வாழ்க வடுவூர் அய்யங்கார்!

IMG_5797

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by London swaminathan

Date: 25 September 2015

Post No: 2186

Time uploaded in London :–  10-36 am

(Thanks  for the pictures) 

வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாற்பதுக்கும் மேலான தமிழ் நாவல்களை எழுதினார். 1880 ஆம் பிறந்த அவர் 1942 ல் இறந்தார். தஞ்சை மாவட்டம் வடுவூரைச் சேர்ந்தவர். அவருடைய புத்தகங்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கிவிட்டதால் யாரும் வெளியிடலாம். அவரைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு தமிழ் வளர்ச்சிக்கு, குறிப்பாக நாவல் வளர்ச்சிக்கு, உதவியுள்ளார். இன்று அவரது படைப்புகள் மறுபதிப்பு செய்யப்பட்டுவிட்ட போதிலும், மேலும் பல திரைப்படம் ஆக்கப்பட்டுவிட்ட போதிலும் அவரது காலத்தில் இப்புத்தகங்கள் எப்படி வெளியாயினவோ அந்த ஒரிஜினல் வடிவத்தில் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ளன. எதிர்கால ஆய்வாளருக்காக இதோ சில மாதிரிகள்:

IMG_5796 (2)

IMG_5804 (2) - Copy

IMG_5798 (2) - Copy

IMG_5888 (2)

IMG_5805 IMG_5806 (2) IMG_5811 (2) IMG_5812 (2) IMG_5814 IMG_5815 (2) IMG_5816 (2) IMG_5817 IMG_5819 (2) IMG_5820 (2) IMG_5821 (2) IMG_5822 (2) IMG_5823 (2)

IMG_5887

IMG_7410

சிரிப்பு! நகைப்பு! இளிப்பு! பகடி! நக்கல்! கிண்டல்!!! – பகுதி 2

hogarth

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY london swaminathan

Date : 12 September  2015

Post No. 2150

Time uploaded in London: –  காலை 6-51

(Thanks  for the pictures)

கருமிக்கு ஓவியம் விற்பது எப்படி?

வில்லியம் ஹோகார்த் என்பவர் தலைசிறந்த ஆங்கில ஓவியர். ஒரு பெரிய பணக்காரர், அவரைச் சந்தித்து ஒரு ஓவியம் வரையுங்கள் என்றார். ஆனால் அவர் மஹா கருமி. அது ஹோகார்த்துக்கும் தெரியும் . ஆகையால் ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தார். ஆனால் அந்தக் கருமி — மஹா கஞ்சன் — விடாக் கொண்டன், கொடாக்கொண்டனாக நச்சரித்தார்.

ஹோகார்த்: சரி, உங்களுக்கு என்ன ஓவியம் வேண்டும்?

கருமி: மாடிக்குப் போகும் வழியில் செங்கடலை வரைந்து அதில் இஸ்ரேலியர்கள் கடந்து போவதையும் எகிப்திய பாரோவின் ஆட்கள் மூழ்குவதையும் (பைபிள் கதை), அப்படியே தத்ரூபமாக வரையுங்கள்.

ஹோகார்த்: அதற்கு பல ஆயிரம் பவுன்கள் செலவுபிடிக்குமே!

கருமி: முடியாது; சில நூறு பவுன்கள்தான் தருவேன்.

ஹோகார்த்: சரி, உங்களுக்காக வரைகிறேன்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஓவியம் தயார் – என்று ஹோகார்த் அறிவித்தார்.

கருமி ஆவலோடு ஓடிவந்தார். சுவர் முழுதும் சிவப்பு சாயம் பூசப்பட்டிருந்தது.

மஹா கருமி (கோபத்துடன்) : என்ன இது? நான் வரையச் சொன்னது இது இல்லையே. செங்கடல் எங்கே? பாரோ எங்கே? இஸ்ரேலியர்கள் எங்கே?

ஹோகார்த்: இதோ பாருங்கள் சிவப்பு சாயம், அதுதான் செங்கடல்

கருமி: இஸ்ரேலியர்கள் எங்கே?

ஹோகார்த்: அவர்கள் செங்கடலைக் கடந்து போய்விட்டார்கள்.

கருமி: எகிப்திய பாரோ (மன்னன்)வின் வீரர்கள் எங்கே?

ஹோகார்த்: அவர்கள் எல்லோரும் கடலில் மூழ்கிச் செத்துப் போய்விட்டார்கள்.

கருமிக்குப் புரிந்தது: கூலிக்கு ஏற்ற வேலைதான் கிடைக்கும் என்று!

ஹோகார்த்துக்கோ ஒரே மகிழ்ச்சி! நல்ல பாடம் புகட்டிவிட்டேன் என்று.

Kipling1977CF

ரட்யாட்ர்ட் கிப்ளிங் துணுக்கு!

கள்ளனுக்கு குள்ளன்

நீ பாய்க்கு அடியில் போனால் நான் கோலத்துக்கு அடியில் போவேன் என்பது கன்னடப் பழமொழி.

ரட்யார்ட் கிப்ளிங் பெரிய எழுத்தாளர். இந்தியாயவை அடிப்படையாக வைத்து கதை எழுதிய பெரிய ஆங்கில நாவலாசிரியர். அவருக்கு ஒரு அமெரிக்க ரசிகர் கடிதம் எழுதினார்:

அன்புள்ள கிப்ளிங்,

நீங்கள் உங்கள் இலக்கியப் படைப்புகளை விற்பதாக அறிந்தேன். ஒரு சொல்லுக்கு ஒரு டாலர் கட்டணம் வசூலிப்பதாகக் கேள்விப்பட்டேன். இத்துடன் ஒரு டாலர் நோட்டு இணைக்கப்படுள்ளது. எனக்கு ஒரு மாதிரி (ஸாம்பிள்) அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு உங்கள்

பரம ரஸிகன்

உடனே கிப்ளிங் பதில் அனுப்பினார்:

அன்புள்ள ரஸிகா,

நன்றி.

இப்படிக்கு கிப்ளிங்

பரமரஸிகன் விடுவாரா? இந்த ஆளிடம் ஒரு சொல் மாதிரிக்கு எழுது என்றால் “நன்றி” என்று ஒரு சொல்லை எழுதி ஏமாற்றிவிட்டார். அவர் கள்ளன் என்றால் நான் கள்ளனுக்கும் குள்ளன் என்று காட்டுகிறேன் என்று எண்ணி, அனதக் கடிதத்தை ஏலம் விட்டார். இரண்டு டாலர் கிடைத்தது.உடனே கடிதம் எழுதினார்:–

அன்புள்ள கிப்ளிங்,

தங்கள் சொல் கண்டேன்; பேரானந்தம் கொண்டேன். அதை ஏலத்துக்கு விட்டேன். இரண்டு டாலர் கிடைத்தது. தபால் செலவு, பேப்பர் செலவு போக கிடைத்த லாபம் 90 செண்ட். அதில் சரி பாதி உங்களுக்குச் சொந்தம்! இத்துடன் 45 செண்ட் தபால் தலைகள்  அனுப்பி இருக்கிறேன்.

இப்படிக்கு உங்கள்

பரம ரஸிகன்.

பிரபல எழுத்தாளருக்கு எப்படி இருந்திருக்கும்? நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!

பாரதி பாடலில் மிருகங்கள்!

bharati boat

Written by London swaminathan

Date : 10 September  2015

Post No. 2144

Time uploaded in London: –  காலை 8-38

சின்னஞ் சிறு குருவி போலே – நீ

திரிந்து பறந்து வா பாப்பா!

வன்னப் பறவைகளைக் கண்டு – நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

kuruvi

கொத்தித் திரியும் அந்தக் கோழி – அதைக்

கூட்டி விளையாடு பாப்பா

எத்தித் திருடும் அந்த காக்காய் – அதற்கு

இரக்கப்பட வேணும் பாப்பா!

பாலைப் பொழிந்து தரும், பாப்பா- அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா!

pasuvum kandrum, fb

வண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு

அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா!

என்று பாடி, சின்னக் குழந்தைகளிடம் எடுத்த எடுப்பிலேயே அன்பை, அஹிம்சையைப் போதிக்கிறான். இப்படிச் சின்ன வயதில் கற்றுக் கொடுத்துவிட்டால் உலகம் முழுதும் அஹிம்சை, கொல்லாமை பரவும் என்பது அவ்னது கணிப்பு.

இயற்கையைப் பாடாத கவிஞன் இல்லை. நேரடியாக இயற்கையை ரசித்துப் பாடுவது ஒரு வகை. அந்த இயற்கை மூலம் மனிதன் கற்க வேண்டியது என்ன என்பதை உணர்த்தும்வகையில் பாடுவது இன்னொரு முறை. இந்த இரண்டு வகைப் பாடல்களையும் பாரதி பாடல்களில் காணலாம்.

ஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பா பாட்டில் பிரணிகளிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று போதிக்கும் பாரதி, காக்கைச் சிறகினிலே நந்த லாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்ற பாடலில் பெரிய தத்துவத்தின் உச்சிக்குப் போய்விடுகிறான்.

eagle-and-seagull

குயில் பாட்டு, குருவிப்பாட்டு, கிளிக்கண்ணி என்று அவன் பாடாதே பறவையே இல்லை. விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே என்று பாடி ஆன்மீக விடுதலை, நாட்டு விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்ற எல்லா வகை விடுதலை உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறான்.

ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்ற குரு கோவிந்த சிம்ம்ன் பாடல் வரிகள் மூலம் எதையும் சாதிக்கும் குணத்தை, பாஸிட்டிவ் வைப்ரேஷனைப் பரப்புகிறான்.

திட்ட வேண்டிய இடங்களில் நரியின் சிறுமைக் குணத்தைப் பாடுகிறான். நாயை ஒப்பிடுகிறான்.

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று ஏசுகிறான். சகுந்தலை பெற்ற பிள்ளை ஓர் சிங்கத்தினை தட்டி விளையாடி என்ற வரிகள்மூலம் இந்தியாவுக்கு பாரதம் என்ற பெயரை ஈந்த பரதனைப் பாடுகிறான்.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்று பாடி தாவர ஜங்கமப் பொருட்கள் அனைத்தும் நாமே—இறைவனின் வடிவமே – என்ற பகவத் கீதை விபூதி யோக கருத்துக்களை உரைக்கிறான்.

kakak close up

வேள்வித்தீ பாட்டில் காட்டில் மேயுங் காளை, வெங்கடேசு ரெட்டப்ப பூபதி பாட்டில் எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ? என்று இடபம் (ரிஷபம்=காளை), கிளிப்பாட்டில் துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடீ – கிளியே – அன்புக்கு அழிவில்லை காண் என்ற உயர்ந்த கருத்துரை – இப்பை பட்டியல் நீளும்

குயில் பாட்டு என்று சிறிய கவிதை நூலே எழுதி குயிலுக்கு அழியாத இடம் தருகிறான்.

நரிவகுத்த வலையினிலே சிங்கம் நழுவி

விழும், சிற்றெறும்பால் யானை சாகும்;

Snakes-

வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும் – என்று பாஞ்சாலி சபதம் பாடி விதியின் வலிமையைக் காட்டுகிறான்.

பக்தி எனும் பாட்டில் பொய்ப் பாம்பு மடியும் என்று பாம்பையும் பாடுகிறான்.ஜயபேரிகை பாட்டிலும் பயம் எனும் பேய்தனை அடித்தோம் – பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம் என்று முழக்கம் இடுகிறான்.

அன்பு என்று வந்துவிட்டால் சந்யாசியைப் போல தின்ன வரும் புலியிடத்திலும் அன்பைக் காட்டசொல்கிறான்:-

தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு

சிந்தயிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே என்பான்

கடலில் வாழும் முத்துச் சிப்பிகளும் , பவளமும் அவன் பாட்டில் இடம்பெறுகின்றன.

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ – நன்னெஞ்சே – என்று பகைவனூகருள்வாய் பாட்டில் பாடுகிறான்

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்………………….

வெள்ளை நிறத்தொரு பூனை- எங்கள்

வீட்டில் வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை – அவை

பேருக்கொரு நிறமாகும்

என்று பல வண்ணப் பூனைகளைச் சொல்லி

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்

மானுடர் வேற்றுமை இல்லை

cats

என்ற அரிய- பெரிய நிற வேற்றுமை எதிர்ப்புக் கொள்கையை பிரசாரம் செய்கிறான். தென் ஆப்பிரிக்க மண்டேலாவுக்கும் முன்னதாக, ஐநா. சபைக்கும் முன்னதாக நிற வேற்றுமை எதிர்ப்புப் பிராசரத்தைப் பூணைகள் மூலம் விளக்கிவீட்டவன் பாரதி!

பாரதி பாடிய அளவுக்கு ஒரு கவிஞன் இத்தனை பறவைகள், மிருகங்களைப் பாடி ஒரு தத்துவத்தைக் கற்பித்து இருப்பானா என்பது சந்தேகமே. வால்மீகியும், காளிதாசனும் எத்தனையோ இயற்கை வருணனைகளில் எத்தனையோ பறவைகள், மிருகங்களைக் குறிப்பிடுகிறார்கள்; அவை எல்லாம் இயற்கை ரசனை. ஆனால் பாரதியோ ஒவ்வொன்றிலும் ஒரு குனத்தை, தத்துவத்தைக் காண்கிறான்!

முருகன் பாடல்களில் மான், மயில் ஆகியவற்றையும், விநாயகர் பால்களில் யானையையும் பாடத் தவறவில்லை.

mayil2yanai nama srirangam

பாரதி பாடிய எறும்பு முதல் யானை வரை, எலி முதல் – புலி வரை அத்தனை வைகலையும் ஆராய்ந்தால் அது பிஎச். டி. ஆய்வுரை போல ஆகிவிடும். பாரதியின் பரந்த மனப்பான்மையைத் தொட்டுக் காடுவதே இக்கட்டுரையின் நோக்கம். அது இனிதே நிறைவேறுக!

dog,monkey3

—சுபம்–

பாரதியார் கவசம் அணியுங்கள்!

IMG_3382

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

WRIITEN BY S.NAGARAJAN

Date : 10 September  2015

Post No. 2143

Time uploaded in London: –   8-03 am

 

செப்டம்பர் 11 பாரதியார் நினைவு தினம். பாரதியார் கவசம் அணிய உகந்த நாள். தினமும் பாரதியைப் படிப்போம். அந்த வழி நடப்போம்!

 

ச.நாகராஜன்

கவசம் ஒன்று வேண்டும்!

சார், கந்த ஷஷ்டி கவசம் கேள்விப் பட்டிருக்கிறேன். சிவ கவசம் கேள்விப் பட்டிருக்கிறேன். மஹாபாரதத்தில் வரும் இந்திர கவசம் கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். அது என்ன பாரதியார் கவசம்?பாரதியார் ஒரு கவசமும் பாடியதில்லையே!

தலைப்பைப் பார்த்து இப்படிக் கேட்பது நியாயம் தான்!

பாதுகாப்பைத் தருவது கவசம். விஷக் கிருமிகளிடமிருந்து பாதுகாக்க ஒரு க்ரீம், நீரின் தீய தன்மையைப் போக்க ஒரு ஃபில்டர் என இப்படி ஆரம்பித்தால் நம் வாழ்க்கையில் நோய் நொடி அண்டாமல் இருக்க எத்தனை பாதுகாப்பு மருந்துகள், சாதனங்களை உபயோகிக்கிறோம். பிறப்பிலிருந்து இறப்பது வரை….. எண்ணி மாளா.

ஆனால் இன்றைய சமுதாயத்தில் உளவியல் ரீதியாகவும் தீய சக்திகளின் மூளைச் சலவையிலிருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஏதாவது கவசம் இருக்கிறதா? சரியான நோக்குடன் வீறு நடை போட்டு நம்மையும் தேசத்தையும் முன்னேற்ற வழி உண்டா?

மனம் போன படி எழுதும் பத்திரிகைகள் ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்.

டிவி நிகழ்ச்சிகளோ பார்க்கக் கூடாதவற்றை பார்க்கக் கூடாத வயதில் பார்க்க வைக்கும்.

பாடம் சொல்லிக் கொடுக்க வைக்கும் வாத்தியார்களை நியமிக்கும் பல்கலைக்கழகமே படு ஊழலின் பட்டறையாக இருப்பதைப் பார்த்து அதிர்கிறோம்.

போலீஸ் லஞ்சம், அரசு நிர்வாக லஞ்சம், போக்கு வரத்தில் லஞ்சம், நீதித்துறையில் லஞ்சம் என்று எந்தத் துறையில் உள்ளே புகுந்தாலும் கவசமில்லா சாமான்யனை ஏகப்பட்ட வியாதிகள் பீடிக்கிறது.

இதைப் போக்க ஏதாவது நவீன கவசம் இருக்கிறதா! இருக்கிறது.

bharati, bharatamata

பாரதியார் கவசம்

அது தான் பாரதியார் கவசம். அவர் கவசம் ஒன்றையும் தனியாகப் பாடவில்லை. அவரது பாடல்களே கவசம்!

நம்மை இன்று இருக்கும் தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரே அருமருந்து பாரதியார் பாடல்கள் தாம்!

எந்தத் துறையில் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேளுங்கள். பாரதியார் படைப்புகளில் சரியான பதில் இருக்கும்.

இதை சைவர்கள் அஞ்செழுத்தை ஓதுவது போல, வைணவர்கள் எட்டெழுத்தை ஓதுவது போல பாரதீயர்கள் தினமும் ஓதி வந்தால் பாடி வந்தால், படிப்பதை நடப்பில் கடைப்பிடித்தால் அப்படிப்பட்டவர்களுக்கு எந்த வித தீய சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆத்திசூடியிலிருந்து ஆரம்பிக்கலாம். ஔவையாரின் ஆத்திசூடி இல்லை. புதிய ஆத்திசூடியிலிருந்து!

அச்சம் தவிர்; ஆண்மைந் தவறேல்; குன்றென நிமிர்ந்து நில்; தோல்வியிற் கலங்கேல்; தவத்தினை நிதம் புரி பணத்தினைப் பெருக்கு; பாட்டினில் அன்பு செய்!

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திட வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்

(சமுதாயத்தில் வாழும் வழியைக் கவசம் தருகிறதா?)

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான் பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் – (கீதை இரு வரிகளில் கற்று விட்டோமா?)

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!

சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு

சங்கடம் வந்தால் இரண்டு கூறு

சக்திதனையே சரணம் கொள்ளு – என்றும்

சாவினுக்கோர் அச்சமில்லை தள்ளு

ஜயமுண்டு பயமில்லை மனமே…. பயனுண்டு பக்தியினாலே

ஜாதி மதங்களைப் பாரோம் உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

காதலொருவனைக் கைப்பிடித்தே யவன் காரியம் யாவிலும் கைகொடுத்து மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி. (புதுமைப் பெண்ணிவள் பேச்சுகள் கேட்டீரோ?!)

காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே!

வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக் கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்வோர் பூமியில் எங்கணும் மேலோர்!

பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது!

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!

செய்தலுன் கடனே – அறம் செய்தலுன் கடனே அதில் எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே – (கீதையின் சுருக்கம் கற்று விட்டோமா?)

கவலைப் படுதலே கரு நரகம்மா!

உள்ளத்தில் உண்மை ஒளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்!

மொய்க்கும் கவலைப் பகை போக்கி, முன்னோன் அருளைத் துணையாகி

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடம்பை இரும்புக் கிணையாக்கி

பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண்முன்னே

மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே

ஏராளமான பாரதியாரின் முத்திரை வரிகளில் சிலவற்றை மேலே பார்த்தோம்!

பாரத நாட்டின் முன்னேற்றம், தமிழ் மொழியின் முன்னேற்றம், லஞ்ச லாவண்யம் ஒழிய வழி, ஹிந்து-முஸ்லீம்-கிறிஸ்தவ ஒற்றுமை, பெண் முன்னேற்றம்,விஞ்ஞான முன்னேற்றம், பழைய அறங்களின் ஏற்றம் – எந்த விஷயமென்றாலும் அதற்கு தெளிவான வரையறுப்பும் வழிகாட்டுதலும் பாரதியார் கவசத்தில் உண்டு.

எத்தனை எத்தனை பாடல்கள்; அத்தனை பிரச்சினைகளுக்கும் அதில் வழி காட்டுதல் உண்டு!

பாரதியார் நினைவு நாளில் நித்தமும் பாரதிப் பாடல்களைப் பாட உறுதி பூண்டு பாரதியார் கவசம் அணிவோம்; பாரையே சுவர்க்கமாக்குவோம்.

^^^^^^^^

கங்கையின் பாவம் எப்படிப் போகும்? கம்பன் தரும் அதிசயத் தகவல்

gaumukh

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Wriiten by London swaminathan

Date : 9 September  2015

Post No. 2140

Time uploaded in London: – காலை 9-01

மஹாபாவங்களைச் செய்தவர்கள் எல்லோரும் கங்கையில் போய் நீராடியவுடன் அந்தப் பாபங்கள் நீங்கி புண்ணிய ஆத்மாக்களாக வெளியே வருகின்றனர். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக கங்கையில் சேர்ந்த பாபங்களை எல்லாம் கங்கா தேவி என்ன செய்வாள்? அவளிடம் சேர்ந்த பாபம் எப்படிப் போகும்? இதற்கு கம்பன் விடை சொல்கிறான். ராமபிரான் போன்ற புண்யாத்மாக்கள், கங்கையில் நீராடினால், அந்தப் பாபங்கள் கங்கா தேவியிடமிருந்து அகன்றுவிடும்.

ganga-sacred-confluence

கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா

பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்

என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்தை

உன்னின் நீகினென் உய்ந்தனென் யான் என்றாள்

–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:–என்றும் அழியாத ஜீவநதியான கங்காதேவி ராமனை வணங்கி, “ இவ்வுலகத்தில் உள்ளவர்கள், தாம் செய்த – சொல்ல இயலாத பெரும் பாவங்களை என்னில் மூழ்கி நீக்கிக் கொள்வார்கள். என்னிடம் சேர்ந்த அந்தப் பாபங்களை எல்லாம், இன்று நீ நீராடியதன் மூலம் நான் போக்கிக் கொண்டேன்.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற் போல!

கங்கை என்னும் கடவுள் திருநதி

தங்கி வைகும் தபோதர் யாவரும்

எங்கள் செல்கதி வந்தது என்று ஏமுறா

அம் கண் நாயகற் காண வந்து அண்மினார்

–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:–கங்கை என்னும் தெய்வத் திருநதிக் கரையில் வாழும் தவ சீலர்கள் அனைவரும், தவத்தின் மூலம் நாங்கள் சென்று அடைய வேண்டிய புகலிடமான தெய்வம் இங்கேயே வந்துவிட்டது என்று அழகிய விழிகளை உடைய ராமனைக் காண்பதற்காக அவனிருக்கும் இடத்திற்கு சென்றனர்.

river-ganges-map

‘கங்கை என்னும் கடவுள் திருநதி’, ‘கன்னி நீக்க அருங் கங்கை’, ‘தள்ளும் நீர்ப் பெருங் கங்கை’, ‘வெண் நிறக் கங்கை’, ‘கங்கை அரும் புனல்’, ‘விரி திரைப் புனல் கங்கை’, ‘நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால் நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி’ – என்றெல்லாம் கங்கையை வருணிக்கிறான் கவி சக்ரவர்த்தி கம்பன்!

நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்

நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி

–என்று சொல்வதன் காரணம் என்ன தெரியுமா?

கங்கையோ கன்னி இளம் பெண். அவளுக்கு நரைத்த கூந்தல் எப்படி வரும்? அலைகள் வீசி, நுரை பொங்குவதால், அது நரைத்த கூந்தலுடைய ஒரு பெண் போலத் தோன்றுகிறதாம்! இது கம்பனின் கற்பனை! பொதுவாக நதிகளைக் கன்னி இளம் பெண்ணாகவும், கட்டழகிகளாகவும் வருணிப்பது இந்திய மரபு. காவிரியையும் வையை என்னும் பொய்யாக் குலக்கொடியையும் இளங்கோ அடிகள், சிலப்பதிகாரத்தில் வருணிப்பதைப் படித்தோருக்கு இது நன்கு விளங்கும்.

கம்பன் கவிநயம் படிக்கப் படிக்கத் தெவிட்டாதது!!!

LEAD Technologies Inc. V1.01

LEAD Technologies Inc. V1.01

–சுபம்–

பெண் என்றால் பேயும்…………………

Chennai

Compiled by London swaminathan

Date : 1 செப்டம்பர்  2015

Post No. 2113

Time uploaded in London: காலை 8-45

Swami_48@yahoo.com

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழமொழி. ஆனால் பெண் என்றால் பேயும் அஞ்சும் – என்ற ஒரு பேய்க் கதையைக் கேளுங்கள். இது நமது கிராமப்புற மக்கள் சொல்லும் கதை. மனைவியை அடிக்கும் கணவன் பற்றியே படித்துப் பழக்கப் பட்டுவிட்டோம். ஆனால் கணவர்களைக் கொடுமைப்படுத்தும் மனைவிமார்களும் உண்டு. வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு கணவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்!

ஒரு ஊரில் ஒரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி அந்தப் பிராமணனை தினமும் அடிப்பாள். கிட்டத்தட்ட அது ஒரு தினசரி பூஜை போல ஆய்விட்டது அந்தப் பெண்மணிக்கு. இதற்கு அவரது வறுமையும் ஒரு காரணம். வெளியே போய்ச் சம்பாதித்து வாரும் என்று சொல்லி அடிப்பாள். கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு அலுத்துப் போகவே, “அன்பே! ஆருயிரே! அடுத்த ஊரில் இருந்து எனக்கு பூஜைக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு போனால் நல்ல வரும்படி வரும் என்று சொல்லிவிட்டுப் புறப்பாட்டார்.

அவளோ, ஐயய்யோ, இனி நான் யாரை தினமும் அடிப்பேன்? யார் எனக்கு அரிசி,மளிகை சாமான்கள் வாங்க காசு கொடுப்பார்கள்? என்றாள். அவர் சொன்னார், “ கவலையே படாதே. அதோ, சாலையின் ஓரத்தில் புளிய மரம் இருக்கிறதல்லவா? அதனிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். தினனும் அதைப் போய் அடி”, என்றார்.

அவரும் புறப்பட்டார்; அவளும் தினசரி யாருக்கும் தெரியாமல் புளியமரத்தை அடித்தாள். ஆனால் பணமே கிடைக்கவில்லை. அந்தப் புளிய மரத்தில் ஒரு பேய் வசித்துவந்தது. அது இந்தப் பெண்மணியின் அடி தாங்காமல் கஷ்டப்பட்டுவந்தது.

Wife Beating Husband

பத்து நாட்களுக்குப் பின்னர்  கணவர் திரும்பிவந்தவுடன், “வாருங்கள் இந்தப் புளிய மரத்தைத்தானே அடிக்கச் சொன்னீர்; அது பணமே தரவில்லை” என்று சொல்லி அந்த மரத்தைக் காட்டினாள். அவர் சொன்னார், நீ வீட்டுக்குப் போ. நான் இரண்டு அடி கொடுத்து விசாரிக்கிறேன் – என்று சொல்லி மனைவியை அனுப்பிவைத்தார். இவர் அடிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் அந்தப் பேயே வெளியே வநு, ஏ பிராமணா! நான் பத்து நாட்களுக்கே உன் மனைவியின் அடியைத் தாங்க முடியவில்லை. நீ தினமும் அடிபடுவது எனக்குத் தெரியும். எப்படித் தாங்கினாய்?  உன்னைக் காப்பாற்ற ஒரு வழி வைத்துள்ளேன். நான் மஹாராணியைப் போய்ப் பிடித்துக் கொள்கிறேன். உடனே மஹாராஜா பெரிய பெரிய மந்திரவாதிகளை அழைத்து பேய் ஓட்ட முயற்சி செய்வார். நான் போகவே மாட்டேன். நீ வந்த பின்னர் ஓடிப் போய்விடுகிறேன். உனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும்; நீ சுகமாக வாழ். ஆனால் ஒரு எச்சரிக்கை! நான் வேறு யாரையாவது பிடிக்கும்போது நீ உதவி செய்ய மீண்டும் வராதே; எச்சரிக்கை! – என்று பேய் சொன்னது.

பிராமணனுக்கு மிகவும் சந்தோஷம். பேய், அரசன் மனைவியைப் பிடித்துக் கொள்ளவே அரசன் தண்டோரா போட்டு நாட்டின் மிகப் பெரிய மந்திரவாதிகளை அழைத்தான். பலனே இல்லை. உடனே இந்தப் பிராமணன் போய், என்னிடமுள்ள மந்திர சக்த்தியை வைத்து ஓட்டுகிறேன் என்று சொன்னார். அரசனும் சம்ம்மதித்தான். பிராமணனைப் பார்த்தவுடன் பேய் ஓட்டம் பிடித்தது. அரசன், அந்தப் பிராமணனுக்கு பெரிய பரிசுகள் கொடுத்து அனுப்பினான்.

பிராமணன் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம். அந்தப் பேய் இப்பொழுது மந்திரியின் மனைவியைப் பிடித்துக்கொண்டது. அரசன், வேறு யாரையும் அழைக்காமல் , பிராமணனை அழைத்துவர ஆள் அனுப்பினான். மனைவிக்கு மேலும் பொருள் கிடைக்கும் என்று ஆசை. உடனே பிராமணனைப் பார்த்து, ஓய்! போய்வாரும் என்று கெஞ்சினாள். அவரும் ராஜா சொல்லைத் தட்ட முடியாதே என்று எண்ணி, அங்கே போனார். உடனே அந்தப் பேய், ஏ, பிராமணா! வேறு யாரைப் பிடித்தாலும் வரக்கூடாது என்று சொன்னேனே! உனக்கு எவ்வளவு ஆசை? ஏன் வந்தாய்? என்று கேட்டது.

அதற்கு அந்தப் பிராமணன் சொன்னான், “ எனக்கும் வரப் பிடிக்கவில்லை. என் மனைவி தான் அனுப்பி வைத்தாள் என்றான். அதைக்கேட்டவுடன் பேய்க்கு உடம்பெல்லாம் நடுங்கியது. மனைவியா? அவள் இப்பொழுது எங்கே இருக்கிறாள்? என்று கேட்டது. அவனும், நான் புறப்பட்டபோது அவளும் புறப்பட்டாள். மெதுவாக நடந்தாள். இப்பொழுது இந்த வீட்டு வாசலுக்கு வந்திருக்கவேண்டும் – என்றான். அதைக் கேட்டவுடன், முன்னர் வாங்கிய அடிகள் நினைவுக்கு வரவே, பேய் ஓட்டம்பிடித்தது!

இந்த முறை மன்னனும் மந்திரியும் நிறைய பணமுடிப்புகள், அதோடு சேவகர்களின் பாதுகாப்பு எல்லாம் கொடுத்து பிராமணனை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அப்புறம் அவன் மனைவி அந்தப் பிராமணனை அடிக்கவேயில்லை.

-இது ஒரு நாட்டுப்புற கதை

மௌனம், மானம், கர்வம் பற்றிய சம்ஸ்கிருத, தமிழ் பழமொழிகள்

bharati drawing

செப்டம்பர், 2015 காலண்டர்

(மன்மத வருடம் ஆவணி/புரட்டாசி மாதம்)

Compiled by London swaminathan

Date : 31 ஆகஸ்ட்  2015

Post No. 2110

Time uploaded in London : 11-49 am

Swami_48@yahoo.com

Important days:-

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்; ஜன்மாஷ்டமி (கிருஷ்ண ஜயந்தி); செப்டம்பர் 11-பாரதியார் நினைவு தினம்; 17-விநாயக சதுர்த்தி;24-பக்ரீத்; 29-மகாளயபட்சம் ஆரம்பம்.

 

முஹூர்த்த தினங்கள்:– 9,16, 17,

பௌர்ணமி:– 27/28 அமாவாசை:–12; ஏகாதசி :– 8/9, 24

 

silence

இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஆங்கிலத்திலும், தமிழிலும் தனித்தனியே பொன்மொழிகளுடன் காலண்டர்கள் உள்ளன. இவைகளில் இந்திய இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான மேற்கோள்கள் உள்ளன. படித்துப் பயன்பெறுக.

செப்டம்பர் 1, செவ்வாய்க் கிழமை

பலம் மூர்கஸ்ய மௌனித்வம்

மௌனமாய் இருப்பதே முட்டளுக்கு பலம்.

செப்டம்பர் 2, புதன் கிழமை

தர்துரா யத்ர வக்தாரஸ் தத்ரம் மௌனம் ஹி சோபனம் – சுபாஷித ரத்னகண்ட மஞ்சுசா

தவளைகள் எங்கு பேச்சாளர்களோ, அங்கு பேசாமலிருப்பதே நலம்தரும்

செப்டம்பர் 3, வியாழக் கிழமை

மௌனம் கூஹதி மௌட்யம் சதஸி

சபையில் மவுனமாய் இருப்பது முட்டாள்களுக்குக் கேடயம் போலாகும்

செப்டம்பர் 4, வெள்ளிக் கிழமை

மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

புத்திமான்களால் எப்போதும் மௌனம் காக்கப்படும் (புத்திசாலிகள் அதிகம் பேசாமலிருப்பர்)

செப்டம்பர் 5, சனிக்கிழமை

மௌனம் சம்மதி லக்ஷணம்

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி

silence image

செப்டம்பர் 6, ஞாயிற்றுக் கிழமை

மௌனம் சர்வார்த்த சாதகம் – பஞ்சதந்திரம் 4-45

பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

செப்டம்பர் 7, திங்கட் கிழமை

மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி 3-9

மௌனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது.

செப்டம்பர் 8, செவ்வாய்க் கிழமை

வரம் மௌனம் கார்யம் ந ச வசனம் உக்தம் யதன்ருதம்– சு.ர.பா.

பொய் சொல்வதைவிட பேசாமலிருந்து சாதிப்பதே சிறந்தது.

செப்டம்பர் 9, புதன் கிழமை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல் – குறள் 291

ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் – மனு 4-138

உண்மையேயானாலும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யுமானால் பேசாமலிரு.

செப்டம்பர் 10, வியாழக் கிழமை

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டுபவர் – குறள் 962

புகழை விரும்புவோர், பெரிய செல்வமே கிடைப்பதானாலும் தகாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

silence draw

செப்டம்பர் 11, வெள்ளிக் கிழமை

சத்யம் யத் பரதுக்காய தத்ர மௌனபரோ பவேத்- விஷ்ணு புராணம் 3-12-43

உண்மை சொல்வதால் கெடுதல் வருமானால் பேசாமலிருப்பதே உத்தமம்.

செப்டம்பர் 12, சனிக்கிழமை

வாக் ஜன்ம  வைபல்யம் அசக்யசல்யம் குணாதிகே வஸ்துனி மௌனிதா சேத்  – நைஷதீய காவ்யம்

நல்லோர் முன்னிலையில் ஒன்றும் பேசாமலிருப்பது பொறுத்துக் கொள்ளமுடியாதது. (பேஸ் புக்கில் நல்ல விஷயங்களுக்கும் ‘லைக்’ போடாமல் கல்லுளி மங்கனாக இருப்பது போல)

செப்டம்பர் 13, ஞாயிற்றுக் கிழமை

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம் – பர்த்ருஹரி

மௌனமாக இருப்பது பண்டிதரில்லாதோருக்கு அணிகலன்.

செப்டம்பர் 14, திங்கட் கிழமை

அனுத்தரம் ஏவ உத்தரம் – ரத்ன சமுச்சய

பதில் சொல்லாவிடில் அதுவே ஒரு பதில்தான்

செப்டம்பர் 15, செவ்வய்க் கிழமை

துர்ஜனஸ்ய ஔஷதம் நாஸ்திகிஞ்சித் அனுத்தராத் – சுபாஷிதாவளி

தீயோருக்கு எதிரான மருந்து என்னவென்றால், எதிர்வார்த்தை (பதில்) பேசாலிருப்பதுதான்.

day_of_silence_2012_by_eveefugo-d4x36x8

செப்டம்பர் 16, புதன் கிழமை

அகாத ஜலசஞ்சாரி ந கர்வம் யாதி ரோஹித:

அங்குஷ்டமாத்ர தோய அபி சபரி பரபராயதே –பஞ்சதந்திரம்

ஆழ்கடலில் செல்லும் பிராணிகள் கர்வம் அடைவதில்லை; விரல் அளவு தண்ணீரில் செல்லும் மீன்கள் பரபரக்கச் செல்லும் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 17, வியாழக் கிழமை

அபிபூதி பூயாத் அசூனத: சுகமுஞ்சந்தி ந தாம மானின: – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்கள், அவமானம் உண்டாகும் என்பதற்காக உயிரையும் விடுவர்; மானத்தை என்றும் கைவிடார்.

செப்டம்பர் 18, வெள்ளிக் கிழமை

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,உலகுடன் பெறினும் கொள்ளலர் – புறம் 182

செப்டம்பர் 19, சனிக்கிழமை

அல்பவித்யா மஹாகர்வீ – சு.ர.பா.

கொஞ்சம் படித்தவர்கள் ‘படம்’ காட்டுவர் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 20, ஞாயிற்றுக் கிழமை

உத்தமா மானம் இச்சந்தி மானம் ஹி மஹதாம் தனம் – சாணக்யநீதி

நல்லோர் விரும்புவது மானம்; அவர்களுக்கு அதுவே பெரிய செல்வம்.

learn silence

செப்டம்பர் 21, திங்கட் கிழமை

நான்யஸ்ய கந்தமபி மானப்ருத: மஹந்தே- சிசுபாலவதம்

பிறருடைய கர்வத்தை மானமுள்ளவர்கள் பொறுக்கமட்டார்கள்.

செப்டம்பர் 22, செவ்வாய்க் கிழமை

ந அஹங்காராத் சத்ரு:

நான் என்னும் செருக்கைவிட பெரிய எதிரி இல்லை.

செப்டம்பர் 23, புதன் கிழமை

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள்- 963

செல்வமுள்ளபோது பணிவும், வறியநிலையில் உயர்ந்த கொள்கைப் பற்றும் வேண்டும்.

செப்டம்பர் 24, வியாழக் கிழமை

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம், மானபங்கே தினே தினே – சாணக்யநீதி

உயிரைவிட்டால் ஒரு நாள்தான் துக்கம்; அவமானத்துடன் வாழ்வதோ நாள்தோறும் துக்கம்.

silence (1)

செப்டம்பர் 25, வெள்ளிக் கிழமை

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின் – குறள்- 969

ஒரு முடியை இழந்தாலும் கவரிமா உயிரிழக்கும். பெரியோர்கள், மானம் அழிந்தால் உயிர்துறப்பர்.

செப்டம்பர் 26, சனிக்கிழமை

வரம் ஹி மானினோ ம்ருத்யுர்ன தைன்யம் ஸ்வஜ்னாக்ரத: – கதாசரித்சாகரம்

தன் மக்களுக்கு முன்பு அவமானம் அடைவதைவிட, மானமுள்ளவர்களுக்கு மரணமே மேல்.

செப்டம்பர் 27, ஞாயிற்றுக் கிழமை

பராபவோ அப்யுத்சவ ஏவ மானினாம் – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்களுக்கு தோல்விகூட உற்சாகமே தரும்.

செப்டம்பர் 28, திங்கட் கிழமை

சதாபிமான ஏகதனா ஹி மானின: – சிசுபாலவதம்

மானமுள்ளவர்களுக்கு அது ஒன்றே எப்போதுமுள்ள சொத்து (செல்வம்).

செப்டம்பர் 29, செவ்வாய்க் கிழமை

தலையின் இழிந்த மயிர் அனையர் மந்தர்

நிலையின் இழிந்த கடை – குறள்- 96964

மானம் போனால், கீழே விழுந்து கிடக்கும் மயிருக்குச் சமம்.

செப்டம்பர் 30, புதன் கிழமை

அதிதர்பே ஹதா லங்கா – மிகுந்த அஹங்காரத்தால் (ராவணனின்) இலங்கை அழிந்தது.

-subham-

‘ என் தந்தை’: மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! -1

பாரதி படம்

Article No. 2091

Written by S NAGARAJAN
Date : 22 August  2015
Time uploaded in London :– 13-17

ச.நாகராஜன்

பாரதி இயல்

பாரதி இயல் இன்று ஒரு பெரும் துறையாக ஆகி விட்டது! இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. அபாரமான அபூர்வமான மேதை அவர். தொடாத துறை இல்லை; தீர்க்க தரிசனத்துடன் பிரம்மாண்டமான ஒரு பாரதத்தை அவர் தன் மனக் கண்களால் கண்டார்.

சிறுகச் சிறுக அவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எல்லாம் சேகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒரு சிறிய அளவில் மஹாகவி பாரதியார் கவிதைகள், மஹாகவி பாரதியார் கதைகள், மஹாகவி பாரதியார் கட்டுரைகள் என்று அப்போது கிடைத்த அவரது படைப்புகளுடன் வெளி வந்த மூன்று தொகுப்புகளைக் கண்டே அறுபதுகளில் அனைவரும் அசந்து போயிருந்தார்கள்.

இன்றோ! அவரது பன்முகப் பரிமாணம் அடங்கிய அனைத்துப் படைப்புகளும் பரந்த அளவில் கிடைத்துள்ளன. அவை அவர் எந்த அளவு பன்முகப் பரிமாணம் கொண்ட மாமேதை என்பதை உணர்த்துகின்றன.

அவரைப் பற்றிய சுவையான நூல்கள் ஏராளம், கட்டுரைகள், கவிதைகளோ பல்லாயிரம். பின்னாளில் கிடைத்த மஹாகவியின் சில நூல்களும் கூட வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றில் முக்கியமானவற்றைத் தொகுத்துத் தந்தால் அவரைப் பற்றி அறிய ஒரு சரியான வழிகாட்டியாக அந்த நூல் அமையும்.

அந்த முயற்சியில் ஆசை கொண்டு ஆரம்பிக்கும் ஒரு சிறிய முயற்சி; நல்ல முயற்சி இது.

நூல்கள், முக்கிய கட்டுரைகள், கவிதைகளின் பட்டியலை ஆரம்பிப்போமா?

Portrait of Bharathi

Portrait of Bharathi

  1. என் தந்தை

பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி எழுதிய அருமையான நூல் இது. 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பதிப்பை பாரதி தமிழ்ச் சங்கம், கல்கத்தா இதை வெளியிட்டது.

“பாரதி நினைவுக்குச் சங்கம் செய்யும் பணியைப் பாராட்டும் வகையில் தான் திருமதி சகுந்தலா பாரதி அவர்கள் இந்நூலை வெளியிடும் வாய்ப்பை எங்களுக்கு நல்கினார்கள் என்றே நம்புகிறோம்”. என்று பாரதி தமிழ்ச் சங்கம் அறிமுக உரையை வழங்குகிறது.

88 பக்கங்கள் அடங்கிய நூலில் ஏராளமான அற்புதமான சம்பவங்களை எளிய நடையில் சகுந்தலா பாரதி தெரிவிக்கிறார். அவர் தரும் சில தகவல்கள்:-

க்ஷத்திரியனைப் போன்ற வீர மரணத்தை அவர் விரும்பினார்.

என் தந்தையார் தேசத்தின் மீதுள்ள அன்பிற்கு அடுத்ததாக என் மீது பிரியம் செலுத்தினார்.

எங்கள் வீட்டில் ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்படுவது வழக்கம்,

நிவேதிதா தேவியார் தாம் இமயமலைக்குச் சென்றிருந்த போது அங்குள்ள மரத்தின் இலையொன்றைக் கொண்டு வந்திருந்ததை தன் ஞாபகார்த்தமாக அளித்திருந்தார். அதை என் தாயார் தன் நகை (இல்லாத) பெட்டியில் வைத்திருந்தார்.

முதல் ஐந்து பக்கங்களில் ஏராளமான தகவல்களில் மேலே கண்டவை சில.

முழுப் புத்தகமும் பாரதியார் பற்றிய ஒரு தங்கச் சுரங்கம்.

பாரதி இயலில் பாரதியாரைப் பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ள ஒரு அருமையான நல்ல நூல் இது.

******

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்

bahavat_cropped

Research Article No. 2087

Written by London swaminathan
Date : 20 August  2015
Time uploaded in London :– 19-14

புகழ் (கீர்த்தி), அபகீர்த்தி (இகழ்ச்சி) பற்றிய தமிழ், சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்

(( இசை= யசஸ் = புகழ்; சம்ஸ்கிருதச் சொல் யசஸ் என்பதும் தமிழ்ச் சொல் இசை என்பதும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்த சொற்கள்))

(1).இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசை நடுக – நன்னெறி

பொருள்: இந்த பூமியில் உங்கள் பெயர் எப்பொழுதும் இருக்க வேண்டுமானால் புகழை நிலை நிறுத்துக.

(2).உத்திஷ்ட ! யசோ லப: (பகவத் கீதை 11-33)

எழுந்திரு! புகழ் அடை!

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலிற் தோன்றாமை நன்று – குறள் 236

(3).புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், உலகுடன் பெறினும், கொள்ளலர் (புறநானூறு 182)

(4).சம்பாவிதஸ்ய ச கீர்த்திர் மரணாத் அதிரிச்யதே– பகவத்கீதை 2-34

மரணத்தை விடக் கொடியது அவப்பெயர்

(5).புகழ்பட வாழாதார் தம் நோவார் (குறள் 237)

thirukkural1

(6).அனன்யகாமினீ பும்சாம் கீர்த்திரேகா பதிவ்ரதா- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

பிற ஆண்களிடத்தில் போகாதவளே பதிவ்ரதை என்னும் புகழுடையாள் (அதாவது பிறர் உதவியை நாடாதவனே புகழுடையவன்)

(7).கீர்த்திர்யஸ்ய ச ஜீவதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

புகழ் உடையவனே உயிர் வாழ்பவன் (மற்றவர்கள் இருந்தும் இறந்ததற்குச் சமம்)

(8).கீர்த்திர் த்யாகாத் அனுஸாரிணீ

புகழ் என்பது தியாகத்தைத் தொடர்ந்து செல்லும் (அதாவது, தியாகம் செய்பவனே புகழ் பெறுவான்)

(9).இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு, தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே  —(புறநானூறு 182)

இமயத்தின் சிகரம் போல புகழ் பெறுக!

புரம்

(10).க்ஷிதிதலே கிம் ஜன்ம கீர்த்திம் வினா – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

பூமண்டலத்தில் புகழ் இல்லாமல் வாழ்வது ஒரு வாழ்வா?

(11).இசையில் பெரியதோர் எச்சமில்லை – முதுமொழிக் காஞ்சி

பொருள்:-புகழைவிடப் பெரியதொரு செல்வம் (எச்சம்) இல்லை

(12).வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்

எச்சம் பெறாஅ விடின் (குறள் 238)

(எச்சம் = செல்வம்; இசை=யசஸ்)

(13).ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி, யஸ்ய நாம மஹத் யச: – யஜூர் வேதம்

எவனுக்கு பெரும் புகழ் இருக்கிறதோ அவனுக்கு ஒப்புவமை இல்லை

KSS

(14).ஸ்திரம் து மஹதாம் ஏகம் ஆகல்பம் அமலாம் யச: – கதா சரித் சாகரம்

கல்ப கோடி காலத்துக்குப் பெரியோரின் மாசு மருவற்ற புகழ் நீடிக்கும் (பூத உடல் மறைந்தாலும் புகழ் உடம்பு அழியாது)

(15).ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்

பொன்றாது நிற்பது ஒன்று இல் (குறள் 233)

இனி, அபகீர்த்தி பற்றிய மேற்கோள்கள்:– (இதை வள்ளுவர் மானம் என்னும் அதிகாரத்தில் 10 குறள்களாகத் தந்துள்ளார்)

 

(16).அபயசோ யத்யஸ்தி கிம் ம்ருத்யுனா

கெட்ட பெயர் ஏற்பட்ட பின் மரணம் என்ன செய்யும்? (மரணத்தை விடக் கொடிது கெட்ட பெயர்)

(17).மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் 969)

(18).அபவாத ஏவ சுலபோ வக்துர்குணோ தூரத:

பேச்சாளன் கெட்ட பெயர் எடுப்பது சுலபம்; நல்ல பெயர் எடுப்பதோ அரிது.(அரசியல்வாதிகளுக்குப் பொருத்தமான அறிவுரை)

(19).அயசோ பீரவ: கிம் ந குருதே பத ஸாதவ: — கதா சரித் சாகரம்

இகழ்ச்சிக்குப் பயந்து நல்லோர் என்னதான் செய்யமாட்டார்கள்?

(20).ஸஹதே விரஹ க்லேசம் யசஸ்வீ நாயஸ: புன: — கதா சரித் சாகரம்

எதைப் பிரிந்தாலும் புகழுடையோன் தாங்கிக் கொள்வான்; ஆனால் இகழ்ச்சியைத் தாங்க மாட்டான்

(21).வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் – குறள் 240

cover-subhashita-ratna-bhandagara

என்னுடைய பழைய கட்டுரைகள்:

யானை பற்றிய நூறு பழமொழிகள், ஜூன் 5, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – Part 1, ஜூன் 22, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – பகுதி 2, ஜூன் 22, 2012

இராமன் பற்றிய பழமொழிகள் ஏப்ரல் 10, 2014

இருபதாயிரம் தமிழ் பழமொழிகள், மே 31, 2012,

பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் (பகுதி 1,2,3) ஜூன் 26, 2012 & ஜூன் 28, 2012
பாரதி பாட்டில் பழமொழிகள், ஜூன் 25, 2012
அப்பர் தேவாரத்தில் பழமொழிகள் (இது மட்டும் எஸ்.நாகராஜன் எழுதியது) ஜூன் 26, 2012
ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே
உடம்பைக் கடம்பால் அடி

மேலும் 33 இந்துமதப் பழமொழிகள் ,ஜூலை 21, 2015

ஆரோக்கியம் தொடர்பான பழமொழிகள், 25 பிப்ரவரி 2015
20,000 Tamil Proverbs (English article)

Tamil – English Proverb Book (108 தமிழ்-ஆங்கிலப் பழமொழிகள்), posted 17 August 2015

ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும், 2 ஆகஸ்ட் 2015கல்விக்கு அழகு கசடற மொழிதல் (சொல்வன்மை பற்றிய 30 பழமொழிகள்), 12 ஆகஸ்ட் ,2015

 

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பழைய தமிழ் நாவல்கள் பற்றிய சில விநோதச் செய்திகள்!- பகுதி 3

IMG_3709 (2)

Research Article No. 2086

Written by London swaminathan
Date : 20 August  2015
Time uploaded in London :–  10-31

 

(கட்டுரையின் முதல் இரண்டு பகுதிகளைப் படித்துவிட்டு இந்த மூன்றாவது பகுதியைப் படிக்கவும்)

தமிழில் வெளியான முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம்; அதை எழுதியவர் வித்வான் சேஷையங்கார்.

இது வெளிவந்தது 1875 ஆம் ஆண்டில்.

இது பற்றி ஜெ.பார்த்தசாரதி, சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர் முன்னரே எழுதியுள்ளனர்.

இந்த நாவலின் மறுபதிப்பும் வந்துள்ளது.

ஆயினும் பிரதாப முதலியார் சரித்திரம் – தான் முதல் தமிழ் நாவல் என்று முன்னர் கருதப்பட்டுவந்தது.

இது வெளிவந்தது 1879 ஆம் ஆண்டில்.

இதை எழுதியவர் வேத நாயகம் பிள்ளை.

IMG_3710 (2)

IMG_3712 (2)

IMG_3713 (2)

IMG_3714 (2)

IMG_3715 (2)

IMG_3717 (2)

IMG_3719 (2)

IMG_3720 (2)

IMG_3721 (2)

IMG_3722 (2)

IMG_3725 (2)

நாவலில், பொருளடக்கமென்னும் புதுமையைக் காண்க!

IMG_3726 (2)

IMG_3727 (2)

IMG_3730 (2)

(பாராட்டுகள், விமர்சனங்களில் முதல் பக்கத்தை மட்டும் கொடுத்து இருக்கிறேன்)

IMG_6563 (2)

IMG_3705 (2)

IMG_3706 (3)

IMG_3707 (2)

IMG_3708 (2)

ராமாயண, மஹாபாரத – உபந்யாசங்களைக் கேட்போருக்கு சகல மங்களங்களும், உண்டாகுமமென்று, உபந்யாசகர்கள் வாழ்த்துவது போல, வேத நாயகம் பிள்ளை தனது நாவலை முடித்திருப்பதையும், தினரசுந்தரி என்னும் நாவல் ‘ஓம் தத் சத்’ – என்று முடிவதையும் நோக்குக.

முற்றும்.