அடுத்து சுந்தரகாண்டத்தில் லங்கா தேவியை ஜெயித்தல் என்ற மூன்றாம் அத்தியாயத்தில் லங்கா தேவிக்கு பிரம்மா வரம் அருளிய செய்தியைப் பார்க்கிறோம்.
ஹனுமான் இரவில் லங்கையில் புகுதலுற்றார்.அவர் மதில் சுவரின் மேல் வேகமாக ஏறினார்.
அப்போது லங்கா நகரைக் காக்கும் நகர தேவதை உள்ளே போகும் ஹனுமானைக் கண்டாள். கோரமான தோற்றத்துடன் வாயுகுமாரரின் எதிரில் வந்து நின்றாள்.
“யார் நீ? குரங்கே! உன்னால் இங்கு வர முடியாது” என்று சொல்ல ஹனுமான் இந்த நகரைப் பார்ப்பதற்கே வந்தேன் என்று பதிலிறுத்தார்.
உடனே அந்த நிசாசரி ஹனுமானைக் கையால் அறைந்தாள்.
உடனே ஹனுமான் தனது இடது கை முஷ்டியால் அவளை குத்தினார். பெண் என்பதால் அதிக வலிமையைக் காட்டவில்லை. அவளோ அந்த ஒரு குத்திலேயே நிலை குலைந்து கீழே விழுந்தாள். நாத்தழுதழுக்க ஹனுமானிடம் தன்னைக் காத்தருள வேண்டினாள்.
பின்னர் கீழ் வருமாறு கூற ஆரம்பித்தாள்;
அஹம் து நகரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்கம |
நிர்ஜிதாஹம் த்வயா வீர் விக்ரமேண மஹாபல ||
சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 46
மஹாபல – மிக வலிமையுடைய
ப்லவங்கம – வானரரே!
அஹம் து – நானோ
ஸ்வயம் லங்கா – ஸ்வயமான லங்கா என்ற
நகரீ – நகர தேவதை;
வீர் – வீரரே!
அஹம் – நான்
த்வயா ஏவ – உம்மாலே தான்
விக்ரமேண – பராக்கிரமத்தால்
நிர்ஜிதா – ஜெயிக்கப்பட்டேன்
இதம் து தத்யம் ஸ்ருணு வை ப்ருவந்த்யா மே ஹரீஸ்வர |
ஸ்வயம் ஸ்வயம்புவா தத்தம் வரதானம் யதா மம ||
சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 47
ஹரீஸ்வர – வானரேஸ்வரரே
ஸ்வயம்புவா – பிரம்மாவால்
மம – எனக்கு
ஸ்வயம் து – தானாகவே
தத்தம் – கொடுக்கப்பட்ட
வரதானம் – வரப்பிரதானம்
யதா வை – எப்படியோ அப்படியே
தத்யம் – உண்மையான
இதம் – பின் சொல்லும் விஷயத்தை
ப்ருவந்த்யா – சொல்லுகிற
மே – என்னிடத்திலிருந்து
ஸ்ருணு – கேளும்
யதா த்வாம் வானர: கஸ்சித்விக்ரமாத்ஷ்மானயேத் |
ததா த்வயா ஹி விக்ஞேயம் ரக்ஷஸாம் பயமாகதம் ||
சுந்தரகாண்டம், மூன்றாம் அத்தியாயம், ஸ்லோக எண் 48
த்வாம் – உன்னை
கஸ்சித் வானர: – ஒரு வானரன்
விக்ரமாத் – பராக்ரமத்தால்
யதா – எப்பொழுது
வஷம் – வசமாக
ஆனயேத் – செய்து கொள்கிறானோ
ததா – அப்பொழுதே
ரக்ஷசாம் – ராக்ஷஸர்களுக்கு
பயம் ஆகதம் – கேடு வந்தது என்று
த்வயா விக்ஞேயம் – உன்னால் அறிந்து கொள்ளப்பட வேண்டியது
ஹி – சந்தேகமில்லை
இப்படிக் கூறிய லங்கா தேவி ஹனுமானை லங்கைக்குள் புகுந்து கொள்ள அனுமதித்தாள். ஹனுமானும் லங்கைக்குள் புகுந்தார்.
பிரம்மாவிடம் லங்கா தேவி எப்போது எதற்காக வரம் பெற்றாள் என்ற விவரம் இங்கு தரப்படவில்லை.
பிரம்மாவிடமிருந்து லங்கா தேவி வரம் பெற்ற செய்தி மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
Date uploaded in Sydney, Australia – 9 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கிரீன்லாந்து என்னும் மிகப்பெரிய தீவுப் பகுதி ஐரோப்பாவிலுள்ள டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான பகுதி. கடந்த சில மாதங்களாக இந்தப் பெயர் செய்தியில் அடிபடுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதற்குச் சொந்தம் கொண்டாடினார் ; எப்போதும் அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் ஐரோப்பிய நாடுகளும் கூட அமெரிக்காவின் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ட்ரம்ப் பின்வாங்கியிருக்கிறார் ; குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக முடிந்திருக்கிறது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் .
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து என்னும் பெயரே ஏமாற்று வேலை. பசுமைவளமே இல்லாத , பனிக்கட்டி மட்டுமே நிறைந்த மிகப்பெரிய பகுதிக்குத் தவறாக கிரீன்லாந்து என்று பெயர் சூட்டினார்கள். ஐஸ் கட்டியே இல்லாத எரிமலைகள் நிறைந்த வெந்நீர் ஊற்றுகள் நிரம்பிய நாட்டுக்கு ஐஸ்லாந்து என்று பெயர் சூட்டினார்கள். மக்களை இழுப்பதற்காக இப்படி ஒரு திட்டம் .
கிரீன்லாந்தின் மீது அமெரிக்கா ஆசைப்பட்டதற்குக் காரணம் அங்கே பனிக்கட்டிக்குக் கீழே நிறைய கனிம வளம் உள்ளது . அதுமட்டுமல்ல பல பாதுகாப்பு, ராணுவ திட்டங்களுக்கு உகந்த பகுதி அது.
அண்டார்ட்டிகா என்னும் பிரம்மாண்டமான பனிக்கட்டி கண்டம் பூமியின் தென் துருவத்தில் உள்ளது. அதற்கு அடுத்த பெரிய பனிக்கட்டி பரப்பு வட துருவத்திலுள்ள கிரீன்லாந்து ஆகும்.
இந்தப் பிரதேசத்திலுள்ள பனிக்கட்டி முழுதும் உருகினால் கடல் நீர்மட்டம் உலகம் முழுதும் 24 அடி உயரும். அவ்வளவும் ஒரே நேரத்தில் உருகாது ஆயினும் அவை இப்போது உருகும் வேகம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து பல பகுதிகள் உருகி வருகின்றன. மேலும் அங்குள்ள பனிக்கட்டி ஆறுகளும் சிறிதாகி வருகின்றன
பனிக்கட்டி பாறைகளைக் குடையும் பெரிய எந்திரங்களுடன் பல வாரங்களுக்கு ஆராய்ச்சி செய்த குழுவில் ஒன்பது பேர் இருந்தனர் அவர்கள் ஐஸ் பாறைகளைக் குடைந்து எடுத்த சாம்பிள்களை- மாதிரிகளை– உலகின் ஏனைய பகுதியில் எடுத்த பவளப்பாறைகள், மரங்களில் உள்ள வளையங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டத்தில் பருவ நிலை வெப்பமாகி வருவது உறுதியாகியுள்ளது. வளி மண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைட் அதிகரித்துள்ளது.
இந்தத் தீவு பற்றிய சுவையான விஷயங்களையும் காண்போம் .
உலகிலேயே பெரிய தீவு இது ; இதன்பரப்பளவு 2,166,086 km2 (836,330 sq mi)
மக்கட் தொகை 56,000
(இந்தியாவின் பரப்பளவு 3,287,263 square kilometers (1,269,219 sq mi)
இது டென்மார்க்கின் சுயாதிக்கப் பகுதி இதன் தலை நகர் நூக் . The capital and largest city is Nuuk.
பேசும் மொழி – கிரீன்லாந்திக்
இதன் உண்மைப்பெயர்– கலாலித் நுனாத் -Kalaallit Nunaat, ‘land of the Kalaallit.
இங்கு அடிக்கடி பனிப்புயல் வீசும் ; எப்போதும் உறைநிலைக்குக் கீழ்தான் வெப்பம்; அதாவது குளிர் SUB ZERO TEMPERATURE.
இதன் அருகிலுள்ள பெரிய நாடு கனடா ; ஒரு காலத்தில் நார்வே நாட்டுக்குச் சொந்தமான இப்பகுதி பின்னர் டென்மார்க்குக்குக் மாற்றப்பட்டது இங்குள்ள மக்கள் இனுயிட் Most residents of Greenland are Inuit. என்னும் எஸ்கிமோ மக்கள் ஆவர்.
இங்கு வசிக்கும் மிருகங்கள்
சடை எருமை MUSK OX , துருவ நாய்கள், துருவக் கரடிகள், ரெயின்டியர் எனப்படும் மான்கள், கடலில் திமிங்கிலங்கள்
இங்கு அபூர்வ தாதுக்கள் எனப்படும் உலோகங்கள், மூலகங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் இதுவரை தோண்டி எடுக்கப்படவில்லை. இதுவரை சீனாவே 95 சதம் அபூர்வ தாதுக்களை சப்ளை செய்கிறது. சிவப்பு ரத்தினக் கல்லான மாணிக்கம் RUBY இங்கே அதிகம் கிடைக்கிறது. இரும்பு, செம்பு, தங்கம், பிளாட்டினம், யுரேனியம் அலுமினியம், டைட்டேனியம், நிக்கல், டங்ஸ்டன் கிடைக்கின்றன ; ஆயினும் முழு அளவில் தோண்டி எடுக்கப் படவில்லை; அமெரிக்கா, இதன் மீது கண் வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
அருள் புதல்வோனே … அம்மை, உமாவாகிய பார்வதி, தேவி, திரி
புரத்தை எரித்தவள், துர்க்கை, அழகிய மாதாகிய பார்வதி அருளிய மகனே,
குரவு அணி பூஷண சரவண தேசிக குக கருணா நிதி
அமரேசா … குரா மலரை அணிகின்ற ஆபரணமாகக் கொண்டவனே,
சரவணனே, குரு மூர்த்தியே, குகனே, கருணை நிதியே, தேவர்களுக்கு
ஈசனே,
குற மகள் ஆனை மின் மருவிய பூரண குரு கிரி மேவிய
பெருமாளே. … குறப் பெண்ணாகிய வள்ளி, (ஐராவதம் என்ற)
யானையால் வளர்க்கப்பட்ட மின்னல் போன்ற தேவயானை (ஆகிய இருவரும்) சேர்ந்துள்ள முழுப் பொருளே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* டாகினி, காகினி, லாகினி, ஹாகினி, ராகினி, சாகினி என்பன தேவியைக் குறிப்பனவாகும்.
***
DACCA- Capital of Bangladesh – This name is derived from the goddess temple. Dhakeshwari Temple: The name is derived from the Dhakeshwari temple (Goddess of Dhaka) built by King Ballal Sena in the 12th century.
வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா. இது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் டாகினி, டாகேஷ்வரி தேவியின் கோவிலால் ஏற்பட்ட பெயர்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் டாக்கா
டாகினீஸ்வரி – டாக்கா -484; நாமத்தின் எண்
டாக்கா நகர டாகேஸ்வரி கோவில் படங்கள்
For more please read my article- லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் புண்ணிய நகரங்கள் (Post.15,124)
***
காக்கைக்கு ஏன் ஒரு கண் ?
பாதி மதிநதி போதும் … பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும்,கொன்றை மலரையும்
காது மொருவிழி காகமுற அருள் … பிரிக்கப்பட்ட ஒரு விழியை*
காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய
மாயன் அரி திரு மருகோனே … ஸ்ரீராமர் மாய ஹரிக்கும்,
லக்ஷ்மிக்கும் மருமகனே,
காலனெனை யணுகாமல் … யமன் என்னை அணுகாத வகைக்கு
உனதிரு காலில் வழிபட அருள்வாயே … உன் இரு திருவடிகளில்
வழிபடும் புத்தியை அருள்வாயாக.
ஆதி யயனொடு தேவர் … ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும்
சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா … தேவலோகத்தை
ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே,
ஆடு மயிலினி லேறி … நடனம் ஆடும் மயில் மீது ஏறி
அமரர்கள் சூழ வர … தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர
வரும் இளையோனே … வருகின்ற இளையவனே,
சூத மிகவளர் சோலை … மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்
மருவு சுவாமிமலைதனில் உறைவோனே … நிறைந்த
சுவாமிமலையில் வீற்றிருப்பவனே,
சூர னுடலற … சூரனின் உடல் வீழ,
வாரி சுவறிட … கடல் வற்றிப்போக,
வேலை விடவல பெருமாளே. … வேலினைச் செலுத்தவல்ல
பெருமாளே.
***
* சீதையின் மார்பை தன் அலகால் கொத்தின காகத்தின் மீது புல்லையே படையாக்கி ஸ்ரீராமர் செலுத்த, அப்படைக்கு அஞ்சி, காப்பவர் யாருமின்றி,ஸ்ரீ ராமரையே காகம் சரணடைய, அவர் அக்காகத்திற்கு அருளி, காகத்தின் ஒரு கண்மணியைப் பிரித்து, கண்களிரண்டிற்கும் ஒரு மணியேயென தண்டித்தார். காகாசுரனாக சாபத்தினால் வந்தது தேவேந்திரனது குமாரன் ஜயந்தன் ஆகும்.
ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் காகாசுரன் கதை
ராமாயணத்தில், சித்திரகூடத்தில் சீதையின் மார்பில் காக உருவில் வந்து அம்பு எய்த இந்திரனின் மகன் ஜெயந்தன் (காகாசுரன்), சீதையைத் துன்புறுத்தியதற்காக ராமர் தன் புல்லில் பிரம்மாஸ்திரம் ஏவி துரத்தினார். மூன்று உலகங்களிலும் உதவி கிடைக்காத ஜெயந்தன், ராமரிடமே சரணடைந்தான். கருணை கொண்ட ராமர், பிரம்மாஸ்திரத்தின் மூலம் அவனது ஒரு கண்ணை மட்டும் குருடாக்கி, அவனது உயிரைக் காப்பாற்றினார்.
சம்பவம்: ராமர், சீதையின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது, இந்திரனின் மகனான ஜெயந்தன் காக்கை உருவம் எடுத்து, சீதையின் மார்பில் கொத்தி, குருதி சிந்த வைத்தான்.
ராமரின் கோபம்: இதனால் கோபமடைந்த ராமர், தர்ப்பைப் புல்லில் பிரம்மாஸ்திரத்தை மந்திரித்து, காகாசுரனின் மீது ஏவினார்.
சரண்: அந்த அம்பு காகாசுரனைத் துரத்தியது, அவன் தன் தந்தை இந்திரன், முனிவர்கள், தேவர்கள் என யாரிடமும் அடைக்கலம் கிடைக்காமல், இறுதியில் ராமரிடமே வந்து மன்னிப்பு கேட்டு சரணடைந்தான்.
தண்டனை: ராமர் அவனது உயிரைக் காப்பாற்றினாலும், அவனுக்குத் தண்டனையாக ஒரு கண்ணைக் குருடாக்கினார்.
சீதையின் நம்பிக்கை: இந்த சம்பவத்தைச் சீதை, அனுமனிடம் கூறி, ராமரின் கருணைத் தன்மையை விளக்குகிறார்.
இந்தக் கதை, சரணடைந்தவர்களைக் காக்கும் ராமரின் கருணையையும், தவறு செய்தால் அதற்கான தண்டனை கிடைக்கும் என்பதையும் உணர்த்துகிறது.
***
மீண்டும் வியாதிகள் பட்டியல்
அருணகிரி நாதர் பல பாடல்களில் நோய்களின் பட்டியலைத் தருகிறார். இதோ சுவாமிமலை திருப்புகழ்
வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி
வியாதி குன்மமொடு காசம் … வாத நோய், வயிற்றுளைவு நோய்,
கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய், பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய்,
வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு
பூஷணங்கள் என ஆகும் … வாயுவினால் உண்டாகும் படர்தாமரை
போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட
விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள்
என்று சொல்லத்தக்க புண் வகைகள்,
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை
விடாது மங்க … பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே
என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல்
நலம் குறைந்து, இவையால் நின் பாத மலரானதின் கண் நேயம் அறவே
மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி … இக்காரணத்தால்
உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம்
நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து,
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு
சாதியின் கண் அதிலே … குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான
வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித்
தொழில்களிலே ஈடுபட்டு,
நான் ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு
உன் ஈர அருள் கூர வந்து எனை ஆள்வாய் … நான் வலிமை
அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர்.
(அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த
திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக.
****
திருமாலின் வராக அவதாரக் கதை
சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு
இசைந்த மருகோனே … பன்றியின் உருக்கொண்டு (வராக
அவதாரத்தில்)* அழகிய பூமியை மேலே எடுத்து வந்த தந்திரம்
வாய்ந்த திருமாலுக்கு உகந்த மருகனே,
ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க
வந்தது ஒரு சாலியே மிகுத்து உயர்ந்த மா வயற்கள்
மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே. … ஏர் எதிர்த்து வர
பெருகி உயர்ந்து வளர்ந்த சிறந்த வயல்கள் நிறைந்துள்ள
சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* திருமால் வராகாவதாரம் எடுத்த வரலாறு:
இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளத்தில் மறைந்து கொண்டான். திருமால் பன்றி உருவம் கொண்டு, பாதாளத்திற்குச் சென்று, தன் கொம்பினால் அவனைக் கொன்று, பூமியைக் கொம்பினால் தாங்கி மேலே கொண்டு வந்தார்.
***
லட்சுமியின் குணம் – ராஜஸ குணம்
ஏர் அணி நல் குழலைக் ககனச் சசி மோகினியை புணர்ச்சி
சித்த ஒரு அற்புத வேட அமுதச் சொருபத்த குறத்தி மணம்
கொள்வோனே … அழகுள்ள சிறந்த கூந்தலை உடையவளும்
விண்ணுலகத்தில் உள்ள இந்திராணி பெற்ற பேரழகியுமாகிய
தேவயானையைச் சேர்ந்த சித்தனே*, ஒப்பற்ற அற்புதமான வேடர்
குலத்தில் உதித்த அமுத சொரூபியான குறமகள் வள்ளியை
மணம் கொண்டவனே,
ஏரக(ம்) வெற்பு எ(ன்)னும் அற்புத மிக்க சுவாமி மலைப்
பதி நிற்கும் இலக்ஷண … திருவேரக மலை என்னும் அற்புதம்
மிகுந்த சுவாமி மலைப் பதியாகிய தலத்தில் நிற்கும் அழகனே,
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே. …
லக்ஷ்மி போன்ற ராஜத** குணம் படைத்த பார்வதி பெற்றருளிய
தம்பிரானே.
* சித்தன் முருகனுக்கு ஒரு பெயர் – மனத்தைக் கொள்ளை கொள்பவன்.
** ஸத்வம், ராஜஸம், தாமசம் என்ற முக்குணங்களில் லக்ஷ்மிக்கு ராஜஸ குணம் ஏற்பிக்கப்படுகிறது. லக்ஷ்மி அருள் மழை பொழிந்து செல்வங்களை வலியக் கொடுக்கும் தெய்வம்.
***
ராமனின் சாகசங்கள்
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா
மரமும் நிகர் ஒன்றும் இல் வலிய திறல் வாலி உரமும் நெடும்
கடல் அவை ஏழும் மற நிருதர் சேனை முழுதும் … அழகுடைய
(மாரீசன் என்னும்) பொன்மானும், பகைத்து வந்த கரன் என்னும்
அரக்கனும், விளங்கிய ஏழு வகையான மரா மரங்களும், ஒப்பு
ஒன்றுமே இல்லாத வலிமை வாய்ந்த வாலி என்னும் குரங்கு
அரசனின் மார்பும், பெரிய ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரர்களின்
படைகள் முழுதும்,
இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத
மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இரு பது தோளும் அடை
வலமும் மாள … இலங்கை அரசன் ராவணனுடைய சிறப்புற்ற சூரியன் போல் ஒளி வீசி அணிந்த அலங்காரமான ரத்ன கிரீடம் விளங்கும் தலைகள் பத்தும், மேம்பட்டு விளங்கும் இருபது தோள்களும்,
Tags- திருப்புகழ் , பங்களாதேஷ், டாக்கா கோவில், டாகினி காகத்துக்கு ஏன் ஒரு கண்?- Part 15 , அருணகிரிநாதர் , அரிய செய்திகள். சொல் அழகு, பொருள் வளம், டாக்கா,டாகேஸ்வரி கோவில் படங்கள்
அடுத்து சுந்தரகாண்டத்தில் முதல் அத்தியாயத்தில் இன்னொரு வரம் பற்றிய விவரத்தைப் பார்க்கிறோம்.
மைநாக மலையிடமிருந்து விடை பெற்ற ஹனுமார் வேகமாகப் பறந்து செல்லலானார்.
அப்போது தேவர்கள் சர்ப்பங்களுக்குத் தாயான சுரஸையைப் பார்த்து,
“நீ கோரமான ராக்ஷஸ உருவத்தை எடுத்துக் கொண்டு ஒரு முகூர்த்த நேரம் ஹனுமாருக்கு இடைஞ்சல் செய்; உன்னை அவர் உபாயத்தினால் வெல்கிறாரா அல்லது துன்பத்தை அடைகிறாரா என்று பார்க்க விரும்புகின்றோம். அவரது வலிமையையும் ஆண்மையையும் மறுபடியும் பார்க்க விரும்புகிறோம்” என்றனர்.
உடனே சுரஸா தேவி பயங்கரமான ராக்ஷஸ வடிவை எடுத்துக் கொண்டு ஹனுமார் முன்னால் தோன்றினாள்.
இதைக் கேட்ட ஹனுமார் கோபம் கொண்டார். எப்படி விழுங்க நினைக்கிறாயோ அப்படியே வாயைத் திறந்து கொள் என்றார். பிறகு அவர் பத்து யோஜனை அளவு வளர்ந்தார். சுரஸையோ தனது வாயை இருபது யோஜனை அகன்றதாகச் செய்தாள். ஹனுமார் உடனே முப்பது யோஜனை அளவு வளர்ந்தார். சுரஸையோ தனது வாயை நாற்பது யோஜனை அகன்றதாகச் செய்தாள். இருவரும் இப்படி மாறி மாறி பெரிய உருவை எடுக்க ஸுரஸை நூறு யோஜனையாக மாறிய அளவில் ஹனுமார் திடீரென்று சுருங்கி அங்குஷ்ட பிரமாண வடிவை எடுத்து அவள் வாயில் புகுந்து மீண்டு வெளியில் வந்தார்.
உடனே சுரஸா தேவி தன் சுய ரூபத்தை எடுத்து ஹனுமாரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாள்.
சுரஸா எப்படி எப்போது எதற்காக பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றாள் என்ற விவரம் இங்கு சொல்லப்படவில்லை;
ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே. … ஒப்பற்ற
குருமூர்த்தி என்று முக்தி நிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே.
முருகன் ஒரு வளையல் வியாபாரி!
chetti vadivaik kodu thinaippunam adhiR siRu kuRappeN: In the disguise of a bangle merchant, You went to the millet-field to woo the pretty little damsel of the KuRavAs, VaLLi,
amaLikkuL magizh chetti: and enjoyed her company in her bed, Oh Lord!
(TANSLATION BY SRI GOPALA SUNDARAM IN KAUMARAM.COM)
சங்கப் புலவர் கலகம் தீர்த்த திருவிளையாடல் புராண நிகழ்ச்சியில் செட்டி வீட்டுப் பிள்ளை ருத்திரசர்மனாக முருகனே வந்தார் என்றும் அருணகிரி பாடியிருக்கிறார்
***
பறக்கும் மலைகள் = குட்டி கிரகங்கள்
GEOLOGY IN TIRUPPUGAZ
கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னால், பூமியை பெரிய விண்கற்களும் குட்டி கிரகங்களும் (METEORITES AND ASTEROIDS) தாக்கி பெரிய பள்ளங்களை உண்டாக்கின . ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால், டைனோஸரஸ் என்னும் இராட்சத மிருகங்கள் அழி ந்ததற்கும்இதுவே காரணம்; இந்தியாவிலும் இப்படி ஒரு பெரிய குட்டி கிரகம் மோதி புனே நகருக்கு அருகில் லோனார் ஏரியை உருவாக்கியது. இன்றும் சுற்றுலாப்பயணிகள் மொய்க்கும் இடம் இது. இதையே இந்திரன் செய்கையாகப் புராணங்கள் வருணிக்கின்றன ; அனுமன் இலங்ககைக்குச் சென்றபோது சந்தித்த கடல் அடி மலைகள்SUB MARINE MOUNTAINS பற்றிய (மைநாக மலை) கதைகளும் இவைதான்.
Lonar Lake, located in Maharashtra’s Buldhana district, is a unique, 50,000-year-old saline and alkaline crater lake formed by a meteorite impact in basalt rock. It is a renowned eco-tourism spot featuring ancient temples (like Gomukh), diverse wildlife, and a 1.8 km diameter, making it a significant National Geo-heritage Monument.
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த … கற்பகச்சோலையில் உள்ள பூ இதழால் சக்ரவாள கிரி ஆகிய பெரிய மலைகளின்(சிறகுகளை)* வெட்டித்தள்ளிய
வஜ்ரபாணியர் தொழும் திருக் கை வடி வேலா … வஜ்ராயுதம் கொண்ட கைகளை உடைய இந்திரன் வணங்கும் திருக்கை வடிவேலனே,
சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே. … அச்சத்தை நிரம்பத் தரும் கிரெளஞ்ச மலையையும், கடலிடத்தையும், பகைத்து வந்த சூரனுடைய உடலையும் அழித்த பெருமாளே.
* முன்பு ஒரு காலத்தில் மலைகள் எல்லாம் பறவைகள்போல் இறகுகள்உடையவவைகளாக இருந்தனவாம். எங்கும் பறந்து விழுந்து, உயிர்களுக்குத்தீங்கு செய்ததால், இந்திரன் கோபித்து அந்த மலைகளின் இறகுகளைஅறுத்துத் தள்ளினான்.
***
முருகன் ஒரு புலவன்
அருமறை தமிழ்நூல் அடைவே … அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக
தெரிந்துரைக்கும் புலவோனே … கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் ஞான பண்டிதா,
1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டுபணிதல். இது ‘தாத மார்க்கம் – சாலோகம்‘.
2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது ‘புத்ர மார்க்கம் – சாமீபம்‘.
3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது ‘சக மார்க்கம் (தோழ நெறி) – சாரூபம்‘.
4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது ‘சன்மார்க்கம் – சாயுஜ்யம்‘.
. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.
***
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
சுந்தர காண்டத்தில் நாம் ஐந்து வரங்கள் பற்றிய விஷயங்களைக் காண்கிறோம்.
முதலாவதாக முதல் அத்தியாயத்தில் இந்திரன் மைநாக மலைக்கு அருளிய வரத்தைக் காண்கிறோம்.
லங்கைக்குச் செல்வதற்காக ஆகாயத்திலிருந்து சமுத்திரத்தைப் பார்த்த ஹனுமானைப் பார்த்த சமுத்திர ராஜன் ஹனுமாருக்கு உதவி செய்வதற்காக தன்னுள்ளே மறைந்திருந்த சுவர்ணமயமான மைநாக மலையைப் பார்த்து மலையைச் சற்று மேலே எழும்புமாறு கூறினான். இதனால் ஹனுமார் மலையின் மீது அமர்ந்து சற்று ஓய்வு எடுக்கலாம் என்பது சமுத்திர பகவானின் எண்ணம்.
இதற்கிணங்க மைநாக மலை கடலிலிருந்து மேலே எழும்பியது.
கடலிலிருந்து பொன்மயமாக மேலெழும்பிய மைநாக மலையைக் கண்ட ஹனுமார் அதை ஒரு இடையூறாகக் கருதினார். அதைத் தனது மார்பினால் தள்ளி வீழ்த்தினார்.
அவரது சாமர்த்தியத்தைக் கண்டு மகிழ்ந்த மைநாகம் ஒரு மானிட ரூபத்தை எடுத்து ஹனுமாரை நோக்கி, “யாராலும் செய்ய முடியாத காரியத்தை நீர் செய்தீர். என்னுடைய சிகரத்தில் சற்று தங்கி இளைப்பாறும். வானரர்களில் சிறந்தவராக உம்மை மதிக்கிறேன். நீர் என்னால் பூஜை செய்யத் தக்கவர். அத்தோடு இன்னொரு விஷயமும் உண்டு. முன்பு கிருத யுக காலத்தில் எல்லா மலைகளும் பறக்கக்கூடிய படி இறக்கைகளுடன் இருந்தன. அவைகள் அங்கும் இங்கும் பறப்பதால் ரிஷிகள் உள்ளிட்டவர்கள் பெரிதும் பயந்தனர். இதனால் கோபம் கொண்ட இந்திரன் மலைகளின் இறகுகளை ஆயிரம் துண்டங்களாக வெட்டினான். அப்போது மஹாத்மாவான வாயுதேவரால் நான் விரைவாக தள்ளி விடப்பட்டேன், இந்த உப்பு நீர்க் கடலில் ஆழ்ந்து அமுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டேன். ஆகவே உமக்கும் எனக்கும் சம்பந்தமுண்டு. என்னிடம் களைப்பாறும்; எனது பூஜையை ஏற்றுக் கொள்ளும்” என்று கூறியது.
உடனே ஹனுமார், “நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறென். ஆனால் நடுவில் தங்கி நிற்பதில்லை என்ற பிரதிக்ஞையை நான் செய்திருக்கிறேன்.” என்று கூறி விட்டு மலையை ஆரத் தழுவி விட்டுப் புறப்படலானார்.
இதைப் பார்த்த அனைத்து சித்தர்களும் தேவர்களும் சந்தோஷமடைந்தனர். ஹனுமாரைப் புகழ்ந்தனர். இந்திரனும் மகிழ்ந்து மைநாகத்தைப் பார்த்துக் கூறலானன்:
ஹிரண்யநாபசைலேந்த்ர பரிஷ்டோஸ்மி தே ப்ருஷம் |
அபயம் தே ப்ரயச்சாமி திஷ்ட சௌம்ய யதாசுகம் |
சுந்தர காண்டம் முதல் அத்தியாயம் ஸ்லோக எண்கள் 149,150
ஹிரண்யநாப – பொன்முடிகளை உடைய
சைலேந்த்ர – மலையரசனே!
தே – உன்னிடத்து
ப்ருஷம் – மிகவும்
பரிதுஷ்ட: – சந்தோஷமுடையவன்
அஸ்மி – ஆகிறேன்
சௌம்ய – சௌம்ய
தே அபயம் – உனக்கு அபயம்
ப்ரயச்சாமி – கொடுத்தேன்
யதா சுகம் திஷ்ட – சுகமாக வாழ்ந்திரு
என்று இப்படி இந்திரன் கூறவே மைநாகமும் சந்தோஷம் அடைந்தது.
ச வை தத்தவர: ஷைலோ பபூவாவஸ்திஸ்ததா!
சுந்தர காண்டம் முதல் அத்தியாயம் ஸ்லோக எண்: 154
தத்தவர: – வரத்தைப் பெற்ற
ச: ஷைல: வை – அந்த மலையும்
ததா – அப்போது
அவஸ்தித: – மேலே நிலைத்து நிற்பதாக
வபூ: – ஆயிற்று
ஹனுமாரும் மலையக் கடந்து சென்றார்.
இப்படியாக இந்திரன் மைநாகத்திற்குக் கொடுத்த வரத்தை சுந்தர காண்டத்தில் காண்கிறோம்.
Date uploaded in Sydney, Australia – 7 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru Wonders 9- Ancient Tamil Encyclopaedia Part 49
Ancient Tamil Encyclopaedia -Part 49; One Thousand Interesting Facts -Part 49
***
Item 335
Science in Puram verse 20
Pura Nanuru (naanuuru) verse 20 by Kurmkoziyur Kizar (kilaar).
He used an epithet for sky meaning space without air; vacuum.
So Hindus knew that beyond the atmospheric layer , space is vacuum without air. The words used in Tamil வறிது நிலை இய காயம் Varithu nilai iya kaayam.
Tiruvalluvar also knows that only earth has atmosphere
The teeming earth’s vast realm, round which the wild winds blow, Is witness, men of ‘grace’ no woeful want shall know.
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி- 245
அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
It is originally from Bhagavad Gita 9-6
यथाकाशस्थितो नित्यं वायु: सर्वत्रगो महान् |
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय || 6||
yathākāśha-sthito nityaṁ vāyuḥ sarvatra-go mahān
tathā sarvāṇi bhūtāni mat-sthānītyupadhāraya
yathā—as; ākāśha-sthitaḥ—rests in the sky; nityam—always; vāyuḥ—the wind; sarvatra-gaḥ—blowing everywhere; mahān—mighty; tathā—likewise; sarvāṇi bhūtāni—all living beings; mat-sthāni—rest in Me; iti—thus; upadhāraya—know
BG 9.6: Know that as the mighty wind blowing everywhere rests always in the sky, likewise all living beings always rest in Me.
***
Item 336 Bird Omen
Sakunam is known to all Indians. It is used in Tamil as well. Sanskrit word Sakuna means Bird (omen)
Over 200 astrological references in 2000 year old Sangam literature.
Later he talks about Bird omens;
***
Item 337 Earth Eater (See Kalidas’ Raghuvamsam).
In Sanskrit kings are described as Bhubuk which means Earth Eater (
he also used one Sanskrit phrase Land Eating. Sanskrit poets described Kings as Bhubuk=Eaters of Land. That means they capture other lands.
In Sanskrit, terms like Bhūpati, Prithivīpati, Kṣitipa, and Kṣitīśa are associated with a “king” or “ruler of the earth,” often implying responsibility rather than literal consumption of the land. While Attṛ or Atri means “eater” or “devourer,” the concept of “earth-eating” for kings in Puranas is a metaphor for fighting over possession and dominance of the earth.
***
Item 338 Pancha Bhutas
Like Sanskrit poets, Tamil poets also compare the kings with Pancha Bhuta (Five Elements). Strangely it is in the beginning of all poems in Sangam literature.
Greeks knew only Four Elements.
See Manu Smriti; Manu also used Pancha Bhutas as similes to describe the power of the kings.
***
339 Rain bow and King’s Bow
Poet plays on words.
They know only the pretty rainbows and not the murderous bows. They know only plows and not murderous weapons.
***
340
Craving of Pregnant women + eating soil= Kings eat lands= Kings capture other lands (Bhu buk in Sanskrit literature); See Kalidas’ Raghuvamsam.
***
புறநானூறு20, பாடியவர்: குறுங்கோழியூர்கிழார், பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, திணை: வாகை, துறை: அரச வாகை இரு முந்நீர்க் குட்டமும், வியன் ஞாலத்து அகலமும், வளி வழங்கு திசையும்,
1 வறிது நிலைஇய காயமும் என்றாங்கு அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை, 5 அறிவும் ஈரமும் பெருங்கண்ணோட்டமும், சோறு படுக்கும் தீயோடு, செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே,
2 திரு வில் அல்லது கொலை வில் அறியார், 10 நாஞ்சில் அல்லது படையும் அறியார், திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அப்
3 பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது பகைவர் உண்ணா அரு மண்ணினையே, 15 அம்பு துஞ்சும் கடி அரணால் அறம் துஞ்சும் செங்கோலையே,
4
புதுப் புள் வரினும் பழம் புள் போகினும், விதுப்புற அறியா ஏமக் காப்பினை, அனையை ஆகன்மாறே, 20 மன்னுயிர் எல்லாம் நின் அஞ்சும்மே.
***
Explanations
Puranānūru 20, Poet: Kurunkōzhiyur Kizhār to King Cheraman Yānaikatchēy Māntharancheral Irumporai,
and the emptiness of space (without air) – …………….
They know only the pretty rainbows and not the murderous bows. They know only plows and not murderous weapons.
Pregnant women in your country, when they crave, will eat only your soil that enemies cannot seize. ***
திரு வில் அல்லது கொலை வில் அறியார் –
they know only the beautiful rainbow and not the murderous bow,
நாஞ்சில் அல்லது படையும் அறியார் – they know the plows but not other weapons,
அப் பிறர் மண் உண்ணும் செம்மல் – O Lord who eats the land of others,
Craving of pregnant women
நின் நாட்டு வயவுறு மகளிர் – the pregnant women in your country who crave (வயவு உறு, வயா என்பது வயவு ஆயிற்று), வேட்டு உணின் – if they crave and eat, அல்லது – other than that, பகைவர் உண்ணா அரு மண்ணினையே – you have land that your enemies cannot seize
Sakunam – birds omen
புதுப் புள் வரினும் – even if new birds come, பழம் புள் போகினும் – even when old birds leave,
****
Puranānūru 21, Poet: Aiyur Moolankizhār to King Kānapēreyil Kadantha Ukkira Peruvazhuthi,
புறநானூறு21, பாடியவர்: ஐயூர் மூலங்கிழார், பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி,
Item 341
Flower Symbolism
One unique feature of Tamil warfare is wearing different flowers at different stages in a battle.
Five regions of Tamil Land
Mullai , a variety of Jasmine, stands for the forest area.
Kurinji, a mountain flower, stands for mountainous region.
Marutham, a tree with red flowers, stands for patoral region
Neytal, a water flower, stands for sandy sea shore
Palai, an ever green tree growing in arid areas, stands for arid lands.
Another unique feature of Tamil culture is they wore different flowers in the battlefield to denote different activities. No other culture wore flowers when they went to war. We know that Olympic winners in Greece received Olive branches. But Tamils took different flowers. For instance, if they want to invade a country, soldiers will go in to the border areas and steal the cattle wearing VETCHI flowers. Though this practice of stealing cattle was in Mahabharata days in the north of the country, the soldiers did not wear any particular flower. But Tamils wear a particular type of flowers during this raid which is not found anywhere in the world. For each and every military activity they allocated a flower. Following is the list of flowers and the corresponding activity:
§ Vetchi – the provocation of war through attack and cattle raids
§ Karanthai – defending against cattle raids
§ Vanchi – invasion of the enemy’s territory
§ Kanchi – transcience and change, the fragility of human life, against the backdrop of war
§ Uzhingai- attacking the fort
§ Nochchi – defence of the fort or territory
§ Thumpai – the frenzy of battle
§ Vaakai – victory
§ Paadaan – praise of a king’s heroism or generosity, asking for gifts
But this was not strictly followed. Tamil men and women wore flowers. Men had flowers in their ears. Women had it on their heads. Women continue to wear it even today. During weddings they spend a lot on flowers.
வேங்கைமார்பன் இரங்க வைகலும் ஆடு கொளக் குழைந்த தும்பைப், புலவர்
O Victorious king who wears a thumpai blossom garland each day, as you triumph in battles
***
Item 342 Similes
with arrow holes that appear like stars in the sky
***
like trying to recapture water in liquid iron melted by red flame lit by a metalsmith with strong hands.”
விசும்பின் மீன் பூத்தன்ன உருவ ஞாயில்,
….. கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது, என
…..
Item 343 Strange Linguistics
வேங்கைமார்பன் இரங்க வைகலும் ஆடு கொளக் குழைந்த தும்பைப், புலவர்
குழைந்த (10) – உ. வே. சாமிநாதையர் உரை – குழைத்த என்பது குழைந்த என மெலிந்து நின்றது
….
Item 344
புறநானூறு22, பாடியவர்: குறுங்கோழியூர் கிழார், பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை,
Puranānūru 22, Poet Kurunkozhiyur Kizhār sang to Cheraman Yānaikat Chēy Māntharancheral Irumporai,
Battle song Kuravai
Tamils do Kuravai dance with music
place, where the sounds of pestles are heard and angry warriors perform kuravai dances, wearing fresh thumpai garlands, their golden petals braided with the fronds of tall
……………… is like the world of celestials, and I have come happily to see it.
………………
345
பொலந்தோட்டுப் பைந்தும்பை – fresh thumpai with golden petals, Leucas aspera,
சின மாந்தர் வெறிக் குரவை – kuravai dances performed by enraged warriors,
Heaven
புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு – hearing that it was like the world of the gods, hearing that it was like the world of the celestials
346 White Umbrella from Sanskrit literature
மாலை வெண்குடை நீழலான்,
Kings, Gods, royal poets and Somayajis (Soma Yaga Performers) only can use White Umbrella; Tamil and Sanskrit poets compare it with Moon which emits cool rays.
In God’s procession White Umbrella is held on top of the main deity.
***
தூங்கு கையான் ஓங்கு நடைய, உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின, பா அடியால் பணை எருத்தின, தேன் சிதைந்த வரை போல 5 மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து, அயறு சோரும் இருஞ் சென்னிய, மைந்து மலிந்த மழ களிறு கந்து சேர்பு நிலைஇ வழங்கப், பாஅல் நின்று கதிர் சோரும் 10 வான உறையும் மதி போலும்
1 மாலை வெண்குடை நீழலான், வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க, அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த ஆய் கரும்பின் கொடிக் கூரை, 15 சாறு கொண்ட களம் போல, வேறு வேறு பொலிவு தோன்றக், குற்று ஆனா உலக்கையால் கலிச் சும்மை வியல் ஆங்கண்,
3 சின மாந்தர் வெறிக் குரவை ஓத நீரின் பெயர்பு பொங்க, வாய் காவாது பரந்து பட்ட வியன் பாசறைக் காப்பாள! 25 வேந்து தந்த பணி திறையால் சேர்ந்தவர் கடும்பு ஆர்த்தும், ஓங்கு கொல்லியோர் அடு பொருந! வேழ நோக்கின் விறல் வெஞ்சேஎய்! வாழிய பெரும, நின் வரம்பு இல் படைப்பே! 30 நின் பாடிய அலங்கு செந்நாப் பிற் பிறர் இசை நுவலாமை, ஓம்பாது ஈயும் ஆற்றல் என் கோ! “மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
4 புத்தேள் உலகத்து அற்று” எனக் கேட்டு வந்து 35 இனிது கண்டிசின் பெரும! முனிவு இலை, வேறு புலத்து இறுக்கும் தானையொடு சோறுபட நடத்தி, நீ துஞ்சாய்மாறே.
—-subham—
Tags- Flower symbolism, white umbrella, earth eater, Sanskrit Bhubuk , Sakunam , Purananuru wonders- 9, Ancient Tamil Encyclopaedia Part 49
ஓமெழுத்தி லன்பு … ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு
மிகவூறி … மிகவும் ஏற்பட்டு,
ஓவியத்தி லந்தம் … யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை(அடையஅருள்வாயே … அருள்வாயாக.
***
போர்க்களக் காட்சிகள்
தசை உணவு தனின் மகிழவிடு பேய் நிரைத் திரள்கள்
பலகோடி திமிதமிட … சதைகளாகிய உணவில் மகிழ்ச்சி
கொள்ளும்படி பேயின் வரிசைக் கூட்டங்கள் பல கோடிக்கணக்கில்பேரொலி எழுப்பவும்,
நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு திமிர தினகர … நரிகள், காகங்கள், கழுகுகள் இவை கூத்தாடவும், ரத்த வெறி கொண்ட பயிரவர்கள்சுழன்று திரியவும், ஒப்பற்ற வேலாயுதத்தை விட்ட, அஞ்ஞானஇருளைப் போக்கும் சூரியனே,
***
சிவனின் கால்கள் தீப்போல சிவப்பு நிறம் உடையவை
நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல் … யமனின்
உயிரை எடுத்த நெருப்பை ஒத்த அடியும்*,
நதிகொள் சடையினர் குருநாதா … கங்கைநதியைத் தாங்கிய
சடையும் உடைய சிவனின் குருநாதா,
(மார்க்கண்டேயனுக்காக யமனது உயிரை சிவபெருமான் காலால் உதைத்து எடுத்த காலபைரவ மூர்த்திக் கோலத்தை திருக்கடையூரில் காணலாம்.)
***
எட்டு வகைப் பறவைகளின் ஒலி எழுப்பும் விலைமாதர்கள்
மயில் காடை கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணியப்புள் வகைக் குரல் கற்று இகல் கோல விழிக் கடை இட்டுமருட்டிகள் … மயில், காடை என்னும் பறவை, குயில், அழகிய புறாவுடன், கோழி, காட்டுப் பறவைகளின் வகை வகையான குரல்களைக் கற்று அவ்வொலிகளை* வெளிப்படுத்தி, பகைமையைக் காட்டும் அழகியவிழி அம்பைச் செலுத்தி உள்ளத்தை மயக்குபவர்கள்.
………………………..
மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி
நிணக் குடலைக் கொடி வாரண மெச்ச அளித்த அயில்
குக … மாமர வடிவைக் கொண்டு கடலுக்குள் நெருக்கி நின்ற சூரனைவெட்டி அழித்து அவனுடைய மாமிசக் குடலை தனது கொடியிலுள்ளஅக்கினி** மகிழும்படி கொடுத்த வேலை ஏந்திய குகனே,
கதிர் காம மா மலையில் பழநிப்பதியில் தனி மா கிரியில்தணிகைக் கிரியில் பர மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும்அலைவாயில் … கதிர்காமம் என்ற சிறந்த மலையிலும், பழனியிலும், தனிச்சயம் என்னும் தலத்திலும், திருத்தணி மலையிலும், திருப்பரங் குன்றம் என்னும் சிறந்த மலையிலும், அலைகள் சூழ்ந்து வளைந்துள்ள அலைவாய் என்கின்ற திருச் செந்தூரிலும்,
ஏம வெயில் பல வெற்பினில் நல்பதினாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள் ஏது நினைத்தது மெத்த அளித்துஅருள் இளையோனே … இன்பம் தரும் ஒளி வீசும் பல வேறு மலைகளிலும், நல்ல பதிநான்கு உலகங்களிலும் பொருந்திஇருக்கின்ற பக்தர்கள் எது நினைத்தாலும் அவற்றை நிரம்பக்கொடுத்து அருளும் இளையவனே,
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மலைப் பதி
மெச்சிய சித்த … திருவேரகம் என்று சொல்லப்படும் அற்புதம் நிறைந்த சுவாமி மலை என்னும் ஊரில் விரும்பி இருக்கின்ற சித்த மூர்த்தியே,
Tags—அருணகிரிநாதர், அரிய செய்திகள்- Part 13, சுவாமிமலை, திருப்புகழ், பாடல்கள் ,சொல் அழகு, பொருள் வளம்- Part 13, எட்டு வகைப் பறவைகளின் ஒலி, முருகன் கொடிகள், சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பங்களா தேஷில் ஹிந்துக்கள் படும் பாடு!
ச. நாகராஜன்
பங்களா தேஷிலிருந்து வரும் செய்திகள் துயரத்தையும் கவலையையும் அளிக்கின்றன.
ஹிந்துவான திபு சந்திர தாஸ் உயிரோடு எரிக்கப்பட்டிருக்கிறார். பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
12-1-2026ல் வெளி வந்த ஒரு செய்தியின் படி பிரபல இசை வல்லுநரான பப்னா அவாமி லீகின் பண்பாட்டுச் செயலாளர் ப்ரளய் சாகி சிறையில் இறந்திருக்கிறார்.
இப்படிப் பல செய்திகள்!
கர்னல் மயாங்க் சௌபே (Colonel Mayank Chaubey) ஸ்வராஜ்யாவின் 6-1-26 இதழில் தன் கவலையைத் தெரிவித்து ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். இந்திய அரசு எடுக்க வேண்டிய 10 நடவடுக்கைகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை/கொலைகள் பற்றிய உண்மைகள் : வரும் செய்திகள் உண்மையானவையா, அதீதமாக மிகைப்படுத்தப்பட்டனவா என்று முதலில் கண்டறிய வேண்டும்.
எப்போதெல்லாம் அரசியல் நிலையான தன்மையை இழந்து ஆட்டம் காண்கிறதோ அப்போதெல்லாம் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கிறது. அரசியலில் ஆட்சி மாற்றங்கள், தேர்தல் நேரங்கள் உள்ளிட்ட சமயங்களில் சட்டம் ஒழுங்கு சீர் கெடுகிறது.
பொய்யாகப் பரப்பப்படும் வதந்திகளால் கொள்ளை, கொலை போன்ற கொடுமைகள் திரளான வன்முறைக் கூட்டங்களால் செய்யப்படுகின்றன.
ஹிந்துக்களின் சொத்துக்கள் திட்டமிட்டு அபகரிக்கப்படுகின்றன. சொந்த வீட்டிலிருந்து ஹிந்துக்கள் அப்புறப்படுத்தப் படுகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த இல்லங்களுக்கு திரும்பி வரவே முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கற்பழிப்பு, கடத்தல், இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை சர்வ சாதாரணமாக நடத்தப்படுகின்றன.
வன்முறையாளர்கள் கண்டு கொள்ளப்படாமல் விடுவிக்கப்படுகின்றனர்.
பெயருக்கு மட்டுமே சிலர் கைது செய்யப்படுகின்றனர். இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே ஆகி விட்டது.
1951ல் இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை சதவிகிதம் 85% ஆக இருந்தது. இப்போதோ 72% ஆக குறைந்து விட்டது.
அடுத்த ஜனத்தொகைக் கணக்கெடுப்பில் இது 60% சதவிகிதம் ஆகி விடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எப்போது நாங்கள் 51 % சதவிகிதம் ஆகிறோமோ அப்போது நாங்கள் 100% சதவிகிதம் தான் என்று வெளிப்படையாக இஸ்லாமிய தலைவர்களில் சிலர் தொடர்ந்து இந்திய நகரங்களில் கூறி வருவதை அனைவரும் அறிவோம். அதாவது 51% சதவிகிதம் ஆனவுடன் மற்றவர்கள் மதம் மாற்றப்படுவர் என்பதே இதன் உள்ளர்த்தம்.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத சமுதாயமாக ஹிந்து சமுதாயம் இருப்பதைப் பார்க்கும் போது கவலைப்பட வேண்டியிருக்கிறது.
ஹிந்து சகோதர, சகோதரிகளை அவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் காக்க வேண்டியது ஹிந்துக்களின் கடமை தானே!