சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது – பாரதியாரின் அற்புத கவிதை!

shivaji flag

Written by S NAGARAJAN

Date : 31 July 2015

Post No. 2030

Time uploaded in London : 7-51 am

 

By .நாகராஜன்

 

 

பாரதியாரின் சிவாஜிகவிதை

1910 பிப்ரவரி முதல் தேதியிட்ட விஜயா இதழில் பாரதியாரின் முஸ்லீம்கள் பற்றிய கருத்துக்களைப் பார்த்தோம்.

இதற்கு முன்பாகவே 1906ஆம் ஆண்டு இந்தியா இதழில் தொடர் கவிதையாக வெளியிடப்பட்டக் கவிதைத் தொடர் தான்சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியதுஎன்ற கவிதைத் தொடர்.

1906ஆம் ஆண்டு நவம்பர் 17, 24, டிசம்பர்1, 6 ஆகிய தேதியிட்ட இந்தியா இதழ்களில் தொடராக இது வெளி வந்தது.

இன்னும் வரும் என்ற குறிப்புடன் வெளி வந்த இதன் தொடர்ச்சி வெளிவரவில்லை.

 

 

190 வரிகள் உள்ள கவிதையில் பாரத நாட்டின் சிறப்பு, துருக்கரின் அதர்மச் செயல்கள், அவர்கள் இன்னல்கள் தருவது அவர்களை வெல்லும் புனிதப் போரில் பங்கு கொள்ளமிலேச்சரை வெற்றி கொள்ளதூயவரையும், வீரர்களையும் அழைப்பது, அநாரியத் தன்மையை அடையாதே, ஈடிலாப் புகழினோய், எழுகவோ எழுக என அர்ஜுனனை கண்ணபிரான் கீதையை உபதேசித்து விழிப்புறச் செய்து பற்றலர் தமையெலாம் பார்க்கிரையாக்கியது என வரிசையாக விவரிக்கும் அற்புத நடையைக் காண்கிறோம்.

சிவாஜியின் வீர உரை என்றும் இந்திய நாட்டினருக்குப் பொருந்தும் வகையில் கவிதை வரிகள் ஒளிர்கின்றன.

அவுரங்கஜீபின் அழிவுக்குக் காரணம் அதர்மம் என்று மகாகவி கூறியுள்ளதை நோக்கி விட்டு அந்த அதர்மங்கள் முகலாயர் காலத்தில் என்னென்ன என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் மகா கவிஞர்.

 

 

ஆலயம் அழித்தலும், அருமறை பழித்தலும்,                                    

பாலரை, விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும்                                       

மாதர் கற்பழித்தலும் மறையவர் வேள்விக்                                            

கேதமே சூழ்வதும் இயற்றி நிற்கின்றார்                                                

 சாத்திரத் தொகுதியைத் தழல்படுக்கின்றார்                                   

கோத்திர மங்கையர் குலங் கெடுக்கின்றார்                                              

எண்ணில, துணைவர்காள், எமக்கிவர் செயுந் துயர்                                    

 கண்ணியம் மறுத்தனர், ஆண்மையுங் கடிந்தனர்,                               

பொருளினைச் சிதைத்தனர், மருளினை விதைத்தனர்                                  

திண்மையை அழித்து பெண்மையிங் களித்தனர்                                               

பாரதப் பெரும்பெயர் பழிப் பெயராக்கினர்                                                 

சூரர் தம்  மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்                                                    

வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்                                                       

ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர்

 

அதர்மத்தின் முழுப் பட்டியலை இதை விட வேறு யாரால் இப்படிச் சொல்ல முடியும்?

 SHIVAJI 2

 

எழுகவோ எழுக!

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?”        

என்ற சிவாஜி மஹாராஜாவின் வார்த்தைகளில் தன் கருத்தை ஏற்றிக் கூறுகிறார் மகா கவிஞர்.

மொக்குள் தான் தோன்றி முடிவது போல                                      

மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்

என்பதைச் சுட்டிக் காட்டும் கவிஞர்எழுகவோ எழுகஎன அறைகூவல் விடுக்கிறார்.

அற்புதமான இந்தக் கவிதை பாரதியார் இந்தியா எப்படி எழ வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையைத் தெளிவாக விளக்கும் ஒரு கவிதை.

 

 

sivaji statue

தர்ம பாரதம்

அதர்மப் பட்டியலுக்கு எதிராக தர்ம நாடு பாரதம் எப்படி இருக்கும்?

ஆலயங்கள் உயிர்ப்புடன் வாழும், அருமறை தழைக்கும்,                                    

பாலரும், விருத்தரும் போற்றப்பட்டு வாழ்வர்                                      

  பசுக்கள் வாழ்விக்கப்படும்                                                                 

மாதர் கற்புடன் இருக்க மறையவர் வேள்வி எங்கும் நடக்கும்                                                                          சாத்திரத் தொகுதி தழைக்கும்                                                         

கோத்திர மங்கையர் குலம் ஓங்கும்                                                                                   

கண்ணியம் இருக்கும், ஆண்மை ஓங்கும்,                                                     

பொருள் செழித்து வளரும், மருள் ஒழியும்                                      

திண்மை பெருகும் ஆண்மை மிளிரும்                                               

பாரதப் பெரும்பெயர் உலகெங்கும் போற்றப்படும்                                                 

 சூரரின் வீரியம் கூடும் மேன்மை பெருகும்                                                                

நம் ஆரியர் உலகத் தலைமை கொள்வர்

என்றல்லவா இப்படி தர்ம பாரதம் விளங்கும்!

ஆனால் துருக்கர் விதைத்த மருள் இன்னும் இந்த நாட்டை விட்டு நீங்காமல் இருப்பது நமது தவத்தின் குறைவே ஆகும்!

 

இந்தக் கவிதையின் குறிப்பில் மகாகவி ஹிந்துக்களும் மகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல நடந்து கொள்ள வேண்டுமென்பதை பலமுறை வற்புறுத்தியுள்ளதை நினைவு கூர்கிறார்.

சிவாஜி கூறியுள்ள வீர வசனங்களை நியாயப் படுத்தும் விதமாக மகாகவி பாரதியார் இந்தக் குறிப்புரையில் கூறியுள்ளதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

 

அத்தோடு அதர்மத்தின் கோரப் பிடியில் ஹிந்து சொத்துக்கள் கொள்ளை போன விவரத்தையும் ஒரு சிறிது நோக்குவோம்.

 

இதைப் படிக்கும் நேயர்கள் 190 வரிகள் கொண்ட இந்தக் கவிதையை ஒரு முறை படித்து கவிதை கூற வரும் பாரத சக்தியைத் தம்முள் ஏற்றிக் கொண்டால் இனி  வருவதை நன்கு படிக்க ஏதுவாகும்.

 

                                      –தொடரும்

 

கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்

குரங்கு, ரமணர்

ஆகஸ்ட்  2015 (மன்மத வருடம் ஆடி/ஆவணி மாதம்) காலண்டர்

Compiled by London swaminathan

Date : 30th July 2015

Post No. 2028

Time uploaded in London : 7-55 AM

Swami_48@yahoo.com

ஏகாதசி :– ஆகஸ்ட் 10 and 26;  முஹூர்த்த தினங்கள்:– 20, 21, 27

பௌர்ணமி:–29;  அமாவாசை:– 14 ஆடி அமாவாசை

Important days:- 3 ஆடிப்பெருக்கு; 14 ஆடி அமாவாசை

15 இந்திய சுதந்திர தினம்; 16 ஆடிப் பூரம்; 28 ஓணம், வரலெட்சுமி விரதம், ரிக் உபாகர்மா; 29  யஜூர் உபாகர்மா, ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன்,; 30 காயத்ரி ஜபம்

cow and calf face book

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை

ஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)

நல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.

ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை

கோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

தயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா?

ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை

தயா மாம்சாசின: குத:? (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

புலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா?

ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை

தயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)

தூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.

ஆகஸ்ட் 5 புதன்கிழமை

ந ச தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)

கருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.

கஜேந்திர,சேனாபூர்,ஒரிஸ்ஸா

ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை

சர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)

எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்

ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை

தாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)

அழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை

ப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)

கனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.

ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை

அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241

செல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)

ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை— குறள் 247

உயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.

amma ponnu

ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை

வலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250

நம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.

ஆகஸ்ட் 12 புதன்கிழமை

அல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245

கருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.

ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை

பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய் – பாரதி

ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை

அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)

பெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.

(ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)

ஆகஸ்ட் 15 சனிக்கிழமை

க்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)

பொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.

cow and calf vellai pasu

ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)

வலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.

(ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை

க்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)

தவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்

(ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153

ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை

க்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)

பொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது?

(ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)

ஆகஸ்ட் 19 புதன்கிழமை

க்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)

பொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.

(ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151)

ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை

க்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)

பொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.

(ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)

ama ponnu

ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை

ஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)

அறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.

ஆகஸ்ட் 22 சனிக்கிழமை

க்ஷமயா கிம் ந சித்யதி (சாணக்ய சதகம் 13-22)

பொறுமையினால் அடைய முடியாதது என்ன?

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)

எல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்

ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை

க்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)

வலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை

ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை

ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்

பொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)

எத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை

myna, fb

ஆகஸ்ட் 26 புதன்கிழமை

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்

பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)

ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை

நிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி (பகவத் கீதை 11-55)

எவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்

ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை

ஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)

எல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)

ஆகஸ்ட் 29 சனிக்கிழமை

லபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதா:(ப.கீதை 5-25)

எவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.

ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை

உயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்

IMG_4561

ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை

அன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் —  பாரதியார்

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே  – பாரதியார்

–சுபம்-

Pictures are used from different sources including face book friends, souvenirs, books etc; thanks.This is a non-commercial  blog.

முஸ்லீம்கள் யார்? ஹிந்து –முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட வேண்டும்: பாரதியார்!

VANDEMATARAM

Research Article No.2026

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 29  July 2014

Time uploaded in London : 6-13 am

 

 

.நாகராஜன்

 

பாரதியாரின் ஆய்வு

பாரதத்தில் உள்ள ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் பற்றி ஆழ்ந்த ஆய்வு செய்தவர் மஹாகவி பாரதியார் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாக இருக்கும்.

இந்த ஆய்வின் முடிவில் அவர் பல நல்ல கருத்துக்களை தேசம் உய்வதற்காகக் கூறியுள்ளார்.

எந்த உண்மையையும் சொல்ல அவர் தயங்கியதே இல்லை என்பதே மஹாகவியின் வாக்கை சத்திய வாக்காகக் கொள்ள வைக்கிறது.

 

 

அவரது பல கட்டுரைகள் மற்றும் பாடல்கள் வெவ்வேறு கால கட்டங்களில் கிடைக்கப் பெற்றதால் அவை மொத்த தொகுப்பு நூல்களாக அனைவரும் வாங்கிப் படிக்கும் படி இது வரை வரவில்லை.

ஆகவே முயன்று தான் அவரதுஆழ்ந்திருக்கும் கவியுளத்தைக் காணவேண்டியதாயிருக்கிறது.  

முஸ்லீம்களின் சபைஎன்ற கட்டுரை 1910,பிப்ரவரி முதல் தேதியிட்ட விஜயாஇதழில் வெளி வந்துள்ளது. அதில் ஹிந்துமுஸ்லீம் ஐக்கியத்தைப் பெரிதும் பாரதியார் வலியுறுத்துகிறார்.

 

 CRESCENT WIKI

பாரதத்தில் உள்ள முஸ்லீம்கள் யார்?

 

அந்தக் கட்டுரையின் கடைசி பாரா இது:

இந்தியாவிலுள்ள மஹம்மதீயர்கள் யார்? இவர்களெல்லாம் ஹிந்துக்களாய் இருந்து, பிறகு மஹம்மதீய துரைத்தன நாளில் இஸ்லாம் மதத்தைத் தழுவினவர்களே. அப்படியிருந்தும், மதம் வேறுபட்ட போதிலும், நடை, உடை, பேச்சு, பழக்க வழக்கங்கள், இவைகள் இன்னும் மாறவேயில்லை. மஹம்மதீயச் சக்கரவர்த்திகள் அரசாண்ட டில்லி மாநகரில் இம்மூன்று மஹம்மதீயத் தலைவர்கள் ஹிந்து முஸ்லீம்களின் ஐக்கியத்தைப் பற்றி வற்புறுத்திப் பேசியது யாவரும் கொண்டாடத்தக்கினதே. அதன்படி மஹம்மதீயர்கள் நடந்து கொள்வார்களாக!”

 

மிகத் தெளிவாக இப்படி பாரத தேசத்தின் இன்றைய முஸ்லீம்கள் ஒரு காலத்தில் ஹிந்துக்களாய் இருந்தவர்களே என ஆணித்தரமாக மகாகவி கூறுகிறார்.

கட்டுரையில் குறிப்பிடப்படும் மூன்று மஹம்மதீயத் தலைவர்கள் – 1) ஆகா கான் 2) ரைட் ஹானரபில் அமீர் அலி 3) ஆற்காட்டு நவாபு வம்சத்துச் சிற்றரசர்.

இவர்கள் ஹிந்து முஸ்லீம் இணைந்து பாடுபட வேண்டுமென்ற கொள்கையை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை

 

பாரதியாரின் சொற்களில், “மஹம்மதீயர்களாகிய தங்கள் மதத்தினவர்களெல்லாம் ஒரு ஜாதி; மற்ற இந்தியர்களெல்லாம் வேறு ஜாதிஎன்று சொல்லி வந்தனர்.

 

 STAMP VANDEMATARAM

ஹிந்துமுஸ்லீம் ஒற்றுமை தேவை

 

ஆனால் காங்கிரஸில் உள்ள, “பல முஹம்மதீய மேதாவிகளும் ஶ்ரீ நவுரோஜி முதலானவர்களும் ஹிந்துக்களும் மஹம்மதீயர்களும் ஒத்துழைப்பது தான் இந்தியாவிற்கு நன்மை உண்டாக்கும்என்றனர்.

 

பாரதியார் மேலும் கூறுகிறார்:-“இவ்விருவரும் இந்தியாவின் கண்கள். ஒரு கண்ணை நொள்ளையாக்க முயன்றால் மற்றதும் நொள்ளையாகி விடும். ஐக்கியமே பலம். பிரிவே பலவீனம் என்று அடிக்கடி வற்புறுத்திச் சொல்லி வந்தனர்.”

 

பல காரணங்களால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாத தலைவர்கள் இப்போதாவது ஏற்றுக் கொண்டனரே என்று மகிழ்கிறார் பாரதியார்.

அந்த ஹிந்து மஹம்மதீய ஐக்கியத்தின் ஆவசியகத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததற்காக நாம் மனமார வந்தனம் செலுத்துகிறோம்”  என்கிறார் அவர்.

 

ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தும் மஹாகவி அவர்கள் ஆதியில் ஹிந்துக்களே என்பதையும் கூறி விடுகிறார். ஒற்றுமைக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றியையும் தெரிவிக்கிறார்.

 

 சிவாஜி, விவேகா, நேதாஜி

விடுதலைக்கு வீறு பெற சிவாஜியின் பேச்சு

இந்த தேசத்தின் எழுச்சிக்கு, நாம் துருக்கருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த சிறுமையை சிவாஜி வாயிலாக எடுத்துக் கூறி, எழுச்சியுற வேண்டுமென அறைகூவல் விடுக்கிறார்.

இதை வலியுறுத்தும் விதமாக எழுந்த அற்புத கவிதையேசத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியதுஎன்ற கவிதையாகும்.

அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

                                                    –தொடரும்

இந்துக்கள் கருத்து: டாக்டர்கள், வழக்கறிஞர்கள் பற்றி!

doctor

Research Article No.1995

Written  by London swaminathan

Date 15th July 2015

Time uploaded in London: 18-49

நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள் – அர்த்த சாஸ்திரம் 3-20-24

எந்த ஒரு அரசன் சட்டப்படி, நியாயமாகக் குடிமக்களைப் பாதுகாக்கிறானோ அவன் சொர்க்கத்துக்குச் செல்லுவான்; அநியாய தண்டனைகள் விதிக்கும் அரசன்/நீதிபதி சொர்க்கத்துக்குச் செல்லமாட்டான் – அர்த்த சாஸ்திரம் 3-1-41

குற்றத்துக்கு ஏற்ற தண்டனை தருவதும், தவறு செய்தவர்களைத் தண்டிப்பதும்,  தன் மகனேயானாலும் தண்டிப்பதுமே இவ்வுலகத்தையும் மேலுலகத்தையும் காக்கின்றன – அர்த்த சாஸ்திரம் 3-1- 42

டயோஜெனிஸ் என்ற கிரேக்க தத்துவமேதை 2300 ஆண்டுகளுக்கு முன்னர், டாக்டர்களைப் பற்றியும், வழக்கறிஞர்கள் பற்றியும் என்ன சொன்னார் என்று நேற்று பார்த்தோம். அதாவது,

டாக்டர்கள் = உயிர் பறிக்கும் யம தர்மர்கள்

வக்கீல்கள் = பணம் பறிக்கும் கொள்ளைக்காரர்கள்

என்ற கருத்து அந்தக் காலத்திலேயே அங்கு இருந்தது.

நமது நாட்டில் டாக்டர்கள் பற்றியும், நீதித் துறை அறிஞர்கள் பற்றியும் மிக உயர்ந்த கருத்தும் மரியாதையும் இருந்தது. நீதித்துறையில் வழக்கறிஞர்கள் என்ற பிரிவு இருந்ததற்கான குறிப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை. நீதித்துறை பற்றி மனுதர்ம சாத்திரத்தில் எட்டாவது அத்தியாயத்தில் நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. கௌடில்யர் ( சாணக்கியர்)  எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் மூன்று, நான்காவது அத்தியாயங்களில் டாக்டர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மிகவும் அதிசய விஷயம் அந்தக் காலத்திலேயே நுகர்வோர் பாதுகாப்பு இருந்திருக்கிறது. இதெல்லாம் இப்பொழுதுதான் மேலை நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது. நிறைய பேர் டாக்டர்கள் மீதும், ஆஸ்பத்திரிகள் மீதும் மில்லியன் கணக்கில் பணம் கேட்டு வழக்குப் போட்டபின்னர் இதையெல்லாம் மேலை நாட்டில் கொண்டுவந்தனர்.

இந்துக்களின் யஜூர் வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில், சிவபெருமானையே டாக்டர் (பிஷக்) என்று போற்றுகின்றனர். இது போல மற்ற கடவுளருக்கும் அடைமொழி இருப்பதை முன்னரே கொடுத்துள்ளேன்.

medicalstamps1

அர்த்தசாத்திரம் சொல்லுவதாவது:

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாதான் உலகிலேயே நாகரீகம் வாய்ந்த நாடு- பணக்கார நாடு என்று எனது 1800 கட்டுரைகளிலும் ஏராளமான சான்றுகலைக் கொடுத்துவிட்டேன். புறச் ச்சுழல், நுகர்வோர் பாது காப்பு என்பதெல்லாம் அப்போதே நாம் விவாத்தித்த தலைப்புகள்:

“நோயாளியின் உயிருக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சிகிச்சையாக இருந்தால் முதலில் அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின்னரே சிகிச்சையைத் துவக்க வேண்டும்.சிகிச்சை காரணமாக நோயாளி இறந்தாலோ, உடலூனம் அடைந்தாலோ டாக்டருக்கு தண்டணை கொடுக்க வேண்டும்” – 4-1-56

“நோயாளிக்கும் இது பற்றி சொல்லவேண்டும் அல்லது மேற்கண்டவாறு டாக்டருக்கு தண்டனை உண்டு. ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தினால் என்ன தண்டனையோ அதே தண்டனை தரவேண்டும்”

காயமடைந்த அல்லது விஷ உணவினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்குச் சிகிச்சை தருவதற்கு, ஒரு வீட்டிற்கு டாக்டர் சென்றால், அது பற்றி கண்காணிப்பு அதைகாரிகளான கோப அல்லது ஸ்தானிக- ருக்கு அறிவிக்க வேண்டும் – 2-36-10

இது போன்ற கடுமையான விதிகள் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறையில் இருந்ததால், டாக்டகள் எல்லோரும் ஒழுங்குக் கட்ட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர்.

21  Pirmoji širdies operacija

சில பழமொழிகள்:

வைத்யே க்ருஹச்தே ம்ரியதே கதன்னு

டாக்டர் வீட்டில் இருக்கும்போது மரணம் எங்கே வரும்?

ஆனால் அனுபவமில்லாத , தாமதமாக வரும் டாக்டர்கலைக் கண்டிக்கும் பழமொழிகளும் இருந்தன:

அனுபவ ரஹிதோ வைத்யே  லோகே நிஹந்தி ப்ராணின: ப்ராணான்

அனுபவமில்லாத மருத்துவன் உயிரை வாங்கிவிடுவான்

சீர்ஸே ஸர்ப: தேசாந்தரே வைத்ய:

தலைக்கு மேலே பாம்பு தொங்குகிறது, மருத்துவரோ எங்கோ இருக்கிறார்.

ஹத்வா ந்ருனாம் சஹஸ்ரம் பஸ்ச்சாத் வைத்யோ பவேத் சித்த:

ஆயிரம் பேரைக் கொன்றவனே (அரை) வைத்தியன்.

அதாவது மருத்துவர்கள், தவறுகளின் மூலமும், அனுபத்தின் மூலமும் பாடம் கற்கிறார்கள்.

judiciary 2

நீதித்துறை பொன்மொழிகள்

சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் தவறிழைப்போருக்கான (3-11) தண்டனைகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

நீதி மன்றத்துக்கு விசாரணைக்கு வரும் அரசன் புரோகிதர்களுடனும் ஆலோசகர்களுடனும் தகுத உடையில் வரவேண்டும் (மனு ஸ்மிருதி 8-1)

18 வகையான குற்றங்கள் இருக்கின்றன (இந்தப் பட்டியல் எட்டாம் அத்தியாயத்தில் உள்ளது). அரசன் நீதி வழங்கவரவில்லையானால், புரோகிதர்களையும், மூன்று நீதிபதிகளையும் அனுப்ப வேண்டும்(மனு ஸ்மிருதி.

பொய்ச்சாட்சியம் கொடுப்பவன் குற்றவாளி

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். கண், வாய் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்,தனை அறியாது செய்யும் சேட்டைகள், அபிநயம், பேச்சு, நடை ஆகியன குற்றவாளியைக் காட்டிவிடும். (மனு ஸ்மிருதி 8-25/26)

அரசனோ அல்லது அவனது சுற்றத்திலுள்ள ஒருவரோ வழக்கு தொடர முடியாது. அதுபோல பிறர் கொண்டுவந்த வழக்கையும் விசாரிக்காமல் ஒதுக்கமுடியாது.

வேட்டைக்குச் செல்லுபவன் எப்படி, காலடிச் சுவடு, ரத்தக் கறை ஆகியவற்றைக் கொண்டு மிருகத்தைக் கண்டுபிடிப்பானோ அதுபோல அரசனும் ஊகத்தின் மூலம் உண்மையைத் தொடரவேண்டும்.

அரசனே விசாரிக்கையில், சாட்சியங்கள், வழக்கின் தன்மை, இடம், பொருள், ஏவல் ஆகியவற்றை அறியவேண்டும். (மனு ஸ்மிருதி 8-44/46)

judiciary

அந்தக் காலத்தில் நீதித்துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், தண்டனை வழங்குவோர், போலீஸ் ஆகியோர் இருந்தனர். ஆனால் வழக்கறிஞர்கள் என்பவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. மருத்துவத் துறையில் டாக்டர், நர்ஸ், கம்பவுண்டர்கள் இருந்தது திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரம் மூலம் தெரியவருகிறது.

swami_48@yahoo.com

டாக்டர்களும் வழக்கறிஞர்களும் — சில சுவையான சம்பவங்கள்!

intl_court_stamp

Article No.1993

Compiled by London swaminathan

Date 14th July 2015

Time uploaded in London:  காலை 9–36

டாக்டர்களையும் நீதித்துறை நிபுணர்களையும் மனுவும் வள்ளுவனும் கண்ட முறையை நாளைக்குச் சொல்லுகிறேன். இன்று மேலை நாட்டினர் அவர்களை எப்படி நோக்கினார்கள் என்பதைக் காண்போம்.

அன்புடையீர்,

ஆங்கிலக் கட்டுரையில் 15 சம்பவங்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். அத்தனையும் கொடுத்தால் இடம் போதா, நேரம் போதா! ஆக ஒரு சில மட்டும் இங்கே:–

டயோஜெனிஸ் (Diogenes)  எனவர் 2300 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ மேதை. ஒரு டாக்டரும் வழக்கறிஞரும் அவரிடம் சென்று எங்களிடையே ஒரு வாக்குவாதம், சர்ச்சை! யாருக்கு முதல் மரியாதை? வரிசையில் யார் முதலில் செல்ல வேண்டும்?

தத்துவ வித்தகர் சொன்னார்:

திருடன் (Thief) முதலில் போகட்டும்; அவன் பின்னால் மரணதண்டனையை நிறை வேற்றுபவன் (executioner) செல்லட்டும்!

உடனே வக்கீல் சந்தோஷத்துடன் முதலில் சென்றார். அவரைப் பின் தொடர்ந்தார் டாக்டர்!

Xxxx

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் ஒரு ஏழை வழக்கறிஞர் இறந்து போனார்.

எல்லா சட்டத்தரணிகளும் சேர்ந்து ஆளுக்கு ஒரு ஷில்லிங் வசூல் செய்து சவ அடக்கம் செய்ய முன் வந்தனர்.

வழக்கறிஞர் குழு ஒன்று, அந்த ஊரின் தலைமை நீதிபதியிடம் போய், “ஐயன்மீர்! நீவீர் ஒரு ஷில்லிங் கொடுத்தால் நன்றிக் கடற்பாட்டுடையராய் இருப்போம்” என்று நவின்றனர்

அதற்கு அவர் மறுமொழி கொடுத்தார்:

ஒரு ஷில்லிங்! ஒரே ஷில்லிங் தானா? ஒரு வழக்கறிஞரைப் புதைக்க ஒரே ஷில்லிங் என்றால் இந்தாருங்கள் ஒரு ‘கினி’ தருகிறேன். இன்னும் 20 வழக்கறிஞர்களை அடக்கம் செய்யுங்கள்.”

ஒரு கினி = 21 ஷில்லிங்

ஷில்லிங், கினி என்பதெல்லாம் பழைய பிரிட்டிஷ் நாணயங்கள். நம்மூர் அணா, தம்பிடி போன்றவை

Xxxx

ஒரு வழக்கறிஞர் தன்னுடைய படத்தை வரையச் சொல்லி பணம் கொடுத்தார். அவர் தனது ஒரு கையை ‘பேண்ட் பாக்கெட்’டுக்குள் வைத்துக் கொண்டு நிற்பது போல ‘போஸ்’ கொடுத்தார். படம் தத்ரூபமாக வந்தது. அதைப் பார்த்த aவரது நண்பர்கள் புகழ்ந்தனர்:

ஐயா, படத்தைப் பார்த்தால் உங்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. அதே ‘ஸ்டைல்”! அதே தோற்றம்! என்று புகழ்ந்து தள்ளினர்.

பக்கத்தில் ஒரு வயதான விவசாயி நின்று கொண்டிருந்தார்.அவர் சொன்னார்;

“எல்லாம் தத்ரூபமாக, அச்சடித்த மாதிரி அப்படியே இருக்கிறது. ஆனால் அந்த வழக்கறிஞரின் கை, மற்றொருவர் பாக்கெட்டில் இருப்பது போல வரைந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்குமே!”

Xxxxxx

அமெரிக்காவில், ஒரு நகரத்தில், ஊரிலேயே மிகவும் பிரபலமான ஒரு செல்வந்தர் ஒரு படுகொலை செய்துவிட்டார். சாட்சியங்கள் எல்லாம் அவருக்கு எதிராகவே இருந்தன. கட்டாயம் மின்சார நாற்காலியிலிருந்து (மரண தண்டணை) தப்பிக்கமுடியாது என்று தெரிந்துவிட்டது. அவரே தான் கொலைகாரன் என்று ஒப்புக் கொண்டார். ஆனால் அவருக்கோ ஏராளமான நண்பர்கள். அவரை எப்படியும் காப்பாற்றுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டனர்.

மேலை நாடுகளில் இதுபோன்ற வழக்குகளில் ஜூரர் எனப்படும் நடுவர் பன்னிருவர் இருப்பர். அவர்களே ஒருவர், குற்றம் இழைத்தாரா அல்லது இல்லையா என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்வர். பின்னர் நீதிபதி தண்டனை என்ன என்பதை அறிவிப்பார்.

விவாதம் முடிந்து ஜூரிகளின் அறிவிப்பு வெளியாகும் நாள் வந்தது. அவர்கள் ஒருமித்த முடிவு எடுத்து குழுத்தலைவர் மூலம் அறிவித்தனர்:

“அவர் குற்றவாளி அல்ல!”

நீதிபதிக்கு வியப்பு ஒரு புறம்; ஆத்திரம் மறுபுறம்!

அட! பாவிப்பயல்களா! குற்றவாளியே தான் கொலைகாரன் என்று ஒப்புக் கொண்டுவிட்டானே! எப்படியப்பா, இப்படிப்பட்ட முடிவை எடுத்தீர்கள்? என்று கேட்டார்.

“கனம் நீதிபதி அவர்களே! இந்தக் குற்றவாளி இருக்கிறானே, அவன் மஹா பொய்யன். அவன் உண்மை பேசியதே இல்லை. அவன் கொலைகாரன் என்று சொல்வதை நாங்கள் நம்பமுடியாது!”

நீதிபதியும் வாய் பேசாது அந்த செல்வந்தரை விடுதலை செய்து, வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

Xxxx

Dumas1970FR

இதோ டாக்டர்கள் பற்றி………………

ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்வதற்குத் தயாராக ஒரு நோயாளி காத்திருந்தார். அவர் படுக்கை வண்டி அருகே மற்றொரு அழகிய இளம் பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை நோக்கி நோயாளி:

“எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. உடம்பெல்லாம் நடுங்குகிறது. ஏனெனில் என் வாழ்க்கையில் இதுதான் முதல் ஆபரேஷன்@.

அந்த இளம் பெண் சொன்னாள்:

“எனக்கும் மிகவும் பயமாக இருக்கிறது. உடம்பெல்லாம் நடுங்குகிறது. என் கணவர்தான் இன்று ஆபரேஷன் செய்யும் டாக்டர். அவருக்கும் இதுதான் முதல் ஆபரேஷன் கேஸ்!”

Xxxx

அலெக்ஸாண்டர் டுமா (Alexander Dumas) என்பவர் பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர். அவருடைய ஊரான (Marseilles) மார்செய்க்கு பிரபல டாக்டர் (Dr.Gistal) ஒருவர் வந்து குடியேறினார். ஒருநாள் நாவலாசிரியரை விருந்துக்கு அழைத்தார். விருந்தும் முடிந்தது. அந்த டாக்டர் பெருமையாக தனது புகைப்படத் தொகுப்பை எடுத்து மேஜையில் வைத்தார். டுமாவும் அதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

டாக்டர் சொன்னார்

அன்பரே! உங்கள் எழுத்துகளும் படைப்புகளும் எனக்கு மிகவும் பிடிக்கும். நகைச் சுவையாக எழுதுவதில் கைதேர்ந்தவர் நீவீர்! எங்கே என் புகைப்படத்தில் ஏதாவது எழுதுங்கள் பார்ப்போம்?

நாவலாசிரியர் பேனாவைக் கையில் எடுத்தார்; எழுதினார்:–

“டாக்டர் கிஸ்டார் ஊருக்கு வந்தார்

நோய்களை எல்லாம் தீர்க்க ஆசை!

மருத்துவ மனைக்கு தேவையே இல்லை!

தரைமட்டம் ஆக்கிவிட்டோம்”

இபடி ஒரு கவிதையை அவர் எழுதியவுடன் டாக்டருக்கு மிகவும் மகிழ்ச்சி!

“எழுத்தாளர்களுக்கு மற்றவர்களைப் புகழ்வது ஒன்றே தொழில்” என்று டாக்டர் பாராட்டி முடிவதற்குள் டுமா, இன்னும் ஒருவரியைச் சேர்த்தார்:

ஆனால் இடுகாடு (cemetery) எல்லாம் பெரிதாப்போச்சு!

ஆக, டயோஜெனிஸ் காலம் முதல் டாக்டர்கள் என்றால் யம தர்மன்கள், வக்கீல்கள் என்றால் கொள்ளைக்காரன்கள் என்ற கருத்து மேலை நாடுகளில் இருந்து வருகிறது. நாளைக்கு நமது பண்பாட்டில் எப்படி? என்பதைப் பகிர்வோம்.

சாக்ரடீசும் அவ்வையாரும்!

GREECE - CIRCA 1998: A postage stamp printed in the Greece shows bust of ancient Greek Tragedian Sophocles, circa 1998

GREECE – CIRCA 1998: A postage stamp printed in the Greece shows bust of ancient Greek Tragedian Sophocles, circa 1998

Article No.1985

Compiled by London swaminathan

Date 10th July 2015

Time uploaded in London: காலை 8-21

((தமிழன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்: மற்றவர் கட்டுரைகளை எடுக்கையில் அவர்தம் பெயரையும், அவருடைய பிளாக்–கின் பெயரையும் அப்படியே வெளியிடுங்கள். என் கட்டுரைகளில், படங்கள் என்னுடையதல்ல. அதைப் பயன்படுத்துவோர் சட்டபூர்வ வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.))

சாக்ரடீஸ் என்பவர் புகழ்பெற்ற கிரேக்க ஞானி; தத்துவ வித்தகர். அவருக்கு வாய்த்த மனைவியோ சரியான அடங்காபிடாரி; ராக்ஷஸி. அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; சிலர் மூவர் என்பர். மொழியியல் அடிப்படையில் கட்டாயம் முவர் அல்லது அதற்கு மேலும் இருந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு. ஆனால் எந்த அவ்வையார் படியதாக இருந்தாலும் சரி அவை அத்தனையும் ஆனி முத்து; தமிழர்களின் சொத்து. ஆத்திச் சூடி பாடிய கடைசி அவ்வையாரா, அதியமானைக் கண்ட சங்க கால அவ்வையாரா என்று ஆராய வேண்டிய அவசியமில்லை.

அதிசயம் என்னவென்றால் அவ்வையாரும் சாக்ரடீசும் ஒரே கருத்தைச் சொல்லியுள்ளனர்.

ஒருமுறை சாக்ரடீஸ் தத்துவச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவரது மனைவியோ ஞான சூன்யம். மேல் மாடியில் இருந்து எட்டிப் பார்த்து, பேச்சை நிறுத்தச் சொல்லி இடி முழக்கம் செய்தார். சாக்ரடீஸோ நிறுத்தவில்லை. ஒரு வாளி தண்ணீரை மேலேயிருந்து கொட்டினார். யார் தலையில்? சாக்ரடீஸ் தலையில்! அவர் அசரவில்லை; அவர் சொன்னார்:

“அன்பர்களே! இவ்வளவு நேரம் இடிமுழங்கியது; இப்பொழுது மழை பெய்கிறது!”

சாக்ரடீஸின் மனைவியை பற்றி நன்கு அறிந்தவர் ஒருவர் சாக்ரடீஸிடம் சென்று திருமணம் செய்துகொள்வது பற்றி தங்கள் கருத்து என்னவோ? என்று கேட்டார்.

அவர் சொன்னார்:

எந்த முடிவு எடுத்தாலும் இறுதியில் வருத்தப்படுவாய்!

இன்னொரு முறை அவர் சொன்னார்:

“நல்ல மனைவி கிடைத்தால் நன்கு மகிழ்ச்சியாக வாழலாம்; கெட்ட மனைவி கிடைத்தாலோ தத்துவ வித்தகர் ஆகலாம்.”

Adhiyaman_wiki

Avvaiyar with Athiyaman; picture from wikipedia

அவ்வையாரும் இதையே சொல்கிறார்:

பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடி வாழலாம்; — சற்றேனும் ஏறுமாறாக

இருப்பாளே யாமாகில்

கூறாமல் சந்யாசம் கொள்

 

பொருள்: கணவனுக்கேற்ற பதிவிரதையாக இருந்தால், எவ்வளவு கஷ்டம் வந்தலும் அவளை விட்டு விடாதே. அவள் பிடாரியாக இருந்தாலோ, அவளிடம் போகிறேன் என்று சொல்லக்கூட வேண்டாம். பேசாமல் போய் சந்யாசம் வாங்கிக் கொள்.

பழைய முறத்தால் அடி!

சாக்ரடீஸ் மனைவி போலவே ஒரு கொடுமைக்காரியை மனைவியாகப் பெற்ற ஒரு சாதுவின் வீட்டுக்கு அவ்வையார் போனார். பாவம், அவர்தான் அவ்வையாரை சாப்பிட அழைத்தார். அவ்வையை வாசல் திண்ணையில் அமரவைத்துவிட்டு உள்ளே சென்று மனைவியின் முகத்தை நன்கு துடைத்து, பொட்டு வைத்து அலங்கரித்து, தலையில் உள்ள ஈரும் பேனும் எடுத்துவிட்டு, தலைவாரிவிட்டு, மெதுவாக அவ்வையாருக்கு அமுது இடும்படி  கொஞ்சும் மொழியில் கெஞ்சினார். அவளோ எடுத்தால் அருகிலிருந்த பழைய முறத்தை! புடைத்தாள் நைய அவனை. பேயாட்டம் ஆடினாள்; வசை மொழிகளை வாரி இரைத்தாள். அவன் வெளியே ஓடிவந்தான்; அப்பொழுதும் அந்த நீலாம்பரி முறத்தைக் கையில் ஓங்கியவாறு ஓடி வந்தாள்: அவ்வையாருக்கு ஒரு புறம் சிரிப்பு; மறுபுறம் அனுதாபம். அவனுக்கோ ஒரே பதைபதைப்பு.

அவ்வையார் பாடினார்:

இருந்து முகம் திருத்தி, ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்தது என்று விளம்ப – வருந்திமிக

ஆடினாள், பாடினாள்; ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத்தான்.

அவ்வையாருக்கு பிரம்மா மீதே கோபம் வந்து விட்டது. இப்படி நல்ல சாதுவுக்கு இவ்வளவு மோசமான மனைவியா என்று. இது பெண்ணா? பேயா? வறண்ட மரம் போன்ற பெண்ணை இந்த மகனை முடிச்சுப்போடச் செய்தானே என்று நினைத்து பிரம்மா மட்டும் என் முன்னே வரட்டும் நான்கு தலைகளையும் திருகிவிடுகிறேன் என்றார்.

உடனே பாடினார்:

அற்றதலை போக அறாத தலை நான்கினையும்

பற்றித் திருகிப் பறியேனோ? – வற்றும்

மரம் அனையாட்கு இந்த மகனை வகுத்த

பிரமனையான் காணப்பெறின்.

அற்றதலை= ஏற்கனவே பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை சிவன் கிள்ளி எறிந்த கதை புராணத்தில் உள்ளது.

-சுபம்-

swami_48@yahoo.com

கெட்ட மனைவியும் விஷப் பாம்பும்!

snake

Article No.1983

Compiled by London swaminathan

Date 9th July 2015

Time uploaded in London: 8-44 am

 

இதுவரை ஆயிரத்துக்கும் மேலான சம்ஸ்கிருத பழமொழிகள், பொன் மொழிகளையும், ஆயிரத்துக்கும் மேலான தமிழ் பழமொழிகள், பொன் மொழிகளையும் இந்த பிளாக்-கில் கொடுத்திருக்கிறேன். கூடிய மட்டிலும் அதைத் தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாக வகைப் படுத்தி இருக்கிறேன். மேலும், அது குறிப்பாக எந்த இடத்தில் இருக்கிறது என்றும் புத்தகம், அத்தியாயம், வரிசை எண் ஆகியவற் றையும் கொடுத்திருக்கிறேன். இதோ மேலும் 20 அழகான பழமொழிகள்:–

1.தண்டேன ச ப்ரஜா ரக்ஷ மா ச தண்டமகாரணே – ராமாயணம்

சட்டத்தால் குடிகளைக் காக்க வேண்டும்; காரணமில்லாமல் தண்டிக்காதே.

2.துஷ்டா பார்யா சடம் மித்ரம் ப்ருத்யசசோத்தரதாயக:சமர்பே ச க்ருஹே வாஸோ ம்ருத்யுரேவ ந சம்சய: — ஹிதோபதேசம், சாணக்ய நீதி தர்பணம்

பாம்புள்ள வீட்டில் இருப்பவனுக்கு மரணம் ஏற்படும்; அதே போல கெட்ட மனைவி, முட்டாள் நண்பன், கீழ்ப்படியாத வேலைக் காரன்  ஆகியோருடன் இருப்பவனுக்கும் மரணமே மிஞ்சும். சந்தேகமே யில்லை.

3.ந கச்சேத் ப்ராம்மணத்ரயம்

மூன்று பிராமணர்கள் சேர்ந்து போகக்கூடாது

(சகுன சாஸ்திரப்படி ஒற்றைப் பிராமணன் – அபசகுனம்)

4.ந நக்னோ ஜலம் ப்ரவிசேத்

நிர்வாணமாக நீரில் இறங்கக்கூடாது

5.ந நிஷ்ப்ரயோஜனம்  அதிகாரவந்த: ப்ரபுபிராஹூயந்தே- முத்ரா ராக்ஷசம்

அதிகார வர்கம், காரணமில்லாமல், பிரபுக்களை அணுகுவதில்லை.

6.ந யுக்தம் ப்ராக்ருதமபி ரிபுமவஞாதும்  – முத்ரா ராக்ஷசம்

சாதாரண எதிரிகளையும் புறக்கணிக்காதே

(எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?)

2natarajan

7.நவாங்கானானாம் நவ ஏவ பந்தா: – சுபாஷிதரத்ன பாண்டாகாரம்

இளம் யுவதிகளின் நடை, உடை பாவனை எல்லாமே புதுமைதான்

8.ந வ்யாக்ரம் ம்ருகசிசவ: ப்ரதர்ஷயந்தி – ப்ரதிமா நாடகம்

மான் குட்டிகள், புலியை ஒன்றும் செய்ய முடியாது

 

9.நாங்கிக்ருதேஷு குணதோஷ விசாரணா ஸ்யாத்

ஏற்றுக் கொண்ட இடத்தில் குணமும் குற்றமும் காணக் கூடாது

10.நிகடஸ்தம் கரீயாம்சமபி லோகோ ந மன்யதே – ஹிதோபதேசம்

பெரியவர்கள் பக்கத்தில் இருந்தால் மதிக்கப்படுவதில்லை

(உள்ளூர் சரக்கு விலை போகாது)

11.நிஜமதனநிவிஷ்ட: ஸ்வா ந சிம்ஹாயதே கிம்

தன்னுடைய வீட்டில் நுழைந்த நாய் சிங்கம் போல இருக்காதா?

12.நிரஸ்தபாதபே தேசே ஏரண்டோபி தூமாயதே – ஹிதோபதேசம்

மரங்கள் இல்லாத இடத்தில் புதர்கள் கூட மரமாகக் கருதப்படும்

(ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை)

aaddu

13.கதானுகதிகோ லோக:– ஹிதோபதேசம்

ஒருவன் சென்ற பாதையை பின்பற்றிச் செல்வதே உலகம்

(மக்கள் ஆட்டு மந்தை)

14.ஜலபிந்து நிபாதேன க்ரமச: பூர்யதே கட: — ஹிதோபதேசம், சாணக்ய நீதி தர்பணம்

ஒவ்வொரு சொட்டுச் சொட்டினாலும் பானையே நிரம்பிவிடும்.

(சிறு துளி பெரு வெள்ளம்)

15.தஸ்தபதி தர்மாம்சௌ கதமாவிர்பவிஷ்யதி – சாகுந்தலம்

சூரியன் பிரகாசிக்கையில் இருட்டு எங்கே வர முடியும்?

16.நிர்குண: ஸ்வஜன: ஸ்ரேயான், ய: பர: பர ஏவ ச: — ராமாயணம்

நமக்கு வேண்டியவர்கள் குணமில்லாதவரானாலும் சிறந்தவனே

17.நிர்வாணதீபே கிமு தைலதானம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அணைந்து போன தீபத்துக்கு எண்ணை ஊற்றி என்ன பயன்?

(கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?)

LION KING

18.நைகஸ்மின் காந்தாரே சிம்ஹயோர் வசதி: க்வசித்

ஒரு காட்டில் 2 சிங்கங்களின் வசிப்பிடம் இருப்பதில்லை

(ஒரே உறையில் இரண்டு வாட்கள் இருக்காது)

19.பங்கோ ஹி நபஹி க்ஷிப்த: க்ஷேப்து: பததி மூர்தனி – கதா சரித் சாகரம்

வானத்தைப் பார்த்து சேற்றை எறிந்தால் அது அவன் மீதே விழும்

(சேற்றில் கல்லை எறியாதே, உன் மீதுதான் தெறிக்கும்)

(யானை தன் தலையிலே மண்ணைப் போட்டுக் கொள்ளும்)

20.பயசா சிஞ்சிதம்  நித்யம் ந நிம்போ மதுராயதே

எலுமிச்சை மீது தினமும் பால் வார்த்தாலும் அது தித்திக்காது.

(நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு — —  — தின்னதான் போகும்)

படங்கள் என்னுடையவை அல்ல; பேஸ் புக் நண்பர்கள், பல வெப் சைட்டுகளில் இருந்து எடுத்தவை: பஹு தன்யவாத்! ரொம்ப ரொம்ப நன்றி!!

-சுபம்-

ஆண்டியைக் கண்டால் லிங்கன், தாதனைக் கண்டால் ரங்கன்!

Article No.1979

Date: 7 July 2015

Compiled by London swaminathan

Uploaded from London at  11-01 am

 

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற தலைப்பில் மே 28 ஆம் தேதி 50 பழமொழிகளுக்கு இணையான ஆங்கிலப் பழமொழிகள் கொடுத்தேன். இதோ மேலும் 25 பழமொழிகள்:–

51.To dance to everyman’s pipe

ஆண்டியைக் கண்டால் லிங்கன், தாதனைக் கண்டால் ரங்கன்

52.A hasty man never wants woe

ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு

53.ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உள்ளவை

Sadness and gladness succeed each other

54.Of evil seed no good grain can come

ஆமணக்கு விதைச்சால் ஆச்சா முளைக்குமா?

55.What is pound of butter among kennel of hounds?

ஆயிரம் பாம்புக்குள் அகப்பட்ட தேரை போல

56.Experience is the mother of science

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

57.Empty vessels make most sound

ஆயிரம் பணமுடையான் அமர்ந்திருக்கும், அரை பணமுடையான் ஆடி விழும்

நிறைகுடம் தழும்பாது, குறைகுடம் கூத்தாடும்

58.Time will bring out the truth of every transaction

ஆராத்தாள் செத்ததும் பொழுது விடிந்தால் தெரியும்

59.A fool’s tongue is clean enough to cut his own throat

ஆரால் கேடு, வாயால் கேடு

நுணலும் தன் வாயால் கெடும்

யாகாவாராயினும் நா காக்க

60.Among ignorant people, Scoogin is a doctor

ஆலையில்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை

Among the blind, the one eyed is the king

61.Death devours lambs as well as sheep

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

62.The street of Bye and Bye leads to the house of Never

ஆறின கஞ்சி பழங்கஞ்சி

63.Vows made in! storms are forgotten in calms

ஆறு கடக்கிற மட்டும் அண்ணன் தம்பி, அப்புறம் நீ யார், நான் யார்?

64.You can afford to be free with another man’s pottage

ஆற்றிலே போற தண்ணீரை அம்மா குடி! அப்பாகுடி!

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடை

ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே

65.ஆற்றிலே போட்டாலும், அளந்து போடு

Weight and measure take away strife

66.ஆனைக்கும் அடி சறுக்கும்

Great Homer sometimes nods

67.ஆனைக்கொரு காலம், பூனைக்கொரு காலம்

Every dog hath its day, every man has his hour

68.இக்கரை மாட்டிற்கு அக்கரை  பச்சை

Distance lends enchantment to the view

69.இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான்

Give him an inch he will take an elf

70.இடுவது பிஷை, ஏறுவது மோக்ஷம்

The poor furnish the ladder up which the rich ascends to heaven

71.இட்ட உறவு எட்டு நாளைக்கு, நக்கின உறவு நாலு நாளைக்கு

A friend that you buy with presents will be bought from you

72.இட்டுகெட்டார் எங்குமே இல்லை

Good deeds are never lost

73.இரப்பவனுக்கு பஞ்சம் என்றுமே இல்லை

Beggars can never be bankrupts

74.இரவற் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே

அரசனை நம்பிப் புருஷனை கைவிடாதே

Quit not certainty for hope

A bird in hand is worth two in the bush

75.ஆனை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே

Coming events cast their shadows before.

((Pictures are taken from face book and other websites;thanks.))

swami_48@yahoo.com

தொல்காப்பியம் பெரிய நூலாக மலர்ந்து விரிந்தது எப்படி? ஒரு சுவையான கதை

கி.வா.ஜ

Article No.1974

Date: 5  July 2015

Written by London swaminathan

Uploaded from London at 7- 39

இலங்கையிலுள்ள மட்டக்கிளப்பு, புளியநகர் க.பூபால பிள்ளை 1920 ஆம் ஆண்டில் எழுதிய தமிழ் வரலாறு என்னும் நூலில் காணப்படும் செய்தி:

“தொல்காப்பியர் அல்லது திருணதூமாக்கினி என்பவர், அகத்தியர் மாணாக்கருள் முதன்மை பெற்று

விளங்கினர். இவர் இயற்றி தம் பெயர் நிறுத்திய தொல்காப்பியமென்னும் இலக்கணம் அஞ்ஞான்றார் யாவராலும் மிக்க விருப்புடன் கையாடப்பட்டு வந்தமையால் பலவிடங்களில் பரந்து னிலைத்தழிந்த மற்றைய நூல்கள் போல் அழியாமல் நிலைபெற்றது. இந்நூல் முத்தமிழியல் விரிக்கும் அகத்தியம் போன்று துறை விரித்தகலாமல் ஓதுவார்க்கெளிதில் அமைவர இயற்றப்பட்டு இலக்கணத்தை வரிசையிற் சுருக்கிக் காட்டும் பெருஞ் சிறப்பினையுடையது.

அந்நாட்களில் யாரொருவர் எந்த நூலை இயற்றினும் அதனைச் சங்கத்தில் அரங்கேற்றினாலன்றியும் பிறர் ஒப்புக்கொள்வதில்லை. அகத்தியர் இத்தொல்காப்பியத்தை அரங்கேற்றவிடாமல் பலவழியாலும் தடை செய்தனர். தொல்காப்பியருக் கீடாக கல்வித் திறமையும் அவர் மாட்டுப் பேரன்புமுடைய அதங்கோட்டாசான் என்பவரை இந்நூல் அரங்கேற்றத்திற்குச் செல்லாதிருக்கும்படி அகத்தியர் தடுத்தும் அவர் அமையாமல் தொல்காப்பியர் கேள்விப்படி சபைக்குச் சென்றிருந்து தம்மாசிரியராகிய அகத்தியர் மனங் களிப்ப ஆக்ஷேபணை செய்பவர் போலப் பற்பல வினாக்களையும் பொறித்து நண்பனுடைய நூலின் பெருமையை வியக்காமல் வியந்து விளங்கவைத்தனர்.

இந்நூலின்கண் ஆதியிலமைந்த சூத்திரங்களின் எண்ணிக்கை அறுநூறு. அதங்கோட்டாசனார் ஆசங்கித்துக் கடாவக் கடாவத் தொல்காப்பியர் முறையே விடைகளாக விளக்கியிருந்த புதிய சூத்திரங்கள் ஓராயிரத்தின் மேற்றிரண்டு என நூல் மிகவும் விரிந்தது.

நிலந்தருதிருவிற் பாண்டியன் சபையிலே அதங்கோட்டாசான் முன்னிலையில் இந்நூல் அரங்கேறியதாக பனம்பாரன் கொடுத்த சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். நிலந்தருதிருவிற் பாண்டியன் அரசுபுரிந்த காலம் எண்ணாயிரம் வருஷங்களின் முன்னாதலின் இந்நூல் வயதும் அத்துணைத்தென்க.

நச்சி

அகத்தியர் இந்நூலை வெறுத்தற் கிருந்த நியாயம், யாண்டுந் தலைமை பெருமை பெற்று விளங்கிய தமது அகத்தியத்தின் மகத்துவங் குன்றிவிடுமென் றெழுந்த ஐயத்தானும், பொறாமை யினானுமென்று சிலர் கூறுவர். மற்றுமோர் நியாயம், அகத்தியர் தாம் வதுவை செய்துகொண்ட லோபாமுத்திரையைத் தம்முட  னழைத்துச் செல்லாமல் தம்பின் வரும்படி கட்டளையிட்டுத் தாம் பொதிய மலைக்கு முந்திச் சென்றனெ ரென்றும் பின்னர் வந்த லோபாமுத்திரையுந் தொல்காப்பியரும் செல்வழியில் வையையாற்றைத் தாண்டும் பொழுது வெள்ளம் பெருக்கெடுத்தலும் லோபாமுத்திரை தயங்கித் தத்தளிக்க அதனைக் கண்ணுற்ற தொல்காப்பியர் குரு பத்தினியைத் தீண்டுவது தோஷமென்றெண்ணி ஒரு மூங்கில் கோலை அவள் பற்றும்படி கொடுத்துக் கரைசேர்த்துக் கொடுபோய் குரவரிடம் ஒப்புவித்தாரென்றும், அச்சமாசாரத்தை அகத்தியர் உள்ளது உண்மையை உணர்ந்து கொள்ளாமல் பேதுற நினைந்து கோபவயத்தாற் தொல்காப்பியரை நோக்கி உனக்கு முத்தி கெட்டாதொழியக் கடவதென்று சபிக்க, தொல்காப்பியர் மனங்கொதித்தும், குருவாதலின் அவரை நிந்திக்காமல், அவர் இயற்றிய அகத்தியம் வழங்காதொழியக் கடவதென்று எதிர்ச் சாபமிட்டனரென்றும், அதுமுதல் அவர் இருவர்க்குமிடையே பகை நேர்ந்திருந்ததென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். இவர் கூற்று உண்மையென்று கொள்ளற்கேற்ற தடயங்கள் கானப்படவில்லையென்று அவருக்குப் பிந்திய காலத்தில் தோன்றியர் சிலர் சாதிக்கின்றனர்.”

சம்ஸ்கிருதத்தைக் கண்டு உலகமே வியப்பது ஏன்?

india.1

Article No.1972

Date: 4  July 2015

Written by London swaminathan

Uploaded from London at 16-46

சம்ஸ்கிருதம் பழைய மொழி மட்டுமல்ல. உலகிலேயே அறிவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரே மொழி இதுதான். அதுவும், இலக்கணம், இலக்கியம், அகராதி, சொற் பிறப்பியல், சாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றிலும் முதல் நூல்களைத் தந்த மொழி. 2750 ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கு பாணினி என்னும் முனிவன் எழுதிய இலக்கணத்தைப் பார்க்கையில் அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இம்மொழியில் இலக்கியம் தோன்றின என்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம் ஒவ்வொரு இந்தியனும்.

இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை – என்பது தமிழர் வாக்கு. ஆகையால் பாணினி இலக்கணம் வரும் முன்பு வேதம் தவிர வேறு பல நூல்களும் இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல பாணினிக்கு முன்னர் இருந்த இலக்கண வித்தகர் பெயர்களையும் நாம் அறிவோம். ஆனால் அவர்தம் நூல்கள் நமக்குக் கிடைத்தில.

ஒரு சில எடுத்துக்காட்டுகளைக் காட்டினால் சம்ஸ்கிருத கட்டமைப்பு உங்களுக்கே விளங்கும்.

சம்ஸ்கிருதச் சொற்கள் எல்லாம் வேர்ச் சொல் ஒன்றிலிருந்து பிறந்தவை. இந்த வேர்ச் சொற்கள் எப்படி வளர்ந்து மலரும் என்பதை பாணினி விளக்கியிருக்கிறார். ஒவ்வொரு சொல்லிலும் முன்னொட்டுகளைச் சேர்த்தால் அதன் பொருள் மாறிக் கொண்டே வரும். இதோ பாருங்கள்:-

தமிழில் நாயகன், நாயக்கர், விநாயகர் என்று எவ்வளவோ சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். இதற்கெல்லாம் மூலச் சொல், வேர்ச்சொல் நீ= தலைமை தாங்கு, வழிகாட்டு

நயதி = அவன் வழிகாட்டுகிறான்

அநயத் = வழி நடத்தினான்

நயது = அவனே வழி காட்டட்டும்

நயேத் = அவன் வழிநடத்தலாம்

நிநாய = அவன் வழிநடத்தியிருந்தான்

அநைசித்= முன்னொரு காலத்தில் வழிநடத்தினான்

நேஸ்யதி = வழிநடத்துவான்

அநேஸ்யத்= அவன் வழிநடத்தியிருப்பான்

நீயதே = அவன் வழிநடத்தப் பட்டான்

நாயயதி= அவன் வழிநடத்த வைப்பான்

அநாயயத் = அவன் வழிநடத்த வைத்தான்

நயயது= அவன் வழிநடத்த வைக்கட்டும்

நனனேத்= அவனை வழிநடத்த வைக்கச் செய்யலாம்

நினாயயிசதி= அவன் வழிநடத்தச் செல்ல வைக்க விரும்புகிறான்

நினீசு = வழிநடத்த விரும்புகிறான்

நினீசா = வழிநத்டதிவைக்க விருப்பம்

நேனீயதே = அவன் அதிரடியாக வழிநடத்துகிறான்

manuscript

இந்த வேர்ச் சொல்லுக்கு முன், சில முன்னொட்டுகளைச் சேர்த்தவுடன் எப்படி பொருள் மாறுபடுகிறது என்று பாருங்கள்:

அனு நயதி = வேண்ட

அப நயதி = எடுத்துச் செல்ல

அபி நயதி = மேடையில் நடிக்க ( அபிநயம் செய்)

ஆனயதி = அழைத்து வர

உத்நயதி =எழுப்ப

உபநயதி=  கொடுக்க

நிர்நயதி = முடிவு செய்ய ( நிர்ணயம் செய்ய)

பரிநயதி = கல்யாணம் செய்ய ( உஷா பரிணயம்)

விநயதி = அகற்ற, நீக்க

சம்நயதி = ஒன்று சேர்க்க

புத்தி, போதி மரம், போதனை, புத்தர் முதலிய சொற்கள் நமக்கு நன்கு தெரியும். புத்=அறிதல் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து

போத, போதன, புத்தி, போதக, பௌத்த, புத்திமத்(மான்), புத்யதே, போபுத்யதே, போதி தர்ம, போதி சத்வ, புதன் (கிரகம்), புதன் (கிழமை), புத்தர் எல்லாம் வந்தன.

panini_

இதுவே

அனு போத்யதே

அவ போத்யதே

உத் போத்யதே

ப்ர போத்யதே

ப்ரதி போத்யதே

வி போத்யதே

சம் போத்யதே என்றும் பல பொருள்களைத் தரும்.

சம்ஸ்கிருதத்தை – சம்ஸ்கிருத இலக்கணத்தைப் படிக்கப் படிக்க வியப்பும் ஆர்வமும் அதிகரிக்கும். உலகில் இன்று காணும் செம்மொழிகள் இல்லாத காலத்தே— அம் மொழிகள் வளர்ச்சியடையாத காலத்தே – ஏனைய மொழிகளில் நூல்களே எழுதாத காலத்தே – இவ்வளவு இலக்கண விதிகள் இருந்திருந்தால்  — 2750 ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தால்— அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக அம்மொழி இருந்திருக்க வேண்டும் என்று வெளிநாட்டினரும் உள்நாட்டு அறிஞர்களும் மூக்கின் மேல் விரலை வைத்து வியக்கின்றனர். கோல்டுஸ்டக்கர் மற்றும் இந்திய சம்ஸ்கிருத அறிஞர்கள் அனைவரும் பாணினியை கி.மு 750 என்று காலம் கணித்துள்ளனர்.

2000 வேர்ச் சொற்கள் இருக்கின்றன. பாணினி வினை சொற்களை பத்து வகுப்புகளாகப் பிரித்தார். அவைகல்ளுக்கு அவர் கொடுத்த பெயர்களைப் பாருங்கள்:

sanskrit village

Sanskrit speakers in Karnataka village

பத்து ‘ல’-காரங்கள்!

லட், லன், லிட், லுன், லுட், ல்ருட், லொட், லின், லெட், ல்ருன்.

இவைகளையும் ‘ட்’ –டில் முடிபவை, ‘ன்’ –னில் முடிபவை என்று பிரிக்கலாம். எவ்வளவு மஹா மேதையாக இருந்தால் இப்படியெல்லாம், எளிமைப் படுத்த முடியும்.. சுருக்கி வரைதல் என்பதற்கு உலகில் ஒரே இலக்கணம் பாணினிதான். இவர் இவ்வளவு சுருக்கியதால் கி.மு.நாலாம் நூற்றாண்டிலேயே வரருசி உரை எழுதினார். அதற்குப் பின் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் பதஞ்சலி மஹாபாஷ்யம் என்னும் மிகப் பெரிய விளக்கவுரை எழுதினார். நாம் திருவள்ளுவரை தெய்வப் புலவர் என்பது போல இவர் பகவான் பாணினி என்று போற்றித் துதிக்கிறார்!

யாராவது ஒருவன் சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் படிக்காமல் வரலாறோ, கலை விமர்சனமோ, பண்பாட்டுக் கட்டுரைகளோ எழுதப் புகுந்தால் ஏதேனும் ஒரு இடத்தில் வாழைப்பழத் தோலியில் வழுக்கி விழுந்தது போல, சறுக்கியிருப்பதை காணலாம்— நமக்கும்

இலக்கியத்தில் நகைச் சுவை வேண்டுமல்லவா!!!.

நான் முன்னர் எழுதிய “பாணினி மாஜிக்” என்ற கட்டுரையையும் (ஏப்ரல் 7, 2015) படிக்கவும்.