Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
11-7-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்
உலகின் பழமை வாய்ந்த அஜந்தா எல்லோரா குகைச் சிற்பங்கள்!
ச. நாகராஜன்
உலகின் பழமை வாய்ந்த குகைச் சிற்பங்களைக் கொண்டிருக்கும் அஜந்தா மற்றும் எல்லோரா மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள குகைகளாகும். அஜந்தா-எல்லோரா என்று சேர்த்தே சொல்வது பழக்கமாகி விட்டது என்றாலும் இவற்றிற்கு இடையே உள்ள தூரம் சுமார் நூறு கிலோமீட்டராகும்.
யாருமே பார்த்தறியாமல் பல நூற்றாண்டுகளாக இருந்த அஜந்தா குகைகளைக் கண்டு பிடித்தவர் ஒரு பிரிட்டன் அதிகாரி. 1819ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் வாழ்ந்து வந்த ஜான் ஸ்மித் என்ற பிரிட்டிஷ்காரர் வேட்டையாடுவதற்காக அஜந்தா காட்டிற்குள் சென்றார். ஒரு புலியை அவர் துரத்திச் சென்றார். அப்போது அங்கு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் புலிகள் தங்குமிடம் என்று சில குகைகளைக் காட்ட, அப்போது தான் அஜந்தா குகைகளைப் பற்றிய விவரத்தை முதன் முதலாக வெளி உலகம் அறிந்து கொண்டது.
குகைகளுக்கு அடியில் ஒரு நதி ஓடுகிறது. காலப் போக்கில் இது பெரும் காடாக மாறி விடவே யாரும் இங்கே வரவில்லை.
ஒரு குதிரைக் குளம்பு போன்ற வடிவத்தில் நீண்டு கிடக்கும் குகைகளின் உயரம் சுமார் 250 அடியாகும். 30 குகைகள் அஜந்தாவில் கண்டுபிடிக்கப்பட்டன. இது வரை இத்தாலிய சிற்பங்களே மிகவும் தொன்மை வாய்ந்தது என்று எண்ணியிருந்த உலக மக்களுக்கு மிக மிகப் பழமையான் அற்புதமான சிற்பங்கள் இந்திய சிற்பிகளால் கி.மு. 2 முதல் 6 நூற்றாண்டில் அமைக்கப்பட்டவை என்ற செய்தி தெரியவே அவர்கள் பிரமித்தனர்.
இந்தக் குகைகள் அனைத்தும் மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டவை என்பது பிரமிக்க வைக்கும் ஒரு விஷயமாகும்.
மேலிருந்து தொடங்கி கீழ் வரை வந்து அழகுற அமைக்கப்பட்ட இந்தக் குகைகள் ஆயிரக்கணக்கானோர் பல்லாண்டு காலம் வேலை பார்த்து உருவாக்கியவை என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
இந்த 30 குகைகளில் 9,19,26,29 ஆகிய குகைகள் பௌத்தர்களின் வழிப்பாட்டிடங்களாகவும் எஞ்சியவை பௌத்த பிக்ஷுக்கள் தங்கும் விகாரங்களாகவும் இருந்தவையாகும்.
அஜந்தாவில் உள்ள ஓவியங்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகியும் வர்ணம் மங்காமல் இருப்பது மாபெரும் அதிசயமே.
சரணந்திரி குன்றுகளில் அமைந்துள்ள 34 குகைகள் எல்லோராவில் உள்ளன. இக்குகைகளில் பௌத்த, இந்து மற்றும் சமணர்களது கோவில்களும், மடாலயங்களும் அமைந்துள்ளன. இவை 5ஆம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். இவற்றில் 12 பௌத்தர்களது குகைகளாகவும் 17 இந்துக்களின் குகைகளாகவும் ஐந்து சமணர்களின் குகைகளாகவும் அமைந்துள்ளன.
பல அடுக்குகளைக் கொண்டதாக இந்த மடங்கள் உள்ளன.
16ம் எண்ணுள்ள குகை கைலாசநாதரது கோவிலாகும். இங்குள்ள முற்றம் 276 அடி நீளமாகவும் 154 அடி அகலமாகவும் உள்ளது. இது பல மாடிகளைக் கொண்ட கோவில் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கைலாசநாதர் கோவிலை அமைக்க 107 அடி மலைப் பாறைகளைக் குடைய வேண்டி இருந்திருக்கிறது.
இந்த கோவில்களை யானை, சிங்கம் மற்றும் புலி உள்ளிட்டவைகள் தாங்குவது போல சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹிந்து மதத்தின் தேவதைகள் சிறப்பாக இங்கு செதுக்கப்பட்டுள்ளன.
ராமாயணத்திலிருந்து முக்கிய காட்சிகள் மையத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அஜந்தா எல்லோரா குகைகளை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமாகவும் பௌத்த மதத்தின் சிறப்பான வரலாற்றையும் சுட்டிக் காட்டுவதாகவும் விளங்கும் இந்தக் குகைகளைப் பார்க்க ஏராளமானோர் வருகின்றனர்; இவற்றைப் பார்த்து பிரமிக்கின்றனர்!
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.
****
Prayer -Mrs. Jayanthi Sundar Team
***
NEWS BULLETIN
Vaishnavi Anand from London present World Hindu News in Tamil
****
Brhannayaki Sathyanarayanan from Bengaluru speaks on
Koothanur Saraswathi Temple
****
PROFESSOR S SURYANARAYANAN SPEAKS ON
NUMBERS GIVE INTERESTING INFORMATION
***
SPECIAL EVENT-
TALK ON NAVARATRI FESTIVAL
By MAYILADUTHURAI SRI RAGHAVAN
MAYILADUTHURAI RAGHAVAN
Mayiladuthurai Raghavan, is a dedicated professional in the IT sector.
For the past 16 years, he has been delivering Upanyasams (discourses), Pravachanams (lectures), and devotional discourses in Tamil at various venues, covering a wide range of topics on a particular focus on Parashakti Sri Lalita Ambika Kamakshi.
His expertise has been recognized, and he had the privilege of presenting on Sri Sankara TV during numerous auspicious occasions. Two of his programs, each spanning over 10 months, have been particularly well-received.
“Sri Thyagaraja Vaibhavam” delved into the divine leelas (divine plays) of Sri Parameswara, who resides in Thiruvarur as Sri Thyagaraja’s Uttarayana and Dakshinayana.
“AcharyalumAmbikaiyum” provided insightful explanations of Devi Stotras (hymns to the Divine Mother) composed by the revered Adi Shankaracharya.
Furthermore, he has delivered Pravachanams on a wide array of subjects in various locations, Some of the most significant among these include:
1. Devi BhagavathaNavaham: A nine-day discourse on the Devi Bhagavata Purana
2. Sri Kamakshi Vaibhavam: Anine-day discourse on the glories of Sri Kamakshi Ambal
3. Sri Rajarajeshwari Vaibhavam: A nine-day discourse on the divine leelas of Sri Lalita Rajarajeshwari
4. Sri Lalitopakhyanam: A complete discourse on the Sri Lalitopakhyana for 28 days
5. Shiva Leelarnavam: Afive-day discourse on the divine leelas of Sri Parameswara
My Upanyasams have been presented in various cities across India, including New Delhi, Kolkata, Palakkad, Mumbai, Bangalore, and numerous locations in Tamil Nadu.
Additionally, he has regularly conducted Pravachanams at the branches of the Kanchi Kamakoti Sri Mutt in New Delhi and Bangalore.
Mayiladuthurai Raghavan, is a dedicated professional in the IT sector.
For the past 16 years, he has been delivering Upanyasams (discourses), Pravachanams (lectures), and devotional discourses in Tamil at various venues, covering a wide range of topics on a particular focus on Parashakti Sri Lalita Ambika Kamakshi.
His expertise has been recognized, and he had the privilege of presenting on Sri Sankara TV during numerous auspicious occasions. Two of his programs, each spanning over 10 months, have been particularly well-received.
“Sri Thyagaraja Vaibhavam” delved into the divine leelas (divine plays) of Sri Parameswara, who resides in Thiruvarur as Sri Thyagaraja’s Uttarayana and Dakshinayana.
“AcharyalumAmbikaiyum” provided insightful explanations of Devi Stotras (hymns to the Divine Mother) composed by the revered Adi Shankaracharya.
Furthermore, he has delivered Pravachanams on a wide array of subjects in various locations, Some of the most significant among these include:
1. Devi BhagavathaNavaham: A nine-day discourse on the Devi Bhagavata Purana
2. Sri Kamakshi Vaibhavam: Anine-day discourse on the glories of Sri Kamakshi Ambal
3. Sri Rajarajeshwari Vaibhavam: A nine-day discourse on the divine leelas of Sri Lalita Rajarajeshwari
4. Sri Lalitopakhyanam: A complete discourse on the Sri Lalitopakhyana for 28 days
5. Shiva Leelarnavam: Afive-day discourse on the divine leelas of Sri Parameswara
My Upanyasams have been presented in various cities across India, including New Delhi, Kolkata, Palakkad, Mumbai, Bangalore, and numerous locations in Tamil Nadu.
Additionally, he has regularly conducted Pravachanams at the branches of the Kanchi Kamakoti Sri Mutt in New Delhi and Bangalore.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாமத்தை நவராத்ரி காலத்தில் பாராயணம் செய்வது சம்பிரதாயமாக உள்ளது. இதற்குப் பலர் உரை எழுதியபோதும் பாஸ்கர ராயர் எழுதிய உரையே சிறந்தது . அதை கணேச அய்யர் என்பவர் நீண்ட விளக்கவுரையுடன் பதிப்பித்துள்ளார் . அதில் உள்ள பல சுவையான செய்திகளில் ஒன்று மனைவியின் பெருமையை பேசுகிறது சகல கலா வல்லுனரான அகஸ்தியருக்கு லலிதா சஹஸ்ர நாமத்தின் பெருமையைத் லலிதா தேவி தெரிவித்ததற்கு காரணம் அவருடைய மனைவியான லோபா முத்திரை என்று சொல்கிறது. வெற்றி அடைந்த ஒவ்வொரு ஆணுக்கும் பின்னால் இருப்பது ஒரு பெண்தான்“Behind every successful man, there is a woman” என்ற ஆன்றோர் பொன்மொழிக்கு உதாரணமாக அமைகிறது இந்தக் கதை.
லலிதா சஹஸ்ர நாமத்திலுள்ள ஆயிரம் நாமங்களையும்
ஹயக்ரீவர் (குதிரைக் கழுத்துடைய விஷ்ணு ரூபம் ), அகஸ்தியருக்கு உபதேசம் செய்தார்.
அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா மஹா பதிவிரதை; அதாவது கற்புக்கரசி; தேவிக்கு பன்னிரு பக்தைகள், சீடர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் லோபாமுத்ரா .
லலிதா த்ரிசதியின் அவதாரிகையில் அம்பாள் ஹயக்ரீவரைப் பார்த்து த்ரிசதியை அகஸ்தியருக்கு உபதேசிக்கும்படி ஆக்ஞா பிக்கையில் அதற்கு லோபாமுத்ரையின் கணவராக இருப்பது ஒரு காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது
பத்ன்யஸ்ய லோபமுத்ராக்யா மாமுபாசுதேதி பக்திதஹ
அயம் ச னிதராம் பக்தஹ தஸ்மாத் அஸ்ய வதஸ்ய தத்
பொருள்
இவருடைய மனைவியான லோபாமுத்திரை என்னை விசேஷமான பக்தியுடன் வழிப்படுகிறாள் ; இவரும் என்னுடைய பரம பக்தர் ஆகையால் நீர் அதை இவருக்குச் சொல்லும்..
இதிலிருந்து அகஸ்தியரும் கு சத்யவான், நளன் போல மனைவியால் பயன்பெற்றது தெரிகிறது. அம்பாளை அடைவதற்கான 15 உத்திகளில் ஹாதி வித்யையில் சிறந்தவள் லோபாமுத்ரா.
அகஸ்தியரின் பெருமையை நாம் எல்லோரும் அறிவோம் ; புராதன இந்தியாவின் மாபெரும் என்ஜினீயர் ; பல் மொழி வித்தகன் ; மனு ஸ்ம்ருதி சொன்னதையும் மீறி கடல்கடந்து சென்று ஏழு தென் கிழக்காசிய நாடுகளில் இந்து கலாசாரத்தையும் மொழியையும் பரப்பியவர்
கங்கை நதியைப் பயனுள்ள பாதையில் திருப்பிவிடுவதற்குப் பல மன்னர்கள் முயன்றும் பலனளிக்க வில்லை அதே வம்சத்தில் வந்த பகீரதன் கடும் தவம் இயற்றி கங்கையை பாக்கித்தான் பக்கம் போகாமல் இந்தியாவுக்குள் திரும்பிவிட்டார். அதே போல காவிரி நதி கேரளா பக்கம் சென்று கடலில் விழுந்து வீணாகியது . அதைத்தடுத்து காவிரியைத் தமிழ் நாட்டின் பக்கம் திருப்பினார் அகஸ்தியர் . ராமபிரான் போன்றோர் அக்காலத்தில் தென் இந்தியாவுக்கு வருவத கு சாலை போட்ட முதல் என்ஜினீயர் அகஸ்தியர் விந்திய மலை வழியாகச் சாலை அமைத்து அதன் கர்வத்தைப் பங்கம் செயதார் என்று இதை புராணங்கள் வருணிக்கின்றன
அதுமட்டுமால்லாமல் பாப்புலேலேஷன் பிராப்ளம் POPULATION PROBLEM லாங்குவேஜ் பிராப்ளம் LANGUAGE PROBLEM போன்ற பிரச்சினைகள் சிவபெருமானை வாட்டி வதைத்தது உடனே அவரை சிவன் தென் திசைக்கு அனுப்பினார் அவர் பதினெட்டு ஜாதிகளைச் சேர்ந்தோரை தென்னாட்டிற்கு அழைத்து வந்ததாக நச்சினார்க்கினியர் உரையில் கூறுகிறார் அதற்கு முன்னர் வடக்கு உயர்ந்து தென் திசை தாழ்ந்து இருந்தது ஏனெனில் வடக்கே ஜனத்தொகை பெருகியது.
அப்போது அகஸ்தியருக்கு மன உளைச்சல்கள் ஏற்பட்டது உங்களுக்கும் உமா தேவியாருக்கும் கல்யாணம் நடக்க விருக்கும்போது என்னை இப்படி தென்திசைக்கு ணைப்புவது நியாயமா? என்று கேட்க “கவலைப்படாதே மதுரையில் மீனாட்சி கல்யாணம் நக்கும்போது நீவீர் இதே காட்சியைக் காண்பீர் என்றார் சிவன். அது சரி, தமிழ் மொழிக்கு இலக்கணம் செய்ய்யுங்கள் என்றும் சொன்னீர்களே ; எனக்கு சம்ஸ்க்ருதம் மட்டும்தானே தெரியும் என்றார்
சிவன் சொன்னார் : இரு மொழிகளும் என்னிடமிருந்தே வந்தன; ஒரே அமைப்புடையவை. நீ எளிதில் கற்றுக்கொள்ளலாம் மேலும் என் மகன் முருகன் அங்கே இருக்கிறான் அவன் உனக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பான் என்றார் சிவன். இதை அருணகிரிநாதர், பரஞ்சோதிமுனிவர், சிவஞான முனிவர், பாரதியார் ஆகியோர் பாடியதிலிருந்தும் அதற்கு முன்னால் காளிதாசன் பாடிய ராகு வம்சம் மூலமும் நாம் அறிகிறோம்.
பாண்டிய மன்னன் திருமாறனை வியட்நாகுக்கு அழைத்துச் சென்று இந்து சாம்ராஜ்யத்தை நிறுவினார் வியட்நாமில் உள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது ஸ்ரீமாறன் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுதான்.
இவ்வளவு பெருமைபெற்ற அகஸ்த்தியர் மிகவும் குட்டை; ஆனால் அவர் மணந்ததோ மத்தியப்பிரதேச மஹாராணி , பேரழகி லோபாமுத்ரா. அவள் பல கண்டிஷன்களைப் போட்டாள்; அதையெல்லாம் நிறைவேற்றிய பின்னர் அகத்தியரை மணந்து கொண்டாள். அவளைத் தென்னாட்டிற்கு அழைத்து வர அகஸ்தியர் த்ருண தூமாக்னி என்ற தொல்காப்பியனை மத்திய பிரதேச விதர்ப்ப தேசத்துக்கு அனுப்பினார் அவர்கள் மதுரையை நெருங்கி வருகையில் வைகை நதி வெள்ளப்பெருக்கு எடுத்ததால் அத்தொல்காப்பியர் என்னும் த்ருண துமாக்கினி ஒரு கம்பினைப் பிடித்துக் கண்டு RIVER CROSSING ரிவரை க்ராஸ் பண்ணலாம் என்றார்; அதில் அகஸ்தியர் குற்றம் கண்டு பிடித்ததால் தொல்காப்பியம் எழுதிய த்ருண தூமாக்கினியும் அகஸ்தியரும் ஒருவரை ஒருவர் சபிக்கவே அகஸ்தியம் அழிந்தது; இது புகழ்பெற்ற நச்சினார்க்கினியர் நமக்குத் தந்த தகவல்.
இவ்வளவு பின்னணி உடைய அகஸ்தியருக்குப் பல நூல்கள்களை உபதேசித்த ஹயக்ரீவர் லலிதா சஹஸ்ர நாமத்தை உபதேசிக்கவில்லை அகஸ்தியர் வியந்தார் என்னிடம் குறையுளதோ; அல்லது குரு மறந்து விட்டாரோ அல்லது என்னுடைய பெயரில் அவளவு அலட்சியமா அல்லது உபதேசத்துக்குக் காலம் கனியவில்லையோ என்று எண்ணி எண்ணி பரிதவித்தார் .
அப்போது குரு ஹயக்ரீவர் சொல்கிறார்
லோபாமுத்திர பத்தேகஸ்த்ய
சாவதானமானா ஹா ச்ருணு
நாம்நாம் சஹஸ்ரம் யான்நோக்தம்
காரணம் தத் வாதாமி தே
லோபாமுத்ரையின் கணவனான அகஸ்தியனே கேள் ! கவனமாகக் கேள். இதுவரை சஹஸ்ர நாமத்தை உனக்கு நான் என் சொல்லவில்லை என்று சொல்கிறேன்
இதில்தான் முக்கிய விளக்கத்தைத் தருகிறார் உரைகாரர் ; அகஸ்தியரை அழைத்த ஹயக்ரீவர் “ஏ லோபமுத்ராவின் கணவரான அகஸ்தியனே கேள் என்று ஏன் சொன்னார் ? .
தேவியின் பன்னிரு சீடர்களில் ஒருவரான லோபாமுத்ரை என்பதால் உனக்கு ரஹஸ்யத்தைச் சொல்லப்போகிறேன் என்ற தொனி இதில் உள்ளது
அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்
ரஹஸ்யமிதி மத்வாஹம்
நோக்தவாம்ஸ்தே ந சான்யதா
புனச்ச பிருச்சஸே பக்த்யா
தஸ்மாத் தத் தே வதாம்யஹம்
அது ரஹஸ்யமென்று நினைத்துதான் நான் உனக்குச் சொல்லாமல் இருந்தேன். திரும்பவும் நீ பக்தியுடன் கேட்பதால் இதைச் சொல்கிறேன் என்கிறார் ஹயக்ரீவர்.
ஸ்ரீ வித்யை என்பது தேவியின் ரகசிய சக்திகளை விளக்கும் சாஸ்திரம் ஆகும்; இதை பன்னிரண்டு பேர் மட்டுமே விளக்கினார்கள் அவர்களில் அகஸ்தியரும் அவர் மனைவி லோபாமுத்ராவும் அடக்கம்.யார் அந்த 12 பேர்?
மனு: சந்த்ர குபேரச்ச லோபாமுத்ரா மன்மத
அக்ஸ்திரக்னி ஸூர்யச்ச இந்திர: ஸ்கந்த: சிவஸ்ததா
க்ரோத பட்டாராகோ திவ்யா துவாதசாமீ உபாசகாஹா
மனு, சந்திரன் குபேரன், லோபாமுத்ரா, மன்மதன், அகஸ்தியன், அக்கினி, சூர்யன், இந்திரன் ஸ்கந்தன், சிவபெருமான் , க்ரோத பட்டராகன் (துர்வாசர்); இவர்கள் அனைவரும் ஸ்ரீவித்யை எனப்படும் தேவி ரஹஸ்யங்களை அறிந்து உபாசித்து வருகிறார்கள்.
லோபாமுத்ரா லலிதா தேவியினுடைய சிஷ்யை, மஹா பக்தை ஆகையால் உனக்குச் சொல்லிக்கொடுக்கிறேன் என்று லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லிக்கொடுத்தார் போலும்.
நமது காலத்தில் இதை ஆங்கிலத்தில் விளக்கியவர் ஆர்தர் ஏவலன் எனப்படும் சார் ஜான் வுட்றாப் ARTHUR AVALON ALIAS SIR JOHN WOODROFFE ஆவார் ; அவருக்கு முன்னர் பாஸ்கர ராயர் (1690-1785) சம்ஸ்க்ருதத்தில் உரை எழுதினார்
அவர் நாற்பதுக்கும் மேலான நூல்களை மேற்கோள் காட்டி உரை எழுதியுள்ளார்
அவருடைய உரையில் அகண்ட பாரத ஸ்லோகம் வருகிறது:
ஆ ப்ராஸ: காமரூபாத் த்ருஹிண சூதநத:
ப்லாவிதாத் ஆப்ரதீ சோ
காந்தாராத் ஸிந்து சாரத்ராத் ரகுவரசரிதாத்
ஆ ச சேதோ:ரவாசு:
ஆகேதாராத் உதீஸஹ துசின கஹிந்த::
சந்தி வித்வத் சமாஜா:
யே யே தான் ஏஷ யத்ன: சுகயது ஸமஜான்
கச்சமத் கர்த்து மீஷ்டே
கிழக்கில் பிரம்மபுத்ரா நதி காமரூப (Assam ) தேசம் வரையிலும் , மேற்கில் ஸிந்து நதி ஓடும் காந்தார (Afghanistan/Iran) தேசம் வரையிலும் தெற்கில் ஸ்ரீ ராமரால் கட்டப்பட்ட சேது (Rameswaram) வரையிலும் வடக்கில் பனி மூடிய கேதாரம் (Himalya) வரையிலும் எந்தெந்த வித்வத் சமாஜங்கள் இருக்கின்றனவோ அவைகளை என்னுடைய இந்த முயற்சியானது சுகம் அடைய செய்யட்டும் . மந்த புத்தியுள்ளவர்களைத் திருப்தி செய்ய யாரால்தான் முடியும்?
***
குரு/Sun சூரியன்; சீடன் Lotus தாமரை
தமிழில் உரை எழுதிய கணேச அய்யர் வேறு எங்குமில்லாத ஒரு உவமையை நமக்குச் சொல்கிறார். குரு என்பவர் சூரியன் போன்றவர் என்றும் அவருடைய உபதேசத்தினால் மொட்டு போல இருந்த சீடநின் அறிவு சூரியனைக் கண்ட தாமரை போல மலரும் என்றும் போதசாரம் நூலிலுள்ள ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டுகிறார்..
தொடரும்
TAGS- மனைவியின் பெருமை, லலிதா சஹஸ்ர நாமம், மனு, லோபாமுத்ரா, அகஸ்தியன்,
உபரத்தினங்களின் வரிசையில் ஒன்றாகக் கருதப்படுவது கால்ஸைட் (CALCITE).
விலை மலிவு ஆனால் பலன்களோ அதிகம்.
இது ஒரு ரசாயன உப்பு (Mineral). இதற்கு இப்படிப் பெயர் வைத்தவர் ப்ளினி தி எல்டர்.(Pliniy the Elder)
இதன் கெமிக்கல் ஃபார்முலா CaCO3. இது கால்ஸியம் அலுமினியம் கொண்ட ஒரு கலவையாகும்.
Calx என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது கால்ஸைட் என்ற சொல். இதனுடைய அர்த்தம் சுண்ணாம்பு என்பதாகும்.
பகுத்தறிவைத் தூண்டி ஆற்றலைத் தரும் கல் இது.
இதை அறையில் வைத்தாலேயே போதும் இதன் வலிமை வாய்ந்த அதிர்வுகள் நமக்கு பல நன்மைகளை உண்டாக்கும்.
நமது சக்தியைப் பன்மடங்காக்கும் ஆம்ப்ளிபையர் போல இது செயல்படும்.
உடல் வலிமை மற்றும் மன வலிமை ஆகிய இரண்டையும் சேர்த்து இது தருகிறது. உடலில் உள்ள வியாதியை உருவாக்கும் தீய சக்திகளை இது விரட்டி அடிக்கிறது. உணர்வுபூர்வமான மன அழுத்தத்தை நீக்கி உணர்வு கோஷண்ட் எனப்படும் எமோஷனல் கோஷண்டை இது சீராக்குகிறது.
காதலுக்கு ஒரு கல் இது. உறவுகளை மேம்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. மணவாழ்க்கையை சீராக்கி முறிந்த உறவுகளைச் சேர்க்கும் தன்மை இதற்கு உண்டு.
இது பளபளப்பாகவும் கிடைக்கிறது; பல வண்ணங்களிலும் கிடைக்கிறது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு சக்தி உண்டு.
இது உடலில் உள்ள ஆதார சக்கரங்களைத் தூண்டி விட்டு அதிக சக்தியைத் தருகிறது.
ஆரஞ்சு நிற கால்ஸைட் ஸ்வாதிஷ்டான சக்ரத்துடன் இணைந்து படைப்பாற்றல், பாலுறவு, புலனின்பம் ஆகியவற்றை நல்குகிறது.
மஞ்சள் நிற கால்ஸைட் மணிப்பூரக சக்ரம் தரும் அபூர்வ ஆரோக்கியப் பலன்களைத் தருகிறது. பயத்தை விரட்டி அடிக்கிறது.
நீல நிறக் கல்லானது படைப்பாற்றலை ஊக்குவிக்கும்.
எகிப்தியர்கள் இந்தக் கல்லை மிகவும் கொண்டாடி வந்தனர். தங்களது பாரோக்களின் கல்லறைகளில் இதை வைத்து அலங்கரித்தனர்.
இந்தக் கல் அமெரிக்கா, செக்கோஸ்லேவேகியா, ருமானியா, ஐஸ்லேண்ட், பெல்ஜியம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் கிடைக்கிறது. உலகெங்கும் கிடைப்பதால் “எங்கும் கிடைக்கும் கல்” என்ற பெயரும் இதற்கு உண்டு.
உடலில் அணியும் ஆபரணங்களாகவும் செய்து கொண்டு இதை அணியலாம். அல்லது வெறும் கல்லாகவும் இதை வைத்துக் கொள்ளலாம்.
இதை சுத்தப்படுத்துவதற்காக கரடுமுரடான பொருள்களால் இதைத் தேய்க்கக் கூடாது.
ஓடும் நீரில் சுத்தப்படுத்தினாலேயே போதும்.
எந்த ரத்தினக்கல்லாக இருந்தாலும் சரி, உபரத்தினமாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரின் உடல், மன, ஆன்மீகத் தன்மைகள் வேறு வேறாக இருப்பதால் தகுந்த ஒரு ரத்தினக்கல் நிபுணரிடம் சென்று (GEMMOLOGYST) அவரது ஆலோசனையைப் பெறுதல் அவசியம்.
பணத்தைக் கொடுத்து வாங்குகின்ற கல் உண்மையிலேயே அந்தக் கல் தான் என்பதை அதற்குரிய சர்டிபிகேட்டைப் பார்த்து அறிந்து பின்னர் வாங்க வேண்டும். அல்லது நமது நலத்தை நாடும் அன்பரிடம் மட்டுமே நவரத்தின மற்றும் உபரத்தினக் கற்களை வாங்க வேண்டும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Water Proverbs – 1
In crossing water and giving money, never be the first.
**
Water causes neither illness, nor intoxication, nor debts.
Water causes neither sickness, debt, nor widowhood.
**
One should not stir up the water one has to drink.
At the end of a thousand years, the water returns to its cask.
Meaning: we always return to our old loves.
Of water what has been poured out, collect what you can.
–Spanish proverbs
**
Running water is not harmful to man.
Beware of water that doesn’t run and a cat that doesn’t mew.
Everyone draws water to his own mill and leave the neighbour’s dry.
–Catalonian
**
Pure water is the world’s first and foremost medicine.
Everybody drive the watercourse to his own mill.
Slovakian proverb.
**
Water will run again where it once ran-Slovenian.
The ends into the water
Meaning :the throwing of vanquished people into the water with stones tied to them Shemyaka in Norgorod: John IV in Norgorod (Part of Russian History). Also called Novgorod.
**
Into the sack and into the water
Meaning : the court of Modvins- a tribe living in the east of Europena Russia)
**
Downstream the water carries; upstream the necessity
Meaning: Volga boatman. Timber carried downstream; upstream grain which required a team of men.
**
Within a Russian hour much water flows
Meaning: ancient calculation off time according to the quantity of water flowing out of container.
**
Wherever water flows it will find way.
The more abundantly water gushes from its source, the less is the source esteemed.
Where water has been, there it will be.
Here money once went, there it will go again.
You must drink the water of the river you are travelling on.
**
Even if water flows on all directions, the sand will remain at the bottom- Georgian
Water breaks out where it is not expected.
Water for the skin, but wine for the vitals.
**
Under water, hunger; under snow, bread.
A glass of water is sometimes worth a tun of wine.
—Italian
**
He drinks water by measure. i.e. penny wise and pound foolish.
Water tastes better at the source- Latin
**
All water quenches thirst.
To drink pure water, go to the source- Maltese
**
There is no stronger drink than water.
Water and fire are good servants but cruel masters-
Montenegrin
**
What water gives water takes away- Portuguese
***
From the drop of water through the roof, and death
through the door there is no escape – Albanian proverb
**
Clean water often comes out of a mucky spout
Meaning- good person may come from a disreputable family.
There is always some water where the heifer drowns.
–English
**
Much water flows by unknown to the miller.
Let everyone seek water for his own ship.
The water is shallowest where it babbles.
There is no obstruction but water.
–Welsh
Clear water, peaceful mind.
As long as a man is healthy even water will be a tasty beverage.
Water will run where it ran before.—Bulgarian
If you wade through all waters you will drown in the end—Danish
நுாற்றாண்டுகளுக்கும் மேலான அந்நிய ஆதிக்கத்தின் விளைவாக, அரசியல் மற்றும் பொருளாதார தத்துவங்களில் புரையோடி போயிருந்த மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கத்தை விலக்கி, நல்லிணக்கத்தை நோக்கமாக கொண்ட, பண்டைய இந்திய அரசியல் வாழ்க்கையை மீட்டெடுக்க முயன்ற மாபெரும் தளகர்த்தர்களில் முக்கியமானவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.
காங்கிரஸ் அல்லாத ஓர் இயக்கத்தைக் கட்டமைக்க அடித்தளமிட்டவர் இவர். இவரது பிறந்த தினம் இன்று (25, செப்டம்பர்). தனது புதிய அவதாரத்தின் மூலம் இன்று இந்தியாவின் வளர்ச்சி முகத்தை மாற்றியமைத்த பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய வடிவமான ஜனசங்கத்தின் தலைவர்களில் முதன்மையானவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.
தேசியச் செயலராக, தலைவராக தொடக்க காலம் முதல் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் சித்தாந்தங்களை வளர்த்தெடுத்தவர்.
இளமைக் காலம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா சந்தரபான் என்ற கிராமத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் நாள் பிறந்தார். மூன்று வயதிற்குள் தந்தையையும், ஏழு வயதிற்குள் தாயாரையும் இழந்த தீன்தயாள், ரயில்வே துறையில் பணிபுரிந்த தன் தாய்மாமன் ராதாராமனின் அரவணைப்பில் வளர்ந்தார்.
வறுமையான குடும்ப சூழலில் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு படித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பள்ளி மேல்நிலைக்கல்வித் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக கல்வி உதவித்தொகையும் பெற்றார்.
இளங்கலை பட்டப்படிப்பிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஆனால், குடும்பச்சூழல் காரணமாக முதுகலைப் பட்டப்படிப்பை இடையிலேயே விட்டுவிட்டார். இவர், அரசு நிர்வாகப்பணித் தேர்விலும், இளநிலை ஆசிரியர் பயிற்சியிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட, பல்வந்த் சாப்தே மூலம் 1937ல் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர்ந்தார்.
சமூக வாழ்க்கை
ஆர்.எஸ்.எஸ்.,சைத் தோற்றுவித்த டாக்டர் ஹெட்கேவர் மற்றும் நானாஜியால் பெரிதும் கவரப்பட்டு, 1942 முதல் முழு நேர ஊழியராக மாறினார். கடந்த, 1951ல் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியால் துவக்கப்பட்ட ‘ஜனசங்கம்’ என்ற அரசியல் இயக்கத்தில் சேர்ந்தார். 1952ல் ஜனசங்கத்தின் தேசியச் செயலராக நியமிக்கப்பட்டார்.
ஹிந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக்கூடியவர் இவர், 1945ல், ‘ராஷ்டிரதரம்’ என்ற மாத இதழ், 1948ல் ‘பஞ்சஜன்யா’ என்ற வார இதழ், 1949- – 50ல் ‘சுதேசி’ நாளி தழையும் வெளியிட்டார். மேலும், ‘சாம்ராட் சந்திர குப்தர், ஜெகத்குரு சங்கராச்சாரியா’ உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதினார். ஆர்கனைசர் என்ற ஆங்கில வார இதழில் ‘அரசியல் டைரி’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்தார்.
இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவிற்கு எதிராக டாக்டர் முகர்ஜி, ஒரு சத்யாகிரகக் குழுவுடன் ஜம்மு- காஷ்மீரை நோக்கிப் பயணப்பட்டார். அப்போது கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கேயே மர்மமான முறையில் திடீரென இறந்தார். கட்சியின் முழுப் பொறுப்பும், 37 வயதே நிரம்பி இருந்த தீன் தயாள் கைக்கு வந்தது.
தொடர்ந்து 15 ஆண்டுகள் வாழ்க்கையின் இறுதி நாள் வரை அதுவே அவரது இலட்சியப் பயணமாக அமைந்தது. கட்சியை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்றதிலும், அதன் அரசியல் சித்தாந்தங்களைச் செதுக்கியதிலும், பலமான கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்ததிலும் அவரது பங்களிப்பு மகத்தானது.
பின், 1980ல் ஜனசங்கம், பெயர் மாற்றத்துடன் பாரதிய ஜனதா கட்சியாகி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதற்கு, அன்றே அடித்தளமிட்ட தேசத்தலைவர் தீன் தயாள் உபாத்யாயா ஆவார். பாரதிய ஜனசங்கத்தின் தொடக்க காலம் முதல் தொடர்ந்து பொதுச் செயலராகப் பணியாற்றிய தீன்தயாள் உபாத்யாயா, 1967, டிசம்பரில், தேசியத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
மனிதநேய சித்தாந்தம்
பிரதமர் மோடி, தீன் தயாள் உபாத்யாயா சொல்லிக் கொடுத்த மனித நேயத்தைக் கடைப்பிடித்து வருகிறார். தற்போது செயல்பட்டு வரும் தேசிய புதிய கல்விக் கொள்கை, புதிய சுகாதாரக் கொள்கை, பொது சிவில் சட்டம், புதிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்த மசோதா, ஆத்மநிர்பர் பாரத், மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, துாய்மை இந்தியா போன்ற அனைத்துக் கொள்கைகளுக்கும், சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் ஆதாரமாக இருப்பது, இக்கோட்பாடே!
சுதந்திரத்துக்குப் பிறகும் கூட, நம் அரசியல் கட்சிகளின் சிந்தனை மேற்கத்திய சிந்தனையாகவே தொடர்ந்தது. இந்தியர்களின் மனமும் சிந்தனை ஓட்டமும் பாரதிய தன்மை கொண்டதாக இருக்கவில்லை. இந்திய அரசியலில் காணப்பட்ட மேற்கத்திய தன்மையும் ஊழல்களும் இவரை மிகவும் கவலை அடையச் செய்தன.
இடதுசாரி மற்றும் வலதுசாரி அரசியல் கோட்பாடுகள் செயற்கையானவை என்று கருதினார். இவை பாரத தேசத்திற்கு ஒவ்வாதவை என்று எடுத்துரைத்தார். அரசியலிலிருந்து தர்மத்தை பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதை கொள்கை ஆக்கினார்.
கடந்த, 1965ல் மும்பையில் நடைபெற்ற பாரதிய ஜனசங்கக் கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் ஒரு தீர்க்கமான கொள்கையை முன்வைத்தார். இந்த விளக்கங்கள் ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அறம் இல்லாத பொருளாதாரமும் ஒழுக்கமில்லாத அரசியலும் ஒரு சமுதாயத்தை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் என்றார் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா.
பொருளாதாரக் கொள்கைகளும் அரசியல் கோட்பாடுகளும் மக்களின் பாரம்பரியம், கலாசாரம், இயற்கை வளங்கள் மற்றும் அவர்களின் எண்ண ஓட்டங்களை ஒட்டி அமைய வேண்டும் என்றார்.
இவர் மனிதனுக்குத் தேவையான தர்மம், காமம், அர்த்தம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களை இன்றைய சமூக- பொருளாதார பிரச்னைகளுடன் தொடர்பு படுத்தி விவரித்தார்
உடல், மனம், அறிவு மற்றும் ஆன்மா ஆகியவற்றால் ஆக்கப்பட்ட மனிதனுடைய இந்த நான்கு கூறுகளுக்கான தேவைகள் ஒரே சமயத்திலும் ஒருங்கிணைப்புடனும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்; இதை இயற்கைக்குப் பங்கமில்லாமல் பாரதப் பண்பாட்டுடன் செய்ய முயல வேண்டும் என வலியுறுத்தினார்.
சுதேசி பொருளாதரத்தை ஆதரித்தார். வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களைச் சார்ந்து உள்நாட்டுத் தொழில்கள் மற்றும் வளங்களை ஊக்குவித்தார். இன்றைய காலங்களின் தேவை புதிய நகரங்கள் அல்ல; கிராமங்களின் தொழில்மயமாக்கலே என்றார்.
விவசாயிகள் அரசாங்கங்களின் கட்டுப்பாடுகளில் இருந்தும், பிற நேர்மையற்ற கூறுகளிலிருந்தும் விடுபட வேண்டும்; விவசாயிகள் முதலாளிகளாகக் கருதப்பட வேண்டும்; பாரம்பரிய திறமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; உள்ளுர் சந்தைகள் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் தீன்தயாள் விரும்பினார்.
இருப்பினும், சுற்றுச் சூழலை அழிக்கும் நுகர்வுக் கலாசாரத்தை விட்டொழிக்க வேண்டும்; இயற்கை வளங்களின் சமநிலை பாதிக்காதவாறு, அவ்வளங்கள் தொடர்ந்து நமக்குக் கிடைக்கும் வண்ணம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், ஓவ்வொரு தொழிலாளியும் உணவைப்பெற வேண்டும் என்ற வழக்கமான முழக்கத்திற்குப் பதிலாக நம் பொருளாதாரத்தின் அடிப்படையாக அனைவருக்கும் உணவும் வேலையும் கிடைக்க வேண்டும் என்றார்.
தேசிய விழிப்புணர்வு, தேசிய அடையாளம் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துகிற தீன்தயாள் உபாத்யாயா, பிளவு படுத்தும் மனப்பான்மை கொண்ட ‘மேற்கத்திய தேசியவாதத்தை’ எதிர்த்தார். தேசிய உணர்வின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய இவர், ‘தேசிய அடையாளமும் கலாசார சுதந்திரமும் இருக்கும்போதுதான் அரசியல் சுதந்திரம் அர்த்தமுள்ளதாகிறது.
‘எனவே, நம் தேசிய அடையாளம் குறித்த சிந்தனை அனைவருக்கும் தேவை; மேலும், நம் தேசிய அடையாளத்தை நாம் அறியாத வரை, நம்முடைய முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியாது’ என்றார். பண்டிட் தீன்தயாளால் முன்மொழியப்பட்ட அரசியல் தத்துவமான இந்த ஒருங்கிணைந்த மனிதநேயம் இன்றைக்கும், என்றைக்கும் பொருந்துகிற தத்துவமாக இருக்கிறது!
தொடர்புக்கு:+91 94438 50902dharmaws@yahoo.co.in
DINAMALAR REPORT
*******
FOLLOWING IS FROM FACEBOOK
பாரதத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரும் அரசியல், சமூகம், இலக்கியம் என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தவருமான பண்டிட் தீனதயாள் உபாத்தியாய (Pandit Deendayal Upadhyaya) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* உத்திரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் நகலா சந்திரபான் என்ற கிராமத்தில் பிறந்தார் (1916). சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்தார். உறவினர்களால் வளர்க்கப்பட்டார். பத்து வயதே ஆன இவர் தன்னைவிட இரண்டு வயது குறைவான தம்பியை பொறுப்போடு வளர்த்து வந்தார்.
* கங்காபுரில் ஆரம்பக் கல்வியும் பின்னர் ராஜகரில் பள்ளி மேல்படிப்பும் பயின்றார். கணிதத்தில் சிறந்த மாணவராக விளங்கினார். 1937-ல் இன்டர்மீடியட் தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இதனால் மேல்படிப்புக்காக கல்வி உதவித்தொகையும் பெற்றார்.
* கான்பூர் எஸ்.டி. கல்லூரியில் சேர்ந்தார். இங்கு அவர் சுந்தர்சிங் பண்டாரி, பல்வந்த் மஹாசிங்கே ஆகியோரை சந்தித்தார். 1939-ல் பட்டம் பெற்றார். எம்.ஏ. படிப்பதற்காக ஆக்ரா சென்றார். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
* சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களால் இவரால் முதுகலைப் படிப்பைத் தொடர முடியவில்லை. அரசு வேலைக்கான தேர்வு எழுதப்போன சமயத்தில் வேட்டி, குர்தா, தலையில் தொப்பி சகிதம் சென்ற இவரைப் பார்த்து சிலர் ‘பண்டிட்ஜி’ என்று கிண்டலாக அழைத்தனர். ஆனால் அதுவே பின்னாளில் இவரது பெயருடன் நிலைத்துவிட்டது.
* இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் திறம்பட எழுதக்கூடியவர். இந்தியில் மிகவும் பிரபலமான ‘சந்திரகுப்த மவுரியா’ என்ற நாடகத்தை ஒரே மூச்சில் எழுதிவிட்டார். தேசிய விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்க ‘ராஷ்ட்ர தர்ம’ என்ற மாத இதழை 1940-ல் லக்னோவில் தொடங்கினார். பின்னர் ‘பாஞ்சஜன்யா’ என்ற வார இதழையும் ‘சுதேசி’ என்ற நாளிதழையும் தொடங்கினார்.
* 1942-ல் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்’ சங்கத்தில் இணைந்து அதன் முழு நேர ஊழியராகப் பணியாற்றினார். ‘ஏகாத்மா மானவ்வாத்’, ‘லோகமான்ய திலக் கீ ராஜநீதி’, ‘ஜனசங் கா சித்தாந்த் அவுர் நீதி’, ‘ஜீவன் கா த்யேய’, ‘ராஷ்ட்டிர ஜீவன் கீ சமஸ்யாயே’, ‘பேகாரி கீ சமஸ்யா’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
* இவரது செயல்கள், படைப்புகள், பேச்சுகள் அனைத்திலும் தேசியமே நிறைந்திருந்தது. இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் எப்போதுமே செயல்படுவார். வீடு, குடும்பம் இவற்றைவிட தேச சேவையையே முக்கியமாக கருதினார்.
* தற்கால விஷயங்கள் குறித்து ‘பொலிடிகல் டைரி’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். 1951-ல் சியாம் பிரசாத் முகர்ஜி, பாரதீய ஜனசங்க கட்சியை நிறுவியபோது இவர் அதன் பொதுச் செயலராக செயல்பட்டார்.
* ‘இரண்டே இரண்டு தீனதயாள்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகமே மாறிவிடும்’ என்று சியாம் பிரசாத் இவரைப் பற்றிக் கூறுவார். அவர் மறைந்த பின் ஜனசங்க கட்சியின் தலைவரானார்.
* தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமூகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 1968-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 51.
பதிவு: ராஜலட்சுமி சிவலிங்கம், FACE BOOK REPORT 25-9-25
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 2
அதர்வண வேத மந்திர எண்கள் பின்வருமாறு
அக்சத – காயமடையாத 4-9-8
அன்ய -த்யூஸ் -ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் காய்ச்சல் 7-116-2
அபான – வெளிவிடும் மூச்சுக் காற்று 10-2-
பிராண, வியான ஆகிய காற்றுகளை ரிக்வேதத்தில் கண்டோம்
அப்வா – வயிற்று நோவு – 3-2-5
அருந்ததி – ஒரு மூலிகையின் பெயர் ; 4-13-1
கீழ் ஜாதியில் அக்ஷமாலா என்ற பெயருடன் பிறந்த பெண் என்று மனு ஸ்ம்ருதி கூறுகிறது ;அவள் வசிஷ்ட மகரிஷிக்கு மனைவியாகி சப்தரிஷி மண்டல நட்சத்திரங்களுள் ஒன்றானாள் ; அதை அராபியர்கள் ஆல்கால் ALCOL என்றனர் ; திருவள்ளுவர் குறளில் அது அலகை என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
அகண்டு – ஒரு வகைப் பூச்சி 2-31-2
அல்பஸயு – ஒரு வகைப் பூச்சி 4-36-9
அசரிக- (முடக்கு வலி) முடக்கு வாதம் 19-34-10
உபய– த்யூஸ் – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் மலேரியா போன்ற காய்ச்சல் 1-26-4; 7-116-3;
இந்த உபய என்ற சொல் இன்று வரை வைஷ்ணவர் கடி தங்களிலும் திருமண அழைப்பிதழ் களிலும் இடம் பெறுகிறது இரண்டும் என்பது பொருள்
கிலாச – வெண் குஷ்டம் 1-23-1,2;
க்ளிவத்வ/- ஆண்மையின்மை , அலி 6-138;
கண்டமாலா – கழுத்தில் வீக்கம்
கண்ட என்பதை கழுத்துக்குத் தமிழர்களும் ஏனையோரும் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்
நீல கண்ட – சிவனுக்கும் மயிலுக்கும் பெயர்
ஜடிங்கா – வலியைக் குறைக்கும் , மயக்கம் தரும் மூலிகை; பலாச நோய்க்கு மருந்து
(பலாச கீழே வருகிறது )
ஜ்வர – காய்ச்சல் 5-30-8
இன்று வரை நாடு முழுதும் பயன்படுத்தும் சொல்
த்ரிதியாக – 3 நாட்களுக்கு ஒரு முறை வரும் காய்ச்சல் /மலேரியா 1-25-4; 7-116-2;
பலாச – காசநோய் 4-98;6-14-1
யக்ஸ்மா – காசநோய் 5-38 and 16;
வருண கிரஹித – ஜலோதர நோய் / மகோதரம்
வித்ரியாக – இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு வரும் காய்ச்சல் 5-22-13;
சீர்சாமய – தலைவலி ;ஆமய என்றால் நோய்; சிரஸ் என்றால் தலை 5-4-10;9-8-1;
சதாம் -தி – தினமும் வரும் மலேரியா ஜுரம் 1-2-13
ஹரிமா- மஞ்சள் காமாலை 19-44-2
***
ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் ஆண்- பெண் புணர்ச்சி பற்றிய சூக்தம் 10-85-37 உள்ளது
கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு செய்யவேண்டிய பும்ஸவன சீமந்தக் கிரியைகளை அதர்வண வேதம் விவரிக்கிறது . கர்ப்பவதிக்கு குளிகை மருந்து தருவதையும் குறிப்பிடுகிறது. அங்கே வரும் ஒரு அருமையான உருவகம் சொல்கிறது: AV 3-23
தாவரங்களே தந்தை, பூமியே தாய், சமுத்திரம் வேர், கடவுள் கொடுத்த மூலிகைகள் உனக்கு ஒரு நல்ல மகனை ஈன்ற உதவட்டும்
யாசாம் த்யெளவ பிதா, ப்ருத்வீ மாதா, சமுத்ரோ மூலம், விருதாம் பபூவ .
தாஸ்த்வா புத்ரவித்யாய தைவீ ப்ராவாந்த்யோ பவஹ
The plants which has been the father, earth the mother, ocean the root, let those herbs of the god favour thee, in order to acquire a son.