ரிக் வேதத்தில் “க” (Post No.4229)

Written by London Swaminathan

 

Date: 20 September 2017

 

Time uploaded in London- 21-19

 

Post No. 4229

 

Pictures are taken from various sources; thanks.

 

ரிக்வேதத்தில் “க” என்னும் கடவுள் வெளி நாட்டு “அறிஞர்களின்” கண்களில் விரலை விட்டு ஆட்டிவிட்டது. வேத கால மக்கள் நாடோடிகள், கைபர் கணவாய் வழியாக வந்த நாடோடிகள் என்றெல்லாம் பிதற்றிய அறிவிலிகளுக்கு, அரை வேக்காடுகளுக்கு ரிக் வேத  “க” பெரிய புதிர் போட்டது. மாக்ஸ் முல்லர் முதலியோரெல்லாம் சிரித்தனர். இப்போது அதுகளை ப் பார்த்தால் நமக்கு சிரிப்பாக வருகிறது!

 

க என்றால் பிரம்மா; க என்றால் பிரஜாபதி; இது தமிழ் அகராதியிலும் உள்ளது. மேலும் சில விஷயங்கள் மாக்ஸ் முல்லர் வகையறாக்களுக்குத் தெரியாது ‘க’ என்றால் கடவுள். தமிழ் ‘க’ பிராமி என்னும் வடக்கத்திய லிபியிலிருந்து வந்ததை உலகமே அறியும். அது கிட்டத்தட்ட கிறிஸ்தவ சிலுவையைப் போல வெறும் கோடுகளால் மட்டும் ஆனது. ஆதி கால எகிப்தில் இது கடவுளைக் குறிக்கும் சின்னம்! ஆனால் வெறும் சிலுவை மாதிரி கோடுகள் மட்டுமில்லாமல் இரண்டு புறமும் இரு கோடுகள் மேல் நோக்கிச் செல்லும் அதைப் பார்த்தால் ஒரு மனிதன் இரு கைகளையும்  உயர்த்தி இருப்பதைப் போலத் தோன்றும். இந்தியாவில் இருந்து சென்ற க (பிரஜாபதி) மூலம் இந்த எழுத்து வந்திருக்கலாம். அதிலிருந்து சிலுவையும் தோன்றி இருக்கலாம்.

 

இனி ரிக் வேத கவிதை “க” (10-121) பற்றிக் காண்போம்.

 

‘க’ என்றால் சம்ஸ்கிருதத்தில் யார் என்றும் ஒரு பொருள் உண்டு. வேத கால மக்கள் மிக மிக நாகரீக முன்னேற்றம் கண்டவர்கள். ஆகையால் ‘க’ என்ற எழுத்தை வைத்துச் சொற் சிலம்பம் விளையாடினர். வேத கால மக்களை ‘மண்டுகள்’ என்று சித்தரித்த மாக்ஸ் முல்லர் வகையறாக்களால் இந்த சிலேடைக் கவிதையை ஜீரணிக்க முடியவில்லை. மேலும் அவர்களுக்கு எகிப்திய நாகரீகம் பற்றிய விரிவான  அறிவும் கிடையாது. தமிழ் ‘க’ பற்றியும் தெரியாது. ஆகையால் இது என்ன வெறும் உளறலாக இருக்கிறதே என்று குறை கூறத் துவங்கினர்.

 

தெரியாத கடவுள்(Altar for Unknown God) என்று ஏதென்ஸ் நகர மக்கள் ஒரு பலி பீடம் அமைத்திருந்தனர் . அந்த பெயர் தெரியாத கடவுளுடன் ரிக் வேத  க -வையும் ஒப்பிடத்துவங்கினர்.

 

‘க’ என்பது பிரஜாபதியைக் குறிக்கும், உயிரினங்களுக்கு எல்லாம் கடவுள் அவர்; அவைகளை எல்லாம் படைத்தவர் அவர் என்று வேதமே சொல்லியும் அவர்களுக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

க-வை வைத்து  யாருடைய என்ற எழுத்தும் பல உரிச் சொற்களும் உருவாயின. இவை எல்லாம் மொழி வளர்ச்சி பற்றிய விஷயங்கள்.

 

‘க’ என்பது பிரஜாபதி என்பதால் யாகத்திலும் அவருக்கு ஆகுதி அளிக்கப்பட்டது. இது எல்லாம் வெளிநாட்டினரை திகைக்க வைத்தது. வேத கால ரிஷிகளுக்கு முட்டாள் பட்டம் கட்டியே வழக்கம் என்பதால் சிலேடை அர்த்தம் புரியாமல், இது சிறுபிள்ளைத்தனமான ஒரு கண்டுபிடிப்பு என்றெல்லாம் கட்டுரை எழுதினர்.

 

சுருக்கமாக சொல்ல வேண்டுமால் ‘க’  என்பதன் சிலேடை அர்த்தம் புரியாமல் – அதை குறை கூறினர்.

 

எகிப்தில் இறந்த மன்னன், கழுகு வடிவில் வான மண்டலத்துக்குச் செல்லுவதாக எகிப்திய பிரமிடு  இலக்கியம் சொல்லும். ‘க’ என்பது மனிதனின் ஆத்மா என்றும் சொல்லும். இந்தியாவிலும் மனர் பறவை வடிவத்தில் மேலுலகம் செல்லுவதாக சம்ஸ்கிருத ஸ்லோகம் உள்ளது. ஆக ‘க’ என்பது கடவுள், ‘க’ என்பது ஆன்மா; க’’ என்பது படைப்புக் கடவுளான பிரஜாபதி/பிரம்மா. ‘க’ என்பது பறவை வடிவில் காட்டப்படும்.

ரிக்வேதத்தில் (10-121) வரும் கவிதை!

 

1.முதல் முதலில் தங்க முட்டை (ஹிரண்யகர்ப்பம்) எழுந்தது. அவர் பிறந்தவுடன் படைப்புகளுக்கு எல்லாம் கடவுள் ஆனார். அவர் வானத்தையும் பூமியையும் வைத்திருந்தார் யார் இந்தக் கடவுள்? யாருக்கு பிரசாதத்தைப் படைப்போம்?

 

(இதில் யாருக்கு என்ற இடத்தில் பிரஜாபதிக்கு என்று சிலேடை அர்த்தத்தில் படிக்க வேண்டும். ஏனெனில் க என்றால் யார்; க என்றால் பிரஜாபதி; இந்த சிலேடை பொருள் தெரியாமல் வெள்ளைத் தோல்கள் முழித்தன!)

 

2.யார் ஒருவர் உயிர் அளிக்கிறாரோ, யார் ஒருவர் பலம் அளிக்கிறாரோ, யாருடைய கட்டளைக்கு எல்லாக் கடவுளரும் கீழ்ப் படிகின்றனரோ அவர்தான் அழியாதவர் யார் இவர்? யாருக்கு படைப்புகளைப் படைப்போம்?

 

(முன்னர் காட்டியது போல யார்= என்ற இடத்தில் எல்லாம் பிரஜாபதி என்றும் படிக்கலாம்)

3.யார் தனது மகிமையாலுலகின் ஒரே மன்னர் ஆனாரோ யார் இரு கால், நான்கு கால் உயிரினங்களுக்கு தலைவரோ — யார் இவர்? யாரை நாம் வணங்கி காணிக்கைகளைச் செலுத்துவோம்?

 

4.யார் தனது சக்தியால் பனி மூடிய மலைகளையும் கடலையும் ஒன்றாக வைத்திருக்கிறாரோ- இடையே ரசா என்ற நதியுடன்– யார் கைகளில் வானத்தின் இரண்டு பகுதிகள் இருக்கின்றனவோ அவர் யார்? எவரை வணங்கி நம் காணிக்கைகளைச் செலுத்துவது?

 

5.யார் வானத்தையும் பூமியையும் திடமாக வைத்திருக்கிறாரோ யார் மூலம் வானம் நிலைத்து நிற்கிறதோ யார் இடைப்பட்ட பகுதியை வைத்து இருக்கிறாரோ யார் அவர்? யாருக்கு படைப்புகளைத் தருவது?

 

6.யார் மூலம் சூரியன் பிரகாசிக்கிறான்?யார் அவர்? யாருக்கு படைப்புகளைத் தருவது?

7.வெள்ளம்/பிரளயம் வந்தபோது உயிர்க்கருக்களுடனும் தீயுடனும் அதிலிருந்து உருவானவர் கடவுளரின் உயிர் மூச்சு– யார் அவர்? யாருக்கு படைப்புகளைத் தருவது?

8.யார் தக்ஷாவுடன் (படைப்பு சக்தி) வந்த பிரளயத்தை பார்த்தாரோ – யாக யக்ஞங்களைக் கொண்டு வந்தாரோ– கடவுள்களில் எல்லாம் ஒரே கடவுளரோ– யார் அவர்? யாருக்கு காணிக்கைகளைப் படைப்பது?

 

9.பூமியையும் வானத்தையும் படைத்த அவர் நமக்கு எந்தத் தீங்கும் இழைக்கக் கூடாது. அவருடைய சட்ட திட்டங்கள் உண்மையானவை. தண்ணீரைப் படைத்தவர் அவரே– யார் அவர்? யாருக்கு காணிக்கைகளைப் படைப்பது?

 

10.ஓ பிரஜாபதியே! படைப்புக் கடவுளே! உம்மைத் தவிர எல்லா உயிரினங்களையும் காப்பவர் எவர்? உனக்கு நாங்கள் காணிக்கைகளைச் செலுத்துகிறோம். எங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்வாயாக நாங்கள் செல்வத்துக்கு அதிபதியாகட்டும்.

 

மிக மிகத் தெளிவாக பிரஜாபதியை/ பிரம்மாவைத் துதிக்கும் பாடல் என்பதை கடைசி மந்திரம் தெளிவாவக் காட்டுகிறது.

 

ஆனால் யார் (க= பிரம்மா=பிரஜாபதி) என்ற சிலேடை புரியாமல் வெளிநாட்டுக் கிராக்கிகள் முழி முழி என்று முழித்தன!

 

my old article:

  1. Ka | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ka

Posts about Ka written by Tamil and Vedas … Picture shows Egyptian Manu= Narmer. Did Indians build Pyramids?-Part 2 ( Please read first part before reading this ..

 

 

–சுபம்–

 

மாக்ஸ்முல்லர் மண்ணைக் கவ்வினார்! அணுசக்தி விஞ்ஞானிகள் செமை அடி! (Post No.4217)

Written by London Swaminathan

 

Date: 16 September 2017

 

Time uploaded in London- 16-51

 

Post No. 4217

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேதத்தை மொழிபெயர்த்து வெளியிட்ட மாக்ஸ்முல்லருக்கு பாம்பு போல இரட்டை நாக்கு; சில இடங்களில் வேதத்தைப் புகழ்வார்; சில இடங்களில் வேதத்தை இகழ்வார்; அவர் செய்தது கூலி வேலை. முதலில் கிழக்கிந்திய கம்பெனியும் அப்புறம் இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களும் அவருக்கு கூலி கொடுத்தன. அதாவது கூலிக்கு மாரடித்த குப்புசாமி! கூலி போட்டவர்களின் நோக்கம் என்ன? எப்படியாவது இந்துமதத்தை மட்டம் தட்ட வேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் பாச்சா பலிக்வில்லை. வேதத்தில் உள்ள துதிகள் உலகையே வியக்கவைத்தன. பிக் பேங்(Big Bang) பற்றியும் உலக சமாதானம் பற்றியும், பூமித் தாய் பற்றியும், நதிகள் பற்றியும், இயற்கையின் விந்தைகள் பற்றியும், காலைக் கதிரவனுக்கு முன்னர் தோன்றும் உஷா தேவி பற்றியும்’ அளவற்ற வளம் படைத்த அதிதி தேவி பற்றியும், மாயாஜாலம்  புரிந்து கடலில் சென்றவர்களை மீட்ட அஸ்வினி தேவர்களைப் பற்றியும், அக்கினி தேவன், வௌணன், உலக மஹா வீரன் இந்திரன் ஆகியோர் பற்றியும் சரமா என்ற நாய் பற்றியும், கணித வரிசைப்படி யாப்பு இலக்கணம் ( மீட்டர்) பற்றியும், டெஸிமல் ஸிஸ்டம் பற்றியும் வேத கால ரிஷிகள் பாடிய பாடல்கள்- அதுவும் மாக்ஸ்முல்லர் கணக்குப்படி 3200 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல்கள் எல்லோர் மூக்கிலும் விரல்களை வைத்து வியக்க வைத்தன.

 

 

துப்புகெட்ட மாக்ஸ்முல்லர் ஒரு தப்புக் கணக்குப் போட்டார். வேதத்துக்கு காலம் நிர்ணயிக்கிறேன் என்று கடலாழம் தெரியாமல் காலைவிட்டார்; உலகில் எல்லா மொழிகளும் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும். புத்தமத வாசனையே இல்லாத உபநிஷதங்களுக்கு கி.மு 800 என்று காலம் சொல்வேன். அதற்கு முந்தைய ஆரண்யக, பிராமண நூல் களுக்கு கிமு.1000 என்று காலம்  சூட்டுவேன்; அதற்கு முந்தைய சம்ஹிதையிலுள்ள துதிகளுக்கு கி.மு 1200 என்று முத்திரை குத்துவேன் என்றார்.

 

மொழிகள் மாறுமென்பது உண்மையே. புற நானூற்றுத் தமிழ் இன்று இல்லை; தொல்காப்பிய விதிகளை நாம் இன்று பின்பற்றுவதில்லை. ஆனால் மண்டு மாக்ஸ்முல்லர் தெரிந்தும் மறைத்த உண்மை- வேத மொழி மாறாதது; மாற்ற முடியாதது; அதில் இலக்கணப் பிழைகள் இருந்தாலும் ரிஷிகள் சொன்னது சத்தியம் என்று சொல்லி யாரும் அதை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக உலகம் வியக்கும் அதிசயமான கண பாடம், ஜடா பாராயணம் என்றெல்லாம் சொல்லைப் புரட்டிப் புரட்டி பாடம் கற்பித்தனர். உலகில் இந்த அற்புதத்தை வேறு எந்த மொழியிலும் காண முடியாது.

அது மட்டுமல்ல; திருட்டு மாக்ஸ்முல்லர், நுழை நரிக்குப் பிறந்த தந்திரசாலி மாக்ஸ்முல்லர், இன்னொரு உண்மையையும் மறைத்தார். அவர் சொன்ன 200 ஆண்டு மொழிமாற்றக் கணக்கை வேறு எந்த பழைய மொழிக்கும் ஒப்பிட்டுக் காட்டவில்லை. எடுத்துக் காட்டாக தமிழ இலக்கியத்தில  இந்தக்கொள்கையை புகுத்தினால் பழைய நூல்களின் காலம் உல்டா (அந்தர் பல்டி) அடிக்கும். சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம், திருக்குறள் அதிகாரம் ஆகியன ஆறாம் நூற்றாண்டுக்குத் தவ்விக் குதிக்கும்! ஆக மாக்ஸ்முல்லர் போட்டது குத்து மதிப்பான பால்காரிக் கணக்கு!

 

மாக்ஸ்முல்லர் கி.மு 1200 என்று ரிக் வேதத்துக்கு முத்திரை குத்தியவுடன் அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய வேதம் படித்த வெள்ளையர்கள் அவர் மீது பாய்ந்து குதறினர். உடனே அவர் ‘ஜகா’ வாங்கினார். நான் சொன்னது இதற்கும் கீழாக எவரும் ரிக் வேத காலத்தைக் குறைக்க முடியாது என்பதே; உண்மையில் ரிக்வேத காலத்தை எவரும் சொல்ல முடியாது. அது 5000 ஆண்டுகளுக்கும் முன்னதாக இருக்கலாம் என்று பின்வாங்கினார்.

விஞ்ஞானிகள் நிரூபணம்

 

கடந்த 25 ஆண்டுகளில் பாபா அணுசக்தி ஆய்வுக் கேந்திர விஞ்ஞானிகள், நிலத்தடி நீர்க் கமிஷன் விஞ்ஞானிகள், பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுத் துறை விஞ்ஞானிகள் ஆகியோரும், விண்வெளி விண்கல புகைப்படமும் காட்டிய பேருண்மை, மாக்ஸ் முல்லருக்கும் இந்துக்களை மட்டம் தட்டும் மார்கசீய வாதிகளுக்கும் செமை அடி– அடி மேல் அடி — வகையடி- தொகையடி– கொடுத்தது. அதாவது ரிக்வேதம் 50-க்கும் மேலான இடங்களில் விதந்து ஓதும் பிரம்மாண்டமான, கடல் போன்ற சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் வட மாநிலங்க களை ள வளப்படுத்தி பாய்ந்தது என்றும் அது மறைந்த பின்னரே ஹரப்பா மொஹஞ்சதாரோ நாகரீகம் உச்ச கட்டத்தை அடைந்தது என்றும் காட்டினர்.

 

இது மேலும் ஒரு புதிரைப் போட்டது. சரஸ்வதி நதி ஆய்வுக்கு முன்னர், ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களையும் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு முறையில் கால வரிசைப்படுத்தினர். இப்பொழுது அவர்களுக்கும் அடி விழுந்தது. ஏனேனில் சரஸ்வதி நதியைப் புகழும் பகுதிகள் பல மண்டலங்களில் பரவி விரவிக் கிடக்கின்றன. ஆகவே அவை அனைத்தும் கி.மு.2000க்கு முன்னரே — அல்லது மிகமிக முன்னரே பாடப்பட்டிருக்க வேண்டும். நல்ல ஆராய்ச்சியளர்கள் சரஸ்வதி நதிக் குறிப்பு களைக் கொண்டே வேதத்துக்கு காலம் நிர்ணயிக்க முடியும்.

 

போகிறபோக்கைப் பார்த்தால் வியாசர் கி.மு 3102 வாக்கில் (கலியுக துவக்கம்) வேததங்களை நான்காக வகுத்ததாக இந்துக்கள் நம்புவது விஞ்ஞான உண்மையே என்று முடிவு செய்து விடுவார்கள்.

 

 

வானவியல்

வேதத்தில் உள்ள வானவியல் குறிப்புகளைக் கொண்டு ரிக்வேதத்துக்கு கி.மு4000 என்று திலகரும், கி.மு 4500 என்று ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் கால நிர்ணயம் செய்தனர். இதை ப்யூலர், பார்த், வின்டெர்நீட்ஸ், ப்ளூம்பீல்ட் ஆகியோர் ஏற்றதாகவும் அவர்களுடைய கணக்கீட் டில் எந்த தவற்றையும் எவரும் காணவில்லை என்றும் திரு சட்டோபத்யாயா கூறினார். பேராசிரியர் சென் குப்தா பழங்கால இந்திய காலவரிசை என்ற நூலில் ரிக் வேதத்துக்கு கி.மு 4000 என்று காலம் காட்டினார்.

 

ஆக பாபா அணுசக்தி கேந்திர நிலத்தடி நீர் ஆய்வு, ஐசடோப் ஆய்வு, கார்பன் 14 தேதி நிர்ணயம் — எல்லாம் சரியே; அவை அனைத்தும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னரே சரஸ்வதி நதி ஓடியது என்று காட்டுகின்றன.

 

 

இந்தியாவுக்கு 3 சாபக்கேடுகள்/ பரிசுகள்

 

சீன, எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க, மாயன் நாகரீகத்துக்கும் இந்திய நாகரீகத்துக்கும் ஒரு பெரிய வேறு பாடு உண்டு.

 

இந்திய நாகரீகத்தை தடயங்களை மூன்று விஷயங்கள் அழித்தன

 

பருவக்காற்று- தென் மேற்குப் பருவக் காற்றும் வடகிழக்குப் பருவக் காற்றும் ஆண்டுதோறும் மழையைக் கொட்டி, நதிகளை வெள்ளப் பெருக்கெடுக்க வைத்து பல ஊர்களை அழித்தன. நாம் அசோகர் காலத்துக்கு முன்னர் கல்லில் எதையும் வடிக்காததால் தடயங்கள் அழிந்தன. பருவக்காற்றுகளை இயற்கை தந்த பரிசு என்றும் சொல்லலாம். ஜீவநதிகளால் பாசனம் பெருகியது

இரண்டாவது சாபக்கேடு; நில அதிர்ச்சி/ பூகம்பம்

 

நமது காலத்திலேயே தென்னாட்டில் தனுஷ்கோடி கடலுக்குள் போனதைப் பார்த்தோம். நேபாளக் கோவில் கோபுரங்கள் உருண்டோடி மொட்டைக் கோபுரம் ஆனதைக் கண்டோம். 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை உண்டாக்கும் மாபெரும் பூமி அதிர்ச்சி நதிகளைப் பிறட்டி,உருட்டி அட்டஹாசம் செய்தன. ஆகையால் நமது நாகரீக தடயங்கள் அழிந்தன. மொஹஞ்சதாரோவில் கல்லில் முத்திரை களை உருவாக்காவிடில் நாம் முக்கிய தடய ங்களை  இழந்திருப்போம்.

 

மூன்றாவது சாபக்கேடு வெளி நாட்டினரின் படை எடுப்பும் அவர்களின் அழிவு வேலைகளும் ஆகும். நமது கண்ணுக்கு முன்னாலேயே முஸ்லீம் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலுள்ள பாமியன் குகை புத்தர் சிலைகளை — மிக உயரமான புத்தர் சிலைகளை –அழித்ததைக் கண்டோம். கிமு ஆறாம் நூற்றாண்டு டேரியஸ் (Darius) காலம் முதல் 2600 ஆண்டுகளாக இந்தியா தாக்குதலுக்கு உள்ளானது; கஜினி முகமதுகளும் மாலீக்காபூர்களும் உலகிலேயே செல்வச் செழிப்புள்ள நாடு இந்தியா  என்பதை அறிந்து கொள்ளையோ கொள்ளை என்று அடித்துச் சென்றனர். இது வெள்ளையரின் கோஹினூர் வைரக் கொள்ளை வரை நீடித்தது.

 

 

உலக மஹா எஞ்சினீயர் பகீரதன், அகத்தியன்!

 

இவ்வாறு சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயே (கி.மு3102) வற்றி பூமியில் மறையவே கங்கை என்னும் நதி புனிதம் பெற்றது. அதன் தடைபட்ட பாதையை மாற்றி அதை உத்திரப் பிரதேச, வங்காள பூமியில் திசை திருப்ப பல இந்து மன்னர்கள் முயன்றனர். இறுதியில் உலகப் புகழ்பெற்ற — உலகின் முதல் நதி நீர் பொறியியல் வல்லுனன்– பேரரசன் பகீரதன் அந்த கங்கை நதியை மாற்றினான். அதைக் கடல் வரை- வங்காள விரிகுடா சாகர் தீவு வரை பாய வைத்தான். அவனது எஞ்சினீயரிங் வேலலைகளை நாம் இன்றும் புராணக் கதைகளாகப் படிக்கிறோம். இதைப் பார்த்து அகத்தியர் என்னும் எஞ்சினீயர்/ முனிவர் காவிரி நதியையும் திசை திருப்பி கர்நாடகம், தமிழ் நாடு வரை பாயவைத்தார். விந்திய மலை மீது முதல் முதல் நில மார்க்க சாலைகளைப் போட்டார் அகத்தியர். இதை விந்திய கர்வபங்கம் என்ற புராணக்  கதைகளாக நாம் படிக்கிறோம். மூன்றாவதாக தென் கிழக்காசியாவுக்கு கடல் வழி மூலம் இந்து நாகரீகத்தை எடுத்துச் சென்றார். இதனால் அவரது சிலைகள் தென் கிழக்காசியா முழுதும் பரவிக்கிடக்கின்றன.

மார்கஸீயத் திருடர்கள்!

இந்திய கல்வித்துறை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு அடிவருடிகள்– மார்கஸீயத் திருடர்கள் கைகளில் இருந்ததால் பல தொல்பொருத்துறை உண்மகைள் எழுதப்படவில்லை. போர்னியோவில் மனிதரே நுழைய முடியாத காட்டில் நாலாம் நூற்றாண்டு மூலவர்மனின் யூபஸ்தம்பம் இருந்தது. துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கோய் நகரத்தில் வேத மந்திரம் எழுதிய க்யூனிபார்ம் கல்வெட்டு கண்டுபித்தது, தசரதன், பிரதர்தனன் முதலிய பெயர்களில் சிரியா-துருக்கியை இந்து மன்னர்கள் ( மிடன்னி நாகரீகம்) ஆண்டது முதலியவைகளை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தனது உரைகளில் 75 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டும் கூட கல்வித்துறை கயவர்கள் நமது சரித்திரப் புத்தகத்தில் அதைச் சேர்க்கவே இல்லை. வெள்ளைத் தோல் அறிஞர்களும் மிட்டனி நாகரீகம் குறித்தோ இந்திரன், மித்திரன், வருணன் ஆகிய வேத கால தெய்வங்களின் பெயரில் உடன்படிக்கை கைச்சாத்திட்டதையோ பேசாமல் ‘கப் சிப்’ என்று வாய் மூடி இருந்தனர்.

 

கிக்குலி என்பவன் துருக்கி நாட்டில் (துரகம்= குதிரை) வடமொழியைப் பயன்படுத்தி கி.மு 1400ல் குதிரைப் பயிற்சி கொடுத்த நூல் கிடைத்துள்ளது.

 

இது தவிர எகிப்திய மன்னன் மூன்றாவது அமெனோபிஸ்ஸுக்கு தசரதன் மகளை மணம்புரிவித்து, அவன் எழுதிய தசரதன் கடிதங்கள் இன்னும் எகிப்தில் உள்ளன. இவை அனைத்தையும் காங்கிரஸ் ஆட்சிக்கால கயவர்கள்- திருடர்கள் – வரலாற்றுப் புத்தகத்தில் சேர்க்காமல்- மார்கஸீயவாதிகள் எழுதிய அசிங்கங்களையும் வெள்ளைக்காரர்கள் தங்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து எழுதிய விஷயங்களையும் மட்டும் சிலபஸில் சேர்த்தனர்.

 

ராமாயாண  தசரதனையும் இந்த தசரதனையும் குழப்பிக்கொண்டு விடாதீர்கள் மாமன்னர் அசோகனின் பேரன் பெயர் கூட தசரதன்தான்.

 

மேற்கூறிய கட்டுரையின் சாரம்:–

 

பாபா அணுண்சக்தி ஆராய்ச்சியாலரின் அறிவியல் கூற்றுகளும்

திலகர் ஜாகோபியின் வானவியல் கூற்றுகளும்

பொகஸ்கோய் க்யூனிபார்ம் கல்வெட்டு தரும் தொல்பொருத் துறை ஆதாரங்களும்

எகிப்திலுள்ள தசரதன் கடிதங்களும்

ரிக் வேதத்திலுள்ள சரஸ்வதி நதியின் பிரம்மாண்ட வர்ணனைகளும்

 

மாக்ஸ்முல்லரின் வேத காலக் கொள்கைகளைப் பொடிப் பொ டியாக்கி பொய்யாய் பழங்கதையாய்ச் செய்துவிட்டன.

 

வேத காலம் என்பது வியாசரின் காலத்துக்கும் (கி.மு.3102) முந்தையது என்பது நிரூபிக்கப்ப ட்டுவிட்டது.

 

வேத காலத்துக்கு இந்திய அறிஞர்களால் கொடுக்கப்பட்ட தேதி

ஜி.கே பிள்ளை- கி.மு4000 முதல் கி.மு 3000 வரை

ராஜேஸ்வர் குப்தா- கி.மு 4000

உ.வி.ராவ்- கி.மு.5000

 

வெளிநாட்டு அறிஞர்கள்

எஹ்.டி.கிரிஸ்வால்ட்- கிமு 1200 முதல் கி.மு 4000

டி.பர்ரோ- கி.மு 1200

 

இவர்களுக்கு எல்லாம் அ ண்மை க் கால சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சிகள் தெரியாததால் அறியாத பிள்ளைகளை மன்னித்துவிடலாம்.

 

சிலர் குதிரை, இரும்பு பற்றிய குறிப்புகள் இருப்பதால் வேதங்களை கி.மு1500 க்கு முன்னர் வை க் கமுடியாதென்று வாதிடுவர். ஆனால் அந்த குதிரைக்கும் இரும்புக்கும் தேதி நிர்ண யிப்பது வெள்ளைத் தோல், உள் நோக்கப் பேர்வழிகள். இவை இரண்டும் இந்துக்களின் கண்டுபிடிப்பு; உலகம் முழுதும் சென்றது இந்தியாவில் இருந்துதான். நாம் நிர்ண யிக்கும் தேதியே சரி. மேலும் அஸ்வ (குதிரை) அயஸ் (பொன்) என்பது பல பொருள் உடைத்து.

 

இதையெல்லாம்விட மிக முக்கிய சான்று சங்கத் தமிழில் உள்ளது. புற நானூற்றின் முதல் பாடல் முதல் கடடைசி பாடல் வரை வேதக் குறிப்புகள், வேதச் சடங்கு குறிப்புகள் உள. இவை 2200 ஆண்டுகளுக்கு முந்தையவை. நாட்டில் இமயம் முதல் குமரி வரை – போர்னியோவின் மூல வர்மன் ஆட்சி வரை- வியட் நாமின் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் வரை ஒரே கலாசாரம் 2000 ஆண்டுகளுக்கு முன் இருக்க வேண்டும் என்றால்– போக்குவரத்தும் இன்டெர்நெட்டும் மொபைலும் இல்லாத காலத்தில் பரவ வேண்டுமானால் – அதற்கு 1000 அல்லது 1500 ஆண்டுகளாவது ஆகும்.

எல்லாவித தடயங்களையும் சான்றுகளை யும் ஒட்டு மொத்த முகமாக நோக்குமிடத்து பாபா அணு சக் தி ஆய்வுகளும் வியாசரும் சொல்லுவதே சரி.

TAGS: மாக்ஸ்முல்லர், வேத காலம், தேதி

–சுபம்—

சம்ஸ்கிருதத்தில் இரு புதிர்க் கவிதைகள்! (Post No.4216)

Written  by S.NAGARAJAN

 

Date: 16 September 2017

 

Time uploaded in London- 5-56 am

 

Post No. 4216

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சம்ஸ்கிருதத்தில் இரு புதிர்க் கவிதைகள்!

 

ச.நாகராஜன்

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான புதிர்க் கவிதைகள் உள்ளன.

 

இவற்றை விடுவிப்பதில் அனைவருக்கும் ஒரு ஆனந்தம்.

இரு கவிதைகளை மட்டும் இங்குக் காண்போம்.

 

உரசி முரமித: கா காடமாலிங்கிதாஸ்தே

  சரஸிஜமகரந்தாமோதிதா நந்தனே கா I

கிரிசமலகுவர்ணைரனர்வாக்யாதிசங்க்யைர்

  குருமிரபி க்ருதா கா சந்தஸாம் வ்ருதிரஸ்தி II

 

 

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்ற சுபாஷிதத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள கவிதை இது.

இதன் பொருள்:

கிருஷ்ணரின் மார்பில் அவரை ஆரத் தழுவி இருப்பது யார்?

மாலினி! (1)

 

நந்தனா தோட்டத்தில் தாமரைகளின் மது யாருக்கு வழங்கப்பட்டது?

மாலினி! (2)

 

பெரிய மலைகளின் எண்ணிக்கையால் குற்றோசை உடைய அசைகளாலும், கடல்களின் எண்ணிக்கையால் நெடிலோசை நிறைந்த அசைகளாலும் எந்த சந்தம் இருக்கிறது?

மாலினி! (3)

 

 

  1. மலர் மாலை
  2. ஆகாய கங்கை அல்லது ஒரு பூக்காரி
  3. மாலினி என்ற சந்தம்

ஆங்கிலத்தில் இந்தக் கவிதைக்கான மொழிபெயர்ப்பை A.A.R. இப்படி வழங்குகிறார்:

Who remains on the chest of Krishna embracing him tightly? (Malini 1)

Who is rendered fragrant by the honey of lotuses in the Nandana garden?

(Malini 2)

With short syllables of the number of the great mountains and with long ones of the number of seas, which metre is made up? (Malini 3)

  1. Flower – garland
  2. A female florist or heavenly Ganga
  3. Malini metre.

*

உபௌ ரம்பாஸ்தம்பாவுபரி விபரீதௌ கமலயோஸ்

    ததங்கர்வே ரத்னாஷ்மஸ்தலமய துரூஹம் கிமதி தத் I

தத: கும்போ பஸ்சாத் பிஸகிஸலயே கந்தலமயோ

    ததன்விந்தாவிந்தீவரமதுகரா: கிம் புனரிதம் II

 

 

பகதத்தரின் சுக்திமுக்தாவளியில் உள்ள கவிதை இது.

இது அமைந்துள்ள சந்தம் ஷிகாரிணி

இதன் பொருள்:

இரண்டு தாமரை மலர்களின் மேல் (2) இரு வாழைத் தண்டுகள் (1) வெவ்வேறு விதமாக வைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மேலே ரத்தினக் கல்லென்னும் அகலமான பிரதேச்ம் உள்ளது.(3)

 

 

பிறகு அதன் நுண்ணிய தன்மையால் இன்னதென்று ஊகிக்க முடியாத ஒன்று இருக்கிறது. (4)

பின்னர் இரு கலசங்கள் உள்ளன. (5)

அதன் பிறகு அடுத்து இரு வாழைத்தண்டுகள் உள்ளன.(6)

பின்னர் மிருதுவான குருத்து (7)சந்திரனுடன் (8)வருகிறது.

அதன் மேல் இரு நீல அல்லி மலர்கள் உள்ளன. (9)

அத்துடம் தேனீக் கூட்டம் (10) வேறு உள்ளது.

இது என்ன? (11)

 

 

  1. தொடைகள்
  2. பாதங்கள்
  3. ப்ருஷ்ட பாகம்
  4. மெல்லிய இடை
  5. மார்பகம்
  6. கைகள்
  7. கழுத்து
  8. முகம்
  9. இரு கண்கள்
  10. கூந்தல்
  11. அழகிய பெண்

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கீழே காணலாம்: (மொழியாக்கம் A.A.R)

Two banana –stems (1) placed differently  over two lotuses (2) , above these there is the broad region of a gem-slab  (3), and then something (4) which is difficult to guess (due to smallness), then are the two pots (5), and next come two stalks (6), then the tende sprout (7), with the moon (8) over which are two blue lilies (9) and a swarm of bees (10) – What can this be (11)  – Translation by A.A.R.

 

 

  1. Thighs
  2. Feet
  3. Hips
  4. Thin waist
  5. Bosom
  6. Hands
  7. Neck
  8. Face
  9. Eyes
  10. Tresses
  11. A (beautiful woman)

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான புதிர்க் கவிதைகளை ரசிப்பது ஒரு வாழ்நாள் இலக்கிய அனுபவமாகவே இருக்கும்.

இன்னும் சிலவற்றைப் பின்னர் காண்போம்.

***

 

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்! (POST NO.4070)

Written by S NAGARAJAN

 

Date: 11 July 2017

 

Time uploaded in London:- 5-44 am

 

 

Post No.4070

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

ஆயுர்வேதம் கூ உணவு இரகசியம்

 

ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்!

 

ச.நாகராஜன்

உணவு என்பது உடலை போஷிக்கும் ஒன்று மட்டும் அல்ல, அது உள்ளத்தை உருவாக்கவும் உதவும் ஒன்று. ஆன்மீக வளர்ச்சிக்கோ அல்லது வீழ்ச்சிக்கோ அது அடிகோலும் என்கிறது ஆயுர்வேதம்.

ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது.

அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

  • அர்த்த தோஷம்
  • நிமித்த தோஷம்
  • ஸ்தான தோஷம்
  • ஜாதி தோஷம்
  • சம்ஸ்கார தோஷம்

இது பற்றி ஆஸ்ரம்ஜி பாபு தனது உரைகளில் ஒன்றில் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் சாராம்சத்தைப் பார்க்கலாம்.

 

அர்த்த தோஷம்

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார்.

உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா,என்ன தவறு செய்து விட்டோம், இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார்.

பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார்.

தன் சீடனிடம், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது’ என்று கேட்டார்.

வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.

இது பொருளால் வரும் தோஷம் – அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம்.

நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

நிமித்த தோஷம்

அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும்.

அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய்,எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும அவசியம்.

அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை.

உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.

பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன்  ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர், “அம்மா, நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார்.

அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும்.

தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும்.

நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.

 

ஸ்தான தோஷம்

அடுத்தது ஸ்தான தோஷம். எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.

அதுமட்டுமின்றி கழிப்பறை, மருத்துவ மனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன முயன்றான். ஆனால அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள்.

எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர், “விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும்” என்று அருளினார்.

உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்

 

ஜாதி தோஷம்

அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு,உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை.

சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது.

ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது.

தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.

 

சம்ஸ்கார தோஷம்

அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை.

ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம்.

அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன.

தட்டுகள் உரிய முறைப்படி கழுவப் படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது.

மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது.

அதன் விளைவையும் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்.

ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.

அதைக் கடைப்பிடித்து எளிமையான உணவை உண்டு உயர்ந்த உள்ளம் கொண்டு வாழ்ந்தனர் சில தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்.

 

இன்றோ…

இப்படிப்பட்ட ஐந்து உணவு தோஷங்கள் உண்டு என்பது கூட  தெரியாத காலம் ஆகி விட்டது.

என்றாலும் கூட ஆயுர்வேதத்தை மதிப்போர் உணவு பற்றிய இந்த தோஷங்களை அறிந்து அவற்றை நீக்கி உணவை உண்ண ஆரம்பித்தால் அது உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் தருவதுடன் ஆன்ம முன்னேற்றத்தையும் தரும்.

இதுவே ஆயுர்வேதம் உணவு பற்றிக் கூறும் இரகசியமாகும்!

 

***

எல்லோருக்கும் இரண்டு மனைவி, இரண்டு மகன்கள்! (Post No.3877)

Written by London swaminathan

Date: 4 May 2017

Time uploaded in London: 20-08

Post No. 3877

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

முருகனுக்கு இரண்டு மனைவி – -வள்ளி, தெய்வானை

 

விஷ்ணுவுக்கு இரண்டு மனைவி– ஸ்ரீ தேவி, பூதேவி

 

விநாயகருக்கு இரண்டு மனைவி – – சித்தி, புத்தி

 

கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவி – – ருக்மணி, சத்யபாமா

 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்; இதில் நமக்குத் தெரிவது என்னவென்றால் இரண்டு மனைவியர் வரை “அனுமதி உண்டு” (allowed) ! ஆனால் நீங்களும் விநாயகரைப்போல, விஷ்ணுவைப் போல, முருகனைப் போல, கிருஷ்ணனைப் போல அபூர்வ சக்தி படைத்தவராக இருக்க வேண்டும்; மனைவி விஷயத்தில் மட்டும் இவர்களைப் பினபற்றுவேன் மற்ற விஷயங்களில் “நான் நான்தான்” என்று சொல்லக் கூடாது!!!

 

 

இரண்டுக்குப் பின்னர் எப்போதும் வேண்டாம் (ராம ராஜ்யத்தில்)!

இது ஒரு புறமிருக்க, மகன்கள் விஷயத்திலாவது நாம் கடவுளரைப் பின்பற்றலாம்:

 

சிவனுக்கு இரண்டே புதல்வர்கள் – விநாயகர், கந்தன்/முருகன்

வேதத்தில் வரும் அஸ்வினி குமாரர்கள் இரண்டே புதல்வர்கள்

 

ராமாயணத்தில்தான் அதிசய ஒற்றுமை; எல்லா சகோதர்களுக்கும் இரண்டிரண்டு புதல்வர்கள்! அது எப்படி சொல்லிவைத்த மாதிரி இரண்டு மட்டும் பெற்றார்கள்? ஒருவேளை மரபியல் அம்சமோ (Genetic factor) என்னவோ!

 

ராமனுக்கு இரண்டே புதல்வர்கள்- லவன் குசன்

மனைவி பெயர் – சீதை

 

பரதனுக்கு இரண்டே புதல்வர்கள் – தக்ஷன், புஷ்கலன்

மனைவி பெயர் மாண்டவி

 

லெட்சுமணனுக்கு இரண்டே புதல்வர்கள் –  அங்கதன், சந்திரகேது

மனைவி பெயர் ஊர்மிளை

 

சத்ருக்னனுக்கு இரண்டே புதல்வர்கள் – சத்ருகாதி, சுபாகு

மனைவி பெயர் ஸ்ருத கீர்த்தி

 

லவன், குசன் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?

 

स तौ कुशलवोन्मृष्टगर्भक्लेदौ तदाख्यया।
कविः कुशलवावेव चकार किल नामतः॥ १५-३२

sa tau kuśalavonmṛṣṭagarbhakledau tadākhyayā |
kaviḥ kuśalavāveva cakāra kila nāmataḥ|| 15-32

 

உலகப் புகழ் பெற்ற கவிஞர் காளிதாசர், அவரது ரகுவம்ச காவியத்தில் சொல்கிறார்:-

 

“கவி வால்மீகி தர்பைப் புல்லினாலும், பசுவின் வால் மயிரினாலும் துடைக்கப்பட்ட , அந்த சீதையின் குமாரர்களை பெயரிடும் விஷயத்திலும், அவைகளின் பெயராலேயே குசன் ,லவன் என்றே செய்தார்” (15-320

 

தர்ப்பைப் புல்லின் பெயர் குச; பசுவின் வால் மயிரின் பெயர் லவ; அதாவது குழந்தை பிறந்தவுடன் தீய சக்திகள் நெருங்காது இருப்பதற்காக, முனி பத்னிக்களின் கையில் இவ்விரண்டு பொருட்களையும் கொடுத்து குழந்தைகள் மீது தடவச் செய்தார். இது காளிதாசன் சொன்னது.

வால்மீகி ராமாயணத்தில் வேறு கதை!

 

ஆனால் ராமாயண உத்தர காண்டத்தில் தர்ப்பத்தின் முனைப் பகுதியினால் ஒருவனுக்கு குச என்றும் மற்றொருவனுக்கு தர்ப்பத்தின் அடிப்பகுதியால்

லவ என்றும் பெயரிடப் பட்டதாக ஸ்லோகம் உள்ளது.

 

குழந்தைகளுக்குப் பெயரிட்ட வால்மீகி அவ்விரு பெயர்களாலும் அவர்கள் பிரசித்தமடைவர் என்று சொன்னது உண்மையாகிவிட்டது. இரு குழந்தைகளுக்கும் வேதங்கள்,  சாத்திரங்களைக் கற்பித்ததோடு ராமனின் கதையையும் கற்பித்து பாட வைத்தார்.

 

அக்காலத்தில் சங்கீத உபந்யாசம் எவ்வளவு பிரபலமடைந்தது என்பதை லவ-குசனின் பாடல் ராமாயணம் காட்டுகிறது. அதுமட்டுமல்ல அது இன்றுவரையும் நீடித்து வருகிறது!

 

-Subahm–

 

Questions and Answers: Where can I get books on the Vedas? (Post No.3770)

Written by by London swaminathan

 

Date: 29 March 2017

 

Time uploaded in London:- 21-07

 

Post No. 3770

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Every day I get at least one e mail asking for some details about Hinduism, Tamil Names, Word meaning and availability of books; some are personal questions which I cant share; If it is for book review I send the enquiries to my brother S Nagarajan, who writes regular book reviews. If it is regarding some astrological questions or predictions, I send it to my eldest brother S Srinivasan who does it free of cost. Since my brothers are in India they can give them quick reply in person or by phone or by email.

 

Here are a few recent questions and my answers; they may be useful to others:

Dear sir,

 

I read your articles in google, really very useful.

 

I need Atharvana Veda book in Tamil, pls help me.

 

I went to many shops, but not available.

 

Please give me the address for the book

xxxx

 

My quick reply

 

Books on Vedas in Tamil are very few and difficult to get. If you contact

 

Jayalakshmi Indological Book House  

 

Book store in Chennai, India

AddressShop No.6, Appar Swamy Koil Street,, Opp. Sanskrit College, Mylapore, Chennai, Tamil Nadu 600004, India

Phone+91 44 2499 0539

 

She will get them for you or tell you whether they are out of print

 

For any book on Indology, Hinduism, Sanskrit in English and Tamil, she is the best; she will provide you details.

 

1).Tamil Maran’s book on Atharvana Veda is good.

 

2).Anuragam has published one booklet on each Veda in Tamil.

 

3).Kumtham Bhakti gave a booklet each for all the Vedas some years ago.

 

xxx

 

Question on V Sahasranama

 

This Is XYZ from Dibrugarh, Assam currently I am working as

XYZ. I came to know about you through Tamil

Brahmin website. I daily recite Vishnu Sahasranamam. I am very much

eager to Know any particular slokas there to excel in studies,

research, career growth, Success etc.

 

 

My quick reply:–

 

Dear XXXX
Glad to know that you recite Vishnu Sahsranama everyday.

If you are very keen to achieve great grades and success in your studies.

please recite couplets 19 and 27

 

Sloka 19

beginning MAHABUDDHIR MAHAAVEERYA MAHAASAKTHIR……………..MAHADHRIDHRUTH

 

Sloka 27

ASANKHYEYO APRAME-YAATHMAA…………………………………….. SIDDHI SAADHANAHA

 

All the Best.

Good luck in all your endeavours.

xxxx

 

Respected Swami ji,

one thing kept me worried is about the correct pronunciation
of the slokas. I was following M.S Subbalaksmi and Sooryagayatri. I
was going through the English PDF of VS but I encountered several
mistakes in spelling for eg XXXXXXXXXXX
My question is if I make wrong pronunciation any of the slokas due to
this difference in spelling will it affect its efficacy?

 

MY Quick reply
God is Karunamurthy (FULL OF MERCY)

God just smiles at us when we do mistakes like a mother smiles at her childrens’ mistakes and enjoys. (So God wont punish us for wrong pronunciation)
But it is always good to follow correct pronunciation so that is kept intact for the future generations.
I follow MS Subbulakshmi on audio and Ramakrishna Mutt, Mylapore, Chennai book for written version.

 

Just follow that one which you think is correct or follow MS

 

xxxx

 

Some typical questions received:

Can you get me XYZ book from the British Library?

I want to name my child XYZ. Is it a Tamil name?

Can you give me some ghost stories? We want to make a feature film?

Can you give me some verses from Sangam literature portraying Navarasam ( Nie sentiments) for a dance performance?

Are there any sex boosting medicines in our scriptures?

Can you give some names about water for my business?

 

Hundreds of people have asked: Where can I sell my old Indian currency notes? You wrote that one rupee and two rupees currency fetch thousands of rupees. ( I have answered this question umpteen times.)

 

Questions on Astrology:

When will I my sufferings end?

When will I get married?

When will I get a child?

 

xxx

If you are not bored yet, read the following: –

Respected Swami ji,

Are the UFOs time travellers?

Regards, S S

 

xxxx
uncle

I just found this on Wikipedia about shenbagam (flower).

there is lots of differing opinion on it

my priest told he says its most auspicious to Siva however

another devotee told no, don’t offer it….

even in the Wikipedia article it strangely says

he can’t resist a devotee who offers him shenbagam however

it is not to be offered….it is very strange uncle. see below….

a devotee……………………

 

 

If you are a publisher or author and you want your book reviewed in our blogs please contact me at swami_48@yahoo.com

 

–Subham–

கணவன் தெய்வமாம்! பெயரை சொல்லக் கூடாதாம்!! அடுத்த ஜன்மத்திலும் அவரே………….. !!! (Post No.3719)

Written by London swaminathan

 

Date: 13 March 2017

 

Time uploaded in London:- 11-15 am

 

Post No. 3719

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

  1. கணவனே கண்கண்ட தெய்வம்; சாமியைக் கும்பிடவே வேண்டாம்; கணவனைக் கும்பிட்டால் ‘பெய்யெனப் பெய்யும் மழை!

 

2.கணவன் பெயரைச் சொல்லக்கூடாது. அது மரியாதைக் குறைவு!!

 

3.அடுத்த ஜன்மத்திலும் அவரே எனக்கு கணவராக வரவேண்டும்; இதற்காகத் தவம் செய்வேன்………………

 

இப்போதுள்ள இந்துப் பெண்களைக் கருத்து கேட்டால், நிபந்தனையற்ற ஆதரவு தருவதில்லை. என் கணவன் ராமன் போல் இருந்தால், முன்னோர் சொன்னதை ‘’ஆதரிப்பேன்;’’ என் கணவர் கிருஷ்ணர் போல இருந்தால் ‘’மாட்டேன்’’ என்பர்!

 

ஆண்களிடம் கருத்துக் கேட்டால், கல்யாணம் ஆனதும் “மனைவி அமைவதெலாம் இறைவன் கொடுத்த வரம்” என்று பாடிக்கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் நாக்கு குளறுவதால் “மனைவி அமைவதெலாம் இறைவன் கொடுத்த அ அ அ ‘ரவம்’ — என்று பாடுகிறேன் என்பர்

(அரவம்=பாம்பு); தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் கொட்டிக்கொண்டே இருக்கும் என்பது பழமொழி. என் மனைவிக்கு அதிகாரம் கொடுக்காமலேயே கொட்டிக்கொண்டிருக்கிறாள் என்பர்!

 

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் 2000 ஆண்டுகளாக பல “பத்தாம் பசலி”க் கருத்துகள் உள்ளன. உலகில் வேறு எந்த பழைய கலாசாரத்திலும் இப்படி “ஹைதர் அலி” கால கருத்துக்கள் இல்லை. ஆயினும் இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுகளாக இப்படி ஒரே கருத்து நிலவுவது, இந்த நாகரீகம் இயற்கையிலேயே இந்த மண்ணிலேயே உருவாகி வளர்ந்தது; ஆரியம்- திராவிடம் என்பதெல்லாம் நல்ல பிதற்ரறல் என்பதைக் காட்டுகிறது.

 

உங்கள் கணவர் பெயர் என்ன?

 

கணவன் பெயரைச் சொல்லக்கூடாது! என்று இந்துப் பெண்கள் நம்பினர்.

 

உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் இல்லாததால், அதுவும் உலகிலேயே பெரிய நாடாக இருந்த பாரதத்தில் 2000 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இருப்பதால் ஆரிய-திராவிடக் கூத்தாடிகளுக்கு இந்தக் கொள்கை அடி கொடுக்கும்.

 

மதுரையில் நாங்கள் வசித்த காலத்தில் என் தந்தை பெயரை என்  அம்மா எப்போதும் சொன்னதே கிடையாது. ஆனால் இப்போது என் மனைவி என் பெயரை, ஒன்றுக்குப் பத்து முறை சொல்லவும் தயங்க மாட்டாள்; நான் அதை காலத்தின் தேவை என்று கருதுகிறேன்.

 

மதுரை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாலளராக (ஜில்லா கார்யவாஹ்) தொண்டாற்றியபோது ஒரு வீட்டில் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். ஒரு பெண்மணி மட்டுமே இருந்தார். அவரது கணவன் பெயர் தெரிந்தால்தான் நாங்கள் சென்ற விலாசம் சரியா என்று தெரியவரும். ஆனால் அப்பெண் கணவர் பெயரைச் சொல்லாமல் எங்களுக்கு ‘’விடுகதை’’ போட்டாள். அதாவது பெயரை நேரடியாகச் சொல்லாமல், பல துப்புகளைக் கொடுத்தாள். பொதுவாக இந்தமாதிரி நேரத்தில் மகனோ மகளோ இருந்தால் அவர்கள் மூலம் கணவர் பெயரை வெளிப்படுத்துவர்.

 

எனக்கு அந்த வீட்டுக்காரரைன் பெயர் இப்போது நினைவில்லை. நான் லண்டனுக்கு வந்தே 31 வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு எடுத்துக்காட்டுக்காக கீழே உள்ளதைத் தருகிறேன்.

 

இது ராமநாதன் வீடா?

பெண்: இல்லீங்க

உங்கள் வீட்டுக்காரர்  பெயர் என்ன?

மிகவும் தயக்கத்துடன் அப்பெண்: அதுவா?.. அதுவா?…

 

அதாங்க மதுரைக் கோவில்ல இருரக்காரே அந்தக் கடவுள் பெயருங்க!

ஓ சுந்தரேசனா?

அப்பெண்: ‘’இல்லீங்க”

ஓ சுந்தரம்? …………. மீனாட்சி சுந்தரமா?

அது இல்லீங்க! தமிழ்ல சொல்லுவாங்களே/ இந்த சினிமாவில கூட நாகேஷ் உரக்கச் சொல்லுவாரே….

ஓ சொக்கனா!

ஆமாங்க, ஆமாங்க, அதே தான்!

 

இப்படி பலவிடுகதைகள் மூலம் நம் அறிவைச் சோதிப்பர். மண்டனமிஸ்ரரைச் சந்திக்கப் போன ஆதிசங்கரன் என்ற சிறுவனைப் பார்த்து நகைத்த நர்மதை நதிக்கரைப் பிராமணப் பெண்கள், அவருக்கு சம்ஸ்கிருதத்தில் புதிர் மிக்க கவிதை மூலம் வழி சொன்னது போல நமக்குக் கணவன் பெயரைத் தெரிவிப்பர்!

 

வால்மீகியும், காளிதாசனும், இளங்கோவும், வள்ளுவனும், அம்முவனாரும் சொல்லும் கருத்துகளை இன்றைய பெண்கள் ஏற்றுக் கொக்ள்வார்களா?

 

முதலில் புலவர்கள் சொல்லுவதைப் படியுங்கள். பின்னர் என் கேள்விக்கு என்ன பதில் என்று கேட்கிறேன்.

 

வள்ளுவனும் வால்மீகியும்!

 

வள்ளுவனும் வால்மீகியும் இவ்விஷயத்தில் கொஞ்சம் அளவுக்கு அதிகமகவே (TOO MUCH!) பேசிவிட்டனரோ!

 

ராமபிரான் வாய் மூலமும், சீதையின் மூலமும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொல்லிவிடுகிறார். அயோத்தியா காண்டத்தில்:-

 

சீதை சொல்கிறாள்:

ஒருவனுடைய தந்தை, தாய், தன்னுடைய சகோதரன், புதல்வன், மருமகள் ஆகிய ஐவரும் தாம்தாம் செய்த  பாவங்களுக்கு ஏற்ப அவற்றின் பலனை அனுபவிப்பார்கள். ஆனால் மனைவியே தன் கணவனின் பாவ புண்ணியங்களில் பங்கேற்பவள்.

 

கணவன் துன்புறும்போது மனைவி சுகத்தில் புரளும் ஈனப் பிறவி என்றா என்னை நினத்தீர்கள்?   த ங்களுடன் வாழ்வதே உத்தமமான தர்மம் என்பதைப் புரிந்து கொண்டேன்; தங்களுடன் வாழும்போது, எத்தகைய துன்பமும் எனக்குத் தென்றலைப் போல இனிக்கும்; குயிலைப் போல் ஆனந்தததைத் தரும். கணவனுக்குப் பணிவிடை செய்வதே நான் கொண்ட தர்மம். அந்தத் தர்மததைச் செய்ய விடுங்கள். தங்களை மீறிப் பேசும் சொற்கள் தங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். இருப்பினும் நான் கதியற்றவள் தாங்களே தெய்வம் என்று வந்தவள்; தங்களைப் பிரிந்து நான் எப்படி வாழ்வேன்?

 

ராமனும் கோசலையிடம் பேசும்போது, கணவனே தெய்வம் என்று குறிப்பிடுவான்.

தமிழ் வேதமாகிய திருக்குறள் தந்த திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளுகிறார்:–

 

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

 

வேறு எந்த தெய்வத்தையும் தொழாது, தன்னைக் கொண்ட கணவனை மட்டும் தொழுது  — பின் தூங்கி முன் எழும் — துயில் எழும் மனைவி, பெய் என்றால், உடனே அவள் சொல் கேட்டு மழையும் பெய்யும்!

 

(இதற்கு சாவித்ரி, வாசுகி, கண்ணகி கதைகளை ஆதாரமாகக் கொள்வர்.)

 

இதைவிட ஒருபடி மேலே போய், வள்ளுவன் செப்புவான்:

 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர் கொண்டனள் (குறள் 1315)

 

இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் – என்று சொன்னபோது –மறுமையில் மறந்து விடுவேன் என்று தவறாக நினைத்துக் கொண்டு, மறு பிறப்பில் பிரிந்துவிடுவோமோ என்று கண்களில் நீர் பெருகியது!

 

இதற்கெல்லாம் மூல காரணம் வால்மீகிதான்!

சங்கப் புலவர்களின் தங்க மொழிகள் (பொன்மொழிகள்)

 

2000 ஆண்டுகளுக்கு முன் பாடிவைத்த பைந்தமிழ்ப் புலவர்களும் வால்மீகியை அடியொற்றிக் கருத்துகளை உதிர்த்துள்ளனர்.

 

தோளும் அழியும்…………………

சாதல் அஞ்சேன்; அஞ்சுவல் சாவின்

பிறப்புப் பிரிது ஆகுவது ஆயின்,

மறக்குவேன்கொல், என் காதலன் எனவே

நற்றிணை 397, புலவர் அம்மூவனார்

 

பிரிவிடை ஆற்றுக என வற்புறுத்திய தோழிக்கு, ஆற்றுவேன் என்று தலைவி சொல்லியது:

“மாலைப் பொழுதும் வந்துவிட்டது. யான் எப்படி ஆவேனோ இங்கே யான் இறப்பதற்கு பயப்படவில்லை ஆனால் வேறு ஒன்றுக்கு அஞ்சுவேன்; இறந்த பின் , மறு பிறப்பில் பெண்ணாகப் பிறக்காமல், வேறு ஒன்றாகப் பிறந்தால் என்ன செய்வேன் என்ற எண்ணம் என் மனதை வாட்டுகிறது”  — என்பது ஆன்றோர் உரை.

 

 

குறுந்தொகையிலும் அம்மூவனாரே இக்கருத்தைத் திருவாய் மலர்ந்து அருளுவார்:

 

அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கே ழன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே

–குறுந்தொகை 49, அம்மூவனார்

 

தலைமகன் பரத்தை வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் இன்பம் துய்த்துவிட்டுத் திரும்பிவருகிறான்:

ஆன்றோர் உரை:

தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவாற்றாமை நீங்குமன்றே; நீங்கி யவழிப் பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது:

 

“அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய, தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும், நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையுடைய தலைவ!

 

இப் பிறப்பு நீங்கப் பெற்று நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், என்னுடைய கணவன், இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக!  நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி, இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!

 

கருத்து:- நம்முடைய நட்பு பிறவிதோறும் தொடரும் இயல்பினதாகுக.

((மாதவியிடம் போய்விட்டுத் திரும்பிவந்த கோவலனை கண்ணகி ஏற்றுக் கொண்டாள்!))

 

 

இதே கருத்து குறுந்தொகை 199 -பரணர்

குறுந்தொகை-2 இறையனார்

குறிஞ்சிப் பாட்டு வரி 24 -கபிலர்

பெருங்கதை2-11-39; மற்றும் பல இடங்களில் வருகிறது.

 

தமிழர்கள் மறு பிறப்பிலும், மறு பிறப்பில் நட்பு தொடர்வதிலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள்

 

காளிதாசனின் ரகு வம்ச காவியம்

 

காளிதாசன், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளான். ரகு வம்சத்திலிருந்து மட்டும் சில மேற்கோள்களைத் தருவன்:

சீதை சொல்கிறாள்; இப்பொழுது நான் கர்ப்பவதி; தவம் செய்தால் அது பிறக்கப்போகும் குழந்தைகளைப் பாதிக்கும்;  குழந்தை பிறந்தவுடன், நான்கு தீக்களுக்கு நடுவே நின்று கொண்டு சூரியனை உற்று நோக்கி தவம் செய்வேன். எதற் காக என்றால் அடுத்த பிறப்பில் நானும் நீங்களும் கணவன் மனைவி ஆக வேண்டும்; அப்பொழுது இப்பிறப்பில் ஏற்பட்ட பிரிவு ஏற்படக்கூடாது!

 

சாஹம் தபஹ சூய நிவிஷ்ட த்ருஷ்டிர் ஊர்த்வம் ப்ரசூதேச் சரிதும் யதிஷ்யே

பூயோ யதா மே ஜனனாந்தரே அபி த்வமேவ பர்தா ந ச விப்ர யோகஹ

ரகு 14-66

 

பொருள்

எவ்வாறு மறுபடியும் எனக்கு மறுஜன்மத்திலும் தாங்களே கணவராக ஆவீர்களோ பிரிவும் உண்டாகாதோ அவ்வாறு இத்தகைய துரதிருஷ்டம் வாய்ந்த நான், பிரசவத்திற்குப் பிறகு, சூர்யனிடத்தில் வைக்கப்பட்ட பார்வையுடையவளாக தவத்தை (பஞ்சாக்னி தபஸ்) செய்யப் போகிறேன்

 

இன்னொரு இடத்தில் ஆயிரம் மன்னர்களுக்கு இடையே இந்துமதி, அஜனைத் தனக்கு கணவனாக ஏற்றது எப்படி யென்றால் மனதுக்கு பூர்வ ஜன்ம தொடர்பினை அறியும் சக்தி உண்டு என்பார் (7-15)

 

ரதிஸ்மரௌ நூனம் இமௌ அபூதாம் ராக்ஞாம் சஹஸ்ரேஷு ததாஹி பாலா

கதேயமாத்மப்ரதிரூபமேவ மனோ ஹி ஜன்மாந்தர சம்கதிக்ஞம்

 

இவ்விருவரும் மனித வடிவில் தோன்றிய இணைபிரியாத ரதியும் மன்மதனுமே ஆவர்; மனமானது பூர்வ ஜன்மதொடர்பின் படியே செயல்படும் ஆதலால இவளுடைய மனமும் 1000 அரசர்கள் குழுமியிருந்த இடத்தில் அவளுக்கு உரியவனையே தேர்ந்தெடுக்க உதவியது.

 

கண்ணகி எப்படி தெய்வமானாள்?

 

 

தெய்வந்தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்

தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் – தெய்வமாய்

மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி

விண்ணக மாதர்க்கு விருந்து!

–கட்டுரைக் காதை, சிலப்பதிகாரம்

 

இளங்கோ சொல்வது:–

மண்ணக் மாதர்க்கு எல்லாம் அணி போல்பவளான கண்ணகியானவள், தெய்வமாக விண்ணக மாதர்க்கு விருந்தினளாயினாள். தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழும் பெண்ணை தெய்வமும் வணங்கும் என்பது இவ்வுலத்தில் இதனால் உறுதி ஆய்விட்டது.

 

கட்டுரையின் நீளத்தைக் கருதி ஏனைய மேற்கோள்களைத் தவிர்ப்பன்.

பெண்களே! உங்கள் கருத்து என்னவோ?

–சுபம்–

ரிக் வேதத்தில் பழமையான மண்டலம் எது? (Post No.3713)

Compiled by London swaminathan

 

Date: 11 March 2017

 

Time uploaded in London:- 7-40 am

 

Post No. 3713

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மஹாபாரதத்தை எழுதிய வேத வியாசர் வேதங்களை நான்காகப் பிரித்தார். ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம். இதை வியாசர் பிரித்து வகுத்தது கி.மு..3102-க்கு முன் — அதாவது கலியுகம் துவங்குவதற்கு முன்பு—. ரிக் வேதம்தான் உலகில் பழமையான நூல். உலகின் முதல் கவிதைத் தொகுப்பு. இதை ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் ஆகியோர் கி.மு 4500 க்கு முந்தையது என்று வானியல் குறிப்புகளைக் கொண்டு நிரூபித்தனர். இன்று வரை உலகில் எவரும் அது தவறு என்று காட்ட முடியவில்லை.

 

இப்போது பன்மொழி வித்தகரும் கிரேக்க நாட்டு அறிஞருமான நிகலஸ் கஜானாஸ் எழுதிய புத்தகத்தில் இது கி.மு. 3300 க்கு முந்தையது என்று மொழியியல் ரீதியில் நிரூபித்து இருக்கிறார். முதலில் ரிக்வேதத்துக்கு கி.மு.1200 என்று சொன்ன மாக்ஸ்முல்லரும் அந்தர்பல்டி அடித்து ரிக்வேதத்தின் காலத்தை எவருமே கணிக்க முடியாது. அது கி.மு.5000 ஆகக் கூட இருக்கலாம் என்று சொன்னதை அறிஞர் உலகம் நன்கு அறியும்.

 

ரிக் வேத மந்திரங்கள் ‘’இயற்றப்பட்ட’’ (not composed) கவிதைகள் அன்று. அவை ‘’கேட்கப்பட்ட’’ (heard) துதிகள். அதாவது ரிஷி முனிவர்கள் தியானத்தின் போது — நாம் ரேடியோ அலைவரிசைக்கேற்ப ஸ்டேஷன்களின் ஒலிபரப்பைக் கேட்பது போல — தெய்வீக அலைவரிசியில் கேட்ட – கண்டுபிடித்த (found) — மந்திரங்கள். இதனால் ரிஷிகளுக்கு மந்திர த்ருஷ்டா — மந்திரங்களை மனக் கண்ணில் பார்த்தவர்கள்/கண்டுபிடி த்தவர்கள் என்றும், வேதங்களுக்கு ச்ருதி (கேள்வி/கேட்கப்பட்டவை) என்றும் அறிஞர்கள் பெயரிட்டுள்ளனர்.

 

ரிக் வேதம் என்பதே உலக மஹா அதிசயம் — உலகில் இவ்வளவு பிரம்மாண்டமான கவிதைத் தொகுப்பை (anthology) எவரும் 6000 வருடங்களுக்கு மேல் அட்சரம் மாறாமல் வாய்ச் சொல் மூலம் பரப்பியதும் (word of mouth) இல்லை – எழுதப்பட்ட இலக்கியங்களில் இதற்கு இணையான சமய இலக்கியமும் இல்லை- உலகில் வெளியான கவிதைத் தொகுப்புகளில் இதை மிஞ்சிய கவிதைத் தொகுப்பும் இல்லை. ஜில்காமேஷ் (Gilgamesh) போன்ற இலக்கியத்தில் – அல்லது எகிப்து நாட்டுப் பிரமிடுகளின் (Pyramid Texts) சுவர்களில், மரணப் புத்தகத்தில் (Book of Dead) காணப்படும் சாதாரண புராணக் கதைகள் போலன்றி- மிக உயரிய கருத்துக்களைக் கொண்டுள்ளது எல்லோரும் வாழ்க, இன்புற்று வாழ்க என்ற கடைசி மந்திரத்துடன் முடிகிறது ரிக் வேதம்!

உலகில் முதல் முதலில் நானூறுக்கும் மேலான    கவிஞர்களின் (Over 400 poets) பட்டியலைக் கொடுத்ததும் இன்டெக்ஸ் (Index) போட்டதும் (அணுக்ரமணி) ரிக் வேதத்தொகுப்புதான் இதைப் பிற்காலத்தில் தமிழ்ச்  சங்க இலக்கியத்தைத் தொகுத்தவர்கள் அப்படியே பின்பற்றியுள்ளனர் என்பது என் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ரிக்வேதத்தில் பெயர் தெரியாத ரிஷிகளின் (anonymous) கவிதைகளுக்கு அதில் உள்ள ஒரு வரியையே (line or expression) கவிஞரின் பெயராகக் கொடுப்பர். இதை அப்படியே தமிழ்க் கவிதைத் தொகுப்பாளரும் பின்பற்றினர்—(தேய்புரிக்கயிறு, செம்புலப்பெயல் நீரார்) —(இது பற்றி முன்னரே விரிவாக எழுதியுள்ளேன்)

 

 

பத்து மண்டலங்கள்

 

ரிக்வேதம் பழமையான நூல் மட்டுமல்ல. மிகப் பெரிய கவிதைத் தொகுப்பும் கூட. இதில் 1028 துதிகள் (சூக்தம்) உள்ளன. அவற்றில் பத்தாயிரத்துக்கும் மேலான மந்திரங்கள் இருக்கின்றன. இதை பத்து மண்டலங்களாகப் பிரித்தனர். அதில் முதல் மண்டலமும், பத்தாவது மண்டலமும் பல உதிரி மந்திரங்களின் தொகுப்பு. பொதுவாக அறிஞர்கள் இதை பிற்காலப் பகுதியாகவும் இடைப்பட்ட மண்டலங்களை ( 2 முதல் 9 வரை) பழைய பகுதி என்றும் கருதுவர்.

 

(எனது கருத்து: முதல் மண்டலத்திலும் பத்தாவது மண்டலத்திலும் உள்ள அத்தனை பாடல்களும் புதியன அல்ல. அவறில்தான் கல்யாண மந்திரங்களும், இறுதிச் சடங்கு மந்திரங்களும் உள்ளன. எல்லாவற்றையும் பாடி முடித்தபின்னர் கல்யாணம் பற்றியும், மரணம் பற்றியும் பாடிநர் என்பது கேலிக்குரியது. ஆனால் இம்மண்டலங்களில் பல புதிய பாடல்கள் இருப்பது உண்மையே)

 

 

இடைப்பட்ட எட்டு மண்டலங்களில் 2 முதல் 7 வரை குடும்ப மண்டலங்கள் (Family Mandalas). அதாவது ஒவ்வொரு ரிஷியின் பரம்பரையிலும் வந்த ரிஷிகளின் பாடலகளை வியாசர் அழகாகத் தொகுத்து வைத்திருக்கிறார். இதில் எது பழையது? என்பது நீண்ட காலமாக ஆராயப்படும் விஷயம். அண்மைக் காலத்தில் தலகரி (Shrikant G. Talageri) என்ற அறிஞர் எது பழையது என்ற வரிசைக் கிரமத்தை அளித்துள்ளர். அதை நிகலஸ் (Nicholas Kazanas) ஏற்றுக் கொண்டு வேறு சில விஷயங்களையும் முன்வைக்கிறார். அது என்ன?

 

தலகரியின் ஆராய்ச்சியில் கண்ட வரிசை

 

மிகப்பழைய மண்டலங்கள் — 6, 3, 7

 

நடு மண்டலம் – 4, 2 (+ முதல் மண்டலத்தின் சில பாடல்கள்)

 

இதற்கடுத்தது – 5 (+ முதல் மண்டலத்தின் சில பாடல்கள்)

 

கடைசி – 1, 8, 9

 

புதியது – 10

 

துதிகளில் வரும் மன்னர்களின் பெயர்கள், ரிஷிகளின் குடும்பம் ஆகியவற்றைக் கொண்டு தலகரி இவ்வாறு வரிசைப்படுத்தினார்.

இது பற்றி நிகலஸின் கருத்துரை:

 

தலகரி  கூறுவதைக் கொண்டுமட்டும் எதையும் உறுதிபடச் சொல்வதற்கில்லை. ஏனெனில் பழைய கவிஞர்கள் பயன்படுத்திய சொற்களை, வரிகளை, கற்பனைகளை, உவமைகளைப் பிற்காலப் புலவர்களும் Imitate காப்பி அடிக்கலாம்.

 

கிரேக்க மொழியில் உள்ள ஆர்பிக் (orphic hymns)  பாடல்கள் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன. ஆயினும் அவற்றின் பாணி style மிகப் பழைய பாடல்களை ஒத்து இருக்கின்றன. இதை எனக்கு முன்னரே ஹாப்கின்ஸ் (E W Hopkins) அவர்களே 1896 ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டிவிட்டார். புக ழ்பெற்ற பழங்கால புலவர்களின் பெயரகளைப் பிற்காலத்தவர் வைக்கக்கூடும்.

 

(தமிழிலும் இத்தகைய குழப்பம் உண்டு. பல அவ்வையார்கள், பல பரணர்கள், பல கபிலர்கள் உண்டு. சிலர் பல நக்கீரர்கள் உண்டு என்றும் கருதுவர்!)

 

பல ரிஷிகளின் பெயர்கள், அதிலுள்ள கடவுளின் பெயர்களில் உள்ளன

 

10-158 (கடவுள் காற்றுதேவன்; கவிஞர் காற்றாடி/வாதாயன)

10-158 (கடவுள்- சூர்ய தேவன்; கவிஞர் சூர்யக் கண்ணன்/சக்ஷுஸ் சூர்ய)

10-14 (யமன்; கவிஞர் யமன்)

9-107 (சப்தரிஷி; சப்தரிஷி )

8.27.8 (வைவஸ்வத மனு வைவஸ்வத மனு; )

 

(நான் முன்ன்ரே குறிப்பிட்டது போல சங்கத் தமிழ் கவிதைத் தொ குப்பாளர்களும் பெயர் தெரியாத புலவர்களுக்கு அவர் சொன்ன வாசகங்களையே பெயராகச் சூட்டிவிட்டனர். இப்படி 20 க்கும் மேலான விநோதப் புலவர் பெயர்களை நான் முன்னரே பட்டியலிட்டுள்ளேன்)

 

ஐதரேய பிராமணம் என்னும் நூலே ரிக்வேதப் புத்தகத்தில் கீழ்கண்ட பாடலகள் பிற் சேர்க்கை என்று சொல்கிறது:

3-30, 31, 34, 36, 38, 48

 

(பிற்சேர்க்கை என்றால் எவ்வளவு காலத்துக்குப் பின் என்று யாரும் சொல்லவில்லை. நிகலஸின் கருத்துப்படி வேதங்கள் கி.மு.3300; அதாவது சிந்துவெளி நாகரீகத்துக்கு முன் என்று அவரே தெளிவாகச் சொல்கிறார்)

 

ஆனால் தலகரி சொல்லுவது போல இவ்வளவு பாடல்களும் 2000 ஆண்டுக் கால வீச்சில் பாடப்பட்டவை என்பதை நான் ஏற்கமாட்டேன். மொழியியல் ரீதியில் பழைய பாடலுக்கும் புதிய பாடல்களுக்கும் வேறுபாடு இருப்பது உண்மையே. ஆயினும் இவ்வளவு கால இடைவெளி இருக்காது.

(எனது கருத்து: தமிழ் சங்க இலக்கியத்தின் 2000 பாடல்கள் — சுமார் 30,000 வரிகள்— உருவாக சுமார் 400 ஆண்டுகள் ஆயிற்று. நான் மொழியியல்  ரீதியில் மூன்று தமிழ் சங்க காலக் கணக்கீடு தவறு என்று முன்னரே காட்டி இருக்கிறேன். சங்க இலக்கியத்தில் மூன்று தமிழ் சங்கங்களின் சில புலவர் பாடல் இருப்பதால் மூன்று தமிழ் சங்ககங்களும் 300, 400 ஆண்டு இடைவெளிக்குள் தான் இருந்திருக்க வேண்டும் என்று காட்டியுள்ளேன். இதே போல தொல் காப்பியத்தின் காலம், திருக்குறளின் காலம் என்பனவற்றையும் மொழியியல் ரீதியில் அணுகி எழுதியுள்ளேன்)

 

ரிக்வேதம் கி.மு.3300க்கு முன் முடிக்கப்பட்டிருக்கும். நான் சொல்லும் கால வரிசை:-

முற்கால மண்டலங்கள் – 3, 6. 7

நடுக் கால மண்டலங்கள் – 2, 4

கடைசி  மண்டலங்கள் – 5,1,8,9, 10

 

என்று நிகலஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 

தமிழ் மொழி பற்றிக் கதைக்கும், பிதற்றும் பேர்வழிகள் உலக மொழிகளை மற்றவர்கள் எப்படி அறிவியல் ரீதியில் அணுகுகிறார்கள் என்பதைப் பயிலுதல் நலம் பயக்கும். தமிழும் சம்ஸ்கிருதமும் அறியாதோர், பிற மொழிகளின் இலக்கியம் பற்றிப் படிக்காதோர் — முதலில் அறிவை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

(Source:- Vedic and Indo-European Studies by Nicholas Kazanas, Aditya Prakashan, New Delhi, year 2015)

 

–சுபம்–

பெண்கள் அழிவது எதனாலே? பிராமணர் அழிவது எதனாலே? (Post No.3546)

3be97-brahmin2

Written by London swaminathan

 

Date: 15 January 2017

 

Time uploaded in London:- 11-55 am

 

Post No.3546

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

அந்தக் காலத்தில் அனுபவ அறிவு மூலம் பழமொழிகளையும் பாடல்களையும் எழுதி எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்றனர். அவைகளில் சில:-

ஸ்த்ரீ ரூபம் = அழகினால் பெண்களுக்கு ஆபத்து

பிராமண ராஜ சேவா= அரசர்களிடத்தில் பணிபுரிவதால் அந்தணர்களுக்கு ஆபத்து

காவஹ தூரப்ப்ரசாரண = தொலைவில் மேய்வதால் பசுக்களுக்கு ஆபத்து

ஹிரண்ய லோபலிப்சா = பேராசையினால் தங்கத்துக்கு அழிவு

 

 

சில எடுத்துக்காட்டுகள்:

 

உலகப் பேரழகி சித்தூர் ராணி பத்மினியால் அவள் மீது ஆசைகொண்ட அலாவுதீன் கில்ஜி ரஜபுத்ர ராஜ்யத்தை அழித்தான்.

பிராமணர்களுக்கும் நவநந்தர்களுக்கும் மோதல் வலுத்து, சாணக்கியனை நந்த வம்சம் அவமானப்படுத்தியது. இறுதியில் நந்த வம்சத்தை வேருடன் கலைந்தார் சாணக்கியர்.

பசுக்கள் வேறு நிலத்தில் மேய்வதால் கிராமங்களில் கோஷ்டி மோதல் ஏற்படுகிறது. அல்லது புலி சிங்கம் முதலிய மிருகங்களால் கொல்லப்படுகிறது.

தங்கத்தின் (செல்வத்தின்) மீது ஆசை கொண்டு சிறைக் கம்பிகளை எண்ணியோர் உலகம் முழுதும் உண்டு

 

இது போன்ற ஏராளமான எடுத்துக் காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

ஸ்த்ரீ விநஸ்யதி ரூபேண ப்ராஹ்மணோ ராஜசேவயா

காவோ தூரப்ரசாரேண ஹிரண்யம் லோபலிப்சயா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 153/19

xxx

2feaa-beauty2blong2bhair2bbaack

கருட புராணம் (115-7) இதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்லும்:

 

ஸ்த்ரியோ நஸ்யந்தி ரூபேண தபஹ க்ரோதேன நஸ்யதி

காவோ தூரப்ரசாரேண க்ஷுத்ரான்னேன த்விஜோத்தமாஹா

பொருள்:-

ரூபேண ஸ்த்ரி = அழகினால் பெண்களுக்கு ஆபத்து

 

க்ரோதேன தபஹ = கோபத்தினால் தவத்துக்கு அழிவு (விஸ்வாமித்ரரும் துர்வாசரும்  சிறந்த எடுத்துக்காட்டுகள்)

 

க்ஷுத்ரான்னேன திவிஜோத்தமாஹா= ஆரோக்கியமற்ற, சுத்தமில்லாத உணவைச் சாப்பிடுவதால் அந்தணர்களுக்கு ஆபத்து.

காவஹ தூரப்ப்ரசாரண = தொலைவில் மேய்வதால் பசுக்களுக்கு ஆபத்து

xxx

 

பிராமணர்கள் பற்றி மனு தர்ம சாஸ்திரம் சொல்வதும் முக்கியமானது:-

 

அனப்யாஸேன வேதானாமாசரஸ்ய ச வர்ஜனாத்

ஆலஸ்யாதன்னதோஷாச்ச ம்ருத்யுர் விப்ராஞ்சிதாம்சதி

மனு 5-4

 

 

பொருள்:-

வேத அனப்யாசேன = வேதங்களைக் கற்காததாலும்

ஆசாரவர்ஜன = ஆசார விதிகளைப் பின்பற்றாததாலும்

ஆலஸ்ய = சோம்பேறித்தனத்தாலும்

அன்னதோஷ = சாப்பிடக்கூடாத உணவைச் சாப்பிடுவதாலும்

 

பிராமணர்களுக்கு விரைவில் மரணம் சம்பவிக்கிறது.

 

எல்லோரும் விதி முறைகளைப் பின்பற்றி நூறாண்டுக்காலம் வாழ்க! நோய் நொடி இல்லாமல் வாழ்க!!

 

–subham–

 

முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524)

Research Article by London swaminathan

 

Date: 8 January 2017

 

Time uploaded in London:- 6-28 am

 

Post No.3524

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி

நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்

கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்

இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே

—–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்

யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, முத்துச்சிப்பி, பாக்குமரம், வாழைமரம், நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீ ன் தலை, கொடுக்குத் தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூன்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முடலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும்.

 

இந்த இருபது வகைகளில் கடலில் கிடைக்கும் முத்து ஒன்றுதான் அணிவரும் அணியும் முத்து.

 

1.தந்தி 2.வராகம் மருப்பு= யானை, பன்றி இவைகளின் கொம்புகள்

3.இப்பி = முத்துச் சிப்பிகளும்

4.பூகம் = கமுகங்காய் குல்லைகள்

5.தனி கதலி = ஒப்பற்ற வழைக்குலைகள்

6.நந்து = சங்கும்

7.சலஞ்சலம் = விசேஷ /அபூர்வ வலம்புரிர்ச்சங்கு

8.மீன்றலை = மீன் தலை

9.கொக்கு= கொக்கின் தலை

10.நளினம் = தாமரை

11.மின்னார் கந்தரம் = பெண்களின் கழுத்து

12.சாலி = செந்நெற் கதிர்க்குலை

13.கழை = மூங்கில்

14.கன்னல் = கரும்பு

15.ஆவின் பல் = பசுமாட்டின் பல்

16.கட்செவி = பாம்பு

17.கார் = மேகம்

18.இந்து = சந்திரன்

19.கரா =முதலை

20.உடும்பு= உடும்பின் தலை

 

Nose ring with pearls; picture from wikipedia

காளிதாசனும் இதையே சொல்கிறான்:

ஆரிய திராவிட வாதம் பொய் என்பதும், பாரதம் முழுதும் ஒரே கலாசாரம்தான் இருந்தது என்பதும் காளிதாசனின் 1250 உவமைகளையும் சங்கத் தமிழ் இலக்கிய உவமைகளையும் ஒப்பிட்டால் நன்கு விளங்கும். உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் அத்தகைய உவமைகளைக் காணவும் முடியாது; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை போல வேறு எந்த மொழியிலும் காணவும் முடியாது!

 

முத்துச் சரம், அறுந்த முத்து மாலை பற்றி “சூத்ர மணிகணா இவ” என்னும் பகவத் கீதை உவமை சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை சென்ற வாரம் எழுதினேன். அதற்கு முன் முத்து பற்றி பல கட்டுரைகள் எழுதினேன். மிகச் சுருக்கமாக:-

 

சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.

காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)

 

யானைத் தந்தத்திலுள்ள முத்து பற்றி காளிதாசன் குறிப்பிடும் இடங்கள்:_ குமாரசம்பவம் — 1-6; ரகுவம்சம் 9-65;

 

தமிழ் இலக்கியத்தில் யானை முத்து, மூங்கில் முத்து பற்றி வரும் இடங்கள்:-

முருகு-304; மலைபடு-517; கலி 40-4; புறம் 170; ப.பத்து- 32; நற்.202; குறிஞ்சி 36; அகம் 282; 173

 

காளிதாசனுக்குப் பிடித்த உவமைகளில் முத்து மாலையும் ஒன்று.

பறவைகள் குடியேறும் போது (Please read my article on Bird Migration) பறந்து செல்லுவது முத்துமாலை போல உள்ளது என்றும் நதிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கையில் அவை முத்துமாலை போலத் தென்படும் என்றும் (ரகு.13-48; மேகதூதம் 49) கூறுகிறான்.

 

xxx

 

Ambergris from Sperm Whale used in perfumes

கீழ்கண்டபகுதி நான் எழுதிய பழைய கட்டுரையிலிருந்து:-

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

 

முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:

த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி

முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81

பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.

வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும்  கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.

 

xxx

 

கடல் தரும் ஐந்து செல்வங்கள்

 

ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்

நீர்ப்படும் உப்பினோடைந்து

 

இவை ஐந்தும் கடல் தரும் செல்வம் என்று பழைய செய்யுள் கூறும்

 

ஒர்க்கோலை – அம்பர், அம்பர் க்ரிஸ் என்று அழைக்கப்படும் இது ஸ்பெர்ம் வேல் எனப்படும் திமிங்கிலத்திலிருந்து கிடைக்கிறது. மரத்திலிருந்து வெளியேறும் கோந்து போன்ற பிசினும் ஓர்க்கோலை என்று அழைக்கப்படும். மற்ற நான்கு: சங்கு,   பவளம், முத்து, உப்பு என்பன

 

 

அம்பர் அம்பர்க்ரிஸ் என்பது திமிங்கிலத்தின் குடலில் சுரக்கப்படும் ஒரு திரவம் கெட்டியாகி அதன் மலத்துடன் வெளியே தள்ளப்படும். உடலுக்குப் பூசும் வாசனைப் பொருட்களில் (செண்ட், பெர்ஃயூம்) அந்த நறுமணத்தை நீடிக்க வைக்க இது உதவும். மரத்திலிருந்து கிடைக்கும் பிசினைக் கொண்டு அலங்காரப் பொருட்களைச் செதுக்குவர். அதற்குள் ஏதேனும் பூச்சி, புழுக்கள் சிக்கியிருந்தால் அது ஆராய்ச்சிக்கு உதவுவதோடு அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.

Amber from trees with insects trapped inside.

MY OLD ARTICLES: _

 

Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014

http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html

 

1)Lord Krishna’s Diamond in USA? –  posted on 23 April 2012

https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/

2)அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

http://swamiindology.blogspot.co.uk/2012/05/blog-post.html

3)Gem Stones in Kalidasa and Tamil Literature

13th February 2012

http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html

 

ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்? வராஹமிகிரர் பதில்!! Posted on 12 -2 -2015

 

–subham–