ஆங்கிலத்தில் நகைச்சுவை கவிதைகள்! (Post No.3987)

Written by S NAGARAJAN

 

Date: 10 June 2017

 

Time uploaded in London:-  6-44  am

 

 

Post No.3987

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

இலக்கிய இன்பம்

ஆங்கிலத்தில் நகைச்சுவை கவிதைகள்!

ச.நாகராஜன்

 

       தமிழில் தனிப்பாடல் திரட்டு என்று ஒரு திரட்டு நூல் இருக்கிறது. பல கவிஞர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு உடனுக்குடன் பாடிய பாடல்கள் அவை. அத்துடன் உதிரிப் பாடல்களும் அந்த நூலில் அடக்கம்.

 

நகைச்சுவையுடன் இருக்கும் பல பாடல்கள் நமக்குப் பல பாடங்களையும் போதிக்கும், சிந்திக்கவும் வைக்கும், தமிழின் கவிதை நயத்தை ரசிக்கவும் வைக்கும்.

 

இது போல ஆங்கிலத்தில் தனிப்பாடல் திரட்டு உண்டா என்று தேட ஆரம்பித்தேன்.

 

குறைந்த பட்சம் நகைச்சுவையுடன் கூடிய கவிதையோ அல்லது தனிப்பாடல் ரகத்தில் இருக்கும் கவிதையோ ஏதாவது கிடைக்குமா என்று கூகிள் செர்ச் (Google Search) ஆரம்பித்தேன்.

நிறைய இருக்கின்றன. இரண்டை மட்டும் இங்கு பார்க்கலாம்.

 

மூன்று மனைவிகள்

 

பயமுறுத்தும் சொல்லாக இந்த மனைவி என்ற சொல் இருக்கிறது என்று சிலர் சொன்னால் அவர்கள் சாக்ரடீஸ், போன்றோரை நினைவில் கொண்டிருக்கிறார்களோ, என்னவோ!

 

ஆனால், ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் ஒரு கவிஞர்- ராபர்ட் வில்லையம் சர்வீஸ்.

அவரது மூன்று மனைவிகள் கவிதையை ரசிக்கலாம், வாருங்கள்!

 

 

Three Wives

 

by Robert William Service

 

Said Jones: “I’m glad my wife’s not clever; Her intellect is second-rate.
If she was witty she would never Give me a chance to scintillate; But cap my humorous endeavour And make me seem as addle-pate.
“Said Smith: “I’m glad my wife’s no beauty, For if a siren’s charm she had, And stinted her domestic duty, I fear that she would drive me mad: For I am one of those sad fellows Who are unreasonably jealous.
” Said Brown: “”I know my wife’s not witty, Nor is she very long on looks; She’s neither humorous nor pretty, But oh how she divinely cooks! You guys must come some night to dinner – You’ll see my little girl’s a winner.
”  So it’s important in our lives, (Exaggerating more or less), To be content with our wives, And prize the virtues they possess; And with dispraise to turn one’s back On all the qualities they lack.  ஆக வாழ்க்கையில் முக்கியமான  விஷயம் நமது மனைவிமார்களது அரும் குணங்களைப் போற்றி இல்லாததைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள் என்கிறார் ராபர்ட் வில்லியம் சர்வீஸ். நல்ல சர்வீஸ் தான் இவர் கொடுக்கும் புத்திமதி.

 

****

திருப்பித் திருப்பித் திருப்பி..!!!

 

அடுத்த கவிதை, அடுத்த கவிதை, அடுத்த கவிதை, திருப்பித் திருப்பித் திருப்பித் திருப்பி – அட தடுமாறி விட்டேன், கவிதையைப் பற்றி சொல்லப் போய்…. ஒன்றுமில்லை, திருப்பித் திருப்பிச் சொல்பவர் ஒருவரைப் பற்றிச் சொல்லப் போய்.. சொல்லப் போய், அட, வாருங்கள் கவிதையைப் பார்ப்போம்!

.

இந்தக் கவிதைக்குரிய கவிஞர் ஜாக் ப்ரெலுட்ஸ்கி. இவர் கவிதைகளில் நகைச்சுவை ததும்புகிறது.

ஒரே ஒரு கவிதையைக் கீழே காண்போம்:-

“I often repeat repeat myself,
I often repeat repeat.
I don’t don’t know why know why,
I simply know that I I I
am am inclined to say to say
a lot a lot this way this way-
I often repeat repeat myself,
I often repeat repeat.

I often repeat repeat myself,
I often repeat repeat.
My mom my mom gets mad gets mad,
it irritates my dad my dad,
it drives them up a tree a tree,
that’s what they tell they tell me me-
I often repeat repeat myself,
I often repeat repeat.

I often repeat repeat myself,
I often repeat repeat.
It gets me in a jam a jam,
but that’s the way I am I am,
in fact I think it’s neat it’s neat
to to to to repeat repeat-
I often repeat repeat myself,
I often repeat repeat.”

     – Jack Prelutsky, A Pizza the Size of the Sun

அம்மாவும் அப்பாவும் கூட எரிச்சல் படுகின்றனர்; என்றாலும் எனக்கு இது இயல்பு தான் என்கிறார் கவிஞர்!

நகைச்சுவை இழையோடச் சொல்லப்படும் விஷயம் திக்கு வாயினால் தானா, அல்லது திடமான பழக்க தோஷத்தினாலா?

சிரிப்போம், சிந்திப்போம்.

****

தேன் நிலவு- சுவையான Honeymoon ஹனீமூன் சம்பவங்கள் (Post No.3986)

Written by London Swaminathan

 

Date: 9 June 2017

 

Time uploaded in London- 15-45

 

Post No. 3986

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஹனீமூன் — தேன் நிலவு — பற்றிய உண்மைச் சம்பவங்கள்; எட்டுக்கட்டியதல்ல– மொழி பெயர்த்தவர் சுவாமி நாதன்.

 

காரி க்ராண்ட் (Cary Grant) என்பவர் பார்பரா ஹுட்டன் (Barbara Hutton) என்ற பெண்மணியை மணந்துகொண்டார். தேன் நிலவுக்குப் போக முடியவில்லை. காரணம்–

முன் ஒரு காலத்தில் தேன் நிலவு (Once upon a Honeymoon) – என்ற படத்துக்காக அவர் அதே இடத்தில் இருக்க வேண்டியதாயிற்று; என்ன விந்தை? ஹனீமூனே ஹனீமூனை கெடுத்துவிட்டது!

xxxx

 

ஸ்நேக் சார்மர்! Snake Charmer

திடீர்க் காதல் — இருவரிடையே! நீண்ட நாள் கல்யாணம் தாமதமாகியது; பிறகு ஓடிப்போய்தான் திருமணம் செய்ய நேரிட்டது. இதெல்லாம் முடிந்து ஹனீமூனுக்குப் போனபோது தனது காதலி ஒர் பாம்பாட்டி (Snake Charmer) என்பது தெரிய வந்தது.

அடிக் கள்ளீ! இவ்வளவு காலமாகக் காதலித்தோம்; ஒரு நாளும் நீ பாம்புப் பிடாரி என்பதைச் சொல்லவில்லையே என்று கோபமும் கொஞ்சலும் கலந்த தொனியில் கணவன் கேட்டான்.

அட, நீங்க ஒண்ணு; நீங்களாவது நான் பாம்பாட்டியா என்று கேட்டிருக்கக் கூடாதா? என்றாள் அந்த மேதாவி!

 

XXX

ஹனீ, ஓ, ஹனீ! கதவைத் திற;

 

புது மணத் தம்பதியர் புதிய நாட்டில் புதிய நகரத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு ஹோட்டலில் தங்கினர். சில நாட்களில் நல்ல பழகிப் போனவுடம் அந்த இளம் பெண் மதிய வேளையில் சாமான்கள் வாங்க கடைத் தெருவுக்குப் போனாள்; கணவன், அவள் எப்படித் திரும்பி வரவேண்டும், எப்படி லிப்டி(Lift)லிருந்து இறங்கி எந்தப் பக்கம் திரும்பி எத்தனையாவது அறைக்கு வரவேண்டும் என்றெல்லாம் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தான்.

அப்பெண்ணும் “அத்தான்! கவலையை விடுங்கள் அரை மணி நேரத்தில் அறைக்குத் திரும்புவேன்” என்று பகர்ந்து வெளியே போனாள்.

ஹோட்டலுக்கு அரை மணி நேரத்தில் சாமான்களுடன் திரும்பியும் வந்தாள். லிப்டில் பலர், பல மாடிகளில் இறங்க வெவ்வேறு பட்டன்களை அமுக்கினர். இந்தப் பெண தவறான மாடியில் தனது மாடி என்று நினைத்து வெளியே வந்து விட்டாள். கணவன் சொன்ன கட்டளைகளை  அப்படியே பின்பற்றி தனது அறை என்று அவள் தப்புக் கணக்குப் போட்ட அறையின் கதவுக்கு வந்தாள்.

புது மணப் பெண் அல்லவா?

குனிந்த தலை நிமிரவில்லை!

கொஞ்சும் குரலில், “அத்தான்! அத்தான்!! கதவைத் திறங்கள்; நான் தான்!”– என்றாள். கதவு திறக்கவில்லை!

 

சில நிமிடங்கள் காத்திருந்துவிட்டு மீண்டும் “அத்தான்! அத்தான்!! கதவைத் திறங்கள்; நான் தான்!”– என்று உரத்த குரலில் கூவினாள்.

உள்ளே இருந்து கோப த்வனியில் கர்ண கடூரமாக ஒரு குரல் ஒலித்தது:

 

“அத்தானும் இல்லை; குழம்புத் தானும் இல்லை! இது சமையல் அறையும் இல்லை; இது பாத் ரூம் (குளியல் அறை)”.

 

அந்தப் பெண் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடிப் போய் தனது சரியான   அறையைக் கண்டுபிடித்தாள்

XXX

டிக்கெட்டை எடுத்துக்கிட்டீங்களா?

கல்யாணம் என்றாலே மப்பிள்ளைகளுக்குப் பெண்களை விடக் கொஞ்சம்   கூடுதல் உதறல்தான்; ஏனெனில் பெண்ணுக்குத் தோழிகளும், அம்மா  மார்களும் மற்ற உறவுப் பெண்களும் எல்லாவற்றையும்   செய்து கொடுத்துவிடுவர்.

அப்பாவி ஆண்மகனுக்கோ எவரும் உதவவும் மாட்டார்; அந்தப் பிள்ளையாண்டானுக்கு சகோதரனிடம் கேட்கக்கூட வெட்கம். இந்த சூழ் நிலையில் ஒரு இளம் தம்பதியினரின் கல்யாணம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

மறு நாள், காரில் ஏற்றி ஸ்டேஷனில் இறக்கிவிட எல்லோரும் வந்தனர். ஸ்டேஷனில் ரயில் வரப்போகும் அறிவிப்பும் வந்தது.

 

புதுமணப் பெண் வெட்கத்தோடு, என்னங்க, என்னங்க, அத்தான்; உங்களைத்தான், டிக்கெட்டெல்லாம் எடுத்து வச்சீங்களா பைக்குள்ள?

 

மாப்பிள்ளைக்கு ‘பகீர்’ என்றது. வேக மாக கால் சட்டைப்பைக்குள் கையை விட்டான்; ஒரு டிக்கெட் (Only one Ticket) மட்டும் வெளியே எட்டிப் பார்த்தது.

அதை “அவளும் நோக்கினாள்; அண்ணலும் நோக்கினான்  ”

என்ன பதில்சொல்ல என்று திணறிப் போனான் மாப்பிள்ளைப் பையன்.

 

நல்ல வேளை! நிறைய தமிழ் சினிமா பார்த்து இருந்ததால் தக்க வசனம் வாயில் வந்தது!

 

“தேனே! மானே! கண்ணே! கற்கண்டே!

உன்னைப் பார்த்த நாள் முதல், நான் என்னையே மறந்து விட்டேன்; இதோ உன் டிக்கெட்” என்று கையில் கொடுத்தான்”.

 

சினிமா வசனம் பேசினாலும் முகத்தில் அசடு வழிந்தது!

“போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட” என்று வீட்டுக்குத் திரும்பி வந்தனர்!

 

–சுபம்–

காண்டு படங்கள்! (Post No.3975)

Written by S NAGARAJAN

 

Date: 6 June 2017

 

Time uploaded in London:-  6-01  am

 

 

Post No.3975

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

சான்பிரான்ஸிஸ்கோவில் இருப்பதால் பல திரைப்ப்டங்களைப் பார்க்க முடிகிறது என்றும் இவற்றைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையில் எழுதுகிறேன் என்றும் ஜாலி எல் எல் பி (கட்டுரை எண 3948 ;வெளியான தேதி:28-5-2017) தெரிவித்திருந்தேன்.

இதோ அந்தக் கட்டுரை!

 

காண்டு படங்கள்!

 

.நாகராஜன்

 

***

காண்டு படங்களைப் பார்த்து வருகிறீர்களா? அது என்ன காண்டு?

தமிழ் வார்த்தையா?அர்த்தம் என்ன ? – என்று கேட்கிறீர்களா?

எனக்கும் தெரியாது. அது தமிழ் வார்த்தை தான் போலும்!

 

நிறைய காண்டு படங்கள் வரத் தொடங்கி உள்ளன தமிழில்.

ஒரு  கதாநாயகன்.- பொறுக்கி,பரட்டைத் த்லை, படிக்காதவன், ரவுடி இப்படி எல்லாவற்றையும் குழப்பி சேர்த்து உருட்டிய ஒரு உருவமாக இருப்பான் நமது கதாநாயகன்.

 

செக்கச் செவேலென்று தள தள, பள பளப்பாக ஒரு அழகி இருப்பாள். அவள் படித்தவள். கை நிறைய லகரக் கணக்கில் சம்ப்பாதிப்பவள்.அப்படியானால் பெரும்பாலும் சாப்ட்வேர் துறை என்று வைத்துக் கொள்ளுங்கள்.

 

நம்து பரட்டைத் தலை அவளைக் காதலிப்பான். அவளோ அவனை விரட்டியடிப்பாள். இவன் விடமாட்டான். தொடர்வான்.ஒரு சமயம் நமது பேரழகியை ஒரு ரவுடிக் கூட்டம் தொடர்ந்து இம்சிக்கும். நமது பரட்டைத் தலை பாய்ந்து வந்து அவளைக் காப்பாற்றும். அவ்வளவு தான்; உருகி விடுவாள், அழகி.

பிறகென்ன, சுபம்!

 

இதில் தான் காண்டு வருகிறது. பரட்டைத் தலை பேசும் வசனம் : ஒரே காண்டா இருக்கா? காண்டு பண்ணாதே.

இது அடிக்கடி வரும் வ்சனம்.

பொருள் என்றால் கத்தி, துப்பாக்கி!

சம்பவம் என்றால் கொலை,கொள்ளை.. இத்யாதி.

அய்யே!! நல்ல தமிழ் ஐயா இது!

 

***

 

இந்தியாவில் திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து நூறு ஆண்டுகள் ஆகி விட்டன. அதாவது மூன்று தலைமுறைகளைக் கடந்து விட்டது திரையுலகம்.

***

 

இன்றைய கால கட்டத்தில் நல்ல ‘டேலண்டுடன்’ ஒரு இளைஞர் பட்டாளம் தமிழ் திரையுலகில் தோன்றி கலக்கோ கலக்கு என்று கலக்குவது ஒரு சுகமான அனுபவமே!

***

பேரழகிகள் கதாநாயகிகளாகத் தோன்றுகிறார்கள். ஆமாம்; தோன்றுகிறார்கள், அவர்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்தால் தானே  நடிப்பார்கள்.

 

முகத்தைச் சிணுக்குவது, கதாநாயகன் ஒரு பக்கமும் இவள் மறு பக்கமும் போகும் போது கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்து தலையை அசைப்பது.. இடுப்பை வளைத்து ஒரு டான்ஸ் போஸ் கொடுப்பது .. இது தான் இந்தப் பேரழகிகளின் சினிமா அசைன்மெண்ட். நடிப்புக்கு எங்கே இடம் இருக்கிறது?

**

 

அறிவியல் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி ஏராளமான நவீன சாதனங்கள் திரைத் துறையில் குவிந்துள்ளன.கணினி மூலம் புகுத்தப்படும் உத்திகளோ மலைக்க வைப்பவை.

இத்துடன் நமது இளைஞர்களின் பல் துறை திறமையும் – டேலண்டும்- சேர்ந்தால் அது ஒரு புதிய உயரத்தை அல்லவா காண்பிக்க வேண்டும். அந்த உச்சியில் ஏறி நின்று அல்லவா கும்மாளம் போட வேண்டும்.

 

இல்லை, அது தான் இல்லை.

 

இவர்களிடம் இல்லாத ஒரு அம்சம் நல்ல கதை தான்! அதுவே மற்ற அனைத்தையும் கபளீக்ரம் செய்து விடுகிறது!

***

 

 

பேய்க்கதைகள், தாயாரையே கொல்வது, காண்டு, பொருள்,சம்பவம் இவற்றை உள்ளடக்கிய அடிதடிக் கதைகள், எத்தனை நாளைக்கு ஓடும்? எத்தனை நாளைக்கு இவர்களை திரைத்துறையில் ஓட்டும்?இவற்றில் வரும் காவல் துறையில் உள்ள அனைவருமே லஞ்ச்ப் பேர்வழிகள், கொலைகாரர்கள். துரோகிகள்,சமூக விரோதிகள்…

இவையெல்லாம் நல்லதற்கு அறிகுறியா? எதிர்கால சந்ததிக்கு உகந்த சிந்தனைகள் தானா?

***

 

 

குறைந்த பட்ஜெட்டில் மிக அருமையாக படத்தை முடித்து விடுகிறார்கள்.நல்ல செய்தி.

மூன்றே நாள் ஓடினால் போதுமாம.போட்ட முதலும் கொஞ்சம் லாபமும் வந்து விடுமாம்.

யாருக்கும் நஷ்டமில்லை.

பாகுபலி பிரம்மாண்டத்தை எடுக்கப்போய் உத்தம வில்லனாக முடிய வேண்டிய கஷடமும் நஷ்டமும் இவர்களுக்கு இல்லை!

ஆறுதலான செய்தி தான்.

பழைய கால நூறு நாள், 25வது வெள்ளி விழா வாரம் போன்ற கனவுகளில் இவர்கள் சிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

மூன்று நாட்கள், வெறும் மூன்றே நாட்கள்!

ஆனால் அதற்கும் தியேட்டர்கள் கிடைக்காத தமிழகத்தின் ‘பெகூலியர்’ பாலிடிக்ஸ் ஒரு தனிக்  கதை!

***

 

 

புதிய அலையின் எல்லா படங்களுமே கதை அம்சம் இல்லாத படங்களா? இல்லை,இல்லை.அப்பா என்று ஒரு படம். உத்வேகமூட்டும் ஒரு அப்பாவைப் பற்றிய கதை. கதை உள்ள நல்ல அப்பா!

 

சற்று சிந்தித்து (எனது ஜாலி எல் எல் பி ஹிந்தி படத்தைப் பற்றியது -அந்தக் கட்டுரையைப் படியுங்கள்) ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு அதை மெருகிட்டு எடுத்தால் இப்போதிருக்கும் இளைஞர்களின் டேலண்டும், பேரழகிகளின் அழகும் நவீன சாதனங்களின் உதவியும் ஒரு புது சகாபதத்தை உருவாக்கி விடுமே!

***

 

இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். முயன்றால் முடியும். அதுவும் இப்போதிருக்கும் இந்த கோஷ்டியினால் நிச்சயம் முடியும். வாழ்த்துக்கள்.

***

எந்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப வல்லுநர்கள்,இயக்குநர்கள், தயாரிப்பாளரின் பெயரையும் குறிப்பிடவில்லையே என்று கேட்காதீர்க்ள்.

திறமைப் பட்டாளம் ஜெயிக்கும் பட்டாளம். பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்குத் தேவையானது நல்ல கதையும், அதைத் திறம்படச் சொல்லும் (எடுக்கும்) உத்தியுமே.

 

ஒரே ஒரு சின்ன ஐடியா மட்டும் தர முடியும்.

ஒரு நூறு ஆங்கில, ஹிந்தி திரைப்ப்டங்களைப் பார்த்து அதன் கருவை ஒரு வரியில் எழுதி விட்டு அந்த ஒரு வரியை அவர்கள் 120 நிமிடமாக எப்படி டெவலப் பண்ணி இருக்கிறார்கள் என்று சிந்திக்கலாம். அதில் உள்ள கேரக்டர்களை எப்படி சித்தரித்திருக்கிறார்கள்,காட்சி அமைப்பை எப்படி உருவாக்கி இருக்கிறார்கள் என்று யோசிக்கலாம். அதை விவாதித்து எழுதி வைத்துக் கொள்ளலாம்.

 

அதன் பின்னர்  தங்களுடைய ஒரு வரிக் கதையை எழுதி அதை காட்சிப்படுத்த முயற்சிக்கலாம்.

உருப்படியான யோசனை!

***             நல்ல நடிகரோ தயாரிப்பாளரோ, “ஐயா சொல்வது சுலபம் இப்படி உங்களால் ஒரு வரிக் குறிப்புகளைச் செய்து தர முடியுமா” என்று கேட்டால்….

கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்!

***

பேயை விரட்ட, நோயை விரட்ட, விஷத்தை இறக்க அபூர்வ மந்திரங்கள்- பகுதி 1 (Post No.3974)

பேயை விரட்ட,  நோயை விரட்ட, விஷத்தை இறக்க அபூர்வ மந்திரங்கள்- பகுதி 1 (Post No.3974)

 

Written by London Swaminathan

 

Date: 5 June 2017

 

Time uploaded in London- 16-18

 

Post No. 3974

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

இந்துக்களுக்கு நான்கு வேதங்கள் உண்டு: ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

 

இதில் வெள்ளைக்காரகள் கணக்குப்படி ரிக் வேதம் பழமையானது: சிலர் 6000 ஆண்டு பழமை என்பர்; இன்னும் சிலர் 3200 ஆண்டுகள் பழமை என்பர். அதர்வண வேதம் பிற்காலத்தியது என்பர். ஆனால் இந்துக்கள் இதை ஏற்பத்தில்லை அவர்கள் கணக்குப்படி எல்லா வேதங்களும் கி.மு.3102 ஐ ஒட்டி வியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டவையே ; அதாவது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முன்னரே 4 வேதங்களும் இருந்தன.

உண்மையில் இந்துக்களுக்கு இரண்டே வேதங்கள்தான்; அதாவது ரிக் வேத மந்திரங்களே பெரும்பாலும் யஜூர், சாம வேதங்களில்உள்ளன. அதர்வண வேதத்திலோ   பெரும்பாலும் புதிய மந்திரங்கள்.

 

சங்க காலம் முதல் தமிழர்கள் சொல்லுவது நான்மறை; அதாவது 4 வேதங்கள். ஆனால் மனு முதலானோர் சில இடங்களில் த்ரயீ வேத = மூன்று வேதம் என்பதால் வெள்ளையர்களுக்கு சிறு குழப்பம்; அவர்களுக்கு தமிழும் தெரியாது. ஆகையால் அதர்வண வேதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர்; உண்மையில் அதர்வண வேதம் என்பது அன்றாடம் பயன்படும் மருத்துவம், தாயத்து, பேய் ஓட்டல், விஷங்களை இற              க்கல், தாய் மொழி, தாய் நாடு, “பூமி என்னும் அன்னை”, எதிரிகளை ஒழிப்பது எப்படி என்பது பற்றிப் பேசுவதால் அதைச் சமயச்  சடங்குகள்     பற்றிப்    பேசும் மூன்று வேதங்களுடன் சேர்க்காமல் பேசினர்.

 

 

பிராமணர்களின் ஆயுதம் அதர்வண வேதம் என்று மனு சொல்லுவார். கோபத பிராமணமோ எனில் நான்கு வேத புரோகிதர்களும் யாக யக்ஞங்களில் கலந்து கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஆகையால் வெளிநாட்டினர் சொல்வதை நம்ப வேண்டியதில்லை.

 

அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் எவை என்று தெரியவில்லை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர்.

 

அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு காண்டத்திலும் எது சம்பந்தமான மந்திரங்கள் உள்ளன என்று சுருக்கமாகக் காண்போம்; இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே அவர்கள் சிறந்த நாகரீகமும் உயர்ந்த சிந்தனையும் உடையவரகள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

முதல் காண்டம்:

முதல் காண்டத்தின் முதல் மந்திரமே வாசஸ்பதி என்னும் வாக் (பேச்சு) தேவனையும் வசோஸ்பதி என்னும் செல்வ தேவனையும் வணங்கும் மந்திரம் ஆகும்.

கல்விக்கான மந்திரங்கள்

வெற்றிக்கான மந்திரங்கள்

எதிரிகளை அழிப்பதற்கான மந்திரங்கள்

நோயை அகற்றுவதற்கான மந்திரங்கள்

தண்ணீர் தேவதை பற்றிய மந்திரங்கள்

வரங்களைப் பெறும் மந்திரங்கள்

தர்மம் தொடர்பான மந்திரங்கள்

இதில் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 மந்திரங்களைக் கொண்ட

35 துதிகள் முதல் காண்டத்தில் காணப்படுகின்றன.

 

2 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 5 மந்திரங்களைக் கொண்ட 36 துதிகள் காணப்படுகின்றன.

நோயைக் குணப்படுத்தும் மந்திரங்கள்

ஜங்கிடா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்

அக்னி, இந்திரன், பரப் பிரம்மம் பற்றிய துதிகள்

இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.

ஜங்கிடா மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!

 

3 ஆம் காண்டம்:

 

 

ரிக் வேதத்தில் இடம்பெற்ற வசிஷ்ட மஹரிஷியின் முக்கிய மந்திரம், கொஞ்சம் மாறுதல்களுடன் இதில் உள்ளது. இது செல்வத்தை வேண்டும் மந்திரமாகும்.

எதிரிகளத் தோற்கடிப்பதற்காக்ன மந்திரம்

தேச ஒற்றுமைக்கான மந்திரம்

பட்டாபிஷேக மந்திரம்

பர்ண மணி என்னும் அபூர்வ தாயத்து மந்திரம் — இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.

பர்ண மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!

 

இதில் ஒவ்வொன்றிலும் 6 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.

 

4 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 7 மந்திரங்களைக் கொண்ட 40 துதிகள் காணப்படுகின்றன.

 

ரிக் வேதத்தில் உள்ள யார்? என்னும் மந்திரம் இதில் இடம்பெறுகிறது. யார் என்றால் சம்ஸ்கிருதத்தில் க:– இது பிரம்மாவுக்கும் பெயர்! அதாவது ஓரெழுத்துச் சொல். இதை வைத்து யாரை வணங்குவது என்று மந்திரம் முழுதும் திரும்பத் திரும்ப வரும்.

 

இதில் அதிசய ஒற்றுமை என்ன வென்றால் தமிழ் “க” பிராமி லிபியிலிருந்து வந்தது. அந்த “க” பிராமியில் சிலுவை வடிவில் இருக்கும். அது எகிப்தில் கடவுளைக் குறிக்கும் சித்திர எழுத்து. ஆனால் வெறும் சிலுவையாக இல்லாமல் இரு புறமும் கைகளை உயரத் தூக்கிய மனிதன் போல மேல் நோக்கிய கோடுகளுடன் இருக்கும்.

 

விஷத்தை அகற்றும் மந்திரம்

எதிரிகளை நாடு கடத்தும் மந்திரம்

பலத்தை அதிகரிக்கும் மந்திரம்

தூக்கமின்மையை அகற்றும் மந்திரம்

சங்கு கிழிஞ்சல்களைக் கொண்டு தாயத்து செய்யும் மந்திரம்

மரங்கள், மழையை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்

மூலிகைகள் பசுக்களை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்

 

பாவங்களைப் போக்கும் மந்திரங்கள்

புழுக்களை அகற்றும் மந்திரங்கள்

சக்தியை அதிகரிக்கும் மந்திரங்கள்

5 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 12 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.

குஸ்ட, சிலாச்சி, லக்ஷா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்

இவை என்ன தாவரம் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை.

வெற்றிக்கான மந்திரங்கள்

பிரம்மன் பற்றிய மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

பிராமணர்கள், பசுக்களைப் போற்றும் மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

ஆன்மீக பலத்தை உயர்த்தும் மந்திரங்கள்

ஆயுளை அதிகரிக்கும் மந்திரங்கள்

டாமாரங்களை அடித்து எதிரிகளை பயமுறுத்தும் மந்திரங்கள்

ஒரு அபூர்வ பசுவை வைத்திருப்பது பற்றி அதர்வணுக்கும் வருணனுக்கும் இடையே நடக்கும் சுவையான சம்பாஷணை,

பிராமணனின் மனைவி கடத்தல் பற்றிய செய்தி

பிராமணர்களை ஒடுக்கும் கொடுமை

ஆகியனவும் உள்ளன.

போர் முரசுக்குச் சொல்வது போன்ற இரண்டு மந்திரங்கள்.

 

6- ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 3 மந்திரங்களைக் கொண்ட 142 துதிகள் காணப்படுகின்றன.

அமைதிக்கான மந்திரங்கள்

வளையல்கள் பற்றிய மந்திரங்கள்

‘ரேவதி’ தாயத்து பற்றிய மந்திரங்கள்

சவிதா, இந்திரன் போற்றும் மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரங்கள்

 

 

7 ஆம் காண்டம்:

இதில் 118 துதிகள் காணப்படுகின்றன.

நீண்ட ஆயுளைத்தரும் மந்திரங்கள்

தாய் நாடு பற்றிய மந்திரங்கள்

தாய் மொழி பற்றிய மந்திரங்கள்

ஜனநாயக சட்டசபை பற்றிய மந்திரங்கள்

ஆத்மா பற்றிய மந்திரங்கள்

சரஸ்வதி மந்திரங்கள்

கணவன்– மனைவி நல்லுறவு பற்றிய மந்திரங்கள்

8 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 26 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.

பேயை ஓட்டும் மந்திரங்கள்

ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்

விராஜ்- விராட் என்னும் தேவதை பற்றிய மந்திரங்கள்

இறந்துகொண்டிருக்கும் மனிதனை எழுப்பும் குளிகை பற்றிய மந்திரங்கள்

 

9 ஆம் காண்டம்:

ஒன்பதாம் காண்டத்தில் பத்து துதிகள் இடம்பெறுகின்றன.

இதில் விருந்தினரைப் போற்றும் நீண்ட மந்திரம் உளது.

அஸ்வினி தேவர்களின் இனிமையான உதவி பற்றிய மந்திரமும் உளது.

ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திலுள்ள தீர்கதமஸ் என்ற முனிவரின் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் இங்கே இடம்பெறுகிறது இதில்தான் “கடவுள் ஒருவரே; அறிஞர்கள் அவரை வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்” என்ற புகழ் பெற்ற வாசகம் வருகிறது.

இது தவிர கிருஹப் ப்ரவேச மந்திரம்

நோய்களைத் தடுக்கும் மந்திரம்

பசுக்கள், காளைகளைப் பற்றிய மந்திரங்கள்

ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

10- ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 25 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.

கேன (யாரால், எதனால்) என்ற கேள்வி மந்திரமும்

பிரபஞ்சத்தைத் தாங்கும் ஸ்கம்ப (தூண்) என்ற மந்திரமும்

பரப் பிரம்மம், பசுக்களைப் போற்றும்

விஷத்தை அகற்றும் ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்    ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரையில் மேலும் பத்து காண்டங்களின் சுருக்கத்தைக் காண்போம்.

 

–சுபம்–

 

 

 

எண் ரகசியம்–3; தொண்ணூறு க்யாட் கரன்ஸி! (Post No.3969)

Written by S NAGARAJAN

 

Date: 4 June 2017

 

Time uploaded in London:-  5-24  am

 

 

Post No.3969

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

எண் ரகசியம்

காபிரைட் உள்ள தொடர் இது. திரு எஸ்.சுவாமிநாதன் அனுமதி பெற்று www.tamilandvedas.com மற்றும் கட்டுரை ஆசிரியரின் பெயரோடு வெளியிடல் வேண்டும். மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

எண் ரகசியம் – 3

தொண்ணூறு க்யாட் கரன்ஸி!  

 

ச.நாகராஜன்

பழைய காலத்தில் பர்மா என்று சிறப்புற்றிருந்த நாட்டை நாம் நன்கு அறிவோம்.

 

இப்போது மியான்மர் என்ற பெயரில் அறியப்படும் நாடு அது.

 

பர்மாவை சர்வாதிகாரியாக இருநது ஆண்டவர் நீ வின்.

(பிறப்பு 14-5-1911 மரணம் 5-12-2002) 1958 முதல் 1960 முடியவும் மீண்டும் 1962லிருந்து 1974முடியவும் பிரதமராக இருந்தவர் அவர். 1962லிருந்து 1981 முடிய அரசின் தலைமை பீடத்திலும் அவர் இருந்தார்.

 

அவருக்கு எண் கணித சாஸ்திரத்தின் மீது அபாரமான நம்பிக்கை.

அவர், 1963இல் பர்மாவின் கரன்ஸியாக இருந்த 50 மற்றும் 100 க்யாட் நோட்டுகளை 45 மற்றும் 90 க்யாட் நோட்டுகளாக மாற்றினார். உலகில் இப்படி அதிசயமான எண்களில் கரன்ஸியைக் கொண்டிருந்த ஒரே நாடு பர்மா தான்!

45 மற்றும் 90 ஆகிய எண்கள் ஒன்பதால் வகுபடக் கூடியவை. அவற்றை கூட்டினால் வருவது 9. (45 க்யாட் நோட்டில் 4= 5 = 9; 90 க்யாட் நோட்டில் 9 + 0= 9)

1963இல் 50 மற்றும் 100 க்யாட் நோட்டுகள் செல்லாது என்று அவர் செய்த அதிரடி உத்தரவால் பர்மாவே ஆடிப் போனது.ஒரே நாளில் வாழ் நாள் முழுவதும் சேர்த்த  மொத்த பணத்தையும் இழந்தோர் ஏராளம்.

 

 

இப்படி ஒன்பது வரும்படியான க்யாட் நோட்டை அவர் அமுல் படுத்தியதற்கான காரணம் அவரது நியூமராலஜி ஆலோசகர் அவருக்கு ஒன்பது என்ற எண்ணே அதிர்ஷ்டம் என்றும் எதையும் அவர் ஒன்பது வரும் படி பார்த்துக் கொண்டால் அவர் நிச்சயம் தொண்ணூறு ஆண்டுகள் வாழ்வார் என்றும் சொன்னது தான்!

பர்மாவின் கரன்ஸியை மட்டும் அவர் ஒன்பது  என்று வரும் படி பார்த்துக் கொள்ளவில்லை தனது அலுவலக மற்றும் பிரத்யேக வாழ்க்கையில் வரும் அனைத்தையும் ஒன்பது வரும்படி பார்த்துக் கொண்டார்.

 

 

இதனால் பர்மாவின் பொருளாதாரமே பலவீனமாகி நாசமாகியது.

ஆனால் அவரது நியூமராலஜி நம்பிக்கை அவரைக் கைவிடவில்லை.

 

 

ஏராளமானோர் அங்கு இறந்த போதிலும் 28 ஆண்டுகள் பலம் பொருந்திய தலைவராக அவர் ஆட்சி செலுத்தினார்.

நியூமரலாஜி ‘உறுதி அளித்த’ தொண்ணூறு வயதையும் தாண்டி வாழ்ந்து 91ஆம் வயதில் மரணமடைந்தார்.

 

 

அவரைப் பற்றிய ஏராளமான வதந்திகள் உண்டு.பர்மாவில் இரத்த புரட்சி ஏற்படும் என்றும் அதனால் அவருக்கு அபாயம் வரும் என்றும் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கண்ணாடி முன்னால் நின்று கொண்டு மாமிச ரத்தத்தைத் தன் மேல் தெளித்துக் கொண்டு கண்ணாடியில் இருந்த தன் உருவத்தை துப்பாக்கியால் சுட்டுத் தான் இறக்கவிருக்கும் “தோஷத்தை” அவர் விலக்கிக் கொண்டாராம்.

 

அத்துடன் இளமையுடன் “என்றும்” இருக்க டால்பினின் ரத்தத்தில் அவர் குளிப்பாராம்.

 

 

எண் ஜோதிடம் தவறாகக் கையாளப்பட்டால் அது தனி நபர் அளவில் நன்மையைத் தந்தாலும் ஒரு நாட்டிற்கே அவலத்தைத் தந்ததை நீவின் சரித்திரத்தின் மூலம் பார்க்கலாம்.

 

இதே போல சிங்கப்பூரை நிறுவிய சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லீ க்வான் யூ (பிறப்பு 16-9-1923 மறைவு 23-3-2015) தனிச் சிறப்பு வாய்ந்த தலைவராக சிங்கப்பூர் மக்களால் கருதப் படுபவர்; 91 வயது வாழ்ந்து மறைந்தார்.

 

 

அவர் பெங் சுயி சாஸ்திரத்தின் அடிப்படையில் புத்த துறவி ஒருவரின் அறிவுரையின் பெயரில் எட்டு பக்கம் கொண்ட (பாகுவா என்று சொல்லப்படும் அமைப்பைக் கொண்ட) ‘ஒரு டாலர்’ நாணயத்தை சிங்கப்பூரில் கொண்டு வர சிங்கப்பூரின் பொருளாதாரம் பிரமாதமாக செழித்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவரோ தனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று தான் எழுதிய ஹார்ட் ட்ரூத்ஸ் (Hard Truths)  என்ற நூலில் சொல்லி இருந்தாலும் கூட அவர் எடுத்த பல நடவடிக்கைகள் ஆழ்ந்த பெங் சுயி கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவையே என்று பெங்சுயி ஆதரவாளர்கள் நம்புகின்றனர்; அதற்கான ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

Singapore’s Octal Coin

 

 

91 வயது வாழ்ந்த அவரை 91 என்ற எண்ணுடன் சம்பந்தப்படுத்தும்  அவர் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை மக்கள் இன்று தொகுத்துக் கூறி மகிழ்கின்றனர்.

 

ஆழ்ந்து யோசியுங்கள், எண்களின் ரகசியம் புரியும் என்று நியூமராலஜி ஆர்வலர்கள் கூறி  மகிழ்கின்றனர்!

-to be continued………………………………..

சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாடு (Post No.3964)

 

Research ArticleWritten by London Swaminathan

 

Date: 2 June 2017

 

Time uploaded in London- 8-40 am

 

Post No. 3964

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

(I wrote this for ‘Soundaryam’ published by Hindu Tamil Cultural Association, Enfield,London)

 

“ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்

கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—

வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,

ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

(வேட்டுவ வரி, சிலப்பதிகாரம்)

 

செந்தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” — என்று பாரதியாரால் போற்றப்பட்ட அற்புத காவியம். பழந்தமிழ் நாட்டில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நாநிலப் பிரிவுகளுக்கு முறையே விஷ்ணு,முருகன், இந்திரன், வருணன் தெய்வங்களாக இருந்ததை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” எழுதிய தொல்காப்பிய சூத்திரம் மூலம் அறிகிறோம்:

மாயோன் மேய காடுறை யுலகமுஞ்

சேயோன் மேய மைவரை யுலகமும்

வேந்தன் மேய தீம்புன லுலகமும்

வருணன் மேய பெருமணலுலகமும்

முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

(தொல். பொருள். 1-5)

 

இந்த நாநிலம் அதன் நிலை திரிந்து வறண்டு போனால் அது பாலை நிலம் எனப்படும். அதற்கான தெய்வம் கொற்றவை என்னும் ‘தேவி’யாகும். சம்ஸ்கிருதத்தில் கொற்றவையை ‘துர்கா’ என்று அழைப்போம். கொற்றவை வழிபாடு குறித்து பல சுவையான தகவல்களை, நமக்கு, இளங்கோ அடிகள் யாத்த, சிலப்பதிகாரம் தருகிறது. அவை இன்று வழக்கற்றுப் போனது மேலும் வியப்பை ஏற்படுத்தும்.

 

தற்போதுள்ள உலக மதங்களில் இந்து மதம் ஒன்றில் மட்டுமே கடவுளைப் பெண் வடிவத்திலும் வணங்குகிறோம். அந்த அளவுக்குப் பெண்களுக்கு உயர்நிலை கொடுக்கப்பட்டது. சங்க காலம் முதல் இந்தக் கொற்றவை எனும் பெண் தெய்வம் (முருகு.368, பெரும்.583, நெடு.192) வழிபாடு இருப்பதற்குப் பல சான்றுகள் உள. இக்கட்டுரையில் சிலப்பதிகாரக் குறிப்புகளை மட்டும் காண்போம்:

மான் வாகனம்

துர்கைக்கு/ கொற்றவைக்கு மான் வாகனம் என்ற குறிப்பு சிலம்பில் வருகிறது. பிற்காலத்தில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தரும் மான் வாகன தேவி பற்றி (கலையதூர்தி) என்று பாடுகிறார். ஆனால் சிங்கத்தின் மீதும், புலியின் மீதும் காட்சி தரும் தற்கால துர்கை, மான் வாகனத்தில் அமர்ந்த கட்சி எங்கேயும் காணக் கிடைக்கவில்லை; அதாவது சிலையிலோ, படத்திலோ இல்லை! இது ஒரு வியப்பான செய்தி. இளங்கோ பாடிய சிலம்பிலிருந்து, சம்பந்தர் பாடிய தேவாரம் வரை காணப்படும் கொற்றவையின் மான்  வாகன ‘’போஸ்’’ நமக்குக் கிடைத்தில.

 

பாலைவனத்தில் வாழ்வோர் மறவர்கள் ஆவர். அவர்கள் கொலைக்கும் அஞ்சாத வீரர்கள். பாலைவனம் வழியாகக் கடந்து செல்லும் வணிகர், தூதர் முதலியோரைத் தாக்கி, அவர்களைக் கொன்று, பொருள்களை வவ்வுவதே பாலை நில மக்களின் தொழில். தாங்கள் கொன்ற மிருகங்களை கொற்றவைக்குப் படைப்பதும் இவர்கள் வழக்கமாகும்.

சிலப்பதிகாரத்தில் ஐயை, கார்த்திகை என்ற பெயர்களுடைய பெண்களும் காட்சி தருகின்றனர். அவை துர்க்கையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:

“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,

மையறு சிறப்பின் வான நாடி

ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்”

(காடுகாண் காதை, சிலம்பு)

 

இதைத் தொடர்ந்துவரும் வேட்டுவ வரிப் பாடல் முழுதும் கொற்றவை வருணனை வருகிறது.

கொற்றவை கோவிலில் சாலினி வெறியாடியதை (சாமி ஆடல்)  எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். கலையமர் செல்விக்கு பலிதந்தால்தான் நன்மைகள் விளையும் என்று அவள் சாமி ஆடுகையில் முழங்குகிறாள். இதோ இளங்கோவின் வரிகள்:

 

“கலையமர் செல்வி கடன் உணின் அல்லது

சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்;

மட்டு உண் வாழ்க்கை வேண்டுதீர் ஆயின்

கட்டு உண் மாக்கள்! கடம் தரும் என் ஆங்கு”

(கலை= மான்)

பெண்ணுக்கு கொற்றவை வேஷம்

இன்னொரு விநோத வழக்கத்தையும் சிலம்பு பாடுகிறது. அதாவது ஒரு சிறு பெண்ணை கொற்றவை போல அலங்கரித்து மான் வாஹனத்தில் ஏற்றி ஊர்வலம் விட்டு வணங்கியதையும் இளங்கோ சொல்லுகிறார். சங்க காலத்தில் நடந்த இக்கொற்றவை வழிபாடு இன்று எங்கும் காணக் கிடக்கில. நேபாள  நாட்டில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து “குமாரி” என்று தெய்வமாக வழிபடுவதை இன்றும் காணலாம்.

 

“பழங்குடிக் குமரியின் முடியை உயர்த்திப் பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் கொம்பை பிறைச் சந்திரன் போல அவளுக்கு அணிவித்தனர். புலிப்பல் தாலியை அணிவித்து புலித்தோலை ஆடையாகப் போர்த்தி, அவளை மான் மீது ஏற்றி ஊர்வலம் விட்டனர். அவள் கையில் கிளி, கோழி முதலியவற்றைக் கொடுத்து வழிபட்டனர். அவளைத் தொடர்ந்து பெண்கள் பலர், சோறு, எள்ளுருண்டை, நிணச் சோறு, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் சுமந்து வந்தனர். பெரிய வாத்தியங்கள் முழங்கின. இது இளங்கோ அடிகள் நமக்கு அளிக்கும் செய்தி.

 

இதற்குப் பிறகு இளங்கோ அடிகள், துர்கையை மஹிஷாசுரமர்த்தனியாக வருணிக்கிறார். இன்றும் மாமல்லபுரத்தில் “எருமை அசுரனை” (மஹிச அசுரன்) தேவி, வதம் செய்த காட்சி, அருமையானச் சிலை வடிவில் காட்சிதருகிறது;

பல்லவர்கள் சிலை செய்வதற்கு முன்னரே இளங்கோ அடிகள் செய்யுள் வடிவில் ஓவியம் தீட்டிவிட்டார்:

 

“மதியின் வெண்தோடு சூடும் சென்னி

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்

பவள வாய்ச்சி, தவளவாள் நகைச்சி,

நஞ்சு உண்டு கறுத்த கண்டி, வெஞ்சினத்து

அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்

துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி,

வளியுடைக் கையில் சூலம் ஏந்தி

கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலை ஆட்டி

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,

வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை!

இரண்டு வேறு உருவின் திரண்டதோள் அவுணன்

தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்

அமரி, குமரி, கவுரி, சமரி,

சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை

ஐயை, செய்யவள், வெய்யவாள் தடக்கைப்

பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை;

ஆய்கலைப் பாவை, அருங்கலப் பாவை

தமர் தொழ வந்த குமரிக் கோலத்து

அமர் இளங்குமரியும் அருளினள்

வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே”

 

பொருள்: சந்திரப் பிறை சூடிய தலை; நெற்றிக் கண்; பவள வாய், முத்துச் சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பையே கயிறாகக் கொண்டு மேரு மலையை வில்லாக  வளைத்த வில்லி; துளை அமைந்த பல்லுடைய விஷப் பாம்பையே கச்சு ஆக அணிந்த முலையுடையாள்; வளைகள் அணிந்த கையில் சூலம், யானைத்தோல் போர்வை, புலித்தோல் மேகலை, இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கை, மகிஷாசுரன் தலையில் நிற்பவள்; எல்லோரும் தொழும்குமரி, கறுப்பி, போரின் அதிதேவதை, சூலம் ஏந்திய பெண்; நீல நிறத்தவள்; எம் தலைவி, செய்யவள், தடக் கையில் கொடிய வாளேந்திய நங்கை; பாயும் மான் மீது ஏறி வருபவள்; மலைமகள், கலைமகள், திருமகளின் உருவம்; இளங்குமரி; அவள் அருள் நமக்குக் கிடைத்துவிட்டது.

 

வழக்குரை காதையிலும் கண்ணகியின் தலைவிரி கோலத்தைக் கண்டவுடன், வாயிற்காப்போன், பாண்டிய மன்னனிடத்தில் சொல்லுகையில் வாசலில் வந்து நிற்கும் பெண் கொற்றவை அல்லள், காளி அல்லள், பிடாரி அல்லள் என்று பல பெண் தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லுகிறான். சங்க காலத்தில் பெண் தெய்வ வழிபாடு, குறிப்பாக கொற்றவை வழிபாடு, எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதைக் காண முடிகிறது. புராணத்தில் வரும் மஹிஷாசுர மர்தனி, அர்த்தநாரி முதலிய கருத்துகளும் துர்கை என்பவள் சிவன், நாராயணன் எனும் வடிவத்தின் பெண் உரு என்ற கருத்தும் மூன்று தேவியரின் மாற்று உரு என்றும் கருத்து தொனிக்கும் அற்புத வரிகள் இவை. சங்க காலத்தில் ஒரே தெய்வம் என்ற கொள்கையை மக்கள் உணர்ந்த போதிலும் அவளைப் பல்வேறு வடிவங்களில் வழிபட முழ்டியும் என்பதை இளங்கோ சொல்லும் போது நாம் துர்கா அஷ்டோத்திரம் படிக்கும் உணர்வு ஏற்படும்!

 

மேலும், வேட்டுவ வரி முழுதும் கொற்றவை வழிபாடுதான்; படிக்கப்படிக்கக் கழிபேருவகை தரும்!

 

கண்ணகி, தனது கணவன் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டவுடன், அவள் வளையல்களை உடைத்தெரிகிறாள். இதுவும் கொற்றவை கோவிலில் நடந்த நிகழ்ச்சி.

 

சிலப்பதிகாரம் தவிர தமிழில் பல்வேறு கால கட்டங்களில் எழுந்த இலக்கியங்களில் கொற்றவைக்குப் பல பெயர்கள் காணப்படுகின்றன:

அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, ஆளியூர்தி, பாலைக் கிழத்தி, வீரச் செல்வி, மகிடற்செற்றாள், குமரி, கலையதூர்தி, கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசயை, அரியூர்தி, நாரணி, விந்தை, நீலி, காத்தியாயனி, சுந்தரி, யாமலை, சயமகள், மேதிச் சென்னி, மிதித்த மெல்லியல், கௌரி, ஐயை, பகவதி, கொற்றி, சக்கராயுதத்தி, மாலுக்கிளையநங்கை, சூலி, வீரி, சண்டிகை, கன்னி, கார்த்திகை, நாராயணி, தாருக விநாசினி

 

வாழ்க கொற்றவை / துர்க்கை புகழ்!

பெருகுக! தேவியின் அருள்!

எங்கும் மங்களம் பொங்குக!!!

 

-Subham-

‘வைஷ்ணவ பரிபாஷை’ என்னும் அரிய நூல்!! (Post No.3954)

Written by S NAGARAJAN

 

Date: 30 May 2017

 

Time uploaded in London:-  6-44  am

 

 

Post No.3954

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

தமிழ் இன்பம்

 

வள்ளுவர் குறளில் கையாண்ட வ்டமொழிச் சொற்கள் என்ற கட்டுரையில் (கட்டுரை எண் 3873, வெளியான தேதி : 3-5-2017)

 

வைஷ்ணவ பரிபாஷை என்ற நூலைக் குறிப்பிட்டு அந்த நூலின் பெருமையைக் குறித்து தனியே ஒரு கட்டுரை எழுதப்படும் என்று குறிப்பிட்டிருந்தேன். இதோ, அந்தக் கட்டுரை!

 

 

தமிழ் வளர்க்கும் பரிபாஷைச் சொற்கள்!- வைஷ்ணவ பரிபாஷை என்னும் அரிய நூல்!!

ச.நாகராஜன்

 

வைஷ்ணவ பரிபாஷை என்ற அரிய நூல் பிராமணர்கள் பேசும் பரிபாஷைச் சொற்களைப் பற்றிய நூல்.

 

எங்க ஆத்துக்கு வரேளா?

 

அவாள் எப்படி வருவா? அவாத்திலே ஆம்படையான் எங்கேயோ வெளிலே போயிருக்காராம்.

 

இதில் அகம் – வீடு – இல்லம் ‘ஆம்’ ஆகச் சுருங்கி ஆத்துக்கு வருகிறீர்களா என்ற பொருளில் ஆத்துக்கு வரேளா என்று ஆகி இருக்கிறது.

 

அகமுடையான் – வீட்டுக்காரன் – கணவன்

அகமுடையாள் – வீட்டுக்காரி – இல்லத்தரசி – மனைவி

 

இப்ப்டி ஐயர் ஆத்துத் தமிழை ஆராயப் புகுந்தோமானால் அழகிய தமிழ்ச் சொற்கள் நூற்றுக் கணக்கில் கண்டு பிடிக்கலாம்.

ஆயிரக் கணக்கில் அள்ளித் தருகிறேன் என்று கச்சை கட்டிக் கொண்டு முன் வருகிறார் ஒரு தமிழ் அன்பர்.

அவர் தான் எம்பார் க்ண்ணன் ரங்கராஜன்.

வைஷ்ணவ ப்ரிபாஷை என்ற மின்வடிவ நூலில் ஐயர்  மற்றும் ஐயங்கார் பரிபாஷையை – ஆங்கிலத்தில் dialect –   நன்கு ஆராய்ந்து சொற்களைத் தொகுத்து முறைப்படுத்தி வகைப்படுத்தி 931 பக்கங்களில் தந்துள்ளார்.

 

அசுர முயற்சி. ராக்ஷஸ பிரயத்னம். வெற்றி கிடைத்திருக்கிறது.

56 அத்தியாயங்களில் அன்பர் பலவேறு தலைப்புகளில் பரிபாஷையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அமுதாக வழங்கி இருக்கிறார்.

 

பாராட்ட வார்த்தைகளே இல்லை! வாழ்த்துக்கள்!!

உறவுகள், வர்ணங்கள், பரிமாணங்கள், வடிவங்கள், ருசிகள், தரங்கள், அளவுகள்,சரீர பாகங்கள், பிராணிகள், பக்ஷிகள், பூச்சிகள், பழங்கள், கறிகாய்கள், மளிகை சாமான்கள், புஷ்பங்கள், உலோகங்கள், எண்கள், பழைய தமிழ் அளவுகள், நாணயம், வேலைகள், தளிகை, அகம், கால் அளவைகள், வருஷங்கள், மாதங்கள், திதிகள், ராசிகள், வார நாட்கள், ருதுக்கள், பக்ஷ்ங்கள், அயனங்கள், பொழுதும் ஜாமமும், ந்க்ஷத்திரங்கள், வாஹனம், திசை என்று அன்பர் எதையும் விடவில்லை.

 

பழத்தைப் பிழிந்தெடுத்து ஜூஸ் போல தந்திருக்கிறார்.

 

***

சம்பாஷ்ணைகள் என்ற அத்தியாயத்திலிருந்து ஒரு சிறிய் பகுதி:

ரங்கா : கவலைபடாதேள். சீக்கிரம் போய்டலாம். ராத்திரி தளிகை ஆயிடுத்தா. என்ன பண்ணேள், இன்னைக்கு

கோமளம் மாமி : தளிகை ஆயிடுத்துடா. ராத்திரிக்கு ஒண்ணும் தனியா பண்ணல. மத்தியானம் பண்ன வெண்டக்காய் கொழம்பு, பாவக்காய் கறமது இருக்கு. சாத்தமது பண்ணேன். அப்பறம் கொஞ்சம் வடாம் வறுத்துட்டேன். அவ்ளோ தான்.

 

ரங்கா: பிரமாதம் மாமி. உங்க தளிகைன்னா கேக்கணுமா. நளபாகமாச்சே.

கோமளம் மாமி : படவா. சாப்டாமலே சொல்றே. உனக்கு பரிகாசம் பண்ண நான் தான் ஆப்டேனா. போய் வேலையை பாரு. விட்டா பேசிண்டேருப்பே. அம்மா கிட்ட நான் விஜாரிச்சதா சொல்லு. என்ன. நான் கிளம்பறேன். இந்த சனிக்கிழமை ஆத்துக்கு வாடா.

 

ரங்கா: சரி மாமி. நான் கண்டிப்பா வரேன். நீங்க கிளம்புங்கோ. பத்திரமா போயிட்டு வாங்கோ.

**

சங்க காலத்திலிருந்து பிராமணர்கள் யாகத் தீயை வளர்த்தார்போல தமிழையும் ஒங்கி உயர வளர்த்திருக்கிறார்கள்.

இதை மன்னர்களும் மக்களும் அங்கீகரித்து அவர்களைத் தொடர்ந்து பாராட்டி வந்திருக்கின்றனர்; உரிய மதிப்பையும் வழங்கியுள்ளனர்.

 

தூய தமிழ் சொற்களை பிராமணர் தமிழில் காணலாம்.

இவற்றைத் தொகுப்பது ஒரு பெரிய முயற்சி. இந்த் வேலையைத் தனி ஒருவராக எம்பார் கண்ணன் ரங்கராஜன் செய்திருக்கிறார் என்றால் அது “ஆசை பற்றி அறையலுற்ற” தமிழ் ஆசை தான் காரணமாக இருக்கும்.

 

இதே போல அவர் குறிப்பிடும் தென்னகத் தமிழ், கோவை தமிழ் மற்றும் இதர பகுதிகளின் பரிபாஷைகளையும் அந்தந்த ப்ரிபாஷைகளின் வல்லுநர்கள் தொகுத்தால் அது தமிழுக்குச் செய்யும் அரிய தொண்டாக அமையும்.

 

எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி ykrrajan@gmail.com.

 

இந்த நூலைப் பெற விரும்புவோரும் அவரைப் பாராட்ட விழைவோரும் இந்த மின்னஞ்சலில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.

 

நூலைப் படித்து முடிக்கின்றபோது தமிழை உண்மையாக வளர்ப்பவர்கள் ஒரு புறமிருக்க தமிழின் பெயரால் துவேஷத்தைத் தூண்டி அந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடித்து தன்னையும் தன் குடும்பத்தையும் தழைக்கச் செய்யும் “தமிழ் இனக் காப்பாளர்களை” நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழை வளர்ப்ப்வர் ஒரு புறம்; தமிழால் தன்னை வளர்ப்பவர் ஒரு புறம்.

 

நல்லவர்களை இனம் கண்டு பாராட்டாத தமிழ் இனம் இனியேனும் விழிக்குமா?

 

தமிழால் தன்னை வைதாரையும் வாழ வைக்கும் குமரன் அருளே தேவை!

 

நூலை எனக்கு அனுப்பி உதவிய எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நூலும் நூலை எழுதியவரும் ஒரு மின்னஞ்சல் தூரத்திலேயே இருப்பதைச் சுட்டிக் காட்டிய மகிழ்ச்சியோடு கட்டுரையை முடிக்கிறேன்.

***

 

 

ஜாலி எல் எல் பி – Jolly LLB (Post No.3948)

Written by S NAGARAJAN

 

Date: 28 May 2017

 

Time uploaded in London:-  6-54  am

 

 

Post No.3948

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

சிந்திக்கவும் சிரிக்கவும்

 

பார்த்து மகிழ ஒரு நல்ல திரைப்படம்          ஜாலி எல் எல் பி – Jolly LLB

ச.நாகராஜன்

 

சாதாரணமாக திரைப்படம் பார்க்க எனக்கு நேரமே கிடையாது. இப்போது சான்பிரான்ஸிஸ்கோவில் இருப்பதால் நிறைய நேரம் கிடைக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தொலைக்காட்சி சீரியல்களையும் சில திரைப்படங்களையும் பார்க்கும் வசதியும் வாய்ப்பும் நேரமும் இங்கு உள்ளதால் சில தமிழ், ஹிந்தி, ஆங்கிலத் திரைப்படங்களையும் தொலைக்காட்சி சீரியல்கள்கள் சிலவற்றையும் பார்க்க முடிந்தது.

 

இதில் குறிப்பிடத்தகுந்த படமாகத் திகழ்வது ஹிந்தியில் எடுக்கப்பட்ட Jolly LLB  ஜாலி எல் எல் பி என்ற திரைப்படம்.

2013ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. நையாண்டி படம் என்றோ காமடி திரைப்படம் என்றோ இதை லேசில் ஒதுக்கி விட முடியாது.

அற்புதமாக காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கும் திரைப்படம் இது. அத்துடன் தீவிர சிந்தனையைத் தூண்டி விடும் படமாகவும் இது அமைகிறது.

கதையின் ஓட்டத்தில் கதாபாத்திரங்கள் சொல்வதையும் செய்வதையும் மேம்போக்காகப் பார்த்து விட்டாலும் ஒவ்வொரு சீனிலும் அழுத்தம் திருத்தமாக பல உள்ளார்ந்த அர்த்தங்கள் இருப்பதை சிந்தனை செய்து தெரிந்து கொள்கிறோம்.

 

கதை வக்கீல்களைப் பற்றியது; ஒரு கேஸைச் சுற்றிச் சுழல்கிறது. பணக்கார வீட்டுப் பையன் நடைபாதையில் படுத்திருந்த ஆறு பேரை ஒரு காரை ஏற்றிக் கொன்று விட்டான், குடி போதையில்.

அந்த கேஸிலிருந்து தப்பிக்க போலீசுக்கு லஞ்சம். வக்கீலுக்குப் பெருந்தொகை. தப்புக்கு மேல் தப்பு செய்யும் ஒரு பெரிய வக்கீலின் சாகஸ திருப்பங்கள்.

 

நமது கோர்ட் வாசல்களிலும் சுற்றுப்புறங்களிலும் இருக்கும் வக்கீல்களின் கூட்டமும் அவல நிலையும் ஒரு புறம்.

ஓட்டை டைப்ரட்டர்களை வைத்துக் கொண்டு, சார், பெய்ல் வேணுமா என்று கத்தரிக்காய் வியாபாரி போலக் கூவும் வக்கீல்கள். அந்த ஓட்டை டைப்ரட்டரையும் ஒரு பூட்டு போட்டு பாதுகாக்கும் அவலம்!

 

இந்த வக்கீல் கும்பலில் தன் தனித்துவத்தை நிலை நாட்ட விரும்பி, ஆறு பேரைக் கொலை செய்த ஹிட் அண்ட் ரன் கேஸை எடுத்து தன் பெயரை நிலை நாட்டத் துடிக்கும் ஜாலி என்ற வக்கீல் (அர்ஷத் வாஸி நடிகர்)

அவர்  கேஸைக் கையாளும் விதம் அழகுறச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக ஜட்ஜ் திரிபாதியாக  நடித்துள்ள சௌரப் சுக்லாவின் நடிப்பைப் புகழ வார்த்தைகளே இல்லை.

லஞ்சம் வாங்கும் சபலப் பேர்வழியோ என்று முதல் காட்சியில் சந்தேகம்; டீ குடித்து விட்டு கேஸ் பேப்பர்களை கண்ணாடி வழியே அருகே வைத்துப் பார்த்து ஏ.சி. இல்லை என்று அலட்டிக் கொள்வது, அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரையும் திகைக்க வைக்கும் ஒரு வித்தியாசமான கேரக்டர், பெரிய வக்கீலான ராஜ்பாலைப்( நடித்து அசத்துபவர் நடிகர் பொமன் இரானி) புகழ்வது; அவரை அனுசரிப்பது; ஆனால் தன் போக்கில் வழக்கை மேலே நடத்த அனுமதிப்பது. ராஜ்பால் கத்தும் போது அவருக்கு மேலே கத்தி ‘இது எனது கோர்ட்; இங்கு நான் தான ஜட்ஜ் என்று தீர்க்கமாகச் சொல்வது, கடைசியில் இறுதித் தீர்ப்பை வழங்குவது என எல்லா விதத்திலும் அழகுற நடித்து அசத்துவதோடு நம்மை பெரிதும் சிந்திக்க வைக்கிறார்  சௌரப் சுக்லா – இல்லை, இல்லை ஜட்ஜ் திரிபாதி.

 

குடும்ப உறவைச் சித்தரிக்க காதலி தேவை – அதற்கு அமிர்தா ராவ்!

படத்தில் பல திருப்பங்கள்!

ராஜ்பால் வாதத்தால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் மனம் நொந்து கேண்டீன் நடத்தும் பெரியவர்;

 

செக்யூரிடியாக் வந்து இருமி இருமி இளைத்தவராக இருக்கும் போலீஸ் என்றாலும் இறுதியில் தன் பணியைச் செய்யும் செக்யூரிடி போலீஸ்.

இருப்பவரை இறந்ததாக மாற்றும் லஞ்ச லாவண்ய போலீஸ் இன்ஸ்பெக்டர்,

“இறந்து போன”வர் சாட்சி சொல்ல வருவது,

 

பெருந்தொகையைப் பெற தானே ஆளை செட் அப் செய்யும் ‘பெரிய்ய வக்கீல்’ தேஜ்பால்

என இப்படி கேரக்டர்களின் வீச்சு அபாரமாக உள்ளது.

பாட்டுக்கள் கூட பொருள் பொதிந்து இருப்பதால் கேட்க வைக்கிறது.

நமது நியாய ஸ்தலங்கள் எப்படி ஒரு அவல நிலையில் இயங்குகிறது என்பதைச் சுட்டிக் காட்டும் இந்தப் படத்தில் இடம் பெறும் வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் இன்னொரு மறை பொருள் அர்த்தம் இருக்கும் படி பார்த்துக் கொண்ட் வசனகர்த்தா நம்மை நெடு நேரம் சிந்திக்க வைக்கிறார். இந்தப் படம் 1999ஆம் ஆண்டு ந்டந்த ஒரு ஹிட் அண்ட் ரன் கேஸான சஞ்சீவ் நந்தா கேஸ் மற்றும் பிரியதர்ஷினி மாட்டூ கேஸ் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்பட்ட உத்வேகத்தால் எடுக்கப்பட்டது.

 

 

படத்தின் டைரக்டர் மற்றும் வசனகர்த்தா சுபாஷ் கபூர். இல்லை இவரை சபாஷ் கபூர் என்றே இனி அழைக்கலாம்.

சிறந்த ஹிந்தி படத்திற்கான நேஷனல் பிலிம் அவார்டை இந்தப் படம் பெற்றுள்ளது.

 

ஜட்ஜ் திரிபாதியாக நடித்த சௌரப் சுக்லாவிற்கு பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் என்ற நேஷனல் பிலிம் அவார்ட் கிடைத்துள்ளது. அட, அவார்டுகளின் மீது கூட ஒரு நம்பிக்கை வருகிறதே, இந்தப் படத்தால்!

அடுத்து ஜாலி எல் எல் பி 2 – இந்த ஆண்டு வெளியாகி இருக்கிறது!

 

அதையும் பார்த்து விட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டேன்.

சிந்திக்க வைக்கக் கூடிய ஒரு தமாஷ் மற்றும் சீரியஸான படத்தைப் பார்க்க 128 நிமிடம் இருந்தால் இதை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

எனது மார்க் இந்தப் படத்திற்கு நூற்றுக்கு நூறு!

 

***

திரைப்படங்கள் சிலவற்றைப் பார்த்திருப்பதால் அதைப் பற்றிய தீர்மானமான எனது எண்ணங்களை இன்னொரு கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.

****

 

 

கர்ம வினை பற்றி புத்தரும் வள்ளுவரும் செப்புவது ஒன்றே!- பகுதி 7 (Post No.3947)

Written by London Swaminathan

 

Date: 27 May 2017

 

Time uploaded in London: 21-26

 

Post No. 3947

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

(This is already posted in English a few days ago)

 

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

 

பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனையும் பல்லக்கில் அமர்ந்து செல்பவனையும் பார்த்த உடனேயே தெரியும்- அறத்தின் பயன் என்ன என்று. புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பவனி வருவான். இது பரிமேல் அழகர் உரை. இதற்கு எதிர் மாறாராக எழுதப்படும் உரை தவறானவை. நூறு ஆண்டுக்கு முந்தைய புத்தகங்களில் எல்லாம் இந்த உரையே இருக்கும் புத்தரின் தம்ம பத உரையும் இதை ஆதரிக்கும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி (குறள் 115)

பொருள்

உலகத்தில் அழிவும் ஆக்கமும் இல்லாமல் இல்லை. இது ஒருவருக்கு வருவதற்கு பழ வினையே காரணம். ஆகையால் எது வந்தபோதிலும் நடுவு நிலைமை தவறாது இருப்பதே பெரியார்களுக்கு அணிகலன் ஆகும்

 

கெடுவல்யான் என்பது அறிக தன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின் (குறள் 115)

 

ஒருவன் நடுவுநிலைமை தவறி தவறானவற்றைச் செய்யப் போனால், தான் கெட்டுப் போனதற்கு அறிகுறி அதுதான் என்பதை அவன் உணர வேண்டும். அதாவது அவன் கெட்டழிவது உறுதி

 

விநாச காலே விபரீத புத்தி என்று சம்ஸ்கிருதத்தில் பழமொழி உண்டு.

quosdeus vult perdere prius dementat – Napoleon

Whom God wishes to destroy He first deprives sanity

 

நெப்போலியனும் சொல்கிறார்: கடவுள் யாரை விழுத்தாட்ட நினைக்கிறானோ அவனுக்கு முதலில் புத்தியைத் தடுமாற வைப்பார்.

 

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

 

கெட்டதும் நல்லதும் நம்மால் வருவதுதான்; தானே தீங்கு

செய்து கொள்கிறான்; தானே தீமையை அகற்றவும் செய்கிறான். தானே தூய்மைப்படுத்திக் கொள்ளவும் செய்கிறான்.        இது எல்லாம் வேறு ஒருவர் செய்வதல்ல (தம்மபதம் 165)

தனக்குத் தானே எஜமானன் என்றும் சொல்லுவார் (160)

 

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற கனியன் பூங்குன்றன் கருத்து இங்கே தொனிக்கிறது:-

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம்: 192)

 

 

 

புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கத்துத் தான்பிறிது ஊனுண்பான்

எங்கனம் ஆளும் அருள் (குறள் 251)

 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

 

பொருள்:-

தன்னுடைய சதையைப் பெருக்க வைப்பதற்காக இரக்கமின்றி மற்ற உயிர்களைக் கொன்று சாப்பிடுபவன் எப்படி கருணை உடையவனாக இருக்க முடியும்?

 

ஒரு உயிரையும் கொல்லாமலும், மற்றவர் விற்கும் புலாலை உண்ணாமலும் இருப்பவனை எல்லா உயிரினங்களும் இருகரம் குவித்து தொழுது ஏத்தும்.

 

புத்தர் சொல்கிறார்:

எல்லா மனிதர்களும் தண்டனை என்றால் நடுங்குகின்றனர்; எல்லோரும் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்; அவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்க்க வேண்டும். எந்த உயிரையும் கொல்லக்கூடாது. கொல்வதற்க்குக் காரணமாக இருக்கக்கூடாது.–தம்மபதம் 129

 

to be continued………………..

பெங் சுயி உண்மையா, பொய்யா? (Post No.3944)

Written by S NAGARAJAN

 

Date: 27 May 2017

 

Time uploaded in London:-  5-16 am

 

 

Post No.3944

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

பெங் சுயி உண்மையா, பொய்யா? உண்மை என்றால் நிரூபணம் என்ன?

 

ச.நாகராஜன்

 

பெங் சுயி என்பது சீன வாஸ்து சாஸ்திரம். பெங் என்றால் காற்று; சுயி என்றால் நீர். பெங் சுயி சாஸ்திரம் குறைந்த பட்சம் 5000 ஆண்டுகள் பழமையானது.

ஆற்றலை எப்படி வழிப்படுத்தி பாயச் செய்து நமக்கு நல்லனவற்றை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதைச் சொல்வதே பெங் சுயி!

சரி, இது உண்மையா, பொய்யார்? உண்மை என்றால் அதற்கு ஏதாவ்து நிரூபணம் இருக்கிறதா?

ஒரு உண்மை சம்பவத்தைப் பார்க்கலாம்.

மேலை நாடுகளில் கடந்த 16 வருடங்களாக பெங் சுயி மீது அபார மோகம் ஏற்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் பெங் சுயி.

 

     ஹான்ஸ் ஸ்னூக் என்பவர் பிரபல் ஆரஞ்சு நிறுவனத்தின் உரிமையாளர். இங்கிலாந்தில் பிறந்தவர். படிப்பை முடிக்க முடியாமல் பல்கலைக் கழகத்திலிருந்து பாதியில் வெளியேறியவர்.

     கனடா சென்று அங்கு ஹோட்டலில் பணியாற்ற ஆரம்பித்தார். பின்னர் ஹாங்காங் சென்று அங்கு டெலிகாம் கம்பெனி ஒன்றில் பணியாற்றி தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டார். 1994இல் இங்கிலாந்திற்குத் திரும்பிய அவர் ஒரு மொபைல் கம்பெனியை ஆரம்பித்தார்.

    அந்த வியாபாரத்திலோ கடும் போட்டி நிலவியது. வணிகத்தில் வெற்றி பெற பெங் சுயி நிபுணர் ஒருவரை நாடினார்.

 

அபார வெற்றி!

     அவருக்கு பெங் சுயியின்  மீது நம்பிக்கை இல்லை. ஆனால் முடிவுகள் அவர் நம்பிக்கையைப் பொய்யாக்கும் வண்ணம் இருந்தன.

    பெங் சுயி மாஸ்டர் சொன்னதை எல்லாம் செய்தார். 12 மாதங்களில் உங்கள் கம்பெனி அமோகமாக வளரும் என்று அவர் சொன்னது அப்படியே பலித்தது. ஏராளமான பணம் சேர்ந்தது. தனது கம்பெனியை பல மில்லியன் பவுண்டுக்கு விற்றார்.

இதே போல உலகெங்கும் உள்ள வணிகர்கள் பெங் சுயி வழிப்படி வெற்றி பெறுகின்றனர்.

   உதாரணமாக சென்னை உள்ளிட்ட உலகப் பெரும் நகரங்களில் பெரும் நிறுவனங்கள் மற்றும் மால்களுக்கு முன்னால் நீரூற்று, அரவானா மீன் உள்ள தொட்டிகள், சிறிய நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட பல பெங் சுயி வழிமுறைகளைக் காணலாம்.

    மைஹோட்டல் கம்பெனி என்ற ஒரு பெரும் தொடர் ஹோட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரூ த்ராஸிவோலூ. அவர் ஒரு பெரிய கட்டிடக் கலை நிபுணர்.

லண்டனில் தனது பெரிய ஹோட்டல் பெங் சுயி முறைப்படி இல்லை என்பதால் அதை பெங் சுயி படி மாற்றி அமைத்தார்.       

 

    76 அறைகள் கொண்ட ஹோட்டலில் வாயிலுக்கு முன்னால் இருந்த மாடிப்படியை இடித்து வேறு இடத்தில் ஆற்றலின் போக்கு பாஸிடிவாக அமையும் படி அமைத்தார். கூர்மையான கைப்பிடிகளின் முனைகள் மாற்றப்பட்டு உருண்டையாக மாற்றப்பட்ட்ன. காஷ் ரெஜிஸ்டரின் முன்னால் அதிர்ஷ்டத்தை அழைக்கும் ஒரு மீன் தொட்டி வைக்கப்பட்டது.

இப்படியாக பணத்தைக் கொட்டி அனைத்து மாறுதல்களையும் செய்தார். விளைவு, அவரது வணிகம் அமோகமாக வளர்ந்து வெற்றியைத் தந்தது. இப்படி ஏராளமான உதாரணங்களைக் காட்டலாம்.

      இப்போது ஒரு கட்டிடக்கலை நிபுணருடன் ஒரு பெங் சுயி நிபுணரையும் சேர்த்து வேலைக்கு அமர்த்துவது பெரிய நிறுவனங்களின் பேஷனாக ஆகி விட்டது. எதற்காக கட்டிடத்தை இடிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே பெங் சுயி படி அமைத்து விடலாமே, அதற்காகத் தான்!

     ஹிந்து சாஸ்திரங்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படியே அனைத்து கட்டிடங்களும் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. மயன் அமைத்த சாஸ்திரமே நமது வழி.

இத்துடன் பெங் சுயியையும் சேர்த்து இரட்டை வெற்றியை அனைவரும் அடையத் தொடங்கி விட்டனர்.

     ஸ்விட்சை போட்டால் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மின்சக்தி பாய்ந்து பல்ப் எரிகிறது. அது போலவே நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெங் சுயியின் ஆற்றல் பாய்ச்சல் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும், வெற்றியையும் தருகிறது.

     பெங் சுயி மற்றும் வாஸ்து வழி முறைகள் சுலபமானவை; அவ்வளவாக செலவில்லாதவை!

     முயன்று பார்த்து கடைப்பிடித்தால் முன்னேறலாமே!

****