லாலி தேகன் மை கயி! மை பீ ஹோ கயி லால்!! (Post No.5727)

Written by SNagarajan

Date: 3 DECEMBER 2018


GMT Time uploaded in London –9- 51 am


Post No. 5727

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

ஹிந்தி பக்தி இலக்கியம்

லாலி தேகன் மை கயி! மை பீ ஹோ கயி லால்!!

ச.நாகராஜன்

பாரதம் கண்ட பெரும் பக்தர்களுள் ஒருவர் கபீர்தாஸ்!

கபீர்தாஸரின் தோஹாக்கள் மிக அற்புதமானவை! பெருங் கருத்துக்களைக் குறள் போல இரு வரிகளில் அவர் அடக்கிச் சொல்லும் விதம் அற்புதம்! அத்துடன் அவரது சொல் விளையாட்டும் மிக பிரமாதமாக இருக்கும்.

அவரது சிறந்த பாடல்களில் ஒன்று இது.

லாலி மேரே லால் கி, ஜித தேகூ தித லால் |

லாலி தேகன் மை கயி, மை பீ ஹோ கயி லால் ||

Laali meri laal ki, jit dekhu tit laal

Laali dekhan mein gayi, mein bhi ho gayi laal

लाली मेरे लाल की, जित देखू तित लाल |

लाली देखन में गयी, में भी हो गयी लाल ||

எனது அன்பிற்குரிய சிவப்பைப் பார்க்கப் போனேன்!

எங்கு நோக்கினும் செக்கச் சிவப்பு!

செக்கச் சிவந்த சிவப்பைப் பார்க்கப் போனேனா?

நானும் சிவப்பாகவே மாறி விட்டேனே!

The redness (illumination)of my beloved is everywhere

When I went to see the redness I also became illuminated

MEANING

When a devoteerealizes God, he sees illumination of God all over the world. He also mergesinto God’s love in such a way that all the differences between him and Goddisappears. He realizes

இதன் பொருள் ஆழ்ந்த இறை உணர்வு கொண்ட பொருள் ஆகும்.

இறைவனைப் பார்க்கப் போகிறார் கபீர். மிக ஒளி பொருந்திய சிவப்பு வண்ணமாக செஞ்ஜோதியாக பிரகாசிக்கிறது இறைவனின் ஒளி வெள்ளம்! அது அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஒளிர்கிறது.

ஆசையுடன் செஞ்ஜோதியைப் பார்க்கப் போன கபீர்

செக்கச் சிவந்த ஜோதியுடன் ஒன்றாகவே கலந்து விட்டார்.

அடடா! என்ன அற்புதம்!

திருஞான சம்பந்தர் தனக்கு விருப்பமில்லாமல் இறைவனின் ஆணைப்படி தனது திருமணத்தை முடித்தவுடன் இறைவனை வேண்ட ஒளி வெள்ளம் பிரகாசிக்கிறது. அதற்குள் தன்னுடன் இருந்தவர்களுடன் உள்ளே செல்கிறார்.

அருட்பெருஞ்ஜோதி, ஒரு தனிப் பெரும் கருணை அல்லவா!

ஜோதி வெள்ளத்தைக் கண்ட வள்ளலார் அதற்குள் செல்கிறார், நம்மையும் வா, வா என்று அழைக்கிறார்!

அன்பும் சிவமும் இரண்டு அல்ல என்பது தெளிந்த பின் சிவம் எனும் ஜோதியை தியானிக்க ஆரம்பித்த திருமூலர் சிவமாகவே அமர்ந்திருக்கும் கதை தான்!

நாரத பக்தி சூத்திரத்தில் நாரதர் மாபெரும் இரகசியம் ஒன்றை விளக்குகிறார். பக்தியில் கரை கண்டவர் அல்லவா அவர்! மக்கள் உய்ய வேண்டி,பெரும் ரகசியத்தைத் தனது சூத்திரத்தில்  சொல்கிறார்.

55வது சூத்ரம் இது:

தத் ப்ராப்ய ததேவாவலோக்யதி, ததேவ ஸ்ருணோதி, ததேவ பாஷ்யதி, ததேவ சிந்தயதி

Thad prapya thadevaavalokayathi, thadeva srunothi, thadeva bhashayathi, thadeva chinthayadhi.

One who possesses this love of “devotion”, is able to only see Him everywhere, is able to only hear of Him always, is able to only talk about Him always and always thinks about iHim .

தத் சிந்தனம்

தத் வாக்யம்

தத் ஆவலோக்யம்

தத் பரம்

பரம்பொருளின் மீது பக்தி கொண்ட ஒருவன் அதைப் பற்றியே சிந்திக்கிறான் (தத் சிந்தனம்) ;அதைப் பற்றியே பேசுகிறான்  (தத் வாக்யம்) ; அதை மட்டுமே எங்கும் பார்க்கிறான்(தத் ஆவலோக்யம்)!

 கடைசியில் அதாகவே ஆகிறான்.(தத் பரம்)

கபீர்தாஸரின் பக்தி அனுபவமும் இது தான் என உணர முடிகிறது.

லாலி தேகன் மை கயி (செஞ்ஜோதியைப் பார்க்கப் போனேன்)

ஜித தேகூ தித லால் (எங்கு பார்க்கினும் செம்மை தான்)

மை பீ ஹோ கயி லால்! (அதில் கலந்து நானும் சிவப்பாகிப் போனேன்)

பக்தரின் வெற்றிகரமான பயணம் இது; இரண்டற இறைவனுடன் ஒன்றாக ஆகிய அற்புத, புனிதப் பயணம்!

கபீர் தாஸரின் தோஹா ஒவ்வொன்றும் மெய் சிலிர்க்க வைக்கும்!

TAGS– லாலி தேகன் மை கயி,  
கபீர் 

***

Uranium Wonders (Post No.5726)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 2 December 2018


GMT Time uploaded in London – 20-49

Post No. 5726


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

       
 

Uranium Wonders


In 1912, R T Gunther of Oxford University a first century CE Roman villa onCape Posilipo on the Bay of Naples, and came across a mosaic in which therewere curiously coloured glass pieces. When these were analysed it wasdiscovered that their tint was due to the presence of uranium oxide. They mighthave deliberately added this mineral to colour the glass.

In 1998, researchers from the Natural History Museum, London, discovered thatthe lichen Trapelia involuta was happily growing on spoil heaps from an abandonedUranium mine in Cornwall, UK. X Ray investigations showed that the lichen wasabsorbing and storing, uranium in the walls of its outer fruit cells, althoughfor what purpose is not known. Yet the lichen appeared to be unaffected by it.

Although uranium is radioactive, it is not particularly rare and is moreabundant than tin. While uranium itself is not particularly dangerous, some ofits decay products do pose a threat, especially radon.

When a uranium-235 atom splits in two , it can produce all kinds of otherelements , but most tend to be in the weight range s of 90-105( krypton toruthenium) and 135-145(technetium to europium). Among the former isstrontium-90 which was particularly worrying. This element is easily absorbedby human beings and dangerously radioactive.
Another radioactive element released by uranium fission is iodine-131, which isequally worrying. During the nuclear reactor break down s in Sellafield, UK andChernobyl, Russia, this dangerously radio active element was absorbed by humanbeings.


Chemical Symbol U


Atomic number 92


Melting point 1132 degree C


Boiling point 3754 degree C

Uranium is a silvery, ductile, malleable, radioactive metal. It is one of the three fissile material s, the others being plutonium and thorium.

Uranium has three radioactive isotopes


Uranium 238 with a half life of 4-5 billion years
Uranium 235 with 700 millions years
Uranium 234 is produced when uranium 235 decays .

Uranium isotopes decay until they become lead. The presence of lead and uraniumhelp us to date the rocks. Even the earths age 4-57 billion year was discoveredin this way.

Atomic bomb
The first atom bomb used in Second World War was a uranium bomb. Code namedLittle Boy it was dropped on the Japanese city Hiroshima on 6 th August byAmerica. It destroyed 50000 buildings and 75000 people. Enriched uranium 235was used to make this bomb. Another bomb was dropped on Nagasaki on 9 thAugust.


The good use of uranium is in the production of electricity in the nuclearpower plants. In theory one kilogram of uranium can produce energy equivalentto 1500 tonnes of coal. So it is a big energy source. Nuclear power red navalvessels are used by several countries. Though there is lot of good things aboutthis element the biggest worry is disposing the wastage. More over the leftover of uranium reactors can be used to make bombs.

Large deposits of uranium are found in Canada, USA, Australia and South Africa..


Uranium compounds are used in industry.



The element was named after the Greek god Uranus, god of sky. The strange thingabout this element is some micro- organisms absorb it and survive without anybad effect. Bacterium Citrobacter readily absorbs uranyl ions. In 1789 M H Klaprothdiscovered uranium compound and named it Uranium. 

TAGS- uranium, atom bomb, radio active
Subham

INDIAN POETS WORD SEARCH (Post No.5725)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 2 December 2018


GMT Time uploaded in London – 14-17

Post No. 5725


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Over 15 great poets’ names are in the Word Search Square. If you cant find them look at the answer.

Just some clues

initial letters are in Red.

The poets who composed Ramayana in Tamil, Hindi and Sanskrit

Marathi, Guajarati, Bengali poets.

Four women poets are in the square 12

 M I R A V U L L A V
E K A N A T H I S K
    I B A K     V A A
  I   M E H T A E D L
T     A S A Y V D I H
A     K A L I D A S A
R   N A R S I N G A N
  A V V A I     N L A
H   V A L M I K I A U  
  B E R O G A T G T  

answers

VYASA, VALMIKI,,KAMBAR, VALLUVAR, BHARATI, AVVAI,TULSIDAS,EKANATH, NARSING MEHTA, KABIR, TAGORE,KALIDASA GANGA DEVI,KALHANA,MIRA.

tags- Poets, word search

-subham-

எலி அடித்தேன்; வேலை போச்சு- தாமஸ் ஆல்வா எடிஸன் (Post No.5724)



WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 2 December 2018


GMT Time uploaded in London – 8-29 am

Post No. 5724

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பிரபல விஞ்ஞானியும் கண்டு பிடிப்பாளருமான தாமஸ்  ஆல்வா எடிசன் இரண்டு முறை வேலையை இழந்தார். இதை அவர் சிரித்துக் கொண்டே சுவைபட உரைப்பதைக் கேளுங்கள்:

“ஒரு தந்தி ஆபீஸில் வேலைக்குப் போனேன். நிறைய தந்திகள் வந்து கொண்டே இருந்தன.இந்தப் பாழாய்ப்போன மிஷின் இப்படி மெதுவாக வேலை செய்கிறதே; இதை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன். தந்திகள் குவிந்தன. அவைகளைப் பார்க்கவும் இல்லை; மற்றவர்களுக்கு அனுப்பவும் இல்லை. மானேஜர் அய்யா வந்தார். இன்றுடன் உன் சீட்டு கிழிந்தது; வீட்டுக்குப்போ என்றார். நானும் ஒன்றும் பேசவில்லை. பேசாமல் வீட்டுக்குப் போனேன்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் அல்லவா? என்றார் ஆல்வா!”

இன்னொரு ஆபீஸுக்கு வேலைக்குப் போனேன். அந்தப் பாழாய்ப் போன ஆபீஸில் எங்கு பார்த்தாலும் எலிகள்; கரப்பான் பூச்சிகள். நானா சும்மா இருப்பேன்; ஒரு அருமையான கருவியைக் கண்டு பிடித்தேன். அந்தக் கருவி அவைகளைக் கொசு அடிப்பது போலக் கொன்று குவித்தன. எனக்கு இந்தப் படுகொலையில் பேராநந்தம்; அலுவலகத் தரை முழுதும் இரத்த வெள்ளம்! எலிகளும் பூச்சிகளும் கால் பட்ட இடமெல்லாம் கிடந்தன. மானேஜர் அய்யா வந்தார். ஏனய்யா, எடிஸனாரே! அலுவலகத்தை சுடுகாடாக மாற்றி விட்டீரே; இதுக்கா உமக்கு சம்பளம்? வீட்டுக்குப் போம்! என்றார்.

நாயை அடிப்பானேன், XXXXயைச் சுமப்பானேன் – என்ற பழமொழிக்கு இணங்க வீட்டுக்கு வந்தேன்.

சிரித்துக் கொண்டே மிடுக்காகச் சொன்னார் எடிஸன்.

மானேஜர் அய்யா, ஆல்வாவுக்கு அல்வா கொடுத்த கதை இது

xxxx

நான் விஞ்ஞானி அல்ல; பணமே எனக்குக் குறி

ஒரு முறை தாமஸ் ஆல்வா எடிஸனைப் பாராட்டி ஒரு கட்டுரை , ஒரு பத்திரிக்கையில், வெளியானது. அதை நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டினார்.

“அந்தக் கட்டுரை முழுக்க தப்பு. நான் விஞ்ஞானி அல்ல. நான் ‘பக்கா பிஸினஸ்மேன்’; வியாபாரி; எனக்கு எல்லாம் ‘துட்டு’ பற்றியே சிந்தனை; ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு வெள்ளிப்பணம் கையில் வரும் என்று எண்ணித்தான் அடுத்த அடியை எடுத்து வைப்பேன். பாரடேயை வேண்டுமானால் விஞ்ஞானி என்று சொல்லலாம். அவர் எனக்குப் பணம் சம்பாதிக்க நேரமே இல்லை என்பவர். எனக்கு காசேதான் கடவுள்– என்றார் ஆல்வா

xxxx

தந்திரக்கார எடிஸன்!!!

தாமஸ் ஆல்வா எடிஸன் ஒரு பங்களா வைத்திருந்தார். அது கோடை காலத்தில் தங்கும் விடுதி; எல்லோருக்கும் பெருமையாகச் சுற்றிக் காண்பிப்பார். அங்கே எல்லா நவீன வசதிகளும் , அதிசயமான கருவிகளும் இருக்கும். ஒரு முறை ஒரு பார்வையாளர் கூட்டம் வந்தது. எல்லோரையும் சுற்றிக் காண்பித்தார். தோட்டத்தின் வழியாக அடுத்த பகுதிக்குச் செல்ல வேண்டியி ருந்தது. அங்கு ஒரு கம்பியால் மறைக்கப்பட்ட தள்ளும் கேட் (வாசல்) இருந்தது. ஒவ்வொருவரும் அதைத் தள்ளினால் அது நகரும்; ஒவ்வொருவராக செல்லலாம். அதைத் தள்ள மகத்தான சக்தி தேவையாக இருந்தது.

ஒருவருக்கு வியப்பு ; ஐயா எடிசனாரே! வீடு முழுக்க அதி நவீன கருவிகளை வைத்திருக்கிறீர்; இங்கு மட்டும் நாங்கள் மூச்சுப் பிடித்துத் தள்ள வேண்டிய  கம்பி கிராதி கேட் வைத்திருக்கிறீரே என்ன காரணமோ? என்று வினவினார்.

தந்திரக்கார எடிஸன் சிரித்துக்கொண்டே செப்பினார்:

நீங்கள் ஒவ்வொருவரும் மூச்சுப் பிடித்து அதைத் தள்ளி உள்ளே போகும்போதும் எட்டு காலன் தண்ணீர் என் (தோட்டத்து) வீட்டில் பாயும் என்றார்.

நல்ல தந்திரமான கண்டுபிடிப்பு!

எடிஸனோ கொக்கோ!

TAGS-விஞ்ஞானி, எடிஸன், காசேதான் கடவுள்,  எலி அடித்தேன்

–சுபம்–


கடற்கரை மணலில் பெயர் எழுதினேன்! (Post No.5723)




Written by S Nagarajan

Date: 2 DECEMBER 2018


GMT Time uploaded in London –7- 10 am


Post No. 5723





Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog





ஆங்கில இலக்கியம்


கடற்கரை மணலில் பெயர் எழுதினேன்!


ச.நாகராஜன்




கடற்கரைக்கு ஒரு நாள் சென்றிருந்தேன். கடற்கரை மணல் பரப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
அதில் என் பெயரையும் தேதியையும் எழுதினேன். மகிழ்ச்சியுடன் நடந்தேன்.
சற்று தூரம் நடந்த பின்னர் திரும்பிப் பார்த்தேன். அடடா! பெரிய அலை ஒன்று வந்தது.




நான் எழுதிய அனைத்தையும் அடித்துக் கொண்டு போனது!
சரி, போனது போகட்டும், அது இப்படி எனது ஒவ்வொரு அடையாளத்தையும் அழிக்க முடியாதல்லவா?
நிலை நின்று இருக்கப் போகும் அடையாளக் குறிகளை நான் விட்டுச் செல்ல மாட்டேனா, என்ன?


அற்புதமான கருத்தை, மனதைத் தொடும் சொற்களால் சொல்கிறார் பெண் கவிஞர்  
ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட்.




ஒரு பெண்ணின் மனதும்  
இந்தக் கவிதையில் வெளிப்படுகிறது.
அவர் எழுதியதை – ஆற்றிய செயல்களை – வெளி உலகம் அழிக்க முயல்கிறது.
பெண் தொடர்கிறார், செயலாற்றுகிறார், நிறைய அடையாளங்களை உலகில் நிரப்புகிறார். Every Mark-ஐயும்
அது அழித்துக் கொண்டே இருக்க முடியாதல்லவா! Lasting Record Stands!
கவிதையைப் பார்ப்போம் வாருங்கள்!







A Name in the Sand
By Hannah Flaff Gould (1789-1865)


[Born in Lancaster, Mass., 1789. Died at Newburyport, Mass., 1865.]




ALONE I walked the ocean strand;    

                                                              
A pearly shell was in my hand:

                                                              
I stooped and wrote upon the sand    

                      
                                        
My name—the year—the day.

                                                              
As onward from the spot I passed,  
5
                                                              
One lingering look behind I cast;    

                                                              
A wave came rolling high and fast,    

                                                             
 
And washed my lines away. 

    

                                                              
And so, me thought,’twill shortly be   

                                                              
With every mark on earth from me:  
10
                           
                                   
A wave of dark oblivion’s sea

                                                              
Will sweep across the place   

                                                              
Where I have trod the sandy shore  

  
                                                            
Of time, and been, to be no more,   

                                                              
Of me—my day—the name I bore, 
15
                                                              
To leave nor track nor trace.  

    

                                                              
And yet, with Him who counts the sands   

                                                              
And holds the waters in his hands,

                           
                                   
I know a lasting record stands

                                                              
Inscribed against my name,   
20
                                                              
Of all this mortal part has wrought, 

                                                              
Of all this thinking soul has thought,  

                                                              
And from these fleeting moments caught  

                                                 
             
For glory or for shame.





ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட் (பிறப்பு 3-7-1789 மறைவு 5-9-1865) அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் லங்காஸ்டரில் பிறந்தவர்.
அவரது தந்தை அமெரிக்க புரட்சிப் போரில் போர்வீரராக இருந்தார். சிறு சிறு கவிதைகளை அவர் எழுத ஆரம்பித்தார். பல பத்திரிகைகள் அவரது கவிதைகளை பிரசுரித்தன.






எப்போதும் சிறிய விஷயமாக ஆரம்பிப்பார். அது பின்னால் பிரம்மாண்டமாகி ஒரு பெரிய கருத்தை வலியுறுத்தும். கடற்கரை மணலில் அவர் எழுதியது ஒரு அலையால் அழிந்து போனது. அவ்வளவு தான், ஒரு சின்ன விஷயம்! ஆனால் அதையே உலகியல் அரங்கிற்கு அவர் பின்னால் கொண்டு வருகிறார்.
என்ன அநியாயம், செய்யும் ஒவ்வொரு செயலையும் – ஒரு பெண்ணின் மனம் நோக, உலகம் அழிக்கிறது.




கடற்கரை மணலில் மேலாக எழுதப்பட்ட பெயரை அலை அடித்துக் கொண்டு போனாலும் கீழே இருக்கும் கிளிஞ்சல் உள்ளிட்டவை இருக்கிறது.




வெளி உலகில் அவர் செய்தவற்றை அழிக்க முயன்றாலும் அத்துடன் அழியாத பல குறியீடுகள் நிலையாக இருக்கும்.
இதற்கெல்லாம் கவலைப்படலாமா, என்ன? செய்கின்ற நல்ல காரியங்களை ஆற்றிக் கொண்டே இருப்போம்!


ஹன்னா தனது கவிதைகளை மூன்று தொகுதிகளாக ‘Poems’ என்ற எளிய தலைப்பில் வெளியிட்டார். பின்னால் தனது எழுத்துப் படைப்புகளையும் Gathered Leaves என்ற தலைப்பில் வெளியிட்டார்.
பள்ளி செல்லும் மாணவ, மாணவியரை இவரது படைப்புகள் பெரிதும் கவர்ந்தன. ‘எ நேம் இன் தி சேண்ட்’ என்ற இந்தக் கவிதை அவரது படைப்புகளில் சிறந்த ஒன்று.




நம்மை பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்ள விடாமல் கால வெள்ளத்தில் அனைத்தும் அடிபட்டுப் போகும் என்பதைச் சொன்னாலும் சரி, அல்லது அந்தக் கால வெள்ளத்தில் நிலை நிறுத்தும் செயல்களைச் செய் என உத்வேகம் மூட்டினாலும் சரி, நமது Lasting Record Stands!






 TAGS- ஹன்னா ஃப்ளாஃப் கோல்ட்., கடற்கரை மணல்


****

Edison was Sacked Twice! (Post No.5722)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 1 December 2018


GMT Time uploaded in London – 17-29 am

Post No. 5722


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

I am not a scientist! I am business man!

Thomas A Edison never forgot his role as a business man. The profit motive was an essential part of his temperament. Once he said practically to a friend referring to a newspaper article which discussed him as a scientist,
That is wrong. I am not a scientist. I am an inventor. Faraday was a scientist. He didn’t work for money, he said he hadn’t time. But I do. I measure everything I do by the size of a silver dollar. If it doesn’t come up to that standard, then I know it is no good.

Xxx

Cunning Edison



The late Thomas A Edison had a very beautiful summer residence in which he took great pride. One day he was showing his guests about, pointing out all the various labour saving devices on the premises. Turning back toward the house it was necessary to pass through a turn style which led on to the main path. The guests soon found out that it took considerable force to get through this device.
Mr Edison, one of his guests asked, how is it with all these wonderful modern things around, you still maintain such a heavy turnstile?

Said Mr Edison, his eyes lighting up with laughter,
Well, you see, everyone who pushes the turnstile around pumps eight gallons of water into the tank on my roof.


Xxx

Sacked for Killing Rats!

I got fired twice, said Edison.
The first time was when I was a telegraph operator. It was my fault, alright, but I got so interested in the dinged machine and its workings that I began to see how I could improve it. But I forgot all about the messages that were coming over the wire, and I left a lot of messages unsent and undelivered. Of course, they discharged me and I didn’t blame them, he added.

Then he laughed again, I got a job in an office, and there were a fearful lot of rats; terribly old office, you know. I got up a thing that killed them like flies— the same with cockroaches. The floor used to be covered with dead roaches and they fired me for that.


Thomas A Edison, sacked twice, business man
Xxx Subham xxx

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி- (Post No.5721)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 1 December 2018


GMT Time uploaded in London – 14-19 am

Post No. 5721


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

இந்தக் கட்டத்தில் 25-க்கும் மேலான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றைக் கண்டு பிடிக்க, கீழேயுள்ள குறிப்புகள் உதவும். விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1




23
 4



9a





5


6

78






9.
10







11





12


1314



15.



16.17


18

19.

குறுக்கே

1. முகமும் பார்க்கலாம்.கண்ணிலும் போடலாம்

2. -இது இல்லாமல் ஒரு நாட்டிற்குள் நுழைய முடியாது

4. 3. வீட்டுக்குத் தேவை; திருட்டைத் தடுக்கும்

5. -கை

5. அழுக்கு

6. 7. (8) – இமயத்திலும் உளது; ஆல்ப்ஸிலும் உளது

9.யானை தின்னும்

11.புத்தகத்துக்கும் உண்டு, வீட்டுக்கும் உண்டு

12. கெட்ட– தின் எதிர்ப்பதம்

14.துக்கம்- என்பதன் எதிர்ப்பதம்

15. எழுப்பு

16.வைட்டமின் பி நிறைந்தது; நெல்லின் ஒரு பகுதி

19.பேரனுக்குப் பாட்டி சொல்லுவது

கீழே

1. சிறுவர்கள் பறவைகளை அடிக்கப்பயன்படுத்தும் கருவி

2. அம்பின் துணைவன்

4. அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்; சாமிக்கும் பிடிக்கும்

6. கெடுப்பதும், வாழ்விப்பதும் இதுதான்

7. கம்யூனிஸ்டுகளுக்குப் பிடித்த நிறம்

8. கட்டிடம் கட்ட உதவும்

8. குருகுலத்தில் கிடைப்பது

9. எண்சான் உடம்புக்கு இதுவே பிரதானம்

9. a – மனிதனின் வாழ்நாளை வீணடிக்கும் ஒரு அங்கம்

10.வாழ்

11.சிடுமூஞ்சி

11.ஆதி சங்கரர் சந்யாசம் வாங்க உதவியது

12.இதைவிட யாரும் மெதுவாக போக முடியாது

13.-பாடல் பிரியன்

14.துப்பாக்கியால் செய்யலாம்; வடையும் செய்யலாம்

15.மக்கள் வசிக்கும் பூமி

16. இது உடையான் படைக்கு அஞ்சான்

17. போய்,,,,, விட்டு,,,,,, கை,,,,,,,

18. கையில் அணிவது

answer:–

Answer:–

ண்ணாடி

விசாடுட் பூ


மு

ல்

சுமா 
ட்
லைச்சிம்
லை
டை
ழை





பி
முப்பு
ல்

ம்சு
புப்சு
த்


விடு

கா

தை

குறுக்கே

1.கண்ணாடி,2.விசா,4.பூட்டு ,3சாவி, 5.மாசு, 6.மலைச் 8.சி (7)கரம்,

9.தழை,11.முகப்பு, 12.நல்ல , 15.உசுப்பு, 16.தவிடு,14.சுகம்,19.கதை

கீழே

1.கவட்டை, 3.பூமாலை, 2.வில்- அம்பின் துணைவன், 9.தலை முடி,

6.மழை, 7.சிவப்பு, 8.கல்வி, 8.கல்,8.கரம் ,10.வசி, 11.முதலை,

18.காப்பு, 17.விடு,11.முசுடு, 12.நத்தை, 13.கவி, 14.சுடு, 15.உலகம்,

16.தம்பி,

குறுக்கே

1.கண்ணாடி- முகமும் பார்க்கலாம்.கண்ணிலும் போடலாம்

2.விசா-இது இல்லாமல் ஒரு நாட்டிற்குள் நுழைய முடியாது

4.பூட்டு 3.சாவி- வீட்டுக்குத் தேவை;திருட்டைத் தடுக்கும்

5.கரம் -கை

5.மாசு – அழுக்கு

6.மலைச் 7.சி (8)கரம் – இமயத்திலும் உளது; ஆல்ப்ஸிலும் உளது

9.தழை- யானை தின்னும்

11.முகப்பு- புத்தகத்துக்கும் உண்டு, வீட்டுக்கும் உண்டு

12.நல்ல- கெட்ட– தின் எதிர்ப்பதம்

15.உசுப்பு- எழுப்பு

16.தவிடு- வைட்டமின் பி நிறைந்தது; நெல்லின் ஒரு பகுதி

14.சுகம்- துக்கம்- என்பதன் எதிர்ப்பதம்

19.கதை- பேரனுக்குப் பாட்டி சொல்லுவது

கீழே

1.கவட்டை- சிறுவர்கள் பறவைகளை அடிக்கப்பயன்படுத்தும் கருவி

2.வில்- அம்பின் துணைவன்

4.பூமாலை- அரசியல்வாதிகளுக்கும் பிடிக்கும்; சாமிக்கும் பிடிக்கும்

6.மழை- கெடுப்பதும், வாழ்விப்பதும் இதுதான்

7.சிவப்பு- கம்யூனிஸ்டுகளுக்குப் பிடித்த நிறம்

8.கல்- கட்டிடம் கட்ட உதவும்

8.கல்வி- குருகுலத்தில் கிடைப்பது

9.தலை-எண்சான் உடம்புக்கு இதுவே பிரதானம்

9.aமுடி- மனிதனின் வாழ்நாளை வீணடிக்கும் ஒரு அங்கம்

10.வசி- வாழ்

11.முசுடு- சிடுமூஞ்சி

11.முதலை- ஆதி சங்கரர் சந்யாசம் வாங்க உதவியது

12.நத்தை- இதைவிட யாரும் மெதுவாக போக முடியாது

13.கவி-பாடல் பிரியன்

14.சுடு- துப்பாக்கியால் செய்யலாம்; வடையும் செய்யலாம்

15.உலகம்- மக்கள் வசிக்கும் பூமி

16.தம்பி- இது உடையான் படைக்கு அஞ்சான்

17.விடு

18.காப்பு- கையில் அணிவது

TAGS-குறுக்கெழுத்துப் போட்டி,கண்ணாடி

–subham–

‘கடலில் கரைத்த பெருங்காயம்’ – கம்பன் கவிநயம் (Post No.5720)



WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 1 December 2018


GMT Time uploaded in London – 8-24 am

Post No. 5720


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

கம்பன் தனது இராமகாதையில் நிறைய பழமொழிகளைக் கையாளுகிறான். ஒருவனுக்கு எவ்வளவோ பழமொழிகள் தெரிந்திருந்தாலும் அதைக் கையாளுமிடத்தினால்தான் அதன் மகிமை புரியும். காளிதாசன் உலகப் புகழ்பெற்றதற்கு, அவன் கையாண்ட 1200 உவமைகள் மட்டும்    காரணம் அல்ல. அதை அவன் பொருத்திக் காட்டிய இடத்தால்தான் அவனை ‘உவமைக்கோர் காளிதாசன்’ என்று உலகம் புகழ்கிறது. அதுபோலக் கம்பனும் உரிய இடத்தில், அரிய வழக்குகளைக் காட்டுவதன் மூலம் இராமாயணத்துக்கு மெருகூட்டினான்.

‘கடலில் கரைத்த பெருங்காயம் போல’ என்ற பழமொழியை நாம் அறிவோம். அதைப் பயன்படுத்துகிறான் கம்பன்.

இதோ அந்தப் பாடல்

அருங்கடல் கடந்து இவ்வூரை அள் எரி மடுத்து வெள்ளக்

கருங்கடல் கட்டி மேருக்கடந்து ஒரு மருந்து காட்டி

குரங்கு இனி உன்னோடு ஒப்பது இல் எனக் களிப்புக் கொண்டேன்

பெருங்கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமைப்பெற்றி

பொருள்

“கடத்தற்கரிய கடலைக் கடந்தேன்; இலங்கைக்கு நெருப்பு வைத்தேன்; கடலுக்கு அணை/பாலம் கட்ட உதவினேன்; மேரு மலையைக் கடந்து சென்று சஞ்சீவி மருந்தினைக் கொண்டு வந்தேன். அதைப் பார்த்து உனக்கு இணையான குரங்கு இந்த உலகில் இல்லை என்று இராமன் சொன்னான். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் இப்போது நான் இராமனுக்குச் செய்யும் தொண்டு கடலில் கரைத்த பெருங்காயம் போல ஆயிற்றே!”

இது மாயா சீதைப் படலத்தில் (யுத்த காண்டம்) வரும் பாடல்; அதாவது இந்திரஜித், சீதையைப் போல் ஒரு மாய உருவத்தைச் செய்து, அதை அனுமன் முன்னிலையில் கொணர்ந்து வெட்டியபோது, அனுமன் புலம்பிய புலம்பல் இது.

‘கோட்டம்’– என்ற சொல்லுக்கு ‘வாசனை தரும் பொருள்’ என்று அர்த்தம். இங்கே  கடல் என்ற சொல்லுடன் வருகையில் அது பழமொழியை ஒட்டியே வந்தது.

இந்தப் பாடலிலும் இதற்கு முந்தைய ஓரிரு பாடல்களிலும் அனுமனின் சாகசச் செயல்கள் அனைத்தையும் கம்பன் பட்டியலிடுவது, அனுமன் துதி/தோத்திரம் போல அமைந்துளது.

அனுமனைச் ‘சொல்லின் செல்வன்’ என்று போற்றுவதற்குக் காரணம், அவன் ஒரு பத்திரிக்கையாளன் போல – journalist ஜர்னலிஸ்ட் போல- எழுத, பேச, சொல்ல வல்லவன். சீதை எங்கு இருக்கிறாள் என்று அறிய பல்லாயிரம் குரங்குகளை எண் திசைக்கும் ஏவிய இராமன், சீதை பற்றிய செய்திக்காக காத்திருந்தபோது, அனுமன் வந்தவுடன் சொன்ன செய்தி ‘கண்டனன் சீதையை’ என்பதாகும். அத்தைப் பாட்டி கதை சொல்லுவது போலச் சொல்லாமல், பத்திரிக்கை தலைப்பு போல ‘கண்டேன் சீதையை’ என்றான். இராமன் அவனை கட்டி அணைத்தான். இது பழைய பாடல். அதை இப்போது அனுமன் நினைவு கூறுவதன் மூலம் அந்தக் காட்சியும் அதன் முக்கியத்துவமும் மீண்டும் வருகிறது;

இதோ அந்தப் பாடல்,

வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன

செஞ்சிலை உரவோன் தேடித் திரிகின்றான் உள்ளம் தேற

அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்றயான் அரக்கன் கொல்லத்

துஞ்சினாள் என்றும் சொல்லத்தோன்றினேன் தோற்றம் ஈதால்

பொருள்

சீதையே! சிறந்த வில்லாற்றல் கொண்ட இராமபிரான் வஞ்சிக் கொடி போன்ற உன்னை எங்கும் காணாது, தன் உயிரையே மறந்து உன்னைத் தேடியபோது, அவன் மனம் மகிழ்வுறுமாறு, ‘அழகிய சொல் உடையாளைக் கண்களால் கண்டேன்’ என்ற நல்ல செய்தியைக் கொடுத்தேன். இப்போது நானே போய் அரக்கன் தாக்கியபோது சீதை செத்துவிட்டாள் என்று சொல்லப் போகிறேனே; இதற்காகவா பிறந்தேன்.

இது சீதையின் மாயத் தோற்றத்தை இராவணன் புதல்வனான இந்திரஜித் வெட்டியபோது பாடிய பாடல்.

ஆக, அனுமனுடைய சாகசப் பட்டியலுடன், இங்கே கம்பன் கவிநயத்தையும் ரசிக்க முடிகிறது.

வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!

TAGS– இராமகாதை, கம்பன், கவிநயம், பெருங்காயம்

–சுபம்–

ஒபிஸிடி கோட் – 1 (Post No.5719)

Written by S Nagarajan

Date: 1 DECEMBER 2018


GMT Time uploaded in London –5- 39 am


Post No. 5719

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

அறிவியல் துளிகள் 403 (எட்டாம் ஆண்டு முப்பத்தொன்பதாம் கட்டுரை)

ஒபிஸிடி கோட் – 1

ச.நாகராஜன்

(குறிப்பு : இந்தக் கட்டுரை சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து எழுதப்படுகிறது.இங்கு வந்து இரண்டு வாரம் ஆகி விட்டது)

அமெரிக்காவில் யாரைப் பார்த்தாலும் இப்போது உபவாசத்தில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. நொறுக்குத் தீனிகள் கிடையாது; நினைத்தபடி சாப்பாடு கிடையாது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த உணவுக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு திடீரென ஏற்படக் காரணம் என்ன?

ஒபிஸிடி கோட்! (The Obesity Code) 2016ல் வெளியாகி இன்றைய ட்ரெண்டில் முன்னணியில் நிற்கும் புத்தகம் இது. இதை எழுதியவர் டாக்டர் ஜேஸன் பங் (Jason Fung). 

உடலின் எடை கூடி, பருமனாக இருக்கும் பெண்மணிகளும் ஆண்களும் தங்களின் உடல் பருமனைப் பற்றிக் கவலைப்படுவது நியாயமே. வெளியில் சகஜமாகப் போக முடியாது; எதையும் நினைத்தபடி உண்ண முடியாது; அதிலும் நீரிழிவு நோய்- டயபடீஸ் 2 – இருந்தாலோ அவ்வளவு தான்; ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள்! இவர்களுக்கெல்லாம் வரபிரசாதமாக இந்த டிரெண்ட் புத்தகம் அமைந்துள்ளது. பல பழைய கால பத்தாம்பசலிக் கொள்கைகளைத் தூக்கி எறிகிறது இந்தப் புத்தகம்.

இப்போதைய கொள்கையின் படி கலோரிகளை வைத்து உடல் எடையைப் பற்றிய அளவை நாம் கண்காணிக்கிறோம். 20 வயதுடைய ஒரு இளைஞனுக்கு அன்றாட தேவை 2800 கலோரிகள். 60 வயதுடைய ஒருவருக்கு அன்றாட தேவை 2496 கலோரிகள். அன்றாடம் நாம் உண்ணும் உணவை இதன் அடிப்படையில் நாம் தேர்வு செய்கிறோம்.

100 கிராம் காரட்டில் இருப்பது 35 கலோரிகள். 100 கிராம் பீன்ஸில் 117 கலோரிகளும், 118 கிராம் வாழைப்பழத்தில் 106 கலோரிகளும், 100 கிராம் தயிரில் 156 கலோரிகளும். 100 கிராம் வெந்த அரிசி சாதத்தில் 116 கலோரிகளும் உள்ளன. இப்படி கணக்கிட்டு நமது அன்றாட உணவை நாம் சாப்பிடுகிறோம் – உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க.

உள்ளே நாம் ஏற்கும் கலோரிகளைப் போல அதை அன்றாடம் செலவழிக்கவும் வேண்டும். இல்லையேல் அது கொழுப்பாக மாறி எடையை ஏற்றும். ஆக நடைப்பயிற்சி 28 நிமிடம் மேற்கொண்டால் 110 கலோரிகளையும், ஓடினால் 10 நிமிடங்களில் அதே கலோரிகளையும் இழக்கிறோம். ஆக இந்த உடல் இயக்கம் நமது அன்றாடத் தேவை ஆகிறது. இப்படி உடல் இயக்கம் மூலமாக நாம் இழக்கும் கலோரிகளால் குறையும் எடை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்கிறார் பங். ஆகவே அவரது அறிவுரை, முக்கியமாக உங்கள் உடலின் இன்சுலின் அளவைப் பாருங்கள் என்பதே! தொடர்ந்து தவறான உணவுப் பழக்கத்தின் காரணமாக உடலில் இன்சுலின் அளவு மிகவும் ஏறி விடும்.

ஆகவே ஹார்மோனல் இம்பாலன்ஸ் எனப்படும் ஹார்மோன்களின் சமச்சீரின்மை பற்றி நாம் கவலைப்பட வேண்டும். முக்கியமாக ஹார்மோன்களில் இன்சுலின் அளவை நாம் கண்காணித்து அதன் சமச்சீர்தன்மையை பராமரித்து வர வேண்டும். இதற்கான வழியாக, இடைவெளி விட்டு மேற்கொள்ளும் உபவாசத்தை – Intermittant Fastingஐ – மேற்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகிறார் டாக்டர் பங்.

உணவை உட்கொள்ளும் போது நமது உடலில் உள்ள இன்சுலினின் அளவு ஏறுகிறது; நமது உடலில் உள்ள திசுக்களைச் சக்தி பெறச் செய்கிறது. நமக்குத் தேவையில்லாத அதிகப்படி சக்தியானது க்ளைகோஜனாக மாறி நமது உடலில் சேமித்து வைக்கப்படுகிறது.

உடனடியாகத் தேவைப்படும் அதிகப்படி சக்தி தசைகளிலும், கல்லீரலிலும் சேமிக்கப்படுகிறது.  இன்னும் கொஞ்சம் சக்தி தேவை என்ற நிலையில், க்ளைகோஜன் சக்தியைத் தருகிறது.மற்றவை கொழுப்பாக மாறுகிறது.

இந்த ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை இன்றைய நமது சூழ்நிலையின் காரணமாகவே ஏற்படுகிறது. உணவு வகைகளில் நமது விருப்பத் தேர்வுகள், பதப்படுத்தப்பட்டு பாக்கட்டுகளிலும் கேன்களிலும் அடைக்கப்படும் உணவு வகைகள், மிகுந்த அளவில் ஏற்றப்பட்ட சர்க்கரைச் சத்துக்களுடன் கூடிய உணவு வகைகள் ஆகியவை கட்டுப்பாடற்ற சந்தையில் கிடைக்கின்றன; அவற்றை ஆவலுடன் அவ்வப்பொழுது சாப்பிடுவதோடு நொறுக்குத் தீனியாக வேறு ஏராளமானவற்றைச் சாப்பிடுகிறோம். விளவு பருமனான உடல்; அத்துடன் டயபடீஸ்-2 போன்ற வியாதிகள்!

இத்துடன் இன்றைய வாழ்க்கை முறையிலான வேகம், பரபரப்பு, மன அழுத்தம் ஆகியவற்றோடு எந்த வித உடல் இயக்கமும் இல்லாமல் டி.வி முன்னால் உட்காரும் வாழ்க்கை முறை வேறு சேர்ந்து கொள்கிறது!

இதைப் போக்கும் வழி தான் ஒபிஸிடி கோட்! உடல் பருமனை நீற்கும் வழி முறை!

டோரொண்டோவில் இண்டென்ஸிவ் டயடரி மானேஜ்மெண்ட் ( தீவிர உணவுத்திட்ட நிர்வாகம்) என்னும் சிகிச்சை நிலையத்தை நடத்தி வரும் டாக்டர் பங் தன்னிடம் சிகிச்சைக்காக வருவோரிடம் பல்லாண்டுகளாகச் சோதித்து ஒரு புதிய வழிமுறைக் கண்டுபிடித்துள்ளார்.

உடல் பருமனை அறிவியல் ரீதியாகக் குறைக்க வேண்டும் என்பது அவரது அணுகுமுறை.

இதைத் தான் ஒபிஸிடி கோடில் – உடல் பருமனைக் குறைக்கும் வழி என்ற தனது புத்தகத்தில் – அவர் தந்துள்ளார்.

சுருக்கமாக அவரது வழிமுறையைப் பார்ப்போம் ..

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

க்ரோவர் ஸாண்டர்ஸ் க்ராண்ட்ஸ் (பிறப்பு 5-11-1931 மறைவு 14-2-2002 – Grover Sanders Krantz) அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மானிடவியலர் (ஆந்த்ரோபாலஜிஸ்ட்). மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். பிக் ஃபுட் (Big Foot) எனப்படும் பிரம்மாண்டமான புராண கால வரலாற்று பற்றிய ஆராய்ச்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டதால் பரபரப்பாகப் பேசப்பட்டவர். அவர் அந்த மனிதனைப் பார்க்கவில்லை என்றாலும் அதைப் பார்த்ததாகக் கூறிய பலரை நேரில் சந்தித்து விவரங்களைச் சேகரித்தார்.

வாழ்நாளின் இறுதியில் எட்டு மாதங்கள் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு துன்புற்றார். தனது மரணத்திற்குப் பின்னும் தனது உடல் பயன்பட வேண்டும் என்ற தனது ஆசையை அவர் தனது நண்பரான டேவிட் ஹண்டிடம் வெளியிட்டார். “எனது உடலைத் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. எனது நாயும் உடன் இருக்க வேண்டும்” என்றார் அவர்.

அவர் இறந்தவுடன், அவர் விருப்பப்படி  அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு எதுவும் செய்யப்படவில்லை. அது மானிடவியல் பிரிவுள்ள டென்னஸி பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து அது பதப்படுத்தப்பட்டு  மீண்டும் 2003ஆம் ஆண்டு நேஷனல் மியூஸியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரிக்கு அனுப்பப்பட்டது. அவரது விருப்பப்படி அவரது நாய்கள் க்ளைட், இக்கி, யாஹூ ஆகிய மூன்று நாய்களும் பச்சை பெட்டியில் வைக்கப்பட்டன.

2009இல் அவரது எலும்புக்கூடு கலை நோக்குடன் அழகுற மேம்படுத்தப்பட்டது. அவரது நாயான க்ளைடின் எலும்புக்கூடும் அப்படியே செய்யப்பட்டது. இரு எலும்புக்கூடுகளும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

செத்தும் கொடுத்தார் க்ரோவர் க்ராண்ட்ஸ்!

Tags- 

 ஒபிஸிடி கோட்! (The Obesity Code)

***

மருந்துச்சரக்கு குறுக்கெழுத்துப் போட்டி (Post No.5718)

WRITTEN by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 30 November 2018


GMT Time uploaded in London – 17-43

Post No. 5718


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAMIL CROSS WORD

இந்தக்குறுக்கெழுத்துப் போட்டியில் மருந்துச் சரக்குகள் உள்பட 25 சொற்கள் உள. கண்டுபிடிக்க  உதவுமாறு சில குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அரை மணி நேரத்துக்குள் கண்டுபிடிக்க இயலாவிடில் விடையைக் காண்க.


1



2  










3
  4

5
  







6
7    8

  9






   

 







 





10
  


11
12







13



14
15
16
17











18

19






 

  

  20



குறுக்கே

1–இனிப்பான மருந்துச் சரக்கு

3.தலையணைக்குள், மெத்தையில் இருக்கும்

5. சாப்பிட உதவும்

8.செவிப் புலன்

9.365 நாட்கள்

10.வீடு

11.ரசமும் வைக்கலாம்; அப்பளத்தில் போடலாம்;மருந்திலும் கலக்கலாம்

14.கோவிலில் வழிபடும் உருவம்

15.மூலிகை வகையறா

16.ஈர்ப்பு

19.வானத்தில் தரிசிக்கலாம்

20.களவு

கீழே

2.தராசு

3.பல் வலிக்கு உதவும்

4.சுற்றிச் சுற்றி வரலாம்

5.) 7 நாட்கள் உடையது

6.தலையில் உள்ளது; மிக முக்கியம்

7.ஓட்டை, வாயில்

10.ஜாதிக் (8)காய் — காய்க்கும் கூட ஜாதி உண்டு போல!

11.மலைக்கோவிலுக்கு தினமும் செல்வார்

12.தூம கேதுவின் பகுதி

13.இது ஒரு குஸ்திக் கலை

17.கல்யாணத்துக்குப் பார்க்கலாம்

18.ஜாதி மலர்

19.குழந்தையின் முதல் படி

20.மதிப்புக்குரிய வைணவப் பெரியார்;

20. மலைக்கோவில்



தி
து  ர  ம்




லா



  ல  ம்
வா
   ய்



ட் 

மூ
து    கா

  வ
ரு

ளை

    க்

  ங்

 ம்ர்

தி

   க



கைஜா
   ம்
ஜீ
பு




தி


லை
சிச்

ர்

ல்


ப்

மு

ருன்



  டு

  ரு 

  தி



 ANSWERS

1.அதி மதுரம்

2.துலாம்

3.இலவங்கம்

3.இலவம்

4.வட்டம்

5.வாரம்

5.வாய்

6.மூளை

7.துவாரம்—

8.காது-

9.வருட

10.ஜாதிக் (8)காய்

10.ஜாகை

11.ஜீரகம்

11.ஜீயர்-

12.புகை

13.வர்ம

14.சிலை-

15.பச் (14)சிலை

16.கவர்

17.வரன்

18.முல்லை

19.கருடன்

19.கரு

20.திருப்பதி 11.ஜீயர்

20.திருடு

1.அதி மதுரம் –இனிப்பான மருந்துச் சரக்கு

2.துலாம்- தராசு

3.இலவங்கம்- பல் வலிக்கு உதவும்

3.இலவம்- தலையணைக்குள், மெத்தையில் இருக்கும்

5.வாரம்– 7 நாட்கள் உடையது

5.வாய்- சாப்பிட உதவும்

6.மூளை- தலையில் உள்ளது; மிக முக்கியம்

7.துவாரம்– ஓட்டை, வாயில்

8.காது- செவிப் புலன்

9.வருட- 365 நாட்கள்

10.ஜாதிக் (8)காய் — காய்க்கும் கூட ஜாதி உண்டு போல!

10.ஜாகை- வீடு

11ஜீயர்-.மலைக்கோவிலுக்கு தினமும் செல்வார்; மதிப்புக்குரிய வைணவப் பெரியார்;

11.ஜீரகம்- ரசமும் வைக்கலாம்; அப்பளத்தில் போடலாம்;மருந்திலும் கலக்கலாம்

12.புகை- தூம கேதுவின் பகுதி

13.வர்ம-இது ஒரு குஸ்திக் கலை

14.சிலை- கோவிலில் வழிபடும் உருவம்

15.பச் (14) சிலை- மூலிகை வகையறா

16.கவர்- ஈர்ப்பு

17.வரன் —கல்யாணத்துக்குப் பார்க்கலாம்

18.முல்லை- ஜாதி மலர்

19.கருடன் —  வானத்தில் தரிசிக்கலாம்

19.கரு – குழந்தையின் முதல் படி

20.திருடு- களவு

20. திருப்பதி- மலைக்கோவில்

TAGS—மருந்துச் சரக்கு, குறுக்கெழுத்து, போட்டி

–SUBHAM–