பிறப்பொக்கும் எல்லா உயிரும்- வள்ளுவனும் வால்டேரும் (Post No.4620)

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 15 JANUARY 2018

 

Time uploaded in London  11-09 am

 

 

 

Post No. 4620

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

எல்லா உயிர்களும் பிறவியில் சமமாகவே இருக்கின்றன; வேற்றுமை என்பதே இல்லை; குழந்தையும் தெய்வமும் ஒன்று. பின்னர் எப்படி ஒருவரை நல்லவர் அல்லது கெட்டவர் என்று சொல்லுகிறோம்? அவரவர் செய்கையினால் இந்த வேறுபாடு தோன்றுகிறது. இதை வான் புகழ் வள்ளுவனும், பிரெஞ்சு தத்துவ அறிஞர் வால்டேரும், பகவத் கீதையின் கண்ண பிரானும், கம்பனும் அமெரிக்க  அரசியல் சாசனத்தில் ஜெப்பெர்சனும் சொல்லுகின்றனர். பிற்காலத்தில் அரசியல்வாதிகள் அனைவரும் மேடைப் பேச்சு வசன ங்களில் இதையும் சேர்த்துக் கொண்டனர்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் குறள் 972

 

பொருள்

எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதே; அங்கே வேறுபாடில்லை; செய்யும் தொழிலில் காணப்படும் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால், அவர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.

 

கி.வா. ஜகந்நாதன் எழுதிய திருக்குறள் ஆராய்ச்சிப்பதிப்பில் கம்பனும் இதையே சொல்லுவதை எடுத்துக் காட்டுகிறார்:

 

இனையதாதலின் எக்குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்

–வாலி வதைப் படலம் 115)

 

பகவத் கீதையில் கண்ணபிரானும் (4-13) சொல்கிறார்,

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகசஹ

தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம் –4-13

பொருள்

 

என்னால் குணங்களுக்குத் தக்கபடி கருமங்களை வகுத்து நான்கு வர்ண முறை உண்டாக்கப்பட்டது; அதை நான் உருவாக்கினாலும், என்னை மாறுபாடில்லாதவன் என்பதை அறிந்துகொள்.

 

இதற்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் பெரிய தத்துவ அறிஞருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய உரையிலும் இது ஜாதி அடிப்படையிலான பிரிவினை அல்ல, குணங்களின் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் அமைந்ததே என்று காட்டியுள்ளார்.

 

 

சுவாமி சித்பவானந்தர்

சுவாமி சித்பவானந்தர் எழுதிய பகவத் கீதைப் பேருரையில் இதை இன்னும் நன்கு விளக்குகிறார்:–

 

“குண பேதத்தால் சிருஷ்டி ஏற்படுகிறது. சத்வ குணம் நிறைந்திருக்கும் ஜீவன் பிராம்மணன்; சத்வ குணமும் சிறிது ரஜோ குணமும் கூடியிருப்பவன் க்ஷத்திரியன். ரஜோ குணம் பெரும்பகுதியும் சிறிது சத்துவம், தமசு ஆகியவை கூடியிருப்பவன் வைஸ்யன். தமோ குணம் பெரிதும், சிறிது ரஜோ குணமும் சேர்ந்திருப்பவன் சூத்திரன்.

 

சத்வத்தின் வர்ணம் வெண்மை. ரஜோ குணம் சிவப்பானது. தமோ குணம் கறுப்பு. பிராம்மணனுடைய நிறம் வெண்மை; க்ஷத்திரியன் செந்தாமரை போன்றவன். வைசியனுக்கு நிறம் மஞ்சள். சூத்திரன் கறுத்து இருக்கிறான். இந்நிறங்கள் ஸ்தூல சரீரத்தில் தென்படுபவைகள் அல்ல. ஸ்தூல உடலில் ஐரோப்பியர் வெள்ளையர்; ஆனால் அவர்கள் எல்லோரும் பிராம்மண இயல்புடையவர் அல்ல. அமெரிக்க இந்தியர் சிவப்பு நிறம்; ஆனால் அவர்கள் எல்லார்க்கும் க்ஷத்ரியர் இயல்பு இல்லை. மங்கோலியர் மஞ்சள் நிறம். இராமன், கிருஷ்ணர் போன்ற இந்தியர் கறுப்பு நிறம். ஆக, ஸ்தூல சரீரத்தின் நிறம் மனிதனது இயல்பை விளக்காது”.

அருமையான விளக்கம்!

xxxx

பிரான்ஸ் நாட்டின் அறிஞர் வால்டேர், “மனிதர்கள் அனைவரும் சமம் ஆனவர்களே; குணங்களினால்தான் வேறுபடுகிறார்கள்” – என்றார்.

 

‘Men are equal; it is not the birth but virtues that make the difference’.

 

xxx

 

அமெரிக்க அரசியல் சட்டத்தில் தாமஸ் ஜெஃபர்ஸன் எழுதிய வாசகங்களில் எல்லோரும் படைப்பில் சமமாகவே படைக்கப்பட்டுள்ளனர் – என்று எழுதினார். பிரெஞ்சு தத்துவ அறிஞர் ரூஸோவும் இதை மொழிந்தார். இவர்களுடைய கருத்துக்கள் பிற்காலத்தில் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டன. சுதந்திரம்- சமத்துவம் – சஹோதரத்துவம் – என்ற கோஷம்/ கொள்கை விண்ணைப் பிளந்தது.

 

“All men are created equal”

 

 

xxx

 

முகமே மனத்தின் கண்ணாடி! வள்ளுவனும் சிஸரோவும்

 

ஒருவனுடைய முக பாவங்களை வைத்து அவன் மனக் கருத்தை அறிய முடியும். இதை வள்ளுவன் சொற்களில் வடித்தான். பரதமுனி என்ற முனிவர் நாட்டியக் கலையில் இதைப் புகுத்தி முக பாவங்களிலேயே நவரஸங்களையும் காட்டும் அரிய பரத நாட்டியக் கலையை உலகிற்கு அளித்தார்; வள்ளுவன் சொன்ன கருத்துக்களை ஷேக்ஸ்பியர், ரோமானிய அறிஞரான சிஸரோ போன்ற பலரிடத்தில் காண்கையில் பெரியோர்களின் சிந்தனைப் போக்கு ஒரே மாதிரிதான் என்ற கருத்து உறுதிப் படுகிறது.

 

வள்ளுவன் சொன்னான்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் – 706

 

பொருள்

ஒருவனுடை உருவம் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல உள்ளக் கருத்துக்களை முகமானது பிரதிபலிக்கும்.

இந்த உரை பெரும்பாலான நூல்களில் காணப்படும்; அது சரியன்று.

 

பளிங்கு என்பது ஸ்படிகம்; ஆங்கிலத்தில் கிறிஸ்டல் CRYSTAL   என்று சொல்லுவர். அதன் தன்மை என்னவென்றால் பக்கத்திலுள்ள பொருட்களின் நிறத்தை அப்படியே அது எடுத்துக் கொள்ளும்– சிவப்பு நிற பொருளின் அருகே வைத்தால் அதுவும் அப்படியே சிவப்பாகிவிடும். இப்படி ஒருவன் உள்ளத்தில் எழும் உணர்வுகளுக்கு ஏற்ப முகத்தின் பாவமோ நிறமோ மாறும். இதுவே சரியான உரை.

 

கி. வா ஜகந்நாதன் எழுதிய ஆராய்ச்சிப் பதிப்பில் இந்தக் கருத்தை எடுத்து காட்டி அதற்குச் சமமான பாடல்களையும் பிற பாடல்களையும் காட்டி இருக்கிறார். அது பளிங்கு என்பது CRYSTAL ஸ்படிகம் என்பதை உறுதிப் படுத்தும்

 

ஈர்ந்த நுண்பளிங்கெனத் தெளிந்த வீர்ம்புனல்

பேர்ந்தொளிர் நவமணி படர்ந்த பித்திகை

சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலான்

ஓர்ந்துணர் வில்லவர் உள்ளம் ஒப்பது

 

பம்பைப் படலம், கம்ப ராமாயணம்

 

முகம் காட்டும் உணர்வு பற்றி அகம், புறத்தில் உள்ளது.

முன்னம் காட்டி முகத்தின் உரையா- அகம்; 5-19

 

முன்னம் முகத்தின் உணர்ந்தவர் —  புறம் 3; 250

 

இது தவிர நான்மணிக்கடிகை, பழமொழி, பெருங்கதை ஆகிய நூல்களில் வரும் மேற்கோள்களையும் கி. வா.ஜ. வின் ஆராய்ச்சிப் பதிப்பு காட்டும்.

 

ஷேக்ஸ்பியரும் இக்கருத்தை ஹாம்லெட் நாடகத்தில் சொல்லுவார்.

“there is a kind of confession in your looks which your modesties have not craft enough to colour” – Hamlet , Act 2, Scene 2

xxx

 

 

ஆத்மாவின் சித்திரமே முகத்தின் தோற்றம் – என்று ரோமானிய அறிஞர் சிஸரோ, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார்.

 

மனத்தின் கண்ணாடி முகம்; கண்கள் குறிப்பை உணர்த்தும் அவயம்  என்றும் சிஸரோ சொன்னார்.

 

 

“The countenance is the portrait of the soul”- Cicero

 

“All action is of the mind and the mirror of the mind is face, its index the eyes”- Cicero

 

 

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற தமிழ்ப் பழமொழியும் பல மொழிகளில் உள்ளது.

 

‘Face is the index of the Mind’-  English proverb

 

 

 

 

ஒன்றே போல் சிந்திப்பர் சான்றோர் (Great Men Think Alike)- என்பது உலக வழக்கு!!

 

TAGS: — சிஸரோ, வால்டேர், பளிங்கு முகம், மனம் பிறப்பொக்கும், எல்லா உயிரும், வள்ளுவன்

 

–subham–

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

Research Paper Written by London Swaminathan 

 

Date: 14 JANUARY 2018

 

Time uploaded in London  11-28 am

 

 

 

Post No. 4616

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சென்னையில் 2107 டிசம்பரில் நடந்த சுதேசி மஹாநாட்டுக்கு அனுப்பிய நீண்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கம் இது.  தமிழில் சிலப்பதிகாரம் எளிதில் கிடைப்பதால் பொருத்தமான விஷயங்கள் வரும் காதைகளின் பெயர்களை மட்டும் அளிக்கிறேன். முடிவுரையில் எனது துணிபு என்ன என்பதை உரைக்கிறேன்

 

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியால் புகழப்பட்ட சிலப்பதிகாரம், தமிழ் மொழியில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. அவர் சமணர் என்று ஒரு கொள்கை உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இந்துமதமே மிகவும் புகழ்ப்படுகிறது. பலருக்கும் தெரியாத ஒரு அதிசய விஷயம் என்றால், இதில் பிராமணரை இளங்கோ புகழ்ந்து தள்ளுவதாகும். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரிகளின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட காப்பியத்தின் நாலில் அல்லது ஐந்தில் ஒரு பகுதியாகும்.

 

மேலும் காப்பியத்தின் கதைப் போக்கில் உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்புவதும் பிராமண கதா பாத்திரம் மூலமே.

காப்பியத்தின் முதல் பகுதியில் கண்ணகி-கோவலன் திருமணத்தை அக்கினி சாட்சியாக பார்ப்பன புரோகிதர்கள் நடத்திய செய்தியில் இருந்து கடைசியில் மாடல மறையோன் என்னும் பார்ப்பனர் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை சொல்லுவது வரை ஏராளமான பிராமணர்களைச் சந்திக்கிறோம்.

 

மாடல மறையோன் என்ற பிராமணரும், பராசரன் என்ற பிராமணரும் முக்கிய பிராமண கதாபாத்திரங்கள் ஆவர். இவர்களில் மிகச் செல்வாக்குடைவர் பிராமண கதாபாத்திரம் மாடல மறையோன். அவர் மூலம் மாதவி, மணிமேகலை, மாதரி, கோவலன்- கண்ணகி யின் பெற்றோர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்றும் இளங்கோ கூறுகிறார்.

 

பிராமண புரோகிதர்களுடன் தீ வலம் வந்து நடந்த கல்யாணத்தை முதல் முதலில் சொன்னவர் இளங்கோ.

 

ஆலமர் செல்வன் என்ற சிறுவன் பராசரன் என்ற முதிய பிராமணருடன் போட்டி போட்டுக் கொண்டு வேதம் சொன்னவுடன் தனது தங்க நகை மூட்டையை அந்தச் சிறுவனிடம் கொடுத்த காட்சியையும் இளங்கோ வருணித்து பிராமணர்களின் தன்னலமற்ற போ க்கையும் காட்டுகிறார்.

 

மாடல மறையோனும் பராசரனும் சதுர்வேதிகள்; நான்கு வேதங்களின் கரை கண்டவர்கள். இதில் மாடல மறையோன்  4 காதைகளில் வந்து பெரும்பணி ஆற்றுகிறார். பாண்டிய  நாட்டில் 1000 பொற்கொல்லர்கள் பலி கொடுக்கப்பட்டது, சோழ நாட்டின் அக்கால அரசியல் நிலை ஆகியவற்றையும் சொல்கிறார்.

பிராமண தூதர், பிராமண நடிகர் ஆகியோரையும் நமக்கு இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்துகிறார்.

 

மேலும் (ஆராய்ச்சி) “மணி நா ஓசை கேட்காத பாண்டிய நாட்டில் மறை (வேத) ஒலி” கேட்டே பாண்டிய மன்னர் துயில் எழுவான் என்கிறார் இளங்கோ

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பான ஒரு செய்தியைக் கூறி பிராமணரின் செல்வாக்கைக் காட்டுகிறார் இளங்கோ.

சேரன் செங்குட்டுவன் என்பவன் சக்தி வாய்ந்த சேர மன்னன். இமயம் வரை இரு முறை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன். கடல் சூழ் இலங்கை கஜபாகுவையும் தென்னாட்டின் சக்தி வாய்ந்த பேரரசர்களான சாதகர்ணிகளையும் நண்பகளாகக் கொண்டவன். அப்பேற்பட்ட சக்திவாய்ந்த செங்குட்டுவனை “நீ மறக்கள வேள்வி (போர்கள்) செய்தது போதும் அறக்கள வேள்வி (யாக யக்ஞங்களை) நடத்துவாயாக” – என்று பகிரங்கமாக புத்திமதி சொல்கிறான் மாடல மறையோன் அதை உடனே செவி மடுத்து வேள்வி செய்ய உத்தரவிடும் காட்சியையும் இளங்கோ நம் முன் படைக்கிறார்.

 

அந்த பிராமணனுக்கு எடைக்கு எடை (துலாபாரம்) தங்கக் கட்டிகளை பரிசளித்த கௌரவச் செய்தியையும் இளங்கோ காட்டுகிறார்.

 

சிலப்பதிகார சம்பவங்கள் நடந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வேதக் கல்வி தழைத்தோங்கியதையும், பிராமணர்கள் காலில் மன்னர்களும் வணிகர்களும் விழுந்து வணங்கியதையும் சொல்லத் தவறவில்லை இளங்கோ. பார்ப்பனர்களை  ஏன் இப்படிப் புகழ்கிறார் இளங்கோ? கட்டுரையின் முடிவுரையில் காண்க.

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

1.பார்ப்பன புரோகிதர் முன்னிலையில் கண்ணகி-கோவலன் அக்னி சாட்சியாகக் கல்யாணம்– மங்கல வாழ்த்துப் பாடல்

 

2.மாடல மறையோன் அறிமுகம்- அடைக்கலக் காதை

 

3.கோவலன் ஒரு பிராஹ்மணனைக் காப்பாற்றியதை மாடல மறையோன்  உரைத்தல்

 

4.கோவலன் ஒரு பிராஹ்மணப் பெண்மணிக்கு உதவிய சம்பவம்

 

5.பூதம் விழுங்கிய மனிதன் கதை– மறையோன் வாய் வழியாக

 

6.பராசரன் தட்சிணாமூர்த்தி சம்பவம்- கட்டுரைக் காதை

7.வேதம் நிறைந்த தமிழ் நாடு

 

8.கார்த்திகை- வார்த்திகன் (ப்ராஹ்மண தம்பதி) அற்புத நிகழ்ச்சி; பிராமணர் காலில் விழுந்து மன்னன் மன்னிப்பு கேட்டல்

 

9.பிராஹ்மணர்கள் வண்டமிழ் மறையோர்– கட்டுரைக் காதை

 

10.மீண்டும் மாடல மறையோன் மூன்று காதைகளில் தோன்றல்–

நீர்ப்படைக் காதை

நடுகற் காதை

வரந்தரு காதை

 

Kannaki Temple

11.நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி மாடலன் உரைத்தல்- நீர்ப்படைக் காதை

 

12.மாதரி தற்கொலைச் செய்தி

 

  1. கவுந்தி அடிகள் பட்டினி கிடந்து மரணம்

 

14.கோவலன் அம்மா மன நோய் கண்டு மரணம்

 

  1. மாதவி- மணிமேகலை நிலைமை

16.பிராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடமுடியவில்லையே- கண்ணகி வருத்தம்– கொலைக்கள காதை

 

  1. ஆயிரம் பொற்கொல்லர்கள் பலி

 

  1. பிராஹ்மணனுக்கு 50 கிலோ தங்கம்!

 

19.செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்டளை- நடுகற் காதை

 

  1. மாடலன் செல்லுதல்– பிராமண அற்புதம்- சாமி ஆடுதல்; பிராஹ்மணன் புத்திமதி

 

21.பிராஹ்மண தூதர் (புறன்சேரி இறுத்த காதை)

22.பிராஹ்மண நடிகர் – சாக்கையர் கூத்து

 

 

Kannaki Anklet

23.கீரந்தை என்ற பார்ப்பானைக் காக்க பாண்டியன் கையை வெட்டிக்கொண்டு பொற்கை பாண்டியன் ஆன கதை

 

24.பாலைக் கௌதமனார் என்ற சங்க காலப் புலவர், சேர மன்னன் செய்த யாகத்தின் பின்னர் பார்ப்பனியுடன் உயிருடன் சுவர்க்கம் புகும் கதை– நடுகற் காதை

 

25.மதுரை நகரம் முழுதும் பார்ப்பனர்களின் வேள்விப்புகை– நாடு காண் காதை

 

ஐயர், அந்தணன், பார்ப்பனன், மறையோன்

முழுக்க, முழுக்க, முழுக்க பிராஹ்மணர் புகழ்!!!

 

சிலப்பதிகாரத்தில் முக்கியச் செய்திகள் எல்லாம் ஐயர் வாயிலாக வருகிறது.

ஐயர் காலில் மன்னன் விழுகிறான்.

 

பேரரசன் செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்ட ளை இடுகிறான்; அவனும் உடனே அதைக் கேட்கிறான்.

 

ஏன்? ஏன்? ஏன்?

 

முடிவுரை:

இளங்கோவின் பெயரில் யாரோ ஒரு பார்ப்பான் இந்த நூலை எழுதிவிட்டானோ? அல்லது இவை எல்லாம் இடைச் செருகலோ? அல்லது மிகைப் படுத்தப்பட்ட கூற்றோ? அல்லது ஆரியர்களின் சதியோ? மந்திரம் போட்டு மன்னர்களை பார்ப்பனர்கள், ஏமாற்றி விட்டனரோ?

 

இல்லவே இல்லை.

 

இரண்டாம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி இருந்ததோ அப்படியே இளங்கோ நமக்குப் படம் பிடித்து காட்டி விட்டார். பராசரன் போன்ற பண ஆசையற்ற வேத விற்பன்னன், தன்னலமற்ற தூய ஒழுக்கம் உடைய மாடல மறையோன் ஆகியோர் வாழ்ந்த நேரம் அது. மணி ஓசைக்குப் பதிலாக மறை ஓசை — வேத ஒலியும் – வேள்விப்புகையும்– எழுந்த காலம் அது. ஆகவே இளங்கோ சொன்ன யாவையும் உண்மையே; மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

 

பிராமணர் புகழ் பாடும் சிலப்பதிகாரத்தை ப்ராஹ்மண காவியம் என்றால் மிகை ஆகாது.

 

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!

Kannaki Cooking, World Tamil Conference Souvenir

References:

The Cilappatikaram,Prof. V R Ramachandra Dikshitar,The South India Saiavasiddhanta Works Publishing Society, Tinnelvelly Limited, Madras,600 001, 1978

Akananuru, Varthamanan Pathippakam, A Manikkanar,Chennai- 600 017,1999

Srimad Bhagavad Gita, Anna, Sri Ramakrishna Mutt, Chennai-600 004,1965

 

 

–Subahm–

ஸங்கீதப் பேய்; பிராமணப் பேய்! (Post No.4613)

Written by London Swaminathan 

 

Date: 13 JANUARY 2018

 

Time uploaded in London  6-54 AM

 

 

 

Post No. 4613

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

திராவிடப் பூர்வகாலக் கதைகள் என்ற புத்தகததை 1886 ஆம் ஆண்டில் நடேச சாஸ்திரி என்பவர் வெளியிட்டார். அதில் 49 கதைகளை வெளியிட்டார். தான் கேட்ட கதைகளை தனது நினைவிலுள்ளபடி எழுதுவதாக வெளியிட்டார். அதில் சில கதைகளை நானும் சிறுவயதில் எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்துவந்த சுப்புலெட்சுமி அம்மாள் என்பவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கதைகளை எனது சொற்களில் சுருக்கமாக வடிப்பேன்.

 

 

ஒரு ஊரில் ஒரு ப்ராஹ்மணன் இருந்தான். அவன் மிகவும் வறியவன்; வறுமையின் சின்னம்; வயிறு காய்ந்தது. ஏதேதோ செய்து பார்த்தும் காசு பணம் கிடைக்கவில்லை. சரி, போ! நாம் பூர்வஜன்மத்தில் செய்த பாபம் போலும்; நம் கர்மத்தைக் காசிக்குச் சென்று தொலைப்போம் என்று புறப்பட்டான. கட்டுச் சோறு கட்டிக் கொண்டான்; வழி நடந்தான்.

 

பாதி தூரத்தில் களைப்பு வந்தது; கண்டான் ஒரு தோப்பை; கொண்டான் ஆனந்தம்! அருகில் குளம்; தென்றல் வீசியது. கால் கை கழுவி விட்டு உண்போம் என்று குளத்தில் இறங்கினான். ‘கால் கை கழுவாதே’ என்று ஒரு குரல். ஓஹோ, களைப்பால் வந்த அலுப்பு! என்று சொல்லிவிட்டு கால், கைகளை அலம்பிவிட்டு சாப்பிட அமர்ந்தான். மீண்டும் ஒரு குரல்; ‘சாப்பிடாதே’ என்று;

 

இது ஏதெடா சிவ பூஜையில் கரடி புகுந்த கதை என்று சொல்லிவிட்டுச் சாப்பிட்டான். பின்னர் காசிக்குப் புறப்பட்டான். ‘போகாதே’ என்று ஒரு சப்தம்; இப்போது அவனுக்குக் கோபம் வந்தது. ஏய், யார் நீ? எங்கிருந்து குரல் கொடுக்கிறாய்? என்று கேட்டான்.

ஒரு பிரம்ம ராக்ஷஸன் அவன் முன் குதித்தான்; தன் பூர்வ ஜன்மக் கதைதனை உரைத்தான்.

 

 

பிரம்ம ராக்ஷஸ் என்றால் ‘ப்ராஹ்மணப் பேய்’ என்று பொருள்; தவறு செய்யும் ப்ராஹ்மணர்கள் அகால மரணம் அடைந்தால் பேய்—பிரம்ம ராக்ஷஸன் ஆகிவிடுவர்.

 

“நான் பூர்வ ஜன்மத்தில் நல்ல ஸங்கீத ஞானம் உள்ளவன்– என் இசை ஞானத்தை எவருக்கும் சொல்லிக் கொடுக்காமல் ஒளித்தேன்; மறைத்தேன்; ஆகையால்தான் இந்த கதி என்று சொல்லிவிட்டு எனக்கு ஒரு உபகாரம் செய்யேன் என்றது.

 

இந்த காட்டுக்கு வெளியே உள்ள ஒரு கோவிலில் ஒரு நாகஸ்வர வித்வான் இருக்கிறான். அவன் காலை, மதியம், மாலையில் அபஸ்வரத்துடன் வாசிக்கும் நாகஸ்வர இசை என் காதுகளில் ஈயத்தைப் பாய்ச்சியது போல இருக்கிறது; ஆகையால் என்னை இந்த நாகஸ்வர த்வனி கேட்காத தூரத்தில் கொண்டு போய் விடு; அது எனக்கு நீ செய்யும் பெரிய உதவி ஆகும் என்று பேய் சொன்னது.

 

அந்தப் ப்ராஹ்மணப் பேய் மீது கருணை கொண்ட இந்த ஏழைப் ப்ராஹ்மணன், அதற்கென்ன பேஷாய் உதவி செய்கிறேன். நீ எனக்கு எனக்கு என்ன பிரத்யுபகாரம் (பதில் உதவி) செய்வாய் என்று கேட்டான்.

 

 

 

அது சொன்னது: நீ காசிக்குப் போ. உன் கர்மத்தைத் தொலைத்துவிட்டு வா; அதற்குள் நான் மைசூர் மஹாராஜவின் மகளைப் போய் பிடித்துக் கொள்கிறேன் யார் வந்து பேய் ஓட்டினாலும் நான் அகல மாட்டேன். நீ வந்தவுடன் ஓடி விடுகிறேன்; மைசூர் மஹாராஜா உனக்கு பரிசு மழை பொழிவார் என்றது.

 

அந்தப் ப்ராஹ்மணனும் நல்ல ஐடியா  (IDEA) என்றான். ஆனால் ஒரு கண்டிஷன் (CONDITION) என்றது பிராஹ்மணப் பேய்.

அது என்ன நிபந்தனையோ என்று ப்ராஹ்மணன் வினவ, பேய் சொன்னது; நீ ஒரு முறை என்னை இப்படி விரட்டலாம் இரண்டாவது முறை எங்காவது என்னை விரட்ட வந்தால் உன் கதி ‘சகதி’ என்று எச்சரித்தது.

பிராஹ்மணன் காசிக்குச் சென்றுவிட்டுத் திரும்பினான். மைசூருக்கு வந்தான்; ஒரு கிழவி வீட்டில் தங்கினான்.

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.

பாட்டி ஊரில் என்ன விசேஷம்? என்ன பார்க்கலாம்? என்றான்.

கிழவி சொன்னாள்: மகனே மஹாராஜாவின் மகளுக்குப் பேய் பிடித்துவிட்டது. அது பொல்லாத பிசாசு! யார் வந்தாலும் விரட்ட முடியவில்லை யாராவது விரட்டினால் பெரும்  தொகை கிடைக்கும் என்று மன்னன் அறிவித்துள்ளான் என்றாள்.

 

ப்ராஹ்மணன் மறு நாளைக்கு அரண்மனைக்குச் சென்று மஹாராஜாவிடம் பேய் ஓட்ட வந்ததாச் சொன்னான். முதலில் மன்னனுக்கு நம்பிக்கை இல்லை. பின்னர் முயன்று பார்ப்போமே என்று ப்ராஹ்மணனை  மகள் இருக்கும் அறைக்குள் அனுப்பினான்.

அவன் உள்ளே நுழைந்தவுடன், பிரம்ம ராக்ஷசஸ், அவனை அடையாளம் கண்டு ‘குட் பை’  (GOOD BYE) சொல்லிவிட்டுப் போனது போகும்போதே அது போட்ட ‘கண்டிஷனையும்’ நினைவுபடுத்தியது. இதற்கு மேல் என்னைத் தொடர்ந்து வந்தால் உன் கதி அதோகதி என்று சொல்லிவிட்டுப் போனது.

 

ப்ராஹ்மணன் பேய் ஓட்டிய செய்தி, மன்னனுக்குக் கிடைத்தது; அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி; ப்ராஹ்மணனுக்கு ஏராளமான பரிசு; நிலபுலன்கள் கிடைத்தன.

 

சுகமாக ஊருக்குத் திரும்பி வாழ்ந்து வந்தான்; கல்யாணம் முடித்து குழந்தை குட்டிகளுடன் காலம் உருண்டோடியது.

 

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் (சனைச் சரன்) விடாது என்பது பழமொழியல்லவா?

 

மைசூர் மஹாராஜாவிடம் இருந்து ஓடிய பேய் – ப்ரஹ்மராக்ஷஸ் – திருவனந் தபுரம் மஹாராஜாவின் மகளைப் போய் பீடித்தது. அவன் பெரிய பெரிய மலையாள மாந்த்ரீகர்களை எல்லாம் அழைத்துப் பேயை ஓட்ட முயன்றான்; பலிக்க வில்லை. அவனது ஒற்றர்கள் மூலம் மைசுர் மஹா ராஜா மகள் விஷயத்தை அறிந்து அந்த மந்திரவாதியைத் தமக்கும் அனுப்பிவைக்குமாறு ஓலை அனுப்பினான்.

 

திருவநந்தபுரம் மஹா ராஜா மீது  கருணை கொண்ட மைசூர் மன்னன், ‘நான் பெற்ற இன்பம் வையகமும் பெறுகவே’ என்று ப்ராஹ்மணனுக்குச் செய்தி அனுப்பினான். உடனே திருவனந்தபுரம் சென்று உதவக் கட்டளை இட்டான்.

 

ப்ராஹ்மணனுக்கு உதறல் எடுத்தது; இரண்டாம் தடவை அதே ப்ரஹ்மராக்ஷஸைச்  சந்தித்தால் தன் கதை முடிந்துவிடும் என்று தெரியும். இருந்தாலும் மன்னர் உத்தரவு என்பதால் திருவனந்தபுரத்துக்கு ஏகினான். பல்வேறு சாக்குப் போக்குகள்; நாள் நட்சத்திரங்களைச் சொல்லி பேய் ஓட்டுவதை ஆனமட்டிலும் தாமதித்தான்.

இந்தச் சாக்குப் போக்குகள் நீண்ட காலம் தாக்குப் பிடிக்கவில்லை. தனது சொத்து சுகங்களைப் பகிர்ந்து விட்டு சாகத் தயாராக அரனண்மனைக்குள் சென்றான்; மஹாராஜவின் மகளைப் பார்த்தான். அவளைப் பிடித்த பிரம்ம ராக்ஷஸும் ப்ராஹ்மனனைப் பார்த்தது. ஆத்திரம் கொண்டது; பெரிய உலக்கையைத் தூங்கிக் கொண்டு அவனை அடிக்க ஓடிவந்தது.

 

இதற்குள் பிராஹ்மனனின் அத்புத மூளை வேலை செய்தது. அந்தப் பேய் அருகில் வந்தவுடன் திருப்ம்பி ஓடுகிறாயா? அல்லது அபஸ்வர நாகஸ்வர வித்வானை உள்ளே வரச் சொல்லவா? இதோ அரண்மனை வாயிலின் அந்தப் பக்கத்தில் கோவில் நாகஸ்வர வித்வான் உன்னைப் பார்க்க காத்திருக்கிறான் என்று கத்தினான்.

 

இதை கேட்டவுடன் அந்த ஸங்கீதப் பேய் — ப்ராஹ்ம ராக்ஷஸ் — ஓட்டம் பிடித்தது.

 

தவறான ஸங்கீத ஒலிக்குப் பேயும் பயப்படும்!!!!!!!!!!!!!!!

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

–SUBHAM–

IS SILAPPADIKARAM A BRAHMANA KAVYA? (Post No.4612)- Part 2

KANNAKI COOKING, WORLD TAMIL CONFERENCE SOUVENIR PICTURE

 

Research Paper Written by London Swaminathan 

 

Date: 13 JANUARY 2018

 

Time uploaded in London  6-16 AM

 

 

 

Post No. 4612

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND  BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

PART 2 (PART 1 WAS PUBLISHED YESTERDAY)

6.Parasaran- Dakshinamurthy Anecdote in the Katturai Katai is equally interesting:

 

“An able Brahmana, Parasara, who belonged to the good and fertile Kingdom of the Lord of the highly reputed Pukar wielding a righteous sceptre and a triumphant sword – one of whose kings weighed (his flesh) to save a dove (Story of Sibi) and another awarded justice to a cow (story of Manu Niti Cholan) who had heard the peerless munificence of the Cera of the curved lance, by offering the heavens to a Tamil Brahmana poet, said to himself, “I shall see the Cera of great valour and long lance”. He then passed through jungles and country places and towns leaving behind him the tall Malaya Hills. There by the force of his dialectical skill which he had acquired in the traditional manner, from the twice born Brahmana—who with the thought of achieving oneness with the Infinite, kindled the three fires as ordained in the four Vedas and performed the five great sacrifices (Pancha Maha Yajna) and the six great duties- he defeated his rivals and earned the title of Parpana Vakai.

(A typical Brahmin’s profile!)

As he was returning home with great and valuable gifts, he reached the village of Tankal (Tirutankal near Sivakasi) of the righteous Pandyan and of Dharmic Brahmanas. In this village, on a platform beneath the Bodi tree, luxuriant with green leaves, the tired man stayed awhile with his staff, water bowl, white umbrella, fire stick, a small bundle of articles and slippers (the impedimenta of an orthodox Brahmana; white umbrellas can be used only by the Kings and Brahmins who did Soma yaga) and said,

“Long live the victor whose protecting white umbrella assures his certain success. Long live the protector who uprooted the Katampu from the sea (Marine attack on sea pirates)! Long live the king who engraved his bow on the Himalayas! Long live the Poraiyan, possessor of the cool and beautiful Porunai! Long live King Mantaran Ceral! (contemporary king of Ceran Senkuttuvan)

 

Surrounded by a group of playful youths, some with curly hair and some with tufts and some with lisping mouths and coral lips, toddling some distance from their homes, he addressed them,

“Young Brahmana boys, if you can recite the Veda after me you may go away taking this little bundle of jewels.” Then the son of famous Brahmana Vartikan, by name Aalamar Selvan (Dakshinamurthy) whose rose lisps still retained the fragrance of his mother’s milk, in the presence of his playmates, with prattling tongue and great inward pleasure, recited the Veda, faultlessly observing the correct rhythm. The elderly man was exceedingly pleased with young Dakshinan and presented him with a sacred thread of pearls and bright jewels, as well as with bangles and earrings before departed for his native place”.

7.VEDIC  TAMIL NADU

Here Ilango was so poetic that we are captivated by every word he said here. This gave the beautiful description of Vedic education in the second century Tamil Nadu. Every word of Ilango praised the Brahmins and Brahmin boys. A little boy could recite Vedas with a learned Pundit. He described the appearance of Vedic Brahmins in minute details

 

The translator adds a beautiful note here:

The Brahman’s love for the Veda and his magnanimity in giving away the valuable jewels to a child reciting Vedas according to established practice show how unselfish were the learned Brahmins of those golden days.

 

Through Matalan  and Parasaran and a little boy we know that Vedas were recited in nook and corner of Tamil Nadu.

 

8.A MIRACLE HAPPENED!

“When Vartikan’s child departed with the little bundle of jewels, Vartikan was accused of misappropriating treasure trove which belongs to the king. So Vartikan was imprisoned. His wife Kartikai grew frantic. She wept in grief. She threw herself on to the ground rolling and fulminating. Seeing this the Goddess Durga of untarnished glory refused to open the door of her temple for the conduct of daily worship. When the king of the mighty spear heard that the massive door remained shut and would not open, he was confounded, and inquired, “Has any injustice been done? Come and tell me if you have heard of any failure in the discharge of our duties to the Goddess of Victory”.

 

“Then his young messengers made obeisance to the protecting king and informed him the case of Vartikan. “This is not fair, burst forth the king in anger and addressed Vartikan, It is your duty to forgive me. My righteous rule still has life, though owing to the ignorance of my men, it has deviated from the ordained path”.

 

“The king granted him Tankal with its paddy fields watered by tanks and Vayalur of immeasurable yield and prostrated himself on the ground before Vartikan, the husband of Kartikai. Then the door of the Goddess who rode upon the stag, opened so loudly as to be heard throughout the long and broad streets of mountain like mansions of the ancient city.

Then he issued a proclamation to release all the prisoners and allowed everyone to enjoy the treasures they find!”

 

Such is the power of Brahmins. Even mighty kings fell at their feet!

 

9.In this chapter (Katturai Katai) , Brahmins are praised as Vandamil Maraiyor i.e people who speak chaste Tamil. This answered the question whether Brahmins are sons of the soil!

 

10.Matalan Again!

Matala Maraiyon, the influential Brahmin, appears again in the last three sections:

Nirppataik Katai

Natukar Katai

Varantaru katai

 

Matalan giving Important News!

Ilango uses Matalan to fill the gaps in the epic. Mighty Cera King Senkuttuvan brought the stone from the holy Himalayas and bathed it in the Holy Ganges and carved the stone into the Goddess Pattini.

Following is in the Nirppataik Katai

“While Senkuttuvan was sitting on his throne ( in North India), the Brahmana Matalan appeared before him and said, Long live our king! The seashore song of the lady Matavi made the crowns of Kanaka and Vijaya bear a weight (the implied meaning is that Kovalan left Matavi’s house and other events followed resulting in Kannaki becoming a goddess; Kanaka and Vijaya who challenged Senkuttuvan made to carry the stone on their heads).

 

The Brahmana Matalan then continued: “The maid Matavi, whilst sporting on the cool beach, had a lover’s quarrel with Kovalan. Then governed by fate she sang the seashore song appropriate to her dance. This not resulted in their reunion but in their separation, and necessitated his entry with his virtuous wife into the ancient towered city of Madura, whose reigning king with his wreath of leaves attained blissful heaven as a result of the murder of Kovalan, whose wife, O Lord of the Kutavar, entered your country. And now she is being borne upon the crowned heads of the northern kings”.

 

11.Matari commits suicide!

“Be good enough to listen also to the reason for my coming here, O king of kings holding the illustrious spear! After going round the Potiyil Hills sacred to the great sage (Agastya) and bathing in the famous ghat of Kumari, I was returning, when as if impelled by fate, I went into Madura belonging to far famed Tennavan of the sharp sword. There when Matari heard that the beautiful Kannaki had defeated the Pandyan king of the mighty army with her anklet, she proclaimed in the Taateru manrdram (common meeting point of the Yadava community), ‘O People of the cowherd community! Kovalan has done no wrong; it is the king who has erred; I have lost her to whom I gave refuge. Have the king’s umbrella and the sceptre fallen from the righteous path? With these words she threw herself into the burning flames in the dead of night!

12.Kavunti died of Starvation!

Kavunti, distinguished for her holy penance, waxed wroth; but when she heard of the death of the great king renowned for his righteous sceptre, her ire was appeased and she burst out: Was this the fate of those who joined my company? She took a vow to die of starvation and thus gave up her life.

 

13.Kovalan’s mother died of Depression!

I heard in full detail all this and also of the devastation that overtook the great city of Madura ruled by the Pandyan of the golden car. Overcome by great I went back to my native place, the ancient capital of the Colas, and informed the chief men there of this. Kovalan’s father heard what happened to his son and daughter in law and also to the righteous monarch of Madura and became deeply afflicted. He distributed all his wealth in charity, and entered Seven Indra Viharas (The Buddhist Temple) and began to practise self -denial like the three hundred monks who roam the sky, having renounced the world to obtain release from the cycle of births. The wife of him who thus renounced, unable to endure the sorrowful news of the death of her son under such tragic circumstances, died of pity.

 

Kannaki’s father also gave away his wealth in religious gifts and adopted Dharma in the presence of Ajivakas like sages engaged in penance of a high order. The noble wife of him who made these gifts gave up her good life within a few days.

 

TO BE CONTINUED……………………………………….

 

காரிய வெற்றிக்கு சகுனங்கள்! (Post No.4611)

Date: 13 JANUARY 2018

 

Time uploaded in London- 5-51 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4611

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஜோதிட இதழான ஸ்ரீ  ஜோஸியம் பத்திரிகை ஜனவரி 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

காரிய வெற்றிக்கு சகுனங்கள்!

 

ச.நாகராஜன்

 

நமது முன்னோர்கள் இயற்கைப் படைப்பைக் கூர்ந்து கவனித்து ஒரு காரியம் கை கூடுமா, தொடங்கும் பணியில் வெற்றி உண்டா இல்லையா என்பதை முன்கூட்டியே நிர்ணயிக்க சகுன பலனைச் சொல்லி உள்ளனர்.

 

இராமாயணத்தில் சீதைக்கு ஏற்படும் நல்ல சகுனங்கள், மஹா பாரதத்தில் துரியோதனனுக்கு ஏற்படும் தீய சகுனங்கள் ஆகியவற்றைப் படிக்கும் போது வியப்பு ஏற்படும்.

அப்படி சகுன பலன்களை விவரமாக விவரித்துள்ளனர் முன்னோர்.

 

 

கிராமங்களில் சர்வ சாதாரணமாகச் சொல்லி, கடைப்பிடிக்கப்படும் இந்த சகுனக் குறிகள் இன்றைய நகர வாழ்க்கையில் சில சமயம் பொருத்தமில்லாமல் போகிறது; அல்லது அதைத் தெரிந்து கொள்ளாமல் நகரங்களில் வாழ்வோர் காரியங்களைத் தொடங்குகின்றனர்.

 

 

சம்ஸ்கிருதத்தில் சகுனம் பற்றிப் பல நூல்கள் உண்டு. நூற்றுக்கணக்கான ஸ்லோகங்கள் உள்ளன.

தமிழிலும் பல நூல்கள் உண்டு. எடுத்துக் காட்டாக ஒரு நூலை மட்டும் இங்கு பார்க்கலாம்.

 

 

அம்பலவாணப் புலவர் எழுதிய அறப்பளீசுர சதகம் நூறு பாடல்களைக் கொண்ட அருமையான நூல்.

அதில் சகுனங்களைப் பற்றி மூன்று செய்யுள்கள் உள்ளன. (செய்யுள்கள் 62,63,64)

 

 

அவை வருமாறு:-

சொல்லரிய கருடன் வானரம் அரவம் மூஞ்சூறு குகரம் கீரி கலைமான்

துய்யபாரத்வாசம் அட்டை எலி புன் கூகை சொற்பெருக மருவும் ஆந்தை

வெல்லரிய கரடி காட்டான்பூனை புலி மேல் விளங்கும் இரு நா உடும்பு

 

மிகவுரை செய் இவையெலாம் வலம் இருந்திடமாகில் வெற்றியுண்டதிக நலம் ஆம்;

ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலை தாக்கல்

ஒருதுடையிருத்தல்,பற்றல்,

ஒரு தும்மல், ஆணையிடல், இருமல், போகேலென்ன

உபசுருதி சொல் இவையெலாம்

 

அல்லல் தரும் நல்ல அல என்பர்;முதியோர் பரவும்

அமலனே! அருமை  மதவேள்

அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரிவளர்

அறப்பளீசுரதேவனே!

பொருள்: பெரியோர்கள் வாழ்த்துகின்ற தூயவனே! மதவேள் தினமும் மனதில் வழிபடுகின்ற சதுரகிரியில் குடி கொண்டிருக்கும் அறப்பளீசுர தேவனே!

 

சொல்வதற்கு அரிய கருடனும், குரங்கும், பாம்பும், மூஞ்சூறும், பன்றியும், கீரியும், கலைமானும்,தூய கரிக்குருவியும், அட்டையும், எலியும், இழிந்த கோட்டானும், மிகுதியாகப் பேசப்படும் ஆந்தையும், வெல்ல முடியாத கரடியும், காட்டுப் பசுவும், பூனையும், புலியும், மேலாக விளங்கும் இரு நாக்குகளை உடைய உடும்பும் ஆகிய இவை எல்லாம் வலத்தில் இருந்து இடப்பக்கம் போனால் வெற்றி உண்டாகும். மிகுதியான நலமும் உண்டாகும்.

 

வழிப்பயணம் மேற்கொள்வோரின் தலையில் இடித்தல், ஒரு காலில் நிற்றல், வலது கையைப் பிடித்தல், ஒற்றைத் தும்மல், ஆணையிடுதல், இருமுதல், போக வேண்டாம் என்று காதில் விழும்படியாகக் கூறுதல் இவை யாவும் துன்பம் தரும். நல்லன அல்ல என்பர்.

 

நரிமயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு காக்கை

நாவிசிச்சிலியோந்தி தான்

கரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி

நாடரிய சுரபி மறையோர்

 

வரியுழுவை முயலிவையனைத்தும் வலம் ஆயிடின்

வழிப்பயணம் ஆகை நன்றாம்;

மற்றும் இவை அன்றியே குதிரை அனுமானித்தல்

வாய்ச்சொல் வா வா வென்றிடல்,

தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசி

தப்பட்டை ஒலி வல்வேட்டு

 

தனி மணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி

தனக்கேக நன்மை என்பர்!

அருணகிரனோதயத் தருணபானுவையனைய

அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில் நினை தருசதுரகிரி வளர்

அறப்பளீசுரதேவனே!

 

பொருள் :  சிவந்த கதிர்களை உடைய ஞாயிறு போன்ற அண்ணலே! சதுரகிரியில் எழுந்தருளியுள்ள அறப்பளீசுர தேவனே!

நரியும், மயிலும், பச்சைக் கிளியும், கோழியும், கொக்கும், காக்கையும், கஸ்தூரி மிருகமும்., சிச்சிலிப் பறவையும், ஓணானும், வல்லூறும், விரைந்து கத்தும் செம்போத்தும், எருமையும் சிந்தித்தற்கு அரிதான பசுவும், அந்தணரும், வரிப்புலியும், முயலும் ஆகிய இவை யாவும் வலமாக வந்தால் வழிப் பயணம் நன்மை தரும். மேலும், குதிரை கனைத்தலும், வா வா என்று வாய்ச்சொல்லாக காதில் படும்படி கூறுதலும்,சங்கு ஒலித்தலும், கொம்பும்,கிடுமுடியும், முரசும், தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும், ஒப்பற்ற மங்கல வாத்தியம் முழங்குதலும் ஊரிலிருந்து பயணம் மேற்கொள்ள நல்லது என்று அறிஞர் கூறுவர்.

 

தலைவிரித்தெதிர் வருதல், ஒற்றைப் பிராமணன்,

தவசி, சந்நாசி, தட்டான்,

தன்மிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறகுதலை,

தட்டைமுடி, மொட்டைத்தலை,

கலன் கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,

கதித்த தைலம், இவைகள்

காணவெதிர் வரவொணா: நீர்க்குடம், எருக்கூடை,

கனி, புலால் உபய மறையோர்

நலம் மிகு சுமங்கலை, கிழங்கு, சூதக மங்கை

நாளும் வண்ணான் அழுக்கு

நசை பெருகு பாற்கலசம், மணி, வளையல், மலர் இவைகள்

நாடி யெதிர் வர நன்மையாம்;

அலை கொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்

அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில் நினை தரு சதுரகிரி வளர்

அறப்பளீசுர தேவனே!

 

 

பொருள்: அலை கொண்ட கங்கையை அணி ந்த சடையானே!

மழு ஏந்திய அண்ணலே! சதுரகிரியில் எழுந்தருளியிருக்கும் அறப்பளீசுர தேவனே!

 

தலைவிரி கோலமாக ஒருவர் எதிரில் வருதலும், ஒற்றைப் பிராமணனும், தவம் புரிவோனும், துறவியும், தட்டானும், தனம் இல்லாத மார்பினளும்,மூக்கில்லாதவனும், புல் தலையனும், விறகு தலையனும், சப்பைத் தலையும், மொட்டைத் தலையும், அணிகலன் இல்லாத பெண்களும்,குசவன் பாண்டமும், வாணியன் மிகுந்த எண்ணெயும் ஆகிய இவைகள் கண் காண எதிரில் வருதல் தகாது.

 

நீர்க்குடமும், எருக்கூடையும்,பழமும், மாமிசமும், இரட்டை பிராம்மணரும்,நலம் மிகு சுமங்கலி, கிழங்கு,  பூப்புப் பெண்ணும், நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும்,  விருப்பம் ஊட்டும் பாற்குடமும், மணியும், வளையலும், மலரும், ஆகிய இவைகள் தேடி எதிரே வந்தால் நலம் ஆகும்.

மேற்கூறிய சகுன பலன்கள் சரியா, இல்லையா?

இதை எப்படி சரி பார்ப்பது. மிகவும் சுலபம். சகுனத்தை தினமும் கவனித்து குறிப்புகளை எடுத்துக் கொண்டால் போதும், ஒரு சில வாரங்களில் நாம் நிபுணராகி விடுவோம்.

 

சோதனை செய்து அறிவதே ஆனந்தம். இதையே இயற்கையை அனுசரித்த முன்னோர் செய்தனர். சகுனத் தடை என்றால் சற்று நேரம் கழித்துக் காரியத்தைத் தொடங்கலாம்,இல்லையா!

முயன்று பார்ப்பதில் நஷ்டம் ஒன்றுமில்லை; லாபம் தான்!

முயல்வோம்; சரி பார்ப்போம்; கடைப் பிடிப்போம்!

***

 

ரொம்பவும் நல்லவனாக இருக்காதே! சாணக்கியன் ‘அட்வைஸ்’!!! (Post No.4605)

ரொம்பவும் நல்லவனாக (இளிச்சவாயனாக, அப்பாவியாக) இருக்காதே! சாணக்கியன் ‘அட்வைஸ்’!!! (Post No.4605)

Written by London Swaminathan 

 

Date: 11 JANUARY 2018

 

Time uploaded in London  7-39 AM

 

 

 

Post No. 4605

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சாணக்கியன் சொல்லுகிறான்:

 

மிகவும் நேர்மையாக நிமிர்ந்து நிற்காதே! காட்டுக்குப் போய் மரங்களைப் பார்; நேராக நிமிர்ந்து சென்ற மரங்களை எல்லாம் வெட்டி எடுதுக் கொண்டு போய் விட்டார்கள்; கூனிக் குறுகிய மரங்களை யாரும் தொடவில்லை. அப்படியே நிற்கின்றன.

நாத்யந்தம் ஸரலைர்பாவ்யம் கத்வா பஸ்ய வனஸ்தலீம்

ச்சித்யந்தே ஸரலாஸ்தத்ர குப்ஜாஸ்திஷ்டந்தி பாதபாஹா

–சாணக்கிய நீதி, அத்யாயம் 7, ஸ்லோகம் 12

 

இதைப் படித்தவுடன் சாணக்கியனைத் தப்பாக எடை போட்டுவிடதீர்கள்; அவன் மஹா மேதாவி; மகதப் பேரரசை உருவாக்கிய பின்னரும் குடிசையில் வாழ்ந்த ஏழைப் ப்ராஹ்மணன் அவன். இங்கே சொல்ல வந்தது எல்லாம் அரசியலுக்கு மட்டுமே பொருந்தும்; மேலும் அசத்தியத்தை, அதர்மத்தை அழிக்க கிருஷ்ணன் போல சாம, தான, பேத, தண்டத்தைப் பின்பற்றலாம் என்பதே அவன் சொல்ல வந்த விஷயம்.

 

 

‘தூங்கும் புலியைத் தட்டி எழுப்பாதே’,

‘தூங்கும் புலியை சீண்டாதே’, என்றும் ‘தூங்குகின்ற புலியை இடறிய சிதடன்’ என்றும் தமிழில் சொல்லுவர்.

 

எந்த ஏழு பேர் தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்பலாம் , யாரை எழுப்பக்கூடாது என்று பட்டியல் தருகிறான் சாணக்கியன்

 

 

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

 

 

எழுப்பு! எழுப்பு! ஏழு பேரை எழுப்பு!!!

 

 

கீழ்கண்ட ஏழு பேர் தூங்கினால் உடனே எழுப்பிவிடு

வித்யார்த்தி சேவகஹ பாந்தகஹ க்ஷுதார்த்தோ பயகாதரஹ

பண்டாரீ ச ப்ரதிஹாரீ ஸப்த ஸுப்தான் ப்ரபோதயேத்

——சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 6

 

கீழ்கண்ட ஏழு பேரை எழுப்பு:

மாணவன், வழிப்போக்கன், வேலைக்காரன், பசியால் வாடுபவன், பயத்தால் நடுங்குபவன்,  பண்டகசாலை பொறுப்பாளர், வேலைக்காரன்

 

எழுப்பாதே, எழுப்பாதே, ஏழு பேரை எழுப்பாதே!

அஹிர் ந்ருபம் ச சார்தூலம் கிடிம் ச பாலகம் ததா

பரஸ்வானம் ச மூர்க்கம் ச ஸப்த ஸுப்தான் ந போதயேத்

—சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 7

 

கீழ்கண்ட ஏழு பேரைத் தூங்கும் போது எழுப்பாதே:

பாம்பு, அரசன், புலி, காட்டுப்பன்றி, குழந்தை, வேறு ஒருவரின் நாய், முட்டாள்.

 

அருமையான புத்திமதிகள்; நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு வியாஸமே எழுதலாம்.

வாழ்க சாணக்கியன்!

 

சுபம், சுபம்–

 

மூன்று பொம்மை கதை, சாணக்கியன் எச்சரிக்கை – (Post No.4602)

Written by London Swaminathan 

 

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London  7-53 AM

 

 

 

Post No. 4602

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

 

மூன்று பொம்மை கதை

விஜய நகரப் பேரரசன் கிருஷ்ண தேவ ராயர் சபைக்கு ஒரு வணிகன் மூன்று பொம்மைகளைக் கொணர்ந்தான். அவற்றின் ரஹசியங்களைக் கண்டு பிடிக்கும் அறிவாளி யாரேனும் அந்தச் சபையில் உண்டா என்று வினவினான். எல்லோரும் பொம்மைகளை வாங்கிப் பார்த்துவிட்டு திரு திரு என முழித்தனர். விடை காண இயலாமல் தவித்தனர். அரசனும் சில நாட்கள் கழித்து அந்த வியாபாரியை திரும்பி வரும்படி சொல்லி அனுப்பினன். தெனாலி ராமன் கையில் அந்த பொம்மையைக் கொடுத்தவுடன் அவனுக்கு அதன் சூக்ஷ்மம் புரிந்தது.

Masks sold in Bangalore; newspaper picture

மறு நாள் எல்லோரும் ராஜ சபையில்  இருக்கையில் ஒரு சிறு கம்பியைக் கொண்டுவருமாறு தெனாலி ராமன்

வேண்டினான்.

 

கம்பி என்ன? தம்பி; உனக்குத் தங்கக் கம்பியே தருகிறேன் என்றான் மன்னவன்

 

தம்பி கையில் கம்பி வந்தது.

 

முதலில் ஒரு பொம்மையை எடுத்து காதின் ஒரு புறத்தில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே செலுத்தினான். அது மறு புறமுள்ள செவி வழியே வெளி வந்தது.

 

யாரும் பார்க்காத  துளைகளை அவன் மட்டும் பார்த்தது முதலில் எல்லோருக்கும் வியப்பு அளித்தது.

 

இரண்டாவது பொம்மையை எடுத்தான். இப்போது காது வழியே சென்ற கம்பி வாயின் வெளியே வந்தது. எல்லோரும் அதன் ‘தாத்பர்யம்’ விளங்காமல் விழித்தனர்

 

இதற்குள் தெனாலி ராமன் மூன்றாவது பொம்மையை எடுத்தனன் ; தங்கக் கம்பியை நுழைத்தனன்;  எங்கே கம்பியின் மறு புறம் என்று  வியந்தனர்.

 

தெனாலி ராமன் சொன்னான்; அது அதன் நடுப்பகுதியில் உள்ள மனதுக்குள்—இதயத்துக்குள்– சென்று விட்டது என்று சொன்னான்.

 

இதன் பொருள் என்ன என்றும் செப்பினான்:

 

முதல் பொம்மை ‘அதமர்’களுக்குச் சமம்; கீழ் மட்ட மக்கள்; எதைச் சொன்னாலும் காதிலேயே வாங்க மாட்டார்கள் இந்தப் பக்கம் செவியில் விழுவது அடுத்த பக்க செவி வழியே வந்து விடும் ; மனதில் அடங்காது.

 

இரண்டாவது பொம்மை ‘மத்யமர்’; இடைத் தர மக்கள்; சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி விடுவர்; ரஹஸியம் தங்காது.

 

மூன்றாவது பொம்மை ‘உத்தமர்’களைக் குறிக்கும்; உயர் மட்ட மக்கள்; அவர்கள் காதில் வாங்குவதை மனதில் பதிப்பர்; எந்த ரஹஸியத்தையும் வெளியே விடாது காப்பர் என்றான்.எல்லோரும் அவன் பதிலைக் கேட்டு ஆரவாரம் செய்து பாராட்டினர்.

 

அகம் மகிழ, உளம் குளிர, மாமன்னனும் பரிசு மழை பொழிந்தான்.

 

இது ரஹஸியத்தின் பெருமைதனைக் கூறும் ஒரு நிகழ்வு.

இதையே புலவர்களும் பாடி வைத்தனர்.

XXXX

சாணக்கியன் எச்சரிக்கை – ரஹஸியம், பரம ரஹஸியம்!!

 

மனஸா சிந்திதம் கார்யம் வசஸா ந ப்ரகாசயேத்

மந்த்ரேண ரக்ஷயேத் கூடம் கார்யே சாபி நியோஜயேத்

 

பொருள்

உன் மனதில் உள்ள விஷயங்களை எல்லாம் வார்த்தைகளில் வடிக்காதே; அதை ரஹசியமாக வைத்திருந்து செயல் வடிவில் காட்டுக.

சாணக்கிய நீதி, அத்தியாயம் 2, ஸ்லோகம் 7

 

 

இது நல்ல புத்திமதி; ஏன்?

1.ஒருவன் சொன்னபடி செய்ய முடியாமல் போனால் உலகம் அவனைப் பார்த்து சிரிக்கும்

2.முன் கூட்டிச் சொன்னால் அதற்கு யாரேனும் தடை போட முடியும்

 

3.படை எடுப்பு, தாக்குதல்போன்ற விஷயங்களைச் சொன்னால், எதிரி நம்மையும் விட ஒரு படி மேலே போய்விடுவான்

  1. ஆராய்ச்சி, கல்வி முதலிய விஷயங்களை முன்கூட்டிச் சொன்னால் வேறு ஒருவர் அதைச் சொல்லி புகழ் பெறுவர்.

 

  1. பேடண்ட் PATENT வாங்கும் முன் யோஜனைகளை வெளியிட்டால் நம்மைவிட வேறு ஒருவர் செயலில் இறங்கி நம்மைப் பின்னுக்குத் தள்ளக் கூடும்.

 

விவேக சிந்தாமணி என்னும் நூலும் எதில் எதில் ரஹஸியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லும்:-

 

குருவுபதேச மாதர்கூடிய வின்பத் தன்பால்

மருவிய நியாயங் கல்வி வயதுதான் செய்த தருமம்

அரிய மந்திரம் விசார மாண்மையிங் கிவைகளெல்லாம்

ஒருவருந்தெரிய வொண்ணா துரைத்திடி லழிந்து போமே

 

பொருள்

ஆசிரியர் செய்த உபதேசம்,

ஸ்த்ரீயிடத்தில் தான் அனுபவித்த இன்பம்,

தான் எவ்வளவு நியாயவான்,

எவ்வளவு படித்தவன்,

எவ்வளவு தருமம் செய்தனன்,

என்ன வயது ஆகியவற்றையும்

பரமரஹஸியமாக வைத்திருக்க வேண்டும்.

தனக்கு உபதேசம் செய்யப்பட்ட மந்திரம்,

தனது பலம்,

பலவீனமிவைகள் எல்லாம் ஒருவருக்கும் தெரியக் கூடாது;

அப்படித் தெரிந்தால் அதனால் கிடைக்கக் கூடிய பலன் கிடைக்காமற் போய்விடும்.

 

திருவள்ளுவனும் திருக்குறளில் ரஹஸியம் பரம ரஹஸியத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறார்:-

அறை பறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் – குறள் 1076

 

பொருள்

சிலர்,  தாம் கேட்ட ரஹசியச் செய்திகளையும் பல இடங்களுக்குச் சென்று வெளியிடுவர். இப்படிச் செய்பவர்கள் கயவர்கள்;  அவர்கள் அறையப்[படும் டமாரம்- அறை- போன்றவர்கள் ஆவர்.

xxx

பழமொழி நானூறு என்னும் நூலிலும் ரஹசியத்தின் பெருமை விதந்து ஓதப்படுகிறது:

 

பெருமலை நாட! பிறரறியலாகா

அருமறையை ஆன்றோரே காப்பர் – அருமறையை

நெஞ்சிற் சிறியார்க்குரைத்தல் பனையின் மேல்

பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று

 

பொருள்

பெரிய மலை நாட்டுக்கு உரிமையுடையோனே! சான்றோர்கள், பிறர் அறியக்கூடாத விஷயத்தை ரஹஸியமாகக் காப்பர்; அதை சிறுமனம் படைத்தோருக்கு — சிற்றறிவு படைத்தோருக்குச்— சொன்னால் அது பனை மரத்தின் மீது பஞ்சு வைத்து அதைப் பறக்கவிட்டது போலாகும்; அதாவது மரத்தின் மீது பஞ்சு மூட்டையைக் கொண்டு வைத்தால் அது எப்படி எல்லாத் திசைகளிலும் எளிதில் பரவுமோ அப்படி ரஹஸியமும் அம்பலத்துக்கு வந்துவிடும்.

 

 

இன்னொரு பாடலில் பழமொழி ஆசிரியர் முன்றுரை அரையனார் பகர்வதாவது:-

 

நயவர நட்டொழுகுவாரும் தாம் கேட்ட

துயவாதொழிவார் ஒருவருமில்லை

புயலமை கூந்தல் பொலந்தொடி! சான்றோர்

கயவர்க் குரையார் மறை

 

பொருள்

மேகம் போன்ற கரிய கூந்தலையும் தங்க வளையல்களையும் அணிந்த பெண்ணே, கேள்! அன்போடு உள்ள நண்பரிடமும் கூட ஆராயாது எல்லா விஷயங்களையும் சொல்பவர் எவரும் இல்லை. ஆகவே அறிவுடையோர், கீழ் மக்களுக்கு ரஹஸியத்தைச் சொல்ல மாட்டார்கள்

 

Earlier Article……………….

ரகசியம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ரகசியம்/

 

TAGS: ரகசியம், ரஹசியம், பரம, மந்திரம், ஜொராஸ்டர். இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:–. போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் … https://tamilandvedas.com/…/போலி-சாமியார்-பற…. 2 days ago – போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294) … கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி …

 

— சுபம், சுபம் —

 

 

சாணக்கியன் எச்சரிக்கை- டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம் (Post No.4591)

Written by London Swaminathan 

 

Date: 7 JANUARY 2018

 

Time uploaded in London-11-24 am

 

Post No. 4591

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சாணக்கியன் மாபெரும் அறிவாளி; பெரிய அரசியல்வாதி; ராஜ தந்திரி; பொருளாதார நிபுணர்;  நூல்லாசியரும் கூட!

 

ஆயினும் அவர் சொல்லும் சில விஷயங்கள் வியப்பை ஏற்படுத்தும்; ஒருவேளை 2300 ஆண்டுகளுக்கு முன்னால் — அவர் காலத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் பொருள் விளங்கி இருக்கும்! இதோ அவரது ஸ்லோகங்கள்:–

 

மதியாதார் வாசல் மிதிக்க வேண்டாம்

 

யஸ்மின் தேசே ந ஸம்மானோ ந வ்ருத்திர்ந ச பாந்தவாஹா

ந ச வித்யாகமஹ கஸ்சித்தம் தேசம் பரிவர்ஜயேத்

 

பொருள்:-

மரியாதையோ வாழ்க்கைக்கான ஊதியமோ, சொந்த பந்தங்களோ, அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புக்களோ எந்த நாட்டில் இல்லையோ அந்த நாட்டில் வசிக்காதே.

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 8

 

xxxxxx

டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம்

 

தனிகஹ ஸ்ரோத்ரியோ ராஜா நதீ வைத்யஸ்து பஞ்சமஹ

பஞ்ச யத்ர ந வித்யந்தே ந தத்ர திவஸம் வஸேத்

 

பொருள்

கீழ்கண்ட ஐந்து இல்லாத இடங்களில் ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது:

பணக்காரர், வேத பண்டிதர், அரசன், நதீ, டாக்டர்

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 9

xxxxxx

 

அச்சம், அடக்கம் இல்லாவிடில்….

 

லோகயாத்ரா பயம் லஜ்ஜா தாக்ஷிண்யம் த்யாகசீலதா

பஞ்ச யத்ர ந வித்யந்தே குர்யாத் தத்ர ஸம்ஸ்திதிம்

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 10

பொருள்

கீழ்கண்ட ஐந்து இல்லாத இடங்களில் வசிக்கக் கூடாது:- வாழ்வதற்கான வழி/ வேலை, சட்டத்தைக் கண்டு அச்சம், அடக்கம், நாகரீகம், தர்ம சிந்தனை

 

xxxxx

நண்பனிடம் எல்லாவற்றையும் சொல்லாதே

ந விஸ்வஸேத் குமித்ரே ச மித்ரே சாதி ந விஸ்வஸேத்

கதாசித் குபிதம் மித்ரம் ஸர்வம் குஹ்யாம் ப்ரகாசயேத்

சாணக்கிய நீதி, அத்தியாயம் 2, ஸ்லோகம் 6

 

பொருள்

கெட்ட நண்பனை நம்பாதே; நல்ல நண்பனையும் அதிகம் நம்பாதே; ஏனெனில் ஒரு நாள் கோபம் வந்தால் உன்னுடைய ரஹசியங்களை எல்லாம் பட்டவர்த்தனம் ஆக்கிவிடுவான்.

— சுபம், சுபம் —

 

 

காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை!! (Post No.4590)

Date: 7 JANUARY 2018

 

Time uploaded in London- 5-47 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4590

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

மன்மத லீலை

 

காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை; அதன் உட்பிரிவோ 12288!! அதிசய மன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்!!!

 

ச.நாகராஜன்

 

 

1

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பேயே மகாகவி பாரதியார் காதல் காதல் காதல்

காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

என்று அருமையாக காதலின் உச்சகட்ட நிலையை விளக்கி விட்டார்.

அந்தக் காலத்தில், காதலின் வேகமும் அழுத்தமும் இந்த நவீன யுகத்தில் இருக்கின்றார் போல இருந்ததா? தெரியவில்லை.

இருந்தாலும் அந்த நாளிலேயே அவர் இப்படி அழுத்தமாகச் சொல்லி விட்ட கவிதா வரிகள் சற்று அதிசயமாகவும் இருக்கிறது; ஆச்சரியமாகவும் இருக்கிறது!

2

சரி, காதல்மன்னர்களும், காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்களும், ரஸிகர்களும், காதலர்களும், காதலிகளும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா?

காதலில் எத்தனை விதம், சொல்லுங்கள், பார்ப்போம்!

பதில் தெரியாமல் முழித்தால் இந்து நாகரிகத்திற்குத் தான் வர வேண்டும்.

ஆண்-பெண் உறவின் அற்புத இரகசியத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய ஒரே மதம் இந்து மதம் தான்.

காதலில் மொத்தம் 64 விதம் உள்ளது.

எங்கே 64-ஐயும் சொல்லுங்கள் பார்ப்போம் என்கிறீர்களா?

இதோ தருகிறோம், பட்டியலை!

3

01) Abhilasa – அபிலாஷா

02) Akanksa – அகாங்சா

03) Apeksa – அபேக்ஷா

04) Utkantha – உத்கந்தா

05) Ipsa – இப்ஸா

06) Lipsa – லிப்ஸா

07) Iccha – இச்சா

08) Vancha – வாஞ்சா

09) Trsna -த்ருஷ்ணா

10) Lalasa – லாலஸா

11) Sprha -ஸ்ப்ருஹா

12) Laulya – லௌல்யா

13) Gardha – கர்தா

14) Sraddha – ச்ரத்தா

15) Ruci – ருசி

16) Dohada – தோஹதா

17) Asa – ஆசா

18) Asis – ஆசிஸ்

19) Asamsa – அசம்ஸா

20 Manoratha – மனோரதா

21) Astha – ஆஸ்தா

22) Abhinivesa – அபினிவேசா

23) Anubandha – அனுபந்தா

24) Agraha –  ஆக்ரஹா

25) Vimarsa – விமர்சா

26) Manisa – மநீசா

27) Abhipraya – அபிப்ராயா

28) Paksapata – பக்ஷபாதா

29) Lobha – லோப்ஹா

30) Asanga – ஆஸங்கா

31) Abisvanga – அபிஸ்வங்கா

32) Sakti – சக்தி

33) Moha – மோஹா

34) Akuta – அகூடா

35) Kuthuhala – குதூகலா

36) Vismaya – விஸ்மயா

37) Raga – ராகா
38) Vega – வேகா

39) Adhyavasaya -அத்யாவாஸ்யா

40) Vyavasaya – வ்யவசாயா

41) Kamana – காமனா

42) Vasana – வாஸனா

43) Smarana -ஸ்மரணா

44) Sankalpa – சங்கல்பா

45) Bhava – பாவா

46) Rasa (Hasa) – ரஸா (ஹாஸா)

47) Rati – ரதி

48) Priti – ப்ரீதி

49) Dakshinya – தாக்ஷிண்யா

50) Anugraha – அனுக்ரஹா

51) Vatsalya – வாத்ஸல்யா

52) Anukrosa – அனுக்ரோஸா

53) Visvasa – விஸ்வாஸா

54) Visramba – விஸ்ரம்பா

55) Vasikara – வசீகரா

56) Pranaya -ப்ரணயா

57) Prapti – ப்ராப்தி

58) Paryapti – பர்யாப்தி

59) Samapti – சமாப்தி

60) Abhimanapti – அபிமானாப்தி

61) Sneha – ஸ்னேஹா

62) Prema – ப்ரேமா

63) Ahlada – ஆஹ்லாதா

64) Nirvrti –  நிவ்ருத்தி

 

 

3

அடேயப்பா, இத்தனை விதமா?

இதற்குள் மலைத்தால் எப்படி?

இந்த 64 விதத்தில் அனுராகத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

 

 

நித்யானுராகா

நைமித்திகானுராகா

சமான்யானுராகா

விசேஷானுராகா

ப்ரகாசானுராகா

ப்ரச்சன்னானுராகா

அக்ருத்ரிமானுராகா

க்ருத்ரிமானுராகா

 

என இதில் எட்டு வகை உள்ளன. இவை காதலின் மஹார்தி எனச் சொல்லப்படுகிறது.

இவை ஒவ்வொன்றிலும் 24 வகை உண்டு.

ஆக அனுராக வகைகளில் மட்டும் எட்டு வகையில் உள்ள 24 உட்பிரிவு வகைகளையும் பெருக்கிப் பார்த்தால் வருவது 192. இந்த 192 ஐ 64-உடன் பெருக்கினால் வருவது 12288.

இவ்வளவு வகை உண்டு.

 

4

சரி, இதையெல்லாம் யார் சொல்கிறார்கள், எங்கே சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே.

போஜ மஹாராஜன்,”ச்ருங்கார ப்ரகாசா” என்ற அலங்கார சாஸ்திர நூலைப் புனைந்துள்ளான்.

அதில் தான் ஒவ்வொன்றின் விளக்கத்துடனும் காதல் அதாவது  ச்ருங்காரம் மிக நுட்பமாக விளக்கப்படுகிறது!

 

 

5

இது இப்போது கிடைக்குமா? எப்படி இந்த தகவல்கள் கிடைக்கின்றன?

நல்ல கேள்வி.

பேரறிஞர் டாக்டர் வி. ராகவன் (நிஜமாகவே பேரறிஞர்!!!) சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச் சிறந்த விற்பன்னர்.

உ.வே.சாமிநாதையர் வாழ்நாள் முழுதும் தமிழ்ச் சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைந்தது போல, டாக்டர் ராகவன் நாடு நாடாக அலந்தார். பல்வேறு பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள், சம்ஸ்கிருத சுவடி இருக்கும் இடங்கள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.

 

பல லட்சம் நூல்கள் அடங்கிய சம்ஸ்கிருத நூல்கள் பற்றி அறிந்து கொண்ட பின்னர் சம்ஸ்கிருத நூலுக்கான என்சைக்ளோபீடியாவைத் தயாரித்தார்.

அந்த மாபெரும் ஆராய்ச்சியாளர் தனது டாக்டரேட் டிகிரிக்காக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல் தான் போஜனின், “ச்ருங்கார ப்ரகாசா”

 

1931 செப்டம்பர் மாதத்திலிருந்து 1934 செப்டம்பர் மாதம் வரை அவர் செய்த அற்புதமான ஆராய்ச்சியின் பெருமையைச் சொற்களால் அளக்க முடியாது; விளக்க முடியாது!

 

1940ஆம் ஆண்டு இது  தொகுதிகளாகவும், பகுதிகளாகவும் வந்தது. (Karnakatk Publishing House, Bombay – 1940)

இப்போது இதை விளக்க இன்னொரு ராகவன் தான் வேண்டும். அப்படி ஒரு நுட்பமான ஆராய்ச்சியை அவர் செய்து உலகுக்கு அளித்திருக்கிறார்.

 

 

 

6

அற்புதமான மன்னன் போஜ மஹாராஜன். அவன் தொடாத துறையே இல்லை.

அதில் ஒன்று தான் “ச்ருங்கார ப்ரகாசா”.

 

36 அத்தியாயங்கள் இந்த நூலின் கைப்பிரதி மட்டும் 1908 பக்கங்கள் – ஃபூல்ஸ்கேப் பேப்பரில்!.

 

இதைத் தயாரித்து ஆராய்ந்தார் டாக்டர் ராகவன்.

போஜ மஹாராஜன் 84 நூல்களை எழுதியுள்ளான்.

விமானம் கட்டுவதிலிருந்து சிருங்கார ப்ரகாஸா வரை உள்ள அவனது நூல்கள் பிரமிக்க வைப்பவை.

 

அந்த மாபெரும் அறிஞனின் அறிவை அளக்க யாரால் முடியும்?!

ஒரு சிறிது அறிந்தாலும் கூட அந்த அளவுக்கு நமது அறிவின் வலிமை கூடும் என்பதில் ஐயமில்லை.

நன்றி : டாக்டர் வி. ராகவன் அவர்களுக்கு!

****

 

 

வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)

வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)

 

 

Written by London Swaminathan 

 

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London- 8-18 am

 

 

 

Post No. 4588

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் — என்ற தமிழ்ப் பழமொழியைப் பலரும் அறிவார்கள்; ஆனால் இதன் பின்னாலுள்ள சுவையான கதையை அறிந்தோர் சிலரே. இதோ கதை:-

 

அம்மாஞ்சி என்ற பிராஹ்மணன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி வல்லாள கண்டி மற்றும் அவனுடைய அம்மா, மற்றும் மாமியார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பம்.

 

வல்லாள கண்டியின் பெயரைக் கேட்டாலேயே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் கண்டுகொள்ளலாம்;  சரியான சிடுமூஞ்சி; அடங்காப்பிடாரி.

 

வீட்டில் தினமும் ரணகளம்தான்;  த்வஜம் கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதல்; சண்டை சச்சரவு அன் றாடக் காட்சிகள்! குறிப்பாகச் சொல்லப் போனால் அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாஞ்சி பிராஹ்மணனின் அம்மாதான்

 

அசட்டு அம்மாஞ்சியால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய அம்மாவும் பார்த்தாள்; இனி வீட்டை விட்டு ஓடுவதே ஒரே வழி என்று சிந்தித்தாள்; செயல் பட்டாள்;

 

ஆந்தைகள் அலறும், நாய்கள் ஓலமிடும் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடினாள்.

 

 

‘ஓடினாள், ஓடினாள், கிராமத்தின் எல்லைக்கே ஓடினாள்’

அங்கே ஒரு காளி கோவில். அதில் ஓய்வு எடுத்தாள்.

 

நள்ளிரவுக்குப் பின்னர் ‘’கிலிங் கிலிங்’’ என்ற சப்தம். கிழட்டு அம்மணி நிமிர்      ந்து பார்த்தாள். அங்கே ஸ்வரூப சுந்தரியாக காளி தேவி காட்சி தந்தாள்.

‘அம்மணி! ஏது வெகுதூரம் வந்துவிட்டீர்? என்ன சமாச்சாரம்?’ என்று வினவ, கிழட்டு அம்மணியும் செப்பினாள் தன் துயரக் கதைகளை.

 

காளி மொழிந்தாள்:

கவலைப் படாதே! ஒரு மாம்பழம் தருகிறேன்; அதைச் சாப்பிடு; ‘’பெரிய மாற்றம்’’ ஏற்படும் என்றாள்.

அவளும் கவலையை மறந்து விடிவு காலத்தை (பொழுது விடியும் காலத்தை) எதிர் பார்த்துக் காத்திருந்தாள்.

 

இதற்குள்  அம்மாஞ்சி வீட்டில் ஒரே களேபரம்;அம்மாவைக் காணாது அம்மாஞ்சி- அசட்டு அம்மாஞ்சி–துடியாய்த் துடித்தான்

 

இதென்னடா கலிகாலம்! ‘பெத்த மனசு கல்லு, பிள்ளை மனசு பித்து’ என்று பழமொழி மாறிவிட்டதே.

 

ஓடினான் ஓடினான் ஊரின் எல்லைக்கே ஓடினான். அங்கே பராசக்தி அமர்ந்திருந்தாள்- அதான் அவனுடைய கிழட்டு அம்மா!

 

‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே. அன் புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’,  என்று பாடி அவளை நமஸ்கரித்தான்.

வீட்டிற்குத் திரும்பி வருமாறு இறைஞ்சினான்.

அவளும் ‘நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்’ என்று பாடி மாம்பழத்தைக் காட்டி சாப்பிடு என்றாள்.

அம்மா, அது அரிய பெரிய கனி; நீயே உண்ணு என்று சொல்லி அவளைத் தோளின் மீது போட்டுக்கொண்டான். அவளும் மாம்பழத்தைச் சாப்பிட்டாள்.

 

அம்மாஞ்சிக்கு கொஞ்சம் ஆச்சர்யம்; அம்மாவின் சொர சொர தோல் வழு வழு என்பது போல ஒரு உணர்வு; ஓஹோ! களைப்பின் மிகுதியால் வந்தது என்று எண்ணினான். மேலும் மேலும் குமரிப் பெண்ணின் கைகள் போட்ட உணர்வு தோன்,,,ரவே திரும்பி அம்மாவின் முகத்டைப் பார்த்தான; அவள் சொர்ண சுந்தரியாக மாறி ஸ்வர்ணம் போல ஜொலித்தாள்; வீட்டில் போய் இறக்கும் போது அவனுடைய கிழட்டு அம்மா  இளம் குமரி  ஆக மாறி இருந்தாள். அவனுக்கும் அவளுக்கும் மகிழ்ச்சி. எல்லாக் கதைகளையும் வல்லாள கண்டி கேட்டாள்; பொறாமைத் தீயில் சதித்திட்டம் தீட்டினாள்.

இரவு நேரத்தில் தனது அம்மாவை- அதாவது அசட்டு அம்மாஞ்சியின் மாமியாரை- வீட்டை வீட்டு ஓடும்படி துர் புத்திமதி சொன்னாள்; அவளும் இசைந்தாள் காளி கோவிலில் தஞ்சம் புகுந்தாள்; காளியும் தோன்றினள்; ஏன் அம்மா இங்கு வந்தாய் என்று கேட்க, அவளும் உரைத்தாள்– வீட்டில் துக்கம் தாளவில்லை என்று.

 

எதிர்பார்த்தது போலவே காளியும் மாம்பழம் தந்து உரைத்தாள்: இதைச் சாப்பிடு ‘’பெரிய மாற்றம்’’ வரும் என்று.

 

அந்தக் கள்ளியும் அவசரம் அவசரமாக மாம்பழத்தை உண்டாள். இதற்குள் வல்லாள கண்டி தனது அம்மாவைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி அம்மாஞ்சியை எஃகினாள். அவனும் விரைந்தான்.

மாமியாரைக் காளி கோவிலில் கண்டான்

கண்டேண் மாமியாரை! என்று ஆனந்தித்தான். தோளின் மீது சவாரியும் கொடுத்தான். அவள் தோல் சொர சொர என்று மாறிக்கொண்டு வந்து எடையும் கூடியது.

திரும்பிப் பார்த்தான்; சிரிப்பை அடக்க முடியவில்லை; மாமியார் அரைக் கழுதையாக மாறி இருந்தாள்; வீட்டிற்குள் ஓடிப் போய் அவளை தொப் என்று போட்டான்; அவள் முழுக் கழுதையாகக் காட்சி தந்தாள்

‘’கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்ணுக்கினியன கண்டேன்

ஊர் மக்கள் அனைவரும் வாரீர்

அரிய காட்சியைப்  பாரீர்’’ —

 

என்று ‘மனதுக்குள்’ பாடிக்கொண்டான்.

 

அம்மாஞ்சிக்கு சந்தோஷம்; அவன் அம்மாவுக்கும் சந்தோஷம்! ஆனால் மாமியாருக்கு துக்கம்; வல்லால கண்டிக்கு பெரும் துயரம்.

 

ஊர் முழுதும்– குறிப்பாக குழாய் அடியில் பெண்களிடையே ஒரே பேச்சு– வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்- என்று.

 

தமிழில் 20000–க்கும் மேலாகப் பழமொழிகள் உள; அவைகளில் சுமார் 2000 வரை எனது ‘பிளாக்’கில் சப்ஜெக்ட் வாரியாகக் – தலைப்பின் படி — கொடுத்துள்ளேன்; நிறைய பழமொழிக் கதைகளையும் தந்துள்ளேன்; ஆங்கிலத்திலும் வரைந்துள்ளேன்; கண்டு மகிழ்க- களிப்பு அடைக!!

 

-சுபம், சுபம் —