கங்கையின் பாவம் எப்படிப் போகும்? கம்பன் தரும் அதிசயத் தகவல்

gaumukh

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Wriiten by London swaminathan

Date : 9 September  2015

Post No. 2140

Time uploaded in London: – காலை 9-01

மஹாபாவங்களைச் செய்தவர்கள் எல்லோரும் கங்கையில் போய் நீராடியவுடன் அந்தப் பாபங்கள் நீங்கி புண்ணிய ஆத்மாக்களாக வெளியே வருகின்றனர். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக கங்கையில் சேர்ந்த பாபங்களை எல்லாம் கங்கா தேவி என்ன செய்வாள்? அவளிடம் சேர்ந்த பாபம் எப்படிப் போகும்? இதற்கு கம்பன் விடை சொல்கிறான். ராமபிரான் போன்ற புண்யாத்மாக்கள், கங்கையில் நீராடினால், அந்தப் பாபங்கள் கங்கா தேவியிடமிருந்து அகன்றுவிடும்.

ganga-sacred-confluence

கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா

பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்

என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்தை

உன்னின் நீகினென் உய்ந்தனென் யான் என்றாள்

–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:–என்றும் அழியாத ஜீவநதியான கங்காதேவி ராமனை வணங்கி, “ இவ்வுலகத்தில் உள்ளவர்கள், தாம் செய்த – சொல்ல இயலாத பெரும் பாவங்களை என்னில் மூழ்கி நீக்கிக் கொள்வார்கள். என்னிடம் சேர்ந்த அந்தப் பாபங்களை எல்லாம், இன்று நீ நீராடியதன் மூலம் நான் போக்கிக் கொண்டேன்.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற் போல!

கங்கை என்னும் கடவுள் திருநதி

தங்கி வைகும் தபோதர் யாவரும்

எங்கள் செல்கதி வந்தது என்று ஏமுறா

அம் கண் நாயகற் காண வந்து அண்மினார்

–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:–கங்கை என்னும் தெய்வத் திருநதிக் கரையில் வாழும் தவ சீலர்கள் அனைவரும், தவத்தின் மூலம் நாங்கள் சென்று அடைய வேண்டிய புகலிடமான தெய்வம் இங்கேயே வந்துவிட்டது என்று அழகிய விழிகளை உடைய ராமனைக் காண்பதற்காக அவனிருக்கும் இடத்திற்கு சென்றனர்.

river-ganges-map

‘கங்கை என்னும் கடவுள் திருநதி’, ‘கன்னி நீக்க அருங் கங்கை’, ‘தள்ளும் நீர்ப் பெருங் கங்கை’, ‘வெண் நிறக் கங்கை’, ‘கங்கை அரும் புனல்’, ‘விரி திரைப் புனல் கங்கை’, ‘நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால் நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி’ – என்றெல்லாம் கங்கையை வருணிக்கிறான் கவி சக்ரவர்த்தி கம்பன்!

நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்

நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி

–என்று சொல்வதன் காரணம் என்ன தெரியுமா?

கங்கையோ கன்னி இளம் பெண். அவளுக்கு நரைத்த கூந்தல் எப்படி வரும்? அலைகள் வீசி, நுரை பொங்குவதால், அது நரைத்த கூந்தலுடைய ஒரு பெண் போலத் தோன்றுகிறதாம்! இது கம்பனின் கற்பனை! பொதுவாக நதிகளைக் கன்னி இளம் பெண்ணாகவும், கட்டழகிகளாகவும் வருணிப்பது இந்திய மரபு. காவிரியையும் வையை என்னும் பொய்யாக் குலக்கொடியையும் இளங்கோ அடிகள், சிலப்பதிகாரத்தில் வருணிப்பதைப் படித்தோருக்கு இது நன்கு விளங்கும்.

கம்பன் கவிநயம் படிக்கப் படிக்கத் தெவிட்டாதது!!!

LEAD Technologies Inc. V1.01

LEAD Technologies Inc. V1.01

–சுபம்–

தான் பெற்ற குஞ்சுகளையே கொல்லும் அதிசயப் பறவை!

Mockingbird,_

Article No.2014

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 24  July 2014

Time uploaded in London : காலை 6-02

‘யுதனேசியா’ என்னும் கருணைக் கொலை பற்றி தற்காலத்தில் பத்திரிக்கைகளில் நிறைய படிக்கிறோம். யாரேனும் தீராத நோயில் நீண்டகாலம் கஷ்டப்பட்டால், அவர் இருப்பதைவிட போவதே மேல் என்று அவரை மேலுலகத்துக்கு அனுப்பிவைப்பது பல நாடுகளில் சட்டபூர்வம் ஆக்கப்பட்டுவிட்டது. அன்பின் காரணமாக ஒரு வகைப் பறவையும் இப்படி செய்கிறது! தான் பெற்ற குஞ்சுகளையே அது கொன்றுவிடுகிறது.

அமெரிக்காவில் மாக்கிங் பர்ட் mocking- bird – என்னும் பறவை வகை உண்டு. இவை கிளி, மைனா போல தான் கேட்ட ஒலிகளை அப்படியே செய்துகாட்டி விகடம் செய்யும் பறவை வகை.

இது பற்றிய அதிசயச் செய்தி இதோ:–

ஆர்ச்சிபால்ட் ரட்லெட்ஜ் என்பவர் எழுதுகிறார்: “நான் சிறுவயதில் படு சுட்டிப்பயல். அமெரிக்காவில் கரோலினாவில் வசித்தபோது பறவைகளைக் கூண்டில் அடைத்துப் போட்டு மகிழ்வேன். ஒரு மாக்கிங் பறவை வகையைப் பிடித்து கூண்டில் போட்டால் வாழ்நாள் முழுதும் அதன் இசையைக் கேட்டு மகிழலாம் என்று குஞ்சு ஒன்றைப் பிடித்துக் கூண்டில் அடைத்தேன். என்ன அதிசயம் பாருங்கள்! மறு நாள் அதன் தாய் வந்து அதற்கு உணவு ஊட்டியது.

அட நமக்கு இனி செலவும் இல்லை; கவலையும் இல்லை! ஒரு தாய் கவனிப்பது போல நாம் கவனிக்க முடியாது. அன்பைத் தடைப் போட்டுத் தடுக்கும் தாழ்ப்பாள் கிடையாதே என்று எண்ணினேன்.

அந்தோ பரிதாபம்; இரண்டாவது நாள் கூட்டில் உள்ள பறவையைக் கொஞ்சுவதற்காக எட்டிப் பார்த்தேன். அது இறந்து கிடந்தது. எனக்கு மிகவும் வருத்தம்.ஆனால் காரணம் தெரியவில்லை.

புகழ்பெற்ற அமெரிக்க பறவையியல் நிபுணர் ஆர்தர் வெய்ன் என்பவரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார்: மாக்கிங் பறவை வகைப் பறவைகள் தங்கள் குஞ்சுகள் கூண்டில் அடைக்கபட்டால், அதற்கு விஷமுள்ள பழங்களைக் கொண்டுவந்து ஊட்டிக் கொன்றுவிடும். ஏனெனில், தனது அன்பிற்கினிய குஞ்சுகள் இப்படி அடைபட்டு, சித்திரவதைப் படுவதை அவைகளின் தாய் விரும்புவதில்லை” என்றார்.

பறவைகளிடமிருந்துதான் மனிதன் கருணைக் கொலையைக் கற்றுக் கொண்டானோ?

mockingbirdstamp

பறவைகளுக்குதான் எவ்வளவு சுதந்திர உணர்வு!

சோழ மன்னன் செங்கணானிடம் தோல்வியடைந்து, சிறைக்காவலில் வைக்கப்பட்ட கணைக்கால் இரும்பொறை, காவலர்கள் தண்ணீர் தர தாமதித்ததால், மானத்துடன் உயிர்துறந்தான். அதுபோல சிறை வாழ்வை விட இறப்பதே மேல் என்று எண்ணுகின்றன இவ்வகைப் பறவைகள்.

இதே போல வேடன் பிடித்த ஆண் புறா இறக்கக் கண்டு, பெண்புறாவும் தீயில் விழுந்து வேடனின் பசிதீர்த்த கதையை நாம் அறிவோம்.

கழுகு விரட்டி வந்த, புறாவுக்காக தன்னுயிரையே ஈந்த சோழர்குல முன்னோனான சிபிச் சக்ரவர்த்தி கதையையும் புறநானூற்றில் கண்டோம்.

“பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான்” – என்றும் பாடுகிறோம். ஆனால் பறவைகளிடமிருந்து மனிதர்கள் கற்றது ஏராளமானவை என்பதை நம் புலவர்கள் பாடத் தவறவில்லை.

இந்திய இலக்கியங்களில் காகம், குருவி, கிளி, குயில் முதலியன பற்றிப் புலவர்கள் பாடியதைப் பற்றி எழுதினால் புத்தகங்கள் அளவுக்கு விரிவடையும்!

கலியுக அறிகுறி- குருமார்கள் குலிங்க பக்ஷி போலத்திரிவர்!! 8 வயதில் குழந்தை பெறுவர்!

PloverCrocodileSymbiosis

Research Article written by London swaminathan

Post No. 1774; Date 4th April 2015

Uploaded from London at  13-10 (லண்டன் நேரம்)

கல்கி புராணம்

சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் கு.அனந்தாசாரியார் – 1903 — விலை12 அணா

 

சென்ற வாரம் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று கல்கி புராணத்தைப் படித்தேன். அதிலுள்ள சில சுவையான விஷயங்களைத் தருகிறேன். கூடிய மட்டிலும் கு.அனந்தாசாரியார் 1903-ல் பயன்படுத்திய சொற்களை அப்படியே தருகிறேன். குலிங்க பக்ஷி பற்றி கல்கி புராணம் கூறுவது முன்னர் நான் எழுதிய “மஹா பாரதத்தில் ஒரு அதிசயப் பறவை” (ஜூலை1, 2014) என்ற கட்டுரையில் சொன்ன பூலிங்கப் பறவையே என்பதும் தெரிந்தது. இது பற்றி வைஷ்ணவப் பெரியார் ஸ்ரீ வேதாந்த தேசிகன் (கி.பி 1268—1370) எழுதிய தயா சதகத்தில் வரும் சுவையான விஷயத்தையும் கீழே படியுங்கள்:–

ஓ, சூத முனிவரே! மனிதர்கள் முப்பதடிப் பிரமாணமுள்ளவர்கள்,கலி யுகத்தில் முடிவில் மூன்றங்குலப் பிரமாணமாகி விடுவர்.

கலியுகத்தில், ஜனங்கள் அன்ன விக்ரயம் (விற்பது) செய்வார்கள்; அந்தணர்கள் மந்திரங்களை விற்பார்கள்; ஸ்த்ரீகள் பதிவ்ரதா தர்மத்தை (கற்பை) விற்பார்கள்.

பிராமணர்கள், வேதங்களைக் கீழ்ப்பட்ட ஜாதியினருக்குச் சொல்லிப் பிழைப்பர். பிராமண ஸ்த்ரீகள் மோர், தயிர், பால் விற்பார்கள்; வைஸ்யர்கள் எல்லோரும் மாமிசம் விற்பார்கள்

symbiosis

மானுக்குதவி செய்யும் பறவை

கலியுகத்தில் பிராமணாதி மூன்று வர்கத்தினர் ஸ்வதர்மத்தை இழந்து வயிறு நிறைப்பதிலும், மாதர்களைப் புணர்வதிலும் ஆசை கொள்வர்.  சூத்திரர்கள் நற்செய்கை, நல்லொழுக்கம் உள்ளவர்களாயிருப்பார்கள்.

ஸ்த்ரீகள் (பெண்கள்) எல்லோரும் எட்டாவது வருஷத்தில் புத்திரர்களைப் பிரசவிப்பார்கள்- நியாயாநியாயாயமில்லா மல் (நியாயம்+ அநியாயம்) புருஷர்களைப் புணருவார்கள்.

மாதர்கள் யாவரும் பன்றிபோல் பத்து எட்டு குழவிகளைப் பெறுவார்கள். இரு கரத்தாலும் சிரத்தை (தலையை) சொறியப்போகிறார்கள்.

ஓ, புத்திமானே, மாதர்கள் புருஷனை வஞ்சனை செய்து, புருஷனுக்கு முன் உண்ணுதலும், உறங்குதலும் செய்யப்போகிறார்கள்

பூமிகளெல்லாம் சுரமில்லாமல் சுவல்பப் பலனாய் பலிக்கப்போகிறது. கொடிகள் யாவும் செழிப்பாக வளர மாட்டா.

Kalki

கல்கி அவதாரம்

விவாக ரத்து அதிகரிக்கும்!

ஜனங்களைப் பிணிகள் பீடிக்கப் போகிறது. விதவைகள் ஒரு புருஷனை மணந்து சந்ததியுண்டு பண்ணுவர். சுமங்கலி ஸ்த்ரீக்கள் புருஷனோடு சண்டையிட்டு விதவைகளைப் போல் ஆவர் (டைவர்ஸ்- விவாக ரத்து அதிகரிக்கும் என்று சொல்வதாக நான் அர்த்தம் செய்கிறேன். பம்பாய், கலகத்தா, டில்லி, சென்னை ஒவ்வொரு நகரத்திலும் ஆண்டுக்கு 8000 விவாகரத்து வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. இதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்த நம் முன்னோர்களை எண்ணி வியக்கிறேன்)

கலியுகத்தில் கொடையாளிகள், தரித்திரர்களாகவும் கிருபணன், தனிகனாகவும், பாபி, தீர்க்கயுஸ் உடையவனாகவும், நல்லவன் அல்பாயுஸ் உள்ளவனாகவும், அல்ப ஜாதிகள் மஹாராஜாவாகவும், உத்தம குணத்தினர் அவர்களுக்குப் பணிவாகவும் இருப்பர்

பெருங்காற்று- சுவல்ப மழை- க்ஷாமம் உண்டாகும்

எல்லா ஜனங்களும் வேதாந்தம் பேசுவர்- ஒருவரும் தத்துவத்தை அறியார். அந்தணர்கள் வெகுவாக வாதம் பண்ணுவர். வேஷத்தில் மட்டும் அந்தணர்களாக இருப்பர்.

கலியுகத்தில் மனிதர்கள் பொய்யை சத்தியமாகவும், மெய்யை அசத்தியமாகவும் செய்வர். வேத மார்க்க கர்மங்களை தூஷிப்பர் – நீதியை அனுசரியார்.

Hippo and Oxpeckers - Highly Commended - Paula Martin

நீர் யானைக்குதவும் பறவைகள்

குலிங்கப் பறவைகளும் குருமார்களும்

கலியுகத்தில் சில குருமார்கள், நித்திய கர்மங்களை இழந்து இதரர்களுக்கு மாத்திரம் ஞானத்தைப் போதித்து குலிங்க பக்ஷிக்கள் போல் சஞ்சரிப்பார்கள்.

எனது கருத்து

குலிங்க பறவை பற்றிய ஒன்றிரண்டு கதைகள் மஹாபரதத்தில் வருகின்றன. ஆனால் அவை மேற்கூறிய குருமார்கள் விஷயத்தில் பொருந்தாததால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் எழுதிய தயா சதக மேற்கோளைப் பார்த்தேன். மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இதோ அந்த ஸ்லோகமும் அதன் விளக்கமும்:–

மாசாஹசஸ் உக்தி கந கஞ்சுக வஞ்சித அந்ய

பத்யத்ஸு தேஷு விததாமி அதி சாஹசானி

பத்மா சஹாய கருணே ந ருணத்ஸி கிம் த்வம்

கோரம் குலிங்கம் சகுநே: இவ சேஷ்டிதம் மே (ஸ்லோகம் 94)

பொருள் விளக்கம்:

தயாதேவியே! சாஹசச் செயல்களைச் செய்யாதே என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு – உத்தமன் போல வேஷம் போட்டு —  அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நான் சாஹசச் செயல்களில் இறங்குகிறேன். குலிங்கப் பறவை போல நான் செய்யும் சாஹசச் செயல்களை நீ கண்டிக்காமல் இருப்பது ஏன்? (என்னை சரியான பாதையில் செலுத்துவது தாய் போன்ற உனது கடமை இல்லையா?)

குலிங்கம் என்னும் பறவை கத்துவது — மா ஸாஹஸம் குரு—

சாகசம் செய்யாதே – என்று சொல்லுவது போல இருக்குமாம். இப்படிச் சொல்லிக்கொண்டே, கொட்டாவி விடும் சிங்கத்தின் வாயில் புகுந்து அதன் பற்களில் சிக்கியுள்ள மாமிசத் துண்டுகளை இழுக்குமாம். சிங்கம் வாயை மூடினால் அதற்கு என்ன நேரிடும்?

(வேதாந்த தேசிகர் மிகப் பெரிய மஹான். பணிவின் காரணமாகவும் நம்மைப் போன்றோருக்கு அறிவுறுத்தவும் தன்னைக் குலிங்க பறவைக்கு ஒப்பிடுகிறார். மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் தன்னை நூற்றுக்கும் மேலான பாடல்களில் நாயுடன் ஒப்பிட்டுப் பாடியிருப்பதை நினைவிற் கொள்ளுதல் பொருத்தம்)

இரு வகை பிராணிகள் இடையே நிலவும் ஒத்துழைப்பை உயிரியல் விஞ்ஞானிகள் ‘’சிம்பியாஸிஸ்’’ என்று அழைப்பர். முதலையின் வாயில் சிக்கும் மாமிசத் துண்டுகளை எடுத்து சுத்தம் செய்யும் ப்ளோவர் பறவைகளின் வரவுக்காக முதலைகள் வாயைத் திறந்துகொண்டு காத்திருக்கும். அவைகளுக்கு ஒரு தீங்கும் செய்யா. ஆனால் சிங்கம் புலி போன்ற மிருகங்களிடையே இப்படி நடப்பதாக பதிவு செய்யப்படவில்லை. இந்தியக் காடுகளில் இத்தகைய செயல்கலைக் கண்ட நம் முன்னோர்கள் தக்க இடத்தில் அதை உவமையாகப் பயன்படுத்துவது சிறப்புடைத்து.

time1

ஏற்கனவே ஆதி சங்கரர் ஒரு நாலு வரிப் பாட்டிலேயே நான்கு பறவைகளை உவமையாக்கியது பற்றியும் தத்தாத்ரேயர் இருபதுக்கும் மேலான பறவை, விலங்குகள், பூச்சிகளிடமிருந்து தான் கற்ற போதனைகளை பாகவத புராணத்தில் சொல்லியிருப்பதையும், மரத்தின் மீது ஏறும் அதிசய அங்கோல மர விதைகள் பற்றி ஆதி சங்கரர் பாடியிருப்பது பற்றியும் பல கட்டுரைகளில் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

இனி, கல்கி புராணத்தில், மேலும் உள்ள விஷயங்களைக் காண்போம்:–

கலியுகத்தில் பிராமணாதி வர்ணத்தினர் நித்திய கர்மங்களை இழந்து, அதர்மங்களைச் செய்து சாராயம், கள், மாம்ஸம் முதலான தாமஸ பதார்த்தங்களைப் புசித்து உலகத்து ஜனங்கள் (அவர்களை) நிந்திக்கப் போகிறார்கள்.

கலியுகத்தில் வித்தியா குருவென்றும், மந்திரோபதேசக்  குருவென்றும், சிஷ்யன் என்கிற பேதமுமில்லாமல் நாம வாசகத்தால் மட்டும் பேதத்தை அடைந்து ஆசார்யப் பத்தினியை சீஷனும், சிஷ்ய பத்தினியை குருவும் அனுபவிக்கப் போகிறார்கள்.

கலியுகத்தில் எவன் தனிகனோ (பணக்காரன்) அவன் நல்ல குலத்தில் பிறந்தவனாகிறான் (கருதப்படுவான்). தரித்ரனானவன் துஷ் குலத்தில் பிறந்தவனாகிறான் (கருதப்படுவான்).சிலவிடங்களில் ஜாதி பேதமில்லாமல் இருக்கும்.

கலியில் மிருகங்கள் முதலிய ஜந்துக்களின் வயிற்றில் விசித்திர கர்மமும், கலியுக முடிவில் மனுஷ்ய யோனியில் அல்ப மிருகங்களும் உண்டாகப் போகின்றது.

kaliyuga_spencer_sass

யோகிகளுக்குள் சிறந்தவரான சூத புராணிகன், கலியுக தர்மம் யாவையும் ரிஷிகளுள் சிறந்தவரான  வியாச மாமுனியிடத்தில் கேட்டு, பரம ஆச்சரியத்தை அடைந்து மறுபடியும் கிருத யுக தர்மத்தைக் கேட்டார்.

(இதற்குப் பின்னர் கிருதயுக தர்மம் பற்றி வருகிறது. இது 1903 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அடைப்புக் குறிக்குள் இருப்பது எனது விளக்கங்கள்).

வில்வம், துளசியின் மகிமை!!

tulsi

Tulsi Worship= இல்லந்தோறும்  துளசி மாடம்

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்- லண்டன் சுவாமி நாதன்

ஆய்வுக் கட்டுரை எண்—1768; தேதி 2 ஏப்ரல் 2015

லண்டனில் கட்டுரை ஏற்றப்படும் நேரம்—காலை 8- 36

மரங்களுக்கு வணக்கம், நமஸ்காரம்!

இந்துக்கள் பூமியை வணங்கினர், உழக்கூடிய நிலத்தை வணங்கினர், நீர் நிலைகளை வணங்கினர் காடு மலைகளை வணங்கினர், செடி-கொடி-மரங்களை வணங்கினர், பறவைகள் ,மிருகங்களை வணங்கினர். இது எல்லாம் மூட நம்பிக்கைகளா? இல்லை. புறச் சூழல் என்பதை பயபக்தியுடன் அணுக வேண்டும் என்ற மனப் பரிபக்குவமே இந்த வழிபாட்டை ஏற்படுத்தியது.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்து பூமியில் காலடி வைக்கும் முன் அதனிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு காலடி வைப்பர் (பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே). மரங்களை வெட்டும்போதும், கிணறு வெட்டும் போதும் இதே அணுகு முறையே. அதாவது உன்னை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளமாட்டோம். உன்னை பூண்டோடு அழிப்பது எங்கள் நோக்கமல்ல. எங்களைப் போலவே நீயும் சாஸ்வதமக இருக்கவேண்டும் என்பதே அவர்தம் கொள்கை!

மேலும் எந்த மரம் செடி கொடிகளுக்கு மருத்துவப் பலன்கள் அதிகமோ அவை மேலும் அதிகமாகப் போற்றப்படுகின்றன. மருத்துவப் பலன் கருதி அவைகளை அழித்துவிடக் கூடாதென்பத ற்காக இப்படிப் புனிதத்துவம் ஊட்டினரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. சோம லதை என்னும் அபூர்வ, மனதைச் சுத்திப்படுத்தும், வேத கால மூலிகை அடியோடு அழிந்துவிட்டது! இந்த சோமக் கொடியைப் போற்றி வேதத்தில் ஏராளமான துதிகள் உள்ளன.(விவரங்களை எனது பழைய கட்டுரையில் காண்க)

pipal.jpgworship

பிள்ளை பெற அரச மர வழிபாடு

Aswaththa Tree (Peepal/Pipal) Tree Worship

கீழ்கண்ட செய்யுட்களே இதற்குச் சான்று பகரும்:

அரசமர வழிபாடு

மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபினே

அக்ரதச் சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:

அடியில் பிரம்மனும். நடுவில் விஷ்ணுவும், நுனியில் சிவபெருமானும் நிலைபெற்ற அரச மரமே உனக்கு நமஸ்காரம்.

அரச மர வழிபாடு வேதத்திலும், சிந்து சமவெளியிலும் காணப்படுகிறது.

tulsi2

துளசி வழிபாடு

யந்மூலே சர்வ தீர்த்தானி யந்மத்ய சர்வதேவதா:

யதக்ரே சர்வ வேதாச்ச துளஸீம் தாம் நமாம்யஹம்

 

அடியில் எல்லா புண்யக்ஷேத்ரங்களும் , நடுவில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நுனியில் சகல வேதங்களும், நிலைபெற்ற ஒப்பற்ற துளசி தேவியை நான் நமஸ்கரிக்கிறேன்.

 

 

தர்ப்பை வழிபாடு

குசமூலே ஸ்திதோ ப்ரம்மா குச மத்யே து கேசவ:

குசாக்ரே சங்கரம் வித்யாத் சர்வே தேவா: சமந்த இதி

தர்ப்பையின் அடியில் பிரம்மனும், நடுவில் விஷ்ணுவும், நுனியில் சங்கரனும் இருக்கிறார்கள்.

தர்ப்பைகளின் தச வித (பத்து வித) புற்கள்:

குசா: காசா யவா தூர்வா கோதூமாஸ் சாத குந்துரா:

உசீரா வ்ரீஹ்யோ முஞ்சா தச தர்பாஸ்ச பல்பஜா:

குசம், நாணல், யவை, அருகு, கோதுமை, நீர்முத்தக் காசு (கோரை), வழல், நெற்பயிர், முஞ்சிப் புல், விச்வாமித்ரம் இவை பத்து வகை புற்கள் ஆகும்.

தர்ப்பையின் தேவர்கள்

குஸாஸ்து ரௌத்ரா விக்ஞேயா கௌசம் ப்ராஹ்மம் ததா ஸ்ம்ருதம்

ஆர்ஷந்து தௌர்வமாக்யாதம் வைஸ்வாமித்ரம் து வைஷ்ணவம்

இன்னன்ன தர்பைகளுக்கு இன்னன்ன தேவதைகள் என்பதை அறிக:

குசா: = ரௌத்ரர்கள்

கௌசம் = ப்ராம்மம்

தௌர்வம் = ஆர்ஷம்

வைஸ்வாமித்ரம் = வைஷ்ணவம்

இவை தவிர வில்வ அஷ்டகம், துளசி ஸ்தோத்திரம் என்ற துதிகளும் இருக்கின்றன.

தர்ப்பை, துளசி, வில்வம் ஆகியவற்றை எந்த நேரத்தில், எப்படிப் பறிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகள் இருக்கின்றன. சிங்காரவேலு முதலியார் வெளியிட்ட தமிழ் கலைக் களஞ்சியமான அபிமான சிந்தாமணியில் இவற்றைக் காணலாம்.

Bilva(Maredu)

மூவிதழ் கூவிளம் = வில்வம் படம்

வில்வத்தின் மகிமை

வில்வத்தின் மகிமையை தமிழ் செய்யுட்களிலும் காணலாம்:

கூவிளம் ஒன்று சாத்தின் குலவு சாலோகமாகும்

கூவிளம் இரண்டு சாத்தின் குலவு சாமீபமாகும்

கூவிளம் மூன்று சாத்தின் குலவு சாரூபமாகும்

கூவிளம் நான்கு சாத்தின் கூடுஞ் சாயுச்சந்தானே

சிவபெருமானுக்கு வில்வம் ஒன்று சாத்தினால் சிவலோக பதவியும், இரண்டு சாத்தினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும் மூன்று சாத்தினால் அவன் உருப் பெறலாம், நான்கு வில்வ இதழ்கள் சாத்தினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பர் பெரியோர்.

வில்வமே புனிதனாகும், விளம்பு வில்வத்தின் மிக்காம்

வில்வமுள் சக்தியாகும், வில்வத்தின் கோடு வேதம்

வில்வவேர் பதினோர் கோடி, வியனுத்திரரேயாகும்

வில்வமேத்துநர்க்கே தேவர் மெய்வடிவுவாகுமன்றே

பொருள்: பத்திரங்களில் வில்வம் சிவசொரூபம், மரத்தின் முட்கள் சக்தி சொரூபம், கிளைகள் வேதம், வேர் 11 கோடி ருத்திரர்கள், வில்வ மரத்தை வணங்குவோர் தெய்வ வடிவைப் பெறுவர்.

vilva tree

Vilva/Bilva Tree worship = வில்வ மரத்தின் படம்

பஞ்ச வில்வம் எனப்படும் ஐந்து வில்வங்கள்

வில்வம், கிளுவை, விளா, வெண்ணொச்சி, மாவிலங்கை. இவைகளை ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பௌர்ணமியில் சிவனுக்குச் சாத்தினால் மெய்ஞ்ஞானம் ஏற்படும் என்பர் சான்றோர்.

இலைகளைக் கொண்டு இறைவனைப் பூஜிப்பதன் பெருமையை பகவத் கீதையில் (9—26) கண்ணபிரானும், புறநானூற்றில் (பாடல் 106) கபிலரும் செப்புவதை “புறநானூற்றில் பகவத் கீதை” என்ற கட்டுரையில் தந்துள்ளேன்.

தமிழ்நாட்டில் தலம் தோறும் ஒரு குறிப்பிட்ட மரம் தல விருட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் சதுர்த்தி போன்ற நிகழ்ச்சிகளில் 21 இலைகளால் பிள்ளையாரை பூஜிக்கிறோம், இதை எல்லாம் பார்க்கையில் தாவரங்களுக்கு தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவதை அறிய முடிகிறது (21 இலைகளின் பட்டியலை வேறு ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்).

pipal sacred   circumambulate the peepal tree

Tree Worship is popular in India! You get fresh oxygen which purifies your blood very fast!!

swami_48@yahoo.com