ஜோதிடத்தின் பிதா பிருகு மஹரிஷி

This article is written by my brother S Nagarajan as part of a series of articles on great rishis/seers of ancient India.More to follow: london swaminathan

ஸ்ரீ ஜோசியம்

ஜோதிடத்தின் பிதா பிருகு மஹரிஷி

By ச.நாகராஜன்

 

ரிஷிகளுள் நான் பிருகு : கிருஷ்ணரின் பிரகடனம்

 ரிஷிகளுள் நான் பிருகு (மஹரிஷீணாம் ப்ருகுரஹம்-கீதை பத்தாம் அத்தியாயம் சுலோகம் 25) என்று கிருஷ்ணனால் பகவத் கீதையில் சொல்லப்பட்ட சிறந்த மஹரிஷி பிருகு ஆவார். சப்த ரிஷிகளுள் ஒருவர்.ஜோதிடக் கலையைக் கண்ட 18 ரிஷிகளுள் ஒருவர். பிரம்மா படைத்த பிரஜாபதிகளுள் ஒருவர். பிரம்மா மனதில் நினைத்தவுடன் இவர் தோன்றியதால் இவரை பிரம்மாவின் மானஸ புத்திரர் என்று புராணங்கள் புகழ்கின்றன. பாகவதத்தில் இவர் விரிவாகப் பேசப்படுகிறார்.மஹாபாரதத்திலும் வாயு புராணத்திலும் கூட இவரது கதை விரிவாகச் சொல்லப்படுகிறது. தக்ஷனின் மகளான க்யாதியை இவர் மணம் புரிந்தார். அவள் மூலம் தாதா விதாதா என இரு புத்திரர்கள் இவருக்கு உண்டு. சுக்ரனும் சியவனரும்கூட இவரது புத்திரர்களே!

பிருகு சம்ஹிதா உருவான கதை!

 ஜோதிடக் கலையைத் தொகுத்து முதல் முதலில் வழங்கியதால் இவர் ஜோதிடக் கலையின் பிதா என அனைவராலும் அறியப்படுகிறார்.இவர் இயற்றிய பிருகு சம்ஹிதா வேத காலத்தில் எழுதப்பட்ட சிறந்த ஜோதிடக் கலை நூலாகும்.

இந்த நூல் எழுந்த விதத்தைப் பற்றியும் கூட ஒரு சுவையான கதை உண்டு. ஒரு முறை சரஸ்வதி நதிக்கரையில் மஹா யக்ஞம் ஒன்று நடக்கும் போது ரிஷிகளின் சபை கூடியது.அதில் பிரம்மா விஷ்ணு சிவன் மூவரில் யாரை பிரதானமாக யக்ஞத்தில் வைப்பது என்பதை யாராலும் நிர்ணயிக்கமுடியவில்லை.அவர்கள் பிருகுவை நாடினர். பிருகுவோ இதை சோதனை செய்து அறிய விரும்பினார்.

அவர் முதலில் பிரம்மாவைப் பார்க்க பிரம்மலோகம் சென்று அவரை மதிக்காத விதத்தில் நடந்துகொண்டார். அதைப் பார்த்த பிரம்மா அவர் மீது கோபம் கொண்டார்.சரஸ்வதி தடுக்கவே பிரம்மா சாபம் ஏதும் தரவில்லை. ஆனால் பிரம்மாவின் கோபம் கண்டு பிருகு அவருக்கு கலியுகத்தில் இனி கோவிலே இருக்காது என்று சாபம் தந்து நேராக சிவனைப் பார்க்கச் கைலாசம் சென்றார்.அங்கே நந்தி அவரைத் தடுத்து விட்டார். பிருகு தன்னை சிவன் அவமதித்து விட்டார் என்று கருதி சிவனை இனி லிங்க வடிவிலேயே அனைவரும் வழிபடட்டும் என்று சாபம் தந்து விட்டு விஷ்ணு லோகம் சென்றார்.

அங்கே விஷ்ணு நித்திரையில் இருக்க, அவரை எழுந்திருக்குமாறு பிருகு வேண்டினார். ஆனால் அவர் விழிக்காமல் இருக்கவே அவர் மார்பில் தன் காலால் உதைத்தார்! விஷ்ணு எழுந்து நடந்ததைப் புரிந்து கொண்டு. “மஹரிஷி, வலுவான என் மார்பால் தங்கள் காலுக்கு ஒன்றும் ஆகவில்லையே” என பரிவுடன் விசாரித்தார். இதனால் மனம் மிக மகிழ்ந்த பிருகு எந்த நிலையிலும் கோபமே வராத விஷ்ணுவே மூவரில் சிறந்தவர் என மகாயக்ஞ ரிஷிகளிடம் தெரிவித்தார். அவர் விஷ்ணுவை மார்பில் உதைத்த இடமே    ஸ்ரீ வத்ஸம் எனப் பெயர் பெற்றது! தன் பாதத்தால் விஷ்ணுவை சோதித்ததால் இவருக்கு பாத ப்ருகு என்ற பெயரும் உண்டு!

இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மஹாலக்ஷ்மி விஷ்ணுவை பிருகு காலால் உதைத்து அவமானப்படுத்தியதைப் பொறுக்க முடியாமல்  “இனி ஒரு போதும் அந்தணர்களிடம் நான் வசிக்க மாட்டேன்”(அதாவது அவர்கள் ஏழ்மையிலேயே இருக்க வேண்டும்) என்று சாபம் தந்தார். ஆனால் மஹாலக்ஷ்மியிடம் பிருகு மஹரிஷி தான் ஏன் அப்படிச் செய்தேன் என்பதை விளக்கி  மூவரில் விஷ்ணுவே சிறந்தவர் என்பதைக் கண்டதாகச் சொல்லி சாப நிவிர்த்திக்கு விண்ணப்பித்தார்.

உடனே மஹாலக்ஷ்மி ‘எந்த அந்தணர்கள் விஷ்ணுவை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு இந்த சாபம் பொருந்தாது’ என்று சாப நிவிர்த்தி தந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர் தான் பிருகு தனது புகழ் பெற்ற நூலான பிருகு  சம்ஹிதாவை இயற்றினார். இதன் மூலம் அந்தணர்கள் அனைவரும் இதைக் கற்றுத் தேர்ந்து அதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

நாலரை கோடி கிரக சேர்க்கைகளுக்கான பலன்கள்!

 பிருகு சம்ஹிதாவில் சுமார் 50 லட்சம் ஜாதகங்களின் பலாபலன்கள் சொல்லப்படுகின்றன. இதை அவர் விநாயகரின் உதவியுடன் தொகுத்தார்.

இவற்றை உரிய முறையில் அலசி ஆராய்ந்து பார்த்தால் நாலரைக் கோடி ஜாதகர்களின் கிரக சேர்க்கைகளுக்கான பலாபலன்களை நன்கு அறிந்து சொல்ல முடியும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே தான் இது அனைவரது எதிர்காலத்தையும் கூற வழி வகுக்கும் முதல் ஜோதிட நூல் எனக் கருதப்படுகிறது.

இந்த நூலில் அனைவரது ஜாதகங்கள், அந்த ஜாதகங்களுக்கான பலன்கள், ஜாதகர்களின்,முந்தைய பிறப்புகள், பிருகுவின் கேள்விகள், தொலைந்து போன ஜாதகங்கள் பற்றிய விஷயங்கள், பரிகாரங்கள்,பல்வேறு விதிகள், புத்திர பாக்கியம், ராஜ தர்மம் மற்றும் அரசர்கள் வெற்றி பெறுவதற்கான வழிகள்,ஸ்தீரிகளின் இயற்கை ஆகியவை பற்றிய விரிவான விளக்கங்களைக் காணலாம்.பிருகு தனது ஜோதிட சாஸ்திரத்தை தனது மகன் சுக்ரனுக்குக் கற்றுத் தர அது அவர் மூலம் எல்லோரையும் அடைந்தது.

பிருகு சம்ஹிதா சுவடிகள் 

 

பிருகு சம்ஹிதா முழு நூல் வடிவில் நமக்கு இன்று கிடைக்கவில்லை. காரணம் முகலாயப் படை எடுப்பின் போது அரக்கத்தனமாக இந்த நூல் அழிக்கப்பட்டது. அத்தோடு நாலந்தா தீக்கிரையாக்கப்பட்ட போது அதிலிருந்த பிருகு சம்ஹிதா சுவடிகளும் அழிந்து பட்டன.பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பிருகு சம்ஹிதா சுவடிகள் இன்று காணக் கிடைக்கின்றன.(ஹோஷியார்பூரில் மட்டும் பத்துக் குடும்பங்களிடம் பிருகு சம்ஹிதா சுவடிகள் உள்ளனவாம்) என்றாலும் கூட சுவடிகள் வடிவில் இல்லாது சுருக்கமான புத்தக வடிவில் பிருகு சம்ஹிதா பல்வேறு பதிப்பகங்களால் பதிக்கப்பட்டிருப்பதால் இதை அடைவது எளிது. இதை பல நூலகங்களிலும் கூடப் படிக்க முடியும்!

(பலரும் தங்களுக்கு வேண்டிய ஜாதகங்களைக் கிழித்துக் கொண்டு செல்லும் துர்பாக்கிய நிலை இருப்பதால் நூலகர்களின் விசேஷ அனுமதியுடனேயே இதை குறிப்புதவி பகுதியில் பெற்றுப் படிக்க முடியும்) பிருகு ஸ்மிருதி,பிருகு சில்ப சம்ஹிதா, பிருகு சூத்ரங்கள், பிருகு உபநிஷத், பிருகு கீதை ஆகிய நூல்களும் இவர் இயற்றிய நூல்களாகும்.

பிருகு மஹரிஷி தவம் புரிந்த இடமான பலியா 

உத்தரபிரதேசத்தில் பீஹார் எல்லையை ஒட்டி உள்ள பலியா மாவட்டத்தில் பிருகு மஹரிஷியின் ஆசிரமம் உள்ளது.இங்கு தான் அவர் தனது பெரும் தவத்தைச் செய்தார். பலியா கங்கைக் கரையில் அமைந்த அழகிய சிறு நகரம்.காசியிலிருந்து வடகிழக்கில் 120 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது, பிருகு மஹரிஷிக்கு குஜராத்தில் நர்மதை நதிக் கரையில் பரூச்சில் ஒரு கோவிலும் உள்ளது.பரூச்சின் முந்தைய கால பெயர் பிருகு கச்சபம் என்பதாகும்!

ஜோதிட ஆர்வலர்கள் பிருகு சம்ஹிதாவைக் கற்பதன் மூலம் பல கிரகசேர்க்கைகளை அறிந்து ஒரு ஜாதகரின் பலன்களை உடனடியாகத் தெரிந்து கொள்ள முடியும்!

**********************************************

அதிசயமான அகத்திய நட்சத்திரம்!

Picture: Canopus known as Agastya Nakshatra is part of Carinae Constellation in Southern Sky.

 

நட்சத்திர அதிசயங்கள் 

அகஸ்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது. அது உதிக்கும் போது அகத்திப் பூ மலர்கிறது. எண்ணற்ற அதிசயங்களைக் கொண்ட அகஸ்திய நட்சத்திரத்தைப் பார்ப்போம்!

If you want more information about Agastya in English, Please read London Swaminathan’s article ‘IS BRAHMASTRA A NUCLEAR WEAPON?’

அதிசயமான அகத்திய நட்சத்திரம்!

ச.நாகராஜன்

கானோபஸ் எனப்படும் அகத்தியர் 

கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று. இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது!இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை!இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.

27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் தனியொரு இடத்தைப் பிடித்தவர் அகத்தியர்!சூரியன் சிம்ம ராசியிலிருந்து மறையும் போது கும்ப ராசி உதயமாகிறது. கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இவருக்கு கும்ப முனி என்ற பெயர் பொருத்தம் தானே!

 

கடல் நீரைக் குடித்த கதை 

அகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும். சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம். சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. சூரியனை விட்டுத் தொலைதூரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது. இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று மீண்டும் நம் கண்ணுக்கு முதலில் தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம்.இந்த முதல் உதயத்தை ஒட்டியே நம் முன்னோர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கும் அதற்கான தெய்வங்களுக்கும் விழாவை ஏற்படுத்தினர்.ஒவ்வொரு நட்சத்திர உதயத்தையும் அப்போது ஏற்படுத்தப்பட்டு நடந்து வரும் விழாவையும் உற்று நோக்கினால் நமது முன்னோரின் கூரிய அறிவுத் திறனும் அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் அர்த்தமும் விழாவின் மகிமையும் எளிதில் புரியும்.

அகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம் 23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன் ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார். பின்னர்  சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார்,அதாவது சுமார் நான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்.அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது.ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன் தோன்றும் அகத்தியர் மழை நீர் சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது. வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட் -செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா நடைபெறுகிறது. அகத்தியரின் வருடாந்திர உதயம் பற்றி வானவியல் நிபுணர் ஜே.பெண்ட்லி விரிவாக எழுதியுள்ளார்!

நவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது. எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்!

 

அகத்தியர் பூமியை சமன் செய்த புராணக் கதை 

இனி அகத்தியர் பூமியைச் சமன் செய்த கதைக்கு வருவோம்.உஜ்ஜயினி வழியாகவே பூமியின் முதல் தீர்க்க ரேகை செல்கிறது!. இந்த ரேகையை வைத்தே அனைத்துக் காலக் கணக்கீடுகளும் செய்யப்படுகின்றன. லாடிட்யூட் எனப்படும் அட்சய ரேகையின் படி அகத்தியர் இருக்கும் இடம் 80 டிகிரி தெற்கு.ஆகவே அட்சய ரேகையின் படி 10 டிகிரி வடக்கிற்கு மேல் இது தெரியாது.வடக்கே உள்ள உஜ்ஜயினி 24 டிகிரி தெற்கு என்ற நிலையில் உள்ள நகரம்.

வானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 24 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.

இந்த விளக்கத்துடன் இன்னொரு விளக்கத்தையும் வானவியலோடு புராணத்தை இணைத்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் நம் முன் வைக்கின்றனர்.ஒரு காலத்தில் வடக்கே துருவ நட்சத்திரமாக விளங்கிய அபிஜித் நட்சத்திரம் அந்த அந்தஸ்தை இழந்து தெற்கே அகஸ்தியர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். முதலில் வடக்கே இருந்த அபிஜித்தே அகஸ்தியர் என அழைக்கப்பட்டார். பிறகு இடைவிடாத வான சுழற்சி காரணமாக தெற்கே இருந்த நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக அந்தஸ்தைப் பெற்றவுடன் வடக்கே இருந்த அகத்தியர் தெற்கே வந்ததாகக் கூறப்பட்டது. பதவியில் இருப்பவருக்கே அந்தஸ்து என்ற ரீதியில் இந்த வானவியல் சுழற்சியைப் பார்த்தால் எளிதில் விவரம் புரியும்.ஆதியில் அபிஜித்தைச் சேர்த்து 28 நட்சத்திரங்களை நமது வேதம் உள்ளிட்ட நூல்கள் கூறுகின்றன. தன் அந்தஸ்தை அபிஜித் இழந்தவுடன் அது நீக்கப்பட்டு 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கை ஆகி விட்டது. அபிஜித் நமது மானுட வாழ்க்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ற போது இந்த மாறுதல் ஏற்பட்டது!

‘அக’ என்றால் மலை என்று பொருள். ‘ஸ்தி’ என்றால் அமுக்குவது என்று பொருள். பூமி என்னும் மலையை இரு துருவங்களிலும் அமுக்கியவரே அகஸ்தியர் என்பதை புராணம் விரிவாக தன் பாணியில் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு விளக்குகிறது. வானவியல் கணிதத்தை மேலே கூறிய படி டிகிரியை வைத்து தூரத்தைச் சொன்னால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலருக்கும் கூட பல முறை படித்தால் மட்டுமே இது புரியக் கூடும் என்ற நிலையில் அகத்தியரின் வரலாறு எளிமைப் படுத்தப்பட்டு சிறந்த கதையாக ஆனது சரி தானே!

அகத்தியர் நட்சத்திரம் உதிக்கும் போது அகத்திப் பூ மலர்வதால் அந்தச் செடிக்கு அகத்திக் கீரை என நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரான அகத்தியர் நந்தி தேவருடன் ஒவ்வொரு மூலிகையையும் ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களைத் தொகுத்து மனித குலம் நோயின்றி வாழ வழி வகை செய்துள்ளார்.

வானத்தை உற்று நோக்கி புராணங்களைத் தெளிவு படப் படித்து அறிவியலை அலசிப் பின்னர் கம்பனைப் படித்தால் நன்கு ரசிக்க முடியும்! கம்பன் ஆரண்ய காண்டத்தில் அகத்தியன் பற்றிக் கூறும் வாக்கியங்களான “தூய கடல் நீரை உண்டு அது துரந்தான்” என்பதை வானவியல் அறிவுடன் சேர்த்துப் படித்தால் அர்த்தம் புரிந்து மகிழலாம். அகத்தியனை இத்தோடு மட்டும் கம்பன் புகழவில்லை: தமிழ் தந்த முனிவரான அவரை “நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்” எனவும் புகழ்கிறான்.

குள்ளமான அகத்தியரின் பெருமை மிகவும் உயர்ந்தது!

************************

ரேவதி நட்சத்திர ரஹஸ்யம்!

 

Pisces constellation that includes REVATHI star

நட்சத்திர அதிசயங்கள் 

இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமான ரேவதி அறிவியல் வியக்கும் நட்சத்திரங்களில் முதலிடத்தை வகிக்கிறது.அப்படி அதிகம் வியக்கும்படி அந்த நட்சத்திரத்தில் எதைத் தான் விஞ்ஞானிகள் கண்டார்கள்?இதோ பார்ப்போம்!

ரேவதி ரஹஸ்யம்!

ச.நாகராஜன்

ரைவதனின் பெண் ரேவதியின் கதை!

 

வேதம் கூறும் 27 நட்சத்திரங்களில் கடைசியாக இருப்பது ரேவதி. அதி அற்புதமான அறிவியல் ரகசியத்தை அறிவிக்கும் நட்சத்திரம் இது. புராணம் கூறும் ரேவதியின் கதையே ஆச்சரியமானது.  ரைவதன் என்ற மன்னனுக்குப் பிறந்த பெண்ணின் பெயர் தான் ரேவதி!அவன் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் அனைவரும் இப்போது இருப்பதை விட இன்னும் அதிக உயரம் உடையவர்களாக இருந்தார்கள். தன் பெண் ரேவதிக்கு தகுந்த மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்தான் மன்னன் ரைவதன்.அவளுக்கு ஏற்றபடி ஒருவரும் சரியாக அமையவில்லை.ரைவதன் கவலைப்பட ஆரம்பித்தான். நாளடைவில் கவலை பயமாக மாறியது. இவளுக்கு உரிய மணாளன் யார், அவனை எப்படிக் கண்டுபிடிப்பது? சிந்தித்தான். சிந்தனையின் முடிவில் ஒரு வழி தோன்றியது.

 

இவளைப் படைத்த பிரம்மனையே நேரில் சென்று கேட்டு விட்டால் என்ன? இவளுக்காக யாரைப் படைத்தீர்கள் என்று சுலபமாகக் கேட்டு விடலாமே! உடனே நேரே சத்யலோகத்துக்குத் தன் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்றான்.அவன் பிரம்ம லோகம் சென்ற சமயம் அங்கு ஒரு பெரிய வேள்வி நடந்து கொண்டிருந்தது. பிரம்மா அவனை வரவேற்று சைகையால் சற்று இருக்குமாறு சொன்னார்.ரைவதனும் காத்திருந்தான்.

 

வேள்வி முடிந்ததும் பிரம்மா ரைவதனிடம் வந்த விஷயம் என்ன என்று அன்புடன் கேட்டார். ரைவதன் தன் கவலையைச் சொன்னான். ரேவதிக்கு உரிய மணாளன் யார் எனத் தாங்கள் தான் எனக்குச் சொல்ல வேண்டும் என்று வேண்டினான்.பிரம்மா சிரித்தார்.

“ரைவதா! ஏமாந்து விட்டாயே! நீ இங்கே வந்த போது பூமியில் கிருத யுகம் நடந்து கொண்டிருந்தது. வேள்வி முடிந்து விட்ட இந்த சமயத்திலோ அங்கு கலி யுகம் நடந்து கொண்டிருக்கிறது!பூமியின் காலமும் இங்குள்ள கால நிர்ணயமும் வேறு! இனி இவளை பூமியில் உள்ள யாரும் மணம் புரிந்து கொள்ள முடியாது. அதோ, பூமியைப் பார். அங்கு அனைவரும் உயரம் குறைந்தவர்களாக இருப்பதைப் பார்,” என்றார். ரைவதன் கலங்கிப் போனான். அருள் புரிய பிரம்மனை வேண்டினான்.

பிரம்மாவும் அருள் கூர்ந்து அவனை நோக்கி, “ரைவதா, கவலைப்படாதே! பூமியில் பத்து அடி உயரம் உள்ள பலராமன் என்பவர் பிறப்பார். அவர் இவளைத் தன் கலப்பையால் உயரத்தைக் குறைத்து மணப்பார். இனி, கவலையை விடு” என்றார்.

பிரம்மா சொன்னபடியே பலராமனும் கலப்பையால் ரேவதியின் தலையில் ஒரு குட்டு குட்டி அவள் உயரத்தைக் குறைத்து அவளை மணம் புரிந்தார். இப்படி முடிகிறது. கதை. இதைப் பல புராணங்களிலும் படிக்க முடிகிறது.

இதில் விஞ்ஞானிகள் வியப்படைய என்ன இருக்கிறது/ அதில் தான் சுவாரசியமே இருக்கிறது! பூமிக்கும் விண்வெளியில் உள்ள லோகங்களுக்கும் உள்ள கால நிர்ணயம் வேறு என்று பிரம்மா சொல்வதை விஞ்ஞானிகள் இப்போது கண்டு பிடித்து வியக்கிறார்கள். ஹிந்து மத புராணங்களில் அப்போதே எப்படி இவ்வளவு தெளிவாக ஒரு அரிய உண்மையைக் கதை மூலமாகக் கூற முடிந்தது என்பதே அவர்களின் வியப்புக்குக் காரணம். பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் போது காலத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. இதற்கு டைம் டைலேஷன் (Time Dilation) என்று பெயர். பூமியிலிருந்து விண்வெளிக்குப் பயணப்பட்ட விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நெடுங்காலம் சுற்றித் திரிந்து விட்டு பூமிக்குத் திரும்பினால் அவர்கள் ஆயுளில் இளைஞர்களாக இருக்க பூமியில் உள்ளவர்களோ வயதானவர்களாக ஆகி இருப்பார்கள்.

 

மையர்ஸ் டேபிள் 

பூமியிலிருந்து ராக்கெட்டில் புறப்பட்ட விண்வெளி வீரர் பயணம் செய்யும் வருடமும் அப்போது பூமியில் நாம் கழிக்கும் வருடமும் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.

———————————————————————————————————————அட்டவணை

விண்வெளி வீரர் பயணத்தில் கழிக்கும் ஆண்டு        பூமியில் நாம்

கழிக்கும் ஆண்டுகள்                                                                         ———————————————————————————————————————————

1                                      1

2                                      2.1

5                                      6.5

10                                    24

20                                  270

30                                3100

50                          4,20,000 (கலியுக வருடங்கள்)

 

———————————————————————————————————————

மேலே உள்ளது Meyers Handbook of Space என்ற விண்வெளி அறிவியல் கையேடு தரும் அற்புத அட்டவணையாகும். இதிலிருந்து நாம் ஊகிக்க முடிவது இது தான்: ரைவதன் 50 ஆண்டுகள் பயணத்திலும் பிரம்ம லோகத்தில் காத்திருப்பதிலும் கழித்திருந்தால் பூமியில் 4,20,000 ஆண்டுகள் கழிந்திருக்கும்! அதாவது ஒரு யுகம் கழிந்திருக்கும். கிருதயுகத்தில் பயணத்தை ஆரம்பித்த ரைவதன் பூமியில் கலியுகத்தை இதனால் தான் பார்க்க நேர்ந்தது.

பராசக்தியின் கரு 

ரேவதி 32 நட்சத்திரங்கள் கொண்ட தொகுதி. மீனைப் போலத் தோற்றமளிப்பது. வானவியில் இதை Zeta Piscum என்று குறிப்பிடுகிறது. ஜோதிட நூல்களோ ரேவதியை வெகுவாகப் புகழ்கின்றன. பராசக்தியின் கருவாகக் குறிப்பிடப்படும் இது ஆரம்பத்தையும் (ஜனனம்) முடிவையும் குறிப்பிடுகிறது. பயணத்திற்கு உகந்தது.தொலைந்து போன பொருளைத் தேட உகந்தது. ஆகவே தொலைந்த பொருள்கள் உடனே கிடைக்கும்.இசை, நடனம், நாடகம், இலக்கியம் ஆகிய அனைத்தும் இந்த நட்சத்திரக்காரர்களுக்குத் தண்ணீர் பட்ட பாடு. பெரும் அற்புத ரகசியங்களளை உள்ளடக்கிய இந்த நட்சத்திரத்தின் முதல் ரகசியம் விண்வெளி லோகங்களுக்கும் நமக்கும் உள்ள கால வேறுபாட்டைக் கூறுவது தான். ஆக 27 நட்சத்திரங்களில் கடைசியாக இடம் பெறும் இது அறிவியலில் உன்னத ரகசியத்தை வெளியிடுவதில் முதலாவதாகத் திகழ்கிறது.

***************

விசாகம்! – 2: நட்சத்திர அதிசயங்கள்

 

 

நட்சத்திர அதிசயங்கள்

வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 2

ச.நாகராஜன் 

அக்னியும் இந்திரனும் அதி தேவதைகள் 

இனி விசாகத்துடன் தொடர்புடைய ஏராளமான புராணக் கதைகளில் சிலவற்றைப் பார்ப்போம். விசாக நட்சத்திரத்தின் அதி தேவதைகள் அக்னியும் இந்திரனும் ஆவர். மஹாபாரதத்தில் மார்க்கண்டேயர் பஞ்ச பாண்டவர்களுக்கு (வன பர்வம் 200வது அத்தியாயம்) ஒரு அற்புதமான கதையைக் கூறுகிறார். அது சிபி சக்கரவர்த்தியின் சரித்திரம். உசீனர தேசத்தை ஆண்டு வந்த சிபி சக்கரவர்த்தியின் மடியில் ஒரு நாள் திடீரென்று புறா ஒன்று வந்து விழுந்தது.”அடைக்கலம். ராஜாவே, அடைக்கலம். என்னைக் காப்பாறுங்கள்” என்று சரணடைந்தது. அதைத் துரத்தி வந்த கழுகு சிபியிடம் வந்து, “அரசே! நான் துரத்தி வந்த இரை அது. அதை எனக்கு விட்டு விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டது. சிபி தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டார். கழுகிடம் புறாவை விட்டு விடுமாறு வேண்டினார். “:எடைக்கு எடை உன் சதையைத் தருவதானால் நான் புறாவை விட்டு விடுகிறேன்” என்று கழுகு கூறியது.மகிழ்ச்சியுடன் அதற்கு இணங்கிய சிபி தன் ஒரு பக்கத்துத் தொடையை அறுத்து  பெரிய தராசின் ஒரு பக்கத்தில் வைத்து மறு பக்கத்தில் புறாவை வைத்தார்.புறாவின் எடை கூட இருந்தது. தயங்காமல் தன் மறு பக்கத் தொடையையும் அறுத்து தராசில் சிபி வைத்தார்.இன்னும் புறாவின் எடை கூடவே இருந்தது.சிபி தானே ஏறி தராசில் நின்றார்.அவரது இந்தத் தியாகம் உலகையே பிரமிக்க வைத்தது! அவரது தியாகத்தைக் கண்டு வியந்த புறா, “நானே அக்னி!கழுகாக வந்தது இந்திரன்!வாழ்க உன் பெருமை” என்று கூறி வாழ்த்தியது. இந்திராக்னி தராசில் வைத்து நிறுத்திய மன்னன் உலக மக்களின் மனத் தராசில் அதிக எடையைப் பெற்றுக் காலம் காலமாகப் புகழப் படுகிறான்.

தராசில் நிறுத்தல், விசாக நட்சத்திரத்தின் அதி தேவதைகளான இந்திரன், அக்னியால் சோதிக்கப்படுதல் என்ற இந்தச் சம்பவம் துலா தராசியின் சின்னமான தராசையும் துலா ராசியில் உள்ள விசாக நட்சத்திரத்தையும் நினைவு படுத்துகிறது.விசாக நட்சத்திரத்தின் அதி தேவதைகளான இந்திரனும் அக்னியும் கழுகாகவும் புறாவாகவும் சிபியை தராசில் சோதிக்கும் போது நீதியின் கோட்பாடுகள் பிரித்துணரப்படுகிறது!பல தொடர்புகளை சங்கிலி போலப் பிணைக்கும் விசாகம் நம்மை சிந்திக்க வைக்கிறது.

முருகனின் பெருமை

இன்னொரு கதையையும் இங்கு பார்க்கலாம்.ஒரு முறை அக்னி, கங்கை, சிவன், பார்வதி ஆகிய நால்வருமே முருகன் மீது உரிமை கொண்டாட சிவன், “குழந்தை யாரை முதலில் பார்க்கிறான் என்று பார்ப்போம்” என்றார். கார்த்திகை மாதர் மடியிலே இருந்த முருகனோ வந்த நால்வரின் உளக் கருத்தையும் நன்கு அறிந்து கொண்டு புன்முறுவல் பூத்தார். தன்னை நான்கு உருவங்களாக ஆக்கிக் கொண்டார். குமரன், விசாகன்,சாகா,நைகமேயன் என்ற அந்த நால்வருள் குமரன் சிவனிடமும், விசாகன் பார்வதியிடமும்,சாகா கங்கையிடமும்,நைகமேயன் அக்னியிடமும் விரையவே அனைவருமே மன மகிழ்ந்தனர். “பல்வேறு பெயர்களுடன் திகழ்ந்து நீ அனைவருக்கும் அருள் பாலிப்பாயாக”, என்று சிவன் வாழ்த்துவதாகக் கதை முடிகிறது. இப்படி விசாக நட்சத்திரத்திற்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி எழுத தனி நூலே வேண்டும்!

ராதையின் அற்புத வான நடனம்

அடுத்து ராதா என்ற பெயருடைய இந்த நட்சத்திரம் பற்றிப் பல நிகழ்வுகள் உண்டு. ராதை கிருஷ்ணனுடன் ஆடும் நடனம் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல் விஞ்ஞானிகளாலும் கூட வானில் ஆடும் ராதையின் நடனம் கொண்டாடப்படுகிறது; பெரிதும் வியக்கப்படுகிறது! ஆகாயத்தில் பால்வீதி மண்டலத்தில் கண் சிமிட்டி நடனமாடும் லட்சக்கணக்கான  நட்சத்திரங்களையும் , கிருஷ்ண-ராதா நட்சத்திரங்களையும் வானவியல் அறிஞர்களும் மஹா கவிகளும் வியந்து புகழ்ந்து பாடியுள்ளனர். மில்கி வே என்ற பால்வீதி மண்டலத்தில், ஒளி வெள்ளத்தில் மிதக்கும் தாரகைகள் பளிச்சிடும் வான வீதியில், நிகழும் நட்சத்திர நடனம் தங்களின் வர்ணனைக்கு அப்பாற்பட்ட பேரொளி என்று தங்கள் தோல்வியை அவர்கள் மனமார ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நூற்றுக் கணக்கான அற்புத கவிதைகளில்  கண்ணனையே ரசித்து அவனையே அனுபவித்து அவனிலேயே உயிர் வாழ்ந்த லீலாசுகரின் கிருஷ்ணகர்ணாம்ருத (3-2) பாடல் ஒன்றை மட்டும் (பதங்கள் சுலபமாக அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்காகப் பிரித்துத் தரப்பட்டுள்ளது) மாதிரிக்காக இங்கு பார்த்து மகிழ்வோம்:

ராதா ஆராதித விப்ரம அத்புத ரஸம் லாவண்ய ரத்னாகரம்                     ஸாதாரண்ய பத வ்யதீத ஸஹஜ ஸ்மேர ஆனன  அம்போருஹம் I                ஆலம்பே ஹரி நீல கர்வ குருதா ஸர்வஸ்வ நிர்வாபணம்                           பாலம் வைணவிகம் விமுக்த மதுரம் மூர்த்தாபிஷிக்தம் மஹII

“ராதையினால் போற்றப்பட்ட ஆச்சரியமான சிருங்கார ரஸத்தை உடையதும் அழகின் கடல் போன்றதும் சாதாரண நிலையைக் கடந்து இயற்கையாகவே புன்முறுவல் பூத்த முகமாகிய தாமரை உடையதும் இந்த்ர நீலமணியின் பெருமையையும் கர்வத்தையும் தனது காந்தியால் அழிப்பதும் குழலுடன் கூடியதும் ஒப்புயர்வற்ற அழகினால் மனதிற்கு இனியதும் தலை சிறந்ததும் குழந்தை வடிவானதும் ஆகிய பேரொளியை வழிபடுகின்றேன்” என்பது இதன் பொருள்.

ராதை என்றாலேயே மகிழ்ச்சி என்று பொருள்!

இனி உலக நாகரிகங்களெல்லாம் வியக்கும் நட்சத்திரமாகவும் இது விளங்குகிறது. துலாம் என்ற வார்த்தையின் திரிபான துல்கு என்ற வார்த்தையால் தங்களின் ஏழாவது மாதத்தைப் பெயரிட்டு அசிரியர்களும்  அகடியர்களும் இதைக் கொண்டாடி வந்தது  குறிப்பிடத்தகுந்தது. ஆல்பா, பீடா லிப்ரா எனப்படும் இரு நட்சத்திரங்களே அறிவியல் குறிப்பிடும் இரு துலா ராசி நட்சத்திரங்கள். மூன்றாம் மாக்னிட்யூட் நட்சத்திரங்கள் இவை.வேதங்களின் கூற்றுப்படியும் விசாகம் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டதாகும்.ஸ்வாதியின் கிழக்கில் அமைந்துள்ளதாக இதை நமது நூல்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

ராதா அல்லது விசாகம் கவட்டை போன்ற அல்லது செடி அல்லது மரக்கிளை போன்ற அமைப்பைக் கொண்டது. இது தோரணம் போன்ற அமைப்பை உடைய நான்கு நட்சத்திரங்கள் என்றும் சிலர் கூறுவர். இந்த நான்குமே ஒரு தராசைச் சுட்டிக் காட்டுவதாக அவர்கள் கூறி மகிழ்வர்.ராதை என்ற சொல்லுக்கே மலர்ச்சி, மகிழ்ச்சி,வெற்றி ஆகிய அர்த்தங்கள் உண்டு. சக்தி,வலிமை,முயற்சியின் அடிப்படையிலான வெற்றி, பொறுமை, விடாமுயற்சி, உறுதி ஆகிய அருங்குணங்களைத் தன்னுடையதாக அறிவிக்கும் அற்புத நட்சத்திரம் விசாகம்.

தமிழ் முருகனும், புத்தரும்

தமிழ் முருகன் அவதரித்த நட்சத்திரம் இது. மனித குலத்திற்கே புத்தொளி காட்டிய புத்தர் வைகாசி பௌர்ணமியிலேயே அவதரித்தார். அதே பௌர்ணமியிலே ஞானம் பெற்றார்.அதே வைகாசி பௌர்ணமியிலேயே முக்தி அடைந்தார்.கிறிஸ்தவர்களோ ஏசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான திருத்தூதர் பிலிப்புடன் இந்த நட்சத்திரத்தைத் தொடர்பு படுத்தி மகிழ்கின்றனர்!

வானில் மட்டும் (பாலன்ஸை) நடுநிலையுடன் சீராக சமமாகக் காண்பிக்கும் நட்சத்திரம் இல்லை விசாகம்; வாழ்க்கையிலும் சமச்சீராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு புதிய பாதையின் ஆரம்பத்தைக் காட்டும் நட்சத்திரம் இது!

–           விசாக நட்சத்திர அதிசயம் நிறைவுறுகிறது

வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 1

Picture shows Libra (Tula Rasi) constellations

நட்சத்திர அதிசயங்கள்

வான மண்டலத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கும் விசாகம் ஒரு அபூர்வமான அதிசய நட்சத்திரம்! எல்லை இல்லாத அதன் பெருமைகளில் சிலவற்றைப் பார்ப்போம்!

 

வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 1

ச.நாகராஜன்

விசாகம் என்றால் புதிய பிரிவு

 

மனித குலத்திற்கே முக்கியமான நட்சத்திரமாகத் திகழும் விசாக நட்சத்திரம் பல அதிசயங்களையும் அபூர்வ உண்மைகளையும் நம்மை அறியச் செய்து பரவசமூட்டும் நட்சத்திரம். 27 நட்சத்திரங்களில் 16வது நட்சத்திரமாக அமையும் இது துலா ராசியில் அமைந்துள்ளது.இந்த நட்சத்திரத்திற்கு ராதா என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆகவே தான் இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நட்சத்திரத்தை ராதாவைத் தொடர்ந்து வருவது என்ற பொருளுடைய அனுராதா (அல்லது அனுஷம்) என்ற பெயரால் அழைக்கிறோம். விசாகம் என்ற சொல்லை வி+ சாகம் என்று இரண்டாகப் பிரித்துப் பொருளைக் கொள்ள வேண்டும். ‘வி’ என்றால் புதிய அல்லது வேறு என்று பொருள் ஆகும். ‘சாகம்’ என்றால் பிரிவு அல்லது கிளை என்று பொருள் ஆகும். ஆக விசாகம் என்றால் புதிய பிரிவு என்று பொருள்.

 

வானத்தை நம் முன்னோர்கள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தனர். இதன்படி வான கோளத்தில் தென் கோளப் பகுதி வட கோளப் பகுதி  என இரண்டு கோளப் பகுதிகள் உள்ளன.வடக்கு மண்டலம் அல்லது கோளத்தைப் பிரிக்கும் நட்சத்திரமாக விசாகம் அமைகிறது. அதாவது புதிய பிரிவின் ஆரம்ப நட்சத்திரம் அது! இந்த ஆரம்பத்தைப் பிரிக்கும் ராசியாக துலா ராசி அமைகிறது.மேஷம், ரிஷபம், மிதுனம்,

கடகம்,சிம்மம், கன்னி ஆகிய ஆறு ராசிகளும் ஒரு பகுதியாக இருக்க துலாத்திலிருந்து அடுத்த மண்டலம் ஆரம்பிக்கிறது!

 

 

இன்னொரு முக்கியமான அறிவியல் விஷயம், துலாத்தில் சூரியன் இணையும் போது இரவும் பகலும் சம அளவு என்று ஆகிறது. இரவையும் பகலையும் சமமாகக் காட்டும் தராசு (பாலன்ஸ்) துலாம் தான். அத்துடன், கோடை காலத்தையும் குளிர் காலத்தையும் பிரித்து பருவத்தை சமமாக்கும் மாதம் வைகாசி. விசாக நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி அந்த மாதத்திற்கு வைகாசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விசாக நட்சத்திரம் வட்ட வடிவமாக தராசு போல உள்ள ஒரு நட்சத்திரம் என்பது இன்னொரு வியப்பூட்டும் சுவையான செய்தி!

 

ஆக வான மண்டலத்தை இரு பிரிவுகளாகப் பிரிப்பது விசாகம். இரவும் பகலையும் சமமாகப் பிரிப்பதும் விசாகம். கோடை காலம் குளிர்காலம் என பருவத்தை இரண்டாகப் பிரிப்பதும் விசாகம். இத்தனை விஷயங்களை சமன் செய்யும் இது இருக்கும் ராசி துலா ராசி என்பது பொருத்தம் தானே! நம் முன்னோர்களின் அறிவியல், ஆன்மீக, வானவியல், ஜோதிட அறிவை எண்ணி வியந்து வியந்து பிரமிக்கலாம்!

தென் மண்டலத்தை உருவாக்கிய விஸ்வாமித்திரர் 

பொய்யே உரைக்காத வால்மீகி முனிவர் ராமாயணத்தில் பால காண்டத்தில் 60ம் ஸர்க்கத்தில் விஸ்வாமித்திரர் திரிசங்குவிற்காகப்  படைத்த தென் மண்டலத்தைப் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கிறார். வானில் சென்ற திரிசங்குவை இந்திரன் தடுக்க அவன் ‘த்ராஹி த்ராஹி’ (காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்) என்று விஸ்வாமித்திரரிடம் அபயம் கேட்டுக் கீழே விழ விஸ்வாமித்ரர் திஷ்ட திஷ்ட (இரு இரு) என்று சொல்லி அவனை நிறுத்தி ஒரு புதிய மண்டலத்தையே ச்ருஷ்டிக்கிறார்.

 

ச்ருஜன் தக்ஷ¢ண மார்கஸ்தான் சப்தரிஷீன் அபரான் புன: I                         நக்ஷத்ர வம்சபரம்பரம் அச்ருஜத் க்ரோத மூர்ச்சித: II (பால காண்டம் 60ம் ஸர்க்கம்,ஸ்லோகம் 20)

“பிராஜாபதியைப் போலவே விஸ்வாமித்ரர் தெற்கில் சப்தரிஷி மண்டலத்தை உருவாக்கினார். அதே போல தெற்கில் வடக்கில் இருப்பது போல நட்சத்திரங்களையும் உருவாக்கினார்.”

 

வானத்தில் தேவ பாகத்திலும் அசுர பாகத்திலும் உள்ள நட்சத்திரங்களை ஒப்பு நோக்கினால் நாம் வியப்பை அடைவோம். வடக்கே உள்ள (சௌம்ய) துருவ நட்சத்திரம் போல தெற்கே யம துருவம் உள்ளது. மயில் வடிவம் போல உள்ள சப்தரிஷி மண்டலம் வட பாகத்தில் இருக்கும் போது மயூர மண்டலம் என்ற சப்தரிஷி மண்டலம் தெற்கே உள்ளது. மான் தலை உள்ள ஓரியன் வடக்கில் உள்ள போது அதே மான் தலை போல உள்ள நட்சத்திரம் உடைய மகரம் தென் மண்டலத்தில் உள்ளது.ஆருத்ரா வடக்கில் இருப்பது போல விசாகம் தெற்கில் உள்ளது. வடக்கின் ரோஹிணி போல தெற்கில் ஜேஷ்டா (கேட்டை) உள்ளது. வடக்கில் உள்ளஅஸ்வினி இரட்டையர் போல இரட்டையரான விசித்ரதுவை தெற்கில் காணலாம்.

 

ஆக இப்படி மிக முக்கியமான பிரிவைச் சுட்டிக் காட்டும் ஒரு நட்சத்திரமாக விசாகம் திகழ்கிறது!

 

-விசாக நட்சத்திர அதிசயம் தொடரும்

 

அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

ராம பக்தனான ஹனுமானை ஸ்வாதி நட்சத்திரத்துடன் ஒப்பிடுகிறார் மாமுனிவர் வால்மீகி. அதிசயமான ஸ்வாதி நட்சத்திரம் மர்மத்தைப் பார்ப்போம்!

 

நட்சத்திர அதிசயங்கள்!

அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

ச.நாகராஜன்

 

அதிசயமே ஸ்வாதி

 

27 நட்சத்திரங்களுல் 15வதாக இடம் பெறும் ஸ்வாதி நட்சத்திரம் ஒரு அதிசய நட்சத்திரம். இது துலா ராசியில் உள்ளது. பெரிய பெரிய மகான்களுடனும் ஆசார்யர்களுடனும் தொடர்புடைய இந்த நட்சத்திரம் வால்மீகி முனிவரால் அதிசயமான விதத்தில் குறிப்பிடப்படுகிறது.

 

ஸ்வாதி போல முன்னேறுவேன்

 

சப்த ரிஷி  மண்டலத்தின் தென் கிழக்கில் ஒரு அபூர்வ நட்சத்திரத் தொகுதி உள்ளது.இதை பூடஸ் என்று மேலை நாட்டு வானியல் குறிப்பிடுகிறது. இந்த ஆல்பா பூடஸ் செக்கச் சிவந்து ஜொலிக்கும் ஒரு நட்சத்திரம். இதையே மேலை நாட்டின்ர் ஆர்க்ட்ரஸ் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இதையே நாம் ஸ்வாதி என அழைக்கிறோம்! குரங்கு போன்ற வடிவமுள்ளதாக இதை நம் முன்னோர் கண்டுள்ளனர்!

 

வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப் போல நான் செல்வேன் என்று ஹனுமான் வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 67ம் ஸர்க்கம் 20ம்  சுலோகத்தில் சொல்வது (பவிஷ்யதி ஹிமே: யதா ஸ்வாதே: பந்தா இவாம்பரே) பொருள் பொதிந்த வார்த்தை. வாயு புத்திரனான ஹனுமான் குரங்காக அவதரித்ததை அனைத்து தேச மக்களும் அறிந்திருக்கின்றனரோ என்று எண்ண வைக்கும் விதத்தில் ஆர்க்ட்ரஸ் நட்சத்திரத் தொகுதியை பண்டைய எகிப்து நாட்டினர் குரங்கு போன்றது என்றும் சீனர்கள் கன்னியா ராசி அருகில் உள்ள குரங்கு என்றும் குறிப்பிட்டுள்ளனர். வான மண்டலத்தைப் பல பிரிவுகளாகப் பிரிக்கும் நவீன கால கிரிமால்டி கேடலாக்கில் எகிப்து தேசத்தினர் குரங்கு எனக் குறிப்பிடுவதை 29 எண்ணுடைய நட்சத்திரமாகவும் சீனர்கள் குரங்கு வடிவம் என குறிப்பிடுவதை 142,143 எண்ணுடைய நட்சத்திரங்களாகவும் இந்த கேடலாக்கில் காணலாம்!

 

ஸ்வாதி பவனோ

 

இந்த ஸ்வாதி நட்சத்திரம் சாதாரணமாக அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி முடிய சூரியனுடன் இணைகிறது. அப்போது இந்தியாவில் பயங்கரமான சூறாவளியும் புயல் காற்றும் ஏற்படுவது வழக்கம். 1864ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று மசூலிபட்னத்தில் ஏற்பட்ட கோரமான சூறாவளியால் கடல் கொந்தளித்து 30000 பேர் பரிதாபமாக நீரில் முழ்கி சில நிமிடங்களுக்குள்ளாகவே மாண்டனர். ஒரிஸாவில் அக்டோபர்-நவம்பரில் ஏற்படும் புயல் மற்றும் சூறாவளியை மக்கள் ஸ்வாதி பவனோ (ஸ்வாதிக் காற்று) என்றே குறிப்பிடுகின்றனர்.

 

ஸ்வாதிக்கும் வாயுவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது! ஸ்வாதியின் அதி தேவதை வாயு! வேதம் ஸ்வாதி நட்சத்ரம் வாயு தேவதா எனக் குறிப்பிடுகிறது. புராண இதிஹாஸங்களில் மருத் தேவதைகளே ஸ்வாதியாகக் குறிப்பிடப்படுகிறது. சாந்தி கல்பம் என்னும் நூல்  ஸ்வாதியை எப்பொழுதும் வடக்கு முகமாகவே நகர்வது என விவரிக்கிறது.

 

வான மாணிக்கம்

 

ஸ்வாதி என்றால் வாள் என்று பொருள்.  வாயு தேவன் கையில் வாள் சித்தரிக்கப்படுகிறது. ‘நிஷ்டா’ அல்லது ‘நிஷ்த்யம்’ என்னும் இருளை சுவாதியின் ஒளிக் கிரணங்கள் அகற்றி விடுமாம்! அதாவது தமஸ் என்னும் இருளை ஜோதி என்னும் ஒளி நீக்கி விடும். (தமஸோ மா ஜ்யோதிர் கமய – இருளிலிருந்து ஒளிக்கு எங்களை இட்டுச் செல் என்பது வேத பிரார்த்தனை)

 

அற்புதமாக வானில் பிரகாசிக்கும் ஸ்வாதி வான அதிசயம் தான்! கோரல் சிவப்பு, குங்குமச் சிவப்பு ஸ்கார்லெட் சிவப்பு என்றெல்லாம் வர்ணிக்கப்படும் மாணிக்கமே சுவாதி. ஆகவே தான் இது வான மாணிக்கம் என்று போற்றப்படுகிறது. அராபியர்கள் இதை ‘சுவர்க்கத்தின் காவலன்’ என வர்ணிக்கின்றனர்.பைபிளும் ஆர்க்ட்ரஸை வெகுவாகப் புகழ்கிறது.இதன் குறுக்களவு பேராசிரியர் மிகல்சனால்19 கோடி மைல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வாயு மூலமாகவே விஷ்ணுவை அடைய முடியும்!

 

திருவோண நட்சத்திரம் விஷ்ணு பதம் எனக் குறிப்பிடப் படுவதை முன்பே பார்த்தோம். அதன் அருகில் உள்ள மருத் தேவதைகளே ஸ்வாதியாக விளங்குகிறது. விஷ்ணுவின் பக்கத்தில் அவனது பக்தனான ஹனுமான் அமைந்திருப்பது பொருத்தம் தானே!

மாத்வ சம்பிரதாயத்தில் ஸ்வாதி நட்சத்திரத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.ஹனுமனை சிறப்பாக வழிபடுவது மாத்வ சம்பிரதாயத்தில் இடம் பெறுகிறது, வாயு மூலமாகவே விஷ்ணுவை அடைய முடியும் என்று அது கூறுவது குறிப்பிடத் தகுந்தது.

 

ஹனுமத் ஜெயந்தி என ஹனுமான் அவதரித்த தினத்தை இந்த நட்சத்திரத்தின் சஞ்சாரத்தை வைத்தே நிர்ணயிக்கின்றனர்!

சுவர்க்கத்தின் நுழைவாயில் என்றும் பிரபஞ்சத்தின் தலைநகரமான விஷ்ணுலோக வாயில் என்றும் போற்றப்படும் ஸ்வாதியையும் ஹனுமானையும் தொழுது அனைத்து நலன்களோடு விஷ்ணுவின் அருளையும் பெறலாம்!

 

***********************

 

27 STAR QUIZ (English & Tamil)

By London Swaminathan

If you answer 10 out of 14 correctly, you are a STAR!

 

1. Who is the husband of 27 Stars?

2. How many zodiac signs are there in the Zodiac?

3. What is the first and last star in the current list of 27 stars?

4. The star Vishaka is associated with two festivals in Tamil Nadu and Sri Lanka? Who are those two great people or god?

5. The great Chola King Raja Raja organised a big festival on his birthday 1000  years ago. What was his birth star?

6.  Keralites (Malayalees) celebrate their biggest annual festival on a famous star day. What is it?

7. Which Indian God was born under star Rohini?

8. What was the name of Balarama’s wife, a star name?

9. Who brought up Lord Skanda, the stars you can see them in the sky?

10. What star is associated with Lord Shiva?

11. A star is the symbol of chastity according to Sangam Tamil Literature and Hindu scriptures. What is the name of that star?

12. Name the star in the Southern Skies that bears the name of a great Rig Vedic Rishi?

13. According to Hindu scriptures, a small boy attained star hood and shines in the Northern Skies. Who was that boy?

13. What was Rama’s birth star according to Valmiki?

14. Give the Hindu name for Ursa Major or Dipper or The Great Bear constellation.

********

 

ANSWERS: 1) In Tamil and Sanskrit literature husband of stars is Moon. It is a simile used hundreds of times in Indian literature 2) Twelve: 27 stars are divided in to 12 signs 3) The current Hindu star list begins with Aswini and ends with Revathi 4) Vishaka: Lord Skanda and The Buddha 5) Sathayam (Sathabishak) 6) Onam 7) Krishna 8) Revathi 9) Krithika: six stars according to Hindus, seven sisters according to Greeks 10) Arudra 11)Arunthathy: a double star system in the Great Bear constellation 12) Agastya (Canopus) 13) Dhruva , Westerners call it Pole Star 14) Sapta Rishi Mandalam.

 

TAMIL QUESTIONS: 27 நட்சத்திர கேள்வி-பதில்

If you answer 14 out of 21 correctly, you are a STAR!

1)27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் எது? கடைசி நட்சத்திரம் எது?

2)சிவனுக்குகந்த நட்சத்திரம் எது?

3)நிலவின் முகம் தேய்ந்து பிறையாகக் காரணம் சந்திரன், 27 பெண்களில் ஒருத்திக்கு சாதகமாக நடந்துகொண்டான். அந்த ஒருத்தி பெயர் என்ன?

4)வைகாசி விசாக நட்சத்திரம் வரும் பவுர்ணமியில் எந்த இருவருக்கு பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன?

5)மலையாளிகள் கொண்டாடும் முக்கியப் பண்டிகை எந்த நட்சத்திரத்துடன் தொடர்புடையது?

6)ராஜ ராஜ சோழன் தன் பிறந்த நட்சத்திரத்தன்று பெரியவிழா கொண்டாடினான். அந்த நட்சத்திரம் எது?

7)தவிட்டுப்பானை எல்லாம் தங்கம் தரும் நட்சத்திரம் எது?

8)அரசாளும்  நட்சத்திரம் எது?

9)முருகனை வளர்த்த 6 பெண்களின் பெயருடைய நட்சத்திரம் எது?

10)ரோஹினி நட்சத்திரத்தில் பிறந்த இந்துக் கடவுள் யார்?

11)ராமர் பிறந்த நட்சத்திரம் எது?

12)மான்  தலை என்று பெயர் உடைய நட்சத்திரம் எது?

13)பலராமனின் மனைவி பெயர் உடைய நட்சத்திரம் எது?

14)எந்த நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியில் மதுரையில் பெரிய திருவிழா நடைபெறும்?

15)எந்த நட்சத்திர நாளில் பெய்யும் மழை சிப்பியின் வாயில் விழுந்து முத்து ஆகும்?

16)ஜெமினி எனப்படும் நட்சத்திரத் தொகுப்பிலுள்ள இரண்டு நட்சத்திரங்களின் பெயர் என்ன?

17)தென் வானத்தில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு எந்தப் பிரபல முனிவரின் பெயர் சூட்டப்பட்டது?

18)கற்புக்கு அணிகலனாகத் திகழும் நட்சத்திரத்தின் பெயர் என்ன?

19)புகழ்பெற்ற ஒரு சிறுவனின் பெயரையுடைய நட்சத்திரத்தின் பெயர் என்ன?

20. பெருங் கரடிக் கூட்டம் என்று மேலை நாட்டார் அழைக்கும் நட்சத்திரத் தொகுப்புக்கு இந்துக்கள் கொடுத்த பெயர் என்ன?

21. எந்த இரண்டு நட்சத்திரங்கள் மட்டும் “திரு” அடைமொழி உடையன?

*********

 

விடைகள்: 1)முதல் நட்சத்திரம்-அஸ்வினி, கடைசி நட்சத்திரம்- ரேவதி 2)ஆருத்ரா/ திருவாதிரை 3) ரோஹிணி 4) முருகப் பெருமான், புத்தர் பெருமான் 5) திரு ஓணம் 6) சதயம் (சதய விழா) 7) தமிழ் பழமொழிகள்: அவிட்ட நட்சத்திரம் தவிட்டுப் பானை எல்லாம் தங்கம் 8) ஆண்மூலம் அரசாளும் 9) கார்த்திகை 10) கிருஷ்ணன் 11)புனர் பூசம் 12) மிருகசீர்ஷம் 13) ரேவதி 14)சித்திரா நட்சத்திர பவுர்ணமி 15) சுவாதி நட்சத்திரம் 16) பூசம், புனர்பூசம் 17) அகஸ்திய நட்சத்திரம் 18)அருந்ததி 19) துருவன் 20) சப்த ரிஷி மண்டலம் 21) திரு ஓணம் (விஷ்ணு), திரு ஆதிரை (சிவன்)

 

 

MOST HATED NUMBERS 666 and 13

 

By London Swaminathan

(contact swami_48@yahoo.com or Swaminathan.santanam@gmail.com)

Christians believe numbers 666 and 13 are unlucky numbers. Hindus consider No 13 as impure. There are some stories behind it. The Book of Revelation (13:16-18) in the Bible mention 666 as the number of the beast. When the US President Reagan moved to California his house number was 666. You can guess what he di immediately. He changed his house number to 668.

Hexakosioihexekontahexaphobiacs is the term for people who fear the number 666.Cna you pronounce the word? Don’t do it. 666 will catch you!

Mountain Bible College in Kentucky, USA was given a phone number with the prefix 666. They thought it may put off students joining the college due to the popular belief that it was the sign of the Devil. Immediately they applied for changing the number. When asked for an explanation,  the Vice President of the college said, “True Christains will not accept the mark of the Beast”.

A Hindi Movie with the title Bungalow No666 was made in the 1990s. Crtics accused the film makes of plagiarising an English film Fright Night (1985)

 

Quote from the Book of Revelation (Bible)

16.And he causeth all, both small and great, rich and poor, free and bond, to receive a mark in their right hand, or in their foreheads:

17.And that no man might buy or sell, save he that had the mark, or the name of the beast, or the number of his name.

18.Here is wisdom. Let him that hath understanding count the number of the beast: for it is the number of a man; and his number is Six hundred threescore and six.

 

No 13—Dirty Number

Normal year has 12 months. But every third year one month is added in the lunar calendar. This is called Adhik Maas (extra month) or Mala Maas (Dirty month).

Indian calendar is based on lunar year, while the English calendar is based on solar year. This is the reason we have our festivals like Deepavali on different dates unlike Christmas. Hindu festivals based on solar movement such as Makar Shankaranti  falls on the same date. Lunar means moon and solar means sun.

A lunar year has 354.372 days while a solar year has 365.2422 days. To adjust the solar and lunar years, the lunar calendar adds one extra month every third year which is called Purushottam Mass or Adhik Mass. This month is allocated for worship of God. Hindus don’t celebrate anything auspicious during this period.

The recitation of Srimat Bhagavatham or Bhagavad Gita during this month produces more benefits. Devi Bhagavatham says that charitable and meritorious acts and fasting etc., carried out during this period produce good results. Agni Purana (Chapter 175) gives a long list of things to do and things to avoid. Marriages or Upanayanam are not performed during this month and pilgrimages postponed.

Christians hate this number because Judas, who betrayed Jesus was his thirteenth disciple at the Last Supper.

Mayan Civilization of Central and South America also had some bad views about 13th month.

Ancient Persians avoided staying home on 13th day of the Persian calendar (Sizdah Bedar) because this number means chaos according to their mythology.

In Norse mythology, the 13th God Loki was believed to have engineered the murder of Balder and arrived at his funeral as the thirteenth guest. So a group of thirteen people would never assemble at a place.

Even today Christians in the West avoid No13 for their houses or naming 13 for a floor in a multi storied building. When it couples with a Friday, the day of crucifixion, they are scared more.

Sportsmen and sportswomen believe certain numbers are lucky. No 10 is given to the most important or popular player.

No 7 and No 3 are considered as holy numbers by several cultures, particularly, the Hindus. Vedic literature and Indus Valley Civilization have No7 and No3 on seals and books than any other numbers.

***********

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2

நட்சத்திர அதிசயங்கள்

 சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதையைப் பார்த்தோம்.மஹாபாரதம் கூறும் கதையின் விளக்கத்தைப் பார்ப்போம்!

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2

ச.நாகராஜன்

 

மஹாபாரதக் கதையின் உட்பொருள்

மஹாபாரதம் “ரோஹிணி சில காலம் அனைவரின் பார்வையிலிருந்து மறைந்து மீண்டும் தன் பழைய இடத்தில் தோன்றினாள்” என்று கூறுவதன் பொருள் என்ன?

ப்ரஜாபதி ரோஹிணி நட்சத்திரத்தின் அதி தேவதை.அத்தோடு ரிஷிகள் செய்யும் யாகங்களுக்கும் அதிகாரி!தேவர்களின் நாளும் மனிதர்களின் நாளும் வேறு வேறு. தேவர்களின் இரவு நேரத்திற்கு அதிபதி ப்ரஜாபதி தான்.இரவு நேரத்தில் இருக்கின்ற ஒரே வெளிச்சம் சந்திரனின் வெளிச்சம். யாகத்திற்கு இந்த சந்திர ஒளி தேவையாக இருந்தது.ஆகவே தான் சந்திரனே ப்ரஜாபதி என்று கூறப்பட்டான்.

தைத்திரீய பிராமணம், “ப்ரஜாபதி சிந்தனையில் ஆழ்ந்தார்.அவர் தனது வயிறு காலி ஆவதை உணர்ந்தார். உடனடியாகத் தவத்தை மேற்கொண்டார்.எதையாவது படைக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது.புதிய விராட்டை அதாவது அண்டத்தை சிருஷ்டித்தார்.தேவர்களையும் அசுரர்களையும் அழைத்து இந்தப் புதிய அமைப்பை ஏற்குமாறு வேண்டினார். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்” என்கிறது. அந்த விராட் தான் ரோஹிணி! ப்ரஜாபதியின் புதிய அமைப்பில் ரோஹிணிக்கு முதல் இடம் கிடைத்தது. அதாவது மேல் ஸ்தானம் கிடைத்தது.

 

இதை அறிவியல் ரீதியாகப் பார்ப்போம். வானத்தின் சுழற்சி கடிகார முள் இடமிருந்து வலமாகச் சுழலுவது போன்ற சுழற்சி!க்ளாக்வைஸ் சுழற்சி என்று சாதாரணமாக இதைக் கூறுகிறோம்.இடைவிடாது சுழலும் வானச் சுழற்சியில் மாறாத நட்சத்திரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை அடையாளமாக வைத்துக் கொண்டே வானத்தின் திசையைக் கணிக்க வேண்டியதாக இருக்கிறது.ஆனால் இந்த துருவ நட்சத்திரம் கூட  சுழற்சியில் மிக மிகச் சிறிய அளவில் இடம் பெயர்கிறது.

துருவ நட்சத்திரத்தை முதலில் பார்த்த அதே இடத்தில் பார்க்க சரியாக 25710 ஆண்டுகள் ஆகிறது, (கணித சௌகரியத்திற்காக 26000 ஆண்டுகள் எனக் கொள்வோம்)செலஸ்டியல் ஈக்வேஷன் எனப்படும் வானத்து ரேகை ஒவ்வொரு நட்சத்திரத்தின் வழியாகவும் ஒவ்வொரு கால கட்டத்தில் போகும்.கி.மு 2700ல் இந்த வானத்து ரேகை ரோஹிணியின் வழியே சென்றது.இந்தக் கால கட்டத்தில் தான் நட்சத்திரங்களை ஒரு புதிய அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஆகவே படைப்பு உந்துதல் உண்டான ப்ரஜாபதி ரோஹிணியை ‘பழைய இடத்திற்குச் செல்ல’ வைத்தார்.பல காலம் களை இழந்திருந்த ரோஹிணி வெட்கத்தால் சிவந்து புதிய பொலிவுடன் கவர்ச்சியுடன் போனாள்.மஹாபாரதம் கூறும் கதையின் உட்பொருள் வானியல் ரீதியாக இது தான்!

 

இப்படி வானவியல் கணிதம், வானச் சுழற்சி, புதிய அமைப்பை மனித குல நன்மைக்காக செய்ய வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை பாமரனுக்கு எப்படி உணர்த்துவது?அறிஞர்களும் கூடத் திணறும் அற்புத கணிதம் இது. ஆகவே தான் இதை எளிமைப் படுத்தி இதிஹாஸங்களும் புராணங்களும் சுவையான கதையாக அனைத்தையும் விவரித்தன! புராணக் கதைகளை ஒரு சிறந்த வானவியல் நிபுணர் மட்டுமே அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும்.

 

முதல் தர ஒளியுடைய நட்சத்திரம்

அல்டிபெரான் எனப்படும் ரோஹிணி 65 ஒளி வருட தூரத்தில் உள்ளது.106 மாக்னியூட்டில் அமைந்துள்ள முதல் தர நட்சத்திரமாகும் இது! சகட அமைப்பில் இதைக் காணலாம் என அறிவியல் கூறுகிறது. ஆக விஞ்ஞானமும் புராணமும் ஒரே விஷயத்தை தங்கள் தங்கள் வழியில் விரிவாகக் கூறுவதைப் பார்க்க முடிகிறது!

 

சிவந்த மணி பெற்ற நீல ரத்னம்!

ரோஹிணி நட்சத்திரத்தின் பெருமை எல்லையற்றது.பல் வேறு மொழிகளில் ஏராளமானவர்கள் அதைப் புகழ்ந்து பாடல்களை எழுதியுள்ளனர்.ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு பார்ப்போம். ரோஹிணி நட்சத்திரத்தை கண்ணன் தன் பிறப்புக்காகத் தேர்ந்தெடுத்ததை உலகம் நன்கு அறியும்.அதனால் ரோஹிணியின் பெருமை உச்சத்திற்குச் சென்று விட்டது. ரோஹிணியையும் சுவாதி நட்சத்திரத்தையும் பில்வமங்களர் க்ருஷ்ணகர்ணாம்ருதத்தில் ஒப்பிட்டு மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்கிறார்.

க்ருஷ்ணகர்ணாம்ருதத்தில் இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 65வது பாடலாக அமைந்துள்ள இப்பாடலை ராமகிருஷ்ண மடம் அண்ணாவின் பதம் பிரித்துத் தந்துள்ள அர்த்தத்துடன் பார்ப்போம்:

 

ஸ்வாதீ ஸபத்னீ கிலதாரகாணாம் முக்தாபலானாம் ஜனனீதி ரோஷாத் I               ஸா ரோஹிணீ நீல-மஸூத ரத்னம் க்ருதாஸ்பதம்    கோபவதூ குசேஷ¤ II

தாரகாணாம் – நட்சத்திரங்களின்                                              ஸபத்னீ – சக்களத்தியாகிய                                                   ஸ்வாதீ – ஸ்வாதீ என்பவள்                                            முக்தாபலானாம் – முத்துக்களுக்கு                                               ஜனனீ கில இதி – தாயாகி விட்டாள் அல்லவா என்ற                           ரோஷாத் – கோபத்தால்                                                        ஸா ரோஹிணீ – நட்சத்திரங்களில் ஒருத்தியாகிய அந்த ரோஹிணீ                 கோபவதூ குசேஷ¤ – இடைப் பெண்களின் மார்பகங்களின் மத்தியில்                      க்ருத ஆஸ்பதம் – இடம் பெற்று விளங்கும்                                       நீலம் ரத்னம் – கிருஷ்ணனாகிற நீல ரத்னத்தை                                   அஸூத – பெற்றாள்

 

ஸ்வாதி நட்சத்திரம் தோன்றும் போது விழும் மழைத்துளிகளைத் தம்முள் ஏந்தி சிப்பிகள் முத்தை உருவாக்கும் என்பதைச் சுட்டிக் காட்டி ஸ்வாதிக்கு போட்டியாக நீல ரத்னத்தை ரோஹிணீ பெற்றுப் பெருமை அடைந்தாள் என்று கூறும் இந்தச் செய்யுள் மிகச் சுவையானது; ஆழ்ந்த பொருளைக் கொண்டது!

நீல ரத்னத்தைப் பெற்ற சிவந்த மணியான ரோஹிணியைப் போற்றி வணங்குவோம்!

************

Can Birds Predict Your Future?

By London Swaminathan

Kili Jothitam (Parrot Astrology)

 

South Indians, particularly Tamils, have some strange beliefs. It is ironic that they believe in nuclear physics and astrophysics and at the same time believe in the following four as well:

 

Birds can predict your future

Lizards can predict your future

Eyes can predict your future

Sneeze can predict your future

 

Is there any science behind it? Well, as far as I know, birds and animals can predict earth quakes and weather. Lot of scientific proof is available for both weather and EQ. Just before the onset of South West Monsoon certain kind of birds are seen in Kerala. All the Indian news papers report it every year and the rains also start in the next few days. If animals behave strangely, then some natural catastrophe like earth quakes will happen. This is also documented by the scientists. People in the western countries have some beliefs about at least 15 types of birds. In Tamil also we have lots of proverbs on birds and animals. Crow is praised and insulted in Tamil proverbs. I have posted 200+  Proverbs on elephants from among the 20,000 Tamil Proverbs.

Tamil Panchang (traditional calendars with Hindu festival days etc.) has got two pages devoted to Pancha Pakshi Shastra (Prediction by Five Birds) and Lizard Predictions. Nobody has done any scientific research into it to prove it or disprove it. The Bird astrology divides the day into five parts allocating one each to vulture, owl, crow, cock and peacock. Actually there is more to it. They tell you what would happen depending upon the nature of flights of birds. It is an interesting area for research students.

If we go to the Lizard astrology page, the Panchang divides it into two parts. It tells you what would happen if a lizard falls on you and if the lizard calls (makes sound). It tells you something good or bad would happen depending upon the part of the body it touches or the direction of the sound. Big tabular columns are in the Panchang for birds and lizards predictions.

Fluttering Eyes

Flutter of eyes also is taken into account to find what is going to happen next. This is supported in Sanskrit literature as well. Tamils are not alone in it. One thing is common in all these strange predictions. Left is good for women and right is good for men. Probably the logic for this is Ardhanari principle of Lord Shiva, i.e. Shiva’s left side is shared by Parvathy. Bible also supports it by saying the woman is made from the left rib of man (For more, please read my Sanskrit in Bible posts)

 

Sneeze

If a person sneezes they say “Bless you” in western countries. Actually it started in India. We have enough proof for this in Tamil and Sanskrit literature.

Tirukkural, the most famous book of the Tamils, says in Chapter FEIGNED:

When I continue to be receding, he sneezed and thought I would then wish him long life (Kural 1312)

I sneezed; “Live long”, she blessed. Then suddenly she wept saying, “You sneezed thinking of some other lady” (Kural 1317)

I stifled my sneeze. She wept saying, “Is it to hide from me the thought of thee in the mind of thy beloved” (Kural 1318)

(Ladies! Beware of your husband’s sneezes! Watch him and count the number of sneezes!!)

 

Parrot Astrology

Let me finish with Parrot Astrology. In nook and corner of Tamil Nadu you can see Parrot  Astrologers sitting under a banyan tree or by the side of the temple wall. No foreigner misses a photo with them. Parrot astrologers carry a cage with three parrots. If you are ready to spare a few Paise (olden days) or rupees (modern days), he will predict you whether you would pass in the exams, get a promotion, succeed in the job interview, cure your cancer or get your heart throb!!

He simply calls the parrot to pick a card from the deck of cards he keeps ready. Say for example, if I go to him, he will ask my name first and tell the parrot, get good a card for Mr Swaminathan. The parrot walks majestically and picks a card, gives it faithfully to the astrologer, gets a bribe of one or two nuts or grains and walks back into its cage (slavery again for a faithful service!). He reads the card and Voila, You know your future!

(Please read my posts (1) Why Animals worship Gods?, (2)Animal Einsteins Part 1 and Part 2 and (3) Can Parrots recite Vedas?)

For more of the same, contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com