கீதத்தின் பெருமை! (கட்டுரை எண். 2846)

IMG_4437

Article written by S.NAGARAJAN

 

Date: 28 May 2016

 

Post No. 2846

 

Time uploaded in London :–  7-08 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

கீதத்தின் பெருமை!

ச.நாகராஜன்

 

பக்தியோடு கீதம் இசைத்தால் என்ன தான் நடக்காது?

இராவணனின் கீதம் இசைக்கும் மஹிமையையும் ஆயர்பாடிச் சிறுவர் சிறுமியர் கீதமிசைத்து கிருஷ்ணனை ஈர்த்ததையும் ஒரு கவிஞர் விளக்குகிறார் இப்படி:

 

கீதஸ்ய மாஹாத்ம்யவசாவபீஷ்டம்

   வரம் ஹராத ப்ராப ச ராவணோபி

யத் கௌதுகாத் ஜோபகுலஸ்ய மத்யே

   பபூவ க்ருஷ்ணோபி ச கோபரூப:

 

இதன் பொருள் : கீதத்தின் மஹிமையால் ராவணன் கூட சிவனிடமிருந்து அவன் விரும்பிய வரங்களைப் பெற்றான்.  கீதத்தின் ஆகர்ஷணத்தினால் ஆயர்பாடி இடையர்களின் இடையே கிருஷ்ணனும் கோபனாக வந்தான்.

 

பக்தியுடன் இசைக்கப்பாடும் பாடல் இறைவனையும் ஈர்க்கும் என்பதை இப்படி கவிஞர் கூறுகிறார்.

இது பகதத்த ஜலஹணரின் ‘சுக்திமுக்தாவளி’–யில் தொகுக்கப்பட்டுள்ள ஒரு பாடல்.

 

இது அமைந்துள்ள சந்தத்தின் பெயர் உபஜாதி.

இதை ஆங்கிலத்தில் எஸ்.பி. நாயர் மொழியாக்கம் செய்துள்ளார் இப்படி: –

“Due to the greatness of  (the devotional) song even the demon Ravana secured from Lord Siva boons of his choice: due its attraction even Lord Krishna came into the midst of the horde of cowherds as a cowherd.

 

music drawing

 

கீதங்கள்

சந்திரனின் ஒளி

வெற்றிலைச் சுருள்

கற்பூரம்

நேசிக்கும் நங்கையர்

முதலானவற்றால் சாரமற்ற இந்த உலகம்

சாரமுடையதாகிறது.

 

 

உலகம் இன்பக் கேணி என்பது வேத வாக்கு. பூவுலகை இன்ப லோகமாக்குவது எவை? அதைப் பட்டியலிடுகிறான்  மன்னன் போஜ மஹாராஜன்.

அவன் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்!

 

 

கீதசீதாம்சுதாம்பூல கற்பூரவனிதாதிபி:

அஸாரோப்யேஷ சம்ஸார: ஸாரவானிச லக்ஷ்யதே

 

 

இதன் ஆங்கில மொழியாக்கம் இது:

 

By (the pleasing of) songs, moonlight, betel roll, camphor, beloved women, etc;, this world which is (really) devoid of essence appears to be possessed with substance        ( S.B. Nair)

 

இசையின் மஹிமையே மஹிமை!

 

மஹாகவி பாரதி கூறியது போல ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!!

***************

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்!– 6 (Post No.2843)

buddha gold

Article written by S.NAGARAJAN

 

Date: 267May 2016

 

Post No. 2843

 

Time uploaded in London :–  7-53 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 6

 

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 61. அவரது அதிசய அனுபவங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ஒரு நாள் சிதிலமடைந்திருந்த ஆலயம் ஒன்றில் அவர் நுழைந்தார். அங்கு தங்க எண்ணினார். அங்கு உடைந்திருந்த சவப்பெட்டி கிடந்தது. அதனுடைய மூடி தலைகீழாக இருந்தது.  அது ஒரு பழைய சவப் பெட்டி என்பதால் அதன் மீது படுத்து தூங்க எண்ணினார் ஸூ யுன்.

ந்ள்ளிரவானது. சவப்பெட்டியினுள்ளே ஏதோ ஒரு அசைவு தெரிந்தது.

திடீரென்று எதிர்பாராத விதமாக ஒரு குரல் கேட்டது.

“நான் வெளியில் வர விரும்புகிறேன்”

உடனே ஸு யுன் கேட்டார்: “யார் நீ? மனிதனா? பேயா, பிசாசா?”

“ஒரு மனிதன்” பதில் வந்தது.

“நீ யார்?”

“ஒரு பிச்சைக்காரன்”

சிரித்தவாறே ஸு யுன் சவப்பெட்டியின் மேலிருந்து எழுந்தார். உள்ளிருந்து அவலட்சணமான பிச்சைக்காரன் ஒருவன் வெளியே வந்தான்.

அவன் ஸு யுன்னைப் பார்த்து, “ நீ யார்?” என்று கேட்டான்.

“நான் ஒரு துறவி” என்றார் ஸு யுன்.

 

buddha in SL

அந்தப் பிச்சைக்காரனுக்கு அவர் மேல் ஒரே கோபம். தன் மண்டையை  அமுக்கி அவர் உடைத்து விட்டதாக அவனுக்கு எண்ணம். அவன் அவரைத் தாக்க வந்தான்.

ஸு யுன் புன்சிரிப்புடன் கூறினார்” “ நீ இருப்பது தெரியாமல் நான் சவப்பெட்டியின் மீது படுத்தேன். உன்னால் அசையக்கூட முடியவில்லை. இப்போது எப்படி என்னைத் தாக்கப் போகிறாய்?”

அவன் மௌனமானான. வெளியில் சென்று சிறுநீர் கழித்து விட்டு வந்து மீண்டும் படுத்து விட்டான்.

மறு நாள் சூரியோதயத்திற்கு முன்னர் ஸு யுன் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அப்போது ஷாங்டாங் மாநிலத்தில் பாக்ஸர் இயக்கம் என்ற புரட்சிக்காரர்களின் இயக்கம் ஆரம்பமாகி இருந்தது.

ஒரு நாள் புரட்சிக்காரரில் ஒருவன் திடீரென அவர் முன் வந்து துப்பாக்கியை நீட்டினான்.

“நீ சாவதற்குப் பயப்படுகிறாயா?” என்று அவன் கேட்டான்.

“”எனது விதி நீ சுட்டுத் தான் முடிய வேண்டும் என்றிருந்தால், துப்பாக்கியால் என்னைச் சுடு” என்றார் அவர்.

அவர் கலங்காமல் இப்படிச் சொன்னதால் அசந்து போன அவன்,  “நீங்கள் போகலாம்” என்று அவரை விட்டு விட்டான்.

இந்த இயக்கம் சற்று தீவிரம் அடையவே ஸூ யுன் பீஜிங்கிற்குத் திரும்பினார்.

பின்னர் மவுண்ட் ஹாங்-லோ என்ற மலையில் புத்தரின் திருநாமத்தை உச்சரிக்கும் ஒரு கூட்டத்தில் பங்கு கொள்ள அங்கு சென்றார். அங்கு 87000 காட்டிஸ் எடையுள்ள வெங்கல மணியைக் கண்டார் ( ஒரு காட்டிஸ் என்றால் ஒரு பிண்ட் எடை) அது 15 அடி உய்ரமுள்ளது. 7 அடி நீளமுள்ள மணி அடிக்கும் நாக்கைக் கொண்டது. அதன் குறுக்களவோ 14 அடி!

அந்த  மணியின் வெளிப்புறத்தில் “அவதமசக சூத்ரங்கள்” தெளிவாக முழுதுமாக பொறிக்கப்பட்டிருந்தது!

இந்த மணியை தன் தாய் முக்தி பெறுவதற்காக  மிங் வமிசத்தைச் சேர்ந்த மன்னரான செங் ஸு இந்த ஆலயத்திற்கு கொடையாக அளித்திருந்தார் ( அவர் காலம் 1403-24)

பாக்ஸர் இயக்கம் உச்ச கட்டத்தை அடைய எங்கும் ஒரே இரத்தக் களரி.

கடைசியில் வைசிராய் சென் சுவான்-சுவான் அந்தப் பிராந்தியத்திற்கு வந்தார். அவ்ர ஸூ யுன்னை  வோ லாங் ஆலயத்திற்கு பிரார்த்தனை புரிய அழைத்தார். கடுமையான பஞ்சத்தைத் தீர்க்குமாறு அவர் வேண்டிக் கொள்ள ஸூ யுன் பிரார்த்தனை செய்தார்.

அங்கு மலையில் ஒரு துளி நீர் கூட இல்லை. காலையில் கிடைக்கும் பனித்துளிகளைச் சேகரித்து அதை ஸூ யுன் அருந்தினார், அங்கு அவர் வளர்த்த மூலிகைகளே அவருக்கு உணவு.

நாட்கள் உருண்டோடின. ஒரு நாள் ஃபாசெங் உள்ளிட்ட சில துறவிகள் அவரது குடிசைக் கதவைத் திறந்தனர்.

உள்ளே இருந்தது ஸூ யுன். அவர்கள் அதிசயித்துப் போனார்கள்.

“உங்களைக் காணவே காணோமே. இங்கா அமைதியாகப் படுத்திருக்கிறீர்கள்?”

ஸூ யுன் கூறினார்: “இங்கே” என்பதை விட்டு விடுங்கள். “அங்கே” எப்படி இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள்!”

அனைவரும் சிரித்தனர்.

அவரது யாத்திரை தொடர்ந்தது.

-தொடரும்

 

 

விஷம் எத்தனை வகை? எது விஷம்?

poison

Research Article written by london swaminathan

 

Date: 26 May 2016

 

Post No. 2842

 

Time uploaded in London :– 18-34

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Potassium-cyanide-phase-I-unit-cell-3D-SF

சம்ஸ்கிருத மொழியில் இல்லாத விஷயம் எதுவுமே இல்லை என்பது சம்ஸ்கிருதம் கற்றோருக்குத் தெரியும். விஷத்தில் ஐந்து வகை, உபவிஷத்தில் ஐந்து வகை என்று பிரித்து வைத்திருக்கின்றனர்! காலப்போக்கில் அதன் தன்மை என்ன? ஏன் இத்தனை வகை என்பதைக் கேட்டால்கூட யாருக்கும் தெரியாது. அவ்வப்போது புராணக்கதைகளில் ஆலகால விஷம், காலகூட விஷம் என்று படிக்கிறோம், தேவர்களும், அசுரர்களும், அமிர்தம் எடுப்பதற்காக, கடலைக் கடைந்த போது எழுந்த விஷம் இது என்றும், அதை, சிவன் விழுங்கும்போது, பார்வதி கழுத்தைப் பிடித்து தடுக்கவே அவருக்கு திரு நீல கண்டன் என்ற பெயர் வந்ததாகவும் மட்டும் அறிவோம்.அவ்வளவுதான்.

 

விஷத்தை வைத்து பல பொன்மொழிகளும் உண்டு.

முதலில் விஷத்தின் வகைகளைக் காண்போம்:–

ஸ்ருங்கி ச காலகூடஸ்ச முஸ்தகோவத்சநாபக:

சங்ககர்ணாதி யோகோயம் மஹாபஞ்ச விஷாமித:

பொருள்:ஸ்ருங்கி, காலகூடம், முஸ்தக:, வத்சநாபக:, சங்ககர்ணி என்ற ஐந்தும் பெரிய விஷங்களாகும்.

அர்கக்ஷீரம் ஸ்னுஹிக்ஷீரம் ததைவ கலிஹாரிகா

தத்தூர: கரவீரஸ்ச பஞ்சசோபவிஷா: ஸ்ம்ருதா:

பொருள்:-

துணை விஷங்கள் ஐந்து:- அர்கக்ஷீரம், ஸ்னுஹிக்ஷீரம், கலிஹாரிகா, தத்தூர:, கரவீர:

விஷம் பற்றிய பொன்மொழிகள்:–

அதிபயங்கர விஷம்

ந விஷம் விஷமித்யாஹு ப்ரம்மஸ்வம் விஷமுச்யதே

விஷமேகாகினம் ஹந்தி ப்ரம்மஸ்வம் புத்ர பௌத்ரகம்

பொருள்:–

விஷம் என்று சொல்லப்படுபவை எல்லாம் விஷமல்ல; பிராமணனுடைய சொத்துதான் பிறருக்கு விஷம்; ஏனெனில் விஷம் ஒருவரைத்தான் கொல்லும்; பிராமணன் சொத்தை அபகரிப்பவன் அடியோடு அழிவான். புத்ரன், பௌத்ரன் அதாவது மகன், பேரன் எல்லோரையும் அந்த விஷம் அழித்துவிடும்.

சிவன் சொத்து குல நாசம் – என்ற பழமொழியும் ஒப்பிடற்பாலது.

தமிழில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் உள்ளன. அவைகளில் பெரும்பாலும் பிரம்மதேயம் (பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட நிலதானம்) அல்லது தேவதானம் (கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலதானம் பற்றியவையே). அவற்றின் இறுதியிலும் அந்த சொத்துக்களை அபகரித்தால் என்ன நேரிடும் என்ற எச்சரிக்கைகள் உள்ளன.

கிழவனுக்கு இளம் மனைவி விஷம்

அனப்யாசேன விஷம் சாஸ்த்ரம்

அஜீர்ணே போஜனம் விஷம்

தரித்ரஸ்ய விஷம் கோஷ்டி

வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

படிக்காதவனுக்கு சாஸ்த்ரம் (நூல்கள்) விஷம்; அஜீர்ணக் கோளாறு உடையவனுக்கு சாப்பாடு விஷம்; ஏழைக்கு பசு தானம் விஷம்; கிழவனுக்கு இளம் மனைவி விஷம்.

Poison-Center-Mr-Yuck

சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணியில், விஷ புஷ்பங்கள், விஷக் கிழங்குகள், விஷக் கனிகள், விஷப் பால்கள், விஷப் பிசின்கள், விஷ அன்னத்தின் (உணவு) லட்சணம், விஷ அன்னத்தைப் (உணவு) சோதிக்கும் முறை ஆகியன பற்றிய விவரங்கள் உள.

காகத்துக்கு சோறு போடுவது ஏன்?

இந்துக்கள், காகம், நாய் முதலியவற்றுக்கு சோறிட்டு உண்டதால், உணவில் வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ விஷம் கலக்கப் பட்டாலும், அந்த மிருகங்கள், பறவைகளின் உடல்நிலையை வைத்துக் கண்டுபிடித்து வந்தனர்.

சம்ஸ்கிருத்தில் விஷம் பற்றிப் பல பழமொழிகள் உண்டு:–

விஷத்தை மருந்து ஆக்குவது கடினம் (துஷ்கரம் விஷம் ஔஷதீ கர்தும் – சூத்ரகனின் மிருச்ச கடிக நாடகம்

கிசுகிசுப்பேச்சு விஷம் ஆகும் (த்வேஷாக்யானம் விஷம் பவேத் – பிருஹத் கதா கோச)

தங்கக் கோப்பையில் கொண்டுவதாலும் விஷம், விஷம்தான்; அமிர்தமாக மாறிவிடாது (ந ஹேமகும்பே  விஷம் அம்ருதம் பவேத்)

விஷத்துக்கு விஷமே முறிவு (விஷஸ்ய விஷம் ஔஷதம்) – கஹாவத்ரத்னாகர்

விஷம் வைத்த கை உன் கையே ஆனாலும் வெட்டப் படவேண்டியதே (ஸ்வஹஸ்தோபி விஷதிக்த:சேத்ய:)- சாணக்கிய நீதி சாஸ்த்ரம்

 

–சுபம்–

அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்! – 2 (POST No. 2840)

Gurdjieff13-1-24_3

Article written by S.NAGARAJAN

 

Date: 26 May 2016

 

Post No. 2840

 

Time uploaded in London :–  6-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

 

 

FIRST PART WAS PUBLISHED HERE ON 21 MAY 2016. THIS IS PART 2

 

27-5-16 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்! – 2

ச.நாகராஜன்

 

 

“நீங்கள் சரிபார்க்காத எதையுமே நம்பாதீர்கள் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.”

–  குர்ட்ஜியெஃப்

 

 

குர்ட்ஜியெஃப் தனது சீடர்கள் அனைவரையும் தங்கள் சக்தியை எல்லையற்று விரிவு படுத்துவதை விரும்பினார்.

அவரது சீடர்களில் ஒருவர் ஃப்ரிட்ஜ் பீட்டர்ஸ் (Fritz peters) என்பவர். அவரை தனது புல்வெளியை நன்கு செதுக்கும்படி குர்ட்ஜியெஃப் கூறினார். ஒரு நாளில் ஒரு சிறிய பகுதியையே சுத்தம் செய்த பீட்டர்ஸ் நாளடைவில் ச்கதி அதிகமாகவே பல ஏக்கர்கள் கொண்ட புல்வெளிப் பகுதியை தான் ஒருவராகவே ஒரே நாளில்  முடித்தார்.அப்படி ஒரு நம்ப  முடியாத ஆற்றல் அவருக்கு வந்து விட்டது!

 

 

மனித ஆற்றலை அனைவராலும் வளர்க்க முடியும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் உண்டு.. இதை யார் வேண்டுமானாலும் உடனடியாக்ச் செய்து பார்க்கலாம்!

 

 

உங்கள் வயிற்றை ஒரு கையினால்  தேய்த்து விட்டுக் கொண்டே இன்னொரு கையினால் உங்கள் தலையை இலேசாக தட்ட ஆரம்பியுங்கள். அல்லது ஒரு காலை முன்னும் பின்னுமாகத் தரையில் கடிகார பெண்டுலம் போலத் தேய்த்து விட்டுக் கொண்டே இன்னொரு காலின் முன் பகுதியினால் தரையைத்தட்ட ஆரம்பியுங்கள். 99 சதவிகிதம் பேரால் இதைச் சரியாகச் செய்ய முடியாடு. வயிற்றைத் தடவும் போதே தலையையும் தடவுவார்கள்.

 

 

குர்ட்ஜியெஃப் தனது சீடர்களுக்கு கைகள், கால்கள் போன்ற பல்வேறு அங்கங்களையும் ஒரே சமயத்தில் வெவ்வேறு விதமான பயிற்சிகளைச் செய்யுமாறு கூறுவார்.

சில சமயம் ஒரு அபிநய நிலையில் அப்படியே உறைந்து நிலைத்து நிற்குமாறு கூறி விடுவார்.

 

 

அவர் ஒரு முறை பீட்டர்ஸுக்கு அளப்பரிய் ஆற்றலைத் தரவே தனக்குள்ளிருந்து பெரும் ஆற்றால் ஊற்றாக ஊறுவதை பீட்டர்ஸ் உணர்ந்தார். ஆனால் அதே சமயம் ஆற்றலைத் த்நத குர்ட்ஜியெஃப் மிகவும் தளர்ந்து போனார்.

 

நமது மனம் பிரம்மாண்டமான ஆற்றல் தேக்கத்தைக் கொண்டுள்ளது. ஆனால் தினசரி வாழ்க்கை முறையால் எழுந்தவுடன் ப்ல துலக்குவது, பேப்பர் படிப்பது,. அலுவலகம் செல்வது, சாப்பிடுவது என்று பல பழக்கங்களுக்கு அடிமையாகிறோம். ரொபாட் போல மனிதன் பழக்கங்களுக்கு அடிமையாகி இயங்க ஆரம்பிக்கிறான். இந்த ரொபாட் இயக்கத்திலிருந்து வெளி வருவது நம் கையில் தான் இருக்கிறது.

ஆனால் அதே சமய்ம் அளப்ப்ரிய ச்கதி வந்து விட்டால் அது அபாரமான விஷயம் மட்டுமல்ல; அபாயகரமான விஷயமாகவும் ஆகி விடக் கூடும்.

 

 

உதாரணமாக பென்னட் காட்டில் சென்ற போது பல்வேறு உணர்ச்சிகளின் எல்லையைத் தொட்ட போதும் அதில் அப்படியே இருக்க விரும்பவீல்லை. ஏன்? அப்படிப்பட்ட எல்லையற்ற சக்தியை மனிதனால் தாங்க முடிவதில்லை.

 

ஆகவே தான் படிப்படியாக சக்திகளை மேம்படுத்திக் கொண்டு அவற்றை நிலை நிறுத்தி படிப்படியாக முன்னேற வேண்டும் என்று யோகிகள் கூறினார்கள் போலும்!

 

இதே போன்ற உணர்வை ஒரு எல் எஸ் டி போதை மருந்தை உட்கொண்ட போதும் பெறலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். போதை மருந்த உட்கொண்ட ஒருவர் சாவைப் பற்றி நினைத்த போது எதிரிலிருந்த அனைவரும்  மண்டையோடுக்ளாகத் தெரிந்து சிரிக்க ஆரம்பிக்கும் காட்சியைக் கண்டார்.. பூமியோ பிணம் எரியும் சுடுகாட்டு நாற்ற்த்தை வெளிப்படுத்தியது.

 

ஆனால் போதை மருந்து தரும் உணர்வுகளுக்கும் யோகிகள் பெரும் ஆற்றலுக்கும் பிரக்ஞை நிலையில் பெருத்த வேறுபாடு உண்டு.ஒன்று போலி. மற்றது உண்மை!

ஆகவே போதை மருந்து சாப்பிட்டு போலி உணர்வுகளைப் பெறாமல், ஒரு எல்லைக்குட்பட்ட ஆற்றலோடு பல்வேறு இயல்பான பழக்க வழக்கங்களுடன் இருப்பதும் கூட ஒரு விதத்தில் நல்லது தான்! திடீர் பாய்ச்சலில் அனைத்து ஆற்றலையும் பெற்றுத் திகைக்காமல்,

மெதுவாக உரிய விதத்தில் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளலாம்.

 

பிர்பல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒளிக்கு எடை உண்டு என்றும் அது ஒரு அழுத்தத்தைத் தர வல்லது என்றும் சொன்ன போது அனைவரும் சிரித்தனர். ஆனால் 1918இல் ஏற்பட்ட கிரகணத்தின் போது ஒளிக்கு எடை உண்டு என்பதும் அது ஈர்ப்பு விசையினால் பாதிக்கப்படும் என்பதும் நிரூபிக்கப்பட்டது.

 

ஆனால் இது வரை எண்ணத்திற்கு ஒரு அழுத்தம் உண்டா அது மற்றவரை எப்படி பாதிக்கும் அல்லது முன்னேற்றும் என்பதற்கு விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் இல்லை.

குர்ட்ஜியெஃப் போன்றோரின் பல்வேறு வாழ்க்கைச் சமப்வங்களே அதிசயிக்கத் தக்க விதத்தில் எண்ண சக்தியையும் இதர ஆற்றல்களையும் விளக்குகின்றன.

 

 

அறிவியல் முன்னேறி எண்ண சக்தியை பரிசோதிக்கும் சில கருவிகளைக் கண்டு பிடிக்க வேண்டும். எதிர்காலத்தில் அது நிறைவேறும் என உறுதியாக நம்பலாம்!

 

குர்ட்ஜியெஃப் இறந்து விட்டார் என்று பலராலும் பரப்பப்பட்ட செய்தியால் பென்னட் சில காலம் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் திடீரென்று அவர் உயிருடன் இருப்பதை அறிந்து அவரைச் சந்தித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.குர்ட்ஜியெஃப்பின் இறுதி வரை அவருடன் தொடர்பு கொண்டிருந்தார்.

 

அவரைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை உள்ளடக்கி அவர் ஒரு புத்தகத்தையும் எழுதினார்.

 

அறிவியலுக்கும் அமானுஷய சக்திக்கும் பாலமாக அமையும் சிலர் குர்ட்ஜியெஃப் போலப் பிறந்து கொண்டே இருக்கின்றனர்!

 

chris hadfield

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

வின்ண்வெளியில் நிலை கொண்டிருக்கும் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் எனப்படும் பன்னாட்டு விண்வெளிநிலைய்ம் பூமியை ஒவ்வொரு 92 நிமிடமும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 16 முறை பூமியைச் சுற்றுகிறது.

 

அதில் நிறைய காமராக்கள் உள்ளன. விண்வெளி வீரரான கிறிஸ் ஹாட்ஃபீல்ட் (Chris Hadfield) தனது கடைசி பயணத்தின் போது 2012 டிசம்பரிலிருந்து 2013 மே மாதம் முடிய அதில் இருந்தார். அப்போது பூமியை 2597 முறை வலம் வந்தார். சுமார் 45000 போட்டோக்களை அவர் எடுத்தார். ஆனால் அவை அனைத்தையும் அவரே ஒரு முறை கூட் முற்றிலுமாகப் பார்க்கவில்லை,

 

ஒரு நாள் யோசித்தார். இவ்வளவு புகைப்படங்கள் எடுத்தும் அவற்றை ஒருமுறை கூடப்  பார்க்கவில்லையெனில் அதற்கு அர்த்தமே இல்லையே! விளைவு, அவற்றைத் தான் பார்த்ததோடு அதில் முக்கியமான போட்டோக்கள் மூவாயிரத்தைத் தேர்ந்தெடுத்தார்

 
ஆனால் இவற்றையும் புத்தகமாக வெளியிட்டால்  விலை கட்டுபடியாகாதே, யாரும் வாங்க மாட்டார்களே என்று அவருக்குத் தோன்றியது.

 

மீண்டும் அவற்றை பரிசீலனை செய்து 192 போட்டோக்களைத் தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிட்டார். புத்தகத்தின் பெயர் யூ ஆர் ஹியர் ; அரவுண்ட் தி வோர்ல்ட் இன் 92 மினட்ஸ் ( ‘You Are Here: Around the world in 92 minutes’)

 

அற்புதமான புகைப்படங்கள் அடங்கிய இந்தப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம். இந்த போட்டோக்கள் பலவற்றை இணையதளங்கள் பலவற்றில் பார்த்து மகிழலாம். நெட் இணைப்பு இருந்தால் மட்டும் போதும்!

 

***********

 

 

 

 

 

 

 

கம்ப ராமாயணத்தில் பஞ்ச மா பாதகம்- 5 பாவங்கள்(Post No.2838)

murder-laurie-silva

Article written by London swaminathan

 

Date: 25 May 2016

 

Post No. 2838

 

Time uploaded in London :–  11-00 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 Drug Abuse 029-0053

ஐந்து தீய செயல்களை இந்துக்கள் பெரிய பாவச் செயல்களாகக் கருதுகின்றனர். அவை

கள், களவு, கொலை, பொய், காமம் (பிறர் மனைவியை விரும்பும் காமம்).

ஓதநீர் மண் இவை முதல் ஓதிய

பூதம் ஓர் ஐந்தினில் பொருந்திற்று அஞ்சியே

வேத நூல் வரன் முறை விதிக்கும் ஐம்பெரும்

பாதகம் திரண்டு உயிர்ப் படைத்த பண்பினான்

-ஆரண்ய காண்டம், கவந்தன் படலம், கம்ப ராமாயணம்

பொருள்:–

கவந்தன் என்னும் அசுரன் பஞ்ச பூதங்களால் மட்டும் ஆனவன் அன்று; பஞ்ச மா பாதகங்கள் ஒன்று சேர்த்து ஒரு உருவம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தானாம்.

அந்தக் கவந்தன், குளிர்ச்சி பொருந்திய நீரும் பூமியும் ஆகிய இவை முதலாகக் கூறப்பட்ட பஞ்ச பூதங்களினால் இவன் உடல் ஆக்கப்பட்டது அல்லாமல், வேத நூல்கள் முறைப்படி உரைக்கும் கள், களவு, பிறர் மனை விரும்புவதாகிய காமம், பொய், கொலை ஆகிய பஞ்ச மா பாதகங்கள் ஒன்றாகச் சேர்த்து உயிர்பெற்று வந்தவன் என்னும் தன்மை உடையவன்.

 

பகவத் கீதை

பகவத் கீதையில் (1-36) அர்ஜுனன், போர் புரிய மறுத்து அதற்குப் பல காரணங்களைக் கூறுகிறான். அதில் ஒன்று கொடும் பாவிகளான, திருதராஷ்டரன் பிள்ளைகளான கௌரவர்களைக் கொன்றால் மிகவும் பாபம் வருமே என்கிறான். கொடும் பாவிகள் என்பதற்கு அர்ஜுனன் பயன்படுத்தும் சொல், ‘ஆததாயின:’ என்பதாகும்.

lies_377131546 (1)

யார் ஆததாயினர்கள் என்பதை ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் அழகாக விவரிக்கிறது. அதில் பஞ்ச மஹா பாதகங்களோடு, ‘தீ வைத்தல்’ என்ற மற்றொரு பாபமும் சேர்க்கப்படுகிறது:–

 

அக்னிதோ கரதச்சைவ சஸ்த்ரபாணிர்த் தனாபஹ:

க்ஷேத்ர தார ஹரச்சைவ ஷடேதே ஹ்யாததாயின:

 

பொருள்:

தீவைப்பவன், விஷம் வைப்பவன் (கொலை), ஆயுதம் கொண்டு ஆயுதமில்லாதவரைக் கொல்பவன், பிறர் பொருளை அபகரிப்பவன், பிறர் நிலத்தை அபகரிப்பவன், பிறர் மனைவியை அபகரிப்பவன் – இந்த ஆறு பேரும் ஆததாயிகள் (கொடும் பாவிகள்) எனப்படுவர்.

ஆக வேத காலம் முதல் இந்தப் பாவப் பட்டியல் இருப்பதால்தான் “வேத நூல் வரன் முறை விதிக்கும் ஐம்பெரும் பாதகம்” என்று கம்பன் சொல்கிறான். வேத நூல்களைக் கரைத்துக்குடித்தவன் கம்பன்!

 

சிறுபஞ்ச மூலத்தில், காரியாசான் கொஞ்சம் மாறுதலான பாவப் பட்டியல் தருகிறார்:

பொய்யாமை பொன் பெறினும் கள்ளாமை மெல்லியலார்

வையாமை வார்குழலார் நச்சினும் – நையாமை

ஓர்த்துடம்பு பேருமென்று ஊன்வாய் உண்ணானேல்

பேர்த்துடம்பு கோடல் அரிது

பொருள்:-

ஒருவர்க்கு தங்கக் கட்டிகள் கிடைக்கும் என்றாலும் பொய் சொல்லாதிருத்தல், திருடாமல் இருத்தல், தன்னைவிட வலிமை குறைந்தவரை திட்டாமை, பெண்களே மேலே வந்து விழுந்தாலும் அவர்களை விரும்பாமை, உடல் மெலிகிறதே என்று எண்ணி ஆடு, மாடு, கோழிகளைக் கொன்று உண்ணாமை – இந்த ஐந்தையும் பின்பற்றுவோருக்கு மறு பிறவி இல்லை; முக்தி கிட்டும்.

theft

தம்மபதம்

இதையே புத்தமதத்தினரின் வேத நூலான தம்மபதத்திலும் புத்தர் கூறுவார்:-

யார் ஒருவன் மற்ற உயிரைப் பறிக்கிறானோ (கொலை), யார் ஒருவன் தனக்குக் கொடுக்கப்படாததை எடுத்துக் கொள்கிறானோ (களவு), யார் ஒருவன் பிறர் மனைவியை அனுபவிக்கிறானோ (காமம்), யார் ஒருவன் பொய் சொல்கிறானோ, யார் ஒருவன் மதுபானம் அருந்துகிறானோ அவன் தனக்குத்தானே வேர் செல்லும் ஆழத்துக்குக் குழி பறித்துக் கொள்கிறான். (தம்மபதம் -246, 247)

ஆன்றோர் சொல்லை மனதில் கல்லெழுத்தாகப் பதித்து, அவர் சொற்படி நடப்போம்.

 

–சுபம்–

 

 

 

கீதையைப் படிக்காத வாழ்வு வீணே! (Post No.2837)

Srimad_Bhagavad__gita

Article written by S.NAGARAJAN

 

Date: 25 May 2016

 

Post No. 2837

 

Time uploaded in London :–  5-52 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

 

கீதையைப் படிக்காத வாழ்வு வீணே!

 

ச.நாகராஜன்

la bhagavad gita

ஹிந்து மதத்தின் உயரிய நூல் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. ஆதி சங்கரர் ‘பகவத் கீதா கிஞ்சித தீதா என்று கூறி பகவத் கீதையைக்  கொஞ்சமாவது படியுங்கள் என அருளுரை பகர்ந்துள்ளார்.

 

கீதையின் பெருமையைக் கூறும் சுலோகங்கள் ஆயிரமாயிரம் உண்டு. அவற்றில் இரு சுபாஷித சுலோகங்களை இங்கு பார்ப்போம்.

 

கீதா சுகீதா கர்தவ்யா கிமன்யை: சாஸ்த்ரசிந்ததே:   I

யா ஸ்வயம் பத்மநாபஸ்ய முகபத்யாத் வினி:ஸ்ருதா:  I I

 

இதன் பொருள்:- கீதை திருப்பித் திருப்பி ந்ன்றாகப் படிக்கப் பட வேண்டும். மற்ற சாஸ்திரங்களை எண்ணி என்ன பிரயோஜனம்? ஏனெனில் இது பதமநாபனின்  முக கமலத்தினின்றே வந்த ஒன்றல்லவா?

ஆக கண்ணனின் முகத்திலிருந்து வந்த அரிய நூலில் இல்லாத விஷயம் வேறு எதில் இருக்கப் போகிறது?

இதன் ஆங்கில மொழியாக்கம் இதோ:-

 

The Bhagavat Gita should be repeatedly recited well; of what use are thoughts about other scriptures? For, it has come out of the lotus-mouth of the Lord Krishna (the Lotus-navelled one) Himself. (Tranlation by S.B.Nair)

 

இன்னொரு ஸ்லோகம் மஹாபாரதத்தில் உள்ள அரிய விஷயங்களைப் பட்டியலிட்டுக் கூறுகிறது. அதில் முதலிடத்தைப் பிடிக்கிறது கீதை.

 

கீதா விதுரவாக்யானி தர்மா: ஷாந்தனவேரிதா:    I                 ந ஸ்ருதா பாரதே யேன: தஸ்ய ஜன்ம நிரர்த்தகம்  II

 

இதன் பொருள்:- எவன் ஒருவன் ம்ஹாபாரதத்தில் கீதையையோ , விதுரனின் வாக்கியங்களையோ, தர்மத்தைப் பற்றிய பீஷமரின் பொருளுரைகளையோ படிக்கவில்லையோ அவனது வாழ்வு பூமியில் வீணே!

கண்ணனின் கீதை

விதுரனின் அரத்தமுள்ள நீதி

பீஷ்மரின் தர்மோபதேசம்

ஆகிய இவை மஹாபாரதத்தின் சாரமாக அமைந்துள்ளதால் இவற்றைப் பட்டியலிட்ட கவிஞர் இதைப் படியுங்கள் என்று சொல்லி, இவற்றைப் படிக்காத வாழ்வு வீணே என்கிறார்  முத்தாய்ப்பாக!

 

இதன் ஆங்கில மொழியாக்கம் இதோ:-

 

He who has not listened to the Bhagavat Gita , the speeches of Vidura and the disquisitions on Dharma by Bhishma  in the Mahabharata has his birth on the earth in vain. (Tranlation by S.B.Nair)

 

 

கீதையைப் படிப்போம்;

வாழும் வழி அறிந்து அந்தப் பாதையில் செல்வோம்

உயர்வோம்!

*********

மனது இரண்டு வகைப்படும்! (Post No.2835)

Abstract Businessman has a Moral Dilemma.

Article written by London swaminathan

 

Date: 24 May 2016

 

Post No. 2835

 

Time uploaded in London :–  9-08 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

good_and_bad

மனோ ஹி த்விவிதம் ப்ரோக்தம் சுத்தம் சாசுத்தமேவ

அசுத்தம் காமசங்கல்பம் சுத்தம் காமவிவர்ஜிதம்

–அம்ருதபிந்து உபநிஷத்

மனது இரண்டு வகையானது; ஆசைகள் நிறைந்திருந்தால் அது அசுத்தமானது; அதாவது எபோதும் ஏதாவது ஒன்றின் மீது விருப்பம் கொண்டு அதையே நாடித் தேடி ஆடி ஓடி காலம் கழிப்பது. ஆசைகளை அறவே ஒழித்தால் அது சுத்தமானது; இதற்கு நம் நாட்டு சாது சந்யாசிகள், முனிவர்கள், மகான்கள் எடுத்துக் காட்டு. அவர்கள் ஆசையை அறவே ஒழித்து, பேரின்பத்தில் வாழ்ந்தார்கள்.

இதே கருத்தை வள்ளுவனும் இயம்புவதைப் படித்து இன்புறலாம்:–

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாய்மை வேண்ட வரும் (குறள் 364)

பொருள்: தூய்மை எனப்படுவது எந்தப் பொருளிடத்தும் ஆசை கொள்ளாதிருத்தல்; அந்த நிலை வாய்மையை நாடுவோருக்கு தானாக வந்து சேரும்.

 

ஆசையே துன்பத்திற்குக் காரணம் – என்பது புத்தர் பிரானின் முக்கியப் பொன்மொழி.

“ஆசை என்னும் காட்டை அழியுங்கள்; ஒரு மரத்தை மட்டுமல்ல.ஏனெனில் அந்தக் காட்டில்தான் அபாயமே உள்ளது. அந்தக் காட்டிலுள்ள மரங்களை வெட்டி, அதன் கீழ் வளர்ந்துள்ள புதர்களையும் அழியுங்கள். பிக்ஷுக்களே! அப்படிச் செய்வீர்களானால் நீங்கள் விடுதலை (நிர்வாண) பெறுவீர்கள்”.

–தம்மபதம் 283

 

ஆங்கிலத்திலும் ‘ஆசை உள்ளவனுக்கு அமைதி இல்லை’, ‘உயர்ந்த மனிதர்கள் உன்னத ஆசை கொள்வர்’ என்றெல்லாம் பழமொழிகள் உண்டு

Desire has no rest

Humble hearts have humble desires

He that desires but little has no need of much.

Good Choice, Bad Choice Road Sign with blue sky and clouds.

இந்து மதத்தில் ரிஷிகள் அழகான ஒரு உவமை சொல்லுவர்:–

“ஆசைக்கு அணை போடமுடியாது. யாரேனும் ஒருவர் அப்படி நினைத்தால் நெய்யைக் கொண்டு தீயை அணைப்பதற்குச் சமம்; அதாவது ஆசையை நிறவேற்ற, நிறைவேற்ற, புதுப்புது ஆசைகள் எழும், தேவைகள் வரும்.

 

சம்ஸ்கிருதத்திலும் இதற்கிணையான பழமொழிகள் இருக்கின்றன:–

ஆசா துக்கஸ்ய காரணம் = ஆசையே துன்பத்திற்குக் காரணம்

ஆசாவதிம் கோ கத: = ஆசைக் கடலின் கரையைக் கண்டவர்கள் யார்?

கால: க்ரீடதி கச்சத்யாயுஸ்தபி ந முஞ்சத்யாசாவாயு: (மோகமுத்கரா) = காலமோ ஓடுகிறது, வயதோ ஆகிறது, ஆனால் ஆசையின் பிடி தளரவே இல்லை.

 

இதை தமிழிலும் அழகாகச் சொல்லுவர்—

“மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை”.

 

மேலே கண்ட, தூய்மையையும் ஆசையின்மையையும் முடிச்சுப் போடும் சம்ஸ்கிருத ஸ்லோகமும் வள்ளுவன் குறளும் பாரதீய சிந்தனையின் ஒற்றுமையைக் காட்டி நிற்கின்றது.

 

–சுபம்–

பலன் தரும் நவக்ரஹ யந்திரங்கள்! (Post No.2834)

ashmolean museum navagrahas

Picture: Navagrahas at Ashmolean Museum, Oxford, UK( picture by london swaminathan)

Written  BY S NAGARAJAN

Date: 24 May 2016

 

Post No. 2834

 

 

Time uploaded in London :–  5-51 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வாழ்க்கை முன்னேற்றம்

 

பலன் தரும் நவக்ரஹ யந்திரங்கள்!

 

.நாகராஜன்

 navagrahas from British Museum

Nine Planets/ Navagrahas at British Museum, London (Picture by london swaminathan)

நவக்ரஹங்களும் மனிதர் வாழ்க்கையில் அவரவர் வினைகளுக்கு ஏற்ப நல்லதையும் கெட்டதையும் உரிய காலத்தில் வழங்குகின்றன என்பது ஜோதிட சாஸ்திர உண்மை.

 

தீய பலன்களின் வீரியத்தைக் குறைக்கவும் நல்ல பலன்களின் வலிமையை அதிகரிக்கவும் அந்தந்த கிரஹங்களின் யந்திரங்களை தாமிரத் தகட்டில் எழுதி அவரவர் வைத்திருப்பது நலம் பயக்கும்.

 

 

ஜோதிட ரீதியாக வலுவிழந்த கிரஹங்களின் வலுவைக் கூட்டவும், தீமை தரும் தசா புக்திகளில் அந்தந்த கிரஹத்திற்குரிய யந்திரத்தை அணிந்து தீமையைக் குறைக்கவும் இந்த் நவக்ரஹ யந்திரங்கள் தொன்று தொட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அணிந்து பார்த்தால் பலன் தானே தெரியும்!

 

ஒவ்வொரு க்ரஹத்திற்கும் உரிய யந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நல்ல நாளில் அந்தந்த கிரஹத்திற்குரிய ஹோரையில் இதை அணியலாம்.  நல்ல பலன் தெரியும்.

 

வாழ்க்கையில் தீமை தவிர்த்து முன்னேற்றம் காண ரிஷிகள் வகுத்த பல வழிகளில் இந்த யந்திரங்களும்  ஒன்று!

 

6 7 2
1 5 9
8 3 4

 

Surya (Sun) சூரியன்

 

 

7 8 3
2 6 10
9 4 5

 

Chandra (Moon) சந்திரன்

 

8 9 4
3 7 11
10 5 6

 

Mangala (Mars) செவ்வாய்

 

 

9 10 5
4 8 12
11 6 7

 

Budha (Meercury) புதன்

 

10 11 6
5 9 3
12 7 8

 

Brihaspati (Jupiter) வியாழன்

 

 

11 12 7
6 10 14
13 8 9

 

Sukra (Venus) சுக்ரன்

 

 

12 13 8
7 11 15
14 9 10

 

Shani (Saturn)  சனி

 

13 14 9
8 12 16
15 10 11

 

Rahu  ராகு

 

rahu, BM,London

 

Ketu, BM, London

Pictures of Rahu and Ketu at the British Museum, London(Pictures were taken by london swaminathan)

14 15 10
9 13 17
16 11 12

 

Ketu  கேது

 

 

Budha Sukra Chandra
Brihaspati Rahu Ketu
Mangala Shani Sun

 

 

Navagraha Yantras

நவ க்ரஹ யந்திரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ள யந்திரம்

**********

 

 

மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது! (கட்டுரை எண்.2832)

short 3

Article written by London swaminathan

 

Date: 23 May 2016

 

Post No. 2832

 

Time uploaded in London :–   9-58 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

குள்ளமாக இருப்பவர்களைக் கேலி செய்வது எல்லா கலாசாரங்களிலும் இருக்கிறது.

 

“கள்ளனை நம்பினாலும், குள்ளனை நம்பலாகாது” – என்று தமிழ்ப் பழமொழி கூறும். சர்கஸிலும் கூட நகைச் சுவை உண்டாக்க, குள்ளர்களையே பயன் படுத்துகின்றனர். கோமாளி என்றாலே – குள்ளர்கள்தான் என்று ஆகிவிட்டது.

short 1

வள்ளுவர் வாழ்ந்த தமிழகத்திலும் இவ்வாறு கேலி செய்தனர் போலும். உடனே வள்ளுவன் சொன்னான்:

 

உருவு கண்டெள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து (குறள் 667)

பொருள்:– பெரிய தேருக்கு முக்கியமானது அச்சாணிதான். அது கழன்று விழுந்தால் தேரே குடை சாயும். அது போல உலகிலும் பலர் உருவத்தில் சிறிதாயிருப்பர், அவர்கள் தேர்ச்சக்கர ஆணி போன்றவர்கள்; ஆகையால் குள்ளர்களைக் கேலி செய்யாதே என்கிறான் வள்ளுவன்.

 

ஓங்கி உலகளந்த உத்தமனாக – த்ரிவிக்ரமானாக – உருவெடுக்கும் முன்னர் திருமாலும் வாமனனாக (குள்ளமாக) இருந்தான். இதையொட்டியே “மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி (புகழ்) பெரிது” என்பர்,

 

அவ்வையாரும் அழகாகச் சொன்னார்:-

மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம்

உடல் சிறியரென்றிருக்க வேண்டா – கடல் பெரிது

மண்ணீரும் ஆகாஅதனருகே சிற்றூரல்

உண்ணீரு மாகிவிடும்

–வாக்குண்டாம், அவ்வையார்

 

பொருள்:–தாழம்பூ மடலுடன் பெரிதாக இருக்கும். மகிழம் பூ சிறியதாக இருக்கும். ஆயினும் மகிழம்பூ மணமே இனியது. கடல் பெரிதாக இருக்கலாம்; ஆயினும் அதன் நீரை யாரும் பருக முடியாது. அதனருகே ஒரு சிறிய நல்ல நீரூற்று இருந்தாலும் அதற்குத்தான் மதிப்பு அதிகம்.

 

சூரியனும் குடையும்

அறநெறிச்சாரம் என்னும் நூலிலும் ஒரு பாடல் உண்டு:–

பல கற்றோம் யாம் என்று தற்புகழ்தல் வேண்டாம்

அலர் கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு

அச்சாணி அன்னது ஓர் சொல்

பொருள்:–

பெரிய சூரியனின் ஒளியை மறைக்க கையிலுள்ள ஒரு குடை போதும்; கொஞ்சம் படித்தவர்கள் கூட ஒரு சொல்லினால் மற்றவர்களை மடக்கிவிட முடியும். ஆகையால் நாந்தான் மெத்தப் படித்தவன் என்ற செருக்கு வேண்டாம்.

tall-and-short-t11509

விரலான் கதை

சிறியவர், பெரியவர் என்ற உருவங்களை வைத்து உலகில் ஏழு குள்ளர்கள், லில்லிபுட் மனிதர்கள் என்று பல கதைகள் உண்டு. ஜோனதன் ஸ்விப்ட் எழுதிய (லில்லிபுட்) கல்லிவரின் யாத்திரை நம்முடைய விரலான் கதையைக் காப்பி அடித்து எழுதப்பட்டது என்று நான் முன்னர் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் கூறினேன். இதோ அந்தக் கட்டுரை:–

சூரியனுடன் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் யார்: 31 டிசம்பர், 2011

 

–subham–

 

 

கடலுக்கடியில் சக்ரவாள மலை:கம்பன் தரும் தகவல் (Post No. 2830)

submarine mountains 1

Article written by London swaminathan

 

Date: 22 May 2016

 

Post No. 2830

 

Time uploaded in London :–   6-55 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

sea-mounts

கடலுக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மலைத் தொடர் பற்றி இந்திய இலக்கியங்கள் பேசுகின்றன. தமிழ், சம்ஸ்கிருத நூல்கள் இதைப் பற்றி குறிப்பிடுகின்றன. கடலுக்கடியில் வட்டமாக பூமியைச் சுற்றி இம்மலை இருப்பதாக மக்கள் நம்பினர். இதனால் இதை, புலவர் பெருமக்கள் உவமையாகக் கூட பயன்படுத்தினர்.

 

இப்பொழுது கடலடி மலைகளையும், கடற் படுகைகளையும் ஆராயும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாகிவிட்டதால் எளிதில் ஆராய முடிகிறது. கடலுக்கடியில் மிக உயரமான மலைகள் இருப்பதை கடலியல் ஆராய்ச்சியளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆயினும் நமது இலக்கியங்கள் வருணிப்பது போல இது வட்டமாகத் தொடர்ந்து இல்லாமல் ஆங்காங்கே இடைவெளி விட்டு மலைத் தொடர்களாக இருக்கின்றன. இதைத் தான் நமது இலக்கியங்கள் சக்கரவாளம் என்று வருணிக்கிறது என்று சொல்லலாம்.

 

கடலடி ஆராய்ச்சிக் கருவிகள் இல்லாமலேயே, பூமி முழுவதும் எல்லா இடங்களிலும், கடலுக்கடியில் இப்படி ஒரு மலைத் தொடர் இருப்பதைக் கண்டுபிடித்த நம் முன்னோர்களின் அறிவை எண்ணி வியக்கலாம். கடற்பயணம் செய்த நம் முன்னோர்கள் இதைக் கண்டு பிடித்திருக்கலாம்.

 

இதோ கம்பன் சொல்லும் உவமை:

தேமொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து

ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார்

நேமி மால் வரைநெருக்குகின்றதே

ஆம் எனல் ஆய கைம்மதிட்குள் ஆயினார்

-கவந்தன் படலம், ஆரண்ய காண்டம், கம்பராமாயணம்

 

பொருள்: சக்கரவாளம் என்று பெரிய மலை ஒன்று உள்ளது. அது நெருங்கி வந்து நெருக்குகிறது என்று சொல்லுமாறு கவந்தன் என்னும் ராட்சசனின் கைகள் ராம, லட்சுமண சகோதரர்களைச் சுற்றி வளைத்தது. தேன் போல இனிய மொழி பேசும் சீதையின் பொருட்டு அரக்கர் சேனை வந்துவிட்டது என்று எண்ணி மகிழ்ந்தனர்.

 

கவந்தனின் கைகள் வளைத்ததை, சக்கரவாக மலை நெருக்கியதற்குக் கம்பன் ஒப்பிடுகிறார். மக்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருந்தால்தான் புலவர்கள் அதை உவமையாகப் பயன்படுத்துவர். ஆகவே மக்களுக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருந்தது என்றே சொல்லல்லாம்.

submarine2

கம்பனுக்கு முன் தோன்றிய பழமொழி நானூறு என்னும் நூலிலும் இதோ ஒரு உவமை:-

 

கெடுவலெனப்பட்ட கண்ணும் தனக்கோர்

வடுவல்ல செய்தலே வேண்டும் – நெடுவரை

முற்று நீராழி வரையகத் தீண்டிய

கற்றேயும்; தேயாது சொல்

-பழமொழி

 

பொருள்:-  பெரிய சக்கரவாள மலை சூழ்ந்த கடலை எல்லையாக உடைய உலகத்திலுள்ள மலைகள் தேயும்; ஆனால் வடுச்சொல் தேயாது. ஆகையால் தான் கெடுவோம் என்று தெரிந்தாலும்,தனக்கு பழி உண்டாகத செயல்களையே செய்தல் வேண்டும்.

 

–சுபம்–