மந்திரமும் யந்திரமும் யாருக்குப் பலன் தரும்? தமிழர் கண்டுபிடிப்பு! (Post No.3840)

Written by London swaminathan

Date: 22 APRIL 2017

Time uploaded in London:- 14-59

Post No. 3840

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

ஏழு விஷயங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதில் பலன் கிடைக்கும்; நம்பிக்கை இல்லாமற் செய்தால் பலன் கிடைக்காது. இது இந்துக்கள் கண்டுபிடித்த உண்மை. இப்பொழுது விஞ்ஞானிகளும் இதை மெதுவாக — ஜாக்கிரதையாக- ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு எனது இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கையில் இந்துக்கள் சொன்னது முழுக்க முழுக்க உண்மையே என்று எழுதியிருப்பார்கள்!

 

மந்திரமுந்  தேவு மருந்துங் குருவருளு ந்

தந்திரமும் ஞானந்  தருமுறையும் — யந்திரமும்

மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியிற்

பொய்யெனிற் பொய்யாகிப் போம்

 

–நீதிவெண்பா

பொருள்:

மேதினியில்=உலகத்தில்

மந்திரமும் = மறை (வேத) மொழிகளும்

தேவும் = கடவுளும்

மருந்தும் = மருந்துகளும்

குரு அருளும் = ஆசார்யனின் அருளும்

தந்திரமும் = தந்திரம் பற்றிக்கூறும் நூல்களும்

ஞானம் தரும் முறையும் = வழிபாட்டு முறைகளும்

யந்திரமும் = மந்திர எழுத்துக்கள் எழுதிய தகடுகளும்

 

(ஆக இவ்வேழும்)

மெய்யெனில் = மெய்யென்று நம்பினால்

மெய்யாய் விளங்கும் = உண்மையாகவே பலன் கொடுக்கும்

பொய்யெனில் = பொய்யென்று நினைத்தால்

பொய்யாகிப் போம் = பலிக்காது

 

மந்திரம் என்றாலேயே “நினைத்தவரைப் பாதுகாப்பது” என்று பொருள். அப்படிப்பட்ட ஒன்றை நம்பிக்கை இல்லாமல் சொல்லவே முடியாது.

 

நம்பிக்கை இருந்தால் பலன் கிடைக்கும் என்பதை நான்கு வேதங்களும் சொல்லுகின்றன:-

 

நம்பினார் கெடுவத்தில்லை இதுநான்கு மறை தீர்ப்பு

அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகம் வரம் பெறலாம்

-என்பது மஹா கவி பாரதியின் வாக்கு.

 

சம்யாத்மா விநஸ்யதி (சந்தேகப் படுபவன் அழிவான்) என்பது கண்ண பிரானின் வாக்கு (பகவத் கீதை 4-40)

 

வள்ளுவனும் சொல்லுவான்:-

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து (குறள் 353)

 

பொருள்:-

முதலி சந்தேகத்துடன் ஆரம்பித்து, பின்னர் ஐயம் தெளிந்து உண்மைப் பொருளை அறிந்தார்க்கு பூமியைவிட, தேவலோகம் மிக அருகில் வந்துவிடும்.

விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது!

 

சோதனை செய்யப் போகும் புதிய, மருந்துகளின் உண்மைப் பலனைக் கண்டுபிடிக்க நோயாளிகள் பல பேருக்கு போலி மருந்துகளைக் (Placebo)  கொடுப்பார்கள் இன்னும் பலருக்கு உண்மை மருந்துகளைக் கொடுப்பார்கள்; சோதனைக்குட்படும் நோயாளிகள் மட்டும் இதில் பங்கு பெறுவார்கள்; டாக்டர்களுக்கோ நோயாளிகளுக்கோ யார் போலி மருந்தை , யார் உண்மை மருந்தைச் சாப்பிட்டனரெ ன்று தெரியாதவாறு பெயர் இல்லாமல் நம்பர்கள் எழுதி ரகசியமாக இந்த சோதனையை நடத்துவர்.

 

இதில் சில நேரங்களில் போலி மருந்து சாப்பிட்டோர், உண்மை மருந்து சாப்பிட்டவர்களைவிட விரைவில் குணமடைந்தனர். இதற்கு அவர்களின் (Placebo Effect) நம்பிக்கையே காரணம்.

placebo effect

noun

  1. a beneficial effect produced by a placebo drug or treatment, which cannot be attributed to the properties of the placebo itself, and must therefore be due to the patient’s belief in that treatment.

 

புதிய இயற்பியல் துறையான பார்டிகிள் பிஸிக்ஸ், குவாண்டம் பிஸிக்ஸ் (Particle Physics, Quantum Physics)  துறையில் கூட ஒருவர் கவனிப்பதால் சப் அடாமிக் பார்டிகிள்ஸ் (Sb Atomic Particles) பாதிக்கப்படுகின்றன என்று கண்டுள்ளனர். ஆக இந்தத் துறை வளர வளர இந்துமத உண்மைகள் மேலும் வலுப்படும்.

 

அறிவியலில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் சேர்த்தால் தண்ணீர் உருவாகும். இது எல்லோருக்கும் பொது. ஆனால் ஆன்மீகத்தில் அப்படியல்ல. எவ்வளவு நம்பிக்கையுடன், மனம் மொழி மெய் ஆகிய மூன்று வழிகளில் — எவ்வளவு உண்மையைக் கடைப்பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு அது பலன் தரும். இதை நாலே வரிகளில் விளக்குகிறது நீதி வெண்பா.

சுபம்–

பூவா தலையா போட்டுப் பார்க்கச் சொன்ன விஞ்ஞானி! (Post No.3810)

written by S NAGARAJAN

 

Date:12 April 2017

 

Time uploaded in London:-  5-27 am

 

 

Post No.3810

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

பூவா தலையா போட்டுப் பார்க்கச் சொன்ன விஞ்ஞானி சிக்மண்ட் ஃப்ராய்ட்!

.நாகராஜன்

 

     பிலிப்பைன்ஸில் 2013ஆம் ஆண்டு சான் டியோடோரோ நகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரியண்டல் மிண்டோரோ பூவா தலையா போட்டுப் பார்த்த பின்னர் ஜெயித்தவ்ர் என அறிவிக்கப்பட்டார், பிலிப்பைன்ஸின் விதிகளின் படி ஒரே ஓட்டு எண்ணிக்கையை இருவர் கொண்டிருந்தால் இருவரும் ஆளுக்கு ஐந்து முறை நாணயத்தைச் சுண்டிப் போட்டுப் பார்த்து அதிகம் தலை விழுந்தவரே ஜெயித்தவராக அறிவிக்கப்படுவார். இதிலும் முதல் முறை சரி சமமாக இருவரும் இருந்ததால் இரண்டாம் தடவை ஐந்து முறை பூவா தலையா போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் ஜெயித்தார் ஓரியண்டல் மிண்டோரோ.  – பிலிப்பைன்ஸ் செய்தி

 

 

     மனிதனின் வாழ்வில் முடிவு எடுக்கத் திணறும் படியான சிக்கலான தருணங்கள் ஏராளம் வருகின்றன. வேலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு இரண்டு நல்ல நிறுவனங்கள் வேலை தர முன்வருகின்றன. எந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது?

 

      பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க நீண்ட நாட்கள் முயற்சி செய்த ஒரு பெற்றோருக்குத் திடீரென இரண்டு இடங்களில் மாப்பிள்ளை கிடைக்கிறார். இருவருமே நல்லவர்கள். யாரைத் தேர்ந்தெடுப்பது. இது போல நூற்றுக்கணக்கான விஷயங்களில்  முடிவை எப்படி எடுப்பது?

    நம் முன்னோர்களில் பலரும் கோவிலில் சென்று பூ கட்டிப் பார் என்பர். இறைவன் கொடுக்கும் முடிவை எடுத்து அதன் படி நடப்பர். சைவர்கள் தேவாரத்தில் கயிறு சார்த்திப் பார்ப்பர். அதாவது தேவார நூலில் ஏதோ ஒரு  பக்கத்தில் கயிறைச் சார்த்திப் பார்த்து அந்த பக்கத்தில் என்ன உத்தரவு வருகிறதோ அதன் படி நடப்பர். அவர்களுக்குத் தகுந்த பாடல் அதில் இருக்கும்.

 

 

   கிறிஸ்தவர்கள் இதே முறையில் பைபிளில்  ஏதோ ஒரு பக்கத்தை எடுத்துப் பார்த்து அதன் படி முடிவெடுப்பர்.

அறிவியலுக்கு ஒத்த முறையாக இது இல்லை என்றாலும் நம் சக்திக்கு மீறிய விஷயங்கள் நமக்குத் தெரியாத போதிலும் பேரறிவுக்குத் தெரியும் என்று அந்தப் பேரறிவின் மீது பாரத்தைப் போட்டு முடிவை எடுப்பது வழக்கம்.

 

 

    இன்றைய நடைமுறை வாழ்விலும் இது சகஜமாக இருக்கிறது. எடுத்துக் காட்டாக கிரிக்கட் மேட்சில் முதலில் யார் ஆட்டத்தைத் துவங்கி விளையாடுவது என்பதில் பூவா தலையா போட்டுப் பார்த்து முடிவை எடுப்பது நடைமுறைப் பழக்கமாக இருக்கிறது.

 

 

    நண்பர் ஒருவரைப் பார்க்கப் போகிறீர்கள். அவர் ஒரு நாணயத்தைச் சுண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். நீங்கள் உள்ளே போன சமயம் அவருக்கு விழுந்தது தலை.

அவர், “அடடா! நீ வந்த சமயம் ஆறாம் முறையாகத் தலை விழுந்திருக்கிறது, என்ன அதிசயம்! சரி. இப்போது உனக்கு என்ன வேண்டும், தலையா, பூவா சொல்” என்கிறார்.

நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? நீங்கள் அல்ல, யாராக இருந்தாலும் உடனே பூ என்று தான் பதில் சொல்வார்கள்.

ஏனெனில் ஏழாம் முறையாக எங்காவது தலை விழுமா என்ற ஒரு எண்ணம் தான் காரணம்!

 

இது பொதுவாக அனைவரும் செய்யும் மதிப்பீடு. இதற்கு தி கேம்ப்ளர்ஸ் ஃபாலஸி சூதாடுவோர் செய்யும் பிழை – (The Gamblers Fallacy) என்று பெயர். இப்படி நம்புவோர் பொதுவாக உலகில் இல்லாத ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பவர்கள்.

 

 

    ஆக ஒரு முடிவை எட்ட முடியாமல் இருக்கும் போது பூவா தலையா போட்டுப் பார்ப்பது உலகெங்குமுள்ள நடைமுறையாக தொன்று தொட்டு இருந்து வருகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் வாலிபால். கால்பந்தில் பூவா தலையா போடுவது நிச்சயமாக இடம் பெறுகிறது.

 

 

பிரிட்டனில் ஒரே எண்ணிக்கையில் இருவர் ஓட்டு பெற்று விட்டார்கள் என்றால் பூவா தலையா போட்டுப் பார்த்து வென்றவர் யார் என்று முடிவு செய்யப்படுகிறது. அமெரிக்க செனட்டர் தேர்தலிலும் பூவா தலையா போட்டுப் பார்ப்பது அங்கீகரிக்கப்பட்ட ஒரு பழக்கம் தான்!

இந்த முறையை அறிவியல் ஆதரிக்கிறதா?

 

 

Toss the Coin என்ற இந்த் நடைமுறையை விஞ்ஞானி ஒருவரும் ஆதரிக்கிறார் என்றால் ஆச்சரியமாக இல்லை?பிரபல விஞ்ஞானி சிக்பண்ட் ப்ராய்ட் முடிவை எட்ட முடியாத நிலையில் பூவா தலையா போட்டுப் பாருங்கள் என்கிறார்.

அவரது கொள்கை டாஸ் தி காயின்’ கொள்கை என்று பிரபலமானது.

 

 

இந்தக் கொள்கையில் அவர் என்ன சொல்கிறார்?

 

   “பூவா தலையா போட்டுப் பாருங்கள் என்று நான் சொல்வது  முடிவு எடுப்பதற்காக அல்ல, இந்த முடிவை எடுப்பவர்கள் தங்களை உணர்ச்சிபூர்வமாக தெளிவு படுத்திக் கொள்வதற்காகத்தான் இப்படி போட்டுப் பார்க்கச் சொல்கிறேன்.நீங்கள் நாணயம் என்ன சொல்கிறது என்பதைப் பாருங்கள். பிறகு அந்த முடிவிற்கான உங்கள் எதிர்வினை என்ன என்று பாருங்கள். இந்த முடிவால் எனக்கு சந்தோஷம் தானா என்று கேட்டுக் கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயலில் இறங்குங்கள்” என்கிறார் அவர்.

 

 

     உலகெங்கும் பூவா தலையா போட்டுப் பார்ப்பது பகுத்தறிவுக்கொத்த ஒரு நடைமுறைப் பழக்கமாக ஆகி விட்டது.

 

மூட ந்ம்பிக்கை என்று சொல்பவர்கள் சொல்லி விட்டுப் போகட்டும், கோவிலில் பூ கட்டிப் பார்ப்பதும் நிற்கப் போவதில்லை, கிரிக்கட்டில் முதலில் யார் ஆடுவது என்பதை நிர்ணயிக்க டாஸ் தி காயினும் நிற்கப் போவதில்லை.

 

     உளவியலாளர்களும் நடுவர்களும் அறிஞர்களும் ஆதரிக்கும் ஒரு விஷயம் பூவா தலையா போட்டுப் பார்ப்பது தான்!

 

     இதன் படி நிகழ்ந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளை விரும்புப்வர்கள் ஒரு பெரும் நூலாகவே தொகுத்துப் பார்க்கலாம்!

 

  

அறிவியல் அறிஞர் வாழ்வில்!

 

பிரிட்டனைச் சேர்ந்த கணித மேதையும் எலக்ட்ரிகல் பொறியாளருமான ஆலிவர் ஹெவிசைட் (Oliver Heaviside) மின்சார சர்க்யூட்டுகளை பகுப்பாய்வு செய்ய சிக்கலான பல கணித உத்திகளைக் கண்டுபிடித்தார். ஆனால் இவருக்கு பல விசித்திரமான பழக்கங்கள் இருந்தது. (ஏற்கனவே 25-11-16 பாக்யா இதழில் அறிவியல் அறிஞர் பகுதியில் இவரைப் பற்றிப் பார்த்துள்ளோம்)

 

     இவர் தனது வீட்டை பிரம்மாண்டமான க்ரானைட் கற்களைக் கொண்டு அமைத்தார். தனது நகங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் நெய்ல் பாலிஷைத் தடவிக் கொள்வார்.. வெறும் பாலை மட்டுமே பல நாட்களில் அருந்துவார். அதுவே அவரது உணவாகும் எப்பொழுதும் எழுதிக் கொண்டே இருக்கும் ஒரு வித நிலையை மூளை கொண்டிருந்தால் அதற்கு ஹைபர்க்ராபியா (Hypergraphia) என்று பெயர். இத்தகைய ஹைபர்க்ராபியாவை அவர் கொண்டிருந்ததால் எப்பொழுதும் அவர் எழுதிக் கொண்டே இருப்பார். இத்தனை விசித்திரப் பழக்கங்களுடன் அவர் ஆராய்ச்சி செய்து வாழ்ந்து வந்தார்!

 

****

 

தண்ணீரின் மருத்துவ குணம்- ரிக் வேதப் பாடல் (Post No.3806)

Written by London swaminathan

 

Date: 10 APRIL 2017

 

Time uploaded in London:- 22-12

 

Post No. 3806

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

தண்ணீரைப் போற்றும் பழமொழிகளை முன்னொரு கட்டுரையில் தந்தேன். தண்ணீர் பற்றிய உலகின் பழமையான பாடல் ரிக் வேதத்தில் உள்ளது. ரிக் வேதம் சுமார் 6000 ஆண்டுப் பழமையானது என்று ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் கி.மு.1200 க்கு மேல்– அதற்கும் மேல் 5000 ஆண்டு வரை — பழமையுடையதாக இருக்கலாம் என்று மாக்ஸ் முல்லரும் கூறினர். அத்தகைய வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஒன்பதாவது பாடல் ஆபஸ் (தண்ணீர்) பற்றியது. அதைப் பாடியவர் சிந்துத்வீப மகரிஷி. அவர் அம்பரீசன் என்ற மன்னரின் மகன். இவருடைய பெயரிலிருந்து இவர் சிந்து சமவெளி நாகரீகப் பகுதியில் வசித்தவர் என்று தெரிகிறது. இதை பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லுவர்.

நீருக்கு மருத்துவ குணம் உண்டு என்பதை வேத கால மக்கள் அறிந்திருந்தனர் என்பது இந்த மந்திரத்தின் (கவிதையின்) பொருளைப் பார்த்தாலேயே புரியும்:-

 

 

 

ஆபோஹிஷ்டா மயோ புவஹ

தாந ஊர்ஜே ததாதன

மஹேரணாய சக்ஷஸே

 

யோவசிவதமோ ரஸஹ

தஸ்யபாஜயதேஹ நஹ

உசதீரிவ மதரஹ

தஸ்மா அரம் கமாம வஹ

 

சந்நோ தேவீரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோரபிஸ்ரவது நஹ

 

ஈசானாவார்யாணாம் க்ஷயந்தீஸ்சர்ஷனீனாம்

ஆபோ யாசாமி பேஷஜம்

 

அப்ஸு மே சோமோ அப்ரவீதந்தர்விஸ்வானி பேஷஜா

 

அக்னிம் ச விஸ்வசம்புவம்

 

பொருள்:

 

நீருக்குத் தேவதைகளாக உள்ள நீங்கள் உயர்ந்த ஆரோக்கியத்துக்கு காரணமாக இருக்கிறீர்கள்;

அப்படிப்பட்ட நீங்கள் எங்களுக்கு மகிமை பொருந்தியதும் ரமணீயதுமான ஞானக் கண்ணின் பொருட்டு சக்தியை அளியுங்கள்.

உங்களிடமுள்ள பேரின்ப ரசத்துக்கு, அன்பு சுரக்கும் தாய்மார்களைப் போல, எங்களை உரியராக்குங்கள்;

 

எந்த ரசத்தை நிலையாக வழங்கும் பொருட்டு நீங்கள் இன்ப வடிவாய் விளங்குகிறீர்களோ, அந்த ரசத்துக்காக உங்களை ஆர்வத்தோடு நாடுகிறோம். வம்சம் விருத்தி அடையட்டும்

 

ஜல தேவதைகளாகிய நீங்கள் எங்களை ஞானத்தால் புனித மாக்கி அருள்வீராக.

 

எங்கள் பாதுகாப்புக்கும் குடிப்பதற்கும் அருள் புரி; எங்களுக்குப் பேரானந்தத்தைக் கொடு.

 

மதிப்புமிக்க பொருட்களையும் மனிதர்களையும் ஆளும் தண்ணீரே

எங்களைக் குணப்படுத்தும் மருந்தாக இரு.

 

நீரில்தான் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது என்று சோமரசம் சொல்கிறது; அக்னி என்னும் வெப்ப சக்தியும் இருக்கிறது”

xxx

 

இது ஒரு அற்புதமான மந்திரம். தீட்டு முதலியன ஏற்படும்போது அது விலகி தூய்மை அடையவும் இம் மந்திரத்தைச் சொல்லி தண்ணீர் தெளிப்பர். அந்தணர்கள் தினமும் மும்முறை இம்மந்திரத்தைச் சொல்லி தலையில் தண்ணீரை ப்ரோக்ஷித்துக் கொள்வர் (விரல்களால் தெளித்துக் கொள்வர்)

 

தண்ணீருடன் மந்திர சக்தியைச் சேர்த்து அதை ஆயுதங்களாகவும், குணப்படுத்தும் மூலிகைகளாகவும், சபிக்கும் சாபங்களாகவும், வரமளிக்கும் காமதேனுவாகவும்பயன்படுத்தும் உத்தியை—வலிமையை– முன்காலத்தில் அறிந்து வைத்திருந்தனர். இப்பொழுது அது வெறும் சடங்குகளுக்கும் தானம் வழங்கவும் (கன்னிகா தான) மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

 

–subham–

தண்ணீர், தண்ணீர்- தமிழ்ப் பழமொழிகள் (Post No.3804)

Compiled by London swaminathan

 

Date: 10 APRIL 2017

 

Time uploaded in London:- 9-06 am

 

Post No. 3804

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

நீர் இன்று அமையாது உலகம் என்பது சங்க இலக்கிய நூலான நற்றிணையில் கபிலர் (பாடல் 1) உதிர்த்த பொன்மொழி. அவருக்குப் பின்னர் வந்த வள்ளுவனும் அதை வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் பயன்படுத்தினான்.

 

நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான் இன்று அமையாது ஒழுக்கு (Kural 20)

 

பொருள்:-

இந்தப் பூமியில் வாழும் எல்லா உ யிரினங்களும் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது அது போலவே தர்மமும் மழை இல்லாமல் வாழ முடியாது.

 

 

மழை இல்லாவிடில் வறட்சி மிகும்; வறட்சி ஏற்பட்டால் பசிப்பிணி பெருகும்; பசி வந்தால் பத்தும் பறந்து போம் – என்பது பழமொழி. அதாவது மனிதனுடைய அடிப்படை நற்குணங்கள் அழிந்து, தர்மம் அழியும்.

 

இதை நன்கு அறிந்த இந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் சதபத பிராமணத்தில் சொல்லிவைத்தனர்.

 

சதபத பிராமணம் (கி.மு.850) கூறுவதாவது:

“தண்ணீர் தான் சட்டம்/தர்மம். ஆகையால்தான் உலகிற்கு எப்போதும் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. எல்லாம் விதிகளின்படி நடக்கிறது. மழை தவறிவிட்டால் பலவீனமானவரை பலமுள்ளோர் தாக்குவர். ஏனெனில் தண்ணீர்தான் சட்டம்”.

இதையே வள்ளுவனும் கூறியிருப்பது (குறள்-20) கவனிக்கத்தக்கது.

 

மழையிலிருந்து உணவு உண்டாகிறது என்று கீதையில் பகவான் கிருஷ்ணனும் கூறுவார் (கீதை 3-14).

 

தமிழர்களின் தண்ணீர்ப் பழமொழிகளைப் படித்தால் அவர்களின் ஆழ்ந்த அனுபவ அறிவு புலனாகும்:–

 

1.நீரையும் சீராடு

2.நீரைச் சிந்தினையோ சீரைச் சிந்தினையோ?

3.நீரைத் தொட்டாயோ, பாலைத் தொட்டாயோ

 

4.நீராலே விலகினாய், நான் நெருப்பாலே விலகினேன்

5.நீரில் அமிழ்ந்த சுரைக்காய் போல

6.நீரில்லா நாடு நிலவில்லா முற்றம்

7.நீரும் கொல்லும், நெருப்பும் கொல்லும்

8.நீரும் பாசியும் கலந்தாற்போல

9.நீரை அடித்தால் நீர் விலகுமா?

10.நீரைக் கழுவி நிழலைப் புதைப்பதுபோல

11.நீரை அடித்தால் வேறாகுமா?

12.நீரோட்டத்தில் தெப்பம் செல்லும் தன்மை போல (புறம்.192 லும் உளது)

 

13.நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காணப்படாது

14.நீர் உயர நெல் உயரும்

15.நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்

16.நீர் உள்ள மட்டும் மீன் துள்ளும், நீர் போனால் மீன் என்ன துள்ளுமா?

17.நீர் என்று சொல்லி நெருப்பாய் முடிந்தது

18.நீர் என்று சொன்னால் நெருப்பு அவிவதும், சர்க்கரை என்று சொன்னதினால் வாய் இனிப்பதும் உண்டா?

19.நீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?

 

20.நீர்க்கடன் நிழற்கடன் கொடுத்துவைத்தமட்டும் இருக்கும்

21.நீர்ச்சோறு தின்று நிழலுக்கு அடியில் நின்றால் மலடிக்கும் மசக்கை வரும்

22.நீர் போனால் மீன் துள்ளும்

23.நீர் மேல் எழுத்துபோல

24.நீர்மேல் குமிழி போல நிலையில்லாக் காயம்

 

 

25.தண்ணீரிலே அடி பிடிக்கிறது

26.தண்ணீரிலே தடம் பிடிப்பான்

27.தண்ணீரிலேயோ தன் பலம் காட்டுகிறது?

28.தண்ணீரிலே விளைந்த உப்பு தண்ணீரிலே கரைய வேண்டும்

29.தண்ணீரில் அமுக்கின முட்டை உப்பு போட கிளம்பும்

30.தண்ணீரில் இருக்கிற தவளை  நீர் குடித்ததைக் கண்டது யார்? குடியாததைக் கண்டது யார்?

31.தண்ணீரில் இருக்கிற தவளையை தரையில் விட்டாற் போல

 

32.தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான்

 

33.தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்

 

34.தண்ணீரின்றினும் தண்மை பிரியுமோ, தீயினின்ன்றும் வெம்மை பிரியுமோ?

 

35.தண்ணீரின் கீழே குசு விட்டால் தலைக்கு மேலே

 

36.யாருக்கும் தெரியக்கூடாதென்று எண்ணி தண்ணீரின் கீழே குசு விட்டாற்போல

 

37.தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே

 

38.தண்ணீரும் பாசியும் கலந்தாற்போல

 

39.தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்

40.தண்ணீரயும் தாயையும் பழிக்கலாமா?

41.தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலையிட்ட காதும் சரி

42.தண்ணீர் குடம் உடைந்தாலும் ஐயோ! தயிர்க் குடம் உடைந்தாலும் ஐயோ!

43.தண்ணீர், வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும்

 

நீர் என்றும் தண்ணீர் என்றும் துவங்கும் பழமொழிகளை மட்டும் கண்டோம். பழமொழிகளுக்கு இடையே இதே சொற்கள் வரும் பழமொழிகள் நிறைய உண்டு. அத்தனையையும் அர்த்தத்தோடு தொகுத்து வெளியிடுவது நலம் பயக்கும்.

 

தமிழ் வாழ்க! பழமொழிகள் பயன்பெறுக!!

 

xxxx

எனது பழைய கட்டுரைகள்:-

தமிழன் கண்ட செயல்முறை அறிவியல்! தண்ணீர்! தண்ணீர்!!

Research Article No. 1685; Dated– 2 March 2015.

பாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி?

Research Article No.1656; Dated 17th February 2015.

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்: ஆரோக்கியம் தொடர்பான பொன்மொழிகள்

 

–subham–

 

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 3 (Post No.3801)

written by S NAGARAJAN

 

Date: 9 April 2017

 

Time uploaded in London:-  5-47 am

 

 

Post No.3801

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஹெல்த்கேர் மார்ச் 2017 இதழில் வெளியாகியுள்ள மூன்றாவது கட்டுரை

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 3

 

ச.நாகராஜன்

 

15) சிக்கன் சூப் சாப்பிடுவதால் எல்லா வியாதிகளும் குணமாகி விடும்!

 

துரதிர்ஷ்டவசமாக இதற்கு இல்லை என்ற பதிலையே தர வேண்டியிருக்கிறது. ஆனால் சில ஆய்வுகள் சிக்கன் நூடில் சூப் ஒரு மாற்று மருந்து போல மனதில் ஒரு பிரமையை உண்டாக்கும் என்று தெரிவிக்கின்றன. அதாவது நீங்களே அதைச் சாப்பிட்டதால் குணமடைந்தது போல உணர்வீர்கள். ஆகவே ஒரு நல்ல குணமடைந்தது போன்ற உணர்வைப் பெற  வேண்டுமென்றால் மட்டுமே அதைச் சாப்பிடலாம்!

 

 

16) விடுமுறை நாட்களில் தற்கொலைகள் அதிகமாகிறது

  டிசம்பர் விடுமுறை தினங்களில் வழக்கமாகப் பரப்பப்படும் வதந்தி இது.ஆனால் இது உண்மையில்லை. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் விடுமுறை தினங்கள் அதிகமுள்ள டிசம்பர் மாதம் தான் தற்கொலைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது. இதை அந்த நாட்டின் நேஷனல் செண்டர் ஃபார் ஹெல்த் ஸ்டாடிஸ்டிக்ஸ் தெரிவிக்கிறது.

இந்த வதந்தி பரவுவதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் மீடியாக்கள் சௌகரியமாக டிசம்பர் மாதம் இந்த மாதிரி செய்திகளை அதிகமாக ஒலிபரப்புவதால் தான் என்பது தெரிய வருகிறது.

 

 17) இரவில் சாப்பிடுவதால் குண்டாகி விடுவீர்கள்!  

இரவு நேரங்களில் ஃபிரிட்ஜைத் திறந்து எதையாவது சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் ஏராளம். நள்ளிரவில் ஒரு ஸ்நாக்கைச் சாப்பிடுவதால் குண்டாகி விடுவீர்கள் என்பது ஒரு பொய்யான தகவலே. இந்த இரவு நேரச் சாப்பாட்டுப் பழக்கத்திற்கும் குண்டாவதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை

18) பௌர்ணமி அன்று மனக்கோளாறு சிகிச்சை நிலையங்களுக்கும் எமர்ஜென்ஸி அறைகளுக்கும் அதிகம் பேர் வருகின்றனர்!  

பௌர்ணமி இரவு பற்றிய ஏராளமான  பொய்யான தகவல்களில் இதுவும் ஒன்று. தொன்றுதொட்டு இருந்து வரும் தகவல் இது. பௌர்ணமி வர வர பைத்தியம் பிடித்தோரின் செய்கைகள் அதிகமாகும் என்பது காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒன்று தான்.

2005ஆம் ஆண்டு மாயோ கிளினிக்கில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பௌர்ணமி இரவு அன்று மாலை ஆறு  மணியிலிருந்து காலை ஆறு மணி வரை எமர்ஜென்ஸி அறைகளில் எத்தனை நோயாளிகள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற எண்ணிக்கை எடுக்கப்பட்டது. ஆய்வின் படி சாதாரண நாட்களில் வருபவர்களின் எண்ணிக்கைக்கும் பௌர்ணமி அன்று வருகை புரிவோரின் எண்ணிக்கைக்கும் எந்த விதப் பெரிய மாற்றமும் இல்லை. 1996இல் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் 150,999 பதிவேடுகளை ஆராய்ந்தனர். அதிலும் கூட எந்த வித பெரிய மாறுதலும் தெரியவில்லை. ஆகவே இந்தக் கூற்று தவறானது தான்!

 

19) ப்ரோ பயாடிக்ஸ் எடுத்துக் கொள்வதால் ஜலதோஷம் நிவாரணமடைகிறது  

 

நிச்சயமாக ப்ரோபயாடிக்ஸ் உங்களை நோயாளி ஆக்காது. அதே சமயம் ஜலதோஷத்தை குணமாக்கவும் செய்யாது. டாக்டர் பாட்ரிசியா ஹிப்பெர்ட் என்பவர் பீடியாட்ரிக்ஸ் பேராசிரியை. அவர் உறுதி படத் தெரிவிக்கும் செய்தி இது. ப்ரோபயாடிக்ஸ் ஜலதோஷத்தை வரவிடாமல் செய்யலாமே தவிர அதற்கான நிவாரணமாக் அமையாது என்று பல உயர்தர ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

20) பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஜுரம் வரும்.  

ஒவ்வொரு பெற்றோரும் தவறாமல் கேட்கும் தவறான தகவல் இது. இந்த மருத்துவத் தகவல் பொய்யானது. அபாயகரமானதும் கூட. பெற்றோர்கள் பல் முளைக்கும் போது குழந்தைக்கு ஜுரம் வந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கிறார் வ்ரீமென். ஆய்வுகள் பல் முளைப்பதற்கும் ஜுரத்திற்கும் எந்த வித ஒரு சம்பந்தத்தையும் இது வரை தெரிவிக்கவில்லை. ஆகவே பல் முளைக்கும் போது வரும் ஜுரம் அதனால் தான் ஏற்படுகிறது என்ற எண்ணத்தை பெற்றோர்கள் விட்டு விட வேண்டும். ஜுரத்தை அலட்சியப்படுத்தாமல் உடனே தகுந்த டாக்டரை நாட வேண்டும்.

இப்படி ஏராள்மான பொய்யான தகவல்களின் இடையே தான் நாம் வாழ்ந்து வருகிறோம். அதன் தவறான தாக்கத்திற்கு இலக்காகி விடக் கூடாது என்ற எச்சரிக்கையில் இந்தத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

            இத்துடன் இந்தத் தொடர் முற்றும்.

 

  . *************

 

           ஆதாரம் : லைவ் ஸயின்ஸ் இதழ்

     நன்றி: லைவ் ஸயின்ஸ்

 

 

மின்னல் வேகத்தில் கணக்கிட்ட மேதை ஜெடிடியா பக்ஸ்டன்! (Post No.3798)

Written by S NAGARAJAN

 

Date: 8 April 2017

 

Time uploaded in London:-  6-19 am

 

 

Post No.3798

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

மின்னல் வேகத்தில் கணக்கிட்ட மேதை ஜெடிடியா பக்ஸ்டன்!

by ச.நாகராஜன்

 

“ஒரு மேதை என்பவன் சிக்கலான விஷயங்களை எடுத்துக் கொண்டு அதை சாதாரணமானது என்று காட்டுபவன். ஒரு கல்வியாளனோ அதற்கு நேர் எதிர்மாறானவன்.” – ராபர்ட் ஃபேனி

 

     வரலாறை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் தொன்று தொட்டு கணித மேதைகள் ஏராளம் பேரைக் காணலாம். கணித மேதைகளாக அல்லாமல் கணக்கிடுவதில் மட்டும் திறமை கொண்ட மின்னல் வேகக் கணக்கிடும் நிபுணர்களையும் பார்க்கலாம்.

 

 

     நமக்குத் தெரிந்து விரிவான ஆதாரபூர்வமான பதிவுகளைக் கொண்ட ஒரு கணக்கிடும் மேதையின் பெயர் ஜெடிடியா பக்ஸ்டன். (Jedediah Buxton).  பிரிட்டனில் டெர்பிஷைரில் எலிண்டன் என்னும் இடத்தில் 1707ஆம் ஆண்டு பிறந்த இவர் 65 ஆண்டுகள் வாழ்ந்து 1772இல் மறைந்தார்.

     சிறிய கிராமம் ஒன்றில் பள்ளி வாத்தியார் ஒருவரின் மகன் அவர்.  படிக்கவும் இல்லை; எழுதவும் தெரியாது,  அவருக்கு! வாழ்க்கையில் பெரிதாக குறிக்கோள் அல்லது ஆசை என்று எதுவும் கூட அவருக்கு இல்லை. சாதாரண விவசாயத் தொழிலாளியாக வாழ்ந்து மறைந்தார்.

 

 

   பெரிய எண்கள் என்றால் அவருக்கு லட்டு போல! 39 இலக்கம் கொண்ட ஒரு எண்ணை இன்னொரு  39 இலக்கம் கொண்ட் எண்ணால் பெருக்கச் சொன்னால் நமக்குத் தலை சுற்றும். அவரோ உடனே பதில் கூறி விடுவார்.

 

 

   தன்னிடம் இருந்த அற்புத ஆற்றலை வைத்து அவர் பொருள் சம்பாதிக்கவும் இல்லை. பெரிதாகப் புகழும் பெறவில்லை!

     யாரேனும் இவரது அதிச்யத் திற்மையைக் கேட்டு அவரிடம் வந்து எதையாவது கேட்டால் உடனே பதில் கூறி அவரை அசத்தி விடுவார். தன்னால் இதை எப்படிச் செய்ய முடிகிறது என்பதையும் அவரால் கூற முடியவில்லை.

     ஒரு பொருளின் பிரம்மாண்டமான அளவைச் சொன்னால் அதில் எத்தனை அங்குலம் உள்ளது என்பதை ஒரு வினாடியில்  சொல்லி விடுவார். பெரிதாக ஒரு கால அளவைச் சொன்னால் அதில் எத்தனை நிமிடங்கள் உள்ளன என்று சொல்வார். நாம் தான் நெடுநேரம் கணக்கிட்டு அதைச் சரி பார்த்து வியக்க வேண்டும்! ஒரு பெரிய உரையைச் சொன்னால் அதில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்பதை அவர் கூறும் போது வியக்காதவரே இல்லை.

 

 

       கோணல் மாணலாக உள்ள ஒரு பெரிய நிலப்பரப்பைக் காண்பித்தால் உடனே அது மொத்தம் எத்தனை ஏக்கர் என்று அவர் கூறியதைப் பார்த்து வியந்து போனவர்கள் பலர்.

426 அடி நீளமும் 263 அடி அகலமும் இரண்டரை அடி ஆழமும் உள்ள ஒரு குளத்தை வெட்டினால் அதிலிருந்து எத்தனை கன அடி மண் வெளியே போடப்படும்? 15 நிமிடங்களில் அவ்ர் இதற்குப் பதிலைத் தந்தார்.

 

 

     ஒரு விநாடிக்கு 1142 அடி என்ற வேகத்தில் ஒலியலை சென்றால் 5 மைல் கடக்க எவ்வளவு நேரம் ஆகும்? இதற்கும் 15 நிமிடங்களில் அவர் பதில் அளித்தார்.

    இதனால் அவரிடம் ‘குண்டக்க மண்டக்க’ கேள்விகளைக் கேட்போர் ஏராளம் பேர் வந்தனர்.

 

    23,145,789 கஜ நீளமும் 5,642,732 கஜ அகலமும்  54,595 கஜ கனமும் உடைய ஒரு பெரிய கல்லில் உள்ள கன அங்குலம் எவ்வளவு?

 

     202,680,000,360 கன மைல்கள் உள்ள ஒரு தொட்டியில் எத்தனை தானியம் போட்டால் அது நிறையும்?

இப்படி விதவிதமான கேள்விகள் அனைத்திற்கும் அவர் பொறுமையாக உடனுக்குடன் பதில் கூறினார்.

 

 

      இவரது புகழ் மெதுவாக லண்டன் வரை பரவியது. ஒரு கணக்கை மனதில் போட்டுக் கொண்டிருக்கும் போது அதைப் பாதியில் நிறுத்தி விட்டு இன்னொரு வேலையைச் செய்து விட்டு மீண்டும் வந்து தனது கணக்கைத் தொடர்வது அவரது அசாத்தியமான திறமைகளில் ஒன்று. அந்தக் காலத்தில் கால்குலேட்டர்களும் கிடையாது, கம்ப்யூட்டர்களும் கிடையாது. ஏன், பில்லியன், ட்ரில்லியன் போன்ற பெரிய எண்களைக் கூட யாரும் அறிந்திருக்கவில்லை.

 

 

    ஆகவே பிரம்மாண்டமான எண்கள் கூறப்படும் போது அப்பாவியான அவர் தனக்குத் தானே பெரிய எண்களுக்கு ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டார்.  ஒன்றுக்கு அடுத்து பதினெட்டு பூஜ்யங்களைப் போட்டால் வரும் பிரம்மாண்டமான எண்ணுக்கு அவர் டிரைப் (Tribe) என்று பெயர் சூட்டினார். ஒன்றை அடுத்து 36 பூஜ்யங்களைப் போட்டால் வரும் எண்ணுக்கு அவர் அளித்துக் கொண்ட பெயர் க்ராம்ப் (Cramp)!

 

 

     1754ஆம் ஆண்டு இந்த அதிசய மனிதரை லண்டனில் இருந்த ராயல் சொஸைடி பரிசோதித்தது. பல விஞ்ஞானிகளும் அங்கு திரண்டனர். இவரது திறமையைப் பார்த்து அதிசயித்த அவர்கள் இது உண்மையான திறமையே என்று நற்சான்றிதழ் அளித்தனர்.

 

 

    லண்டன் வரை வந்து விட்ட அவரை அவரது நண்பர்கள் சிலர் புகழ்பெற்ற ட்ருரி லேன் தியேட்டர் என்ற நாடக அரங்கிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த கேர்ரிக் (Garrick)  என்ற நிகழ்ச்சியைக் காண்பித்த பின்னர் அவரது நண்பர்கள் அவரது விமரிசனம் என்னவாக இருக்கும் என்பதை அறிய ஆவல் கொண்டு நிகழ்ச்சி எப்படி என்று கேட்டனர்.

 

 

     நாடகத்தைப் பற்றி ஒன்றுமே அறியாத அப்பாவியான பக்ஸ்டன் அந்த நாடகத்தில் வந்த ஒவ்வொரு நடிகரும் நடிகையும் பேசிய வசனங்களில் காட்சிவாரியாக எத்தனை வார்த்தைகள் இருந்தன என்பதைத் துல்லியமாகக் கூறியதோடு நடிகைகள் ஆடிய நாட்டியங்களில் ஒவ்வொருவரும் எத்தனை ஸ்டெப் எடுத்து வைத்தனர் என்பதையும் கூறினார். விமரிசனம் கேட்டவர்கள் இப்படிப்பட்ட பதிலால் பிரமித்து நின்றனர்!

 

 

    இதிலிருந்து நுண்ணறிவுக்கும் கணிதத் திறமைக்கும் சம்பந்தமில்லை என்றே தோன்றுகிறது என்றார் ஒரு நிபுணர்.

    பெரிய திறமையைக் கொண்டிருந்தும் புகழோ அல்லது செல்வமோ இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து மறைந்தார் ஜெடிடியா பக்ஸ்டன்.

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்!

 

 

    ஆயிரத்தி எண்ணூறுகளின் இறுதியிலும் ஆயிரத்தி தொள்ளாயிரத்தின் ஆரம்ப ஆண்டுகளிலும் டைனோஸர் பற்றிய ஆராய்ச்சி தீவிரம் அடைந்தது. இந்த ஆராய்ச்சிக் களத்தில் இரு விஞ்ஞானிகள் போட்டி போட்டுக் கொண்டு  குதித்தனர். ஒருவர் ஒத்னியல் சார்லஸ் மார்ஷ் (Othniel Charles Marsh) என்பவர். இவர் யேல் பல்கலைக்கழகத்தில் பிபாடி மியூஸியத்தில் Paleontologist எனப்படும் புதைப்படிமவியல் ஆராய்ச்சி நிபுணராகப் பணியாற்றி வந்தார். இன்னொருவர் எட்வர்ட் ட்ரிங்கர் கோப் (Edward Drinker Cope) என்பவர்.  இவர் பிலடெல்பியாவில் அகாடமி ஆஃப் நேச்சுரல் ஸயின்ஸில் பணியாற்றி வந்தார்.

 

 

    இருவருக்கும் இடையே இருந்த கடும் போட்டி விரும்பத்தகாத வகையில் திரும்பியது.  புதைப்படிமங்களைக் கண்டுபிடிக்கும் வேட்டை ஒன்றில் மார்ஷ் அங்கு பணியாற்றும் உதவியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து கோப்பின் ஆய்வைத் திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டார். இன்னொரு சமயம் உளவாளிகளை அனுப்பி கோப் என்ன ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள முயன்றார்.

 

 

    இருவரும் ஒருவரை ஒருவர் விஞ்ச அடுத்தவர்களின் புதைப் படிமம் கண்டுபிடிப்பதற்காகத் தோண்டிய  குழிகளில் டைனமைட்டை வெடிக்கச் செய்கின்றனர் என்ற அளவில் வதந்தி பரவியது. இருவரும் பல வருட் காலம் பத்திரிகைகளில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டும் மட்டம் தட்டிக் கொண்டும் கட்டுரைகளை எழுதி வந்தனர்.

 

    என்றாலும் கூட இந்த இருவரின் ஆராய்ச்சியும் புதைப்படிமவியலில் ஒரு பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை தான்!

##

 

 

 

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 2 (Post No.3795)

Written by S NAGARAJAN

 

Date: 7 April 2017

 

Time uploaded in London:-  6-36 am

 

 

Post No.3795

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பிப்ரவரி 2017 ஹெல்த்கேர் இதழில் வெளியான கட்டுரை

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 2

 

by ச.நாகராஜன்

 

 

7) நீங்கள் சாப்பிடும் சூயிங் கம் உங்கள் வயிற்றில் ஏழு வருடங்கள் தங்கி இருக்கும்.

 

சூயிங் கம்மில் இருக்கும் எலாஸ்டமர்கள், ரெசின்கள், வேக்ஸ் போன்ற  இடு பொருள்கள் ஜீரணிக்க முடியாதவையே. ஆனால் அதற்கு அவை ஏழு வருடங்கள் உங்கள் வயிற்றில் தங்கி இருக்கும் என்று அர்த்தமில்லை. அனைவராலும் பரிந்துரைக்கப்ப்டும்  பைபர் உள்ளிட்ட உணவு வகைகளும் கூட ஜீரணிக்க முடியாதவையே. ஆனால் ஜீரண அமைப்பானது வலிமை வாய்ந்த ஒன்று.  உட்கிரகிக்க முடியாதது என்று ஒன்று இருந்தாலும் கூட் அது தொடர்ந்து தன் வேலையைச் செய்யத்தான் செய்யும். சூயிங்கம்மின் ஒட்டுப் பசை போன்ற விசித்திரமான  இயல்பு பற்றிக் கவலைப்பட வேண்டாம்.. அது ஜீரணப் பாதை வழியே சென்று நேராக டாய்லட்டைத் தான் அடையும்.

 

8) இருட்டில் படித்தாலோ அல்லது டிவியின் அருகில் இருந்து பார்த்தாலோ உங்கள் பார்வை பழுதுபடும்.

மங்கிய வெளிச்சத்தில் பார்ப்பதோ அல்லது பலவண்ணம் கொண்ட டிவி டியூபை அருகிலிருந்து  பார்ப்பதோ நிச்சயமாக உங்கள் கண்களை அதிகம் உழைக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது நீண்டகால சேதத்தை விளைவிக்கும் என்பதற்கு இது வரை ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் இது ஒருவேளை உணமையாய் இருந்திருக்கக் கூடும் ஏனெனில் அப்போது சில டிவி பெட்டிகள் அதிக கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் தன்மை உடையனவாக தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு பல காலம் ஆகிறது. இன்றைய டிவி பெட்டிகளும் கம்ப்யூட்டர்களும் பாதுகாப்பானவையே.

உங்கள் குழந்தைகள் டிவி அல்லது கம்ப்யூட்டரின் அருகில் இருந்து பார்த்தால், அது அவர்களின் கண்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகத் தோன்றினால் ஒரு டாக்டரிடம் சென்று கண் பார்வையைப் பரிசோதிப்பது நல்லது. தான். என்றாலும் கூட டிவி அருகிலிருந்து பார்ப்பது கண்ணாடி அணியும் தேவையை உருவாக்காது..

 

9) ஒரு நாளைக்கு நீங்கள் எட்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.

பொதுவாகப் பார்த்தால் உடலில் நீர்ச்சத்தே இல்லாமல் நாம் நடப்பதில்லை. அத்துடன் நமது உடல் பொதுவாகவே தனது திரவத்தின் அளவை சீராக்கிக் கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது 1945ஆம் ஆண்டு கிளப்பி விடப்பட்ட ஒரு தகவல். நேஷனல் ரிஸர்ச் கவுன்ஸிலைச் சேர்ந்த  ‘ஃபுட் அண்ட் நியூட்ரிஷன் போர்ட்; என்ற அமைப்பானது  வயதுக்கு வந்தவர்கள் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் நீர் அருந்த வேண்டும் (எட்டு டம்ளர் நீருக்குச் சமம்) என்று தெரிவித்தது. ஆனால் இதில் பரிதாபம் என்னவென்றால் அனைத்து ஊடகங்களும் இந்த வரியுடன் நிறுத்திக் கொண்டது. அடுத்த வரியைக் கவனிக்கவே இல்லை. அடுத்த வரியில் அது, இந்த இரண்டரை லிட்டர் நீரும் உங்களுக்கு உங்கள் உணவிலிருந்தே கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது.

ஆகவே இப்போது இந்த வரி இப்படி திருத்தப்பட வேண்டும். எட்டு டம்ளர் தண்ணீரை ஒரு நாளைக்கு குடியுங்கள் அல்லது அந்த அளவு நீரைத் தரும் உணவைச் சாப்பிடுங்கள்!

 

 

10) சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்துத் தான் நீச்சல் அடிக்கச் செல்ல வேண்டும்

 

இந்தத் தவறான தகவல் ஏராளமானோரின் பொன்னான மணி நேரங்களை வீணாக்கியது தான் மிச்சம். சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்துத் தான் நீச்சலுக்குச் செல்ல வேண்டும் என்று சொல்வதற்கான ஒரு காரணமும் உண்மையில் இல்லை. ஒரு பிரமாதமான விருந்திற்குப் பின்னர் எந்த விதமான உடல் ப்யிற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்பது பொதுவான உண்மை  தான்.   ஆனால் அப்படிப்பட்ட விருந்தை தினமும் ஒருவர் சாப்பிடுவதில்லை.

தினமும் சாதாரண உணவு வகைகளைத் தான் சாப்பிடுகிறோம். இன்னொன்று, விருந்தோ சாதாரண சாப்பாடோ அதிக வேகமாகப் பாயும் நீர் எப்போதுமே ஒருவருக்கு ஆபத்துத் தான்! அப்படிப்பட்ட நீரை விட்டுப் பாதுகாப்பான இடத்திற்குத் தான் நீங்கள் நீந்தச் செல்ல வேண்டும்.

 

11) இறந்த பிறகும் கூட விரல் நகங்களும் முடியும் வளரும்

 

இந்தத் தவறான தகவல் பல வருடங்களாக இயற்பியல் நிபுணர்கள் மறுக்க முடியாத ஒன்றாக இருந்தது. இதை அவர்களால் காரணத்துடன் மறுக்கவும் முடியவில்லை. இப்போது சரியான தகவல் தெரிய வருகிறது. இறந்த பின்னர் உடலில் உள்ள தோல் வறள ஆரம்பிக்கிறது. மெலிதான திசுக்கள் பின்னடைவு அடைகிறது. தோல் வறளும் போது நகங்கள் பார்ப்பதற்குத் தெளிவாகவும் பிரதானமாகவும் இருக்கிறது. இதுவே தான் முடி வளர்வது போலத் தோன்றுவதற்கும் காரணமாக ஆகிறது. தோல் சுருங்க ஆரம்பிக்கவே முடி மிகவும் பிரதானமாக ஆகிறது.வளர்வது போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவிக்கிறது!

 

12) ஷேவ் செய்யப்பட்டவுடன் முடி வேகமாகவும், சொர சொரப்பாகவும், கறுப்பாகவும் ஆகிறது

இந்த தகவல் தவறு என்பதை நீங்களே உங்கள் முடியின் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் அறிய முடியும். புதிய முடி வளரும் போது அதன் நுனி மழுங்கி இருக்கும். நாட்பட நாட்பட, அது நலிந்து மெலிதானது போலத் தோன்றும். அது சரி, அது ஏன் கறுப்பாகக் காணப்பட வேண்டும். மற்ற இடங்களைப் போல சூரிய வெளிச்சத்தால்  ப்ளீச் செய்யப்படாததால் தான்!

இது சம்பந்தமாக ஒரு ஆய்வு கூட இருக்கிறது. 1928இல் நடந்தது இது. ஷேவ் செய்த போதும் ஷேவ் செய்யப்படாத போதும் உள்ள முடி வளர்ச்சி பற்றி செய்யப்பட்ட ஆய்வில்  அது கறுப்பாகவும் இல்லை, சற்று கனமாகவும் இல்லை, அது வேகமாகவும் வளரவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது! சமீப காலத்திய ஆய்வுகளும் கூட இதை நிரூபிக்கின்றன.

 

12) காரமான உணவு வகைகள் மற்றும் மன அழுத்தம் அல்சர் என்னும் வயிற்றுப் புண்ணை உருவாக்குகின்றன

இரவு சாப்பிட்ட கார உணவு தான் வயிற்றுப்புண்ணை உருவாக்கி விட்டது என்று மறுநாள் காலையில் எண்ணினால் அது தவறு. ஒரு காலத்தில் டாக்டர்கள் மன அழுத்தம், வாழ்க்கை முறை மற்றும் கார வகை உணவுகளே அல்சருக்கு காரணம் என்று நம்பினர். ஆனால் இப்போதோ அல்சருக்கு காரணம் Helicobacter pylon  என்ற பாக்டீரியா என்பதைத் தெரிந்து கொண்டனர்.

வயிறில் சிறு குடலில் ஏற்படும்  புண்கள் சில சமயம் சில மருந்துகளினால் கூட வருகின்றன. ஆஸ்பிரின் இரும்புச் சத்துக்கான அயர்ன் மாத்திரைகள் ஆகியவையே வயிற்றுப் புண் ஏற்பட முக்கிய காரணம் என்று டாக்டர் அருண் சுவாமிநாத் என்பவர் கண்டு பிடித்துள்ளார். இவர் நியூயார்க் நகரில் உள்ள லெனாக்ஸ் ஹில் மருத்துவமனையில் இன்ஃப்ளேமெடரி பவல் டிசீஸ் திட்டத்திற்கான டைரக்டர் ஆவார்.

 

 

13)உங்கள் உடலில் உஷ்ணத்தின் பெரும் பகுதி தலை வழியே செல்கிறது.

இந்தத் தகவல் தவறானது என்று 2006ஆம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது. மனித உடலில் உள்ள மொத்த உஷ்ணத்தில் தலை வழியே செல்லும் உஷ்ணமானது 7 முதல் 10 சதவிகிதம் அளவே என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது  தலையின் வழியே செல்லும் உஷ்ணமானது மொத்த உடலில் உள்ள தோல் பரப்பில் தலையில் உள்ள தோல்பரப்பின் விகிதாசார அளவிலேயே இருக்கிறது!

 

14) குளிரில் ஈரத் தலையுடன் வெளியில் சென்றால் ஜலதோஷம் பிடிப்பது நிச்சயம்

 

குளிர் காலத்தில் தலையை உலர்த்த நேரமில்லை என்று ஈரத் தலையுடன் வெளியில் செல்கிறீர்கள்,! ஜலதோஷம் வந்து விடும் என்று கவலைப் பட வேண்டாம்.

எல்லோரும் ஈரத் தலை ஜலதோஷத்தைத் தரும் என்று சொல்கிறார்கள். ஆனால் நிபுணர்களின் கருத்துப் படி வைரஸ் மற்றும் பாக்டீரியா தான் ஜலதோஷத்தைத் தருகின்றனவே தவிர காலநிலையில் உள்ள உஷ்ண நிலை மாறுபாடு அல்ல. ஆகவே தலை சிறிது ஈரமாக இருந்தாலும் கூட ஜலதோஷம் வந்து விடுமோ என்று கவலைப்படுவதை இனி விட்டு விடலாம்.

(அடுத்த இதழில் முடியும்)

. *************

 

ஆதாரம் : லைவ் ஸயின்ஸ் இதழ்

நன்றி: லைவ் ஸயின்ஸ்

 

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்-1(Post No.3788)

Written by S NAGARAJAN

 

Date: 5 April 2017

 

Time uploaded in London:-  6-22 am

 

 

Post No.3788

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளி வரும் மாத பத்திரிகை ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆரோக்கியம் பற்றிய சில தவறான தகவல்களும் நம்பிக்கைகளும்! – 1

 

by ச.நாகராஜன்

 

திருப்பித் திருப்பிச் சொல்லப்பட்டிருப்பதால் நாம் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ள சில தகவல்கள் உண்மையில் தவறுதலான தகவல்களே!

 

இதை மருத்துவ அறிஞர்கள் விளக்குகின்றனர்.

சில தகவல்களின் இன்றைய உண்மையான நிலையை அறிந்து கொண்டால் பயப்படாமல் வாழலாம்; பிறரை பயமுறுத்தாமலும் வாழலாம்!

 

 

  • தடுப்பூசி பற்றிய தவறான தகவல்

 

தடுப்பூசி போட்டுக் கொள்வது ஃப்ளூவை உண்டாக்கும் என்பது தவறான தகவல் என்பது ராக்கேல் வ்ரீமேன் தரும் உண்மைச் செய்தி!

‘அரைகுறை உண்மைகளை நம்பாதீர்கள்’ என்ற நூலை இன்னொருவருடன்  இணைந்து எழுதியுள்ளார் டாக்டர் ராக்கேல் வ்ரீமேன் (Don’t Swallow your Gum! Myths, Half Truths and outright lies about your Body and Health, Dr Rachel Vreeman , Co-author of the book.)

 

 

தடுப்பூசி ஆடிஸம் என்ற வியாதியையும் உருவாக்கும் என்ற செய்தி பரப்பப்பட்டுள்ளது. அதுவும் தவறு தான் என்கிறார் இவர்.

எட்டுக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதால் தான், அவர்களுக்கு ஆடிஸம் எனப்படும் மனச்சிதைவு நோய் உருவானது என்று கூறியுள்ளனர்.

இதனால் ஏகப்பட்ட் வதந்திகள் பரவலாயின. ஆனால் 2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய ஆய்வில் இது உண்மை இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

இந்த ஆய்வுக்காக 530000 பேர்கள் ஆமாம் ஐந்து லட்சத்து முப்பதினாயிரம் குழந்தைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். தடுப்பூசிக்கும் மனச்சிதைவு நோய்க்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பது இந்த ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்றாலும் வதந்தி வதந்தி தானே! விடாமல் பரவுகிறது!!

  • விட்டமின் துணை உணவு பற்றிய தவறான தகவல்

 

விட்டமின் துணை உணவுகள் ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது தவறான தகவல். இதை நம்பவே கூடாது. இது பொய் என்பது ஒரு புறமிருக்க உண்மையில் இந்த துணை உணவுகள் உண்மையில் மகா ஆபத்தானவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

ஒரு பிரம்மாண்டமான ஆய்வு 25 வருடங்களாக நடத்தப்பட்டு வந்தது.2015ஆம் ஆண்டில் ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது. அதிகமாக விடமின்களை சாப்பிடுவது சில சமயம் கான்ஸரில் கொண்டு போய் விட்டு விடும்! நான்கு வயது பையன் ஒருவன் இப்படி விடமின்களைச் சாப்பிட்டதால் விடமின் டி நச்சுநோய்க்கு ஆளானான்.

இதற்குப் பதிலாக விடமின்கள் உள்ள நல்ல உணவைச் சாப்பிடுவதே நலம் என்கின்றனர் மருத்துவர்கள்!

 

 

  • குளிர்கால பருவநிலை பற்றிய தவறான நம்பிக்கை

 

குளிர்கால பருவநிலை உங்களுக்கு நோயைக் கொடுத்து விடும் என்பது தவறான நம்பிக்கை!

வ்ரீமேன் லைவ் சயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், வெறும் குளிரானது குளிரைத் தருவது உண்மை தான் என்றாலும் இப்படிப்பட்ட உஷ்ணநிலை மட்டும் வைரஸ் தாக்குதலைத் தந்து விட முடியாது என்கிறார்.

 

தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற பத்திரிகை இதை விரிவாக வெளியிட்டுள்ளது.

ஒரு இதமான உஷ்ணநிலையில், குளிர் கிருமிகளைத் தும்மும் போது ஏற்படும் நோயை விட, நிச்சயமாக ஐஸ் பாத் எடுப்பதாலோ அல்லது குளிர் அறையில் நடுங்குவதாலோ நோய் வர வாய்ப்பில்லை என்பது தான் உண்மை!

 

ஆனாலும் கூட குளிரான சூழ்நிலை விஷக்கிருமிகளை எப்படித் தாக்குகிறது என்பது தெரியவில்லை.

 

சில விஞ்ஞானிகள் குளிர் காலத்தில் எல்லோரும் வீட்டில் அதிக நேரம் இருப்பதாலும் ஒருவருட்ன் ஒருவர் அதிகமாக ஊடாடுவதாலுமே கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர் என்கின்றனர்!

 

 

  • மூளைத் திறனைப் பயன்படுத்துதல் பற்றிய தவறான தகவல்

 

பல ஆண்டுகளாகத் திருப்பித் திருப்பிச் சொல்லப்படும் ஒரு தகவல் நாம் நமது மூளைத் திறனில் பத்து சதவிகிதமே உபயோகப்படுத்துகிறோம் என்பது!

 

தன்னம்பிக்கை ஊட்டும் மோடிவேஷனல் பேச்சாளர்களுக்கு இப்படிப் பேச்சை ஆரம்பிப்பது ஒரு வழக்கமான ஆரம்பம். 1907இலிருந்தே இவர்கள் உங்கள்  மூளையில் பத்து சதவிகிதமே நீங்கள் பயனப்டுத்துகிறீர்கள் என்று சொல்லி வருகின்றனர். ஆனால் இது உண்மை இல்லை.

 

வரீமேனும் இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆரான் கரோலியும் ஒரு புத்தகத்தையே இப்படிப்பட்ட மூட நம்பிக்கையைப் போக்க எழுத வேண்டியதாயிற்று!.

இன்று மூளையை ஸ்கேன் செய்து அதன் இயக்கத்தை எந்த ஒரு நேரத்திலும் பார்க்கும் விஞ்ஞானிகள் இந்தத் தவறான த்கவலை நினைத்துச் சிரிக்கின்றனர்!

 

இது ஜனரஞ்சகமான உணமை, அவ்வளவு தான்! நாம் நமது மூளையின் முழுத் திறனை எட்டவில்லை என்று நம்பும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் பரப்பப்படும் தகவ்ல் இது என்கிறார் வ்ரீமேன்!

 

  • இனிப்பு எனர்ஜியை அதிகமாக்கி பிரச்சினை தரும் என்பது பற்றிய தவறான தகவல்

 

 

ஜீனி அல்லது இனிப்பைச் சாப்பிடும் குழந்தைகள் ‘லிட்டில் பிசாசுகளாக’ மாறிக் கொண்டாட்டம் போடுகின்றனர் என்பது எல்லாப் பெற்றோரின் நம்பிக்கையாக இருக்கிறது.

கூல் எய்ட் என்ற சர்க்கரை இனிப்பில்லாத ஒரு மருந்தை குழந்தைகளுக்குக் கொடுத்தனர் ஆய்வாளர்கள். ஆனால் அதில் இனிப்பில்லை என்ற தகவல் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

பெற்றோர்களோ தங்கள் குழந்தைகள் இனிப்பைச் சாப்பிட்டதால் அதிக எனர்ஜியுடன் ஓவர்-ஆக்டிவ் ஆக இருப்பதாகப் புகார் செய்தனர்!

 

1994இல் ஜர்னல் ஆஃப் அப்நார்மல் சைல்ட் சைக்காலஜி என்ற பத்திரிகையில் இந்த வேடிக்கையான ஆராய்ச்சியின் முழு விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

  • தலையில் அடிபட்டு விட்டால் அது மிகவும் ஆபத்து என்ற நம்பிக்கை

 

தலையில் அடிபட்ட ஒருவர் சுயநினைவுடன் இருக்க வைக்கப்பட வேண்டும் பொதுவாக அனைவரிடமும் உள்ள ஒரு நம்பிக்கை.

தலையில் அடிபட்டுவிட்டால் உடனடியாக மருத்துவ உதவி தேவை என்பது சரி தான்! ஆனால் இது உடனடியாக உயிரைப் பறித்து விடும் என்பது தவறு! ஒரு குறிப்பிட்ட விதமான விதத்தில் தலையில் பட்ட அடியை வைத்துக் கொண்டு பொதுவாக இந்த நம்பிக்கையைப் பரப்பி விடுகிறார்கள் அனைவரும்!

 

எந்த ஒரு அடியானது மூளையில் இரத்தக் கசிவை ஏற்படுத்துகிறதோ அது தான் ஆபத்தான ஒன்று! இவர்களுக்கு ல்யூசிட் பீரியட் (Lucid Period) என்பதைத் தொடர்ந்து கோமா நிலையோ அல்லது சில சமயம் மரணமோ சம்பவிக்கும். ஆனால் இது மிகவும் அசாதாரணமான ஒன்று. சாதாரணமாக இது எளிதில் சம்பவிக்காது. என்கிறார் வ்ரீமேன்.

டாக்டரைப் பார்த்துவிட்டு அவர் இது சாதாரணமான அடி தான் என்று சொல்லி விட்டால் கவலைப்பட ஏதுமில்லை என்பது வ்ரீமேனின் ஆறுதலான செய்தி!

 

  • இன்னும் சில தவறுதலான நம்பிக்கைகள் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்!

*************

 

ஆதாரம் : லைவ் ஸயின்ஸ் இதழ்

நன்றி: லைவ் ஸயின்ஸ்

 

 

 

சச்சரி, குச்சரி, பிச்சரின் பிதற்றல் — கம்பனின் சங்கீத அறிவு (Post No.3786)

Written by London swaminathan

 

Date: 4 APRIL 2017

 

Time uploaded in London:- 6-59 am

 

Post No. 3786

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழர்களின் அபார இசை அறிவை விளக்கும் சில பாடல்களைக் காண்போம்:-

 

நச்சு எனக் கொடிய நாகக் கள்ளொடு குருதி நக்கி

பிச்சரின் பிதற்றி அல்குல் பூந்துகில் கலாபம் பீறி

குச்சரித் திறத்தின் ஓசை களம் கொள குழுக்கொண்டு ஈண்டி

சச்சரிப் பாணி கொட்டி நிறை தடுமறுவாரும்

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

பொருள்:

அரக்கியர் சிலர் பாம்பின் விஷம் என்று கூறத்தக்க கள்ளையும், பல வகைப் பிரணிகளின் குருதியையும் குடித்து மயங்கினர்; அதனால் குச்சரி என்னும் பண்ணின் தன்மை குரலில் கலக்க, பைத்தியக்காரர் போலப் பிதற்றினர்; சச்சரி என்னும் தோல் கருவி போலக் கைகளைத் தட்டினர். அல்குலின் மீது அணிந்த மெல்லிய ஆடையையும், கலாபம் என்னும் 25 கோவையுள்ள இடையணியையும் கிழித்துக்கொண்டு மனநிலை  தடுமாறினர்.

 

இந்தப் பாட்டில் இன்னொரு விஷயமும் உள்ளது. 25 கோவையுள்ள கலாபம் என்ற இடையணியையும் அரக்கியர் அணிந்து கொண்டிருந்தனர். வராஹமிஹிரர் என்னும் அறிஞர் 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் என்சைக்ளோபீடியவில் (கலைக் களஞ்சியத்தில்) ஏராளமான கோவையுள்ள முத்து மாலைகளைப் பட்டியலிடுகிறார். உலகிலேயே அதிக நகைகளை அணிந் தவர்கள் இந்துக்கள் இதை 2200 ஆண்டுகளுக்கு முன்னுள்ள பார்ஹுத் சிற்பங்களில்கூடக் காணலாம்.

இன்னொரு பாட்டில் அரக்கியர் வீட்டில் கேட்ட சங்கீத ஒலிகளைக் கம்பன் பாடுகிறான்.

 

சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ

பொங்கு பல்முரசம் ஆர்ப்ப இல்லுறை தெய்வம் பேணி

கொங்கு அலர் கூந்தல் செவ்வாய் அரம்பையர் பாணிகொட்டி

மங்கல கீதம் பாட மலர்ப் பலி வகுக்கின்றாரை.

 

–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்

 

 

பொருள்:

கூந்தலையும் செவ்வாயயையும் உடைய தேவ மகளிர், தாளம் போட்ட படி மங்கலப் பாடல்கள் பாடினர். சங்கு வளையல், சிலம்பு, மேகலை, பாதரசம் ஆகிய அணிகலன்களின் ஒலிகள் தாழுமாறு பலவகையான முரசுகள் முழங்கின. அச்சூழலில் இல்லுறை தெய்வத்தை வணங்கி, மலரினால் அருச்சனை செய்யும் அரக்க மகளிரை, சீதையத் தெடிச் சென்ற அனுமான கண்டான்.

 

 

இங்கு அரக்கர் வீட்டில் மங்கல கீதம் ஒலித்தது, முரசுகள் முழங்கியது ஆகிய சங்கீத விஷயங்களைச் சொல்லும் கம்பன், ஆரிய-திராவிட இனவாதப் புரட்டர்களுக்கு ஆப்பு வைப்பதையும் பார்க்க வேண்டும்.

சில வெளிநாட்டு அரைவேக்காடுகளும், திராவிடப் புரட்டர்களும், ராவணன் என்பவன் திராவிடன் என்றெல்லாம் கதைகட்டி, அரசியல் செய்து வருவதை நாம் அறிவோம். ஆனால் இங்கே அரக்க மகளிர் வீட்டிலுள்ள பூஜை அறைகளில் மலர்கொண்டு பூஜை செய்ததைக் கூறுகிறான். ஒவ்வொரு வீட்டிலும் இப்படி இல்லுறை தெய்வம் இருந்ததையும் அந்த தெய்வங்களுக்குத் தமிழர்கள் மலர், இலை (வில்வம், துளசி), புல் (அருகம் புல்) முதலியன கொண்டு பூஜை செய்ததையும் கபிலர் முதலான சங்கப் புலவர்கள் பாடியிருப்பதையும் கவனிக்க வேண்டும், அரக்கர்கள், இத்தோடு, தீய குணங்களுடன் வாழ்ந்தனர் என்பதையும் அறிதல் வேண்டும்.  நமது ஊரிலுள்ள திருடர்களும்   , ஏமாற்றுப் பேர்வழிகளும், கொள்ளையர்களும் கூட தெய்வத்தை பூஜிப்பது போன்றது இது.

 

xxxx

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய “இசைத் தமிழ் அதிசயங்கள்” என்ற கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் கீழே தருகிறேன். முழுக்கட்டுரையும் வேண்டுவோர் இதே பிளாக்கில் 4 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய கட்டுரையைக் காண்க.

 

இசைத் தமிழ் அதிசயங்கள்

posted on 31 January 2013; by London swaminathan

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திருக்கிறார்:

துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

 

 பத்துப் பாட்டில்

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார் விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

 

சிலப்பதிகார உரையில்

சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் மேற்கோளாகத் தரும் பாடல்:
பேரிகை படக மிடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை
திமிலை குழமுழாத் தக்கை கணப்பறை
தமருகந் தண்ணுமை தாவிறடாரி
யந்திர முழவொடு சந்திர வலைய
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளந்த் துடுமை சிறுபறையடக்க
மாறி றகுனிச்சம் விரலேறு பாகந்
தொக்க வுபாங்கந் துடிபெறும் பாஇயென
மிக்க நூலோர் விரித்துரைத்தனரே
(தோற் கருவிகள்: தண்ணூமை, முழவு, தட்டை, முரசு, பறை, பம்பை, குளிர், தொண்டகச் சிறுபறை, கிணை, பதலை, ஆகுளி, துடி, தடாரி, எல்லரி, மத்தரி.

 

–subham–

 

 

இடிதாங்கிக் கருவி பற்றி கம்பன் தகவல்? (Post No.3772)

Written by  London swaminathan

 

Date: 30 March 2017

 

Time uploaded in London:- 10-21 am

 

Post No. 3772

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்கத் தமிழ் இலக்கியங்களில் மதில் சுவர் மீது என்ன என்ன எந்திரப் பொறிகள், கருவிகள் வைக்கப்பட்டிருந்தன என்ற குறிப்புகள் உள. அந்தக் காலத்திலேயே உயரமான கட்டிடங்களை இடி மின்னல் தாக்காமல் இருக்க நம் முன்னோர்கள் பலவழிகளைக் கண்டு பிடித்தனர்  கோபுரங்களின் மீதுள்ள மிகப்பெரிய கலசங்களில் வரகு என்னும் தானியத்தை நிரப் பிவைப்பர். இதுவும் இடி தாக்காமல் இருப்பதற்கான ஒரு உத்தி என்று சொல்லப்படுகிறது. ஆயினும் அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எது எப்படியாகிலும், இவ்வளவு காலமாக இடி தாக்கி அவைகள் அழிந்ததாகச் செய்திகள் இல்லை. கோபுரக் கலசம் விழுந்தாலும், கோபுரம் இடிந்து விழுதாலும் அவைகளின் பலவீனம்தான் காரணம் அல்லது பூகம்ப/ நில அதிர்ச்சி போன்ற இயற்கை  உற்பாதங்கள்தான் காரணம் என்றும் அறிகிறோம்.

 

கலைக் களஞ்சியங்களைப் பார்த்தால் இடி தாங்கியை (lightning rod OR conductor)  பென்சமின் பிராங்ளின் (Benjamin Franklin) கண்டுபிடித்தார் என்று போட்டிருக்கும். ஆனால் கம்பன் காலத்திலேயே இடிதாங்கிக் கம்பிகள் கோட்டைச் சுவர்களில் பொருத்தப்பட்டதாக அவன் பாடலில் இருந்து அறிகிறோம்.

 

மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்

வேதமும் ஒக்கும் விண் புகலால்

தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும்

திண் பொறி அடக்கிய செயலால

காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும்

சூலத்தால் காளியை ஒக்கும்

யாவரும் தன்னை எய்துதற்கு அரிய

தன்மையால் ஈசனை ஒக்கும்

–பால காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:-

அயோத்தி மாநகரத்தின் கோட்டை மதில் மிகவும் உயரமானது. அதன் முடிவு எங்கே இருக்கிறது என்று காணமுடியாது; ஆகையால் முடிவே காணமுடியாத வேதத்திற்கு இணையானது; இதன் ஒரு பக்கம் விண்ணுலகத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதால் இதைத் தேவர்களுக்கு ஒப்பிடலாம்;  போர் பொறிகளை (எந்திரங்களை) ஒளித்து வைத்திருப்பதால் பொறிகளை (ஐம்புலன்களை) அடக்கிய முனிவர்களுக்குச் சமமானது. காவல் தொழிலில் கலைமானை வாஹனமாகக் கொண்ட துர்க்கைக்குச் சமம். தன் சிகரத்தில் இடி தாங்கி ஆகிய சூலத்தைப் பெற்றிருப்பதால் காளி தேவி போல இருக்கும்;  எவரும் நெருங்க முடியாத தன்மையால் ஈசனைப் போல இருக்கும்.

 

“மதில் சுவர் மிக உயரமானது” — என்று ஒரே வரியில் சொல்லி இருக்கலாம். ஆனால் அங்கே அது வேதம், தேவலோகம், முனிவர், துர்கை, காளி, ஈஸ்வரன் போன்றது என்று சொல்லும் அழகு மிகவும் ரசிக்கத்தக்கது. அது மட்டுமல்ல; பொறி, துக்கை என்ற சொற்களில் இரு பொருளை வைத்து சிலேடை செய்து விளையாடுகிறான் கம்பன்!

 

ஐம்பொறி என்பது ஐம்புலன்கள்; மதிலில் ஒளிந்திருக்கும் பொறிகள்- எந்திரங்கள்.

 

துர்கா என்றால் பாதுகாப்பு அரண் என்று பொருள்; வடநாட்டில் கோ ட்டைகளின் பெயர்கள் ‘துர்க்’ என்றே முடியும் (தமிழ்நாட்டிலும் கூட இப்படிச் சில ஊர்கள் உண்டு). நம்மைப் பாதுகாப்பதால்தான் அவளைத் துர்கை என்று வழிபடுகிறோம்.

 

பாட்டில் இடிதாங்கி என்ற சொல் இல்லை. ஆயினும் கோட்டையின் மீது திரிசூலத்தை நட்டு வைப்பதும் கோவில் கோபுரம் மீது உலோகக் கலசங்களை வைப்பதும் இதற்காகவே என்பதை எல்லோரும் அறிவர். பழைய உரைகாரர்களும் இப் படியே பொருள் சொல்லி இருக்கிறார்கள்.

 

கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இது தமிழனின் கண்டு பிடிப்போ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் வட நாட்டில் கோட்டைகளின் மீது திரிசூலம் இருந்ததாக பார்த்தது இல்லை; படித்ததுமில்லை. மேலும் கம்பன், சோழ நாட்டில் என்னென்ன கண்டானோ அதை அப்படியே அயோத்தி நகரத்தின் மீது ஏற்றிப் பாடி இருக்கிறான். ஆக சோழர் காலத்தில் கோட்டைகளின் மதில் மீது சூலம் இருந்தது தெளிவாகிறது. கோவிலின் உயரத்துக்கேற்ற பிரம்மாண்டமான கோபுரக் கலசங்களை வைத்தவனும் தமிழனே. நானே மதுரை மீனாட்சி கோவிலின் தெற்கு கோபுரத்தின் மீதேறிக் கலசங்களைக் கட்டிப்பிடித்து நின்றிருக்கிறேன். 169 அடி உயரத்தில் நின்றுகொண்டு மதுரையைப் பார்க்கும்போது தலை சுற்றும்; காற்றுவேறு அடிப்பதால் ஒரு சில நிமிடங்களுக்கு கலசத்தைக் கட்டிக்கொண்டே நின்று பார்த்துவிட்டு போதும் என்று திரும்பி விடுவோம். கோபுரக் கலசங்களையும், கோட்டையின் திரிசூலங்களையும் சேர்த்து வைத்துப் பார்க்கையில் இதன் காரணமும் விளங்குகிறது. இது தமிழனின் கண்டு பிடிப்பு என்றும் தெரிகிறது. ஆயினும் இவை,  விஞ்ஞான முறையில் இடியைத் தடுக்கவல்லதா என்பதை ஆராய்தல் அவசியமே!

 

–SUBHAM–