SANKARA AND QUANTUM PHYSICS ஆதி சங்கரரும் க்வாண்டம் பிஸிக்ஸும்! (Post No.7305)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 6 DECEMBER 2019

 Time in London – 8-29 AM

Post No. 7305

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ச.நாகராஜன்

ஆதி சங்கரர் கூறியவற்றிற்கும் க்வாண்டம் பிஸிக்ஸ் கூறுகின்ற கொள்கைக்குமான ஒரு ஒப்பீடு இதோ:

ஆதி சங்கரர் : உலகமே மாயை

க்வாண்டம் பிஸிக்ஸ் : நாம் காணும் உலகமும் புலன்களால் உணரும் உலகமும் உண்மையல்ல; அவைகள் மனதினால் உருவாக்கப்பட்ட வெறும்

3 D உருவகங்களே.

ஆதி சங்கரர் : ப்ரஹ்மம் சத்யா ;ஜகம் மித்யா  – ப்ரஹ்மமே இறுதியான உண்மை

க்வாண்டம் பிஸிக்ஸ் :  அந்த பிரக்ஞையே உண்மை

ஆதி சங்கரர் : பிரம்மாண்டம் என்பதானது உருவாக்கப்பட்டு பரப்ரஹ்மத்தில் கரைந்துபோனது.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து கிரகங்கள், நட்சத்திரங்கள், வால்நட்சத்திரங்களாயின. பின்னர் சில காலம் கழித்து அவைகள் பிரிந்து பிரக்ஞையுடன் ஒன்றிப் போயின.

ஆதி சங்கரர் : ஜீவாத்மாவானது ப்ரஹ்மத்திலிருந்து பிரிந்த ஆத்மனே தவிர வேறல்ல; அது பரப்ரஹ்மத்துடன் சேர்தல் வேண்டும், அதுவே மோட்சம்.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் பிரக்ஞையின் ஒரு பகுதியாகவே இருந்தவர்கள், பின்னால் பிரிக்கப்பட்டனர். அவர்கள் பிரக்ஞையுடன் இணையவே வேண்டும்.

ஆதி சங்கரர் : ஜீவன் (தன்னை) உணர்ந்து விட்ட நிலையில் அந்த நிலையே நிர்வாண நிலை. ஜீவன் அப்போது காலம் தேசம்,மனதிற்கு அப்பாற்பட்ட நிலையை அடைகிறது.

க்வாண்டம் பிஸிக்ஸ் : ஒருவன் பிரக்ஞையை ஆழ்ந்து உணர்ந்து விட்டால் அப்போது தேசம், காலம், மனம் எதுவும் இல்லை.

ஆதி சங்கரர் : ஜீவன், தன்னை உண்மை என்றே நம்புகிறான்; அது மனம் இருப்பதின் காரணத்தினால் தான்.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  மனதினால் ஏற்படுத்தப்பட்ட பிரமையே தனிநபரின் தன்மை என்பது.

ஆதி சங்கரர் : புலன்களால் ப்ரஹ்மம் உணரப்பட முடியாது, ஏனெனில் புலன்கள் ஒரு அளவுக்கு உட்பட்டவையே.

க்வாண்டம் பிஸிக்ஸ் :  எல்லையற்ற தன்மை என்பது எல்லைக்குட்பட்ட ஊடகங்களால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

ஆதி சங்கரரும் க்வாண்டம் பிஸிக்ஸும் சொல்லும் கூற்றுக்கள் : 

நாம் எல்லோரும் ஒரே பிரக்ஞையில் இருந்து வெவ்வேறு அனுபவங்களை வெவ்வேறு கர்மாவினால் அனுபவிக்கிறோம். இறப்பு என்று ஒன்று இல்லை. வாழ்க்கை என்பது ஒரு கனவு தான். நாம் என்றுமுள்ளவர்கள். நீங்கள் அறிகின்ற (வாறு அந்த) உண்மை இருப்பதில்லை.

க்வாண்டம் பிஸிக்ஸ்  இன்று அறிந்திருப்பவை அனைத்துமே ஆதி சங்கரரின்அத்வைத தத்துவத்தின் ஒரு பகுதியே. அது வேதத்திலிருந்து பெறப்பட்டது. ஆதி சங்கரரை விட வேறொரு பெரிய விஞ்ஞானி இல்லவே இல்லை.

என்றுமே மாறாத உண்மையானது, சாதாரண மக்களால் கடவுள் எனக் கூறப்படுகிறது. பிரக்ஞை என விஞ்ஞானிகள் அதைக் கூறுகின்றனர். இறைசக்தி என நம்பிக்கையுடையோரால் அது கூறப்படும் போது, இயற்கை என நம்பிக்கையற்றவர்கள் (நாத்திகர்கள்) அதைக் கூறுகின்றனர்.

நாம் அனைவரும் ஒரே பிரக்ஞை தான்; ஆனால் நம்முடைய சொந்த செயல்களினால் வேறு வேறாகத் தோற்றம் அளிக்கிறோம்.

ஒரே வரியில் சங்கரர் இதை இப்படிச் சொல்கிறார்:-

ப்ரஹ்மம் சத்யம், ஜகத் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ நாபர:

ப்ரஹ்மம் ஒன்றே சத்யம்; ஜீவன் ப்ரஹ்மனைத் தவிர வேறல்ல. இதுவே உள்ளார்ந்த அறிவை வெளிப்படுத்துகிறது.

விஞ்ஞானக் களமானாலும் சரி, உலகிற்கு அளித்த கொடைகள் பற்றி எடுத்துக் கொண்டாலும் சரி, ஆதி சங்கரரின் சுயநலமற்ற சேவைக்கு முன் எதுவும் ஈடாகாது.

சதாசிவ சமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் |

அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் ||

நன்றி :- ட்ரூத், கல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ் தொகுதி 87; இதழ் 30

22-11-2019 தேதியிட்ட இதழ்

****

ஆங்கிலத்தில் படிக்க விரும்போர் கீழே உள்ள மூலத்தைப் படித்து மகிழலாம் :-

Here is a Comparison between Adi Shankara and Quantum Physics.

Adi Shankaracharya : This world is (maya) an illusion. 

Quantum Physics : The world we see and perceive are not real, they are just 3D projections of mind. 

Adi Shankaracharya : Brahma sathya jagan mithya–Only the Brahman is the absulote reality

Quantum Physics: Only that conciousness is reality

Adi Shankaracharya :  The Brahamhanda created and dissolved again in to the para – brahman. 

Quantum Physics : The atoms bind together to make planets, stars ,comets and at some time later they dis-integrate and merge with consciousness. 

Adi Shankaracharya : Jivatma is nothing but a separated soul from Brahman. and has to strive to merge with Brahman called moksha. 

Quantum Physics : Everyone was once part of one consciousness later separated. And has to merge back to that consciousness. 

Adi Shankaracharya : When the Jiva becomes realised then it is the state of nirvana, the jiva beyond – time, space and mind. 

Quantum Physics : when someone deeply understands that consciousness then there is no time, no space and no mind. 

Adi Shankaracharya : Jiva feels he is real because of the presence of mind. 

Quantum Physics : Individuality is an illusion that is caused by mind. 

Adi Shankaracharya : Brahman cannot be realised through senses, because they are limited. 

Quantum Physics : Infinity cannot be understood with finite mediums. 

Adi Shankaracharya and Quantum Physics– We are all one consciousness experiencing differently subjectively (because of different karma). There is no such thing as death, life is just a dream. we are eternal beings. The reality as you know does not exist. 

What the entire Quantum physicists have understood is just a part of Advaita Philosophy of Adi Shankaracharya which is purely derieved from the Vedas. There exists none greater a scientist than Adi Shankarcharya. 

The unchanging reality is called God by common people, called consciousness by scientists, called energy by believers, called nature by disbelievers. 

We are all the same consciousness but appear differently because of our own actions. With a single line stated by Shankara

Brahma sathya jagat mitya, jeevo brahmaiva naapara”

 Brahman is the only reality, the living entity is not different from Brahman” that has revealed the inner most knowledge. 

Nothing can match Adi Shankara’ s selfless service in the field of science and contributions to the world. 

Sadasiva samaarambaam shankracharya madyamaam |

Asmadhaachaarya paryanthaam vande guru paramparaam ||

***

Thanks : Truth Weekly

Source : TRUTH VOL.87 NO. 30  Issue dated : 22-11-2019

AUROBINDO ON PARTITION ஸ்ரீ அரவிந்த மஹரிஷி!(Post No.7301)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 5 DECEMBER 2019

 Time in London – 5-49 am

Post No. 7301

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ச.நாகராஜன்

ஸ்ரீ அரவிந்த மஹரிஷி தோற்றம் 15-8-1872 ; மஹா சமாதி தினம் 5-12- 1950

அரவிந்த மஹரிஷி பற்றி யோகி சுத்தானந்த பாரதியார் கூறுவது இது:

ஸ்ரீ அரவிந்தர் மனித சமுதாயத்தின் மஹா சிற்பி. மனித தத்துவத்தின் ஒவ்வொரு பங்கையும் மாசறுத்துத் தெய்வ ஒளியேற்றிப் பூரணப்படுத்தும் சக்தி அவரிடம் அவதரித்திருக்கிறது. அவரவர் இயல்பிற்கேற்ற பணியும் சாதன சௌகரியங்களும் உதவி, அன்பரைப் பூரணப் படுத்துவதில் அரவிந்தருக்கு நிகரில்லை.

நாம் கீதை, உபநிடதங்களில் படிக்கும் தத்துவ ரகசியங்களுக்கெல்லாம் ஸ்ரீ

 அரவிந்தர் தாமே வியாக்கியானமாக விளங்குகிறார்.

      ஸ்ரீ அரவிந்த பிரகாசம் என்ற புத்தகத்தில் கூறுவது 21-2-1947 வெளியீடு

***

அரவிந்தர் இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி ஆற்றிய உரை மகத்தானது; தீர்க்கதரிசனம் பொருந்தியது. திருச்சிராபள்ளி வானொலி நிலையம் அவரை வேண்டிக்கொண்டதிற்கிணங்க தனது உரையை அவர் அனுப்பினார். அது 14-8-1947 அனு ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் பிரிவினை என்பது போக வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அத்துடன் நில்லாமல் அது போய்விடும் என்றும் தீர்க்கதரிசனமாகக் குறிப்பிடுகிறார்.

அவரது ஆங்கில உரையைக் கீழே காணலாம் :

The 15th of August 1947 Message by Sri Aurobindo

[Sri Aurobindo wrote this message at the request of All India Radio, Tiruchirapalli, India, for broadcast on the eve of India’s independence. This is the message which was broadcast on August 14, 1947. It is of special relevance and importance even now.]

August 15th, 1947 is the birthday of free India. It marks for her the end of an old era, the beginning of a new age. But we can also make it by our life and acts as a free nation an important date in a new age opening for the whole world, for the political, social, cultural and spiritual future of humanity.

August 15th is my own birthday and it is naturally gratifying to me that it should have assumed this vast significance. I take this coincidence, not as a fortuitous accident, but as the sanction and seal of the Divine Force that guides my steps on the work with which I began life, the beginning of its full fruition. Indeed, on this day I can watch almost all the world-movements which I hoped to see fulfilled in my lifetime, though then they looked like impracticable dreams, arriving at fruition or on their way to achievement. In all these movements free India may well play a large part and take a leading position.

The first of these dreams was a revolutionary movement which would create a free and united India. India today is free but she has not achieved unity. At one moment it almost seemed as if in the very act of liberation she would fall back into the chaos of separate States which preceded the British conquest. But fortunately it now seems probable that this danger will be averted and a large and powerful, though not yet a complete union will be established. Also, the wisely drastic policy of the Constituent Assembly has made it probable that the problem of the depressed classes will be solved without schism or fissure. But the old communal division into Hindus and Muslims seems now to have hardened into a permanent political division of the country. It is to be hoped that this settled fact will not be accepted as settled for ever or as anything more than a temporary expedient. For if it lasts, India may be seriously weakened, even crippled: civil strife may remain always possible, possible even a new invasion and foreign conquest. India’s internal development and prosperity may be impeded, her position among the nations weakened, her destiny impaired or even frustrated. This must not be; the partition must go. Let us hope that that may come about naturally, by an increasing recognition of the necessity not only of peace and concord but of common action, by the practice of common action and the creation of means for that purpose. In this way unity may finally come about under whatever form—the exact form may have a pragmatic but not a fundamental importance. But by whatever means, in whatever way, the division must go; unity must and will be achieved, for it is necessary for the greatness of India’s future.

Another dream was for the resurgence and liberation of the peoples of Asia and her return to her great role in the progress of human civilisation. Asia has arisen; large parts are now quite free or are at this moment being liberated: its other still subject or partly subject parts are moving through whatever struggles towards freedom. Only a little has to be done and that will be done today or tomorrow. There India has her part to play and has begun to play it with an energy and ability which already indicate the measure of her possibilities and the place she can take in the council of the nations.

The third dream was a world-union forming the outer basis of a fairer, brighter and nobler life for all mankind. That unification of the human world is under way; there is an imperfect initiation organised but struggling against tremendous difficulties. But the momentum is there and it must inevitably increase and conquer. Here too India has begun to play a prominent part and, if she can develop that larger statesmanship which is not limited by the present facts and immediate possibilities but looks into the future and brings it nearer, her presence may make all the difference between a slow and timid and a bold and swift development. A catastrophe may intervene and interrupt or destroy what is being done, but even then the final result is sure. For unification is a necessity of Nature, an inevitable movement. Its necessity for the nations is also clear, for without it the freedom of the small nations may be at any moment in peril and the life even of the large and powerful nations insecure. The unification is therefore to the interests of all, and only human imbecility and stupid selfishness can prevent it; but these cannot stand for ever against the necessity of Nature and the Divine Will. But an outward basis is not enough; there must grow up an international spirit and outlook, international forms and institutions must appear, perhaps such developments as dual or multilateral citizenship, willed interchange or voluntary fusion of cultures. Nationalism will have fulfilled itself and lost its militancy and would no longer find these things incompatible with self-preservation and the integrality of its outlook. A new spirit of oneness will take hold of the human race.

Another dream, the spiritual gift of India to the world has already begun. India’s spirituality is entering Europe and America in an ever increasing measure. That movement will grow; amid the disasters of the time more and more eyes are turning towards her with hope and there is even an increasing resort not only to her teachings, but to her psychic and spiritual practice.

The final dream was a step in evolution which would raise man to a higher and larger consciousness and begin the solution of the problems which have perplexed and vexed him since he first began to think and to dream of individual perfection and a perfect society. This is still a personal hope and an idea, an ideal which has begun to take hold both in India and in the West on forward-looking minds. The difficulties in the way are more formidable than in any other field of endeavour, but difficulties were made to be overcome and if the Supreme Will is there, they will be overcome. Here too, if this evolution is to take place, since it must proceed through a growth of the spirit and the inner consciousness, the initiative can come from India and, although the scope must be universal, the central movement may be hers.

Such is the content which I put into this date of India’s liberation; whether or how far this hope will be justified depends upon the new and free India.

***

மஹரிஷி அரவிந்தரின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். அவர் நினைவைப் போற்றுவோம்.

*

Image result for bharathidasan on aravindar from tamilandvedas

3000 ஆண்டுகளுக்கு முன்னர் அஸீரிய மன்னன் அளித்த தடபுடல் விருந்து! (Post No.7298)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 4 DECEMBER 2019

 Time in London – 9-20 AM

Post No. 7298

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Tags அசீரியா , சுமேரிய , உணவு வகை , மன்னர் விருந்து

அத்வைதத்தை விளக்க ஒரு அழகிய குட்டிக் கதை! (Post No.7283

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 1 DECEMBER 2019

Time in London – 6-34 AM

Post No. 7283

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

அத்வைதம் என்றால் இரண்டு என்பதே இல்லை; ஒன்று தான் என்று உபதேச உரைகள் கூறுகின்றன. ஏகம் ஏவ; அத்விதீயம் ப்ரஹ்ம

ப்ரஹ்மம் ஒன்றே; இரண்டு இல்லை!

இது எப்படி? நான் இதோ இருக்கிறேன்.

நானே இல்லை; ப்ரஹ்மம் தான் என்பது எப்படிச் சரியாகும்?

கேள்வி நல்ல கேள்வி தான்!

இதை விளக்க ஒரு அருமையான குட்டிக் கதையை ஸ்வாமி ஸர்வப்ரியானந்தா கூறுகிறார்.

ஸ்வாமிஜி நியூயார்க்கில் உள்ள வேதாந்தா சொஸைடியின் பொறுப்பு அமைச்சர் (Minister-in-charge of the Vedanta Society of New York, USA).

அவர் பிரபுத்த பாரத ஜனவரி 2019 யோகா சிறப்பிதழில் ‘அஸ்பர்ஷ யோகா’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இந்தக் கதையைக் கூறுகிறார்.

கதைக்கு வருவோம்; கருத்தைப் புரிந்து கொள்வோம்!

***

காசி இளவரசி!

முன்னொரு காலத்தில் கலைகளைப் பெரிதும் ஆதரித்து வந்த ஒரு மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். ஒரு சமயம் அவனது அரசவையில் நாடகம் ஒன்று நடத்த ஏற்பாடானது. அந்த நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் காசியின் இளவரசி பாத்திரம். அந்தப் பாத்திரத்திற்கு ஏற்ற பெண் குழந்தை கிடைக்கவில்லை.

ராணி கூறினார்;”பரவாயில்லை! நமது இளவரசனையே அந்தக் காசி இளவரசி பாத்திரத்தில் நடிக்க வைத்து விடுவோம்”

இளவரசனுக்கு வயது ஐந்து. அவனுக்கு இளவரசியின் அலங்கார ஆடைகள் அணிவிக்கப்பட்டன. அவன் காசி இளவரசியாக்கப்பட்டான்.

நாடகம் அருமையாக நடந்தது.காசி இளவரசி பாத்திரத்தில் இளவரசன் அற்புதமாக நடித்து விட்டான். அனைவரும் பாராட்டினர்.

ராணி அழகிய காசி இளவரசியை அப்படியே ஒரு ஓவியமாக வரையுமாறு தன் அரசவை ஓவியருக்குக் கட்டளை இட்டார்.

ஓவியமும் பிரமாதமாக தத்ரூபமாக அப்படியே வரையப்பட்டது.

பதினைந்து வருடங்கள் உருண்டோடின. இளவரசன் வளர்ந்து அழகிய வாலிபன் ஆனான். இளவரசனுக்கே உரித்தான அனைத்துச் செயல்களையும் நன்கு அவன் செய்ய ஆரம்பித்தான்.

ஒரு நாள் அவன் தன் அரண்மனையில் பழைய பொருள்கள் உள்ள அறைக்குச் சென்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போது அழகிய ஓவியம் ஒன்று அவனைக் கவர்ந்தது.

அழகிய காசி இளவரசியின் ஓவியம் தான் அது!

“ஆஹா! என்ன அழகு! மணந்தால் இந்தப் பெண்ணையே தான் நான் மணந்து கொள்வேன். இவளை மணக்காவிட்டால் நான் சந்தோஷமாகவே வாழ முடியாது” என்ற எண்ணத்தில் மூழ்கிய இளவரசன் அது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அவன் கொஞ்சம் வெட்கப்பட்டதால் தாயாரிடமோ தந்தையிடமோ கூட இது பற்றிப் பேசவில்லை.

இளவரசன் சில நாட்களாக ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதை அனைவரும் கவனித்தனர்.

கடைசியில் வயதான மந்திரி அவனை அணுகி, “இளவரசரே!சில நாட்களாக ஏதோ ஒரு  சிந்தனையிலேயே  ஆழ்ந்திருக்கிறீர்கள். என்னிடம் அதைச் சொல்லக் கூடாதா?” என்று மெல்ல வினவினார்.

இளவரசன் மெல்ல வாய் திறந்து,”நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்.” என்றான்.

“நல்லது, அந்தப் பெண் யார்?” என்று கேட்டார் மந்திரி.

“ஓ! அவள் காசி இளவரசி” என்றான் இளவரசன்.

“நல்லது! ஒரு இளவரசி தான் உங்களுக்கு ஏற்றவள். அவளை எப்போது பார்த்தீர்கள்?”

“அவளை நான் பார்க்கவில்லை. ஆனால் அவளது ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன்.”

“சரி, அந்த ஓவியம் எங்கே இருக்கிறது?”

“அது ஒரு அறையில் இருக்கிறது. வாருங்கள், உங்களுக்கு அதை நான் காண்பிக்கிறேன். அந்த ஓவியம் அவள் ஐந்து வயதாக இருக்கும் போது வரையப்பட்ட ஒன்று.”

இருவரும் அந்த அறைக்குச் சென்றனர். இளவரசன் காசி இளவரசியின் ஓவியத்தை மந்திரிக்குக் காண்பித்தான்.

மந்திரிக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது.

அவர் இளவரசனிடம் கூறினார்:”இளவரசே! அது காசி இளவரசியின் படம் இல்லை.”


“அது காசி இளவரசியாக இல்லாது போனால் போகட்டும்; யாராக இருந்தாலும் சரி, அவளை தான் நான் மணப்பேன்.”

“இளவரசே! பல ஆண்டுகளுக்கு முன்பு நமது அரண்மனையில் ஒரு நாடகம் நடந்தது.அந்த இளவரசி பாத்திரத்தில் நடிக்க யாரும் இல்லை. அதற்குத் தகுதி வாய்ந்தவர் தாங்கள் தான் என்று எண்ணி உங்களுக்கு அந்த வேஷத்தை அளித்தோம். அந்தக் காசி இளவரசி உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. நீங்களே தான் அது!”

இப்போது இளவரசனின் மனதில் இருந்த ஆசை என்ன ஆனது? அது உடனடியாக மறைந்து விட்டது. ஆனால் அது ஏன் உடனே மறைந்தது?

அது நிறைவேற முடியாத ஒன்று என்பதாலா?

இல்லை. காசி இளவரசி அந்த இளவரசரைத் தவிர வேறு யாரும் இல்லை!

அவரே தான் காசி இளவரசி! எப்போதுமே அந்த இளவரசனே தான் காசி இளவரசி!!

அந்த இளவரசரைத் தவிர வேறு ஒன்று உண்டு என்ற இரட்டை என்ற எண்ணம் அவரது ஆசையால் உதித்தது. அந்த இரட்டையை அவர் விரும்பினார். அதனால் அவருக்கு ஒரு சங்கல்பம் உருவானது.

அது அவரது மனதில் வளர்ந்தது. ‘எனக்கு இது வேண்டும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

இதுவே இன்னொரு விதமாகவும் இருந்திருக்கக்கூடும். “இது மோசம். எனக்கு இது வேண்டாம்” என்று இருந்திருக்கக் கூடும்.

எனக்கு இது வேண்டும் என்பது ராகத்தினால் – பற்றினால் உருவானது.

எனக்கு இது வேண்டாம் என்பது த்வேஷத்தினால் உருவாவது.

அந்த ராக-த்வேஷம் தான் சம்சாரம்!

ஏன் சங்கல்பம் மறைந்தது? ஏனெனில் இரட்டை என்பது மறைந்தது.

“என்னைத் தவிர காசி இளவரசி என்ற இரட்டை இல்லை” –

இதைத் தான் அந்த இளவரசன் உணர்ந்தான்.

த்வைதம் – இரட்டை – மறைந்தது.

சங்கல்பம் மறையும் போது ராகம்-த்வேஷம், பற்று- வேண்டாமை இரண்டும் போகிறது.

ஆத்மா மட்டுமே நிற்கிறது!

ஆத்மனுக்கு எதை விட வேண்டும்? அல்லது எதைச் சாதிக்க வேண்டும்?

அது எப்போதும் என்னுடனேயே இருக்கிறது. அது எப்போதும் நானாகவே இருக்கிறது.

***

அற்புதமான இந்தக் கதை ‘மனமே இல்லை’ என்ற நிலைக்கான ஒரு சரியான உதாரணக் கதையாகும்.

ஸ்வாமிஜியின் கதையைச் சற்று சிந்தித்தால் உயரிய உபதேசம் ஒன்றைப் பெற்றவர்களாவோம்.

***

நன்றி:Prabuddha Bharata : January 2019 issue – Yearly Subscription rs 150/ only; email:prabuddhabharata@gmail.com

பிரபுத்தபாரதம் ஸ்வாமி விவேகானந்தரால் 1896ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

year 1897 issue

பெர்த் கண்ட்ரோலும் டெத் கண்ட்ரோலும்! ரமணரின் அறிவுரை! (Post No.7279)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 30  NOVEMBER 2019

Time  in London – 7-41 am

Post No. 7279

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

வெளிநாட்டிலிருந்து ஒரு பத்திரிகையாளர் பகவான் ரமண மஹரிஷியைத் தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்தார்.

அவரிடம் அவர், “பகவான்! நாங்கள் பெர்த் கண்ட்ரோலுக்காக (குடும்பக் கட்டுப்பாட்டிற்காக) ஒரு இயக்கம் ஆரம்பிக்கப் போகிறோம். பெர்த் கண்ட்ரோல் (Birth Control) பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? அதை எங்கள் பத்திரிகையில் வெளியிடுவோம்” என்றார்.

ரமணர் மௌனமாக இருந்தார்.

வந்த பத்திரிகையாளர் திருப்பித் திருப்பித் தான் கேட்ட கேள்வியையே கேட்டுக் கொண்டிருந்தார்.

உடனே பகவான், “அன்பரே! நீங்களும் நானும் ஏற்கனவே பிறந்து விட்டோம். அதை இந்த நிலையில் கட்டுப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் நீங்களும் நானும் நிச்சயமாக ஒரு நாள் இறக்கப் போகிறோம். ஆகவே அது பற்றி நீங்கள் இன்னும் அதிகக் கவலைப்பட வேண்டாமா? தயவுசெய்து டெத் கண்ட்ரோல் (Death Control) பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்!”

வந்த பத்திரிகையாளர் நகர்ந்தார்.

என்ன ஒரு அற்புதமான உபதேச உரையை ரமண மஹரிஷி அருளினார் பாருங்கள்!

(இமய மலையில் வசிஷ்ட குகையில் வசித்து வந்த சாந்தானந்தா பூரி கூறிய சம்பவம் இது)

***

மேலை நாட்டு எழுத்தாளரான பால் பிரண்டன் கூறியுள்ள சம்பவம் இது:

“பக்தர்களும் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தோரும் ஹாலில் குழுமி இருந்த போது யாரோ ஒருவர் ஹாலுக்குள் நுழைந்து அந்த டவுனில் எல்லோரும் அறிந்த ஒரு பிரபலமான கிரிமினல் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிவித்தார். உடனே அவரைப் பற்றி அனைவரும் பேச ஆரம்பித்தனர். அவரது இயல்பு, அவர் செய்த குற்றங்கள், அவரது குணாதிசயத்தில் மிக மோசமான அம்சங்கள் என்பது போன்றவற்றைப் பற்றிப் பலரும் கூற ஆரம்பித்தனர்.

இந்தப் பேச்செல்லாம் முடிந்த பிறகு மஹரிஷி தனது முதல் தடவையாகத் தன் வாயைத் திறந்தார். அவர் கூறினார் :” அது சரி, அவர் எப்போதும் தன்னை சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தார். ஏனென்றால் அவர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பது வழக்கம்.”

***

வேளச்சேரி ரங்க ஐயர் என்பவர் பகவான் ரமணரின் பள்ளிப்படிப்புக் காலத்தில் வகுப்புத் தோழராக இருந்தவர். அவர் தனது ஒரு அனுபவத்தை இப்படி விளக்கியுள்ளார்.

“ஒரு முறை நான் ஸ்காந்தஸ்ரமத்தில் பகவானை விட்டு சிறிது நேரம் வெளியில் சென்றேன். அவர் அப்போது உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நான் திருப்பி வந்த போது அவர் வெளியில் ஒரு படுக்கையில் அமர்ந்திருந்தார். அதைப் பற்றி ஒன்றும் நினைக்கவில்லை நான்.

ஆனால் ஆசிரமத்தின் உள்ளே சென்ற போது அவரை எப்படிப் பார்த்தவாறு வெளியில் சென்றேனோ அதே போல அவர் உள்ளேயே இருந்தார். இதைப் பற்றி பகவானிடம் நான் சொன்ன போது அவர் சிரித்தவாறே கூறினார் :” அதை அப்போதே ஏன் சொல்லவில்லை? அந்தத் திருடனை அப்போதே நான் பிடித்திருப்பேனே!”

“அசாதாரணமான நிகழ்வுகளுக்கெல்லாம் பகவானின் பதில் இப்படித்தான் இருக்கும்! இப்படிப்பட்ட நிகழ்வுகளை அவரிடம் சொன்னால் அவர் அதை ஒதுக்கி விடுவார் அல்லது அதை ஜோக்காக எடுத்துக் கொண்டு விடுவார்.  அற்புத நிகழ்வுகளில் தனது பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டு தங்கள் முக்கிய லக்ஷியமான ஆத்மனை அறிவது என்பதை விட்டுவிடக் கூடாதே என்பதால் தான் அவர் இப்படிச் செய்தார்.”

***

பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கையில் இது போன்ற அற்புத நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. அதைப் படிப்பது ஒரு தெய்வீக அனுபவமாக இருக்கும்!

SUBHAM

தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 6 (Post No.7267)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 27 NOVEMBER 2019

Time  in London – 5-49 AM

Post No. 7267

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019; இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019; மூன்றாம் பகுதி கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019; நான்காம் பகுதி கட்டுரை எண் : 7258 வெளியான தேதி : 25-11-19; ஐந்தாம் பகுதி : வெளியான தேதி  ; பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 6

ச.நாகராஜன்

மாணவர்களே!

உங்களது கல்வியை இங்கு தொடர்ந்து கற்றுக் கொள்வதோடு ஸ்வாமியின் உபதேசங்களைக் கேட்டிருப்பதால் இலட்சிய மனிதராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். தெய்வீகத் திருவுருவின் முன்னர் எப்போதும் வாழ்கின்ற புனிதமான வாய்ப்பு உங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதால், அதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு போதும் கடும் சொல்லைப் பேசாதீர்கள். ஒரு போதும் பொய் பேசாதீர்கள். சில சமயம் உண்மையைச் சொல்வதானது ஆபத்தில் கொண்டு போய் விடும். அப்படிப்பட்ட நிலையில் பொய்யும் பேச வேண்டாம்; உண்மையும் பேச வேண்டாம், மௌனமாக இருந்து விடுங்கள்.

பொய்க்கும் மெய்க்கும் அப்பாற்பட்டு அந்த இரண்டையும் நீங்கள் கடக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாலிபப் பருவத்தின் ஆரம்பத்தில் இருப்பதால், இதுவே புனிதமான பாதையில் செல்வதற்கான நல்ல தருணம். சீக்கிரமாகக் கிளம்புங்கள், மெதுவாக ஓட்டுங்கள், பத்திரமாகச் சேருங்கள்.

 எனக்கு எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லை. பக்தர்கள் வெவ்வேறு நிகழ்ச்சிகளை இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்ய விரும்பினார்கள். ஆனால் நான் அவர்களை அனுமதிக்கவில்லை. நீங்கள் ஏராளமான பேர்கள் இங்கு குழுமி விட்டதால் இந்தக் கூட்டம் இங்கு நடைபெறுகிறது. இல்லையெனில் இந்தக் கூட்டத்திலும் கூட எனக்கு ஆர்வம் இல்லை. எனக்கு ஒவ்வொரு நாளும் திருநாள் தான். நான் எப்போதும் ஆனந்தமயம். நான் என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தின் திருவுருவம். எந்த மாதிரியான ஆனந்தம்?  மற்றவர்கள் கொடுக்கின்றது போன்ற ஆனந்தம் அல்ல அது.  மற்றவர்கள் எனக்கு ஆனந்தத்தைத் தருவதற்காக நான் காத்திருப்பதில்லை. எனது ஆனந்தம் உள்ளிருந்து உருவாகிறது.

நித்யானந்தம், பரம சுகதம், கேவலம் ஞான மூர்த்திம், த்வந்வாதீயம், ககன சத்ருஷம், தத்வமஸ்யாதி லக்ஷ்யம், ஏகம், நித்யம், விமலம், அசலம், சர்வாதிசாக்ஷிபூதம், பாவாதீதம், திரிகுணரஹிதம் (கடவுள் என்றும் நிலைத்திருக்கும் ஆனந்தத்தின் திருவுரு. அவன் ஞானத்தின் மொத்த உரு, இரண்டு அற்ற ஏகன், ஒன்றுக்கொன்று எதிர்மறையாக உள்ளவற்றிற்கு அப்பாற்பட்டவன், ஆகாயம் போலப் பரந்தவன், அனைத்தையும் ஊடுருவி எங்கு நிறைந்திருப்பவன், தத்வமஸி என்ற மஹாவாக்யம் கூறியுள்ள லக்ஷியம், நித்யமானவன், விமலன், மாறுதலற்றவன், அறிவின் அனைத்துச் செயல்களுக்கும் சாக்ஷியானவன், அனைத்து மனநிலைகளுக்கும் அப்பாற்பட்டவன், சத்வம், ரஜஸ், தமோ குணம் ஆகிய மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவன்).

 நான் அனைத்து குணங்களுக்கும் அப்பாற்பட்டவன். நம்பினால் நம்புங்கள், நான் ஆனந்தத்தின் திருவுருவமாக அமைந்தவன். நீங்கள் வேறு விதமாக நினைத்தால் தவறு உங்களிடம் இருக்கிறது. நான் எதைச் செய்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே, உங்களின் வளத்திற்காகவே, உங்களின் சந்தோஷத்திற்காகவே. ஆனந்தமயமான, கறைபடாத வாழ்க்கையை வாழுங்கள். அதுவே உங்களிடம் நான் விரும்புவது. ஒரு காலத்திலும் நான் கவலைப்பட்டதில்லை; துன்பப்பட்டதில்லை. என்னிடம் எல்லாமே இருக்கும் போது எதற்காக நான் கவலைப்பட வேண்டும்? எனக்கு எந்த வித ஆசைகளும் இல்லை. நான் சொல்வதெல்லாம், நான் செய்வதெல்லாம் உங்களுக்குத் தான் நன்மை, எனக்கு அல்ல. நான் உங்களுக்காகவே வந்திருக்கிறேன். ஆகவே என்னை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் புனிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தால் நான் எப்போதுமே தயார் தான். தெய்வீகமான வாழ்க்கை வாழுங்கள். சில சமயம் நான் உங்களுடன் பேசுவதில்லை. “நாம் ஏதோ தவறு இழைத்திருக்கிறோம்” அதனால் தான் ஸ்வாமி நம்முடன் பேசவில்லை என நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், மற்றவர்களிடம் குறைகளைப் பார்ப்பது எனது இயற்கையல்ல. எனது காட்சி மிகவும் புனிதமானது. நான் எப்போதுமே உங்களிடம் நல்லதையே பார்க்கிறேன். கெட்டதைப் பார்ப்பதானது உங்களது சொந்தக் கற்பனையே. ஏனெனில் உங்களிடம் கெட்டது இருக்கிறது, ஆகவே மற்றவர்களிடமும் அதையே நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் எனக்கோ கெட்டதும் கூட நல்லதாகத் தான் தெரிகிறது. ஆகவே ஸ்வாமியைப் பற்றி எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். சம்ஸ்யாத்மா வினஸ்யதி! (யார் சந்தேகப்படுகிறானோ அவன் அழிகிறான்) திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.

அன்புத் திருவுருவங்களே!

உங்கள் விருந்தாளிகளை வரவேற்று  மரியாதை செய்யுங்கள். உங்கள் அன்பை அனைவருக்கும் கொடுங்கள். பசித்தோருக்கு உணவு கொடுங்கள். அப்போது மட்டுமே உங்களுக்கு மன அமைதி கிட்டும். உங்கள் எண்ண்ம், சொல், செயல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து லயப்படுத்துங்கள். இதை விடப் பெரிய ஞானம் வேறொன்றும் கிடையாது. ரிதமை பயிற்சி செய்யுங்கள்.  இதுவே தாரகத்திற்கான (முக்திக்கான) வழி. நீங்கள் அவ்வப்பொழுது அலைபாய்ந்து கொண்ட மனதுடன் இருந்தால் நீங்கள் தான் மிகவும் துரதிர்ஷ்டசாலி. அங்குமிங்கும் அலைபாய்வது குரங்கின் மனதிற்கான இயற்கைக் குணம். நீங்கள் மனிதகுலத்தைச் சேர்ந்தவர்கள். மனிதனாகப் பிறந்து நீங்கள் உறுதியான மனத்தைக் கொள்ள வேண்டும். மனிதகுலம் தாரகத்திற்கான அடையாளம். குரங்கு மனம் மாரகத்தைக் குறிப்பிடுவதாகும் (தளை).

அன்புத் திருவுருவங்களே!

இந்தப் பிறந்த நாளில் நீங்கள் மிக முக்கியமான ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வெற்றுப் பேச்சில் வீணாக நேரத்தைக் கழிக்க வேண்டாம். ஒரு முறை தொலைத்து விட்ட நேரத்தைத் திரும்பிப் பெற முடியாது. ஸத்தியத்தைக் கடவுள் எனக் கொள்ளுங்கள்.

ஸத்யம் நாஸ்தி பரோ தர்ம:

(ஸத்யத்தைக் கடைப்பிடிப்பதைத் தவிர வேறு பெரிய தர்மம் ஒன்றும் இல்லை.)

ஆகவே ஸத்தியத்தின் வழியைப் பின்பற்றுங்கள்; தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்.

***

பாபாவின் உரை இத்துடன் முற்றுப் பெறுகிறது.

23-11-2002இல் பிரசாந்தி நிலையத்தில் பாபா ஆற்றிய உரை.

ஆங்கிலத்தில் இதைப் படிக்க விரும்புவோர் Sathya Sai Speaks – Vol 35, உரை எண் 23ஐப் பார்க்கவும்.

தூயவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்! – 5 (Post No.7262)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 26 NOVEMBER 2019

Time  in London – 6-10 am

Post No. 7262

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 இரண்டாம் பகுதி கட்டுரை எண் 7245 வெளியான தேதி 22-11-2019 மூன்றாம் பகுதி கட்டுரை எண் 7250 வெளியான தேதி 23-11-2019 நான்காம் பகுதி:     வெளியான தேதி : 25-11-19 பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 5

ச.நாகராஜன்

அன்புத் திருவுருவங்களே!

உணவு உட்கொள்ளும் முன்னர் புனித மந்திரத்தை ஓதுங்கள். பிறகு எந்த புனிதமற்ற விஷயமும் உங்கள் இதயத்தில் நுழையாது.

அன்னம் ப்ரஹ்மா; ரஸோ விஷ்ணு: போக்தா மஹேஸ்வர:

இந்த மூன்றும் உடல் மனம் செயல் ஆகியவற்றை முறையே தொடர்பு கொண்டதாகும். தூய்மையான எண்ணம்,சொல், செயல் ஆகியவையே உண்மையான ஞானம். நீங்கள் வெறு எந்தவிதமான ஆன்மீகப் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டாம். மக்கள் வெவ்வேறு விதமான சாதனாவை (ஆன்மீகப் பயிற்சி) மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தற்காலிகமான திருப்தியே கிட்டுகிறது. ஆனால் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை கொள்ளும் போது நீங்கள் என்றும் நிலையாக இருக்கும் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.

அன்புத் திருவுருவங்களே!

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களிலும் எது மாறாதிருக்கிறதோ அது தான் ரிதம். அதுவே உண்மையான ஞானம். எது மாறுதலுக்கு உட்படுகிறதோ அது மாரகம். எது மாறாதிருக்கிறதோ அது தாரகம்.

“சத்குருவின் அருளால் தாரகத்தின் கொள்கையைப் புரிந்து கொள்ளுங்கள். தற்காலிகத்திற்கும் நிலைத்திருப்பதற்குமுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடியுங்கள். ஜீவாத்மாவானது ஜாக்ரதம் (விழிப்பு) ஸ்வப்னம் (கனவு) சுஷுப்தி (ஆழ்ந்த உறக்க நிலை) ஆகிய மூன்று நிலைகளிலும் எதை இடைவெளியின்றித் திருப்பித் திருப்பிச் (சோஹம்) சொல்கிறதோ அந்த தாரகத்தின் (சோஹம்) இரகசியத்தை அறியுங்கள்.”

  • தெலுங்குப் பாடல் முடிகிறது

நீங்கள் எந்த மதத்தையும் சமூகத்தையும் சார்ந்தவராக இருக்கலாம், ஆயின் நீங்கள் இந்த தாரக மந்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும். இன்று மக்கள் தங்களை பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களைச் சொல்லிக் கொள்வதற்கிணங்க அவர்களது செயல்கள் இருப்பதில்லை. அவர்களது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியவை பொய், அதர்மம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. அவர்களது அன்பு சுயநலத்தினாலும் தங்களது சுய தேவையினாலும் கறை பட்டுள்ளது.

அவர்கள் பக்தர்கள் எனச் சொல்லிக் கொள்கின்றனர், உலகம் முழுவதும் சுற்றுகின்றனர், எல்லா தீய செயல்களிலும் ஈடுபடுகின்றனர். வெளிப்படையாக அவர்கள் பக்தியுடன் காணப்படுகின்றனர், ஆனால் அகத்திலேயோவெனில் தீயவற்றின் மீது நாட்டம் உடையவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பணத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கின்றனர். நீங்கள் அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களை தூரத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் முகத்தைப் பார்ப்பதும் கூட பாவம்.

சில பக்தர்கள் சொன்னார்கள் : “ஸ்வாமி, நாங்கள் உங்களது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வர விரும்புகிறோம். ஆனால் எங்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை. ஆகவே நாங்கள் உடல்நலமில்லை என்று சொல்லி மருத்துவ விடுப்பை எடுத்துக் கொண்டு வருகிறோம்.”

அவர்களிடம் நான் சொன்னேன் :” அது சரியான வழியல்ல. நீங்கள் வரமுடியாதது என்பது ஒரு பொருட்டே இல்லை, ஆனால் பொய்யைச் சொல்லாதீர்கள்.”

சத்ய வ்ரதத்தை கடைப்பிடியுங்கள். அப்போது மட்டுமே நீங்கள் சர்வேஸ்வரனின் தரிசனத்தைப் பெறுவீர்கள்.

நீங்கள் பிரார்த்தனையால் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். பிரார்த்தனையின் மூலமாக உங்களிடம் ஞானம் உதிக்கும்.  அந்த பிரார்த்தனை : அன்னம் ப்ரஹ்மம்; ரஸோ விஷ்ணு: போக்தா தேவோ மஹேஸ்வர: வேறு எந்த ஆன்மீகப் பயிற்சியும் தேவையில்லை.

ஆன்மீக சாதகர்களுக்கு ஒன்பது விதமான பக்தி சொல்லப்பட்டிருக்கிறது.

அவை : ஸ்ரவணம் (கேட்டல்)

கீர்த்தனம் ( பாடுதல்)

விஷ்ணுஸ்மரணம் ( விஷ்ணுவை தியானித்தல்)

பாத ஸேவனம் ( அவரது பாதத்தில் சேவை புரிதல்)

வந்தனம் (வணங்குதல்)

அர்ச்சனம் (அர்ச்சித்தல்)

தாஸ்யம் (சேவை புரிதல்)

ஸ்நேஹம் (நட்பு பாராட்டல்)

ஆத்ம நிவேதனம் ( ஆத்ம சமர்ப்பணம்)

 நீங்கள் இறைவனுடன் நட்பு கொள்ள வேண்டும். இறைவன் உங்கள் நண்பன் என்றால்  உலகம் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால் இன்று  இறைவனுடனான நட்பை துரதிர்ஷ்டசாலிகள் இழந்து வருகின்றனர். இறைவனுடன் நட்புக் கொள்வது என்பது சுலபமல்ல. ஆனால் இதற்கென நீங்கள் சாத்தியமான அனைத்து முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இறைவனுடன் நட்பைக் கொண்டு விட்டால் அதன் அனைத்து ஆதாயங்களையும் சாதனா (ஆன்மீகப் பயிற்சி) மூலம் நீங்கள் பெற வேண்டும். வெற்றுப் பேச்சில் காலத்தை வீணாக்க வேண்டாம்.

அன்புத் திருவுருவங்களே!

எப்போதும் உண்மையே பேசுங்கள். அது தான் இன்றைக்கு நீங்கள் கற்க வேண்டிய விஷயம். ஸத்தியமே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை. ஸத்தியமே கடவுள். ஆகவே ஸத்திய வழியிலிருந்து ஒரு போதும் விலக வேண்டாம்.

***

அடுத்த பகுதியுடன் பாபாவின் உரை நிறைவுறும்

திருத்தலங்களில் வேடுபறி நிகழ்ச்சி நடக்கக் காரணம் என்ன? (Post No.7254)

picture by Lalgudi Veda

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 24 NOVEMBER 2019

Time  in London – 7-39 am

Post No. 7254

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

ஆண்டுதோறும் பல தலங்களிலும் திருவிழாக் காலத்தில் வேடுபறி என்று ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்குக் காரணம் என்ன?

சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறைப் படித்தால் அதற்கான காரணம் நன்கு விளங்கும்.

பரவையார் மீது காதல் கொண்டார் சுந்தரமூர்த்தி நாயனார். ஆகவே நிறையப் பொருள் சம்பாதிக்க விரும்பினார்.

கொடுங்கோளூருக்குச் சென்று அங்கு சேரமான் பெருமாள் நாயனார் கொடுத்த நிதிக்குவைகளைச் சுமந்து கொண்டு அடியவர்கள்  முன் நடக்க சுந்தரர் திருமுருகன்பூண்டித் தலத்திற்கு வந்தார்.

திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவிநாசி-திருப்பூர் சாலையில் அவிநாசியிலிருந்து 6.5 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது.

இங்குள்ள ஆலயம் முருகநாதேசுவரர் ஆலயமாகும்.

சுந்தரரிடமிருந்து தமிழ்ப்பாடல் பெற விரும்பிய முருகாவுடையார்,  சிவகணங்களை வேடுவர் உருவத்தில் அனுப்பி சுந்தரரிடமிருந்து வழிப்பறி செய்து வருமாறு தூண்ட அவர்கள் அவ்வாறே செய்தனர்.

இதனை அறிந்த நாயனார் முருகன்பூண்டி ஆலயத்தை அடைந்து ஒரு திருப்பதிகம் பாடி இறைவனின் அருளை வேண்டினார்.

சிவபிரான்  பறித்த பொருளைத் திருப்பித் தருமாறு கட்டளையிட கோபுரவாயிலில் கணநாதர்கள் குழுமி பறித்த பொருளைத் திருப்பித் தந்தனர்.

ஒவ்வொரு தலத்திலும் திருவிழாக் காலத்தில் இந்த நிகழ்ச்சி தான் வேடுபறி என்ற பெயரில் இன்றளவும் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை கொங்குமண்டல சதகம் தனது பதினைந்தாம் பாடலில் போற்றிப் புகழ்கிறது.

பாடல் :

கனத்த வடிக்கொண் முலையாள் பரவைதன் காதலினாற்

சொனத்தி லடிக்கொளும் பேராசைச் சுந்தரர் சொற்றமிழ்க்கா

அனத்தி னடையுடை யாள்பாகன் றென்முரு காபுரிசூழ்

வனத்தி லடித்துப் பறித்தது வுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : பரவையாரின் மீது கொண்ட அளவற்ற காதலினால் பொருளாசை கொண்ட சுந்தர மூர்த்தி நாயனாரிடம் பதிகம் கேட்க விரும்பிய திருமுருகன்பூண்டித் திருத்தலம் உறையும் எம்பெருமான், நாயனாரின் திருவடிகூட்டத்தார்கள் சுமந்து வந்த பொன்முடிப்புகளைப் பறித்துக் கொண்டதும் கொங்கு மண்டலமே என்பதாம்.

இந்த நிகழ்ச்சியை திரு அவிநாசிப் புராணம் இப்படிக் கூறுகிறது:

மூடியசெஞ் சடைவுடையீர் முருகவனம் பதியுடையீர்

கூடிவெகு மூர்க்கருடன் கொள்ளைகொண்ட பொருளல்ல

தேடுமலை வளநாடு புரந்தருளுச் சேரலர்கோன்

பாடுபெற வளித்தபொருள் பறிகொண்டீ ரெனப் பகர்ந்தார்

சுந்தரமூர்த்தி நாயனார் இத்திருத்தலத்தில் ஒரு பதிகம் பாடினார். அதில் ஒரு பதிகத்தின் முதல் பாடல் இது:

கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமைச் சொல்லித்

திடுகு மொட்டெனக்குத்திக் கூறைகொண்டு ஆறலைக்குமிடம்

முடுகுநாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மாநகர்வாய்

இடுகு நுண்ணிடை மங்கைதன்னொடும் எத்துக்கு இங்கிருந்திர் எம்பிரானீரே.

பிரசித்தி பெற்ற திருமுருகன்பூண்டித் தலத்தில் தான் துர்வாச மஹரிஷி கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டு வந்தார் என்பதும் ஒரு குறிப்பிடத் தகுந்த விஷயம்.

***

பத்து சந்யாசிகள் பிரிவு (Post No.7251)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 23 NOVEMBER 2019

Time  in London – 8-20 AM

Post No. 7251

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தைப் (நீயே கடவுள்/ தத் த்வம் அஸி) பின்பற்றும் சந்யாசிக்கள் பத்து சிறப்புப் பெயர்களைக் கொண்டிருப்பர். சிருங்கேரி மடத்திலுள்ள சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘பாரதி’ என்றும் காஞ்சி மடத்தின்  சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘சரஸ்வதி’ என்றும்  இருக்கும். இதுபோல மொத்தம் பத்து சிறப்பு அடைமொழிகள் உண்டு. அவையாவன

பாரதி, சரஸ்வதி, புரி, தீர்த்தர், ஆஸ்ரம, வன, ஆரண்ய, கிரி, பர்வத, சாகர என்ற பின்னொட்டுகள் (suffix) மடாதிபதிகளின் பெயருடன் சேர்க்கப்படும். எடுத்துக் காட்டாக காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர இந்திர சரஸ்வதி என்றும், அவருக்கு அடுத்தவர் ஜய இந்திர சரஸ்வதி என்றும் , அடுத்து வந்தவர் விஜய இந்திர சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஏனைய மடங்களின் சிறப்பு பின்னொட்டுகள் (SUFFIX OR EPITHETS):-

துவாரகா பீடாதிபதிகள் – ஆஸ்ரம அல்லது தீர்த்த

கோவர்தன மடாதிபதிகள் – வன அல்லது ஆரண்ய

பத்ரிநாத் ஜோதிர் மடாதிபதிகள் –  கிரி, பர்வத, சாகர

பல பெயர்களிலும் இயற்கை அம்சங்கள் (காடு, மலை, நீர்நிலை, ஊர், காட்டிலுள்ள குடிசை) ஒட்டிக்கொண்டு இருப்பதை நோக்கவும். அல்லது சரஸ்வதி (பாரதி) பெயர் இருக்கும்.

xxx

சீக்கிய மதத்தின் பத்து குருமார்கள்:–

குருநானக், அங்கத, அமர்தாஸ், ராம்தாஸ், குரு அர்ஜுன் தேவ், ஹரிகோவிந்த, ஹரி ராய், ஹரி கிருஷ்ண, குரு தேஜ்பகாதூர், குரு கோவிந்த சிம்மன் (பாரதியாரால் பாடப்பட்டவர்)

xxxx

உபசாரங்கள் பத்து

இறைவனைப் பூஜிக்கையில் 32 வகை உபசாரங்கள் செய்ய வேண்டும்; அதில் பாதி 16 (ஷோடஸ); அதுவும் முடியாவிடில் குறைந்தது 10 உபசாரம் செய்வர்; அவையாவன-

அர்க்யம், பாத்யம், ஆசமனம், ஸ்நானம், வஸ்த்ரம், கந்தம், புஷ்பம், தீபம், தூபம் நைவேத்யம்.

இதுவும் முடியாதவர்கள் தினமும் பூப்போட்டு ஏதேனும் பழத்தைப் படைக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்).

Xxxx

தச இந்திரியம்

ஆக்கிராணம், உபத்தம், சட்சு, சிங்குளம், சுரோத்திரம், தொக்கு, பாணி, பாதம், பாயுரு, வாக்கு.

xxx

காவிய குணங்கள் பத்து–

செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி

Xxx

ரிக் வேதத்தில் பத்து ராஜாக்கள்

தச ராக்ஞ யுத்தம் எனப்படும் பத்து அரசர் போர் ரிக் வேதத்தில் பல கவிஞர்களாலும் பாடப்பட்ட போர்- இது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்ச்சி. அந்த பத்து ராஜாக்கள் யாவர்:–

அனு, த்ருஹ்யு, புரு, துர்வாசு, யது, பக்த, பலானஸ், அலின, விசானின், சிவ (சிம்யூ, வைகானஸ் என்ற பெயர்கள் அவர்களில் சிலருடைய மாற்றுப் பெயர்கள்). இவர்கள் அனைவரும் வசிஷ்டரைக் குருவாகக் கொண்ட சுதாஸைத் தாக்கினர். சுதாஸ் வெற்றி வாகை சூடினார்.

xxx

பிரம்மாவின் பத்து புத்திரர்கள்

மரீசி, அத்ரி, ப்ருகு, ஆங்கிரஸ, நாரத, புலஸ்த்ய, புலஹ, க்ரது, ப்ரசேதஸ், வசிஷ்ட

பிரம்மாவுக்கு பத்து சரீர புத்ரர்களும் பத்து மானஸ புத்ரர்களும் இருப்பதாகப் புராணங்கள் பகரும்.

—subham–

தூயவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்! – 2 பாபா பிறந்த நாள் செய்தி (Post No.7245)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 22 NOVEMBER 2019

Time  in London – 5-18 AM

Post No. 7245

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நவம்பர் 23. பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த தினம். அவரை வழிபட்டுத் துதிப்போம்!

உரையின் முற்பகுதி : கட்டுரை எண் 7241; வெளியான தேதி 21-11-2019 -பார்க்கவும்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிறந்த நாள் செய்தி : தூயவராக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்! – 2

ச.நாகராஜன்

ஸ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தியில், பிறந்த நாளையொட்டி 23-11-2002 அன்று ஆற்றிய அருளுரையின் தொடர்ச்சி …

அன்னம் பிரம்மா; ரஸோ விஷ்ணு: போக்தா தேவோ மஹேஸ்வர: (அன்னம் பிரம்மா; சாரம் விஷ்ணு; அதை எடுத்துக் கொள்பவர் மஹேஸ்வரன்)  என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த மூன்றும் உடல், மனம், செயல் ஆகிய மூன்றையும் முறையே குறிக்கிறது.

மனஸ்யேகம் வாசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மன:

(எவருடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் ஒன்றாக இருக்கிறதோ அவர்களே மஹாத்மாக்கள்)

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருப்பதே ரிதம்.

இவை பிரம்மா, விஷ்ணு, மஹேஸ்வரன் ஆகியோரை பிரதிநிதித்வம் செய்கின்றன.

ஆகவே ஒவ்வொருவரும் இந்த மூன்றில் தூய்மையை அடைய முயற்சிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு சிம்னி கண்ணாடியை எடுத்துக் கொள்வோம்.

அதை ஒரு விளக்கின் மேல் பொருத்தும் போது, சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஒரு மெல்லிய கரும் புகைப் படலம் கண்ணாடியில் படிந்திருபப்தைப் பார்க்கிறோம்.

இதன் பயானாக வெளிச்சம மங்கலாக ஆகிறது.

கண்ணாடியை நன்கு சுத்தம் செய்யும் போது தான், வெளிச்சத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

நீங்கள் செய்ய வேண்டியது இதைத் தான்!

கண்ணாடியில் படிந்திருக்கும் மெல்லிய கரும்புகைப் படலத்தை உங்கள் மனதில் உருவாகும் அகங்காரத்துடன் ஒப்பிடலாம்.

உங்கள் மனதில் உள்ள அகங்காரத்தினால் திவ்ய ஞான ஜோதியை உங்களால் பார்க்க முடியவில்லை.

அகங்காரம் உங்கள் மனதில் எப்படி நுழைகிறது?

உண்மையின் வழியை நீங்கள் விடும் போது அது நுழைகிறது.

உங்களுடைய உண்மையான சொரூபத்தை நீங்கள் உணராமல் இருக்கும் போது நீங்கள் அகங்காரம் கொண்டவராக ஆகிறீர்கள்; உலகியல் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் உருவாக்குகிறீர்கள். அகங்காரத்தை விரட்ட, உலகியல் சிந்தனைகளையும், உணர்ச்சிகளையும் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அகங்காரத்தை அகற்றாமல் ஞானத்தைப் பெறுதல் இயலாது.

ஆத்மாவின் ஒளி பொருந்திய பிரகாசத்தின் காட்சியை அடைய அகங்காரம் என்னும் கரும்புகைப் படலத்தை உங்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும்.  இதுவே உபயபாரதியின் உபதேசம்.

பெண்களுக்கு  ஆன்மீக அறிவைக் கொடுத்தவாறே அவர் கங்கை நதிக்கரையோரம் ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்தார். பல பெண்மணிகள் அவரது சிஷ்யைகள் ஆயினர். ஒவ்வொரு நாள் காலையும் அவர்கள் கங்கை நதிக்குச் சென்று நீராடுவர்.

செல்லும் வழியில் பிரம்ம ஞானி என்று மக்களால் அழைக்கப்படும் ஒரு சந்யாசி வாழ்ந்து வந்தார்.

ஒரு சின்ன மண்குடத்தின் மீது அவருக்கு மிகுந்த ஒட்டுதல் இருந்தது, அதில் தான் அவர் நீரை நிரப்பி வைத்திருப்பார்.

ஒரு நாள் அந்த மண்குடத்தைத் தலையணையாக வைத்து அவர் படுத்திருந்தார்.

தனது சிஷ்யைகளுடன் அந்த வழியே சென்ற உபயபாரதி அந்தக் காட்சியைப் பார்த்து, “ஞானம் அடைந்தவராக இருந்த போதிலும் அவரிடம் ஒரு சிறிய குறை இருக்கிறது. உலகைத் துறந்து விட்ட போதிலும் தலையணையாக உபயோகித்து தன்னுடைய மண்குடத்தின் மீது அவர் ஒட்டுதலுடன் இருக்கிறார்.” என்று குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட சந்யாசி கோபம் கொண்டார். உபயபாரதியும் அவரது சிஷ்யைகளும் கங்கையிலிருந்து திரும்பி வரும் போது தான் அந்த மண்குடத்தின் மீது ஒட்டுதலாக இருக்கவில்லை என்பதைக் காண்பிக்க

 அந்த மண்குடத்தைச் சாலையில் தூக்கி எறிந்தார்.

இதைப் பார்த்த உபயபாரதி சொன்னார்; “ நான் அவரிடம் அபிமானம் என்ற ஒரு குறை தான் இருக்கிறது என்று நினைத்தேன். இப்போது அவரிடம் இன்னொரு குறையும் இருப்பதை உணர்கிறேன். அகங்காரமும் அவரிடம் இருக்கிறது. அபிமானத்துடன் அகங்காரமும் இருக்கும் ஒருவர் எப்படி ஞானியாக முடியும்?”

அவரது கூற்று சந்யாசியின் கண்ணைத் திறந்தது.

உபயபாரதி நாடெங்கும் பயணித்து ஞான மார்க்கத்தை உபதேசித்தார்;  பரப்பினார்.

பெண்கள் இயல்பாகவே விஞ்ஞானம், சுஞ்ஞானம், ப்ரஜ்ஞானம் ஆகியவற்றின் திருவுருவங்கள். அவர்கள் அனைத்து நற்குணங்களின் பெட்டகங்கள். ஆனால் கலியுகத்தின் தாக்கம் காரணமாக, பெண்கள் இழிவாகப் பார்க்கப்படுகின்றனர். இது ஒரு மகத்தான தவறு.  அவர்களுக்குரிய மரியாதையுடன் அவர்கள் நடத்தப்பட வேண்டும். இன்று பெண்கள் ஆண்களுக்கு ஈடாக வேலைகளைச் செய்யப் போட்டி போடுகிறார்கள். என்றாலும் அப்படிச் செய்வதற்கு முன், அவர்கள் தங்கள் இல்லத்தின் தேவைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தெலுங்குப் பாடல்

“எல்லாப் பெண்மணிகளும் வேலை பார்க்கச் சென்று விட்டால், இல்லங்களை யார் பார்த்துக் கொள்வார்கள்?

கணவனும் மனைவியும் இருவரும் அலுவலகம் சென்று விட்டால், வீட்டை யார் பராமரிப்பார்கள்?

பெண்கள் இதர குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சென்று விட்டால், அவர்கள் குழந்தைகளுக்கு யார் கற்றுக் கொடுப்பார்கள்?

ஆண்களைப் போலப் பெண்களும் தங்கள் கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்றால், சமையலறையில் யார் வேலை பார்ப்பார்கள்?

சம்பாதிப்பது சில பணப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும், ஆனால் அது எப்படி வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும்?

நீங்கள் தீவிரமாக இதைச் சிந்தனை செய்து பார்த்தால் அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு சந்தோஷமே இல்லை.”

   தெலுங்குப் பாடலை பாபா பாடினார்.

            பாபாவின் உரை தொடரும்

****