சிவ பக்தன் அர்ஜுனன் (Post No. 2437)

siva, jabalpur

WRITTEN BY S NAGARAJAN

Date: 29 December 2015

 

Post No. 2437

 

Time uploaded in London :– 5-34 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

வில்லிபாரதம்

சிவ பக்தன் அர்ஜுனன்

ச.நாகராஜன்

 

 

 shiva cloud

Shiva seen in cloud (from face book friends)

 

அற்புதக் கவிஞர் வில்லிப்புத்தூரார்

 

வில்லிப்புத்தூரார் வைஷ்ணவத்தையும் சைவத்தையும் எப்படி சரிநிகர் சமானமாகப் போற்றி வந்துள்ளார் என்பதை வில்லி பாரதத்தைப் படிப்பவர் எளிதில் உணர்வர்.

சிவனைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் பரவசமடைகிறார் வில்லிப்புத்தூரார்.

 

 

சிவபூஜைக்குப் பின்னரே உணவு

 

சிறந்த சிவ பக்தனான அர்ஜுனன் சிவ பூஜை செய்யாமல் உணவருந்த மாட்டான்.

இதை பதின்மூன்றாம் போர்ச் சருக்கத்தில் ஒரு அருமையான பாடலில் காணலாம்.

 

 

அபிமன்யுவைச் சூழ்ந்து நின்று கௌரவர்கள் அனைவரும் வஞ்சகமாக அவனைக் கொல்ல, அதை அறிந்த அர்ஜுனன் புலம்பித் தவிக்கிறான்.

 

 

“வா, என்னுடன் கைலாயம் சென்று காலைக்குள் திரும்பி விடலாம் என்று கண்ணன் அவனை அழைத்துச் செல்கிறான்.

அங்கே செல்லும் வழியில் பசி தாகத்தினால் அர்ஜுனன் வருத்தமுற, கண்ணன், மாம்பழம் உள்ளிட்ட கனிகள், கரும்புச் சாறை உண்ணுமாறு அன்புடன் கூறுகிறான் இப்படி:-

 

 

“மாங்கனி, வாதையின் கனி, வருக்கையின்                  

தீம் கனி, கன்னலின் செய்ய நீர், உள;                 

வேம் கனல் பசியும், நின் விடாயும் ஆறவே             

ஈங்கு இனிது அருந்துதி, ஏந்தல்!

 

இதைக் கேட்ட அர்ஜுனன் சிவ பூஜை இன்னும் செய்யவில்லையே என்கிறான்.

 

 

 

சரிந்தவர் சரிவு அறத் தாங்கும் நாயகன்               

பரிந்து, இவை உரைத்தலும் ‘பாவை புங்கன் மேல்        

புரிந்திலன், இன்னமும் பூஜை! என்றனன்,                    

வரிந்த வெஞ்சிலைக்கு மண் மதிக்கும் வீரனே

 

(பாவை பங்கன் – சிவ பெருமான்)

 

சரிந்தவர்களின் மெலிவு நீங்குமாறு காப்பாற்றும் கண்ணன், அன்போடு இப்படிக் கூற, “ சிவபூஜை இன்னும் செய்யவில்லையே என்கிறான் அர்ஜுனன்.

 

 shiva uma on kailas

 

கண்ணனே சிவன்

 

இப்போது அடுத்த பாடலில் மாபெரும் உண்மையை விளக்குகிறார் வில்லிப் புத்தூரார்.

கண்ணன் உடனே அர்ஜுனனை நோக்கி, “என்னை பூஜை செய்! நானும் சிவனும் ஒருவரேஎன்கிறான்.

அற்புதமான இந்தப் பாடல் இதோ:-

 

 

மரு வரு கானக மலரினால் எமைப்                   

பொரு அரு பூசனை புரிதி, ஐய நீ.                       

இருவரும் ஒருவரே என்பது இன்று போய்                 

அருவரை அவன் அடி அடைந்து காண்டியே

 

 

அரியும் சிவனும் ஒண்ணு                             

அறியாதவன் வாயிலே மண்ணு                             

என்று பாமரனும் அறியும் பெரிய உண்மையை பண்டிதர்களும் கூடச் சில சமயம் அறிவதில்லை.

அந்த மாபெரும் உண்மையைக் கண்ணனே பிரகடனம் செய்கிறான்.

 

 

அர்ஜுனனின் சிவ துதி

 

இதற்கு முன்னர் ஆரணிய பர்வத்தில், அர்ஜுனன் கைலை சென்று சிவ தியானத்துடன் தவ விரதம் பூண்டு சிவனை நோக்கித் தவம் செய்யும் சிறப்பை அருச்சுனன் தவநிலைச் சருக்கத்தில் வில்லிப்புத்தூரார் அற்புதமாக அழகுற விளக்குகிறார்.

 

 

தன்னைச் சுற்றி நான்கு புறங்களிலும் அக்கினியை மூட்டித் தவம் செய்யும் போது அக்நி தேவன் அவனைச் சுடவில்லை. சிவ தியானத்தால் அவன் உடல் எங்கும் புளகம் கொள்கிறது.

பின்னர் வேடனாக வந்த சிவபிரானுடன் அவன் போர் செய்ய, இறுதியில் சிவ தரிசனம் கிடைக்கிறது.

 

 

அப்போது அவன் சிவனைத் துதிக்கும் பாடல்கள் அருமையான பாடல்கள். அவற்றில் ஒன்று:-

 

 

ஆதியே அண்டமும் அனைத்துமாய் ஒளிர்                   சோதியே கொன்றை அம் தொங்கல் மௌலியாய்             வாதியே மரகதவல்லியாள் ஒரு                        

பாதியே பவளம் ஆம் பரம ரூபியே

 

 

 

இதன் பொருள் எளிதில் விளங்கக் கூடியதே.

அனைத்திற்கும் முதன்மை ஆனவனே!

 

உலக உருண்டைகள் அனைத்துமாய் விளங்கி ஒளிர்கின்ற ஜோதியே!

கொன்றை மலர் அணிந்த முடியை உடையவனே

பேச வல்லவனே

மரகதவல்லியான உமையை இட பாகத்தில் கொண்டுள்ளவனே

வலப்பாகம் பவழ மயமான சிறந்த வடிவுடையவனே

 

 

 

இப்படி சிவனைப் போற்றித் துதித்து அர்ஜுனன் கூறுவதாக அமையும் ஐந்து பாடல்களும் வில்லிப்புத்தூராரை சிறந்த சிவ பக்தராகவே காட்டுவதைக் கண்டு பிரமிப்பை அடைகிறோம்.

ஒவ்வொரு சருக்கத்திலும் கடவுள் வாழ்த்து பாடுவது அவர் வழக்கம். (சில சருக்கங்களில் மட்டும் இல்லை; மானசீகமாக வாழ்த்தினாரா அல்லது ஏடு எழுதியவர்கள் விட்டு விட்டார்களா, தெரியவில்லை)

 

 

கடவுள் வாழ்த்தில் திருமாலை வணங்கும் அவர் பல இடங்களில் சிவபிரானைப் போற்றுவது அரியும் சிவனும் ஒண்ணு என்பதை அவர் அனுபவபூர்வமாக உணர்ந்ததினால் என்பதை விளங்கிக் கொள்கிறோம்.

 

 

உண்மை ஒன்றே!

 

இராமாயணமும் மஹாபாரதமும் விளக்கும் பல உண்மைகளில் முக்கியமான ஒன்று : பல்வேறு தோற்றங்களில் வருவது ஒரே பரம்பொருளே என்பது தான்!

ஏகம் ஸத்; விப்ரா: பஹுதா வதந்தி

 

(உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகக் கூறுகின்றனர்)

 

வில்லியை ஆழ்ந்து கற்போம்; உண்மைகளை நன்கு உணர்வோம்!

********

 

 

சிலைகளைக் கும்பிடுவது சரியா? ரமணரின் பதில்!

amman

Written by S NAGARAJAN

Date: 27 December 2015

 

Post No. 2433

 

Time uploaded in London :– 16-17

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ரமண மஹரிஷியின் ஜயந்தி தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை.

ஞான ஆலயம் டிசம்பர் 2015 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை

 

 

சிலைகளைக் கும்பிடுவது சரியா? மஹரிஷி ரமணரின் பதில்!

.நாகராஜன்

 

 ramana

முஸ்லீம் அன்பரின் சந்தேகம்

திருவண்ணாமலையில் அருளாட்சி செய்து கொண்டிருந்த ரமண மஹரிஷியை அணுகி தங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொண்ட அன்பர்கள் ஏராளம். பெரும்பாலும் மௌனத்தையே பாஷையாகக் கொண்டு வந்திருந்தோரின் மனதில் சந்தேக விளக்கம் தானாகவே கிடைக்கும் படி அருள் பாலிப்பது அவர் வழக்கம். சில சமயம் வந்திருந்திருப்பவரின் பக்குவத்திற்கேற்ப பதிலை அருள்வதும் உண்டு.

ஒரு நாள் இரண்டு முஸ்லீம் அன்பர்கள் அவரை நாடி வந்தனர். அவர்களுக்கு உருவ வழிபாடு பற்றி சந்தேகம் இருந்தது.

பக்தர்: கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி: அப்படி என்று யார் சொன்னது?

பக்தர்: அப்படி என்றால், கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், சிலைகளைக் கும்பிடுவது சரியா?

மஹரிஷி: கடவுளை விட்டு விடுவோம். ஏனென்றால் அவர் யாருக்கும் பிடிபடாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

பக்தர்: ஆம், எனக்கு உருவம் உண்டு; பெயர் உண்டு.

மஹரிஷி: அப்படி என்றால் உடல் அங்கங்களைக் கொண்ட ஒரு மனிதர் நீங்கள். ஆறடி உயரம், தாடி கொண்டவர். சரி தானே!

பக்தர்: நிச்சயமாக அப்படித்தான்!

மஹரிஷி: சரி, அப்படியானால் தூங்கும் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?

பக்தர்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. ஆகவே, அநுமானத்தின் மூலமாக நான் இப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன் என்பது தெரிய வருகிறது.

மஹரிஷி: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு சவத்தை ஏன் புதைக்க வேண்டும்? உடல் தன்னைப் புதைப்பதை எதிர்க்க அல்லவா வேண்டும்?

 

ramana2

பக்தர்: இல்லை, நான் பரு உடலில் உள்ளே இருக்கின்ற உள்ளுறை ஜீவன்.

மஹரிஷி: ஓ! அப்படி என்றால் உண்மையிலேயே நீங்கள் உருவம் இல்லாதவர் என்றாகிறது. ஆனால் இப்போது  உடல் மூலமாக உங்களை அடையாளம் கண்டு சொல்கிறீர்கள். இப்படி உடலுடன் இருக்கும் போது அடையாளம் காணும் நீங்கள், உருவம் இல்லாத கடவுளை உருவமாகக் காண்பதில் என்ன தவறு இருக்கிறது?

கேள்வி கேட்டவர் திகைத்து விட்டார்.

ஓர் நாமம் ஒருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ என்பது அருளாளர் வாக்கு.

உருவமுமாகி அருவமுமாகி அதையும் கடந்தவனாகி இருப்பவன் இறைவன்.

மஹரிஷியின் அருள்வாக்கின் மூலமாக அனைவரும் உருவ வழிபாடு பற்றிய உண்மையை அறிந்தனர்.

 

 

ramanashram gate

சையத் உணர்ந்த சமத்துவம்

டாக்டர் முஹம்மத் ஹபிஸ் சையத் என்பவர் பெர்ஸிய மொழியிலும் உருது மொழியிலும் பேராசிரியராக அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்தார். அவர் திருவண்ணாமலை வந்து மஹரிஷியை தரிசித்தார். ஏராளமான கேள்விகள் அவரைக் குடைந்தன. ஒவ்வொன்றாகக் கேட்டுத் தெளிவு பெற்றார்.

சையத்: உண்மையை எப்படி உணர்வது? அதை எப்படி அனுபவிப்பது?

மஹரிஷி: புதிதாக எதையும் பெற வேண்டியதே இல்லை! ஆன்மாவைப் பற்றிய அறியாமையை விட்டு விட்டாலே போதும்! ஆன்மாவை ஆன்மா அல்லாதவற்றுடன் அடையாளம் காண்பது தான் அறியாமை. அதை விட வேண்டும்.

சையத்: சரி. எனக்கு இன்னும் புரிந்தபாடில்லை. உங்கள்  உதவி வேண்டும். இங்குள்ள ஒவ்வொருவரும் உங்களின் அருளுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். நீங்களே ஒரு குரு அல்லது கடவுளின் உதவியை நாடி இருக்க வேண்டும். அந்த அருளை இப்போது எல்லோருக்கும் அருளுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள்.

இங்கு வருவதற்கு முன்னர் உங்களைக் காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு ஏனோ எனக்குக் கிடைக்கவில்லை. பெங்களூர் வந்த போது எப்படியும் உங்களை தரிசிப்பது என்று திடமாகத் தீர்மானித்தேன். மிஸ்டர் ஃப்ரைட்மேனையும் இன்னும் பலரையும் சந்தித்தேன். அவர்கள் என்னை இங்கே அனுப்பினர். என்னை நீங்கள் இழுத்திருக்கிறீர்கள். பால் பிரண்டன் பம்பாயில் இருந்த போது அவரது பயணத்தை ரத்து செய்ய வைத்து இங்கே அவரை இழுத்தீர்கள். அது போலத் தான் எனது கேஸும் இருக்கிறது.

அருப்புகொட்டை ரமணர்

ரமணர் தமிழ்

 

இங்கு வந்த போது ஒரே தயக்கம். என்னை உங்களின் அருகே வர அனுமதிப்பார்களா, பேச விடுவார்களா என்றெல்லாம் சந்தேகப்பட்டேன். ஆனால் எனது சந்தேகம் எல்லாம் நீங்கி விட்டன. இங்கு அனைவரும் சமம் என்பதை உணர்ந்து கொண்டேன். இங்கு சமத்துவத்தை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களுடன் சேர்ந்து மற்றவர்களைப் போலவே சாப்பிட்டேன். இங்கு நடந்ததை உத்தர பிரதேசத்தில் சொன்னால் நம்பவே மாட்டார்கள். அங்குள்ள அந்தணர்கள் என்னுடன் சமபந்தியில் சாப்பிடமாட்டார்கள்; வெற்றிலை கூடப் போட மாட்டார்கள். ஆனால் இங்கோ நீங்கள் என்னை உங்களுடன் ஒருவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். காந்திஜி இதைச் செய்ய முயன்று கொண்டிருந்தாலும் கூட தேசத்தில் அப்படிப்பட்ட நிலையை உருவாக்க இன்னும் முடியவில்லை. உங்கள் முன்னால் இருப்பதே எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.

உங்களை தெய்வமாக மதிக்கிறேன். ‘யார் வழிபட்டாலும் சரி, அப்படி வழிபடுபவர் என்னையே வழிபடுகிறார். அவரை நான் காப்பாற்றுவேன்” என்று ஶ்ரீ கிருஷ்ணர் அருளியுள்ளார். ஆனால் மற்றவர்களோ, என் மூலமாகத் தான் முக்தி என்று சொல்லி இருக்கின்றனர். ஶ்ரீ கிருஷ்ணர் ஒருவரே இப்படி பரந்த மனப்பான்மையுடன் கடவுளே பேசுவது போல அருளியுள்ளார். அதே சமத்துவத்தை நீங்களும் கடைப் பிடிக்கிறீர்கள்”

சையத் மனமுருக இப்படிப் பேசி விட்டு மஹரிஷியை வணங்கினார்.

இதிலிருந்து பல முறை அவர் மஹரிஷியைப் பார்க்க வருவது வழக்கமானது.

 

ramana sitting

என் வாழ்க்கையே என் உபதேசம்

கஷ்டமான கேள்விகளுக்கு தான் வாழும் வாழ்க்கை மூலமாகவே எளிய விடையை காண்பித்தவர் மஹரிஷி.

ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், பார்ஸிகள், புத்த மதத்தினர், சீக்கியர், ஜைனர்கள் என அனைத்து மதத்தினரும் அவர் முன் சமமாக அணி வகுத்து நின்றனர்; சம உரிமையைப் பெற்றனர். தங்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு திருப்தியுடன் அவர் அருளைப் பெற்றனர்.

மஹரிஷியின் அருளுரைகள் ஆன்மீகச் சுரங்கம்; அதைத் தோண்டத் தோண்ட அற்புதமான இதமான விஷயங்கள் கிடைக்கும்; இறைவனை வெளிப்படுத்தும்!

***************

 

ஒரு நீண்ட கதை! அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No. 2425)

SEA WAVES

Written by london swaminathan

Date: 25 December 2015

Post No. 2425

Time uploaded in London:- 9-00 AM
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

மனைவி, மகன், நில, புலன்கள் முதலியன எல்லாம் ஒருவனை எப்படிப் பந்த பாசத்தில் சிக்க வைக்கும் என்பதற்கு ஒரு சுவையான கதை.

 

ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதன் இனிப்புப் பலகாரங்களைச் செய்து விற்கும் வியாபாரம் நடத்தி வந்தார். அவர் ஒரு தர்மவான். போகும் வரும் சந்யாசிகளுக்கு உணவு கொடுத்து மரியாதை செய்வார். ஒரு நாள் ஒரு சந்யாசி அந்தப் பக்கம் வரவே, அவரை வரவேற்று, வாழையிலையில் அன்னத்துடன் தான் செய்த இனிப்புப் பலகாரங்களையும், ஒரு குவளையில்  பாலையும் பரிமாறினார். அந்த சந்யாசி அவரை வயிறார வாழ்த்தி, “அன்பனே, உனது பக்திக்கு மெச்சினோம். உம்மை சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்க அருமருந்தாகிய ஒரு உபதேசத்தை உமக்கு அருள திருச்சித்தம் கொண்டுள்ளோம்” என்றார்.

 

சுவாமி! மிக்க மகிழ்ச்சிதான். ஆனால் அதற்கு இது தருணமல்ல. மனைவி மக்களைக் காப்பாற்றும் கடமை உளதே என்றார்.

சாமியாரும் (சந்யாசி) அதற்கென்ன பின்னொரு சமயம் வருவோமென்று கூறிச் சென்றார். சில ஆண்டுகள் சென்றன. மீண்டும் அவ்வழியே அந்த சந்யாசி வந்தவுடன் அறுசுவை அன்னம் படைத்தான் அந்த இனிப்பு வியாபாரி. “அன்பனே, காலம் கனிந்ததா? உபதேசத்துக்குத் தயாரா?” என்று சாமியார் வினவ, “சில ஆண்டுகளுக்கு முன் என் மனைவி இறந்துவிட்டாள். இப்பொழுது இரு மகன்களுக்கும் கல்யாணம் முடிக்கவேண்டிய கடமை உளது” என்றார். சாமியார் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

 

இன்னும் சில ஆண்டுகள் சென்றன. சாமியார் அதே வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல உபசரிப்பு. இப்பொழுது இரண்டு மகன்களுக்கும் கல்யாணம் நடந்து தம்பதி சகிதம் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். சாமியார், கடைக் கண்களால் வியாபாரியைப் பார்த்தார். அவருக்கு சட்டென விளங்கியது.

jersey cow

“இன்னும் உபதேசத்துக்கு நேரம் வரவில்லை. ஏனெனில் மகன் கல்யாணத்துக்கு வாங்கிய கடன்களை அடைக்க வேண்டி இருக்கிறது” என்றார். சாமியாரும் சிரித்துக் கொண்டே வந்த வழியே சென்றார்.

ஆண்டுகள் பல உருண்டோடின. மீண்டும் வந்தார் சாமியார். வழக்கம் போல அறு சுவை உணவு. ஆனால் வியாபாரியைக் காணவில்லை. மகன்களிருவரும் “தந்தை இறந்துபோய் சில ஆண்டுகள் ஆனதாக”ச் சொன்னார்கள். உடனே சந்யாசி தனது ஞான திருஷ்டியால், அவரது தந்தை அதே வீட்டில் மாட்டுக் கொட்டிலில் மாடாய்ப் பிறந்திருப்பதை உணர்ந்தார்.

 

மகன்களிடம் சாக்குப் போக்குச் சொல்லி நைஸாக மாட்டுக் கொட்டிலுக்குச் சென்றார். இந்த மாட்டை எங்கே வாங்கினீர்கள்? என்றார். இது வாங்கிய மாடல்ல. முன்னால், இந்த வீட்டிலிருந்த, பசு ஈன்ற கன்றுதான் இது என்றனர். மகன்களிருவரும் வீட்டுக்குள் சென்ற சமயம், அந்த மாட்டிடம் அது யார் என்பதை உணர்த்தி இப்போது ஞான உபதேசத்துக்குத் தயாரா? என்று கேட்டார். அதற்கு அந்த பசு சொன்னது:

“ஐயோ, இப்போது வேண்டாம். என் மகன்களிருவரும் வரும்படியின்றி கஷ்டப்படுகிறார்கள். நான் கொடுக்கும் பாலை விற்றுப் பணம் சம்பாதிப்பதால் அவர்கள் கஷ்டம் நீங்கியபின்னர் தான் தயார்” என்றது. அந்த சாது சந்யாசியும் சிரித்துக் கொண்டே விடைபெற்றுச் சென்றார்.

 

சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த வீட்டுக்கு வந்தபோது, மகன்கள், ஒரு நாயை வளர்த்து வருவதைக் கண்டார். அது சந்யாசியைக் கண்டவுடன் அவர் மீது தாவிக்குதித்து ஓடி வந்தது. மகன்கள் இருவரும் அதைக் கட்டிப்போட்டுவிட்டு, உணவு படைத்தனர். மாடு இறந்து போன பின்னர் வீட்டுக்குத் தானாகவே வலிய வந்த ஒரு நாயை வளர்க்கத் துவங்கிய கதைகளைச் சொன்னார்கள். அனத சந்யாசி ஞானதிருஷ்டியில் பார்த்த போது மாடாகப் பிறந்து, இறந்த பின்னர் அந்த வியாபாரிதான் இப்போது நாயாகப் பிறந்திருக்கிறார் என்பதை அறிந்தார். யாருமில்லத சமயம் அதனிடம், அது யார் என்பதைச் சொல்லி, உபதேசம் செய்ய்யத் தயாராக இருப்பதாகவும், அதைக் கேட்டால், இந்த நாய்ப்பிழைப்பு தேவையில்லை என்றும் சொன்னார்.

 

dog3

அதற்கு அந்த நாய் சொன்னது:

சுவாமி! இப்போது வேண்டாம். என் மகன்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த வீட்டை அவர்கள் இல்லாத போது நான் தான் காவல் காக்கிறேன் என்று சொன்னது.

 

அந்த சந்யாசியும் சிரித்துக் கொண்டே வந்தவழியே போய்விட்டார். இந்த வியாபாரியை பிறப்பு- இறப்பு என்ற மாயச் சுழலிலிருந்து விடுவிக்க முயன்றாலும், முடியவில்லையே! இந்த சவாலை சமாளித்தேயாக வேண்டும் இன்னும் ஒரு முறை வருவோமென்று கங்கணம் கட்டிக் கொண்டார். விசுவாமித்திரர், திரிசங்கு மஹாராஜனை சுவர்க்கத்துக்கு அனுப்பிய கதை போல இருக்கிறதே! என் தவ வலிமையைப் பயன்படுத்தி இவனை விடுவிப்பேன்; பந்த பாசம் என்பது அவ்வளவு வலியதா என்று வியந்தார்.

 

ஆண்டுகள் பறந்தன. அதே சந்யாசி தள்ளாடித் தள்ளாடி அந்த வியாபாரி வீட்டுக்கு வந்தார். இப்பொழுது நாயும் இறந்து விட்டது. மகன்கள் இருவருக்கும் இந்த சந்யாசி நம்மை விட மாட்டான் போல இருக்கிறது, இவனை விரட்ட வேண்டும் என்று கோபத்துடன் வந்தனர். அவருக்குப் புரிந்துவிட்டது உடனே ஞான திருஷ்டியால் ஒரு விஷயத்தை அறிந்தார். அவர்களிருவரும் கோபத்துடன் வந்தவுடன், “இவ்வளவு நாளாக உங்களுக்குச் சொல்ல மறந்த ஒரு ரஹசியத்தைச் சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்தேன்” என்றார்; உடனே அவர்கள் சோறு படைத்து , இனிப்பு கொடுத்து மெதுவாக ரஹசியம் என்ன? என்று கேட்டனர்.

 

தோட்டத்தில் மரப் புதர்களுக்கிடையில் அவரது தந்தை 100 பவுன் தங்க நகையைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார். உடனே அவர்கள் இருவரும் கடப்பாரை , மண்வெட்டி சகிதம் விரைந்தனர். அங்கே ஒரு பாம்பு அவர்கள் மீது சீறிப்பாய்ந்தது. இந்த சந்யாசி நம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டு இப்படி பாம்பிருக்கும் புதருக்கு அனுப்பியிருக்கிறான் என்று எண்ணி அவரை அடிக்க ஓடி வந்தனர். அவர் உடனே, “நிறுத்துங்கள், அந்தப் பாம்பு அங்கேயுள்ள புதையலுக்குக் காவலாக இருக்கிறது” என்றார்.

snake

உடனே அதைக் கொல்வதற்காக பாம்பு! பாம்பு! என்று கத்தியவுடன் ஊர் ஜனங்கள் எல்லோரும் வந்து அதை அடித்துக் கொன்றனர். அவர்கள் எல்லோரும் போன பின்பு இரண்டு மகன்களும் அந்த தங்கப் புதையலைப் பங்கு போட்டுக் கொண்டனர். அந்த சந்யாசியும் பாம்பின் ஆவியைப் பிடித்து அதைக் கரயேற்றி  அப்படியே மாயமாய் மறைந்தார். அதை இரண்டு மகன்களும் வியப்புடன் பார்த்தார்கள்.

 

அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய  முடியாது. ஒருவருடைய பந்த பாசத்தை விடுவித்து, ஒருவரைக் கரையேற்ற ஞானிகளும் கூட மிகவும் பிரயத்தனம் (முயற்சி) செய்ய வேண்டியிருக்கிறது. வியாபாரியின் வீட்டில் ஒரு நாள் உணவு சாப்பிட்டதாலும் அவர் தர்மவான் என்பதாலும் அவரை ஜனன-மரணச் சுழலிலிருந்து அந்த சந்யாசி விடுவித்தார்.

–subham–

எனது திரயம்பகேஸ்வர் யாத்திரை! Post No. 2377

IMG_2692

Written by London swaminathan

Date: 10 December 2015

Post No. 2377

 

Time uploaded in London :– 9-10 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

வட நாட்டில் சிவ பெருமான் மீதும், ராமர், சீதாதேவி மீதும் அபார பக்தி இருக்கிறது. இதை அவர்கள் வணங்கும்விதத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். பல தமிழ் நாட்டுக் கோவில்களில் போலி பக்தர்களும் போலி பக்தியும் நிலவுகிறது. சடங்குகளும் அதிகம்- அதாவது தேங்காய், பழம், சூட தீபாராதனை என்று பற்பல. பட்டுப் புடவை உடுத்திய பெண்கள் ஒரு புறம்; மறுபுறம்;– கழுத்தில் கொட்டை, நெற்றியில் பட்டை, காலில் கட்டை, கையில் சட்டை!!

(கொட்டை= ருத்திராட்சம்; பட்டை= விபூதி அல்லது நாமம், கட்டை= சாமியார் செருப்பு, சட்டை= மேல் சட்டை)

12 jyotirlinga

நாங்கள் மும்பையில்ருந்து நாசிக் சென்றோம். அங்கிருந்து திரயம்பகேஸ்வர் கோவில் சென்றோம். இது 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இதற்கு முன் ராமேஸ்வரம், ஸ்ரீசைலம் ஆகிய இரண்டு ஜோதிர்லிங்க தலங்களைத்தான் பார்த்திருக்கிறேன்.

 

வெள்ளைக்காரந்தான் இந்நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று என் நண்பர்கள் பலர் பிதற்றுவர்/ உளறுவர். ஆனால் 51 சக்தி பீடங்களும், 108 வைஷ்ணவ திருப்பதிகளும், 12 ஜோதிர்லிங்க தலங்களும், ஆதி சங்கரரின் நான்கு மடங்களும் அகண்ட பாரதம் என்பதை நிரூபிக்கிறது. இதில் பல தலங்கள் பாகிஸ்தான், பங்களாதேஷில் இருப்பதால் அவைகளும் நம்முடையவையே. இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பியர்களுக்கு தேசீயம் என்பதை சொல்லிக் கொடுத்த நாடே பாரதம்தான். ஏனெனில் கிரேக்க, ரோமானிய, எகிப்திய, சீன, சுமேரிய நாகரீகங்களில் இக்கொள்கை இல்லை.

 

இந்த தலங்கள் அனைத்துக்கும் மோடி அரசு தனித்தனியே தபால்தலை வெளியிட வேண்டும். வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியக் கோவில்கள் இந்திய தபால்தலைகளில் இடம்பெற்றன. பின்னர் வந்த நேரு-காந்தி கொழ கொழா, வழ வழா ‘செக்யுலர்’ அரசு சொதப்பிவிட்டது. என்னுடைய தபால்தலை ஆல்பத்தில் உலக நாடுகள் ஆண்டுதோறும் வெளியிடும் கிறிஸ்துமஸ் தபால் தலைகள் உண்டு. முஸ்லீம் நாடுகள் வெளியிட்ட மசூதி, மெக்கா , காபா தபால்தலைகள் உண்டு. ஆனால் இந்துதபால்தலைகள் மிகக் குறைவு.

 

திரயம்பகேஸ்வரர் கோவில் கோதாவரி நதி தோன்றுமிடத்துக்கு அருகில் இருக்கிறது. அண்மையில் அங்கு கும்ப மேளா நடந்ததால், அப்போது போலீஸ்காரகள் வைத்த ஆயிரக்கணக்கான தடுப்புகள் சாலை ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

IMG_8070 (2)

படம்:– கோவிலுக்கு வெளியே எல்லோருக்கும், அழகான திரிசூல முத்திரை வைக்கிறார்கள்!

 

கோவிலை நெருங்க, நெருங்க போன்களையும் காமெராக்களையும், செருப்புகளையும் இங்கே விட்டுச் செல்லுங்கள் என்று பல வணிகர்களும் அவர்களது ஏஜெண்டுகளும் வழிமறித்தனர். அவர்களில் ஒருவரை நம்பி எல்லாவற்றையும் விட்டுச் சென்றோம். எல்லாவற்றுக்கும் குறைந்தது பத்து ரூபாய் கட்டணம்! நம்முடைய மொபைல் நம்பர் எல்லாவற்றையும் எழுதிக் கொண்டு ஒரு டோக்கன் தருகிறார்கள். (கோவிலுக்குள் மொபைல் போன்களை அனுமதிக்கக்கூடாது என்பதை நான் ஆதரிக்கிறேன்)

 

கோவிலுக்குச் சென்றவுடன் 200 ரூபாய் விஷேச தரிசன ‘கியூ’வுக்குச் சென்றோம். ஆனால் அதற்கு நேரக் கட்டுப்பாடுகள் இருப்பதால் பொது பக்தர் வரிசையில் நின்றோம். ஆளுக்கு ஒரு பையில் பூ வாங்கிக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கிட்டத்தட்ட 20 வரிசைகள் இருந்தன. மக்கள் வேகமாக நகருவதைப் பார்த்து அதில் சேர்ந்தோம். மூன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் சந்நிதியில் நின்றோம்! ஆயினும் பெரிய மின்னணுத் திரையில் சன்னிதியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டே நகரலாம்.

IMG_2688

எனக்கு சிறு வயதில் என் தந்தை கற்றுக் கொடுத்த ஓம் திரயம்பகம் …… என்று துவங்கும் த்ரயம்பக மந்திரம் (யஜூர் வேத ருத்ரத்தில் ஒரு மந்திரம்) வேறு ஒரு திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

 

ஒரு ஐடியா/ யோஜனை

நாம் எத்தனையாவது வரிசையில் நிற்கிறோம் என்பதை இலக்கமிட்டு, அவ்வப்பொழுது அறிவிக்கலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் 20-ஆவது வரிசையில் இருந்தால் இன்னும் மூன்று மணி நேரத்துக்குப் பின்னர் சந்நிதியில் இருப்பீர்கள் என்று அறிவிக்கலாம். வரிசைக்கு எண் குறித்து பெரிய ‘போர்ட்’ வைக்கலாம். திருப்பதியில் நாம் நிற்கும் ஷெட்டுகளின் எண் பெரிதாகத் தெரியும். இது தவிர இனிமையான, சன்னமான குரலில் ஏதேனும் பாடல்களை ஒலிபரப்பலாம். நல்ல வேளையாக ஆங்காங்கே தண்ணீர் குடிக்க, குழாய்கள் வைத்திருக்கிறார்கள்.

 

நாங்கள் சன்னிதியை நெருங்கும்போது மாலை நாலு மணி ஆகிவிட்டதால் 200 ரூபாய் வரிசையும் அதில் கலக்கத் துவங்கியது. இந்த இடத்தில் கோவில் நிர்வாகம் ஒரு கயிறு கட்டி இரண்டு வரிசைகளையும் ஏக காலத்தில் நகர்ந்து செல்ல வசதி செய்ய வேண்டும். ஏனெனில் அங்கு கொஞ்சம் தள்ளு முள்ளு இருந்தது. இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கொந்தளிப்பு இருக்கத்தானே செய்யும்!

IMG_8069 (2)

ஒர் ஏமாற்றம்

நாங்கள் கோவிலுக்குள் நுழையும் முன்னர் ஒரு பெண்மணி எல்லா பூக்களையும் வாங்கி ஒரு கூடையில் போட்டுவிட்டு, பிரசாதம் என்று அதிலிருந்து இரண்டு பூக்களைக் கொடுத்தாள். இது ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஒரு பூவையாவது, வில்வத்தையாவது எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வளவு பூவையும் அனுமதிக்க முடியாதுதான்.

சீரடி, திரயம்பகேஸ்வரம், மும்பை சித்தி விநாயகர் கோவில்கள் ஆகிய எல்லாவற்றிலும், அரை நிமிட தரிசனம்தான். அந்த அரை நிமிட நேரத்தில் கிடைக்கும் திருப்திக்காக மூன்று மணி நேரம் வரிசையில் நிற்பதால் நம் பாவங்களனைத்தும் கரைந்துவிடும்.

 

வெளியே வந்து “உடுப்பி” ஹோட்டலில் நுழைந்தோம். பெயர்தான் உடுப்பி. சாப்பாடோ கடுப்பு!

ஆனால் சீரடியில் கோவிலுக்கு எதிரேயிருந்த உடுப்பி ஹோட்டல் அருமையான கன்னட சாம்பார் சட்னியுடன் சுவையாக இருந்தது. வட நாட்டில் வடக்கத்திய சாப்பாட்டையும், தென்னாட்டில் தெற்கத்திய சாப்பாட்டையும் எதிர்பார்ப்பதுதான் நியாயம். ஆனால் நம் நாக்கு, அதை கேட்க மாட்டேன் என்கிறது!!!என்ன செய்ய?

 

சிவபெருமான், எப்பொழுதும் நீரில் இருக்க வேண்டும் என்னும் ஓர் ஐதீகம் இருப்பதால், பூசாரிகள் தண்ணீரை அபிஷேகம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். திங்கட் கிழமை தோறும் பல்லக்கில் ஒரு கவசம் எடுத்துவரப்படும் என்று படித்திருக்கிறேன். படத்தில் நாங்கள் கண்ட மும்முக கவசமாக இது இருக்கலாம்.

IMG_8090

ஆமை மர்மம்!!!!!!!!!!!!!!!!!!!!!

 

திரயம்பகேஸ்வர் கோவில் கோபுரம் தன் பழமையைக் காட்டுகிறது. உள்ளே பெரிய ஆமை உருவம் தரையில் சந்நிதிக்கு முன்னிருந்தது.

முன்னர் நான் எழுதிய கட்டுரைகளில் ஆமை மட்டும் எப்படி உலகில் அதிக நாள் வாழ்கிறது என்று சுவாசக் கணக்குப் போட்டுக் காட்டியிருந்தேன். அப்படிச் செய்தால் நாமும் 300 ஆண்டுகள் வாழலாம். இன்னொரு கட்டுரையில் திருச்செங்கோடு முதலிய இடங்களில் ஆமைமீது மண்டபம் இருப்பதையும், கேரள கோவில்களில் மட்டும் ஆமையின் முதுகின்மேல் த்வஜ ஸ்தம்பம் இருக்கும் மர்மம் பற்றியும் எழுதியிருந்தேன். ஆனால் நான் படித்த எந்த கோவில் , ஆகம புத்தகங்களிலும் இதற்கு விளக்கம் இல்லை!!!

 

சீனர்கள் ஆமை முதுகின் மேல் எழுதப்பட்டதாக நம்பும் மேஜிக் ஸ்கொயரை (எப்படிக் கூட்டினாலும் 15 எண் வரும் குபேர யந்திரம்) அதிர்ஷ்டகரமாகக் கருதுவதையும் எழுதியிருந்தேன். இதையெல்லாம் மனதிற்கொண்டு த்ரயம்பகேஸ்வரர் கோவிலில் பெரிய ஆமை உருவம் சிவனுக்கு முன்னர் வரையப்படிருப்பதையும் அது நந்தியின் ஸ்தானத்தை வகிப்பதையும் கண்டு வியந்தேன். இதை விட அதிசயம், பஞ்சவடியில் எல்லா கடைகளிலும் ஆமை படம் போட்ட “லக்கி” யந்திரங்கள் விற்பதையும் கண்டு அதிசயித்தேன். இதற்குப் பழைய இந்துமத நூல்களில் ஆதாரமில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் கீதையிலும், குறளிலும் திருமந்திரத்திலும் வரும் ஆமையின் புலனடக்கப் பாடல்தான் (ஒருமையுள் ஆமை போல….)

தேவாரத்தில் சிவன் அணியும் பல பொருள்களில் ஆமை ஓடும் ஒன்று. விஷ்ணுவின் அவதாரங்களில் கூர்ம அவதாரம் ஒன்று.

 

கோதவரியைக் காணோம்!

நாங்கள் கோவிலை விட்டு வெளியே வருகையில் அந்தி நேரம் நெருங்கியதால், கோதாவரி நதியின் தோற்றுவாய்க்குச் செல்ல முடியவில்லை. ஆனால் த்ரயம்பகேஸ்வரத்தில் கோதாவரி, வெறும் தேங்கி நிற்கும் தண்ணீராகவே காட்சி தந்தது. இயற்கை அன்பனான எனக்கு அது ஒரு ஏமாற்றமே. பஞ்சவடியிலுள்ள ஐந்து ஆலமரங்களை வெளிச்சத்தில் காணும் அவாவில் காரின் வேகத்தை அதிகப் படுத்தி சிட்டாகப் பறந்தோம் (பஞ்சவடி அற்புதங்களை அடுத்த கட்டுரையில் காண்க).

–சுபம்–

போலி மாப்பிள்ளைத் தோழன் கதை! POST No. 2342

 

 

at_the_feet_of_god_medium

 

Compiled   by London swaminathan

Date: 19 November 2015

POST No. 2342
Time uploaded in London :– 10-25
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

சுவாமி ராமதாஸ் சொன்ன கதை:தமிழ் மொழி பெயர்ப்பு-லண்டன் சுவாமிநாதன்

திருமணமான ஒருவருக்கு மாமனாரிடமிருந்து அழைப்புக் கடிதம் வந்தது. “தொலைதூரத்தில் வசிக்கிறீர்களே; நீண்ட நாளாகிவிட்டதே; இங்குவந்து எங்களுடன் தங்கிவிட்டுப் போகக்கூடாதா?” — என்று. குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் இருந்ததால் அவர் மட்டும் பயணமானார். ஒரு கில்லாடிக்கு எப்படியோ இந்தக் கடித விஷயம் தெரிந்தது. அவனும் டிப்-டாப்பாக உடைகளை அணிந்து மாப்பிள்ளை புறப்பட்ட அதே ரயிலில் புறப்பாட்டான்.

 

இருவரும் மாமனார் ஊருக்கு வந்தனர். மாப்பிள்ளையை வரவேற்க, மைத்துனர் கார் கொண்டு வந்திருந்தார். அவரைக் காரில் பின் சீட்டில் மரியாதையாக அமர்த்தியபோது, அதே ரயிலில் வந்த டிப்-டாப் பேர் வழி “ஹலோ” என்று வணக்கம் சொல்லி காரில் அமர்ந்துகொண்டான். மைத்துனர் நினைத்தார் இவர் மாப்பிள்ளையின் தோழர் போல என்று. மாப்பிள்ளை நினைத்தார், அவர் மாமனார் வீட்டுக்கு வேண்டியவர் போலும்; ஒரே ரயிலில் வந்ததால் அவரையும் அழைத்துப் போகத்தான் மைத்துனர் வந்தார் போலும் என்று!

 

இருவரும்  வீடு போய்ச் சேர்ந்தவுடன் உற்சாக வரவேற்பு கிடைத்தது. டிப்-டாப் பேர்வழி யரும் எதையும் கேட்டு விடக் கூடாதென்பதற்காக என்னுடைய அறை எது? என்று கேட்டவுடன், மாமனார் அவனுக்கு ஒரு அறையை ஒதுக்கினார். மாப்பிள்ளையின் சந்தேகமெல்லாம் பறந்தோடிவிட்டது. ஓஹோ! இவர் மாமனாரின் நெருங்கிய நண்பர் போலும்; அதுதான் உரிமையோடு அறையைக் கேட்க, மாமனாரும் உடனே கொடுத்துவிட்டார் என்று.

 

ஒரு நாள் ஆயிற்று, இரண்டு நாள் ஆயிற்று. டிப் டாப் பேர்வழி எல்லா அறைகளிலும் சென்று எல்லாப் பொருட்களையும் எடுத்தார். எல்லோர் உடைகளையும் எடுத்து அணிந்தார்; வீட்டிலுள்ள நல்ல செருப்புகளை தன்னுடைய சொந்த செருப்பு போலப் பயன்படுத்தினார். எல்லோருக்கும் “ஹலோ, குட் மார்னிங்” எல்லாம் சொன்னார்.பேச்சு கொடுக்கக் கூடாதென்பதற்காக, பெரும்பாலான நேரங்களில் வெளியே போய்விடுவார். சாப்பாட்டு நேரத்தில், சாப்பாட்டு ராமன் —  பெருந்தீனீ – என்னும் பெயருக்குரியவராகி விடுவார்!!!

 

மாப்பிள்ளையும், மாமனாரும் இது ஏது, இப்படி இங்கிதம் இல்லாமல் மோசமாக நடந்து கொள்கிறான் என்று மனதுக்குள் புகைந்தனர். ஆனால் எதுவும் சொல்ல பயந்தனர்.

 

மானாருடைய சொந்தக்காரரைக் குறைகூறினால் அவர் தப்பாக நினைப்பாரே என்று மருமகன் பயந்தார். மருமகனின் சொந்தக்காரரைக் குறை சொன்னால் மருமகன் கஷ்டப்படுவாரே என்று மாமனார் தவித்தார்.

 

ஒரு நாள் அந்த ஆள்மாறாட்ட டிப்டாப்  பேர்வழி எல்லை மீறி சுதந்திரத்தைப் பயன்படுத்தினார். யார் அனுமதியும் கேட்காமல் காரை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி எல்லா பெட்ரோலையும் செலவழித்துவிட்டுக் காரை நிறுத்தினார். இந்த வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று கருதி மாமனார், மாப்பிள்ளையிடம் யார் இந்த பிருஹஸ்பதி? என்று கேட்போம் என்று அவரை நெருங்கினார். ஆள்மாறாட்டக்காரனின் இந்த அடாத செயலைப் பார்த்துக்கொண்டிருந்த மாப்பிள்ளையும் இவ்வளவு மோசமான இவன் யார்? என்று கேட்க மாமனாரை நெருங்கினார். ஆள்மாறாட்டப் பேர்வழிக்கு நிலைமை முற்றிப்போனது தெரிந்துவிட்டது. நைஸாக நழுவிவிட்டார். இப்போது மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் (மருமகன்) உண்மை விளங்கியது.

 

ramdas

படம்: சுவாமி  ராமதாஸ்

அந்த டிப் டாப் ஆள்மாறாட்டப் பேர்வழியின் பெயர் என்ன தெரியுமா? அஹங்காரம்; அதாவது “யான்” “எனது” என்னும் செருக்கு.

 

யார் ஒருவன் அஹங்காரத்தை அடையாளம் காண்கிறனோ, அப்பொழுது அது பயந்து ஓடிவிடும். அதைப் புரிந்துகொள்ளாமல் அதற்கு இடம் கொடுக்கும் வரைக்கும் அது (டிப்-டாப் ஆள் மாறாட்டப் பேர்வழி) ஆட்டம்போடும்!

 

இது சுவாமி ராமதாஸ் சொன்ன கதை; தமிழ் மொழிபெயர்ப்பு; லண்டன் சுவாமிநாதன்

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் – திருக்குறள் 346

 

–சுபம்–

 

பிரிட்டனிலும் ஆண் மரம் பெண் மரம் ஆனது! சம்பந்தர் செயலுக்கு அறிவியல் சான்று!

sambadar

ஞான சம்பந்தர் சிலை

பிரிட்டனிலும் ஆண் மரம் பெண் மரம் ஆனது! சம்பந்தர் செயலுக்கு அறிவியல் சான்று!

Research Article Written by London swaminathan

Date: 4 November 2015

Post No:2299

 Time uploaded in London :–  9-32 AM

(Thanks  for the pictures) 

ஞான சம்பந்தர் 16 வயதில் இறைவனடி சேர்ந்தார். அதற்குள் அவர் ஏராளமான அற்புதங்களைச் செய்து சைவ வரலாற்றில் அழியா இடம் பெற்றார். அவர் செய்த அற்புதங்களில் ஒன்று ஆண் பனை மரத்தைக் காய்க்க வைத்ததாகும். அதாவது ஆண்மரத்தின் ‘செக்ஸை’ மாற்றியதாகும்! இன்று காலையில் லண்டனிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் இதே போன்ற ஒரு அதிசயச் செய்தியை வெளியிட்டுள்ளன.

5000 year old yew tree

படம்:– யூ மரம்

பெர்த்ஷைர் வட்டத்தில் போர்டிங்கல் கிராமத்தில் ஒரு சர்ச்சில் ஒரு யூ மரம் இருக்கிறது. அது ஆண் மரம்; அது திடீரெனப் பழுக்கத் தொடங்கியது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகர தாவரவியல் வல்லுநர்கள், அந்த மரத்தில் காய்த்த பழங்களை ஆராய்ச்சிக்கு எடுத்துச் சென்றனர்

5000 ஆண்டுகளாக உயிரோடு வளர்ந்து வரும் புகழ் பெற்ற யூ மரம் ஆண் மரம் என்பது தாவரவியல் அறிஞர்கள் அறிந்த விஷயமே. இவ்வாண்டு அதில் பழங்கள் தோன்றின. அதாவது ஆண் மரம், பெண் மரமாக மாறிவிட்டது! இது எப்படி என்பது தாவரவியல் அறிஞர்களுக்குப் புலப்படவில்லை. மிகவும் கீழ்நிலையிலுள்ள சில உயிரினங்களில் ஆண்—பெண் மாற்றம் ஏற்படுவதுண்டு. 5000 வயதுடைய மரம் இப்படி ‘செக்ஸ்’ மாற்றம் அடைந்தது அதிசயத்திலும் அதிசயமே என்று தாவரவியல் அறிஞர்கள் பத்திரிக்கைகளுக்குப் பேட்டி கொடுத்துள்ளனர்.

ஞான சம்பந்தர் செய்த அற்புதத்தை சந்தேகித்தவர்களுக்கு இப்பொழுது பித்தம் தெளிந்துவிடும்.

palmyra-palm-fruit

சம்பந்தர் செய்த அற்புதம்!

சம்பந்தர் ஊர் ஊராக ஆலய தரிசனம் செய்துகொண்டு போகையில் திருவோத்தூர் கோவிலுக்கும் போனார். அங்கே ஒரு சிவனடியார் வருத்ததுடன் இருக்கக்கண்டார். காரணத்தை வினவிய போது அந்த பக்தர் சொன்னார்:–

“நான் நிறைய பனை மரங்களை வளர்த்தேன். அதன் காய்களை விற்று வரும் வருவாயில் கோவில் பணிகளைச் செய்யப் போவதாக எல்லோரிடமும் சொல்லி வந்தேன். ஆனால் எல்லாப் பனை மரங்களும் ஆண் மரங்களாக இருப்பதால் காயே காய்க்கவில்லை. இந்த ஊரிலுள்ள நாத்தீகர்கள் என்னை எள்ளி நகையாடி வருகின்றனர். உன்னுடைய சிவனிடம் போய்க்கேள்; எல்லாவற்றையும் பெண் மரங்களாக்கி காய்க வைத்துவிடுவார் – என்று கிண்டல் செய்கின்றனர்” என்று சொல்லி அழுதார். உடனே சம்பந்தர் பத்து பாடல்கள் அடங்கிய ஒரு பதிகத்தைப் பாடினார். அடுத கணமே பனை மரம் காய்த்துக் குலுங்கியது!!

இப்படி ஆண் மரங்கள், பெண் மரங்களாக மாற முடியுமா? என்பதற்கு இப்பொழுது மேற்கூறிய யூ மரச் செய்தி பதில் கொடுத்துவிட்டது. ஒரே வித்தியாசம். சம்பந்தர் அதை நொடிப் பொழுதில் செய்தார். பிரிட்டனில் அது சில ஆயிரம் ஆண்டுகளில் நடந்துள்ளது.

தமிழ் முனிவர்கள் காலத்தை வென்றவர்கள்; காலம் கடந்தவர்கள்; த்ரி கால ஞானிகள். அவர்கள் நினைத்தால் காலத்தை மாற்றவும் முடியும், நிறுத்தவும் முடியும்; காலத்தைக் கடந்து வெளியே நின்று முக்காலத்தையும் காணவும் முடியும். இவைகளை சுந்தரர், அப்பர், சம்பந்தர் செய்த அற்புதங்களில் காணலாம்.

முன்னரே, இரண்டு தமிழ் முனிவர்களின் காலப் பயணம் குறித்துக் கட்டுரை எழுதி  இருக்கிறேன். பின்னால் நடக்கப் போவதை முன்னரே கூறிய சம்பவங்களையும் கொடுத்து இருக்கிறேன். பகவத் கீதையில் கிருஷ்ணன் காட்டும் விஸ்வரூப தரிசனம், இப்பொழுது விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் கருந்துளை ( BLACK HOLE பிளாக் ஹோல்) போன்றதாகும். கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி முடிவில் விஸ்வரூப தரிசனம் என்ன என்பது நமக்கு மேலும் தெள்ளிதின்  விளங்கும்!!!

-சுபம்-

காலம் என்னும் மர்மம்! – 1

apple-kitchen-wall-clocks

ஹிந்து தத்துவ விளக்கம்                                          புதிய தொடர்

காலம் என்னும் மர்மம்! – 1

Written  by S NAGARAJAN

Date: 31 October 2015.

Post No:2288

Time uploaded in London :–  7-16 AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

.நாகராஜன்

1

வியாசர் சுகருக்கு விளக்கியது        

காலம் என்னும் மர்மத்தை இந்திய நூல்கள் விளக்கியுள்ளது போல உலகின் வேறு எந்த நூல்களும் விளக்கவில்லை.

விஞ்ஞானிகளில் கார்ல் சகன் உள்ளிட்டோர் ஹிந்து மதத்தில் காலம் விளக்கப் பட்டுள்ள விதத்தை வியந்து பாராட்டி உள்ளனர். அதன் மீதுள்ள மதிப்பின் காரணத்தால் கால நடனத்தைஆடும் நடராஜரையும் தங்கள் காஸ்மாஸ் (Cosmos) தொடரில் பயன்படுத்தி உள்ளனர்.

 

 

மஹாபாரதத்தில் காலம் பற்றிய விவரம் ஏராளமான இடங்களில் பல்வேறு நோக்கில் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு சிலவற்றை இங்கு பார்ப்போம்.

சாந்தி பர்வம் 244வது அத்தியாயத்தில் வருவது இது.

வியாச முனிவர் சுக முனிவருக்கு காலத்தைப் பற்றி இப்படி விவரிக்கிறார்:-

காலமானது நானாவிதமாக ஏற்பட்டிருக்கிறது. என்னால் உனக்கு முன்னே சொல்லப்பட்டதும், மக்களை உண்டு பண்ணுகிறதும், அழிப்பதுமான (பரமாத்ம ரூபமான) காலமானது ஆதி, அந்தம் இல்லாதது.

 

 

பூதங்களுடைய உற்பத்தியையும், பாலனத்தையும், அழிவையும் செய்யும் ஆகிய இவற்றின் விளக்கமாக அமைகிறது காலம்.

ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக படைக்கப்பட்ட பூதங்கள் தமது இயல்புடன் கூட அப்படிப்பட்ட காலத்தில் இருக்கின்றன.

காலமே சிருஷ்டி. காலமே துஷ்டி.

காலமே வேதம். காலமே கர்த்தா.

காலமே காரியம். காலமே கர்மத்தின் பலன்.

argos clock 2

 

2

இந்திரனுக்கும் பலிக்கும் நடந்த சம்வாதம்

இந்திரனுக்கும் விரோசனன் மகனான பலிக்கும் இடையில் நடந்த சம்வாதம் – (அர்த்தமுள்ள உரையாடல்) – காலத்தின் வன்மையை நன்கு விளக்குகிறது.

பாழடைந்த வீட்டில் கழுதை வேஷத்தில் இருந்த பலியைப் பார்த்த இந்திரன், “அசுர வேந்தனே! உன் பெரிய குடை எங்கே? பொன் பாத்திரம் எங்கே? பிரம்மதேவர் உனக்கு அளித்த மாலை எங்கே?” என்று கேட்டான்.

பலி இந்திரனை நோக்கி நகைத்து, “அவற்றையா கேட்கிறாய்? யாவும் காலத்தால் வரும்! .நல்ல காலத்தில் போகாது.

 

 

இவ்வுலகத்தில் யாவும் காலத்தின் மாறுதலில் எல்லாமே நிலையற்றனவாயிருப்பதைக் கண்டு நான் சோகப்படாமல் இருக்கிறேன்.

இவ்வுலகம் அனைத்தும் முடிவுள்ளதாக இருக்கிறது.

கொன்ற பின்னும் வென்ற பின்னும் புருஷ வீரம் உள்ளவன் போல் இருக்கின்ற மனிதன் உண்மையில் கர்த்தாவே அல்ல. கர்த்தாவாய் இருப்பது தான் அதைச் செய்கிறது.

மற்றும் சிலர் ஒன்றாய் இருக்கும் காலத்தை வருடங்கள் என்றும், மாதங்கள் என்றும், பட்சங்கள் என்றும், தினங்கள் என்றும், க்ஷணங்கள் என்றும், காலை என்றும், மாலை என்றும், நடுப்பகல் என்றும், முகூர்த்தம் என்றும் பல விதமாகக் கூறுகிறார்கள்.

 

 

இவ்வுலகம் யாவும் எதன் வசத்தில் இருக்கிறதோ அதைக் காலம் என்று தெரிந்து கொள்!

இந்திரனே! உன்னைப் போல் வன்மையும் பராக்ரமும் பொருந்திய பல்லாயிரம் இந்திரர்கள் காலம் சென்றார்கள். உனக்கு கர்வம் வேண்டாம். வருங்காலத்தில் உள்ள கதியை எவன் கண்டான்?”

 

காலத்தின் வன்மையையும், தன்மையையும் பலி, இந்திரனுக்கு இப்படி விளக்கினான். (மஹாபாரதம் சாந்தி பர்வம் 234வது அத்தியாயத்தில் ஒரு சிறு பகுதி சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது)

 

antique-kitchen-wall-clocks

3

பிருஹஸ்பதியிடம் மனு கூறியது

பிருஹஸ்பதியிடம் மனு காலத்தைப் பற்றி விவரிக்கிறார் :-

பூமியின் உருவத்தை விட ஜலத்தின் உருவம் பெரியது.                            

ஜலத்தை விட தேஜஸ் பெரியது.                                                  

தேஜஸை விட வாயு பெரியது.                                                        

வாயுவை விட ஆகாயம் பெரியது.                                                          

ஆகாயத்தை விட மனம் மிகப் பெரியது.                                      

மனத்தை விட புத்தி பெரியது.                                                          

புத்தியை விடக் காலம் பெரியது, என்று இப்படிச் சொல்லப்படுகிறது.

 

இந்த உலகமெல்லாம் எந்த விஷ்ணுவின் உருவமோ அந்த விஷ்ணு காலத்தை விடப் பெரியவர்!

மிக அழகாக ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு எது எதை விடப் பெரியது என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுவது ஹிந்து இலக்கியம் ஒன்று மட்டுமே! இப்படி எதை எதனுடன் ஒப்பிட வேண்டும் என்பதே மற்ற பழைய நாகரிகத்தினர்க்குத் தெரியுமா என்பது ஐயப்பாடே! எதிர்காலத்தில் விஞ்ஞானம் இவற்றைப் படிப்படியாக நிரூபிக்கும் என்பதில் ஐயமில்லை.

(சாந்தி பர்வம் 204வது அத்தியாயம்

 

மஹாபாரதம் இன்னும் பல்வேறு இடங்களில் காலம் பற்றி விரிவாக விளக்குகிறது! காலத்தைப் பற்றி மிக விளக்கமாக அறிந்து கொள்வதால் ஏற்படும் முதல் பலன் எல்லையற்ற கால வெள்ளத்தில் நாம் சிறுதுளியினும் சிறுதுளியே என்பதை அறிவதன் மூலம் நம் அகங்காரம் அகலும். அத்துடன் கூட  ‘நிலையாமைஎன்பது நன்கு புரியப் புரிய மன அமைதி தானே உருவாகும்!

***********         (தொடரும்)

3 ராமர்கள், 3 பரதர்கள், 6 கர்ணர்கள்!

01cp_sampoorna_ram_1129781f

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY  ச.நாகராஜன்

Date : 13 September  2015

Post No. 2154

Time uploaded in London: –   காலை 11-19

(Thanks  for the pictures)

 

.நாகராஜன்

விஷய அடுக்கு

எதையும் அடுக்கினாலே அழகு தான். கொலு பொம்மைகளை அடுக்குவதில் தான் எத்தனை ஆயிரம் விதங்கள். வீட்டுக்கு வீடு படைப்பாற்றல் – கிரியேடிவிடி! அது ஒரு அழகு.

வார்த்தைகளையும் விஷயங்களையும் அடுக்குவது இன்னொரு அழகு!

அடுக்கு மொழி என்றாலே ஒரு கவர்ச்சி தான்! (தீயசக்திகள் தமிழகத்தில் தமிழர்களை ஏய்க்கும் அடுக்குமொழி தவிர மற்ற அனைத்தும் நல்லவையே)

ராமன், பரதன், கர்ணன் என்றால் மகிழ்ச்சியுடன் விஷயத்தைச் சற்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும்.

3 ராமர், 3 பரதர் 6 கர்ணர்கள் என்றால்.. ஆவல் பன்மடங்காகும்.

3 ராமர்கள் யார்?

தசரத ராமன், பரசுராமன், பலராமன்!

ராம நாமத்தால் இம்மை மறுமை நலம் பெறலாம். நன்மையும் செல்வமும் பெறலாம். சென்மமும் மரணமும் இன்றி இன்புறலாம்.

தசரத ராமனையா தெரியாது, ராம, ராம, ராம ராமஜயம்!

அடுத்து பரசுராமன். ஜமதக்னி-ரேணுகாவின் புதல்வர்!

பரசுராம பார்கவர்! தசரத ராமன் தந்தை, தாய் சொல்லைத் தட்டவில்லை. ஆனால் பரசுராமன் தந்தை சொல் தட்டவில்லை. தாயின் தலையைத் துண்டிக்க தந்தை ஆணையிட அதை சிரமேற்கொண்டு ஏற்ற தந்தை சொல் தட்டா தனயன் பரசுராமன்!

அடுத்து பலராமன்! கண்ணனின் அண்ணன். மகாபாரதப் போரின் போது தீர்த்த யாத்திரை சென்றவர் கடைசி க்ளைமாக்ஸில் வந்து தன் முத்திரையைப் பதிக்கிறார். துரியோதனன் – பீமன் சண்டையில் கதையை பீமன் துரியோதனனின் இடுப்புக்குக் கீழே துடையில் அடித்தது தவறு என்று ஆட்சேபணை கிளப்பியவர். தரையில் இருந்த போது தான் அடிக்கக் கூடாது, துரியோதனன் ஆகாயத்தில் உயர்ந்த போது கதை அவன் துடையில் பட்டது என்று மாமாயக் கண்ணன் அவரை சமாதானப் படுத்த அமைதியாகிறார். ஆயிரம் சம்பவங்கள் இவரைச் சுற்றி. அறியாமல் இருக்க முடியாதே!

MaharajaRahuganasarcasticallychastisesJadaBharata

பல்லக்கை சுமந்துவரும் ஜடபரதன்

 

மூன்று பரதர்கள் யார்

அடுத்த மூவர் – 3 பரதர்

ராமனின் தம்பி பரதன்

பரத வம்ச பரதன்

ஜட பரதன்

கானகம் வந்த பரதனை முதலில் சந்தேகித்து அவனது உண்மையான ராம பக்தியை அறிந்த பின்னர் குகன் கூறுவது:-

“தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை

தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை என்ற போழ்து, புகழினோய் தன்மை கண்டால்

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியன் அம்மா”

—- (அயோத்தியா காண்டம் குகப் படலம்)

சிந்தனை முகத்தில் தேக்கி, ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, என்றெல்லாம் கம்பரைத் தவிரை வேறு யாரால் தான் சொல்ல முடியும் தெரியன், அம்மா!

அடுத்து பரதன்! பாரத தேசத்தில் பிறந்து பரதனைத் தெரியவில்லை என்றால் அது தேசீய அவமானம். புகழோங்கிய பரதனின் வழித்தோன்றல் என்பதில் தான் நமக்கு என்ன ஒரு பெருமிதம்!

அடுத்து ஜட பரதர். மான் ஈன்ற குட்டி மீது பாசம் வைத்து மறு ஜன்மம் பெற்றவர். பல்லக்கில் மன்னனை எட்டி எட்டி காலை வைத்துத் தூக்க, பல்லக்கு ஆட, மன்னன் கோபப் பட்டு இறங்கி, யார் நீ என்று வினவ, அவனுக்கு அடித்தது யோகம்! ஆன்ம லாபம் பெற வைத்த உபதேசத்தை ஜட பரதர் உபதேசித்த வரலாறு நம்மைப் புல்லரிக்க வைக்கும்.

மூன்று பரதருக்கும் ஒரு ஜே போட்டு 6 கர்ணர்களின் பக்கம் திரும்புவோம்.

karnan

ஆறு கர்ணர்கள் யார்?

 

மஹாரதி கர்ணன்

கௌரவ குலத்தில் பிறந்த விகர்ணன்

க்ஷேத்திரங்களில் சிறந்த கோகர்ண(ம்)

ராட்சஸரில் சிறந்த கும்பகர்ணன்

ஷ்யாம நிறம் படைத்த காதுகள் கொண்ட குதிரைகள்- ஷ்யாம கர்ண (குதிரை)

சரீரத்தில் உன்னதமாக உள்ளுக்குள் இருக்கும் அந்தக் கரண(ம்.

இந்த ஆறின் சிறப்பே சிறப்பு என்று அடித்து, அடுக்கிச் சொல்கிறார்கள் அறிஞர்கள்!

கர்ணனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். குந்தியின் புத்ரன். செஞ்சோற்றுக் கடன் கழிக்கச் சேரக் கூடாதவருடன் சேர்ந்தவன். மஹா ரதி. கொடுத்துச் சிவந்தவன்.

விகர்ணன் கௌரவர் நூற்றுவரில் ஒருவன். திரௌபதியை சபை நடுவே துகில் உரித்த போது யாரும் அதைக் கண்டிக்காத சூழ்நிலையில் வாய் திறந்து கண்டித்த தர்மவான் விகர்ணன். கடைசியில், இவனைக் கொல்ல நேர்ந்ததே என்று மனம் துக்கப்பட்டவாறே பீமன் கொன்றான். விகர்ணன் தீயோருடன் சேர்ந்த பாவத்தால் அழிந்து பட்டான்.

சிவ க்ஷேத்திரங்களுள் துளுவ நாட்டில் உள்ள சிறந்த கோகர்ணம் சிவ ஸ்தலங்களுள் பிரசித்தி பெற்றது. சிவபிரானின் காதுகள் பசுவின் காது போலக் குழைந்து இருப்பதால் இந்த புனிதத் தலம் கோகர்ணம் என்ற பெயரைப் பெற்றது.

இன்ன உரு என்று அறிவு ஒணாதான் காண்

ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான் காண்

மன்னும் மடந்தை ஓர் பாகத்தான் காண்

மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

என்பது அப்பர்,,வாக்கு (6ஆம் திருமுறை –சந்திரனும் தண்புனலும் எனத் தொடங்கும் பதிகத்தில் 8ஆம் பாடல் காண்க)

ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிகக்

கூறு மனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே

என்பது ஞானசம்பந்தர் அருளிய பாடல். (3ஆம் திருமுறை என்றும் அரியான் எனத் தொடங்கும் பதிகத்தில் 6அம் பாடல் காண்க).

ராவணனின் தம்பி கும்பகர்ணன்! சீதையைத் தூக்கி வந்தது தப்பு என்று அண்ணனை இடித்து உரைத்தவன். இவன் கூறுவதாக கம்பன் இயற்றிய பாடல் மிகவும் புகழ் பெற்றது. ‘பேசுவது மானம் இடை பேணுவது காமம்’ என்ற இவனது சாட்டையடிச் சொற்கள் ராவணனது அரசவையில் ஒரு நாடகக் காட்சியையே தோற்றுவிக்கிறது.

ஷ்யாம வர்ணம் பொருந்திய குதிரைகள் மிகச் சிறந்தவை என்று அஸ்வ சாஸ்திரம் கூறுகிறது.

சரீர உறுப்புகளில் மிகவும் நுட்பமானது அந்தக் கரணம் – மனச் சாட்சி. இறைவனின் குரலே மனச்சாட்சியின் குரல்.

ஆக இந்த ஆறு கரணங்கள் சிறப்பானவை என்று அழகுற அடுக்கிச் சொல்லும் போது ஏராளமான சிறப்பான விஷயங்களை ஒரு அலசு அலசித் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஹிந்து இலக்கியத்தை சுவைபடப் புரிந்து கொள்ள இப்படி ‘3 ராமர், 3 பரதர், ஆறு கர்ணர்’ போன்ற சொற்றொடர்கள் உதவுகின்றன இல்லையா!

***************

பிராம்மணோ போஜன ப்ரிய:

ilai

Article No.1977

Date: 6 July 2015

Written by London swaminathan

Uploaded from London at காலை 7-56

 

திருடாதே! பாப்பா! திருடாதே!

இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்: மற்றவர்கள் எழுதுவதை, எழுதியவர் பெயரை வெட்டிவிட்டு, வெளியிடாதீர்கள். நீங்கள் இப்படிச் செய்தால், அதாவது திருடினால் — உங்கள் கணவரோ, மனைவியோ, மகனோ, மகளோ, அம்மாவோ, அப்பாவோ உங்களை ஏமாற்ற நீண்ட நேரம் பிடிக்காது. மேலும் தமிழும் அழியும்; தமிழ்த் தாயும் உங்களை அழிப்பாள். ஆகையால் திருடுவதை நிறுத்துங்கள். யார் எழுதினரோ அவர்தம் பெயருடன் வெளியிடுக!

Xxxxxxx

பிராம்மணோ போஜன ப்ரியஹ

“பிராமணர்கள் சாப்பாட்டு ராமன்கள்” —  என்று இதற்குப் பலரும் பொருள் சொல்லுவர். அது தவறு.

இப்படியும் படிக்கலாம்:—

பிராம்மண! “போ” ஜனப்ரியஹ

ஹே! பிராம்மண! நீ மக்களுக்குப் பிரியமானவன்

இதுவும் வேடிக்கையாகச் சொல்வதுதான். உண்மைப் பொருள் என்ன வென்றால்:

Idli Parade

விஷ்ணு அலங்காரப் பிரியன்

சிவன் அபிஷேகப் பிரியன்

சூரியன் நமஸ்காரப் பிரியன்

தேவி பிரதக்ஷிணப் பிரியள்

பிராம்மண: போஜனப் பிரியன்

அதாவது விஷ்ணுவை அலங்காரம் செய்து மகிழ்வித்தால் உனக்கு கேட்டதையெல்லாம் தருவான்.

சிவனை அபிஷேகம் செய்து மகிழ்வித்தால் உனக்கு கேட்டதையெல்லாம் தருவான்.

சூரியனை நமஸ்காரம் செய்து மகிழ்வித்தால் உனக்கு (ஆரோக்கியம் தொடர்பாகக்) கேட்டதையெல்லாம் தருவான்.

தேவியைப் பிரதக்ஷிணம் (வலம் வந்து) செய்து மகிழ்வித்தால் உனக்கு கேட்டதையெல்லாம் தருவாள்.

பிராமணனுக்கு அன்னம் படைத்து மகிழ்வித்தால் உனக்கு பரிபூர்ண ஆசீர்வாதம்  (கேட்டதையெல்லாம்) தருவான்.

துஷ்யந்தி போஜனே விப்ரா: – சாணக்ய நீதி தர்பணம்

“பிராமணர்கள் சாப்பாட்டில் சந்தோஷம் அடைவர்” – என்று வேறு ஒரு நூலும் கூறுவது இதே பொருளில்தான்.

அதே போல சூரியனே மனிதர்களின் ஆரோகியத்துக்கு அதிபதி. (கட்டுரையின் இறுதிப் பகுதியில் இது விளக்கப்பட்டுள்ளது)

தமிழில் சொல் விளையாட்டு!

தமிழிலும் இது போல வார்த்தா ஜாலம் (சொற் பிறட்டு)  உண்டு:——

பிராமாணர்கள் சாப்பிடும்  இடம்.

பிராமணர் “கள்” சாப்பிடும் இடம்! – என்பது போல.

இதுவும் வேடிக்கையாகச் சொல்லுவதே!

கணவன் கெஞ்சிக் கேட்டால் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் பெண்:

1.தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் (கடவுளைக் கும்பிட மாட்டாள், கணவன் வந்து கெஞ்சிய பின்னரே எழுவாள்)

2.தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் (தெய்வத்தைக் கும்பிட மாட்டாள், கணவனைக் கும்பிட்டு எழுவாள்)- குறள் 55

இரண்டும் தமிழ் இலக்கணப்படி சரியே!!! (மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், எங்கள் குருநாதர் வி.ஜி.சீனிவாசன் சொன்னது)

என் தலைவி  திவசம் (என் மனைவிக்கு இன்று திதி)

என் தலை “விதி”  வசம் (எல்லாம் என் தலை விதி )

எனது பள்ளி — மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி — தமிழாசிரியர் ம.க. சிவசுப்பிரமணியம் சொன்னது)

surya darsanam

லண்டன் சந்துரு குருக்கள், அவருடைய மகனுடன் செய்யும் சூரிய வழிபாடு

லண்டனில் வைட்டமின் “டி” கிடைக்காது !!

ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் – பூஜாப்ரகாச:

அதாவது “சூரியனிடம் ஆரோக்கியத்தைக் கேள்” – என்பது இந்தப் பொன் மொழியின் பொருள்.

இந்தியாவில் வசிப்போருக்கு சூரிய ஒளி இயற்கையாகவே கிடைப்பதால், இதன் அருமை பெருமை தெரிவதில்லை. வைட்டமின் – டி – என்னும் முக்கியச் சத்தை இது கொடுக்கிறது. அந்தக் காலத்தில் இந்துக்களுக்கு சிறு வயது முதல் சூரிய நமஸ்காரத்தைக் கற்றுக் கொடுத்தனர். இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூலமக இது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.

எங்கள் லண்டனில் இப்பொழுது எல்லோருக்கும் – டாக்டரிடம் அடிக்கடி போகும் எல்லோருக்கும் –– குறிப்பாக கிழக்கு லண்டனில் முஸ்லீம் பெண்கள் எல்லோருக்கும் – வைட்டமின் “டி” கொடுக்கின்றனர். இது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் நடை பெற்ற  ஆராய்ச்சியில் குறைந்த சூரிய வெளிச்சமுள்ள மேலை நாடுகளில் இதுதான் உடல்நலப் பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்று தெரிந்தவுடன் அரசாங்கமே எல்லோருக்கும் – குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு  — இதை இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளது. யார் ரத்த பரிசோதனைக்குப் போனாலும் இதற்கான சோதனையும் செய்யப்படுகிறது. மற்ற எந்த சமூகத்தின ரையும்விட உடல் முழுவதையும் போர்த்திக் கொள்ளும் முஸ்லீம்களுக்கு வைட்டமின் டி  – இன்னும் மிகவும் குறைவாக இருக்கிறது!

நான் முதல் பத்தியில் “சூர்யன் நமஸ்காரப் ப்ரியன்” என்று சொன்னதற்கு இதுவும் ஆதாரமாகும். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்!

நூறாண்டுக் காலம் வாழ்க!

நோய் நொடியில்லாமல் வாழ்க!

 

பிராமணர்கள் நாள்தோறும் மதிய நேரத்தில் செய்யும் சந்தியா வந்தன வழிபாட்டில் ஒரு அருமையான துதி உள்ளது. அதை சினிமா பாட்டிலும் நூறாண்டுக் காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வாழ்க! என்று மொழிபெயர்த்துள்ளனர்.

சூரியனைப் பாதுகாப்பாகப் பார்க்க பிராமணச் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே கற்றுத் தருவர்.

சூரியனை நோக்கிச் சொல்லப்படும் இந்த துதி:

பஸ்யேம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் சூரியனைக் கண்டு வணங்குவோம்

ஜீவேம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் வாழ்வோம்

நந்தாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் உறவினர்களுடம் கூடிக் குலவுவோம்

மோதாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் மகிச்சியுடன் இருப்போம்

பவாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் இருப்போம்

ஸ்ருணுவாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் இனியதையே கேட்போம்

ப்ரப்ரவாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் இனியதையே பேசுவோம்

அஜீதாஸ்யாம சரதஸ் சதம்: நூறு ஆண்டுகள் வெற்றியுடன் வாழ்வோம் (தீமைகளை வெல்லுவோம்)

ஜ்யோக் ச சூர்யந் த்ருசே: இவ்வாறு சூரியனை அனுதினமும் காண்போமாக

–தைத்ரீய ஸம்ஹிதை & ஆரண்யகம்

எல்லோரும் வாழ்க! இன்பமே சூழ்க!!

மர்ம எண் 8-ம், உலகிலேயே பழைய பெண்கள் பெயர்களும்!

saraswati

Written  by London Swaminathan

Research Article No. 1965

Dated 1 July 2015.

Uploaded at London time : 5-45 am

ரிக் வேதம் உலகிலேயே பழைய நூல் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இரா. மாக்ஸ்முல்லர் இதை யாரும் கி.மு.1200-க்குக் கீழே கொண்டு வரமுடியாது. உலகில் எந்த சக்தியும் இதன் காலத்தைக் கணிப்பது அரிது என்று கடைசியாகச் சொல்லிவிட்டு இறந்து போனார். ஏ.சி.தாஸ் என்பவர் வேத காலம் கி.மு.25,000 என்றும் எஸ்.வி.வெங்கடேஸ்வரா கி.மு.11,000 என்றும் பாலகங்காதர திலகர், ஜெர்மன் ஆராய்ச்சியாளர் ஹெர்மன் ஜாகோபி ஆகியோர் கி.மு 4500-க்கும் முன் என்றும், வீபர் கி.மு 2780 என்றும், ஹாக் கி.மு.2400 என்றும், விண்டர்நீட்ஸ் கி.மு.2000 என்றும், பர்ஜிட்டர் கி.மு.2050 என்றும்,மக்டொனெல், கீத் கி.மு.1400 என்றும், மைகேல் விட்சல் கி.மு.1700 என்றும், ஸ்ரீகாந்த் தலகரி கி.மு.2000க்கு முன் என்றும் செப்புவர்.

ரிக் வேதத்தில் மிகப் பழைய விஷயங்கள் ரகசிய சங்கேத மொழிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு சிறிய ரகசிய விஷயத்தைப் பார்ப்போம். ஆப்ரி சூக்தம் என்று ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு துதி உண்டு. இது அக்னி தேவனை நோக்கிப் பாடப்பட்டாலும்  பல தெய்வங்களின் பெயர்களும் அடிபடுகின்றன. யாக, யக்ஞத்தில் பயன்படுத்தும் புனிதப் பொருட்களைப் போற்றும் துதியெனவும் அறிஞர் பெருமக்கள் மொழிவர். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தத் துதியில் சரியாக எட்டாவது பத்தியில் மூன்று பெண் தெய்வங்களின் பெயர்கள் வருகின்றன. ஏன் எட்டாவது பத்தியில் இப்படிப் பாடுகிறார்கள்? எட்டு எண்ணுக்கும் இந்தப் பெண் தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு? அவர்களுக்கும் நியுமெராலஜி NEUMEROLOGY (எண் ஜோதிடம்) தெரியுமா? அல்லது பாணினிக்கும் முன்னால் சம்ஸ்கிருத இலக்கணம் எழுதியோர் ஏதேனும் விதி இயற்றி இப்படிப் பாடச் சொன்னாரா? என்பதெல்லாம் மர்மமாக உள்ளது.

சம்பந்தர் பாடிய தேவார பதிகத்தில் ராவணன் கர்வத்தை ஒடுக்கியது ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு குறிப்பிட்ட எண் பத்தியில் வரும், பதிகத்தின் பலன் கடைசியாக வரும் என்று நமக்குத் தெரியும். ஆனால் ரிக் வேதம் என்பது 450-க்கும் மேலான கவிஞர்கள் வாய்மொழியாக வந்தது. அவ்வளவு பேரும் ஒரே காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் அல்ல. 500 ஆண்டுக் கால எல்லைக்குள் வாழ்ந்தவர்கள். அவ்வளவு நீண்ட காலத்தில் பாடிய ஒவ்வொரு குடும்பத் தலைமை ரிஷியும் (புலவர்) எப்படி எட்டாவது பத்தியில் இதைச் சொன்னார்கள்? ஏன்? என்ற மர்மம் நீடிக்கிறது. இப்படி ஒரு பாணி (ஸ்டைல்) வகுக்கப் படவேண்டுமானால் அதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னேயே பாடத் துவங்கினாலன்றோ இப்படி ஒரு நெறிமுறை உருவாகும்!

“இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை” என்பது—ஆன்றோர் வாக்கு ஆயிற்றே!! ஆகையால் வேதங்களுக்குப் பின்னால்தான் இலக்கணம் வரமுடியும்.

(ரிக் வேதம் என்பது பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உள்ளன. 10 மண்டலங் களில் ஆறு மண்டலங்கள் ஒரே ரிஷியின் வம்சத்தில் வந்தோர் பாடிய பாடல்களாக வியாசர் தொகுத்து தந்திருக்கிறார். இவற்றை குடும்ப (மண்டலம் 2–7) மண்டலங்கள் எனலாம்.

sarasvati-map-crop

இன்னும் ஒரு அதிசயம்!

யார் அந்த மூன்று பெண் தெய்வங்கள்?

சரஸ்வதி, பாரதி, ஈலா; ஒரே ஒரு இடத்தில் பாரதிக்குப் பதிலாக மாஹி (SARASVATI, BHARATI, ILA).

இதில் என்ன அதிசயங்கள் இருக்கின்றன என்று கண்போம். நமது வேதங்களைப் படித்த வெளிநாட்டுகாரகள் உள் நோகத்துடன் எழுதியதால் பல விஷயங்கள் அவர்களுக்குப் புரியவில்லை. வேத கால மக்கள், ஆண் தெய்வங்களை வணங்கினர், நாகரீகமற்ற பழங்குடி மக்கள் பெண் தெய்வங்களை வணங்கினர் என்று உளறிவிட்டுப் போய்விட்டனர். அவர்கள் உளரியதெல்லாம் ஆங்கிலத்தில் இருந்தவுடன் நம்மவர்கள் அதைப் பார்த்து, அட! அம்மாடியோவ்! இது ஆங்கில மொழியாயிற்றே, ஆகவே அவன் அறிஞன்தான் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர். உண்மையில் இன்று வரை தொடர்ந்து பெண் தெய்வங்களை வணங்குவது உலகில் இந்துக்கள் மட்டுமே. அருள் சுரக்கும் பூமி, நதிகள் ஆகிய அத்தனைக்கும் பெண்கள் பெயரையே சூட்டினர். எல்லா நல்ல குணங்களையும் சம்ஸ்கிருத மொழியில் பெண்மை வடிவத்தில் கண்டனர் (கருணா, பிரேமா, சத்யா, சுகுணா, சுகந்தா).

சரஸ்வதி என்னும் நதி வேத காலத்தில் ஓடிய பிரம்மாண்டமான நதி. அது வறட்சியினாலோ, நில அதிர்ச்சியினாலோ மண்ணில் புதைந்து மறைந்த பின்னரே கங்கை, சிந்து ஆகியன பிரபலமாயின. சரஸ்வதி நதியின் நீர் உயிர் கொடுப்பது போல, சரஸ்வதி என்னும் தெய்வம் உள்ளத்துக்கு உரமூட்டியது. தெய்வமாகவும், தாயாகவும், மொழியாகவும் வணங்கப்பட்டவள் சரஸ்வதி. உலகிலுள்ள பழைய நாகரீக பெண் தெய்வங்கள் எல்லாம் மியூசியங்களில் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்டுப் போயின. சரஸ்வதியோ இந்து கலாசாரம் பரவிய நாடுகளில் எல்லாம் மக்களின் உள்ளத்தில் உறைகிறாள் இன்றும்!

இதைவிட உலக அதிசயம்! இமயம் முதல், இலங்கையின் தென் கோடி கண்டி/கதிர்காமம் வரை இன்றும் சரஸ்வதி பாரதி, ஈலா பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஈலா என்பது, குஜராத்தி இந்துக்கள் அதிகம் வைக்கும் பெயர். நாம் சரஸ்வதி என்போம். சிருங்கேரி சங்கராச்சார்யார் பெயர்கள் எல்லாம் பாரதி என்றும் காஞ்சி சங்கராசார்யார்கள் பெயர்கள் எல்லாம் சரஸ்வதி என்றும் முடியும்.

gold-number-8

இதைவிட பெரிய அதிசயம்!

யதுகுல (யாதவர்) மக்கள் ஆடுமாடு மேய்த்துக் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று யூதர் ஆயினர். யது = யூத (Yadu = Yuda= Juda). நாம் ‘ய’ (Y) என்றால் மற்றவர்கள் மொழியில் ‘ஜ’ (J) ஆகும். அவர்கள் யேசு என்றால், உலகம் அதை ஜீஸஸ் என்று சொல்லும். ஆகையால் ஜூடாயிஸம் (யூத மதம்) என்றனர். அவர்களில் மூத்தவர் ஆப்ரஹ்ம (ஆபிரகாம்) அவருடைய மனைவி பெயர் சரஸ்வதி (சாரா). ஆக அவர்களும் கூட, பிரம்மாவின் பெயரையும் அவர் மனைவி சரஸ்வதி பெயரையும் வைத்துக் கொண்டனர். நாம் சரஸ்வதியை செல்லமாக சச்சு அல்லது சரசு என்போம். அவர்கள் ஸாரா என்பர்.

(ஜ, ய என்னும் எழுத்துக்கள், ர, ல என்னும் எழுத்துக்கள் உரு மாறுவது பற்றி காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவையும் படித்துப் பயன் பெறுக. அவர் மிகப்பெரிய மொழியியல் அறிஞர். அவர் மட்டும் சங்கராசார்யார் ஆகாமல் மொழியியல் அறிஞர் ஆகியிருந்தால் மேல்நாட்டு மொழியியல் கொள்கைகள் எல்லாம் இவ்வளவு நேரம் குப்பைத் தொட்டிக்குள் போயிருக்கும். யூத மதத்தில் வேத மந்திரம் இருப்பதை எடுத்துக் காட்டி “ரப்பைகளையே” வியக்கவைத்தவர். ரப்பை= யூத மத சாஸ்திரிகள்).

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு: ரிக் வேத துதிகளில் எட்டாம் பத்தியில் வரும் ஈலா என்பது மத்தியக் கிழக்கில் ILA இலா, IDA இடா என்ற தெய்வங்களின் பெயராக உரு மாறியது.

ஆப்ரி APRI SUKTA சூக்தம் வரும் இடங்கள்:

ரிக் வேதம்: RV 3-4-8; 7-2-8; 2-3-8, 1-13-8/9; 1-188-8; 5-5-8; 9-5-8; 10-70-8;10-110-8. (எட்டு என்பதைக் கவனிக்க)

மூன்று தேவியர் வரும் யஜூர் வேதப் பாடல்கள்:

Yajur Veda 28-18; 27-17; 20-43 and several other places.

R veda

ஆப்ரி சூக்தம் பற்றி ஒரு சர்ச்சை!

இலக்கிய விஷயங்களில் எல்லாவற்றிலும் முதன்மை வகிப்பது சம்ஸ்கிருதமே! உலகின் முதல் GRAMMAR இலக்கண நூல், முதல் காம EROTICS சாஸ்திரம், முதல் DICTIONARY அகராதி, நிகண்டு, மொழியியல் LINGUISTICS  ஆராய்ச்சி, மொழியியல் ஆய்வு, சொற்பிறப்பியல் ETYMOLOGY ஆய்வு, நூல் யாத்தல், பெண் கவிஞர்களின் பங்கு பணி, பெண்களுக்கான முதல் SYLLABUS சிலபஸ் (64 கலைகள்), முதல் நாட்டிய சாத்திர நூல், சங்கீத சாத்திர நூல், முதல் THESARUS நிகண்டு — முதலிய எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதமே உலகில் முதன்மை வகிக்கிறது. இதே போல புத்தகங்களுக்கு இண்டெக்ஸ் INDEX போடுவதிலும் சம்ஸ்கிருதமே FIRST! அதாவது முதல்! அணுக்ரமணி என்ற வேத இண்டெக்ஸில் எல்லா புலவர் பெயர்களும் உள்ளன.

இந்த இண்டெக்ஸில் ஆப்ரி சூக்தங்களை இயற்றிய வெவ்வேறு பெயர்களைப் பார்த்த ப்ளூம்ஸ்பீல்டு என்பார், “ பாருங்கள் இரண்டு மண்டலங்களில் ஒரே மாதிரி ஆப்ரி சூக்தங்கள் உள்ளன. ஆனால் வசிட்டர், விஸ்வாமித்திரர் என்று இரண்டு பெயர்களை அணுக்ரமணி கூறுகிறது. ஆகாயால் அணுக்ரமணி பிழையுடைத்து என்று நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். ஆனல் பிற்காலத்தில் வந்தவர்கள் அது ஒரு அரைவேக்காட்டுத் HALF BAKED தனமான வாதம் என்பதை ஆதாரங்களுடன் காட்டினர்.

கிரேக்க கவிதைகளில் ஒரே வரி பல முறை வருகிறது. பாதி வரி பல முறை வருகிறது. ஒரே உவமை பலமுறை வருகிறது; சில சொற்றொடர்களை எல்லோரும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்று கிலபர்ட் மர்ரே GILBERT MURRAY  என்பவர் எடுத்துக் காட்டினார். இதை தனது புத்தகத்தில் மேற்கோள் காட்டிய இந்திய வேத அறிஞர் ஸ்ரீகாந்த் தலகரி SHRIKANT G.TALAGERI  என்பார், இந்த் ஆப்ரி சூக்தங்களைப் பயன்படுத்தி ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களைக் கால வரிசைப் படுத்தியிருக்கிறார்.

book05

தமிழில் மீண்டும் மீண்டும் வரும் வரிகள்

இந்திய வரலாற்றை அல்லது பண்பாட்டை எழுதப் புகுவோருக்கு பாரத மாதாவின் இரு கண்காளான தமிழும் சம்ஸ்கிருதமும் தெரியாவிடில் தப்பும் தவறுமாக பிதற்றத் துவங்கி விடுவார்கள். தமிழில் ஏராளமான வரிகள் திரும்பத் திரும்ப வரும்

ஐங்குறு நூறு என்னும் 500 பாடல் தொகுப்பில் நூற்றுக்கும் மேலான வரிகளை எல்லா புலவர்களும் பயன்படுத்துவர்.

புற நானூற்றில் பல் சான்றீரே! என்ற வரிகள் இரண்டு பாடல்களில் வரும். சேண் விளங்கு முதலிய சொற்றொடர்களைப் பலரும் பயன்படுத்துவர். இது வாய்மொழி இலக்கியம் துவங்கிய காலத்தில் எல்லா மொழிகளிலும் உண்டு.

ஆனால் தொல்காப்பியர் போல எவரும் இலக்கண நூலில் இப்ப்டிச் செய்ததில்லை. தொல்காப்பியத்தில் ஒரே பத்தியில் தேவையில்லாமல் ஒரு வரியை ஆறு முறை (பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) கூறியிருக்கிறார் ஒல்காப்புகழ் தொல்காப்பியர்.ஏதோ நர்சரி ரைம் Nursery Rhyme போலப் பாடிவிட்டார். “என்ப”, “மொழிப” போன்ற சொற்களை 287 முறை சொல்கிறார். ஒரே சூத்திரத்தில் (சூத்திரம் 1568) ‘என்றலும்’ என்பதை ஆறு முறை சொல்லுவார்’ இன்னும் ஒரு இடத்தில் ஒரே சூத்திரத்தில் ‘அறிவதுவே’ என்பதை ஏழு முறை சொல்லுவார் (சூத்திரம் 1526). அதாவது சொற்செட்டு என்பது அவருக்கில்லை. பாணினிக்கும் இவருக்கும் இடைவெளி 1000 மைல் என்றால் மிகையில்லை!!