தீமையை ஒழிக்க யுகம் தோறும் அவதரிப்பேன்! (Post No.7054)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 4 OCTOBER 2019

British Summer Time uploaded in London – 12-47

Post No. 7054

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

நவராத்திரி பிரார்த்தனை

தீமையை ஒழிக்க யுகம் தோறும் அவதரிப்பேன்!

ச.நாகராஜன்

அறம் வெல்லும்; பாவம் தோற்கும்  – கம்பர்

சத்யமேவ ஜயதே; நாந்ருதம் –  வேதம்

தர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் ஊறு நேர்கிறதோ, அதர்மம் எப்போதெல்லாம் எழுச்சியுறுகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் சிருஷ்டித்துக் கொள்கிறேன் – கீதையில் கண்ணபிரான்

இது தான் மொத்த ஹிந்து  மதத்தின் சாரம்.

அதர்மம் மேலோங்கி இருந்ததையும் அது தலைவிரித்தாடிய விதத்தையும் புராணங்கள் கூறுகின்றன.

தெய்வீக சக்தி எப்படி தர்மத்தை நிலைநாட்டியது என்பதையும் அவை விரிவாக விளக்குகின்றன.

சிவன் திரிபுராசுரனை வதம் செய்தான்.

பார்வதி தேவி மஹிஷாசுரனை வதம் செய்தாள்.

விஷ்ணு மது கைடபரை வதம் செய்தார்

இந்திரன் விருத்திராசுரனை வதம் செய்தான்.

ராமர் விராதனை வதம் செய்தார்.

துர்கா தேவி ரக்தபீஜனை வதம் செய்தாள்.

துர்கா தேவி சும்பன் மற்றும் நிசும்பனை வதம் செய்தாள்.

சண்டமுண்டனை வதம் செய்ததால் தேவி சாமுண்டி என்ற பெயரைப் பெற்றாள்.

இந்திரன் புலோமாசுரனை வதம் செய்தான்.

தேவி தூம்ராக்ஷ ராக்ஷசனை வதம் செய்தாள்.

கார்த்திகேயன் தான் அவதரித்த ஆறாம் நாளிலேயே தாரகாசுரனை வதம் செய்தார்.

ராமர் வாலி, ராவணன், கர, தூஷணன் ஆகியோரை வதம் செய்தார்.

கிருஷ்ணர் கம்ஸனை வதம் செய்தார். பூதனையை வதம் செய்தார்.

சால்வ தேச ராஜா ப்ரஹ்மதத்த்னை கிருஷ்ணர் வதம் செய்தார்.

கிருஷ்ணர் மது என்ற அரக்கனை வதம் செய்தார்.

கிருஷ்ணர் பகாசுரன் மற்றும் காகாசுரனை பால்ய வயதிலேயே வதம் செய்தார்.

கணேசர் லோமாசுரனை வதம் செய்தார்.

கிருஷ்ணர் கேசி என்ற அரக்கனை வதம் செய்தார்.

கிருஷ்ணர் சிசுபாலனை வதம் செய்தார்.

சிவன் அந்தகாசுரனை வதம் செய்தார்.

கிருஷ்ணர் அகாசுரனை வதம் செய்தார்.

ராமர் சம்பூகனை வதம் செய்தார்.

இந்திரன் ஜம்பாசுரனை வதம் செய்தான்.

இந்திரன் விஸ்வரூபனை வதம் செய்தார்.

கிருஷ்ணர் சங்கடாசுரனை வதம் செய்தார்.

பரசுராமர் சஹஸ்ரபாகுவை வதம் செய்தார்.

மஹிஷாசுரனின் சேனாதிபதியான சிக்ஷுரனை,  தேவி வதம் செய்தாள்.

விஷ்ணு க்ராஸன் என்ற அசுரனை வதம் செய்தார்.

அகஸ்தியர் வாதாபி என்ற அசுரனை வதம் செய்தார்.

வராஹ அவதாரத்தில் ஹிரண்யாக்ஷணை விஷ்ணு வதம் செய்தார்.

மத்ஸ்யாவதாரத்தில் சங்காசுரனை விஷ்ணு வதம் செய்தார்.

ஹனுமான் அக்ஷனை வதம் செய்தார்.

ராமர் துந்துபியை வதம் செய்தார்.

நரசிம்மாவதாரத்தில் ஹிரண்யகசிபுவை விஷ்ணு வதம் செய்தார்.

பொய்க்கும் கலியில் ஏராளமான ராக்ஷஸர்கள் உருவாகி விட்டனர்.

ஆகவே பாரதியார் பாடியது போல

“பொய்க்கும் கலியை நான் கொன்று

    பூலோகத்தார் கண்முன்னே

மெய்க்கும் கிருத யுகத்தினையே

   கொணர்வேன் தெய்வ விதி இஃதே”

என்று ஒவ்வொருவரும்  தெய்வ சக்தி கொண்டு அதர்ம சக்திகளை அழிக்க முன் வர வேண்டும்.

தெய்வீக சக்தி வளர அன்னை பராசக்தி அருள் பாலிப்பாளாக!

நவராத்திரியில் நமது பிரார்த்தனை இதுவே!

விண்ணும் மண்ணும் தனி ஆளும்

   வீரை சக்தி நினதருளே – பாரதியார்.

***

மநு நீதி நூலில் சினிமாப் பாட்டு, பாரதியார் பாட்டு வரிகள்! (Post No.7053)

WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 4 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8–08 AM
Post No. 7053


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பெண்களுக்கும் சொத்து உரிமை உண்டு; மநு நீதி நூல் – பகுதி 43

இதுவரை அத்தியாயங்களை முடித்து 9-ம் அத்தியாயத்தில் 54 ஸ்லோகம் வரை கண்டோம். மநு  நீதி நூல் –43 ம் பகுதியில் மேலும் சில முக்கிய விஷயங்களை முதலில் புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன். பகுதி-42 ஜூலை 19ம் தேதி இந்த பிளாக்கில் பதிவிடப்பட்டது

இதோ இன்று மநு நீதி நூல் – பகுதி 43

ஸ்லோகம் 9-54ல் சொல்கிறார்– வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் விதை எந்த நிலத்தில் தங்கி விளைகிறதொ அந்த நிலச் சொந்தக்காரருக்கே அந்த மரமோ செடியோ சொந்தம் ஆகும். அதே போல ஒரு பெண் யார் மூலமாகக் கர்ப்பம் அடைந்தாலும் அந்தக் குழந்தை அவளுக்கே சொந்தம். இதை மிருகங்களின் வாழ்க்கையில் கூடக் காண்கிறோம் (ஸ்லோகம் 9-56)

மஹாபாரதத்தில்  விசித்ரியவீர்யனுக்குக்கு   குழந்தைகள் பிறக்கவில்லை. அவன் இறந்த பின்னர் அம்பாஅம்பாலிகா மூலம் வேறு ஒரு ஆண்மகன் மூலம் குழந்தைகள் பெறப்பட்டன. செக்ஸ் திருப்திக்காக இல்லாதபடிவம்ச வ்ருத்திக்கு மட்டும் பயன்படும் இம்முறை மஹபாரத காலத்தில் இருந்தது. இதற்கு நியோகம் என்று பெயர். இது பற்றி மநு நீதி நூலில் எதிரும் புதிருமான கருத்துக்கள் உள்ளன. (இது இடைச் செருகல்களைக் INTERPOLATIONS IN MANU SMRTI காட்டுவதாக நான் நினைக்கிறேன்)

ஸ்லோகம் 9-58 முதல் நியோக முறை பற்றிப் பாடுகிறார். ஒரு பெண்ணோ ஆணோ குழந்தைகள் இல்லாதபோது மற்றொரு ஆண் மூலம் ஒரே ஒரு முறை மட்டும் குழந்தைக்காக முயற்சிக்கலாம். (தற்கால சட்டம் இதற்கு வழிவகை செய்யவில்லை)

9-64 முதல் முரண்பாடான கருத்துகள் உள. அதாவது மநுநியோக முறையையும்விதவை மறுமணத்தையும் எதிர்க்கிறார்.

9-65க்கு வியாக்கியானம் எழுதிய ஒருவர் ரிக்வேதம் 10-40-2ல் இம்முறை வருகிறது என்கிறார். 9-66ல் இவை எல்லாம் வேனன் என்ற கொடுங்கோல் மன்னன் காலத்தில் வந்த மிருக நீதிகள் என்று மநு பழிக்கிறார். வேனனை ரிஷிகள் கடைந்து — PARTHOGENIC METHODS — செயற்கை முறை கர்ப்பம்- திசுக்கள் மூலம் TISSUE CULTURE  ஆண் உடலில் இருந்து குழந்தை உருவாக்கும் அதி நவீன முறை  –CLONING TECHNIQUES — மூலம் பிருது உண்டாக்கப்பட்டான் என்று புராணங்கள் பகரும். இதனால்தான் பூமியை பிருதுவி என்று அழைக்கிறோம். அவன் உத்தமோத்தமன்ஸத்தியவான்)

(இங்கே என் கருத்துக்கு மேலும் ஒரு ஆதாரம் கிடைக்கிறது. வேனன்சுமுகன் போன்ற பழங்கால மன்னர்களை மட்டுமே மநு  குறிக்கிறார். ராமன் கிருஷ்ணன் பற்றிக் கதைப்பது இல்லை. இவர் மிகவும் பழங்காலத்தவர். பாபிலோனிய ஹமுராபிக்கும் முந்தையவர்- உலகின் முதல் சட்ட நிபுணர்- உலகின் முதல் சட்ட நூல் மனு ஸ்ம்ருதிதா ன் – என்ற எனது வாதம் மேலும் வலுப்பெறுகிறது. வேறு சில முக்கிய ஆதாரங்களை முன்னமே காட்டிவிட்டேன்)

9-74 ல் மிக முக்கியமான உளவியல் விஷயத்தைச் செப்புகிறார். ஒருவன் திரைகடல் ஓடித் திரவியம் தேட நீண்ட காலம் மனைவியைப் பிரிந்து சென்றால் அவளது வாழ்க்கைக்கு வழி செய்துவிட்டுப் போக வேண்டும் அல்லது அவள் வேறு ஒருவனுடன் ஓடிப்போய் விடுவாள் என்கிறார்.

தொல்காப்பியமும் கூடத் தமிழ்ப் பெண்கள் கடல் கடந்து வெளிநாடு போகக் கூடாது என்று தடை போடுகிறது (எனது பழைய கட்டுரையில் முழு விவரம் காண்க)

XXX

விவாகரத்து

9-77 மனைவி அடங்காப் பிடாரியாக – சினிமாவில் வரும் நீலாம்பரியாக இருந்தால்- அவளை ஓராண்டுக்குப் பின்னர் வெளியே தள்ளு என்கிறார்.

9-78 மனைவி குடிகாரியாகவோஊதாரியாகவோ இருந்தால் நகைகளைப் பிடுங்கி மாதம் தனியே வை என்கிறார். (ஆக அந்தக் காலத்திலும் வீட்டுக்குள் சூர்ப்பநகைகள்தாடகைகள் இருந்தனர் போலும்).

ஸ்லோகம் 9-80 முதல் சுவையான செய்திகள் உள. சோரம் போகும் பெண்களை விலக்கலாம்எட்டு ஆண்டுகளுக்கு மலடியாக உள்ளவளை விலக்கலாம். பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றால்அவளைப் புறக்கணித்து வேறு ஒருவருடன் வாழலாம் என்பன  9-85 வரை உள்ளன.

குடிகாரிக்கு தங்க குந்துமணி அபராதம் போடு என்ற வாசகம் அந்தக் காலத்தில் நாணய முறை இருந்ததைக் காட்டும் (9-84)

XXXX

கல்யாண வயது

கோவலன் 16, கண்ணகி 12 வயதானபோது கல்யாணம் கட்டியதாக தமிழ் காவியம் சிலப்பதிகாரம் செப்பும். தமிழ்ப் பெண்கள் பருவம் எய்திய உடனே ஓடிப்போன செய்திகளை சங்க காலப் பாடல்களில் காண்கிறோம். இதே போல மநுவும் மிக இளம் வயதில் கல்யாணம் செய்வது பற்றிப் பேசுகிறார்- ஸ்லோகம் 9-94

XXX

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

ஒரு சினிமா பாட்டு கேட்டு இருப்பீர்கள்அது மநு சொன்ன வாசகம்.

ஸ்லோகம் 9-95ல் சொல்கிறார்- கடவுள் கொடுத்த பரிசுதான் மனைவி. ஆகையால் குணமுள்ள பெண்களைப் போற்றிக் காப்பாற்றினால் இறைவன் அருள் மழை பொழிவான்.

(இதுவரை எவ்வளவோ நூல்கள் படித்து விட்டேன். மநு போல பெண்களுக்கு ஆதரவாகக் கதைத்தவர் எவரும் இலர். பெண்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால்அவர்களுக்குக் குழந்தையே இல்லாவிடினும்அவர் அனுமதியின்றி வெளியேற முடியாது என்கிறார். பெண்களை அழவிட்டால்குடும்பம் வேறோடு சாய்ந்து அழியும் என்கிறார். சகோதரிகளுக்கு சகோதரர்கள் ஆடை ஆபரணங்களை அளித்து க மகிழ்ச்சிக் டலில் மிதக்க விட வேண்டும் என்கிறார்.

இந்த ஒன்பதாம் அத்தியாயத்தில் பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என்கிறார். இத்தனையும் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது.

XXX

 பாரதியார் சொன்ன மநு பாட்டு

பெண்களுக்கு மட்டும்தானா கற்பு? கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்கிறார் உலக மஹா கவி சுப்ரமண்ய பாரதியார். இது மநு 9-101ல் சொல்லும் வாசகம்.

சாகும் வரை இருவரிடத்திலும் கற்பின்மை வரக்கூடாது. இதுதான் ஆண்-பெண் உறவில் தலையாய கடமை- ஸ்லோகம் 9-101

XXX

ஸ்லோகம் 9-103- ஆண்-பெண் செக்ஸ் உறவு முறைகள் பற்றியும் குழந்தைகள் பெறாவிடில் அபூர்வமாகக் கையாள வேண்டிய விதிகளையும்  இதுவரை சொன்னேன்இனிமேல் பாகப் பிரிவினை பற்றிக் கதைப்பேன்

சொத்து உரிமை

9-104 மூத்த மகனுக்கே அதிக உரிமை

9-112 பாகப் பிரிவினை விகிதாசாரம்.

9-126 இரட்டையரில் யார் முதல்வர்?

9-127 ஆண் குழந்தையே இல்லாவிடில்மகளுக்கு சொத்து.

XXXX

தட்சனின் 10+13+ 27 + 50 மகள்கள்

9-129 தக்ஷப் பிரஜாபதி என்ன செய்தார்? அவருக்கு 50 பெண்கள்தான் பிறந்தனர். அவர் 10 பேரை தர்மருக்கும், 13 பேரை காஸ்யபருக்கும், 27 பேரை சந்திரனுக்கும் (27 நட்சத்திரங்கள்) கொடுத்தார்

9-130- ஒரு மகன் என்பவன் தந்தையைப் போன்றவன்மகள் என்பவளோ  அந்த மகனுக்குச் சமம் ஆனவள்இப்படி இருக்கையில் மகன் இடத்தை நிரப்ப வந்த பெண்ணின் சொத்தை வேறு யார் எடுக்க முடியும்?

10-131 அம்மாவின் முழுச் சொத்தும் மகளுக்கேஅவள் இறந்துவிட்டால் அது மகளின் மகனுக்கே!!


மற்ற விஷயங்களை ஒரிஜினல் ஸ்லாகங்களில் படியுங்கள்இதோ ஸ்லோகங்கள்:–

SLOKAS 66-69

78- 86


SLOKAS 87 – 90

ஸ்லோகம் 90, 91 – காதல் கல்யாணம் சரிதான்!

96– 105
106-110
111-115
115- 123

MISSING PAGES WILL BE POSTED LATER

TO BE CONTINUED….

சைவத்தில் எட்டு, வைணவத்தில் எட்டு! (Post No.7050)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 3 OCTOBER 2019

British Summer Time uploaded in London – 14-11

Post No. 7050

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

திருமாலின் எட்டு வகை சயனங்கள்–

வடபத்ர சயனம் – திருவில்லிப்புத்தூர்

வீர சயனம் – திரு இந்தளூர்

தல சயனம் – கடல் மல்லை (மஹாபலிபுரம்)

உத்தான சயனம்  –  குடந்தை

புஜங்க சயனம் – திருப்புல்லாணி

போக சயனம் – தில்லை திரு சித்திர கூட

மாணிக்க சயனம் –திருநீர்மலை

Xxx

சுயம் வியக்த விஷ்ணு கோவில்கள் (தானாகத் தோன்றிய மூலவர்கள்)–

ஸ்ரீரங்கம், திருமுஷ்ணம், திருவேங்கடம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், வானமாமலை, புஷ்கரம், பத்ரி

Xxxx

சிவ்பெருமானின் எட்டு பூத கணநாதர்கள்–

குண்டோதரர், கும்போதரர், அகோதரர், கஜகர்ணர், விசித்திரகர்ணர், வியாக்ரமுகர், சிங்கமுகர், பட்சபாட்சர்

xxx

அஷ்ட பைரவர்களும் சக்திகளும்–

அசிதாங்க பைரவர்- பிராஹ்மீ

குரு பைரவர்- மாகேச்வரி

சண்டபைரவர் – கௌமாரி

குரோத பைரவர்- வைஷ்ணவி

உன்மத்த பைரவர்- வராஹி

கபால பைரவர்- இந்திராணி

பீஷண  பைரவர்- சாமுண்டி

சம்ஹார பைரவர்- சண்டிகா

சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் காணலாம்

Xxxx

picture by lalgudi veda

அஷ்ட வீரட்டான தலங்கள்–

கண்டியூர்- பிரமன் சிரம் கொய்த தலம்

கடவூர் – யமனை உதைத்த தலம்

அதிகை – திரிபுரத்தை எரித்த தலம்

வழுவூர் – யானையை உரித்த தலம்

பறியலூர் – தக்கன் சிரம் கொய்த தலம்

கோவிலூர் – அந்தகாசுரனை சம்ஹரித்த தலம்

குறுக்கை – காமனை எரித்த தலம்

விற்குடி – சலந்தாசுரனை சம்ஹரித்த தலம்

Xxx

அஷ்டமூர்த்திகளின் பெயர்கள்-

பவன், சர்வன் ஈசன், பசுபதி, வீமன், உக்கிரன், மாதேவன், உருத்திரன்

xxx

சித்தாந்த அஷ்டகம்-

சிவப்பிரகாசம்

திருவருட்பயன்

வினா வெண்பா

போற்றிப் பஃறொடை

கொடிக்கவி

நெஞ்சுவிடுதூது

உண்மை நெறி விளக்கம்

சங்கற்ப நிராகரணம்

Xxx

ஈஸ்வரனின்  8  குணங்கள்

தன்வயத்தனாதல்

தூயவுடம்பினனாதல்

இயற்கை உணர்வினன் ஆதல்

முற்றுமுணர்தல்

பாரம் நீங்குதல்

பேரளுடைமை

வரம்பிலின்பமுடைமை

முடிவிலா ஆற்றல் உடைமை

Xxx subham xxx

picture by Sanchaita Munshi

கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி (Post No.7027)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 28 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – -7-37 AM

Post No. 7027

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

அக்டோபர் 2019 நற்சிந்தனை காலண்டர்

கர்ம வினை, செயல்பாடு பற்றி 31 பொன்மொழிகள்

பண்டிகை நாட்கள்-அக்.2- காந்தி ஜயந்தி; 7- சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை; 8-விஜயதசமி; 26-தந்வந்திரி ஜயந்தி27-தீபாவளி, லக்ஷ்மி-குபேர பூஜை; 28-ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்

பௌர்ணமி-13; அமாவாசை-27; ஏகாதசி விரதம்- 9,24

முஹூர்த்த தினங்கள்—24, 30

அக்டோபர் 1 செவ்வாய்க் கிழமை

ஸ்வார்ஜிதான்யேவ கர்மாணி ப்ரயான்ந்த்யேவ ஸஹாயதாம் – ராமாயண மஞ்சரி

உன் செயல்களே உனக்குத் துணை வரும்

XXX

அக்டோபர் 2 புதன் கிழமை

ஸ்வார்த்தமேவ ஸமீஹஸ்வ கிம் பரார்த்தஸ்ய சிந்தயா- கஹாவத் ரத்னாகர்

உன் வேலையைக் கவனி, மற்றவர்களைப் பற்றி என்ன பேச்சு?

XXX

அக்டோபர் 3 வியாழக் கிழமை

ஸ்வே ஸ்வே கர்மண்யபிரதஹ ஸம்சித்திம் லபதே நரஹ – பகவத் கீதை 18-45

அவரவர் கடமையில் ஈடுபடுவோர் பக்குவ நிலையை அடைவர்

XXX

அக்டோபர் 4 வெள்ளிக் கிழமை

ஸ்வயமக்ஷிணீபன்க்த்வாந்தோ பவஸி

உன் கண்களைக் குத்திக்கொண்டால் நீயே குருடாவாய்– கஹாவத் ரத்னாகர்

XXX

அக்டோபர் 5 சனிக் கிழமை

ஸ்னிக்தேஸ்வாசஜ்யாம் கர்ம யதுஷ்கரம் ஸ்யாத்

கடினமான வேலைகளை முயற்சியுடையோரிடம் தாருங்கள்- பிரதிக்ஞா யௌகந்தராயண

-XXX

அக்டோபர் 6 ஞாயிற்றுக் கிழமை

ஸுகம்ஹி ஸுக்ருதாத் துக்கம் துஷ்க்ருதாதேதி நான்யதஹ – கதா சரித் சாகரம்

நல்லன செய்தால் இன்பம்; தீயன செய்தால் துக்கம்

XXX

அக்டோபர் 7 திங்கட் கிழமை

ஸுகம் துக்கம் ஸ்வயம் புங்தே ந சான்யே ஸவஸ்ய கர்மணஹ – கஹாவத் ரத்னாகர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா (புறநானூறு)

XXX

அக்டோபர் 8 செவ்வாய்க் கிழமை

ஸ்வஹ கார்யமத்ய குர்வீத பூர்வாஹ்ணே சாபராஹ்ணிகம் – சம்ஸ்க்ருத பொன்மொழி

நாளைய வேலையை இன்றே செய்க; பிற்பகல் வேலையை முற்பகல் செய்க

-XXX

அக்டோபர் 9 புதன் கிழமை

விரமேதஸமாப்ய நாரப்தம்-சதாபதேச பிரபந்த

எடுத்த காரியத்தை தொடுத்து முடி

XXX

அக்டோபர் 10 வியாழக் கிழமை

வக்தும் ஸுகரம் துஷ்கரமத்யவஸிதும் – வேணி சம்ஹாரம்

சொல்லுதல் எளிது, செய்வது கடினம்

XXX

அக்டோபர் 11 வெள்ளிக் கிழமை

லோகபீடகரம் கர்ம ந கர்தவ்யம் விசக்ஷணே – வால்மீகி ராமாயணம்

நல்லோர் செய்கை எதுவும் உலகத்தைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

XXX

அக்டோபர் 12 சனிக் கிழமை

யதா கர்ம ததா பலம்

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

XXX

அக்டோபர் 13 ஞாயிற்றுக் கிழமை

யத்யதாத்மவசம் கர்ம தத்தத்ஸேவேத யத்னதாஹ- மநு ஸ்ம்ருதி 4-159

உனது சக்திக்குட்பட்டதை செய்து வா

XXX

அக்டோபர் 14 திங்கட் கிழமை

யோகஹ கர்மஸு  கௌசலம் – பகவத் கீதை 2-50

யோக்ம் என்பது திறமையாகச் செயல்படுவதாகும் (சமபுத்தியுடன் செயல்படுவோரைப் புண்ணிய, பாவம் தொடராது)

-XXX

அக்டோபர் 15 செவ்வாய்க் கிழமை

யஹ காரயதி ஸ கரோத்யேவ – பழமொழி

உழைப்பவனே மற்றவர்களுக்கு ஊற்றுணர்ச்சி தருகிறான்

XXX

அக்டோபர் 16 புதன் கிழமை

மஹத்சு நீசேஷு ச கர்ம சோபதே- பஞ்ச தந்திரம்

ஒரு செயல் பெரிதா, சிறிதா எனபதை அந்த செயலே காட்டிவிடும்

XXX

அக்டோபர் 17 வியாழக் கிழமை

மனஸா சிந்திதம் கார்யம்  வாசா நைவ ப்ரகாசயேத்- சானக்ய நீதி 10-7

மனதில் தோன்றுவதை எல்லாம் வார்த்தையில் வடித்துக் கொட்டாதே

XXX

அக்டோபர் 18 வெள்ளிக் கிழமை

பஹ்வாரம்பே லகுக்ரியா – கஹாவத்ரத்னாகர்

சின்ன காரியத்துக்கு ஆடம்பரமான ஆரம்பம்!

Xxx

அக்டோபர் 19 சனிக் கிழமை

பத்ரக்ருத்ப்ராப்னுயாத்பத்ரம் அபத்ரஞ்சாப்யபத்ரக்ருத் – கதாசரித் சாகரம்

இனம் இனத்தோடு சேரும்(நல்லோர் நல்லோரை நாடுவர்; தீமை தீயதை நாடும்)

Xxx

அக்டோபர் 20 ஞாயிற்றுக் கிழமை

பத்ர அபத்ரம் வா க்ருதமாத்மனி கல்ப்யதே – கதா சரித் சாகரம்

நல்லதோ கெட்டதோ- செய்தது அவனுக்கே திரும்பிவரும்

Xxx

அக்டோபர் 21 திங்கட் கிழமை

ந குப்ஸிதம் கர்ம குர்வதி – சதோபதேச பிரபந்த

சான்றோர் ப ழிக்கும் வினையை செய்யற்க

xxx

அக்டோபர் 22 செவ்வாய்க் கிழமை

ந சிகீர்ஷத்துஷ்கரம் கர்ம– சதோபதேச பிரபந்த

செய்ய முடியாத செயலில் இறங்காதே

xxxx

அக்டோபர் 23 புதன் கிழமை

நிஜம் கர்ம ப்ரகுர்வாணைர்லஜ்யதே நஹி ஜந்துபிஹி- ப்ருஹத் கதா கோச

ஆண்மகன் அவனுக்கே உரித்தான செயல்களைச் செய்ய அஞ்சுவதில்லை (வினையே ஆடவர்க்கு உயிரே)

xxx

அக்டோபர் 24 வியாழக் கிழமை

முடிவும் இடையூறும்  முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல் – குறள் 676

செயலைத் துவங்கும் முன் அதன் முடிவு, இடையூறு, இறுதியில் கிடைக்கும் பலன் ஆகியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்

Xxx

அக்டோபர் 25 வெள்ளிக் கிழமை

தூங்கற்க தூங்காது செய்யும் வினை – குறள் 672

ஒத்திப் போடாமல் உரியகாலத்தில் அதை அதைச் செய்யவேண்டும்

Xxx

அக்டோபர் 26 சனிக் கிழமை

— மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண் துஞ்சார் – கருமமே கண்ணாயினார் – நீதி நெறி விளக்கம்

Xxx

அக்டோபர் 27 ஞாயிற்றுக் கிழமை

செய்வன திருந்தச் செய் –  ஆத்திச்சூடி

Xxx

அக்டோபர் 28 திங்கட் கிழமை

தூக்கி வினை செய்–  ஆத்திச்சூடி

Xxx

அக்டோபர் 29 செவ்வாய்க் கிழமை

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம் – உலக நீதி

Xxx

அக்டோபர் 30 புதன் கிழமை

கூட்டுக் குருவியைக் கொண்டு காட்டுக் குருவியைப் பிடி – தமிழ் பழமொழி

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு

ஆவின்பால் கன்றினாற் கொள்

(கன்றைக் காட்டி பால் கற

xxx

அக்டோபர் 31 வியாழக் கிழமை

நுண்ணிய கருமமும் எண்ணித் துணி – கொன்றைவேந்தன்

—subham —

subham

பொய்யரிடம் பொய் சொன்னால் வெற்றி உண்டாகும்! (Post No.7009)

WRITTEN BY S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 24 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 13-59

Post No. 7009


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

MY VISIT TO SELAIYUR SKANDASHRAMAM TEMPLE (Post No.7007)

Sri Santhanantha Swamiji

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 23 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 16-59

Post No. 7007


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

On 6th September 2019, I visited Sri Skandashramam Temple in Selaiyur, Chennai-73

The temple is situated near busy roads of East Tambaram. But inside the temple one could see a serene atmosphere. When I went there,  ladies were reciting slokas in the Bhuvaneshwari shrine. Since photography inside the temple is prohibited, I bought two books and reproduce some pictures here from the books. For some reason Sri Shanthanantha of Pudukkottai installed unusual and huge idols in two or three places in Tamil Nadu. He installed peaceful Bhuvaneswari idol along with the ferocious Ugra Prathyankara Devi and Sri Sarabeswarar. The reason for this, I believe, is to protect Hinduism and India from ‘adharmic’ (anti social, anti religious) forces. Because he used to tell us that he was doing all the Yajnas for the welfare of the society. Since Swamiji Krishna of Ayakkudi (Tenkasi), told us that he had seen him doing Tapas deep inside forest we believed in him completely.

Our family was associated with Sri Santhanantha from his early pubic appearance. When he organised Sahasra Chandi Mahayajnam in Pudukkottai, for the welfare of the world in 1963, my father and News Editor Sri V Santanam gave huge publicity in Dinamani News paper. I and my brother were students at the time and we ran the book shop at Adi Vethi of Sri Meenakshi Sundareswara Temple, Madurai where Sri Anantha Rama Deekshitar was doing Ramayana Upanyasa/discourse to raise funds for the Yajna. If I remember correct it was done for 40 days.

Whenever Sri Santhananda Swamigal visited Madurai, he used to visit my father and had Bikshai at our house. He was very tall and had rolling matted locks. He looked like a Vedic Rishi. His hair used to touch the ground. His cheeks were rosy like a young woman. He had Tejas (divine light, fire and brightness)  in his face. I have met so many matted lock swamijis, but I have never seen any one with such Tejas.

In his early days, he took three handful of food only. When my mother cooked all sorts of delicious dishes he just asked her to mix all together and give only three handful of food. When my mother did thi,s tears rolled down her cheeks. When she came out of the kitchen she told us that in spite of her serious , laborious, careful cooking, he just had thee handfuls only. He did mantra Upadesa to us. I met him again when I went to India in 2000 or 2001. Since he was very ill at that time he came out for a minute and accepted my pranams and offerings.

Since I visited Bhuvaneswari temple then, I made it a point to visit Skandashramam Temple in Chennai this time.

Following pictures will show what he established in Pudukkottai and Selaiyur, Chennai.

Full address of Selaiyur Temple

Chennai Om Sri Skandashramam

Kambar street,

Mahalakshmi Nagar,

Selaiyur post

Chennai – 600 073

Tel. 2229 0134, 2229 3388, 9444629570

E mail cossct@rediffmail.com

http://www.skandasramam.com

Sri Ugra Pathyankara Devi

–subham– lokas samasta sukino bhavanu —

கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள்- பகுதி 1 (Post No.7000)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 22 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 10-17 am

Post No. 7000


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

உலகில் ஸம்ஸ்க்ருத மொழி பரவிய அளவுக்கு வேறு எந்த மொழியும் பரவியதில்லை என்பதற்கு கல்வெட்டுகளே சான்று பகர்கின்றன. அலெக்ஸாண்டர் படையெடுப்பால் பரவிய கிரேக்க மொழியையும் விட சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் அதிகம். ஏனெனில் துருக்கியில் உள்ள பொகைஸ்கான் களிமண் படிவக் கல்வெட்டுகள் முதல் வியட்நாம் கம்போடியா, இந்தோநேஷியா வரை சம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உள்ளன. துருக்கி கல்வெட்டு முழுதும் சம்ஸ்க்ருதம் இல்லாவிடினும் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால தெய்வங்களின் பெயரில் கைச்சாத்திட்ட களிமண் கல்வெட்டு உளது. கிக்குலி எழுதிய குதிரை சாஸ்திரம் ஸம்ஸ்க்ருத எண்களுடன் உள்ளது. ஆகையால் காலத்தால் முந்தியவை. அளவிலும் ஸம்ஸ்க்ருத்தைத் தோற்கடிக்க எந்தக் கல்வெட்டும் இல்லை. சம்பா எனப்படும் வியட்நாம், காம்போஜம் எனப்படும் கம்போடியா, சாவகம் எனப்படும் இந்தோநேஷியாவில் சுமார் 1000 ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன. உப்பு, புளி, எண்ணைக் கணக்கு எழுதிய சுமேரிய கல்வெட்டுகள் எண்ணிக்கையில் அதிகம் எனினும் அவை ஒரே இடத்தில் குவிந்துள்ளன. மேலும் இலக்கிய நயமற்றவை.

கல்வெட்டுகளில் உள்ள 800 ஸம்ஸ்க்ருத புலவர்களின் பெயர்கள் அடங்கிய புஸ்தகம் பற்றி சென்ற மாதம் எழுதினேன். இப்போது கம்போடியக் கல்வெட்டுகளில் இருந்து வடித்தெடுத்த அழகிய கவிதைகளைக் காண்போம். இவை சென்னை பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதத் துறை ரீடர் சி.எஸ். சுந்தரம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்.

இவை வழக்கமாகக் கல்வெட்டுகள் தரும் தகவலுடன் வேறு பல புராண இதிஹாசக் கதைகளையும் உவமைகளையும் தருகின்றன. மேலும் சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கம்போடியாவில் ஸம்ஸ்க்ருதம் புழங்கியதையும் புலமை பரவியதையும் காட்டும். காம்போஜ கல்வெட்டுகள் என்ற பெயரில் ஆர்.சி.மஜூம்தார் எழுதிய நூலிலிருந்து  சுந்தரம் எடுத்தாண்டுள்ளார். ஆகையால் பக்க எண்கள் அந்தப் புஸ்தத்தைக் குறிக்கும். செம்மையான ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்த அற்புதக் கவிதைகள் அவை-

1.கம்போடிய மன்னர்களின் மேதாவிலாசம்

மன்னரின் மனதில் ஒரு பெட்டிக்குள் பொக்கிஷம் போல அறிவு பாதுகாக்கப்பட்டதாம். அதைக் காப்பாற்றும் பொருட்டு ஸரஸ்வதி தேவி வாயிலில் ( அம்மன்னரின் வாயில்) காத்து நிற்கிறாளாம். அதாவது மன்னர் கற்ற விஷயம் எல்லாம் தொலைந்து போகாமல் இருக்க சரஸ்வதி தேவி அருள் பாலிக்கிறாள்.

இதோ கவிதை:-

நயஸ்தம் ஞானதனம் யஸ்ய மனஹ கோசே ஸரஸ்வதீ

நித்யம் ரக்ஷிதுகாமேவ முகத்வாரே ஸ்திதா பவத் (P.63, v,23)

மன்னருக்குப் புகழ்மாலை

ஆதிபகவான் போல சாஸ்திரங்களிலும், சில்ப சாஸ்திரத்திலும், மொழி, லிபி, நாட்டியம், சங்கீதம், விஞ்ஞானம் ஆகியவற்றிலும் மன்னர் வல்லவராம்.

யஸ் ஸர்வசாஸ்த்ரேஷு சில்ப பாஷா லிபிஸ்வபி

ந்ருத்த கீதாதி விஞ்ஞானேஷ்வாதிகர்தேவ பண்டிதஹ (P.83, v.51)

XXX

மற்றொரு கவிதை சைவ சமயத்தில் மன்னருக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதை வருணிக்கும் அழகே தனி.

தேன் போல சைவ சாஸ்திரத்தைப் பருகுவார். அதை புத்தி என்னும் மத்தைக் கொண்டு கடைவார். அதுமட்டுமல்லாமல் அதை எல்லோருக்கும் பகிந்தளிப்பார்

சிவசாஸ்த்ராம்ருதம் பீத்வா புத்திமந்தரேண விமத்ய யஹ

ஸ்வயம் ஞானாம்ருதம் பீத்வா தமயா அன்யானபாயயத் (P.153, v.20)

–SUBHAM — லோகா சமஸ்தா சுகினோ பவந்து

மூகாம்பிகை கோவிலும் ஆகும்பே காடுகளும் (Post No.6994)

Written by London swaminathan

swami_48@yahoo.com


 Date: 21 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 8-14 am

Post No. 6994

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

subham

உடுப்பி கிருஷ்ணன் பற்றிய அதிசயத் தகவல்கள் (Post No.6985)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com


 Date: 19 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 11-53 AM

Post No. 6985

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

இந்த ஆண்டு மூன்றாவது முறையாக இந்தியா செல்ல நேரிட்டது. கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் விட்டுக் கொடுக்கலாமா? அப்போது நல்ல திருமண விருந்துடன்  சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள், சிருங்கேரி ஸ்ரீ சங்கராசார்யார், கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணன், குக்கே சுப்ரமண்யர் ஆகிய அனைவரின் தரிசனமும் தமிழ்நாட்டில் சமயபுரம் மாரியம்மன், திருச்சி தாயுமானவர், அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், திருவரங்கம் ரெங்கநாதன், சேலையூர் புவனேஸ்வரி/ பிரத்யங்கரா தேவி ஆகியோரின் தரிசனமும் கிடைத்தது. வழக்கம்போல தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் சூறாவளி சுற்றுப் பயணம்தான். இயற்கை எழில் மிக்க ஆகும்பே, பெங்களூரு விஸ்வேரய்யா மியூஸியம் ஆகியவற்றையும் பார்க்கத் தவறவில்லை.

உங்களில் பலரும் அறிந்த விஷயம் என்பதால் சுருக்கி வரைகிறேன்.

உடுப்பி எங்கே உள்ளது?

அரபிக் கடல் ஓரமாக அமைந்த கோவில் நகரம் இது. மங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர்; பெங்களூரிலிருந்து 381 கிலோமீட்டர்.

உடுப்பியில் என்ன பிரசித்தமானது?

த்வைத மத ஸ்தாபகரான மத்வரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் 800 ஆண்டுகளாக அருள் மழை பெய்து வருகிறது.

நான் இரவு நேரத்தில் உடுப்பியை அடைந்தேன். சமன்வய என்ற ஹோட்டலில் தங்கினேன். 3 நட்சத்திர அந்தஸ்து உடைய இந்த ஹோட்டல், லண்டன் நகர ஹோட்டல்களுக்கு இணையான தரம் உடையது. ஹோட்டலில் ஒரு உணவு விடுதியும் உள்ளது.

கோவிலுக்குச் சென்றேன். மங்களகரமான மஞ்சள் புடவைகள் அணிந்த மாதர்கள் கோவிலுக்கு வெளியேயுள்ள மண்டபத்தில், கிருஷ்ண கானம் இசைத்துக் கொண்டிருந்தனர். மறு நாள் காலையில் மீண்டும் கோவிலுக்கு ஓடினேன். அப்போதும் மஞ்சள் புடவை அழகிகள் கிருஷ்ணனின் புகழ்பாடிய வண்ணம் இருந்தனர். இரு முறையும் நான் எடுத்த புகைப் படங்களைப் பார்த்தபோதுதான் இரண்டும் வெவ்வேறு கோஷ்டிகள் என்பது தெரியவந்தது. ‘ரிலே ரேஸ்’ (relay race) போல ஒரு கோஷ்டிக்கு அடுத்ததாக இன்னுமொரு கோஷ்டிவீதம் பாடிக்கொண்டே இருப்பர் போலும்.

கோவிலுக்குள் போனால், கிருபானந்த  வாரியார் போல உரத்த குரலில் ஒரு பெண்மணி உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். அங்கும், சுமாரான கூட்டம்.

15 நிமிடங்களுக்குள் தரிசனம் கிட்டியது.

என்ன விநோதம்?

ஒவ்வொரு கோவிலிலும் பல விநோதச் செய்திகள், விக்ரஹங்கள்,  பழக்க வழக்கங்கள், பிரசாதங்கள் இருக்கும். உடுப்பியிலும் அது உண்டு.

உடுப்பியில் ஒரு ஜன்னல் வழியாகத்தான் கண்ணபிரானைத் தரிசிக்கவேண்டும். அற்புதமான நகைகளை அணிந்த கிருஷ்ணன், ஒரு அறைக்குள் ஏன் இப்படி ஒளிந்து கொண்டு இருக்கிறார்? ஏன் என்றால், கனக தாசர் என்ற கீழ் ஜாதி பக்தர் கோவிலுக்கு வந்தபோது அக்கால வழக்கப்படி அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இறைவனுக்குத்தான் ஜாதிகள் கிடையாதே? உடனே கனகதாசர் இருந்த திசையை நோக்கித் திரும்பி ஜன்னல் வழியே காட்சிதந்தார். இன்று நாம் போனாலும் கூட அதே கனகதாசர் ஜன்னல் வாயில் வழியாகத்தான் கிருஷ்ணனைத் தரிசிக்க வேண்டும். கோவிலுக்குள் எப்போதும் நல்ல கூட்டம். மழை பெய்தாலும் கூட்டம் வருவது நிற்பதில்லை.

இரண்டாவது அதிசயச் செய்தி மத்வர் காலத்தில் நடந்தது. அவர் கடற்கரையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தொலைவில் வந்துகொண்டிருந்த ஒரு கப்பல், பாறையுள்ள பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதைக் கண்ட மத்வர், பெரும் ஆபத்தைத் தடுப்பதற்காக, தன் மேல் துண்டை ஆட்டி எச்சரித்தார். கப்பலும் பிழைத்தது.

கப்பல் கேப்டன் வந்து அவரிடம் நன்றி சொன்னான். தங்களைக் காப்பாற்றியதற்காக கப்பலில் உள்ள விலையுயர்ந்த எந்த ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினான். சந்யாசியான மத்வர் எந்த விலையுயர்ந்த பொருளையும் தொட மறுத்துவிட்டார். ஆனால் அந்தக் கப்பல், புனிதத் தலமான துவாரகையில் இருந்து கல்லையும் மண்ணையும் ஏற்றி வருவதை அறிந்தவுடன் மஞ்சள் நிற களி மண் பாறை ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டார். அதை நாமம் போடவும் உடல் முழுதும் சமயச் சின்னங்களை அணியவும் பக்தர்கள் பயன்படுத்தினர். காலப் போக்கில் அந்தப் பாறையை சிறு துண்டுகளாக உடைத்தபோது, அதில் கிருஷ்ணன் சிலையும், பலராமன் சிலையும் இருப்பது தெரியவந்தது. பலராமனை கடலோரக் கோவிலில் பிரதிஷ்டை செய்துவிட்டு, கிருஷ்ணன் சிலையை உடுப்பிக்குக் கொண்டு வந்தார். அபோது எழுப்பப்பட்ட கோவில் இன்று வரை மக்களை இழுக்கும் ஆகர்ஷண சக்தியாக விளங்குகிறது..

மூன்றாவது முக்கியச் செய்தி என்னவென்றால் உடுப்பி கோவிலைச் சுற்றி எட்டு புனித மடங்கள் இருக்கின்றன. அவற்றின் தலைவர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கோவில் பொறுப்பை சுழற்சி முறையில்  ஏற்கின்றனர்.

உடுப்பியைச் சுற்றி மனம் கவரும் இயற்கைக் காட்சிகளும், மணல் நிறைந்த கடற்கரையும் பல கோவில்களும் உண்டு. மத்வாச்சார்யார் பிறந்த பஜக கிராமம் உடுப்பியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த வட்டாரத்தில் பல கோவில்கள் இருப்பதால் ஓரிரு நாட்கள் தங்கி எல்லாவற்றையும் பார்ப்பது நல்லது. இயற்கை அன்பர்களுக்கு கடற்கரை விடுதிகளும் அருகாமைத் தீவுகளும் விருந்து அளிக்கும்.

கடைசியாக உடுப்பி ஹோட்டல்களைப் பற்றியும் ஒருவார்த்தை. தென்னிந்தியா முழுதும் ‘உடுப்பி ஹோட்டல்’ என்ற போர்டுகளைப் பார்க்கலாம். சுவை மிகு உணவுகளுக்கு பெயர்போன இடம் உடுப்பி என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

கண்ணனின் நாமத்துக்கு  எவ்வளவு ருசியோ அவ்வளவு ருசி உடுப்பி ஹோட்டல்களின் உணவுக்கும் இருக்கிறது!

XXX SUBHAM XXX

கேட்பதைக் கொடுக்கும் காமதேனு! (Post No.6981)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 18 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –14-44

Post No. 6981

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

மாலைமலர் 7-9-19 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அனைத்து தெய்வங்களும் ஐக்கியம் : கேட்பதைக் கொடுக்கும் காமதேனு!

ச.நாகராஜன்

மனித வாழ்வில், மனிதர்கள், யாரானாலும் சரி, தமக்கு வேண்டிய பலவற்றை அடைய விரும்புகின்றனர்.

செல்வம் சேர வேண்டும், நல்ல உத்யோகம் வேண்டும், பதவி உயர்வு வேண்டும், புத்திர பாக்கியம் வேண்டும், சொந்த வீடு ஒன்று வேண்டும், நல்லறிவு மேலோங்க வேண்டும், நல்லோர் இணக்கம் வேண்டும், சுற்றம் சூழ சிறப்பாக இருக்க வேண்டும், என்று இப்படிப் பல விதமான மானுடத் தேவைகள் உண்டு.

அதை அடைய உள்ள பல வழிகளில் ஈடுபாட்டுடனும் சிரத்தையுடனும் செய்யும் காமதேனு வழிபாடு சிறந்த ஒன்று. எளிதில் செய்யக் கூடியதும் கூட!

காமதேனு தெய்வீகப் பசு. வேண்டியதைத் தரும் அற்புதமான தேவதை!

அதைப் பற்றிய ஏராளமான வரலாறுகளை வேதங்கள், ராமாயண மஹாபாரத இதிஹாசங்கள், புராணங்கள், பல மொழிகளில் உள்ள இலக்கியங்கள் ஆகியவற்றின் வாயிலாகக் காண்கிறோம்.

காமதேனுவில் அனைத்து தெய்வங்களும் குடி கொண்டிருப்பதால் காமதேனுவை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வணங்கிய பெரும் பேறை அடைகிறோம்.

காமதேனுவிற்கு சுரபி என்றும் நந்தினி என்றும் வேறு இரு பெயர்களும் உண்டு.

முன்னொரு காலத்தில் கைலாஸத்திற்குச் சென்ற சுரபி, நெடுங்காலம் பிரம்மாவை நோக்கித் தவம் புரிய, மனம் மகிழ்ந்த பிரம்மா சுரபிக்கு வேண்டுவதைக் கொடுத்தருளும் சக்தியைக் கொடுத்து மூவுலகுக்கும் மேலான கோலோகத்தில் தேவதையாக இருப்பாய் என்று கூறி அருளினார்.

    பல காமதேனுக்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் புராண இலக்கியத்தில் இருப்பதால் காமதேனு மூலம் உருவாகிய இன்னும் பல காமதேனுக்கள் இருப்பதை அறிய முடிகிறது.

சுரபி கிழக்கு திசையிலும் ஹம்ஸிகா தெற்கு திசையிலும் சுபத்ரா மேற்கு திசையிலும் தேனு வட திசையிலும் இருந்து அருள் பாலித்து வருகின்றன.

         வசிஷ்டர் ஆசிரமத்திற்கு ஒரு முறை தன் பெரும்படையுடன் வந்த விசுவாமித்திர மஹராஜா அங்கிருந்த காமதேனு எது கேட்டாலும் அனைவரும் திருப்தியுறும் வகையில் தருவதைக் கண்டு ஆச்சரியமுற்றார். அதை வசிஷ்டரிடம் கேட்ட போது அவர் தர மறுத்தார்.

     உடனே விசுவாமித்திரர் அதைக் கவர்ந்து செல்ல முயன்று தன் படையை ஏவினார். பிரம்மாண்டமான சேனையை எதிர் கொண்ட வசிஷ்டர் காமதேனுவைக் குறிப்பால் நோக்க, அதுவே ஒரு பெரும்படையை உருவாக்கி விசுவாமித்திரரையும் அவர் சேனையையும் துரத்தி அடித்தது. அரும் தவசக்தியின் பலனை உணர்ந்து அதைப் பெற விரும்பிய விசுவாமித்திரர் தன் ராஜ்யத்தைத் துறந்து தவம் மேற் கொண்டு ரிஷியானார்.

    அப்படிக் காமதேனுவை கவர முயல்கையில் அவருக்கு உதவி செய்தவரே மறு ஜன்மத்தில் தேவ விரதனாகப் பிறந்து தன் அரிய சபதத்தால் பீஷ்மர் என்ற பெயரைப் பெற்றார். தன் சாபத்தை நிவர்த்தி செய்தார்.

     காமதேனுவின் அம்சமாகவே பசுக்கள் விளங்குவதால் அவற்றிற்கும் இயல்பான தெய்வீகத் தன்மை அமைந்து விடுவதால் அவற்றை பிரத்யட்சமாக நேரில் கண்டு வணங்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது.

    பசுவைப் பற்றி வாயு புராணம் இப்படி விவரிக்கிறது :

பசுவின் பற்களில் (புயல், மின்னல் ஆகியவற்றிற்கான தேவதையான) மருத்தும்,  நாக்கில் சரஸ்வதியும்,குளம்பில் கந்தர்வர்களும், குல சர்ப்பங்கள் குளம்பின்  முன்புறமும், சத்வ ரிஷிகள் மூட்டுகளிலும், சூரிய சந்திரர் இரு கண்களிலும் உள்ளனர்.

    நட்சத்திரங்கள் திமிலிலும், யமன் வாலிலும், தீர்த்தங்கள் அது நடக்கும் போது உராய்ந்து செல்லும் காற்றிலும், கங்கையும் சப்த தீவுகளுடன் கூடிய நான்கு சமுத்திரங்களும் அதன் கோமியத்திலும், ரிஷிகள் அதன் உடல் முழுவதுமும்,  லட்சுமி அதன் சாணத்திலும் உள்ளனர்.

   எல்லா வித்தைகளும் அதன் மயிர்க்கால்களிலும், உத்தராயணமும் தட்சிணாயனமும் அதன் உடலின் தோல் மற்றும் மயிர்க்கால்களிலும் உள்ளன.

     அது நடக்கும் போது அதைச் சூழ்ந்து தைரியம், பொறுமை, மன்னித்தல், புஷ்டி,புத்தி, நினைவாற்றல், மேதை, பரம சந்ததி ஆகியவற்றிற்கு உரிய தேவதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து தேவர்களும் அதற்கு முன்னால் சென்று கொண்டே இருக்கின்றனர். அது மாங்கல்ய தேவதை.”

பசுவின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள் எனக் கூறப்படுகிறது.

பசுவைத் துன்புறுத்தவே கூடாது என்று வேதங்கள் சுமார் நூறு இடங்களில் கட்டளை இடுகின்றன.

    குமரேச சதகம் “காலியின் கூட்டத்திலும்” (பசு மந்தை) என்றும், அறப்பளீசுர சதகம், “பால் குடத்திடையிலே” என்றும் கூறி, லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் ஒன்றாக பசுவைச் சுட்டிக்காட்டிச் சிறப்பித்துக் கூறுகின்றன.

காமதேனுவின் ஆலயங்கள் பல.

நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் ஆலயம் பற்றிய சுவையான வரலாறை லிங்க புராணம் கூறுகிறது.

ஒரு முறை இமயமலையில் மான் போல வலம் வந்து கொண்டிருந்த சிவபிரான் தன் இயல்பான உருவத்தைக் கொள்ள, ஒரு ஒளிப்பிழம்பு பிரபஞ்சத்தை மேலும் கீழுமாக ஊடுருவிப் பரந்தது.

பிரம்மா அதன் உச்சியைப் பார்க்க மேலே சென்றார். அதன் அடியைப் பார்க்க விஷ்ணு கீழே சென்றார். மேலே சென்ற பிரம்மா தான் ஒளியின் உச்சியை மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சென்று விட்டதாகக் கூறினார்.

இதைக் கேட்ட விஷ்ணு தெய்வீகப் பசுவான காமதேனுவிடம் இது உண்மை தானா என்று கேட்டார்.

காமதேனுவோ அது உண்மை இல்லை என்பதை தன் வாலை மறுக்கும் விதமாக ஆட்டிக் கூறியது. ஆகவே காமதேனு புனிதமானதாகக் கருதப்படுவதோடு அனைத்துக் கோவில்களிலும் வழிப்பாட்டுக்குரிய இடத்தைப் பெறுகிறது.

அதன் வாலும் புனிதமானதே என்பதால் பசுவின் வாலைத் தொட்டுத் பக்தர்கள் தம் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.

பசுபதி தலங்கள் மொத்தம் ஐந்து. ஆவூர், நேபாளம், திருக்கொண்டீசுரம், பந்தணைநல்லூர் மற்றும் கருவூர் ஆகியவையே அந்தத் தலங்களாகும்.

கும்பகோணம் அருகில் உள்ள பட்டீச்சுரம் பராசக்தியினால் ஏற்படுத்தப்பட்ட சக்திவனத்தில் அமைந்துள்ள ஒரு தலமாகும்.. அம்பிகையின் பெருந்தவத்தின் போது அவருக்குப் பணிவிடை செய்ய காமதேனு தன் மூத்த பெண்ணான பட்டியை அங்கு அனுப்பியது.

   பட்டி தானும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அங்கு ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி பூஜை செய்து வந்தாள். இதனால் அந்த இடத்திற்கு பட்டீச்சுரம் என்ற பெயரும் அந்த லிங்கத்திற்குப் பட்டி லிங்கம் என்ற பெயரும் ஏற்பட்டன.

   எல்லையற்ற மகிமை கொண்ட இந்தத் தலத்தைப் பற்றி பட்டீச்சுர மகாத்மியம் விளக்குவதைப் படிப்போர் பிரமிப்பை அடைவர்.

விசுவாமித்திரர் இங்கு தான் பிரம்ம ரிஷியாகத் தவம் புரிந்தார்.

ராவணனைக் கொன்றதால் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் (பிராமணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம்) ராமேஸ்வரத்திலும்,வீரஹத்தி தோஷம் வேதாரண்யத்திலும் சாயாஹத்தி தோஷம் பட்டீச்சுரத்திலும் அவரது வழிபாட்டால் போயின.

கொங்கு நாட்டு சிவஸ்தலமான கருவூர் எனப்படும் கரூரில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் கோவில் பிரம்மாவும் காமதேனுவும் வழிபட்ட தலமாகும்.

   இங்குள்ள சிவலிங்கத்தைக் காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில் காமதேனு வழிபட்ட தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது.

    காமதேனு வழிபட்ட இன்னொரு தலம் தூங்கானை மாடம் என்று பழைய காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய பெண்ணாகடம் ஆகும். விருத்தாசலம் அருகே உள்ள  இது தேவ கன்னியரும், காமதேனுவும் இந்திரனின் யானையான ஐராவதமும் (பெண்+ஆ+கடம்) வழிபட்ட தலமாகும்.

   இப்படி காமதேனு வழிபட்ட தலங்கள் என திருவீழிமலை உள்ளிட்ட இன்னும் பல தலங்கள் உள்ளன.

   இந்தத் திருத்தலங்களின் வரலாறுகள் மிக்க சுவையானவை. இவற்றை விரிப்பின் பெருகும்.

    இந்தத் தலங்களில் சென்று வழிபடுவோர் அடையும் அற்புதமான ஆன்மீக சக்தி உள்ளிட்ட நலன்களை எளிதில் உணரலாம்.

   வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட பல்வேறு சாஸ்திரங்களும் காமதேனுவை இல்லத்தில் வைப்பதே அனைத்து நலங்களையும் அருளும் என எடுத்துரைக்கின்றன.

    அழகிய தெய்வீகப் பெண் முகத்துடனும் உடல் முழுவதும் தேவதைகள் இருக்கவும் உள்ள காமதேனுவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் அனைத்துத் தடைகளும் நீங்கும்; செல்வம் பெருகும்.

   கன்றுடன் கூடிய காமதேனுவின் விக்ரஹம் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களிலும் கிடைக்கிறது. வசதிக்கும் இஷ்டத்திற்கும் தக அதையும் பூஜை அறையில் வைக்கலாம்.

   அனைத்துப் பேறுகளையும் இவை அருள்கின்றன; ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களும் காமதேனுவின் அருளினால் நீங்கும்.

    இந்திய இயலில் நிபுணரான மாடெலெய்ன் பயார்டெ (Madeleine Biardeau) காமதேனு என்பது புனிதப் பசுவின் அடையாளப் பெயராகும் என்று கூறுகிறார்.

    காமதேனுவின் ஓவியத்தைப் பார்த்து வியந்த ஃப்ரெடெரிக் எம்.ஸ்மித் (Frederick M. Smith),  காமதேனு, “பிரசித்தமான என்றுமுள்ள இந்தியக் கலையின் சித்திரம்” என்று புகழ்கிறார்.

    இன்றைய அறிவியல் உலகில் பொருளாதாரம் செழிக்க பசுச் செல்வம் இன்றியமையாத ஒன்று என்பதை பொருளாதார நிபுணர்கள் விளக்குகின்றனர். நிலத்தின் இயற்கைத் தன்மையைக் காக்க வல்லது பசுவே.

    பஞ்சகவ்வியம் எனப்படும் பசும்பால், கோமியம், சாணம். நெய், தயிர் ஆகியவை கலந்த கலவை கோவிலில் அபிஷேகப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

    பஞ்சகவ்யத்தைப் பயிர்களுக்குச் சோதனையாகக் கொடுத்து பயன்பெறலாம் என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அதை இயற்கை விவசாயத்தில் ஒரு இடு பொருளாக ஆக்கியதையும் நாம் அறிவோம்.

     பசுவின் சாணம் ரேடியேஷன் எனப்படும் கதிரியக்கத் தீமைகளைத் தடுக்கும் ஒன்று. அலஹாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் கே.என். உத்தம் பசுஞ்சாணமானது காமா, பீட்டா, ஆல்பா ஆகிய மூன்று கதிர் வீச்சையும் தடுக்க வல்லது என்று குறிப்பிடுகிறார். இவற்றில் காமா கதிர்கள் தாம் ரேடியேஷன் எனப்படும் தீங்கு பயக்கும் கதிரியக்கத்தை உண்டாக்குபவை.

    ரஷியாவில் செர்னோபிலில் ஏற்பட்ட தீங்கு பயக்கும் கதிரியக்க விபத்தைப் பற்றி உலகினர் அனைவரும் நன்கு அறிவர்.

    ஆக அறிவியல் ரீதியாகவும் பசு உலகினரைக் காக்கும் தெய்வ மாதாவாக இலங்குவதைப் புரிந்து கொள்ளலாம்.

    பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது (யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை – திருமூலர்) எல்லாவற்றிலும் சிறந்த புண்ணியம் என அறநூல்கள் கூறுகின்றன.

    காமதேனுவை உளமார வழிபட்டால் செல்வம் செழிக்கும், தடைகள் நீங்கும், வளம் ஓங்கும், புது வீடு அமையும், திருமணம் வெற்றி பெறும், புத்திரப் பேறு உண்டாகும், எல்லா நலன்களும் அமையும் என்று உணர்ந்து அதை வழிபடுவோமாக!

***