மூன்று நாழிகை சிம்மாசன யோகம்! (Post No 2639)

3 NAZIKAI THRONE (2)

Written by london swaminathan

 

Date: 17 March 2016

 

Post No. 2639

 

Time uploaded in London :–  6-15 AM

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

HUMAYUN BABAR (2)

மொகலாய அரசர்களுள் ஹூமாயூன் இரண்டாவது அரசராவார். ஹுமாயூன் என்னும் சொல்லுக்கு அதிர்ஷ்டசாலி என்று பொருள். ஆனால் அவர்தான் மிகவும் துரதிருஷ்டசலியாக இருந்தார். இதற்குக் காரணம் அவரேதான். நல்ல வீரர்; இளகிய மனமுடையவர். ஆனால் சிற்றின்பப் பிரியர். அபினி தின்பதிலும் விருப்பமுடையவர்.

 

அவர் பட்டத்துக்கு வந்த சில நாட்களுக்குள் செர்ஷா என்னும் ஆப்கானிய பட்டாணியர் தலைவன் படையெடுத்து வந்தான். அவனை எதிர்த்து ஹுமாயூன் சென்ற போது அவன் மலைகளில் ஓடி ஒளிந்துகொண்டான்.; ஹுமாயூன் நடந்து, நடந்து சென்று வங்காளம் வரை போய்விட்டார். அங்கே மீண்டும் குடி, கூத்தில் காலத்தைக் கழித்தார்.

 

மழைக்காலம் துவங்கி ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்தது. அந்த நேரத்தில் செர்ஷா, மலைகளிலிருந்து இறங்கி வந்து போர் தொடுத்தான். வங்காளத்துக்கும் டில்லிக்கும் இடையேயுள்ள பாதையை அடைத்து முற்றுகையிட்டான். ஹுமாயூன், வங்களத்திலிருந்து, தலைநகர் டில்லிக்குப் போக முயற்சித்தார். முடியவில்லை. அவரது படைவீரர்களும் அதிகாரிகளும் நோய்வாய்ப்பட்டனர். உடனே செர்ஷாவுடன் சமாதானம் செய்துகொண்டு சில பகுதிகளை அவனுக்குத் தருவதாகச் சொன்னார். உடனே அவர் டில்லிக்குப் போக பாதையைத் திறந்துவிடுவதாக செர்சா வாக்கு கொடுத்தான். அவனை நம்பி எல்லோரும் கங்கைக் கரையில் ஓய்வு எடுத்தனர். அன்றிரவு அவர்கள் மீது பாய்ந்த ஆப்கன் படைகள் பலரையும் கொன்று தீர்த்தன.

 

ஹூமாயூன் உயிர் பிழைக்க வேண்டி முக்கிய அகாரிகளுடன் குதிரை மீது ஏறி கங்கை நதியைக் கடக்க முயன்றார். பலரும் கங்கைப் பிரவாகத்தில் சிக்கி இறந்தனர். ஹூமாயுனும் நதியில் விழுந்து மூழ்கி இறக்கவிருந்த நேரத்தில், தோல் பைகளில் கங்கை ஜலத்தை நிரப்பும் ஒரு நீர்துருத்திக்காரன், இரண்டு தோல் பைகளில் காற்றை நிரப்பி அந்த மிதவையில் நீந்திச் சென்று கொண்டிருந்தான். அவன், ஹுமாயூன் மீது இரக்கப்பட்டு தன் துருத்தியைப் பிடித்துக்கொண்டு நீந்தி வரும்படி கேட்டுக்கொண்டான். ஹுமாயூனும் அப்படியே செய்து கங்கை நதியைக் கடந்து ஆக்ராவுக்கு வந்து சேர்ந்தார்.

humayun-3

உயிர்தப்ப வைத்த உதவிக்கு நன்றிக்கடனாக அவனை மூன்று நாழிகை நேரத்துக்குச் சிம்மாதனத்தில் உட்கார வைத்து மொகலாய சாம்ராஜ்யத்தை ஆள்வதற்கு அனுமதிப்பதாக வாக்குக் கொடுத்தார். ஆக்ரா போய்ச் சேர்ந்தவுடன், அந்த நீர்துருத்திக்காரன், அவரிடம் போய் நின்றான். உடனே அவனை மூன்று நாழிகை நேரத்துக்கு சிம்மாசனத்தில் அமரவைத்தான். அதுமட்டுமல்ல.

 

நீர்துருத்திக்காரன், தன் கொண்டுவந்த தோல்பையை துண்டு துண்டாக நறுக்கி அதில் தன் பெயரை முத்திரையிட்டு, அதை நாணயமாக்கி உற்றாருக்கும் உறவினருக்கும் கொடுத்தான்.அவர்களுக்கு நல்ல வெகுமதிகள் கிடைக்கவும் மன்னரிடம் உதவி நாடினான்.

 

இந்தக் நிகழ்ச்சி முடிந்தபின்னர், ஹூமாயூன், டில்லிக்குச் சென்றார். அங்கே திடீரென்று செர்ஷா தாக்குதல் நடத்தி, ஹுமாயூனை டில்லிக்கு வெளியே துரத்திவிட்டான். ஹூமாயுன், தன் சகோதர்ககளிடம் உதவி கேட்டார். அவர்கள் உபகாரம் செய்யாமல், அபகாரம் செய்து ஹுமாயூனை ஓட ஓட விரட்டினார்கள். அவர் பாரசீகத்துக்குத் தப்பிப் போனார். அங்குள்ள மன்னர், இவனுக்கு அன்பாக உதவிகளைச் செய்தார். அவருடைய படைகளின் உதவியுடன்  காபூல் நகரைப் பிடித்தார்.15 ஆண்டுகளுக்குப் பின்னர் டில்லிக்கு வந்து மீண்டும் ஆட்சியை ஏற்றார். அதற்கு முன்பாகவே செர்ஷாவும் அவருடைய மகனும் இறந்து போனார்கள்.

இதுதான் ஹுமாயுனின் கதை!

ஒரு நாழிகை= 24 நிமிடம்

-சுபம்-

கொடுங்கோலன் கஜினி முகமதுவுக்கு ஆந்தைகள் கற்பித்த பாடம் (Post 2636)

owl story

Compiled by london swaminathan

 

Date: 16 March 2016

 

Post No. 2636

 

Time uploaded in London :–  காலை 5-56

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இந்தியாவை ஆண்ட வெளிநாட்டினர் செய்த அக்கிரமங்களை மஹா கவி பாரதி ஒரே வரியில் சொல்லிவிட்டார்: “ ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று. அப்படிப்பட்ட அன்பில்லாத கொடுங்கோலர்களில் மிகக் கொடியவர்கள் கஜினி முகமதுவும் அவுரங்கசீப்பும் ஆவர். இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடித்ததோடு நிற்காமல், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான சோமநாதபுரத்தில் இருந்த 15 அடி உயர சிவலிங்கத்தை சுக்கு நூறாக உடைத்த மதவெறியன் கஜினி முகமது. அவன்கூட ஆந்தைகளிடம் பாடம் கற்று அடங்கி ஒடுங்கிய ஒரு சம்பவம் இதோ:-

 

கஜினி நகருக்கு மேற்கே தொலைதூரத்திலுள்ள கிராமங்களை முகமதுவின் படை வீரர்கள் அழித்து நாசமாக்கி வந்தனர். ஆடுமாடுகளைக் கொள்ளையடிப்பது, பயிர்பச்சைகளை அழிப்பது அகியவற்றில் ஈடுபட்டதால் கிராம மக்கள் ஓடி ஒளிந்தனர். கிராமங்கள் எல்லாம் பாழடைந்த திடல்களாகிவிட்டன.

 

கஜினி முகமதுவிடம் மந்திரியாக வேலை பார்த்த ஒருவருக்கு தெய்வ பக்தி இருந்தது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்” என்பது வள்ளுவன் குறள். ஆகையால் தன் கடமை கஜினி முகமதுவிடம் சொல்லி அட்டூழியங்களை நிறுத்துவதே என்று உறுதி பூண்டார். அவருக்கு பீர் என்ற முஸ்லீம் சந்யாசி பறவைகளின் பாஷையைக் கற்பித்திருந்தார். இது விஷயம், கஜினி முகமதுவுக்கும் தெரியும். ஒரு நாள் இருவரும் வேட்டையாடப் போனார்கள்.

 

இருவரும் மாலையில் திரும்பிவருகையில் ஒரு மரத்தின் மீது இரண்டு ஆந்தைகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. கஜினி முகமது, குதிரைகளை நிறுத்தச் சொல்லி, மந்திரியிடம் சொன்னார்:

உனக்குத்தான் பறவைகளின் மொழி தெரியுமே! அவைகள் என்ன பேசிக்கொள்கின்றன? என்று கேட்டார்.

அமைச்சரும் அதை உற்றுக் கேட்பதுபோல கொஞ்ச நேரம் பாவனை செய்தார். பின்னர் வந்து, “அரசே அவைகள் பேசுவதைச் சொல்வதற்குத் தயக்கமாக இருக்கிறது. அது உங்களுக்கு உகந்ததல்ல” என்றார்.

கஜினி முகமது அதைச் சொல்லும்படி வலியுறுத்தவே, “நான் சொல்கிறேன். ஆனால் கோபத்தில் என்னைக் கொன்று விடக்கூடாது” என்று சொன்னார். கஜினி முகமதுவும் ஒரு தீங்கும் வராது என்று உறுதி கூறியவுடன் அமைச்சர் (மந்திரி) சொன்னார்:

அந்த ஆந்தைகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். அவைகள் இரண்டும் கல்யாணப் பேச்சில் ஈடுபட்டுள்ளன. ஒரு ஆந்தையின் பையனை மற்றொரு ஆந்தையின் பெண்ணுக்கு மணம் முடிப்பதைப் பற்றி பேசுகையில் ஆணின் தந்தை (ஆந்தை) சொன்னது: “இதோ பார் உன் பெண்ணை என் பையனுக்குத் திருமணம் செய்யத் தயார்தான். ஆனால் பெண்ணுடன் எனக்கு 50 பாழான கிராமங்களைச் சீதனமாக அனுப்ப வேண்டும்” என்றது. அதற்குப் பெண்ணின் தாயார் “நமது சுல்தான் ஆட்சியில் இருக்கும் வரை பாழாய்ப்போகும் கிராமங்களுக்கு என்ன குறை? 50 என்ன 500 கிராமங்களை வேண்டுமானாலும் தருவேன்” என்றது

கஜினி முகமது இதைக் கேட்டுவிட்டு வெட்கித் தலை குனிந்தான்.

-சுபம்-

ஜீரண சக்தி அதிகரிக்க 5 விஷயங்கள்!

agastyanepal-carole-r-bolon

Written by london swaminathan

 

Date: 15 March 2016

 

Post No. 2633

 

Time uploaded in London :–  9-36

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல; ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

saturn

சம்ஸ்கிருதத்தில் பல அழகான ஸ்லோகங்கள் உள்ளன. அவைகளில் மூன்று பாக்களில் எந்தெந்த ஐந்து விசயங்களை நினைவிற் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளன. அவைகளில் ஜீரண சக்திக்கான ஐந்து பேர்கள் விநோதமாகவுள்ளன. அதில் ஒன்று சனிக் கிரகம். அட, ஜீரண சக்திக்கு அஷ்ட சூர்ணம் சாப்பிடு, த்ரிபலா சூர்ணம் சாப்பிடு என்று சொல்லாமல் கீழ்கண்ட ஐந்து பேரை நினை என்று சொல்லுகிறது அந்த செய்யுள்:

 

அகஸ்திம் கும்பகர்ணம் ச சனிம்  ச வடவானலம்

ஆஹாரபரிபாகார்த்தம் ஸ்மராமி ச வ்ருகோதரம்

அகஸ்தியர், கும்பகர்ணன், சனி, வடவைத் தீ, பீமன் (வ்ருகோதரன்) ஆகிய ஐந்து பேரை நினைத்தால் ஜீரணம் எளிதாகும் என்கிறது இந்தப் பா!

அகஸ்தியர்: இல்வலன் என்ற அசுரன் எல்லோரையும் கொல்லப் பயன்படுத்தும் தந்திரத்தை அகஸ்தியரிடமும் பயன்படுத்த முயன்றபோது அவர் “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சொல்லி வயிற்றைத் தடவவே, இல்வலனின் சகோதரனான வாதாபி ஜீர்ணமாகி விடுகிறான் என்பது புராணக் கதை. அகஸ்தியர் கடலைக் குடித்தார், அகஸ்தியர் கமண்டலத்திலிருந்து காவிரி வந்தது, அகஸ்தியர் விந்தியமலையை கர்வபங்கம் செய்தார், அகஸ்தியரை மக்கட் தொகைப் பெருக்கத்தால் சிவபெருமான் தெற்கே அனுப்பிவைத்தார் என்பன எல்லாம் விஞ்ஞான பூர்வ அல்லது வரலாற்று ரீதியிலான விஷயங்கள்- வெறும் புராணக் கதைகள் அல்ல என்பதை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விளக்கிவிட்டேன்.

கும்பகர்ணன்:- ராவணனின் தம்பியான கும்பகர்ணன் ஆறு மாதம் சாப்பிட்டுவிட்டு ஆறுமாதம் நிம்மதியாகத் தூங்குவான். அவனுக்கு ஒரு உடற்  பிரச்சனையும் ஏற்படவில்லை. நல்ல ஜீரண சக்த்திக்கு நிம்மதியான உறக்கம் தேவை!

 

வடவைத்தீ: கடலுக்கடியில் சீறும் எரிமலைகளால் சுனாமி போன்ற ஆபத்துகளும், பெரும் தீயும் உண்டாகி பேரழிவை உண்டாக்குவதை நாம் அறிவோம். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் மர்மத் தீ உண்டானது பற்றியும் பல ஆயிரம் பேர் உயிரிழந்தது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

பீமன்/வ்ருகோதரன்: பீமனின் அசுரப் பசி உலகிற்கே தெரிந்ததுதான். பகாசுரனுக்காக பல வண்டிகளில்  வைக்கப்பட்டிருந்த உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டவன் அவன். ஒரு அஜீரணக் கோளாறு அவனுக்கு ஏற்பட்டதில்லை.

 

சனி: இந்தப் பட்டியலில் மிகவும் புரிந்துகொள்ள கடினமானது சனிக் கிரகம் தான். அதற்கும் ஜீரணத்துக்கும் என்ன தொடர்பு என்று வியப்போம். சனிக் கிரஹம், உடலுறுப்புகளில் பாதத்துக்கும் பெருங்குடலுக்கும் அதிபதி. உலோகங்களில் இரும்புக்கு அதிபதி. இரும்புச் சத்து ரத்தத்தில் குறைந்தால் எல்லா உறுப்புகளும் ஜீரண சக்தியும் பாதிக்கப்படும். ஹீமோக்ளோபின் என்ற இரத்தச் சிவப்பணுக்களுக்கு இரும்பு தேவை என்பதை எனது நண்பர் கல்யாண குருக்கள் சுட்டிக்காட்டினார். மேலும் சனிக் கிரஹமே ஆயுள்காரகன். ஒருவன் இறப்பதும், இருப்பதும் சனியின் வேலையே.ஆக சனிக்கும் ஜீரணத்துகுமுள்ள தொடர்பு சரியே!

 

xxxx

 

indonesia-gifts-saras

வேதக் கல்வியில் முன்னேற கீழ்கண்ட 5 பேரை நினைவு கொள்வது அவசியம்:-

கணநாத சரஸ்வதீ ரவிசுக்ர ப்ருஹஸ்பதீன்

பஞ்சைதானி ஸ்மரேந்நித்யம்  வேத வாணீப்ரவ்ருத்தயே

 

கணநாதன் என்பது முதற்கடவுளான கணபதியையும், சிவனையும் குறிக்கும். சரஸ்வதி, கல்விக்கு அதிதேவதை. வியாழனும் (ப்ருஹஸ்பதி), வெள்ளியும் (சுக்ரன்) தேவ, அசுர கணங்களுக்கு ஆசிரியர்கள். ஆக  இவர்களை நினைப்பது வேதம் கற்க உதவும் என்பதில் பொருளுண்டு.

 

Xxx

 

india00015

தினமும் நினைக்க வேண்டிய ஐவர்:

அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்நாடு, தர்மத்தை உபதேசிக்கும் குரு (வியாசர் போன்றோர் அல்லது ஒவ்வொருவருக்கும் மந்திரம் முதலியன கற்பிக்கும் ஆசிரியர்). இதை விளக்கத் தேவையே இல்லை. இது ஒவ்வொரு இந்துவின் ரத்தத்திலும் ஊறிய கருத்து!

ஜனனீ ஜன்மதாதா ச சுவித்யாம்  ப்ரததாதி ய:

ராஷ்ட்ரம் தர்மோபதேஷ்டா ச பஞ்சகம் சந்ததம் ஸ்மரேத்

 

–சுபம்–

 

 

 

ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதை: பதவிக்காக அலையும் கழுதைகள் (Post No.2630)

415-Abraham-Lincoln-Block-of-4

Written by london swaminathan

 

Date: 14 March 2016

 

Post No. 2630

 

Time uploaded in London :–  8-57

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(Already posted in English by me under the title: Every jackass wants an office;post no. 2628)

jackass (1)

அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதை; தமிழ் மொழியாக்கம்-லண்டன் சுவாமிநாதன்

 

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் மந்திரியுடன் சேர்ந்து வேட்டைக்குப் போனார்.

“மந்திரியாரே! இன்று மழை வருமா?”

“மன்னனே! இன்று கட்டாயம் மழை வராது.”

 

இந்த உரையாடலுக்குப் பின்னர், ராஜா, ஒரு விவசாயியைப் பார்த்தார். அவன் ஒரு கழுதை மீது சவாரி செய்து கொண்டிருந்தான். “என்ன, வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று ராஜா கேட்டார்.

“ஐயோ, ராஜா, மழை கொட்டப்போகிறதே! அதனால்தான் வேகமாகப் போகிறேன்” – என்றான்.

“அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று ராஜா கேட்டார்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் கழுதையின் காதுகளைப் பார்த்துத்தான் நான் கண்டு பிடித்தேன். இதோ பருங்கள்! காதுகளை நன்றாக நீட்டி வைத்துக்கொண்டுள்ளன. இப்படியிருந்தால் மழை கொட்டப்போகிறது என்று அர்த்தம்” – என்றான்.

 

ராஜாவும் , மந்திரியும் காட்டுக்குள் வேட்டையாடப் போனார்கள். மழை கொட்டித் தள்ளிவிட்டது. ராஜாவுக்குப் பயங்கர கோபம். மந்திரியைப் பதவி நீக்கம் செய்தார். அந்த விவசாயியைக் கண்டுபிடித்து, அவன் கழுதையை விலைக்கு வாங்கி, அதற்கு மந்திரி பதவி கொடுத்தார்.

 

எல்லோரும், ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதையைச் சுவையாகக் கேட்டனர்.

“அந்த ராஜா பெரிய தப்புச் செய்துவிட்டார்” ….. என்று லிங்கன் கதையைத் தொடர்ந்தார். எல்லோருக்கும் சந்தேகம். ராஜா என்ன தப்பு செய்தார்? கூட்டத்தில் ஒருவன் எழுந்து “ராஜா, என்ன தப்பு செய்தார்?” – என்று கேட்டான்.

“அவர் ஒரு கழுதைக்கு மந்திரி பதவி கொடுத்ததிலிருந்து, இப்பொழுது எல்லா கழுதைகளும் மந்திரி பதவிக்காக அலைந்து கொண்டிருக்கின்றன” – என்று போட்டாரே ஒரு போடு!

 

Xxx

 

jackass

கர்னல், இடத்தில் என்னைப் போடுங்கள்!

ஒரு ராணுவத்தில் பெரிய கர்னல் பதவி வகித்தவர் இறந்து போய்விட்டார். இன்னும் இறுதிச் சடங்கு கூட நடந்த பாடில்லை. அதற்குள் அந்த மாகாண கவர்னரிடம் அந்த பதவிக்காக பல மனுக்கள் குவிந்தன. இறுதிச் சடங்கு ஊர்வல நாளும் வந்தது. பெரிய ராணுவ மரியாதையுடன் ஊர்வலம் துவங்கியது. சவப்பெட்டிக்குள் கர்னலின் சடலம் இருந்தது. ராணுவ அதிகாரிகளில் ஒரு ‘முந்திரிக்கொட்டை’, கவர்னரிடம் போய், “கர்னலின் இடத்தில் (பதவியில்) என்னைப் போடுங்களேன்”. என்று சொன்னார். கவர்னருக்கு ஒரே கோபம்! “கர்னலின் இடத்திலா? அதோ, அந்த சவப்பெட்டியைத் துக்கிக்கொண்டு போகிறார்களே, அவர்களிடம் போய்க்கேளுங்கள்” – என்றார்.

-சுபம்-

 

 

 

 

 

நூறு வயதை எட்டிய பெரியோர்! – காஞ்சிப் பெரியவர்! (Post No 2629)

2kanchi on mat

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 14 March 2016

 

Post No. 2629

 

Time uploaded in London :–  7-57 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 kanchi new pose

வேத வழி

இதற்கு முந்தைய இரு கட்டுரைகளைத் தொடர்ந்து, வெளியாகும் மூன்றாவது கட்டுரை இது!

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -3

காஞ்சி காமகோடி ஜகத்குரு சங்காராசாரியார் (ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி – 68வது பீடாதிபதி)

 

 

.நாகராஜன்

 

 பரமாசார்யாள் என்றும் பெரியவா என்றும் உள்ளார்ந்த பக்தியுடனும் அன்புடனும் அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி அவர்களை இனி வரும் வரலாறு அதிசயத்துடனேயே நோக்கும்.

 

 

உலகில் கடவுளை நேரில் பார்த்தல் சுலபமான ஒன்று இல்லை. ஆனால் கடவுள் நிகழ்த்தும் அதிசயங்களைப் பார்க்கிறோம்; அற்புதங்களைப் பார்த்து பிரமிக்கிறோம்.

இப்படி கடவுளின் அதிசய அற்புதமாக அவதரித்தவர் பெரியவா என்றால் அது மிகையாது.

 

 

ஒரு கஷ்டமான கால கட்டத்தில் அவதரித்து ஹிந்து மதத்தை ஏற்றம் பெறச் செய்த அவரை இறையருளே உருக்கொண்ட ஒரு அற்புத ஆசார்யர் என்றே சொல்லலாம்.

 

 

1894ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி தோன்றி 1994ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் 8ஆம் தேதி நீக்கமற நிறைந்த பரம்பொருளுடன் ஐக்கியமான அவரை வர்ணித்தல் இயலாது.

பிள்ளையாரை உடை; கொளுத்து புராணங்களை; அர்ச்சகர்களை அடி என்று தீய சக்திகள் தலை தூக்கி விரித்த காலகட்டத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டோரைக் காப்பாற்றி வீதிக்கு வீதி கோவிலுக்குக் கோவில் வழிபாட்டை மேம்படச் செய்தார் அவர்.

 kanchi rinkled skin

 

கோவில் கோபுரம்தோறும் மார்கழி  மாதம் திருப்பாவை திருவெம்பாவை பாட்லகளை ஒலிக்கச் செய்து தமிழகத்தையே தெய்வீக மணம் கமழச் செய்தார்.

 

அவரை தரிசித்த மேதைகள், ராஜாக்கள், ராணிகள் ஏராளம் எனில் சாமானியர் லட்சக்கணக்கில் இருந்தனர்; அவரின் அருளைப் பெற்றனர் என்றே கூறலாம்.

 

 

ஆகம சில்ப மகாநாடு ஒரு புறம், வேத பாடசாலைகள் ஒரு புறம், நலிவடைந்து இருந்த கரகாட்டம் உள்ளிட்ட புராதன கலைகளை மேம்படுத்தல் ஒரு புறம் என்று அவர் தொடாத ஹிந்து மதம் சார்ந்த துறைகளே இல்லை.

 

 

இந்திய அரசியல் சட்டத்தில் ஹிந்துக்களைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளைக் காப்பாற்றியவர் அவரே என்பதைப் பெரும்பாலானோர் அறியார். உரிய சட்ட வல்லுநர்களை அழைத்து அறிவுரைகளை அருளியவர் அவர்.

கிரீஸ் தேசத்து ராணி அவரை பரம குருவாகப் போற்றி வணங்கினார்.

 

 

மஹாத்மா காந்திஜியோ அவரைச் சந்தித்த மாலை வேளையில் நன்கு அளவளாவி மகிழந்தார். உரிய நேரத்தில் அவர் சாப்பிட வேண்டிய தருணத்தை ராஜாஜி நினைவு படுத்துகையில், “இன்று உணவு தேவை இல்லை; இப்போது  இந்த சந்திப்பில் பெற்றதே உணவு” என்று தான் அவரிடமிருந்து பெற்ற ஆன்ம உணவை எண்ணிக் களித்தார்.

கண்ணதாசனை வழிப்படுத்தினார்; எம்.ஜி.ஆரை தமிழ் மாநாடு நடத்த ஊக்குவித்து அவருக்கு நேரிட்ட சங்கடங்களிலிருந்து அவரைக் காப்பாற்றினார்.

 

 

இந்திரா காந்திக்கு அருளினார். அவரது கை சின்னம் உதிக்க அவரது ஆசிக் கரமே உதவியது.

 

 

காவிரித் தலங்களைப் பற்றி எழுத ஒருவரைப் பணித்தார்.காசியையும் கங்கையையும்  எழுத ஒருவரை ஊக்கினார். சுமார் எண்பது ஆண்டு கால வரலாற்றை வேடிக்கைக்காக எடுத்துப் பார்த்தாலும் எந்த ஒரு நல்ல ஆன்மீக காரியத்தின் ஆரம்பமும் அவரையே சுட்டிக் காட்டும்.

 

எல்லா நல்ல புத்தகங்களும் தவறாமல் முன்னுரையில் அவரது அருளாசியாலும் ஊக்கத்தாலும் அந்தப் புத்தகம் மலர்ந்தது என்று குறிக்கப்படும்.

 

 

கலைமகள் நிறுவனத்தார் ஆசாரிய ஸ்வாமிகளின் உபதேசங்கள் என்று அவரது உரைகளைப் பதிப்பித்தது.

கல்கி பத்திரிகை வாரம் தோறும் அவரது அற்புதமான அருளுரைகளை விடாமல் பிரசுரித்தது.

 

 

தெய்வத்தின் குரல் என்று அவரது உபதேச உரைகளை பல பாகங்களாக அன்பர் ரா. கணபதி தொகுத்து வெளியிட்டார்.

ஆயிரக்கணக்கான நூல்களில் தெவிட்டாத அவரது உபதேச உரைகள், அவர் ஆற்றிய அற்புதங்கள் உள்ளிட்டவற்றைப் படிக்க முடிகிறது.

 

 

நூறாண்டு வாழ்ந்த இந்த மகானின் பெருமையைச் சொல்லும் போது வார்த்தைகள் தோற்கின்றன.

 

 two shankaras

எங்கு வார்த்தைகள் தோற்கின்றனவோ எதை வார்த்தைகளால் அடக்க முடியாதோ அதுவே அது” என்று சொல்ல முடியா பிரம்மத்தை உபநிடதங்கள் விளக்கும்.

அதையே பரமாசார்யருக்கும் பொருந்தக் கூறலாம்.

எங்கே வார்த்தைகள் விவரிக்க முடியாமல் திணறுகின்றனவோ அங்கே பரமாசார்யாரின் திவ்ய சரிதம் அடங்குகிறது.

 

 

அவரின் நூறாண்டு பணியை நினைத்து அவர் காட்டிய வழியில் ஹிந்து மத தத்துவத்தை உலகெங்கும் பரப்புவதே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக அமையும்!

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

 

******        

மனைவிக்கு ‘பெர்Fயூம்’ (செண்ட்) வாங்குவது எப்படி? (Post No 2624)

dog

Written by london swaminathan

 

Date: 12 March 2016

 

Post No. 2624

 

Time uploaded in London :–  13-36

 

( Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

dog in wedding

இது அமெரிக்காவில் உண்மையில் நடந்தது. ஒருவனுடைய காதலிக்குப் பரிசாக வாசனைத் திரவியம் (Perfume பெர்Fயூம்) வாங்குவது என்று காதலன் முடிவு செய்தார். ஆனால் அவள் வாங்கும் ‘பெர்Fயூம்’ எது என்று தெரியாது. அவள் வசிப்பதோ அவளுடைய அம்மா வீட்டில். அவளிடம் கேட்டால் ‘சர்ப்ரைஸ் (surprise)’ போய்விடும். ஆகவே கேட்கவும் தயக்கம். அவள் எப்போது வந்தாலும் அவளுடைய செல்லமான (pet dog) நாய்க்குட்டியைத் துணைக்கு அழைத்துவருவாள். அவளை மறுமுறை சந்தித்தபோது, உன்னுடைய நாயை ஒரு ‘வாக்கிங் (walking)’ கூட்டிக்கொண்டு போய்விட்டு மாலையில் உன் வீட்டில் கொண்டுவந்து விடுகிறேன் என்றான். அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

 

காதலன் நாயைக் கூட்டிக்கொண்டு நேரடியாக கடைக்குப் போனான். பெர்Fயூம் விற்கும் பிரிவிலுள்ள பெண்களிடம் பல வகையான பெண்கள் வசனைத் திரையங்களின் மாதிரி (Sample சாம்பிள்) கேட்டான். பொதுவாக அவைகளைக் சின்னக் கார்டில் “ஸ்ப்ரே” (spray) செய்து (தெளித்து) முகர்ந்து பார்க்கக் கொடுப்பார்கள்.

 

நமது காதலனோ அந்த அட்டைகளை நாயின் மூக்கிற்கு நேரே காட்டச் செய்தான். அந்தப் பிரிவிலுள்ள பெண்களுக்கு ஒரே வியப்பு; புரியவுமில்லை. ஒரு குறிப்பிட்ட பெர்Fயூமை, நாயிடம் காட்டியபோது அது ஆநந்தமாக எம்பிக் குதித்தது. அதுதான் மனைவி, பயன்படுத்தும் பெர்Fயூம் என்பது தெளிவாகியது. அதை மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றான். அவளுக்கும் மகிழ்ச்சி. தனது கணவனுக்குத் தான் பயன்படுத்தும் பெர்Fயூம் முதற்கொண்டு எல்லாம் தெரிந்திருக்கிறதே! என்று அன்பும் அதிகரித்தது. (ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம்—லண்டன் சுவாமிநாதன்)

 

Xxx

 

poison

நீ என் மனைவியாக இருந்தால்……………….

பெண்களுக்கு ஓட்டுரிமை கோரி இங்கிலாந்தில் பெரிய போராட்டம் (suffragette)  நடந்தது. அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாதென்று லாய்ட் ஜார்ஜ் (Lloyd George) என்பவர் சொற்பொழி வாற்றினார். அந்தக் கூட்டத்து வந்த ஒரு பெண்மணிக்கு அதிபயங்கர கோபம். கண்களில் கனல் தெரிக்க எழுந்தார். எல்லோர் முன்னிலையிலும், “அன்பரே, நீவிர் மட்டும் எனது கணவராக இருந்திருந்தால் உமக்கு விஷம் கொடுத்துக் கொன்றிருப்பேன்” என்றார். அவர் உடனே “நீர் மட்டும் எனது மனைவியாக இருந்திருந்தால், கட்டாயம் அதை வாங்கிக் குடித்திருப்பேன்!” என்றார்.

 

xxx

 

நான் என்ன முட்டாளா? அவ்வளவு ஆரஞ்சுப் பழத்தையும் ஒரு நிமிடத்தில் விற்க!

 

Happy-Orange-Vendor-

 

மெக்ஸிகோ நாட்டில் ஒரு பிரமுகர், பழம் விற்கும் ஒரு கூடைக்காரியிடம் தினமும் இரண்டு ஆரஞ்சுப் பழம் வழங்குவார். ஒரு நாள் அவர் வீட்டில் ஒரு பெரிய பார்ட்டி/விருந்து ஏற்பாடாகியிருந்தது. அவர் நினைத்தால், மொத்த விற்பனைக் கடைக்குச் சென்று சகாயமான விலையில் ஒரு கூடை, 2 கூடை ஆரஞ்சுப் பழம் வாங்கியிருக்கலாம். ஆனால் கூடைக்கார கிழவியிடம் வாங்கினால், அவள் சந்தோஷப்படுவாள் என்று எண்ணி, அவளிடம் போய் நின்றார்.

 

வழக்கமான வாடிக்கையாளர் என்பதால், அவர் வாய் திறக்கும் முன்னரே, அந்தப் பெண்மணி, “இந்தாருங்கள் உங்களுடைய இரண்டு ஆரஞ்சுகள்” என்று சொல்லி கையில் திணித்தாள்.

அவர் சொன்னார், “ அம்மா! இன்று உன் கூடையிலுள்ள எல்லா ஆரஞ்சுப் பழங்களும் எனக்கு விலைக்கு வேண்டும். என் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகின்றனர்” –என்றார்.

அவளுக்கு வந்ததே பார்க்க வேண்டும் – கோபம்! “என்ன நினைத்தீர்கள் என்னை? உங்களுக்கு முழுக்கூடையையும் ஒரு நிமிடத்தில் விற்றுவிட்டால், நாள் முழுவதும் நான் என்ன செய்வது?” – என்று ஒரு முறை,முறைத்தாள்.

அந்தப் பிரமுகருக்கு, சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

(ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம்—லண்டன் சுவாமிநாதன்)

Xxx

 

நண்டு சாப்பிட்ட ஐயர் கதை! (Post No 2617)

crab2

Compiled by london swaminathan

 

Date: 10 March 2016

 

Post No. 2617

 

Time uploaded in London :–  15-29

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

“ஞாயிற்றுக்கிழமை, நண்டு வேண்டாம்; சாறு விடு!” என்ற பழமொழியை எனது பிளாக்கில், மார்ச் மாத காலண்டரில் படித்தவுடன் கும்பகோணம் பிராமணரிடம் கேட்ட ஒரு கதை நினைவுக்கு வந்தது:-

 

“ஒரு பிராமணன் வேறு ஊருக்குப் போய்விட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்தான். நெடுந்தூர நடைப் பயணம். பசி, வயிற்றைக்கிள்ளி எடுத்தது. இரவு நேரம்; பொழுதும் சாய்ந்துவிட்டது. இனி இருட்டில் நடந்தால், மிருகங்களுக்கு இரையாவோம் என்ற அச்சம். அப்படி மிருகங்கள் கொல்லாவிட்டாலும் பசியே ஆளைக் கொன்றுவிடுமென்ற பேரச்சம்!.

 

தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு அங்கே போய், கொஞ்சம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அது பிராமணர் வீடு இல்லை என்பது நன்றாகத் தெரியும். உயிர் காக்க எதுவும் செய்யலாமே!

 

இன்னும் கொஞ்சம் நேரம் ஆயிற்று. குடிசைக்குள் பாத்திரங்கள் உருட்டும் சப்தம் கேட்டது. உள்ளே எட்டிப்பார்த்தான் பிராமணன். “என்ன சமையலா?” என்றான்.

 

“ஐயய்யோ சாமி! நீங்கள் இதெல்லாம் சாப்பிட மாட்டீர்கள். பெயர்கூட சொல்ல மாட்டோம்” – என்றாள் அந்த வீட்டு உத்தமி!

stamp_Mauritius

பிராமணன் வெளியே வந்தான். பசி, உயிரை வாட்டியது. மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தான். “நீங்கள் எது சமைத்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் சாதமோ அல்லது கூழோ கொடுங்கள்” என்றான்.

அவர்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்திருந்த கொஞ்சம் அரிசிச் சோற்றைப் போட்டர்கள். அது பிரமாணனின் ‘யானைப் பசிக்கு சோளப்பொரியாக’ அமைந்தது.

 

கேட்கவோ வெட்கம். “அந்தப் பாத்திரத்தில் என்ன?” என்று வெட்கமறியாது கேட்டபோது, “அது நண்டுக் குழம்பு என்றாள்” அவ்வீட்டுப் பெண்மணி. “பரவாயில்லை! பசி உடலை வாட்டுகிறது. கொஞ்சம் சாறு மட்டும் விடுங்கள்” என்றான். அந்த வீட்டு சத்தியவதி, பயந்துகொண்டே குழம்பை மட்டும் விட்டாள்.

 

ஐயர் பசி அடங்கவில்லை. உயிர் வாழ என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம்; ஆபத்துக்கு தோஷமில்லை என்று சாத்திரங்கள் சொல்லுவது நினைவுக்கு வந்தது. “இன்னும் கொஞ்சம் சாறு விடுங்கள்” என்று சொல்லி, நண்டுக் குழம்பைச் சாப்பீட்டார். இவர் மேலும் மேலும் “விடுங்கள் ஊற்றுங்கள்!” என்று சொன்னபோது அந்த அம்மணி, தவறுதலாக சில நண்டுகளையும் தட்டில் நழுவ விட்டு விட்டாள். மிகவும் பயந்தே போனாள்; அடக் கடவுளே, ஒரு பிராமணனுக்கு அபசாரம் செய்துவிட்டோமே! உபசாரம் செய்யாவிட்டாலும் அபசாரம் செய்யக்கூடாதே என்று முகத்தில் கைவைத்து மூடிக்கொண்டாள்.

பிராமணனோ, “தானாக (தான்+ ஆக) வந்த எதையும் வேண்டாம்” என்று சொல்லக்கூடாது. ஆகையால் தப்பில்லை என்று சொல்லி அதையும் சாப்பிட்டுவிட்டு காலையில் எழுந்து ஆற்று நீரில் மூழ்கி விட்டு வீடு திரும்பினான்.

 

ஐயர் சொன்ன ‘தான்’ என்பது சாம்பார், குழம்பில் உள்ள ‘தான்’களையும் (காய்கறிகளையும்) குறிக்கும். “அதுவாக வந்த”  – என்ற பொருளையும் குறிக்கும்!

 

இது தான் “இன்று ஞாயிற்றுக்கிழமை, நண்டு வேண்டாம், சாறு மட்டும் விடு” –என்ற பழமொழிக்குக் காரணமோ?

(இந்தக் கதை இந்தியத்  திருநாட்டின் வடபகுதியிலும் வழங்கி வருகிறது)

–சுபம்–

 

 

அதிசய ஆற்றல்: பிறர் மனதை அறிவது எப்படி? (Post No. 2615)

vivekananda-stamps

Written by S Nagarajan 

 

Date: 10 March 2016

 

Post No. 2615

 

Time uploaded in London :–  8-49 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (6)

ச.நாகராஜன்

 

 

பிறர் மனதை அறிதல்

 vivek2

பிறரின் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவது ஸ்வாமிஜிக்கு எளிதான ஒன்று. ஒருவர் ஸ்வாமிஜியைப் பார்க்க வரும்போதே அவர் எதற்காக வருகிறார் என்ன நினைக்கிறார் என்   பதை அவர் மிக எளிதாக அறிந்து கொள்வார்.

 

ஒரு முறை பிராணாயாமம் பற்றிக் கேட்க வேண்டுமென்று சிலர் ஸ்வாமிஜியை அணுகினர்.

 

ஸ்வாமிஜி மற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு பிராணாயாமம் பற்றி அவர்கள் கேட்கும் முன்னரே தானாகவே அது பற்றிக் கூறலானார். வந்தவர்கள் வியந்தனர். அவர்கள் கேட்க நினைத்த சந்தேகங்களுக்கெல்லாம் அவருடைய பேச்சில் பதில் இருந்தது.பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பித்த உரை இரவு ஏழு மணிக்கு முடிந்தது.

 

 

எப்படி தாங்கள் கேட்காமலேயே அவரால் பதில் சொல்ல முடிந்தது என்று சீடர் ஒருவர் கேட்ட போது ஸ்வாமிஜி, “இது போன்ற நிகழ்ச்சிகள் மேலை நாட்டில் பல முறை நடந்துள்ளன. மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் அது பற்றி என்னிடம் கேட்டுள்ளனர்” என்றார்.

 

மனதைப் படிக்கலாமா?

 

சிஸ்டர் கிறிஸ்டைன் ஸ்வாமிஜியை விட மூன்று வயது இளையவர். அவர் ஸ்வாமிஜியிடம் தீட்சை பெற விரும்பினார்.

ஆயிரம் தீவு பூங்காவில் ஸ்வாமிஜியுடன் இருக்கும் பேறு பெற்றார் அவர். மறு நாள் பலருக்கு மந்திர தீட்சை தர ஸ்வாமிஜி உத்தேசித்திருந்தார். முதல் நாள் அவரை அழைத்த ஸ்வாமிஜி, “ உனக்கும் தீட்சை தர விரும்புகிறேன். ஆனால் உன்னை எனக்கு அவ்வளவாகத் தெரியாது.அதனால் தீட்சைக்கு நீ தயாராக இருக்கிறாயா என்பது புரியவில்லை” என்று கூறிய ஸ்வாமிஜி சற்றே தயக்கத்துடன் தொடர்ந்தார்:” என்னிடம் பிறரின் மனதைப் படிக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை மிகவும் அபூர்வமாகவே நான் பயன்படுத்துவேன். உனக்கும் தீட்சை தர இருப்பதால், நீ அனுமதித்தால் நான் உன் மனதைப் படிக்க விரும்புகிறேன்” என்றார்.

 

உடனே கிறிஸ்டைன், “தாராளமாகப் படியுங்கள்” என்றார்.

“முற்றிலும் படிக்கலாமா?” என்று கேட்டார் ஸ்வாமிஜி.

“படிக்கலாம்” என்று உறுதியாகக் கூறினார் அவர்.

“தைரியசாலிப் பெண் நீ” என்று அவரைப் பாராட்டிய ஸ்வாமிஜி அவரது மனதைப் படித்தார். பின்னர் கூறினார்:’ உனக்கு இன்னும் மூன்று திரைகளே உள்ளன. இப்பிறவியிலேயே உனக்கு மூன்றாவது கண் திறக்கும்” என்று கூறி அருளினார்.

பிற்காலத்தில் ஒரு முறை ஸ்வாமிஜி, மேலை நாட்டில் இந்த சக்தியைப் பயன்படுத்தியதால் தன் தவ ஆற்றல் குறைவு பட்டு விட்டது என்று கூறி வருந்தினார்

 

 

மனதின் ஆற்றல் பற்றிய உரை

 

ஏற்கனவே இந்த தொடரில் நாம் குறிப்பிட்டிருக்கும் ஸ்வாமிஜியின் மனதின் ஆற்றல் பற்றி கலிபோர்னியா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 1900ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி ஆற்றிய உரையில் சில பகுதிகளை ஆங்கிலத்தில் கீழே பார்க்கலாம். இவை மனதின் ஆற்றல் பற்றிய சில புதிய விஷயங்களை விளக்கும் பகுதிகளாகும்:

 

malaysian-postal-stamp-on-swami-vivekananda

Have you ever noticed the phenomenon that is called thought-transference? A man here is thinking something, and that thought is manifested in somebody else, in some other place. With preparations — not by chance — a man wants to send a thought to another mind at a distance, and this other mind knows that a thought is coming, and he receives it exactly as it is sent out. Distance makes no difference. The thought goes and reaches the other man, and he understands it. If your mind were an isolated something here, and my mind were an isolated something there, and there were no connection between the two, how would it be possible for my thought to reach you? In the ordinary cases, it is not my thought that is reaching you direct; but my thought has got to be dissolved into ethereal vibrations and those ethereal vibrations go into your brain, and they have to be resolved again into your own thoughts. Here is a dissolution of thought, and there is a resolution of thought. It is a roundabout process. But in telepathy, there is no such thing; it is direct.

 

 

I can see only at a distance of so many feet. But I have seen a man close his eyes and see what is happening in another room. If you say you do not believe it, perhaps in three weeks that man can make you do the same. It can be taught to anybody. Some persons, in five minutes even, can be made to read what is happening in another man’s mind. These facts can be demonstrated.

 

I shall tell you a story which I heard from a great scholar in the West. It was told him by a Governor of Ceylon who saw the performance. A girl was brought forward and seated cross-legged upon a stool made of sticks crossed. After she had been seated for a time, the show-man began to take out, one after another, these cross-bars; and when all were taken out, the girl was left floating in the air. The Governor thought there was some trick, so he drew his sword and violently passed it under the girl; nothing was there. Now, what was this? It was not magic or something extraordinary. That is the peculiarity. No one in India would tell you that things like this do not exist. To the Hindu it is a matter of course. You know what the Hindus would often say when they have to fight their enemies — “Oh, one of our Yogis will come and drive the whole lot out!” It is the extreme belief of the race. What power is there in the hand or the sword? The power is all in the spirit.

 

****** முற்றும்

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான அற்புதமான அனுபவங்களை அன்பர்கள் படிக்க இந்தத் தொடர் உத்வேகம் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.

 

கர்நாடக இசையில் கங்கை நதியும் கூவம் நதியும்!(Post No. 2600)

Tiger_new

Compiled by london swaminathan
Date: 5 March,2016

 

Post No. 2600

 

Time uploaded in London :–  11-03 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

tiger you tube

டைகர் வரதாச்சாரியார் பிரபல பாடகர். இவரை ஒரு கச்சேரிக்கு அழைத்திருந்தனர். பாடகரோ கற்றுக்குட்டி; அவருக்கு வயலின் வாசித்தவரோ மஹா மேதை; இசைத்துறையில் ‘ பழமும் தின்னு கொட்டையும் போட்டவர்’! அல்லது கரைத்துக் குடித்தவர் என்று சொல்லலாம். கச்சேரி முடிந்தது. “இப்பொழுது டைகர் அவர்கள், ஒரு சில சொற்கள் சொல்லுவார்” என்று சொல்லி அவரைப் பேச அழைத்தனர். எப்பொழுதும் சுடு சொற்களைப் பெய்தறியாதவர் அவர். ஆனால், அன்று பாடியவர் அவர் காதில் கொஞ்சம் நாராசத்தைப் பாய்ச்சிவிட்டார் போலும்!

 

எல்லோரையும் பொதுப்படையாக வரிசையாகப் பாராட்டினார். இறுதியில் சொன்னார். “வயலின் வாசித்தவர் பற்றி நான் என்ன சொல்ல இருக்கிறது? நமது வயலின் மேதை ஒரு பெருங்கடல்’. ஆழ்ந்த அறிவும் அனுபவமும் உடையவர். பெருங்கடலில் தூய கங்கை நதி போன்ற நதிகளும், சாக்கடை மணம் வீசும் கூவம் போன்ற நதிகளும் சங்கமம் ஆவது இயல்புதானே!”

 

(சென்னை வழியாக ஓடும் கூவம் நதி, சாக்கடைக் கலப்பினால் நாற்றம் அடிக்கும் நதியாக இன்று ஓடுகிறது.)

Xxx

purandara stamp

புரந்தரதாசருக்கு சவுக்கடி!

கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹர் புரந்தரதாசருக்கு பூர்வ ஜன்ம கர்ம வினை பாக்கியிருந்தது. அதைத் தீர்க்க, அவருக்கு கடவுள் ஒரு தண்டனை கொடுத்தார்.

 

பண்டரீபுரத்தில் கோவில் கொண்டுள்ள விட்டலராயன் மீது அபார பக்தி பூண்டவர் நமது புரந்தரர். அதே ஊரில் கோவிலில் ஆடல், பாடலுக்காக நியமிக்கப்பட்ட தேவதாசிக்கும் ஸ்ரீ விட்டல் மீது அலாதி பக்தி. அது மட்டுமல்ல. புரந்தரரின் பாடல்கள், க்ருதிகள் மீதும் பேரன்பு, பெருங்காதல் கொண்டவர்.

 

ஒரு நாள் இரவு, கடவுளே புரந்தரதாசர் வேடம் கொண்டு , அந்த தேவதாசி வீட்டுக்குப் போய் ஆடலையும் பாடலையும் ரசிக்க வந்ததாகக் கூறினார். அந்தப் பெண்மணிக்குப் பேரானந்தம். ‘பழம் நழுவில் பாலில் விழுந்ததே’ என்று எண்ணி வியந்தார். ஆடினார், பாடினார், மெய்மறந்து போனார். புராந்தரர் வடிவத்தில் வந்த விட்டல், போவதற்கு முன் ஒரு கங்கணத்தை (காப்பு) பரிசுப் பொருளாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

 

மறு நாள் பண்டரீபுர விட்டல் சிலையின் மீது இருந்த கங்கணத்தைக் காணவில்லை. அது தேவதாசியிடம் இருப்பதும் தெரியவந்தது. செய்தி மெதுவாகப் பரவியது. புரந்தரர்தான் இரவில், தேவதாசி வீட்டுக்குப் போய் அதை அவரிடம் கொடுத்தார் என்று எல்லோரும் சொல்லவே புரந்தரர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார். அவர் எவ்வளவோ மறுப்புச் சொல்லியும் தேவதாசியின் வாக்குமூலத்தைக் கொண்டு அவருக்கு சவுக்கடி வழங்கப்பட்டது. அவரை கோவில் வாசலிலுள்ள கம்பத்தில் கட்டி வைத்து சவுக்கடி கொடுத்தனர். திடீரென்று கோவிலின் கர்ப்பக்கிரஹத்திலிருந்து ஒரு அசரீரி கேட்டது. இறைவன், தானே புரந்தரதாசர் வடிவத்தில் சென்று ஆடலையும் பாடலையும் ரசித்ததாகவும் இந்த அவப்பெயரை புரந்தரர் மீது ஏற்றி அவரை சவுக்கடி பெற வைத்ததற்கு அவர் பூர்வ ஜன்ம வினையே காரணமென்றும் சொல்லியது. பாக்கியிருந்த கர்ம வினையைத் தீர்த்த புரந்தரதாசர்,

 

 

இன்று வரை நம் நினைவில் நீங்கா இடம் பெற்று நம்மையும் புனிதப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்ல. அவரை எந்தக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்களோ, அந்தக் கம்பத்துக்கு தாசர் கம்பம் என்று பெயரிட்டு இன்று வரை பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும். புரந்தரர் கட்டப்பட்ட கல்லும் புனிதம் பெறும்!!

வாழ்க புரந்தரர் நாமம்!

 

Source: Facets of Indian Culture by R Srinivasan, B V Bhavan Publication 1990); தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்

 

My previous articles on music:- 

Ganges and Coovam Rivers in Carnatic Music! (Post No.2597) 4-3-2016

Mystic No.7 in Music, Post No.977, 13-4-14

Musician who pledged a Raga, Post no.1074, 30-5-2014
True Art is Never Made to Order, post No.1066, 26-5-14

Acoustic Marvel of Madurai Temple 13-5-13

Superstition in the World of Music 12-4-14 (Post No.975)

Musical Pillars in Hindu Temples

Interesting Anecdotes from the World of Music (29 May 2014;Post No.1072)

Saint who went to Heaven with a Flute in Hand (16 April 14,Post No 983)

How did Rare Indian Animal Asunam become extinct? (15 April 14,Post No 981)

Rain Miracles: Rain by Fire and Music (7 January 2012)

மழை அற்புதங்கள் (7 ஜனவரி 2012)

இசைத் தமிழ் அதிசயங்கள் 31-1-2013

சங்கீதம் தோன்றிய வரலாறு- ஒரு புராணக் கதை 13-4-14 (976)

சப்தம் கேட்டால் இறந்துவிடும் அசுணமா? 15-4-14 (980)

கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன மனிதர் 16-4-14 (982)

ஸ்ரீராமர் மீது முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகள் 8-4-14 (963)

-subham-

பஞ்ச மாபாதகம், 5 கர்ம சண்டாளர்கள், 5 நடைப் பிணங்கள் (Post No. 2599)

dussehra-16

A Kid scared while A artist dressedup at Ravana enjoying with Spectators during Dussehra celebrations in Sector 46 of Chandigarh on Thursday, October 22 2015. Express Photo by Kamleshwar Singh

Compiled by london swaminathan

Date: 5 March,2016

 

Post No. 2599

 

Time uploaded in London :–  7-59 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

Already published in English; source:Encyclopaedia of Numeralas, Volume 1, The Kuppusami Sastri research Institute,Chennai 600 004, Year 2011; தமிழாக்கம்- லண்டன் சுவாமிநாதன்.

 

முதல் 4 நேற்று வெளியிடப்பட்டது.

 

5.பஞ்ச நம்பக்கூடாதவர்

ஜாமாத்தா க்ருஷ்ணசர்பஸ்ச பாவகோ துர்ஜனஸ்ததா

விஸ்வாசோ நைவ கர்தவ்ய: பஞ்சமோ பகினீசுத:

ஜாமாத்தா- மாப்பிள்ளை/மருமகன்

க்ருஷ்ண சர்ப- நல்ல பாம்பு

பாவக: – தீ

துர்ஜன – கெட்டவர்கள்

பகினீ சுத: – சகோதரி மகன்

 

6.பஞ்ச மாபாதகம்

அக்னிதோ கரதஸ்சைவ சஸ்த்ரபாணி: தனாபஹ:

க்ஷேத்ரதாராபர்ஹதா ச பஞ்சைதே ஆததாயின:

 

அக்னிதா- மற்றவன் சொத்துக்கு தீ வைப்பவன்

கரத-மற்றவர்களுக்கு விஷம் வைப்பவன்

சஸ்த்ரபாணி- ஆயுதமில்லாதவனைக் கொல்பவன்

தனாபஹ:- மற்றவன் பணத்தைத் திருடுபவன்

க்ஷேத்ரதராபஹர்தா- மற்றவன் மனைவியை அபஹரிப்பவன்

 

மனுவும் (11-54) இது பற்றிக் கூறுகிறார்:-

பிரமஹத்யா சுராபானம் அஸ்தேயம் குர்வங்கனாகம:

மஹந்தி பாதகான்யாஹுஸ்த சம்சர்கி ச பஞ்சம:

பிரம்மஹத்ய- பிராமணனைக் கொல்லுதல்

சுராபானம்- மது பானம் அருந்தல்

ஸ்தேயம்- திருடல்

குர்வங்க நாகம:- குருவின் மனையிடம் தவறாக நடத்தல்

சம்சர்கி- மெற்கண்ட நாலு பேருடன் சஹவாசம்

 

7.பஞ்சநடைப்பிணம்

ஜீவந்தோபி ம்ருத: பஞ்ச ஸ்ரூயந்தே கில பாரதே

தரித்ரோ, வ்யாதிதோமூர்க: ப்ரவாஸீ நித்யசேவக:

தரித்ர – ஏழை

வ்யாதித: – நோயாளி

மூர்க: – முட்டாள்

ப்ரவாஸீ- வெளிநாட்டில் வசிப்பவன்

நித்யசேவக: – வாழ்நாள் முழுதும் வேலையாளாக இருப்பவன்

 

8.பஞ்சக்லேசம் (ஐவகைக் குறைகள்)

அவித்யா அஸ்மிதா ராக த்வேஷ அபிநிவேசா: பஞ்ச க்லேசா: (யோக சூத்ரம் 2-3)

அவித்யா- அறியாமை/ கல்லாமை

அஸ்மிதா – அகம்பாவம்

ராக – ஆசை

த்வேஷம் – வெறுப்பு

அபிநிவேச – எப்படியாவது உயிர்வாழவேண்டும்  என்ற எண்ணம்

anti god poster

9.பஞ்ச கர்மசண்டாளர்கள்

(செய்கையினால் சண்டாளன் நிலையை அடைபவன்)

நாஸ்திக: பிசுனஸ்சைவ க்ருதக்னோ தீர்கதோஷ:

சத்வார:கர்மசண்டாளா ஜன்மஸ்சாபி பஞ்சம:

நாஸ்திக: – கடவுள் நம்பிக்கையற்றவன்

பிசுன: – பிசிநாரி/கெட்டவன்

க்ருதக்ன: – நன்றிகெட்டவன்

தீர்க தோஷக: -பாபி (பாவாத்மா)

ஜன்மத: – பிறப்பினால் சண்டாளன்

 

–சுபம்–