ஸ்வயம்பூ லிங்கங்கள் தோன்றுவது உண்மைதான் !

(English version has been posted already: London Swaminathan)

இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில், பல கோவில்களில் இருக்கும் லிங்கங்களை சுவயம்பு லிங்கங்கள் என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இதன் பொருள், இந்த லிங்கங்கள் மனிதனால் செய்யப்பட்டவை அல்ல. தானாக பூமியிலிருந்து உருவானவை என்பதாகும்.

இது உண்மையா? பூமியிலிருந்து தானாக லிங்கங்கள் தோன்றுமா? இதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறதா? என்று கேட்டால் விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது என்றே சொல்லுவேன். இதற்கு லண்டன் டைம்ஸ் நாளேட்டில் நீண்டகாலத்துக்கு முன் வந்த ஒரு ஆசிரியருக்குக் கடிதமே சான்று (இந்த பேப்பர் கட்டிங் என் அலமாரியில் இத்தனை நாளும் தூங்கிக் கொண்டிருந்தது.)

ஆதிசங்கரர் போன்ற பெரிய மகான்கள் பல இடங்களில் இப்படி லிங்கங்களைக் கண்டுபிடித்து அவைகளை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்று படிக்கிறோம். மதுரை நகரம் ஒருகாலத்தில் கடம்பவனக் காடாக இருந்தது என்றும் தனஞ்செயன் என்ற வணிகன் இரவு நேரத்தில் காட்டைக் கடந்து போகும் நேரத்தில் ஒளிமயமான ஒருகாட்சியைக் கண்டான் என்றும் இந்திரன் முதலானோர் வந்து பூஜை செய்த காட்சி அது என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது. அதுவும் ஸ்வயம்பூ லிங்கம்தான். பாண்டிய மன்னனுக்கு இச்செய்தியை அறிவித்தவுடன் அவன் அங்கே கோவில் அமைத்தான்.

சில இடங்களில் இயற்கையாகவே லிங்க வடிவத்தில் மலையோ பாறைகளோ அமைவதுண்டு. இந்துக்கள் எல்லா விஷயங்களிலும் கடவுளைக் பார்ப்பார்கள். உண்ணும் உணவு, பெரியோர்கள் காலில் அணியும் செருப்பு (பாதுகை), அவர்களின் பாதச் சுவடுகள், இசை, நாட்டியம், வீட்டுக்கு முன் போடும் கோலங்கள், பறவைகள், மிருகங்கள் ஆகிய எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் இந்துக்களுக்கு பெரிய கற்களும் சிறிய கற்களும் தெய்வம்தான்!

இமயத்திலுள்ள புனித கயிலாய மலை, திருவண்ணாமலை ஆகியன லிங்க வடிவத்திலுள்ள புனித அமைப்புகள். காஷ்மீரில் அமர்நாத் என்னும் இடத்தில் ஒரு குகையில் ஆண்டுதோறும் உருவாகும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்கம் ஒரு புனிதத்தலம் ஆகும். இவைகளுக்கு விஞ்ஞான விளக்கம் உண்டு. மலை இடுக்கு வழியாக சொட்டுச் சொட்டாக விழும் நீர் லிங்கமாக உருவாகிறது. இது மிகப் பெரிய இயற்கை அதிசயம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆண்டுதோறும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்க வடிவத்தில் தோன்றுவதும் அற்புதமே.

ஆனால் இதைத்தவிர வேறு ஒரு சக்தியும் உண்டு. அது பூமிக்கடியில் இருக்கும் கற்களை மேலே தள்ளுகிறது. அதை அறிவியல் படித்தவர்கள் ஈ.எல்.எf. என்று சொல்லுவார்கள். அதாவது மிகவும் சன்னமான அதிர்வு அலைகள். இவைகள் பூமிக்கு அடியில் உள்ள கற்களை சிறிது சிறிதாக அசைத்து பூமிக்கு மேலே கொண்டுவந்துவிடும்! லண்டனைத் தாண்டியுள்ள பர்மிங்ஹாம்சைரில் சில்டெர்ன் என்னும் இடத்தில் இப்படி பூமிக்கு மேலே வரும் கற்களை விலைக்கும் விற்கிறார்கள். இதை மே 1994ல் சி.ஏ.சில்க் என்பவர் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இந்த இடத்துக்கே கல் விளையும் பூமி என்று பெயர்!

பஞ்சாயதன பூஜை

காஞ்சி மகா சுவாமிகள் அவரது சொற்பொழிவு ஒன்றில் பஞ்சாயதன பூஜை பற்றி விளக்கி இருக்கிறார். சில இந்துக்கள் வீடுகளில், நதியிலிருந்து எடுக்கப்பட்ட விஷேஷ கற்களை வைத்து செய்யப் படும் பூஜை இது. நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் கற்களை சாலக்ராமம் என்றும் விஷ்ணுவின் சக்கரம் தாங்கிய அம்சம் என்றும் சொல்லுவர். தஞ்சாவூர் அருகில் வல்லத்தில் கிடைக்கும் சூரியாகாந்தக் கற்களை சூரியன் வடிவமாகக் கருதி பூஜை செய்வர். இதே போல பீஹாரில் சோனபத்ராவில் கிடைக்கும் சிவப்பு நிறக் கற்களை விநாயகராகவும் நர்மதை நதியில் கிடைக்கும் உருண்டைக் கற்களை பாணலிங்கமாகவும், ஆந்திரத்தில் சுவர்ணமுகி நதியில் கிடைக்கும் கற்களை அம்பாளாகவும் வைத்து பூஜை செய்வார்கள். ஐந்து கற்களை வைத்து செய்யப்படும் இந்த பூஜை பஞ்சாயதன பூஜை ஆகும்.

இதில் சாலக்ராமம் எனப்படுபவை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூச்சிகளின் படிம அச்சு என்று உயிரியல் படித்தோர் கூறுவர். இந்துக்களுக்கு இதில் எல்லாம் வியப்பு ஒன்றும் இல்லை. வெள்ளை உவர் மண் பூசி வந்த வண்ணானைக் கூட விபூதி பூசிய சிவனடியார் என்று எண்ணி பூசித்தவரை நாம் 63 நாயன்மர்களில் ஒருவராக வைத்து குரு பூஜை செய்யவில்லையா? மயிலுக்குப் போர்வையும் முல்லைக்குத் தேரும் ஈந்த பாரியையும் நாம் கடை எழு வள்ளல் என்று புகழ்வில்லையா? பாதி ராமாயணம் கேட்டுக் கொண்டிருக்கையில் ராமபிரானுக்கு மேலும் படைகள் தேவை என்று எண்ணி படை அனுப்ப உத்தரவிட்ட குலசேகர ஆழ்வாரை நாம் பூஜிக்கவில்லையா?

இறைவன் எங்கும் இருப்பான் என்பதே நம் கொள்கை.

Contact for more information: swami_48@yaoo.com

********

அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்!

கர்மம் பற்றிய குறுந்தொடர்!

 

அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்!

By ச.நாகராஜன்

 

கர்மத்திற்கு ஏற்ற பலன் கிடைக்கும்

 

மற்ற மதங்களிலிருந்து ஹிந்து மதத்தை வேறுபடுத்திக் காண்பிக்கும் முக்கியக் கொள்கை கர்மத்திற்கு ஏற்ற பலனின்படி மறுபிறப்பு உண்டு என்பதாகும்.

 

கீதையின்  மூன்றாம் அத்தியாயம் கர்ம யோகத்தைப் பற்றி அற்புதமாக விளக்குகிறது.

“எவனும் எவனும் எப்பொழுதும் ஒரு கணம் கூட கர்மம் செய்யாமல் இருக்க முடியாது” என்று கண்ணன் அர்ஜுனனிடம் விளக்குகிறான். (ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்- கீதை, மூன்றாம் அத்தியாயம் 5ஆம் ஸ்லோகம்)

இயற்கை குணங்களினால் ஒவ்வொருவனும் கர்மம் செய்யும் படி தூண்டப்படுகிறான்.அந்தக் கர்ம பலனின் விளைவுகள் அவனைத் தவறாமல் சென்று சேர்கின்றன.

கன்று தாயைச் சேர்வது போல கர்ம பலன் சேரும்

இதை மஹாபாரதமும் உபநிடதங்களும் ஒரே உவமையால் விளக்குகின்றன. எப்படி பசு மந்தைக்கூட்டத்தில் ஒரு கன்றானது தாய்ப்பசுவைத் தவறாமல் சென்று அடைகிறதோ அதே போல ஒருவன் செய்த நல்ல கர்மங்களின் விளைவும் தீய கர்மங்களின் விளைவும் உரிய காலத்தில் தவறாமல் அவனைச் சென்று அடைகிறது என்று இப்படி அழகாக கர்ம பலன் வந்து சேரும் விதத்தை விளக்குகிறது.

 

காந்திஜி வாழ்க்கையில் 

கண்களையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டால் கர்ம பலனின் ரகசியங்களை யார் வேண்டுமானாலும் உணர முடியும். மகாத்மா காந்தியடிகளின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

இந்தியா சுதந்திரம் அடைய வேண்டுமென்பதை வலியுறுத்தி விட்டு வெளிநாட்டிலிருந்து டெல்லிக்குத் திரும்பிய மகாத்மா டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்று ரயிலில் ஏறினார். அப்போது அவரது கால்களில் மாட்டி இருந்த செருப்புகளில் ஒன்று கீழே தரையில் விழுந்து விட்டது. உடனே ரயில் கிளம்பி விட்டது. மகாத்மா உடனே தனது அடுத்த காலிலிருந்த செருப்பையும் கழட்டிக் கீழே ஏறிந்தார் அருகில் இருந்தவர் மகாத்மாவிடம், “பாபாஜி, ஏன் அடுத்ததையும் கழட்டிக் கீழே எறிந்தீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு அவர், “கீழே கிடக்கும் ஒரு செருப்பைக் கண்டெடுப்பவர் அதனால் பயன் அடைய முடியாது அல்லவா? அதற்காகத் தான் இன்னொரு செருப்பையும் அதன் அருகில் எறிந்தேன்” என்று பதில் கூறினார்..

பன்னிரெண்டு மாதங்கள் கழிந்தன.லக்ஷ்மி தேவியின் திருவிழாவில் கலந்து கொள்ள ஒரு நகருக்கு காந்திஜி விஜயம் செய்தார்.கூட்ட நெரிசலில் காந்திஜியுடன் சென்ற தொண்டர்கள் அவரை விட்டுச் சற்று விலகி விட்டனர். அப்போது அவருக்குப் பின்னாலிருந்து கடூரமான குரல் ஒன்று ஒலித்தது. “நீங்கள் பாரதத்தை நாசம் செய்கிறீர்கள்.”

யார் இப்படிப் பேசுகிறார் என்று காந்திஜி திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. பின்னால் இருந்து குற்றம் சாட்டியவர் மகாத்மாவைக் கீழே தள்ளி விட்டார். கீழே விழுந்த காந்திஜி ஒரு புறமாகத் தள்ளப்பட்டார். அப்போது.” அவரை ஒன்றும் செய்யாதே”, என்ற கம்பீரமான குரல் ஒன்று கேட்டது.பின்னால் கசமுச என்று சப்தம் கேட்டதை காந்திஜி உணர்ந்தார். தன்னைத் தள்ளியவரை ஒருவர் அப்புறப்படுத்தியதை உணர்ந்து கொண்டார். அப்புறப்படுத்தியவரின் கால்களைத் தரையில் படுத்திருந்த காந்திஜி பார்க்க நேர்ந்தது.

 

ஆஹா! அதே ஜோடி செருப்புகள்!! அவருக்குத் தெரிந்து விட்டது. தான் ரயிலில் முன்பொரு சமயம் தூக்கி எறிந்த செருப்பும் தவறி விழுந்த செருப்பும் தன்னைக் காப்பாற்ற முயன்றவரின் காலில் மாட்டப்பட்டிருப்பதை காந்திஜி பார்த்தார்.  அவரது செருப்புகளை அவருக்கு நன்கு அடையாளம் தெரியும். ஏனெனில் அவை விசேஷமான அளவுகள் உடையவை.

காந்திஜியை மெதுவாக தூக்கி நிறுத்திய அவர், “பாபுஜி! ஒன்றும் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! அந்த முரடன் ஒரு முட்டாள்! நானும் கூட அவனைப் போலத் தான் சென்ற வருடம் வரை இருந்தேன்” என்றார்

காந்திஜி வியப்பு மேலிட,” சென்ற வருடம் வரை என்றால்..? உங்களை மாற்றியது எது?” என்று தன் மேலிருந்த தூசியைத் தட்டி விட்டவாறே கேட்டார்.

காந்திஜியைக் காப்பாற்றியவர் தன் கதையைச் சொன்னார்

சென்ற வருடம் வரை எனக்கு வேலையே கிடைக்காமல் இருந்தது.தாங்க முடியாத கஷ்டத்தில் இருந்தேன்.என்னுடைய நண்பன் ஒருவன் அருகிலிருந்த லக்ஷ்மி கோவிலுக்கு என்னை அழைத்தான். செல்வச் செழிப்பை அருளும் லக்ஷ்மியின் கோவிலுக்கு வந்தால் நல்ல வழி பிறக்கும் என்றான். ஆனால் எனக்கோ மனமே இல்லை.

என் நண்பனிடம், “ அந்தக் கோவில் மிகவும் தூரத்தில் இருக்கிறது. எனக்கோ காலில் செருப்பு கூட இல்லை? எப்படி வருவதாம்?” என்றேன். அப்போது ரெயில் தண்டவாளப் பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தோம். அங்கே அழகிய ஒரு ஜோடி செருப்பைக் கண்டேன். அதை எடுத்து அணிந்து கொண்டேன். அது என் காலுக்குச் சரியாகப் பொருந்தியது.

 

“இப்போது வரலாமில்லையா” என்றான் நண்பன். அவனுடன் கோவிலுக்குச் சென்றேன்.

என்ன ஆச்சரியம்! அந்த புதிய செருப்புகளை அணிந்ததிலிலிருந்து எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. கோவிலில் சேவை செய்து அனைவருக்கும் உதவலானேன். அங்கிருந்த கோவில் முக்கியஸ்தர்களுள் ஒருவர் என் சேவையைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து எனக்கு பக்கத்திலிருந்த டவுனில் ஒரு வேலை போட்டுக் கொடுத்தார். நான் இப்போது அனைவராலும் மதிக்கப்படுகிறேன்.”

கருணை ததும்பும் விழிகளுடன் அவரைப் பார்த்த மஹாத்மா, “நல்லது. உங்களுக்கு நன்றி” என்று மெதுவாகக் கூறியவாறே நகர்ந்தார்.

இந்தச் சம்பவத்தை தன் ‘கர்மா மானுவல்’ என்ற நூலில் விளக்கும் டாக்டர். ஜான் மம்போர்ட், “நல்ல விளைவுகளை விளைவிக்கும் ஆகாமி கர்மா (உள்ளுறையும் கர்மம்) விதைக்கப்பட்டது. அதுவே வெகு சீக்கிரமே பிராரப்த கர்மாவாக மாறி பலனை அளித்தது” என்று விளக்குகிறார்.

 

கர்மங்களில் தான் எத்தனை ரகங்கள்!

 கர்மங்களில் தான் எத்தனை ரகங்கள்! கத்தி கையில் கீறியவுடன் வெளிப்படுகிறது ரத்தம். சில கர்மங்கள் உடனடி பலனைத் தருபவை.

இரவிலே கொண்டைக்கடலையை ஈரத் துணியில் முடிந்து வைத்தால் காலையில் அவை முளை விடுகின்றன. சில கர்மங்கள் சில மணி நேரம் கழித்துப் பலனைத் தருகிறது.

ஒரு ஆலமரத்து விதையை ஓரிடத்தில் விதைத்தால் அது முழு மரமாகிப் பலன் தர பல்லாண்டுகள் ஆகின்றன, சில கர்மங்கள் ஆலமர விதையைப் போன்றவை. அடுத்த ஜென்மத்தில் பலனைத் தருபவை.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் கர்மங்களை விதைத்துக் கொண்டே சென்றால் அவற்றின் பலன்கள் நமக்கு நல்லவையாகவும் தீயவையாகவும் வந்து கொண்டே தானே இருக்கும்.

கீதை காட்டும் பாதை

 ஆகவே தான் நமது அற நூல்கள் கர்ம பலன் ரகசியங்களை விளக்கும் விதமாக இரண்டு முக்கிய வழிகளைச் சொல்கிறது.

ஒன்று (மனோ வாக்காய கர்மாணி) மனம் வாக்கு செயலால் நல்லதையே நினை; செய் இரண்டாவது கர்மம் செய்வதில் தான் உனக்கு அதிகாரம் ஒரு பொழுதும் அதன் பலனில் இல்லை (கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷ¤ கதாசன – கீதை இரண்டாம் அத்தியாயம் 47ஆம் ஸ்லோகம்). ஆகவே பலனைக் கருதாது கர்மத்தைச் செய்!

எந்தக் கர்மத்திற்கு என்ன பலன்: உமையின் கேள்வி

எந்த எந்த கர்மத்திற்கு என்ன என்ன பலன் என்பதை உமா தேவியார் பரமேஸ்வரனிடம் கேட்க அவர் அருள் கூர்ந்து மனித குல நன்மைக்காக அவற்றை விளக்கிக் கூறுவதை மஹாபாரதம் விளக்கிக் கூறுகிறது!

கிருஷ்ணர் கேட்க நாரதர் விளக்கும் உமா மஹேஸ்வர சம்வாதமாக அமையும் கர்மமும் அதன் விளைவுகளும் பற்றிய பட்டியல் மிக நீண்ட ஒன்று. அநுசாஸன பர்வம் 205ஆம் அத்தியாயம் முதல் 250 அத்தியாயம் முடிய சுமார் 46 அத்தியாயங்களில் கர்மபலன்களின் ரகசியங்கள் விளக்கப்பட்டுள்ளன.

குறிப்பு : நன்றி ஞான ஆலயம் ( ஜுலை 2012 இதழில் வெளியான கட்டுரை)

 

கர்மம் பற்றிய குறுந்தொடர்! சென்ற கட்டுரையில் மஹாத்மா காந்திஜியின் வாழ்வில் நடந்த சம்பவத்தையும் அது விளக்கும் கர்ம பலன் ரகசியத்தையும் பார்த்தோம். இதோ, இன்னும் ஒரு அதிசய சம்பவம் – அமெரிக்காவில் நடந்தது! நூறு கோடி கல்பம் ஆனாலும் செய்த கர்மங்களின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற உண்மை என்றும் அழியாத ஒன்று!

 

அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்! – 2

 

ச.நாகராஜன்

 

பார்வதி, பரமசிவன் உரையாடலின் சுருக்கம்

உமாதேவிக்கு மனித ஜன்மத்தில் எந்தக் கருமத்திற்கு என்ன பலன் என்று சந்தேகம் ஏற்பட பரமேஸ்வரன் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவாக பதில் சொல்வதைத் தொகுத்துப் பட்டியலிட்டால் அது மிக நீண்ட ஒன்றாக ஆகி விடும்.

இருந்தாலும் அதன் சுருக்கத்தை இப்படி உரைக்கலாம் :

தானத்தையும் தர்மத்தையும் உரியவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே தாமாகவே முன் வந்து உதவுபவர் அடுத்த ஜன்மத்தில் முயற்சியின்றியே செல்வத்தையும் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் பெறுவர்.

யாசிப்பவர்க்கு மட்டுமே தானம் செய்பவர் முயற்சிகள் செய்து பாக்கியத்தை மறு ஜன்மத்தில் அடைவர்.

யாசித்தவர்க்கும் ஒன்றும் தராதவர் அடுத்த ஜன்மத்தில்  முயற்சி செய்த போதும் பலனை அடையார்.

செல்வத்தைக் கொண்டிருந்தும் யாருக்கும் இளமையில் உதவாமல் இருந்து, முதிர்ந்த பிராயத்தில் பிணிகள் வந்தவுடன் தானம் செய்வோர் அடுத்த பிறவியில் முதிர்ந்த பிராயத்தில் போகங்களை அனுபவிப்பர்.

ஏழைகளிடம் அடாத வட்டி வாங்கியோரும் மிருகங்களை வேட்டையாடி வதை செய்தோரும் ஹிம்ஸை நிறைந்த நாட்டில் ஜன்மம் எடுப்பர்.

முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கான பலன்களை இந்த ஜன்மத்திலும், இந்த ஜன்மத்தில் செய்யும் கர்மங்களுக்கான பலன்களை அடுத்த ஜன்மத்திலும் அனுபவிப்பர்.

 

ஆச்சரியமான ஒரு சம்பவம்

கர்ம பலன்களின் விளைவுகள் அதிசயக்கத் தக்க விதத்தில் ஒரு கணம் கூடத் தவறாது எப்படியோ நம்மை வந்து அடைகின்றன. இதை விளக்க ஒரே ஒரு ஆச்சரியமான சம்பவத்தை மட்டும் இங்கே பார்ப்போம்:

 

பிரபல ஆங்கில மாத இதழான ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழை அறியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் சிறந்த கட்டுரைகளை மட்டுமே அது ஒவ்வொரு இதழிலும் வெளியிடும் – அதுவும் ஒவ்வொரு சம்பவமும் தகவலும் ஏன் எழுத்தும் கூடச் சரி பார்க்கப்பட்டு! ரீடர்ஸ் டைஜஸ்ட் க்ளாஸிக் என்ற ஒரு சிறப்புப் புத்தகத்தில் பல வருடங்களாக இது வரை வெளியான கட்டுரைகளிலிலிருந்து மிகவும் சிறந்த கட்டுரைகளை அது வெளியிட்டுள்ளது. அதில் ஒரு அற்புதமான கட்டுரை கர்மபலன் சம்பந்தப்பட்டது. (இதன் மறுபதிப்பை ஜனவரி 2010 இதழில் படிக்கலாம்) அதில் வரும் சம்பவம் தான் இது!

1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி பிற்பகல். மார்செல் ஸ்டெர்ன்பெர்கர் என்பவர் ஹங்கேரியில் பிறந்தவர். பிழைப்புக்காக நியூயார்க் வந்து போட்டோகிராபராக தன் வாழ்க்கையைக் கழிக்கலானார். அவரது தினசரி வாழ்க்கை வழக்கமான ஒன்று – வீட்டிலிருந்து ஐந்தாம் அவென்யூவில் உள்ள தன் அலுவலகத்திற்குச் செல்வது, அங்கு வேலையை முடித்து விட்டு திரும்பவும் வீடு வந்து சேர்வது என்பது தான் அவரது வழக்கம்.

 

50 வயதான மார்செல் வழக்கம் போல சரியாக 9.09க்குக் கிளம்பும் லாங் ஐலேண்ட் ரெயில்ரோட் புகை வண்டியில் ஏறி உட்சைடு என்ற அவரது இடத்துக்குப் போயிருக்க வேண்டும். அன்று அவருக்கு வழியில் ப்ரூக்ளினில் இருக்கும் தன் நண்பரைப் பார்க்க வேண்டும் போலத் திடீரென்று தோன்றியது.ஆகவே ஒஸோன்பார்க் என்ற ஸ்டேஷனில் இறங்கி ப்ரூக்ளின் செல்லும் ரயிலில் ஏறினார்.தனது நண்பரின் இல்லத்திற்குச் சென்று அவருடன் சற்று நேரம் அளவளாவி மகிழ்ந்து பின்னர் ரயில் நிலையம் வந்து மன்ஹாட்டனுக்குச் செல்லும் ரயிலில் தன் அலுவலகம் செல்வதற்காக ஏறினார்.ரயிலில் ஒரே கூட்டம்.உட்கார இடமே இல்லை.ஆனால் என்ன ஆச்சரியம். அவர் உள்ளே நுழைந்த போது அடுத்த ஸ்டேஷனில் இறங்க வேண்டிய ஒருவர் தன் இருக்கையை விட்டு எழுந்திருக்க சடக்கென்று அந்த இடத்தைப் பிடித்தார் மார்செல்.போட்டோகிராபருக்கே உரித்தான இயல்புடன் தனக்கு அடுத்து உட்கார்ந்திருந்தவரின் முகத்தைப் பார்த்தார். அடுத்த சீட்டில் உட்கார்ந்திருந்தவருக்கு சுமார் முப்பது வயது இருக்கும். ஒரு விதமான சோகம் அவர் கண்களில் ததும்பி இருந்தது.அவர் ஹங்கேரிய மொழியில் வெளிவரும் செய்தித்தாள் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். தனது தாய் மொழியில் இருக்கும் பேப்பரைக் கண்டு ஆனந்தம் அடைந்த மார்செல் உடனே அவரிடம் அதைச் சற்று தருமாறு ஹங்கேரிய மொழியில் வேண்டினார். அவருக்கு ஒரே ஆச்சரியம். நியூயார்க்கில் ஹங்கேரிய மொழியில் பேசும் ஒருவரா! அடுத்த அரை மணி நேரப் பயணத்தில் அவர் தன் சோகக் கதை முழுவதையும் கூறி விட்டார்.அவரது பெயர் பாஸ்கின். சட்டம் படிக்கும் மாணவராக இருந்த போது இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானது. அவரைப் பிடித்து இறந்த ஜெர்மானியர்களைப் புதைப்பதற்காக உக்ரேனில்   இருந்த முகாமுக்கு அனுப்பி விட்டார்கள்.யுத்தம் முடிந்தவுடன் பல நூறு மைல்கள் நடந்து ஹங்கேரியில் இருந்த டெப்ரெசென் என்ற தன் சொந்த ஊருக்கு வந்த தனது வீட்டிற்குச் சென்ற போது அதிர்ந்து போனார். அங்கே அவரது தந்தை, தாயார், சகோதர சகோதரிகள்,மனைவி யாரையும் காணோம்.அங்கே இருந்தவர்களுக்கு பாஸ்கின் குடும்பம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. மலைத்து நின்ற பாஸ்கினை நோக்கி ஓடி வந்த சிறுவன் பாஸ்கின் அங்கிள், உங்கள் வீட்டில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்.நாஜிக்கள் உங்கள் மனைவியை அசுவிச் சித்திரவதை முகாமுக்கு கொண்டு சென்று விட்டனர்.” என்று கூறினான்.சோகத்தோடு பாரிஸ் திரும்பிய மார்செல் 1947இல் அக்டோபர் மாதம் நியூயார்க் வந்து சேர்ந்தார்.

 

இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த மார்செலுக்கு திடீரென்று தான் சமீபத்தில் சந்தித்த ஒரு பெண்மணி பற்றிய ஞாபகம் வந்தது… அவர் டெப்ரெசனைச் சேர்ந்தவர் தான். அவரது உறவினர்கள் நச்சு வாயு சேம்பர்களில் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். அசுவிச்சில் ஜெர்மானிய ஆயுத பேக்டரியில் வேலை பார்த்து வந்த அவரை யுத்த முடிவில் அமெரிக்கர்கள் விடுவித்தனர்.

பாஸ்கினிடம் மார்செல் அவரது மனைவியின் பெயர் மரியாவா என்று கேட்டார். பாஸ்கின் ஆச்சரியப்பட்டுப் போனார். எப்படி முகம் அறியாத ஒருவருக்குத் தன் மனைவியின் பெயர் தெரிந்தது/

அடுத்த ஸ்டேஷனில் பாஸ்கினை இறங்குமாறு கூறிய மார்செல் ஒரு போன் பூத்திற்குச் சென்று தனது டயரியை எடுத்து ஒரு போன் நம்பரை டயல் செய்தார். மரியாவிடம் அவர் கணவரின் அடையாளங்களைக் கேட்டார். பாஸ்கின் தான் அவரது கணவர் என்று உறுதிப்படுத்திக் கொண்ட மார்செல் போனை பாஸ்கினிடம் தந்து, “உங்கள் மனைவியிடம் பேசுங்கள்” என்றார். வாயடைத்துப் போன பாஸ்கின் சில நிமிடங்கள் அப்படியே நின்றார். பின்னால் போனில் தன் மனைவியுடன் பேசி ஆனந்தக் கண்ணீர் விட்டார். பின்னர் பாஸ்கினை ஒரு டாக்ஸியில் ஏற்றி மனைவியிடம் செல்லுமாறு கூறிய மார்செல் தம்பதிகள் இணையும் புனிதமான தருணத்தில் தான் இருப்பது அழகல்ல என்று விளக்கி பாஸ்கினை மட்டும் அனுப்பினார்.

இப்போது கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை என்று கூறும் மார்செல் சம்பவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அலசுகிறார். ஏன் அவர் தன் நண்பரைப் பார்க்க திடீரென்று அவருக்கு ஏன் தோன்ற வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட ரயிலைத் திரும்பும் போது ஏன் பிடிக்க வேண்டும், அதில் ஒரு இருக்கை தனக்கு மட்டும் ஏன் கிடைக்க வேண்டும், அருகில் இருந்தவர் அந்தக் கணத்தில் ஏன் ஹங்கேரிய பேப்பரைப் படிக்க வேண்டும்.. ஏராளமான அதிசயங்கள்.

 

இறைவனின் வழி தனி வழி என்று முடிகிறது கட்டுரை!.

கர்ம பலன்கள் தவறாது அந்தந்த கணத்தில் உரியவரை வந்து அடையும் என்பதற்கான சரியான நடந்த சம்பவம் இது! ஆனால் ஆயிரக்கணக்கானோருக்கு இது போன்ற அதிசய சம்பவங்கள் தினந்தோறும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில் உள்ள அபூர்வமான நிகழ்வுகளை இனம் காணும் மனோபாவம் தான் ஏராளமானோருக்கு இல்லை. அப்படி அதிசய நிகழ்ச்சிகளை இனம் காணும் சிலருக்கும் அதைக் கர்ம பலன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தனது வாழ்வில் நிகழும் சம்பவங்களை அன்றாடம் இரவு படுக்கப் போகும் முன்னர் அலசினால் கர்ம பலன்களின் ரகசியத்தை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்!

 

நூறு கோடி கல்பம் ஆனாலும் வினை விடாது

 

ஹிந்து மதத்தின் மிக முக்கியமான இந்த கர்மபலன் தத்துவத்தை விளக்கும் சுபாஷித சுலோகம் ஒன்று உண்டு.

க்ருத கர்ம க்ஷயோ நாஸ்தி கல்போ கோடி ஷதைரபி I

அவஸ்யமேவ போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் II

இதன் பொருள்: ஒருவன் செய்த கர்மங்களின் பலன்கள் (செயல்களின் விளைவுகள்) ஒரு பொழுதும் அழியாது. அநேக நூறு கோடி கல்பம் போனாலும் சரி, (அழியாது) த்னது கர்ம பலனை ஒருவன் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அவை நல்லவையாக இருந்தாலும் சரி, தீயவையாக இருந்தாலும் சரி, அனுபவித்தே ஆக வேண்டும்!

இந்த கர்ம பலனை உரிய நேரத்தில் உரியவரை யார் கொண்டு சேர்க்கின்றனர், இதற்கான செயல் முறை என்ற மாபெரும் இறை ரகசியத்தை அறிந்தவர் யாரும் இல்லை என்றே நமது அற நூல்கள் வியந்து கூறுகின்றன!(ந மே விது: ஸ¤ரகணா ப்ரபவம் ந மஹர்ஷய: – என்னுடைய ப்ரபாவத்தை தேவர் கூட்டங்களோ மஹரிஷிகளோ அறியார் – கீதையில் கண்ணன் வாக்கு – 10ஆம் அத்தியாயம் 2ஆம் ஸ்லோகம்)

உத்தரேத் ஆத்மனாத்மானம்

 கர்ம பலன்களையும் அதற்கான பலன்களையும் பூர்வ ஜன்ம புண்ணியத்தால் சில தீய விளைவுகளுக்கான பரிகாரம் செய்து இந்த ஜன்மத்திலேயே நலம் பெறுவதற்கான வழிகளையும் ரிஷிகள் உள்ளுணர்வால் அறிந்து அதை பல தர்ம சாஸ்திர நூல்களில் விவரித்துள்ளனர். அவற்றை அறிந்து நலம் பெறலாம்; பலனை எதிர்பார்க்காமல் கர்மங்களைச் செய்து கர்ம விளைவுகள் நம்மைப் பற்றாமல் அடுத்த ஜன்மத்தைப் புனிதம் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளலாம்; கர்ம பலன் ரகசியத்தை விசாரத்தால் அறிந்து, இறைவனை அடிபணிந்து ஜன்ம நிவிருத்தி பெற்று முக்தியையும் அடையலாம்! எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.

இதையே கீதையில் சுருக்கமாக கண்ணன் ‘உத்தரேத் ஆத்மனாத்மானம்’ (உன்னை நீயே உயர்த்திக்கொள்ளலாம்) என்று கூறி விட்டான்!

நன்றி: ஞான ஆலயம் ஆகஸ்டு 2012                                          இந்தத் தொடர் நிறைவுறுகிறது

Article written by S Nagarajan

சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்!

Picture shows Ursa Major (great bear). Hindus call it Sapta Rishi Mandalam. On the day of wedding, Hindus are shown Arunthathi– a double star–near Vashista Star. Vashista is one of the seven rishis/seers.

 

Tamil Article on Ursa Major also known as The Great Bear Constellation and  Saparishi Mandlam by Santanam Nagarajan: 

ஆங்கிரஸ், க்ரது,மரீசி,வசிஷ்டர்,புலஹர்,புலஸ்த்யர்,,அத்ரி ஆகியோரே சப்தரிஷிகள்.சூரியனுக்கே சக்தியை அருளும் இவர்களை சூரியன் அனுதினமும் தொழுது வானவீதியில் வலம் வருகிறான்.இவர்களை வழிபட்டால் நமக்கும் வலிவும் பொலிவும் ஆரோக்கியமும் ஆயுளும் வளரும் என்பதோடு செய்த பாவங்கள் எல்லாம் உடனே அகலும் என்பது தான் புராணம் கூறும் ரகசியம்! சப்தரிஷிகளை நம் நாட்டில் ரிஷி பஞ்சமி அன்று வழிபடுகிறோம். இவர்களைப் பற்றிய அதிசய செய்திகள் ஏராளம்.. படிக்கலாமா?

சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்!

ச.நாகராஜன்

 

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்

சப்த ரிஷிகளையும் அருந்ததியையும் தெரியாதவர் யாருமே இருக்க முடியாது.வைதீக முறைப்படி நடக்கும் திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு மிக முக்கியமானது. பழைய காலத்தில் நான்கு நாட்கள் நடந்த திருமண வைபவம் அவசர கதியில் ஒன்றரை நாட்களாகச் சுருங்கிய விபரீதத்தின் காரணமாக இந்த அருந்ததி பார்க்கும் வைபவம் பகல் நேரத்திலேயே அருந்ததியை நிஜமாகப் பார்க்காமலேயே கல்யாண மண்டபத்திற்குள்ளேயே முடிந்து விடுகிறது. பழைய காலத்தில் இந்த பரிதாபம் இல்லை. திருமணம் நடந்த அன்று இரவு நிஜமாகவே துருவ நட்சத்திரத்தையும் அருந்ததியையும் பார்க்கும் பழக்கம் தவறாமல் அனுஷ்டிக்கப்பட்டது.

த்ருவனையும் அருந்ததியையும் பார்க்கும் போது கூறும் மந்திரத்தின் அர்த்தமாவது:- “ஓ! துருவ! நீர் அழிவில்லா பதவி பெற்றவர்.ஸத்யத்திற்கு காரணமானவர்.ஸ்திரமாக இருப்பதற்கு நீரே காரணம்.த்ருவம் என்ற பெயரைப் பெற்றீர்.சுற்றுகின்ற நட்சத்திரங்களுக்கு நீர் கட்டுத்தறி போல இருக்கிறீர்.அத்தகைய நீர் சத்ருக்களின் உபாதை இல்லாமல் இவளை ஸ்திரமாக இருக்கச் செய்யும்”

சப்த ரிஷிகள் பத்னிகளுக்கு க்ருத்திகா என்று பெயர்.அவர்களுள் சிறந்தவளான அருந்ததியை ஷட் க்ருத்திகைகள் “இவளே எங்களுள் மிக உத்தமி” என ஏற்றுக் கொண்டனர்.அத்தகைய பெருமை வாய்ந்த அருந்ததியின் தரிசனத்தால் இவள் எட்டாவது கிருத்திகை போல கற்பினாலும் பாக்கியத்தினாலும் விருத்தி அடையட்டும்.”

ஆங்கிரஸ், க்ரது,மரீசி,வசிஷ்டர்,புலஹர்,புலஸ்த்யர்,,அத்ரி ஆகியோரே சப்தரிஷிகள் என ப்ருஹத் சம்ஹிதா பட்டியலிடுகிறது.(ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் சப்தரிஷிகள் வேறுபடுவர்).சப்த ரிஷிகளுள் ஒருவரான வசிஷ்டரின் அருகில் அவருக்குக் கீழே காணப்படும் அருந்ததியை வழிபடுவதுதொன்று தொட்டு  மரபாக இருந்து வருகிறது.

 

அருந்ததியின் கதை

 

அருந்ததி என்ற சொல்லுக்கு ‘சிவந்த மாலைப் பொழுது’ என்று பொருள்.நிஜமாகவே வானில் ‘சாயம் சந்த்யா’வின் ஒளியையே அருந்ததி நட்சத்திர ஒளியில் காணலாம்.

அருந்ததியைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்றை காலிகா புராணம் இவ்வாறு கூறுகிறது :- “சந்த்யா பிரம்மாவின் புதல்வி. சப்தரிஷிகளின் சகோதரி.அவளது எல்லையற்ற அழகால் பிரம்மாவும் சப்தரிஷிகளுமே மயங்கிய காரணத்தால் அவள் தன் உடலை உகுத்து விட்டாள்.பிறகு அருந்ததியாக உருவெடுத்து வசிஷ்டரை மணம் புரிந்து கொண்டாள்.”

ஆக அழகிலும் கற்பிலும் கணவனைப் பேணுவதிலும் பெண்மையின்  லட்சியமாகவும் இலக்கணமாகவும் திகழும் அருந்ததியை பெண்கள் வழிபடுவதில் வியப்பில்லை.

 

சப்த ரிஷி மண்டலம்

சாதாரணமாக வானவியல் தெரியாதவர்கள் கூட இந்தக் காலத்திலும் சப்தரிஷி மண்டலத்தைத் தெரிந்து அதை வானில் ஒருவருக்கு ஒருவர் சுட்டிக் காட்டி மகிழ்கின்றனர்.இது மேலை நாட்டில் ‘க்ரேட் பேர்’ அல்லது ‘ஊர்ஸா மேஜர்’ என வழங்கப்படுகிறது.மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்சத்திரங்கள்  ஏர்க்கால் போன்று ஒரு முனை கிழக்காக இருக்குமாறு காணப்படுகிறது. இதையே பண்டைய காலம் தொட்டு சப்தரிஷி மண்டலம் என அழைக்கிறோம்.மேற்கில் உள்ள இரண்டு நட்சத்திரங்களைச் சேர்த்து சுமார் 7 பங்கு தூரம் வடக்கே நீட்டினால் துருவ நட்சத்திரத்தில் முடியும். ஆகவே திசையைக் காட்டும் நட்சத்திரங்களான இந்த இரண்டை மட்டும் மாலுமிகள் திசைகாட்டி என அழைத்தனர். இந்த சப்த ரிஷி மண்டலம் சூரிய வீதியில் இல்லாததால் 27 நட்சத்திரங்கள் பட்டியலில் சேரவில்லை. பிரம்ம சித்தாந்தம் என்னும் நூலில் சகலர் என்னும் ரிஷி சப்த ரிஷிகள் மற்றும் அருந்ததி எங்கே உள்ளனர் என்பதை விரிவாக விளக்குகிறார். ரிக் வேதம் (9-114-3) “தேவா: ஆதித்யா: யே சப்த” என்று இந்த ஏழு பேரும் ஏழு தெய்வங்கள் என முழங்குகிறது.மஹாபாரதமோ இவர்களை சித்ர சிகண்டி ( மயில் வடிவம்)என்று 12-336ம் அத்தியாயத்தில் விளக்குகிறது!

 

ப்ருஹத் ரதம்

ப்ருஹத் ரதம் என்ற பெரும் பாதையை இந்திரனின் ரதம் செல்வதற்காக சப்தரிஷி மண்டலம்  அமைப்பதும் அந்த ப்ருஹத் ரதத்தின் வழியே தேரில் இந்திரனும் நகுஷனும் ஒன்றாக தேரில் அமர்ந்து செல்வதையும் ரிக் வேத கீதங்கள் அழகுற இசைக்கின்றன.

 

சூரியனுக்கே சக்தி அருளும் ரிஷிகள்     

 

 

உண்மையில் சூரியனுக்கு பலமும் ஒளியும் தருபவர்கள் இவர்களே என வேதம் கூறுகிறது. ரிஷி யாஸ்கர் சூரியனின் ஏழு கிரணங்களே சப்த ரிஷிகள் என்ற ரகசியத்தை (நிருக்தா I-1.5யில் உள்ள) ‘சப்த ரிஷயஹ சப்த ஆதித்ய ரஷ்மயஹ இதி வதந்தி நைருகாதாஹா’ என்ற வாக்கியத்தின் மூலம் உணர்த்துகிறார்! இவர்களிடமிருந்து தன் சக்தியைப் பெறுவதால் தான் சூரியன் சற்று கீழே தாழ்ந்து இவர்களை அன்றாடம்  தொழுது தன் பவனியைத் தொடர்கிறான் என்பதை குமார சம்பவத்தில் (7-7) மகாகவி காளிதாஸர் “அவர்கள் தொடர்ந்து தரும் ஆதரவால் அந்த ரிஷிகள் வானில் உதிக்கும் போது  சூரியன் தனது அஸ்தமன சமயத்தில் தன் கொடியைக் கீழே தாழ்த்தி பயபக்தியுடன் அவர்களைப் பார்க்கிறான்” என்கிறார். சூரியனே தொழுது சக்தி பெறும் போது நாம் தொழுது சக்தி பெறலாம் என்பதே நாம் உணர வேண்டிய ரகசியம்!இது மட்டுமின்றி இன்னொரு ரகசியத்தை அதர்வண வேதம் உரைக்கிறது. இவர்களே பஞ்சபூதங்களை உருவாக்கினர்!(சப்தரிஷய: பூதக்ருதா: தேI அதர்வண வேதம் VI -108-4)

ஏழு ரிஷிகளையும் நாம் பிதரஹ (தந்தைமார்) எனக் குறிப்பிட்டு வணங்குகிறோம். இவர்களுக்கு மேலே பிரம்ம லோகத்தில் உள்ள பிரம்மா இவர்களுக்குத் தந்தை ஆதலால் நாம் பிரம்மாவை பிதாமஹ என்று கூறி வணங்குகிறோம்.

 

பாவம் போக்கும் பஞ்சமி தினம்

விநாயகசதுர்த்தியைத் தொடர்ந்து அடுத்த நாளாக வரும் பஞ்சமி தினம் ரிஷி பஞ்சமி என தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அனைவரும் சப்த ரிஷிகளையும் வணங்கித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டு புதிய வலிவும் பொலிவும் ஆரோக்கியமும் தீர்க்க ஆயுளும் பெற்றுத் தம் வாழ்க்கையைத் தொடர்வது வழக்கம். குறிப்பாகப் பெண்கள் நேபாளத்திலிருந்து காவேரி தீரம் வரை  ஒரு மரத்தட்டில் ஏழு ரிஷிகளையும் எழுந்தருளச் செய்து அறிந்தோ அறியாமலோ தாங்கள் மாதவிலக்குக் காலத்தில் செய்த பாவச் செயல்கள் உள்ளிட்ட அனைத்துப் பாவங்களையும் ஒரு கணத்தில் போக்கிக் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளின் 1600 முறை பயணமே ஒரு மஹாயுக காலம்

ஆரிய பட்டரும் வராஹமிஹிரரும் (பிருஹத் சம்ஹிதா 13ம் அத்தியாயத்தில் வராஹமிஹிரர் கூறுகிறார்) இந்த சப்தரிஷிகள் 1600 முறை புறப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் அங்கேயே வந்து சேர்ந்தால் ஒரு மஹாயுகம் ஆகும் என்று கணக்கிட்டுச் சொல்லி உள்ளனர். அதாவது இப்படிப்பட்ட 1600 முறை சுழற்சி முடிய 43,20,000 வருடங்கள் ஆகின்றன! ரிக் வேதம்,மஹாபாரதம், ராமாயணம்.18 புராணங்கள், மற்றும் பின்னால் வந்த இலக்கியங்கள் அனைத்திலும் சப்தரிஷிகளின் ரகசியங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

மாயவரத்தின் அருகில் கொல்லுமாங்குடியிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுபுலியூர் உள்ளிட்ட ஏராளமான ஸ்தலங்கள் தென்னாட்டிலும் வசிஷ்டர் தவம் செய்து வசித்த வசிஷ்ட குகை போன்ற பல புண்ணிய இடங்கள் வட நாட்டிலும் சப்தரிஷிகளின் ஏராளமான வரலாறுகளை உள்ளடக்கிய பெரும் ஸ்தலங்களாக அமைந்துள்ளன,

*********************

Gajendra Moksha in Africa !!

Picture credit: Metro,London;taken at Kruger National Park, South Africa

By London swaminathan

Gajendra moksha is one of the most popular stories in India. This story of the crocodile and the elephant appears in Bhagavatha, the story of Vishnu. It has not only influenced literature but also arts. We have pictures and sculptures, idols and paintings from Gupta days to modern day. Calendars carry this picture. Children listen to this story with rapt attention. This is the story that tells us the moral that faith will bring God to your doorstep. Complete surrender to God will cure one of all the troubles.

 

We see it from Gupta period sculptures to paper drawings of Brooklyn Museum, USA. The story is very simple. Gajendra was the king of the elephants. One day he went to the forest lake to drink water. He was caught by a crocodile. He tried very hard to release himself from the grip of the crocodile. When he failed to get out of the water all his friends and relatives tried but in vain. At last, the king of the elephant cried for help by calling the name of Narayana (Vishnu). The all powerful God flew from heaven on his vehicle Garuda (eagle) and fired his Sudarchana Chakra.

 

Sudarsana chakra was the first Boomerang known to the world. Like the Australian aborigines Boomerang, it would hit the target and comeback to the person who fired it. So sudarsana wheel went and cut off the head of the crocodile and Gajendra thanked God by giving him lotus flowers.

Believe it or not it happened in Africa very recently. But the God was not involved in it. A baby elephant went for water in a marshy area. Suddenly a crocodile appeared from nowhere and caught  its trunk. Baby elephant struggled hard to release itself. While it was still struggling, all the elephants in the herd came for its help and drove the crocodile by trumpeting and stamping. After it was saved, all the elephants of the herd stayed around the baby elephant for a while  to make sure it was OK.

Picture credit: folknet

This elephant and crocodile story happened in the Kruger National Park in South Africa. The news papers in western countries published this story with pictures. They compared this incident to a story in Rudyard Kipling’s book which tells the tale of how the elephants got its trunk—a crocodile pulled it.

 

Crocodiles rarely attack elephants. But it is a familiar scene in Indian forests. Greatest of the Tamil poets Tiruvalluvar, who lived 1500 years ego sings about it. When he wrote a couplet about the strength of a crocodile and the elephants he must have thought Gajendra Moksha story. The meaning of the word Gajendra Moksha is Gaja=elephant, Indra= the leader or the king of, moksha=release/ liberation. Now read the couplet of Valluvar:

In deep waters the crocodile overpowers all; out of water, others overpower it (Kural 495).

A fierce elephant that has faced lancers, can be foiled by a fox, if it is stuck in a marshy ground (Kural 500)

The comparison between the strength of an elephant and a crocodile is in Panchatantra Stories as well.

 

Other animal stories by londonswaminathan:

Two Little animals that inspired Indians

Why do animals worship God?

Animal Einsteins

Tortoise mystery

Can parrot recite Vedas?

Can birds predict your future?

( The above posts are available in my blogs: swami)

Contact: swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

 

***************

Largest Golden Temple in the World

By London Swaminathan

The most famous Golden Temple is in Amritsar (Punjab, India). But it is not the largest Golden Temple. There is another Indian Wonder, carrying several times more gold on its roof than Amritsar temple. No doubt Amritsar is the holy city for Sikhs. But if you take the amount of gold, then Vellore Sri Puram Golden temple is the largest in India, perhaps in the world!

 

The gold used in Amritsar Golden Temple is about 100 kilos. The gold that was used in Sri Puram temple was 1500 kilo gold!!!

Sri Puram Temple was valued Rs 600 crores including the vast land, buildings and gold.

 

When I went o Sripuram Golden temple of Goddess Narayani  (Maha Lakshmi) five years ago I was wonder struck. I felt that I have achieved something great in my life by visiting the temple. When I took my family to Bangalore in India, I cancelled the first class Railway reservations and arranged a car to travel from Chennai to Bangalore. My family was not happy for two reasons: 1.Tedious car journey and 2.cramping too many “unimportant” places in our itinerary. One of the “unimportant”, not heard of places is Vellore Sripuram Golden Temple. I told them to shut up till they see the temple.

As we reached Sri Puram, they could see the big crowd going towards the place and they realised there was something unique there. We stood in the queue like we do in Tirupati Balaji temple even after buying a special ticket. This helped us to cut short the queue. All along the walking route you can buy eatables and other memorabilia. When they saw the golden towers and walls of the temple they were all amazed. One disappointing thing was they didn’t allow cameras or mobile phones inside the temple complex.

The Golden Temple at Sri Puram is a must see place for everyone going to Tamil Nadu. Now I am telling all Londoners visiting Tamil Nadu to include it in their main itinerary.

 

Some important facts about the temple:

It was built in 2007.

The gold used for the temple- 1500 kilos!

Location: five miles from Vellore. Vellore is 80 miles from Chennai and 135 miles from Bangalore. It is under the foot of a small hill. Don’t miss the famous Jalakandeswarar Shiva temple in Vellore on you way.

Area occupied- 100 acres

Who runs the temple? A saint called Sri Sakthi Amma (amma means madam or mother in Tamil; but he is a man). Swamiji’s books , magazines and booklet about the beautiful temple are available in the temple complex.

What is the secret? The temple itself is constructed in star shape (reminding Sri Chakra of Goddess). Like all South Indian temples there is a sanctum sanctorum (Garba Gruham), Vimanam (tower) and Ardha Mandapam (hall before the sanctum sanctorum)

What does he teach? Like any Hindu saint Worship God, Serve the Community, Respect the Hindu scriptures etc. No cult or anything like we see in some other movements.

One can see the sculptures of all the gods when one walks along the long and winding route to the shrine.

It is a modern wonder, but definitely, a Wonder of the World.

For more of the same, contact swami_48@yahoo.com

*******

Largest Story Collection in the World

By S.Swaminathan

(Ancient India gave us the largest story book in the world!  That too in poetry, not prose.22,000 verses, that means 44,000 lines. Even if we do a rough calculation at the rate of five words per line it would add up to 220,000 words in Sanskrit! And it is not about religion!!)

Harry Potter is a series of seven fantasy novels written by the British author J. K. Rowling. The books chronicle the adventures of a wizardHarry Potter, and his friends Ronald Weasley and Hermione Granger, all of whom are students at Hogwarts School of Witchcraft and Wizardry.

 

Since the release of the first novel Harry Potter and the Philosopher’s Stone on 30 June 1997, the books have gained immense popularity, critical acclaim and commercial success worldwide. Eight films have been made out of seven books. They were all box office hits.

As of June 2011, the book series has sold about 450 million copies, making it the best-selling books series in history and has been translated into 67 languages, and the last four books consecutively set records as the fastest-selling books in history.

Rowling has led a “rags to riches” life story, in which she progressed from living on social security to multi-millionaire status within five years. As of March 2011, when its latest world billionaires list was published, Forbes estimated Rowling’s net worth to be US$1 billion.

(Above matter about Harry Potter is lifted from Wikipedia)

 

Indians are very familiar with these types of story plots and themes from their younger days. They would have read them in Chandamama monthly magazines (Ambulimama in Tamil). But Ms Rowling’s luck and the way she wrote it in English brought her billions of pounds.

India is the country which supplied the story themes to the world from the earliest days. Even foreign authors acknowledge that Aesop got the ideas from the Panchatantra stories and the 1001 Arabian Nights got the ideas from Brhat Katha/ Katha Sarit Sagara, Giovanni Boccaccio’s The Decameron got the idea from the Dasakumara Charitha. La Fontaine’s Fables and The Canterbury Stories got the ideas from the Panchatantra. Upanishads simple parables served as models for Jesus’ parables in the Bible.

 

(Please read S.Swaminathan’s other article How Jonathan Swift got the idea for his Gulliver’s Travels in “Valakhilyas-60,000 thumb sized ascetics protecting humanity”)

 

Whether it is ghost or animals, Gods or Angels, mountains or rivers all the themes went from India. Take any modern short story. You will find something similar in the old Sanskrit literature.

I will give you some facts instead of making sweeping statements:

One thousand years ago India produced the largest story book in the world. The Katha Sarit Sagara (Ocean of Stories) written by Soma deva contained over 400 stories. It was written in Sanskrit in 11th century CE (AD)

 

Somadeva was the court poet of king Ananta of Kashmir. He wrote it to amuse queen Suryavaty. It was translated from Brhatkatha. The earliest and largest collection of stories, perhaps in the world contains 18 books divided into 124 tarangas/ waves with a total of 22000 verses.

Tales of wondrous maidens, fearless lovers, kings and cities, statecraft and intrigues, magic and spells, treachery, trickery, war, vampires, devils, ascetics, gamblers and beggars.

Though Jataka Tales (Second Century BC) has 550 stories in Pali language they were all adapted into Buddhist literature from various sources to say that Buddha had 550 previous incarnations as animals and human beings. It is not secular literature. A lot of secular matter was copied from Sanskrit sources and converted into religious literature. Even Ramayana and Mahabharata characters were turned into Buddha’s incarnations.

The Panchatantra Stories written by Vishnusarman, were the earliest Sanskrit stories that travelled to different parts of the world. By fifth century it reached four corners of the earth. Divided into five chapters it has woven stories within story. It has more than 81 stories.

 

Hitopadesa followed Panchatantra in style and contents.

Vedala Pancha Vimsati –25 stories (Twenty Five Tales of the Ghost/Vetala)

Dasa Kumara Charitham –10 stories (Ten Stories of Dasakumara)

Simhasana Dwattrimsika–32 stories (Thirty Two Stories of the Lion Throne)

Suka Sapatati–70 stories (Seventy Stories of a parrot)

The number of stories given indicate only main stories. We see lot of stories within stories. The actual number will be many more hundreds.

Jataka Tales (in Pali language) –550 stories (Incarnations of Buddha)

Hundreds of stories and anecdotes are in Mahabharata

Hundreds of Stories are in The Vedas and Parables in Upanishads.

In fact the world’s oldest short stories are from India. Stories such as Gilgamesh in Sumerian literature are of religious type.

The earliest of Sanskrit stories has moral themes. But later writings such as Katha saritsagara haven’t got such moral teachings. They were written just for pleasure. Katha saritsagara is unique and it was written in verse.

(Article was written by S.Swaminathan. Contact: swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com )

*****************

மறுபிறப்பு உண்மையா? பகுதி 4

மெய்ஞானமும் விஞ்ஞானமும் கூறும் புனர்ஜென்ம உண்மைகள்! – 4
(அறிவியல்,ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)

Written By S Nagarajan

காந்திஜி , இயன் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்த சாந்தி தேவி மர்மம்!

1926ம் ஆண்டு டெல்லியில் பிறந்த குழந்தையான சாந்தி தேவி தனக்கு நான்கு வயதாக இருக்கும் போது தனது பெற்றோர் மதுராவில் இருப்பதாகவும் அங்கு செல்ல விரும்புவதாகவும் கூறியது. ஆனால் சாந்தி தேவியின் இந்தப் பேச்சை அவளது பெற்றோர் சட்டை செய்யவில்லை.ஆறு வயதான போது அவள் மதுராவிற்குச் செல்ல விரும்பி வீட்டை விட்டு ஓட முயன்றாள். அவளது ஆசிரியரிடமும் பள்ளித் தலைமையாசிரியரிடம் தான் குழந்தை பெற்றெடுத்த பத்தாம் நாளன்று இறந்ததாகவும் தனது உறவினர் அனைவரும் மதுராவில் இருப்பதாகவும் மீண்டும் மீண்டும் அவள் கூறினாள்.இதனால் வியப்படைந்த அவர்கள் உன் கணவன் பெயர் என்ன என்று கேட்டவுடன் கேதார்நாத் என்று உடனே பதிலளித்தாள்.

தலைமையாசிரியர் மதுராவில் மேற்கொண்ட விசாரணையில் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் கேதார் நாத் என்பவரின் மனைவியான லக்டி தேவி குழந்தை பெற்றெடுத்த பத்தாம் நாளில் இறந்ததை அறிந்து வியப்படைந்தார். மஹாத்மா காந்தி இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டவுடன் ஒரு கமிஷனை அமைத்து இதை ஆராயுமாறு பணித்தார். கமிஷன் சாந்தி தேவியை மதுராவிற்கு 1935ம் வருடம் நவம்பர் மாதம் 15ம் தேதி அழைத்துச் சென்றது.அங்கே சாந்தி தேவி தனது முந்தைய ஜென்ம உறவினர்கள் அனைவரையும் அடையாளம் காட்டினாள்.

கேதார் நாத் தனக்கு மரணப் படுக்கையில் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் சொல்லி அவற்றை ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேட்டாள்! வாழ்நாள் முழுவதும் சாந்தி தேவி மணம் புரிந்து கொள்ளவில்லை. ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் அவரது புனர்ஜென்மம் பற்றி மீண்டும் ஆராயப்பட்டது. ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு பிரபல ஆய்வாளர் அவரைப் பேட்டி கண்டார்.

மறு ஜென்மம் பற்றி விஞ்ஞான ரீதியாக ஆய்வு நடத்தி வந்த பிரபல விஞ்ஞானி ஐயான் ஸ்டீவன்ஸன் 1986ல் அவரைப் பேட்டி கண்டு அவர் கூறியதெல்லாம் உண்மையே என்று உறுதி செய்தார். அவருடன் இணைந்து ஆய்வு நடத்திய கே.எஸ்,.ராவத் சாந்தி தேவி இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்னர் கூட அவரைச் சந்தித்தார். 1987 டிசம்பர் 27ம் தேதி மறைந்த சாந்தி தேவி உலகினருக்கெல்லாம் மறுஜென்மம் உண்மையே என்பதை உணர்த்திய ஒரு அதிசயப் பிறவி!

தனது ஆராய்ச்சியில் ஏராளமானோரைச் சந்தித்த இயன் ஸ்டீவன்ஸன் அதில் ஆச்சரியப்படத்தக்க (சாந்தி தேவி உள்ளிட்ட) இருபது கேஸ்களைப் பற்றி விளக்கமாக எழுதி தன் ஆய்வு முடிவை வெளியிட்டார்.

இஸ்மாயிலின் முற்பிறப்பு

1956ல் துருக்கியில் அடானா மாவட்டத்தில் பிறந்தவர் இஸ்மாயில்.அவர் சிறு குழந்தையாக இருந்த போதே தனது பெயர் அல்பெய்ட் சுசுல்மஸ் என்றும் தான் கொலை செய்யப்பட்டதாகவும் தன் பெற்றோரிடம் கூறினார். பிறப்பிலேயே அவரது தலையில் ஒரு வெட்டுக் காயக் குறி இருந்தது! தனது “பழைய” வீட்டிற்கு கூட்டிச் செல்லுமாறு பெற்றோரை அவர் வற்புறுத்தவே சுசுல்மஸ் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அனைத்து இடங்களையும் அடையாளம் காட்டிய இஸ்மாயில் தனது பூர்வெ ஜென்ம மகளுடன் நெடு நேரம்பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள்.முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாததால் சஹிதா என்பவரை மணம் புரிந்து அவர் மூலம் குழந்தைகளை அடைந்தார். ஒரு நாள் தோட்டத்தில் வேலை பார்க்க இதர நகர்களிலிருந்து வந்த பணியாளர்களைப் பணிக்கு அமர்த்திய போது அவர்கள் சுசுல்மஸைத் தலையில் அடித்துக் கொலை செய்தனர். இவையெல்லாம் அங்கு நடந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது! தனது பழைய வியாபாரத்தில் வாட்டர் மெலான் பழத்திற்குப் பணம் தராத ஒரு நண்பரிடம் பழைய சம்பவத்தை நினைவூட்டி ‘பழைய வசூலையும்’ முடித்துக் கொண்டார் இஸ்மாயில்!
அந்தணராக இருந்த கிறிஸ்தவ பாதிரி!

இதே போல கிறிஸ்தவ பாதிரியாக இருந்த ஒருவர் தான் முந்தைய ஜென்மத்தில் அஜம்கர் மாவட்டத்தில் தாமோதர் உபாத்யாய என்ற பெயருடன் அந்தணராக இருந்ததாகக் கூறி பழைய ஜென்ம நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக விளக்கினார்.

எட்கர் கேஸின் ஆகாயப் பதிவுகள்!

இப்படிப்பட்ட முன் ஜென்ம நிகழ்வுகளை அக்கு வேறு ஆணி வேராக விவரமாகப் பிட்டுப் பிட்டு வைத்தவர் பிரபல அமெரிக்க சைக்கிக்கான எட்கர் கேஸ் ஆவார்.(பிறப்பு 18-3-1877 மறைவு:3-1-1945).ஆகாசத்தில் பதிந்து கிடக்கும் ‘ஆகாஷிக் ரிகார்ட்’ மூலம் யாருடைய பிறவியையும் கூறி விட முடியும் என்று அவர் கூறியதோடு ஆயிரக்கணக்கானோருக்கு அவர்களது முன் ஜென்ம விவரங்களை துல்லியமாகக் கூறினார். இன்று அவரது ஆயிரக்கணக்கான சீடர்கள் அவரைப் பற்றி பெருமையுடன் கூறுகின்றனர்; சுமார் 300 புத்தகங்கள் அவரைப் பற்றி வெளி வந்துள்ளன. 35 நாடுகளில் அவரது மையங்கள் இன்றும் உள்ளன.2500 பேர்களின் கேஸ்களை அவர் விவரித்துக் கூறியது அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஒரு இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் இறந்து போனதைக் குறிப்பிட்டு அவரது கல்லறை இருக்கும் இடத்தையும் எட்கர் கேஸ் கூறவே அந்த இடத்திற்குச் சென்று தன் பூர்வ ஜென்ம கல்லறையைப் பார்த்துப் பரவசமானார் ஒருவர்.

எப்படி அவரால் ஒருவரின் முன் ஜென்மத்தை உடனே கூற முடிகிறது என்று அவரைக் கேட்ட போது அவர் இந்தத் தகவல்களைத் தாம் இரண்டு விதங்களில் பெறுவதாகக் கூறி அதை விளக்கினார்! முதலாவதாக ஒவ்வொருவரின் அந்தக்கரணத்தில் அவரவர் முன் ஜென்ம விவரங்கள் உள்ளன. மிக ஆழ்ந்து புதைந்து கிடக்கும் இவற்றைத் தட்டி விட்டால் திறக்கும் கதவு போல திறந்து அனைத்தயும் தான் பெறுவதாக அவர் குறிப்பிட்டார். இரண்டாவதாக பிரபஞ்சம் முழுவதும் மின் ஆன்மீக அலைகள் எல்லையற்ற காலம் தொட்டு இருந்து வருகிறது.நடக்கின்ற ஒவ்வொரு சம்பவமும் ஒலி (சப்தம்) ஒளி உள்ளிட்ட அனைத்துமே ஆகாயத்தில் பதிவாகி விடுவதால் இந்த ஆகாஷிக் ரிகார்ட் மூலம் அனைத்தையும் தான் பெறுவதாகக் கூறினார்.இதைப் பெறத் தன் அதீத சைக்கிக் சக்தி உதவுகிறது என்றும் அவர் விளக்கினார்.

சுந்தரர், அப்பர் முற்பிறப்புகள்

விவேகாநந்தர்- ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ( இருவரும் நர நாராயணர்கள்), அப்பர், சுந்தரர் உள்ளிட்ட ஏராளமான மகான்களின் பூர்வ ஜென்மங்கள் அவர்களாலேயே விளக்கப்பட்டுள்ளன; இவை சுவாரசியமானவை! தேவாரத்தில் சுந்தரர் அப்பரின் வரலாற்றைப் பரக்கக் காணலாம்!
ஷீர்டி சாயிபாபாவின் ருணானுபந்தம்!

ஷீர்டி சாயி பாபாவின் வாழ்வில் அவர் தனது பக்தர்களின் பூர்வ ஜென்மங்களைக் கூறிய விதம் மிக மிக அற்புதமானவை. தன் சீடர்களில் இருவர் பாம்பும் தவளையாகவும் இருந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த போது இவரைப் பார்த்து வெட்கமடைந்ததை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு ஆட்டுக் குட்டியை அன்போடு அணைத்து தன் பழைய சிஷ்யனான அதற்குத் தன் அன்பைத் தெரிவித்துஆசி அருளியிருக்கிறார். எத்தனை ஜென்மமானாலும் உங்களைக் கைவிட மாட்டேன் என்று உறுதி படக் கூறி ஆறுதல் அளிக்கும் அவர் இதை ‘ருணானுபந்தம்’ (பந்தத்தினால் ஏற்பட்ட கடன்) என்கிறார்! அவரே சத்ய சாயியாக அவதரித்திருப்பதும் இனி பிரேம சாயியாக அவதரிக்க இருப்பதும் அனைத்து சாயி பக்தர்களும் நன்கு அறிந்த விஷயமே!

புராண இதிஹாஸ விஞ்ஞான ஆய்வுகள் சுருக்கமாகத் தெரிவிக்கும் ஒரு உண்மை ஒவ்வொருவருக்கும் மறு பிறவி உண்டென்பது தான்! இதைக் கர்ம பலன்களுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் பெறுவதாக நம் அற நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஜெனன மரணச் சுழலை நீக்கப் பாடுபடுவதே மனிதனின் இறுதி லட்சியம் என்றும் அவை முழங்குகின்றன.

பாஹி முராரே

இந்தச் சுழலை எப்படி நீக்கிக் கொள்வது என்பதை ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் 21ம் செய்யுளில் அற்புதமாகக் கூறுகிறார். பாடல் இதோ:-
புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் இஹ சம்ஸாரே பஹ¤துஸ்தாரே ருபயா பாரே பாஹி முராரே

மீளவும் பிறப்பு மீளவும் இறப்பு மீளவும் தாயின் குடரிடைப் படுப்பு!
கடத்தற்கரிய சம்சாரத்தில் வீழ்வது!இரக்கம் கொள்; கரை சேர் முராரி!

இறைவனைப் பணிந்தால் ஜனன மரண விஷச் சுழல் நீங்கும் என்பதே புனர் ஜென்ம ஆராய்ச்சி விளக்கும் இறுதியான ஆனால் உறுதியான முடிவு! (முற்றும்)

Written by S Nagarajan
**********************

மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 3

Picture is taken from another website.Thanks.

This article is the third part on Rebirth written by S NAGARAJAN

புனர்ஜென்ம உண்மைகள்! – 3

(அறிவியல், ஆன்மீக நோக்கில மறுபிறப்பு இரகசியங்கள்!)

 

தேவியின் பாதஸ்மரணை தரும் பலன்!

பதினெட்டு புராணங்களும் அத்தோடு பதினெட்டு உப புராணங்களும் தரும் புனர்ஜென்மக் கதைகள் மற்றும் சம்பவங்கள் சுவாரஸ்யமானவை.

எடுத்துக்காட்டாக தேவி பாகவதம் பதினொன்றாம் ஸ்கந்தம் பதினெட்டாம் அத்தியாயத்தில் விவரிக்கும் பிரக்த்ரதன் கதையைச் சொல்லலாம்.

பொதியமலையில் ஒர் சக்கிரவாக பக்ஷ¢ இருந்தது. அது பறந்தவாறே சென்று முக்தியை நல்கும் காசியை அடைந்தது.அங்கு அன்னபூரணி ஸ்தானத்தை விட்டு நீங்காது தினமும் பிரதக்ஷ¢ணமாகப் பறந்து கொண்டே இருந்தது.இந்தப் புண்ணியத்தால் இறப்பிற்குப் பின்னர் சுவர்க்கத்தை அடைந்து தேவரூபத்தோடு இரண்டு கற்பகாலம் வரை பல போகங்களை அனுபவித்துப் பின்னர் பிரகத்ரதன் என்ற பெயருடன் ஒரு க்ஷத்திரிய குலத்தில் பிறந்தது.அரசனாக விளங்கிய பிரகத்ரதன் சத்யவாதி. யாகங்களைச் செய்பவன்.ஜிதேந்திரியன். மூன்று காலங்களையும் அறியும் சக்தி கொண்டவன்.முன் ஜென்மம் தெரிந்தவன்.அவன் புகழ் எங்கும் பரவியது.

அவன் பூர்வ ஜென்ம ஞாபகத்தைக் கொண்டிருப்பவன் என்பதைக் கேள்விப்பட்டு முனிவர்கள் உட்பட்ட பலரும் அவனிடம் வந்தனர். அவர்கள் அவனை நோக்க,¢ ‘இப்படி திரிகால ஞானமும் பூர்வ ஜென்ம உணர்ச்சியும் உனக்கு எந்தப் புண்ணியத்தால்  வந்தது’ என்று ஆவலுடன் கேட்டனர்.

அவனோ,”பூர்வ ஜென்மத்தில் நான் சக்கரவாக பக்ஷ¢யாக இருந்தேன்.புண்ணியவசத்தால் ஞானமில்லாமலேயே அன்னபூரணியை தினம் வலம் வந்தேன்.அதனால் சுவர்க்கமடைந்து இரண்டு கற்பகாலம் சகல போகமும் அனுபவித்துப் பின் பூமியில் இந்த சரீரம் அடையப் பெற்று திரிகாலஞானமும் பூர்வஜென்ம உணர்ச்சியும் பெற்றவனாக இருக்கிறேன். ஜகதம்பிகையின் பாதஸ்மரணையின் பலத்தை யார் அறிவார்கள்! இதை நினைத்த மாத்திரத்தில் என் கண்களிலிருந்து ஆனந்த பாஷ்பம் பொங்குகிறது” என்று  கூறித் தேவியைத் தொழுவதால் ஏற்படும் பலன்களை விளக்கினான்!

அனுமனே ருத்ரன்

ஆனந்த ராமாயணம் தரும் ஒரு அற்புதச் செய்தி அனும, ராம பக்தர்களையும் சிவ பக்தர்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும்! ஏகாதச (பதினோரு) ருத்திரர்களே குரங்குகளாக ஜனனம் எடுத்த செய்தி தான் அது! அசுரர்களின் அழிவுக்காக விஷ்ணுவுக்கு சகாயம் செய்ய வீரபத்திரன் சுக்கிரனாகவும்,சம்பு நலனாகவும்,கிரீஸன் நீலனாகவும்,மஹாயஸன் சுஷேணனாகவும்,அஜைகபாதன் ஜாம்பவானாகவும்,அஹிர்புத்னன் அங்கதனாகவும், பினாகதாரி  ததிவக்ரனாகவும்,யுதாஜித்து தாரகனாகவும்,ஸ்தானு தாலகனாகவும்,பர்க்கன் மைந்தனாகவும்,ருத்திரன் அனுமானாகவும் பிறந்தார்கள். ஆக அனுமனை வணங்கினால் சிவனுக்கு பிரீதி; விஷ்ணுவுக்கும் பிரீதி, அனுமனுக்கும் கூட பிரீதி!

 

காசியப ரிஷியே தசரதன்!

அத்யாத்ம ராமாயணம் பாலகாண்டம் இரண்டாவது சர்க்கத்தில் (23-26 சுலோகங்களில்) பிரம்மாவிடம் விஷ்ணு கூறுவதாக  தசரதனின் முன் ஜென்மத்தை எடுத்துரைக்கிறது!

விஷ்ணு பிரம்மாவிடம், “பூர்வம் காசியப ரிஷி நம்மைப் புத்திரனாகப் பெற வேண்டித் தவம் செய்ய, நாமும் அவ்வாறே அவருக்குப் புதல்வனாகும் வரத்தைத் தந்தோம்.இப்போது அவரோ பூலோகத்தில் தசரதனாகப் பிறந்திருக்கிறார்.அவருக்கு மகனாக கௌஸல்யா தேவி கர்ப்பத்தில் நாம் அவதரிப்போம்” என்று கூறுகிறார்!

பிரம்ம புராணம் சுபத்ரை மற்றும் கௌசிகனின் முற்பிறவியை எடுத்துக் கூறுகிறது என்று ஆரம்பித்துப் பட்டியலிட ஆரம்பித்தால் புராண முற்பிறவி சம்பவங்கள் ஒரு பெரிய தொகுப்பு நூல் ஆகி ஏராளமான மர்மங்களை அவிழ்க்கும் முற்பிறவிக் களஞ்சியம் ஆகி விடும்! கர்மங்களின் விசித்திரச் சங்கிலித் தொடர்பு பற்றித் தெரிந்து கொண்டு பிரமிப்பின் உச்சிக்குச் சென்று விடுவோம்! எத்தனை கோடி மனிதர்களுக்குத் தான் எத்தனை கர்மங்கள்! அவர்களுக்குத் தான் கர்மபலனுக்கேற்ப எத்தனை கோடானு கோடி ஜென்மங்கள்! கோடானு கோடி சூப்பர் மெகா கம்ப்யூட்டர்கள் கூட இந்தக் கணக்கைத் துல்லியமாகப் போட முடியுமா, என்ன!

 

நான்கு முகம் இல்லாத பிரம்மா!

பாரதம் வியாஸருக்குத் தரும் செல்லப் பெயர் கூட ஒரு முற்பிறவித் தொடரின் காரணமாகத் தான் என்றால் வியப்பு மேலிடுகிறது, இல்லையா!

பகவானான வியாஸர் நான்கு முகம் இல்லாத பிரம்மா, இரண்டு கரங்கள் உள்ள விஷ்ணு, நெற்றிக் கண் இல்லாத சிவன்! என்று கீழ்க்கண்ட சுலோகத்தில் போற்றப்படுகிறார்:

அசதுர்வதநோ பிரம்மா; த்விபாஹ¤ரப ரோஹரி I

அபால லோ சநச் சம்பு: பகவான் பாத நாராயண: II

நான்கு முகமில்லாத பிரம்மாவாக அவர் படைப்புத் தொழிலில் ஈடுபட்ட சம்பவத்தை மஹாபாரத அநுசாஸன பர்வத்தில் காணலாம்.

அவசரமாக ஓடும் ஒரு புழுவைப் பார்த்த வியாஸர், ‘ஏன் இப்படி அவசரமாக ஓடுகிறாய்’ என்று கேட்கிறார். ‘எதிர் வரும் பார வண்டி என் மீது ஏறி என்னை அழிக்காமல் இருக்க ஓடுகிறேன்’, என்றது புழு! ‘உயிர் போனால் போகட்டுமே உடலில் என்ன சுகம்’ என்று கேட்ட வியாஸரிடம் அது, தான் முற்பிறவியில் மனிதனாக இருந்ததாகவும் செய்த பாவத்தால் புழுவாக ஆனதாகவும் செய்த புண்ணியத்தால் வியாஸருடன் பேசும் பாக்கியம் கிடைத்ததாகவும் கூறுகிறது. ‘உனக்கு முற்பிறவி பற்றிய அறிவு எப்படி உண்டானது’ என்று வியாஸர் கேட்க, ‘கிழவியான என் தாயாரைக் காப்பாற்றினேன், ஒரு ஏழை அந்தணருக்கு பூஜை செய்தேன்,ஒரு விருந்தாளியின் பசியை அகற்றிச் சந்தோஷப் படுத்தினேன் ஆதலால் எனக்கு இந்த அபூர்வ அறிவு உண்டாயிற்று’ என்று பதில் சொன்னது. இதனால் மகிழ்ச்சி அடைந்த வியாஸர் அதற்கு முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, மான்,பறவை, ஏழைப் பணியாளன், வணிகன். க்ஷத்திரியன், அரசன் என பல பிறவிகளை படிப்படியாகத் தந்தார். ஒவ்வொரு பிறவியிலும் அது வியாஸரை வணங்கியதால் இப்படி ஏற்றம் பெற்றது. இறுதியில் ஒரு வேதியராகப் பிறந்து புண்ய கருமங்களைச் செய்து அந்தப் புழு முக்தி பெற்றது!

இப்படிபிரம்மாவுக்குப் போட்டியாக ஒரு படைப்புத் தொழிலைச் செய்து ஒரு புழுவை முக்தி அடையச் செய்ததால் அவர் நான்கு முகம் இல்லாத பிரம்மா என்று போற்றப்படுகிறார். ஆனால், அறத்தின் மூலம் உயர் பிறவி பெற்று முக்தி அடையலாம் என்பதே  கதை சொல்லும் உண்மை ஆகும்.

 

காந்திஜி டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதம்

இனி நவீன யுகத்தில் நம் சம காலத்தில் வாழ்ந்த காந்திஜி புனர்ஜென்மம் பற்றிக் கொண்டிருந்த கொள்கைகளைப் பார்ப்போம். மகாத்மா காந்திஜி லியோ டால்ஸ்டாயின் கொள்கைகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். அதனால் அவருடன் கடிதத் தொடர்பு அவருக்கு இருந்தது. ‘ஒரு ஹிந்துவுக்குக் கடிதம்’ என்ற டால்ஸ்டாயின் கட்டுரையை அவர் பிரசுரிக்க விரும்பினார்.ஆனால் அந்தக் கட்டுரையில் ஒரு பாராவில் புனர்ஜென்மத்தை மறுத்து டால்ஸ்டாய் கருத்துத் தெரிவித்திருந்தார். 1909 அக்டோபர் முதல் தேதியிட்ட கடிதத்தில் டால்ஸ்டாய்க்கு அவர் எழுதிய கடிதத்தில் புனர்ஜென்மத்திற்கு எதிரான கருத்தைத் தெரிவிக்கும் அந்த பாராவை நீக்கி வெளியிட அனுமதி கேட்டார். புனர்ஜென்மம் என்பது லட்சக்கணக்கான இந்திய சீன மக்களால் நம்பப்படும் கொள்கை என்றும் அது “அனுபவத்தின் அடிப்படையிலானது” (With many, one might almost say, it is a matter of experience) என்றும் விளக்கிய காந்திஜி தென்னாப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் சிறையில் நொந்து வாடுவோருக்கு புனர்ஜென்மக் கொள்கை ஆறுதல் அளிக்கும் ஒன்று என்று எழுதினார். காந்திஜியின் வேண்டுகோளை ஏற்ற டால்ஸ்டாய் அதை நீக்கி வெளியிடத் தன் அனுமதியைத் தந்தார். உடனே காந்திஜி அவருக்கு நன்றி தெரிவித்து 11-10-1909 தேதியிட்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். புனர்ஜென்மக் கொள்கை சத்யாக்ரகப் போராட்டத்திற்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் கர்மா கொள்கை மூலமே தேசத்தை எழுப்பி விட முடியும் என்பதையும் நன்கு அறிந்திருந்த மகாத்மா கர்மாவிற்கு ஏற்ற பலன் என்ற  அறவழிக் கொள்கையின் அடிப்படையில் தேசத்தை புனர் நிர்மாணம் செய்தார்.

இனி காந்திஜியே 1935ம் ஆண்டு ஒரு கமிஷன் அமைத்து ஆராய்ந்த சாந்திதேவியின் (பிறப்பு 11-12-1926 மறைவு 27-12-1987) புனர்ஜென்ம சம்பவத்தைப் பார்ப்போம். புனர்ஜென்மத்தை ஆராய்ந்த விஞ்ஞானி ஐயான் ஸ்டீவன்ஸனும் சாந்திதேவியை அவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் 1986ல் தன் ஆய்வுக்காகச் சந்தித்ததும் குறிப்பிடத் தகுந்தது.

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளியல்?

சமுத்திர குப்தன் என்ற மாபெரும் குப்தப் பேரரசனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு அவனுடைய ஆதிக்கம் இரு கடல் எல்லையைத் தொடும் அளவு பரவியிருந்ததாகவும் கவுதமி புத்ர சதகர்ணியின் ஆட்சி முக்கடல் இடைப்பட்ட பகுதி முழுதும் நிலவியதாகவும் கல்வெட்டுகள் கூறும்.

பராந்தக வீரநாராயண ப ண்டியனின் தளவாய்புரம் செப்பேடு:

“ஹரிச்சந்திரன் நகரழித்தவன் பரிச்சந்தம் பல கவர்ந்தும்

நாற்கடலொரு பகலாடி நாற்கோடிபொன்னியதி நல்கி

நூற்கடலைக் கரைகண்டு நோன்பகடாயிரம் வழங்கியும்”

என்று கூறுகிறது. இது ஒன்பதாம் நூற்றாண்டு செப்பேடு.இன்னும் பல நூல்களிலும் இவ்வாறு ஒரே நாளில் 4 கடல் நீறைக் கொண்டுவந்து குளித்ததாகவும் முக்கடல் நீரில் நீராடியதாகவும் படிக்கிறோம். ஏன் இப்படிச் செய்தார்கள் ,இப்படிச் செய்ய முடியுமா? என்ற சுவையான விஷயத்தை ஆராய்வோம்.

இது உண்மைதான். ஆனால் தினமும் அவர்கள் இப்படிக் குளித்தார்களா என்பதைச் சொல்லமுடியாது. இப்போதும் கூட பெரிய கோவில்களின் கும்பாபிஷேகத்துக்கும், பெரிய சந்யாசிகள், குருமார்கள் பிறந்ததின வைபவங்களுக்கும் பல புண்ய தீர்த்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.நாம் கூட வீடுகளில் கங்கை நீரை அவ்வப்போது பயன்படுத்துகிறோம்.

மன்னர்கள் இப்படிச் செய்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. தங்களுடைய ஆட்சி எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்திப் பெருமைப் பட இது உதவியது 2. கடல் நீராடல் புனிதம் என்பது புராண இதிஹாசங்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் மிகத் தெளிவாக எழுதப் பட்டிருக்கிறது. இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருக்கும் நம்பிக்கை.

பல்யானை செல்கெழு குட்டுவன் யானைகளை வரிசையாக நிறுத்தி அவைகளின் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நீராடினான் என்று பதிற்றுப் பத்து (3ஆம் பத்து) பதிகம் கூறுகிறது.. போர்ப் படைகள் பல பெரிய நதிகளைக் கடக்க அந்தக் காலத்தில் யானைகள வரிசையாக நிறுத்தி அதன் மீது சென்றனர். இதை காளிதாசனும் (ரகு. 4-38, 16-33) கூறுவான். அலெக்சாண்டரும் இப்படிச் செய்தான்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தினமும் திருச்செந்தூர் கோவில் தீபாராதனை நடந்த பின்னர்தான் சாப்பிடுவானாம். தீபாராதனை முடிந்ததை அறிய அவன் செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை நிறைய மணிக் கூண்டு கோபுரங்களை நிறுவினான். கோவில் மணி அடித்தவுடன் ஒவ்வொரு மணிக் கூண்டாக ஒலிக்கும். ஒரு மணிக்குண்டு ஒலியைக் கேட்டவுடன் அடுத்த மணியை தொலை தூரத்திலுள்ளவன் கேட்டு மணி அடிப்பான். இறுதியில் பாஞ்சாலங்குறிச்சியில் மணி ஓசை வந்தவுடன் கட்டபொம்மன் சாப்பிடுவான். இந்த மணிக்கூண்டுகளின் மிச்ச சொச்ச இடிபாடுகள் இப்பொதும் இருக்கின்றன.

மாயா இன மக்கள்

தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் 3000 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய மாயா இன மக்களும் செய்திகளை அனுப்ப வேகமாக ஓடுபவர்களை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். மாயா இன மக்களுக்கு சக்கரம் பயன்படுத்தத் தெரியாததால் ஓட்டப் பந்தய வீரர்களை வைத்தே பல காரியங்களைச் சாதித்தனர்.

உலகப் புகழ்பெற்ற மராத்தன் ஓட்டப்போட்டியும் ஒரு வீரன் 26 மைல் ஓடிவந்து செய்தியைக் கொடுத்துவிட்டு இறந்துபோனதன் நினைவாகவே நடைபெறுகிறது. அவன் கிரேக்க வீரன்.

ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பார்த்தால் இதன் பெருமையையும் அருமையையும் நாம் அறியலாம்:

மாரத்தன் ஓட்டம் (26 மைல்)- சுமார் 2 மணி நேரம் ஆகும்

ஒரு மணிக்கு 13 மைல் ஓடலாம்

10 மணி நேரத்தில் 130 மைல் ஓடலாம் (ஒரே ஆள் இப்படி ஓட முடியாது. மிகவும் தேர்ச்சி பெற்ற 10 ஓட்டக்காரர்களை அமர்த்தி ரிலே ரேஸ் ஓடச் செய்வார்கள் பழைய கால மன்னர்கள் ).

தமிழ் நாட்டில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட கரூர், உறையூர், மதுரை ஆகியன இரண்டு கடல்களிலிருந்தும் 150 மைல்களுக்குள்ளாகவே இருந்தன. ஒருவர் காலை ஆறு மணிக்கு கடல் நீரை கலசத்தில் எடுத்துக் கொண்டு ஓடினால காலை 11 மணிக்கு 65 மைல் வந்து விடலாம். இதுவே குதிரையில் வந்தால் மூன்று மணி நேரத்தில் 75 மைல் வந்து விடலாம். ஆக காலை 6 மணிக்கு குதிரை வீரர்கள் கடல் நீர் கலசங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டால் காலை பத்து மணிக்குள் 100 மைல் வந்துவிடலாம். இதிலும் ஒரே குதிரையில் செல்லாமல் ரிலே ரேஸ் போல குதிரைகளை மாற்றினால் இன்னும் வேகமாக வரலாம். மதுரை பாண்டிய மன்னன் தளவாய்புரம் செப்பேட்டில் கூறியபடி நீராடலாம். நாலாவது கடல் என்று கூறுவது எது என்று தெரியவில்லை. ஒருவேளை வட திசையிலிருந்து வரும் நீராக இருக்கலாம்.

தமிழ்நாட்டுக் கோவிலகளுக்கு இன்றும் கூட சுவாமிக்கு அபிஷேகம் செய்ய கங்கை ஜலம் லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. கன்யாகுமரி ஜில்லாவில் ஆண்டுதோறும் சிவராத்திரி நாளில் இந்துக்கள் 12 சிவாலயங்களில் தரிசினம் செய்ய சுமார் 50 மைல்கள் சிவாலய ஓட்டம் ஓடுவதை இப்போதும் காணலாம்.ஆக புனித நீர், ஓட்டம் என்பதெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

காஞ்சி முதல் குமரி வரை புறா ரேஸ் வைத்தபோது அந்த தூரத்தை புறா 13 மணி நேரத்தில் கடந்துவிட்டது. ஆக தண்ணிரை இந்தக் காலம் போல பாலிதீன் பைகளில் அடைத்தால் புறாக்கள் கூட இன்னும் வேகமாகக் கொண்டுவந்து விடும்!!

***********

மறுபிறப்பு உண்மையா ?- பகுதி 2

The picture is taken from another Hindu website. Thanks.

புனர் ஜென்ம உண்மைகள்! – 2

(அறிவியல், ஆன்மீக நோக்கில் மறுபிறப்பு இரகசியங்கள்!)

எழுதியவர் எஸ். நாகராஜன்

25 லட்சம் வார்த்தைகளில் ஒரு அற்புத இதிஹாஸம்!

ஒரு லட்சம் சுலோகங்களில் சுமார் இருபத்தைந்து லட்சம் பொருள் பொதிந்த வார்த்தைகளைக் கொண்டு உலகின் தலையாய பெரிய இலக்கியமாகத் திகழும் மஹாபாரதம் மறுபிறப்பு பற்றிய அனைத்து உண்மைகளையும் விரிவாகவும் அழகாகவும் கூறும் பெரிய இதிஹாஸமாகும்.

கீதையே என் ஹ்ருதயம்

இதன் உயிர்நாடியான பகவத்கீதை (அர்ஜுனா!கீதை என் ஹ்ருதயம்!கீதையே நான் விரும்பும் சாரம் – மஹாபாரதத்தில் கிருஷ்ணர் கூறுவது) தெளிவாக மறுபிறப்பு உண்மையை விளக்குகிறது.

“அர்ஜுனா!எனக்கு எத்தனையோ ஜென்மங்கள் கழிந்து விட்டன.உனக்கும் அப்படியே!அந்த ஜன்மங்கள் அனைத்தையும் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்” (பஹீனி மே வ்யதீதாநி ஜன்மானி தவ சார்ஜுனI தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தபII -கீதை அத்4 சுலோகம் 5)

புண்ணியம் செய்தவர்கள் “விசாலமான அந்த ஸ்வர்க்க லோகத்தை அனுபவித்து புண்ணியம் கரைந்து போன பிறகு மனித உலகுக்கே திரும்பி விடுகிறார்கள்.ஆகவே வைதீக தர்மங்களைக் கடைப்பிடித்து , கோரிக்கைகளை வேண்டுபவர்கள் ஜனன மரண சுழலைத் தான் அடைவார்கள்” என்றும் கிருஷ்ணர் கீதையில்(9ம் அத்தியாயம் 21ம் சுலோகம்) உறுதிப் படுத்துகிறார்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் மஹாபாரதத்தில் வரும் ஜீவனுள்ள அனைத்து பாத்திரங்களின் பூர்வ ஜென்மங்களைப் பற்றிய சரித்திரங்களைப் படிக்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான அனுமன் த்வாபர யுகத்திலும் இருந்து பீமனைச் சந்தித்து ஆசி கூறுகிறான். ராமராக அவதரித்த விஷ்ணு மீண்டும் கிருஷ்ணராக அவதரிக்கிறார்.

மஹாபாரத நிகழ்வு நடக்கப் போகிறது; ஆகவே அனைத்து தேவர்களும் அவரவருக்கு உரிய இடங்களில் பிறந்து விடுங்கள் என்று கட்டளையிடப்படுவதை ஆதிபர்வம் விளக்குகிறது!

நளாயனியே திரௌபதி

நளாயனியே தனது பெண் திரௌபதியாகப் பிறந்திருக்கிறாள் என்பதை வியாஸர் சொல்லக் கேட்டு ஆச்சரியமடைந்த துருபதன் அவளது ஜனனத்திற்கான காரணத்தை வினவ அவளது முன் ஜென்ம வரலாற்றை வியாஸர் விரிவாக விளக்குகிறார்.(ஆதிபர்வம்-213ம் அத்தியாயம்) அருவருப்பான உருவமும் கிழவரும் வியாதியால் பீடிக்கப்பட்டவருமான மௌத்கல்யர் என்ற  மஹாமுனிவருக்கு மனைவியாக வாய்த்த நளாயனி காம போகங்களில் திளைத்து வாழும் போது ஒருநாள் அதில் சலித்துப் போன மௌத்கல்யர் வைராக்கியமடைந்து பிரம்ம தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார்.அப்போது நளாயனியை அவர் விடவே நளாயனி பூமியில் விழுந்தாள்.தான் இது வரை அனுபவித்த போகங்களில் திருப்தியுறாதவளாயிருப்பதை நளாயனி தெரிவிக்கவே மௌத்கல்யர் துருபதனின் புத்திரியாக நீ இருப்பாய். அப்போது ஐந்து கணவர்கள் உனக்கு இருப்பார்கள். அழகான உருவம் உடைய அவர்களுடன் நீ வெகு காலம் இன்பத்தை அடைவாய் என்று கூறுகிறார், பிறகு அவள் சங்கரரை நோக்கித் தவம் புரியவே அவர் நேரில் தோன்றி நீ ஐந்து கணவர்களை அடுத்த ஜென்மத்தில் அடைவாய் என் ஆசீர்வதித்து வரம் கொடுக்கிறார். ஏன் ஐந்து கணவர்கள் என்று திகைப்புடன் நளாயனி வினவ,” நீ ஐந்து முறை ‘பதியைக் கொடும்’ என்று கேட்டாய்!ஆகவே உனக்கு ஐந்து கணவர்கள் அமைவார்கள்” என்று மஹேஸ்வரர் பதில் அருளுகிறார். நளாயனியைப் பற்றி மஹாபாரதம் விவரிக்கையில் நள-தமயந்தியின் புத்திரியே அவள் என்ற ஒரு சுவையான செய்தியையும் அது தருகிறது.

ஹிரண்யகசிபுவே சிசுபாலன்

ஆதி பர்வத்தில் மிக விவரமாகக் கூறப்படும் புனர்ஜென்ம விவரங்கள் ஆச்சரியம் தருபவை.

ஹிரண்யகசிபுவே சிசுபாலனாகப் பிறக்கிறான். விப்ரசித்தி என்ற அசுரனே ஜராசந்தனாகப் பிறக்கிறான். ப்ரஹ்லாதனுக்குத் தம்பியாக இருந்த ஸம்ஹ்லாதன்  சல்லியனாகவும், இன்னொரு தம்பியாகிய அநுஹ்லாதன் த்ருஷ்டகேதுவாகவும் பிறக்கின்றனர்.அஜகன் என்பவன் ஸால்வனாகப் பிறக்கிறான்.

பீஷ்மரே அஷ்டவஸ¤க்களில் கடைசி வஸ¤

அஷ்டவஸ¤க்கள்  வஸிஷ்டருடைய சாபத்தாலும் இந்திரனுடைய கட்டளையினாலும் சந்தனு ராஜாவுக்கு கங்கா தேவியிடம் புத்ரர்களாக ஜனித்தனர்.அவர்களில் கடைசி வஸ¤வே பீஷ்மர்!ருத்ரர்களுடைய கூட்டத்திலிருந்து வந்தவர் கிருபாசாரியர்.துவாபர யுகமே வந்து பிறந்து சகுனியாக ஆனது!ஸப்த மருத்துகளின் பட்சத்திலிருந்து கிருஷ்ணனது நெருங்கிய தோழனான சாத்யகி பிறந்தான்.விராட ராஜாவும் ஸப்த மருத்துக்களிலிருந்து தோன்றியவனே

பாண்டவர்களின் ஜனனம் அனைவரும் அறிந்ததே!ஹம்ஸன் என்ற பெயர் பெற்ற கந்தர்வ ராஜனே திருதராஷ்டிரனாகப் பிறந்தான்.அவனது தாயார் செய்த குற்றத்தினால் ரிஷியின் சாபத்திற்கு ஆளாகிக் குருடனாக அவன் பிறக்க வேண்டி நேர்ந்தது.பாண்டு ஸப்த மருத்துக்களின் கூட்டத்திலிருந்து ஜனித்தவன்.கலியின் அம்சம் கெட்ட எண்ணமுடைய துரியோதன ராஜாவாக பூமியில் ஜனித்தது. மிக நீண்ட பட்டியலான இந்த புனர்ஜென்ம விவரங்களை ஆதிபர்வம் அறுபத்தெட்டாம் அத்தியாயம் விவரிக்கிறது. பரந்த நூல் நெடுகிலும் நாம் காணும் புனர்ஜென்ம விவரங்களைத் தனி நூலாகவே ஆக்கிவிடலாம்!

இவை எல்லாம் ஹிந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளின் ஒன்றான மறு பிறப்புக் கொள்கையை வலியுறுத்தி அன்றறிவாம் என்னாது அறம் செய்க என்ற கட்டளையைப் போதித்துக் கொண்டே வருகிறது.

காந்திஜி போற்றிய புனர்ஜென்மக் கொள்கை

இதனாலெல்லாம் கவரப்பட்டுத் தான் மஹாத்மா காந்தி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் மஹாபாரதத்தைப் போற்றியதோடு சுதந்திரம் பெற இந்த அடிப்படைக் கோட்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இது தவிர பதினெட்டு புராணங்களும் தரும் புனர்ஜென்மக் கதைகள் நம்மை இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தும்.அவற்றையும் மஹாத்மா காந்தி டால்ஸ்டாய்க்கு இது பற்றி கடிதம் எழுத நேரிட்ட சம்பவத்தையும் இனி பார்ப்போம்!

************************