அரவிந்த ரகசியம் (Post No.3001)

 

aravindarArticle Written by S NAGARAJAN
Date: 23 July 2016
Post No. 2996
Time uploaded in London :– 6-32 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அரவிந்த இரகசியம் – கடவுளரின் அர்த்தங்கள்!
ச.நாகராஜன்

நம் கண் முன்னாலேயே வாழ்ந்து உலகை உயர்த்திய மகான்கள் ஏராளம்.
மஹாத்மா காந்தி
ஸ்ரீ சத்ய சாயிபாபா
அரவிந்தர்
அன்னை
இப்படி பட்டியலைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவர்களில் அரவிந்தர் புதிய ஒரு பொன்னான உலகத்தை சிருஷ்டிக்கத் தன்னை அர்ப்பணித்தார்.
இவரது அனுபவங்களும் அறிவுரைகளும் பொக்கிஷம் போல அப்படியே நமக்குக் கிடைத்துள்ளன.
ஆனால் அவை ஒரு பிருஹத் ஆரண்யத்தில் புகுவது போல.
பெரிய காட்டில் எது எங்கே இருக்கிறது என்பதை அறிய முடியாது அல்லவா.
நல்ல வேளையாக அறிஞர்கள் பலர் அதில் சில முத்துக்களை இனம் கண்டு நமக்குச் சிறு சிறு கட்டுரைகளாகத் தந்துள்ள்னர். இன்னும் சிலரோ அவரது உரைகளில் முக்கியமானவற்றைத் தனியே பிரித்துத் தொகுத்துத் தந்துள்ளனர்.
இவற்றில் ‘A Practical Gudie to Integral Yoga’ என்ற நூல் அருமையான தொகுப்பு நூல். அதில் பல இரகசியங்கள் விளக்கப்பட்டுள்ளன.
கடவுளரின் அர்த்தங்களை அவரும் அன்னையும் (அரவிந்த ஆசிரம அன்னை) தெளிவாகக் கூறுகின்றனர்.

 

ஒரு பிரம்மாண்டமான மஹா சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்குகிறது. அதுவே ஆத்ய சக்தி.
பிரபஞ்ச இறைத்தன்மையின் மூன்று பெரும் சக்திகள் மற்றும் ஆளுமை கொண்டவர்களே பிரம்மா,விஷ்ணு, சிவன்.
உருவாக்கம், படைப்புக்குப் பின்னால் இருப்பவர் பிரம்மா.
படைப்பவர் விஷ்ணு
தவத்திற்கு சிவன்
தெய்வீக சக்தியே தேவி
சிங்கத்துடன் கூடிய துர்க்கையே தெய்வீக பிரக்ஞை
மஹாகாளி உயரிய மட்டத்தில் உள்ளவள். தங்க மயமாக ஜொலிப்பவள்.
கடவுளர் தெய்வீகப் பணிகளை ஆற்றுபவர்கள்.
விக்கினங்களை நீக்க கணேசர்.
வெற்றியைத் தர முருகன்.
பக்திக்கு ஹனுமான்.
தெய்வீக அன்புக்கு ஸ்ரீ கிருஷ்ணர்
முழு அன்புமயத்திற்கு ராதை.
இதை உணர்ந்து வழிபட்டால் வாழ்க்கையில் உயர்வு நிச்சயம். அரவிந்தரும் அன்னையும் கூறும் இரகசியத்தை ஆங்கிலத்தில் பார்ப்போம்:

 

IMG_3089
SYMBOLIC MEANING OF GODS
ADYA SHAKTI – Is the original Shakti, therefore, the highest form of the Mother
Brahma, Vishnu, Shiva – Are only three powers and personalities of the one Cosmic Godhead.
Brahma – Is the power of the Divine that stands behind formation and creation
Vishnu – Being the creator, all the three gods are often spoken of as creating the universe – even Shiva who is by tradition the Destroyer.
Shiva – is theLord of Tapas. The Power is the power of Tapas.
Devi – Is the Divine Shakti – the Consciousness and Power of the Divine, the Mother and Energy of the worlds.
Durga – The lion with Durga on it is the symbol of the Divine Consciousness acting through a divinized physical-vital and Vital-emotional force.
Kali and Mahakali – Are not the same. Kali is a lesser form. Mahakali in the higher planes appears usually with golden colour.
Gods – Are the powers that stand above the world and transmit the divine workings.
Ganesh – Is the power that removes obstacles by the force of Knowledge. He is a god of spiritual Knowledge.
Hanuman – Perfect Bhakti
Kartikeya – Represents victory over the hostile powers. He is also the leader of the divine forces.
Sri Krishna – Is the Lord of divine love and ananda – and his flute calls the physical being to awake out of the attachments of the physical world and turn to that love and ananda.
Radha – Is the personification of the absolute love for the Divine, total and integral in all parts of the being from the highest spiritual to the physical, bringing the absolute self-giving and total consecration of all the being and calling down into the body and the most material nature the supreme Ananda.

அரவிந்தர் நூல்களில் பொதிந்து கிடக்கும் ஏராளமான இரகசியங்களை அறிந்தால் ஆன்மீகத்தில் உயரிய நிலையை அடைய முடியும்!
******

 

ஏரிக்கடியில் அரண்மனை: காளிதாசன், வால்மீகி தரும் அதிசய தகவல் (Post No. 3000)

megalaya forest,jungle

Written by London swaminathan

Date:24 July 2016

Post No. 3000

Time uploaded in London :– 5-22 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இப்பொழுது பல மாயாஜாலக் கதைகளைப் படிக்கிறோம். ஏராளமான சித்திரத் தொடர்கதைகளைப் படிக்கிறோம். ஹாரி பாட்டர் போன்ற புதிய கதைகளும், திரைப்படங்களும் கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கின்றன. ஆனால் எல்லா கதைகளிம் கருக்களும், விதைகளும் இந்திய இலக்கியங்களில் உள்ளன. சம்ஸ்கிருத இலக்கியத்திலும், நாட்டுப்புற கதைகளிலும் இதை அதிகம் காணலாம். ஈசாப் கதைகளானாலும் சரி, ஜோனதன் ஸ்விப்டின் கலிவரின் யாத்திரை ஆனாலும் சரி, பொக்காஸியோவின் டெக்காமொரோன் ஆனாலும் சரி — எல்லாக் கதைகளின் கருத்துகளும் வடமொழியில் இருப்பதைக் காணலாம்.

chilka 10, fb

வால்மீகி ராமாய ண த்தில் அலிபாபா-அலாவுதீன் விளக்கு ,  கதைகளை விட அதிசயமான கதைகள் இருக்கின்றன. பரத்வாஜர் கதை. மாண்டகர்ணி என்ற ரிஷியின் கதை ஆகியன குறிப்பிடத்தக்கன.

 

காளிதாசன் சொல்கிறான்:-

“இதோ தெரியும் இந்த பஞ்சாப் சரஸ் ஏரியானது சாதகர்ணி என்னும் முனிவரின் ஏரி ஆகும் இது அவர் நீர்விளையாட்டுக்காக அமைத்தது. நான்கு புற ங்களும் அடர்ந்த, இருண்ட காடுகள் இடையே இது பள, பள என்று பிரகாசிப்பதால் இதை இருண்ட வானத்தில் செல்லும் சந்திரனுக்கு ஒப்பிடலாம்”.

 

ஏதத்முனே: மானினிசாதகர்ணே: பஞ்சாப்சர: நாம  விஹாரவாரி

ஆபாதி பர்யந்தவனம் விதூராத் மேகாந்தர் ஆலக்ஷ்யம்இவ இந்து பிம்பம்

–ரகுவம்சம், 13-38

 

காளிதாசன் சாதகர்ணி என்று சொல்லும் முனிவரின் பெயர் ராமாயணத்தில் மாண்டகர்ணி என்று வருகிறது. அவர் 16,000 ஆண்டு தவம் செய்துகொண்டிருந்தார் (16000 ஆண்டு = நீண்ட காலம்). தேவர்களுக்கு அச்சம் நிலவியது. உடனே ஐந்து அப்சரஸ் அழகிகளை அனுப்பிவைத்தனர். அவரும் சொக்கிப்போனார்.

 

அவர் அந்த ஐந்து பேரையும் மண ந்து கொண்டார். தன்னுடைய தவ வலிமையால் அந்த ஏரியின் அடிப்பகுதியில் ஒரு அரண்மனையைக் கட்டினார். அதில் அவர்களுடன் வசித்தார். ஐந்து அப்சரஸ் பெண்களின் நினைவாக அந்த ஏரி பஞ்சாப் சரஸ் என்று அழைக்கப்படும்.

 

முன்பு தர்ப்பைப் புல்லின் குருத்துக்களை மட்டும் உண்டு, மான்களோடு விளையாடி வந்த முனிவர்,  இந்திரனின் கபடத்தால்,  “ஐந்து அழகிகளின் இளமை என்ற கூட்டு”க்குள் அடைக்கப்பட்டார் என்று காளிதாசன் மேலும் வருணிக்கிறான்.

 

நீருக்கடியில் மறைந்திருந்த அந்த மாளிகையிலிருந்து எழுந்த இன்னிசை ஒலி (சங்கீத – மிரிருதங்க – கோஷம்) ஆகாயத்தை அடைந்து அங்கே சென்ற விமானங்களில் மீது மோதி எதிரொலித்தன.

 

வால்மீகி ராமாயணந்த்தில் ஆரண்ய காண்டத்தில் 11ஆவது சர்கத்தில் 15 ஸ்லோகங்களில் வரும் வருணனைகள், காளிதாசனின் மனதை மிகவும் கவர்ந்ததால், இந்த சர்கத்தில் இப்படி வருணித்தான்.

 

இதிலிருந்து நாம் அறியும் விஷயங்கள்:–

 

1.அந்தக் காலத்தில் நீருக்கு அடியில் கட்டிடம் அமைக்கும் பொறியியல் வல்லுநர்கள் இருந்தனர்.

2.காட்டுக்கு அடியில் தவ வலிமை மூலம் அமைத்தாலும், ஒரு கட்டிட வரைபடம், அமைப்பு இல்லாமல் இது நடந்திராது.

  1. வானில் விமானங்கள் சென்று கொண்டிருந்ததையும் அறிகிறோம்.
  2. இன்று சாமியார்கள், பெண்களிடம் சரணடைவது போல அன்றும் பல முனிவர்கள் அடிமையானதையும் அறிகிறோம்.
  3. காட்டில் முனிவர்கள் தவம் செய்கையில், இலை, தழைகளைச் சாப்பிட்டுக் கொண்டு, மான்களோடு விளையாடி இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை நடத்தினர்.
  4. நீண்டகாலம் என்பதை- 16,000 ஆண்டுகள் — என்ற மரபுச் சொற்றொடர் மூலம் (இடியம்) எழுதும் வழக்கம் இருந்ததையும் காண்கிறோம்.

7.பரத்வாஜர் கதையும், விஸ்வாமித்ர/காமதேனு கதையும், மாண்டகர்ணி கதையும் பல மாயாஜால விஷயங்களை கூறுகின்றன. இவை அனைத்தும் தவ வலிமையால் நிகழ்ந்தன என்ற தகவலையும் அறிகிறோம்.

 

வால்மீகி தரும் தகவல்

 

வால்மீகி ராமாயணம் இந்த ஏரியின் இயற்கை அழகை மிக அழகாக வருணிக்கிறது. அடர்ந்த காட்டுக்குள் இன்னிசை ஒலி கேட்டவுடன் ராம, லெட்சுமணர்கள் , தர்மப்ருத் என்ற முனிவரிடம் இது எங்கிருந்து வருகிறது? ஜன நடமாட்டமே இல்லையே என்கிறார்கள். உடனே மேற்கூறிய கதையை அவர் விவரமாகக் கூறுகிறார். இதையே காளிதாசன் சுருக்கித் தந்துள்ளான்.

 

–subham–

 

மனைவிக்கு ‘ஜாயா’ என்று பெயர் ஏன் ? (Post No.2997)

IMG_4412

Compiled by London swaminathan

Date:23 July 2016

Post No. 2997

Time uploaded in London :– 6-20 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஜாயா என்றால் பிறவிக்குக் காரணமானவள். இதை மனைவிக்கு சம்ஸ்கிருதத்தில் பயன்படுத்துவது விநோதமாக இருக்கும். இது தாயாருக்குப் பொருந்தும். ஆனால் தாயாருக்கு ஜனனி, மாதா போன்ற பல பெயர்கள் இருக்கின்றன.

 

ஜாயா என்பதற்கு மனு விளக்கம் தருகிறார்:–

 

பதிர் பார்யா சம்ப்ரவிஸ்ய கர்போ ப்ருத்வேஹ ஜாயதே

ஜாயாயாஸ்தத்தி ஜாயாத்வம் யதஸ்யாம் ஜாயதே புன:

–மனு 9-8

 

கணவன் (பதி:), இந்திரிய ரூபமாக மனைவிக்குள் (பார்யா) புகுந்து (சம்ப்ரவிஸ்ய), கர்ப்பமாக உருவாகி மீண்டும் பிள்ளையாகப் பிறக்கிறபடியால் மனைவிக்கு ஜாயா என்று பெயர்.

 

சுருக்கமாகச் சொல்லப்போனால், கணவனே மகனாகப் பிறக்கிறான்.

 

பிள்ளைக் குழந்தையை வாரி எடுத்து அணைக்கும்போது கணவனை அணைக்கும் இன்பத்தை மனைவி அனுபவிக்கிறாள். ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்: – கணவனை அணைக்கும் போது இருந்த பால் (செக்ஸ்) உணர்வுகள், இப்பொழுது தாயின் அன்பு வெள்ளமாக மாறிவிடுகிறது.

இன்னும் சொல்லப் போனால், குழந்தை  பிறந்தவுடன், கணவன் மீதான அன்பில் 50 % அன்பு,  குழந்தைக்குப் போய்விடும். கணவன்பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான்!

jaya hanuman

புலன்களை வென்றவன் (ஜிதேந்த்ரியன்) யார்?

 

ஸ்ருத்வா ஸ்ப்ருஷ்ட்வா அத த்ருஷ்ட்வா ச புக்த்வா க்ராத்வா ச ய: நர:

ந ஹ்ருஷ்யதி க்லாயதி வா ச விக்ஞேய: ஜிதேந்த்ரிய: (மனு 2-98)

 

 

ஸ்ருத்வா – கேட்டும்

ஸ்ப்ருஷ்ட்வா அத – தொட்டும்

த்ருஷ்ட்வா ச – பார்த்தும்

புக்த்வா – சுவைத்தும்

க்ராத்வா ச – முகர்ந்தும்

ய: நர: – எந்த மனிதன்

 

ந ஹ்ருஷ்யதி -மகிழ்வதில்லையோ

க்லாயதி வா – துக்கம் அடைவதில்லையோ

ச விக்ஞேய: — அவன் அறியப்படுவான்

ஜிதேந்த்ரிய: – புலன்களை வென்ற வீரன் என்று.

 

அதாவது ஐம்புல நுகர்ச்சியானது அவனுக்கு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ தராது. இந்தக் கருத்து பகவத் கீதையிலும் பல இடங்களில் வருகிறது.

 

ஒன்றாகக் காண்பதே காட்சி (அத்வைதம்)

புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் (மஹாவீரன்) —

என்று அவ்வையாரும் செப்பினார்.

 

–Subham–

 

கடிதமும் பதிலும்: சுகமான கல்யாணி ராகம் (Post No.2996)

RAMA BEFORE THYAGARAJA

Article Written S NAGARAJAN
Date: 23 July 2016
Post No. 2996
Time uploaded in London :– 5-26 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சுகமான கல்யாணி , ராகங்களின் ராணிக்கு வந்த ஒரு அற்புதமான கடிதம்! (எனது பதிலும் கூட!!)
ச.நாகராஜன்
திரு ஆர். நஞ்சப்பா அவர்கள் ஒரு நல்ல ரஸிகர். விஷயம் தெரிந்தவர். நல்லதைப் பாராட்டும் பெரிய மனமுள்ளவர். பக்குவமாக விஷயங்களை எடுத்துச் சொல்பவர். நேரில் அவரைப் பார்த்ததில்லை; எந்த ஊரில் இருப்பவர் என்பதும் தெரியாது. இந்த ப்ளாக் மூலமாக பரிசயம் அவ்வளவே!
அவர் கல்யாணி ராகம் பற்றிய கட்டுரைக்கு அனுப்பியுள்ள ஒரு அற்புத விளக்கம் இதோ; (அனைவரும் படித்துப் பயனடைய வேண்டும் என்பதாலேயே தனிக் கட்டுரையாகத் தந்துள்ளேன். அத்துடன் ரமண மஹரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு அற்புதமான் சங்கீதம் பற்றிய விளக்கத்தையும் என் பதிலில் இணைத்துள்ளேன்).

 

thyagaraja brown

திரு ஆர்.நஞ்சப்பா அவர்களின் கடிதம் இதோ:

பயனுள்ள விஷயங்கள் சொல்லும் கட்டுரை.
பொதுவாக ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு முக்கிய “பாவம்” ( Bhava )உண்டு என்பார்கள்.கல்யாணி போன்ற ஸம்பூர்ண ராகங்கள் .பலவித பாவங்களை வெளிப்படுத்தும். இதற்கு பாடகரின் குரல், அல்லது வாத்யத்தின் “tonal quality ” முக்கியமானது. இதற்கும் மேலாக, சாஹித்யத்தின் பங்கு. ராக ‘பாவம்’, ஸாஹித்ய ‘பாவம்’. பாடகரின் குரல் வளம் ஆகியவை ஒன்று சேரும்போதுதான் நாம் அந்த ராகத்தின் முழு ஸ்வரூபத்தையும், அது வெளிப்படுத்தும் உணர்ச்சிப் பெருக்கையும் அனுபவிக்க முடியும்.

 
ஸ்ரீ தீக்ஷிதரின் க்ருதிகள் ராக ‘பாவத்தை” முக்கியமாகக் கொண்டவை. ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் ராகத்துடன், தன் இறைஅனுபவத்தின் பல கூறுகளையும், நிலைகளையும் (mystical experiences and moods ) குழைத்து ஸாஹித்யமாக்கித் தந்திருக்கிறார். அதனால் அவர் க்ருதிகளில் ஸாஹித்ய ‘பாவம் ‘ மேலோங்கி நிற்கிறது! இதுவே நம்மை ஈர்க்கிறது! ஸ்வாமிகள் கல்யாணி ராகத்தில் 18 கீர்த்தனைகள் அருளியுள்ளார். ஓவ்வொன்றும் ஒவ்வொரு வித ‘பாவ’த்தை வெளிப்படுத்துகின்றன. இது ஒர் அற்புதம். ஆனால் பாடகர்கள் பொருள் உணர்ந்தும், ராக ‘பாவ’த்தில் ஊறியும் இருக்கவேண்டும்.

 
கச்சேரி ஃபேஷன் வந்துவிட்டபிறகு இப்போது யாரும் நிதானித்து, அனுபவித்துப் பாடுவதில்லை. தானே அனுபவிக்கவிட்டால், அதைப் பிறருக்கு எப்படி அளிப்பது? ” தன சௌக்யமு தா நெருகக யொருலகு தகுபோதன ஸுகமா ” என்கிறார் ஸ்ரீ த்யாகராஜர். ( ராமா நீயெட ). இப்போது பல வித்வான்களும் புத்தகம்/ நோட்டைப் பார்த்தே படிக்கிறார்கள். யாரும் எந்த ராகத்திலும் specialise செய்வதாகத் தெரியவில்லை. பின், ஸாஹித்ய ‘பாவ’மோ, ராக ‘பாவ’மோ எங்கிருந்து வரும்? ஏதோ இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கிறது. சில விதிவிலக்குகள் இல்லாமலில்லை.

 
பழைய சினிமா பாடல்களில், எம்.எல்.வி. பாடிய ” கொஞ்சும் புறாவே ” கல்யாணி ராகத்தில் அமைந்த மிக அருமையான பாடல். இதில் வயலின் பங்கும் அபாரம். இசை சித்தூர் வி, நாகையா. விஷயம் தெரிந்தவர் !

கடிதம் கண்டவுடன் மகிழ்ச்சி கொண்டேன். அதற்கான எனது பதிலையும் உடனே பதிவு செய்து விட்டேன். அது இது தான்:

அடடா! அற்புதமான விளக்கம்! உங்களின் விளக்கத்தைப் பார்த்தவுடன் ரமண மஹரிஷியின் வாழ்வில் நடந்த ஒரு சிறிய சம்பவம் நினைவுக்கு வருகிறது.
வீணை வாசிக்கும் ஒரு பெண்மணி ரமண மஹரிஷியிடம் வந்தார். “தியாகராஜ ஸ்வாமிகளும் மற்ற சங்கீதம் பாடிய பெரியோர்களும் பாடித் தானே மோட்சம் பெற்றார்கள். நானும் அவர்களைப் போல சங்கீதம் பாடி மோட்சத்தை அடைய இயலுமா?” என்று கேட்டார் அவர். அதற்கு மஹரிஷி, “தியாகராஜரும் மற்ற பெரியோரும் பாடிப் பெறவில்லை. பெற்றதைப் பாடினார்கள். அதனால் தான் அவர்களின் கீர்த்தனைகள் இன்னும் உயிருள்ளதாக இருக்கின்றனர்: என்றார்.
என்ன அற்புதமான் பதில்! இசையில் உள்ளம் உருகி லயித்துப் பாடினால் அனைத்து ராகங்களின் நல்ன்களையும் பாடகர் தர முடியும். நஞ்சப்பா அவர்களுக்கு ‘வழக்கம் போல’ எனது நன்றி! – நாகராஜன்

 
ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளும் முத்துசாமி தீட்சிதரும் அவர் போன்ற இசை மேதைகளும் மகான்களும் ‘பெற்றதைப் பாடினார்கள்’. தாங்கள் பெற்ற பெரும் பேறை இசையில் குழைத்துத் தந்தார்கள்.
கேட்க மனம் உருகுகிறது. பல நலன்களையும் தருகிறது.
இசையின் முழு குணநலன்களை அள்ளி அள்ளித் தரும் அவர்களது இசை பற்றிப் போற்ற வார்த்தைகளே இல்லை.

*******

பிராமணப் பிறவி ஏன் மேலானது? (Post No.2994)

VEDA BRAHMINS

Compiled by London swaminathan

Date:22 July 2016

Post No. 2994

Time uploaded in London :– 8-08 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

brahmins, fb 1

புத்தர் சொன்னது

ஒரு பிராமணனும் முனிவனும், கடந்தகால பாபங்களிலிருந்து விடுபடுகிறார்கள்; அவன் தாய் தந்தையைக் கொன்றிருந்தாலும், இரண்டு மன்னர்களைத் தீர்த்துக்கட்டியிருந்தாலும், ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே அழித்திருந்தாலும் அவர்களப் பாபம் பிந்தொடராது

–புத்தர் சொன்னது, தம்ம பதம் 294

 

எவனும் பிராமணனுக்குத் தீங்கு செய்யக்கூடாது; பிராமணர்களும் யாருக்கும் பதிலடி தரக்கூடாது.

–புத்தர் சொன்னது, தம்ம பதம் 389

 

தீமையை ஒதுக்கிவைத்ததால் அவனை பிராமணன் என்று அழைக்கிறோம்; அவன் சாந்தமாக இருப்பதால் அவனை சமனன்  என்று அழைக்கிறோம்; அவன் எல்லா பாபங்களையும் விட்டுவிட்டதால் அவனை பாபத்தை வென்றவன் (பாப ஜித) என்று அழைக்கிறோம்— –புத்தர் சொன்னது, தம்ம பதம் 388

 

 

பழங்காலத்தில் பிராமணன் என்பவன் ஆறு தொழில்களை மட்டும் செய்துவந்ததால் அவனை மேலானவன் என்று மக்கள் கருதினர். புறநானூறு முதலிய சங்க இலக்கிய நூல்களிலும், திருக்குறளிலும் “அறுதொழிலோர்” என்று பார்ப்பனர்கள் புகழப்படுவர்.

 

வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி (யாகம்) செய்தல், செய்வித்தல், தானம் வாங்குதல், கொடுத்தல் ஆகிய 6  தொழில்களைச் செய்துகொண்டு பிரம்மத்தை நாடுவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டதால் பிராமணன் என்றும், அந்தத்தை (உள்ளுறையும் பிரம்மத்தை) அணவியதால் அந்தணர் என்றும் சொன்னார்கள்.

brahmin veda 2

மனு கூறும் காரணம்:–

பூதானாம் ப்ராணின: ச்ரேஷ்டா: ப்ராணினாம் புத்திஜீவின:

புத்திமத்ஸு நரா: ச்ரேஷ்டான்  நரேஷு ப்ராஹ்மணா: ஸ்ம்ருதா:

மனு 1-96

 

உயிரினங்களில் (வெளிப்படையாக) மூச்சுவிடக்கூடியவை உயர்ந்தவை;

அவ்வாறு மூச்சுவிடுபவைகளில் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவை உயர்ந்தவை;

அவ்வாறு சிந்தனைத் திறன் பெற்றவைகளில் மனிதன் மேலானவன்;

அத்தகையோரில் பிராமணனே உயர்ந்தவன் என்று பாரம்பர்யமாகக் கருதப்படுகிறது– மனு 1-96

 

ஏனென்றால்:-

 

உத்பத்திரேவ விப்ரஸ்ய மூர்த்தி த்ர்மஸ்ய சாஸ்வதீ

ச ஹி தர்மார்த்தமுத்பன்னோ ப்ரஹ்ம பூயாய கல்பதே -மனு 1-98

 

 

பிராமணந் தர்மத்தின்  உரு; அவன் பிறவியே தர்மத்துக்காகவே;

அவன் பிரம்மத்துடன் ஐக்கியமாகவே பிறந்துள்ளான் (ப்ரஹ்ம பூயாய கல்பதே)

 

definition of brahmin

(Read Nobale as Noble)

பிரம்ம ஞானி யார்?

 

ப்ராஹ்மணேஷு ச வித்வாம்சோ வித்வத் சுஹ்ருத் புத்தய:

க்ருதபுத்திஷு கர்தார: கர்த்ருஷு ப்ரஹ்மவேதின:

மனு 1-97

பிராமணர்களில் வேதம் ஓதி,  அதன் அர்த்தத்தை உணர்ந்து, அதில்

நல்ல எண்ணம்படைத்து, அவைகளை அனுஷ்டித்து வைராகிகளானவர்களே பிரம்ம ஞானிகள்.

 

இப்போது புரிகிறதா?

இன்றைய பிராமணர்கள் (பெரும்பாலோர்) இந்த இலக்கண வரையரைக்குள் வரமாட்டார்கள். ஆகையால் இதை உணர்ந்தால்  அவர்களும் பிராமணர் என்று உரிமை கொண்டாடமாட்டார்கள்.

 

சுவாமி விவேகாநந்தர் சொன்னது போல எல்லோரையும் பிராமணர்களாக உயர்த்தலாம் அல்லது ராமானுஜர் செய்தது போல எல்லோரையும் பிராமணர்களாக உயர்த்தலாம்.

 

 

ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபத: பும்ச்த்வம் ததா விப்ரதா

தஸ்மாத் வைதிக தர்ம மார்க பரதா வித்வத்வமாஸ்த்பரம்

–ஆதிசங்கரரின் விவேக சூடாமணி- பாடல் 2

 

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது;

அதிலும் ஆண்களாய்ப் பிறப்பது அரிது;

அதிலும் அரிது பிராமணனாகப் பிறப்பது,

அதிலும் அரிது வேத தர்மத்தைப் பின்பற்றுவது.

BRAHMINS VEDA

அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டு ஒழுகலான் – திருக்குறள் -30

 

எல்லா உயிர்களிடத்திலும்  அருள் பாராட்டுவதால் முனிவர்கள், அந்தணர்கள் என்று அழைக்கப்படுவர்.

 

–Subahm–

 

சுகமான கல்யாணி- ராகங்களின் ராணி (Post No.2993)

IMG_4431

Article Written S NAGARAJAN

Date: 22 July 2016

Post No. 2993

Time uploaded in London :– 5-58 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

சுகமான கல்யாணி ராகங்களின் ராணி!
ச.நாகராஜன்
மனம் எரிச்சலாக இருக்கிறது. அனைவரின் மீதும் இனம் தெரியாத ஒரு கோபம். இது ஒரு வகை.
மனம் மிகவும் அல்பமாக இருக்கிறது. ஒரு பெருந்தன்மையான கம்பீர மனோபாவம் இல்லை. இது இன்னொரு ரகம்.
உற்சாகமே இல்லை; ஏனோ தானோவென்று எதையும் செய்யும் ஒரு மனோபாவமான நிலை! இப்படி ஒரு ரகம்.

IMG_4434
ஆன்ந்த நிலையையே அறிய முடியவில்லை. மனம் இனம் தெரியாத ஒரு சோகமான மனநிலையில் இருக்கிறது.
சுற்றுப்புறச் சூழ்நிலையில் இருக்கும் இயற்கை அனுபவத்தை அனுபவிக்க்க் கொடுத்து வைக்கவில்லை. இப்படி இன்னொரு ரகம்.
இந்த அனைத்து ரக மனிதர்களும் அதிகம் செலவில்லாமல் குணமடையக் கூடிய ஒரு வழி உண்டு.
கல்யாணி ராகத்தில் உள்ள பாடல்களைக் கேட்க வேண்டியது தான்!
யூ டியூபில் சென்றால் இசை ராணி எம்.எஸ். சுப்புலெட்சுமி, மஹாராஜபுரம் சந்தானம், பாலமுரளி கிருஷ்ணா என்று எத்தனை அருமையான பாட்கர்களின் கல்யாணி ராகப் பாடல்களைக் கேட்க முடியும்!
கௌசிகி சக்ரவ்ர்த்தியின் கல்யாணி ராக பஜனைப் பாடல் வேறு இருக்கிறதே!!
இரவில் எதைக் கேட்டாலும் மறு நாள் காலை எழுந்திருக்கும் போது உலகமே ஒரே ஆனந்தம்.
பழைய மோசமான மனம் எங்கே போயிற்று. பெருந்தனமை, கம்பீரம், உற்சாகம், பக்தி, அன்பு அனைத்தையும் மனம் எப்படி ஒரே சமயத்தில் கொண்டது?
கல்யாணி ராகத்தின் மஹிமையே மஹிமை!
சுகமான கல்யாணி, ராகங்களின் ராணி!
65வது மேளகர்த்தா ராகம் இது.
ஏழு ஸ்வரங்களும் முறைப்படி கொண்ட ராகம். ஆகவே இது ஒரு சம்பூர்ண ராகம்!
காதல், பக்தி போன்ற நுட்பமான உணர்வுகளை முழு வீச்சில் காண்பிக்க வல்ல அற்புதமான ராகம் இது.
தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் கிருதிகள் இந்த ராகத்தில் பல அமைந்துள்ளன.

 
நிதி சால சுகமா? – ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்
அம்மா ராவம்மா! – ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்
ஹிமாத்ரி சுதே – ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள்
கமலாம்பா பஜரே – ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர்
உன்னை அல்லால் – பாபநாசம் சிவன்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பட்டியல் நீளும்.
தமிழ் திரைப்படப் பாடல்களில் இதை எடுத்து இசையமைக்காத இசை அமைப்பாளர்களே இல்லை எனலாம்.

 

IMG_4437
சில பாடல்கள் :
ஜனனீ ஜனனீ – தாய் மூகாம்பிகை – இளையராஜா
சிந்தனை செய் மனமே – அம்பிகாபதி
அமுதும் தேனும் எதற்கு – தை பிறந்தால் வழி பிறக்கும்
மன்னவன் வந்தானடி தோழி – திருவருட்செலவர்
வெள்ளைப்புறா ஒன்று – புதுக்கவிதை
இப்படி பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதன் இந்தி வடிவத்தில் அருமையான பாடல்கள் ஏராளம் உள்ளன.
இவற்றை நெட்டிலும் பிடிக்கலாம்; இசை வடிவங்களிலும் வாங்கலாம்.
செலவு சிறிது; பயனோ பெரிது!
ராகங்களின் ராணிக்கு இன்னும் ஏராளமான பெருமைகள் உண்டு.
பல புத்தகங்களே வந்து விட்டன!
கல்யாணி என்றால் அனைத்து நலன்களையும் அளிப்பவள் என்று பொருள்!
உண்மை தான்!!
***********

 

Pessimism Anecdote (Post No.2992)

debt images

Compiled by London swaminathan

Date:21 July 2016

Post No. 2992

Time uploaded in London :– 18-04

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

More Credit and Debt Anecdotes

 

 

Gentleman or Not?

 

The Vicar of Sheffield, the Rev.Dr.Sutton, once said to the late Dr Peech, “I never ask a gentleman for money”.

 

Indeed, said the vicar, then how do you get it if he doesn’t pay?

 

“Why, replied Dr Peech , after a certain time I conclude he is not a gentleman, and then I ask him”.

 

Xxx

 

Sheridan

 

A friend once observed to Sheridan, “Being of an illustrious Irish family, it is strange that your name has not an “O” prefixed to it.

 

“True, replied Sheridan, no family has a better right to it. We owe everybody”.

 

Xxx

 

opti-pessi

Pessimism Anecdote

 

On the subject of calamity howlers, the story is told of the gala crowd that had assembled for the test run of Robert Fultons outlandish steamboat contraption ‘The Clermont’. For some hours, in the presence of a mass of spectators, the strange craft belched smoke and sparks from its tall, thin stack as his engineers attempted to get up the necessary head of steam. When the time to cast off had come and the engines were being limbered up, the boat quivered and vibrated violently and made a loud racket.

 

A group of doubting Thomasses in the crowd had been shouting loudly and scornfully, “She will never start! She will never start!”  But notwithstanding this, the boat pulled itself together and actually started to move up the river.

 

After a moment of astonished silence, the voices of the scoffers resumed their shouts; this time crying with all the scorn they could muster, “She will never stop! She will never stop!”

 

–Subham–

 

பணம் பற்றி பவிஷ்ய புராணம் (Post No.2991)

new currency Re1

Written by London swaminathan

Date:21 July 2016

Post No. 2991

Time uploaded in London :– 8-40 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

பவிஷ்ய புராணம் என்றவுடன் , எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்று அதில் கூறப்பட்ட செய்திகளே நம் மனக்கண்ணுக்கு முன் வரும். ஆனால்ல் அதில் வேறு பல சுவையான விஷயங்களும் உள.

 

அதில் ஒன்று பணம் பற்றிய ஸ்லோகம்:-

 

அர்த்தானாமார்ஜனே துக்கம் ஆர்ஜிதானாம் து ரக்ஷணே

நாஸேதுக்கம் வ்யயே துக்கம் கிமர்த்தம் துக்கபாஜனம்

 

பணத்தினால் எல்லா வகையிலும், எப்போதும் துக்கம்தான்;

பணத்தைச் சம்பாதிக்கும்போதும் துக்கம்;

காப்பாற்றுவதிலும் துக்கம்:

அதைச் செலவழித்தாலும் துக்கம்:

 

துக்கத்துக்கெல்லாம் உறைவிடம் பணம்தான்

 

(அர்த்த= செல்வம், பணம்)

 

எவ்வளவு அருமையான பாடல்; மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்; நகை, ஷேர் (பங்கு மார்க்கெட்), ரொக்கம் — எது இருந்தாலும் அதை ரக்ஷிப்பது அதைவிட துன்பம்;

 

லாக்கரில் நகைகளை வைத்தால் வைக்கப்போகும்போதும் எடுக்கப்போகும்போதும் திருடர் பயம்;

லாக்கர் வைத்திருப்பவனே ஓடிவிடுவானோ என்றபயம் (வெளிநாட்டில் பிரைவேட் லாக்கர்கள் உண்டு); சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர்களுக்கு அரசாங்கம் மாறும் போது எல்லாம் பயம்; பங்கு மார்க்கெட்டில் போட்டவர்களுக்கு பங்கு மார்க்கெட் சரியும் போது பயம்; இவை அனைத்தும் துக்கத்தில் முடிகிறது. வெளி நாடுகளில் அண்மைக்கலத்தில் இரண்டு மூன்று வங்கிகள் திவால் ஆனபோது, பிரிட்டன், ஐஸ்லாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளில் பலர் சேமிப்பை இழந்தனர். துக்கம் அடைந்தனர்.

 

செலவழித்தால், பிற்காலத்தைப் பற்றி பயம்; அதிகம் செலவழிதால் கடன் வாங்கும் துன்பம்; ஆக பணமே துன்பத்தின் உறைவிடம்!

 

யானை உண்ட விளங்கனி (விளாம்பழம்)

 

இன்னொரு ஸ்லோகம் சொல்கிறது:–

பணம் வரும் போது தேங்காயிலுள்ள நீர் (இளநீர்) போல வரும்; போகும் போது யானை உண்ட விளாம் பழம் போலவும் போய்விடும் (யானை, விளாம்பழத்தை ஓட்டோடு சாப்பிட்டுவிட்டு வெளியே கழிவாகத் தள்ளும்போதும் அது அப்படியே பழம்போலக் காட்சி தரும்; ஆனால் உள்ளே உள்ள எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும்; சிலர் இது தவறு; ஒரு நோயின் பேர் யானை என்றும் அந்த நோய் கண்ட மரங்களின் பழங்களுக்குள் ஒன்றுமே இராது என்றும் சொல்லுவர்)

 

உண்மையில் பணம் வருவதும் போவதும் தெரியாது என்பதே பாட்டின் பொருள்:–

 

ஆஜகாம யதா லக்ஷ்மீர் நாரிகேல பலாம்புவத்

நிர்ஜகாம ததா லக்ஷ்மீர் கஜ புக்த கபித்தவத்

 

(கபித்த= விளாம்பழம், நாரிகேல = தேங்காய்)

KATTU KATTU CURRENCY

கவிஞர் ஹேமாத்ரி சொன்னது:–

ந்யாயார்ஜிதஸ்ய வித்தஸ்ய த்வ வனார்த்தௌ ப்ரகீர்த்திதௌ

அபாத்ரே ப்ரதிபத்திஸ்ச பாத்ரேர்தாபதிபாதனம்

 

பணம் என்பது தகுதியற்றவர்களுக்கே கிடைக்கும்; தகுதியுடையோருக்கு கிடைப்பதில்லை

 

பணமிருந்தால் குணமிருக்காது

குணம் இருந்தால் பணம் இருக்காது – என்ற தமிழ் வசனமும்

 

லெட்சுமி இருக்குமிடத்தில் சரஸ்வதி இருக்கமாட்டாள் என்ற பழமொழியும் இதனுடன் ஒட்டிவருவதைக் காண்க.

 

–Subham–

 

 

அதிசயத் துறவி ஸு யுன் – பகுதி 8 (Post No.2990)

 

buddha in SL

Article Written S NAGARAJAN

Date: 21 July 2016

Post No. 2990

Time uploaded in London :– 5-46 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 8
ச.நாகராஜன்

 
ஸு யுன்னுக்கு இப்போது வயது 64.
யிங் ஜியாங் ஆலயத்தில் சேவல் ஒன்றை ஒருவர் காணிக்கையாக அளித்திருந்தார். துறவி ஒருவர் ஸு யுன்னிடம் வந்து அந்த சேவல் மிகவும் ஆக்ரோஷமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
வளர்ப்புப் பறவை ஒன்றை அது தாக்கி காயப்படுத்துகிறதாம்.
ஸு யுன் நேராக் ஆலயத்திற்குச் சென்றார். அந்த சேவலிடம் அகதிகளுக்கான விதியைக் கற்பித்தார். புத்தரின் நாமத்தை உச்சரிக்குமாறு அதற்கு போதித்தார்.
என்ன ஆச்சரியம், சீக்கிரமே சேவல் தன் பழக்கத்தை மாற்றிக் கொண்டது. அது எந்தப் பறவைக்கும் தீங்கு இழைக்கவில்லை.
ஒரு மரத்தின் மீது ஏறி ஒரு கிளையில் அமர்ந்தது.
எந்த பூச்சிகளையும் கூட அது உண்ணவில்லை. அதற்குத் தந்த தானிய வகைகளை மட்டுமே அது உட்கொண்டது!

 
சில நாட்கள் கழிந்தன. ஆலயத்தில் மணி ஒலிப்பதைக் கேட்டவுடன் அது வரிசையாகச் செல்லும் துறவிகளின் வரிசையில் தானும் சேர்ந்து கொண்டது!
பிரதான பிரார்த்தனை மண்டபத்தில் நிகழும் ஒவ்வொரு பிரார்த்தனை நிகழ்ச்சிக்கும் அது சென்றது; அதில் கலந்து கொண்டது!
பிரார்த்தனை முடிந்தவுடன் அமைதியாக மீண்டும் தன் மரக்கிளைக்குத் திரும்பி அதில் அமர்ந்தது!

 

buddha gold
அதற்கு மீண்டும் புத்தரின் நாமத்தை உச்சரிக்கக் கற்பிக்கப்பட்டது. இப்போது அது புத்தரின் நாமத்தைச் சொல்லக் கற்றுக் கொண்டது.
‘ஃபோ! ஃபோ! ஃபோ!’ அது அழகாகக் கூவியது. சீன மொழியில் ஃபோ என்பது புத்தரின் ஒரு நாமம்!
இரண்டு வருடங்கள் கழிந்து ஒரு நாள் பிரார்த்தனை மண்டபத்திற்கு வழக்கம் போல பிரார்த்தனை சமயத்தில் அது வந்தது. ஹாலில் நின்றது.
அழகாக நிமிர்ந்து தன் இறகுகளை அகல விரித்தது.
புத்தரின் நாமத்தைக்க் கூறும் விதமாக மூன்று முறை இறகுகளை அழகாக அசைத்தது!

 
அப்படியே நின்றவாறே இறந்தது!
அதனுடைய தோற்றம் பல நாள் மாறவே இல்லை. அதை ஒரு பேழையில் வைத்தனர். பின்னர் அது புதைக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியின் போது ஸு யுன் கீழ்க்கண்ட பாடலை இயற்றிப் பாடினார்:
“சண்டையிடும் குணம் கொண்ட இந்தச் சேவல்
வளர்ப்புப் பறவையைத் தாக்கி இரத்த காயத்தை ஏற்படுத்தியது
அதன் மனம் நின்ற நிலையில் வந்த போது
அதற்கு புனித நாமங்கள் போதித்த போது
அது தானியங்களை உண்டு தனியே நின்றது.
பூச்சிகளைக் கொல்லவில்லை
தங்கமயமான சிலைகளை உற்று நோக்கியவாறே
எவ்வளவு அருமையாக அது புத்தரின் நாமத்தைக் கூவி உச்சரித்தது!
மூன்று முறை அழகுற அசைந்த அது
திடீரென்று இறந்து விட்டதே!
இந்த உயிர் புத்தரை விட எந்த நிலையில் மாறுபட்டது?”

அனைவரும் உருகினர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
\
*********

 

உலகை வலம் வருவதற்கு எளிய வழி! (Post No.2989)

globe trotting 2

Written by London swaminathan

Date:20 July 2016

Post No. 2989

Time uploaded in London :–21-21

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

உலகை வலம் வருவதற்கு விநாயகரும் முருகனும் பின்பற்றிய தந்திரங்களை நாம் திருவிளையாடல் புராணம் மூலம் அறிவோம். ஒரு மாம்பழத்தைப் பெறுவதற்காக முருகன்  மயில் மீது வலம் வந்தார். ஆனால், அவனது அண்ணனான பிள்ளையாரோ தாய், தந்தையான பார்வதி-பரமேஸ்வரனைச் சுற்றி வந்து ஒரு மாம்பழத்தைப் பரிசாகப் பெற்றார்.

 

இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்றால் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது:–

 

பூ ப்ரதக்ஷிண ஷடகேன காசீயாத்ரா (அ)யுதேன ச

சேது ஸ்நான சதைர்யச்ச தத்பலம் மாத்ருவந்தனே

 

தாயை வணங்குவதானது ஆறு முறை உலகை வலம் வந்ததற்கும், பத்தாயிரம் முறை காசியில் கங்கையில் குளித்ததற்கும் நூற்றுக் கணக்கான முறை ராமேஸ்வரத்தில் கடலில் குளித்தற்கும் மேலானது.

 

இப்போது புரிகிறதா? தாயை ஒரு முறை வணங்கிவிட்டால் ஆறுமுறைக்கு மேல் உலகை வலம் வந்ததற்குச் சமம்.

 

Xxx

babay, mother

 

 

தாயிற் சிறந்ததோர் கோயிலில்லை

 

சம்ஸ்கிருதத்தில் இன்னொரு வசனம் இருக்கிறது:–

“ந காயத்ரயா: பரோ மந்த்ரோ, ந மாதுர் தைவதம் பரம்”

 

பொருள்:–

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை

தாய்க்கு  மிஞ்சிய தெய்வமில்லை.

 

Xxx

 

 

மனு சொல்கிறார்: ஆயிரம் தந்தை = ஒரு தாயார்

 

பத்து உபாத்தியாயர்களைவிட ஒரு ஆசார்யார் (குரு) பெரியவர்; அப்படிப்பட்ட நூறு ஆச்சர்யார்களைவிட தந்தை பெரியவர்;  ஆனால் தாயாரோ ஆயிரம் தந்தைகளைவிடப் பெரியவர்.

 

–மனு ஸ்மிருதி 2-145

 

–SUBHAM–