மருக்கொழுந்து ஏற்றுமதி (Post No.12,910)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,910

Date uploaded in London – –   12 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ரோஜாச்செடியில் முள் நிறைந்த தண்டு, கிளைகளுக்கு இடையே ரோஜா மலர் இருக்கும். மல்லிகைச் செடியில் காம்பின் மீது பூக்கள்  இருக்கும். அங்கு மட்டுமே வாசனை. ஆனால் ஒரு செடி முழுதுமே வாசனை அடிக்கிறதென்றால் , அது மருக்கொழுந்து செடியாகவே இருக்கும். பச்சை  நிறத்தில் இருந்தாலும் அது பூ மாலையில், கதம்ப மாலையில் , கடவுளின் பாதத்தில் மணங் கமழ இடம்பெறும்.

ஆங்கிலத்தில் இதை Wormwood வோர்ம் வுட் என்பர். இது ஒரு மூலிகை; மருந்தாகவும் நறுமணப் பொருளாகவும் பயன்படுகிறது .

மரிக்கொழுந்து என்றும் எழுதுவார்கள். பசுமை வண்ணத்தில் சிறிய இலைகளுடன், மெலிதான உருவில் தண்டுகளாகக் காட்சியளிக்கும் அவை, இருக்கும் இடங்கள் எல்லாம், நறுமணத்தைப் பரப்பும்!

மருக்கொழுந்து செடியை இந்தியா உள்பட  48 நாடுகள்  ஏற்றுமதி செய்கின்றன. ஆண்டுதோறும் 1851 கப்பல் லோடு loads விற்பனை ஆகிறது  (Global Export Trade data of Wormwood:1851 Export Shipments found from 48 exporting Countries)

xxxxx

மருக்கொழுந்து சாகுபடி

மரிக்கொழுந்து, வண்டல் நிலம், கரிசல் நிலம், மற்றும் செம்மண் நிலங்களில் அதிக அளவில் வளரும். மிதமான மழை மற்றும் சூரிய ஒளி மரிக்கொழுந்து செடிகளை நன்கு வளர வைக்கும் தன்மை உள்ளவை. அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி, உரம் மற்றும் மருந்து தெளிக்க வேண்டிய அவசியம் இல்லாமலேயே, நன்கு செழித்து வளரும் தன்மை மிக்கது. ஓராண்டு காலம் வரை இலைகள் மற்றும் தண்டுகள் மூலம், நறுமணப் பயன்கள் தரும் மரிக்கொழுந்து, அடர்த்தியாக, நிறைய கிளைகளுடன் வளரும்.

மரிக்கொழுந்து சாகுபடி, இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சுமார் 1000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

மரிக்கொழுந்து ஓராண்டு வாழும் வகையை சார்ந்த பயிராகும். 45-80 செ.மீ. உயரம் நேராக வளரக்கூடிய இச்செடிகள் சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது. மாலைகளுக்கு உபயோகிப்பதற்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து விதைத்ததில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யபடுவதால் எந்த பருவத்திலும் சாகுபடி செய்யலாம். ஆனால், வாசனை எண்ணெய்க்காக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மார்ச் வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.

பூக்கும் தாவர வகைப் பிரிவில் ஆஸ்டரேசி ( family Asteraceae) குடும்பத்தில் 2000 வகைகள் உடைய துணைக் குடும்பத்த்தில் இதுவும் ஒன்று. ஆங்கிலத்தில் இதற்கு பல பெயர்கள் இருக்கின்றன (artemisia plant, the artemisia herb, the sweet annie herb, and “sweet wormwood.). இதன் தாவரவியல் பெயர் Artemisia absinthium ஆர்டிமிஸியா அப்சிந்தியம்.

xxxxx

மருத்துவ உபயோகங்கள்

பசியின்மையைக்  குணப்படுத்தவும் பித்த நீர்ப் பிரச்சனைகளை அகற்றவும், வயிற்று நோய்களை நீக்கவும் மருக்கொழுந்து பயன்படுகிறது ; குடலில் ஏற்படும் பிடிப்பு, காய்ச்சல், கல்லீரல் பிரச்சனை, புழுக்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை போக்கவும் இதை உபயோகிக்கிறார்கள் . யாருக்காவது உடலுறவு கொள்வதில் விருப்பமின்மை இருந்தால் அதை மாற்றவும் இது டானிக்காக செயல்படுகிறது ; வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது

காயங்கள் ஏற்பட்டாலோ, பூச்சிக்கடி ஏற்பட்டாலோ அந்த இடத்தில் மருக்கொழுந்தை வைத்து வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சோப்புகளிலும், அழகு சாதனப் பொருட்களிலும் , வாசனைப் பூச்சுகளிலும் மருக்கொழுந்து எண்ணை பயன்படுகிறது .

சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றுகளுக்கு (Anti fungal) , மருந்தாகிறது. உடல் வீக்கங்கள் கட்டிகள் தரும் வலியைப் போக்கி, அவற்றை சுருங்க வைக்கிறது. மன நல பாதிப்புகளுக்கு ஆற்றல்மிக்க, நிவாரணமாகத் திகழ்கிறது., நல்ல தூக்கம் வர உதவும்.

தினமும் உறங்கப் போகுமுன், தலையணையின் கீழே, ஒரு கொத்து, மரிக்கொழுந்து இலைகளைத் தண்டுடன் வைத்துக்கொண்டு, அதன் பின் உறங்கச் செல்ல கண்களைத் தூக்கம் மெள்ளத் தழுவும்.

xxxxx

மதுபானத்தில் மருக்கொழுந்து

சிலவகை மதுபானங்களில் மருக்கொழுந்து எண்ணையைப் பயன்படுத்துகிறார்கள் . வெர்மவுத் , அப்சிந்த்தே (alcoholic drinks  Vermouth, Absinthe ) முதலியவற்றில் இது உள்ளது.

19, 20 ஆம் நூற்றாண்டுகளில் பிரான்ஸ் நாட்டில் அப்சிந்த்தே மதுபானம் பிரபலம் ஆகியது. இதை அருந்தினால் போதை ஏற்பட்டு மாயக் காட்சிகளைக் காணுவார்கள் என்ற எண்ணம் பரவியதால் இதை பச்சை தேவதை என்று அழைத்தார்கள் Absinthe  was thought to have hallucinogenic properties – hence its nickname “la fee verte” (the green fairy). வெர்மவுத் என்பது இத்தாலிய ஒயின் பானம் (Vermouth, a fortified Italian wine) இதில் மருக்கொழுந்து மணம்  வீசும். .  பிரபல பெர்ப்பியூம் நிறுவனங்கள் அதிக விற்பனையாகும் வாசனைப் பூச்சுகளில் மருக்கொழுந்து ஆயிலை பயன்படுத்துகின்றன ( popular fragrances like Burberry Body and Ralph Lauren Polo Black.)

xxxx

மருக்கொழுந்துக்கு தடை விதித்தது ஏன்?

சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்பட சில ஐரோப்பிய நாடுகள் மருக்கொழுந்த்து உபயோகத்துக்கு தடைவிதித்தன . இதை அதிகம் பயனபடுத்தினால் அது நரம்பு மாண்டலத்தை பாதிக்கும் அமைதியற்ற மன நிலை, வலிப்பு, மூளை பாதிப்பு  ஏற்படும்  ஆயினும் இப்போது கட்டுப்பாடுகளுடன் இதன் உபயோகம் மீண்டும் வந்துவிட்டது.

அமெரிக்காவிலும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தடை இருந்தது . இப்போது அமெரிக்கா , கனடாவில் இது பயிராகிறது.

செடியின் தண்டு, பூ, இலைகளைக் கொதிக்க வைத்து அதிலிருந்து வரும் ஆவியைக் குளிர வைத்தால் அசுலின் எண்ணெய் கிடைக்கும்; நீலப் பச்சை நிறத்தில் இருக்கும் azulene. எண்ணெயில் துஜோன், போர்னியோல், பைனின் ஆகிய ரசாயனப் பொருட்கள் இருக்கின்றன ( The oil is blueish-green due to the oil’s concentration of azulene.  The extract is rich in other organic chemicals such as thujone, borneol, and pinene) The main components of artemisia oil are ñ-thujone, Ã-thujone, sabinene, myrcene, trans-sabinol, trans- Sabinyl acetate, and linalyl acetate and geranyl propionate.

 —subham—

Tags- மருக்கொழுந்து, மரிக்கொழுந்து, சாகுபடி, ஏற்றுமதி, மருத்துவ, பயன்கள், நறுமணம், மதுபானம், தடை

ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி கோவில்-55 (Post No.12,909)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,909

Date uploaded in London – –   12 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 55

கோவில் எண்கள் –105, 106

105.ஆட்டுக்கல் /ஆற்றுக்கால் பகவதி கோவில்

திருவனந்தபுரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி கோவில் உள்ளது. அங் கு நடக்கும் பொங்கல் விழா நாடு முழுதும் பிரசித்தி பெற்றது . இதை கண்ணகி கோவில் என்றும் அழைப்பார்கள்.

இந்தக் கோவிலின் தோற்றம் பற்றி ஒரு கதை உள்ளது .

திருவாங்கூர் ராஜ்யத்தின் வீரர்களா கப் பணியாற்றியவர்கள் நாயர்கள் ஆவர். அவர்களில் ஒரு குழுவான முல்லக்கல் வீடு பிரிவின் தலைவர் அருகிலுள்ள ஆற்றில் குளிக்கச் சென்றார். அங்கே ஒரு சிறுமி தனியாக இருப்பதைப் பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்து இளநீர் கொடுத்தார். அதை சாப்பிடுவதற்குள் அந்தப் பெண் மாயமாக மறைந்தாள். அவருக்கு வியப்பும் திகைப்பும் ஏற்பட்டது. ஒன்றும் புரியவில்லை. அன்றிரவு கனவில் அதே பெண் தோன்றி, அவர் வண ங்கிவரும் பகவதியே,  தான் என்று அவருக்கு அறிவித்தாள் . அவள் சொன்னபடியே பகவதிக்கு ஒரு கோவிலை எழுப்பினார்.

இந்தக் கோவிலில் கருவறைக்கு மேல், பெரிய விமானம் இருக்கிறது. கோவிலின் நுழைவாயிலை அழகான சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா இந்தக் கோவிலைப் புதுப்பித்தார். ஆஸ்த்தான ஜோதிடர் சங்கரானந்தா சொன்னது போல 1912லம் ஆண்டில் பழைய சிலையை எடுத்துவிட்டு மரத்தினால் ஆன புதிய உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார் .

பெண்களின் சபரி மலை

சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருப்பது போலவே பல்லாயிரக் கணக்கான பெண்கள் விரதம் இருந்து இங்கு வந்து பொங்கல் படைக்கிறார்கள்  இதனால் பெண்களின் சபரி மலை என்ற சிறப்பு அடைமொழியும் இந்த இடத்துக்கு உண்டு ; அப்போது பெண்கள் மட்டுமே கோவில் அருகில் வரலாம். கோவிலைச் சுற்றி பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் பொங்கல் பானைகளைக் காணலாம். உலகின் மிகப்பெரிய சமையல் திருவிழா அல்லது பொங்கல் விழா என்று இதை அழைத்தாலும் மிகையாகாது 

பத்துநாள் பொங்கல உற்சவம் பிப்ரவரி  மாதத்தில் நடைபெறும்.  ஒன்பதாவது நாள் விழாவில் வெல்லம், தேங்காய் கலந்த சர்க்கரைப் பொங்கலை உண்டாக்கி அம்மனுக்கு படைப்பார்கள். அப்போது கோவில் பூஜாரி , தேவியின் வாளை கையில் ஏந்தி வலம் வருவார். புனித நீரைத் தெளித்த்து பொங்கல் படைக்கும் பெண்மணிகளை ஆசீர்வதிப்பார்.

இது முடிந்த பின்னர், தேவியை அருகிலுள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருளச் செய்வார்கள் செண்டை மேளம், நாகஸ்வரம் முழங்க, யானைகள் பவனி வர, குதியோட்டம் , தாளப் பொலி, கும்பக் குடம்  புடை சூழ, பகவதி அம்மன் செல்வாள். வழி நெடுகிலும் பக்தர்கள் சம்பிரதாய முறையில் அம்மனுக்கு வரவேற்பும் வழிபாடும் நல்குவார்கள் . அடுத்த நாள் காலையில்தான் இந்த ஊர்வலம் கோவிலுக்குத் திரும்பும் .

விழாக்காலத்தில்  செவிக்கு விருந்தளிக்க இன்னிசை கச்சேரிகளும் , கண்களுக்கு விருந்து படைக்க பரத நாட்டியம் , மோகினியாட்டம், கதகளி ஆட்டம் ஆகியவையும் நடக்கும்.

இப்பொங்கல் விழாவில் சுமார் 10 லட்சம் பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.

கோவிலில் நடக்கும் மற்ற வைபவங்கள் :

மண்டல விரதம், வினாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, சிவராத்திரி, கார்த்திகை தீபம், ஆயில்ய பூஜை, ஐஸ்வர்ய பூஜை, நிரையும் புத்தரிசியும் (இது வயலில் அறுவடைக்கு முன்னர், கொஞ்சம் நெற்கதிர்களை அறுத்து வந்து சாமிக்குப் படையலிடுவது), அகண்ட நாம ஜபம்.

xxxxxxx

106.சிறையின்கீழ் சர்க்கரா தேவி கோவில்

Sarkara Bhagavathy temple located at Chirayinkeezhu Taluk, Thiruvananthapuram

திருவனந்தபுரத்திலிருந்து 18 கி.மீ தொலைவில் மேலும் ஒரு புகழ்பெற்ற பகவதி கோவில் இருக்கிறது.

கருவறைக்கு வெளியே நாலம்பலம் இருக்கிறது. கோவிலின் சிறப்பு அங்குள்ள சிறபங்களும் ஓவியங்களும் ஆகும்.

நாலம்பலத்துக்கு நான்கு வாயில்கள் உள்ளன. சுவரில் ஆயிரக் கணக்கான சுட்டு விளக்குகளை பொருத்தியுள்ளனர் . விழாக்காலத்தில் இவைகள் அனைத்தும் ஜெகஜ்ஜோதியாக ஒளி வீசும்.

ஆண்டுதோறும் இரண்டு விழாக்களை கோவில் கொண்டாடுகிறது. தேவியின் பிறந்த நாளாகக் கருதப்படும் பரணி உற்சவம் மிகவும் கீர்த்தி வாய்ந்தது. கடைசி நாளில் கருடன் தூக்கம் நடக்கும். அன்று உருச்சா என்னும் பூமியில் உருண்டு வரும் நேர்த்திக் கடனும் நடைபெறும். கோவில் விளக்குகள் அனைத்தும் எரியும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக திகழும் . பத்தாம் நாளில் தேவி தோன்றுவாள் என்ற நம்பிக்கை உள்ளதால் அவளது தெய்வீக ஆசீர்வாதங்களுக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

எல்லா கேரள திருவிழாக்களில் இருக்கும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் இங்கும் நடைபெறுகிறது.

இரண்டாவது முக்கிய விழா காளியூட்டு உற்சவம் ஆகும்;  இது எட்டு நாட்களுக்கு நடக்கிறது; 64 கிராமங்களின் தலைவர்கள் தாருகா என்ற அசுரனை காளி கொன்றதை நடத்திக் காட்டுவார்கள்

இந்த தேவி- அசுரன் மோதல் கட்டடம் கட்டமாக நடக்கும். தம்புரான் புலையன், புலையி புறப்பாடு, தம்புரான் புறப்பாடு என்ற வரிசையில் நிகழும். கடைசி நாளன்று 100 அடி உயர விசேஷ மேடையில்  தேவியும் அசுரனும் மோதுவார்கள். அதைக் காண பல்லாயிரக் கணக்கானோர் வருகின்றனர் . இதைக் காண்பவர்கள் மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருக்கும். இதை பரனேத்து என்றும் அழைப்பர் .

திருவிதாங்கூர் மன்னர் அனிசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா 1748 ஆம் ஆண்டு காளியூட்டு விழாவை அறிமுகப்படுத்திய பிறகு இது முக்கியத்துவம் பெற்றது. அந்தத் திருவிழா பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முதல் அறுவடையின் விளைச்சலை தேவிக்கு சமர்ப்பிக்கும் போது வருகிறது. 

காளியூட்டு என்றால் என்ன?- விக்கிபீடியா தகவல்

காளியூட்டு என்பது கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை நாளில் நடக்கும் கலை. இதை காளிநாடகம் என்றும் அழைப்பர். காளிக்கும் தாரிகனுக்கும் நிகழ்ந்த போரைக் குறித்து நிகழ்த்துவது ஆகும்.

ஐதீகம்

கும்ப மாதத்தின் மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று, சர்க்கர கோவிலில் நடக்கும் ஒரு விழா காளியூட்டு. மக்களை வதைத்து, துன்பங்கள் ஏற்படுத்திய தாரிகனை, காளி கொன்று மக்களைக் காத்து நிற்பதை நினைவுகூர்வர்.

வரலாறு

திருவிதாங்கூர் பரணாதிகாரியாக இருந்த பேரரசர் மார்த்தாண்ட வர்மா, காயங்குளம் ராஜாவாக ஆன பின்பு, போருக்கு] புறப்படும் முன்பு சர்க்கரர் கோவி லில் காளியூட்டை நிகழ்த்தினார்.. அந்த யுத்தத்தில் வென்று, காயங்குளம் , திருவிதாங்கூரோடு சேர்த்ததினால் ஆண்டுக்கொரு முறை நடத்தி வரும் நிகழ்வு இது.

சடங்குகள்

‘முடியுழிச்சில்’ என்னும் சடங்கு நிகழ்த்தப்படும். அன்று காளி, தாரிகனை நிலத்தில் போரில் வென்றதால், அதைக் கொண்டாடும் விதத்தில், குலைவாழையும் கும்பளவும் வெட்டி நட்டுக் கொண்டாடுவர். இது கைலாயத்தில் வாழும் பரமசிவனை சென்றடைவதாக நம்புகின்றனர். இத்துடன், வெள்ளாட்டம் களி, குருத்தோலையாட்டம், நாரதன் புறப்பாடு, நாயர் புறப்பாடு, ஐராணி புறப்பாடு, கணியாரு புறப்பாடு, புலையர் புறப்பாடு, முடியுழிச்சில், நிலத்தில் போர் என்னும் ஒன்பது சடங்குகளும் நிகழ்த்தப்படுகின்றன.

—subham–

Tags– காளியூட்டு, சிறையின்கீழ், சர்க்கரா தேவி,  கோவில் , ஆட்டுக்கல்/ ஆற்றுக்கால் பகவதி

விவேகானந்த அதிசயம்! – 2 (Post No.12,908)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,908

Date uploaded in London –  –   12 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

விவேகானந்த அதிசயம்! – 2 

ச.நாகராஜன் 

ஹிந்து யோகி!

சீனாவில் சுவாமிஜி தங்கி இருந்த போது ஒரு சீன மடாலயத்திற்குச் செல்ல விரும்பினார். ஆனால் அங்கோ எந்த ஒரு அன்னியருக்கும் நுழைய அனுமதி இல்லை. ஒரு நாள் சுவாமிஜி தன்னுடன் வந்த மொழிபெயர்ப்பாளரிடம் மடாலயத்திற்குள் நாமாக நுழைந்தால் என்ன நடக்கும் என்று கேட்டார். அடியும் உதையும் தான் கிடைக்கும் என்றார் மொழிபெயர்ப்பாளர். “என்ன, அடித்துக் கொன்று விடுவார்களோ, வாருங்கள் பார்ப்போமே’ என்று கூறிய சுவாமிஜி ஒரு பெரிய மடாலயத்திற்குள் நுழைந்தார். மொழிபெயர்ப்பாளரோ அப்படிச் செல்லக் கூடாது என்று தடுத்தார். ஆனால் சுவாமிஜி உள்ளே நுழைந்து விட்டார்.

அதைப் பார்த்த மடத்தில் இருந்த சிலர் தடிகளுடன் ஓடி வந்தனர். . வேர்த்து விறுவிறுத்துப் போன மொழிபெயர்ப்பாளர் அங்கிருந்து ஓட எத்தனித்தார். அவரைப் பிடித்த சுவாமிஜி இந்தியாவிலிருந்து வந்துள்ள யோகி என்பதை சீன மொழியில் எப்படிச் சொல்ல வேண்டும் என்று சொல்லி விட்டுப் போங்கள் என்றார். மொழிபெயர்ப்பாளர் அதைச் சொல்லி விட்டு ஓடிப் போய் ஒரு ஒரத்தில் மறைந்து கொண்டு நின்றார்.

சுவாமிஜி அந்த வார்த்தைகளை உரக்கக் கூறியவாறே அந்த தடிக் கம்புகளுடன் வந்து கொண்டிருந்தவர்களை நோக்கி நடந்து கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம்! இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அவர்கள் தங்கள் கைத்தடிகளைக் கீழே போட்டு விட்டு அவர் முன்னால் விழுந்து வணங்கினர். அவர்கள் ஏதோ சொல்ல ஆரம்பித்ததைக் கண்ட மொழிபெயர்ப்பாளர் ஓடி வந்து அதைக் கேட்டார். பின்னர் சுவாமிஜியிடம் அவர், “இவர்கள் உங்கள் ஆற்றலையும் பாதுகாப்பையும் தீய சக்திகளை ஓட்டவும், பேய் பிசாசுகளை விரட்டவும் வேண்டுகின்றனர். ஆசி அளியுங்கள்” என்றார். சுவாமிஜியும் மனம் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதித்தார்.  தனது பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து அதைப் பல துண்டுகளாக்கினார். ஒவ்வொரு துண்டுச் சீட்டிலும் ஓம் என்று வடமொழியில் எழுதி அதை ஒவ்வொருவரிடம் கொடுத்தார். கிடைத்தற்கரிய பொக்கிஷத்தைப் பெற்றது போல மகிழ்ந்த அவர்கள் அதைக் கண்ணில் ஒற்றி வைத்துக் கொண்டனர். சுவாமிஜியும் மடாலயத்தைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார். அவருக்கு அங்கு உரிய மரியாதைகளை மடாலயத்தினர் செய்தனர்.

பிரம்ம யோனியை தரிசித்தவர்!

பஞ்சவடியில் தீவிர தியானத்தில் ஈடுபட்ட நரேந்திரர் (சுவாமி விவேகானந்தரின் பூர்வாசிரமப் பெயர்) பல தெய்வீகக் காட்சிகளைக் கண்டார்.

ஒரு நாள் அவர் தியானத்தில் ஈடுபட்டிருந்த போது முக்கோண வடிவமாக ஒரு பேரொளி பிரகாசிப்பதைக் கண்டார்.  அது உயிருள்ள உணர்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் கண்டார்.

இது பற்றி தனது குருவான ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் கூறினார் நரேந்திரன். உடனே அவர், “நீ பிரம்மயோனியைப் பார்த்திருக்கிறாய்! வில்வமரத்தடியில் சாதனைகள் செய்த போது நானும் அதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு வினாடியும் அதிலிருந்து பிரம்மாண்டமான பேரண்டங்கள் தோன்றிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்” என்றார் அவர்.

யாரும் எளிதில் பார்க்க முடியாத பிரம்மயோனியை தரிசித்தவர் சுவாமி விவேகானந்தர்.

இது போன்ற ஏராளமான தெய்வீக தரிசனங்களை அவர் கண்டுள்ளார்!

அதிசயமான துறவி!

சுவாமிஜி  முற்றும் துறந்த ஒரு அதிசயமான துறவி. ஒருவரைப் பார்த்தவுடன் அவரது கடந்த காலம் நிகழ் காலம் வருங்காலத்தைப் படம் போல அவரால் பார்க்க முடிந்தது. சிறந்த தேச பக்தராக விளங்கிய அவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றியே சிந்தித்தார். ஆன்மீக வாழ்வில் அனைவரையும் ஈடுபடச் செய்ததோடு அவர்களை மிக மிக உயரத்திற்கு ஏற்ற வல்ல அருள்சக்தியைக் கொண்டவராக இருந்தார்.

மேலுலகில் ராமகிருஷ்ணர் அவரை, “வா, கீழே பூவுலகில் சில காலம் சென்று இருப்போம்” என்று கூறி அழைத்த போது மறுத்தார் அவர். பூவுலகில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மிகவும் குறுகிய காலம் இருக்கலாம்’என்று ராமகிருஷ்ணர் கூறியதைக் கேட்டு அவதாரம் எடுத்தார் விவேகானந்தர்.

ஆனால் பூவுலகில் மனிதர்கள் படும் பாட்டையும் துயரையும் கண்ட அவர், “இவர்களில் கடைசி மனிதன் விடுதலை பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் நான் வருவேன்” என்று மனம் கசிந்து கூறினார்.

“நான் மீண்டும் வருவேன்” என்ற அவரது உறுதி மொழி ஒரு நாளும் பொய்யாகப் போகாது.

அதிசய விவேகானந்தர் மீண்டும் நமது பூமிக்கு வருவது உறுதியே!

***

ஆதாரம் : சுவாமி ஆசுதோஷானந்தர் தொகுத்திருக்கும் சுவாமி

புதிய கூந்தல் வளர் தைலம்:  பெண்களுக்கு நற்செய்தி! (Post No.12,907)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,907

Date uploaded in London – –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் 10-1-2024 ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதன் சுருக்கம் பின்வருமாறு

வெந்தயத்தில் (Fenugreek seeds) நிறைய புரதச் சத்தும் (ப்ரோட்டீன்), வைட்டமின் பி-3 சத்தும் B3 (nicotinic acid) இருப்பதால் தலை முடி உதிர்வதைத் தவிர்க்க அவை உதவுகின்றன என்று மும்பை பாட்டியா மருத்துவ மனை டாக்டர் செளரப் ஷா ( Dr Saurabh Shah) கூறுகிறார். அவர் தோல் நோய் சிகிச்சை நிபுணர். மேலும் அவர் அழகுக்கலை , முடி மாற்று சிகிச்சையிலும் (dermatologist, cosmetologist, dermatosurgeon and hair transplant surgeon) வல்லவர்.

பெண்களின், குறிப்பாக இளம் பெண்களின், பெரிய கவலை, முடி உதிர்ந்து கொண்டே இருக்கிறதே , இப்படித் தலை மயிர் கொட்டினால், கல்யாணம் ஆவதற்குள் டோப்பா (wig)  முடி வைக்க நேரிடுமோ என்பதுதான் .

(முதலில் இப்படி எண்ணுவதே முடியை உதிர வைக்கும். ஆட்டோ சஜ்ஜஷன் Auto Suggestion) என்னும் முறைப்படி ஒவ்வொரு முறை தலையைத் தொடும்போதும் எனக்கு நல்ல முடி வளரவேண்டும், வளரும் என்று சொல்ல வேண்டும்; எண்ண  வேண்டும் )

அது ஒரு புறம் இருக்க புதிய கூந்தல் வளர் தைலத்தைக் காண்போம் .

தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே நல்ல வளமான தலை முடியை வளரச் செய்யலாம். கருவேப்பிலை , கடுகு எண்ணெய், வெந்தயம் (மேதி ) ஆகியவற்றைக் கொண்டு நல்ல  தைலத்தைத் தயாரிக்கலாம். சத்துணவு நிபுணர் லீமா மஹாஜன் ( nutritionist Leema Mahajan) இதை விளக்குகிறார்.

மேலே சொன்ன பொருட்களுடன் ரோஸ்மேரி செடி இலையையும் கலந்தால், ஆறு மாத காலத்தில் நல்ல தலை முடி வருவதைக் காணலாம் என்று சத்துணவு நிபுணர் லீமா மஹாஜன் சொல்கிறார்.

அவர் சொல்லும் கூந்தல் வளர் தைலத்தில்

கடுகு எண்ணெய் , கருவேப்பிலை, ரோஸ்மேரி செடி இலைகள் வெந்தயம், வாதாம் பருப்பு எண்ணெய் , விளக்கெண்ணெய் ஆகியன இருக்கும் (Mustard oil, Curry leaves, Rosemary leaves, Fenugreek seeds, Almond oil, Castor oil)

எவ்வாறு செய்வது?

ஒரு இரும்புச் சட்டி அல்லது வாணலியில் கடுகு எண்ணெயை சூடாக்கவும் ; அதில் வெந்தயம், கருவேப்பிலை , ரோஸ்மேரி இலைகளைப்  போடவும். அவற்றின் நிறம் சிறிது மாறியவுடன் அடுப்பை அணைத்துவிடவும். அது ஆறிய பின்னர் ஒரு பாட்டிலில் விட்டு, வாதாம் பருப்பு எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை சம அளவில் சேர்க்கவும் .

Method

*In a pan, heat mustard oil.

*Add rosemary, curry leaves, and fenugreek seeds. Once the colour changes, switch off the flame.

*Let it cool down.

*Transfer to a glass bottle.

*Add almond, and castor oil in equal parts.

இந்தப் பொருட்களில் உள்ள ஒவ்வொரு சத்தத்தையும் டாக்டர் ஷா விளக்கியிருக்கிறார். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அவை முடிகள் தோன்றும் மயிர்க்கால் வரை சென்று ஆரோக்கியமான, அடர்ந்த, கருமையான, பள பளப்பான  முடி வளர உதவுகின்றன. அதற்கான வைட்டமின்களும், ஒமேகா , கொழுப்பு அமிலங்களும் அவைகளில் உள்ளன.

–SUBHAM—

Tags- புதிய , கூந்தல்,  வளர் தைலம், தலைமுடி வளர ,

ரோஜா மலரே ராஜகுமாரி ;   குல்கந்து, அத்தர் -Part 2 (Post No.12,906)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,906

Date uploaded in London – –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

இந்தியாவை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண்மணி நூர் ஜஹான் (Nur Jahan) . மொகலாய சக்ரவர்த்தி ஜஹாங்கிரின் மனைவி. முக அழகு, வசீகரம், ஆளும் திறமை, புதுமை விரும்பி, கண்டுபிடிப்பாளர் , அதிர்ஷ்டம் ஆகிய அத்தனையும் ஒட்டுமொத்தமாக உருவம் எடுத்து வந்தவர்; புதுவகை உணவு, . பலவகை பாஷன்  ஆடைகள், ரோஜா மலர் அத்தர் ஆகியவற்றைக் கண்டுபிடித்த பெருமை உடையவள். ஏராளமான ஆங்கில புத்தகங்களின் கதாநாயகி. இவ்வளவுக்கும் இந்தியர் அல்ல. அவள் ஒரு பாரசீக ரோஜா.

ரோஜா மலரில் இருந்து அத்தர் எடுப்பதை  நூர்ஜஹான் கண்டுபிடித்தார்.  துப்பாக்கி ஏந்தி ஒரே நேரத்தில் 4 புலிகளைச் சுட்டார் . இப்படி அவளுடைய வீர தீர செயல்கள் பற்றி பெரிய பட்டியலே இருக்கிறது . ஒரு முறை அரண்மனையிலிருந்து இவர் விட்ட அம்பு, ஆற்றங்கரை வண்ணானைக் கொல்லவே , வண்ணாத்தி ஓவென்று கதறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தாள் . நூர்ஜஹான், சாதாரணக் குற்றவாளி போல ராஜ சபைக்கு இழுத்து வரப்பட்டாள் . பின்னர் என்ன? மஹாராணி ஆயிற்றே , மன்னிப்பு, நஷ்ட ஈடு என்று கதை முடிந்தது. முஸ்லீம் மன்னர்கள், மனு நீதிச் சோழர்கள் அல்லவே.

அத்தர் என்ற அராபிய சொல்லுக்கு மணக்கும் எண்ணெய் என்றே பொருள். ரோஜா மற்றும் அது போல வாசனை உடைய பெலார்கோனியம் Pelargonium ‘Attar of Roses’ தாவர பூக்களிலிருந்து இது செய்யப்படுகிறது  ஆயினும் ரோஜாவும், பெலார்கோனியமும் வெவ்வேறு குடும்ப தாவரங்கள். ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயையும் அத்தர் என்பர்.

வெளிர் மஞ்சள் நிறம் உடைய அத்தர் ரோஸா டமசேன , ரோஸா கல்லிகா முதலிய ரோஸெசி குடும்ப மலர்களிலிருந்து எடுக்கப்படுகிறது Rosa damascena and R. gallica and other species of the rose family Rosaceae

இதை பெர்ப்யூம் perfume  என்னும் வாசனைப் பூச்சுகளிலும், நறுமணம் தேவைப்படும் வெவ்வேறு பொருள்களிலும் பயன்படுத்துகிறார்கள் .

xxxxx

ரோஜா குல்கந்து உடலுக்கு நல்லது

ரோஜா இதழ்கள் கொண்டு செய்யப்படும் குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சம நிலையை உண்டாக்கும் . இது செரிமானம் நடக்க மிகவும் உதவுகிறது . ரோஜா குல்கந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் வெகுவாக குறைகிறது., இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

குல்கந்து என்பது ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகுந்த ஆயுர்வேத மருந்து .

இது பல வகையான நோய்களுக்கு சிறந்த மருந்து . அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் முதலிய நோய்களுக்கும், ஆண்மை பெருகவும்  சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

ரோஜா குல்கந்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

சிவந்த நிறத்தில் உள்ள ரோஜா  இதழ்களை நன்கு கழுவி சுத்தம் செய்து ஈரம் போன பிறகு நிழலில் உலர்த்திக் கொள்ளவும்.

சேகரித்த இதழின் எடையை போல மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக்கொண்டு, இரண்டையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக இடிக்கவும்.

இடித்ததும் ஜாம் போன்ற தன்மையைப் பெரும். இந்த ஜாம் அளவிற்கு 3 மடங்கு சுத்தமான தேனைச் சேர்த்து நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரிவிதை, கசகசா சேர்க்கலாம்.

கடைகளிலும் ரோஜா குல்கந்தை விலைக்கு வாங்கலாம்.

xxxx

பன்னீர் உற்பத்தி Rose water

ரோஸ் வாட்டர் என்னும் பன்னீரை உணவுப்  பண்டங்களிலும்  சேர்த்து வாசனை சேர்க்கிறார்கள் .

ரோஸ்  ஆயில் செய்யும் பொழுது பன்னீரும் கிடைத்துவிடும். ரோஜா மலர் இதழ்களைக் கொதிக்கவைத்தது அதன் ஆவியைப் பிடித்து குளிரவைத்து பன்னீர் எடுக்கிறார்கள் . பன்னீருக்குப் பெயர்பெற்ற நாடு ஈரான். உலகின் பெரும்பகுதி பன்னீர் அங்குதான் உற்பத்தி ஆகிறது . இதற்காக ரோஜா மலர் அறுவடையின்போது பெரிய விழா நடக்கிறது.

–SUBHAM—

TAGS- பன்னீர், ரோஸ் ஆயில், குல்கந்து, நூர் ஜஹான், gulkand, rose water, Iran

மலையாள பழனி கோவில்- 54 (Post No.12,905)

picture of Thodupuza Sri Krishnan Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,905

Date uploaded in London – –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 54

கோவில் எண்கள் –101,102, 103, 104

இடுக்கி மாவட்ட கோவில்கள்

101. உரவப்பாறா கோயில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில்

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா அருகில் ஓல மட்டம்

என்னும் இடத்தில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது . இதை

மலையாள பழனி   என்று அழைப்பார்கள். இங்கு வனவாச காலத்தில் பாண்டவர்கள் தங்கி இருந்ததாகவும் அப்போது பீமன் உருவாக்கிய நீர் நிலையே உறவுப்பாறா என்றும் கதைகள் உள்ளன. மூன்று பெரிய பாறைகள் பீமன் பயன்படுத்திய அடுப்பு என்றும் , தண்ணீர் கிடைக்காததால் அவன் ஒரு பாறையை உராய்ந்து தண்ணீரை உண்டாக்கினான் என்றும் சொல்லுவர் .

பால சுப்ரமண்ய வடிவத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.

மகர மாதத்தில் ஆண்டு விழா நடக்கும். வைத்தீஸ்வரன் கோவில் போல உப்பு, மிளகு பிரசாதம் கிடைக்கும்.

XXXXX

102. மூணாறு முருகன் கார்த்திகை விழா


மூணாறு Munnar என்னும் இடம் தமிழ்நாட்டு எல்லையை ஒட்டி உள்ளது. இங்குள்ள முருகன் கோவில் கார்த்திகை விழாவால் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை  விழா  நாளில் கோவில் முழுதும் விளக்குகளை ஏற்றுவார்கள் . ஜெகஜ்ஜோதியாக காட்சிதரும்  அதற்கு முதல் நாளன்று பழங்குடி இன மக்கள் ஒன்று கூடி , அவர்கள் கடைப்பிடிக்கும் சம்பிரதாய சடங்குகளைச் செய்வார்கள்.

விழாக்காலத்தில் தூக்கம் என்னும் காவடிச் சடங்கு நடக்கும். விரதம் இருக்கும் ஒரு முருக பக்தர் மிக உயரத்திலிருந்து தொங்குவார் . அவர் இருக்கும் மேடை ஒரு வண்டி மீது இருக்கும். அதை கோவிலைச் சுற்றி வலமாக இழுத்து வருவார்கள்;p முருக பக்தர்கள் கோஷம் எழுப்பி இறைவனை வணங்குவது எல்லோரையும் பக்திப் பரவசத்தில் மூழ்கடித்துவிடும் .

XXXXX

103.கிருஷ்ணன் கோவில், தொடுபுழா

இடுக்கி மாவட்டத்தில் தொடு புழா என்னும் ஊரில் கிருஷ்ண பகவான், கையில் வெண்ணெய் வைத்திருக்கும் நவநீத கிருஷ்ணனாக தரிசனம் தருகிறார். மூவாற்றுப்புழாவின் உபநதியான தொடு புழா நதிக்கரையில் கோவில் அமைந்துள்ளது . ஒரு பிராமண பக்தர் இந்தக் கோவிலை மீனம் மாத சுவாதி நட்சத்திரத்தில் ஸ்தாபித்தார் ஆண்டுதோறும் அந்த மாதத்தில் பத்து நாள் விழா நடக்கும்.

முதல் நாளன்று பிரபல வித்வான்களின் இன்னிசை நிகழ்ச்சியும் 4,5,6 ஆவது நாள் உற்சவத்தில் சாக்கியர் கூத்தும், 5,5 ஆவது நாட்களில் கதகளி நடனமும் ஏற்பாடு செய்யப்படும்.

7,8,9 ஆவது நாட்கள் முக்கிய நாட்கள் ; அப்போது அலங்கரிக்கப்பட்ட 5 யானைகளின் பவனி மேளதாளத்துடன் வலம் வரும். உற்சவ பலி என்ற புனித விழா, ஒன்பதாம் நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வணங்க நடக்கிறது .

‘நிலாபதுதரா’ அல்லது புனித மேடை கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ளது. திருவிழாவின் போது இறைவனின் சிலையானது கருவறையில் இருந்து வெளியே எடுத்துவரப்பட்ட இந்த மேடைக்கு கொண்டுவரப்பட்டு முழுமையாக அலங்கரிக்கப்பட்டு மீண்டும் கருவறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

XXXXX

104.காரிகோடு பகவதி கோவில்

தொடுபுழா அருகில் காரிகோடு பகவதி கோவில் இருக்கிறது ; இங்கு பத்ரகாளி வடிவத்தில் தேவியை வணங்குகிறார்கள் . சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோவில் . இங்கு சிலைக் கண்ணாடி மூலம் தேவியை வழிபடுகின்றனர் .

சிவன் மற்றும் பிள்ளையார் ஆகியோர் பிற பரிவார தெய்வங்களாக உள்ளனர். ஆண்டுதோறும்  திருவிழா, மலையாள மாதமான ‘கும்பம்’ அஸ்வதி மற்றும் பரணி நாட்களில் நடக்கிறது.

வடக்கம்கூர் மன்னர் தனது பிரார்த்தனையால் கொடுங்கல்லூர்  பகவதியை இங்கு அழைத்து வந்தார் என்று பக்தர்கள் கூறுகிறார்கள் .

–சுபம் —

TAGS- காரிகோடு பகவதி, தொடுபுழா கிருஷ்ணன் ,கோவில், உரவப்பாறா , சுப்பிரமணிய சுவாமி

விவேகானந்த அதிசயம்! – 1 (Post No.12,904)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,904

Date uploaded in London –  –   11 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஜனவரி 12 விவேகானந்தர் ஜெயந்தி தினம்! 

அதிசயம் அநேகம் கொண்ட சுவாமிஜியின் வாழ்வில் சில சம்பவங்கள்!

விவேகானந்த அதிசயம்! – 1 

ச.நாகராஜன்

 விவேகானந்த அதிசயம்! 

ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த போது ஒரு முறை மிஸஸ் பாக்லே என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார்.

அந்த வீட்டில் வந்த விருந்தினர்களுள் ஒருவர் சுவாமிஜியை மிஸஸ் பாக்லேயின் கணவருடைய படிப்பறையில் வைத்துப் பூட்டி விட்டு, சாவியைத் தனது கையில் வைத்துக் கொண்டார். அது ஒரு பெரிய வீடு. அந்த வீட்டின் மறுபகுதியில் உள்ள விசாலமான அறை ஒன்றில் அனைவரும் கூடினர். சுவாமிஜி திடீரென்று அங்கே தோன்றினார்.

சாவியைத் தன் கையில் வைத்திருந்தவர் திகைத்து மலைத்தார்.

வேக வேகமாக ஓடிப் போய் தான் பூட்டிய அறையைத் திறந்தார்.

அங்கே முன்பு சுவாமிஜி எப்படி அமர்ந்திருந்தாரோ அதே போல அமர்ந்திருந்தார்.

அவரது இந்த அதீத ஆற்றலை அவர் எப்போதுமே காட்டியதில்லை.

ஓரிரு சமயங்களில் மட்டுமே காட்டி இருக்கிறார்.

கடவுளிடம் நகைச்சுவையாகப் பேசியவர்!

நியூயார்க்கிலிருந்து சுமார் 90 மைல் தூரத்தில் உள்ள ரிஜ்லிமேனர் என்ற வீட்டில் ஒரு முறை சுவாமிஜி தங்கி இருந்தார். அங்கே அவருடன் மிஸ் மெக்லவுட், அவரது சகோதரி பெற்றி, பெற்றியின் பதினாறு வயதான மகன் ஹாலிஸ்டர், பதினெட்டு வயதான அவனது தமக்கை ஆல்பெர்ட்டா ஆகியோர் தங்கி இருந்தனர்.

ஒரு நாள் சுவாமிஜி தன் அறைக்குள் இருந்த போது பெரிதாகச் சிரிப்புச் சத்தம் கேட்டது. இடையிடையே யாருடனோ பேசுவது போலவும் இருந்தது.

சிறிது நேரத்திற்குப் பின் கதவைத் திறந்து தன் அறையிலிருந்து வெளியே வந்த சுவாமிஜியிடம் ஹாலிஸ்டர், “சுவாமிஜி, நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள்” என்று வியப்புடன் கேட்டான்.

ஏனெனில் அறையில் யாருமே இல்லை.

சுவாமிஜி பதிலாக, “யாருடனும் இல்லையே” என்றார்.

“இல்லையே, சிரிப்புச் சத்தம் கேட்டதே?” என்று சந்தேகத்துடன் மீண்டும் கேட்டான் ஹாலிஸ்டர்.

சின்ன இடைவெளிக்குப் பிறகு சுவாமிஜி கூறினார்:

“ஓ! அதுவா? இந்த கடவுள் இருக்கிறார் பார், அவர் மிகவும் வேடிக்கையானவர்!” என்றார்.

கடவுளுடன் நகைச்சுவையாக சுவாமிஜி பேசி சிரித்துக் கொண்டிருந்தார் என்பதை அவர் வாயாலேயே தெரிந்து கொண்ட ஹாலிஸ்டர் பிரமித்து நின்றான்.

இந்த விஷயம் அனைவருக்கும் பரவியது.

இது போல தனது ஆற்றலையும் தெய்வீக சக்தியையும் அவர் காட்டிய தருணங்கள் மிகச் சிலவே!

சுவாமிஜியின் நினைவாற்றல்

சுவாமிஜியின் நினைவாற்றல் அனைவரையும் பிரமிக்க வைக்கும் ஒன்று. ஒரு முறை பள்ளி ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்க நரேந்திரன் (சுவாமி விவேகானந்தரின் இளமைப் பருவத்துப் பெயர்) ‘தூங்கிக் கொண்டிருப்பதைக்’ கண்டு பொறுக்காத அவர் அவனைக் கடிந்து கொண்டார்.

அவர் தன்னைத் திட்டி முடிக்கும் வரை பொறுமையாக இருந்த நரேன், ஆசிரியர் கூறிய அனைத்தையும் ஒரு வார்த்தை விடாமல் திருப்பிக் கூறினார். இதைக் கேட்ட ஆசிரியர் பிரமித்துப் போனார்.

இந்த அபாரமான தனது நினைவாற்றல் சக்தியை அவர் எப்போதாவது தான் வெளிப்படுத்துவார்.

ஒரு முறை ஜெர்மனியின் தலைநகரமான பெர்லினில் சில நாட்களைக் கழித்த சுவாமிஜி கீல் நகரம் சென்றார். அங்கு

கீல் பல்கலைக் கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய பால் ட்யூஸனை (பிறப்பு 7-1-1845 மறைவு 6-7-1919) அவர் சந்தித்தார். அவர் இந்தியவியலில் பெரும் அறிஞரும் கூட.  பால் டியூஸன் இந்தியாவிற்குத் தான் வந்திருந்த போது தான் பெற்ற அனுபவங்களை சுவாமிஜியிடம் தெரிவித்து மகிழ்ந்தார். நல்ல நட்புறவு மலர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்து அளவளாவினர்.

 அவரது வீட்டில் சுவாமிஜி சென்று தங்கினார். அப்போது ஒரு நாள் சுவாமிஜி தனது அறையில் ஒரு கவிதை நூலை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்ற பால் டியூஸன் ஏதோ பேச முற்பட்டார். ஆனால் சுவாமிஜி மறுமொழி ஒன்றும் கூறவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் இந்தச் சம்பவம் அவர் மனதை உறுத்தியது. சில நாட்கள் சென்ற பிறகு தனது மன ஆதங்கத்தைத் தெரிவித்தார். ஆனால் சுவாமிஜி உடனே புன்னகையுடன் தான் அன்று அந்தக் கவிதை நூலில் மிகவும் ஆழ்ந்திருந்ததாகவும் மற்ற எதையும் கவனிக்கவில்லை என்றும் கூறினார். இதை நம்ப மறுத்தாற் போல இருந்த பால் டியூஸனிடன அந்தக் கவிதை நூல் முழுவதையும் அப்படியே ஒப்புவித்தார் சுவாமிஜி. இதைக் கேட்டு பிரமித்துப் போன பால் டியூஸன், சுவாமிஜி எப்படிப்பட்ட பெரும் மகான் என்பதை உணர்ந்து கொண்டார். 

இறை அனுபவத்தை உடனே தர வல்லவர்

இறை அனுபவத்தை சிலருக்கு உடனே தந்தவர் சுவாமிஜி.

இதைப் பெற்ற பாக்கியவான்களில் ஒருவர் ஜெய்பூரில் படைத்தளபதியாக இருந்த சர்தார் ஹரிசிங்.

ஜெய்பூரில் சுவாமிஜி தங்கி இருந்த போது அவரால் கவரப்பட்டார் இந்தப் படைத் தளபதி. அவர் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்தார் சுவாமிஜி.

 ஹரிசிங்கிற்கு வேதாந்தம் என்றால் பிடிக்கும். ஆனால் அவருக்கு உருவ வழிபாடு பிடிக்காது. உருவ வழிபாடு பற்றி சுவாமிஜி அவருக்கு விளக்கிக் கூறினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தார். ஒரு நாள் இருவரும் மாலை வேளையில் சாலையில் நடந்து சென்று  கொண்டிருந்தனர். அப்போது எதிரே ஒரு பஜனை ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. பஜனை ஊர்வலத்தினர் கண்ணபிரானின் திருவுருவத்தைத் தாங்கியவாறே பஜனைப் பாடல்களைப் பாடி வந்து கொண்டிருந்தனர். சுவாமிஜி ஹரிசிங்கைத் தொட்டு, “அதோ பாருங்கள். உயிருடனும் உணர்வுடனும் இருக்கும் கண்ணனைப் பாருங்கள்” என்றார்.

  அந்த ஸ்பரிசத்தால் உடனே அங்கு கண்ணன் உயிருடன் இருப்பதைக்  கண்ட ஹரிசிங் திகைத்து நின்று விட்டார். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது. சுய நினைவு வந்தவுடன் அவர், மணிக்கணக்காக நீங்கள் விளக்கிய பேருண்மையை விளங்கிக் கொள்ளாத என்னை ஒரு சின்னத் தொடுதல் மூலமாக விளங்கிக் கொள்ள வைத்து விட்டீர்கள் என்று கூறி அவரை அடி பணிந்து வணங்கினார்.

இப்படி அவரது ஸ்பரிசத்தால் மாறியவர்கள் பலர் உண்டு.

** தொடரும்

எறும்பு சட்னி சாப்பிடுங்கள் (Press Cutting)

compiled by London Swaminathan

Date – 10-1-2024 

சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு!

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாரம்பரிய உணவான எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ஒடிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் வருடம் முழுவதும், சிவப்பு `வீவர்’ எறும்புகள் (Red Weaver Ants) ஏராளமாகக் காணப்படும். மலைப் பகுதியில் ‘கை’ என்ற ஒரு வகை நெசவு செவ்வெறும்பு காணப்படுகிறது. Oecophylla smaragdina எனும் இந்த எறும்பு வகை, தான் வாழும் மரத்தின் இலைகளைக் கொண்டு நெய்து ஒரு வீட்டை அமைக்கிறது.

இந்த எறும்பு சட்னி ஒடிசா மக்களால் அதிகம் விரும்பப்படக் காரணம், அதில் உள்ள சத்துகள். அதிக அளவு புரதம், கால்சியம், ஜிங்க் Zinc, வைட்டமின் B-12, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், தாமிரம்/செப்பு மற்றும் 18 வகையான அமினோ அமிலங்கள் (Amino acids)  இதில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்குள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் சிவப்பு எறும்புகளை அனைத்து இடங்களிலும் காண முடியும்.

மரங்களின் இலைகளில் கூடுகட்டி வாழும் இந்த எறும்புகளைப் பிடித்து சட்னி செய்து சாப்பிடுவது அம்மாநில மக்களின் வழக்கம்.

இந்த எறும்புச் சட்னிக்கு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

இதன் மூலம் எறும்புச் சட்னியின் பயன்கள், சுவை குறித்து உலக மக்கள் அறிந்து கொள்வதற்கு மாநில அரசின் ஆதரவுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒடிசா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (Press cutting)—subham—

tags- எறும்பு , ஒடிசா மாநிலம், சட்னி, செவ்வெறும்பு 

ரோஜா மலரே ராஜகுமாரி; லண்டன் காதலி கையில் பெங்களூரு ரோஜா!- 1 (Post.12,903)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,903

Date uploaded in London – –   10 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ரோஜா மலரே ராஜகுமாரி

ரோஜா மலரே ராஜ குமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா ஹோய்

வருவதும் சரிதானா, உறவும் முறை தானா

Roja Malare Raajakumari – Veerathirumagn by P.B.Sreenivas, P.Susheela –

எல்லோருக்கும் தெரிந்த இந்தப் பாட்டு வீரத்  திருமகன் திரைப்படத்தில் இடம்பெற்றது; இதே போல நிறைய பாட்டுக்கள் ரோஜா மலரைக் கொண்டாடியுள்ளன.

(இதன் விலை 15, 000 ரூபாய் ; உலகில் நீங்கள் சொல்லும் எந்த முகவரிக்கும் அனுப்பும் தொகை இது. )

பாரஸீக நாட்டில் பிறந்த ரோஜா செடி என்று உலகெங்கும் பரவிவிட்டது. நூற்றுக் கணக்கான புதிய ரகங்களும் வந்துவிட்டன!

ஏற்றுமதி நிறுவனங்கள் உலக ஏற்றுமதிப் பட்டியலைத் தயாரித்தன . அதில் 5025 ஏற்றுமதி பண்டங்கள் இருந்தன. அதில் ரோஜா மலர் 1058ஆவது இடத்தைப் பிடித்தது.

பணத்தின் மதிப்புப்படி பார்த்தால் நெதர்லாந்து என்னும் ஹாலந்து நாடுதான் ரோஜா ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது  அடுத்த இடம் ஈக்வடார் என்னும் தென் அமெரிக்க நாடு; அதைத் தொடர்ந்து கென்யா, கொலம்பியா,எத்தியோப்பியா நிற்கின்றன

In 2021 Roses were the world’s 1058th most traded product (out of 5,025). In 2021, the top exporters of Roses were Netherlands ($1.12B), Ecuador ($700M), Kenya ($630M), Colombia ($410M), and Ethiopia ($167M)..

வோல்சா என்னும் நிறுவனம் எல்லா இந்தியப் பொருட்களின்  ஏற்றுமதி  (Volza)  விவரங்களையும் சேகரிக்கிறது . இந்தியா ஏற்றுமதி செய்த ரோஜா மலரின் அளவு  363 000 கப்பல் ‘லோடு’ ஆகும்.

இந்திய ரோஜாக்களை அதிகம் வாங்கும் நாடுகள்- அமெரிக்கா, பிரிட்டன்,

ஜெர்மனி ,மலேசியா .

ரோஜா ஏற்றுமதியில் இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன

காதலர் தின ஏற்றுமதி

பிப்ரவரி 14ம் தேதி வரும் வாலண்டைன் டே (காதலர் தினம்), டிசம்பர் 25ம் தேதி வரும் கிறிஸ்துமஸ் தினம் ( Valentine’s Day and Christmas) ஆகிய இரண்டிலும் இந்திய ரோஜாக்களுக்கு மிகவும் கிராக்கி உண்டாகிறது. பிரிட்டனிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கும் வைபவங்களுக்கு பெங்ளூரு , புனே நகர ரோஜாக்கள் விமானத்தில் பறந்து செல்கின்றன .

எல்லா வகைப் பூக்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்தியாவின் ஏற்றுமதி வருமானம் –இந்திய ரூபாயில் 472 பில்லியன் ;

ஒரு பில்லியன் என்பது  100 கோடி ரூபாய்.

ரோஸ் எண்ணெய் ROSE OIL

உலகில்  பல்கேரியாவை ரோஜா நாடு LAND OF ROSES என்று அழைப்பார்கள்; பல நூற்றண்டுகளாக ரோஜா மலரைக் காதலிக்கும் நாடு BULGARIA பல்கேரியா ; உலகிலேயே அதிக ரோஸ் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு அது.

ரோஜா மலரின் மணம், மனதில் நல்லுணர்வுகளை தட்டி எழுப்புகிறது. மலரின் இதழ்களிலிருந்து எடுக்கப்படும் ROSE OIL எண்ணெய் பெரும்பாலான பெர்ப்பியூம் PERFUME என்னும் வாசனைப் பூச்சுகளில் பயன்படுத்தப்படுகிறது .

ஆயினும் ரோஸ் எண்ணெய்யை நேரடியாகப் பயன்படுத்தாமல் வேறு எண்ணெய்களில் கலந்து வீரியத்தைக் குறைத்த (DILUTED )பின்னர்தான் பயன்படுத்த வேண்டும்.

சருமத்தில் பயன்படுத்தும் பல கிரீம்களில் இந்த எண்ணெய் இருக்கிறது .

பன்னீரும் ROSE WATER உடலுக்கு நல்ல புத்தெழுச்சியை  உண்டாக்கும். இந்துக்களின் திருமண ரிசெப்ஷன்களிலும் பூஜைகளிலும் பன்னீர் பயன்படுகிறது .

ரோஸ் வாட்டர் என்னும் பன்னீரை ரோஜா இதழ்களிலிருந்து தயாரிக்கிறார்கள். Rose water (made by distilling petals in water) i;இதைக் கண்டுபிடித்தவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாரசீக தத்துவ ஞானியும் விஞ்ஞானியுமான ஆவிசென்னா Avicenna ஆவார் ,

காயங்களை ஆற்றுவதற்கு ரோஜா எண்ணெய் பயன்படுகிறது . ஏனெனில் இதில் கிருமிகளைக் கொல்லும் , வீக்கத்தத்தைத் தணிக்கும் ரசாயனம் உள்ளது ; சொறி சிரங்குகளைக் குணப்படுத்தவும் பயன்படுத்தலாம். நேரடியாகப் பயன்படுத்தாமல் பிற கலவைகளுடன் கலந்தே உபயோகிக்கவேண்டும்.

வயது ஆக ஆக , உடலின் செல்கள் பிரியும் வேகம் குறையும்; அதாவது புது செல்கள் உண்டாகாது. அப்படிப்பட்ட நிலையில் ரோஸ் ஆயில் கலவைகள் புது செல்களை உண்டாக்கவும், உலர்ந்த ரோமத்தை/ தோலை மிருதுவாக்கவும் உதவுகிறது .

அத்தர், ரோஜா குல்கந்து முதலியன பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்

TO BE CONTINUED………………………..

—–SUBHAM—-

TAGS- ரோஜா, எண்ணெய், பன்னீர், மலர், ஏற்றுமதி,

கேரளத்தில் ஒரு திருக்கடவூர் கோவில்-53 (Post No.12,902)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,902

Date uploaded in London – –   10 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 53

கோவில் எண்கள் –98,99, 100

98.த்ரி கடவூர் மஹாதேவர் கோவில் Thrikkadavoor Sree Mahadeva Temple

தமிழ்நாட்டில் அபிராமி பட்டரின் அற்புதத்தால் பிரபலமான அபிராமி அம்மன் கோவில் திருக்கடவூரில் உள்ளது. கடவூர் என்றும் கடையூர் என்றும் கூறுவார்கள் . இதே போல கேரளத்திலும்  ஒரு திருக்கடவூர் சிவன் கோவில் இருக்கிறது கொல்லத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாள் உற்சவம் நடக்கிறது.

ஒன்பதாம் நாள் திருவிழாவில் பள்ளி வேட்டை நடக்கும்  அந்த நாளில் வண்ண மிகு குதிரை உருவங்களை  கோவிலிலுக்கு ஊர் வலமாகக்  கொண்டுவருவார்கள் கடைசி நாள் நடக்கும் ஆராட்டு உற்சவத்தில் யானை பவனி, நாட்டுப்புற நடனங்கள் இடம்பெறும்  கிராம மக்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற இவ்வாறு குதிரை  உருவங்களை  காணிக்கையாக கொண்டுவருகிறார்கள்.

இந்தக் கோவில் புராணமும் தமிழ்நாட்டு திருக்கடையூர் அபிராமி- அமிர்த கடேஸ்வரர் போல மார்க்கண்டேயன் கதையையே கூறுகிறது .

கோவிலில் ஐயப்பன் , கணபதி, பிரம்மா ராக்ஷஸ, யக்ஷினி நாகராஜா, நாகா யக்ஷி ஆகியோரும் வழிபடப்படுகின்றனர் ; கருவறையில் சிவ பெருமான் இருக்கிறார்

கும்பம் மாதம் நடக்கும் பத்து நாள் உற்சவத்தைக் காண ஏராளமான வெளிநாட்டினரும் வருகிறார்கள் எட்டு திசைகளைக்  குறிக்கும் வண்ணம் கோவில் சார்பில் எட்டு செயற்கை குதிரை உருவங்களும் நிற்கும் நெடும் குதிரா / எடுப்பு குதிரா என்ற சப்பரத்தை பக்தர்கள் நீர் வழியே எடுத்துச் செல்லுவார்கள்

இன்னும் ஒரு சிறப்பு அம்சம்  சூட்டுக் களி ; அதில் பக்தர்கள், தீவட்டிகளுடன் ஆடுவார்கள். அவைகளை தென்னை ஓலைகளைக்கொண்டு செய்கிறார்கள். இது உற்சவம் துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்னரே நடக்கும் .

XXXXX

ஆனை வால் பிடிக்கும் உற்சவம்

99.உமையநெல்லூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

The rare ritual ‘Anaval pidi’ (pulling the tail of a tusker)  Umayanalloor Sree Balasubramanya Temple

கொல்லம் நகரிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள உமையநெல்லூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு உற்சவங்கள் நடக்கின்றன. மார்ச் மாதத்தில் எட்டு நாள் உற்சவம் நடக்கும். இதில் ஆறாவது நாளன்று ஆனை வால் பிடிக்கும் உற்சவம் என்ற சுவையான வைபவம் நடக்கிறது

காலையில் கோவில் யானையை , முருகன் சந்நிதிக்கு முன் நிறுத்துவார்கள்; அது இறைவனை வணங்கும். பின்னர் கோவிலை வலம் வந்து சந்நிதிக்கு முன்னர் நிற்கும். மாவுத்தன் கட்டளையிட்ட பின்னர், 300 அடிக்கு வாலையும் துதிக்கையையும் உயர்த்திக்கொண்டு பிளிறல் சப்த த்துடன் முன்னே பாயும். பக்தர்கள் அனைவரும் யானையின் வாலைப் பிடிக்க பின்னே ஓடுவார்கள். பின்னர் யானை ஓட்டம் நிறைவு பெறும் .

இந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பழைய கோவில். புத்தர்கள் இந்தக்கோவிலை ஆக்ரமித்து இருந்தனர். ஆதி சங்கரர்  வந்து அதை மீண்டும் இந்துக்  கோவிலாக மாற்றினார். இப்போதும் கோவிலில் புத்தமத எச்ச சொச்சங்களைக் காணலாம் .

xxxxx

100. கருநாகபள்ளி  மஹாதேவர் கோவில் Padanayarkulangara Mahadeva Temple

படையனர் குலங்கரா சிவன் கோவில் பள்ளிக்கல் ஆற்றின் கரையில்  கரு நாகப்பள்ளில் இருக்கிறது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுக்கும் மேலாக பழமை உடையது புத்தர்கள் கைப்பற்றி ஆக்ரமித்திருந்த இந்தக் கோவில் பின்னர் இந்துக்கள் வசம் வந்தது .

இந்தக் கோவிலில் 10 நாள் உற்சவம் நடக்கும். எல்லா நாட்களிலும் யானை பவனி நடைபெறும்.  கதகளி, அம்மன் குடம், குதிரை, மயிலாட்டம், காவடி ஆட்டம் முதலியன நடக்கும்.ஆராட்டு நாளில் நடக்கும் யானைகள் ஊர்வலம் , அருகிலுள்ள தேவி கோவில் வரைசென்று திரும்பி வரும்.

ஒரு காலத்தில் இது காயம்குள மன்னர்களின் தலை நகரமாக விளங்கியது. அதற்கு முன்னர் ஆய் குல மன்னர்கள் இப்பகுதியை ஆண்டனர்

சிவராத்திரி விழாவும் இங்கு பெரிய அளவில் கொண்டாடப்படும்

ஆய் வள்ளல்

இந்த இடம் சங்க கால ஆய் அண்டிரனுடன் தொடர்புடையது என்பதை  என்னுடைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன . நாகர் குல பழங்குடி மக்கள் பாம்புத்தோல் போல ஆடை நெய்வதில் சிறந்தவர்கள் . அவர்கள் ஆய் மன்னனுக்கு அளித்த கரு நாக வண்ண உடையை அவன் தான் அணியாமல் சிவ பெருமானுக்கு அளித்தான் ; இதனால் கடையெழு வள்ளல் களில் ஒருவனாகப் போற்றப்படுகிறான்

ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்.இதனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் சிறுபாணாற்றுப்படையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நிழல்திகழ்

நீலநாகம் நல்கிய கலிங்கம்

ஆலஅமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்

ஆர்வ நன்மொழி ஆயும்

வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.புறநானூறு மட்டுமின்றி அகநானூறு,குறுந்தொகை மற்றும் சிறுபாணாற்றுப்படை முதலியவற்றிலும் இவரை பற்றிய மேலும் சில பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.

இவர் தன்னை அண்டி வருபவர்களுக்கு,களிறுகளை பரிசாக அளிக்கும் கொடை குணம் கொண்டவர். இதனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் இவரைப் பற்றி எழுதிய பாடல்களில் இருந்து அறியலாம்.

இந்தத் தகவலானது இவன் யானைகள் அதிகமுள்ள கேரளத்தையும் தன் வசம் வைத்திருந்தான் என்பதையும், முதலில் சிவன் இருந்த இடத்தையே பெளத்தர்கள் கைப்பற்றினார்கள் என்பதையும், நாகா இன மக்கள் பாம்புத்தோல் போல மெல்லிய உடைகளை நெய்பவர்கள் அல்லது பாம்புகள் கழற்றும் பாம்புச் சட்டையைக் கொண்டு ஆடை செய்பவர்கள் என்பதையும் காட்டுகிறது .

—SUBHAM—

TAGS- பள்ளிவேட்டை குதிரை உருவங்கள், சூட்டுக் களி, உமையநெல்லூர் , பாலசுப்பிரமணிய சுவாமி, கோவில், ஆனை வால் பிடிக்கும் உற்சவம் , ஆய் அண்டிரன்