நெடுவாச ல்பாளையத்துறை கொண்டான் கதை (Post No. 3380)

Compiled by London Swaminathan

 

Date: 22 November 2016

 

Time uploaded in London: 20-13

 

Post No.3380

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

உலகு இன்பக் கேணி! பாரதி சொன்னது உண்மையே! (Post No.3376)

Written by London Swaminathan

 

Date: 21 November 2016

 

Time uploaded in London: 20-23

 

Post No.3376

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

இந்த உலகம் இன்ப ஊற்று, இன்பக் கேணி என்று வேதங்கள் சொல்வதாக பாரதி பாடினான்.

 

எங்கள் லண்டனில் வெளியாகும் மெற்றோ METRO பத்திரிக்கையை நான் ஒவ்வொரு நாள் காலையிலும் படிக்கும்போது பாரதி சொன்னது “வேத வாக்கு” என்பதை உணர்கிறேன்.

 

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகின்பக்கேணியென்றே – மிக

நன்று பல்வேதம் வரைந்த கை பாரத

தேவி தன் திருக்கை (பாரதியார்)

 

 

பெரும்பாலான பத்திரிக்கைகளை காலையில் எடுத்தவுடன் முதல் பக்கத்தில் குத்து, வெட்டு, கொலை, களவு, கொள்ளை, கற்பழிப்பு, விவாக ரத்து, வன்முறை, தீ வைப்பு, லஞ்சம், குற்றச் சாட்டு, விபத்து, மரணம், சாவு என்று ஒரே எதிர்மறைச் செய்திகளாக வரும். லண்டன் பத்திர்க்கைகளும் அப்படித்தான். ஆனால் இவ்வளவு கெட்ட செய்திகளிடையே METRO மெற்றோ பத்திரிக்கை நடு,ப் பக்கத்தில் யார் யார் நல்ல காரியம் செய்தனர் என்று பொது மக்கள் எழுதும் நன்றிச் செய்திகளைப் பிரசுரிக்கிறது. அதன் அருகிலேயே ரயிலிலும், பஸ்ஸிலும் ஸ்டேஷன்களிலும் சந்திக்கப்பட்ட ஆணழகன் பெண்ணரசிகளுக்கு சிலர் அனுப்பும் காதல் மொழிகளும் இடம் பெறும். அதற்குப் பின்பக்கத்தில் 60 வினாடிப் பேட்டி ஒன்று வெளியாகும். யாராவது ஒரு பிரமுகரை பேட்டி கண்டு வெளியிடுவர். அதைப் படிக்க ஓரிரு நிமிடங்கள் போதும்.

மெற்றோ என்னும் பத்திரிக்கை காலையில் ஸ்டேஷன் வாசல்களில் குவிக்கப்படும் இலவசப் பத்திரிக்கை. பல ஆண்டுகளாக அது இந்த நற்பணியை— நல்ல செய்திகளை  வெளியிட ஓரிரு பக்கங்களை ஒதுக்குகிறது.

 

இந்திய நாளேடுகளும் இதைப் பின்பற்றினால் எவ்வளவு  நன்றாக இருக்கும்!!!

இதோ கடந்த சில தினங்களில் வெளியான துணுக்குகள்! ஒரு சில துணுக்குகளை மட்டும் எடுத்துக் காட்டுக்காக வெளியிடுகிறேன்:-

 

திங்கட்கிழமை இரவில் கிழக்கு லங்காஸ்டர் ரோடில் நடந்த விபத்துக்குப் பின்னர் எனது உயிரைக் காப்பாற்றிய போலீஸ் அதிகாரி காரத் Gareth அவர்களுக்கும், மருத்துவமனை டாக்டர், நர்சுகளுக்கும் என் இதயங்கனிந்த நன்றி உரித்தாகுக இரத்தக் காயங்கள் ஏற்பட்டபோதிலும், ஹெல்மெட் இருந்ததால் பிழைத்தேன். எல்லோரும் தயவு செய்து ஹெல்மெட் அணியுங்கள்– நன்றியுள்ள சைக்கிள் ஓட்டி

 

xxxxx

லண்டன் ரீஜெண்ட் வீதியில் எனக்கு திடீரென்று வலிப்பு வந்ததை பார்த்தவுடன் டெலிபோனில் ஆம்புலன்ஸை அழைத்து, அவர்கள் வரும் வரை என்னுடன் இருந்து, அவர்களிடம் நடந்ததை விளக்கிச் சொல்லிவிட்டு போன யாரோ ஒருவருக்கு என் நன்றி- ஜூலியா, லண்டன்

 

xxxxxx

 

பஸ் நம்பர் 38-ல் பயணம் செய்தபோது நான் விட்டுச் சென்ற பையை பத்திரமாக ஒப்படைத்த நல்ல உள்ளத்துக்கு என் நன்றி. அதில் இழக்கமுடியாத, எனக்கு உணர்ச்சிபூர்வமாக உதவும் பல பொருள்களும் புத்தகமும் இருந்தன. நன்றி.

 

xxxxxxxx

 

 

டெம்பிள் மீட் ஸ்டேஷனுக்கு எதிரே திடிரென்று என் கார் பழுதடைந்து சாலையையே மறைத்துக் கொண்டு நின்றதைப் பார்த்து, உடனே எனக்கு வந்து உதவிய ஜெF முதலியோருக்கு என் நன்றி

xxxxxx

 

லண்டன் சாரிங் கிராஸ் ஸ்டேஷனிலிருந்து டார்ட்போர்ட் நோக்கிச் சென்ற ரயிலில் நான் மயக்கம் போட்டதைப் பார்த்து எனக்கு விசிறிக்கொண்டே வந்த நல்ல உள்ளம் படைத்த பெண்மணிக்கு என் நன்றி. ஆல்பனி பார்க்கில் நான் இறங்கியவுடன் எனது பைகளையும் தூக்கிக்கொண்டு வந்து உதவியதற்கு நன்றி

xxxxxx

நான் ஐந்ததுமாத கர்ப்பிணி. லிவர்பூல் ஸ்டேஷனில் என் பையை மறந்து வந்துவிட்டேன். உடனே என் பின்னால் ஓடிவந்து அதைக்கொடுத்த அன்புள்ளத்துக்கு நன்றி. கர்ப்பமான எனக்கு பெரும் துக்கமும் கவலையும் ஏற்படாமல் காப்பாற்றினீர்கள்

 

xxxxxxxxxxxxx

 

இதோ சில காதல் கிளிகளின் மொழிகள்

 

ஏய் நீலக் கண்கள், கருப்பு முடி, பச்சை ஜாக்கெட் அணிந்த இளைஞனே. சனிக்கிழமை இரவு  ஜூபிளி லைன் ரயிலில் நாம் இருவரும் வந்தோம். ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகையை நெளியவிட்டோம். உன்னுடன் பேசாமல் கேன்னிக் டவுன் CANNING TOWN ஸ்டேஷனில் இறங்கிவிட்டேன். இப்போது வருந்துகிறேன். அடுத்தமுறை சந்த்தித்தால் என் தவற்றைத் திருத்திக்கொள்ளுவேன்

–ப்ளு டிரவுசர் அணிந்த கருப்புமுடி பெண் Brunette in Blue Trousers

xxxxxxxxxx

ஏய் அழகிய கருப்புத் தோல் பெண்மணியே. ஷெப்பீல்டிலிருந்து லீட்ஸ் நகரம் செல்லும் 6-50 மணி ரயில் தாமதமாக வந்தது. அதில் உன்னுடன் நானும் பயணித்தேன். உன் கொள்ளை அழகில் சொக்கிவிட்டேன். என்னுடைய நா ளை  பிரகாசமாக்கிவிட்டாய்- சக பயணி, பார்ன்ஸ்லி நகர்

 

cccc

இவ்வாறு ஆறு, ஏழு காதல் மொழிகளும் ஏழு, எட்டு நன்றிச் செய்திகளும் தினமும் வரும். இதுவும் ஆசிரியர் கடிதம் பகுதியும் நிறைய ஆக்கபூர்வ கருத்துகளுடன் மிளிரும்

 

இந்திய நாளேடுகளும் இப்படி உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு யாராவது, எங்கோ ஒரு மூலையில் நன்றி தெரிவிப்பதை வெளியிடலாம்.

கலி காலம் இன்னும் முற்றிவிடவில்லை. இந்த அழகான உலகத்தில் இன்னும் அன்பும் நேர்மையும் உடைய நல்ல உள்ளங்கள் இருக்கின்றன.

 

நாம் வாழும் இந்த பூமி மிக மிக அழகிய உலகம்! It’s a beautiful world!

 

–SUBHAM–

 

நீங்களும் அதிர்ஷ்டத்தை அழைக்கலாமே! (Post No.3361)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 17 November 2016

 

Time uploaded in London:5-11 AM

 

Post No.3361

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

பாக்யா 18-11-16 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை

 

நீங்களும் அதிர்ஷ்டத்தை அழைக்கலாமே!

ச.நாகராஜன்

“சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாயிருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்” –

நாடோடி மன்னன் படத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம அவர்களின் பாடல்

 

அதிர்ஷ்டமே இல்லை என்று அலட்டிக் கொள்பவர்களில் ஒருவரா நீங்கள்? இனி கவலையை விடுங்கள். அதிர்ஷ்டத்தை நீங்கள் அழைக்கலாம். அறிவியல் அதிர்ஷ்டத்தை அலசி ஆராய்ந்து துணை புரிய வருகிறது.

இப்போது உலகெங்கும் பரபரப்பாகப் படிக்கப்படும் புத்தகங்கள் சான்ஸ் எனப்படும் அதிர்ஷ்டத்தைத் தரும் வாய்ப்பைப் பற்றி புத்தகங்களே!

 

 

கேய்ட் சுகெல் (Kayt Sukel)என்ற பெண்மணி தன் குழந்தையை இடுப்பில் கட்டிக் கொண்டு ஆப்பிரிக்காவையும் மத்திய கிழக்கையும் அடி அடியாக அளந்தவர். ரிஸ்க் எனப்படும் அபாயம் என்றால் அவருக்கு வெல்லக்கட்டி. துணிந்து ரிஸ்க் எடுத்து வாழ்ந்து பழகிய இவர் ‘தி ஆர்ட் ஆஃப் ரிஸ்க்’ (The Art of Risk) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இது அதிர்ஷ்ட விரும்பிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

 

கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஸ்கை – அபாய முடிவுகளை – எடுங்கள் என்பதே இவரது அறிவுரை.

மனிதர்களிடம் ஒவ்வொருவரிடமும் ஒரு ரிஸ்க் கால்குலேடர் இயல்பாகவே இருக்கிறது என்கிறார் அவர். சூழ்நிலை, அனுபவம், அவசியம் ஆகியவற்றோடு நிலைமையை சரியாகக் கணிக்கும் மூளைத் திறனும் உள்ளவர்கள் ஜெயிப்பது நிஜம் என்கிறார் இவர். அதிக ரிஸ்கை இயல்பாக எடுக்கும் பலருக்கு ஜீன்கள் எனப்படும் மரபணுவும் ஒரு காரணம். DRD4 GENE இன் மாற்றுரு (Variant) ஒன்றைக் கொண்ட கல்லூரி மாணவ மாணவியர் லாபரட்டரி சோதனைகளில் மிகவும் துணிச்சலுடன் புதிய சோதனைகளைச் செய்து பார்ப்பது ஆய்வுகளிலிருந்து தெரிய வருகிறது.

 

 

அபாயகரமான முடிவுகளை அதிகம் எடுப்பவர்கள் நல்ல திறம்படத் திட்டமிடும் திறன் உடையவர்கள் என்பது இவர் தரும் சுவையான செய்திகளுள் ஒன்று.

புத்தகத்தை முடிக்கும் போது, “ஒவ்வொரு நாளும் நாம் எடுக்கின்ற முடிவுகளில் அது பெரிதோ சிறிதோ, வாழ்க்கையை மாற்றுவதோ அல்லது சாதாரணமானதோ, அதில் ஒரு ரிஸ்க் – அபாயம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்” என்கிறார். ஆக அதிர்ஷ்டத்தை அழைக்க அடிப்படைத் தகுதி கவனமுடன் ரிஸ்கைத் தேர்ந்தெடுத்துச் செயல்படும் திறனே!

 

 

    அடுத்து அதிரடியாக வாய்ப்பைப் பற்றிச் சொல்லும் இன்னொரு கலக்கல் புத்தகம் ‘தி பெர்ஃபெக்ட் பெட்’ (The Perfect Bet)  இதை எழுதியவர் பிரபல கணித மேதையான ஆடம் குர்சார்ஸ்கி (Adam Kucharski) .   லாட்டரி, சூதாட்டம் போன்றவற்றில் மறைந்திருக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து, என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிச்சயமற்ற தன்மையுடன் நாம் புத்திசாலித்தனமாக பேரம் பேசினால் வெற்றி தான் என்கிறார்.

 

 

அடுத்து பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானியும் எழுத்தாளருமான ராபர்ட் மாத்யூஸ் எழுதிய ‘சான்ஸிங் இட்’ என்ற புத்தகம் (Chancing It by Robert Mathhews)  அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது.           

 

                                 

இவர் தெள்ளத் தெளிவாக வெற்றிக்கான வழிகளை அடுக்குகிறார்.  சூதாட்டத்தையும் லாட்டரியையும் நடத்துவோர் கணிதத்தின் ப்ராபபலிடி (Probability) எனப்படும் இயலும் நிலை பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்கள் தங்கள் வணிகத்தில் தோற்கவே மாட்டார்கள். அவர்கள் நம்புவது சூதாட வருவோரின் தொடர்ந்து ஆட வேண்டும் என்ற வெறி கொண்ட மன நிலையையே. ஆகவே ஓரிரு முறை வெற்றி பெற்றவுடன் சூதாட்ட களத்தை விட்டுக் கடையைக் கட்ட வேண்டும் என்கிறார் ராபர்ட்.

 

 

அடுத்து குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் ரிச்சர்ட் வைஸ்மேன் (Richard அதிர்ஷ்டம் பற்றி முறைப்படி பல ஆண்டுகள் ஆராய்ந்தவர் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராகப் பணியாற்றுபவர்.  

 

   இவர் அதிர்ஷ்டசாலிகளைத் தேடிப் பிடித்து ஆராய்ந்தார். 400 தன்னார்வத் தொண்டர்களைத் தன் ஆய்வுக்காக அழைத்தார். இதில் 18 முதல் 84 வயது வரை உள்ளவர்கள் அடக்கம்! இவர் ஆய்வின் முடிவில் கண்டு பிடித்தது அதிர்ஷ்டசாலிகளுக்கும் ஏனையோருக்கும் அடிப்படையிலேயே அணுகு முறையில் வித்தியாசம் இருக்கிறது என்பதைத் தான். யார் வேண்டுமானாலும் அதிர்ஷ்டசாலியாகலாம் என்று கூறும் இவர் நான்கு பயனுள்ள குறிப்புகளைத் (டிப்ஸ்) தருகிறார்.

 

 

 

  • அதிர்ஷ்டசாலிகள் தங்களது நல்ல காலத்தைத் தாங்களே உருவாக்குகிறார்கள் அவர்கள் நல்ல வாய்ப்புகள் வரும் போது நழுவ விடுவதே இல்லை. நல்ல வாய்ப்புகள் வரும் போது அதை அவர்கள் சிறப்புடன் இனம் காணுகிறார்கள்.
  • தங்கள் உள்ளுணர்வு அல்லது அந்தரங்க குரலை அவர்கள் கேட்கிறார்கள். மதிக்கிறார்கள். அதன் படி முடிவெடுக்கிறார்கள். பகுத்தறிவுடன் எடுக்கும் முடிவுக்கு அவர்கள் அவ்வளவாக மதிப்புக் கொடுப்பதில்லை!
  • தங்களது வெற்றிக்கான இலக்கை நிர்ணயிப்பதோடு அதை அடைந்து விட்டதாக கணிப்பையும் செய்து விடுகிறார்கள் அந்த அதிர்ஷ்டசாலிகள். வரப்போகும் வெற்றியை பாஸிடிவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அவர்கள்.
  • தங்கள் பயணத்தில் தடைகள் வந்தால் அவர்கள் தளர்வதில்லை. மோசமான தோல்விகளை அல்லது துரதிர்ஷ்டங்களை அல்லது சவால்களை அவர்கள் கடுமையாக எதிர்கொண்டு நிற்பதோடு அவற்றை நல்லதிர்ஷ்டமாக மாற்றவும் செய்கிறார்கள்.

 

 

இந்த நான்கு விதிகளைக் கடைப்பிடிப்பவர்கள் நாளடைவில் தோல்விகளைச் சந்திப்பதே இல்லை. அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது இயல்பான வாழ்க்கைப் பழக்கமாக ஆகி விடுகிறது என்கிறார் வைஸ்மேன்.

 

 

இதற்கான ஏராளமான உதாரணங்களை அவர் அடுக்கிக் கொண்டே போகிறார். ஆகவே அவர் சொல்வதைக் கேட்டுக் கடைப்பிடித்தால் அதிர்ஷ்டசாலி ஆவது நிச்சயமே!

எளிதில் கடைப்பிடிக்கக் கூடிய இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி நீங்களும் அதிர்ஷ்டத்தை அழைக்கலாமே!

 

–Subham–

                  

 

டைரக்டராக, கவிஞராக உங்களிடம் ‘ஃப்ளோ’ இருக்கிறதா? (Post No.3349)

Written by S NAGARAJAN

 

Date: 13 November 2016

 

Time uploaded in London: 5-15 AM

 

Post No.3349

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யாவில் வெளிவந்துள்ள கட்டுரை

டைரக்டராக, கவிஞராக, எழுத்தாளராக உங்களிடம் ‘ஃப்ளோ இருக்கிறதா?

ச.நாகராஜன்

 

“பெரிய மனங்கள் கருத்துக்களை விவாதிக்கின்றன.சராசரி மனங்களோ நிகழ்வுகளை விவாதிக்கின்றன. அல்ப மனங்களோவெனில் மனிதர்களை விமரிசிக்கின்றன – ஹென்றி தாமஸ் பக்கிள்

     இன்று வாழ்ந்து  கொண்டிருக்கும் மிகச் சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவரான மிஹாலி சிக்ஸெண்ட்மிஹாலி (Mihaly Csikszentmihalyi) படைப்பாற்றல் பற்றி நன்கு ஆராய்ந்தவர். அதைப் பற்றி உலகில் பேசுவதற்குத் தகுதியான முதல் நிபுணர் இவரே.

இவரது படைப்பாற்றல் பற்றிய புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்று சாதனை படைத்துள்ளன.

 

 

சிறந்த டைரக்டராக, பெரிய கவிஞராக, பிரபல எழுத்தாளராக உங்களுக்குத் தேவையானது ‘ஃப்ளோ (FLOW) – அதாவது ஓட்டம் தான் என்கிறார் இவர்.

ஃப்ளோ பற்றிய அரும் தகவலை இவர் விளக்கும் விதமே அலாதியானது!

 

 

இன்றைய நவீன விஞ்ஞான, தகவல் புரட்சி உலகில் நாம் பெறும் தகவலின் அளவு பிரம்மாண்டமானது. நமது மைய நரம்பு மண்டலம் எவ்வளவு தகவலை உள்வாங்கி முறைப்படுத்த முடியும் என்பது பற்றி இவர் ஆராய்ந்துள்ளார்.

 

 

எந்த மனிதனாக இருந்தாலும் கூட அவனால் ஏழு பிட்ஸ் தகவலை (7 bits of information) மட்டுமே ஒரு நேரத்தில் சமாளிக்க முடியும் என்கிறார் இவர். ஒலியாகட்டும், பார்க்கின்ற காட்சித் தூண்டுதல்கள் ஆகட்டும், அல்லது உணர்ச்சிகள் அல்லது எண்ணங்களாகட்டும் ஏழு பிட்ஸ் தான் மனிதன் ஏற்கக் கூடிய அளவு ஆகும்!

 

 

ஒரு செட் பிட்ஸ் தகவலை இன்னொரு தொகுப்பு பிட்ஸ் தகவலுடன்  ஒப்பிட மூளை எடுத்துக் கொள்ளும் நேரம் வினாடியில் பதினெட்டில் ஒரு பாகமே ஆகும். அதாவது ஒரு வினாடிக்கு நாம் 126 பிட்ஸ் தகவலை மட்டுமே முறைப்படுத்த முடியும். இந்தக் கணக்கில் ஒரு நிமிட நேரத்திற்கு 7560 பிட்ஸ் தகவலை நாம் முறைப்படுத்தலாம்.

 

 

ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஐந்து லட்சம் பிட்ஸ் என்ற அளவை நாம் இதிலிருந்து பெறுகிறோம்!

ஒரு மனிதனுக்கு 70 வயது என்று சராசரியாக வைத்துக் கொள்வோம். சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவர் 16 மணி நேரம் விழித்திருப்பார் என்று வைத்துக் கொண்டால் அவர் முறைப்படுத்தக் கூடிய தகவலின் அளவு 185 பில்லியன் என்று ஆகிறது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி)

 

 

இந்த 18500 கோடி தகவலிலிருந்து தான் வாழ்க்கையில் நாம் அனைத்தையும் பெறுகிறோம். நம் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதும் இதைப் பொறுத்ததே!

 சரி, ஒருவரின் வாழ்க்கையில் விழித்திருக்கும் நேரத்தில் அன்றாடத் தேவைகளுக்கு –  பல் துலக்குவது, ஷேவ் செய்வது, குளிப்பது, சாப்பிடுவது போன்றவற்றிற்கு 15  சதவிகித உணர்வு தேவையாக இருக்கிறது. அவற்றில் ஈடுபடும் போது இதர சிக்கலான விஷயங்களில் மனதை ஒருமைப்படுத்த முடியாது.. மற்ற நேரங்களில்?

 

 விந்தை என்னவெனில் இது போன்ற எதுவும் இல்லாத போதிலும் கூட பெரும்பாலான மனிதர்கள் தங்கள் மனதை எதிலும் ஈடுபடுத்திப் பயன்படுத்துவதில்லை என்பது தான்!

ஓய்வு நேரத்தில் டெலிவிஷன் பெட்டிக்கு முன்னர் அமர்ந்து விடுகிறார்கள் உலக மக்கள்!

 

 

டெலிவிஷன் பார்ப்பதில் தகவல்களை முறைப்படுத்துவது என்பது மிகவும் எளிதாக இருக்கிறது. காணுகின்ற காட்சிகளுக்கு பெரிதாக நினைவாற்றல், எண்ணுதல், முடிவெடுத்தல் போன்ற எதுவும் தேவையில்லை.

பார்ப்பது, பார்த்துக் கொண்டே இருப்பது – அவ்வளவு தான்!

 

 

ஒரு சிக்கலான நேரத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கணிப்பது, தகவல்களை முறைப்படுத்தி மதிப்பிடுவது, உடனே அவசரமாக முடிவெடுப்பது போன்றவற்றிற்கு மனதின் குறைந்தபட்ச முறைப்படுத்தும் திறனே தேவை. எடுத்துக்காட்டாக ஒரு தெருவின் திருப்பத்தில் காரை வேகமாகத் திருப்பும் ஒரு டிரைவர் அப்போது தன் கையில் உள்ள தான் பேசிக் கொண்டிருக்கும் செல் போனை நிறுத்தி விடுகிறார் – இல்லையேல் விபத்து அல்லவா ஏற்படும்!

 

ஒரு சில கணங்களே என்றாலும் கூட தான் செய்வதில் தீவிர கவனம் இருந்தால் மட்டுமே அவரால் விபத்தைத் தடுக்க முடியும்!

ஒரு மனிதன் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற வேண்டுமெனில் தீவிரமான கவனம் வேண்டும். அத்துடன் தான் செய்கின்ற வேலையில் மனதை முழுவதுமாகச் செலுத்துவதோடு அதை விரும்பிச் செய்ய வேண்டும். அந்த வேலையில் ஒரு விதமான பரவச நிலையினை அடையும் போது அவனது படைப்பாற்றல் முழுமை பெறுகிறது. இன்னதென்று விவரிக்க முடியாதபடி மிதப்பது போன்ற ஒரு நிலை அவனுக்கு ஏற்படுகிறது. அது தான் ஃப்ளோ!

 

 

ஒருவன் எப்போது இந்த அரிய ஃப்ளோ நிலையை எய்துகிறானோ அவன் எந்தத் துறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சரி, அவனால் உன்னதமான படைப்பாற்றலைக் கொள்ள முடியும்.

ஒரு கவிஞராக இருந்தால் சிறந்த கவிதை பிறக்கும். ஒரு டைரக்டராக இருந்தால் அவரது காட்சியில் மூழ்கிப் பரவசராகி காட்சியுடன் ஒன்றி ஒரு மிதக்கும் நிலை ஏற்படும். ஒரு எழுத்தாளராக இருந்தால் அவர் தன்னை மறந்து தன் எழுத்தில் மூழ்கி விடுவார்.

 

 

அப்போது படைப்பாற்றல் துள்ளிக் குதிக்க தனது அப்போதைய கவனத்தில் தான் செய்ய விரும்புவதில் அந்தப் படைப்பாளி வெற்றி பெறுகிறார்.

ஒருவர் ஃப்ளோவை அனுபவித்து உணர ஆறு காரணிகள் உண்டு:

  • ஒரு விஷயத்தில் நிகழ்காலத்தில் அந்தக் கணத்தில் அதி தீவிரமான கவனக் குவிப்புடன் கூடிய ஒருமைப்படுத்தப்பட்ட மனம்.
  • விழிப்புணர்வும் செயலும் இரண்டு என்றில்லாமல் ஒன்றாக மாறுதல்
  • தனது சுய உணர்வை முற்றிலுமாக இழந்து செயலில் ஒன்றி இருத்தல்
  • தனது செயல்பாட்டில் ஒரு கட்டுப்பாட்டைத் தான் கொள்ளுதல்
  • அந்தச் செயலைச் செய்யும் போது நேரம் பற்றிய உணர்வை  முற்றிலுமாக இழத்தல். அதாவது பல மணி நேரம் கூட ஒரு சில நிமிடங்களாகத் தோன்றும்
  • அந்த அனுபவம் ஒரு மிகச் சிறந்த பரிசு போன்ற ஒன்றாக படைப்பாளிக்கு அமைதல்

 

ஒருவரது திறமை, ஆர்வம், கவனக் குவிப்பு ஆகிய அனைத்தும் இணைந்து தன் குறிக்கோளை அடையும் போது,  திடீரென்று எதிரில் ஒரு கதவு திறந்து வெட்டவெளியில் மிதப்பது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறதே அது தான் படைப்பாற்றல் வெற்றிக்கான ஓட்டம் அல்லது ‘ஃப்ளோ ஆகும்.

 

இந்த மெய்மறந்த நிலையை எய்துவது என்பது சுலபமே என்பதை உலகின் தலை சிறந்த படைப்பாளிகள் நிரூபித்துள்ளனர். அவர்களுக்குத் தனிமையில் இருப்பது என்பது ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறது என்பதே மிஹாலியின் கண்டு பிடிப்பு.

இந்த நிலையை எய்தும் போது ஒவ்வொருவரும் ஒரு சிறந்த படைப்பாளியே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில .. …

 

அலெக்ஸாண்டர் டி ஸெவர்ஸ்கி (Alexander de Severrsky) என்பவர் ஒரு சிறந்த விமான வடிவமைப்பாளர்.

முதல் உலகப் போரில் அவர் ஒரு காலை இழந்திருந்தார். மரத்தினாலான செயற்கைக் காலைப் பொருத்திக் கொண்டிருந்தார்.

ஆகவே இரண்டாம் உலகப் போரில் ஒரு கை அல்லது ஒரு காலை இழந்த போர்வீரர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்த ஒரு மருத்துவ மனைக்கு அவர் சென்றார்.

 

 

தனது அனுபவத்தைச் சொல்லி போர் வீரர்களை அவர் உற்சாகப் படுத்தினார். ஒரு காலுடன் இருக்கும் போது குறைந்தபட்சம் ஒரே ஒரு ஆதாயம் நிச்சயமாக இருக்கிறது என்று கூறிய அவர் இழந்த காலில் மரத்தினால் ஆன செயற்கைக் கால் பொருத்தப்பட்டிருப்பதால் அதில் வலியே இருக்காது என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

இதை நிருபித்துக் காட்டும் விதமாக ஒரு போர்வீரரிடம் கம்பு ஒன்றைக் கொடுத்து, “சும்மா காலில் அடியுங்கள் என்றார்.

 

 

அவரும் ஸெவர்ஸ்கியின் காலில் அடித்தார். ஸெவர்ஸ்கி பெரிதாகச் சிரித்தார். அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

பிறகு அறையை விட்டு வெளியே வந்த அவர் ஓவென்று அலறினார்.

மருத்துவமனை அதிகாரிகள் திடுக்கிட்டு, என்ன, என்ன என்று பதறிப் போய் அவரிடம் வினவினர்.

“அந்த ராணுவ வீரர் எனது தவறான காலில் ஓங்கி அடித்து விட்டார் என்றார் ஸெவர்ஸ்கி

 

 

செயற்கைக் காலில் அடிப்பதற்குப் பதிலாக நிஜக்காலில் அடித்தால் வலிக்காதா, என்ன?

சிரிப்பதா, வேதனைப்படுவதா என்று புரியாமல் மருத்துவமனை அதிகாரிகள் திகைத்தனர்!

ஸெவர்ஸ்கியோ சிரித்துக் கொண்டே வலியுடன் வெளியேறினார்!

******

 

ஐயர்களுக்கு வரி விதிக்காதே! மனு தடாலடி!! (POST NO.3344)

 

WRITTEN by London Swaminathan

 

Date: 11 November 2016

 

Time uploaded in London: 20-18

 

Post No.3344

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

வரி விதிப்பது எப்படி? மனு, காளிதாசன், வள்ளுவன் அணுகுமுறை

 

வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர். இவர்களில் மனு சொல்லும் விஷயஙகள் வியப்பைத் தரும் முதலில் அதைக் காண்போம்:-

 

மனுதர்ம சாத்திரத்தில் ஏழாவது அத்தியாயத்தில் சொல்கிறார்:-

 

ஒரு அரசன் பசியினால்  இறந்து போக நேரிட்டாலும், வேதத்தை மனப்பாடமாக வைத்திருக்கும் பிராமணனிடத்தில் வரி வாங்கக்கூடாது. அவர்களைப் பசியினால் வாடவிடக்கூடாது (7-133)

 

வேதம் அறிந்த பார்ப்பான் பசியினால் மயக்கமடைந்து விழுந்தால் அந்த அரசாட்சியும் வீழும் (7-134)

 

இதைப் பார்த்தவுடன் பலரும் இது நியாயமில்லாத ஒரு விதி என்று எண்ணலாம். ஆனால் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் பிரம்மதேயம் (பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடை), தேவதானம் (கோவில்களுக்குக் கொடுக்கப்பட்ட நன்கொடை) ஆகிய அனைத்தையும் இறையிலி (வரியற்ற) நிலங்களாகவே அறிவிக்கின்றன. ஆக, தமிழ் மன்னர்கள் மனு நீதியைப் பின்பற்றியது தெளிவு.

 

இப்போது இந்த இடத்தில் பிராமணர்கள் என்பதற்குப் பதிலாக அறிஞர்கள் என்று போட்டுவிட்டால் பொருள் நன்கு விளங்கும். அதாவது புத்தியுடையோர், அறிவாளிகள் வறுமையில் வாடக்கூடாது என்பதே பொருள். நிறைய சம்பாதிக்கும் அறிஞர்கள் இதில் வாரார். பிராமணர்கள் மூன்று நாட்களுக்கு மேலான செல்வம் வைத்திருக்கக்கூடாது என்பது விதி. எப்போதும் மற்றவர்களுக்கு அறிவுதானம் செய்து பொருள் பெற வேண்டும் என்பதற்கே இந்த விதி!

 

அட்டை போல உறிஞ்சு!

 

மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.

 

ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)

அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.

 

அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப்பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.

 

பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.

வள்ளுவன் சொல்லுவான்:

அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.

 

வேலொடு நின்றான் இடு என்றது போலும்

கோலொடு நின்றான் இரவு (குறள் 552)

பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை  வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.

 

காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-

 

ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்

சதாப்யோ பலிமக்ரஹீத்

சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்

ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு 1-18)

 

சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும்  உதவுவது போல அரசனும் உதவுவான்.

 

–subham–

9000 கோடி படைவீரர்! கம்பன் சொன்ன பொய்!! (Post No.3333)

Written  by London Swaminathan

 

Date: 8 November 2016

 

Time uploaded in London: 10-14 am

 

Post No.3333

 

Pictures are taken from various sources; they are only representational; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

இலக்கியத்தில் மிகைப்படக் கூறல் என்பது ஒரு குற்றமாகக் கருதப்பட்டபோதும் நமது தமிழ்ப்  புலவர்கள் கொஞ்சம் தாராளமாகவே மிகைப்படுத்துவர். நூலின் குற்றங்களின் பட்டியலில் மிகைப்படக் கூறலையும் தொல்காப்பியர் சேர்த்துள்ளார். கம்பன் கிஷ்கிந்தா காண்டத்தில் சொன்ன ஒரு “பொய்யை” ஆராய்வதே இந்தக் கட்டுரையின் கருத்து.

 

ஒன்பதினாயிர கோடி உற்றது

நின்பெருஞ்சேனை அந்நெடிய சேனைக்கு

நன்கூறுமவதி நாள் நாளைய நண்ணிய

பின்செயத்தக்கது பேசற்பாற்று என்றான்

–கிட்கிந்தா காண்டம், கிட்கிந்தைப்படலம்

 

பொருள்:-

 

இப்போது என்னுடனே ஒன்பதினாயிரம் கோடிக் கணக்கான உன் பெரிய படை வந்துள்ளது. இனி வரவேண்டிய அப்பெரிய படைக்குத் திரண்டு வருவதற்குரிய நாளும் நாளையே! அப்படையும் வந்த பின்பு செய்ய வேண்டியவற்றைப் பற்றிப் பேசுதல் தக்கதாகும் – என்று சுக்கிரீவன் கூறி முடித்தான்.

 

கம்பன் அறிவுக்கடல். அவன் பாட்டைக் குறை கூறுவது இக் கட்டுரையின்  கருத்து அன்று.

அட! உலக ஜநத்தொகை இன்றைய கணக்கிலேயே 700 கோடிதானே; கம்பன் இப்படி ஒரு நகைப்புக்குரிய நம்பரைச் சொல்லுவானா என்று நாம் எண்ணலாம். இலக்கியத்தில் பல இடங்களில் வரும் எண்ணை அப்படியே கணக்கில் எடுத்துக்கொண்டால் ஏராளமான பிழைகள் வரும் அதைக் குறிப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.

 

கம்பன் ஏன் இப்படி சொன்னான்?

சுக்க்ரீவன் சவடால் பேர்வழி என்பதை காட்டுவதற்காக இப்படி சொல்லி இருக்கலாம்.

அல்லது பாட்டில் எதுகை, மோனையின் காரணமாக எழுதியிருக்கலாம்.

அல்லது கம்பராமாயணததைப் “படி” எடுத்தவர்கள் பிழையாகச் சொற்களைப் புகுத்தி இருக்கலாம்.

இப்படிப் பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆயினும் கம்பன் வேறு பல இடங்களிலும் 70 வெள்ளம் சேனை என்பான். வள்ளுவனோ எழுபது கோடி என்னும் சொல்லைக் குறளில் பயன் படுத்துவான்.

 

உண்மை என்னவென்றால் ஒவ்வொரு மொழியிலும் “நிறைய , எண்ணற்ற, கணக்கற்ற” — என்பததற்கு பல வகையான மரபுச் சொற்றொடர்களைப் பயன்படுத் துவர். தமிழில் “நாலு பேர் சிரிப்பார்கள், ஊரே சிரிக்கும்” என்றெல்லாம் பேச்சு வாக்கில் சொல்லுவோம். ஆங்கில நாட்டில் அம்மா எனக்கு இந்த பொம்மையை வாங்கித் தா, உனக்கு “மில்லியன் கிஸ்” (பத்து லட்சம் முத்தம்) தருகிறேன் என்று குழந்தை சொல்லும். புத்த மத நூல்களில் 500 என்ற எண் அடிக்கடி வரும். பைபிள் முதலியவற்றில் 40 என்ற எண் அடிக்கடி வரும்.

இதை எல்லாம் அறிஞர் பெருமக்கள் அறிவர். ஆனால் ரிக் வேதத்தையும் ராமாயணத்தையும் மொழி பெயர்த்த வெளி நாட்டு “அறிஞர்கள்” மட்டும் அதில் வரும் எண்களை அப்படியே எடுத்துக் கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்வர். நான் முன்னர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் இந்திரன் கொன்றதாகக் கூறும் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் அது மிகைப் படுத்தப்பட் ட புலவர் கூற்று என்பது விளங்கும். தசரதருக்கு 60, 000 மனைவியர் என்றால் வழக்கத்திற்கும் மாறாக அதிக  மனைவியர் என்று பொருள்

 

இது தெரிந்தும் ராமாயணம், ரிக் வேதத்தைக் குறைகூறும் அரைவேக்காடுகள் உண்டு.

 

ஒரு மார்கசீய “அறிஞர்” எழுதிய நூலில், சர்மன் நதிக்கரையில் ஒரு அரசன் செய்த யாகத்தால், யாக உயிர்க்கொலைகளால் அந்த நதியே சிவந்து போய்விட்டது என்று “ஆதாரத்துடன்” எழுதியுள்ளார். அதாவது ஏதாவது ஒரு ஸ்லோகம் கிடைத்தால்போதும் அதை உண்மைபோல காட்டி பெரிய வியாக்கியானம் செய்வர். உண்மையில் சங்க இலக்கிய புற நானூற்றிலும் ரத்த ஆறு, பிராமணர்களுக்கு தானம் கொடுத்து ஓடிய தண்ணீர் ஆறு பற்றி எல்லாம் கவிஞர்கள் பாடி இருக்கின்றனர். இவைகளை நாம் அப்படியே அர்த்தம் செய்யாமல் அதன் பின்னுள்ள கருத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம். ஆனால் வெள்ளை,,,, வெளிநாட்டினரும், திராவிட, மார்கசீய அரை வேக்காடுகளும் வேண்டு மென்றே சில பாடல்களை எடுத்துக்கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்வதெல்லாம் பொய்யுரை என்று காட்டவே நான் கம்பனை வம்புக்கு இழுத்து இக்கட்டுரையை வரைந்தேன்.

 

கட்டுரையிலிருந்து பெறப்படும் நீதி: மெய்ப்பொருள் காண்பதறிவு

 

–Subham–

பாம்பு தலையில் பூமி! கம்பன், காளிதாசன் தரும் தகவல்(Post No.3330)

Picture: Ananda Padmanabha swamy in Trivandrum

Written by London Swaminathan

 

Date: 7  November 2016

 

Time uploaded in London: 20-17

 

Post No.3330

 

 

Pictures are taken from various sources.

 

Contact:- swami_48@yahoo.com

 

 

கம்பனும் காளிதாசனும் புராணத்தில் கணப்படும் ஒரு செய்தியை உவமையாகக் கூறுகின்றனர்.

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒரே கருத்துகள் இருப்பது இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு– ஒரே பண்பாடு என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்தி வருகிறது.

 

மேலும் காளிதாசனின் உலகப் புகழ் பெற்ற சாகுந்தலம் நாடகத்தில், ஒரு பாடலில், நாலே வரிகளில்  வரும் அவ்வளவு கருத்துகளும் தமிழ் இலக்கியத்தில் இருப்பது ஒரே நாடு– ஒரே பண்பாடு என்பதை அழகாய் விளக்குகிறது.

 

கம்ப ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் , கார்காலப் படலத்தில் வரும் ஒரு பாடல் இதோ:–

 

பையணப் பல் தலைப் பாந்தள் ஏந்திய

மொய்நிலத் தகளியில் முழங்கு நீர் நெயின்

வெய்யவன் விளக்கமா மேருப் பொன் திரி

மையெடுத்தது ஒத்தது மழைத்த வானமே

 

பொருள்:

 

கார்கால மேகத்தால் மூடுண்ட வானம் எப்படி இருந்தது தெரியுமா? ஆதி சேடனால் (பாம்பு) சுமக்கப்படும் பூமி அகல் விளக்கு ஆகும் , அதிலுள்ள கடல் நெய்; பூமியில் உயரமாக நீட்டிக் கொண்டிருக்கும் மேருமலை விளக்கின் திரி; கதிரவந்தான் விளக்கு சுவாலை . இந்த விளக்கின் விளிம்பில் படரும் மையை பெண்கள் எடுத்து கண்களில் பூசுவர். அந்தக் கரும்பகுதியை ஒத்திருந்தது வானத்திலுள்ள இருண்ட மேகம்.

 

இதில் நமக்கு வேண்டியது , பல்தலைப் பாந்தள் ஏந்திய மொய்நிலம், அதாவது பல தலைகளையுடைய  பாம்பின் தலையிலுள்ள பூமி!

 

இன்னொரு பாடலில் பூமியை எட்டு வகை நாகங்கள் தாங்குவவதாகக் கூறுகிறான் கம்பன். எண்வகை நாகங்கள் திசைகள் எட்டையும் – என்பான்.

 

காளிதாசன்

சாகுந்தல நாடகத்தில் காளிதாசன் சொல்லும் பாம்புச் செய்தி:–

 

பானு: சக்ருத் யுக்த துரங்க ஏவ

ராத்ரிம் திவம் கந்தவஹ: ப்ரயாதி

சேஷ: சதைவாஹித பூமி பார:

ஷடாம்ஸ வ்ருத்தேரபி தர்ம ஏஷ:

சாகுந்தலம் 5-4

 

பொருள் என்ன?

சூரியனின் தேரில் ஒரு முறை பூட்டப்பட்ட  குதிரைகளுக்கு ஓய்வே இல்லை; இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

இந்த பூமியில் வீசும் காற்றும் அப்படித்தான். இரவு பகலாக எல்லோருக்கும் நன்மை செய்யும் விதத்தில் வீசுகிறது

ஆதிசேடன் தலையில் சுமக்கும் பூபாரத்தை இன்றுவரை இறக்கி வைக்கவில்லை (கிரேக்கர்கள் அட்லஸ் என்பவன் தோளின் மேல் பூமி இருப்பதாகச் சொல்லுவர்.)

 

ஆறில் ஒரு பங்கு வரியைப் பெறும் அரசனுடைய அறமும் அப்படித்தான். அதாவது காற்று, சூறியன், குதிரைகள், ஆதி சேடன் எனும் பாம்பு போல ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அரசனும் செயல்படுகிறான் என்பது காளிதாசன் கண்ட உவமை.

 

இந்தக் காளிதாசன் பாடலில் சொல்லும் பாம்புச் செய்தி க் கம்பன் பாடலில் மேலே தந்தேன்

மற்ற விஷயங்கள் அனைத்தும் சங்க இலக்கியத்தில் உள்ளன.

 

மக்கள சம்பாதிக்கும் பொருளில் ஆறில் ஒருபங்கு அரசனுக்குப் போய்விடும். இது சங்க இலக்கியத்திலும் மனு நீதி சாத்திரத்திலும் உள்ளது.

சூரியன் குதிரை விஷயமும் சங்க இலக்கியத்தில் உள்ளது

அரசனை சூரியன், வாயு பகவான் ஆகியோருடன் ஒப்பிடுவதும் தமிழ் சம்ஸ்கிருத இலக்கியத்தில் உள்ளது.

 

Atlas holding the earth in Greek Mythology.

இதையே ரகுவம்சத்திலும் 2-66; 17-65 கூறுகிறான்

சூரியன் எப்படி தண்ணீரை உறிஞ்சி மீண்டும் மழையாகத் தருவானோ அதே போல அரசனும் அள்வோடு வரிகள எடுத்துக் கொள்வது மீண்டு மக்களுக்குத் திருப்பித் தரத்தான் என்று காளிதாசன் கூறுகிறான் (ரகு 1-18)

சங்க இலக்கியத்தில் பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனார் சொல்லுவார் (வரிகள் 121-125). அளவோடு வரி விதித்தல் பற்றிப் பிசிராந்தையாரும் (புறம் 184) பேசுகிறார்.

 

சூரியன் குதிரை சவாரி பற்றி கபிலர் (குறிஞ்சிப் பாட்டு). உருத்திரங்கண்ணனார் (பட்டினப்பாலை 122/123) நக்கீரர் (திருமுருகு.107), இளங்கோ (சில. வேட்டுவவரி), தாமப்பல் கண்ணனார் (புறம் 43)  குறிப்பிடுவர்.

ஆதிசேடன் பற்றிய குறிப்புகள் பரிபாடலில் பல இடங்களில் வருகின்றன. ஆதிசேடன் பூமியைத் தாங்குவதைப் பரிபாடல் திரட்டு சொல்லுகிறது.

 

சூரியன் ஓராழித் தேரில் பவனி வருவதை அகம் 360–ல் காணலாம்.

 

 

என்னே ஒற்றுமை!!

செப்பு மொழி பதினெட்டுடையாள் எனின சிந்தனை ஒன்றுடையாள்

என்று பாரத தேவி பற்றி பாரதி சொன்னது பொய்யாகப் போகுமா?

 

–SUBHAM–

 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த பரிசு! (Post No.3326)

Written by London Swaminathan

 

Date: 6  November 2016

 

Time uploaded in London: 20-54

 

Post No.3326

 

 

Pictures are taken from various sources.

 

contact; swami_48@yahoo.com

 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் – என்பது திரைப்படப் பாடல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது இல்லை; அது மனுஸ்மிருதி சொல்லும் வாசகம் என்பது இன்று தெரிந்தது.

 

108 ஆண்டுகளுக்கு முன் பேட்fஈல்டு ( REV J E PADFIELD ) என்னும் பாதிரியார், வீட்டில் இந்துவின் நெறிமுறைகள் ( Hindu at Home) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டார். அதில் திருமணம் பற்றிப் படிக்கையில் பல சுவையான விஷயங்கள் கிடைத்தன. ஏற்கனவே ஆங்கிலக் கட்டுரையில் விளக்கமாக கொடுத்துவிட்டேன். அதிலிருந்து சில சுவையான பகுதிகளை மட்டும் தருகிறேன்.

 

காதல் திருமணம் ஓகே’ (OK)!

 

மனு எட்டு வகையான திருமணங்கள் பற்றிச் சொல்லுகிறார். இதை தொல்காப்பியரும் அப்படியே தமிழர் திருமண வகை என்று சொன்னதை முன்னர் எழுதிய தொல்காப்பிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தந்தேன்.

 

ஒரு பெண் தானாக கணவனைத் தேடுவதோ, ஒரு ஆண் தானாக பெண்ணை நெருங்கி மணம் முடிப்பதோ தவறில்லை என்று சொல்கிறார் மனு:-

 

மூன்றாவது அத்தியாயத்தில் திருமணம் பற்றி நிறைய எழுதியுள்ளார். பத்துவகையான குடும்பங்களில் பெண் எடுக்கக்கூடாது என்று குஷ்டம், க்ஷயரோகம், கால்,கை வலிப்புள்ள குடும்பங்கள்  பட்டியலைத் தருகிறார். அத்தோடு உடலில் அதிக முடியுள்ள குடும்பங்களிலும் திருமணம் செய்யக்கூடாது, வேத ஆசார அனுஷ்டானங்கள் இல்லாத குடும்பங்களையும் தவிர்க்கவேண்டும் என்பார்.

மனு நீதி பற்றிப் பேசியவுடன் சில திராவிடங்களும் மார்கசீயங்களும் பொங்கி எழும். அவர்கள் எல்லோரும் செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள் என்பது மனு நீதி நூலைப் படிப்பவர்களுக்குப் புரியும். ஏனெனில் மனு சொல்லும் விதிகளை பிராமணர்களே பின்பற்றுவது இல்லை; முன்னர் பின்பற்றியதும் இல்லை என்பது இதை முழுக்கப் படித்தால் விளங்கும். ஒரு வேளை நமக்குத் தெரிந்து மனு நீதியைப் பினபற்றிய ஒரே ஆள் மனுநீதிச் சோழனாகத்தான் இருக்கும்.!!

 

வாயாடிப் பெண்ணையும், சிவப்புத் தலை முடி உடைய பெண்ணையும். திருமணம் செய்யக்கூடாது. அதிக முடியோ, முடியே இல்லாமலிருந்தாலோ கல்யாணம் செய்யக்கூடாது. வியாதியுடையவர், உடலுறுப்புகள் கூடுதலாக இருப்பவரையும் மணம் முடிக்காதே என்பார் (3-7, 8)

 

அன்ன நடை அல்லது யானை போல அசைந்தாடும் நடை யுடைய பெண்ணை, அழகிய முடி, பல் வரிசையுடைய பெண்ணை திருமணம் செய்யலாம் என்பார்.(3-10)

 

சகோதர் இல்லாத பெண் அல்லது ஊர் பேர், குலம் கோத்திரம் தெரியாத தந்தையுடைய பெண்ணையும் தவிர்க்கவும் என்கிறார்(3-11)

 

இரண்டாவது மனைவி

அவரவர் முதல் மனைவியை சொந்த ஜாதியில் கட்டலாம்; ஆசை காரணமாக மேலும் மனைவி வேண்டுமானால், ஜாதி வரிசைப்படி திருமணம் செய்யலாம் (1.பிராமணர், 2.அரசர் குலம், 3.வணிகர் குலம் என்பது வரிசை) (3-12)

 

ஒரு பெண் பருவம் அடைந்தவுடன் மூன்றாண்டுகளுக்குக் காத்திருக்கலாம். அதற்குப் பின் அவள் தனக்குரிய தகுந்த ஆடவனைத் தேடலாம். தந்தையே முன்வந்து மணம் முடிக்காதபோது அவளே ஒருவரைத் திருமணம் செய்வதில் தவறில்லை. அவளை திருமணம் செய்ய முன்வரும் ஆடவனும் தவறிழைக்காதவனே (9-91)

 

ஆனால் அப்படித் தன் காதலனுடன் செல்லுகையில் தந்தை, தாய், சகோதரர் கொடுத்த நகையுடன் ஓடிவிடக் கூடாது. அப்படிப் போனால் அந்தப் பெண் திருடி ஆவாள் (9-92)

 

முப்பது வயது ஆண் 12 வயதுப் பெண்ணையும், 24 வயது ஆண் 8 வயதுப் பெண்ணையும் மணக்கலாம்.(9-94)

 

(எனது கருத்து:- மனு தர்மத்தில் வேத காலத்தில் இருந்த பெண் சுதந்திரம் பல பாடல்களில் வருகிறது ஆனால் இங்கே எட்டு வயதுப் பெண் திருமணம் பற்றிச் சொல்லுவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஆகையால் ஒரிஜினல் மனு ஸ்மிருதியுடன் அவ்வப்போது சில பிற்கால விதிகளும் இடைச் சொருகலாக வந்தன என்று கொள்ளுவதே பொருத்தம்)

 

 

கற்பு என்பது இருவருக்கும் பொதுவானது; ஆணும் பெண்ணூம் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்க வேண்டும். இருவரும் சாகும் வரை பிரியக்கூடாது (9-101, 102)

 

கடவுள் கொடுக்கும் பரிசு

 

பெண் என்பவள் கடவுள் கொடுக்கும் பரிசு; ஏதோ தானாக முன்வந்து எடுத்துக் கொண்டதாக எண்ணக்கூடாது. மனைவியை எப்போதும் ஆதரித்து கடவுளைத் திருப்தி செய்ய வேண்டும் (9-94/96)

 

எப்போது விவாக ரத்து செய்யலாம்?

 

கணவன் ஏதேனும் கடமையை நிறைவேற்றப் போயிருந்தால் மனைவி 8 வருடம் வரை அவனுக்காக காத்திருக்கலாம்; உயர் படிப்புக்குப் போயிருந்தால் 6 வருடங்களும், சுற்றுலா போயிருந்தால் 3 வருடங்களும் அவனுக்காக காத்திருக்கலாம்.

(அதற்குப் பின்னும் வராவிட்டால் அவள் வேறு ஒருவரை மணம் முடிக்கலாம் என்பது கருத்து)

 

வெறுப்பை  கொட்டும் மனைவியை ஓராண்டு பொறுத்துக் கொள்ளலாம்; பின்னர் அவளை விட்டு நீங்கலாம். குடித்துவிட்டுக் கூத்தாடும் மனைவி, கணவனை அடிக்கும் மனைவி, ஊதாரியாகச் செலவு செய்யும் மனைவியை உடனே விட்டுவிடலாம். (9- 76/80)

மனைவி மலடியாக இருந்தால் 8 வருடங்களுக்குப் பின்னரும், பிறந்த குழந்தைகள் எல்லாம் இறந்துவிட்டால் 10 வருடங்களுக்குப் பின்னரும், புதல்விகளை மட்டுமே பெற்றெடுத்தால் 11 வருடங்களுக்குப் பின்னரும் பிரியலாம். ஆனால் திட்டித் தீர்க்கும் மனைவியை உடனே விட்டுவிடலாம் (9-81)

மனு ஸ்மிருதியின் மொழிபெயர்ப்பு தமிழிலும் கிடைக்கும். இங்கே பிரிட்டிஷ் லைப்ரரியில் பல பதிப்புகள் உள்ளன. திருலோக சீதாராம் எளிய நடையில் மொழி பெயர்த்துள்ளார். பெண்களை மனுஸ்மிருதி போற்றுவது போல உலகில் பழங்கால இலக்கியம் எதுவும் போற்றியதில்லை. நாமே படித்துப் பார்த்தால் அதைக் கண்டு வியப் போம்.

 

பிராமணர்களுக்கு எவ்வளவு சலுகை தருகிறதோ அந்த அ ளவுக்குக் கட்டுப்பாடுகளும் விதிக்கிறது. அதாவது எளிதில் பின்பற்றமுடியாத கடுமையான விதிகள். இதை யார் எந்தக் காலத்தில் பின்பற்றினார்கள் என்று நான் எண்ணுவேன். ஆகையால் மனுஸ்மிருதியில் ஏதேனும் ஒன்றிரண்டு ஸ்லோகங்களை மட்டும் மேற்கோள் காட்டும் வெள்ளைத் தோல் அறிஞர்கள், திராவிடங்கள், மார்கசீயங்கள் சொற்களை நம்பாமல் மெய்ப்பொருள் காண்பதறிவு.

 

 

-சுபம்–

புத்தாண்டு தினத்தன்று ஏழு கோவிலுக்குச் செல்லும் பிரிட்டிஷ் எம்.பி. (Post No.3115)

பிரிட்டிஷ் அமைச்சர் ப்ரீதி படேல்(Just outside the hall)

 

Written  by London Swaminathan

 

Date: 3  November 2016

 

Time uploaded in London: 6-30 AM

 

Post No.3315

 

 

Pictures are taken by London swaminathan.

 

 

பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ராபர்ட்சனும் பிளாக்மேனும்

 

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அக்டோபர் 26 புதன்கிழமையன்று பிரிட்டிஷ் ஹிந்து மன்றம் (Hindu Forum of Britain) தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியது. அதன் சிறப்பு அம்சங்களை மட்டும் சுருக்கி வரைகிறேன்.

 

பாப் பிளாக்மேன் (Bob Black man)  என்ற எம். பி பேசுகையில் ஆண்டுதோறும் புத்தாண்டு நாளன்று ஏழு கோவில்களுக்குச் சென்று வருவதாகவும் அடுத்த முறை எட்டு அல்லது ஒன்பது கோவில் போக திட்டமிட்டிருப்பதாகவும் கூறியவுடன் பலத்த கரஒலி எழுந்தது. காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு நள்ளிரவு வாக்கில் புனித யாத்திரையை முடிக்கிறார் இந்த கிறிஸ்தவ இந்து!

 

அவரை அடுத்து ஸ்காட்லந்தில் மிகப் பெரிய கட்சியின் எம்.பி ஆங்கஸ் ராபர்ட்சன் பேசினார். “நான் உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இங்கிலாந்தை விட ஸ்காட்லாந்தில் இந்தக் குளிர் காலத்தில் இருட்டு அதிகம். நீங்கள் இந்துக்கள்; தீபாவளி மூலம் பிரகாசத்தைக் கொண்டு வருகிறீர்கள். ஸ்காட்லாந்திலோ அதிகம் இந்துக்கள் இல்லை. நீங்கள் பெருமளவில் வந்து எங்கள் பிராந்தியத்தில் வெளிச்சம் உண்டாக்குங்கள் என்றார். உடனே கர ஒலி மண்டபத்தின் கூரையைப் பிய்த்துக் கொண்டு சென்றது.

குஜராத்தி இனிப்புகள் (கூட்ட அறையில்)

 

காஷ்மீர் தினமும் இதே நாளன்று கொண்டாடப் பட்டதால் அதற்காக வந்திருந்த காஷ்மீர் மஹாராஜாவின் பேரன் தீபாவளித் திருநாளிலும் கலந்து கொண்டார். அவரது தாத்தா பெரிய தேசபக்தர் என்பதால் இந்தியாவுடன் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று உடன்படிக்கை செய்தார். அவருக்கும் மாலை போட்டு கவுரவித்தோம் ( நான் ஹிந்து போரத்தின் தேசிய கமிட்டி உறுப்பினர்)

 

புதிதாக பிரபுக்கள் சபைக்கு நியமிக்கப்பட்ட ஹிதேஷ் காதியா பேசுகையில் முதல் தடவையாக மஹாரணிக்கு முன்னிலையில் ரிக் வேதத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்ததாகவும் உலகின் மிகப் பழைய நூல் என்பதோடு ரிக் வேதத்தில் எல்லோருக்கும் பொருந்தும் அருமையான பாடல்கள் உள்ளன என்றும் சொன்னவுடன் அனைவரும் கைதட்டி அதை ஆமோதித்தனர்.

 

பிரதம மந்திரி தெரெசா மே, இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரியாவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். அதை பிளாக் மேன் வாசித்து அனைவரையும் மகிழ்வித்தார்.

 

மேலும் பல எம்.பி.க்களும் பிரபுக்களும் நல்லுரை ஆற்றினர். இராமன் அயோத்தி திரும்பிய நல்ல நாள் இது. இருளிலிருந்து வெளிச்சத்துக்கும் அறியாமையிலுலிருந்து ஞானத்துக்கும் செல்லும் நாள் இந்த தீபத் திருநாள் என்று குறிப்பிட்டனர்.

 

பிரிட்டிஷ் அமைச்சர் பிரீதி படேல் பேசுகையில் பிரிட்டிஷ் இந்துவாக இருப்பதிலும் அனைவருக்கும் சேவை செய்வதிலும் பெருமைப்படுவதாகக் கூறினார்.

பார்லிமெண்டின் மேல் மாடியில் தேம்ஸ் நதியை நோக்கிய ஹாலில் இக்கூட்டம் 300 பேருடன் நடந்தது. இன்னிசை நிகழ்ச்சியும் வயிற்றுக்குச் சிறிது உணவும் வழங்கப்பட்டது.

மன்றத்தின் தலைவி திருமதி திருப்தி படேலும் (President HFB), செயலர் செல்வி பன்னா வகாரியாவும் (Secretary General)  செம்மையான ஏற்பாடுகளைச் செய்து சிறப்பெய்தினர்.

சாயி பள்ளி மாணவிகள்

 

–சுபம்–

 

தலாக்கிற்கு தலாக் தலாக் தலாக்! (Post No.3256)

talaq-debate

Written by S. NAGARAJAN

Date: 16 October 2016

Time uploaded in London: 6-00 AM

Post No.3256

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

By ச.நாகராஜன்

 talaq2

இந்தியத் திரு நாட்டில் இஸ்லாமியப் பெண்மணிகளுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. இது அவர்கள் விரும்பியது, கேட்டது. அவர்களின் மதகுருக்களால் தொடர்ந்து மறுக்கப்படுவது.

வாயால் மூன்று  முறை தலாக் தலாக் தலாக் என்று சொன்னால் போதும், புனிதமான மண உறவு அறுந்து போகும். ஷரியத் சொல்கிறதாம் இப்படி!

அந்த தலாக்கிற்கே ஒரு தலாக் தலாக் தலாக்!

 

உண்மையில் குரான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமையை அளிக்கிறது. இறைவன் படைப்பில் இருவரும் சமம் என்கிறது.

ஆனால் சுயநலவெறி பிடித்த இஸ்லாமிய மதகுருமார்கள் குரானைத் தவறாகச் சித்தரித்ததை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன இஸ்லாமிய மகளிர் அமைப்புகள்.

14-10-2016 அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆர்னாப் கோஸ்வாமி நடத்திய விவாதத்தில் முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்த காஷ்மீரி முஸ்லீம் தலைவர் ஒருவர் நான் முதலில் ஒரு முஸ்லீம் பிறகு தான் இந்தியன் என்கிறார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25வது பிரிவு மத சுதந்திரத்தை வலியுறுத்துகிறது. அதை வரவேற்று  மத சுதந்திரம் என்ற பெயரில் தான் நினைத்ததை எல்லாம் சொல்லும் அந்த இஸ்லாமியர் முதலில் நான் ஒரு இந்தியன் என்று சொல்லாமல் முதலில் நான் ஒரு முஸ்லீம் என்பது சரியா?

விவாதத்தில் கலந்து கொண்ட ஒருவர் பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று சொல்கின்ற நீங்கள் பொது கிரிமினல் சட்டத்தை மட்டும் ஏன் எதிர்க்கவில்லை. குற்றம் செய்யும் முஸ்லீம்களை ஷரியத் சட்டத்தின் படி கையை வெட்டி விடலாமா என்று கேட்டார்.

வெட்கம்! பதிலே இல்லை!

மூன்று முறை ஒரு சொல்லைச் சொல்லி விட்டு ஒரு பெண்ணை நிர்க்கதியாக விடும்படி அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) சொல்லி இருப்பாரா? மாட்டார் என்கின்றனர் இஸ்லாமிய மகளிர்.

ஏன் இந்திய அரசு அழைக்கும் போது விவாதத்திற்கே வர பயப்படுகின்றனர்.

அவர்களிடம் உண்மை இல்லை, அதனால் தான்! பெண்களை அடிமைகளாகவும் போகப் பொருளாகவும் கருதும் அவர்கள் எண்ணம் தவிடு பொடியாகி உரிய சுதந்திரத்தை இஸ்லாமிய மகளிர் பெறும் நன்னாள் நெருங்குகிறது என நம்புவோமாக!

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலக் கட்டுரை இஸ்லாமிய மகளிர் அமைப்பினர் எழுதி ஆங்கில பத்திரிகைகளிலும் இணையதளத்திலும் வெளி வந்த ஒன்று.

படித்துப் பார்த்தால் உண்மைகள் புரியும்!

உண்மையில் இஸ்லாமிய மகளிருக்கு ஆதரவாய் இருப்பவர் ஹிந்துக்களே!

என்றும் உள்ள ஹிந்துக்களின் நல்லெண்ணம் தொடரும்.

அவர்களின் உண்மையான எதிரிகள் யார் என்பதை அவர்கள் இப்போது உணர்ந்து விட்டனர்.

ஆங்கிலக் கட்டுரை இதோ:

நன்றி : இணையதளத் தொடுப்புகள்

 talq

Reform in Muslim Personal Law: Triple ‘talaq’ is un-Quranic and must be banned

Zakia Soman and Noorjehan Niaz  Updated: Apr 10, 2016 09:59 IST

Legal reform in personal laws has been one of the critical yet neglected areas in Indian democracy. This reform is for the dignity and equality of women citizens and thereby all Indians — irrespective of religious background. The Sachar Committee appointed by the Prime Minister in 2005 said that Muslims (who comprise the largest minority) live in poverty, economic and educational backwardness. The findings also suggest that on an average only four out of 100 Muslims are graduates.

Now out of these four, how many are women, is open to questioning. On the one hand, Muslim women are excluded educationally and socio-economically owing to government neglect. On the other hand, they suffer from the near absence of any legal framework in matters of family, marriage, divorce, custody of children etc.

An overwhelming 88.3 percent women are opposed to triple ‘talaq’. Image from PTI, for representation only

Unlike those from other communities, Muslim women are denied their legal rights in the personal realm despite Quranic injunctions. Practices such as triple talaq and halala persist in our society despite there being no sanction to these in the Quran.

This situation has arisen thanks to the way the Muslim personal law is understood and practised in India. The whole arena is mired in ambiguity, obfuscation and gross apathy owing to the stranglehold of conservative patriarchal elements who have hegemonised this space forever. Fourteen hundred years ago, the Quran gave clear rights to women in marriage, family, society and public life but in reality there has been a persistent denial of these rights. So much so, that a perception has arisen, that in Islam, men have superiority over women.

Within several conservative sections the dominant belief seems to be that Muslim women need to live a life of subjugation within the four walls of a home. The hegemony of the patriarchal forces has continued post-1947 till date. The attempts by Muslim women such as Shayara Bano and several others is a cry for justice and for a halt to rampant violations of their rights in marriage and family.

The absence of a comprehensive codified personal law in our country has resulted in Muslim woman suffering in matters of divorce, halala, polygamy, guardianship and custody of children, share in property etc. The Shariat Application Act, 1937 is silent on all these matters. It is claimed that Indian Muslims are governed by Shariat. But the Shariat as practised currently in different parts of the country is undefined and unwritten. It is subject to multiple interpretations and misinterpretations — which more often than not, are unfair to women.

Often the injunctions of the Holy Quran are violated in the name of Shariat; widespread incidence of triple talaq is the commonest example. Unfair practices pertaining to age of marriage, mehr, divorce, alimony, child custody, property are all passed off in the name of Shariat. It is anybody’s guess as to how many ordinary Muslims understand the spirit of the Holy Quran or its underlying principles of gender justice!

It is not difficult to guess as to what is the perspective and understanding of some of those men dispensing justice in Shariat courts across the country! Most times, the verdicts in family matters end up being unfairly pro-men and entirely anti-women. This can hardly be said to be based on Quranic injunctions!

A comment on the role of various elected governments and this continued injustice is in order. In our country, Muslim women’s quest for justice is viewed with skepticism or even hostility. By recognising only the conservative religious voice as the sole voice the democratic state has failed in enabling fair representation for all sections of population including women. The conservative sections are unaware and unconcerned about the issues of Muslim women and therefore, they cannot continue speaking for them.

A national study done by us revealed that Muslim women are fed up of this oppression and want immediate redressal. We found that 55 percent of the women surveyed were married before the age of 18 years, 47 percent women don’t possess their own nikahnama and 82 percent women have no property in their name. An overwhelming 95.5 percent women have not heard about the AIMPLB — the all-India Muslim Personal Law Board. More than 40 percent women received less than Rs 1000 for mehr and 44 percent women did not receive the mehr at all. Most respondents were not aware of the empowering provisions about mehr and that it is their right to decide the amount.

An overwhelming 91.7 percent women spoke out against polygamy saying that a Muslim man should not be allowed to have another wife during the subsistence of the first marriage. Of the divorced women, 65.9 percent were divorced orally, 7.6 percent were divorced though a letter, 3.4 percent women were divorced on phone, 3 on email, 1 via SMS. In all, 78 percent women were divorced unilaterally.

The study indicates that an overwhelming 88.3 percent women are opposed to triple talaq and want the legal divorce method to be the talaq-e-ahsan method spread over a period of 90 days and involving negotiation and avoiding arbitrariness. An overwhelming 83.3 percent women felt that their family disputes can be resolved if the law is codified. 89 percent wanted the government to intervene in helping codify the Muslim personal law. Over 86 percent women wanted religious leaders to take responsibility for enabling Muslim women to get justice in family and they wanted these leaders to support in bringing about a gender-just law.

It needs to be mentioned here that patriarchal forces are attempting to project that “court interference” is a violation of the Constitutional right to religious freedom of the Muslim minority. This is a lie; actually the prevalent practice of triple talaq is a violation of Quranic injunctions and therefore violates the right to religious freedom of Muslim women. And this violation is being done by self-appointed custodians of religion.

Shayara Bano and other Muslim women are seeking an end to this violation of their Quranic rights. It is the Muslim conservative forces who are violating the Islamic principles of gender justice and the Muslim women are forced to go to courts. It is only incidental that they are in violation of the Constitutional principles too. Lack of legal recourse and discrimination is a very important aspect that calls for correction while addressing the Quranic rights as well as the citizenship rights of Muslim women.

Zakia Soman and Noorjehan Niaz are co-founders of Bharatiya Muslim Mahila Andolan which seeks reform in Muslim personal law

*******************