ஜனவரி 2016 காலண்டர் (மன்மத- மார்கழி/தை மாதம்) (Post No. 2431)

IMG_0635

Written by London swaminathan

Date: 27 December 2015

 

Post No. 2431

 

Time uploaded in London :– 6-55 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

வித்வான் (அறிஞன்), நற்குணம் பற்றிய 31 பழமொழிகள்

 

விழா நாட்கள் :- 1- ஆங்கிலப் புத்தாண்டு;  14- போகிப் பண்டிகை;  15- தைப் பொங்கல்;  16- கனு, மாட்டுப் பொங்கல், வள்ளுவர் தினம்; 23- ஸ்ரீரங்கம் தேர்; 24-தைப்பூசம்/வடலூரில்ஜோதி தரிசனம் 26- இந்தியக் குடியரசு தினம்; 29-தியாகராஜ ஆராதனை;30 சேஷாத்ரி சுவாமிகள் ஜயந்தி 31- சுவாமி விவேகாநந்தர் ஜயந்தி

முகூர்த்த நாட்கள்:- 20, 29

அமாவாசை:- 9

பௌர்ணமி:- 24 (தைப்பூசம்)

ஏகாதசி:- 6, 20

 IMG_0636 (2)

ஜனவரி 1 வெள்ளிக் கிழமை

வித்யா விநய சம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி

சுனிசைவ ஸ்வபாகே ச பண்டிதா: சமதர்சின: – பகவத் கீதை 5-18

கல்வியும் அடக்கமும் நிறைந்த பிராமணனிடத்திலும், பசுக்களிடத்தும் யானைகளிடத்திலும், நாயிடத்திலும், நாயை உண்ணும் புலையனிடத்திலும் ஆத்ம ஞானிகள் சமதரிசனம் கொள்கிறார்கள்.

ஜனவரி 2 சனிக்கிழமை

பலிப்யோ பலின: சந்தி – வால்மீகி ராமாயணம்7-33-22

பலவானைவிட பலம் மிக்க வீரர்கள் உண்டு.

 

ஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை

சர்வநாசே சமுத்பன்னே அர்த்தம் த்யஜந்தி பண்டித: – பஞ்சதந்திரம்

எல்லாம் போகக்கூடிய நிலையில் பாதியை விட்டுக் கொடுப்பவன் அறிஞன்.

ஜனவரி 4 திங்கட்கிழமை

வித்வானேவ விஜானாதி வித்வத் ஜன பரிஸ்ரமம் – குவலயானந்த:

அறிஞனுக்குதான் மற்றொரு அறிஞனின் கஷ்டங்கள் புரியும்

 

ஜனவரி 5 செவ்வாய்க் கிழமை

விகாரஹேதௌ சதி விக்ரியந்தே யேஷாம் ந சேதாம்சி த ஏவ தீரா: – குமார சம்பவம்

ஒருவனுடைய புத்தியை பேதலிக்கக்கூடிய விஷயங்கள் இருந்தபோதிலும், புத்தி தடுமாறாதவனே வீரன்.

புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம்- அவ்வையார்

 

 

air3

ஜனவரி 6 புதன் கிழமை

பலவதபி சிக்ஷிதானாம் ஆத்மன்யப்ரத்யயம் சேத: – சாகுந்தலம்

நன்கு கற்றவர்களும்கூட தன்னம்பிக்கையை இழக்கிறார்கள்.

ஜனவரி 7 வியாழக்கிழமை

பண்டிதே ச குணா: சர்வே மூர்கே தோஷா ஹி கேவலம்

தஸ்மான மூர்க சஹஸ்ரேஷு ப்ராக்ஞ ஏகோ விசிஷ்யதே – சாணக்கியநீதி தர்பணம்

அறிஞர்களிடத்தில் நற்குணங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; முட்டாள்களிடத்திலோ கெட்ட விஷயங்களே உள்ளன. ஆகையால ஆயிரம் முட்டாள்களைவிட ஒரு அறிஞனே மேல்.

ஜனவரி 8 வெள்ளிக்கிழமை

அனுக்தமப்யூஹதி பண்டிதோ ஜன:- ஹிதோபதேசம்—பஞ்சதந்திரம்

அறிஞன் என்பவன் , எதையும் ஊகித்தறிவான்.

 

ஜனவரி 9 சனிக்கிழமை

ஸ்வதேசே பூஜ்யதே ராஜா, வித்வான் சர்வத்ர பூஜ்யதே – பஞ்சதந்திரம்

கல்விகற்றவனை உலகமே போற்றும்; ராஜாவையோ அந்த நாடு மற்றுமே பூஜிக்கும்

 

ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை

ஜடிதி பராசயவேதினோ ஹி விக்ஞா: – நைஷதீய சரிதம்

விரைவில் பிறருடைய உள்ளக் கிடக்கையை அறிந்தவன் அறிஞன்.

 

ஜனவரி 11 திங்கட்கிழமை

ந கலு தீமதாம் கஸ்சித் விஷயோ நாம – சாகுந்தலம்

அறிவுள்ளவனுக்கு தெரியாத விஷயம் ஏதேனும் உளதோ!

 

ஜனவரி 12 செவ்வாய்க் கிழமை

ந்யாயாத் பத: ப்ரவிசலந்தி பதம் ந தீரா: – பர்த்ருஹரி நீதி சதகம்

புத்திமான்கள், நியாயமான பாதையிலிருந்து விலகுவதில்லை.

 

ஜனவரி 13 புதன் கிழமை

அஜராமரவத் ப்ராக்ஞோ வித்யாமர்தஞ்ச சிந்தயேத் – ஹிதோபதேசம்

வயதான ஒருவன் எப்படி மூப்பு, இறப்பு இல்லாத நிலைக்கு ஆசைப்படுவானோ, அப்படி ஒரு அறிஞன் கல்வியையும், செல்வத்தையும் நாடவேண்டும்.

 

ஜனவரி 14 வியாழக்கிழமை

அகுலீனோஅபி சாஸ்த்ரக்ஞோ தைவதைரபி பூஜ்யதே – ஹிதோபதேசம்

நற்குலத்தைச் சேராதவனாயினும், சாஸ்திர அறிவுடையவன், தேவர்களாலும் பூஜிக்கப்படுகிறான்.

100 tada sarkarai pongal

 

ஜனவரி 15 வெள்ளிக்கிழமை

குணா: ப்ரியத்வே அதிக்ருதா ந சம்ஸ்தவ:- கிராதர்ஜுனீயம்

ஒருவரை நாம் விரும்புவதற்குக் காரணம்- அவரது நற்குணமே; உண்மையிது, வெறும் புகழ்ச்சியன்று.

 

ஜனவரி 16 சனிக்கிழமை

குணீ ச குணராகீ ச விரல: சரலோ ஜன: – சு.ர.பா.

நற்குணமும் நற்குணத்தை நாடுபவரும் அபூர்வமே.

 

ஜனவரி 17 ஞாயிற்றுக் கிழமை

 

குணீ குணம் வேத்தி ந வேத்தி நிர் குண: – மனு

நற்குணமுடையோர், நல்லதையே காண்பர்; அவர்களுக்கு குறைகளே கண்களில் தென்படாது (தர்மன் துரியோதனன் கதை)

 

ஜனவரி 18 திங்கட்கிழமை

குணா: சர்வத்ர பூஜ்யந்தே ந மஹத்யோபி சம்பத: – சாணக்யநீதி

நற்குணமுள்ளவரிடத்தில் அதைப் போற்ற வேண்டும்; இதற்கு ஆண், பெண் என்ற வேறுபாடோ, வயதோ ஒரு தடையல்ல.

 

ஜனவரி 19 செவ்வாய்க் கிழமை

குணா குணக்ஞேசு குணா பவந்திதே நிர்குணம் ப்ராப்ய பவந்தி தோஷா: – ஹிதோபதேசம்

நற்குணமானது, நல்லோரிடத்தில் குணமாகத் தெரியும்; மற்றவர்களிடத்தில் அது ஒரு குறையாகத் தென்படும்.

 

ஜனவரி 20 புதன் கிழமை

கமீசதே ரமயிதும் ந குண: – கிராதர்ஜுனீயம்

நற்குணமானது யாருக்குதான் மகிழ்ச்சி தராது?

 

ஜனவரி 21 வியாழக்கிழமை

ஏகோ ஹி தோஷோ குணசந்நிபாதே நிமஜ்ஜதீந்தோ: கிரணேஷ்விவாங்க: – குமார சம்பவம்

சந்திரனிடத்தில் ஒரு களங்கமிருந்தாலும் அதன் ஒளி (பெருமை) குன்றவில்லை; பல நற்குணங்கள், ஒரு குறையை மறைத்துவிடும்.

 

ஜனவரி 22 வெள்ளிக்கிழமை

இந்த்ரோ அபி லகுதாம் யதி ஸ்வயம் ப்ரக்யாபிதைர் குணை: — சாணக்யநீதி

கெட்ட செயல் செய்கையில் இந்திரனும் கூட சிறுமை அடைகிறான்

 

ஜனவரி 23 சனிக்கிழமை

ஏகோ குண: கில நிஹந்தி சமஸ்த தோஷான் – சாணக்யநீதி

ஒரு நல்ல குணமானது, எல்லா தோஷங்களையும் (குறைகளையும்) அழித்துவிடும்.

Thiruvarupa_cover

ஜனவரி 24 ஞாயிற்றுக் கிழமை

அகுணஸ்ய ஹதம் ரூபம் – சு.ர.பா.

குணமில்லாத இடத்தில் அழகு இருந்து என்ன பயன்?

 

ஜனவரி 25 திங்கட்கிழமை

சஹநாவவது, சஹநௌ புனக்து சஹவீர்யம் கரவாவஹை: – யஜூர் வேதம்

நம்மிருவரையும் கடவுள் காப்பாற்றுவாராக;

நம்மிருவருக்கும் அவர் உணவு படைப்பாராக:

நாமிருவரும் பெரும் சக்தியுடன் செயல்படுவோம்;

 

ஜனவரி 26 செவ்வாய்க் கிழமை

சர்வே பவந்து சுகின: சர்வே சந்து நிராமயா:

சர்வே பத்ராணி பஸ்யந்து மா கஸ்சித் துக்கபாக் பவேத்

எல்லோரும் சுகமாக இருக்கட்டும்

எல்லோரும் நோயற்றவர்களாக வாழட்டும்

எல்லோரும் நல்லனவற்றையே காணட்டும்

ஒருவரும் துயர் அடையக்கூடாது.

air2

ஜனவரி 27 புதன் கிழமை

யத்ர விஸ்வம் பவத்யேகநீடம் – யஜுர்வேதம்

பிரம்மத்தில் இந்த உலகம் முழுதும் ஒரு பறவைக் கூடு போல இருக்கிறது. (கடவுளின் முன்னால் உலகமே ஒரு குடும்பம்.)

 

ஜனவரி 28 வியாழக்கிழமை

க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம் – ரிக் வேதம்

உலகம் முழுவதையும் பண்பாடு உடையோராக்குக.

IMG_4432

ஜனவரி 29 வெள்ளிக்கிழமை

ஆத்மவத் சர்வ பூதேஷு ய: பஸ்யதி ச பண்டித: – ஹிதோபதேசம்

தன்னைப் போலவே எல்லா உயிர்களையும் பார்ப்ப்வனே பண்டிதன்/ அறிஞன் ஆவான்.

மன்னுயிரைத் தன்னுயிர்போல் நினை

சேசாத்ரி

ஜனவரி 30 சனிக்கிழமை

க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம் – ரிக் வேதம்

உலகம் முழுவதையும் பண்பாடு உடையோராக்குக.

 

ஜனவரி 31 ஞாயிற்றுக் கிழமை

கோவிதேச: சவித்யானாம் – சாணக்கிய நீதி —பஞ்சதந்திரம்

கல்வி கற்றவனுக்கு வெளிநாடு என்று எதுவுமில்லை (யாதும் ஊரே, யாவரும் கேளிர்).

கம்பன் சோழ மன்னன் மோதல்:

(கற்றவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு

உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?)

 

saint7

–சுபம்-

 

ஒரு நீண்ட கதை! அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No. 2425)

SEA WAVES

Written by london swaminathan

Date: 25 December 2015

Post No. 2425

Time uploaded in London:- 9-00 AM
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

மனைவி, மகன், நில, புலன்கள் முதலியன எல்லாம் ஒருவனை எப்படிப் பந்த பாசத்தில் சிக்க வைக்கும் என்பதற்கு ஒரு சுவையான கதை.

 

ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதன் இனிப்புப் பலகாரங்களைச் செய்து விற்கும் வியாபாரம் நடத்தி வந்தார். அவர் ஒரு தர்மவான். போகும் வரும் சந்யாசிகளுக்கு உணவு கொடுத்து மரியாதை செய்வார். ஒரு நாள் ஒரு சந்யாசி அந்தப் பக்கம் வரவே, அவரை வரவேற்று, வாழையிலையில் அன்னத்துடன் தான் செய்த இனிப்புப் பலகாரங்களையும், ஒரு குவளையில்  பாலையும் பரிமாறினார். அந்த சந்யாசி அவரை வயிறார வாழ்த்தி, “அன்பனே, உனது பக்திக்கு மெச்சினோம். உம்மை சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்க அருமருந்தாகிய ஒரு உபதேசத்தை உமக்கு அருள திருச்சித்தம் கொண்டுள்ளோம்” என்றார்.

 

சுவாமி! மிக்க மகிழ்ச்சிதான். ஆனால் அதற்கு இது தருணமல்ல. மனைவி மக்களைக் காப்பாற்றும் கடமை உளதே என்றார்.

சாமியாரும் (சந்யாசி) அதற்கென்ன பின்னொரு சமயம் வருவோமென்று கூறிச் சென்றார். சில ஆண்டுகள் சென்றன. மீண்டும் அவ்வழியே அந்த சந்யாசி வந்தவுடன் அறுசுவை அன்னம் படைத்தான் அந்த இனிப்பு வியாபாரி. “அன்பனே, காலம் கனிந்ததா? உபதேசத்துக்குத் தயாரா?” என்று சாமியார் வினவ, “சில ஆண்டுகளுக்கு முன் என் மனைவி இறந்துவிட்டாள். இப்பொழுது இரு மகன்களுக்கும் கல்யாணம் முடிக்கவேண்டிய கடமை உளது” என்றார். சாமியார் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

 

இன்னும் சில ஆண்டுகள் சென்றன. சாமியார் அதே வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல உபசரிப்பு. இப்பொழுது இரண்டு மகன்களுக்கும் கல்யாணம் நடந்து தம்பதி சகிதம் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். சாமியார், கடைக் கண்களால் வியாபாரியைப் பார்த்தார். அவருக்கு சட்டென விளங்கியது.

jersey cow

“இன்னும் உபதேசத்துக்கு நேரம் வரவில்லை. ஏனெனில் மகன் கல்யாணத்துக்கு வாங்கிய கடன்களை அடைக்க வேண்டி இருக்கிறது” என்றார். சாமியாரும் சிரித்துக் கொண்டே வந்த வழியே சென்றார்.

ஆண்டுகள் பல உருண்டோடின. மீண்டும் வந்தார் சாமியார். வழக்கம் போல அறு சுவை உணவு. ஆனால் வியாபாரியைக் காணவில்லை. மகன்களிருவரும் “தந்தை இறந்துபோய் சில ஆண்டுகள் ஆனதாக”ச் சொன்னார்கள். உடனே சந்யாசி தனது ஞான திருஷ்டியால், அவரது தந்தை அதே வீட்டில் மாட்டுக் கொட்டிலில் மாடாய்ப் பிறந்திருப்பதை உணர்ந்தார்.

 

மகன்களிடம் சாக்குப் போக்குச் சொல்லி நைஸாக மாட்டுக் கொட்டிலுக்குச் சென்றார். இந்த மாட்டை எங்கே வாங்கினீர்கள்? என்றார். இது வாங்கிய மாடல்ல. முன்னால், இந்த வீட்டிலிருந்த, பசு ஈன்ற கன்றுதான் இது என்றனர். மகன்களிருவரும் வீட்டுக்குள் சென்ற சமயம், அந்த மாட்டிடம் அது யார் என்பதை உணர்த்தி இப்போது ஞான உபதேசத்துக்குத் தயாரா? என்று கேட்டார். அதற்கு அந்த பசு சொன்னது:

“ஐயோ, இப்போது வேண்டாம். என் மகன்களிருவரும் வரும்படியின்றி கஷ்டப்படுகிறார்கள். நான் கொடுக்கும் பாலை விற்றுப் பணம் சம்பாதிப்பதால் அவர்கள் கஷ்டம் நீங்கியபின்னர் தான் தயார்” என்றது. அந்த சாது சந்யாசியும் சிரித்துக் கொண்டே விடைபெற்றுச் சென்றார்.

 

சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த வீட்டுக்கு வந்தபோது, மகன்கள், ஒரு நாயை வளர்த்து வருவதைக் கண்டார். அது சந்யாசியைக் கண்டவுடன் அவர் மீது தாவிக்குதித்து ஓடி வந்தது. மகன்கள் இருவரும் அதைக் கட்டிப்போட்டுவிட்டு, உணவு படைத்தனர். மாடு இறந்து போன பின்னர் வீட்டுக்குத் தானாகவே வலிய வந்த ஒரு நாயை வளர்க்கத் துவங்கிய கதைகளைச் சொன்னார்கள். அனத சந்யாசி ஞானதிருஷ்டியில் பார்த்த போது மாடாகப் பிறந்து, இறந்த பின்னர் அந்த வியாபாரிதான் இப்போது நாயாகப் பிறந்திருக்கிறார் என்பதை அறிந்தார். யாருமில்லத சமயம் அதனிடம், அது யார் என்பதைச் சொல்லி, உபதேசம் செய்ய்யத் தயாராக இருப்பதாகவும், அதைக் கேட்டால், இந்த நாய்ப்பிழைப்பு தேவையில்லை என்றும் சொன்னார்.

 

dog3

அதற்கு அந்த நாய் சொன்னது:

சுவாமி! இப்போது வேண்டாம். என் மகன்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த வீட்டை அவர்கள் இல்லாத போது நான் தான் காவல் காக்கிறேன் என்று சொன்னது.

 

அந்த சந்யாசியும் சிரித்துக் கொண்டே வந்தவழியே போய்விட்டார். இந்த வியாபாரியை பிறப்பு- இறப்பு என்ற மாயச் சுழலிலிருந்து விடுவிக்க முயன்றாலும், முடியவில்லையே! இந்த சவாலை சமாளித்தேயாக வேண்டும் இன்னும் ஒரு முறை வருவோமென்று கங்கணம் கட்டிக் கொண்டார். விசுவாமித்திரர், திரிசங்கு மஹாராஜனை சுவர்க்கத்துக்கு அனுப்பிய கதை போல இருக்கிறதே! என் தவ வலிமையைப் பயன்படுத்தி இவனை விடுவிப்பேன்; பந்த பாசம் என்பது அவ்வளவு வலியதா என்று வியந்தார்.

 

ஆண்டுகள் பறந்தன. அதே சந்யாசி தள்ளாடித் தள்ளாடி அந்த வியாபாரி வீட்டுக்கு வந்தார். இப்பொழுது நாயும் இறந்து விட்டது. மகன்கள் இருவருக்கும் இந்த சந்யாசி நம்மை விட மாட்டான் போல இருக்கிறது, இவனை விரட்ட வேண்டும் என்று கோபத்துடன் வந்தனர். அவருக்குப் புரிந்துவிட்டது உடனே ஞான திருஷ்டியால் ஒரு விஷயத்தை அறிந்தார். அவர்களிருவரும் கோபத்துடன் வந்தவுடன், “இவ்வளவு நாளாக உங்களுக்குச் சொல்ல மறந்த ஒரு ரஹசியத்தைச் சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்தேன்” என்றார்; உடனே அவர்கள் சோறு படைத்து , இனிப்பு கொடுத்து மெதுவாக ரஹசியம் என்ன? என்று கேட்டனர்.

 

தோட்டத்தில் மரப் புதர்களுக்கிடையில் அவரது தந்தை 100 பவுன் தங்க நகையைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார். உடனே அவர்கள் இருவரும் கடப்பாரை , மண்வெட்டி சகிதம் விரைந்தனர். அங்கே ஒரு பாம்பு அவர்கள் மீது சீறிப்பாய்ந்தது. இந்த சந்யாசி நம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டு இப்படி பாம்பிருக்கும் புதருக்கு அனுப்பியிருக்கிறான் என்று எண்ணி அவரை அடிக்க ஓடி வந்தனர். அவர் உடனே, “நிறுத்துங்கள், அந்தப் பாம்பு அங்கேயுள்ள புதையலுக்குக் காவலாக இருக்கிறது” என்றார்.

snake

உடனே அதைக் கொல்வதற்காக பாம்பு! பாம்பு! என்று கத்தியவுடன் ஊர் ஜனங்கள் எல்லோரும் வந்து அதை அடித்துக் கொன்றனர். அவர்கள் எல்லோரும் போன பின்பு இரண்டு மகன்களும் அந்த தங்கப் புதையலைப் பங்கு போட்டுக் கொண்டனர். அந்த சந்யாசியும் பாம்பின் ஆவியைப் பிடித்து அதைக் கரயேற்றி  அப்படியே மாயமாய் மறைந்தார். அதை இரண்டு மகன்களும் வியப்புடன் பார்த்தார்கள்.

 

அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய  முடியாது. ஒருவருடைய பந்த பாசத்தை விடுவித்து, ஒருவரைக் கரையேற்ற ஞானிகளும் கூட மிகவும் பிரயத்தனம் (முயற்சி) செய்ய வேண்டியிருக்கிறது. வியாபாரியின் வீட்டில் ஒரு நாள் உணவு சாப்பிட்டதாலும் அவர் தர்மவான் என்பதாலும் அவரை ஜனன-மரணச் சுழலிலிருந்து அந்த சந்யாசி விடுவித்தார்.

–subham–

செட்டியார் தந்திரம் பலிக்கவில்லை! (Post No. 2420)

GOLU CHETTI

Compiled by london swaminathan

Date: 24 December 2015

Post No. 2420

Time uploaded in London:- 7-49 AM
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பூலோக இன்ப துன்பம் – என்ற பழைய தமிழ்  நூலிலிருந்து எடுக்கப்பட்ட கதை; பழைய தமிழ் நடையில் இருக்கும்:–

 

 

“ஓர் ஊரிலிருக்கும் வைசியனொருவன் தனது கடையை மூடிவிட்டு, வீட்டுக்கு வந்து ஸ்நானபானஞ் செய்துவிட்டு சாப்பிடப்போகும் சமயத்தில் வெளியே வந்து “ஐயோ யாதொரு பிச்சைக்கரனும் காண்கிலனே” யென்று வருத்தபடுபவன் போற் பாசாங்கு செய்துவிட்டு திடீரென்று போய் வீட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டு சாப்பிடுவான். யாராவது அன்னக் காவடிகளாகத் திரியும் ஆண்டிப் பரதேசிகள் வந்து ‘அன்னமோ, அன்னம்’ என்று கூச்சலிட்டால், அடுத்தவீட்டுத் திண்ணையில் படுத்திருப்பவர், “அடடா, உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை; இப்பொழுதுதான் செட்டியார் கதவைத் தாளிட்டுச் சாப்பிடப்போனார்” என்பார்.

 

இப்படியிருக்கையில் ஒரு நாள் ஒரு கிழட்டு சந்யாசி, பக்கத்து வீட்டிற்றானே வெகுநேரம் உகார்ந்திருந்தனன். செட்டியார் வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்து தான் சாப்பிடப்போகும் தருணம் வெளியில் வந்து, நாற்புறமும் சுற்றிப்பார்த்து, யாதொரு பிச்சைக்கரரும் காணப்படாததால், “ஆரையா, ஆண்டிப் பரதேசிகளே! அன்னம் புசிக்க வாருங்களென்று” கூச்சலிட்டான்.

 

அண்டை வீட்டுத் திண்ணையில் சண்டிபோல் உட்கார்ந்திருந்த கிழட்டு சந்யாசி, “இதோ வந்தேனையா, புண்ணியமாய்ப் போச்சு!” என்று சொல்லி ஓடிவந்தான்.

 

லோபியாகிய வைசியன் மனம் மெலிந்து திகிலுற்று “ஐயோ! நாம் யாரும் இல்லையென்று கூச்சலிட்டால் இவன் எப்படியோ வந்துவிட்டானே. இல்லையென்றாலும் இத்தனை நாளாய் நம்மை மெத்த தர்மவானென்று புகழ்ந்து கொண்டிருந்த ஆட்களெல்லாம் நம்மை பரிகசிப்பரே” யென்று பயந்து வாய்ப்பேச்சுக்குப் பஞ்சமில்லாதவன் போல, “வாருமையா, சாமி” என்று சொல்லி, சந்யாசி வீட்டிற்குள் வருவதற்குள் தன் பெண்சாதியை மெதுவாக நாலைந்து அடி அடித்தனன். அந்த வஞ்சகி சந்யாசி சோற்றுக்கு வருவதை உணர்ந்து  நமது கணவன் உஷார் படுத்துகிறாரென்று ஊகித்து குய்யோமுய்யோவென்று கூச்சலிட்டழத்தொடங்கினாள். வந்த விருந்தாளியாகிய சந்யாசி மனமிரண்டு ஈதென்ன கர்மம், இவ்வளவு நேரம் காத்திருந்தும் வயிற்றுக்குக் கஞ்சியகப்படாமல் கலகாரம்பமாய்விட்டதேயென்றெண்ணி, ஓடிப்போய், நடையிலிருக்கும் தொம்பக்கூண்டின் (நெற்கூடு) பின்னால் போய் ஒளிந்துகொண்டான். ஈது உணரா வைசியன், பீடை ஒழிந்ததென்று போய் வாசற்கதவைத் தாளிட்டுவிட்டு மிகவும் சந்தோஷமாய் பெண்சாதியிடம் வந்து,

 

golu vedam madhu (2)  golu, seetharam2 (2)

“பெண்ணே! நான் நோகாமல்தானே அடித்தேன்?” என்றான்

அவள் உடனே “நான் ஓயாமல்தானே அழுதேன்” என்று சொல்லி சிரித்தாள். ஒளிந்திருந்த சந்யாசி இதையெல்லாம் பார்த்துவிட்டு திடீரென்று அவர்கள் முன் குதித்து,

“யானும் போகாமல்தானே இருந்தேன்” என்றார்.

 

செட்டியாரும் மரியாதைக்கஞ்சி தான் சாப்பிடவைத்திருந்த சோற்றைப் போட்டு இனிமேல் வரவேண்டாமென்று சொல்லி அனுப்பினார்.

–சுபம்–

(இப்படிச் சந்தி பிரிக்காமல் நீண்ட வாக்கியங்களை எழுதுவது உலகில் இரண்டே மொழிகளில்தான் உண்டு; சம்ஸ்கிருதமும் தமிழும்; இதற்கு இந்த இரண்டு மொழிகளில் மட்டுமே இலக்கணமும் உண்டு. ஆகையால் இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து உதித்தவை என்பதை முன்னரே சில ஆராய்ச்சிக்கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். படித்து மகிழ்க!)

 

பிரான்ஸிலும் முஸ்லீம் எதிர்ப்பு அலை!( Post No. 2419)

mizapur krishna

Written by S NAGARAJAN

Date: 24 December 2015

 

Post No. 2419

 

Time uploaded in London :– காலை 5-19

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

உலகப் போக்கு

 

First part of this article was published yesterday.

 

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை!- 2

 

ச.நாகராஜன்

 

சென்ற கட்டுரையில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து எடுத்த தீவிர நடவடிக்கையின் முதல் படியைப் பார்த்தோம். உலக நாடுகள் கடைசி கடைசியாக ஒன்று சேர்ந்து முஸ்லீம்களின் தீவிரவாதப் போக்கைத் தடுத்தே நிறுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன. அப்பாவிகளை கொன்று குவிக்கும் அராஜகத்தை யார் தான் விரும்புவர்?

 

 

நவம்பர் மாதம் ஜனவரி மாதம் அல்ல என்பதை பிரான்ஸ் இப்போது உணர்த்தி விட்டது – முஸ்லீம்களுக்கு!

ஜனவரி 2015-இல் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட இதர இடங்களில் முஸ்லீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 அப்பாவிகள் உயிரை இழந்தனர். ஆனால் அப்போது பிரெஞ்சு ஊடகங்களும் மக்களும் வெகுவாக இதைக் கண்டிக்கவில்லை. வெகுஜன எழுச்சி ஏற்படவில்லை. ஆனால் இப்போது பாரிஸில் நடந்த அக்கிரமத்தால் 129 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (13-11-15) அன்று நடந்த தாக்குதல் உலக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த முஸ்லீம்களிம் தீவிரப் போக்குக்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய கடைசித் தருணம் வந்து விட்டதாக பிரான்ஸ் முடிவு செய்தது. மிகவும் கவலையுடன் கூடிய செழுமையான கோபத்துடன் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி பிரான்ஸ்வா ஒலாந்தே (Francois Hollande)  பாராளுமன்றம் அவசரநிலை பிரகடனத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒரு படி மேலே போய் முஸ்லீம்களின் தீவிரவாதத்தைக் கடுமையாக ஒழித்துக் கட்ட அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

 

வெளிப்படையாக வார்த்தை ஜாலங்களால் தன் உணர்வை அவர் வெளிப்படுத்தவினல்லை தான்! என்றாலும் அவர் மனம் உணர்த்த விரும்பிய செய்தி தெளிவானது.

 

eid,bhadravathi

Picture: Posted by Ramesh Kumar on face book; Sathya Sai Educational institutes, Bhadravathi .

 

மத சார்பற்ற செகுலர் ஃபிரான்ஸ் ஒரு சிக்கலான உறவைத் தான் முஸ்லீம்களுடன் இது வரை கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த சிக்கலைத் தாண்டி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டது. இதற்கு முஸ்லீம்களை எதிர்க்கத் தான் வேண்டுமென்றால் அதற்கும் தயார் என்பது தான் பிரான்ஸின் இன்றைய நிலை.

 

 

பிரான்ஸ் அரசின் உயர் அதிகாரிகள் தேசத்திற்கே ஒரு பெரும் எதிரி கிளம்பி விட்டான் என்றே உணர்கின்றனர். ஆகவே முஸ்லீம்களின் மசூதிகளுக்கு ஒரு புதிய பாதுகாப்பு தேவை என்கின்றனர். அவசரநிலை நீட்டிக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எண்ணம். பத்தாயிரத்திற்கும் அதிகமான தீவிரவாதிகளின் பட்டியலை ஏற்கனவே தயார் செய்துள்ள பிரான்ஸ் அவர்களது நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிப்பதோடு அவர்களைக் கட்டுப்படுத்தவும் முடிவை எடுக்கவுள்ளது.

 

 

இவர்களை தேசீய எதிரிகள் என அறிவிக்கும் பிரான்ஸ் அதிகாரிகள், தீவிரவாதிகளான இமாம்களை தேசத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கும் வந்து விட்டனர். பிரான்ஸ் பிரதம மந்திரி மானுவல் வால்ஸ் (Manuel Valls)  14-11-15 சனிக்கிழமையன்று “expel all these radicalized imams”  – இந்த புரட்சிகரமான இமாம்களை வெளியே தள்ளுங்கள் – என்றே பிரகடனம் செய்தார்.

 

 

உலக முஸ்லீம்கள் ஒன்றை உணர வேண்டும். அரபு நாடுகளை விட பாகிஸ்தானை விட முஸ்லீம்களுக்கு சர்வ சுதந்திரமும் பாதுகாப்பும் அரசியல் ரீதியிலான சமத்துவத்தையும் உலகில் தரும் ஒரே நாடு இந்தியா தான்.

 

 

சகிப்புத்தன்மையின் எல்லையையும் மீறி முஸ்லீம்களை இந்தியா ஆதரிக்கிறது – பம்பாயைத் தகர்க்கும் நாசவேலையில் முஸ்லீம் தீவிரவாதிகள் ஈடுபட்ட பின்னரும் கூட.

இந்தியப் பாராளுமன்றத்தைத் தாக்கிய போதும் கூட. ஆனால் உலகப் போக்கைக் கவனிக்கும் போது எல்லையற்ற சகிப்புத்தன்மைக்கு ஒரு உதாரண உருவமாக இருக்கும் ஹிந்து இனம் உலகப் போக்கிற்கேற்ப நடக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படும்! முஸ்லீம்கள் உலகப் போக்கை உன்னிப்பாக உணர வேண்டும். குறிப்பாக முஸ்லீம் இளைஞர்களும் பெண்மணிகளும் விழித்தெழ வேண்டும்.

eid2, bahdravathi

 

நவம்பர் மாதம் ஜனவரி அல்ல என்பதை பிரான்ஸ் உணர்த்தி விட்டது. நவம்பரில் பாதை திசை மாறி விட்டது. இனி முஸ்லீம் தீவிரவாதம் ஒழிக்கப்படும் – ஒட்டுமொத்தமாக.

 

ஆக இந்த நிலையில் முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிடையே ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகளான இமாம்கள், தீவிரவாதிகளின் பட்டியலைத் தாமே தயாரித்து அந்தந்த அரசுகளிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்.

இது உலகத்தை மட்டும் காப்பாற்றாது, அவர்களையும் காப்பாற்றும்.

 

முஸ்லீம்கள் ஒரு இனமாக, மதத்தினராக வாழ இதுவே சிறந்த வழி! உலகப் போக்கை உணர்வார்களா, முஸ்லீம்கள்?!

*********

 

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை! (Post No. 2417)

arabian wonder

Written by S NAGARAJAN

Date: 23 December 2015

 

Post No. 2417

 

Time uploaded in London :– காலை 8-32

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகப் போக்கு

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை!

 

ச.நாகராஜன்

 

முஸ்லீம்கள் உலகப்போக்கை நன்கு கவனிக்க வேண்டிய கடைசித் தருணம் வந்து விட்டது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்தத் தருணத்தை விட்டு விட்டால் இனி ஒரு தருணம் கிடைப்பது அரிது.

 

 

ஒரு சில தீவிரவாதிகளால் உலகெங்குமுள்ள முஸ்லீம்களை “ஓரம் கட்ட” உலக நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நடப்பவற்றைப் பார்ப்போம்.

 

 

தி இண்டிபெண்டண்ட் பத்திரிகை தரும் செய்தி இது:-

ஸ்விட்சர்லாந்தில் டிசினோ (Ticino) பிராந்தியத்தில் முகத்தை மூடி பர்கா (BURKA) அணிவது இனி கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 6500 ஸ்டர்லிங் பவுண்டுகள் அபராதம். இந்தப் பிராந்தியத்தின் பார்லிமெண்ட் இதற்கான சட்டத்தை சமீபத்தில் 23-11-2015 திங்களன்று இயற்றி நிறைவேற்றியுள்ளது.

 

 

ஐரோப்பாவில் மிக அதிக அளவில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளை முற்றிலுமாக முறியடிக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என ஸ்விட்சர்லாந்து பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

ஸ்விட்சர்லாந்தின் தென் பகுதியான இத்தாலி மொழி பேசும் டிசினோ பிராந்தியம், பொது இடங்களில் இப்படி முகத்திரை அணிந்து வந்தால் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து விட்டது. பொது இடங்கள் என்றால் கடைகள்,உணவு விடுதிகள், பொது கட்டிடங்கள் என்று அர்த்தம். காரில் அமர்ந்து செல்லும் போதும் பர்கா அணியக் கூடாது. சுற்றுலாப் பயணிகளுக்கும் விதிவிலக்கு இல்லை. அவர்களும் இந்த விதியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.

 

 

ஆனால் முகமூடி, க்ராஷ் ஹெல்மெட் போன்றவற்றை அணியத் தடை இல்லை.

 

இந்தப் பிராந்தியத்தில் ஜனநாயக முறைப்படி கருத்து வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் இப்படி தடை விதிப்பதை ஆதரித்தனர். இந்த வாக்கெடுப்பு 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் எடுக்கப்பட்டது. பின்னர் சட்டம் இயற்றப்பட்டு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

 

இதை முன்னின்று வரைவுச் சட்டத்தை அமைத்த ஜியார்ஜியோ கிரின்ஹெல்லி (George Ghiringhelli), “இந்தத் தடையானது டிசினோ மற்றும் ஸ்விட்சர்லாந்து பகுதியில் பதுங்கி இருக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது” என்றார்.

ராய்ட்டர் செய்தி நிறுவனம் தரும் இந்தச் செய்தி தனியான ஒரு செய்தி அல்ல.

2 முஸ்லீம் கண்ணன்

 

உலகெங்கும் உள்ள நாடுகளின் பார்வை முஸ்லீம்களின் மீது சந்தேகத்தைக் கொண்டுள்ளதாக மாறி வருவதைத் தெரிவிக்கும் பல செய்திகளில் ஒன்று.

முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்று பல முஸ்லீம் அறிவுஜீவிகளும், நல்லவர்களும் கூறுவது உண்மையே!

 

 

ஆனால் அந்த அறிவு ஜீவிகளும், நல்லவர்களும், அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளும் தீவிரவாத நடவடிக்கைக்கு எதிராக ஒன்றையும் செய்யவில்லையே (அல்லது அவர்களைத் தீவிரவாதிகளும் அவர்களின் இயக்கத் தலைவர்களும் செய்ய விடவில்லையே)

 

ஆகவே முஸ்லீம்கள், குறிப்பாக முஸ்லீம் பெண்மணிகள் எழ வேண்டிய தருணம் வந்து விட்டது. அவர்கள் தங்கள் கணவன்மார்களை, சகோதரர்களை, உறவினர்களை அழைத்து தீவிரவாதத்தை முஸ்லீம் சமுதாயத்திலிருந்து அறவே அழித்தொழிக்க முன் வர வேண்டும். சொர்க்கத்தை இங்கேயே ஸ்தாபிக்கும் வண்ணம் அமைதியான சமாதானமுள்ள அழகிய பூமியை உருவாக்க உதவ வேண்டும்.

 

 

இல்லையேல்… காலம் அவர்களுக்குக் கடுமையான படிப்பினையைத் தந்து விடும். உணர்வார்களா?

********

அடுத்து பிரான்ஸ் என்ன செய்கிறது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்

 

தஞ்சாவூர் நகைச்சுவை!! தாசி தையனாயகி சமர்த்து!! (Post No. 2414)

IMG_3349

Compiled by London swaminathan

Date: 22 December 2015

 

Post No. 2414

 

Time uploaded in London:- காலை 8-01

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

இந்தக் கதை — பழைய கால தமிழ்நடை, நகைச்சுவை, சமுதாய நிலையைப் பிரதிபலிப்பதால் இங்கே இடப்படுகிறது.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

IMG_3227

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

 

ஒரு ஊரில் தையனாயகி என்ற தாசி ஒருத்தி உண்டு. அவளை ஒரு செட்டியாரும், அவர் மகனும், கணக்குப்பிள்ளையும், அகுதாரும் வைப்பாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செட்டியார் மகன் சரச சல்லாபமாகப் பேசிக்கொண்டிருக்கும் சமயம், தகப்பன் செட்டியார் வந்துவிட்டார். மகன், தன்னை ஒளித்துவைக்கும்படி தாசியை வேண்ட, இருட்டாயிருக்கும் சேந்தியிலிருக்கும்படி செய்து, செட்டியாருடன் பேசும் முன்பு, கணக்குப் பிள்ளை வந்துவிட்டார். இதுசெய்தி செட்டியாரறிந்து தன்னை ஒளித்துவைக்கும்படி வேண்டினார். அவரையும் அவ்வாறே சேந்தியிலேற்றினாள்.

 

பின்னர் கணக்குப்பிள்ளை பேசிக்கொண்டிருக்கும் போது அகுதார் வந்துவிட்டார். தற்சமயம் தன்னை ஒளித்துவைக்கும்படி கணக்குப்பிள்ளை வேண்ட, அவரையும் சேந்தியிலேற்றிவிட்டாள். இவர்கள் மூவரும் ஒரே காபி கிளப்பில் உப்பு ஜாஸ்தியாகப் போட்ட உப்புமா சப்பிட்டுவந்தபடியாலே தாகம் அதிகரித்து, ‘தண்ணீர், தண்ணீர்’ என்று கூவினார்கள். உடனே அகுதார் இது என்ன கூப்பாடு? எங்கிருந்து வருகிறது? என்று கேட்டார். அதற்கு தாசி “பிரபுவே, எங்கள் குலதெய்வத்துக்கு வருஷவாரி நேத்திக்கடன் செய்வது வழக்கம். அது இந்த வருஷம் நின்றுவிட்டது. அதனால்தான் தாகம், தாகம் என்று கூவுகிறது. கொல்லையில் இருக்கும் மரத்தில் இரண்டு இளநீர் வெட்டிப் போட்டாற் கூவாது” என்றாள்.

 

உடனே வேலையாளை ஏவி, இரண்டு, மூன்று இளநீர் வெட்டி மேலே எறியப்பட்டது. இளநீர் சேந்தியில் விழவே மூவரும் அதை இருட்டில் தடவி எடுத்துக்கொண்டு உடைப்பதற்கு கல்லைத் தேடினார்கள். “இறப்பில் செருகிவைத்த சூரியன் குஞ்சைத் தேடின”. நாட்டுப்புறத்தானைப் போல மூவரும் தேட, மூவர் தலையும் மொட்டையாகவும், அன்று சவரம் செய்துகொண்டதால் தலை மொண்ணையாயுமிருந்தது. அதை குத்துக் கல் என்றெண்ணி ஒருவர் தலைவர் மீது மற்றொருவர் இளநீரை ஓங்கி அடித்தனர். அவர்கள் மூவருக்கும் அதிர்ச்சி தாளாமல் மயக்கம் வந்தது. குய்யோ முறையோ என்ற கூக்குரலுடன் கீழே குதித்தனர்.

 

குலதேவதைதான் கீழே குதிக்கிறது என்று நினைத்த, அகுதார், அந்த தேவதையைச் சாந்தம் செய்யும்படி கூறிவிட்டு ஓட்டம்பிடித்தார். மற்ற மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் மூடிக்கொண்டு இல்லங்களுக்கு விரைந்தேகினர்.

 

நீதி: எப்போதும் தாசியின் வலையில் அகப்படுவோருக்கு இந்த கதிதான் ஏற்படும். அவர்களால் தொல்லையே தவிர சுகமில்லை.

 

IMG_4359

-சுபம்-

ஆசீர்வாதம் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!( Post No. 2413)

baba-blessing

Written by S NAGARAJAN

Date: 22 December 2015

 

Post No. 2413

 

Time uploaded in London :– காலை 6-16

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வாழ்த்துவதிலும் ஒரு அழகு, முறை, ஆசீர்வாதம்!

 

ச.நாகராஜன்

 

பெரியோர்களைப் பணிய வேண்டும் என்று சொல்லும் அறநூல்களை போற்றுகிறோம்.

 

 

அப்படிப் போற்றும் போதே பெரியோர்கள் தம்மிடம் வந்து வணங்கியோரை வாழ்த்துவதிலும் ஒரு அழகை, முறையைக் கையாண்டனர். ஆசீர்வாதம் செய்தனர் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

 

இதை நமது இதிஹாஸ, புராண, காவியங்களில் காணலாம். வேத மந்திரங்களில் வாழ்த்து கூறும் மந்திரங்களைக் கேட்பதே ஒரு புண்ணியம்; அவ்வளவு அழகு; அவ்வளவு பொருள் பொதிந்த வாழ்த்துக்கள்; ஆசீர்வாதங்கள்.

கோவையைச் சேர்ந்த என்.வி.நாயுடு (N.V.Nayudu) என்னும் சம்ஸ்கிருத ஆர்வலர் தன் வாழ்நாள் முழுவதும் படித்து வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில் நல்ல பகுதிகளைக் குறிப்பெடுத்து வந்தார். அவற்றை 21 தலைப்புகளில் அழகுறப் பிரித்தார். SUBHASHITA COLLECTION ANTHOLOGY என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டார்.

 

 kanna, rajini

இலக்கியங்களைப் படிப்பது மட்டும் போதாது; அவற்றை அடுத்த தலைமுறைக்குப் பொருள் பொதிந்த முறையில் வழங்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு நூல் நல்ல எடுத்துக் காட்டு.

வாழ்த்துக்கள், ஆசீர்வாதங்கள் என்ற முதல் பகுதியில் மட்டும் இந்தப் பொருளையே 17 விதங்களாகப் பிரிக்கிறார்!

 

 

  • பொதுவான வாழ்த்து முறைகள் 2) குழந்தையை ஆசீர்வாதம் செய்தல் 3) தம்பதிகளை ஆசீர்வாதம் செய்தல் 4) ஒரு குடும்பத்தை ஆசீர்வாதம் செய்தல் 5) பெரும் வீரச்செயலைச் செய்தவரை பாராட்டுதல் 6) ஒரு பெண்மணிக்கு ஆசீர்வாதம் செய்தல் 7) அறிவுரையுடன் ஆசீர்வாதம் செய்தல் 8) சொந்த அனுபவத்தைக் கொண்டு அதை வைத்து ஆசீர்வாதம் செய்தல் 9) வழிப்பயணம் செய்யும் போது ஒருவரை வாழ்த்தி அனுப்புதல் 10) போருக்குச் செல்வோரை வாழ்த்தி அனுப்புதல் 11) திருப்தியுடன் வெற்றி பெற்றுத் திரும்ப ஆசீர்வதித்தல் 12) வாழ்த்தும் போதே அதில் நையாண்டி அடிநாதமாக இழைந்தோடல் 13) வாழ்த்துக்களினால் அடுத்து இன்னும் மாபெரும் வெற்றி அடைய ஊக்குவித்து வாழ்த்தல் 14) வாழ்த்துக்களை அங்கீகரிப்போர் அதன் மூலமாகத் தமது அரிய குணநலன்களைக் காண்பித்தல் 15) ஊழிக்காலம் வரைக்குமான நம்பிக்கை வாழ்த்துக்கள் 16) உலகம் நலம் பெற வாழ்த்து 17) ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறவுரை வாழ்த்துக்கள்

இப்படிப் பல விதமாக ஆசீர்வாதங்களை வகை பிரித்து அதற்கான இலக்கிய மேற்கோள்களையும் திரு என்.வி.நாயுடு தந்துள்ளார்.

 

 

மிக பிரம்மாண்டமான ஒரு வாழ்க்கை முறையை ஹிந்துத்வம் பாரம்பரிய வழியில் கடந்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதற்கு இந்த வாழ்த்துக்களே சான்று.

“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு                  சூழ்கலை வாணர்களும் –   இவள்                     என்று பிறந்தவள் என்றுணராத                 இயல்பினளாம் எங்கள் தாய் என்று இப்படி

ஆரியச் செல்வம் அல்லது ஹிந்துச் செல்வம் அல்லது பாரதீயச் செல்வத்தை அவர் பாரதமாதாவாகப் பாவித்துக் கூறுவது ஆழ்ந்த அர்த்தமுள்ள சத்தியமாக விளங்குகிறது.

 

 

நூலுக்கு வருவோம்.

 

நம்மைக் குளிர வைக்கும் சில எடுத்துக்காட்டுகள் :-

பத்ரம் தே |

எல்லா நலமும் (புகழ், தூய்மை) உனக்கே!

 

 

ஸ்வஸ்தி ப்ராப்னுஹி |

நீ நலமுற இருப்பாயாக

 

 

தே பவந்து மங்களம் |

உனக்கு மங்களம் உண்டாகட்டும்

 

 

சிரம் ஜீவ |

நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக

 

 

ஜயது பர்த்தா |

ஆதரவு அளிப்பவனுக்கு (இறைவன், ஆதரவாளன்) வெற்றி உண்டாகுக

 

அதிதி துஷ்யந்தனிடம் கூறுவது:

அப்ரதிரதோ  பவ | (சாகுந்தலம் 7-17)

 

ரதம் ஒட்டுவதில் உனக்கு நிகரானவர் யாரும் இல்லாதபடி ஆவாயாக

 

யசோதை கிருஷ்ணரை ஆசீர்வதிப்பது

ஜீவ, க்ருஷ்ணா, சரதாம் சதம் சதம் |  (க்ருஷ்ண கர்ணாமிருதம் 2 – 67)

 

க்ருஷ்ணா, நீ நூற்றுக்கணக்கான சரத்காலங்கள்  வாழ்வாயாக

 

அருந்ததி ஜனகரை ஆசீர்வதிப்பது :

அக்ஷரம் தே ஜ்யோதி: ப்ரகாஷதாம் | (உத்தர ராம சரிதம் 4 -10)

 

 என்றும் மறையாத ஜோதி (ப்ரகாசிக்கும் நுண்ணறிவு) உன்னிடம் என்றும் ப்ரகாசிக்கட்டும்

 

ரிஷிகள் துஷ்யந்தனை ஆசீர்வதிப்பது :

இஷ்டேன யுஜ்யஸ்வ | (சாகுந்தலம்  5-13)

(உன்) இஷ்டம் பூர்த்தியாகட்டும்

 

 

துஷ்யந்தனிடம் சகுந்தலையின் தோழிகள் கூறுவது :

ஸ்வாகதம் அவிலம்பினோ மனோரதஸ்ய | (சாகுந்தலம் 3 – 16)

 

வருக, உங்கள் மனோரதம் தாமதமின்றி அதி விரைவில் நிறைவேறட்டும்

( மனோரதம் என்ற அழகிய வார்த்தை மனம் ஒரு ரதம்  என்றும் அது தான் விரும்பிய விஷயங்களை நோக்கி அதி வேகமாக ஓடும் என்பதையும் தெரிவிக்கும் பொருள் பொதிந்த சொல்)

 IMG_2597 (2)

******                                       

 

நாமும் ஒரு குறிப்பேடு தயாரிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் பல நூல்களில் இதுவும் ஒன்று என்பதை மேலே நாம் படித்தவற்றைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்!

–subham–

 

சத்வ, ரஜோ, தாமச உணவு வகைகள் எவை? (Post No. 2396)

IMG_9939

Compiled by London swaminathan

Date: 16 December 2015

 

Post No. 2396

 

Time uploaded in London :– காலை 9-18

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

IMG_9937

267 உணவுகளின் பட்டியல்:

பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த அருமையான தமிழ் உணவு என்சைக்ளோபீடியாவில் உணவு பரிமாறுவது எப்படி? என்ற விவரங்களை நேற்று வெளியிட்டேன். இதோ 267 உணவு வகைகளில் எவை உத்தம (சத்வ), மத்தியம (ரஜோ), அதம (தாமஸ) உணவு வகைகள் என்ற பட்டியல். இதற்கான அறிவியல் காரணங்கள் ஆராயப்படாவிடினும், இது நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கையாகும். 1891-ஆம் ஆண்டில் வெளியான இப்புத்தகம் 1912-க்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. இதில் குறிப்பிடப்படாத தமிழ் உணவு வகை இல்லை என்றே சொல்லிவிடலாம். யாராவது ஒருவர் இதை மறுபதிப்பு செய்வது பயனுள்ள பணியாக இருக்கும். சேர், வீசை போன்ற அளவை முறைகளை கிலோ முதலிய தற்கால அளவுகளுக்கு மாற்றுவது அவசியம். இதை எழுதியவர் டி.கே.ராமசந்திர ராவ்.

சத்துவ குண, உணவு வகைகள்

IMG_0336 (2)

 

ரஜோ குண, உணவு வகைகள்

IMG_0337 (2)

 

தமோ குண, உணவு வகைகள்

IMG_0338 (2)

நூலிலடங்கிய விஷயங்கள்

IMG_9957 (2)

 

IMG_9945

 

IMG_9946IMG_9947

–சுபம்–

வாழை இலையில் உணவு பரிமாறுவது எப்படி? (Post No. 2394)

IMG_0335

Third Edition of 1891 Book

 

Compiled by London swaminathan

Date: 15 December 2015

 

Post No. 2394

Time uploaded in London :– 13-22

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பிரிட்டிஷ் லைப்ரரியில் ஒரு அருமையான சமையல் புத்தகத்தைக் கண்டேன். சுமார் 350 பக்கங்களுக்கு ராமச்சந்திர ராவ் என்பவர் எல்லா தென்னிந்திய வகை உணவுகளையும், அவற்றின் செய்முறைகளையும், பாத்திரம், அடுப்பு வகைகளையும் அருமையாக விளக்கி எழுத்யுள்ளார். 300 உணவுப் பதார்த்தங்களின் பட்டியலைப் போட்டு அவற்றில் எவை சாத்வீகமானவை, எவை ராஜஸ உணவு, எவை தாமஸ உணவு என்ற பட்டியலும் கொடுத்து இருக்கிறார். இது ஒரு தமிழ் உணவு என்சைக்ளோபீடியா, அதாவது கலைக் களஞ்சியம்.

 

 

இதில் சிறப்பு என்னவென்றால் 1891-ஆம் ஆண்டிலேயே இந்த தமிழ்ப் புத்தகம் வெளியிடப்பட்டுவிட்டது. என் கையில் தவழ்ந்த பதிப்பு, மூன்றாம் பதிப்பு. அது அச்சிடப்பட்டு வெளியான ஆண்டு 1912.

 

பிராமண கல்யாணங்களில் இலையில் எந்த இடத்தில் என்ன உணவுப் பொருட்களை வைக்கவேண்டும், அதை எந்த வரிசையில் பரிமாற வேண்டும் என்பதை படம்போட்டு 1891 ஆம் ஆண்டிலேயே எழுதிவிட்டார். வாழை இலை கிடைக்காத பட்சத்தில் ஆல், பலா அல்லது மந்தாரை இலைகளைக் கொண்டு தைக்கப்பட்ட தையல் இலை பற்றியும், வாழை இலை தொன்னைகள் பற்றியும் சொல்லியுள்ளார்.

 

இந்தக் கட்டுரையில் சுப நாட்களிலும், அசுப கர்மாக்களிலும் உணவு பரிமாறுவது எப்படி என்பதைக் காண்போம். இன்னொரு கட்டுரையில் 300-க்கும் மேலான சத்வ, ராஜச, தாமச உணவுவகைகளின் பட்டியலைக் காண்போம்.

IMG_0007 (2)

IMG_0006 (2)

 

IMG_0008 (2)

 

8c886-donnai4 DONNAI 1

 

b88a5-donnai2

வாழை இலையில் தொன்னை செய்யும் முறை.

 

–சுபம்–

தமிழர்களின் பழைய “கடி” ஜோக்குகள்! (Post No. 2391)

Cape-Buffaloes-0560

Compiled by London swaminathan

Date: 15 December 2015

 

Post No. 2391

Time uploaded in London :– 5-50 am

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Following jokes were taken from 100 year old Tamil book Vinotha Vikata Chintamani; Book given by S Srinivasan of Chennai.

 

ஒரு எருமைக்கு இரண்டு எருமை இருக்கும்!

ஒருவன் ஒரு உபாத்தியாயரிடம் சென்று, “ஐயா! எமது பையனைப் படிக்க வைக்க மொத்தச் செலவு என்னவாகும்?” என்றான்

50 ரூபாய் ஆகும் என்று வாத்தியார் சொல்ல அதற்கவன், “ஐயோ! அந்த ஐம்பது ரூபாயிருந்தால் ஒரு எருமைமாடு வாங்குவேனே” என்றான். அதற்கு உபாத்தியாயர், “வாங்கு,வாங்கு, வாங்கினால் ஒரு எருமைக்கு இரண்டு எருமை உன் வீட்டில் இருக்கும்” என்றார்.

 

Xxx

ஒரு கணக்கு

உபாத்தியாயர் பையன்களைப் பார்த்து, “இந்தக் கணக்கு தெரியவில்லையா? உங்கள் நால்வருக்கும் 100 வாழைப்பழம், 60 கொய்யாப்பழம் கொடுத்துவிட்டால், ஒவ்வொருவனுக்கும் என்ன வரும்?” என்று கேட்டார்.

சிறு பையன்:- வயிற்று வலி வரும்!

banana

Xxx

சம்பாஷணை

மகன்:- நம்ம வீட்டில் பேசும் பாஷைக்கு தாய் மொழி என்று ஏன் கூறுகிறார்கள்?

தகப்பன்:- ஏனெனில் வீட்டில் தகப்பன் பேச்சை யாரும் ஏற்காததால் அப்படியாயிற்று.

Xxx

யார் வீரன்?

ஒரு வீரன் “நான் ஆயிரம் பேருடைய  கால்களை வெட்டி வந்திருக்கிறேன், பாருங்கள்” என்றான்.

சூரன்: அடே, முட்டாள்! தலையை வெட்டுவதல்லவோ சுத்த வீரத்தனம்?

வீரன்: அதற்கு நானென்ன செய்வேன்? முன்னமேயே ஒருவன் தலைகளையெல்லாம் வெட்டிக்கொண்டு போய்விட்டானே” என்றான்.

 

Xxx

தடையென்ன பத்தியம் சொல்

இறக்கும் தருணத்திருக்கிற ஒரு பிராமணனருகில் பந்துக்கள் சேர்ந்து, ஓய்! சாஸ்திரிகளே! தாங்கள் பெரியவாள், எல்லாம் அனுபவித்தாயிற்று. சந்நியாசம் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கந்த ரோகி, “ஆஹா, ரொம்ப சரி, அதற்குத் தடையில்லை. பத்தியமென்ன?சொல்லுங்கள்” என்றார்

Xxx

 

halwa

காப்பி கிளப் கல்யாணமய்யன்

ஒரு காப்பிக் கிளப்பில் ஜம்பக்கார சாஸ்திரியார் ஒரு சேர் அல்வா வேண்டும் என்று கேட்டார். கல்யாணமய்யன் கட்டிக் கொடுக்கவே, அதற்குச் சாஸ்திரியார், அல்வா வேண்டாம்,  ஜிலேபி கொடு என்று திருப்பிக் கொடுத்துவிட்டார்.

ஜிலேபி கட்டிக்கொடுத்தவுடனே அதை வாங்கிக் கொண்டு, அவர் மெள்ள மெள்ள பொடி நடையாகச் சென்றார். ஓய், சாஸ்திரிகளே! ஜிலேபிக்கு ரூபய் தரவில்லையே என்று கல்யாணமய்யன் கேட்க, ஜிலேபிக்குப் பதிலாக அல்வா கொடுத்தேனே என்றார். ஓய், அல்வாக்குப் பணம் எங்கே? என்று கல்யானமய்யன் கேட்க, சாஸ்திரியார், அல்வா நான் வாங்கவில்லையே என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

Xxxx

 

சொக்காய் தைக்கும் சுப்பிரமணிய மேஸ்திரி

ஒருநாள் சுப்பிரமணிய மேஸ்திரி என்னும் தையல்காரன், தன் மனைவிக்கு ரவிக்கை தைத்துக் கொண்டிருக்கும்போது அதில் அரைகஜம் துணி எடுத்துப் பதுக்கி வைத்தான். கதவுக்கு மறைவில் நின்று அதை பார்த்துக் கொண்டிருந்த மனைவி, “ஏன் அப்படி செய்தீர்கள்?” என்றாள்.

அதற்கு மேஸ்திரி வழக்கம் மாறாதிருக்கும் பொருட்டும், மறவாதிருக்கும்பொருட்டுமே அப்படிச் செய்தேன் என்று பதில் சொன்னான்.

Xxx

 

குதிரையும் கழுதையும்

ஒரு ஊரில் ஒரு நீதிபதியும் வக்கீலும் மிக நேசமாயிருந்தனர். அவர்கள் காப்பி சாப்பிடப் போகும்போது

நீதிபதி: ஹலோ மிஸ்டர் அரிகரய்யர்வாள்! நாமிருவரும் கழுதையும் குதிரையுமாய் மாறும்பக்ஷத்தில் நீங்கள் எதுவாகவெண்டுமென்று கோருவீர்கள்?

வக்கீல்: – இதைக் கேட்கவும் வேண்டுமா? சந்தேகமின்றி கழுதை ஜென்மமே கோருவேன்

நீதிபதி:– ஏன் அவ்விதம் கோருவீர்?

வக்கீல்:- கழுதைக்கு ஒருதடவையாவது நீதிபதி பதவி கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் குதிரைக்குக் கொடுத்ததாகக் கேட்டதேயில்லை.

-சுபம்–