தமிழன் கண்ட 3 அற்புத “மை” (Post No.10,608)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,608

Date uploaded in London – –    29 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் வழி ……………………… தனீ…………………..வழீ……………………

தமிழன் கண்ட 3 அற்புத “மை”

வாய்மை, உண்மை, மெய்மை  — மூன்றும் அற்புதமான சொற்கள். ஸம்ஸ்க்ருதத்தில் ஸத்யத்திற்கு (TRUTH) இப்படி மூன்று அற்புத சொற்கள் இல்லை

உள்ளத்தால் பொய்யாது வாழ்வது உண்மை ;

வாயால் பொய் சொல்லாது , தீங்கு செய்யாது வாழ்வது வாய்மை ;

உடலால் தீங்கு செய்யாது வாழ்வது மெய்மை ;

இவை அற்புதமான சொற்கள்; தமிழனின் கண்டு பிடிப்பு. மனோ , வாக், காயம் (THOUGHT, WORD AND DEED)  ஆகிய மூன்றிலும் பொய்யாது வாழ்வது இந்துக்களின் சிறப்பு. இதை இன்றும் கூட பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லும் சந்தியா வந்தனத்தில் கடைசியில் சொல்கிறார்கள். ஆனால் இதற்கான விசேஷ சொற்களை — வாய்மை, உண்மை, மெய்மை — என்பதை திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் மட்டுமே காணலாம்.

(வாய்மை, உண்மை என்ற இரண்டு சொற்களை வள்ளுவர் பல இடங்களில் பயன்படுத்துகிறார். மெய்மை என்பது சங்க இலக்கியமான ஐங்குறு நூற்றில் வருகிறது ; தொல்காப்பியத்தில் வரும் ‘மெய்மை’ இலக்கணம் பற்றியது )

வாய்மை விஷயத்தில் வள்ளுவனின் கருத்து தனிச் சிறப்பு உடைத்து. பொய்யும் கூட உண்மைதான்; அது நன்மை விளைவிக்கு மாயின் !!

உண்மையும் கூட தப்புதான்; அது தீமை  விளைவிக்குமாயின்!!!

இதை முன்னரே மஹாபாரதக் கதைகள் மூலம்  விளக்கிவிட்டதால் இன்று பிரஸ்தாபிக்கப்போவது இல்லை.

நம்மில் பலர்க்கு உள்ளத்தில் ஒரு கேள்வி எழும் ; குமர குருபரர், சகல கலாவல்லி மாலை பாடினார் – அற்புதம் நிகழ்ந்தது .

அபிராமி பட்டர் அந்தாதி பாடினார் – அமாவாசையன்று சந்திரன் உதித்தது.

ஆதி சங்கரர் , ஏழை பாப்பாத்தி வீட்டு வாசலில் நின்று , தாயே, இப்படி ஒரு வறுமையா, இந்தப்பெண்மணிக்கு, என்று கதறி, கனக தாரா ஸ்தோத்திரம் பாடினார் . அந்தப் பார்ப்பனப் பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்காய் மழை பெய்தது .

அதெல்லாம் சரி ! இதை நானும் உள்ளன்போடு பாடுகிறேனே! ஏன் அற்புதம் நிகழ்வதில்லை என்று நம்மில் பலர் ஐயுறுகிறோம்.

ஒரே விடைதான் ! நமக்கு ‘திரிகரண சுத்தி’ இல்லை.

மனம், வாக்கு, உடல்/காயம் மூன்றும் உண்மையைக் கடைப்பிடிப்பதில்லை. நம்முடைய எண்ணங்களை காகிதத்தில் எழுதிப் படித்தால் நமக்கே வெட்கமாக இருக்கும். எழுதத் துணியவும் மாட்டோம்.. அதே போல கடும் சொற்களை, கொடும் சொற்களை வாயாலும் மனதாலும் வீசி எறிகிறோம். கடவுள் என்ன முட்டாளா? நம்மிடம் அவர் ஏமாந்து போக?

வள்ளுவன் பல இடங்களில் “எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும்”  என்று நமக்கு சொல்கிறான்.கோபம், காமம் லோபம்/பேராசை/பிறர் பொருள் நயவாமை ஆகிய மூன்றையும் விட்டால் அற்புதங்கள் செய்ய முடியும் என்கிறான். நம்மால் முடிகிறதா?

இந்தக் கட்டுரை யார் இந்த திரிகரண சுத்தியை- மனம், சொல், நடத்தை — ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்?? என்பது பற்றியது.

இது ஜராதுஷ்ட்ரர் / ஜொராஸ்டர் ஸ்தாபித்த பார்ஸி மதத்திலும் உளது. அவரது காலம் கி.மு 600ஆ அதற்கு முன்னமா என்பது கேள்விக்குறியாக நிற்கிறது. ஆனால் வேதத்திலும் கீதையிலும் இது தெளிவாக உள்ளது.

இதோ குறிப்புகள்

பகவத் கீதையில்

18-15

சரீர வாங் மனோபிர் யத் கர்ம ப்ராரபதே என்ற வரியில் உடல், சொல், மனது மூன்றும் குறிப்பிடப்படுகிறது .

தம்மபதத்தில் புத்தரும் இதைச் சொல்கிறார் . பிராமணர் பற்றிய 26ஆவது அத்தியாயத்தில் புத்தர் சொல்கிறார் “. எவன் ஒருவன் மனதாலும், வாக்காலும், செயலாலும் பாவம் செய்யவில்லையோ , திரிகரணங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறானோ அவனையே நான் பிராமணன் என்பேன்”.

மனு ஸ்ம்ருதி இதை மேலும் ஒரு படி மேலே தூக்கிச் செல்கிறது.(12-9)

உடலால் பொய்யாக வாழ்பவன், அடுத்த ஜன்மத்தில் மரம் செடிகொடிகளாக, கல், மண்ணாக பிறக்கிறான் ;

வாக்கால் பொய்யாக வாழ்பவன் பறவைகளாக, மிருகங்களாகப் பிறப்பான்;

எண்ணங்களில் பொய்மை உடையவன் மிகவும் கீழ்த்தரமான பிறவிகளாக (கடைசி ஜாதி) மாறுகிறான்

xxxx

பார்ஸி மதத்தில் திரிகரண சுத்தி

பார்சி மதத்தில் 3 நல்ல குணங்கள்

ஹுமதா , ஹுக்தா ,ஹ்வர்ஷ்டா = ஸு மதி , ஸு உக்த , ஸு வரிஷ்ட

பாரசீக மொழியில் ‘ஹ’ என்பது ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஸ’ என்பதாகும்.

இதனால்தான் நம்மை சிந்து நதி மக்கள் என்று சொல்லாமல் ஹிந்து என்றழைத்தனர் .

இதற்கெல்லாம் மூலம் யஜுர் வேதத்தில் உள்ளது:-

யன் மனஸா த்யாயதி தத் வாச்சா வததி

யத் வாச்சா வததி தத் கர்மா கரோதி

ஒருவனுடைய எண்ணத்தில் உதிப்பது வாக்காக மலர்கிறது ;அதையே அவன் செயலாகச் செய்கிறான்.

மஹாபாரதம், கருட புராணம் முதலியவற்றில் இது  வந்தாலும் வேதத்தில் வருவதே முதலில் வந்தவை.

இதோ மேலும் சில வேத மேற்கோள்கள் –

யச் சக்ஷுசா  மனஸா யச்ச வாச்சா உபாரிம –அதர்வண  வேதம் 6-96-3

யன்மே மனஸா  வாச்சா கர்மணா வா துஷ்க்ருதம் க்ருதம் –தைத்ரீய ஆரண்யக 10-1-12

உபநிஷதங்களை சாக்ரடீஸூம் அவரது சீடரான பிளாட்டோவும் நன்கு படித்தமைக்குப் பல சான்றுகள் உண்டு. பிளாட்டோவும் இந்த திரிகரண சுத்தியைக் குறிப்பிடுகிறார்.

–SUBHAM—

TAGS —  வாய்மை, உண்மை, மெய்மை, வேதத்தில், பார்ஸி மதம், , தமிழன், அற்புத “மை”

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,181

Date uploaded in London – 6 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 3 (Post No.10,181)

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

xxx

RV.10-16-4

இது தகனம் செய்யும் மந்திரம் / சுடுகாட்டில்

“அக்கினியே, தேகத்தில் பிறப்பில்லாத ஒரு பாகம் /ஆன்மா இருக்கிறது. அதை தூய்மை செய்க;. நீ எரித்து அழித்த  உடல் உறுப்புகளுடன் அவனை புனிதர்கள் வாழும் இடத்துக்கு அழைத்துச் செல்க”.

RV.10-16-5

“அக்கினியே உனக்கு அளிக்கப்பட்ட பொ ருட்களுடன் வருபவனை பிதாக்களிடம்/ முன்னோரிடம் அழைத்துச் செல்க. அவன் ஜீவனை அடைந்து சந்ததியை வளர்ப்பான் ஆகுக. ஜாத வேதசனே/ அக்கினியே அவனை மீண்டும் தேகத்துடன் சேர்த்து வைப்பாயாகுக”.

இதில் இறந்து போனவர் மீண்டும் பிறந்து சந்ததியை வளர்க்க வேண்டும் என்ற கருத்து தொனிக்கிறது. எப்போது??

 புனித உலகத்தில்/ சொர்க்கத்தில் வாசம் முடிந்தவுடன் என்பதும் தெளிவாகிறது .

இந்தக் கருத்துக்கள் இந்திய மதங்களைத் தவிர ஏனைய செமிட்டிக் மதங்களுக்கு Semitic Religions  (யூத, கிறித்தவ, இஸ்லாமிய) எதிரானவை. ஆகவே வெள்ளைக்காரப் பயல்கள் இது பற்றி பிரஸ்தாபிப்பதில்லை. மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல்கள் வாய் மூடி மௌனியாகி விடுவார்கள்!!!

Xxx

ரிக்வேதம் RV. 10-54 முதல் Rv.10-60 துதிகள்

ரிக்வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஏராளமான ஈமக்கிரியை விஷயங்கள் (Funeral Rites) வருகின்றன. அவற்றை விளக்க வெள்ளைத் தோல் வெளிநாட்டனாலோ மார்க்சீய கும்பலினாலோ முடியாது. இதை இன்றும் சுடுகாட்டிலும் , வீட்டில் நடக்கும் திவச திதிகளை செய்வோரும் மட்டுமே விளக்க முடியும். குறிப்பாக ஞான திருஷ்டி உடைய சாது சன்யாசிகள் மூலமே அறியமுடியும். இங்கே அசுநீதி , அசமாதி , அனுமதி, உஸீநாரணி   ஆகிய புதிய பித்ருலோக தேவதைகள் பற்றி ரிஷிகள் பாடுகின்றனர்.

xxx

ஒரு சில குறிப்புகளை மட்டும் காண்போம்

RV. 10-56-1; 10-56-2

மூன்று ஒளிகள் இருக்கின்றன; இங்கே தகன அக்கினி; மேலே ஒரு வெளிச்சம்; அதையும் தாண்டி உள்ள ஒளியுடன் கலப் பாயாகுக

அது தேவர்களின் பிறப்பிடம். அன்பு செழிக்கும் இடம்.

நீ வானத்திலுள்ள ஒளியிலும், சூரியனுடைய ஒளியிலும், உன்னுடைய சொந்த ஒளியிலும் நுழைவாயாகுக.

ரிக் வேதத்தின் 56ஆவது துதியின் அடிக்குறிப்பு இறந்தவர்கள் ஒளி ரூபத்தில் சென்று மஹத்தான ஒளியுடன் கலப்பார்கள் என்று சொல்கிறது .

XXXX

RV.10-56-7

“புவியின் பல திசைகளுக்குச் செல்ல கப்பலில்  நீரின் மீது சென்று எல்லாக் கஷ்டங்களையும் கடந்த மனிதர்களைப் போல பிருகதுக்தன் , தன்  பலத்தால் தன்  புதல்வனை — வாஜிநனை — இங்கு அக்கினி முதலியவற்றில் – அங்கு சூ ரியன் முதலியவற்றில் ஸ்தாபித்தான்” .

இப்படி ரிக் வேதத்தை தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் எழுதியபோதும் இதைப் பாடிய ரிஷியின் பெயர், புதல்வர் பெயர் எல்லாம் உண்மைப் பெயர்கள் அல்ல; அடையாள பூர்வ பெயர்களே என்ற கருத்தும் தொனிக்கிறது.

xxxx

RV.10-58-12

58-ஆவது துதி மனம் பற்றிப் பேசுகிறதா , இறந்தவரின் ஆவி பற்றிப் பேசுகிறதா என்று எவருக்கும் தெளிவாகவில்லை. ஆகையால் இரண்டு பெயர்களையும் (MIND/SPIRIT)  எழுதிவிட்டார்கள் .

எமனிடம் சென்றுள்ள உன்னை மீண்டும் இங்கு வசிக்கச் செய்கிறோம் என்பது பல்லவி போல  12 மந்திரங்களிலும் வருகிறது. இதில் 12ஆவது மந்திரத்தை ஜம்புநாதன் மொழிபெயர்க்கத் தவறிவிட்டார்.

இதோ மந்திரம்  எண் 12

“உன்னுடைய ஆவி இருக்கும் மற்றும் இருக்கப் போகும், தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

மந்திரம் எண் 7

“உன்னுடைய ஆவி நீரிலும் தாவரங்களிலும் , தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டது  நீ இங்கு வந்து நீண்டகாலம் வசிக்க  வரச்  செய்கிறோம்” .

இது கல், மண், புல் முதலிய எல்லாவற்றுமாக மனிதன் பல பிறவிகள் எடுப்பதும் தொனிக்கிறதது . மாணிக்கவாசகர் போலத் தெளிவாகப்படுகிறார் ரிஷி.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

………… மாணிக்கவாசகர், திருவாசகம்

xxx

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் – 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

—சிவபுராணம் – திருவாசகம்

இந்த  12 மந்திரங்களிலும் இறந்த ஆவியை மீண்டும் இங்கு வசிக்க அழைப்பது மறுபிறப்பை வலியுறுத்துகிறது

Xxxx

ஈமக்  கிரியையில் படகு வைத்ததை என் அம்மாவின் இறுதிச் சடங்கிலே  எழுதினேன் ; எகிப்திலும் இது உள்ளது .

இதோ மேலும் ஒரு கப்பல் மந்திரம் ; இதையும் எதோ ஒரு காரணத்தினால் ஜம்புநாதன் மொழி பெயர்க்கவில்லை. 10,000+++ மந்திரங்களில் அவர் விட்டுப்போன மந்திரங்கள் சுமார் பத்துதான் ; அதில் ஒன்று இங்கே –

RV.10-135-4

“பாலனே , நீ ரிஷிகளிடமிருந்து இங்கே வரச்செய்த தேர் , சாமனால்  பின்தொடரப்பட்டது. ஆகையால் இரண்டையும் கப்பலில் வைத்துள்ளோம்”. (இங்குள்ள 7 மந்திரங்களும் எமனை நோக்கிச் சொல்லும் மந்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. )

RV.10-135-1

“நல்ல இலைகளுள்ள மரத்தின் அருகே எமன் தேவர்களோடு பருகுகிறான். எமன் மனையின் தலைவன் . அவன் நம்முடைய பழைய மனிதர்களை விரும்பும் தந்தையாக இருக்கிறான்” .

(இதன் அடிக்குறிப்பில் ‘நல்ல இலைகளுள்ள மரத்துக்கு , இறந்து போன நல்ல ஆத்மாக்கள் இளைப்பாறும் இடம்’ என்று எழுதப்பட்டுள்ளது).

XXXX

ரிக் வேத துதி RV.10-154, யமி , புதிய ஜீவனை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது . இறந்தவர்களின் ஆன்மா , பித்ருக்கள் வசிக்கும் லோகத்துக்குத் செல்கிறது. (முதல் மந்திரத்தின் அடிக்குறிப்பு இறந்தோருக்கு அதர்வவேதிகள் தேனையும், சாமவேதிகள் நெய்யையும் அளிப்பதாகாச் சொல்கிறது .)

xxx

எனது வியாக்கியானம்

நான் படிக்கும்போது எனது கருத்துக்களை புஸ்தகம் முழுதும் எழுதுவதும், கடைசி பக்கத்தில் நானாக ஒரு இன்டெக்ஸ்INDEX  தயாரித்து எழுதுவதும் வழக்கம். அதில் மறுபிறப்பு என்று நான் எழுதிய குறிப்புகள் —

RV.10-55-5

நேற்று இறந்தவன் இன்று உயிரோடு இருக்கிறான்

இதைப்பாடிய புலவரே அடுத்த 4 துதிகளில் இறந்தவர்கள் பற்றிப்பாடும் பின்னணியில் இதைக் காண்க.

RV.10-30-9

இந்த மந்திரத்தில் இருமை என்ற சொல்லுக்கு இம்மை, மறுமை என்று சாயனர் விளக்கம் சொல்கிறார். அதையே ஒப்புக் கொள்ளும் வள்ளுவனும் மறுபிறப்பை ஒப்புக்கொள்கிறான் (குறள் 23)

இம்மை, மறுமை, அமிர்தம்; இறவாத தன்மை, பிறவாத தன்மை , எமலோகம், சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் பாடல்களை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது இந்துக்கள் இன்று கொண்டுள்ள கருத்துக்களையே ரிக் வேத காலத்திலும் கொண்டிருந்தனர் என்பதற்குச் சான்று ஈமக்ரியைப் பாடல்களில் உள்ளன.

இந்துக்கள் இது பற்றி படிப்பதோ பேசுவதோ ‘அபசகுனம்’ என்று கருதுவதாலும் , மார்க்சீய மாக்ஸ்முல்லர் கும்பல்களுக்கு இது அவர்கள் கொண்டுள்ள கொள்கைகளுக்கு விரோதமானது என்பதாலும் இந்த விஷயங்கள் அதிகமாக வெளியே தெரிவதில்லை. மரணத்துடன் தொடர்புள்ள நிர்ருதி என்ற தேவதையை ரிக் வேதம் நிறைய இடங்களில் குறிப்பிடுகிறது. அது மட்டுமே இன்று புரோகிதர்களுக்குத் தெரியும்; பயன்படுத்துகின்றனர். ஆனால் மற்ற தேவதைகள் அந்த மந்திரங்களில் மற்றும் பேசப்படுவதால் இந்தப் புஸ்தகத்திலும் அவைகளுக்கு விளக்கம்  இல்லை. இது தவிர ‘மர்ம நாமம் (ரகசியப்  பெயர்கள்) பற்றியும் இது போன்ற துதிகளில் வருகிறது ; ரகசிய நாமங்கள் பற்றிய விளக்கமும் இல்லை.

தேவார , திருவாசக, திருமந்திர, திவ்வியப் பிரபந்த பாடல்கள் இவைகளுக்கு விளக்கமாக அமைகின்றன.

பவுத்த, சமண மதங்களுக்கு முந்தைய உபநிஷதங்களில் மிகத்தெளிவாக உள்ளன ; பகவத் கீதைப்  புஸ்தகத்துக்கு நூற்றுக்கணக்கில் உரைகள் உள்ளன. அவைகளில் மறு ஜென்மம் பற்றிய பாடல்களுக்கு எல்லோரும் உபநிஷதக் கருத்துக்களையே மேற்கோள் காட்டுகின்றனர்.

–சுபம்–

tags- வேதத்தில்,  புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை, கருத்துக்கள்

வேதத்தில் தங்கப் பல் வைத்தியம்! (Post No.7008)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 24 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 8-19 am

Post No. 7008


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

gold tooth

பயணம் பற்றி வேதத்தில் சுவையான செய்திகள்! (Post No. 4946)

பயணம் பற்றி வேதத்தில் சுவையான செய்திகள்! (Post No4946)

 

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan 

 

Date: 24 April 2018

 

Time uploaded in London –  21-04  (British Summer Time)

 

Post No. 4946

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

உலகிலேயே மிகவும் பழைய பயணச் செய்திகள் இந்து மத நூல்களில்தான் உள்ளன. எனது ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் முன்வைக்கிறேன்.

 

ராமன் கால் நடையாக உத்தர பிரதேசத்தில் இருந்து இலங்கை வரை சென்றதை நாம் அறிவோம்.

ராமனுக்குப் பிறகு, மஹாபாரதப் போரில் நடு நிலை வகித்த பலராமன் பாரத யாத்திரை (தீர்த்த யாத்திரை) என்றதை உலக மஹா இதிஹாசம் மஹாபாரதம் இயம்பும்.

 

தமிழில் சிலப்பதிகாரத்தில் தீர்த்த யாத்திரை பற்றி மிகத் தெளிவான விஷயங்கள் இருக்கின்றன.

 

ஆதிசங்கரர், போக்கு வரத்து வசதி இல்லாத காலத்தில் அடர்ந்த காடுகளையும் உயர்ந்த மலைகளையும் தாண்டி இமயம் வரை சென்று ஐந்து இடங்களில் மடங்கள் நிறுவியதையும் படித்திருப்பீர்கள்.

ராமனுஜர், குருநானக் போன்ற மஹான்கள் பாரதம் முழுதும் பயணம் செய்து புனிதத் தலங்களை தரிசித்தனர். புத்தர் வட இந்தியா முழுதும் பிரசாரம் செய்தார். மாமன்னன் அசோகனோ கப்பல் மூலம் தன் மகனையும் மகளையும் இலங்கை முதலிய இடங்களுக்கு அனுப்பி தர்மப் பிரசாரம் செய்தான்.

அவ்வையார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலியோர் கைலாஷ் வரை சென்றனர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆயினும் இவைகளுக்கு எல்லாம் முன்னர் தோன்றிய ஐதரேய பிராஹ்மணத்தில் உள்ள செய்தி மிகவும் சுவையானது.

ஹரிசந்திரன் கதையை எல்லோரும் அறிவர்; உண்மையே பேசி, மிகவும் இக்கட்டுள்ளாகி, இறுதியில் உலகப் புகழ்பெற்ற சூரியகுல மன்னன். இக்க்ஷ்வாகு சூரியகுல முதல் மன்னன். அவ்வரிசையில் 28ஆவது மன்னன் ஹரிச்சந்திரன். அவனுடைய மகன் ரோஹிதன்  காட்டுக்குள் ஆறு ஆண்டுகள் இருந்தான். அவன் ஒவ்வொரு முறை கிராமத்துக்குத் திரும்பி வந்த போதும் இந்திரன் பிராமணன் வடிவில் வந்து அவனைப் பயணம் செய்து கொண்டே இரு, அதனால் பல நன்மைகள் விளையும் என்கிறான்.

 

உலகின் மிகப்பழைய பிரயாணப் பொன்மொழிகள் இவைகள்தாம். இதோ அந்தப் பயணப் பொன்மொழிகள்:-

இந்து சந்யாசிகள் ஓரிடத்தில் ஓரிரவுக்கு மேல் தங்கக்கூடாது என்றும் விதி உள்ளது. ம ழைக்காலத்தில் மட்டும், ஒரே இடத்தில் தங்கி நான்கு மாத (சாதுர்மாஸ்ய வ்ரதம்) நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்

 

ரோஹித, காட்டிற்குச் சென்றான். ஓராண்டுக்குப் பின்னர் கிராமத்துக்குத் திரும்பி வந்தான்; அங்கு இந்திரன், பிராமணன் உருவத்தில் சென்றான். அவனிடம் சொன்னான்:” பயணம் செய்யாதவனுக்கு இன்பம் இல்லை, ரோஹித! இதை நாம் அறிவோம். நாம் மனித சமுதாயத்தில் வாழ்கையில், நல்லவனும் கூட கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. இதை மனிதர்களே இல்லாத இடங்களுக்குப் பயணம் செய்தால் தவிர்க்க முடியும்; பயணம் செய்வோரின் நண்பன் இந்திரன்; ஆகையால் அலைந்துகொண்டே இரு.

-ஐதரேய பிராஹ்மணம் 7-3-15

மீண்டும் ஓராண்டுக்குப் பின்னர் ரோஹித, கிராமத்து குத் திரும்பி வந்தான்; மீண்டும் இந்திரன் அவனிடம் சென்று சொன்னான்: “அலைந்து திரியும் ஒருவனுடைய கால்கள், மலருக்குச் சமமானவை. அவனுடைய ஆன்மா வளர்ந்து பழங்களை அனுபவிக்கும். மேலும் ஒருவன் பிரயாணம் செய்யும்போது ஏற்படும் துன்பங்களால் அவனது பாவங்கள் நஸித்துப் போகும்; ஆகையால் அலைந்து கொண்டே இரு.

 

ஒரு பிராமணன் இப்படிச் சொல்வதைக் கேட்டு அவனும் காட்டுக்குள் அலைந்தான்.

மீண்டும் ரோஹித, கிராமத்துக்கு வந்த போது, மாறு வேடத்தில் சென்ற இந்திரன் சொன்னான்:

யார் ஒருவன் உடகார்ந்து இருக்கிறானோ அவனது அதிர்ஷ்டமும் உட்கார்ந்து விடும்

அவன் எழுந்திருந்தால் அதிர்ஷ்டமும் எழுந்து நிற்கும்;

அவன் தூங்கினால் அதிர்ஷ்டமும் தூங்கிவிடும்;

அவன் நகர்ந்தால், அதுவும் நகரும்; ஆகவே அலைந்து திரி.

 

இதைத் தமிழில் உள்ள பழமொழிகளுடன் ஒப்பிடலாம்:

குந்தித் தின்றால் குன்றும் (அதிக அளவுள்ள செல்வமும்) கரையும்;

திரை கடலோடி திரவியம் தேடு.

 

உழைப்பவனுக்கு செல்வம் கிடைக்கும், தங்கும் என்பதே இதன் பொருள்

இப்படிச் சொன்னவுடன் ரோஹித காட்டுக்குச் சென்று விட்டு ஓராண்டுக்குப் பின்னர் திரும்பி வந்தான்.

 

கலி (யுகம்) கீழே இருக்கிறது; த்வாபர யுகம் மேலே சுற்றிக் கொண்டிருக்கிறது; த்ரேதா (யுகம்) எழுந்து நிற்கிறது, கிருத யுகம் நடந்து செல்கிறது; ஆகவே, ரோஹித நீயும் நட.

 

இதை இப்படியும் சொல்லலாம்: தூங்கும் மனிதன் கலியுகம் போன்றவன்;

விழித்துக் கொள்பவன் த்வாபர யுகம் போன்றவன்;

எழுந்து நிற்பவன் த்ரேதா யுகம் போன்றவன்;

பயணம் செய்பவன் கிருதயுகம் போன்றவன்.

 

இதைக் கேட்டு ரோஹிதன் மேலும் ஓராண்டு காட்டுக்குச் சென்றான்.

 

சூதாட்டத்திலும் காயுருட்டும் போது நான்கு என்பது கிருத யுகத்தைக் குறிக்கும்; இதுதான் மிகவும் அதிக மதிப்பு உடையது.

அவன் திரும்பி கிராமத்துக்கு வந்தபோது, மாறுவேடம் தரித்த இந்திரன் சொன்னான்.

யார் ஒருவன் பயணம் செய்கிறானோ அவனுக்கு தேனும், அத்திப் பழமும் கிடை க்கும். சூரியனின் அழகைப் பார். தினமும் அலைந்து திரிந்தும் அவன் பொலிவுதான் குறைந்ததா? ஆகையால் தொடர்ந்து நட.

 

மேலும் சில மேற்கோள்கள்

வெளிநாடு செல்லாமல், ஒருவனுக்குப் புகழ் கிட்டாது; அறிவோ சாதனைகளோ வராது – கதா கோசம்

 

நமக்கும் தாய், தந்தை,  சஹோதரன்,நண்பன் ஆகியோருக்கும் உள்ள தொடர்பு, பந்தம் எல்லாம் அன்ன சத்திரத்தில் சந்திக்கும் பயணிகளின் உறவைப் போன்றது தாந் மஹா பாரதம், சாந்தி பர்வம்.

 

 

பயணத்தின் முக்கியத்துவத்தை உலகிலேயே பழைய நூலான ரிக்வேதத்தின் துணை நூலான ஐதரேய பிராஹ்மணம் வலியுறுத்துவது போல வேறு எங்கும் காண முடியாது!

 

பிராமணர்களுக்கும் பெண்களுக்கும் தடை

 

பிராமணர்கள் கடல் கடந்து வெளி நாடு செல்லக்கூடாது என்று மநுஸ்ம்ருதி தடை போடுகிறது.

 

பெண்கள் வெளிநாடு செல்லக்கூடாது என்று தொல்காப்பியம் தடை போடுகிறது. (இவை இரண்டும் பற்றி முன்னரே விரிவான கட்டுரை த, ந்துள்ளேன்)

 

–சுபம்

ரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் காசு! (Post No.4244)

Research article written by London Swaminathan

 

Date: 26 September 2017

 

Time uploaded in London-  7-18 am

 

 

Post No. 4244

 

Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

 

 

(இது பற்றி சின்னாட்களுக்கு முன் நான் ஆங்கிலத்தில் எழுதி, இங்கு வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், வேத மந்திரங்களின் எண்களைக் குறிப்பிட்டதால், இங்கு அவைகளை எழுதாமல் விஷயத்தை மட்டும் சுருக்கி வரைகிறேன். முழு விவரம் வேண்டுவோர் எனது ஆங்கில கட்டுரையைப் பார்க்கவும்; படிக்கவும்.)

 

உலகிலேயே பழமையான நூல் ரிக் வேதம்; அண்மைக்கால சரஸ்வதி நதி தீர ஆராய்ச்சியானது இதை மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகத்துக்கும் முந்தையது என்று காட்டிவிட்டது; அதை நாஸா விண்கலப் புகைப்படமும் உறுதி செய்தது; இதற்கு முன்னரே துருக்கியில் வேதக் கடவுளர் பெயர் பொறித்த க்யூனிபார்ம் களிமண் கல்வெட்டு கிடைத்ததால், வேத மந்திரம் கி.மு.1380 ஆம் அண்டிலேயே துருக்கி-சிரியா சென்று விட்டதை தொல் பொருட் துறை உறுதி செய்தது. அதற்கு முன்னரே கார்த்திகை நட்சத்திர ஆராய்ச்சியானது, வேதங்கள் கி.மு 4500 க்கு முன் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று பால கங்காதர திலகரும், ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் நிரூபித்தனர்.

 

இவ்வளவு பழமை பொருந்திய ரிக் வேதத்தில், வியாச மஹரிஷியால் கி.மு 3100-க்கு முன் நான்காகப் பிரிக்கப்பட்ட வேதத்தில்,தங்க நகைகள், தங்கக் காசு பற்றி உள்ள விஷயங்கள் இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடு என்பதையும், வேத கால மக்கள் செல்வச் செழிப்பிலும் நாகரீ கத்திலும் வானத்தைத் தொட்டுவிட்டனர் என்பதையும் காட்டுகிறது.

 

இது மாக்ஸ்முல்லர் வகையறாக்களுக்கும் கால்டுவெல் தொகையறாக்களுக்கும் செமை அடி கொடுக்கும்; ஏனெனில் அவர்கள் “வேத கால மக்கள் நாடோடிகள், மாடு மேய்த்துக் கொண்டு இந்தியாவுக்குள் புகுந்த நாடோடிகள், எழுத்தறிவு இல்லாதவர்கள், பெரும்பாலும் வேதத்தில் சிறுபிள்ளைத்தனமான (mostly childish)  பாடல்கலைளையே காண இயலும்” என்றெல்லாம் உளறிக்கொட்டி கிளறி மூடியிருந்தார்கள்; தாங்கள் வாங்கிய கூலிக் காசுக்கு ஏற்ப தாளம் போட்டார்கள். மாறடித்தார்கள்; ஆனால் வேத கால  இலக்கியத்தில் வரும் தங்கக் காசு, தங்கத்துக்கான சொற்கள், நிஷ்கா என்னும் உலகின் முதல் தங்க நாணயம் ஆகியவற்றைப் படிப்போர் வியந்து மகிழ்வார்கள்; அவர்கள் தட்சிணையா க வாங்கிய தங்க நாணயங்களைப் பார்ப்போருக்கு அடக் கடவுளே இவ்வளவு செழிப்புள்ள காலத்தில் நாமும் வாழ மாட்டோமா என்று சிந்திக்க வைக்கும்.

 

சேர மன்னர்கள் பிராமணப் புலவர்களுக்கு தங்க நாணயங்களை மழை போலப் பொழிந்த பாடல்கள் சங்க இலக்கியத்தின் 18 நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்தில் உள்ளன. செங்குட்டுவன் தனது உடல் எடையான 50 கிலோவுக்கு நிகரான தங்கத்தை துலாபாரம் மூலம் மாடல மறையோன் என்ற பிராமணனுக்கு வழங்கிய செய்தி ‘நெஞ்சை அள்ளும்’ சிலப்பதிகார காவியத்தில் வருகிறது. பராசரன் என்ற பார்ப்பனன், திருத்தங்கலில் வேதம் சொல்லிய ஒரு சிறு பிள்ளையிடம் தனது தங்க நகை மூட்டையைக் கொடுத்துவிட்டுப் போன செய்தியும் சிலம்பில் காணக்கிடக்கிறது. அப்போதாவது, ரோமானிய சாம்ராஜ்யம், கேரளத்துக்குள் தங்க மழை பொழிந்த செய்தி சங்க இலக்கிய நூல்களிலும் ரோமானிய எழுத்தர் நூல்களிலும் உள்ளன. ஆனால் வேத கால மக்களுக்கு எங்கிருந்து தங்கம் கிடைத்தது? அதுவும் வேத கால துதிகளில் இருக்கிறது. நதிப் படுகைகளில் இருந்து அவர்கள் தங்கத்தைச் சலித்து எடுத்து தூய்மைப் படுத்திய செய்தியும் வேதத்தில் உள்ளது.

பிற்காலத்தில் தர்மபுத்திரன், அர்ஜுனன் ஆகியோர் இமய மலையிலுள்ள உத்தரகுருவில் தங்கம் எடுத்தசெய்தி உள்ளது. மெகஸ்தனிசும், ஸ்டிராபோவும் இந்தியாவின் தங்க வளத்தைப் புகழ்கின்றனர். உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் என்று மேலை நாட்டினர் புகழும் ஹெரடோட்டஸோவெனில் இந்தியாவில் இராட்சத எறும்புகள் பூமிக்கடியில் இருந்து தங்கத்தைக் கொண்டுவந்த்த அதிசயச் செய்தியை எழுதி வைத்துள்ளார். இந்தியா= தங்கம்!!!

 

தங்கத்துக்கும், தங்க நகைகளுக்கும் வேதத்தில் உள்ள சொற்கள் எல்லோரையும் மலைக்க வைக்கும்:

ஜாத ரூபம், ஹரிதம், ஹிரண்யம், ஸ்வர்ணம், நிஷ்கா, சந்த்ர — இப்படி பல பெயர்கள்!

மேலும் அண்மைக்காலம் வரை நம்மவர்கள் பயன்படுத்திய குந்துமணி எடை (கிருஷ்ணல) வேத கால நூல்களில் உள்ளது. ஆகவே தங்கத்துக்கு எடை போடும் வழக்கமும் அப்போது இருந்ததால் நல்ல தங்கநகைக் கடைகள் இருந்திருக்க வேண்டும்

 

ரஜத என்ற வெள்ளி பற்றியும் வெள்ளிக் காசுகள் பற்றியும் வேதங்கள் பாடுகின்றன.

உலகிலேயே மிகப் பணக்கார நாடு இந்தியாதான்! இன்றும் உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான் என்றும் ஐந்து ஆறு கட்டுரைகளை இதே பிளாக்கில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாரங்களுடன் எழுதினேன். இப்போது வேதத்தில் இன்னும் ஒரு வியப்பான செய்தியைக் கண்டேன்.

 

நான் பழங்கால நாணயங்களை ஆராய்பவன். என்னிடமுள்ள ஆங்கில நூல்கள் அனைத்திலும் முதல் முதலில் உலகில் நாணயங்களை வெளியிட்டவர்கள் கிரேக்கர்கள் என்றும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதலே இவை கிடைகின்றன என்றும் எழுதியுள்ளனர். அந்த நாணயங்களும் மியூசியங்களில் உள்ளன.

 

நிஷ்கா என்னும் தங்க நாணயம்!

 

ஆனால் உலகிலேயே முதல் நாணயத்தை வெளியிட்டவர்கள் இந்துக்கள் என்ற செய்தி வேதத்தில் உள்ளது (ஆங்கிலக் கட்டுரையில் பாடல் எண்களைக் கொடுத்துள்ளேன்). அந்த நாணயத்தின் பெயர் நிஷ்கா. இதற்கு இரு பொருள் உண்டு: 1. நாணயம்/ காசு, 2. கழுத்தில் அணியும் ஆபரணம்.

 

இது உண்மையே; இதில் முரண்பாடு எதுவும் இல்லை; ஆதிகாலத்தில் காசு மலை செய்வது எளிதாக இருந்தது. மேலும் இது அழகானது. இன்றும் கோவில்களிலும் இந்து மாதர்களின் கழுத்திலும் காசு மாலை ஜ்வலிப்பதைக் காணாலாம். ஆக நிஷ்கா என்பது இரு பொருளிலும் வழங்கி இருக்கலாம்.

 

பிற்கால இலக்கியங்களில் நிஷ்கா என்பது தங்க காசு என்பது எல்லோரும் அறிந்ததே.மேலும் ஒரு பொருளை கரன்ஸி (நாணயம்) என்று அறிய அதனுடன் எண் அளவு இருக்க வேண்டும். அப்படி அஷ்ட புத் என்ற எண்ணுடனும், சதமானம் (100) என்ற எண்ணுடனும் காசுகள் கையாளபட்டுள்ளன. இன்றும் கூட கல்யாணங்களில் பரிசுகளை ஓதிவிடும் போது பிரமாணர்கள் சதமானம் பவது என்ற மந்திரத்தைச் சொல்லி லட்சம் கட்டி வராஹன் என்று மிகைப்படுத்தி பரிசை அளிப்பர் ( மாமா கொடுத்தது, அத்தை கொடுத்தது என்பதால்)

 

ஆக உலகிலேயே முதல் முதலில் நாணயங்களை வெளியிட்டது வேத கால இந்துக்களே. ஆனால் பெரிய துரதிருஷ்டம்! சிந்து வெளியிலோ, வேத கால புதை பொருள்களிலோ இப்படி ஒரு நாணயம் கூட நமக்குக் கிடைக்கவில்லை. இதற்கு இந்துப் பெண்களின் குணமே காரணம். அடிக்கடி தங்கத்தையும் தங்க நகைகளையும் உருக்கி புதுப் புது டிசைன்களில் நகை செய்து கழுத்தில், காதில், காலில் பூட்டி பெருமை அடித்துக்கொள்வர். குப்தர் காலத்தில் லட்சக் கணக்கில் தங்க நாணயங்கள் அடித்ததால் இன்று பிரிட்டிஷ் மியூசியத்தில் (லண்டன்) அவைகளைக் காண முடிகிறது. நம் ஊரில் கிடைத்தன வெல்லாம், பெண்களின் கழுத்தில் தொங்குகின்றன. ஒரு வேளை பத்மநாப சுவாமி கோவில் போன்ற இடங்களில் பழங்கால நாணயங்கள் இன்னும் இருக்கலாம்.

ஆக உலகிலேயே நிஷ்கா என்னும் தங்க நாணயத்தை வெளியிட்ட பெருமை நம்மையே சாரும்!

 

 

தட்சிணையில் தங்க ரதம்!!!

 

இதைவிட மிக மிக வியப்பான விஷயம் பிராமணர்கள் பெற்ற தங்க தட்சிணையாகும்!

 

ஆறு வகையான தங்க தட்சிணைகளைப் பட்டியல் இடுகின்றனர்.

யாக யக்ஞங்களில் யாக குண்டங்களை அமைப்பதற்குப் பயன்படும் செங்கற்கள் போல தங்க செங்கற்கள் தட்சிணையாக கொடுக்கப்பட்ட விஷயமும் உளது.

 

தங்க ஏர் (சீதா) கொண்டு மன்னர்கள் ஆண்டுதோறும் நடத்தும் சடங்கு பற்றியும் உள்ளது இப்படி ஜனகன் உழச்சென்றபோது கிடைத்தவள்தான் சீதாதேவி (ஏர்ப் பெண்)!

 

சேதி என்னும் மன்னனின் மகனான காசு அளித்த ஆயிரக்கணக்கான பசுமாடுகள் குதிரைகள் ஒட்டககங்கள் பற்றிய செய்தி ரிக் வேதத்தில் எட்டாம் மண்டலத்தில் இருக்கிறது.

 

கனிதன் என்பவனின் மகனான ப்ருதுஸ்ரவஸ் தங்க ரதமும் ஆயிரக்கணக்கில் பசுமாடுகளும் கொடுத்ததாக வாச அசவ்ய என்ற ரிஷி பாடுகிறார்.

 

சங்கத்தமிழ் இலக்கியத்தில் பரிசு பெற்ற புலவர்கள் மற்றவர்களை ஆற்றுபடுத்தும்போது கூறும் விஷயங்கள் போல ஒவ்வொரு பிராமணரும் பெற்ற பரிசுகள் (தட்சிணையாக) தான துதிகள் என்ற துதிகளில் வருகிறது. இதில் நம்புவதற்கரிய மிகப் பெரிய எண்ணிக்கையில் பரிசுகள் உள்ளன. வேத கால மக்களின் செல்வச் செழிப்பு அளவிடற்கரியது.

 

 

 

பெண்கள் அணிந்த ஆபரணங்களின் பெயர்களும், தங்க நகைகளுடன் அவர்கள் பவனி வந்த செய்தியும் வேதங்களில் உள்ளன.!

 

தங்கமோ தங்கம்! அவ்வளவும் சொக்கத் தங்கம்!

 

TAGS:- முதல் தங்கக் காசு, வேதத்தில், தங்க நகை, தங்கத் தேர்

–சுபம்–

 

இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 2 (Post No.3207)

chidambaram-1

Picture: சிதம்பரம் தீட்சிதர்

Written by London Swaminathan

 

Date: 1 October 2016

 

Time uploaded in London: 10-12 AM

 

Post No.3207

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

கட்டுரையின் முதல் பகுதியைப் படித்து விட்டு இரண்டாம் பகுதியைப் படித்தால் பொருள் நன்கு விளங்கும்.

dikshitar-priests-festival-ceremony

Picture: சிதம்பரம் தீட்சிதர்கள்

கேசம்=முடி

 

கேச என்னும் சொல் மயிர் என்பதைக் குறிக்க அதர்வண வேத காலத்திலிருந்து பயன்படுத்தப்படுகிறது. அநேகமாக கேசம் என்றால் என்ன என்பது எல்லா இந்தியருக்கும் தெரியும். முடி வளர் தைலங்கள் அனைத்தும் ‘கேச’ என்ற பெயருடனேயே துவங்கும். நீண்ட முடி வளர்த்தால் பெண்போல இருப்பான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் அடர்த்தியான முடிக்கான பிரார்த்தனை  அதர்வண வேதத்தில் உள்ளது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பயிலப்பட்ட சொல் இன்றும் அதே பொருளில் நம்மிடையே புழங்குவது — தமிழ் நட்டிலும் — புழங்குவது குறிப்பிடத்தக்கது.

 

 

க்ஷுரா= Razor

 

சவரம் செய்தல் என்பது பிளேட் என்று பொருள்படும் க்ஷுரா’ (சவரக் கத்தி) என்ற சொல்லிலிருந்தே வந்தது. இது ரிக் வேதத்தில் மூன்று இடங்களில் வருகிறது. ஆனால் முயல் விழுங்கிய ‘க்சுரா’ என்று ஒரு மந்திரத்தில் வருவதால் அந்த இடத்தில் சவரக் கத்தி என்பது பொருத்தமாக இல்லை.

 

வேதத்துக்கு சங்க கால தமிழர்கள் “மறை” என்ற அழகான சொல்லை தெரிவு செய்துள்ளனர். வேத காலப் புலவர்கள் எதையும் நேரடியாகச் சொல்லாமல் மறை பொருளில் சொல்லுவதால் தமிழன் இச்சொல்லைக் கண்டுபிடித்து வைத்தான். ஆக முயல் விழுங்கிய பிளேடு என்பது ஏதோ ரகசியப் பொருளுடைத்து என்றே நான் கருதுகிறேன்.

 

சங்கத் தமிழ் இலக்கியம் மயிர்குறை கருவி (Scisors or Shaving Razor) என்ற சொல்லைப் பயிலுகிறது (பொரு.29, பலைக் கலி.31,35)

 

தட்சிண கபர்தா Rig Veda (7-33-1) (வலது பக்க குடுமி)

மலையாள தேசத்தில் நம்பூதிரி பிராமணர்களும், சோழ தேசத்தில் முன் குடுமிச் சோழியர், சிதம்பரம் தீட்சிதர்களும் தலை முடி வைத்திருக்கும் தனிப் பாணியை (Style) இன்றும் காணலாம். இது வேத காலத்திலேயே துவங்கியதற்கு தட்சிணதாஸ் கபர்தா என்ற சொல் சான்று தரும். ஒரு வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பது மிகவும் அதிசயமானது. இது தென்னாட்டு பார்ப்பனர்களின் பழமையையும் காட்டும்.

 

nampudiri

படம்: நம்பூதிரி பிராமணர்

பலித (நரைமுடி)

ரிக்வேத (1-144-4, 1-164-1, 3-55.9) காலம் முதல் இச்சொல் பயிலப்படுகிறது. ஜமதக்னி முனிவரின் வழிவந்தோர் நரை அடைவதில்லை என்றும் பாரத்வாஜர் தனது கிழப்பருவத்தில் ஒல்லியாக ஒடிந்து, நரை முடியுடன் காணப்பட்டதாகவும்  வேதங்கள் வருணிக்கின்றன.

 

சதபத பிராமனணம் முதலில் தலிலையில் தோன்றும் நரை முடி பிறகு உடலிலும் கைகளிலும் பரவுவதை பேசும்

 

இந்த நரை முடி பற்றிய விஷயம் புறநானூற்றிலுள்ள (பாடல் 191) புகழ்பெற்ற பிசிராந்தையாரின் பாடலை நினைவு படுத்தும்.

 

ஐயா, தொண்டுக் கிழமாகிவிட்டீரே; முடி மட்டும் கருக்கவில்லையே; ஏதேனும் கூந்தல் வளர் தைலம் தடவுகிறீரோ என்று எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். அவர் சொல்லுகிறார்:- ஐயன்மீர் என் வீட்டிலும் ஓம் சாந்தி, நாட்டிலும் ஓம் சாந்தி, என் மனதிலும் ஓம் சாந்தி; இப்படி சாந்தி நிலவுகையில் முடி எப்படி நரைக்கும்? என்று பாடுகிறாரார்:–

 

யாண்டு பலவாக நரையில வாகுதல்

யாங்கா கியரென வினவுதிராயின்

மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;

யான்கண் டனையர் என் இளையரும்: வேந்தனும்

அல்லவை செய்யான், காக்கும்; அதன் தலை

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

——(புறநானூறு ,பாடல் எண். 191)

 

பொருள்:-

நுமக்குச் சென்ற ஆண்டுகளோ  பலவாயின; இருந்தும் நரைமுடி காணவில்லை. இது எப்படி? என்று கேட்கிறீர்களா?

என் மனைவி நல்லவள்; என் பிள்ளைகள் கெட்டிக்காரர்கள்; என்னிடம் பணிபுரியும் ஏவலரோ நான் ‘எள் என்றால் எண்ணை யாக’ நிற்பர்; குறிப்பறிந்து ஒழுகும்  தன்மையர். என் அரசன், எந்த தவற்றையும் செய்யான்; இதற்கெல்லாம் மேலாக என் ஊரிலுள்ள அறிஞர்கள் புலன்களை வென்று, உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள். (எனக்கு கலையே இல்லை; கவலை இல்லாதோருக்கு நரை முடி வராதே!)

holy-man-of-india

–subham–

 

 

 

வேதத்தில் தங்கமும் ரத்தினக் கற்களும்!

40624-gold2b2bganesh

Compiled by London swaminathan

Date: 23 April 2015; Post No: 1822

Uploaded in London 9-35 காலை

ரிக் வேதம் கி.மு 1700 அல்லது அதற்கு முந்தையது என்று மேலை உலகம் மெதுவாக ஒப்புக் கொள்ளத் துவங்கி விட்டது. நாள் ஆக ஆக ஜெர்மானியர் ஜாகோபி, சுதந்திரப் போர் வீரர் பால கங்காதர திலகர் ஆகியோர் வான சாஸ்திர கணக்குப்படி சொன்ன கி.மு. 4000-க்கும் முந்தையது ரிக் வேதம் என்றும் உலகம் ஒப்புக் கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வேதத்தில் ரத்தினக் கற்கள் மற்றும் தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் சில முக்கியமான விஷயங்களை உணர்த்துகின்றன.

1.வேத கால இந்துக்கள் நாகரீகத்தில் மிகவும் முன்னேறியவர்கள். ஏனெனில் தங்கத்தை ஆற்று மணலில் சலித்து எடுப்பதோடு, அபராஜித தங்கத்தை வெட்டி எடுப்பதோடு, தற்காலத்தில் செய்வது போல தங்கத் தாதுக்களை உருக்கியும் தங்கம் எடுத்துள்ளனர்.

2.வேத கால நகைகளின் பெயர்களைப் பார்த்துவிட்டு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களில் உள்ள நகைகளைப் பார்க்கையில் வேத காலத்தில் நகைகள் எப்படி இருந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அவர்கள் பணக்காரர்கள் என்பதும், உல்லாசமான வாழ்க்கை நடத்தினர் என்பதும் தெரிகிறது.

3.நகைகள், தங்கம், வெள்ளி முதலியவற்றுக்காண சம்ஸ்கிருத பெயர்களின் வேர் சொற்கள் முதலியன– வேறு ஐரோப்பிய மொழிகளில் இல்லாததால், ஆரியர்கள் வெளியிலிருந்த வந்தனர் என்ற கொள்கையில் பலத்த இடி விழுகிறது. அப்படி வெளியிலிருந்து வந்திருந்தால் இந்த மொழியின் தாக்கம் அங்கே இருந்திருக்கும். இது மட்டுமல்ல ஆயிரக் கணக்கான வேத கால சம்ஸ்கிருத்ச் சொற்கள் அந்த மொழிகளில் இல்லை. வில்லியம் ஜோன்ஸ் சொன்ன மொழிக் கொள்கை தவறு என்பதும் தெரிகிறது.

4.ரிக் வேதத்தில் மயில், நீர், மீன் போன்ற தமிழ் சொற்கள் இருப்பதாகக் கூறி சிலர் வியப்பர். இன்னும் சிலர், சிந்துசமவெளியில் தமிழ் “கதைக்கப்பட்ட”தற்கு இதுவும் ஒரு சான்று என்று கதைப்பர். ஆனால் நீர் போன்ற சொற்கள் பழம் கிரேக்கத்தில் இருப்பதை நான் காட்டியுள்ளேன். இப்பொழுது ரிக் வேதத்தில் காணப்படும் மணி என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களில் 400-க்கும் மேலான இடங்களில் காணப்படுவது எனது ஆராய்ச்சி முடிபுகளை உறுதிபடுத்துகிறது. அதாவது தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை- கிளைவிட்டுப் பிரிந்து 2000 ஆண்டானதால் இரண்டும்  தனி மொழிகள் ஆயின. இதை அறிந்த நம் முன்னோர்கள் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்குக் கடன் வாங்கவும் தயங்கவில்லை. முன்னர் இருந்த மூல மொழியைச் சேர்ந்த சொற்களே நீர், மீன்,அரிசி (வ்ரீஹி), மணி, இருதயம், மயூர (மயில்) முதலியன. இன்னும் நிறைய பொதுச் சொற்கள் ரிக் வேதத்தில் உள. அவைகளைத் தனிக் கட்டுரையாகத் தருவன்.

92909-gold2csriranjini2bkodampally

மனைவியருக்கு தங்கம் வாங்கிக் கொடுப்பதில் மகிழ்ந்தனர் கணவன்மார்கள்

5.வேதங்கள் சமய சம்பந்தமான மந்திரங்களை உடையவை. அவை தங்கம், வெள்ளி பற்றிய உலோகவியல் (மெட்டல்லர்ஜி) புத்தகம் அல்ல. ஆயினும் அதில் நிறைய விஷயங்கள் உள. இவைகளை மொத்தமாக வைத்துப் பார்க்கையில் – குறிப்பாக அவைகளில் வரும் மிகப் பெரிய டெசிமல் சிஸ்டம்/ தசாம்ஸ எண்களை வைத்துப் பார்க்கையில் இது நாகரீகத்தில் சுமேரிய எகிப்தியர்களை விட முன்னேறிய நாகரீகம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதில் வரும் ஆபரணங்களின் பெயர்கள் உடலில் எல்லா உறுப்புகளிலும் நகைகள் அணிந்ததைக் காட்டுகின்றன.

6.வேத காலத்தில் பெண்கள் அணிந்த நகைகளைக் கற்பனை செய்ய, கிமு. மூன்றாம் நூற்றாண்டு முதல் நமக்குக் கிடைக்கும் கற்சிலைகள் உதவும். கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய பெண்கள் படங்களைப் பக்கத்தில் வைத்து ஒப்பிட்டால் இந்தியப் பெண்கள் தான் அதிக நகைகள் அணிந்திருந்தனர் என்பதும் தெரியும். கிரேக்கர் கழுத்தில் நகைகள் இரா. சுமேரியர் கழுத்தில் கொஞ்சம் இருக்கும். எகிப்தியர் மட்டும் கழுத்தளவுக்கு நம்மை ஒட்டி நகை அணிந்திருப்பர். ஆனால் இந்துக்களோ கழுத்துக்குக் கீழேயும் இடுப்பிலும், கைகளிலும், கால்களிலும் நகை அணிந்ததை சிற்பங்களில் காணலாம்.

7.ஆண்களும் நகை அணிந்ததை வேதங்கள் செப்பும். இந்திரன், மருத்துக்கள் நகை அணிந்ததையும் அஸ்வினி தேவர்கள் தங்க ஆசனம் பொருத்திய ரதங்களில் ஏறுவதையும் அவை கூறுகின்றன.

8.தங்க கரன்ஸிக்களும் (பணமாகப் பயன்படுத்தும் தங்கக் காசு), தங்கத்தை நிறுப்பதற்கான எடை அளவுகளும் இருந்தன இதுவும் பாரதம் முழுதும் ஒரே மாதிரி இருந்துள்ளது. 100 குந்துமணி அளவு, 100 தானிய எடை என்பன வேதத்தில் காணக் கிடக்கின்றன. திவோதாச என்ற மன்னன், ஒரு புரோகிதருக்கு தங்கக் கட்டிகளைப் பரிசளித்தான். இன்னொருவர் 4 தங்கத் தாம்பாளங்களைப் பரிசளித்தார்.

9.ஆயிரம் பொற்காசு அளிக்கும் வழக்கம் தருமி (திருவிளையாடல் புராணம், அப்பர் பாட்டு) காலம் வரை இருப்பதை நாம் அறிவோம். இதுவும் வேத கால வழக்கம். மாட்டின் கொம்பில் கட்டப்பட்ட ஆயிரம் பொற்காசுகளை ஜனக மாமன்னன் பரிசளித்ததை உபநிஷத்துகள் கூறும். இவ்வளவு தங்கத்தை கி.மு 1700-ஆம் ஆண்டிலேயே பரிசளித்திருந்தால் இந்தியா எவ்வளவு பணக்கார நாடாக இருந்திருக்க வேண்டும்?

10.”உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நாடு இந்தியா” — என்ற தலைப்பிட்ட ஐந்து ஆங்கிலக் கட்டுரைகளில் அலெக்ஸாண்டரும், கஜினிமுகமதுவும், கொலம்பசும், பிரிட்டிஷ், பிரெஞ்சு, டச்சு, போர்ச்சுகீஸியரும் ஏன் இந்தியாவை நோக்கி வந்தனர் என்று எழுதியுள்ளேன். ஐரோப்பவிலோ பிற நாகரீகங்களிலோ தங்கக் கட்டிகள், தங்கத் தம்பாளங்களை, முறையான சடங்குகளில் பரிசு அளித்ததாகப் படிக்க முடியாது.

248aa-amman2bgold

11.பெண்களுக்கு தாய் தந்தையரே நகை பூட்டிய செய்திகளும் வேத கால இலக்கியங்களில் இருக்கின்றன.

12.மணி என்பது வைரமாகவோ முத்து ஆகவோ இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் எண்ணுவர். அவைகளை நூலில் கோர்த்து கழுத்தில் அணிந்த குறிப்புகள் வேதத்தில் (மணி க்ரீவ) உண்டு. நூலில் கோர்த மணிகள் போல என்ற உவமை பகவத் கீதையிலும் சங்க இலக்கியத்திலும் உள்ளதை முன்னரே எடுத்டுக் காட்டி இருக்கிறேன்

13.பொற்கொல்லன், நகை விற்பவன் ஆகியோர் பெயர்களும் இருப்பதால், நகைத்தொழில் இருந்தது பற்றியும் அறிகிறோம்.

14.இன்றும் கூட பரிசு கொடுக்கும் போது சொல்லும் மந்திரங்களில் “சதமானம் பவது” என்று ஒரு மந்திரம் சொல்லப்படும் யார் என்ன ஓதி விட்டாலும் அதை ஓதிக் கொடுக்கும் ஐயர் “லட்சம் கட்டி வராஹன்” என்று சொல்லி பெண், மாப்பிள்ளை கையில் கொடுப்பார். இவ்வளவு பெரிய தொகை ஓதி விடப்படதாலேயே அத்தகைய மந்திரங்கள் காலாகாலமாக இருந்து வருகின்றன. சதமானம் என்பது 100 குந்துமணி (ரத்தி) எடைத் தங்கம் ஆகும்.

ஒரு பிச்சைக்கார  சமுதாயம், லட்சம் கட்டி வராஹன் என்று நினைத்துக்கூட பார்க்காது. வேத கால சமுதாயம் தங்கத்தில் புரண்ட சமுதாயம் என்பதால்தான் இத்தகைய மந்திரங்கள் வருகின்றன. அர்ஜுனன் உத்தரகுரு எனப்படும் இமயமலைப் பிரதேச நாட்டுக்குச் சென்று தங்கமும் ரத்தினமும் கொண்டு வந்ததாலேயே அவனுக்கு தனஞ்ஜயன் என்று பெயர்.

15.சிந்து, சரஸ்வதி நதிக்கரைகளில் தங்கம் கிடைத்ததால் அந்த நதிகளுக்கு தங்க (ஹிரண்மய) என்ற சிறப்பு அடைமொழி உள்ளது. காவிரிக்கும் ‘பொன்னி’ என்ற சிறப்புப் பெயர் இருக்கிறது

aeeb4-01_open_page_alapa_2296283f

காஞ்சனம் ஹஸ்த லட்சணம் (கைகளுக்கழகு கனக வளையல்கள்!!)

16.நிருக்தத்தில் (சொற்பிறப்பியல்) மணி என்பதற்கு சூரிய காந்தக் கல் என்று ஒரு உரைகாரர் பொருள் சொல்லுகிறார். அந்தக் காலத்திலேயே பஞ்சை எரிக்கும் பூதக் கண்ணாடி பற்றி நம்மவர் அறிந்திருந்தனர். வயதானவர்கள் தங்கத்தை அணிந்து இறந்தால் தங்கமாகவே ஆவர் என்ற நம்பிக்கை இருந்தது ஒரு மந்திரத்தின் மூலம் தெரியவருகிறது.

ஆங்கிலக் கட்டுரையில் நான் தொகுத்துக் கொடுத்து இருப்பதன் சுருக்கத்தை மட்டுமே இங்கே கொடுத்துள்ளேன். வேத கால இலக்கியமான சம்ஹிதை, பிராமணங்களில் எந்த எந்த இடங்களில் இந்த குறிப்புகள் வருகின்றன என்ற புள்ளி விவரங்களுக்கு எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க.

d482a-gem

–சுபம்–

உலக அதிசயம்: 1000 கால் மண்டபம் !!

Thousand-Pillar-Hall--
Madurai Meenakshi Temple:Thousand Pillared Temple

ஆய்வுக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.1152; தேதி ஜூலை 6, 2014.

((தமிழ் அன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள். மற்றவர்கள் வருடக் கணக்கில் நூற்றுக் கணக்கான புத்தகங்களைப் படித்து ஆராய்சி செய்து எழுதும் ஆய்வுக் கட்டுரைகளைத் திருடாமல் பயன் படுத்துங்கள். கட்டுரையை எழுதியது யார், எந்த பிளாக் – கில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிய்யுங்கள். தமிழ் வாழும்! தமிழரும் உயர்வர்!))

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது !
மாயா நாகரீக நகரமான மெக்சிகோ நாட்டு சிசன் இட்சாவில் ஆயிரம்கால் மண்டபம் உள்ளது! !!
விஜய நகர சாம்ராஜ்யம் முழுதும் ஆயிரம் கால் மண்டபங்கள் பட்டொளி வீசிப் பிரகாசிக்கின்றன !!!
மேலே படியுங்கள்!!

தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள உலக அதிசயங்கள் பற்றி நிறைய பேருக்குத் தெரிவதே இல்லை. லண்டனில் வாழும் எங்களுக்கு ‘இந்த அரசனின் மேஜை’ ,’அந்த அரசனின் செருப்பு’, ‘மஹாராணியின் உடை’, ‘திருமண கவுன்’ — என்றெல்லாம் காட்டிக் காசு பறிக்கிறார்கள். அப்படியே ஏதேனும் பார்க்கத்தக்க அதிசயம் இருந்தாலும் அதெல்லாம், வெள்ளைக்காரன்கள் கொள்ளை அடித்துக் கொண்டுவந்த கோஹினூர் வைரம், திப்புசுல்தானின் புலி, குப்தர் காலத் தங்கக் கசுகள் என்ற வகையில் வந்துவிடும். ஆனால் அத்தனையையும் அழகாகப் பாதுகாத்துக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் காட்டும் அழகே அழகு!!!! இந்த மஹா திருடர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு!!! உண்மையில் நிறையவே உண்டு!!!!!!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மியூசியங் களுக்கும், பிரபுக்களுக்குச் சொந்தமான தனியார் வீடுகளுக்கும் போய்ப் பார்த்தால் தமிழ்நாட்டுத் திராவிடக் கொள்ளைக்கரர் ஆட்சியில் கடத்திவரப்பட்ட அற்புதமான சிலைகளைக் காணலாம். நியூயார்க் மியூசியத்தில் நான் பார்த்த ஒரு சிலை இந்திய மியூசியத்தில் அப்படியே இருக்கிறது. எது ‘ஒரிஜினல்’, எது ‘போலி’ என்பது அந்த சிலைக்குள் ஒளிந்திருக்கும் இறைவனுக்கே வெளிச்சம்!!

100 o madurai

“கோயில் பூசை செய்தான் சிலையைக் கொண்டு விற்றல் போலும்………. ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன்…………………. சீச் சீ !சிறியர் செய்த செய்கை செய்தான்”………… என்ற பாரதியாரின் பாஞ்சாலி சபத பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. “திராவிடங்களின் ஆட்சி”யில் கோவில் நகைகளில் இருந்து உண்மையான மாணிக்க, மரகத, வைரக் கற்களை எடுத்துக் கொண்டு செயற்கைக் கற்களை வைத்ததாகவும் “பெரியவர்கள்” சொல்லிக் கேள்வி. சிவன் சொத்துக் குல நாசம் என்பர். அது பலிக்கட்டும்.

எதற்கு இவ்வளவு முத்தாய்ப்பு என்கிறீர்களா? நல்ல வேளை, ஆயிரங்கால் மண்டபங்கள் முதலியன கருங்கற்காலால் ஆனதால் இந்தக் கொள்ளைக்கார மஹாபாவிகளால் ஒன்றும்செய்ய முடியவில்லை. படையெடுத்துவந்த முஸ்லீம் வெறியர்கள் சேதப்படுத்தியது போக மிச்சம் மீதி இன்னும் இருக்கிறது.

மதுரை, ஸ்ரீரங்கம், திருநெல்வேலி, சிதம்பரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் முதலிய பல ஊர்களிலும் ஆந்திரத்தில் வாரங்கல் ஹனுமகொண்டா, கர்நாடகத்தில் மூடுபித்ரி போன்ற இடங்களிலும் ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ளன. பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்கள் என்று சொன்ன போதிலும் சில நூறு தூண்களையே காணமுடியும்.

மதுரையிலும் ஸ்ரீரங்கத்திலும் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் தூண்களைக் காண முடியும். இவை இரண்டும் உலக மஹா அதிசயங்கள். இன்று இப்படி ஒரு கட்டிடத்தை எழுப்ப பல கோடி– கோடி ரூபாய் தேவைப்படும். பல்லாயிரம் ஊழியர்கள் வேலை செய்யவேண்டி வரும். பெரிய பெரிய எஞ்சினீயர்கள் ஆயிரம் வரை படங்களைத் தயாரித்து ஆராய்ச்சிக் கூட்டங்கள் போட வேண்டியிருக்கும். 600 முதல் 800 ஆண்டுகளுக்கு முன் காகதீய வம்சமும் நாயக்க வம்சமும் இவைகளைக் கட்டிய காலத்தில் என்ன வசதி இருந்தது? – இன்றுள்ள ஒரு வசதியும் கிடையாது. ஆயினும் எப்படி அற்புதமாக அமைத்துவிட்டனர். எண்ணி எண்ணி இறும்பூது எய்வோம்

1000_Pillar_Temple1hanamkonda
Warangal/Hanamkonda 1000 pillar Temple.

ஆயிரங்கால் மண்டபங்கள் ஒவ்வொன்றும் சிற்பக்கலை மியூசியங்கள். வெள்ளைகாரன் நட்டில் இவைகள் இருந்தால் ஒவ்வொரு தூணுக்கும் கண்ணாடிப் பெட்டி வைத்து, ஆயிரம் ஆராய்ச்சிப் புத்தகம் வெளியிட்டு, ஒவ்வொன்றையும் படம் பிடித்து, கீ செயின் (சாவிக்கொத்து), பட அட்டைகள் (வியூ கார்ட்ஸ்), காந்த அட்டைகள் (மாக்னெட்) என்று விற்றுக் கோடி கோடியாக சம்பாதித்திருப்பான். நாமும் பயன்படுத்தாமலா இருந்தோம்? புளியோதரை சாப்பிட்டுவிட்டு அதில் கையைத் துடைத்தோம். நம்முடைய பெயர்கள் காலாகாலத்துக்கும் நீடிக்க அதில் நமது பெயர்களை கூரான கற்கள் ,உலோகக் கம்பிகள், சாவிக்கொத்துகள் வைத்து எழுதினோம். கடவுள் நம்மை மன்னிப்பாராக.

மதுரை ஆயிரம் கால் மண்டபத்தில் சிறு வயதில் ஓடிப் பிடித்து விளையாடியது என் நினைவுக்கு வருகிறது. இப்போது அங்கே ஒரு மியூசியம் வைத்துப் “பாதுகாக்கிறார்கள்”. அற்புதமான சிலைகள் இருக்கின்றன. இதை அமைத்த அரியநாத முதலியார் (1569) பெயர், ‘கின்னஸ் சாதனைப் புத்தக’த்தில் இடம்பெறவேண்டும். ஏன் தெரியுமா? உலகிலேயே நீண்ட காலம் அமைச்சர் பதவி வகித்தவர் அவர்தான். 71 ஆண்டுகளுக்கு நான்கு நாயக்க மன்னர்களுக்கு தளபதியாக-மந்திரியாக (கி.பி.1529—1600) இருந்தவர்! மண்டப முகப்பில் அவர் குதிரையில் சவாரி செய்கிறார்.

இந்த மண்டபத்தில் சுமார் ஆறு அடி உயரம் உடைய 26 சிற்பங்கள் இருக்கின்றன. குறவன் – குறத்தி, ரதி மன்மதன், அர்ஜுனன், பாண்டவ சகோதரர்கள், அரிச்சந்திரன் சந்திரமதி – இன்னும் எத்தனையோ!! குறவன் குறத்தி ஒரு அற்புதமான கலைப் படைப்பு. குறத்திக்கு மூன்று குழந்தைகள்: ஒன்று முதுகில் , மற்றொன்று கூடைக்குள், இன்னொன்று பால் குடிக்க நெஞ்சில்! குறவன் – அவனுக்கே உரித்தான அத்தனை நகைகளையும் அணிந்து சர்வ ஆபரண பூஷணனாக விளங்குகிறான். மண்டபத்துக்குள் உள்ள 22 தூண்கள் வெவ்வேறு இன்னிசை ஒலி எழுப்புகின்றன.
1000-Pillar-Temple-Moodbidri-Left-Side-View
Moodbidri, Karnataka.

(( ஆடி வீதியில் உள்ள இசைத் தூண்கள், மீனாட்சியின் உலக அதிசய நகைகள், உலகம் முழுதும் மியூசியங்களில் உள்ள மதுரை அதிசயங்கள் – இன்ன பிற விஷயங்களை நாலு ஐந்து ஆங்கிலக் கட்டுரைகளில் ஏற்கனவே எழுதிவிட்டேன். கூறியது கூறல் ஒரு இலக்கியக் குற்றம் என்பதால் இத்துடன் நிறுத்துவேன்)).

மதுரையில் 985 தூண்களே இருக்கின்றன. மீதி 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி கோவில் இருக்கிறது. ஆக மொத்தம் ஆயிரம்! இதன் நீளxஅகலம்= 76 மீட்டர் x 72 மீட்டர். மண்டப முகப்பில் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் உள்ளது.

ஸ்ரீரங்கம் ஆயிரம் கால் மண்டபம், மதுரையை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டப நீள x அகலம் = 152 x 48 மீட்டர். அங்கே 953 தூண்கள் உள்ளன. மதுரையைப் போலவே ஒவ்வொன்றிலும் அழகிய சிற்பங்கள். இந்த ஆயிரம் கால் மண்டபம் பற்றியே தனி ஆராய்ச்சிப் புத்தகம் எழுதலாம். பொருள் வசதி இருந்தால் நானே அதைச் செய்வேன்! இதுவும் நாயக்கர் காலத்தில் எழுந்ததே. முஸ்லீம் படையெடுப்பில் வீழ்ந்த எல்லாவற்றையும் மீண்டும் புனர் நிர்மாணம் செய்து உலகப் புகழ் பெறும்படி செய்தவர்கள் விஜய நகர சாம்ராஜ்யமும் அவர்கள் வழிவந்த நாயக்க வம்சமும் ஆகும்.. சுந்தரத் தெலுங்கினில் பாட்டு அமைத்து அவர் புகழ் பாடுவோம்! தலை வனங்குவோம்!

warangal 1000 pillar temple

வாரங்கல் ஆயிரம் கால் மண்டப கோவில்
தெலுங்கானாவில் வாரங்கல் அருகே ஹனுமகொண்டாவில் ஒரு கோவில் இருக்கிறது .ஆனால் இந்தச் சிவன் கோவிலில் சுமார் 300 தூண்களே இருப்பதாக ஆய்வாளர் கூறுவர். ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போல தூண்கள் காட்சி தருகின்றன. இது மற்ற எல்லாவற்றையும் விட மிகப் பழையது. தமிழ்நாட்டைத்தவிர மற்ற இடங்களில் உள்ளவை ஆயிரம் தூண்கள் உடையவை அல்ல. நிறைய தூண்கள் இருந்தால் ஆயிரம் என்று சொல்லி விடுவர். தசரதனுக்கு நிறைய பெண்டாட்டிகள் என்பதால் 60,000 பேர் என்று நாம் சொல்லுவது போல! இது ருத்ர தேவன் (கி.பி1163) காலத்தில் உருவாக்கப்பட்டது.
கர்நாடகத்தில் மூடபித்ரி என்னும் இடத்தில் ஜைன கோவில் ஒன்றிலும் “ஆயிரம் கால்” மண்டபம் உள்ளது.

ராமாயணத்தில் ஆயிரம் கால் மண்டபம்:–

சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலத்தில் ராவணனுக்கு தெய்வய் சிற்பியான மயன் நீண்ட தூன்கள் ஆயிரம் கொண்ட அழகிய மண்டபத்தை உருவாக்கினான். பிரம்மா கூட அதைப் பார்த்து வெட்கம் அடையும் படி அது அமைக்கப்பட்டது.

வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான்
சிந்தாவினை அன்றியும் கைவினைஅயாலும் செய்தான்
அம்தாம நெடுந்தறி ஆயிரத்தால் அமைத்த
சந்து ஆர்மணி மண்டபம் தாமரையோனும் நாண.

யார் சொன்ன ‘ஐடியா’?
காகதீய, நாயக்கர்களுக்கு யார் இந்த எண்ணத்தைத் தோற்றுவித்தனர்? எப்படி அவரகளுக்கு 1000 தூண்களுடன் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது? வேதத்திலேயே 1000 கால் மண்டபம் பற்றிய கருத்து எழுந்துள்ளது. 10, 100, 1000, லட்சம், கோடி என்ற தசாம்ச ‘டெசிமல்’ முறையையும் 1.2,3…. 10 என்ற எண்களையும் உலக மக்களுக்குக் கற்பித்தது இந்துக்களே. இதை நாம் உலகிற்குக் கற்பித்திராவிடில் கம்யூட்டர்களோ ராக்கெட்டுகளோ உருவாகி இருக்காது! இதற்கு வேதம் முதல் லீலாவதி அல்ஜீப்ரா பற்றி ஸ்லோகம் எழுதிய காலம் வரை ஆயிரக் கணக்கான குறிப்புகள் உண்டு.
ரிக்வேதத்தில் மித்ரன் – வருணன் மேலான துதியில் (5-62-6) ஆயிரம் கால் உடைய பரப்பு (பகுதி /பிரதேசம்) பற்றிய பாடல் வருகிறது. இது போன்ற துதிகளே நம் சிற்பிகளை ஊக்குவித்தது என்றால் மிகையாகாது.

மாயா நாகரீகத்துக்குக் கற்பித்தது யார்?
மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சிசன் இட்சா என்ற நகரம் உள்ளது. எட்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு கொடிகட்டிப் பறந்த நகரம் இது. வீரர்கள் கோவில் என்ற கட்டிடமும் அதற்கு முன் ஆயிரம் கால் மண்டம் இருந்த இடமும் உள்ளது. இப்பொழுது நூற்றுக் கணக்கான தூண்கள் மட்டும் வரிசை வரிசையாக நிற்கின்றன. ஒரு காலத்தில் இதற்கு ‘மேல்கூரை’ இருந்தது. உலகின் மிகப் பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்று இங்கே இருந்தது. பல வெளி நாட்டுக் கலாசரங்கள் கலந்து ஒன்றிப்போன நகரம் இது.
chichenitza_s6

Chichen Itza,Mexico

மாயா கட்டிடக் கலை—பல்லவர் கால கட்டிடக் கலை- தென்கிழக்காசிய கட்டிடக் கலை மூன்றின் படங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தால் அற்புதமான ஒற்றுமையைக் காணலாம். இந்தியாவில் இருந்து போன சிற்பிகளின் கைவண்ணம்தான் இதுவும் என்பதில் ஐயமில்லை.
((மாயன் நாகரீகம் பற்றிய எனது மூன்று ஆங்கில கட்டுரைகளில் அறுபதுக்கும் மேலான ஒற்றுமைகளின் பட்டியலைக் கொடுத்துள்ளேன். மாயா நாகரீக மக்கள், அர்ஜுனன் காண்டவ வனத்தை எரித்தவுடன் தென் அமெரிக்காவுக்குச் சென்ற நாகர்கள் என்றும் எழுதியுள்ளேன்)).

கட்டுரையை முடிப்பதற்கு முன் ஒரு வரி:– இது இன்னும் ஆராய்சி செய்யப்படாத ஒரு துறை. இரு நாட்டு கட்டிடங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் இன்னும் பல உண்மைகள் புலப்படும்.

ch_warr1
Mayan Chichen Itza, Mexico

Please read my previous posts about Indian- Mayan Civilisation links:–
1.Are Mayas Indian Nagas? April 28, 2012.
2.Amazing Similarities between Mayas and Indian Nagas, Posted April 28, 2012
3.Part- 2 of Amazing Similarities between Mayas and Indian Nagas, Posted May 1, 2012.
4.Did Indians build Egyptian Pyramids?
5.The Wonder That is Madurai Meenakshi Temple (Posted on 14 Oct. 2011)
6. மாயா இன மக்கள், இந்திய நாகர்கள் !!! (posted on May 10, 2012)
7. நாகர்-மாயா இன அற்புத ஒற்றுமைகள் (posted on May 10, 2012)

Contact swami_48@yahoo.com
–சுபம்–