ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதி! (Post No. 2545)

IMG_8847

Written by S Nagarajan

 

Date: 16  February 2016

 

Post No. 2545

 

Time uploaded in London :–  8-10 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

 

பாக்யா 5-2-2016 இதழில்  அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதி!

.நாகராஜன்

 

 

IMG_1991

சிறப்பில் மனதை  மயக்கும் உன்னதமான ஆவி உலகம் எப்போதும் அப்படி இருக்கவே விரும்புகிறது”

                                – பிரபல எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோ

 

 

உலேண்ட்  லுட்விக் (Uhland Ludwig 1787-1852) என்பவர் பிரபல்மான ஜெர்மானியக் கவிஞர். இவரது சொத்து யாருக்குச் சேர வேண்டும் என்பது பற்றிய சிக்கலான வழக்கு இவர் இறந்து 58 ஆண்டுகளுக்குப் பின்னர் 1930ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தொடரப்பட்டது. விசித்திரமான இந்த வழக்கை நீதிபதி எப்படி தீர்த்து வைக்கப் போகிறார் என அனைவரும் ஆவலுட்ன் எதிர்பார்த்திருந்தனர்.

 

 

ஒரு நாள் சொத்தின் மீது உரிமை கொண்டாடிய ஒரு பெண்மணி ஆவி உலகத் துணையை நாடினார். சற்று அரை இருட்டாக இருந்த அறையில் மீடியமும் அந்தப் பெண்மணியும் மற்றவர்களும் குழுமினர்.திடீரென ஒரு கை தோன்றியது. அது அந்தப் பெண்மணியின் கையைப் பற்றியது. அந்தக் கையில் மஞ்சள் நிறமுள்ள தோல் ஒன்று இருந்தது. அதை அந்தப் பெண்மணி பெற்றார்.

 

 

ஹோலோகிராப் பார்ச்மெண்ட் (Holograph parchment)  என்பது சொத்துக்குரிய ஒருவர் தன் கைப்பட  தோலில் அது யாருக்குச் சேரவேண்டும் என்பதை எழுதிக் கொடுக்கும் ஒரு ஆவணமாகும்.

மீடியம் கையில் பெறப்பட்ட தோல் ஆவணம் காலத்தால் பழுப்பேறிக் கிடந்தது. அதில் சொத்து பற்றிய விபரம் அடங்கிய இரண்டு செய்யுள்கள் – குறள் போல – இருந்தன. அதில் உலேண்ட் லுட்விக்கின் கையெழுத்தும் இருந்தது.

முதலில் கையெழுத்து கவிஞருடையது தானா என சரிபார்க்கப்பட்டது அந்த தோல் ஆவணத்தின் நிலை காலத்தால் அது முற்பட்டது என்பதையும் அதில் இருந்த செய்யுளின் நடை லுட்விக்கின் நடை தான் என்பதும் கையெழுத்தும் அவருடையது தான் என்பதும் உறுதி செய்யப்பட்டன.

 

 

வழக்கு விசாரணைக்கு வந்த போது சாட்சிகள் தோல் ஆவணத்தை மீடிய்மாக் இருந்த பெண்மணியின் கையில் ஆவி கொடுத்ததைத் தாங்கள் பார்த்ததாக சாட்சியம் கூறினர்.

நீதிபதி ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்பதாகக் கூறி அந்த சொத்துக்கான உரிமையை அந்தப் பெண்மணிக்கே அளித்து தீர்ப்புக் கூறினார்.

 

 

ஆவி உலக ஆதரவாளர்கள் பெரிதும் இதை வரவேற்றனர். பரபரப்பான இந்த வழக்கில் ஆவி உலகமே வென்றது!

 

இதே போல  கவிஞர்கள் மட்டுமல்லை, ராஜதந்திரிகள் கூட ஆவி உலகை நம்புபவர்களாக இருந்ததை வரலாறு சுட்டிக் காட்டுகிறது. இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக நான்கு முறை பதவி வகித்தவர் டபிள்யூ. ஈ. க்ளாட்ஸ்டோன். (W.E.Gladstone 1809-1908).  மிகச் சிறந்த ராஜதந்திரி என்று உலகத்தினரால் பாராட்டப்பட்டவர் இவர்.

பிரப்ல நாவலாசிரியையான வயலட் ட்வீடேல் என்பவரின் அழைப்பை ஏற்று. அவர் வீட்டிற்கு க்ளாட்ஸ்டோன் வருகை புரிந்தார்.

 

 

அங்கு ஆவிகளை அழைக்கும் அமர்வு நடந்தது. அதில் அவர் கலந்து கொண்டு பல சோதனைகளை நடத்தி மிகவும் திருப்தியுற்றார். வில்லியம்ஸ் மற்றும் ஹஸ்க் ஆகிய இரு மீடியம்கள் க்ளாட்ஸ்டோன் ஆவி உலத்துடன் தொடர்பு கொள்ள உதவினர்.

 

 

இந்த அமர்வுகள் முடிந்த பின்னர் விஞ்ஞானிகளை நோக்கி அவர் கூறினார் இப்படி:” விஞ்ஞானம் இந்தக் காலத்தில் மிகப் பெரிய அரும் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.ஆனால் விஞ்ஞானிகள் தங்களின் விதிகளுக்கும்  நடைமுறைகளுக்கும் ஒத்து வராத எதையும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் ஆவி உலக ஆராய்ச்சியில் இப்போது பெரும் பணி ஒன்று உலகில் நடந்து வருகிறது. அதை உணருங்கள்” என்று ஆவி உலகத் தொட்ர்பு பற்றிய ஆராய்ச்சியைப் புகழ்ந்து பேசினார்.

க்ளாட்ஸ்டோன் தன் வீட்டிற்கு வந்தது உள்ளிட்ட ஆவி உலக அனுபவங்களை வயலட் ட்வீடேல், ‘தி கோஸ்ட்ஸ் ஐ ஹாவ் சீன்’ (The Ghosts I have seen) என்று புத்தகமாக எழுதினார்.

 

 

 

இது ஒரு புறமிருக்க, ஆவிகள் மூலம் கொலை வழக்குகளில் குற்றம் இழைத்தவரைக் கண்டு பிடிக்க முடியுமா என்பன போன்ற கேள்விகளை ப்லர் எழுப்புவதுண்டு!.

உலகில் அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சிக்கலான கேஸ்களைக் கண்டுபிடிக்க போலீஸாரின் துப்பறியும் பிரிவு மீடியம்களின் உதவியை இப்போது நாடி வருகின்றது.. சைக்கிக் டிடெக்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் இவர்கள் ஆவிகளின்  துணையோடு நடந்தது என்ன என்பதை அக்கு வேறு ஆணி வேறாக அலசிச் சொல்லி விடுகின்றனர். நூற்றுக் கணக்கான கேஸ்களில் ஒன்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

பெர்ரி சாரா என்ற பெண்மணி அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட்டில் 1973ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கோரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். எவ்வளவோ முயன்றும் போலீஸாரால் அவரைக் கொன்றவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.டிடெக்டிவ் ஜார்ஜ் மஜ்ஜாகேன் சைக்கிக் மீடியமான பசகரெல்லா டவுனி என்பவரின் துணையை நாடினார்.

 

 

அவர் மிகத் தெளிவாக,” கொலையாளியின் மீது ஆயில் நாற்றம் அடிக்கிறது.  அவர் ஒரு மெக்கானிக்கிற்கான யூனிஃபாரத்தை அணிந்தவர்.. அவரது சட்டையில் ‘E’ என்ற ஆங்கில எழுத்து காணப்படுவதால் அவர் பெயர் ‘E’ யில் ஆரம்பிக்கும். ஆனால் தப்பி ஓடும் சாமர்த்தியசாலி என்பதால் அவரைப் பிடிக்க நெடுங்காலம் ஆகும்” என்றார்.

 

 

அதே போலவே நடந்தது. 26 வருடங்கள் கழித்து 1999ஆம் ஆண்டு எட்வர்ட் என்பவர் சாராவைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். டிஎன்ஏ  சோதனை மூலம் அவரது குற்றம் நிரூபணமானது. கொலை செய்த சமயத்தில் அவர் மெக்கானிக்காக வேலை பார்த்ததும் தெரிய வந்தது! அவர் கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டார்.

இது போல சுவாரசியமான கேஸ்கள் சைக்கிக் டிடெக்டிவ்களால் தீர்க்கப்பட்டுள்ளது ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று.

Thomas-Alva-Edison  Thomas-Alva-Edison-1847-1931

. அறிவியல் அறிஞர் வாழ்வில்

 

தாமஸ் ஆல்வா எடிஸனுக்கு தனது கணக்குப் பிரிவில் இருப்பவர்களைக் கண்டாலே அவ்வளவாகப் பிடிக்காது. தனது உள்ளுணர்வை வைத்தே கணக்கு விஷயத்தில் அனைத்தையும் அவர்  முடிவு செய்து விடுவார். அடிக்கடி அவர்  “இந்த கணித மேதைகளிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறி கணக்கைப் போட சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு பெரிய பேப்பரை எடுத்துக் கொண்டு வரிசை வரிசையாக  கோடு போட்டு ஏ என்றும் பி என்றும் எக்ஸ் என்றும் ஒய் என்றும் எழுதி அந்த கட்டங்களில் ஏராளமான நம்பர்களைப் போட்டு நிரப்புவார்கள். கடைசியில் ஒன்றுக்கும் உதவாத ஒரு தப்பான விடையைத் தருவார்கள்.” என்று சொல்வது வழக்கம். தன் மனதிலேயே கணக்கைப் போட்டு உடனடியாக உள்ளுணர்வில் தோன்றியபடி விஷயத்தை முடித்து விடுவார் அவர்.

 

 

ஒரு முறை வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி அவரது ஒரு கண்டுபிடிப்புக்காக ஒரு லட்சம் டாலர் தொகையைத் தந்தது. அவ்வளவு பெரிய தொகையைப் பார்த்துப் பிரமித்துப் போனார் எடிஸன். கம்பெனி நிர்வாகத்திடம், “ எனக்கா இவ்வளவு பெரிய தொகை? இதை என்னிடம் தர வேண்டாம். நீங்களே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டொன்றுக்கு ஆறாயிரம் டாலர் வீதம் பதினேழு ஆண்டுகளுக்கு எனக்கு நீங்கள் தாருங்கள்” என்றார். அந்த நிறுவனமும் அப்படியே செய்ய சம்மதித்தது!

**********

 

 

 

கும்பகோணம் கோவிந்தசெட்டி சொன்னது எல்லாம் பலித்தது: விவேகாநந்தர் (Post No 2541)

viveka

Written by S Nagarajan

 

Date: 15  February 2016

 

Post No. 2541

 

Time uploaded in London :–  8-24 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (4)

 

 

ச.நாகராஜன்

 

 talks-with-swami-vivekananda-400x400-imadzmseukfsp66n

தாயைப் பற்றிய கவலை

 

மேலை நாடுகளில் அற்புதங்களுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஸ்வாமிஜி கூறி முடித்த போது அங்கு அருகிலிருந்த ஸ்வாமி யோகானந்தர், ஸ்வாமிஜியிடம் உங்கள் சென்னை அநுபவத்தை இந்த சிஷ்யருக்குச் சொல்லுங்களேன்” என்றார்.

 

உடனே ஸ்வாமிஜி தனது சென்னை அனுபவத்தைக் கூறலானார்.

ஸ்வாமிஜி சென்னையில் இருந்த சமயம் அது. அவர் சென்னையில் அக்கவுண்ட் ஜெனரலாக இருந்த மன்மத நாத் பட்டாசார்யாவுடன் இருந்து வந்தார். ஒரு நாள் இரவு அவரது தாயார் இறந்து விட்டது போல அவர் கனவு கண்டார். இது

அவர் மனதை பெரிதும் பாதித்தது.மேலை நாடு செல்வதற்காக மும்முரமான ஏற்பாடுகள் வேறு அப்போது நடந்து கொண்டிருந்தது.ஆகவே அவர் மனம் ஊசலாடியது.

 

 

ஸ்வாமிஜி தனது கவலையை மன்மத பாபுவிடம் தெரிவித்தார். உடனே அவர் உண்மையான நிலவரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கல்கத்தாவிற்குத் தந்தி ஒன்றை அனுப்பினார்.

அத்துடன் ஸ்வாமிஜியின் கவலையைப் போக்க அவர், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் என்னும் கிராமத்தில் குறி சொல்வதில் வல்லவரான கோவிந்த செட்டி என்று ஒருவர் இருப்பதாகவும்  அவரிடம் சென்று குறி கேட்கலாம் என்றும் சொன்னார்.

 

கோவிந்த செட்டி மிகவும் பிரபலமானவர். எதிர்காலத்தைச் சொல்ல வல்லவர். அவரை மைசூர் மன்னர், சென்னை மாகாண கவர்னர் எனப் பலரும் கண்டு குறி கேட்டதுண்டு! அவர் சென்றால் ஊர் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வர். அப்படிப்பட்டவரைச் சந்திக்க ஸ்வாமிஜியும் ஒத்துக் கொண்டார்.

 

vivek world

கும்பகோணப் பயணம்

 

அளசிங்கர், மன்மத பாபு, ஸ்வாமிஜி, இன்னுமொரு அன்பர் ஆகிய நால்வர் அடங்கிய குழு ரயிலில் ஏறி கும்பகோணம் சென்றது. அங்கிருந்து நடைப் பயணம் மேற்கொண்டு வலங்கைமான் சென்று கோவிந்த செட்டியை அவர்கள் சந்தித்தனர். அவர் ஒரு சுடுகாட்டின் அருகில் இருந்தார்.

 

பயமுறுத்தும் தோற்றம் அளித்த அவரைப் பார்க்கச் சற்று பயமாகத் தான் இருந்தது. அங்கிருந்த அவரது உதவியாளர்கள் அவர் அனைத்து ஆவிகளின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்ட பெரும் சக்தியைக் கொண்டவர் என்று கூறினர்.

வந்தவர்களை அவர் கண்டு கொள்ளவே இல்லை. சிறிது நேரம் காத்திருந்த பின்னர் அவர்கள் அனைவரும் எழுந்து கிளம்ப யத்தனித்தனர்.

 

அப்போது கோவிந்த செட்டி அவர்களை இருக்குமாறு கூறினார்.

பின்னர் ஸ்வாமிஜியை அழைத்தார்.

 

சில படங்களை முதலில் வரைந்த அவர் மனதை ஒரு முகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

அளசிங்கர் அவர் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார்.

 

 

கோவிந்த செட்டி கூறிய எதிர்காலக் கணிப்பு

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜியின் பெயர், அவரது வமிசாவளி, முன்னோர்களின் பெயர் ஆகிய அனைத்தையும் கூறினார். ஸ்வாமிஜியின் சஞ்சாரம் முழுவதும் ராமகிருஷ்ணர் அவருடன் கூடவே இருப்பதையும் அவர் உரைத்தார். ஸ்வாமிஜியின் தாயார் நலமாக இருக்கும் நற்செய்தியையும் அவர் கூறினார். அத்தோடு மதத்தை பிரச்சாரம் செய்யும் வகையில் தொலைதூர நாடுகளுக்குச் ஸ்வாமிஜி செல்வார் என்றும் அவர் கூறினார்.

இந்த நற்செய்திகளை எல்லாம் கேட்டு குழுவினர் மீண்டும் சென்னை திரும்பினர்.

 

 

இதைச் சொல்லி முடித்த ஸ்வாமிஜி யோகானந்தர் பக்கம் திரும்பி, “அந்த மனிதர் சொன்ன அனைத்தும் அப்படியே பலித்தது” என்று கூறி முடித்தார்.

 

 

யோகானந்தர் இப்போது ஸ்வாமிஜியை நோக்கி, “இதையெல்லாம் முன்னர் நீங்கள் நம்புவதில்லை என்பதால் இந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது போலும்” என்றார்.

 

 

உடனே ஸ்வாமிஜி, “ எதையும் நேரடி நிரூபணம் இல்லாமல் நம்புகின்ற முட்டாள் நான் இல்லை. ஆனால் மகாமாயையின் ஆளுகைக்குள் வந்தால் நான் பார்த்த மாயாஜால மர்மங்கள் எத்தனையோ! அடடா!! என்ன பேச்சைப் பேசிக்

 

கொண்டிருக்கிறோம் இந்த நாள் முழுவதும்! பிசாசு, ஆவிகளைப் பற்றி! பேயைப் பற்றி பேசுபவர்கள் பேயாகவே ஆகி விடுவார்கள். ‘நான் ஆத்மன்’ என்று நினைப்பவர்கள் அதாக ஆவார்கள்” என்று கூறி நிறுத்தினார்.

 

தேவையற்ற குப்பைகளால் உங்கள் மனதை நிரப்பாதீர்கள் என்று சீடர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்க ஆரம்பித்தார் அவர்.

இரவு வெகு நேரம் ஆகவே, சீடர்கள் கலைந்தனர்.

 viveka lanka

கோவிந்த செட்டிக்கு ஸ்வாமிஜியின் அருள்

 

இனி கோவிந்த செட்டி சம்பவத்திற்கு மீண்டும் வந்து பின்னர் நடந்த ஒரு சம்பவத் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

ஸ்வாமிஜிக்கு கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ஒரு தந்தி வந்தது – அவரது அன்னை நலமாய் இருப்பதாக!

கோவிந்த செட்டி கூறிய அனைத்தும் அப்படியே நடந்தது.

உலகப் புகழ் பெற்று ஸ்வாமிஜி இந்தியாவிற்குத் திரும்பினார்.

ஊர் ஊராக வரவேற்பு, ஆரவாரம், கோலாகலம்!

 

கும்பகோணத்திற்கு விஜயம் செய்த ஸ்வாமிஜிக்கு கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 

கோவிந்த செட்டியைப் பார்த்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன.

 

வரவேற்புக் கூட்டத்தில் கோவிந்த செட்டியும் நிற்பதைப் பார்த்தார் ஸ்வாமிஜி.

 

அவரை அழைத்தார். தன்னைத் தனியே வந்து சந்திக்குமாறு கூறினார் ஸ்வாமிஜி. அவரும் அப்படியே தனியே பின்னர் வந்தார்.

அவரிடம் ஸ்வாமிஜி,” உங்களிடம் அற்புத சக்திகள் இருப்பது எனக்குத் தெரியும். அதனால் பணமும் புகழையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் ஆன்மீக்ம் என்று எடுத்துக் கொண்டால் ஒரு அடி கூட நீங்கள் முன்னேறவில்லையே!. எங்கே ஆரம்பித்தீர்களோ, அங்கேயே நிற்கிறீர்களே! இது தானே உண்மை! கடவுளை நோக்கி என்றாவது உங்கள் மனம் சிறிதாவது சென்றுள்ளதா!” என்றார்.

 

 

கோவிந்த செட்டி ஸ்வாமிஜி கூறியதில் இருந்த உண்மையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

 

பின்னர் ஸ்வாமிஜி,” கடவுளை நாடாவிட்டால் இந்த சக்திகளால் பயன் தான் என்ன! இறையானந்தத்தை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அதன் பிறகு இவை எல்லாம் பயனற்றதாக ஆகி விடும்” என்று அருளினார்.

 

 

பின்னர் ஸ்வாமிஜி கோவிந்த செட்டியை கட்டி அணைத்துக் கொண்டார்.

 

என்ன ஆச்சரியம்! அன்றிலிருந்து கோவிந்த செட்டியின் அற்புத ஆற்றல்கள் அவரை விட்டு அகன்றன. இறை பக்தியிலேயே அவர் ஆழ்ந்து உலகைத் துறந்தவராக அவர் வாழ ஆரம்பித்தார்.

 

(ஸ்வாமிஜி தான் வாழ்ந்த நாள் முழுவதும் அன்னை மீது பக்தியும் மரியாதையும் கொண்டவராக விளங்கினார்.

39 ஆண்டுகள் 5 மாதங்கள் 24 நாட்கள் வாழ்ந்து 1902ஆம் ஆண்டு ஜூலை மாதம்  நான்காம் தேதி சமாதி அடைந்த ஸ்வாமிஜியின் மறைவு கேட்டு அன்னை புவனேஸ்வரி தேவி மாளா துக்கத்துடன் அழுது புரண்டார். அவரை மடத்து துறவிகளும் ஏனையோரும் சமாதானப் படுத்த முடிந்தமட்டில் முயன்றனர்.)          -தொடரும்

 

குறிப்பு: மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்க “TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 113 முதல் 116ஆம் பக்கம் முடிய உள்ள பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.

 

–சுபம்–

பேயை விரட்டிய விவேகாநந்தர்! அதீத உளவியல் ஆற்றல் (Post No. 2535)

viveka namste

Written by S Nagarajan

 

Date: 13  February 2016

 

Post No. 2535

 

Time uploaded in London :–  7-07  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (3)

 

ச.நாகராஜன்

 

இமயமலை கிராமம் ஒன்றில்!

 

ஸ்வாமிஜி ஒரு முறை 1898ஆம் ஆண்டில் பல்ராம் பாபுவின் வீட்டில் இருந்த போது அமானுஷ்ய சக்தி பற்றி பேச்சு திரும்பியது.அதீத உளவிய்ல ஆற்றல் பற்றி பேச ஆரம்பித்தார் ஸ்வாமிஜி.

 

 

மனதை ஒருமுகப் படுத்துவதால் சுலபமாக சில அபூர்வமான சக்திகளைப் பெறலாம் என்ற ஸ்வாமிஜியின் வார்த்தைகளைக் கேட்ட சீடர் அதனால் பிரம்மம் பற்றிய ஞானத்தை அடைய முடியுமா என்று கேட்டார்.

 

நிச்சயமாக முடியாது என்று பதிலிறுத்தார் ஸ்வாமிஜி. அப்படியானால் அப்படிப்பட்ட ஆற்றல் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிய சீடர், இருந்தாலும் அப்படிப்பட்ட உங்களின் சொந்த அனுபவங்களைக் கேட்க ஆசைப்படுகிறோம் என்று கூறினார்.

உடனே இமயமலையில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைக் கூறத் தொடங்கினார் ஸ்வாமிஜி.

 

 

இமயமலைப் பகுதியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு மலைப் பகுதி மக்கள் வாழும் ஒரு கிராமத்தில் தங்க நேர்ந்தது.திடீரென்று நள்ளிரவில் பெரிதாக முரசு அறையும் பேரொலியைக் கேட்ட ஸ்வாமிஜி என்ன விஷயம் என்று தான் தங்கியிருந்த வீட்டாரைக் கேட்டார்.

 

vivekananda-rock-and-valluvar

Picture of Vivekananda Rock in Kanyakumari

ஆவி வந்து பீடிக்கப்பட்ட மனிதன்

 

அதற்கு அவர் அந்த கிராமத்தில் ஒருவர் மீது நல்ல ஆவி ஒன்று ஆவிர்ப்பித்து இருப்பதாக பதில் கூறினார்.

ஆவல் உந்த சத்தம் வந்த இடத்திற்கு கூட வந்தவர்களுடன் ஸ்வாமிஜி சென்றார்.

 

அங்கு ஏராளமான மக்கள் கூட்டம் குழுமி இருந்தது. அதில் நடுவே உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். நீண்ட தலைமுடி அவருக்கு! அவரைச் சுட்டிக் காட்டி அவரிடம் தான் ஒரு தேவதை ஆவிர்ப்பித்து இருப்பதாகச் சொன்னார்கள்.

 

அங்கு ஒரு கோடாலி தீயில் நன்கு பழுக்கக் காய வைக்கப்பட்டிருந்தது. அக்னியில் இருந்து சிவப்பாக மாறி இருந்த அந்க்த கோடாலியை எடுத்து அவர் தன் உடம்பு மீதும் தலை முடி மீதும் வைத்தார்.

 

ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலி அவர் மீது எந்த தீப் புண்ணையும் ஏற்படுத்தவில்லை. அவர் முடியிலும் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வலியினால் துடிக்கவும் இல்லை,

 

மௌனமாக வாயடைத்துப் போனார் ஸ்வாமிஜி.

 

அப்போது அந்த கிராமத் தலைவன் அவரிடம் வந்து, “ஸ்வாமிஜி! தயவு செய்து இந்த தேவதையை நீங்கள் தான் போக்க வேண்டும், சற்று கருணை காட்டுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். என்ன செய்வதென்று ஒரு கணம் ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

ஆனால் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கருணை உள்ளத்துடன் ஆவியால் பிடிக்கப்பட்டிருந்த அந்த மனிதனை அணுகினார். அங்கு சென்றவுடன் அந்தப் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை சோதிக்க எண்ணம் கொண்டு அதைத் தொட்டார்.  அவர் கை தீப்புண்ணால் சிவந்தது. அப்போது அந்தக் கோடாலி சற்று குளிர்ந்து சிவப்பு நிறத்தை இழந்து தான் இருந்தது. அதற்கே அவ்வளவு சூடு!!

 

 

கோடாலியில் ஏதாவது இருக்கும் என்ற ஸ்வாமிஜியின் எண்ணம் காற்றில் பறந்து போனது – கையில் ஏற்பட்ட தீப்புண்ணால்!

இருந்தாலும் அந்த புண்ணான கையுடன் அந்த  மனிதனின் தலை மீது கை வைத்து ஒரு ஜபத்தை உச்சரித்தார் ஸ்வாமிஜி.

என்ன ஆச்சரியம்! பத்து பன்னிரெண்டு நிமிடங்களில் அந்த தேவதை அவனை விட்டு நீங்க, அவன் சுய உணர்வைப் பெற்றான்.

 

உடனே அங்கு குழுமி இருந்த அனைவரும் பரவசம் அடைந்து ஸ்வாமிஜியை விழுந்து வணங்கினர்.

 

அடடா! அவர்களின் பக்தியைக் கண்ட ஸ்வாமிஜி திகைத்துப் போனார்.

 

அவர்களுக்கு ஒரு தெய்வீக மனிதராக அவர் ஆகி விட்டார்.

என்ன நடந்தது என்று ஸ்வாமிஜிக்குப் புரியவில்லை..

ஆகவே மௌனமாக தன்னுடன் வந்தவருடன் வீட்டிற்குத் திரும்பினார்.

கையில் பட்ட தீக்காயத்துடனும் என்ன நடந்திருக்கும் என்ற எண்ணத்துடனும் படுக்கையில் படுத்த ஸ்வாமிஜிக்கு உறங்கவே முடியவில்லை.

 

உடம்பில் பழுக்கக் காய்ச்சிய கோடாலியை வைத்துக் கொண்ட அந்த மனிதனை நினைத்த போது ஸ்வாமிஜிக்கு ஷேக்ஸ்பியரின் வரிகள் தாம் நினைவுக்கு வந்தன:

 

“THERE ARE MORE THINGS IN HEAVEN AND EARTH,

HORATIO, THAN ARE DREAMT OF YOUR PHILOSOPHY”

 

ஸ்வாமிஜி பேச்சை நிறுத்த பிரமித்துப் போயிருந்த சீடர், “ஸ்வாமிஜி பின்னால் எப்போதாவது அந்த மர்மத்தை நீங்கள் விடுவிக்க முடிந்ததா?” என்று கேட்டார்.

 

 

“இல்லை” என்று பதிலிறுத்தவர், இப்போது தான் சட்டென்று அது என் நினைவுக்கு வந்தது. அதை உங்களிடம் சொல்கிறேன்” என்றார்.

 

பிறகு தொடர்ந்தார்: “ஆனால் ராமகிருஷ்ணர் இந்த மாதிரி சித்திகளை ஒரு போதும் ஆதரித்ததில்லை.இப்படி மனதை வேறு ஒரு பக்கம் செலுத்துவதாலெல்லாம் மெய்ப்பொருளை அறியவே முடியாது என்று கூறி இருக்கிறார்”

 

ஸ்வாமிஜி தொடர்ந்து மேலை நாடுகளில் இப்படிப்பட்ட அற்புதங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றிப் பேசலானார்.

அற்புதங்கள் தொடரும்

 

குறிப்பு: மனதின் அபூர்வ ஆற்றல்கள் பற்றி முழுவதுமாக அறியவும் மேற் கூறிய சம்பவத்தை ஆங்கிலத்தில் படிக்கவும்,

“TALKS WITH SWAMI VIVEKANANDA “ (RAMAKRISHNA MUTT) என்ற புத்தகத்தைப் பார்க்கலாம் 500 பக்கங்கள் அடங்கியுள்ள இந்த நூலில் ஸ்வாமிஜி பல விஷயங்களைத் தெளிவு பட விளக்குகிறார். மேலே உள்ள சம்பவம் 110ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

 

-Subham–

 

கேட்டது கிடைக்கும்! அதீத உளவியல் ஆற்றல் (Post No. 2528)

BHARATMATA VIVEKA

Written by S Nagarajan

 

Date: 11 February 2016

 

Post No. 2528

 

Time uploaded in London :–  6-01 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 

இதன் முதல் பகுதி நேற்று வெளியானது.

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (2)

 

ச.நாகராஜன்

 

 

 கேட்டது கிடைக்கும்!

 

ஸ்வாமிஜி மேலை நாடு செல்வது என்று  முடிவாகி விட்ட சமயம் அது. ஹைதராபாத்தில் உள்ள் அன்பர்கள் அவரை உடனே அங்கு வருமாறு வேண்டினர். அதற்கிணங்க ஸ்வாமிஜி ஹைதரபாத் சென்றார். ரயில் நிலையத்தில் அவரை வரவேற்க ஹிந்துக்களும் முஸ்லீம்களுமாக 500 பேர் திரண்டனர். மெஹபூப் கல்லூரியில் ஸ்வாமிஜி 1000 பேர் கொண்ட கூட்டத்தில், “நான் ஏன் மேலை நாடு செல்கிறேன்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

 

 

ஹைதராபாத்தில் தங்கி இருந்த போது அமானுஷ்ய சக்தி படைத்த பிராமண யோகி ஒருவரை அவர் சந்தித்தார். எந்தப் பொருளை வேண்டுமானாலும் உடனடியாக வருவிக்கும் ஆற்றல் படைத்தவர் அவர்! நண்பர்கள் சிலருடன் சென்ற ஸ்வாமிஜியை யோகி வரவேற்றார். ஆனால் அப்போது அவருக்கு ஜுரம் கண்டிருந்தது.

 

 

ஸ்வாமிஜி, அவரிடம் அவரது அமானுஷ்ய சக்தியைக் காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு இணங்கிய அவர், ஸ்வாமிஜியை நோக்கி, “ நிச்சயம் காட்டுகிறேன். ஆனால் அதற்கு முன்னர் என் தலையில் கை வைத்து ஆசீர்வதியுங்கள். அதனால் என் ஜுரம் போகட்டும்” என்று வேண்டினார்.

ஸ்வாமிஜியும் அப்படியே அசீர்வதித்தார்.

 

பின்னர் அந்த யோகி அவர்கள் அனைவரையும் நோக்கி, “உங்களுக்கு வேண்டியதை ஒரு காகிதத்தில் எழுதி என்னிடம் கொடுங்கள்” என்றார்.

 

 

அந்தப் பகுதியில் கிடைக்காத ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட சிக்கலான பொருள்களை எல்லாம் பேப்பரில் எழுதி அவரிடம் கொடுத்தனர்.

 

ஒரு கௌபீனம் மட்டுமே அணிந்திருந்த அந்த யோகிக்கு ஸ்வாமிஜி ஒரு சால்வையைக் கொடுத்தார். அதைப் போர்த்திக் கொண்ட அவர், அதனுள்ளிருந்து குலை குலையாக திராட்சைகள், ஆரஞ்சுப் பழங்கள் என்று ஒவ்வொன்றாக எடுத்துத் தந்தார்.

அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்

 

ஆவி பறக்க அப்போதே அரிசியிலான சாதத்தையும் அவர் வரவழைத்து அனைவரையும் சாப்பிடுமாறு கூறினார். சற்று பயத்தில் ஆழ்ந்த அனைவரும் ஸ்வாமிஜியை அதைச் சாப்பிட வேண்டாம் என்று தடுத்தனர். ஆனால் அந்த யோகியே அவற்றைச் சாப்பிட ஆரம்பித்தார்.

 

அனைவரும் உடனே சாப்பிட ஆரம்பித்தனர்.

 

100 vivekas

எல்லாம் கை ஜாலம் தான்!

 

பின்னர் அழகிய ரோஜா மலர்களை வரவழைத்து ஸ்வாமிஜியிடம் கொடுத்து அவரை வியப்பில் ஆழ்த்தினார் அந்த யோகி.

 

இதெல்லாம் எப்படி என்று ஸ்வாமிஜி வினவினார். “ஒன்றுமில்லை கை ஜாலம் தான்” என்றார் அவர்.

ஆனால் வெறும் கை ஜாலத்தால் இப்படி உடனே கேட்கப்பட்ட பல பொருள்களைத் திரட்டித் தர முடியாது என்பதால் அவரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று ஸ்வாமிஜி அனுமானித்தார்.

இந்த அனுபவத்தையும் அவர் தனது லாஸ் ஏஞ்சல்ஸ் சொற்பொழிவில் குறிப்பிட்டார்.

 

 

மனத்தின் ஆற்றல் மூலம் எதையும் செய்ய முடியும் என்பதையே இது காட்டுகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

ஸ்வாமிஜியின் ஆங்கிலச் சொற்பொழிவின் மூலம் கீழே தரப்படுகிறது.

 

 

 

The Powers of the Mind

 

Delivered at Los Angeles, California, January 8, 1900

(Complete Works of Swami Vivekananda Volume II)

 

 

 

Another time I was in the city of Hyderabad in India, and I was told of a Brâhmin there who could produce numbers of things from where, nobody knew. This man was in business there; he was a respectable gentleman. And I asked him to show me his tricks. It so happened that this man had a fever, and in India there is a general belief that if a holy man puts his hand on a sick man he would be well. This Brahmin came to me and said, “Sir, put your hand on my head, so that my fever may be cured.” I said, “Very good; but you show me your tricks.” He promised. I put my hand on his head as desired, and later he came to fulfil his promise. He had only a strip of cloth about his loins, we took off everything else from him. I had a blanket which I gave him to wrap round himself, because it was cold, and made him sit in a corner. Twenty-five pairs of eyes were looking at him. And he said, “Now, look, write down anything you want.” We all wrote down names of fruits that never grew in that country, bunches of grapes, oranges, and so on. And we gave him those bits of paper. And there came from under his blanket, bushels of grapes, oranges, and so forth, so much that if all that fruit was weighed, it would have been twice as heavy as the man. He asked us to eat the fruit. Some of us objected, thinking it was hypnotism; but the man began eating himself — so we all ate. It was all right.
He ended by producing a mass of roses. Each flower was perfect, with dew-drops on the petals, not one crushed, not one injured. And masses of them! When I asked the man for an explanation, he said, “It is all sleight of hand.”
Whatever it was, it seemed to be impossible that it could be sleight of hand merely. From whence could he have got such large quantities of things?

**********

விவேகானந்தரின் அற்புத அனுபவங்கள் – பகுதி 1(Post No. 2525)

விவேகா-அனிடஸ் மரியா

Written by S Nagarajan

 

Date: 10 February 2016

 

Post No. 2525

 

Time uploaded in London :–  6-10 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (1)

 

ச.நாகராஜன்

 

 விவேகா

சித்திகளைக் கண்டு மயங்காதே!

 

ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கை நெடுக தனது அற்புதமான தவ ஆற்றலால் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் உண்டு. அதீத உளவியல் சம்பந்தமாக அவர் அடைந்த அனுபவங்களும் ஏராளம் உண்டு. தனியே பெரிய நூலாகத் தொகுக்க வேண்டியவை இவை.

 

இந்த சிறு கட்டுரைத் தொடரில், ஒரு அறிமுகமாக, அவரது ஆற்றல்களையும அவர் அடைந்த அனுபவங்களையும் காணலாம். இதைப் படித்ததன் மூலம் அவரைப் பற்றி இன்னும் முற்றிலுமாக அறிய உத்வேகம் ஏற்பட்டால் அதுவே இந்த கட்டுரைத் தொடரின் பயனாக அமையும்.

முதலில் சித்திகள் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறியதை இங்கு நினைவு படுத்திக் கொள்வது நல்லது.

பரமஹம்ஸர் சித்திகளைக் கண்டு மயங்காதே என்று தெளிவாகப் பலமுறை கூறியுள்ளார். அதற்கு மதிப்புக் கொடுக்காதே; அதையும் தாண்டி உள்ள மஹாசக்தியை நாடு என்பதே அவரது அருளுரை.

 

இதையே ஸ்வாமிஜியும் தன் வாழ்நாள் முழுவதும் திரும்பத் திரும்பக் கூறியுள்ளார்.

 

ஆனால் பெரும் அவதாரங்கள் தோன்றும் போது அளப்பரிய ஏராளமான ஆற்றல்கள் அவர்களுடன் இயல்பாகவே தோன்றும். இப்படி அற்புதங்களைத் தாம் ஆற்றியதாகவே அவர்கள் கூற மாட்டார்கள்; அவர்கள் இதை அறிவதும் இல்லை, போலும். மற்றவர்கள் கூறும் போது, அப்படியா என்று வியப்பது வழக்கம்!

இந்தக் கருத்தை பகவான் ரமண மஹரிஷியும் அழுத்தம் திருத்தமாக அடிக்கடி கூறியுள்ளார்.

 

லாஸ் ஏஞ்சல்ஸ் உரை ; நினைத்ததைச் சொல்பவர்!

ஸ்வாமிஜி கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் 1900ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி மனத்தின் சக்திகள் (The Powers of the Mind : Complete Works of Swami Vivekananda Volume II) என்று அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

 

அதில், “இயற்கைக்கு மீறிய நிகழ்வுகள் காலம் காலமாக நடந்து வருகின்றன. அதீதமான நிகழ்வுகளைப் பற்றி நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். சிலருக்கு சொந்த அனுபவங்களும் இதில் உண்டு. எனது சொந்த அனுபவங்களைச் சொல்வதன் மூலம் இந்த விஷயத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்று அந்த உரையை அவர் ஆரம்பிக்கிறார்.

ஒரு சமயம் அவர் எந்தக் கேள்வியை மனதில் நினைத்தாலும் அதை அறிந்து கொண்டு அதற்கு உடனே விடை தரும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.  எதிர்காலத்தில் இனி நடக்கப் போகும் சம்பவங்களையும் கூற வல்லவர் அவர்.  ஆர்வம் உந்தவே, சில நண்பர்களுடன் அவரைச் சந்திக்க ஸ்வாமிஜி கிளம்பினார். ஒவ்வொருவரும் தன் மனதில் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டனர். தவறு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் நினைத்தது என்ன என்பதை ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி அதைத் தங்கள் பாக்கட்டில் போட்டுக் கொண்டனர். அந்த குழுவினரைப் பார்த்தவுடனேயே அந்த மனிதர் ஒவ்வொருவரும் என்ன கேள்வியை நினைத்திருக்கிறோம் என்பதைக் கூறி அதற்கான பதிலையும் கூறி விட்டார்.

 

 

பிறகு அவர் ஒரு பேப்பரில் ஏதோ எழுதி அதை மடித்து அதில் ஸ்வாமிஜையைக் கையெழுத்திடுமாறு கூறி. “இதைப் பார்க்காதீர்கள். உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

 

பின்னர், “நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையையோ அல்லது வாக்கியத்தையோ, அது எந்த  மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம்! , நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார். அந்த மனிதருக்குத் தெரியாத சம்ஸ்கிருத மொழியில் ஒரு பெரிய வாக்கியத்தை ஸ்வாமிஜி நினைத்துக் கொண்டார்.

பின்னர் அந்த மனிதர், “இப்போது உங்கள் பையில் இருக்கும் பேப்பரை எடுத்துப் பாருங்கள்” என்றார். ஸ்வாமிஜி நினைத்த சம்ஸ்கிருத வாக்கியம் அந்தப் பேப்பரில் அப்படியே இருந்தது.

 

சிவாஜி, விவேகா, நேதாஜி

ஒரு மணி நேரம் முன்னர் அந்தப் பேப்பரில் அவர் எழுதியபோது, “நான் எழுதியதை உறுதி செய்து இவர் அதே வாக்கியத்தை நினைப்பார்” என்று சொல்லி இருந்தார். அது முற்றிலும் சரியாக ஆனது.

 

இதே போல இன்னொரு நண்பர் அந்த மனிதருக்குத் தெரிந்திருக்க சற்றும் வாய்ப்பே இல்லாத அராபிய மொழியில், குர் ஆனில் வரும்  ஒரு பகுதியை எழுதி இருந்தார். அது அப்படியே அவர் முன்னரே வைத்த பேப்பரில் எழுதப்பட்டிருந்தது.

 

 

இன்னொரு நண்பரோ ஒரு வைத்தியர். அவர் ஜெர்மானிய மருத்துவ புத்தகத்தில் வரும் ஒரு வரியை நினைத்தார். அதுவும் அப்படியே பேப்பரில் எழுதப் பட்டிருந்தது.

 

 

சில நாட்கள் கழித்து  முந்தைய முறை எப்படியோ தான் மயக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்தவாறே ஸ்வாமிஜி மீண்டும் அந்த மனிதரிடம் சென்றார். ஆனால் என்ன ஆச்சரியம், இந்த முறையும் அவர் அப்படியே அந்த நிகழ்ச்சியை அதிசயமாக நடத்திக் காட்டினார்.

 

ஸ்வாமிஜியின் அனுபவங்கள் …       தொடரும்

 

இதை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்களுக்காக ஸ்வாமிஜியின் மூலச் சொற்பொழிவுப் பகுதிகள் கீழே அப்படியே தரப்பட்டுள்ளன.

 

All over the world there has been the belief in the supernatural throughout the ages. All of us have heard of extraordinary happenings, and many of us have had some personal experience of them. I would rather introduce the subject by telling you certain facts which have come within my own experience.

 

I once heard of a man who, if any one went to him with questions in his mind, would answer them immediately; and I was also informed that he foretold events. I was curious and went to see him with a few friends. We each had something in our minds to ask, and, to avoid mistakes, we wrote down our questions and put them in our pockets. As soon as the man saw one of us, he repeated our questions and gave the answers to them. Then he wrote something on paper, which he folded up, asked me to sign on the back, and said, “Don’t look at it; put it in your pocket and keep it there till I ask for it again.” And so on to each one of us. He next told us about some events that would happen to us in the future. Then he said, “Now, think of a word or a sentence, from any language you like.” I thought of a long sentence from Sanskrit, a language of which he was entirely ignorant. “Now, take out the paper from your pocket,” he said. The Sanskrit sentence was written there! He had written it an hour before with the remark, “In confirmation of what I have written, this man will think of this sentence.” It was correct. Another of us who had been given a similar paper which he had signed and placed in his pocket, was also asked to think of a sentence. He thought of a sentence in Arabic, which it was still less possible for the man to know; it was some passage from the Koran. And my friend found this written down on the paper.
Another of us was a physician. He thought of a sentence from a German medical book. It was written on his paper.
Several days later I went to this man again, thinking possibly I had been deluded somehow before. I took other friends, and on this occasion also he came out wonderfully triumphant.

(To be Continued)

 

 

உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அதிசய மனிதர் ஹோம்! (Post No 2504)

psychic_final

Written by S Nagarajan

 

Date: 3 February 2016

 

Post No. 2504

 

Time uploaded in London :–  8-42  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

 P_DD_home_depic_lev_1868

 

22-1-2016 பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை. பாக்யா வார இதழ் அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.

 

உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அதிசய மனிதர் ஹோம்!

.நாகராஜன்

 

நீங்கள் சொல்லியிருந்தால், எதை நான் நம்பி இருக்க மாட்டேனோ அதை நானே நேரில் பார்த்தேன். ஆகவே நான் அதைச் சொன்னால் நீங்களும் நம்பப் போவதில்லை” – ஹோமின் நிகழ்ச்சியைப் பார்த்த ராபர்ட் பெல் மற்றவர்களுக்கு கூறிய முதல் வாக்கியம்

 

ஹோமின் புகழ் உலகம் முழுவதும் பரவுவதற்கான காரணம்  பல்வேறு அசகாய செயல்களை ஏராளமான பேர்களின் முன்னால் சர்வ சகஜமாக அவர் செய்தது தான்.

 

இந்த வகையில் உடலை நீட்டித்தும் குறுக்கியும் காட்டிய அவரது செய்கை பலரையும் வியக்க வைத்து அது பற்றி ஆராய வைத்தது!

 

Elongation  என்று ஆங்கிலத்தில் கூறப்படும் நீட்டிப்பு சாதாரண விஷயம் அல்ல. நீண்ட பயணம் செய்யும் போது  நாம் ‘ஸ்ட்ரெச்’  செய்து கொண்டு உடம்பை நீட்டித்து கை கால்களை உதறிக் கொள்கிறோம். அது போன்றதல்ல ஹோம் செய்த நீட்டிப்பு.

 

அவர் ஒரு நிகழ்வில் திடீரென உயரமாகிக் காண்பித்தார்! மாஸ்டர் ஆஃப் லிண்டேஸேயின் (Master of Lindsay) வாக்குமூலப்படி  50 பேர்களுக்கு முன்னால், ஹோம் 11 அங்குலம் வரை உயர்ந்தார். டைஎலக்ட்ரிகல் கமிட்டி என்ற ஆய்வுக் குழு இது பற்றி தீர விசாரித்தது.

ஹோம் இந்த நிகழ்வை முடித்தவுடன் உடல்நலமில்லாமல் படுத்து விட்டார்.

 

அவரது இடுப்பு எலும்பும் விலா எலும்புகளும் தனியே தனியே பிரிந்ததாகவும் தெரிய வந்தது. இந்தப் பிரிவு முதுகெலும்பில் உள்ள முள்ளெலும்புகள் தனித் தனியாகப் பிரிவதால் ஏற்பட்ட ஒன்று அல்ல; அல்லது மார்பை மூச்சை உள்ளே இழுத்து மார்பை அகலமுறச் செய்வது போன்றதும் அல்ல; அவரது தோள்கள் அசையவே இல்லை. அருகிலிருந்து 50 பேர்களும் உன்னிப்பாக அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். யாரோ அவரின் கழுத்தை மேலே இழுத்தது போல அவர் உயர்ந்தார் என்று அனைவரும் கூறினர்.

 

ஹோமை விட அதிக உயரமாக இருந்த ஜென்கன் (Jencken) என்பவர் அவர் அருகில் தான் நின்று கொண்டிருந்தார். “ஹோமின் பாதம் பூமியிலேயே பாவி இருந்தது. அவரது கோட்டுக்கும் இடுப்பில் இருந்த டிரவுசருக்கும் இடையே இடைவெளி தெரிந்தது. சுமார் எட்டு அங்குலமாவது அவர் உயர்ந்திருக்க வேண்டும்” என்று  லார்ட் அடேர் (Lord Adare) என்பவர் கூறினார்.

 

 

அவரது அகலத்திலும் வித்தியாசம் தெரிந்தது. எல்லா அங்கங்களின் அளவுகளும் கூடி இருந்தது. ஏதோ ஒரு கை அவர் இடுப்பில் வந்திருந்து அவரைத் தூக்கியது போல நாங்கள் உணர்ந்தோம் என்று குழுமியிருந்தோர் கூறினர்.

 

 

இப்படி இரண்டு நீட்டிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. நீட்டிப்பு முடிந்தவுடன் ஹோம் மிகவும் சுருங்கிக் காட்டினார். அவர் இடுப்பு எலும்பு பழைய இடத்தில் வந்து அமர்ந்து மிகவும் சுருங்கி விட்டது என்று லார்ட் அடேர் கூறினார்.

கையை மட்டும் கூட ஹோமால் நீட்டித்துக் காண்பிக்க முடிந்தது! முதலில் பென்சிலால் ஒரிஜினல் அளவு குறிக்கப்பட்டது. பின்னர் ஹோம் முதலில் தனது வலது கையை ம்ட்டும் நீட்டித்தார். சுமார் ஒன்பது அங்குலம் அது அதிகமானது. பின்னர் இடது கையை நீட்டித்தார். நீட்டித்த பின்னர் பென்சில் குறியீட்டை வைத்துப் பார்க்கும் போது அனைவரும் பிரமித்துப் போனார்கள்.

 

 

ஹெச்.டி. ஹம்ப்ரீஸ் என்ற நடுநிலைப் பத்திரிகையாளர் தான் நேரில் கண்டதைப் பெரிய கட்டுரையாக் எழுதி வெளியிட்டார். ஹெச்.டி. ஜென்கன் ‘ஹ்யூமன் நேச்சர்’ என்ற நூலில் ஹோம் பற்றிய அதிசய தகவல்களை எழுதினார்.

 

ஒரு முறை தன்னுடன் இருந்த மீடியம் பெண்மணியான மிஸ் பெர்டோலச்சி (Miss Bertolacci) என்பவரையும் சேர்த்து நீட்டித்துக் காண்பித்தார்.

 

இப்படி உடல் அளவை நீட்டித்தும் சுருக்கியும் காட்டிய ஹோமின் அடுத்த சாகஸ செயல் படிக்கக் கூட நம்ப முடியாத ஒன்றான லெவிடேஷன்!

 

லெவிடேஷன் என்று கூறப்படும் அந்தரத்தில் மிதக்கும் தன்மையை அவர் சுலபமாகச் செய்து காண்பித்தார். சாதாரணமாக தரையிலிருந்து மேலெழும்பி அறையில் உயரமான் இடத்தில் மிதப்பது அவர் வழக்கம். இதைப் பலரும் பார்த்ததுண்டு.

 

home

அவர் செய்த அதிசய செயல்களில் ஒன்று தனது அகார்டியனை அறையின் மேலே அந்தரத்தில் சுற்றிச் சுற்றி வருமாறு செய்வார். அது சுற்றி வரும் போது “ஹோம் ஸ்வீட் ஹோம்” (HOME SWEET HOME)  என்ற பாட்டை இசைத்தவாறே சுற்றிச் சுற்றி வரும்.

1869ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு அதீதச் செயல் மிக விரிவாக ஒரு கமிட்டி முன் விவரித்து பதிவு செய்யப்பட்டது.

ஹோம் இந்த நிகழ்வில் முதலில் தரையிலிருந்து ஆறு அங்குலம் உயர்ந்தார். சந்திர ஒளி அறையெங்கும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. திடீரென்று இன்னும் மேலே எழும்பிய ஹோம். அறையில் இருந்த ஒரு ஜன்னல் வழிய அந்தரத்தில் வெளியே போக ஆரம்பித்தார். பார்த்துக் கொண்டிருந்தோர் பிரமித்து அலற, அவர் சற்று தூரம் சென்று அறையின் இன்னொரு ஜன்னல் வழியே திரும்பி வந்து உள்ளே இறங்கினார்.

 

 

பிரபல மாஜிக் நிபுணரான ஹௌடினிக்கு இதெல்லாம் சாதாரணமான செயல் என்று சவால் விடுவதே வழக்கம். தனது 1920ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதியிட்ட டயரிக் குறிப்பில் இது பற்றி விரிவாக ஹௌடினி எழுதியுள்ளார்.

 

 

ஹோ செய்த அதே ‘ஸ்டண்டை’, அவர் செய்த அதே இடத்தில்  அவரும் செய்வதாக சவால் விட்டார். எப்போதுமே இது போன்ற மாஜிக் சாகஸ செயல்களில் ஈடுபடும் முன்னர் ஹௌடினி முதல் நாள் அந்த இடத்தை நன்கு ஆராய்வது வழக்கம். இந்த நிகழ்வுக்கு ‘ஜி’ என்பவரின் ஒத்துழைப்பை அவர் நாடினார். ஆனால் நிகழ்ச்சிக்கு சற்று முன்பு ‘ஜி’ பயந்து போய் பின் வாங்கி விட்டார். அதனால் ஹௌடினியால் இதை நடத்த முடியவில்லை.

 

 

தனது சுயசரிதையில் அனைத்தையும் விலாவாரியாக ஹோம் எழுதி வைத்துள்ளார். லெவிடேஷனைப் பற்றிக் குறிப்பிடுகையில் “மேல் கூரை வரை எழும்பி அதைத் தொடும்போது சாதாரணமாகத் தான் எனக்குத் தோன்றும். காலில்  மட்டும் ஒரு மின் சக்தி பாய்வது போன்ற உணர்வு ஏற்படும்” என்று அவர் எழுதியுள்ளார்.

 

 

ஹோம் வாழ்ந்து வந்த காலம் முழுவதும் அவர் செய்வதெல்லாம் மோசடி வேலை என்பதை நிரூபிக்க விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் முயன்றனர். ஆனால் ஒருவராலும் அப்படி நிரூபிக்க முடியவில்லை.

அவர் மறைந்த பிறகும் இன்றும் கூட அவர் செய்த அபூர்வ செயல்களைப் பற்றி அறிவியல் ரீதியாக விவாதித்த போதிலும் அந்த அதீத உள்வியல் ஆற்றல் செயல்களின் மர்மம் விடுபடவில்லை!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல நினைவாற்றல் நிபுணர் க்ரெகார் வான் ஃபைனேஜில் (Gregor Von Feinagile பிறப்பு 22-8-1760 மறைவு 27-12-1819)

நினைவாற்றலுக்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்தவர். தனது வழிகளை ஆங்காங்கு சொற்பொழிவுகள் மூலம் அனைவருக்கும் கற்பித்து வந்தார். 15 அல்லது 16 லெக்சர்களுக்கு வகுப்புக் கட்டணமாக அவர் மிக மிகக் குறைந்த தொகையையே வாங்கியதால் மாணவர்கள் கூட்டம் அலை மோதும். 1812இல் வெளியான தி நியூ ஆர்ட் ஆஃப் மெமரி (The new art of memory)  அவரது வழிகளை விளக்கும் நூலாகும்.

 

 

ஒரு முறை அவர் ஹோட்டல் ஒன்றில் தனது சொற்பொழிவை முடித்து விட்டு உணவருந்தினார். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே கிளம்பிய அவரை சர்வர் ஓடி வந்து தடுத்தார்.

“பிரபல நினைவாற்றல் நிபுணர் தனது குடையை மறந்து விட்டார்” என்று கூறியவாறே அவர் டேபிளில் மறந்து வைத்து விட்ட குடையைப் பணிவுடன் தந்தார்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர் – ஃபைனேஜில் உட்படத்தான்!

******

 

ஆவி உலகம்: உலகின் அபூர்வமான மீடியம் ஹோம்! (Post No. 2499)

Daniel_Dunglas_Home_by_Nadar

(விக்கிபீடியா படம்; நன்றி)

Written by S Nagarajan

 

Date: 2 February 2016

 

Post No. 2499

 

Time uploaded in London :–  8-2  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 home

பாக்யா வார இதழில் 16-1-16 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை.

பாக்யா இதழ் அனைத்து புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.

மன்னர்கள் சந்தித்த உலகின் அபூர்வமான மீடியம் ஹோம்!

.நாகராஜன்

“ஹோமுடன் நான் பழகிய பல வருடங்களில் அவரைப் பற்றி நான் அறிந்ததில் அவர்  சந்தேகத்துக்குரிய எந்த விதமான மோசடி வேலைகளையும் செய்து நான் பார்த்ததே இல்லை” – வில்லியம் க்ரூக்ஸ்.

 

உலகின் மிக அபூர்வமான மீடியம் என்ற பெயரைப் பெறுபவர் டேனியல் டங்ளஸ் ஹோம் (1833-1886).  இவர் செய்யாத ஆவி உலகம் சார்ந்த அபூர்வச் செயல்களே இல்லை எனலாம்.

 

அதனால் இவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மன்னர்கள் அனைவரும் இவரைப் பார்க்க ஆசைப்பட்டனர். இவர் நடத்தும் அதீத உளவியல் அமர்வை தங்கள் முன் நடத்துமாறு வேண்டிக் கொண்டனர்.

பிரான்ஸ் நாட்டின் மன்னனான மூன்றாம் நெப்பொளியன் ஹோமை ஆவித் தொடர்பு கொள்வதற்கான அமர்வு ஒன்றை நடத்துமாறு வேண்டினான். அதற்கிணங்க ஹோம் அவர் முன்னால் ஒன்றல்ல, பல அமர்வுகளை நடத்தினார். நெப்போலியன் அதீத ஆர்வத்துடன் ஹோமின் ஒவ்வொரு அசைவையும் கூட மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தார்.

 

மன்னரும் ராணியும் அருகருகில் அமர்ந்திருக்க அவர்கள் எண்ணுகின்ற ஒவ்வொரு எண்ணத்தையும் பிட்டுப் பிட்டு வைத்த ஹோம், அவர்கள் மனதில் எண்ணுகின்ற கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தந்தார். ஒரு சமயத்தில் அங்கு ஆவி ரூபத்தில் தானே உருவான ஒரு கை ராணியைத் தொடவே, அவர் அந்தக் கையில் இருந்த ஒரு சிறு குறையால் அது தன் தந்தையின் கை தான் என்பதைக் கண்டுபிடித்துப் பிரமித்துப் போனார். இன்னொரு அமர்வில் அறையே ஆடியது. அங்கிருந்த மேஜையும் ஆடியது. பின்னர் மேஜை உயரத் தூக்கப்பட்டது. பின்னர் அதிக எடையுள்ளதாக் ஆகி யாருமே நகர்த்தமுடியாதபடி அது தரையுடன் ஒட்டிக் கொண்டது. மூன்றாம் அமர்வில் மாயமான ஒரு ஆவித் தோற்றமுடைய கை தோன்றியது. அது மேஜை மேலிருந்த ஒரு பென்சிலை எடுத்து முதலாம் நெப்போலியனின் கையெழுத்தை அப்படியே போட்டது.

 

ட்யூக் டி மார்னி என்பவர் மன்னரிடம் வந்தார். இப்படி ஆவிகளை மன்னர் நம்புவது தப்பு என்று கூறி அதை அனைவருக்கும் அறிவிக்கப் போவதாகவும் சொன்னார்.

உடனே மன்னர், ‘ நீங்கள் சொல்ல விரும்புவதை எல்லாம் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால் அத்துடன் இதையும் இறுதியில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு விஷயத்தை நம்புவதிலும் அதை அப்படியே நேரடியாக நிரூபணமாகப் பார்ப்பதிலும் ஒரு பெரும் வித்தியாசம் இருக்கிறது. நான் நேரடியாகப் பார்த்தது எல்லாம் உண்மை. அதை நிச்சயமாக நான் உணர்கிறேன். ஆகவே இதையும் சேர்த்துச் சொல்லுங்கள்” என்றார்.

 

இந்த அதிசயமான சம்பவங்களால் ஹோமின் புகழ் அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பரவியது.

 

ஹோம் அமெரிக்கா சென்றவுடன் அவர் மன்னரால் பிரான்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்டார் என்று வதந்திகள் கிளம்பின. ஆனால் உண்மை என்னவெனில் ராணி ஹோமின் சகோதரியைத் தானே ஆதரிக்கப் போவதாக உறுதி அளித்ததன் பேரில் அவரை அமெரிக்காவிலிருந்து பிரான்ஸுக்குக் கூட்டி வரவே ஹோம் அமெரிக்கா பயணமானார்.

 

அமெரிக்காவிலிருந்து வந்த ஹோமை பவேரியா (BAVARIA) நாட்டு மன்னர் உடனே பார்க்க வேண்டுமென்றார். இதைத் தொடர்ந்து இத்தாலியில் நேப்பிள்ஸ் மன்னர் ஹோமைப் பார்க்கத் துடித்தார். இடைவிடாத அமர்வுகளால் இத்தாலியில் ஹோமின் உடல் நலம் சிறிது பாதிக்கப்பட்டது. உடனே ஹோம் மஸாஸ் சிறையில் மன்னரால் அடைக்கப்பட்டார் என்று வதந்தி பரவியது. இப்படி வதந்திகள் பரவுவது அவரைப் பொருத்த மட்டில் சாதாரணமாகிப் போனது!

 

அலெக்ஸாண்டர் டூமாஸ் பிரான்ஸின் மிகப் பிரபலமான எழுத்தாளர். இவரது நூல்கள் இன்றைய உலகில் நூறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலக மக்களால் படித்துப் போற்றப்படுகின்ற்ன. அவர் ஹோமைப் பார்க்கத் துடித்தார். ஆனால் பீட்டர்ஹாஃப் என்ற நகருக்கு வருமாறு மன்னர் இரண்டாம் அலெக்ஸாண்டர் ஹோமுக்கு அழைப்பு விடுத்தார். அதை ஹோமினால் தட்ட முடியவில்லை.

 

இதனால் சற்று மன வருத்தம் அடைந்த எழுத்தாள்ர் அலெக்ஸாண்டர் டூமாஸ், “ ஏராளமான அலெக்ஸாண்டர்கள் உலகில் இருக்கலாம். ஆனால் டூமாஸ் ஒருவன் தான் இருக்க முடியும்” என்றார்.

260px-Home_and_the_accordion_trick

டாக்டர் ஆஷ்பர்னர் என்பவர் ஹோமின் அமர்வுகளினால் ஈர்க்கப்பட்டார். இதைப் பார்த்த பகுத்தறிவுவாதியான அவரது நண்பர் டாக்டர் எல்லியொட்ஸனுக்குத் தாங்க முடியவில்லை. இதெல்லாம் ஃப்ராடு வேலை என்று அவர் மூலைக்கு மூலை முழங்கினார்.

 

ஆனால் சில வருடங்கள் கழித்து எல்லியொட்ஸனை ஹோம் நேருக்கு நேர் சந்தித்தார். தனது அமர்வுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். அங்கு சென்ற எல்லியொட்ஸன் மிகத் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டார்.

 

லண்டனுக்குத் திரும்பி வந்த அவரது பேச்சில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஹோம் எந்தவித மோசடி வேலையையும் செய்யவில்லை என்று பகிரங்கமாக அவர் சொல்ல ஆரம்பித்தார். இதை டாக்டர் ஆஷ்பர்னருடன் இணைந்து வேறு சொல்லவே ஹோமின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது.

ராபர்ட் சேம்பர்ஸ் என்ற இன்னொரு பகுத்தறிவுவாதி ஹோமைத் தீவிரமாகத் தாக்கி வந்தார். ஆனால் அவர் ஹோமின் அமர்வு ஒன்றில் இறந்து போன தனது தந்தையுடனும் மகளுடனும் தொடர்பு கொண்டார். யாருக்கும் தெரியாத அந்தரங்க விஷயங்களை அவர்கள் பேசியதால் சேம்பர்ஸும் ஆவி உலகை நம்ப ஆரம்பித்தார். இருந்தாலும் வெளிப்படையாகச் சொன்னால்  பகுத்தறிவுவாதி என்ற தனது பெயர் பாதிக்கப்படும் என்று அவர் அஞ்சினார். ஆகவே ஹோம் 1862ஆம் ஆண்டில் எழுதிய சுயசரிதைக்கு இன்னொரு புனைப் பெயரில் முன்னுரை எழுதினார்.

 

ஆனால் சில வருடங்கள் கழித்து அவரது போலி வேஷத்தை உதறினார். பகிரங்கமாக மக்களிடையே ஹோமை ஆதரித்துப் பேசலானார்.

வில்லியம் க்ரூக்ஸ் என்பவர் 1871ஆம் ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவில் ஹோம் மீது பல சோதனைகளை பத்திரிகையாளர்களை வைத்துக் கொண்டு நடத்தினார். தீவிரமான கண்காணிப்பில் நடந்த இந்த சோதனைகளின் முடிவில் க்ரூக்ஸ் ஹோம் செய்வது அனைத்தும் உண்மையில் நடப்பதே; எந்த மோசடியும் இல்லை என்று அறிவித்தார்.

 

இப்படி ‘பல விஞ்ஞான முறைப்படியான சோதனைகளில் வெற்றி பெற்றவர்; உலகின் பல நாட்டு மன்னர்களைக் கவர்ந்தவர்’ என்ற பெரும் புகழைப் பெற்றார் ஹோம்.

சுயசரிதையில் தனது அனுபவங்களை ஒளிவுமறைவின்றி அவர் எடுத்துரைத்திருக்கிறார். ஆகவே ஆவி உலக உண்மைகளை அறிய விரும்புவோர் நாடும் புத்தககமாக அது அமைந்துள்ளது!

neil_armstrong_1930-2012_stamp_hires

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி சந்திரனில் கால் பதித்து பெரும் புகழைப் பெற்றார் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.

ஆனால் தலைக்கனம் இல்லாத எளிமையானவர் அவர். ஒரு நாள் பிரபல புகைப்பட நிபுணரான யூசூப் கார்ஷ் (Yousuf Karsh)  தன் மனைவியுடன் அவரைப் புகைப்படம் எடுக்க வந்தார். மதிய உணவு கொடுத்து அவரை உபசரித்தார் ஆர்ம்ஸ்ட்ராங். அப்போது யூசூப்பிடம் அவர் சென்ற நாடுகளைப் பற்றி ஆர்வத்துடன் விலாவாரியாக விசாரித்துக் கொண்டிருந்தார். இடையே குறுக்கிட்ட யூசுப்பின் மனைவி, “ ஆனால் நீங்கள் சந்திரனுக்கே சென்றவர் ஆயிற்றே. உங்களது பயண அனுபவங்களை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்றார்.

 

புன்னகையுடன்,“அந்த ஒரே இடம் தான் நான் பயணித்த இடம்” என்று மெதுவாகச் சொன்னார் ஆர்ம்ஸ்ட்ராங்.

 

ஒருமுறை அவர் ஜெருசலத்திற்குச் சென்றார். அங்கு டெம்பிள் மவுண்டுக்குச் செல்லும் ஹுல்டா வாயிலில் (Temple Mount, Hulda Gate) நின்றார். இதே படிகளின் வழியாகத் தான் ஏசு கிறிஸ்து நடந்து சென்றாரா என்று ஆவலுடன் கேட்டார். ஆம் என்ற பதில் வந்தது. ஆஹா! இந்தப் படிகளின் மீது காலடிகளைப் பதிக்கும் போது சந்திரனில் காலடி பதித்த போது ஏற்பட்டதை விட அதிக பரவசத்தை நான் அடைகிறேன்” என்றார் அவர்!

**********

 

 

 

அறிவியல் சவால் – மில்லியன் டாலர் பரிசு! (Post No. 2491)

RANDI

Picture of James Randi

Written by S Nagarajan

 

Date: 30 January 2016

 

Post No. 2491

 

Time uploaded in London :–  11-04 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

8-1-2016 தேதியிட்ட பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

அறிவியல் சவால் –  மில்லியன் டாலர் பரிசு!

.நாகராஜன்

 

“பழைய கதை எல்லாம் இருக்கட்டும், இதோ விடுகிறேன் சவால், ஆவிகள் உலகத் தொடர்பு, பிறர் மனதை அறிவது போன்ற  அதீத உளவியல் ஆற்றல் போன்றவற்றை விஞ்ஞானத்திற்கு இணங்க சோதனைச் சாலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிரூபித்து விட்டால் மில்லியன் டாலர் பரிசு தருகிறோம்” என்று அறிவித்துள்ள ஒருவரின் ஆய்வு சுவாரசியமானது; அறிந்து கொள்ளப்பட வேண்டியது!

 

அவர் பெயர் ஜேம்ஸ் ரண்டி. கனடிய அமெரிக்கரான இவருக்கு இப்போது 87 வயதாகிறது. மரணத்திற்குப் பின் மனித வாழ்க்கை ஒன்று உண்டு என்று சோதனைச்சாலை நிபந்தனைகளுக்கு உட்பட்டு யாரேனும் நிரூபித்தால் அப்படி நிரூபித்தவருக்கு உடனடியாக பத்து லட்சம் டாலர் (சுமார் ஆறு கோடி ரூபாய்) தருகிறேன் என்று அறிவித்தார் இவர்.

 

 

இதை ஏற்றுப் பல பேர் முன் வந்தாலும் சோதனைச்சாலை நிபந்தனைகளுக்கு அவர்கள் உட்பட மறுத்து விட்டனர். மீறி சோதனைக்கு வந்தவர்களால் அவரது திருப்திக்கிணங்க ஆவி உலகம் இருப்பதை நிரூபிக்க முடியவில்லை.

பங்கேற்றவர்கள் ரண்டி ஒரு மோசடிப்பேர்வழி என்று கூற ரண்டி நியமித்த விஞ்ஞானிகளோ ஆவி உலகம் என்பதே ஒரு கேலிக் கூத்து என்று முழங்கினர்.

 

 

ரண்டி பிரபலமான ஒரு மாஜிக் நிபுணர். ஜேம்ஸ் ரண்டி எஜுகேஷனல் ட்ரஸ்ட் (James Randi Educational Trust) என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் மில்லியன் டாலர் பரிசுத் தொகைக்கான போட்டியை அறிவித்தார்.

 

சமீபத்தில் அவர் அறக்கட்டளைப் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்று விட்டதால் இந்த போட்டி இனி கிடையாது என அறக்கட்டளை அறிவித்து விட்டப்து. அதாவது 2015 செப்டம்பர் முதல் தேதி முதல் இந்தத் தொகையில் சிறு சிறு பகுதிகள் அறக்கட்டளையின் நோக்கத்தில் செயல் படும் பல்வேறு அறிவு சார்ந்த நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் அதீத உளவியல் ஆற்றல் நிபுணர்கள் அனைவருமே மோசடிப் பேர்வழிகளா, இல்லை! இதை சோதனை செய்த விஞ்ஞானிகளே வியந்து ஒப்புக் கொண்டுள்ளனர்.

 

மனதில் ஒருவர் நினைத்த ஒரு குறிப்பிட்ட அந்தரங்க எண்ணத்தை மீடியம் ஒருவர் கூறியதே இதற்குக் காரணம்!

குறிப்பாக விஞ்ஞானிகளைக் கவர்ந்த அதீத உளவியல் ஆற்றல் நிபுணர்கள் இருவர்.

ஒருவர் பாட்ரிசியா புட் (Mrs Patriciia Putt) என்ற பெண்மணி. டி.வி, ஷோக்கள், பத்திரிகை கட்டுரைகள் என பிரபலமான இவர் சோதனையை ஏற்று முன் வந்தார்.

 

 

2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது சோதனை. 10 தன்னார்வத் தொண்டர்கள் சோதனை நாளன்று பெரிய கண்ணாடிகள், முகமூடிகள், தொளதொள ஆடை, வெள்ளை சாக்ஸ் அணிந்து சோதனை அறைக்குள் நுழைந்து அறையின் பின்னால் இருந்த சுவரைப் பார்த்து அமர்ந்தனர். பாட்ரிசியா இருபது நிமிடங்களுக்குப் பிறகு  அறைக்குள் நுழைந்தார். அவர்களுக்கு 12 அடி தள்ளி அமர்ந்தார். ஒவ்வொருவரும் தன் கையில் கொடுக்கப்ப்ட்ட ஒரு சிறிய குறிப்புரையைப் படித்தனர். அது ஆவி உலகத்தினருக்கு அங்கு அமர்ந்திருப்பவர்களை அறிமுகம் செய்து கொள்ள உதவும் என்று பாட்ரிசியா கூறி இருந்ததால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் பாட்ரிசியா அவர்களைப் பற்றிய தனது கணிப்புகளைக் குறிப்பாக எழுதினார்.

 

 

அது முடிந்தவுடன் அந்தப் பத்து பேரும் அறையிலிருந்து வெளியேறினர். உடைகளை மாற்றிக் கொண்டு திரும்பி வந்தனர். அவர்களின் ஒவ்வொருவரைப் பற்றியுமான பிரத்யேக கணிப்புகள் பத்தும் ஒவ்வொருவரிடமும் வழங்கப்பட்டன. அந்த பத்து பேரும் அதில் தன்னைப் பற்றியதான சரியான கணிப்புத் தாளை எடுத்துத் தர வேண்டும்.

 

பத்து பேரில் ஐவர் சரியான கணிப்புகளைத் தந்து விட்டால் போதும்  மில்லியன் டாலர் பரிசு பாட்ரிசியாவுக்கு உண்டு. ஆனால் பத்து பேர்களும் தங்களுக்கு எழுதித் தரப்படாத ஒன்றையே எடுத்துத் தந்தனர். ஆகவே பாட்ரிசியா வெற்றி பெறவில்லை. ஆனால் இது பற்றி அவர் கவலைப்படவில்லை. மம்மி போல ஆடைகளை அணிந்து வந்தவர்களிடம் ஆவிகள் எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதே அவரது பதில்!

 

kim and patricia

Kim Whitton and Patricia Putt with science writer Simon Sing and others.

 

இதே போல இந்த சோதனைக்கு வந்த இன்னொரு  மீடியம் கிம் விட்டன் (Kim Whitton)  என்ற பிரபலமான பெண்மணி.

ஒரு தடுப்புத் திரைக்குப் பின்னால் ஒருவர் அமர கிம் அவரைப் பற்றிய தன் கணிப்பை எழுதினார். ஐந்து பேரைப் பற்றி அவர் சரியாக எழுதினாலே போதும், வெற்றி தான். இந்த சோதனையை வடிவமைத்தவர் புரபஸர் க்ரிஸ் ப்ரெஞ்ச் என்பவர். இவர் ஒரு அதீத உளவியல் பேராசிரியர். சோதனையில் கிம் வெற்றி பெறவில்லை. என்றாலும் அதிலிருந்த ஒருவர் தன் மனதில் இருந்ததை அப்படியே கிம் விளக்கி விட்டதாகவும் அந்த அந்தரங்கமான விஷயம் வேறு யாருக்கும் தெரியாது என்றும் கூறி பரவசப்பட்டார். பத்துக்கு எட்டு என்ற மதிப்பெண்களை அவர் பெற்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படவில்லை. ஏனெனில் தற்செயல் ஒற்றுமையாகக் கூட அப்படி கூற வாய்ப்பு உண்டு என்ற அறிவியல் கோட்பாட்டின் படி அவர் நிராகரிக்கப்பட்டார்.

 

ஆனால் மீடியம்கள் இருவரும் இது பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை. சோதனைமுறைகள் தவறானவை மற்றும் கடுமையானவை என்று அவர்கள் கூறினர். இந்தச் சோதனையில் தோல்வி அடைந்ததால் பெண்மணிகளின் இருவரது மதிப்புக் குறைந்ததா? தொழில்வாழ்க்கை பாதிக்கப்பட்டதா? இல்லவே இல்லை. அவரது வாடிக்கையாளர்கள் சோதனையை மதிக்கவே இல்லை. தங்களுக்கு அனுபவபூர்வமாகத் தெரியும் ஆவி உலக வழிகாட்டுதலை யார் பொய் என்று சொன்னாலும் அவர்கள் ஏற்கத் தயாரில்லை.

 

ஆவி உலகத் தொடர்பாளர்களிடம், “சோதனை செய்கிறோம் வாருங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். இவர்களில் சிலர் பிரக்ஞை பற்றிய உண்மைகளை மீடியம்களை வைத்துக் கண்டுபிடிப்பதும் இப்போது அதிகமாகி வருகிறது.

 

ஆகவே அதீத உளவியல் ஆற்றல் உள்ளவர்களுக்குச் சமுதாயத்தில் ஒரு தனி இடம் இன்றும் கூடக் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அபல்லோ-8 விண்வெளிக்கலத்தில் சந்திரனைச் சுற்றி வந்த விண்வெளி வீரர் வில்லியம் அலிஸன் ஆண்டர்ஸ் (William Alision Anders) விண்வெளிப் பயணத்தால் பெரும் புகழ் பெற்றார். அவரைச் சுற்றி எப்போதும் கூட்டம். பத்திரிகையாளர்களும் புகைப்பட நிபுணர்களும் அவர் எங்கு போனாலும் பின் தொடர்ந்து சென்று கொண்டே  இருந்தனர். மனிதர் தளர்ந்து போனார். எப்படியாவது யார் கண்ணிலும் படாமல் தன் மனைவியுடன் ஓய்வு எடுக்க வேண்டும் என்று எண்ணிய அவர் அகாபல்கோ என்ற கடற்கரை ஸ்தலத்திற்குச் சென்றார். சில நாட்கள் கழிந்தன. தனது வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த அவரை நோக்கி ஒரு நபர் வந்தார்.

தயங்கியவாறே, “உள்ளே வரலாமா? போட்டோ எடுக்கலாமா?” என்று கேட்டார். “ஹூம்” என்ற ஆண்டர்ஸ்,” வரலாம், போட்டோ எடுக்கலாம்” என்றார்.

 

சந்தோஷத்துடன் உள்ளே வந்த போட்டோகிராபரிடம் முன்னால் இருந்த பெரும் கடலைக் காட்டி, “அழகிய காட்சி. எத்தனை போட்டோ வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

போட்டோகிராபருக்கு முகம் போன போக்கு!

 

–subham-

யாழ்ப்பாணத் தமிழறிஞர் செய்த “100 செயல்” அற்புதம்! (Post No. 2461)

IMG_0281

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

Date: 5 January 2016

 

Post No. 2461

 

Time uploaded in London :–  7-53 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தமிழறிஞர்கள் பலர் செயற்கரிய செயல்களைச் செய்துள்ளனர்.இவர்களில் குறிப்பிடத் தக்கவர் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி நா.கதிரைவேற்பிள்ளை (1871-1907) ஆவார். பல சீட்டுக் கவிகள், சிலேடைக் கவிதைகள், சித்திரக் கவிதைகள், எல்லாவற்றிற்கும் மேலாக முறையான தமிழ் அகராதி முதலியன இவர்தம் படைப்புகளாகும். இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி என்ற சிறப்புப் பட்டத்துடனேயே குறிப்பிடுவர்.

 

ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்தால் அவரை அஷ்டாவதானி (அஷ்ட=எட்டு) என்பர். பத்து செயல்களை ஒரே நேரத்தில் செய்தால் தசாவதானி (தச=பத்து) என்பர். நூறு செயல்களைச் செய்தால் சதாவதானி (சத = நூறு) எனபர். அஷ்ட, தச, சத என்பனவெல்லாம் வடமொழி எண்கள்.

 

தமிழ்கூறு நல்லுலகில் செய்குத் தம்பி பாவலர் என்பவற்கும் சதாவதானி என்ற அடைமொழி உண்டு. நா.கதிரைவேற்பிள்ளை செய்த அதிசயம் பலர் முன்னிலையில் நடந்து வெள்ளைக்கார துரைகளால் பாராட்டப்பட்டது. அவர் என்ன செய்தார், எங்கே செய்தார்?

 

கதிரைவேற்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்தாலும் வசித்தது முழுதும் தமிழ்நாட்டில்தான். ஆறுமுக நாவலருக்குப் பின்னர் சைவத் திருமுறைகளின் பாதுகாவலனாக நின்றார்.

1908ஆம் ஆண்டில் பாலசுந்தர நாயகர் எழுதி வெளியிட்ட வாழ்க்கைச் சரித நூலில் பல சுவையான விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று:–

 

பிள்ளை அவர்கள், முதலில் மேலைப்புலோலி கந்தசாமி கோவிலில் நன்னூல் காண்டிகையுரை ஆசிரியர் வித்வான் அ.குமாரசாமிப் புலவர் தலைமையில் 18 அவதானங்களை செய்து முடித்தார்.

 

பின்னர் சென்னையில் லெட்சுமிவிலாச நாடகசாலையில் பால சரஸ்வதி ஞானானந்த சுவாமிகள் தலைமையில்,

 

வேலும் மயிலும் துணையென நவிலல்

இலாட சங்கிலி கழற்றல்

சிலேடைக் கட்டளைக் கலித்துறை, சிலேடை வெண்பா, நீரோட்டகம் முதலியன

6 இலக்கண விடை உபந்யாசம்

இரண்டறக் கலத்தல் உபந்யாசம்

பாரதச் செய்யுளுரை

இங்கிலீஷ் கண்டப் பத்திரிக்கை வருடந்தேதி, பிறந்த நாள், இலக்கினம், பிறந்த நட்சத்திரம் முதலியவை

எண் கணக்கில் கூட்டல் 1, கழித்தல் 1, பெருக்கல் முதலியவை

 

இவை எல்லாவற்றையும் அன்பர்களது மனம் குதூகலமுறுமாறு காட்டி முடித்து சதாவதானியென்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

 

இதற்குப் பின் ரெவரெண்ட் கிளேட்டன் துரையவர்கள் நீலகிரி குண்ணூரில் உத்தியோகம் கொடுத்தார்.

 

IMG_0280

 

 

 

ரெவெரெண்ட் கிளேட்டன் துரையவர்களால் மெயில் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட செய்தி:-

“தமிழ்ப் பாண்டித்யத்தின் அபிவிருத்தியி லூக்கமுடைய சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளைக்கு இம்மாதம் 25ஆம் தேதி குண்ணூரில் திடீரென்று நேர்ந்த மரணம் துக்கத்தையுண்டாக்கக்கூடியதே. அவரது வயது 36 ஆயினும் இச்சென்னையிலும், மதுரையிலும், தன் சுய நாடாகிய இலங்கையின் வடக்கிலும் தமிழ்க் கல்வியில் சிறந்தவர் என்ற கீர்த்தியைப் பெற்றிருக்கிறார். பூர்வீக பாஷையின் தத்துவ சாத்திரங்களில் பாண்டித்தியமும் மிக்க வைராக்கியமுடையவ ரென்றும் பிரசித்தியடைந்தவர். சின்னாளைக்கு முன் இச்சென்னையில், சதாவதானம் , (அதாவது நூறு விஷயங்களை ஏக காலத்தில் கவனமாய்ச் செய்தல்) ஆச்சரியமான பெரு ஞாபகத்தைக் காட்டினார். அக்காலத்திலங்கு வந்திருந்த வித்துவான்கள் முன்னிலையில் அபரிமிதமான வரிசைகளுடைய எண்களின் தொகைகளையும், மிகக் கஷ்டமான தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லியும், அநேகர் பிரமிக்கும்படியான கேள்விகட்குச் சிறிதும் தாமதமும், சந்தேகமில்லாதும், கலவரப்படாமலும் விடையிறுத்திய பின்னர்தான் சதாவதானியென்ற பெயரால் வித்வத்சிரோமணிகளால் அழைக்கப்பட்டார். அவர் அநேக நூல்களைச் செய்திருப்பவராயிருந்தாலும் அவற்றுள் மிக்க அருமையும் எவரும் தெரிந்துகொள்ளும்படியாய் வெளியாகியது தமிழ்ப் பேரகராதியே. தம்வேலைகளில் மிக்க ஊக்கமும் ஜாக்கிரதையுமுடையவர். அவர் வைதீக சைவராயிருந்தும் அந்நாட்க்குரிய வேலைகளின் பேரில் மிக்க கவனமுடையவர். அவர் பிறப்பு மிகச் சிறந்ததே.”

 

கதிரைவேற்பிள்ளை 1907 ஆம் ஆண்டில் நீலகிரியில் இறந்ததால் இந்தச் செய்தி 1907 ஆம் ஆண்டு மெயில் பத்திரிக்கையில் வந்திருக்க வேண்டும்.

 

கதிரைவேற் பிள்ளை இயற்றிய நூல்கள்:-

தமிழ்ப் பேரகராதி

அதிவீரராம பாண்டியனாரின் கூர்ம புராணத்துக்கு விளக்க உரை

பழநித் தல புராண விருத்தியுரை

சித்திரக் கவிகள்: கமலபந்தனம், கோபுர பந்தனம், ரத பந்தனம், இரட்டை நாக பந்தனம்

சிலேடை வெண்பா

யமகம் நிறைந்த கட்டளைக் கலித்துறை வெண்பா

கருவூர் மான்மியம் (மஹாத்மியம்)

சீட்டுக் கவிகள்:- ஏகாம்பரேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா கா. மு.சுப்பராயமுதலியருக்கு,

பாலவனம் ஜமீந்தாரும் மதிரைத் தமிழ் சங்க அக்கிராசனருமான ஸ்ரீமாந் பாண்டித்துரைத்தேவர் பெயரில் வாகைப்பாட்டு

தருமை ஆதீன திருக்கயிலாய பரம்பரை அம்பலவாண தேசிகருக்கு

சாமிநாத பண்டிதருக்கு

தெல்லியபதி கதிரேசன் பிள்ளைக்கு,

இராஜரெத்தினம் பிள்ளைக்கு எழுதிய சீட்டுக் கவிகள்

காஞ்சி கோவிதராஜ முதலியார்க்கு எழுதிய சீட்டுக் கவி இதோ :–

 

 

வாழ்க்கைக் குறிப்பு:-

தந்தை பெயர்: நாகப்ப பிள்ளை

 

மனைவியின் பெயர் – வடிவாம்பிகை (கோவிந்த பிள்ளையின் குமாரத்தி)

புதல்வி பெயர்- சிவஞானாம்பிகை

 

 

வள்ளலார் அன்பர்களுடன் மோதல்

பிள்ளைவாழ் காலத்தில் சைவத் திருமுறைகள் மட்டுமே அருட்பா, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பாடியதை திரு அருட்பா என்று சொல்லலாகாது, அது மருட்பா என்று ஒரு வேண்டாத சர்ச்சை நிலவியது. நா. கதிரவேற்பிள்ளை ஆறுமுக நாவலர் கட்சியிலிருந்ததால், வள்ளலார் கோஷ்டி அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டது. ஆனால் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.

அஷ்டாவதானம்:

ஒரே சமயத்தில் எட்டு காரியங்களில் கவனம் செலுத்துகை. இலாடச் சங்கிலி சேர்ப்பு,  ஒருவிருவர் வினாவிற்குத்திரம்  (உத்திரம்=பதில், விடை), சொக்கட்டான், முதுகிலிட்ட பரல் எண்ணல், சதுரங்கம், புதுக்கவிதை கூறல்,  கண்ட பத்திரிகை, கணிதம் கூறல், குதிரையடி கூறல் முதலியன ( பக்கம் 115, அபிதான சிந்தாமணி)

 

கண்ணை மூடிக்கொண்டு செஸ் விளையாடி சாதனை செய்வோரும் அபார நினைவாற்றல் உடையவரே..

blindfold chess

மார்க் லாங் சாதனை!

வெளிநாடுகளில் பார்க்காமலேயே (ப்ளைண்ட் Fபோல்ட்) செஸ் விளையாடுவார்கள். செஸ்/சதுரங்கப் பலகையைப் பார்க்காமலேயே, திரும்பி உட்கார்ந்துகொண்டு காயை நகர்த்தச் சொல்லி வெற்றி பெறுவார்கள். பலர் ஒரே நேரத்தில் பல சதுரங்கவீரர்களுடன் விளையாடுவதும் உண்டு. மார்க் லாங் என்ற ஜெர்மானியர் கண்ணை மூடிக்கொண்டு 46 பேருடன் செஸ் விளையாடி சாதனை படைத்தார். ஆனால் ஆட்டங்கள் முடிய சில நாட்கள் பிடிக்கும்.

 

–சுபம்–

 

அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!(Post No. 2447)

singapore thimithi with amman face

Picture:–Singapore Mariamman Festival Fire walking

 

Written by S NAGARAJAN

 

Date: 1 January 2016

 

Post No. 2447

 

Time uploaded in London :–  7-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாக்யா ஜனவரி 2016 முதல் தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!

.நாகராஜன்

 

 Agni-pariksha-of-sita

Sita Devi’s Fire Walking

“1871ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று அமெரிக்க நகரான சிகாகோவில் ஏற்பட்ட தீ, 24 மணி நேரம் தொடர்ந்து எரிய, நகரில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இல்லங்களை இழந்தனர். 300 பேர்கள் இந்த மாபெரும் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்” – பஞ்ச பூதங்களில் ஒன்றான தீயின் கோர தாண்டவம் பற்றி அமெரிக்க வரலாறு

 

 

சீதா பிராட்டியை ராமன் அக்னியில் பிரவேசிக்கச் செய்ததையும் அக்னி ப்ரவேசம் செய்த சீதை கற்புக்கரசி என அக்னியால் புகழப்பட்டதையும் ராமாயணம் விளக்குகிறது.

 

தமிழகத்தில் ஆங்காங்கு மாரியம்மன் கோவில் திருவிழாக்களில்  பல நூறு ஆண்டுகளாக தீ மிதி வைபவம் நடைபெறுவதை நமது சரித்திரம் கூறுகிறது. இதில் கலந்து கொள்வோர் நெருப்புத் துண்டுகள் உள்ள பாதை வழியே பக்தியுடன் செல்வதையும் அவர்கள் கால் உள்ளிட்ட அங்கங்கள் எந்த வித பாதிப்புமின்றி இருப்பதையும் பார்த்து வியக்க முடிகிறது. இதை பூ மிதி திருவிழா என்றும் கூறுவது வழக்கம். அம்மன் தீயைப் பக்தர்களுக்குப் பூவாக மாற்றுவதாக ஐதீகம்.

 

இப்படி “ஃபயர் ஃப்ரூப்” ஆக இருப்பது சாத்தியம் தானா? பல காலமாக அறிவியல் உலகம் இதை ஆராய்ச்சி செய்து வருகிறது.

ஹிந்து இதிஹாஸங்கள் மட்டுமல்ல, உலகின் இதர மதங்களும் பல மகான்கள் தீ மீது நடந்ததைக் குறிப்பிடுகின்றன.

 

செயிண்ட் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் பாலா (1508ஆம் ஆண்டு) பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைத் தன் கைகளில் ஏந்தியவாறே தன்னை வியந்து பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம்,” தூய மனமுடன் இறைவனை வழிபடுவோரின் கட்டளைக்கு அனைத்து உயிரினமும் கீழ்ப்படியும்” என்றார்.

 

சியனா நகரைச் சேர்ந்த செயிண்ட் காதரீன் கொழுந்து விட்டெரியும் இரும்பு உலையில் கரித் துண்டுகளின் மீது முகம் படிந்திருக்க நெடு நேரம் இருந்தார். அந்தப் புனிதப் பெண்மணி நெருப்பில் இருப்பதைப் பார்த்து திகைத்தவர்கள் அவரை அப்புறப்படுத்திய போது அவருக்கு ஒரு தீக்காயமும் ஏற்பட்டிருக்கவில்லை!

 

இந்தியாவில் குற்றமிழைக்காதவன் என்று தன்னை நிரூபிக்க விரும்புவோர் கொதிக்கும் எண்ணெயில் கையை விடுவது, தீ மீது நடப்பது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை கைகளில் ஏந்துவது என இப்படிப் பலவற்றில் ஒன்றைச் செய்து தீயின் பாதிப்பு இன்றி மீண்டு தம்மை நிரபராதி என்று நிரூபிப்பது வழக்கம். இதே போல இடைக்காலத்தில் மேலை நாடுகளிலும் இந்தப் பழக்கங்கள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன.

charity-fire.jpgeast cheshire

Charity Fire Walking in East Cheshire Hospice (UK)

 

1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் மரிஸ்பர்க் என்ற இடத்தில் தீ மிதி விழா ஒன்று நடைபெற்றது. 15 மீட்டர் (அதாவது சுமார் 49 அடி) நீளமுள்ள குழியில் 12 டன் விறகு போடப்பட்டு அக்னி ஜொலிக்க 8 ஹிந்துக்களும் 4 ஆங்கிலேயரும் அந்த தீக்குழியில் வெற்றிகரமாக நடந்தனர். ஒரே ஒரு ஆங்கிலேயர் மட்டும் இரண்டு அடி மட்டுமே குழியைத் தாண்டுவதற்கு இருக்கும் நிலையில் அப்படியே கீழே விழுந்தார். உடனடியாக சமாளித்து எழுந்து நடந்தவரின் கால்களில் தீப் புண்கள் ஏற்படவே அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு குழுமிய பத்திரிகையாளர்களிடம் அவர், “கூட்டத்தின் ஆரவாரம் மிகவும் அதிகமாகவே என்னால் உயர் சக்தியின் மீது மனதை ஒருமுனைப்படுத்த முடியவில்லை. அது தான் நான் விழுந்ததற்குக் காரணம்”, என்று கூறினார்.

 

 

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற மீடியமான டி.டி, ஹோம் -டேனியல் டங்ளஸ் ஹோம் – (Daniel Dunglas Home) செய்து காட்டாத அபூர்வமான அதீத உளவியல் ஆற்றல் நிகழ்வுகளே இல்லை எனலாம். அவரது பல நிகழ்ச்சிகளில் அவர், தான் “ஃபயர் ஃப்ரூபாக” இருப்பதை மட்டும் நிரூபிக்கவில்லை,  அடுத்தவரையும் அப்படி தீ பாதிக்காத தன்மையைக் கொண்டவராக அவர் ஆக்கினார், அது தான் ஆச்சரியம்!

“டையாலக்ட்ரிகல் சொஸைடி” (Diaelectrical Society) என்ற அமைப்பின் சார்பில் ஐவர் குழு ஒன்று அவரை நேரடியாக சோதனை செய்தது. ஹோம் பலரது கைகளிலும் தலைகளிலும் எரியும் கரித்துண்டுகளை வைத்தார். ஆனால் அவர்களோ தீயின் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்!

 

Daniel-Dunglas-Home-levitation

Daniel Dunglas

1869ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 17ஆம் தேதி நடந்த ஒரு அதீத உளவியல் அமர்வு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஒரு பெண்மணியின் வெண்மையான மஸ்லின் ஆடையில் ஹோம் பழுத்து எரியும் ஒரு கரித் துண்டத்தை வைத்தார். ஆடை எரியவே இல்லை. பின்னர் அங்கிருந்த மலர்களின் மீது எரியும் கரித்துண்டை வைக்க அங்கு பொசுங்கிய நாற்றம் வந்ததே தவிர மலர்களுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை. அதே அமர்வில் அங்கிருந்த ஹனிவுட் என்ற பெண்மணி மற்றும் லார்ட் லிண்ட்ஸே ஆகியோரது கையில் நன்கு சூடேறிய கண்ணாடி விளக்கைக் கையில் தர அதை அவர்கள் எந்த வித பாதிப்புமின்றி ஏந்தி நின்றனர். அப்போது தன் வாயில் ஒரு தீக்குச்சியை வைத்துக் கொண்டு அதை கண்ணாடியின் மீது ஹோம் உரச அந்தச் சூட்டினால் உடனே தீக்குச்சி பற்றி எரிய ஆரம்பித்தது.

இதே போல அருகில் யார் இருந்தாலும் அவர்கள் கையில் பழுக்கக் காய்ச்சிய நெருப்புத் துண்டுகளை கொடுப்பது அவரது வழக்கமானது.

 

 

இதனால் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் திகைத்து நின்றனர்.

உலகின் அபூர்வ மனிதரான டேனியல் டங்ளஸ் ஹோம் (பிறப்பு 20-3-1833 இறப்பு 21-6-1886) பற்றிப் பல புத்தகங்கள் எழுதுமளவு சுவையான நிகழ்வுகளை அவர் வாழ்வு கொண்டிருந்தது.

 

SirChristopher

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சர் கிறிஸ்டோபர் ரென் என்பவர் (1632-1723) பிரிட்டனின் பிரசித்தி பெற்ற கணிதமேதை, வானவியல் நிபுணர் மற்றும் சிறந்த கட்டிடக் கலை நிபுணர். விண்ட்சார் டவுன் ஹால் கட்டிட்டத்தின் உட்புறத்தை மிகவும் ஆர்வமுடன் அவர் வடிவமைத்துக் கொண்டிருந்தார். அதன் மேற்கூரையை அழகிய தூண்கள் வலுவாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்வையிட வந்த கட்டிட ஆய்வாளர்கள் போதுமான தூண்கள் இல்லை என்றும் ஆகவே கட்டிடத்தில் வலு போதுமானதாக இல்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் ரென்னுக்கோ தன் திறமையின் மீது அபார நம்பிக்கை. என்றாலும் கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவிக்கவில்லையே! அவர் உடனே நான்கு தூண்களை அழகுற அமைத்தார். கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவித்தனர். ஆனால் உண்மையில் அந்தத் தூண்கள் மேற்கூரையைத் தொடவே இல்லை. அழகுக்காக தொடாமல் அமைக்கப்பட்டிருந்தன. ரென் சிரித்தார். இன்றும் அந்தத் தூண்கள் அந்தக் கட்டிடத்தில் உள்ளன!

 

England, P-381a 50 Pounds, Inv1766(b)(1000)

இதே போல அமெரிக்காவின் கட்டிடக் கலை நிபுணர் ஃப்ராங்க் லாயிட் ரைட் என்பவர் (1869-1956) விஞ்ஞான முறையில் கட்டிடங்களைக் கட்டி வந்தார். அவரை பிரபல தொழிலதிபரான ஹிப்பர்ட் ஜான்ஸன் தனக்கு ஒரு வீட்டைக் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார். ஒரு நாள் அந்த வீட்டில் ஜான்ஸன் தனக்கு மிகவும் வேண்டியவர்களைக் கூப்பிட்டு ஒரு விருந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. மேற்கூரை வழியாகத் தண்ணீர் ஒழுக ஆரம்பித்தது. சரியாக ஜான்ஸன் அமரிந்திருந்த இடத்தின் மேலிருந்து சொட்டு சொட்டாகத் தண்ணீர் விழ, அவரது வழுக்கைத் தலை மீது நீர் சொட்ட ஆரம்பித்தது. விருந்தினர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்க கோபமடைந்த ஜான்ஸன் அரிஜோனாவில் இருந்த கட்டிட  ரைட்டைப் போனில் அழைத்தார். “என்ன கட்டிடம் கட்டினீர்கள். மழையில் மேற்புறம் ஒழுக, என் தலை மீதே நீர் ஒழுகுகிறது” என்று அவர் கோபமாகக் கத்தினார்.

 

 

மறுமுனையிலிருந்து அமைதியான குரலில் வந்த பதிலை விருந்தினர்கள் அனைவரும் கேட்டனர்:” அது சரி, உங்கள் நாற்காலியை நீங்கள் ஏன் சற்று நகர்த்திப் போட்டுக் கொள்ளக் கூடாது!”

*******