நிழல் போலத் தொடரும்-புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 5 (Post No.3928)

நிழல் போலத் தொடரும்-புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 5 (Post No.3928)

 

Written by London Swaminathan

 

Date: 21 May 2017

 

Time uploaded in London: 7-42 am

 

Post No. 3928

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (3914) 16th May 2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-3 (3901) 12-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (3899) 11-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-1(3896) 10th May 2017

 

தீயவை

வள்ளுவர் சொன்னார்,

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)

பொருள்

தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.

ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.

புத்தர் சொன்னார்

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.

 

ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.

தம்மபதம் 1,2

 

xxx

 

வள்ளுவர் சொன்னார்,

 

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல் (குறள்-314)

 

ஒருவர் யாராவது நமக்குத் தீங்கு செய்தால் அவர் வெட்கப்படும்படி நாம் அவருக்கு நன்மை செய்ய வேண்டும்; பின்னர் அவர் செய்த தீமையையும் நாம் செய்த நல்லதையும் மறந்து விட வேண்டும்.

புத்தர் சொன்னார்,

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை தம்மபதம் (5)

xxx

 

மலையின் மீது இருந்து காணும் காட்சி

வள்ளுவர் சொன்னார்,

 

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை (திருக்குறள் 758)

 

தன் கையில் பொருள் ஒன்றை வைத்துக் கொண்டு கவலையில்லாமல், காரியத்தினைத் தொடங்குவது, மலையின் மீது நின்று கொண்டு கீழே நடக்கும் யானைகளின் சண்டையைக் காண்பது போன்றது.

புத்தர் சொன்னார்

புத்திசாலி மனிதன் விழிப்புடன் இருந்து எண்ணங்களைக் கட்டுப்படுத்தினால்  அவன் துன்பங்களை உதறிவிட்டு, மேலே உள்ள ஞானம் என்னும் அரண்மனைக்குச் செல்வான். அதன் பலகணியிலிருந்து  துன்பப் படுவோரைக் காண்பான். இது குணம் என்னும் குன்று ஏறி நின்ற முனிவர்கள் மலை உச்சியிலிருந்து சமவெளியிலுள்ள அஞ்ஞானிகளைக் காண்பதற்குச் சமம்.

தம்மபதம் 28

xxx

 

இந்திரனே சான்று

வள்ளுவர் சொன்னார்,

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி (திருக்குறள் 25)

 

ஐம்புல ஆசைகளை ஒழித்த ஒருவனுக்கு எவ்வளவு ஆற்றல் உண்டு என்பதற்கு இந்திரனே சாட்சி.

((இந்தக் குறளுக்குப் பொருள் தருவதில் பரிமேல் அழகர்கூட தவறு செய்துவிட்டதை எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். அவர், இது இந்திரனைக் கிண்டல் செய்வது என்று நினைத்து விட்டார். உண்மையில் இந்திரன் புலனடக்கம் மிக்கவன். அகல்யை சம்பவம் உதாரணம் ஆகாது))

புத்தர் சொன்னார்

புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.

தம்மபதம் 30

அதர்வண வேதத்திலும் (11-5-19) இக் கருத்து உளது.

 

xxx

 

அருள் புரிக

வள்ளுவர் சொன்னார்,

 

வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்

மெலியார் மேல் செல்லும் இடத்து (திருக்குறள் 250)

 

ஒருவன் தான் பலசாலியாக இருக்கும்போது மற்றவனைத் துன்புறுத்துவது சரியல்ல. அவன், தன்னைவிட பலசாலியான ஒருவன் தன்னை இப்படித் துன்புறுத்தினால் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல் ( திருக்குறள் 318)

 

ஒருவன் தனக்குத் துன்பம் இழைக்கும்போது அதனால் ஏற்படும் கஷ்டத்தை அறிந்த மனிதன், பிற உயிர்களுக்கு துன்பம் இழைப்பது யாது கருதியோ?

புத்தர் சொன்னார்

 

பிறருடைய குற்றத்தைப் பற்றியோ, அவர்கள் என்ன செய்தார்கள் , என்ன செய்யவில்லை என்றோ எண்ணாதீர்கள். உங்களுடைய தவறுகளையும் நீங்கள் எதைச் செய்தீர்கள், எதைச் செய்யத் தவறினீர்கள் என்று சிந்தியுங்கள்

ஒருவன் தான் செய்த தீமையின் விளைவுகள் தெரியாத வரை அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பான்; அது அவனுக்கு இன்பமாகத் தோன்றும். ஆனால் தீய செயல்களின் விளைவுகள் அவனுக்குத் திரும்பும்போது அவன் அதை அனுபவித்து அறிவான் தம்மபதம்-119

 

-Subaham-

 

 

தான் மட்டும் உண்பவன் பாவி- ரிக் வேத மந்திரம் (Post No..3926)

Written by London Swaminathan

 

Date: 20 May 2017

 

Time uploaded in London: 17-20

 

Post No. 3926

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

வள்ளுவர் திருக்குறளில் சொல்வது என்ன?

 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)

 

பொருள்

தம்மிடமுள்ள உணவை எல்லோருக்கும் பகுத்துக் கொடுத்து தானும் உண்ண வேண்டும்; பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்; நல்லோர் கூறிய எல்லா அறங்களிலும் இதுவே சிறந்த தர்மம்.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனும் புற நானூற்றில் இதையே பாடினான்; அமிர்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்பவர் இந்தியாவில் கிடையாது; புகழ் என்றால் உயிரையும் கொடுப்பர்; பழி வருமானால் உலகமே கிடைத்தாலும் வேண்டாம் என்பர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின் ,உயிரும் கொடுக்குவர்; பழி எனின்,

உலகுடன் பெறினும், கொள்ளலர்

–புறம் 182, க.மா. இளம்பெருவழுதி

 

பகவத் கீதை 3-13-ல் கண்ணனும் மொழிந்தது அதுவே:

 

யஜ்ஞசிஷ்டாசினஹ சந்தோ முச்யந்தே சர்வகில்பிஷைஹி

புஞ்சதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மாமகாரணாத்

(பகவத் கீதை 3-13)

 

பொருள்

யக்ஞம் செய்து மிஞ்சியதை உண்ணும் சாதுக்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். ஆனால் எவர்கள் தமக்கெனவே சமைக்கின்றார்களோ அந்த பாபிகள் பாவத்தையே உண்கிறார்கள்.

 

அதாவது பஞ்ச யக்ஞம் எனப்படும் ஐந்து வேள்விகளை தினமும் செய்ய வேண்டும்; இதில் மனிதர்கள், தேவர்கள், பிற உயிர்கள், விருந்தாளிகள், இறந்து போனோர் ஆகியோருக்கு படைப்புகள் கொடுப்பது ஐந்து வித வேள்வி – பஞ்ச யக்ஞம் — எனப்படும்.

 

இப்படி கண்ணன், வள்ளுவன், இளம்பெருவழுதி என்று பலரும் சொல்லக் காரணம் ரிக்வேத மந்திரமாகும். பத்தாவது மண்டலத்தில் உள்ள இந்த மந்திரம் மிகவும் அருமையான மந்திரம். ஒரு கவிஞர் பொழிந்து தள்ளி விட்டார். இதிலுள்ள ஒவ்வொரு வரிக்கும் ஒரு கட்டுரை எழுதலாம். அவ்வளவு ஆழமான பொருளுடைத்து. இப்போது ஒரு மந்திரச் செய்யுளை மட்டும் காண்போம்..

 

“உணவு கேட்டு வந்த நண்பனுக்கு இல்லையென்று கைவிரிப்பவன் நண்பனே இல்லை.

ஏழைகளை பணக்காரர்கள் திருப்தி செய்ய வேண்டும். அதுதான் போகும் வழிக்குத் துணை (அதாவது மறுமையில் பலன் தரும். இறந்த பின்னர் ஒருவன் புண்ணியம் மட்டுமே அவனுடன் கூட வரும்)

 

செல்வம் என்பது இன்று வரும்; நாளை வேறு ஒருவரிடம் போய்விடும். இது வண்டிச் சக்கரம் போல் சுழலக் கூடியது.

 

யார் ஒருவன் உழைக்காமலே உணவு பெறுகிறானோ அவன் முட்டாள்; அது அவனைப் பாழாக்கி விடும்

(‘ஐயமிட்டு உண்’ என்று சொன்ன அவ்வைப் பாட்டியே ‘ஏ ற்பது இகழ் ச்சி’ என்றும் சொன்னது போல)

 

யார் ஒருவன் பகுத்துக் கொடுக்காமல் சாப்பிடுகிறானோ அவன் குற்றம் புரிந்தவனே. அவன் தோழர்களுக்கு உணவு அளிக்காவிடில் அவனை நேசிப்போர் யாரும் இரார்– இது ரிக் வேத மந்திரத்தின் ஒரு பகுதி (10-117-4/6)

 

திரு மூலரும் இதையே செப்புவார்:

 

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

 

– திருமந்திரம்

 

காலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக.

 

கிருஷ்ண பரமாத்மாவும், வள்ளுவனும் இளம்பெருவழுதியும், திருமூலரும் பிற்காலத்தில் சொன்ன கருத்தை, அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பகன்ற ரிக் வேத ரிஷியைப் போற்றுவோம்.

 

தமிழில் பழ மறையைப் பாடுவோம்—பாரதி

 

–SUBHAM–

 

பசி ஆற்றல்- புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (Post No.3914

Written by London Swaminathan

 

Date: 16 May 2017

 

Time uploaded in London: 17-58

 

Post No. 3914

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

தம்மபதம் என்பது புத்தமதத்தினரின் வேதப் புத்தகம்

திருக்குறள் என்பது தமிழர்களின் வேதப் புத்தகம்

 

 

பசிப்பிணி என்னும் பாவி

 

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின் (குறள் 225)

பசியைப் பொறுத்துக் கொள்வது தவசிகளின் வலிமை; ஆனால் அவர்களுக்கு உணவு கொடுக்கும் இல்லறத்தான் வலிமை அதைவிடப் பெரியது

 

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள் வைப்புழி (226)

நல்ல குணங்களை மறக்கச்செய்யும் பசியைத் தீர்ப்பது பெரிய புண்ணியம்; அதாவது பிற்காலத்துக்குச் சேர்த்துவைக்கும் வங்கிக் கணக்கு போன்றது

 

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்கணவர் (228)

செல்வத்தைச் சேர்த்துவைத்து பிறருக்கும் கொடுக்காமல், தாமும் அனுபவிக்காமல் இருப்பவர்களுக்கு, தானம் செய்வதிலுள்ள இன்பம் என்ன என்றே தெரியாது.

 

தம்மபதத்தில் புத்தர் சொல்லுவார்:

உண்மையே பேசு

கோபப் படாதே

கேட்பவருக்கு உன்னிடம் உள்ளதைக் கொடு

இந்த மூன்றும் உன்னைக் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் (தம்ம.224)

xxxx

வாய்மை

உள்ளதால் பொய்யாதொழுகின் உலகத்தார்

உள்ளத்துளெல்லாம் உளன் (குறள் 294)

 

ஒருவன் மனத்தாலும் பொய் சொல்ல நினைக்காமல் இருந்தால் அவன் உலக மக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் இருப்பான்.

 

புத்தர் சொல்கிறார்:

நல்ல குணம் உள்ளவனாக இருந்து, யார் அறவழியைப் பின்பற்றுகிறானோ, யார் உண்மை பேசுகிறானோ,  செய்ய வேண்டிய கடமைகளைச் செய்கிறானோ அவனை உலக மக்கள் அனைவரும் விரும்புவர் (தம்ம. 217)

 

xxx

பிறன் மனை நோக்கா பேராண்மை

 

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண் ( 146)

பொருள்:

பிறருடைய மனைவியை விரும்பி நெறி தவறி நடப்பவனிடமிருந்து பகை, பாவம், அச்சம், பழிச்சொல் என்ற நான்கும் எப்போதும் நீங்காது.

 

புத்தரும் இதையே மொழிகிறார்:

மற்றவனுடைய மனைவியை அபகரிப்பவனுக்கு நான்கு விஷயங்கள் நடக்கும்:-

அவன் மதிப்பையும் மரியாதையையும் இழப்பான்;

அவன் மன சஞ்சலத்துன் வாழ்வான்;

எல்லோரும் அவனைத் தூற்றுவர்;

அவன் நரகத்தில் வீழ்வான் (தம்மபதம்-309)

 

xxx

 

ஆசையே துன்பத்திற்குக் காரணம்

 

இன்பம் இடையறாதீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின் (குறள் 369)

 

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும் (370)

 

பொருள்

ஒருவன் ஆசையெனும் துன்பத்தைக் கைவிட்டால் அவனுக்கு இன்பம் வந்து குவியும்.

ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாது அதனை விடக் கற்றுக்கொண்

டால், அழியாத இன்பத்தைப் பெறலாம்.

 

ஆசை போனால், இன்பம் வரும்; தங்க நாணய மழையே பெய்தாலும் ஆசை அடங்காது. இன்பத்தின் எல்லையில் துன்பம் நிற்கிறது. கடவுள் கொடுக்கும் இன்பங்களை ஞானியானவன் நாட மாட்டான் (தம்ம-187)

 

கருமிகள் சுவர்க்கத்துக்குள் புக முடியாது; முட்டாள்கள் தானத்தைப் புகழ மாட்டார்கள்; புத்திசாலிகளே தானம் செய்து, அதன் மூலம் இன்பம் அடைவர் (தம்ம.177)

 

–சுபம்–

ராமரின் வில் பெரிதா? சீதையின் சொல் பெரிதா? (Post No.3910)

Written by London Swaminathan

 

Date: 15 May 2017

 

Time uploaded in London: 12-33

 

Post No. 3910

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன் அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்

–சுந்தர காண்டம், சூளாமணிப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்:-

பிறருக்குத் துன்பம் தருவதையே தொழிலாகக் கொண்ட அரக்கருடைய இலங்கையை மட்டுமா? கணக்கற்ற உலகங்கள் அனைத்தையும் எனது ஒரு சொல்லினால் சுட்டெரிப்பேன் அவ்வாறு செய்வது ராமனின் வில்லாற்றலுக்கு இழிவு உண்டாக்கும் என்று உணர்ந்து அத்தொழிலைச் செய்யாது விட்டேன் – என்று அனுமனிடம் சீதை சொல்கிறாள்.

 

என் தோள் மீது ஏறிக் கொள்ளுங்கள், உடனே ராம பிரானிடம் சேர்த்து விடுகிறேன் என்று அனுமன் சொன்னபோது சீதை கூறியது இது.

நீ ஒரு ஆண்மகன்; உன் தோள் மீது ஏறுவது தர்மம் ஆகாது என்றும் வாதிடுகிறாள்.

 

அதாவது ராமனின் வில் ஆற்றலுக்காவது அவர் தனது சொந்த சக்தியைச் செலவழிக்க வேண்டும். ஆனால் பத்தினிப் பெண்ணாகிய சீதைக்கோ அது கூடத் தேவை இல்லை. உடல் வலிமையின்றி மன வலிமையால் சாபம் போட முடியும்.

 

பெண்களுக்குள்ள இந்த அபார சக்தியை வள்ளுவனும் போற்றுவான்:

 

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

 

வேறு தெய்வத்தைக் கும்பிடாமல் கணவனையே தெய்வமாகக் கும்பிட்டுத் துயில் எழும் பெண்/ மனைவி பெய் என்று சொன்னால், அவள் சொல் கேட்டு மழையும் பெய்யும் என்பான் வள்ளுவன்.

 

கண்ணகியும் தன் சொல்லால் மதுரையைச் சுட்டெரித்தாள்.

சாவித்ரி எமனுடன் வாதாடி, கணவன் உயிரை மீட்டுக் கொண்டு வந்தாள். சந்திரமதி, தமயந்தி போன்றோரும் துயரங்களைக் கடந்து வெற்றி பெற்றனர்.

திரவுபதியும் தான் எடுத்த சபதத்தை பாண்டவர்களின் மூலம் நிறைவேற்றிக் காட்டினாள்.

 

 ஆகையால் சொல்லால் சுடுவேன் என்று சூ ளுரைத்தது பொருத்தமே.

 

அமெரிக்க அதிபர், ரஷ்ய அதிபர், இந்தியப் பிரதமர் கைகளில் அணுகுண்டுகளை ஏவிவிடும் பட்டன்” (switch or Button) இருக்கிறது. ஆயினும் அச்சக்தியைப் பிரயோகிக்காமலேயே பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. அது போல பத்தினிப் பெண்களிடமும் அபார சக்தி இருக்கிறது அதை எவ்வளவு கவனத்துடன் பயன்படுத்த வேண்டுமோ அவ்வளவு கவனத்துடன் பயன்படுத்துவார்கள். அதை வீணாகப் பயன்படுத்தமாட்டார்கள்; பெண்கள் கருணை உள்ளம் படைத்தவர்கள்.

 

ராமனின் வில்லாற்றலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக் கூடாது, ராவணன் என்ற அரக்கனை அகற்றும் பணியை அவதார புருஷனாகிய ராமனே செய்யட்டும் என்று சீதை பொறுமையாக இருக்கிறாள்.

 

வால்மீகி ராமாயணத்தில் இது போன்று உலகங்கள் அனைத்தையும் சுட்டெரிக்கும் வல்லமை பற்றிப் பேச்சு இல்லை.

 

வால்மீகி ராமாயணத்தையே கம்பன் பின்பற்றினாலும், பல இடங்களில் அவன் புதுக் கதைகளையும், புது வசனங்களையும் சொல்லுவது அவன் வேறு சில  ராமாயணங்களின் கதைகளையும் எடுத்தாண்டதைக் காட்டுகிறது. அவனே மூன்று ராமாயணங்கள் பற்றிப் பேசுகிறான். ஆனால் அவன் குறிப்பிட்ட மூன்றில் இன்று நமக்குக் கிடைப்பது வால்மீகி ராமாயனம் ஒன்றே.

 

கம்பனைப் பயில்வோம்; கவின்சுவை பெறுவோம்.

-Subham–

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு விஷயங்கள்! (Post no.3880)

Written by London Swaminathan

 

Date: 5 May 2017

 

Time uploaded in London: 6-16 am

 

Post No. 3880

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் அழகாகச் சொல்லுகின்றனர்:

 

1.காலை எழுந்திரு

 

2.பிறர் காணாமல் புணர் (மறைவாக செக்ஸ்)

 

3.மாலையிலும் குளி

 

4.பிற பெண்களிடம் போகாமல் உன் மனையில் புகு.

 

5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை)

 

6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்).

 

 

காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல்

மாலை குளித்து மனை புகுதல் – சால

உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும்

கற்றாயோ காக்கைக் குணம்

 

வள்ளுவனும் தமிழ் வேதமாகிய திருக்குறளில்  செப்பினான்:

 

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)

 

பொருள்:-

 

பகல் நேரத்தில் பெரிய கோட்டானைச் சிறிய காகம் கூட வென்றுவிடும். அதனால் பகைவரை வெல்லக் கருதும் மன்னன், ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது பற்றியும் ஒரு கட்டுரையில் முன்னரே தந்து விட்டேன்

 

 

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள  (குறள் 527)

 

காகம், உணவு கிடைத்தால், அதனை மறைத்துத் தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு கிட்டும்

 

My articles on Crows

INDIAN CROW by Mark Twine ; 9 February 2013

 

What can a Crow Teach You?

Date : 5  August  2015

Strange Belief about Crows in India and Britain!!

Research Article No. 1678; Dated 26 February 2015.

 

Strange Bird Stories in Mahabharata!

Research Article no. 1711; dated 12 March 2015

 

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!!

Research Article No. 1679; Dated 27 February 2015.

 

கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

28 March 2013

 

–Subahm–

பெரியாரைப் பகைக்காதே! தமிழ்ப் புலவர்கள் எச்சரிக்கை!! (Post No.3857)

Written by London swaminathan

Date: 27 APRIL 2017

Time uploaded in London:- 17-50

Post No. 3857

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

பெரியோர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் ஒரு நொடியில் பெரிய அரசாட்சியையும் கவிழ்த்துவிடக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்று திருவள்ளுவர் உள்பட பல தமிழ்ப் புலவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியோடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து (குறள் 898)

பொருள்:-

“குணங்களால் குன்று போல உயர்ந்த பெரியவர்கள், ஒருவனை அழிக்க நினைத்தால், நிலைத்து நின்றவர்களும் கூடக் குலத்தோடு அழிந்து போவார்கள்”— என்று வள்ளுவன் எச்சரிக்கிறான்.

 

ஆனால் அவர்களுக்கு கோபம் வந்த வேகத்தில், தணிந்தும் விடும்.

 

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது (குறள் 29)

 

நற்குணம் வாய்ந்தவர்கள், சிறு தவறுகளையும் பொறுக்க மாட்டார்கள். கோபப்படுவார்கள் (ஆகையால் கவனம் அவசியம்) — என்பது ஒரு பொருள்.

 

இன்னொரு பொருள்: அவர்கள் கோபப்பட்டாலும் அது கணப்பொழுதில் மறைந்து விடும்; சாபமே தந்தாலும், அந்த சாபத்துக்கு ஒரு விமோசனமும் கொடுத்து விடுவார்கள் என்பது இன்னும் ஒரு பொருள்.

 

நீதி வெண்பா பாடிய புலவர் (பெயர் கிடைக்கவில்லை) சொல்கிறார்:-

அந்தத் தமிழ்ப் புலவர் செப்புவது யாதெனின்:

 

கடவுளுக்கு அவமரியாதை செய்தாலும், மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடுவான்; ஆனால் அவனது அடியார்களுக்குத் தீங்கிழைத்தால் கடவுளே கூட மன்னிக்க முடியாது. அந்த அடியாரே மனது வைத்து தயை கூர்ந்தால்தான் கதி விமோசனம்.

 

ஈசனெதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த

நேசரெதிர் நிற்ப தரிதாமே — தேசு வளர்

செங்கதிர்முன் நின்றாலுஞ் செங்கதிர் வன்கிரணந்

தங்கு மணல் நிற்கரிதே தான்

 

தேசுவளர் = ஒளி மிக்க

செங்கதிர் முன் = சூரியனுக்கு முன்னால்

நின்றாலும் = வெய்யிலில் நின்றாலும்

செங்கதிரவன் கிரணம் தங்கும் மணல் = அந்தச் சூரியனின் சூட்டைக் கிரகித்த ஆற்று மணலில்

நிற்க அரிது = நிற்க முடியாது

அது போல

ஈசன் எதிர் நின்றாலும் = எல்லாம் வல்ல கடவுளை எதிர்த்துப் பேசினாலும், செயல்பட்டாலும்

ஈசன் அருள் பெற்று = அந்த இறைவனின் அருள் பெற்ற

உயர்ந்த = உயர்ந்த இடத்தை அடைந்த

நேசர் எதிர் = அடியார்களுக்கு எதிராக

நிற்பது அரிது =நிற்றல் இயலாது.

 

நகுலன், சுமுகன், வேனன், நவநந்தர்கள் அழிந்தனர்!

 

அகந்தையால் அழிந்த மன்னர்களின் பட்டியலை மனு, தனது மானவ தர்ம சாத்திரத்தில் தருகிறார். அவர் சொல்லும் சுமுகன் என்பவன் யார் என்று யாருக்கும் தெரியாது. சுமேரியாவில் மட்டுமே சுமுகன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருக்கிறான்.

 

அகத்தியனைப் பகைத்த நகுலன் வீழ்ந்தான்;

மக்களைப் பகைத்த வேனன் விரட்டப்பட்டான்;

பரசுராமன் 21 தலைமுறை மன்னர்களை அழித்தான்;

பிராமணர்களைப் பகைத்த நந்த வம்சத்தை அடியோடு அழித்த சாணக்கியன், மகத சாம்ராஜ்யத்தை தாபிக்க உதவினான்.

 

முஸ்லீம் அரசர்களை வேருடன் சாய்க்க சிவாஜிக்கு சமர்த்த ராமதாசும், ஹரிஹரன், புக்கனுக்கு வித்யாரண்யரும் உதவினர்.

இதைக் கருத்திற்கொண்டே வள்ளுவன் பகர்வான்:-

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும் (குறள் 899)

 

பொருள்:-

உயர்ந்த கொள்கையுடையவர் கோபப்பட்டால், நாட்டை ஆளும் மன்னர்களும், இடை முறிந்து,  பதவியை இழப்பான் – என்பது வள்ளுவனின் எச்சரிக்கை.

 

எமனை அழைக்காதீர்கள்!

கூற்றத்தை கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்ன செயல் (குறள் 894)

 

பொருள்:-

பெரியவர்களுக்கு தீங்கு செய்தவர்கள், பின்னால் வரக்கூடிய யமனுக்கு அழைப்பிதழ்  அனுப்பி என்னை இப்போதே கூட்டிச் செல் என்று சொல்லுவதற்குச் சமம்.

—Subham–

புகழ்ந்தால் வெட்கம் வரும்! வள்ளுவனும் காளிதாசனும் சொன்ன கருத்து (Post No.3829)

Written by London swaminathan

 

Date: 18 APRIL 2017

 

Time uploaded in London:- 8-54 am

 

Post No. 3829

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

 

நம்மை யராவது புகழ்ந்தால் உச்சி குளிர்ந்து, தலை நிமிர்ந்து, யாராவது மாலை போட வரமாட்டர்களா, பொன்னாடை போர்த்த எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று காத்திருப்போம். ஆனால் அறிஞர்களையோ, நல்லோர்களையோ புகழ்ந்தால் அவர்கள் வெட்கப்பட்டு, கன்னம் சிவந்து, தலை குனிந்து பணிவுடன் இருப்பார்களாம். அவர் குனியக் குனிய அவருடைய புகழ் உயர்ந்து கொண்டே போகிறதாம் இவை எல்லாம் காளிதாசனும் வள்ளுவனும் கண்ட உண்மைகள். இதோ வள்ளுவன் வாய்மொழி:-

 

அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

பிணி அன்றோ பீடு நடை – குறள் 1014

பொருள்:-

சான்றோர்க்கு நாணம் என்பது ஒரு ஆபரணமாகும். அப்படி நாணுடைமை இன்றி ஒருவர் பெருமையுடன் நடக்கும் நடை அவரைப் பிடித்த நோய்தானே?

 

இதற்கு உரைகண்ட பரிமேல் அழகர் ஒரு அழகான சம்ஸ்கிருதப் பொன்மொழியை மேற்கோள் காட்டுவார்:-

 

குணாட்யஸ்ய சதஹ பும்சஹ ஸ்துதௌ லஜ்ஜைவ பூஷணம்

 

பொருள்:-

குணம் மிக்க நன்மகனுக்கு புகழப்படுங்கால் வெட்கமுறுதலே அணியாகும்.

வள்ளுவன் சொல்லும் மேலும் இரண்டு குறள்களும் இவ்விடத்திலே சாலப் பொருந்தும்:-

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல

நாணுடைமை மாந்தர் சிறப்பு (1012)

பொருள்:-

உணவு, உடை முதலியவை எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை ஆனால் நாணம் என்பது மக்களுக்கே உரித்தான சிறந்த பண்பு.

 

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன் ஞாலம்

பேணலர் மேலாயவர் (1016)

மேன்மக்களுக்கு நாணமே வேலி; அதுவின்றி இந்தப் பெரிய உலகத்தில் வாழ விரும்ப மாட்டார்கள்.

‘உயிரினும் சிறந்தன்று நாணே’ என்று தொல்காப்பியரும் செப்புவார்.

 

காளிதாசன் சொல்வது

உலகப் புகழ் கவிஞன் காளிதாசன் , அவனது ரகு வம்ச காவியத்தில் மூன்று இடங்களில் மூன்று மன்னர்களைப் புகழ்ந்த போது வெட்கமுற்றதை எடுத்துக் காட்டுகிறான். இது அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும்,  , படித்துப் பின்பற்ற வேண்டிய ஒரு பண்பு.

 

`स्तूयमानः स जिह्राय स्तुत्यमेव समाचरन्।
तथापि ववृधे तस्य तत्कारिद्वेषिणो यशः॥ १७-७३

stūyamānaḥ sa jihrāya stutyameva samācaran |
tathāpi vavṛdhe tasya tatkāridveṣiṇo yaśaḥ|| 17-73

 

“போற்றத்தக்க காரியங்களையே அதிதி (என்ற மன்னன்) செய்தான். அதனால் அவனைப் புகழ்ந்தனர் அவன் அதைக் கேட்டு வெட்கம் (நாணம்) அடைந்தான். புகழை அவன் வெறுக்க வெறுக்க, அவன் புகழ் வளர்ந்து கொண்டே போனது”- (ரகு 17-73)

 

तस्य संस्तूयमानस्य चरितार्थैस्तपस्विभिः।
शुशुभे विक्रमोदग्रम् व्रीडयावनतम् शिरः॥ १५-२७

tasya saṁstūyamānasya caritārthaistapasvibhiḥ |
śuśubhe vikramodagram vrīḍayāvanatam śiraḥ|| 15-27

 

“தங்கள் மனோரதம் நிறைவேறியதால் முனிவர்கள், மன்னன் சத்ருக்னனைப் புகழ்ந்தனர். அவனுடைய வீரத்தால் அவன் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அவனோ தன் புகழ்ச்சியைக் கேட்டு வெட்கம் அடைந்து தலையைக் குனிந்து கொண்டான்”- (ரகு 15-27)

तस्याभवत्सूनुरुदारशीलः शिलः
शिलापट्टविशालवक्षाः।
जितारिपक्षोऽपि शिलीमुखैर्यः
शालीनतामव्रजदीड्यमानः॥ १८-१७

tasyābhavatsūnurudāraśīlaḥ śilaḥ
śilāpaṭṭaviśālavakṣāḥ |
jitāripakṣo’pi śilīmukhairyaḥ
śālīnatāmavrajadīḍyamānaḥ || 18-17

 

“அந்தப் பாரியாத்ரனுக்கு அகன்ற மார்பையும், பரந்த நோக்கத்தையும் உடைய சீலன் என்ற மகன் பிறந்தான். பகைவர்களை தோல்வி அடையச் செய்து அவன் வெற்றி அடைந்ததை மற்றவர்கள் புகழ்ந்தார்கள். அவன் அதைக் கேட்டு நாணினான்”-ரகு 18-17

 

வள்ளுவன் பத்து குறள்களிலும் காளிதாசன் மூன்று பாடல்களிலும் நவின்ற நாணுடைமை அருகிக்கொண்டே வருவது வருத்ததிற்குரியது.

 

பெண்களுக்கு அணி (ஆபரணம்) போன்ற இந்த அருங்குணத்தை மேலை நாட்டுப் பெண்களிடம் இப்போது காண்பது அரிது. லண்டனில் ரயில்களிலும் கூட, பெரும் கூட்டத்துக்கு இடையே, ஆண்கள் புடை சூழ அமர்ந்து கொண்டு, ‘மேக் -அப்’ செட்டை வைத்துக்கொண்டு வர்ணப்பூச்சுகளைப் பெண்கள்   பூசிக்கொள்வதை நான் தினமும் காண்கிறேன்!

 

–Subham–

மருந்தே யாயினும் விருந்தோடுண் (Post No.3802)

Written by London swaminathan

 

Date: 9 APRIL 2017

 

Time uploaded in London:- 6-42 am

 

Post No. 3802

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

“மருந்தே யாயினும் விருந்தோடுண்” என்பது கொன்றைவேந்தன் அறிவுரை. இது அவ்வையார் இயற்றியது.

 

இந்த இடத்தில் இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம்.

1.மருந்தாக இருந்தாலும் அதை வெறும் வயிற்றில் சாப்பிடாதே. சாப்பிடுவத ற்குச் சற்று முன்னரோ அல்லது சாப்பிட்ட உடனேயோ அந்த மருந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால பலன் அதிகம் கிடைக்கும் என்பது மேம்போக்கான பொருள்.

 

2.ஆயினும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் மருந்து என்பது அமிர்தம் என்று தெரியவரும். ஏனெனில் வள்ளுவரும் இதே கருத்தைச் சொல்லுகிறார்:-

 

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று – குறள் 82

பொருள்:

ஒரு விருந்தினர் வெளியே வந்து திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில்  உங்கள் கையில் சாவா மருத்து (அமிழ்தம்) கிடைத்தாலும் அதைத் தனியே சாப்பிடுவது விரும்பத் தக்கதன்று.

 

வள்ளுவர் சொல்லும் கருத்து புறநானூற்றில்(182)  கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி  சொன்ன கருத்துதான்:

இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே.

 

புற நானூற்றுக் காலத்திலேயே இந்திரர் அமிழ்தம், அது தொடர்பான கதைகள் எல்லாம் தமிழருக்கு அத்துபடி! ஏனெனில் பாரதம் முழுதும் ஒரே பண்பாடு!!

 

விருந்தினர் ஒன்பது

விருந்தினரை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று காசிக் காண்டம் என்னும் நூலில் அதிவீர ராம பாண்டியர் எழுதியுள்ளார். இதை ஒருவர் பின்பற்றினால் வந்தவரின் உள்ளத்தை வென்றுவிடலாம். சிலர் நன்றாகச் சாப்பாடு போடுவர். ஆனால் பேசத் தெரியாமல் பேசி, போட்ட சாப்பாட்டின் பலனைக் கெடுத்துவிடுவர்.

 

விருந்தினனாக ஒருவன் வந்தெதிரின்

வியத்தல் நன்மொழியினுரைத்தல்

திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்

எழுதல்முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றவன்றன் அருகுற விருத்தல்

போமெனிற் பின்செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல்லிவ் வொன்பான்

ஒழுக்கமும் வழிபடு பண்பே

 

வியத்தல்

அட, அதிசயமே: எங்களைப் போன்ற ஏழை எளிய வர் குடிசைக்கெல்லாம் வரமாட்டீங்கன்னு நினைச்சோம்; எங்களையும் ஒரு பொருட்டா மதிச்சீங்களே, அதுவே பெரிய சந்தோஷம்

நன்மொழியினுரைத்தல்

வீட்டில எல்லாரும் சௌக்கியமா? உங்க உடம்பெல்லாம் எப்படி இருக்கு; முன்னைவிட கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கீங்களே.

திருந்துற நோக்கல்

இதைச் சொல்லும் போது கனிவான , அன்பான பார்வை இருக்க வேண்டும். கடனெழவுக்குச் சொல்லக்கூடாது.

வருகென வுரைத்தல்

உள்ள வாங்க, முதல்ல; அப்புறம் எல்லாம் பேசுவோம்

எழுதல் முன் மகிழ்வன செப்பல்

அவர் சாப்பிட்டு எழுவதற்கு முன்னால், நல்லா சாப்பிடுங்க; இவ்வளவு குறைச்சலா சாப்பிடுறீங்களே; இப்ப புரியுது ;நீங்க ஏன் இளைச்சிருக்கீங்கன்னு; நல்லா சாப்பிடுங்க. அடியே! இவருக்கு இன்னும் கொஞ்சம் பாயசம் கொண்டா.

மற்றவன் றன் அருகுற விருத்தல்

அவர் அருகிலேயே மரியாதையுடன் அமர்ந்திருக்க வேண்டும்

போமெனிற் பின்செல்வதாதல்

அவர் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லும்போது அவர் பின்னால் ஏழு அடி நடந்து சென்று அவரை வழி அனுப்ப வேண்டும் . ரிக் வேதம் இதைச் சொல்கிறது. அதனால்தான் கல்யாணத்திலும் புதுமணத் தம்பதிகள் ஏழு அடி (சப்தபதி) நடந்து செல்வர். கரிகால் சோழன் இப்படி 7 அடி நடந்து போய் வழியனுப்பியதாகச சங்க இலக்கியம் செப்பும் (என்னுடைய பழைய கட்டுரையில் ஏழு அடி மஹிமை பற்றிக் காண்க)

பரிந்துநன் முகமன் வழங்கல்

கடைசியாக அவர் விடை பெறும்போது அவரைப் புகழ்ந்து பல வாக்கியங்கள் சொல்ல வேண்டும். “இன்றைக்கு நாங்கள் நரி முகத்தில் முழித்தோம் போல; தங்களைப் போன்ற பெரியோர் வந்து எங்களை ஆசீர்வதித்ததற்கு நன்றி. இது எங்கள் பாக்கியமே; அடிக்கடி வாருங்கள்; அடுத்த முறை வருகையில் வீட்டில் எல்லோரையும் அழைத்து வரவேணும். மிக்க நன்றி

 

 

விருந்தினருக்கு ஒன்பது கொடுங்கள்!

தவிசு தாள் விளக்கப் புனல்தமக்கியன்ற

அடிசில்பூந்தண்மலர்ப் பாயல்

உவகையினுறையும் இடனுகர் தெண்ணீர்

ஒண்சுடர் எண்ணெய் வெள் ளிலைகாய்

இவைகளொன்பதுந்தன் மனைவயினடைந்தோர்

மகிழ்வுற வினிதனில் அளித்தல்

நவையற இல்வாழ் வடைந்துளோன் பூண்ட கடன்

— காசிகாண்டம்

 

 

1.ஆசனம்

2.கால் கழுவ தண்ணீர்

3.முடிந்த அளவு உணவு

4.நல்ல படுக்கை, பாய்

5.இருக்க இடம்

6.தெளிந்த தண்ணீர்

7.விளக்கு

8.எண்ணெய்

9.வெற்றிலை,பாக்கு

இந்த ஒன்பதையும் இல்வாழ்வான் (கிருஹஸ்தன்) என்பவன் , விருந்தாளிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

 

–Subham–

 

கணவன் தெய்வமாம்! பெயரை சொல்லக் கூடாதாம்!! அடுத்த ஜன்மத்திலும் அவரே………….. !!! (Post No.3719)

Written by London swaminathan

 

Date: 13 March 2017

 

Time uploaded in London:- 11-15 am

 

Post No. 3719

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

  1. கணவனே கண்கண்ட தெய்வம்; சாமியைக் கும்பிடவே வேண்டாம்; கணவனைக் கும்பிட்டால் ‘பெய்யெனப் பெய்யும் மழை!

 

2.கணவன் பெயரைச் சொல்லக்கூடாது. அது மரியாதைக் குறைவு!!

 

3.அடுத்த ஜன்மத்திலும் அவரே எனக்கு கணவராக வரவேண்டும்; இதற்காகத் தவம் செய்வேன்………………

 

இப்போதுள்ள இந்துப் பெண்களைக் கருத்து கேட்டால், நிபந்தனையற்ற ஆதரவு தருவதில்லை. என் கணவன் ராமன் போல் இருந்தால், முன்னோர் சொன்னதை ‘’ஆதரிப்பேன்;’’ என் கணவர் கிருஷ்ணர் போல இருந்தால் ‘’மாட்டேன்’’ என்பர்!

 

ஆண்களிடம் கருத்துக் கேட்டால், கல்யாணம் ஆனதும் “மனைவி அமைவதெலாம் இறைவன் கொடுத்த வரம்” என்று பாடிக்கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் நாக்கு குளறுவதால் “மனைவி அமைவதெலாம் இறைவன் கொடுத்த அ அ அ ‘ரவம்’ — என்று பாடுகிறேன் என்பர்

(அரவம்=பாம்பு); தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் கொட்டிக்கொண்டே இருக்கும் என்பது பழமொழி. என் மனைவிக்கு அதிகாரம் கொடுக்காமலேயே கொட்டிக்கொண்டிருக்கிறாள் என்பர்!

 

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் 2000 ஆண்டுகளாக பல “பத்தாம் பசலி”க் கருத்துகள் உள்ளன. உலகில் வேறு எந்த பழைய கலாசாரத்திலும் இப்படி “ஹைதர் அலி” கால கருத்துக்கள் இல்லை. ஆயினும் இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுகளாக இப்படி ஒரே கருத்து நிலவுவது, இந்த நாகரீகம் இயற்கையிலேயே இந்த மண்ணிலேயே உருவாகி வளர்ந்தது; ஆரியம்- திராவிடம் என்பதெல்லாம் நல்ல பிதற்ரறல் என்பதைக் காட்டுகிறது.

 

உங்கள் கணவர் பெயர் என்ன?

 

கணவன் பெயரைச் சொல்லக்கூடாது! என்று இந்துப் பெண்கள் நம்பினர்.

 

உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் இல்லாததால், அதுவும் உலகிலேயே பெரிய நாடாக இருந்த பாரதத்தில் 2000 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இருப்பதால் ஆரிய-திராவிடக் கூத்தாடிகளுக்கு இந்தக் கொள்கை அடி கொடுக்கும்.

 

மதுரையில் நாங்கள் வசித்த காலத்தில் என் தந்தை பெயரை என்  அம்மா எப்போதும் சொன்னதே கிடையாது. ஆனால் இப்போது என் மனைவி என் பெயரை, ஒன்றுக்குப் பத்து முறை சொல்லவும் தயங்க மாட்டாள்; நான் அதை காலத்தின் தேவை என்று கருதுகிறேன்.

 

மதுரை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாலளராக (ஜில்லா கார்யவாஹ்) தொண்டாற்றியபோது ஒரு வீட்டில் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். ஒரு பெண்மணி மட்டுமே இருந்தார். அவரது கணவன் பெயர் தெரிந்தால்தான் நாங்கள் சென்ற விலாசம் சரியா என்று தெரியவரும். ஆனால் அப்பெண் கணவர் பெயரைச் சொல்லாமல் எங்களுக்கு ‘’விடுகதை’’ போட்டாள். அதாவது பெயரை நேரடியாகச் சொல்லாமல், பல துப்புகளைக் கொடுத்தாள். பொதுவாக இந்தமாதிரி நேரத்தில் மகனோ மகளோ இருந்தால் அவர்கள் மூலம் கணவர் பெயரை வெளிப்படுத்துவர்.

 

எனக்கு அந்த வீட்டுக்காரரைன் பெயர் இப்போது நினைவில்லை. நான் லண்டனுக்கு வந்தே 31 வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு எடுத்துக்காட்டுக்காக கீழே உள்ளதைத் தருகிறேன்.

 

இது ராமநாதன் வீடா?

பெண்: இல்லீங்க

உங்கள் வீட்டுக்காரர்  பெயர் என்ன?

மிகவும் தயக்கத்துடன் அப்பெண்: அதுவா?.. அதுவா?…

 

அதாங்க மதுரைக் கோவில்ல இருரக்காரே அந்தக் கடவுள் பெயருங்க!

ஓ சுந்தரேசனா?

அப்பெண்: ‘’இல்லீங்க”

ஓ சுந்தரம்? …………. மீனாட்சி சுந்தரமா?

அது இல்லீங்க! தமிழ்ல சொல்லுவாங்களே/ இந்த சினிமாவில கூட நாகேஷ் உரக்கச் சொல்லுவாரே….

ஓ சொக்கனா!

ஆமாங்க, ஆமாங்க, அதே தான்!

 

இப்படி பலவிடுகதைகள் மூலம் நம் அறிவைச் சோதிப்பர். மண்டனமிஸ்ரரைச் சந்திக்கப் போன ஆதிசங்கரன் என்ற சிறுவனைப் பார்த்து நகைத்த நர்மதை நதிக்கரைப் பிராமணப் பெண்கள், அவருக்கு சம்ஸ்கிருதத்தில் புதிர் மிக்க கவிதை மூலம் வழி சொன்னது போல நமக்குக் கணவன் பெயரைத் தெரிவிப்பர்!

 

வால்மீகியும், காளிதாசனும், இளங்கோவும், வள்ளுவனும், அம்முவனாரும் சொல்லும் கருத்துகளை இன்றைய பெண்கள் ஏற்றுக் கொக்ள்வார்களா?

 

முதலில் புலவர்கள் சொல்லுவதைப் படியுங்கள். பின்னர் என் கேள்விக்கு என்ன பதில் என்று கேட்கிறேன்.

 

வள்ளுவனும் வால்மீகியும்!

 

வள்ளுவனும் வால்மீகியும் இவ்விஷயத்தில் கொஞ்சம் அளவுக்கு அதிகமகவே (TOO MUCH!) பேசிவிட்டனரோ!

 

ராமபிரான் வாய் மூலமும், சீதையின் மூலமும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொல்லிவிடுகிறார். அயோத்தியா காண்டத்தில்:-

 

சீதை சொல்கிறாள்:

ஒருவனுடைய தந்தை, தாய், தன்னுடைய சகோதரன், புதல்வன், மருமகள் ஆகிய ஐவரும் தாம்தாம் செய்த  பாவங்களுக்கு ஏற்ப அவற்றின் பலனை அனுபவிப்பார்கள். ஆனால் மனைவியே தன் கணவனின் பாவ புண்ணியங்களில் பங்கேற்பவள்.

 

கணவன் துன்புறும்போது மனைவி சுகத்தில் புரளும் ஈனப் பிறவி என்றா என்னை நினத்தீர்கள்?   த ங்களுடன் வாழ்வதே உத்தமமான தர்மம் என்பதைப் புரிந்து கொண்டேன்; தங்களுடன் வாழும்போது, எத்தகைய துன்பமும் எனக்குத் தென்றலைப் போல இனிக்கும்; குயிலைப் போல் ஆனந்தததைத் தரும். கணவனுக்குப் பணிவிடை செய்வதே நான் கொண்ட தர்மம். அந்தத் தர்மததைச் செய்ய விடுங்கள். தங்களை மீறிப் பேசும் சொற்கள் தங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். இருப்பினும் நான் கதியற்றவள் தாங்களே தெய்வம் என்று வந்தவள்; தங்களைப் பிரிந்து நான் எப்படி வாழ்வேன்?

 

ராமனும் கோசலையிடம் பேசும்போது, கணவனே தெய்வம் என்று குறிப்பிடுவான்.

தமிழ் வேதமாகிய திருக்குறள் தந்த திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளுகிறார்:–

 

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

 

வேறு எந்த தெய்வத்தையும் தொழாது, தன்னைக் கொண்ட கணவனை மட்டும் தொழுது  — பின் தூங்கி முன் எழும் — துயில் எழும் மனைவி, பெய் என்றால், உடனே அவள் சொல் கேட்டு மழையும் பெய்யும்!

 

(இதற்கு சாவித்ரி, வாசுகி, கண்ணகி கதைகளை ஆதாரமாகக் கொள்வர்.)

 

இதைவிட ஒருபடி மேலே போய், வள்ளுவன் செப்புவான்:

 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர் கொண்டனள் (குறள் 1315)

 

இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் – என்று சொன்னபோது –மறுமையில் மறந்து விடுவேன் என்று தவறாக நினைத்துக் கொண்டு, மறு பிறப்பில் பிரிந்துவிடுவோமோ என்று கண்களில் நீர் பெருகியது!

 

இதற்கெல்லாம் மூல காரணம் வால்மீகிதான்!

சங்கப் புலவர்களின் தங்க மொழிகள் (பொன்மொழிகள்)

 

2000 ஆண்டுகளுக்கு முன் பாடிவைத்த பைந்தமிழ்ப் புலவர்களும் வால்மீகியை அடியொற்றிக் கருத்துகளை உதிர்த்துள்ளனர்.

 

தோளும் அழியும்…………………

சாதல் அஞ்சேன்; அஞ்சுவல் சாவின்

பிறப்புப் பிரிது ஆகுவது ஆயின்,

மறக்குவேன்கொல், என் காதலன் எனவே

நற்றிணை 397, புலவர் அம்மூவனார்

 

பிரிவிடை ஆற்றுக என வற்புறுத்திய தோழிக்கு, ஆற்றுவேன் என்று தலைவி சொல்லியது:

“மாலைப் பொழுதும் வந்துவிட்டது. யான் எப்படி ஆவேனோ இங்கே யான் இறப்பதற்கு பயப்படவில்லை ஆனால் வேறு ஒன்றுக்கு அஞ்சுவேன்; இறந்த பின் , மறு பிறப்பில் பெண்ணாகப் பிறக்காமல், வேறு ஒன்றாகப் பிறந்தால் என்ன செய்வேன் என்ற எண்ணம் என் மனதை வாட்டுகிறது”  — என்பது ஆன்றோர் உரை.

 

 

குறுந்தொகையிலும் அம்மூவனாரே இக்கருத்தைத் திருவாய் மலர்ந்து அருளுவார்:

 

அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கே ழன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே

–குறுந்தொகை 49, அம்மூவனார்

 

தலைமகன் பரத்தை வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் இன்பம் துய்த்துவிட்டுத் திரும்பிவருகிறான்:

ஆன்றோர் உரை:

தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவாற்றாமை நீங்குமன்றே; நீங்கி யவழிப் பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது:

 

“அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய, தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும், நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையுடைய தலைவ!

 

இப் பிறப்பு நீங்கப் பெற்று நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், என்னுடைய கணவன், இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக!  நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி, இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!

 

கருத்து:- நம்முடைய நட்பு பிறவிதோறும் தொடரும் இயல்பினதாகுக.

((மாதவியிடம் போய்விட்டுத் திரும்பிவந்த கோவலனை கண்ணகி ஏற்றுக் கொண்டாள்!))

 

 

இதே கருத்து குறுந்தொகை 199 -பரணர்

குறுந்தொகை-2 இறையனார்

குறிஞ்சிப் பாட்டு வரி 24 -கபிலர்

பெருங்கதை2-11-39; மற்றும் பல இடங்களில் வருகிறது.

 

தமிழர்கள் மறு பிறப்பிலும், மறு பிறப்பில் நட்பு தொடர்வதிலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள்

 

காளிதாசனின் ரகு வம்ச காவியம்

 

காளிதாசன், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளான். ரகு வம்சத்திலிருந்து மட்டும் சில மேற்கோள்களைத் தருவன்:

சீதை சொல்கிறாள்; இப்பொழுது நான் கர்ப்பவதி; தவம் செய்தால் அது பிறக்கப்போகும் குழந்தைகளைப் பாதிக்கும்;  குழந்தை பிறந்தவுடன், நான்கு தீக்களுக்கு நடுவே நின்று கொண்டு சூரியனை உற்று நோக்கி தவம் செய்வேன். எதற் காக என்றால் அடுத்த பிறப்பில் நானும் நீங்களும் கணவன் மனைவி ஆக வேண்டும்; அப்பொழுது இப்பிறப்பில் ஏற்பட்ட பிரிவு ஏற்படக்கூடாது!

 

சாஹம் தபஹ சூய நிவிஷ்ட த்ருஷ்டிர் ஊர்த்வம் ப்ரசூதேச் சரிதும் யதிஷ்யே

பூயோ யதா மே ஜனனாந்தரே அபி த்வமேவ பர்தா ந ச விப்ர யோகஹ

ரகு 14-66

 

பொருள்

எவ்வாறு மறுபடியும் எனக்கு மறுஜன்மத்திலும் தாங்களே கணவராக ஆவீர்களோ பிரிவும் உண்டாகாதோ அவ்வாறு இத்தகைய துரதிருஷ்டம் வாய்ந்த நான், பிரசவத்திற்குப் பிறகு, சூர்யனிடத்தில் வைக்கப்பட்ட பார்வையுடையவளாக தவத்தை (பஞ்சாக்னி தபஸ்) செய்யப் போகிறேன்

 

இன்னொரு இடத்தில் ஆயிரம் மன்னர்களுக்கு இடையே இந்துமதி, அஜனைத் தனக்கு கணவனாக ஏற்றது எப்படி யென்றால் மனதுக்கு பூர்வ ஜன்ம தொடர்பினை அறியும் சக்தி உண்டு என்பார் (7-15)

 

ரதிஸ்மரௌ நூனம் இமௌ அபூதாம் ராக்ஞாம் சஹஸ்ரேஷு ததாஹி பாலா

கதேயமாத்மப்ரதிரூபமேவ மனோ ஹி ஜன்மாந்தர சம்கதிக்ஞம்

 

இவ்விருவரும் மனித வடிவில் தோன்றிய இணைபிரியாத ரதியும் மன்மதனுமே ஆவர்; மனமானது பூர்வ ஜன்மதொடர்பின் படியே செயல்படும் ஆதலால இவளுடைய மனமும் 1000 அரசர்கள் குழுமியிருந்த இடத்தில் அவளுக்கு உரியவனையே தேர்ந்தெடுக்க உதவியது.

 

கண்ணகி எப்படி தெய்வமானாள்?

 

 

தெய்வந்தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்

தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் – தெய்வமாய்

மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி

விண்ணக மாதர்க்கு விருந்து!

–கட்டுரைக் காதை, சிலப்பதிகாரம்

 

இளங்கோ சொல்வது:–

மண்ணக் மாதர்க்கு எல்லாம் அணி போல்பவளான கண்ணகியானவள், தெய்வமாக விண்ணக மாதர்க்கு விருந்தினளாயினாள். தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழும் பெண்ணை தெய்வமும் வணங்கும் என்பது இவ்வுலத்தில் இதனால் உறுதி ஆய்விட்டது.

 

கட்டுரையின் நீளத்தைக் கருதி ஏனைய மேற்கோள்களைத் தவிர்ப்பன்.

பெண்களே! உங்கள் கருத்து என்னவோ?

–சுபம்–

வள்ளுவனுக்கும் கம்பனுக்கும் பிடித்த அவதாரம்! (Post No.3630)

Written by London swaminathan

 

Date: 12 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 14-12

 

Post No. 3630

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

காலினால்  உலகை அளந்தான் விஷ்ணு!

வாலினால் உலகை அளந்தான் அனுமன்!

கம்பன் புகழ் மாலை

 

திருமாலின்  பத்து அவதாரங்களில் வாமனாவதாரத்தை வள்ளுவன் பாடி இருக்கிறான் (குறள் 610). வேதங்களில் கூட இந்த “மூன்றடியால் உலகளந்த கதை” உள்ளது. கம்பனோவெனில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வாமன/ த்ரிவிக்ரம அவதாரத்தைப் பாடி விடுகிறான்.

 

விஷ்ணு எடுத்த 24 அவதாரங்களை பாகவதம் முதலியன குறிப்பிடுகின்றன. பர்த்ருஹரி என்பவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே, தசாவதாரத்தைக் குறிப்பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த ஜெயதேவர், கீத கோவிதம் என்னும் நூலில் பத்து அவதாரங்களில் புத்தரையும் ஒருவராகச் சேர்த்து ஒரு புரட்சி செய்தார். அதாவது புத்தமதத்தை, இந்துமதம் ஜீரணம் செய்ய, கபளீகரம் செய்ய உதவினார்.

 

மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு (610)

 

“தன் அடியினால் உலகத்தை அளந்த இறைவன் தாவிய

நிலப்பரப்பு முழுவதையும், சோம்பல் இல்லாத மன்னன் ஒரு சேர அடைதல் கூடும்.”

 

ஆழ்வார்கள் பல இடங்களில் வாமனனை, த்ரிவிக்ரமனைப் பாடினாலும் கம்பன் பாடும் இடம் இன்னும் பொருத்தமாகவும், அழகாகவும் இருக்கிறது.

 

திருமாலின் காலும் அனுமானின் வாலும்

 

நாலினொடு உலகம் மூன்றும் நடுக்கற அடுக்கி நாகர்

மேலின்மேல் நின்ற காறும் சென்ற கூலத்தின், “விண்டு

காலினால் அளந்த வான முகட்டையும் கடக்கக்கால

வாலினால் அளந்தான்” என்று வானவர் மருளச் சென்றான்

–கடல்தாவு படலம், சுந்தர காண்டம்

 

பொருள்:-

தேவர்களுடைய, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட உலகங்களின் எல்லையை, திருமால் தனது ஒற்றைக் காலினால் அளந்த வான்முகட்டை,  7 உலகங்களும் அஞ்சி நடுங்கும்படி அனுமான் தனது வாலினால் அளந்துவிட்டான் என்று தேவர்கள் வியப்படைந்தனர். அனுமனின் வால், எமனுடைய பாசக் கயிறு போல இருந்தது. வானத்தின் மீது வாலைத் தூக்கிக்கொண்டு ஆஞ்சநேயன் பறந்தான்.

 

 

கிஷ்கிந்தா காண்டத்தில், மயேந்திரப் படலத்திலும் இதுபற்றிக் கம்பன் பேசுவான்:

 

பொருவரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய

பெருவடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்ந்த தாள் போல்

உரு வறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும்

திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான்

 

பொருள்:-

ஒப்புவமை இல்லாத கடலைத் தாண்டும் எண்ணம் கொண்ட அனுமன், மூன்று உலகங்களையும் தாண்டிய, வியக்கத்தக்க குணம், செயல்களை உடைய திருமாலின் திருவடியைப் போல, வானளாவ உயர்ந்தான். இதனால் உவமையாலும் திருவடி என்கின்ற தனது திருநாமத்தின் இயல்பும் யாவர்க்கும் விளங்க நின்றனன் அனுமன்.

ரிக்வேதத்திலும் (1-22-17;1-155-40) இக்கதை குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

 

திருமால் உலகளந்த கதையை சைவப் பெரியார்களும் பாடிப்பரவி இருக்கின்றனர்.

மண்ணும் விண்ணும் தாய அடி அளந்தான் (சம்பந்தர் தேவாரம். தூங்கானை மாடம் 9)

 

தாள்பரப்பி மண் தாவிய ஈசனை (திருவாய் மொழி 3-3-11)

 

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி (ஆண்டாள் திருப்பாவை 3)

 

–Subham–