாவது தடித்த தோலைக் கொண்டவராகவோ, அல்லது கர்ப்பிணியாக்வோ அல்லது நான்கு வயதிற்கும் கீழான குழந்தையாகவோ இருப்பின் ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனைப் படி நடத்தலே நலம்.

 

மற்றவர்கள் 10 மைக்ரோகிராம் அளவு விடமின் டி துணை உணவை எடுத்துக் கொள்ளலாம்.

 

ஆனால் துணை உணவு என்பது கடைசிபட்சமாகவே இருக்க வேண்டும். ஏனெனில் துணை உணவால் முதலில் பயன் அடைவது அதைத் தயாரிக்கும் கம்பெனிகளே. அவைகளுக்கு கொழுத்த லாபம் கிடைக்குமளவுக்கு உங்களுக்கு ஆதாயம் உண்டா என்றால் இல்லை என்ற பதிலே வரும்.

 

 

ஆகவே இயற்கை தரும் இன் மருந்தான சூரிய ஒளியை அதிகம் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.

 

ஓளி மயமான வாழ்க்கைக்கு உதவுவது சூரியஒளியே!

**************************