சில புதிர்க் கவிதைகள்! (Post No.5104)

Written by S NAGARAJAN

 

Date: 13 JUNE 2018

 

Time uploaded in London –  9-50 am  (British Summer Time)

 

Post No. 5104

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

சில புதிர்க் கவிதைகள்!

ச.நாகராஜன்

 

முந்தைய கட்டுரைகளில் சில சம்ஸ்கிருத புதிர் ஸ்லோகங்களைப் பார்த்தோம்.

ஆயிரக் கணக்கில் இவை உள்ளன.இங்கு இன்னும் சில புதிர்க் கவிதைகளைப் பார்ப்போம்.

1

பல கேள்விகள். ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வார்த்தையில் பதில் இருக்கும்.

அப்படிப்பட்ட புதிர் ஸ்லோகம் ஒன்றைப் பார்ப்போம்:

 

கிமிச்சதி நர: காஷ்யாம்   ந்ரூபானாம் கோ ரணே ஹித: |

கோ வந்த்ய: சர்வேதேவானாம்   தீயதாமேகமுத்தரம்  ||

 

காசியில் எதை அடைய மனிதர்கள் விரும்புகின்றனர்? (ம்ருத்யு : இறத்தல்)

போரில் எது அரசர்களுக்கு உகந்தது? (ஜய: வெற்றி)

தேவர்களில் எந்த கடவுள் மிகவும் உயர்ந்தது? (ம்ருத்யுஞ்ஜய: சிவன்)

ஒரே விடை இவை மூன்றிற்கும் தரலாம் ம்ருத்யுஞ்ஜய:

 

பஹிர்லாப வகையில் உள்ள புதிர் இது:

 

A riddle of Bahirlapa variety:

 

What do men desire in Kasi? (Metyum : Death)

What is beneficial to kings in a battle ? (Jayah: Victory)

Which God is supreme among the gods? (Mrtyunjayah: Siva)

One answer may be given for all the three – (Mrtyunjayah)

(Translation by S.Bhaskaran Nair)

2

கிமகரவமஹம் ஹரிர்மஹோக்ரம்

ஸ்வபுஜவலேத கவாம் ஹிதம் விதித்சு|

ப்ரியதமதவதேன பீயதே க:

பரிணதபிம்பபலோபம: ப்ரியாயா: ||

 

இதுவும் பஹிர்லாப வகையில் உள்ள புதிர் தான். புஷ்பிதாக்ரா என்ற சந்தத்தில் அமைந்த ஸ்லோகம் இது.

 

க்ருஷ்ணனாகிய  நான் பசுக்களைக் காக்க கோவர்த்தன மலையை எனது கைகளால் என்ன செய்தேன்? (அதர: நீ தூக்கி நிறுத்தினாய்)

எது காதலரின் வாயால் முத்தமிடப்பட்டது? (அதர: உதடு)

எனது காதலியின் எந்த அங்கம் வில்வப் பழம் போல உள்ளது? (அதர: உதடு)

 

A riddle of Bahirlapa variety. Puspitagra metre.

 

What did I, Krsna, do to the mountain (Govardhana) with the might of my arms for the welfare of the cows? (Adharah : You held it)

What is kissed by the mouth of the beloved? (Adharah: lip)

What is that of my beloved, which resembles a bimba-fruit? (Adharah: lip)

(Translation by A.A.Ramanathan)

 

3

கிம் ஸ்யாத் வர்ணசதுஷ்டயேன வனஜம்       வர்ணைஸ்த்ரிமிர்பூஷணம்

ஸ்யாதாத்யேன மஹி த்ரயேன து பலம் மத்யம் த்வயம் ப்ராணதம் |

வ்யஸ்தே கோத்ரதுரங்கதாசகுசுமான்யந்தே ச சம்ப்ரேஷணம்

யே ஜானந்தி விசக்ஷணா: க்ஷிதிதலே தேஷாமஹம் சேவக: ||

 

இதுவும் பஹிர்லாப வகையில் உள்ள புதிர் தான். சார்தூலவிக்ரிதிதா என்ற சந்தத்தில் அமைந்த ஸ்லோகம் இது.

இதன் பொருள்:

நான்கு எழுத்துக்களால் அமைந்த எந்த வார்த்தை தாமரையைக் குறிக்கிறது?(குவலயம்)

மூன்று எழுத்துக்களால் அது ஒரு ஆபரணத்தைக் குறிப்பிடுகிறது. (வலயம் : கையில் அணியும் வளையல்)

முதல் எழுத்து பூமியைக் குறிக்கும் : (கு)

மூன்று எழுத்துக்களை இணைத்தால் ஒரு பழத்தைக் குறிக்கும் : (குவல) (ஈச்சம்பழம்)

இரண்டு எழுத்துக்கள் வலிமையைக் குறிக்கும் : (பலம்)

தனியாகப் பார்த்தால் குடும்பம், குதிரை தின்னும் உணவு, பூ ஆகியவற்றையும் கடைசியில் பார்த்தால் அனுப்புவதையும் குறிக்கும்.

இதை அறிந்த புத்திசாலிகள் எவரோஅவருக்கு நான் சேவகன்.

 

A Riddle of Bakiralva variety.

Sardulavikridita metre.

 

What is the word with four letters which means a lotus? (Kuvalayam)

With three letterx it meanss an ornament. (Valayam)

The first means the earth (Ku)

Three letters together mean a fruit. (Kuvala) – The Jujube-fruit.

Two together have the meaning of strength. (Balam)

Separately it means family, horsefood and flower, and at the end it means sending.

Tose clever people who knew of this, of them I am a servant.

(The answer is the word Kuvalayam)

(Translation by A.A.Ramanathan)

 

இன்னும் பல புதிர்க் கவிதைகளை பின்னர் பார்ப்போம்.

***

வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்! (Post No.5101)

Written by S NAGARAJAN

 

Date: 12 JUNE 2018

 

Time uploaded in London –  6-18 am  (British Summer Time)

 

Post No. 5101

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்!

 

.நாகராஜன்

 

மஹாபாரதத்தை அழகுறத் தமிழில் பாடியவர் வில்லிப்புத்தூரார்.

இவரை பாரதம் பாடச் செய்தவர் ஆட்கொண்டான்.

இவர் வக்கபாகையில் (சோழநாடு) வசித்தவர் என்று சொல்லப்பட்டாலும் கூட இவரது மரபு கொங்கு மரபே என்று சொல்ல வேண்டும்.

பாரதத்திலேயே கொங்கர்பிரான் ஆட்கொண்டான் என்று வருகிறது.

ஆகவே இவரது முன்னோர்கள் சோழ மன்னனின் அழைப்பின் பேரில் அங்கு சென்று காணி நிலம் பெற்று சோழனது சேனாதிபதியாக வக்க பாகையில் தங்கி இருந்திருக்க வேண்டும். வில்லிப்புத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவரே என்று கொங்கு மண்டலச்  சதகம் தனது 32ஆம் பாடலில் எடுத்துரைக்கிறது.

பாடல் இது தான்:

துன்னு மறைப்பொரு ளெல்லாம் பொதிந்து சுவை முதிர்ந்து

பன்னும் புகழ்பெறைந் தாம்வேத மென்னும் பாரதத்தைத்

தென்னன் மொழியிற் சொலச்செய்து கன்னடர்ச் செற்றதமிழ்

மன்னன் வலியனாட் கொண்டான் முனோர் கொங்குமண்டலமே

  • கொங்கு மண்டலச் சதகம் பாடல் 32

 

பாடலின் பொருள் : வேதப் பொருள்கள் உள்ளமைந்தமையால்

ஐந்தாம் வேதம் என்று போற்றப்படும் பாரதக் கதையைத் தமிழில் வில்லிப்புத்தூராரைக் கொண்டு பாடச் செய்த ஆட்கொண்டானது முன்னோரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே!

 

சோழியர் எங்கு வசித்தாலும் அவரைச் சோழியர்கள் என்றே அழைப்பர்; தொண்டைமண்டலத்தார் எந்த மண்டலத்தில் வசித்தாலும் அவரைத் தொண்டை மண்டலத்தார் என்றே அழைப்பர். அது போல ஆட்கொண்டான் வக்க பாகையில் வசித்தாலும் அவர் கொங்கர் ஆதலால் கொங்கர் எங்கு வசித்தாலும் கொங்கர் என்று சொல்லப்படுதல் போல கொங்கர் என்றே அழைக்கப்படுகிறார்.

ஆட்கொண்டான் என்னும் உபகாரி கொங்கன் என்பதை வில்லிப்புத்தூராரின் மகனான வரந்தருவார் பாரதச் சிறப்புப் பாயிரத்தில் இப்படிக் கூறுகிறார்:-

 

 

எங்குமிவ னிசைபரப்பி வருநாளில் யாமுரைத்த விந்த நாட்டிற்

கொங்கர்குல வரபதியாட் கொண்டானென் றொருவண்மைக் குரிசி றோன்றி

வெங்கலியின் மூழ்காமற் கருநடப்போர் வெள்ளத்து விழாம னான்காஞ்

சங்கமென முச்சங்கத் தண்டமிழ்நூல் கலங்காமற் றலைகண் டானே

 

ஆற்றியவிச் செல்வத்தா லளகையைவேன் றிருங்கவினா லமர ருரை

மாற்றியபொற் றடமதில்சூழ் வக்கபா கையினறத்தின் வடிவம் போலத்

தோற்றியவக் கொங்கர்பிரான் சூழ்தமிழா னாட்கொண்டான் சுற்றத் தோடு

போற்றியவிப் புவிமுழுதுந் தன்றிருப்பேர்  மொழிகொண்டே புரந்தா னம்மா

 

ஆட்கொண்டானைப் பற்றி இரட்டையர் பாடிய பாடல் ஒன்றும் உண்டு:

சாணர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயகன் தமிழ்க்கொங்கர் கோன்

பாணுற்ற வரிவண்டு சேர்வக்கை நகராதி பக்கத்திலே

யூணுக்கு வாரா திருப்பாவி ருப்பாகி யுயர்வானிலே

வீணுக்கு நின்னாக மெலிகின்ற தெவ்வாறு வேண்டிங்களே.

 

 

ஆக தமிழில் பாரதம் உருவாகக் காரணம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஆட்கொண்டான் என்னும் உபகாரி என்பது இச்சதகத்தால் விளங்குகிறது.

***

அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்! (Post No.5099)

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  13-37 (British Summer Time)

Post No. 5099

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்! (Post No.5099)

 

கோகுலாஷ்டமிக்கும் குலாம்பாய்க்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,அப்துல் காதருக்கும் அமாவாஸைக்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,ராம நவமிக்கும் ரஹீமுக்கும்  தொடர்பு உண்டோ இல்லையோ, அமெரிக்கப் பாம்புக்கும் கம்பன் சொன்ன ராமாயண வானரப் படைக்கும் கட்டாயம் தொடர்பு உண்டு!

 

ஞாயிற்றுக் கிழமை தோறும் நாங்கள் லண்டன் நேரம் காலை 7-30 முதல் 9 மணி வரை ஸ்கைப்பில் (Skype) நடத்தும் கம்பராமாயண வகுப்பில் பல விஷயங்களை அலசுவோம். இந்த வாரம் கம்பராமாயணப் பாடலில் இரண்டு சுவையான விஷயங்கள் விவாதத்துக்கு வந்தன.

 

கம்பன் சொல்கிறான்:

ஒளிவீசும் தீப்பொறி கக்கும் விழிகளை உடைய குரங்குப் படைகள் கையில் எடுத்த மரங்கள் அரக்கப் படை வீசிய அம்புகளால் துண்டாயின. அரக்கர்கள் வீசிய அம்புகள், வானரங்களின் நெஞ்சில் ஊடுருவ அவை இறந்து விழுந்தன; அந்த நிலையிலும் அரக்கர்களை கடித்து அவர்களைக் கொன்று தாமும் இறந்தன (அதாவது செத்தும் கடித்தன அல்லது சாவதும் கடிப்பதும் ஒருங்கே நிகழ்ந்தன).

 

இதோ யுத்த காண்ட நாகபாசப் படலப் பாடல்:-

 

சுடர்த்தலை நெடும்பொறி சொரியும் கண்ணன

அடர்த்து அலை நெடும் மரம் அற்ற கையன்

உடர்த்தலை வைரவேல் உருவ உற்றவர்

மிடற்றினைக் கடித்து உடன் விளிந்து போவன.

 

 

இதே போல அமெரிக்காவிலும் ஒரு சம்பவம் நடந்தது.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகானத்தில் கார்ப்பஸ் கிறிஸ்டி என்ற Corpus Christi, Texas, USA) ஊருக்கு அருகில் ஒரு   பெண்மணி  வீட்டிற்குப் பின்புறமுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது கிலுகிலுப்பைப் பாம்பு (Rattle Snake) ஒன்று தலைப்பட்டது.

 

சாரைப் பாம்பு போன்ற இத்தகைய பாம்பு வாலை ஆட்டு போது கிலுகிலுப்பை ஒலி உண்டாகும்.

 

அந்தப் பெண்மணி ‘பாம்பு, பாம்பு’ என்று அலறிய உடன், கணவர் ஓடோடி வந்து அருகிலுள்ள மண்வெட்டியால் பாம்பின்  தலையில் ஒரு போட்டு போட்டார். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகியது. அவர் பெயர் மியோ சட்க்லிப். அவருக்கு பெருமை தாங்கவில்லை. பாம்பின் தலையருகே போனார். துண்டாகிக் கடந்த தலை அவர் மீது பாய்ந்து கடிக்கவே அவர் உடலில் விஷம் ஏறி மயங்கி விழுந்தார். உடனே விமான ஆம்புலன்ஸ் வந்து அவ ரைத் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் போட்டது. கொஞ்சம் கொஞ்சமாக உ யிர் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கம்பன் பாடலில் சாகும் அல்லது செத்த குரங்குகள் கடித்து, அதுவும் இறந்தது;  கடிபட்ட அரக்கனும் இறந்தான் என்று சொன்னது மெய்யே; அவன் கண்ணால் கண்டதை எழுதுகிறான்.; காட்டு வழியாகப் போகும் போது இத்தகைய காட்சிகளைப் பார்த்து இருப்பான் போலும்!

 

கரடி தின்ன Sweet Dinner ‘ஸ்வீட் டின்னர்

 

இன்னொரு பாட்டில் யானைகளின் மூளைகளை   கரடிகள் தின்னதாகச் சொல்லி அது அவைகளுக்கு இனிய உணவாக/ விருந்தாக அமைந்தது என்கிறான். கரடிகள் பெரும்பாலும் மீன், புழுப்பூச்சிகளை த் தின்னும். ஆனால யானை போன்றவற்றின் மூளைகளைத் தின்னுவதாக கம்பன் சொல்லும் காட்சியையும் அவன் கண்ணால் கண்டான் போலும்.

 

கம்பராமாயண,  யுத்த காண்ட, நாக பாஸப் படலத்தில் சொல்கிறான்:

 

போர் புரியும் கரடிகள், மலைகளைத் தாக்கி அழிக்கும் இடிகள் போலத் தொடர்ந்து சென்று, மதம் பொழியும் யானைகளின் தலைகளைப் பிளந்தன. அதனால் வெளிப்பட்ட மூளைகளை இனிமையாகத் தின்று பசி என்னும் தீயை அனைத்தன.

 

அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு எனத்

 

தொடர்ந்தன மழை பொழி தும்பிக் கும்பங்கள்

 

இடந்தன மூளைகள் இனிதின் உண்டன

 

கடந்தன பசித் தழல் கரடி காதுவ

 

இப்படிப் போகிற போக்கில் வன விலங்குகள் பற்றியும் கம்பன் சொல்லுவது ராமாயணச் சுவையைக் கூட்டுகிறது.

வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!!

 

–சுபம், சுபம்—

 

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

ஜாகர்த்தா மியூஸியத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத கல்வெட்டு. 

இந்தோநேஷிய பாஷா லிபியில் உளது.

 

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  8-25 am  (British Summer Time)

Post No. 5098

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

 

பிராஹ்மணத் தலைவர்களுக்கு கம்போடிய மன்னர்கள் கோவில்கள் கட்டிய சுவையான தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன.

 

கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், பர்மா, இந்தோநேஷியா ஆகிய நாடுகளில் உள்ள கல்வெட்டுகளில் அங்குள்ள பிராஹ்மணர்களின் செல்வாக்கு பற்றிய அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன. யசோவர்மன் (கி.பி.889) என்னும் கம்போடிய மன்னனின் கல்வெட்டு பின்வரும் தகவலை அளிக்கிறது:-

 

‘மன்னன், கடமைகளில் தவறாதவன்; கோடி ஹோமமும் பல யக்ஞங்களும் செய்தான்; பிராஹ்மணர்களுக்கு தங்கமும் நகைகளும் வாரி வழங்கினான்’ — என்று கல்வெட்டு கூறுகிறது. அவனது காலத்தில் சைவ சமயம் தழைத்தோங்கியது.

 

 

கம்போடியாவில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பிராஹ்மணர்கள் பிரசன்னமாயிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து தொடர்ந்து வந்த பிராஹ்மணர் எண்ணிக்கையால் அவர்களின் ஜனத்தொகை அதிகரித்தது.

 

மன்னனையே இறைவனாக கருதி கோவில் கட்டுவது இரண்டாவது ஜயவர்மன் (கி.பி.802) காலத்தில் ஆரம்பித்தது. அதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்த வழக்கம் வளர்ந்தது. அங்கோர்வட் காலத்தில் வைஷ்ணவ மதம் செழித்தது.

 

பிராஹ்மணர்களின் செல்வாக்கு வளர, வளர மன்னர்களுக்கும் மேலாக அவர்கள் புகழ் பரவியது. குறிப்பாக சிவ கைவல்யர் என்னும் குடும்பத்தினர் பரம்பரையாக மன்னர்களுக்குப் புரோஹிதர்களாக விளங்கினர்.

 

நமது நாட்டில் பிரதம மந்திரிகள், முதல் மந்திரிகள், கவர்னர்கள் மாறினாலும் அவர்களிடம் வேலை பார்த்த சில அரசாங்க அதிகாரிகள் மற்றும் செயலர், டிரைவர், பியூன், சமையல்காரர் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பதால் அவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது; அவர்களின் நீண்ட கால அனுபவம் பயன்படும். இதுபோல சில பிராஹ்மணக் குடும்பங்கள் பல    மன்னர்களை உருவாக்கின. அவர்களுடைய தயவு மன்னர்களுக்குத் தேவைப்பட்டது.

எகிப்திய மன்னன் அம்னோதேப்புக்கு (அமண தேவன்= ஸ்ரமண தேவன்)துருக்கி மன்னன் தசரதன் எழுதிய கடிதம்/ கல்வெட்டுக்யூனிபார்ம் லிபியில் உளது.

மேலும் அவர்களுடைய ஸம்ஸ்க்ருத அறிவு சட்டப் புத்தகங்களையும் வேத தர்மங்களையும் அறிய உதவியது. இதனால் வெறும் புரோகிதர் பதவியில் மட்டுமின்றி சட்ட ஆலோசகர்களாகவும், அமைச்சர்களாகவும் விளங்கினர். அங்கோர்வட் சிற்பங்களில் பிராஹ்மண ஆசிரியர் துரோணர், பிராஹ்மணராக மாறிய விஸ்வாமித்ரர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கோடஸ் (COEDES) என்னும் அறிஞர் செப்புகிறார்.

 

சிற்பங்களில் உயர்குடி மக்கள் உச்சுக் குடுமியுடனும் (தலையின் உச்சியில் தூக்கிக் கட்டிய குடுமி) CHINGON, தாழ்ந்த குல மக்கள் கீழே தொங்கும் தாழ் சடையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சில ஊர்வல சிற்பங்களில் பிராஹ்மணர்கள் மட்டுமே அதைக் காண்பதாகவும் உள்ளன.

 

மன்னர்களுக்குத் தலை வணங்காத ஒரே இனம் பிராஹ்மணர்கள் என்பதாக சிற்பங்கள் காட்டும்; ஏனையோர் தாழ்ந்த தலையுடன் நிற்பர். இத இந்தியாவிலும் காணலாம். மன்னர்கள் இறைவனுக்கும் பிராஹ்மணர்களுக்கும் மட்டுமே தலை வணங்குவர், தலை தாழ்த்துவர் என்று மிகப் பழைய புற நானூற்றுப் பாடல்கள் போற்றுகின்றன.

 

தாய்லாந்து, கம்போடியாவில் புத்த மதம் ஆதிக்கம் பெற்றபோதும் பிராஹ்மணர்களுக்கே முதலிடம் தரப்பட்டது; தாய்லாந்தில் இன்று வரை இது நீடிக்கிறது.

 

கம்போடியாவில் பிராஹ்மணர்கள் க்ஷத்ரிய ஜாதியாருக்குப் பெண் கொடுத்து, பெண் எடுத்த செய்திகள்  உள. புராதன பிராஹ்மணர்களின் வழி வந்த பாகு (Bakus) என்போர் மன்னர் ஆட்சிக்கு வழி இல்லாத போது அரசு கட்டிலும் ஏறி முரசு கொட்டினர்.

 

அசோகர் கல்வெட்டுகளில் எப்படி புத்தமத ஸ்ரமணர்களுக்கும் முன்னர் பிராஹ்மண ஜாதி குறிப்பிடப்படுகிறதோ அதே போல பர்மா, தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளில் புத்த மதத்தினருக்கும் முன்னதாக பிராஹ்மண குருக்களே இடம் பெற்றனர்.

 

 

ஐயருக்கும் கோவில்கள்

சில பிராஹ்மணத் தலைவர்கள் “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று கபிலர் என்னும் புலவரை சங்கத் தமிழ் நூல்கள் போற்றுவது போல ஒழுக்க சீலர்களாகவும், அறநெறி தவறா பெருந்தகைகளாகவும் இருந்த காரணத்தால் அவர்களுக்குக் கோவில்களும் எழுப்பப்பட்டன.

 

எட்டாவது ஜயவர்மன் காலத்தில் ஜயமங்களார்த்த என்ற பிராஹ்மண புரோகிதருக்கு கோவில் கட்டப்பட்டது. இதே போல வித்யாவிசத் என்பவருக்கும் கோவில் இருந்தது. சீன யாத்ரீகர்கள் பூணுல் அணிந்த பிராஹ்மணர்களைப் பார்த்ததை குறிப்பிடத் தவறவில்லை.

 

 

ஒன்பதாம் நூற்றாண்டு முதலாவது இந்திரவர்மன் கால அங்கோர்வட்டில் சிவ சோமன் என்ற பேரறிஞரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் சங்கரரிடம் வேதாந்தம் கற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

பிராஹ்மணர்கள் கடல் கடந்து போக க்கூடாது என்று மநு தர்ம சாஸ்திரம் புகலும். பெண்கள் கடல் கடந்து போகக் கூடாது என்று தமிழ் தொல்காப்பியம் நுவலும். ஆயினும் பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு பலரும் சென்றதை கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இலங்கையின் முதல் மன்னனுக்கு – விஜயனுக்கு— அரச குல மங்கைகள் தேவைப்பட்டதால் மதுரை பாண்டிய நாட்டிலிருந்து பெண்கள் அனுப்பப்பட்டனர்; அவர்களில் ஷத்ரிய குல நங்கைகளும் அமைச்சர்களின் பிராஹ்மண குல மங்கைகளும் அடக்கம்.

 

இதே போல தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியப் பிராஹ்மணர்களின் வருகை பற்றிப் பகரும்  கல்வெட்டுகளும் உள.

 

1500 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்த  தென் கிழக்காஸிய நாடுகளின் இந்து சாம்ராஜ்யத்துக்கு விதை ஊன்றியவர்களும் அகஸ்த்யர், கௌண்டின்யர் என்ற இரண்டு பிராஹ்மணர்களே.

 

கம்போடியாவில் மட்டுமின்றி பர்மாவிலுள்ள பகான், தாய்லாந்திலுள்ள சுகோதை நகர அரச வம்சங்களுக்கும் பிராஹ்மண புரோகிதர்களே அபிஷேக ஆராதனைகளை செய்துவைத்தனர். அவர்களுக்குப் பின்னர் புத்த குருமார்கள் வந்தனர். பிராஹ்மண குருக்களை வேலைக்கு எடுத்தபோதே அவர்களுக்கு ஸம்ஸ்க்ருத நூல் அறிவோடு பௌத்த மத ஸம்ப்ரதாயங்களும் தெரிய வேண்டும் என்று புதிய தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.

 

சம்பா என்று அழைக்கபட்ட வியட்நாமில் பிராஹ்மணர் நிலை தாழ்ந்த அளவுக்கு ஏனைய நாடுகளில் தாழவில்லை. சம்பா தேசத்து போ நகர கல்வெட்டில் பிராஹ்மணர்களும் மன்னர் காலடியில் விழுந்து வணங்கியதாக எழுதப்பட்டுள்ளத்து. இத்தகைய  கல்வெட்டு வாசகத்தை இந்தியாவிலோ வேறு எங்கோ காண முடியாது.

 

தாய்லாந்தில்

தர்மராஜ (1361) என்ற மன்னன் வேத சாஸ்திர நூல்களிலும் வான சாஸ்திரத்திலும் வல்லவன் என்று ஒரு கல்வெட்டு விளம்பும். தர்மராஜ அசோக (1510) என்ற மன்னன் இந்து மதத்தையும் புத்தமததையும் ஒரு சேர ஆதரித்ததாக மற்றொரு கல்வெட்டு ;போற்றும். ஆக திருமாறன் என்னும் பாண்டிய மன்னன் வியட்நாமில் (சம்பா தேசம்) ஆளத் துவங்கியதிலிருந்து 1600-களில் முஸ்லீம் ஆக்ரமிப்பாளர்கள் வரும் வரை 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காஸிய நாடுகளில் இந்து மதம் கொடி பறந்தது என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

 

உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தொநேஷியாவில் பிராஹ்மணர் ஆதிக்கம் பற்றிய தகவல்கள் எனது நேற்றைய கட்டுரையில் (மூல வர்மன் கல்வெட்டு) உளது.

 

ஸம்ஸ்க்ருத ஆதிக்கத்தைப் பரவ விடாத  இலங்கையிலும் கூட ‘குண்ட மாலா’ என்ற ஸம்ஸ்க்ருத நூல் இயற்றப்பட்டதாக ஆராய்சியாளர் சிலர் உரைப்பர்.

-சுபம்-

Mulavarman Sanskrit Inscription of Indonesia (Post No.5093)

Written by London swaminathan

 

Date: 9 JUNE 2018

 

Time uploaded in London –  16-54  (British Summer Time)

 

Post No. 5093

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

I read the following piece of interesting information today about the oldest inscriptions in Indonesia, the largest Muslim country in the world.

 

“The oldest known inscriptions in Indonesia – we read in The Economic and Administrative History of Early Indonesia (van Naessesn and de Longh 1977)  – are those of East Borneo. Here there are seven stone sacrificial posts, called ‘yuupaas’ by archaeologists, that date from around 400 CE. What is written on them is described in the following terms:-

In clear, well written Sanskrit verses Mulavarman ‘the lord of king’, his father Asvavarman, ‘the founder of the noble race’ – and his grandfather, the great Kundunga, ‘the lord of men’ are mentioned on the occasion of a sacrifice. For that sacrifice, we read on one of the stone poles (yuupaa), this sacrificial post  has been prepared by the  chief amongst the twice born (dvija=Brahmins).

 

Apparently these priests who had come hither ( as written on the second pole) were rewarded by the King Mulavarman for their religious services.

Thus the third inscription sounds, “Let the foremost among the priests and whatsoever other pious men hear of the meritorious deed of  Muavarman, the king of illustrious and resplendent fame (let him hear ) of his great gift, his gift of cattle, of a wonder tree, his gift of land. For this multitude of pious deeds this sacrificial post has been set up by the priests.

(wonder tree= Krapaka Vriksha in gold or Soma plant?)

A Sanskrit inscription in West Java dating from around 450 CE deals with an occasion on which the Brahmins were presented with 1000 cows.

 

40,000 Brahmins!

(An inscription in the southern most village of India, Kanyakumari,  claims that the founder of the Cola dynasty, finding no Brahmins on the bank of Kaveri, brought a large number of them from Aryavarta and settled them there. His remote descendant Vira Rajendra created several brahmadeya (donation to Brahmins) villages and furnished forty thousand Brahmins with gifts of land (see Gopinath Rao, 1926)

 

Kanchi Parmacharya (1894-1994), Sri Shankaracharya Chandra Sekhara Indra Sarasvati of Kanchi Kamakoti Peetam mentioned about this inscription in 1950s. Now the world is shedding more light on it. When they discovered it, Borneo island was full of thick forests. They thought that thy were virgin forests and were surprised to find the Yupa posts inside the deep forest. Once upon a time it was a place where people lived happily.

 

Yupa post is mentioned in 2000 year old Tamil Sangam literature with the same Sanskrit word. Great Pandya King Mud Kudumi Peru Vazuthi did so many fire sacrifices (Yagas) and Kalidasa mentioned  that the Pandya king was always wearing the Yaga clothes. So Yupas were very familiar with the Tamil Pandyas and Cholzas. When Cheran Chenguttuvan was boasting about his historic march to the Himalayas, a Brahmin openly challenged him amidst a big crowd that he must stop the wars and do Yagas and Yajnas. This episode of Madala Maraiyon is in the most famous Tamil epic Silappadikaram. Instead of chopping the head of Madala Maraiyon for this open criticism, Cheran Senguttuvan the great Chera king immediately ordered for the fire sacrifices. He rewarded the Brahmin with gold equal to the weight of huge Chenguttuvan.

Source books- From Turfan to Ajanta, Edited by Eli Franco and Monika Zin, Lumbini International Research Institute, Nepal; Silappadikaram; Kanchi Paramacharyal Discourses, Kalaimakal Karyalayam.

 

–Subham–

 

ஜி.யு. போப் பற்றிய புரளி– கல்லறையில் உபநிஷத் மந்திரம் (Post No.5091)

Written by London swaminathan

 

Date: 9 JUNE 2018

 

Time uploaded in London –  8-40 am  (British Summer Time)

 

Post No. 5091

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஜி.யு. போப் பற்றிய புரளி– கல்லறையில் உபநிஷத் மந்திரம் (Post No.5091)

Picture of G U Pope

பாகிஸ்தானில் லாகூரில் ஒரு கல்லறையில் உபநிஷத் மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆங்கிலேயர் கல்லறையில்!

 

ஆக்ஸ்போர்டில் ஜி.யூ. போப் கல்லறையில் ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கப்பட்டுள்ளதாக பல, திராவிடங்கள் எழுதிக்கொண்டே இருக்கும்; ஆனால் அங்கு போய் வந்த தமிழர்கள் எனக்கு போன் செய்து, ‘ஸார் அப்படி அங்கு ஒன்றும் இல்லையே’ என்பர். என் நண்பர்கள் ஆண்டுதோறும் அங்கு சென்று கல்லறைக்கு மாலை போட்டு அஞ்சலி செய்துவருகின்றனர். அவர்களும் பார்த்ததில்லை- நான் ஒரு தமிழ் மாணவன்’ கல்லறைப் பதிவை. நிற்க.

 

அதே ஆக்ஸ்போர்டு நகரில் இருந்து வந்த மற்றொரு பெரியார் வூல்னர் (A C Woolner). ஜி.யு.போப், தமிழில் இருந்த திருவாசகம், நாலடியார், பல புற நானூற்றுப் பாடல்கள், திருக்குறள் ஆகியவற்றை மொழிபெயர்த்தார். அது போல வூல்நரும் பல ஸம்ஸ்க்ருத நூல்களை மொழி பெயர்த்தார். அவர் ஸம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், பாரசீக மொழி, சீன மொழி ஆகியவற்றைக் கற்றவர். பஞ்சாப் (பாகிஸ்தானின் லாகூரில் உளது) பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணிற்றியவர்.

 

டாக்டர் ஆல்ப்ரெட் கூப்பர் வூல்னர் 1878 மே 13ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 1936ல் இறந்தார். இந்த ஆண்டுகளுக்குள் அவர் அழியாத புகழுடைய பல நூல்களைப் படைத்தார்.

ஆக்ஸ்போர்ட் பலகலைக்கழகத்தில் பாலி, ஸம்ஸ்க்ருத மொழிகளைப் பயின்ற அவருக்கு பல விருதுகள், மான்யங்கள் கிடை   த்த பின்னர் லாகூரில் ஓரியண்டல் கல்லூரியில் பிரின்ஸிபாலாக வேலைக்குச் சேர்ந்தார்

33 ஆண்டுகளுக்கு பஞ்சாப் பலகலைக்கழகத் துணைவேந்தராக பணியாற்றினார்.

அவர் எழுதிய ஆங்கில நூல்கள்

Picture of A C Woolner

1.ப்ராக்ருத மொழிக்கு ஓர் அறிமுகம்

2.அசோகர் கல்வெட்டு மொழி

3.பாஷா-வின் 13 ஸம்ஸ்க்ருத நாடகங்களின் மொழிபெயர்ப்பு

4.குண்டமாலா (மல்லிகை மலர் மாலை) மொழிபெயர்ப்பு

5.இந்திய மாணவர்களுக்கு மொழிநூல் கையேடு

 

இது தவிர ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள்!

 

நல்ல ஆஜானு பாஹூவான ஸரீரம் படைத்த வூல்நர் மிகவும் உயரமானர்; புகழிலும் உயர்ந்தவர். அடக்கமானவர். அவரது சிலைகள் லாகூரில் பல்கலைக் கழக வளாகம், அதன் முன்னுள்ள சாலைகளில் இடம்பெற்றுள்ளது.

அவர் மால்டா ஜூரம் எனப்படும் ஒரு வகை பாக்டீரியா தாக்கி இறுதியில் நிமோனியாவால் 1936ல் இறந்தார். அவருடைய கல்லறை லாகூரில் உளது. அதில் பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தின் புகழ் பெற்ற வாக்கியங்கள் தேவ நாகரி லிபியில் பொறிகப்பட்டுள்ளதாக 1940 ஆண்டு வெளியான நினைவு நூல் கட்டுரை ஒன்று  விளம்புகிறது:-

அஸதோ மா ஸத் கமய

தமஸோ மா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய— என்பதே அந்த மந்திர வாக்கியங்கள்.

 

இதன் பொருள் என்ன?

 

மாயத் தோற்றத்தில் இருந்து என்னை உண்மை நிலைக்கு இட்டுச் செல்வாயாக

 

இருளிலிருந்து ஒளிமயமான பாதைக்கு அழைத்துச் செல்வாயாக

மரணத்திலிருந்து மரணமிலாப் பெருவாழ்வுக்கு கொண்டு போவாயாக

 

சுருக்கமான பொருள்- வீடு பேற்றினை அருள்வாயாக; அதற்கான பாதையில் செல்ல எனக்கு அருள் புரி; வழி காட்டு

–சுபம், சுபம்-

கைலாசபதி அவர்களின் ‘பாரதி ஆய்வுகள்’ (Post No.5090)

Written by S NAGARAJAN

 

Date: 9 JUNE 2018

 

Time uploaded in London –  7-32 am  (British Summer Time)

 

Post No. 5090

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 50

க.கைலாசபதி அவர்களின் ‘பாரதி ஆய்வுகள்

 

ச.நாகராஜன்

 

1

பாரதி ஆர்வலர் .கைலாசபதி அவர்கள் பாரதியியலில் பெரும் ஆர்வம் கொண்டவர். பாரதியியல் என்ற வார்த்தையையே அவர் தான் முதலில் பயன்படுத்தினார் என்று பாரதி ஆய்வுகள் என்ற அவரது இந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்தார் குறிப்பிடுகின்றனர்.

 

இந்த நூலில் 1955 முதல் 1982 முடிய 27 வருடங்களில் அவர் எழுதிய 22 கட்டுரைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஆய்வுக் கட்டுரையே.

 

.கைலாசபதி மறைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் (நவம்பர் 1982) சிதம்பர ரகுநாதன் அவர்கள் எழுதியபாரதிசில பார்வைகள் என்ற நூலுக்கு அளித்த மதிப்புரையில் அவர் பாரதியின் வாழ்க்கையையும் உலக நோக்கையும் முழுமையான் ஆய்வுக்குரியனவாகக் கருதிச் செயல்பட்டு வந்திருப்பவர்கள் சிலரே என்று குறிப்பிடுகிறார்.

உண்மை.

 

 

பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில் பாரதி  ஆய்வுகள் என்ற ஒரு நூலை எழுதத் திட்டமிட்டிருந்த கைலாசபதி அதைத் தொடங்காமலேயே மறைந்து விட்டார்அவரது கட்டுரைகளைத் தொகுத்து அவர் மனைவி சர்வமங்களம் கைலாசபதி இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை முதல் பதிப்பை மார்ச் 1984-லிலும் இரண்டாம் பதிப்பை அக்டோபர் 1987-லும் வெளியிட்டுள்ளது.292 பக்கங்கள் கொண்டது இந்நூல்.

 

 

2

இருபத்தி இரண்டு கட்டுரைகளின் தலைப்பையும் பார்த்தாலேயே ஆய்வுக் களத்தின் அகலமும் நீளமும் ஆழமும் தெரிய வரும்.

 

கட்டுரைகளின் தலைப்புகள் வருமாறு:

  • பாரதியார்பழமையும் புதுமையும் 2) பாரதியும் யுகமாற்றமும் 3) சிந்துக்குத் தந்தை 4) பாரதியும் சுந்தரம்பிள்ளையும் 5) பாரதியும் மேனாட்டுக் கவிஞரும் 6) பாரதி வகுத்த தனிப்பாதை 7) பாரதிக்கு முன் … 8) பாரதியும் வேதமரபும் 9) பாரதியாரின் கண்ணன் பாட்டும் 10) பாரதி நூல்களும் பாட பேத ஆராய்ச்சியும்சில குறிப்புகள் 11) பாரதி நூற்றாண்டை நோக்கிசெய்ய வேண்டியவைசெய்யக் கூடியவை 12) பாரதி ஆய்வுகள்வளர்ச்சியும் வக்கிரங்களும் 13) பாரதி நூல் பதிப்புகள் 14) பாரதியார் கவிதையும் தமிழ்ப் புலமையும் 15) பாரதியின் சமகாலத்தவரும் பாரதி பரம்பரையினரும் 16) இலங்கை கண்ட பாரதி 17) ஈழத்துத் தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம் (சில குறிப்புகள்) 18) சிறு சஞ்சிகைகளில் பாரதி ஆய்வுகள் 19) பாரதியின் புரட்சி 20)முற்போக்காளரின் பாரதி ஆய்வுகள் 21) பாரதியியலுக்கு ஒரு பங்களிப்பு 22) பாரதி கண்ட இயக்கவியல்

 

 

3

புத்தகம் முழுவதும் ஏராளமான ஆய்வுக் கருத்துக்களால் நிரம்பி இருப்பதால் புத்தகத்தை வாங்கிப் படிப்பதே சாலச் சிறந்தது.

 

என்றாலும் நூலாசிரியரின் சில முக்கியக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

 

 

  • முதல் கட்டுரை: பாரதியின் கவிதா வளர்ச்சியை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார் கைலாசபதி. 1) தனி மனித நாட்டத்தினால் பாடப்பட்ட பாடல்கள் 2) பாரதி நெஞ்சிலே இருந்த பழமைபுதுமை போராட்டம் காரணமாக உருவான கவிதைகள். பழமை கனிந்த மனோநிலை ஏற்பட்ட காலத்தில் இந்த இரண்டாம் காலப் பகுதி முடிவடைகிறது. 3) வேதாந்தம் நன்கு முகிழ்ந்த வேதாந்த காலப் பகுதி.

 

  • மூன்றாம் கட்டுரை: இது பாரதியின் கவிதை வளத்தை அலசுகிறது!

“நவநவமான தத்துவத்தை எல்லாம் சொல்லில் வடித்தவன் பாரதி. இசை வளத்தை அளவுடன் நிறுத்திக் கொண்டு பொருள் வளமும்  சேர்த்தான்; முன்னோரை மிஞ்சினான்.

உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் உள்ள நுண்ணிய பிணைப்பையறிந்து கொள்ளப் பாரதியை விட வேறு சிறந்த உதாரணக் கவிஞன் வேண்டுமோ?” என்கிறார் நூலாசிரியர்.

 

  • ஐந்தாம் கட்டுரை : இதில் ஆசிரியர் தரும் கருத்துக்கள் : “குடியாட்சி, ஆண் பெண் சமத்துவம், விடுதலை ஆகிய பண்புகளை விட்மனிடம் கண்டு போற்றியுள்ளார் பாரதியார். விட்மனுக்கும் பாரதிக்கும் “உள்ளக் கலப்பு” ஏற்படுவதற்குக் காரணங்கள் பல…”

பாரதியாரின் காதல் கவிதைகள் சிலவற்றிலும் ஆங்காங்கே ஷெல்லியின் சாயலைக் காணமுடிகிறது.

04) எட்டாம் கட்டுரை : இந்தியத் தத்துவ ஞானமரபின் பல்வேறு கூறுகளைப் பற்றிய அறிவும் ஈடுபாடும் பாரதியாருக்கு நிரம்ப இருந்தது என்கிறார் கைலாசபதி இந்தக் கட்டுரையில்.

 

 

05) பத்தாம் கட்டுரை: “பாரதியாரின் கவிதைகளிலே பாடபேதங்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று அவர் வாழ்நாளிலும் அவர் மறைந்த பின்னும் அவரது நூல்கள் சில வெளியிடப்பட்ட விதமாகும். அவர் இறந்த பின்னரே அவரது கவிதைகள் பெரு நூல்களாகத் தொகுக்கப் பெற்றன. இதனால் கவிஞரே அவற்றைச் சீராக வெளியிடும் வாய்ப்பிருக்கவில்லை.” என்று கூறும் ஆசிரியர்  பாரதியாரின் பாடல்களின் சுத்தமான வடிவம் நமக்குத் தெரிய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

06) பன்னிரெண்டாம் கட்டுரை : இதில் சீனி விசுவநாதன் தொகுத்த மகாகவி பாரதி நூற்பெயர்க் கோவை (ஏப்ரல் 1981) நூலைக் குறிப்பிட்டு பாராட்டுகிறார் நூலாசிரியர். 370 நூல்கள், 145 எழுத்தாளர்கள்,162 பதிப்பாளர்கள் சம்பந்தமான தகவல்களைத் தருகிறது சீனி விசுவநாதனின் தொகுப்பு நூல்.

 

இப்படி நல்லா ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகள் வளர்கையில் வக்கிர புத்தி உடையவர்களும் பாரதியை விட்டு விடவில்லை.

 

எடுத்துக்காட்டாக ஒரு உதாரணத்தை நம் முன் வைக்கிறார் கைலாசபதி.

 

“நடுநிலையாய்வு, விஞ்ஞானப் பார்வை என்பன பாரதியாராய்ச்சிகளை வளப்படுத்தும் வேளையில் வக்கிர நோக்குடன் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது. ‘பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே’ (மே 1981) என்னும் நூல், இதன் ஆசிரியர் வெற்றிமணி…. இந்நூல் காலங்கடந்த – பாமரத்தனமான – பார்ப்பனீய எதிர்ப்புடன் எழுதப்பட்டிருக்கின்றது.”

 

4

நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளுமே பாரதி ஆர்வலர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது உறுதி. பல்வேறு நோக்கங்களுடன் பல்வேறு விதமாக பாரதியை ஆய்வு செய்தவர்கள் – செய்பவர்களை – சுட்டிக் காட்டுகின்ற கட்டுரைகளும், பாரதி பாடல்களில் உள்ள பாட பேதங்களை நுணுகி ஆராய்ந்து நல்ல ஒரு பதிப்பு வெளியிடப்பட வேண்டும் என்ற நூலாசிரியரின் நோக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகளும் பாராட்டப்பட வேண்டியவை.

 

பாரதி ஆர்வலர்களின் பாரதி இயல் நூலகத் தொகுப்பில் இருக்க வேண்டிய நூல் இது.

***

 

 

 

 

தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள் (Post No.5089)

Written by london swaminathan

 

Date: 8 JUNE 2018

 

Time uploaded in London –  22-09  (British Summer Time)

 

Post No. 5089

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

மநு நீதி நூல்- Part 19

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி

தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள்    (Post No.5089)

 

3-20 இக, பர சௌக்கியங்களைத் தரும் எட்டு வகைத் திருமணங்கள் பற்றிச் சொல்லுவேன்

 

3-21. பிராமம், தெய்வம், ஆருஷம் பிராஜாபத்யம், ஆசுரம், காந்தர்வம், இராட்சஸம், பைசாஸம்,  என எட்டு வகை.

3-22. இவைகளில் உயர்ந்தது எது, தாழ்ந்தது எது என்பதையும் எதனால் பிறந்த பிள்ளைகளில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று கற்பிக்கப்படுகிறது என்பதையும் கேளீர்.

 

3-23. பிராமணனுக்கு பிராமம் முதல் காந்தர்வம் வரை ஆறும், க்ஷத்ரியனுக்கு ஆசுரம் முதல் பைசாசம் வரையுள்ள நான்கும், ஏனைய இரு வகுப்பாருக்கு இராட்சஸம் தவிரவுள்ள ஏனைய மூன்றும் சரியான விவாகங்களாம்.

3-24. இவற்றில் பிராமணனுக்கு பிராமம் முதல் நான்கும், க்ஷத்ரியனுக்கு ராட்சஸமும் , ஏனைய இரு வகுப்பாருக்கு ஆசுரமும் சிறந்தவை.

 

3-25.பிராஜாபத்யம் முதல் பைசாஸம் வரையுள்ள ஐந்தில் மூன்று உயர்வு; பின்னிரண்டு தாழ்வு. பிராமண, க்ஷத்ரியர்களுக்கு ஆசுரம், பைசாசம் இரண்டும் பொருந்தா.

3-26 க்ஷத்ரியனுக்கு காந்தர்வமும் இராக்கதமும் உயர்வாகையால்                  இரண்டையுமோ ஒன்றையோ அவர்கள் ஏற்கலாம்.

 

3-27. வேத வித்தாகவும், நல்லொழுக்கமும் உடைய பிரம்மச்சாரியை வலியச் சென்று அழைத்து புத்தாடை கொடுத்து அலங்கரித்து பெண்ணைக் கொடுப்பது பிரம்ம விவாஹம்

 

3-28. வேள்வித் தீயின் முன்னிலையில் அதைச் செய்யும் புரோகிதனுக்குப் பெண்ணைக் கொடுப்பது தெய்வ மணம்

3-29. பெண்ணுக்கு வரதட்சிணை ( பசுவும் காளை மாடும்) வாங்கிக் கொண்டு ஒருவனுக்கு மணம் புரிவிப்பது ஆருஷம்.

3-30. ஒரு பிரம்மச்சாரியை அழைத்து, மரியாதை செய்து, நீங்கள் இருவரும் அறத்துடன் வாழ்க என்று வாழ்த்திப் பெண்னைக் கொடுப்பது  பிரஜாபத்யத் திருமணம்.

 

3-31. பெண்ணைப் பெற்றவன் சொல்லும் பொருளை எல்லாம் கொடுத்து, பெண்ணை விலைக்கு வாங்கி மணப்பது ஆசுரம் (அசுரத் திருமணம்)

3-32. ஆணும் பெண்ணும் தாங்களாகவே சந்தித்து மனம் ஒருமித்துப் புரியும் திருமணம் காந்தர்வம்

3-33. ஒரு பெண்ணின் உறவினர்களைக் கொன்று பெண்னை வலியக் கடத்திச் சென்று மணம் புரிவது இராக்சஸத் திருமணம்.

3-34. தூக்கத்திலும், மது போதையிலும், பித்துப் பிடித்தும் பெண்ணைப் பறிப்பது தாழ்ந்த முறை.

3-35. நீர் வார்த்துக் கரம் பிடித்துக் கல்யாணம் செய்வது பிராமணர்களுக்கு உகந்தது. மற்றவர்களுக்குத் தேவை இல்லை. அவர்கள் வாயினால் மந்திரம் சொல்லி மணம் புரியலாம்.

3-36. முனிவர்களே, இதுவரை விவாஹ முறைகளைக் கேட்டீர்கள்; இனி அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் குணப் பாகுபாடு பற்றிச் சொல்வேன்

3-37. பிரம்ம விவாகத்தினால் பிறக்கும் சாதுவான பிள்ளையின் மூலம், அவருக்கு முந்தைய  பத்துத் தலைமுறை நரகம் செல்வது தவிர்க்கப்படும்; பின்னால் பிறக்கப்போகும் பத்துத் தலைமுறையினரும் சாதுவான பிள்ளைகளாகப் பிறப்பார்கள்.

3-38. தெய்வ விவாஹத்தில் பிறக்கும் குழந்தைகளின் பின் பிறக்கும் 7 தலைமுறைகள் கடைத்தேறுவர். ஆருஷத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் முன், பின்னுள்ள மூன்று, மூன்று தலைமுறைகள் பயனடைவர். பிரஜாபா பத்யப் பிள்ளைகளின் முன் ஆறு பின் ஆறு தலை முறைகள் கடைத்தேறுவர்.

 

3-39. பிராமம் முதலான நான்கினால் பிறக்கும் பிள்ளைகளே பிரம்ம தேஜஸ் உடையவர்கள்

3-40.இவர்கள் அழகு, வலிமை, செல்வம், அறம், புகழ், அனுபவம், கவர்ச்சி ஆகியவற்றுட 100 ஆண்டுகள் வாழ்வர்.

 

3-41. ஏனைய நான்கு வகை விவாஹத்தினால் பிறப்போர் பொய், கொலை,சூது வாது, தர்ம/வேத/யாக நிந்தனை உடையோராய் இருப்பர்.

3-42. நல்ல திருமண முறைகளால் பிறப்போர் சாதுக்களாகவும், ஏனைய முறைகளால் பிறப்போர் கெட்ட நடத்தையும் உடையவராய் இருப்பர். ஆகையால் தாழ்ந்த திருமண முறைகளை அணுகக் கூடாது.

 


எனது கருத்துகள்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் எண்வகைத் திருமணம் பற்றி வருகிறது. மநு சொன்னதை தொல்காப்பியரும் சொல்லுவதால் இமயம் முதல் குமரி வரை இந்த வழக்கம் இருந்தது தெரிகிறது

 

எட்டு வகை திருமணம்

தொல்காப்பியம் சொல்வதாவது:-

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

தொல்.பொருளதிகாம்– 1038

 

 

 

மேலும் இந்த வகைத் திருமணங்கள் இந்தியாவுக்கு வெளியே இல்லாததால் இந்துக்கள் இங்கேயே பிறந்து வளர்ந்து உருவாக்கிய கலாசாரம் இது என்பது தெரிகிறது; ஒரு இனத்தினர் வெளியிலிருந்து வந்திருந்தால் அங்கே இதன் மிச்ச சொச்சங்களாவது இருந்திருக்கும்.

 

மேலும் இந்த ஸ்லோகங்களில் பத்து தலை முறை, 100 ஆண்டுகள் முதலிய டெஸிமல் (Decimal system) முறைகள் வருவது ரிக்வேத காலம் முதல் உள்ள எண்கள். இதுவும் வெளிநாடுகளில் 2000 ஆண்டுகளுக்கு முன் இல்லை. ஆகவே இந்துக்கள் இந்த நாட்டில் உருவாக்கிய முறையே இவை.

 

முன்காலத்தில் பெண்களுக்கு ஆண்கள் வரதட்சிணை கொடுத்தது சங்கத் தமிழ் இலக்கியத்திலும் உளது.

எட்டு வகைத் திருமணங்களில் சில—- அக நானூற்றுப் பாடல்கள், சிலப்பதிகாரத்தில் தீ வலம் செய்து நடந்த திருமணங்கள், பாரி மகளிரை அசுர முறையில் மூவேந்தர் கவர முயன்றது முதலிய பல வகைத் திருமணங்களில் காண்கிறோம்.

 

அமைதியான முறையில் நடக்கும் கல்யாணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகள் நல்லபடியாக வாழ்வதை இன்றைய உளவியல் நிபுணர்களும் (Psychologists) உறுதி செய்கின்றனர். காதல் திருமணங்கள் மட்டுமே உள்ள வெளிநாடுகளில் உலகிலேயே அதிக அளவு விவாஹ ரத்து இருப்பதையும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. பெற்றோர்கள் நடத்தி வைக்கும் கல்யாணங்களில் விவாஹ ரத்து குறைவு.

எட்டு வகையான திருமணங்களை அங்கீகரித்தது உலகில் அதிக கருத்து சுதந்திரம் உள்ள அமைப்பு இந்து அமைப்பு என்பதைக் காட்டுகிறது.

 

உலகிலேயே எங்கும் காண முடியாத0—- பெண்களுக்கு அதிக உரிமை தரும்—- ஸ்வயம்வரம் என்பது இந்தியாவில் மட்டுமே இருந்தது. இந்துக்கள் வெளியில் இருந்து வந்திருந்தால் இதன் தாக்கம் அங்கேயும் இருந்திருக்கும். இத்தகைய ஸ்வயம்வரம் புராண இதிஹாச காலத்தில் இந்தியாவில் இருந்தது. வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை. ஆக இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் ஆரிய- திராவிட வாதத்துக்கு ஆப்பு வைக்கிறது.

 

-சுபம்-

வேதம் படிக்க 36 ஆண்டு! யாரைக் கல்யாணம் கட்டலாம்?- மநு (Post No.5085)

Written by london swaminathan

 

Date: 7 JUNE 2018

 

Time uploaded in London –  22-14  (British Summer Time)

 

Post No. 5085

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மநு சொல்லும் விநோதச் செய்திகள்

மநு நீதி நூல்- Part 18

Third Chapter begins

வேதம் படிக்க 36 ஆண்டு! யாரைக்  கல்யாணம் கட்டலாம்?- மநு (Post No.5085)

 

3-1.மூன்று வேதங்களையும் படிப்போர் 36 ஆண்டுகள் அல்லது 18 ஆண்டுகள் அல்லது 9 ஆண்டுகள் அல்லது வேதத்தின் ஒரு கிளையை (ஷாகா) முடிக்கும் வரை பயிலலாம்.

3-2.மூன்று அல்லது இரண்டு அல்லது ஒரு வேதத்தைப் பயின்ற பின்னர் இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைக்கவும்

3-3.வேதம் பயின்று முடித்தவனை சந்தனம், மலர் மாலை, மதுபர்க்கம் (பால்+தேன்), பசு தானம் கொடுத்து மரியாதை செய்க

3-4.இந்த பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் அழகான பெண்ணை மணக்கலாம்.

3-5. மதச் சடங்குகளைச் செய்யவும் பிரஜா உற்பத்திக்காகவும் தன் கோத்ரத்தில் சேராத தாயின் ஏழு தலைமுறைகளில் தொடர்பில்லாத ஒரு பெண்ணை கல்யாணம் கட்டு.  இது   மூன்று வருணத்தாருக்கும் பொருந்தும்.

 

 

3-6. ஆடு மாடு, தன, தான்யம் மிகுந்த குடும்பத்தில் பெண் எடு; ஆயினும் பின்வரும் பத்து குலத்தைத் தவிர்.

 

3-7.ஆண் குழந்தைகளே பெறாத குடும்பம், சடங்குகளைப் பின்பற்றாதோர், வேதம் ஓதாதோர், உடல் முழுதும் முடியுடையோர், க்ஷயரோகம், வயிற்று வலி, மூல வியாதி உடையோர், பெரு வியாதி, வெண் குஷ்டம் உடையோர், யானைக் காலர், குடும்பத்தில் பெண் எடுக்காதே.

3-8.செம்பட்டை முடி, சிவப்புக் கண்கள், உடல் முடியுடையோள், நோயாளி, கடும் சொல் உடைய பெண்கள் வேண்டாம்

3-9. நட்சத்திரம், நதி, மலை, மரம், அடிமைப் பெண்கள் , ஈன ஜாதி, பறவை, பாம்பு ஆகிய பெயர்களை உடைய பெண்கள் வேண்டாம்.

யார், யாரை மணக்கலாம்?

3-10. அழகான, நற் பெயர் உடைய, மென் குரல், மென் முடி, வெண் பற்கள், இன் சொல்லினள், அன்ன நடை உடைய பெண்கள் நல்லது

 

3-11.சஹோதரன் இல்லாதவள், தகப்பன் பெயர் தெரியாதவள் வேண்டாம். அவர்களுக்குப் பிறப்போர் புத்ரிகா, புத்ரன் ஆவர். பின்னொரு அத்யாயத்தில் விளக்கம் உளது.

3-12.தனது வருணப் பெண்ணை மணப்பது சிறப்பு; ஆயினும் இரண்டாம் கல்யாணம் செய்வதாயின் பின்வரும் கட்டளைகளை மனதிற் கொள்க

3-13. நாலாம் வருணத்தவன் (சூத்திரன்) தனது வருணத்திலும் வைஸ்யன் தனது இனம்+ நாலாம் வருணத்திலும், க்ஷத்ரியன் மற்ற இரு வருணத்திலும் பிராஹ்மணன் நால் வருணத்திலும் மணக்கலாம்.

3-14 . அந்தணனுக்கும் அரசனுக்கும் சொந்த இனத்தில் பெண் கிடைக்காவிடில் முதல் மணமே நாலாம் வருண பெண்ணைக் கூட மணக்கலாம்.

3-15. தாழ்ந்த ஜாதியில் மணப்பவர்கள், பிறக்கும் குழந்தைகளையும் நாலாம் வருணத்துக்கு இழுத்துவிடுவர்.

3-16. நாலாம் வருணத்தவனை மணப்பவன் பதிதன் என்று அத்ரி, சௌனகர், கௌதமன் பிருகு முதலியோர் கூறுவர்.

 

3-17.  தாழ்ந்தகுலப் பெண்ணுடன் படுக்கும் அந்தணன், நரகத்தை அடைவான். பிறக்கும் பிள்ளையும் பிராஹ்மணன் இல்லை.

3-18. அப்படிப் பிறக்கும் பிள்ளை கொடுக்கும் பிண்டத்தை பித்ருக்கள், தேவர்கள் ஏற்க மாட்டார்கள்.

3-19. தாழ் குலப் பெண்ணின் அதர பானமும் மூச்சுக் காற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கும் பாவத்தை உண்டாக்கும்.

3-20. அடுத்த ஸ்லோகத்தில் இம்மை மறுமைப் பயன்களை நல்கும் எட்டுவகைத் திருமணங்கள் பற்றி இயம்புவேன்

 

எனது கருத்துகள்

  1. தமிழ் இலக்கியத்தில் நக்கீரர் 48 ஆண்டுகள் வேதம் பயின்றதாக உரைகாரர் உரைப்பர். ஒரு முனிவர் வேதம் எல்லாம் படிக்க 300 ஆண்டுகள் போதவில்லை என்றும் நாலாவது ஜன்மத்தில் பயின்றாலும் ‘கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு’ என்று இந்திரன் சொன்னதாகவும் முன் ஒரு கட்டுரையில் கண்டோம். இப்போதுள்ள வேதங்களையே எவரும் முழுக்க கற்க இயலாது; அழிந்து போன வேதங்களைக் கணக்கிற் கொண்டால் பல ஜன்மங்களும் போதாது.

 

2.இந்த 36 ஆண்டு, 48 ஆண்டு மனப்பாடப் படிப்பு இந்தியாவின் தனிச் சிறப்பாகும் இத்தகைய விஷயங்கள் வேறு பண்பாட்டில் இல்லாததால், ஆரிய-திராவிட வாதம் கட்டுக்கதை என்பது வெள்ளி டை மலை என விளங்கும். வெளிநாட்டில் இருந்து இந்துக்கள் வரவில்லை. இந்த நாட்டில் தோன்றிய பண்பாடே காரணம்.

 

  1. பிராஹ்மணர்கள் நால் வ மணக்கலாம் என்பதே புரட்சிகரமான கருத்து. மற்ற வர்ந்த்தாரும் ஏனையோரை மணக்கலாம் என்பது தற்காலத்துக் கருத்.து

4.மநு, மற்ற ஸ்ம்ருதிகாரர்களின்  கருத்துகளையும் மொழிகிறார். அகவே அக்காலத்திலேயே பல ஸ்ம்ருதிகள் இருந்ததை அறிகிறோம் அக்காலத்தில் கலப்பு மணம் இருந்ததை மநுவும் கோடிட்டுக் காட்டுகிறார். மக்களுக்குப் பல ஸ்ம்ருதிகளைப் பின்பற்றும் உரிமை இருக்கையில் மநு ஸ்ம்ருதியை மட்டும் எடுத்துக் கொண்டு குறைகூறுவதில் என்ன பொருள் உளது?

 

5.யாரை மணந்து கொள்ளலாம் என்பதில் கோத்ர முறை வருகிறது; ஒரே கோத்ரத்தில் பிறந்தவரை மணக்கக் கூடாது, நெருங்கிய உறவினரை மணக்கக் கூடாது  என்பதெல்லாம் இன்றைய விஞ்ஞான உலத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

 

  1. நட்சத்திரங்களின் பெயர்கள், நதிகளின் பெயர்களை பெண்களுக்குச் சூட்டக் கூட்டாது என்பது விநோதமான கருத்து . இன்றும் நட்சத்திரப் பெயர்களான ரேவதி, அஸ்வினீ, பரணி, கிருத்திகா, ஆருத்ரா, கங்கா, நர்மதா காவேரி, ஸரஸ்வதீ என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகப் பெரும்பாலோர் பெயர்களில் காணலாம். இந்துக்கள் எல்லா இயற்கைப் பொருட்களுக்கும் பெண்களின் பெயர்களையே சூட்டுவர். இதிலிருந்து மநு மிகப் பழங்காலத்தவர் என்பது தெளிவாகிறது

 

 

7.இத்தகைய பெயர் சூட்டும் முறையும் ஏனைய பண்பாட்டில் இல்லாததால் இந்துகள் அனைவரும் இங்கு தோன்றி ஒரே கலாசாரத்தை உருவாக்கினர் என்பது பொருத்தமாகும்.

8.வியாதிகள் பற்றி மநு எச்சரிப்பது ஆரோக்கிய வாழ்வை விரும்புவோரின் பட்டியலில் மநுவும் ஒருவர் என்பது புலனாகிறது.

 

9.மூன்று வேதங்களைப் பயின்றோர் த்ரிவேதி;

நான்கு வேதங்களைப் பயின்றோர் சதுர்வேதி;

இரண்டு வேதங்களைப் பயின்றோர்  த்விவேதி என அறியப்பட்டனர். ஒரு வேதத்தைப் பயின்றோர் கூட அரிதாகி வரும் நாளில் பெயரளவுக்கே த்ரிவேதி,சத்ர்வேதி முதலிய பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அத்தகையோர் ஒருகாலத்தில் இருந்தனர்.

  1. பெண்களின் வருணனையில் அன்ன நடை யானை நடை முதலியன சங்கத் தமி ழ் இலக்கியத்தில் இருக்கிறது ஆக இமயம் முதல் குமரி வரை சிந்தனை ஒன்றே. அதுமட்டுமல்ல இக்கருத்துகள் வேறு கலாசாரத்தில் இல்லாததால் பாரத கலாசாரம் இங்கே தோன்றி இங்கே வளர்ந்தது என்பதையும் அறிக.

தொடரும்……………

 

செல்வம் சேர வாஸ்து வழி ! Clutter-ஐ ஒழியுங்கள்! (Post No.5083)

Written by S NAGARAJAN

 

Date: 7 JUNE 2018

 

Time uploaded in London –  8-39 am  (British Summer Time)

 

Post No. 5083

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

 

செல்வம் சேர வாஸ்து வழி

Clutter-ஐ ஒழியுங்கள்!

 

ச.நாகராஜன்

 

1

காசு மேலே காசு வரும் கட்டுரையைப் படித்தீர்களா? நீரை வடகிழக்கு மூலையில் வைத்தவர்களுக்கு செல்வம் சேருவதற்கான  நல்ல அறிகுறி வரும் என்று எழுதியிருந்தேன். அதில் சற்று கங்கா ஜலம் அல்லது பன்னீருடன் சில மலர்களையும் தூவலாம். தினம்தோறும் புதிய ஜலத்தை நிரப்புமாறும் இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தால் காரண்டியாக காசு வரும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

 

சார், ஒண்ணும் பலிக்கலை சார் என்று சொல்பவர்கள் இருந்தால் அவர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.

அன்பர்களுக்கு உத்வேகமூட்ட ஒரு உண்மைச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன்.

 

நெருங்கிய சொந்தம். நல்ல கூர்மையான புத்திசாலி. நல்ல உழைப்பாளி. ஆனால் உழைப்புக்கும் தீர்க்கமான புத்திக்கும் தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை. என்னிடம் ஆலோசனை கேட்ட போது

 

Clutter-ஐ ஒழிக்குமாறு ஆலோசனை கூறினேன்.

குறிப்பாக விபத்தில் சிக்கியிருந்த ஒரு ஸ்கூட்டர் பல காலமாக வீட்டு வாசலின் முன்னால் நிறுத்தப் பட்டிருந்தது. அதை உடனடியாக அகற்றுமாறு கூறினேன்.

சில மாதம் கழித்து மீண்டும் ஆலோசனையைக் கேட்டார்.

ஸ்கூட்டர் வெளியேற்றப்படவில்லை என்பதை அறிந்த நான் கண்டிப்பாக அதை அகற்றுமாறு கூறியதோடு அதை எடுத்துச் செல்பவர்களுக்கு சற்று பணம் கூடக் கொடுக்கலாம் என்று சொன்னேன்.

 

உடனடியாக ஸ்கூட்டர் அகற்றப்பட்டது.

 

மறு நாள் இந்தியாவின் தலை சிறந்த பெரிய வங்கியிலிருந்து அவருக்கு பிரமாதமான வேலை நல்ல சம்பளத்துடன் கிடைத்தது.

மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும். வருடங்கள் உருண்டோடின. மிக நல்ல அந்தஸ்து. நல்ல செல்வம் சேர்ந்தது.

சென்ற வாரம் கூட இதைப் பற்றி அவர் குடும்பம் கூறி மகிழ்ந்தது.

 

இது போல ஏராளமான உண்மைச் சம்பவங்கள் உள்ளன.

உங்கள் வீட்டு நிகழ்வும் அதில் சேர வேண்டுமானால் Clutter-ஐ அகற்றுங்கள்.

 

2

எது சார் குப்பை என்று கேட்டால் சுலபமான பதில் எது உங்களுக்குத் தேவையில்லையோ அதெல்லாம் குப்பை தான் என்று சொல்லலாம்.

 

வீட்டில் சுவர் ஓரத்தில் தொங்கும் ஒட்டடை, பேனில் படிந்து கிடக்கும் தூசி, ஆங்காங்கு பயன்படுத்தாமல் இருக்கும் டேபிள், சேர் உள்ளிட்ட பல பொருள்களின் மீதுள்ள தூசி எல்லாமே குப்பைகூளம் தான்.

 

ஓடாத கடிகாரம் : கடிகாரம் இருக்கும்; ஆனால் அது ஓடவில்லை.

 

உடனடியாக அதை ஓடும் கண்டிஷனில் ரிப்பேர் செய்யுங்கள்; அல்லது அதை வீட்டை விட்டு அகற்றி விடுங்கள்.

இதே போல பல காலம் பயன்படுத்தாத உடைந்து போன பொருள்களை சற்று கூட தாக்ஷண்யம் இன்றி வெளியில் அகற்றி விடலாம்.

 

மலர் செடிகள் வைப்பது நல்லது தான்; ஆனால் நீர் ஊற்றாமல் அது வாடி வதங்கி  இருப்பது தான் தவறு.

பழுத்துப்போன காகிதங்கள், உபயோகமற்ற டயரிகள், தேவையற்ற பாத்திரங்கள், காலி பாட்டில்கள், முக்கியமாக பால் கவர்கள், பழைய பேப்பர்கள் .. அடடா. லிஸ்ட் முடிவில்லாத ஒன்று.

இவற்றை சிறிது பணம் கிடைக்கும் என்பதற்காக சேர்த்து வைத்து வர வேண்டிய பெரிய செல்வத்தை இழக்காமல் – அது வரும் வழியைத் தடை செய்ய விடாமல் – அகற்றி விடுங்கள்.

சரி, முக்கியமான ஆவணங்கள், வீட்டுப் பத்திரம் உள்ளிட்டவை பழையதாகத் தானே இருக்கும் அவற்றை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம்.

 

மிக முக்கியமான ஆவணங்களை அழகான ஃபோல்டரில், அல்லது பையில் அல்லது பைலில் வைத்து அதைச் சுற்றி ஒரு தங்க நிற ரிப்பனைக் கட்டி விடுங்கள். போதும்.

கம்ப்யூட்டரில் கூட ஈ மெயிலில் தேவையற்ற அஞ்சல்களை அழித்து விடுங்கள்.

இது வாழ்முறைப் பழக்கமாக ஆகும் போது செல்வம் சேர விடாமல் இருக்கும் தடைகள் அகலும்.

வீட்டைச் சுற்றிலும் கூட தோட்டம் உள்ளிட்டவற்றில் குப்பைகளைச் சேர்க்கக் கூடாது.

 

தோட்டத்திலிருந்து பழைய சாமான்களை அகற்றிய பிரபலமான ஒருவர் மிக உச்சத்திற்குச் சென்ற சம்பவம் கூட உண்டு.

ஆக வடகிழக்கில் நீர் வைத்தேன்; வடக்கில் காஷ் பாக்ஸை வைத்தேன் பலனில்லை என்று வருத்தப்பட்டால் உங்கள் வீட்டில் உள்ள clutter மீது கவனம் செலுத்துங்கள். அது தான் தடை!

 

3

Cleanliness is next to Godliness என்று சும்மா சொல்லவில்லை. சுக கந்த மால்ய சோபே என்று லக்ஷ்மியை போற்றுவதற்குக் காரணம் சுத்தமான நறுமணம் கமழும் இடத்தில் இருப்பவள் அவள் என்ற உண்மையை உள்ளத்தில் இருத்தியே!

ஆக அழுக்கை அகற்ற முயற்சி செய்யும் போது நல்ல அறிகுறிகளைக் காணலாம்.

வாஸ்து சாஸ்திரம் சொல்லும் உண்மை இது.

***