இந்தியத் தமிழும் இலங்கைத் தமிழும்

yaz devi
Yaz Devi Train

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1348; தேதி அக்டோபர் 15, 2014.

தமிழ் மொழி ஒரு விந்தையான மொழி. ஆயினும் பெரும்பாலும் இது சம்ஸ்கிருதம் போன்றது. இந்திய மொழிகள் அனைத்தும் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்களை வரிசைப் படுத்துவதிலும், வேற்றுமை உருபுகள் (எட்டு வேற்றுமைகள்), சந்தி இலக்கணத்திலும் பல ஒற்றுமைகளை உடையன. இவைகளில் வினைச் சொல் கடைசியாக வரும்— நான் வீட்டுக்குப் போனேன்— என்பதில் போனேன் என்பது கடைசியாக இருப்பது போல எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கும். கவிதைகளில் மட்டும் இது மாறும். ஆனால் உலகில் இந்த வரிசையைப் பின் பற்றாத நிறைய மொழிகள் உண்டு. இந்திய மொழிகளை எஸ். ஓ. வி சப்ஜெக்ட் – ஆப்ஜெக்ட் – வெர்ப் என்ற வகையில் சேர்ப்பர்.

சிறப்பு எழுத்துகள் (Special Letters)

தமிழில் மூன்று புள்ளி உடைய – ஃ — மற்றும் – ழ — ஆகிய இரண்டும் சிறப்பானவை. ஆய்த எழுத்து எனப்படும் ‘ ஃ ’ அக்கன்னா பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யலாம். இப்போதும், எப்போதும் அதிகம் பயன்படுத்தாத இந்த எழுத்து ஏன் வந்தது? இதன் பயன் என்ன? எப்போது வந்தது? என்பது தனி ஆராய்ச்சிக் கட்டுரைக்கு உரிய விஷயம். ஆய்த எழுத்தா, ஆயுத எழுத்தா,ஆயத்த எழுத்தா?

தமிழில் ங, ஞ, ஔ ஆகியன அதிகம் பயன்படுவதில்லை. இது பற்றி தனி கட்டுரை எழுதிவிட்டேன். அரிச் சுவடியில் இரண்டு மூன்று வரிகளை வெட்டி விடலாம்!!!

நாம் மிகவும் கஷ்டப்பட்டு இந்திய இலங்கை பிரயோகங்களைச் சேகரித்து வந்தேன் ( கதைத்தல், மணக்குது, இருங்கள்/உட்காருங்கள் நிற்கிறேன்/ இருக்கிறேன், கதிரை, குசினி அறை முதலியன ) பிறகு சென்னையி லிருந்து வெளியாகும் ‘’கிரியா’’ தமிழ் அகராதியில் அவைகளை இலங்கை வழக்கு என்று ஆங்காங்கே கொடுத்திருப்பதைப் பார்த்தவுடன் என் முயற்சியை விட்டுவிட்டேன். ஆனால் கிரியா அகராதியில் இல்லாத தமிழ் சொற்களை அவ்வப்போது குறித்து வைக்கிறேன்.
tamil boys

கிரியா (creA)அகராதியில் 1700 இலங்கைத் தமிழ் சொற்கள் உள்ளன(மொத்தச் சொற்கள் 21,000, இலங்கை வழக்கு மட்டும் 1700 சொற்கள்)

இலங்கையர்கள் கிரிக்கெட் என்பதை கிரிக்கெற் என்றும் லண்டனில் உள்ள பிரெண்ட் கவுன்சில் பெயரை பிரென்ற் என்றும் எழுதுவர். ‘ட்’ என்னும் ஒலியை ‘ற்’ என்று எழுதினாலும் உச்சரிப்பது சரியாகத்தான் இருக்கும் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

வேத மந்திரத்தில் தவறு

இது பற்றி லண்டன் வாழ் தமிழ் சம்ஸ்கிருத/அறிஞர் திருச்சி கல்யாண சுந்தர குருக்களுடன் விவாதிப்பேன். அவர்களுக்கு இருதரப்பு அன்பர்களும் நண்பர்கள். அவர் இதைவிட பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார். வேத ஒலிகள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மாறவில்லை என்பது அவற்றின் தனிச் சிறப்பு. ஆனால் பஞ்சாபிலிருந்து வரும் பிராமணர்கள் வேதத்தில் ‘’ஷ’’ என்று வரும் இடங்களை அவர்கள் ‘’க’’ என்று மாற்றி உச்சரிக்கிறார்கள்! சஹஸ்ர சீர்ஷா ‘’புருஷ:’’ என்ற புருஷ சூக்த மந்திரத்தை அவர்கள் சஹஸ்ர சீர்ஷா ‘’புருக:’’ என்பர். இதை அவர் கூறியவுடன் எனக்கு வியப்பு மேலிட்டது. இந்து பஞ்சாபியருக்கு இது தவறு என்றும் புரிகிறது. ஆனால் ‘’தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’’ என்பதால் மாற்ற முடியாது.
800px-Tamil_girls_group

இலண்டனில் நான் தலைமை தாங்கிய சில கூட்டங்களில் தமிழைக் கொலை செய்பவர்கள் இந்தியத் தமிழர்களா? இலங்கைத் தமிழர்களா? என்ற சர்ச்சை எழுந்தது உண்டு. இது இன்றைய கூட்டத் தலைப்புக்குப் பொருந்தா விஷயம், தனியாகப் பட்டிமன்றம் நடத்தினால் நானே வந்து ஒரு கட்சியைப் பேசவோ தலைமை தாங்கவோ தயார் என்பேன். உடனே அமைதி திரும்பும்.

எனது மனைவி கூட இலங்கைத் தமிழர்களின் தமிழ் — மிகவும் அழகாக இருக்கிறது — என்பாள். வானொலியிலும் தொலைக் காட்சியிலும் அவ்வப்போது செய்தி வாசிப்பவர்களைக் கண்டு எடுக்கப்பட்ட முடிவு இது என்று எனக்குத் தெரியும். உடனே அவர்கள் பயன்படுத்தும் கதைத்தல், பாரதூரமான, மனுஷி, கதிரை, குசினி என்ற சம்ஸ்கிருத, போர்ச்சுகீசியச் சொற்களைக் காட்டி இவை தமிழ் அல்லவே என்பேன்.

தமிழில் ‘’ழ’’ ஒரு சிறப்பு எழுத்து. வேறு மொழியில் இல்லை என்று சொன்னாலும் பிரெஞ்சு மொழியில் உள்ள ‘’ரோலிங் ஆர்’’ (Rolling R sound) ஒலியையும் சீன மொழியில் உள்ள ஒரு எழுத்தையும் இதனுடன் ஒப்பிடுவர். இவ்விரு மொழிகள் பற்றியும் அதிகம் தெரியாததால் ஆய்வு செய்யவில்லை. காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் மாபெரும் மொழியியல் அறிஞர். உண்மையில் அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை. ரிக் வேதத்தில் இந்த ஒலி இருப்பதைக் காட்டி இருக்கிறார் ( சாந்தோகா, பௌழியா).

Indus_allahdino_weights
Indus Valley Weights

என்னுடைய கருத்து தமிழும் சம்ஸ்கிருதமும்தான் உலகிற்கே மூல மொழிகள். நாம் இரு கண்கள் போலப் போற்றும் இவ்விரு மொழிகளைக் கொண்டு உலகையே அளந்து விடலாம். இந்த மொழிகள் இரண்டையும் தெரியாமல் யாராவது இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் இறங்கினால் கால்டுவெல் பாதிரியார் உளறியது போல உளறி அகப்பட்டுக் கொள்வர் (கால்டுவெல் செய்த தவறுகள் என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் காண்க)

60, 70, 80, தொன்பது
தமிழில் எழுபது, எண்பதுக்குப் பிறகு ஏன் தொன்பது வரவில்லை,
எழுநூறு, எண்ணூறுக்குப் பின் ஏன் தொன்னூறு வராமல் தொள்ளாயிரம் வருகிறது என்று பலர் ஏற்கனவே ஆராய்ச்சி செய்துள்ளனர். ஆனால் ஆயிரம் வரிசை சொல்லும் போது மட்டும் ஏழாயிரம் எட்டாயிரத்துக்குப் பின் ஒன்பதாயிரம் என்று ஒழுங்காக வந்து விடும்.
இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் சொல்லிக் கொடுத்தபோது இவைகள் குறித்து எல்லாம், மாணவர்களை எச்சரிப்பேன்- தவறு செய்யாமல் இருப்பதற்காக!!

இதை சம்ஸ்கிருதத்திலும் காணலாம் ‘’ஊன’’ மாசிகம் முதலிய சொற்களால் மாதத்தைவிடக் ‘’குறைந்தது’’ (ஊன) போன்ற விஷயங்களை விளக்குவர். இந்த ஊனம்தான் ஒன் –பது (ஊன பத்து= 10—1=9) என்பர் சிலர்.

இன்னொரு சாரார் இந்தியாவில் எட்டு வரைதான் எண்கள் இருந்தன இதனால்தான் ‘’எண்’’ என்றால் = எட்டு என்பர். சம்ஸ்கிருதத்திலும் ‘’நவ’’ (9) என்றால் புதியது!!! ரிக் வேதத்தில் பிரமாண்டமான டெசிமல் சிஸ்ட (தசாம்ச முறை) எண்கள் இருந்தாலும் ஆதிகாலத்தில் எட்டின் மடங்கையே எடை விஷயத்திலும் எண்ணிக்கை விஷயத்திலும் இந்தியர்கள் பயன்படுத்தினர். இதற்கு சிந்து சமவெளி எடைக்கற்களும் (120, 240, 320) இந்தியாவின் பழைய நாணய முறைகளும் சான்று பகரும்.
i_scales

நான் சின்னப் பையனாக இருந்த போது காலணா காசுக்காக அம்மாவிடம் கெஞ்சுவேன். காலணாவுக்கு ஆறு மிட்டய் கிடைக்கும்!! நாலு காலணா= ஒரு அணா; 16 அணா = ஒரு ரூபாய். நாணயங்களும் நாலணா, எட்டு அணா என்றே வெளியிடப்படும். எல்லாம் நான்கின் எட்டின் மடங்கு!!! (மூன்று தம்பிடி=காலணா, ஒரு ரூபாய்= 64 கால் அணா நாணயங்கள் அல்லது 192 தம்பிடிகள்!!)

மதுரை வடக்குமாசிவீதி யாதவர் பள்ளிக் கூடத்தில் ஒண்ணாப்பு (ஒன்றாம் வகுப்பு படித்தேன்). பெரிய வகுப்பான ஐந்தாம் வகுப்பில் ஒரு மணி இருக்கும். பள்ளிக் கூடம் நாலரை மணிக்கு முடியும். அதற்கு முன்பு ராகம் போட்டு வாய்ப்பாடு சொல்வோம். அங்கும் கூட 16 ஆம் வாய்ப்பாடுதான் கடைசி வாய்ப்பாடு. ராகத்தோடு — (பூர்ணாஹுதி மந்திரம் போல) — உரத்த குரலில் 16 – 16 =256 என்று சொல்லி முடித்தவுடன் முடித்தவுடன் ஒரு பெரிய பையன் (லீடர்) பள்ளிக்கூட மணியை எடுத்துக்கொண்டு போய் அடிப்பான். எல்லோரும் ‘’ஓய்’’ என்று கத்திக் கொண்டு வெளியே ஓடுவொம். அங்கும் 16 (எட்டின் மடங்கு) தான் கடைசி.

மணக்குது, நாற்றம் அடிக்கிறது
மணக்குது:— இதை நாற்றம் அடிக்கிறது என்ற பொருளில் இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் மணக்குது என்றால் சுகந்த மணம் வீசுகிறது என்று பொருள் —(நெய் மணக்குது, நெய் மணக்குது—சபரி மலையிலே என்ற பாட்டு பிரசித்தமானது)— . அந்தக் காலத்தில் நாற்றம் என்றால் துர் நாற்றம் என்பது அல்ல. ஆனால் இன்று நாம் துர்வாசனை என்ற பொருளில் பயன் படுத்துகிறோம். எல்லா மொழிகளிலும் காலப்போக்கில் இப்படி பொருள் மாறும். இது பெரிய விஷயமல்ல.

இலங்கைத் தமிழர்களும் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். வீரகேசரி முதலிய பத்திரிக்கைகளில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தை கிழித்து எடுத்துக்கொண்டு ‘’ஹைலைட்டர்’’(Highlighter Pen) பேனா வைத்து ஆராய்ச்சி செய்வேன். தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் போலத்தான் அவையும். இதே போலத்தான் பேச்சுத் தமிழும் இருக்கிறது. இதே போக்கை பழங்காலத் தமிழ் கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.

Sri Lanka Train to Jaffna

ஆக ஒட்டு மொத்தத்தில் எனது கருத்து சரியே. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, இனி வரும் எந்தக் காலத்திலும் சரி — சம்ஸ்கிருதக் கலப்பில்லாமல் யாரும் பேச முடியாது. இது இழுக்கு அல்ல. ஒரு மொழி வளர ஓரளவுக்கு மற்ற மொழிச் சொற்கள் தேவை. ஆனால் அந்த மொழித் தூய்மை கெடாத அளவுக்கு இதைச் செய்ய வேண்டும். இன்று எப்படி ஆங்கிலக் கலப்பிலாமல் நாம் பேச முடியாதோ அதைப் போலத்தான் சம்ஸ்கிருதமும்.

தமிழனின் ஆதங்கம்
தமிழர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை (Inferiority complex) உண்டு. சம்ஸ்கிருதத்துக்குப் பின்னர் தான் தமிழ் மொழி வந்தது, இலக்கியம் வந்தது என்று சொன்னால் அது தாழ்வு என்று நினைக்கின்றனர். எப்படியாவது தமது மொழியையும் கலாசாரத்தையும் உலகிலேயே பழையது Oldest, greatest) என்று காட்ட வேண்டும் என்பது அவர்கள் துடிப்பு. ஒரு மொழியின், மதத்தின், கலாசாரத்தின் பெருமைக்கு பழமை மட்டும் காரணமாகது. நேற்று வந்த ஆங்கில மொழியும் இஸ்லாம் மதமும் உலகெங்கும் பரவி நல்ல செல்வாக்கான நிலையில் இருப்பதைப் பார்த்தால் இது புரியும்.

அல்லூறு: மலேசியத் தமிழர்கள் சாக்கடை, ஜலதாரை என்பதற்கு அல்லூறு என்பர். இலண்டன் தமிழ் சங்கத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த (காலங்சென்ற) திரு கணபதி அவர்கள் இந்தச் சொல்லைச் சொல்லி மகிழ்வார். இது பழந்தமிழ் சொல் என்றும் மலேசியர்கள் மட்டுமே பயன்படுத்துவர் என்றும் சொல்லுவார். நான் படித்தவரை இது சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் பிற்காலத் தமிழ் நூல்களில் இருக்கிறதா என்றும் தெரியாது. கிரியா அகராதியில் (2008 பதிப்பு) இல்லை. ஒருவேளை பழந்தமிழ் சொல்தான் என்று நிரூபிக்கப்பட்டாலும் ஒரு தமிழ் சொல்லை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது. மலையாள த்தில் இன்றும் கூட வழக்கொழிந்த நிறைய பழந்தமிழ் சொற்களைப் பயன்படுத்து கின்றனர்.

தமிழ் வாழ்க! சம்ஸ்கிருதமும் வாழ்க!!

கடவுள் பெயர் என்ன? எல்/அல்- ஈலா- இடா – அல்லா!!!

EL, chicago037-1
El at Chicago Museum

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1336 ; தேதி அக்டோபர் 9, 2014.

எல் மற்றும் அல் என்பது பாபிலோனிய சுமேரிய நாகரீகங்களில் கடவுளரைக் குறிக்கும் சொல். இதே சொல் வேதங்களிலும் தமிழிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒற்றுமையைக் காணும்போது மனித குலம் ஒன்றே — அவனுக்கு இறைவனும் ஒருவனே — என்ற எண்ணம் மேலோங்கும்.

எல் என்ற தமிழ் சொல் சங்க இலக்கியத்தில் பல இடங்களிலும் கையாளப்படும் சொல் ஆகும். எல் என்றால் சூரியன், ஒளி, பெருமை, நாள், வெளிச்சம் என்று பல பொருள்கள் இருக்கின்றன. எல்லி என்பது இரவைக் குறிக்கும். வேறு சில எல் சொற்கள்:–

எல்லியறிவன் = சேவல்
எல்லிநாதன் = சந்திரன்
எல்லு = சூரியன்
எல்லிப் பகை = சூரியன்
எல் = நாள், பகல், சூரியன், பெருமை
எல்லவன் = சந்திரன், சூரியன்
எல்லம்மா = கிராம தேவதை

இதில் எல்லம்மா என்ற கிராம தேவதையும் எல் என்ற சூரியனும் இந்துக்கள் வழிபடும் தெய்வங்களாகும்.

வேதத்தில் ஆப்ரி சூக்தம் என்னும் பகுதி ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களிலும் இருக்கிறது. இதில் பாரதி, ஈலா/ இடா- சரஸ்வதி – என்று மூன்று பெண் தெய்வங்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஈலா என்பதும் ஈடா என்பதும் ஒன்றே. ல=ர=ட ஆகிய மூன்று எழுத்துக்களும் இடம் மாறும் என்பது மொழியியல் விதி. தமிழ் மொழியிலும் இதைக் காணலாம்.

பல்+ பொடி= பற்பொடி (ல=ர)
கள்+ குடியன் = கட்குடியன் (ள=ட)

((இது தெரியாத சில மொழியியல் “அறிஞர்கள்” — ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தவுடன் ‘ட’ என்னும் சப்தம் ‘ல’ என்று மென்மை யுற்றதாக உளறிக்கொட்டி கிளறி மூடியிருப்பதைக் கண்டு ரசிக்கலாம். இங்கு மட்டும் அல்ல. பசிபிக் தீவு மொழிகளிலும் இப்படி மாறி இருப்பதை என் முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். உலகில் தமிழ் மொழிக்கு மிக நெருங்கிய மொழி சம்ஸ்கிருதம் அல்லது சம்ஸ்கிருத மொழிக்கு மிக நெருங்கிய மொழி தமிழ் என்றும் சொல்லலாம். இரண்டும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள்!))

ரிக்வேதத்தில் வரும் ஈலா தேவி இன்றும் கூட குஜராத்தியர் தன் புதல்விகளுக்குச் சூட்டும் பெயர். புதன் என்னும் கிரகத்தின் மனைவி பெயரும் ஈலா. இவளே மொழிக்கும் பூமிக்கும் உரிய தேவதை என்று சாயனர் போன்ற பல பெரியோர் உரை பகரும். இந்த ஈலாவை பசுவுடன் தொடர்பு படுத்தும் வேதம். யாகங்களில் ஈலா வழிபடப்படுவதால் நெய் கையுடையாள், நெய்க் காலுடையாள் என்றும் போற்றப்படுகிறாள்.

இன்னொரு சுவையான விஷயம்—இளாவ்ருத என்ற பெயரில் பாபிலோனிய, அக்கடிய பண்பாட்டில் ஒரு கடவுள் இருக்கிறார். இவர் அனு என்னும் பெரிய கடவுளின் எடு பிடி.

இந்துக்களும் இளாவ்ரத என்ற பெயரில் ஜம்புத்வீபம் போல ஒரு பெரிய நிலப்பகுதி இருப்பதாகச் சொல்லுவர். அதன் மத்தியில்தான் மேரு ((சுமேரு)) – தங்க மேரு இருக்கிறது என்று புராணங்கள் வருணிக்கின்றன.

el-cannanite-god
Canaanite God El

மெசபொடோமியாவில் எல் – இலு – அல் — அல்லா
செமிட்டிக் இன மொழிகளில் ‘எல்’ என்பது கடவுள் என்ற பொருளில் வழங்குகிறது. அதை காளை மாட்டுடன் தொடர்பு படுத்துவர். வலிமைக்கும் மதிப்புக்கும் பெயர் எடுத்த காளையை ரிக் வேதம், இந்திரனுடன் ஒப்பிடும். சிந்து சமவெளி முத்திரைகளிலும் அதிகம் காணப்படும் விலங்கு இது.

எல் என்ற சொல் இஸ்ரேல் என்ற நாட்டின் பெயரிலும் அராபிய மொழி அல்லா (கடவுள்) என்ற பெயரிலும் வருகின்றன. எபிரேய மொழிப் பெயர்களில் ‘எல்’ சப்தம் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

பைபிளில் 230 முறை எல் பயன் படுத்தப்படுகிறது. சிரியா பகுதி உகாரிதிக் நூல்களில் 500க்கு மேலான இடங்களில் வருகின்றது. இவைகளில் பாதி இடங்களில் எல் என்ற பெயரில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடவுளைக் குறிக்கும் சொல்லாக வரும்.

கானான் பகுதி மக்கள் “எல்” என்னும் கடவுளை வழங்கினர்.

Budhadeva
Budha (planet mercury) and Ila

இதிலிருந்து அறிவது என்ன?
மானுடர் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள் — நம்முடைய மூதாதையர்கள் இந்தப் பூமியின் ஏதோ ஒரு பகுதியில் ஏதோ ஒரு காலத்தில் வசித்தபோது வனங்கிய கடவுளர் காலப்போக்கில் புதுப்புது உருவங்களையும் பெயர்களையும் பெற்றனர். அதன் எச்ச சொச்சங்களையே மேலே கண்டோம்.

அல்லாவும் ஈலாவும் ஒன்றே! எல்லும் அல்லும் எல்லம்மாவும் ஒன்றே!

“ஒன்றாகக் காண்பதே காட்சி” – அவ்வையாரின் வாக்கு!!!

ஒரே தமிழ்ப் புலவருக்கு 40 லட்சம் தங்கக் காசுகள்!

Kanishka-G66-CNG
Kanishka gold coin

கட்டுரை மன்னன்:– லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக்கட்டுரை எண்:–1334; தேதி:– 8 அக்டோபர் 2014.

பதிற்றுப் பத்து என்னும் நூல் சங்க கால இலக்கியத்தைச் சேர்ந்த 18 நூல்களில் ஒன்று. பத்துப் பாட்டு + எட்டுத்தொகை சேர்ந்து 18 நூல்கள். அவற்றில் எட்டுத்தொகையில் இடம்பெற்ற எட்டு நூல்களில் ஒன்றாம் பதிற்றுப் பத்து — சேர மன்னர்தம் கொட்டைச் சிறப்பையும் படை மறத்தையும் விளக்கிக் கூறும். ஒவ்வொரு சேர மன்னர் மீது பாடிய பத்துப் பாக்கள் வீதம் 100 இருக்க வேண்டும். ஆனால் முதல் பத்தும் கடைசி பத்தும் கிடைத்தில.

இந்த நூல் பழங்கால சேர நாட்டின் பல அதிசய பழக்க வழக்கங்களை தன்னகதே கொண்டது. இதில் பாடல்களுக்கு முன் பாடினோர் வரலாறு என்று சேர்க்கப்பட்டுள்ள பதிகப் பகுதி வியப்பான செய்திகளைத் தருகிறது. இவைகளை உறுதி செய்ய வேறு இடங்களில் தகவல் கிடைக்குமா என்று ஆராய்தல் நலம் பயக்கும். அதுவரை இதைத் தலைமுறை தலை முறையாக பாதுகாத்தல் நம் கடமை.

KumaraguptaTigerslayer

Kumara Gupta: Tiger Slayer

இரண்டாம் பத்து பாடியவர் குமட்டூர் கண்ணனார். இவர் ஒரு அந்தணர். சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிப் பாடியதற்காக அவருக்குக் கிடைத்த பரிசு 500 ஊர்கள் !! அது மட்டுமின்றி 38 ஆண்டுகளுக்கு தென்னாட்டு வருவாயில் ஒரு பகுதியும் இவருக்குக் கிடைத்ததாம்.
( பாரியிடம் இருந்த 300 ஊர்களையும் அவன் ஏற்கனவே தானமாகக் கொடுத்துவிட்டதை கபிலர் என்னும் புலவர் புறநானூற்றில் கூறியதையும் நினைவுகூறல் பொருத்தம்.)

மூன்றாம் பத்துப் பாடியவர் பாலைக் கௌதமனார். இவர் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடினார். “நீ வேண்டும் பரிசில் யாது?” — என்று சேர அரசன் புலவரை நோக்கிக் கேட்டான். அதற்கு அவர் — யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும் — என்று கூறினர். இவரும் ஒரு அந்தணப் புலவர். மன்னரும் அறிஞர்களைக் கலந்தாலோசித்து ஒன்பது வேள்விகளைச் (யாகம்) செய்தான். பத்தாம் வேள்வியைச் செய்யும்போது புலவரும் அவர் மனைவியும் காணாமற் போயினர் எனப் பதிகம் தெரிவிக்கிறது.அதவது மாயமாய் மரைந்து விட்டனர். (இது போன்ற அதிசய நிகழ்ச்சிகள் பலவற்றை ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் தந்துள்ளேன்.)

Samudra-4787f-405.60
Samudra Gupta Gold Coin

நான்காம் பத்தைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார். இவர் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்ற மன்னரைப் பாடினார். அதற்காக அவர் பெற்ற பரிசு நாற்பது லட்சம் பொன்னும், சேரன் ஆண்ட நாட்டின் ஒரு பகுதியும் எனப் பதிகம் செப்பும்.

( இவர் தொல்காப்பியர் போல காவ்ய கோத்ர அந்தணர் என்பது பெயரிலிருந்து தெரிகிறது.)

ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். இவர் பெரிய வரலாற்று அறிஞர். வரலாறு பாடிய முதல் தமிழன். ஒவ்வொரு பாட்டிலும் ஏதேனும் ஒரு வரலாற்று நிகழ்ழ்சி அல்லது போரை உவமையாக வைத்துப் பாடுவார். காளிதாசன் போல உவமை மன்னன். அவரைப் போல ஒரே பாட்டில் ஏழெட்டு உவமைகளைத் திறம்படப் பயன்படுத்துவார். இவரும் ஒரு அந்தணர். சேரன் செங்குட்டுவனைப் புகழ்ந்து இவர் பாடினார். அவன் இவருக்கு உம்பற்காடு என்னும் பகுதியில் வரும் வருவாயையும் தன் மகன் குட்டுவஞ் சேரலையும் பரிசிலாக அளித்தான் என்று பதிகம் கூறும்.

chandra gupta
Chandra Gupta Gold Coin

ஆறாம் பத்தைப் பாடியவர் காக்கை பாடினியார் நச்செள்ளியார். இவர் பெண்பாற் புலவர். இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடினார். இவர் பெண் என்பதால் நகை செய்து கொள்வதற்காக ஒன்பது துலாம் பொன்னையும் லட்சம் பொற்காசுகளையும் பெற்றார்.

ஏழாம் பத்தைப் பாடியவர் புகழ்மிகு கபிலர். புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று எல்லோராலும் புகழப்பட்ட இவர் பாரியின் ஆருயிர்த் தோழர். மூவேந்தர்களைப் பகைத்துக்கொள்ள பயந்து தமிழகமே நடுங்கிய ஞான்று அவர்களை இவர் சாணக்கியன் போலத் துச்சமாக எண்ணினார். ஜாதிமதம் பாராது பாரியின் மகள்களைத் தன் மகள் போல பாவித்து திருமணம் செய்வித்த பின்னர் தீப்பாய்ந்து உயிர் துறந்தார். அதற்கு முன்னர் தமிழ் மொழியைக் கிண்டல் செய்த வட நாட்டு மன்னன் பிரகதத்தன் என்பவனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து அவனையும் செய்யுள் இயற்றவைத்தார். இனி இவர் பற்றிப் பதிகம் தரும் தகவலைப் பார்ப்போம்:
gupta5

இவர் சேர மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடியவர். அதற்காக அவன் கொடுத்த பரிசு நூறாயிரம் பொற்காசுகள் — அது மட்டும் அல்ல — நன்றா என்னும் குன்றின் மீது கபிலரை அழைத்துச் சென்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணும் ஊர்கள் அனைத்தையும் பரிசாகக் கொடுத்தான். என்னே பெருந்தன்மை!!

எட்டாம் பத்தைப் பாடியவர் அரிசில் கிழார் — கிழார் என்பது வேளாளர்க்குரிய பட்டப் பெயர் — பேகன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் பெருஞ் சேரல் இரும்பொறையைப் பாடி ஒன்பது லட்சம் பொற்காசுகளைப் பரிசாகப் பெற்றர். அது மட்டும் அல்ல. அரசன் தன் மனைவியுடன் வெளியே வந்து, இந்த அரண்மனைக்குள் உள்ள சிம்மாசனமும் எல்லாப் பொருட்களும் உமக்கே சொந்தம் என்றான். புலவரோ பேராசை இல்லாத பெருந்தகை. ஆதலால் இவை அனைத்தும் எனக்கு வேண்டாம் என்றார்!!

ஒன்பதாம் பத்தைப் பாடியவர் பெருங்குன்றூர்க் கிழார். குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னரை இவர் பாடினார். இதற்கு அவன் 32,000 பொற்காசுகளைக் கொடுத்தான். கிருஷ்ண பரமாத்மாவுக்கு அழுக்குத் துணியில் முடித்து வைத்த அவலைக் கொடுத்து பெரும் மாட மாளிகைகளைப் பெற்ற குசேலர் —சுதாமா — போல, இவரும் திரும்பிச் சென்ற போது பெரிய வீடு வாசல்களையும் பொருட்களையும் ஏற்கனவே சேர மன்னன் அனுப்பியிருந்ததைக் கண்டு வியந்தார்.

ஒன்று, பத்து ஆகிய பதிகங்கள் கிடைக்காதது தமிழர்களின் துரதிருஷ்டமே.

586px-KumaraguptaFig

இவற்றில் இருந்து நாம் அறிவதென்ன?

தமிழ் நாட்டின் செல்வ வளம் அளப்பற்கரியது. பொற்காசுகளின் எண்ணீக்கை அபரிமிதமானது. நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் பொற்காசுகள் ஒரு மில்லி கிராமிலும் செய்ய முடியும்.

மன்னர்களின் பெருந்தன்மை கடலினும் பெரிது. இது போல புலவர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்கள் வேறு எந்த இலக்கியத்திலும் காணக் கிடைத்தில.

பார்ப்பனர்களிடத்தும் அவர்தம் யாக யக்ஞங்களிலும் மன்னர்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் பார்ப்பனர்களின் தமிழ்ப் புலமையும் இவற்றிலிருந்து தெரிகிறது.

பெண்களும் கவி பாடுவதில் சளைக்க வில்லை என்பதும் இன்றுபோல் பெண்களுக்கு அன்றும் நகை நட்டுகளில் ஆசை உண்டு என்பதும் ஒன்பது துலாம் பெற்றதில் இருந்து தெரிகிறது. ஆண் புலவர்களுக்குப் பொற்காசு! அம்மையாருக்கு தங்க பிஸ்கட்டுகள்!!!

பத்தாவது வேள்வி இயற்றும் போது மாயமாய் மறைந்த பார்ப்பனப் புலவரும் அவர்தம் மனைவியும் அதிசய நிகழ்ச்சிகளில் அடங்குவர். மேலும் ஆராய வேண்டிய விஷயம்.

பாரி என்னும் சின்ன மன்னனிடம் 300 ஊர்கள் இருந்தன. அது கபிலர் தந்த தகவல். ஒரு சேர மன்னன் ஒரு பிராமணனுக்கே 500 ஊர்கள் கொடுத்ததாகப் பதிகம் கூறுகிறது. ஆக இப்போதைய இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருப்பது போல அந்தக் காலத்தில் எவ்வளவு இருந்தன என்ற புள்ளி விவரத்தையும் சேகரிக்க வேண்டும். இது புள்ளி விவரத் துறை இயலின் கீழ் ஆராயப்பட வேண்டிய விஷயம்.
India-Gupta-Gold-Dinar-Coin3

சேர மன்னர்களின் ஆட்சிக்காலம் பற்றி பதிற்றுப்பத்து தரும் தகவலும் வரலாற்று ஆய்வுக்குத் துணை செய்யும். அவற்றைத் தனியே காண்போம்.

contact swami_48@yahoo.com

Pictures are taken from various sites;thanks.

குமரகுருபரர் அருளிய சகலகலா வல்லி மாலை

saras hindi
Saraswati stamp issued during World Hindi Conference

(With English Translation of Sakala Kala Valli Malai)

Compiled by London Swaminathan

Post No.1321; Dated 1st October 2014.

வெண் தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத்
தண் தாமரைக்கு தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே.

சகம் ஏழும் அளித்து

உண்டான் உறங்க

ஒழித்தான் பித்தாக

உண்டாக்கும் வண்ணம் கண்டான்

சுவைகொள் கரும்பே !

சகலகலா வல்லியே. !

நின்பதம் தாங்க

வெண் தாமரைக்கு அன்றி

என் வெள்ளை உள்ளம்

தண் தாமரைக்கு

தகாது கொலோ?

1.Saraswathi, Goddess of Learning! While the Lord of Preservation is asleep and the Lord of Dissolution has gone crazy and the Lord of Creation is happy in you- his sweet consort. Your abode is in the white lotus. But can you not condescend to rest your feet on the cool lotus of my simple heart?
sarastelegu
Saraswati Stamp issued during World Telugu Conference

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும் பொற்கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலா வல்லியே.

பங்கய ஆசனத்தில்

கூடும் பசும் பொன் கொடியே !

கனதனக் குன்றும்

ஐம்பால் காடும்

சுமக்கும் கரும்பே !

சகலகலா வல்லியே. !

நாடும் பொருள் சுவை சொற்சுவை தோய்தர

நாற்கவியும் பாடும் பணியில்

பணித்து அருள்வாய்

2. Goddess of all Learning! Goddess of beautiful breasts and five styled hair! Goddess of slender golden figure who rests in the lotus throne! May you graciously make me sing songs in the four genres, songs with beautiful ideas, couched in sweet language.
(Five Different styles of Hair Do are known as Aimpal Kunthal in Tamil: The five different hairdos are Kondai , Surul , Kuzal, Panichai, Mudi in Tamil.
Four different genres are 1. Asu Kavi: extempore poetry, 2.Madura Kavi= sweet poems set to music, 3.Chitra Kavi= poems composed which will fit into the drawn figure such as Chariot, Snake, Peacock etc. and 4.Visththara Kavi= detailed compositions.

sarasthanjavur

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கென்று கூடும் கொலோவுளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகலகலா வல்லியே.

உளம் கொண்டு தெள்ளித் தெளிக்கும்

பனுவல் புலவோர்

கவிமழை சிந்தக்கண்டு

களிக்கும் கலாப மயிலே !

சகலகலா வல்லியே. !

அளிக்கும்

செழும் தமிழ்த் தெள் அமுது

ஆர்ந்து

உன் அருட்கடலில்

குளிக்கும் படிக்கு

என்று கூடும் கொலோ?

3. Goddess of all Learning! The peacock dances in ecstasy on the approach of showers. So also you rejoice when the poets rain showers of song of deep thinking and clear expression. When shall I experience the beauty of Tamil, the crystalline nectar that you can bestow? When shall I immerse myself in the ocean of Your Grace?

SA saraswati
Saraswati in Saudi Arabia

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய் வட நூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே.

வட நூல் கடலும்

தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும்

தொண்டர் செந்நாவில் நின்று

காக்கும் கருணைக் கடலே !

சகலகலா வல்லியே.!

தூக்கும் பனுவல்

துறைதோய்ந்த கல்வியும்

சொற்சுவை தோய்

வாக்கும் பெருக பணித்து அருள்வாய்

4. Goddess of all Learning! Ocean of Mercy! You rest on the grateful tongues (lips) of poets and preserve the sea of Sanskrit scholarship and the rich heritage of Tamil songs. May you grant that I become proficient in the deep and varied branches of Learning! May you grant me the gift of singing felicitous songs!

thailandfiscal saras
Saraswati on Thailand Fiscal Stamp

பஞ்சப்பு இதம் தரும் செய்ய பொற்பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்தலராதென்னே நெடுந்தாட்கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவி சொத்திருந்தாய் சகலகலா வல்லியே.

நெடும் தாள் கமலத்து

அஞ்சம் துவசம் உயர்த்தோன்

செந்நாவும் அகமும்

வெள்ளைக் கஞ்சம்

தவிசு ஒத்து இருந்தாய்

சகலகலா வல்லியே. !

பஞ்சு அப்பு இதம் தரும்

செய்ய பொன் பாத பங்கேருகம்

என் நெஞ்சம் தடத்து

அலராதது என்னே?

5. Goddess of all Learning! You rest, as on the lotus throne, on the tongue (lips) and the heart of Brahma, the Creator whose banner depicts the Swan which rests on the lotus with long stalk. Your beautiful soft lotus feet are painted with rouge. Cannot those lotus feet bloom in the cool waters of my heart?
saras

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழுதாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலுமன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே

எழுதா மறையும்

விண்ணும் புவியும்

புனலும் கனலும்

வெம்காலும்

அன்பர் கண்ணும் கருத்தும்

நிறைந்தாய்

சகலகலா வல்லியே !

பண்ணும் பரதமும்

கல்வியும் தீஞ்சொல் பனுவலும்

யான் எண்ணும் பொழுது

எளிது எய்த நல்காய்

6. Goddess of all Learning! You pervade everything: you pervade the Vedas, the five elements, namely, ether, air, water, fire and the earth; you fill the vision and the hearts of Your devotees. Grant me this boon; make me proficient in all the arts whenever I wish. Make me proficient in music, in dance, in learning and in singing sweet poems.

Saraswati_by_bpresing

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கண்நல் காய் உளங்கொண்டுதொண்டர்
தீட்டும் கலைத் தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகலகலா வல்லியே.

தொண்டர் உளம் கொண்டு

தீட்டும் கலைத் தமிழ்

தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்

காட்டும் வெள் ஓதிமப் பேடே !

சகலகலா வல்லியே. !

பாட்டும் பொருளும்

பொருளால் பொருந்தும் பயனும்

என்பால் கூட்டும் படி

நின் கடைக்கண் நல்காய்

7. Goddess of all Learning! Like the white swan which separates water from milk, you also show discrimination in approving of the songs sung poets. Grant me Your benign look: vouchsafe unto me this boon that all song, meaning of song and the goal of all singing, namely, righteousness, wealth and happiness, be integrated in my life.

saras green

சொல்விற் பனமும் அவதானமும் கல்வி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளிநாசனம் சேர்
செல்விக்கு அரிதென்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகலகலா வல்லியே.

நளின ஆசனம் சேர்

செல்விக்கு அரிது என்று

ஒருகாலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெரும் செல்வப் பேறே !

சகலகலா வல்லியே. !

சொல் விற்பனமும்

அவதானமும்

கல்வி சொல்லவல்ல நல்வித்தையும்

தந்து அடிமை கொள்வாய்

8. Goddess of all Learning! You are the giver of the supreme everlasting wealth, namely the imperishable wealth of wisdom through learning. The Goddess of Wealth, Lakshmi, who has her abode in the red lotus, cannot bestow this wealth. Grant me eloquence of tongue, skill of attending to many things simultaneously, and the art of singing good songs. Grant me this boon and make me your servant.

saraswathy

சொற்கும் பொருட்கும் உயிரா மெய்ஞ்ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலத் தோய் புழக்கை
நற் குஞ்சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாளே சகலகலா வல்லியே.

நிலம் தோய் புழக்கை

நல் குஞ்சரத்தின் பிடியோடு

அரச அன்னம் நாண

நடைகற்கும் பத அம்புயத்தாளே !

சகலகலா வல்லியே. !

சொற்கும் பொருட்கும் உயிர் ஆம்

மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?

9. Goddess of all Learning! The female elephant and the queen swan are celebrated for the beauty of their gait. But they pale into insignificance before the graceful gait of your lotus feet. You are the Manifest form of True Wisdom that pervades all word and thought. Who can comprehend you?

kumaraguruparar-1
Kumaragurupara, author of Sakala Kala Valli Malai

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே

படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம்
பல்கோடி உண்டேனும்
விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ?

சகல கலா வல்லியே !

மண்கண்ட

வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்
பண் கண்ட அளவில்
பணியச் செய்வாய்

10. Goddess of all Learning! There are myriads of Gods, and celestial beings like the Creator. But is there one to equal you? Grant me this boon that all monarchs, who rule over the earth, bow unto me the moment I sing my poems.
English Translation of Sakalakalavallai malai from The Tanjore Art Gallery Guide Book, year 1954

09TH_SARASWATHI__1481666f
Saraswathi statue in Washington,USA.

contact swami_48@yahoo.com
*******************

மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள்

soothsayer-1a

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1281; தேதி: 11 செப்டம்பர் 2014

மகாவம்சம் என்றால் என்ன?

இது பாலி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் வரலாறு. இலங்கையின் வரலாறு என்பதைவிட இலங்கையில் புத்தமதம் பரவிய வரலாறு என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இலங்கை என்னும் நாடு இராமாயண காலத்தில் இருந்தே வாழும் நாடு. இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயன் என்னும் மன்னன் இலங்கையில் வந்து இறங்கிய நாள் முதல் மஹாசேனன் (கி.மு. 543 முதல் கி.பி. 361 முடிய) என்ற மன்னனின் ஆட்சி முடியும் வரையுள்ள இலங்கையின் வரலாற்றை இன்னூல் இயம்புகிறது.

காளிதாசன் எழுதிய புகழ்பெற்ற ரகுவம்சம் என்னும் காவியம் சூரியவம்ச அரசர்களின் அருமை பெருமைகளைப் போற்றிப் பாடுகிறது. அதை மனதிற்கொண்டு மஹாவம்சம் என்று பெயரிட்டனர் போலும்.

அக்கால சோதிட, ஆரூட நம்பிக்கைகளைச் சுருக்கித் தருகிறேன்.

சங்க காலத் தமிழரின் ஜோதிட நம்பிக்கைகள், கிளி ஜோதிடம் பற்றி எல்லாம் ஏற்கனவே எழுதிவிட்டேன். மஹாவம்சத்தில் குறிப்பிடப்படும் ஆருடக்காரர்கள் எப்படி அதைச் சொன்னார்கள் என்று எழுதப்படவில்லை. குஷ்டரோகிகளும் குருடர்களும் கூட ஆரூடம் சொன்னதை அது எடுத்துரைக்கிறது. ஒருவேளை உள்ளுணர்வால் (இன் ட்யூஷன்) அல்லது சாமுத்ரிகா லட்சணத்தால் இப்படிச் சொல்லி இருக்கலாம். இந்தியாவில் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்துக்கூட மந்திரி ஆவாய், அரசன் ஆவாய் என்று சொன்ன சம்பவங்கள் உண்டு.

adilabad kili
ஆரூடம் 1

பாண்டு அபயன் பட்டாபிஷேகம் என்பது பத்தாவது அத்தியாயத்தின் பெயர். அவனைக் கொல்ல பல சதிகள் நடந்ததால் ஒளிந்துவாழ வேண்டிய நிலை. அப்போது பண்டுலா என்னும் பணக்கார, வேதம் கற்ற பிராமணன் அவனைச் சந்தித்து நீ தான் பாண்டு அபயனா என்று கேட்கிறார். அவன் ஆம் என்றவுடன் நீ அரசன் ஆகப் போகிறாய், எழுபது ஆண்டுகள் அரசாட்சி புரிவாய். இப்போதே ராஜ தர்மங்களைக் கற்றுக் கொள் என்கிறார். அவனும் அவருடைய மகன் சந்தனும் அவருக்கு அரசாளும் கலையைக் கற்றுத் தருகின்றனர்.

இதில் வேறு சில உண்மைகளையும் உய்த்தறியலாம். 2600 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் ஒரு கிராமத்தில்கூட வேதம் கற்ற பிராமணன் இருந்தான். அவன் பணக்காரன். அவன் முக்காலமும் உணர வல்லவன். அவன் மாற்றானுக்கு பிரதிபலனை எதிர்பார்க்காமல் நன்மை செய்தான். அவனும் அவன் மகனும் போர்க்கலையிலும் ராஜ தந்திரத்திலும் வல்லவர்கள்.
அர்த்தசாஸ்திரம் என்னும் உலகப் புகழ்பெற்ற நூலை எழுதிய சாணக்கியன் என்ற பிராமணன நாம் எல்லோரும் அறிவோம்

மஹாபாரத காலத்தில் துரோணன் என்னும் பிராமணன் தான் பாண்டவ ,கௌரவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார் எனபது நமக்குத் தெரிந்த விஷயமே. இலங்கையில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் கற்றறிந்த பிரமணன் இருந்தான் என்றால் தமிழ்நாடு என்ன சளைத்ததா?

ஒல்காப்புகழ் தொல்காப்பியனுக்கே, நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் தான் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தார். அவருக்கு முன்னால் அகத்தியன் என்னும் வேதியன் என்பான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தான்.

1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான் (பாரதியார் பாடல்)

ஆரூடம் 2

மகாவிகாரை என்னும் 15-ஆவது அத்தியாயத்தில் மன்னனிடம் தேரர் கூறுகிறார்: உன்னுடைய சகோதரன் மகாநாமனுடைய மைந்தன் யத்தாலாயகதீசன் இனிமேல் அரசன் ஆவான். அவன் மகன் கோத அபயன், அவன் மகன் காகவனதீசன், அவன் மகன் அபயன் ஆகியோர் அடுத்தடுத்து அரசன் ஆவர். அபயன் என்பவன் துட்டகாமனி என்னும் பெயருடன் புகழ்பெற்று விளங்குவான் என்பது ஆருடம்.

புண்ய புருஷர்கள், சாது சந்யாசிகள் ஆகியோர், எதிர்காலத்தை உணர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை இந்தியாவில் உண்டு. மக்கள் அவர்கள் சொல்வதை நம்பினர் என்பதை மஹாவம்ச சரிதம் காட்டுகிறது. இது போன்ற விஷயங்கள் பவிஷ்ய புராணத்திலும் இருக்கிறது.

Congress Yagna

Congress leaders Sonia Gandhi and Rahul Gandhi doing Yagas as instructed by their astrologers. Individually they won the elections, but their party failed miserably!

ஆரூடம் 3

12 அரசர்கள் என்ற 35-ஆவது அத்தியாயத்தில் வசபன் என்ற லம்பகர்ணன் அரசன் ஆவான் என்று ஒரு ஆருடம் இருந்தது. அவனைப் பார்த்த ஒரு குஷ்டரோகியும் கூட இதை அவனிடம் சொல்கிறான். முன்னரே வசபன் என்ற பெயருள்ளவன் அரசன் ஆவான் என்று ஜோதிடர்கள் சொன்னதால் வசபன் பெயர்கொண்ட எல்லா வாலிபர்களியும் தீர்த்துக் கட்டினான் மன்னன். அப்படியும் ஆருடப் படியே ஒரு வசபன் அரசன் ஆனான். உடனே தனது ஆயுட்காலம் பற்றி ஜோதிடரைக் கலந்தாலோசித்தான். அவன் இவனுக்கு 12 வருடமே ஆயுள் என்றவுடன் புத்தமத தேரர்களைச் சந்தித்து ஆயுளை நீட்டிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிகிறான். அதன்படி தான தருமங்களைச் செய்கிறான்.

ஆரூடம் 4

13 அரசர்கள் என்ற 36-ஆவது அத்தியாயத்தில் ஒரு அந்தகன் ஆரூடம் சொன்ன அதிசய சம்பவம் வருகிறது. சங்கதீசன், சங்கபோதி, கோதகாபயன் என்ற மூன்று லம்பகர்ணர்கள் நடந்துவரும் காலடி சப்தத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒரு கண்பார்வையற்ற ஆள், மூன்று மன்னர்களை இந்த மண் தாங்கிநிற்கிறது என்றான். அவர்கள் மூவரும் விஜயகுமரன் என்ற அரசனிடம் சேவகம் செய்து பின்னர் அவனைக் கொன்றுவிடுகின்றனர். சங்கதீசன் என்ற லம்பகர்ணனை மற்ற இருவரும் சேர்ந்து முடி சூட்டுகின்றனர்.

இந்த சம்பவங்கள் அக்காலத்தில் ஜோதிடர்கள் இருந்ததையும் அவர்களை மன்னர்கள் அல்லது எதிர்கால மன்னர்கள் கலந்தாலோசித்தனர் என்பதையும் காட்டுகின்றன.

அடுத்தாற்போல “மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள்”, “மகாவம்சத்தில் படுகொலைகள்”, “மகாவம்சத்தில் தமிழ் வரலாற்றுச் செய்திகள்” என்ற ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரும்.

( கட்டுரைக்கு உதவிய மூல நூல்: மகாவம்சம், தமிழாக்கம் எஸ்.சங்கரன், சென்னை, 1962)

சதுரங்க பந்தம் – 5

Bandham 5

தமிழ் என்னும் விந்தை!
சதுரங்க பந்தம் – 5
By ச.நாகராஜன்

Post No.1260; Dated 30 August 2014.

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பாடிய இன்னொரு சதுரங்க பந்தப் பாடல் இதோ:.

திங்க ளதனை யடர்முக மாது சினேகியணி

கொங்கியல் போதினை நேர்தன மீதிற் குரோதமென்னோ

தங்கி வளரு மணைமேற் கவின்மின்னைச் சாரினிமா

மங்கை திகழும் புயராம சாமி வரோதயனே

இது கலித்துறை பாடல் ஆகும். .முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியில் 21 எழுத்துக்களும் மூன்றாம் அடியில் 21 எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களும் ஆக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்
சென்ற அத்தியாயத்தில் கொடுத்துள்ள துருவக் குறிப்பு மீண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துருவக் குறிப்பு
{ 1-64 – 2+62 — 3+50 – 4+44 – 5+36 -– 6+26 .— 7+22 –
15+78 – 17+77 – 29+76 – 35+75 – 43+74 — 53×73 – 57+72}
மொத்த எழுத்துக்கள் 78.

Bandham 5

பாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் தி
இரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும் ங்
மூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் க
நான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் ள
ஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் த
ஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் னை
ஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் ய
பதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் னே
பதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் ய
இருபத்திஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் த
முப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் ரோ
நாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் வ
ஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் மி
ஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் சா

துருவக் குறிப்பின் அடிப்படையில் மேலே கண்டபடி சதுரங்க பந்த பாடலைப் பார்த்தால் மிகச் சரியாக அமைகிறது. அமைப்பு முறையைக் கண்டு வியக்கிறோம்; பாடலை ரசிக்கிறோம்.
இன்னொரு கவிதை அமைப்பு நயத்தையும் மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் இரு சதுரங்க பந்த பாடல்களில் பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட கட்டங்களில் குறிப்பிட்ட எழுத்துக்களே மீண்டும் இரு பாடல்களிலும் வருகிறது. இது சதுரங்க பந்த கவிதை அமைப்பு ரகசியமோ?!

நம் முன்னோர்களின் கணிதத் திறனும்,. பாடல் இயற்றும் திறனும், இலக்கணத் திறனும் நம்மை வியப்படைய வைக்கின்றன அல்லவா!

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் என்னும் விந்தையை எண்ணி எண்ணி வியக்கிறோம்; மகிழ்கிறோம்!
அடுத்து பாம்பன் சுவாமிகளின் மந்திர சதுரங்க பந்த கவிதை ஒன்றைப் பார்ப்போம்.
***************** தொடரும்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

globe gold

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 செப்டம்பர் மாத காலண்டர்
(( முக்கிய 30 மேற்கோள்கள் உலக நாதர் இயற்றிய உலக நீதி என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. தமிழர்களின் 2000 ஆண்டு அனுபவத்தைச் சாறு பிழிந்து தருகிறார் உலக நாதர் ))
Tamil Wisdom: 30 Maxims from Ulaka Neethi (Universal Moral Lessons) composed by Ulakanathar.
Post No. 1258 Date: 29-8-2014.
Compiled by London Swaminathan ©

முக்கிய நாட்கள்:, செப்டம்பர் 6 சனி–ஓணம் பண்டிகை; 9 செவ்வாய்- மஹாளய பக்ஷம் ஆரம்பம்; 11 வியாழ ன்- பாரதியார் நினைவு தினம்; 17 புதன் – புரட்டாசி மாதப் பிறப்பு; 25 வியாழன் –நவராத்ரி ஆரம்பம்; 30 செவ்வாய்— பாங்கு அரை வருடக் கணக்கு முடிவு
சுபமுஹூர்த்த நாட்கள்:– 4, 8,11, 15, பௌர்ணமி – 9, அமாவாசை— 23 மஹாளய அமாவாசை, ஏகாதசி –5, 19

செப்டம்பர் 1 திங்கள்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒப்பிடுக: கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின் –(குறள்2)

Don’t spend your day without reciting hymns

செப்டம்பர் 2 செவ்வாய்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

Don’t talk ill of others
ஒப்பிடுக: இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று —(குறள் 100)

செப்டம்பர் 3 புதன்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

Never forget (to pay respects to) your mother
ஒப்பிடு: மாத்ரு தேவோ பவ (தைத்ரீய உபநிஷத்)

செப்டம்பர் 4 வியாழன்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
ஒப்பிடு: நல்லினத்தி னூங்குத் துணை யில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல் — (குறள் 460)

Neverever associate with fraudulent people

செப்டம்பர் 5 வெள்ளி

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

Don’t go to places that should be avoided
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல் பதாகும் அறிவு — (குறள் 451)

globe1

செப்டம்பர் 6 சனி
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்

ஒப்பிடு: அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது — (குறள் 181)

Don’t talk behind anyone’s back.

செப்டம்பர் 7 ஞாயிறு

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
Don’t lie consciously

ஒப்பிடு: தன் நெஞ்சறிவது பொய்யற்க –(குறள் 293)

செப்டம்பர் 8 திங்கள்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
Never play around with poison
ஒப்பிடு: தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும் –(குறள் 202)

செப்டம்பர் 9 செவ்வாய்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
ஒப்பிடு: சிற்றினம் அஞ்சும் பெருமை–(குறள் 451)
Don’t move with people of who are not at your wavelength

செப்டம்பர் 10 புதன்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
Never go alone to places you don’t know.

globe2

செப்டம்பர் 11 வியாழன்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
Never ever spoil another person
ஒப்பிடு: மறந்தும் பிறன் கேடு சூழற்க–(குறள் 204)

செப்டம்பர் 12 வெள்ளி
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
ஒப்பிடு: ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து –(குறள் 126)
Don’t go the way your mind goes

செப்டம்பர் 13 சனி
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
Don’t be a miser and bury (save) your money without eating
ஒப்பிடு: ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு –(குறள் 215)

செப்டம்பர் 14 ஞாயிறு
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
Never forget to do charity
ஒப்பிடு: ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்–(குறள் 33)

செப்டம்பர் 15 திங்கள்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
Don’t lose your temper and suffer
ஒப்பிடு: தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் –(குறள் 305)

globe gold2

செப்டம்பர் 16 செவ்வாய்
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
Never find fault with others

ஒப்பிடு: ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு –(குறள் 190)

செப்டம்பர் 17 புதன்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
Never associate with robbers and murderers

செப்டம்பர் 18 வியாழன்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
Don’t criticize the learned.

செப்டம்பர் 19 வெள்ளி
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
Never covet another’s wife
ஒப்பிடு: பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (குறள் 148)

செப்டம்பர் 20 சனி
கோயிலில்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
Don’t reside in a town where there is no temple.

globe3

செப்டம்பர் 21 ஞாயிறு
மனையாளை குற்றம்ஒன்றும் சொல்ல வேண்டாம்
Don’t criticize your wife.
ஒப்பிடு: அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை (குறள் 49)

செப்டம்பர் 22 திங்கள்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
Never step into a house where you are not respected

செப்டம்பர் 23 செவ்வாய்
மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
Never forget the words of wisdom of elders

செப்டம்பர் 24 புதன்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
Don’t move with the short tempered.

செப்டம்பர் 25 வியாழன்
காணாத வார்த்தையைக் கட் டுரைக்க வேண்டாம்
Don’t spread rumours
சான்றோர்க்கு பொய்யா விளக்கே விளக்கு (குறள் 299)

Globe Asia

செப்டம்பர் 26 வெள்ளி
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
Don’t use harsh words
ஒப்பிடு: இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது (குறள் 99)

செப்டம்பர் 27 சனி
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
Don’t begin a task without planning
ஒப்பிடு:எண்ணித் துணிக கருமம் (குறள் 467)

செப்டம்பர் 28 ஞாயிறு
செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
Never be ungrateful
ஒப்பிடு: உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு (குறள் 110)

செப்டம்பர் 29 திங்கள்
கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
Don’t split (spoil) a family

செப்டம்பர் 30 செவ்வாய்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
Never forget God (to worship)
ஒப்பிடு: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை (துன்பம்) இல –(குறள் 4)

I have selected only 30 maxims from the Ulaka Neethi composed by Ulakanathar. It is the essence of age old Tamil wisdom. All the sentences begin with Never or don’t. The beauty lies in the rhymes. It is taught at nursery level in a set tune that is never forgotten by anyone. It is like the Subhasithas in Sanskrit but with one simple line. Each sentence has very deep meaning which can be expanded into long essays with quotes from the Vedas to modern film songs!

-சுபம்-

contact swami_48@yahoo.com

‘டன்’வந்து ‘டிக்’கொண்டு போய்ட்டான்

thief2

கட்டுரை மன்னன் ; லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1256; கட்டுரை தேதி- 28 ஆகஸ்ட் 2014.

இந்தக் கட்டுரையை முன்னரே வேறு சில பிளாக்–குகளில் எழுதினேன். இவை நான் படித்த மதுரை சேதுபதி பள்ளிக்கூட நினைவுக் கதைகள். முதல் பகுதி —- ‘பிராமணர் கள் சாப்பிடும் இடம்’— 26ஆம் தேதி வெளியானது. அந்தக் கட்டுரையின் எண் 1252. அதையும் படிக்க வேண்டுகிறேன்

கற்பி! தமிழைச் சுவைபடக் கற்பி

ஒருகுருவிடம் ஒரு சிஷ்யன் வேலை பார்த்தான். அவன் மிகவும் மரியாதை தெரிந்தவன். யார் வந்தாலும் எதைச் செய்தாலும் “திரு” என்ற அடை மொழி இல்லாமல் பேசமாட்டான். ஐயங்கார்கள் “திருக்கண்ணமுது” (பாயசம்?) என்று சொல்லுவது போல அஃறிணைப் பொருட்களுக்கும் கூட “திரு” போடுவான்.

குருவுக்குப் பெரிய எரிச்சல். அவனைக் கூப்பிட்டார். டேய், மடையா! இனி திரு என்று எதற்காவவது சொன்னால் உன்னை மடத்திலிருந்து தூக்கி எறிந்து விடுவேன் என்று கோபத்துடன் கூறினார்.

சிஷ்யன் பயந்து நடுங்கிக் கொண்டே “சுவாமி, இனிமேல் “திரு” என்பது வாயிலிருந்து வரவே வராது ,இது சத்தியம் ! என்று சொல்லிப் போய்விட்டு வேலைகளைச் செவ்வனே செய்து வந்தான்.

அன்று இரவு குருவின் ஆஸ்ரமத்தில் “திரு”டன் வந்து எல்லா பொருட்களையும் தூக்கிச் சென்றான. இதைப் பார்த்த சிஷ்யன் எல்லோரையும் எழுப்புவதற்காக,

“டன் வந்து “டிக்” கொண்டு போய்ட்டான்”,
“டன் வந்து டிக் கொண்டு போய்ட்டான்”,”
டன் வந்து டிக் கொண்டு போய்ட்டான்”,
என்று பலமுறை கூச்சலிட்டான். தூக்கத்தில் எழுந்த எல்லோருக்கும் மகா கோபம்.

thief3

ஏதேனும் கெட்ட கனவு கண்டாயா? ஏன் உளறுகிறாய்? போய்த்தூங்கு என்று விரட்டினார்கள். அவர்களைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று நடந்ததைக் காட்டினான். அப்போதும் அவனுக்கு செமை அடிதான் கிடைத்தது. “சனியனே, வாயைத் திறந்து ஒழுங்காகக் கூறியிருந்தால் திருடனைப் பிடித்திருப்போமே” என்றார்கள்.

அவனோ பய பக்தியுடன் குருவின் உத்தரவை நினைவு படுத்தினான். குரு இனிமேல்– திரு– சொல்லக் கூடாது என்றதால் நான் ‘’திரு’’டன் வந்து ‘’திரு’’டிக் கொண்டு போய்விட்டான் என்பதில் திரு எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் என்றான்!!!!

விளங்காத பயல்கள்

தமிழ் மொழி வகுப்பு என்றாலே “போர்” அடிக்கும் வகுப்பு என்று பெயர் எடுத்த காலத்தில் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் (பாரதியார் பணியாற்றிய பள்ளி) எனக்கு இரண்டு பொன்னான ஆசிரியர்கள் கிடைத்தார்கள். வகுப்பு முழுதும் ஒரே “ஜோக்” குகளும் சிரிப்புமாக இருக்கும். நினைவில் நின்ற சில விஷயங்கள் மட்டும்:

சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சுந்தர ராஜ ராவ் என்று ஒரு தமிழ் ஆசிரியர் இருந்தார். நளவெண்பா போன்ற பாடல்களை சிவாஜி கணேசன் போல நடித்துக் காண்பிப்பார் (வகுப்பில்).

பாடல்களை எல்லாம் விளக்கிவிட்டு

“டேய், விளங்காத பயல்கள் எல்லாம் கையைத் தூக்குங்களடா”

என்பார். எல்லோரும் ‘கொல்’ என்று சிரிப்போம்.

தமிழில் விளங்காதவர்கள் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

ramaravana

போர் அடிக்கிறதா? இன்னும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணூ.

ராமன் ராவணனை எச்சரிக்கும் போது கூறியது:

சீதையைத் திருப்பி அனுப்பாவிடில்

உன் பேர்,——– ரிப்”பேர்” ஆகி விடும்,
உன் மானம்,—— வி”மானத்தில்” ஏறிவிடும்,
உன் கதி, ——- ச”கதி” ஆகி விடும்.

class teacher

ஒருபாட்டுக் கச்சேரிக்குப் போனேன். அவர் பாடிய ராகமோ வ”ராகம்”, போட்ட தாளமோ வே”தாளம்”. அவ்வளவு நன்றாக இருந்தது!!

சொன்ன ஆசிரியர் திரு ம.க.சிவசுப்பிரமணியம்,மதுரை.

Pictures are taken from different sites;thanks. They are not directly related to the anecdotes.

-சுபம்–

சங்கத் தமிழர் ஆண் குழந்தைகளை விரும்பியது ஏன்?

brahmin boy

ஆரிய-திராவிட வாதத்துக்கு மேலும் இரண்டு அடி!!

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1254; தேதி:— 27-8-2014

புனித திசையான வடக்கு நோக்கி உண்ணவிரதம் இருக்கும் ‘’பிராயோபவேசம்’’ என்னும் வழக்கமும், ஆண் குழந்தை பெற்று திதி முதலிய நீர்க்கடன் பெற்று சொர்க்கம் போகும் வழக்கமும் 2000 ஆண்டுப் பழமையான புறநானூற்றில் இருப்பதை விளக்கும் இக்கட்டுரை ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கைக்கு இரண்டு செமை அடி கொடுக்கிறது.

சங்க இலக்கியத்தை வரி வரியாகப் படித்தால் ஆரிய திராவிடக் கொள்கை, ஒரு உளுத்துப்போன, கறையான் அரித்த கட்டை என்பது விளங்கும். இதை சரியாகப் படிக்கததால் திராவிடங்களும் ஐராவதங்களும் வேதாசலங்களும் கக்கிய விஷப் புகை தமிழ் தெய்வத்தை மூடி மறைத்துள்ளன என்ற உண்மை பட்டெனப் பளிச்சிடும். பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் என்பதை கோப்பெரும் சோழனும் முது குடுமிப் பெருவழுதியும் சொன்ன பின்னர் இனி எதிர்ப்புக் குரல் கொடுப்பார் யாருளர்? இதற்குப் பின்னரும் அப்படி எதிர்ப்புக்குரல் கொடுத்தால், அவர்களை அம்மா, அப்பாவையே சந்தேகித்து டி.என்.ஏ. டெஸ்டுக்குப் போகும் அனாமதேய வகையறாவில் நாம் சேர்ப்போமாக!!!

ஆண்டவன் அவர்களை ரக்ஷிக்கட்டும்!!!

எல்லோருக்கும் எச்சரிக்கை !

முதுகுடுமியே! நீ போர் செய்யும் போது எச்சரிக்கை விடுத்துப் பின்னர் அறப் போர் (தர்ம யுத்தம்) செய்வாய்! பசுமாடுகள், பசுமாடு போன்ற சாந்த குணம் உடைய பிராமணர்கள், பெண்கள், நோயாளிகள், இறந்துபோன முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் முதலிய நீர்க்கடன் செய்ய இன்னும் தங்கம் போன்ற ஆண் பிள்ளைகளைப் பெறாதோர் எல்லாம் பாதுகாப்பன இடங்களுக்குச் செல்லுங்கள் என்று அறிவித்துவிட்டுப் போர் செய்கிறாயே! —–

என நெட்டிமையார் என்னும் புலவர் பாண்டிய நாடு முழுதும் யாக யக்ஞங்களைச் செய்து கொண்டாட்டக் கம்பங்களை ( யூப நெடுந்தூண்) நட்டுவைத்த பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டுவார். அந்த மன்னன் பஃறுளி ஆற்று மணல் துகள்களை விட நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் வாழ்த்துகிறார்.

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,பெண்டிரும், பிணியுடையீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறா அ தீரும்
எம் அம்பு கடிவிடுதும், நும் அரண் சேர்மின்’ என,
………………………………………….
நெட்டிமையார் பாடல், புறம்.9, பாடப்பட்டோன்:- பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

brahminboy2

பொத்தியார் வருத்தம்!
அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி,
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா’ என
என் இவண் ஒழித்த அன்பிலாள !
எண்ணாது இருக்குவை அல்லை;
என்னிடம் யாது? மற்று, இசைவெய்யோயே?

பாடியவர்:– பொத்தியார்
பாடப்பட்டோன்:– கோப்பெருஞ்சோழன் (புறம்.222)

பொத்தியார் சொல்கிறார்: சோழனே! உனக்குக் கொஞ்சம் கூட அன்பே இல்லையே! என்னைச் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் பந்தலில் உட்காரக்கூடாது. பிள்ளை பிறந்த பின் வா என்று அன்று அனுப்பி வைத்தாயே! புகழ்மிக்க பெருந்தகையே! எனக்கு ஒதுக்கிய இடம் எங்கே?

இந்தப் பாடலைப் பொத்தியார் பாடுவதற்குள் சோழ மன்னன் இறந்துவிட்டான். பொத்தியார் ((மனைவி)) குழந்தை பெற்ற பின்னர் அவர் தாமதமாக வந்ததே இதற்குக் காரணம்!

வடக்கிருத்தல்: இந்துக்கள் வட திசையை புனித திசை என்று போற்றுவர். காரணம்? இமயமலையும், அதில் சிவனுறை கயிலாயமும், புனித கங்கையும் இருக்கும் திசை வடதிசை. இதனால்தான் செங்குட்டுவனும் அவனுடைய அம்மாவுக்காக கல் எடுக்க ஒரு முறையும் கண்ணகிக்காக கல் எடுத்துக் கங்கையில் அக்கல்லைக் குளிப்பாட்ட ஒருமுறையும் ஆக மொத்தம் இரண்டு முறை இமய மலைக்குச் சென்றான்.

பாண்டவர்கள் ஒரு நாயை அழைத்துக் கொண்டு வடதிசை நோக்கி நடந்து ஒவ்வொருவராக இறந்து விழுந்த கதை மஹாபாரதத்தின் 18ஆவது பர்வத்தில் உள்ளது. பரீக்ஷித் மன்னன் பாகவத புராணம் கேட்டுக்கொண்டே உண்ணவிரதம் இருந்தது பாகவத புராணத்தில் இருக்கிறது. இந்த பிராயோபவேசம் என்னும் வழக்கத்தை ராமாயண, மஹாபாரத இதிஹாசங்கள் குறிக்கின்றன. சமணர்களும் இப்படிச் செய்வர். குமரி முதல்—இமயம் வரை உள்ள இவ்வழக்கத்தைப் புற நானூறும் குறிப்பது ஆரிய—திராவிடக் கொள்கையை வெடிவைத்துத் தகர்க்கும்.

ஆண்குழந்தைகள் பெற்றால் அவர்கள் கொடுக்கும் நீர்க்கடனானது, இறந்து போனவர்களைக் கரை ஏற்றும் என்னும் கொள்கையும் இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததை புறநானூறு உள்ளங்கை நெல்லிக் கனி என விளக்கும். இன்றும்கூட எல்லா ஜாதி மக்களும் ஆண்கள் மூலமே இறுதிக் கடன்களை முடிப்பது வெள்ளீடை மலை என விளங்கும். இந்துமத சட்டப் புத்தகங்களான ஸ்மிருதிக்களும், இறுதிச் சடங்கு பற்றிப் பேசும் எல்லா பகுதிகளிலும் ஆண் மகன்கள் பற்றியே பேசுகின்றன.

தசரதன் இறந்தவுடன், பரதனை ஆப்கனிஸ்தான் — ஈரான் நாட்டு எல்லையில் இருந்த கேகய நாட்டில் இருந்து பயங்கரமான வேகத்தில் செல்லும் குதிரை பூட்டிய ரதத்தில் உத்தரப் பிரதேசத்துக்கு அழைத்து வந்ததை வால்மீகி ராமயாணம் ‘’ரூட் மேப்’’ போட்டு விளக்குகிறது.

(( கேகயம்= கைகேயி, காண்டஹார்=காந்தாரம்=காந்தாரி. இப்பொழுதும் ஆப்கனிஸ்தானில் உள்ள காண்டஹார் நகரில் குண்டு வெடித்து பலர் சாவதை வாரம்தோறும் பத்திரிக்கையில் படிக்கிறோம். மஹாபாரத காந்தாரி, ராமாயண கைகேயி எல்லோரும் தொலைதூரத்தில் இருந்து வந்ததற்குக் காரணம் பாரதம்— அகண்ட பாரதம் ஆகக் காட்சியளித்த காலம் அது!!! ))

கோப்பெருஞ்சோழனுக்குப் புதல்வர்களுடன் கொஞ்சம் மனஸ்தாபம். உடனே உண்ணவிரத்தில் இறங்கிவிட்டார். வாழ்க்கையை வெற்றியுடன் முடித்தவர்கள், இனி வாழ வேண்டாம் என்று தீயில் குதிப்பர் அல்லது ஆற்றில் குதிப்பர் அல்லது உண்ணாவிரதம் இருப்பர். புலனழுக்கற்ற அந்தணாளன் என்று பல்லோராலும் போற்றப்பட்ட பிராமண கபிலன் தீயில் புகுந்ததையும், சபரி என்னும் வேடுவச்சி தீயில் புகுந்ததையும், குமாரில பட்டர் என்னும் மாபெரும் அறிஞன் உமியில் தீயேற்றி அணு அணுவாக உடலைக் கருக்கியதையும் என்னுடைய மற்ற 1200 கட்டுரைகளில் காண்க.

இராம பிரான் சரயூ நதியில் ஜல சமாதியில் இறந்த அன்று அவருடன் ஆயிரக் கணக்காணோர் நதியில் குதித்தனர். காரணம் பெரியோர்கள் இறக்கும் போது நாமும் இறந்தால் அவர்களுடன் நேரடியாக சொர்க்கத்துக்கு டிக்கெட் இல்லாமல் போகலாம். இதன் காரணமாக பொத்தியார், பிசிராந்தையார் என்று ஏரளமான புலவர்கள் போட்டி போட்டுக் கொண்டு — கோப்பெருஞ் சோழன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த —– பந்தலுக்கு ஓடோடி வந்தனர்.

மறுமைப் பயன் எய்த ஆண் பிள்ளைகளைப் பெறவேண்டும் என்றூ அகநானூற்றில் இரண்டு பெண்கள் கூடப் பேசிக்கொள்வர்!

இம்மை யுலகத்து இசையொடும் விளங்கி
மறுமைப் பயனும் மறுவின் றெய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம்
வாயே யாகுதல் வாய்ந்தனம் தோழி – அகம் 66
((கௌசிக கோத்ரத்து)) கோசிகன் செல்லூர் கண்ணனார்))

brahmin boy3

வள்ளுவரும் சொல்லுவார்!!

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை – திருக்குறள் 43

இறந்துபோய் தென் திசையில் உறையும் முன்னோர், தெய்வம், புதிதாக வந்த விருந்தினர், சுற்றத்தார், தான் (தனக்கு) என்ற ஐந்து பேரையும் ஆதரிப்பது கிரஹஸ்தனின் / இல்லறத்தானின் கடமை.

இதற்கு உரை எழுதிய ‘’பரி மேல் அழகர்’’ (குதிரை வாஹன அழகன்) கூறுவதாவது: பிதிரராவார் படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கு இடம் தென்றிசையாகலின் தென்புலத்தாரென்றார்.

மக்கட்பேறு என்னும் அதிகாரத்துக்கு உரை எழுதிய பரிமேலழகர், அந்த அதிகாரத்துக்குப் ‘’புதல்வரைப் பெறுதல்’’ என்று பெயர் சூட்டி, தென்புலத்தார் கடன் — புதல்வரைப் பெறுதலால் தீரும் என்று விளக்கம் தந்துள்ளார்.

சங்க இலக்கியத்தைப் படியுங்கள்! வரிக்கு வரி இந்து மதம் கொப்புளித்துப் பொங்கித் ததும்பும். தமிழர் பண்பாடு என்று எதுவுமே இல்லை, ஒரே பாரதப் பண்பாடுதான் என்ற உண்மை புலப்படும். இனியும் முழுப் பூசணீக்காயையும் சோற்றில் மறைக்க முயலும் முட்டாள்களைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கலாம், எள்ளி நகையாடலாம்!!

–சுபம்–
Pictures are taken from various websites for non commercial use; they are not connected with articles;thanks
contact swami_48@yahoo.com

Why do Hindu couples prefer boys?

brahmin boy

Why do Hindu couples prefer boys?

Research paper written by London Swaminathan
Post No.1253; Dated 26th August 2014.

In ancient India male-female ratio was not at 50-50% or nearer to that figure. Female population was less than the male population. The imbalance was due to Hindu’s preference for male children. One may wonder whether there was any proof to support this statement. I guessed it from the dowry system that was prevalent in ancient India. Men have to go to girls’ houses and beg for their hands in marriage. They have to give the girl a big Sri Dhanam (bride money) to get her. Sangam Tamil literature has also proof to support this. Only later, the dowry system turned upside down and men started asking for luxurious cars or houses etc. Once again the situation has turned and women are in more demand now.The ‘swayamvaram’ system in the Kshatria (royal) families also showed that the princes had to show their skills and valour to get a princess. Stories of Sita, Draupadi, Damayanthy, Indumathy (Kalidasa) and many others prove this.

But the main reason for preferring a boy is to perform the funeral rites and subsequent ceremonies. Hindus from the land’s end Kanyakumari to Kashmir in the north believed that they should have a male child first. They thought that their obsequies will help them to go to heaven. If the ceremonies are not done they will have to live in limbo.

Sangam Tamils also had the same beliefs like their counterparts in the North. This explodes the myth of Aryan-Dravidian Race (Racist !!) theory.

brahminboy2

Proof from 2000 year old Purananuru (222 and 9)

Kopperum Choza was a great Cholza king. He decided to go on fast unto death due to some difference of opinion with his son. In ancient India people who thought they have done their work in their life time, would fast unto death facing the North.

North was considered holy because of the Himalayas, Ganges and Kailash on it. Five Pandavas walked towards North till their bodies fell down. When great people wanted to die, particularly Kings, they were joined by the general public. We see such things in Ramayana, where thousands of people drowned themselves with Sri Rama in the River Sarayu. So a lot of Tamil poets wanted to join the king and die with him so that they can go straight to heaven. When poet Pothiyar came, the king refused him permission to sit with him because he did not have a son. So he sent him back saying, “Come Back, When you get a son”. In course of time the king died. But Pothiar came back to die at the same spot after he got a male child (Puram verse 222 by Pothiyar).

“Prayopavesam” is a ritual suicide. King Parikshit also did it by listening to Bhagavatha Purana. This also proved that there is no difference in culture in the north and the south of the country. Only the politicians and foreigners spread this lie with motives that are obvious.
The same belief was confirmed by two more verses Puram 9 and Akam 66.

Nettimaiyar praised a great Pandya King Mudukudumi Pruvazuthi for doing Dharma Yuddha (war according to rules). The Pandya king used to warn: “Brahmins, Cows, Women, Sick people and those who still do not have a male child! Please go to a secure place” (the war is going to begin any minute). This proves that those who did not get a male child were spared.

Akananuru verse sung by Sellur Kannan of Kausika Gotra also echoed the same belief. Tiruvalluvar, author of Tirukkural known as Tamil Veda said the same in Kural 43 when he listed the five duties of a family man. He said that a family man should do his duty to his ancestors— and used the word “residents of the South”. Hindus use this word for those who are dead. They believed that the dead go to the southern direction in the sky. This type of rites can be done only by male children.

brahmin boy3

Funeral rites and subsequent obsequies are performed only by male children is confirmed by the Hindu epics Ramayana and Mahabharata. Bharata was brought all the way from Iran-Afghan (Kekaya) border to Uttar Pradesh in India to do the funeral rites to his father– Emperor Dasaratha. Smritis (Hindu Law Books) are very clear about the duties of male children in this respect. All the rites regarding the ancestors are meant only for male children (sons).

This belief influenced the Hindus in preferring male children instead of girls. But once a boy is born they do not hesitate to have girl children. “Brunu hathi” (killing the foetus) was considered the worst sin. Hindus never did this in the past.

The more we study Tamil literature, the more we get enlightened!!

Pictures are taken from various websites for non commercial use;thanks.
contact swami_48@yahoo.com