மும்முடிப்
பல்லவராயன் என்ற விருதைப் பெற்ற லிங்கயன்!
ச.நாகராஜன்
சோழர்களில் மூன்றாம் ராஜராஜன் என்பவன் திரிபுவன சக்கரவர்த்தி
என்ற விருதுடன் கி.பி.1216ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்தான். பல்லவ வமிசத்தைச் சேர்ந்த
பலவானாக அந்தக் காலத்தில் “அவனி ஆளப்பிறந்தான் கோப்பெருங்சிங்கன்” என்பான் திகழ்ந்தான்.
இவன் சோழனான மூன்றாம் ராஜராஜனை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றான்.
ஸ்ரீரங்கத்திற்கு வடக்கே பத்து மைல் தூரத்தில் உள்ள
கண்ணனூர் என்ற ஊரைத் தன் இருப்பிடமாகக் கொண்டு காவிரியின் வட பகுதியை அப்போது ஆண்டு
வந்த மூன்றாம் ராஜராஜனின் மாமனான போஜள வீரசிம்ம தேவன் என்பவன் கொங்கு நாட்டுப் படைகளையும்
திரட்டிச் சென்று கோப்பெருங்சிங்கன் தேசத்தை அழித்து வருக என்று தன் சேனா வீரர்களுக்குக்
கட்டளையிட்டான்.
tamilandvedas.com,
swamiindology.blogspot.com
அவனது சேனாவீரர்கள் சென்று பல்லவ நாட்டை நாசமாக்கி
விட்டு வெற்றிகரமாகத் திரும்பினர். இந்தச் செய்தியை திருவயிந்திபுரத்தில் உள்ள தெய்வநாயகப்
பெருமாள் கோவில் பிரகாரத்து மேலைச் சுவரில் எழுதப்பட்டிருக்கும் சிலாசாசனம் தெரிவிக்கிறது.
அந்தச் சேனாவீரர்களில் லிங்கயன் என்பவன் சென்று வெற்றி
பெற்றதால் அவனுக்கு மும்முடிப் பல்லவராயன் என்ற விருதுப் பட்டம் வழங்கப்பட்டது. அவன்
(சிங்கை) காங்கேயத்தை உறைவிடமாகக் கொண்டான். tamilandvedas.com, swamiindology.blogspot.com
தற்காலத்தில் மும்முடிப் பல்லவராயன் பட்டத்தை வகித்து
வரக் கூடியவர் கொங்கு வேளாளர்களில் செங்கண்ணக் குலத் தலைவர் ஆவார். அவர்களுடைய விருதுப்
பாட்டுகள் மேலே சொன்ன சரிதத்தை விளக்குகிறது.
“போரிட்ட பல்லவன் றேசத்தை வெட்டியே
பொன்மகுடம்
நீ படைத்தாய்
செங்கதிரிப் பரிதிகுல மகராஜ ராஜனாந்
திரிபுவன
சக்கிரவர்த்தி
சித்தமகிழ்தளகர்த்தர் லிங்கயப்பல்லவன்”
என்ற மேற்கோள் பாட்டால் இது தெரிய வருகிறது.
இந்த சரிதத்தைப் பெருமிதத்துடன் கொங்குமண்டல சதகம்
தனது 72ஆம் பாடலில் விளக்குகிறது.
பாடலின் பொருள் : திரிபுவனச் சக்கரவர்த்தி என்னும்
சோழவேந்தன் மேற்கொண்டுள்ள போரில் சேனாதிபதியாகப் படையைச் செலுத்தி வெற்றி கொண்டு திரும்பியமையால்
மும்முடிப் பல்லவன் என்ற பட்டத்தைப் பெற்றவன் வாழ்கின்ற சிங்கை (காங்கேய) நகரமும் கொங்கு
மண்டலமே என்பதாம்.
பதிமூன்றாம் நூற்றாண்டு- பல்லவர்
தலைவன் சோழ மன்னனைச் சிறைப்பிடித்தான். இவனே புலவர் என்று சொல்லும்படி இவனது
பெயரில் சம்ஸ்க்ருதப் பகுதி அமைந்துள்ளது -வயலூர் (Vailur Inscription) கல்வெட்டு.
கங்காதர என்ற புலவர் தன்னுடைய
குடும்பத்தின் புகழைப்பாடும் கல்வெட்டு ஆறு புலவர்களின் பெயரையும் அவர்கள் பணி
செய்த மன்னர்களின் பெயர்களையும் கூறுகிறது.
கங்காதரன் மனைவி பெயர் தாசலாதேவி. அவள் ஜெயபாணியின் மகள்.
அவரோ கௌட மன்னனின் அதிகாரி. ஜெயபாணியின் மனைவி பெயர் சுபகா. கங்காதரன் ருத்ராமான
என்னும் மன்னனின் ஆலோசகர்- நண்பரும்கூட. கோவிந்தபூர் கல்வெட்டுக் கவிதையை யாத்தவர்
(கி.பி.1137). அவர் ஒரு குளம் வெட்டியது பற்றிய 39 செய்யுட்கள் இதில் உள.
சகத்வீபத்திலிருந்து (ஈரான் –
மெசபொடோமியா பகுதி) சம்பா கொண்டுவந்த சூரிய தேவனிடம் தோன்றியதாகப் புகழ்ந்து
கொள்ளுகிறார். அத்வைத சத என்னும் நூலை இயற்றியவர் இவராக இருக்கலாம். இப்படித்
தன்னையும் தன் குடும்பத்தையும் புகழ்ந்து தள்ளுவதால் ஆறு புலவர்களின் பெயர்களும்
அவர்களுடன் தொடர்புடைய மகத மன்னார் பெயர்களையும் அறிய முடிகிறது. இதோ அவர்
வம்சாவளி
பாரத்வாஜ கோத்ரத்தில் உதித்த தாமோதரன்;
அவர் வழி வந்தவர் சக்ரபாணி
(வால்மீகிக்கு நிகரானவராம்);
அவர் மகன் மனோரதன் (வியாசனுக்கு
நிகரானவராம்).;
அவரது மகன்கள் கங்காதரன் , மஹிதரன்;
அவ ருத்ரமானன் மன்னுடன் இருந்தவர்.
சக்ரபாணிக்கு மனோரதனுடன் பிறந்த
சகோதரர் தசரதன்;
அவர் வரனமான என்னும் மன்னனிடம்
பணியாற்றினார்;
தசரதனின் இரண்டு மகன்கள் ஹரிஹரன், புருஷோத்தமன்;
புருஷோத்தமன் வழி வந்தவ்Aர்கள் – ஆசாவரன் , அவர் மகன்
அபிநந்தன் அவர் மகன் ஹரிஹரன் – அவர் மகன்
புருஷோத்தமன்
1205ம் ஆண்டில் ஸ்ரீதரதேவ தொகுத்த கவிதைத் தொகுப்பில் கங்காதரன் என்ற
புலவர் பெயர் ஆறு இடங்களில் வருகிறது. அவர் இந்த கங்காதரனாக இருக்கலாம்.
இந்தக் கல்வெட்டில் காணப்படும் அத்தனை
பேரிலும் கவிதைகளோ கல்வெட்டுகளோ இருப்பதாலும் அவர்கள் சம காலத்தவர் என்பதாலும்
கங்காதரன் புகழ் பாடியது நியாயமே. நமக்கும் வரலாறும் கிடைத்தது. வம்சாவளியும்
கிடைத்தது; மன்னர்களையும் நாம் அறிய முடிகிறது.
குணபத்ர
அவர் ஒரு சமண மஹாமுனி; ம்துரா சங்கத்தை
சேர்ந்தவர்; சாகமான அரசன் சோமேஸ்வரனின் பிஜ்னோலி (ராஜஸ்தான்) கல்வெட்டுக் கவிதையை
யாத்தவர். (கி.பி.1169).
சமண முனி பார்ஸ்வநாதருக்குக் கோவில்
எழுப்பிய செய்தியைக் காணலாம். சிலேடைச் சொற்களுடன் கவிதை புனைந்திருப்பதால் இவர்
சிறந்த புலவர் என்பது தெரிகிறது. சாகம்பரியின் சாகமான வம்சத்தின் 28 இளவரசர்களின்
பெயர்களை அவர் பட்டியலிடுகிறார். அவருடைய பட்டம் கவி கந்த விபூஷண. இது மிகவும்
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கல்வெட்டு.28 வரலாற்று நாயகர்களின் பெயர்கள்
வெளிச்சத்துக்கு வருகிறது!
14 Sep 2011 – Mohmed of Gazni invaded India 17 times just to plunder all the temples in North India. He came to know about the fabulous wealth of Hindu …
12 Sep 2011 – Knowing that India was the richest country in the world they all set an eye on India. But what about today’s India? Is still India a rich country?
12 Sep 2011 – Please note, this is the third part in a series on why India is the Richest country in the world. For the first part, click here. For the second part, …
18 Sep 2011 – By S Swaminathan Please note this is part of an ongoing series on Why India is the Richest Country in the World. See the links below for the …
India was the richest country in the ancient world. Until 1987 the largest gold coin was an Indian coin issued by the Mogul emperor Jahangir. Seventeenth …