தாலி பற்றி கம்பன் (Post No.4185)

Written by London Swaminathan

 

Date: 5 September 2017

 

Time uploaded in London- 14-36

 

Post No. 4185

 

Pictures are taken from various sources; thanks.

 

தாலி பற்றி அடிக்கடி சர்ச்சையை உண்டாக்கும் ஒரு முட்டாள் கூட்டம் தமிழ்நாட்டில் அவ்வப்பொழுது தலைதூக்கும் என்பது கம்பனுக்கும் கூட ஞான திருஷ்டியில் தெரிந்துள்ளது. ஒரு அழகான பாடல் சுந்தர காண்டத்தில் வருகிறது:

 

மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற

எண்ணற்கு அரிய ஏனையரை இகலின்  பறித்த தமக்கு இயைந்த

பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த

கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம்  இட்டுக் கட்டினார்

-பிணி வீட்டு படலம், சுந்தர காண்டம்

 

அனுமன் வாலில் பிரம்மாஸ்திரம் இருக்கும்போது தீ வைப்பது முறையன்று என்று எண்ணி, அனுமனை பிரம்மாஸ்திரத்தினில் இருந்து விடுவித்தான் இந்திரஜித். அப்போது வரும் பாடல் இது:–

 

பொருள்:

“இராவணன் நிலவுலகில் திக்விஜயம் மேற்கொண்டபோது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட கயிறுகள், தேவர்களிடமிருந்து வலியப் பறித்த கயிறுகள், வரத்தின் மூலம் பெற்ற கயிறுகள், எண்ணமுடியாத அசுரர் முத்லியவர்களோடு போரிட்டுப் பெற்று வந்த கயிறுகள், இன்னும் இவ்வாறான கண்ணில் பட்ட வலிய கயிறுகளை எல்லாம் கொண்டுவந்து அனுமானைக் கட்டினார்கள். தத்தமக்கு ஏற்ற பெண்களின் கயிற்றில் அவர்கள் கட்டியிருந்த  தாலிக் கயிறுகள் மட்டுமே அச்சமயத்தில் கவரப்படாமல் தப்பித் தங்கின”

இதிலிருந்து தெரிவதென்ன?

 

இராக்கத பெண்களுக்கும் தாலிக் கயிறுகள் உண்டு:

 

அது புனிதமானதால், அசுரர்களும் அதை மதித்துப் போற்றினர்.

 

அனுமானைக் கட்ட உலகிலுள்ள எல்லாக் கயிறுகளும் பயன்படுத்தப்பட்டன; ஆனால் தாலிக் கயிறு பயன்படுத்தப் படவில்லை.

 

தமிழ்நாட்டில் சில போலி சக்திகள் அவ்வப்போது தலைவிரித்தாடி ஆடி ஓய்ந்து விடும் என்பது கம்பனுக்கும் தெரியும்.

 

தமிழகத்தில் சில போலித் தமிழர்கள் பிறப்பர்; அவர்களுக்குச் செமை அடி கொடுக்க வேண்டும் என்று சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் கம்பன் எழுதிய பாடல் இது.

இராக்கதர்களுக்குக் கூடத் தெரிந்த தாலியின் புனிதம், சில அந்தகர்களுக்குத் தெரியாதது வருந்தத்தக்கது.

 

–சுபம்–

Be A Tough Minded Optimist! (Post No.4184)

Compiled by S.NAGARAJAN

 

Date: 5 September 2017

 

Time uploaded in London- 6-58 am

 

Post No. 4184

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

In order to achieve one’s goal one must be a Tough Minded Optimist.

Norman Vincent Peale has written a book titiled, “Tough Minded Optimist”.

 

 

A Readers Digest article (Win with your Strengths – June 1993 issue) suggests the following to get success:

To get Success .. Win with your Strengths.

 

  • Pick one strength to pursue
  • Enerzise your strength daily
  • Ignore weaknesses that don’t hinder you
  • Look for complementary partners
  • Develop a Support System

 

Everyday there is a crisis. How to overcome a crisis?

  • Optimism pays
  • One step at a time
  • Keep the faith
  • Take Stock
  • Take Action

(Readers Digest May 1992 issue)

 

To live in this world you have to be STRONG! – Or else.

 

So Start developing inner toughness or tensile strength of mind and SPIRIT!

 

When the going gets tough, Let the tough gets going! – YOU ARE TOUGH!

 

Remember : What you think you will become. Good or Bad, week or strong, defeated or victorious.

 

Never be afraid of anybody or anything in this life.

 

Remember old saying, it really works :”EVERY KNOCK IS A BOOST”.

 

Keep on estimating people even when they act badly towards you.

 

Be humble.

 

Be big in mind and soul, Be kindly: You will like yourself that way and so will other people.

Remember GOD.

God is great and He will guide you.

 

Norman Vincent Peale’s above guidelines will make one victorious in this life.

***

 

 

The Power of Subconscious Mind (Post No.4182)

Written by S.NAGARAJAN

 

Date: 4 September 2017

 

Time uploaded in London- 7-47 am

 

Post No. 4182

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

The Power of Subconscious Mind

 

S.Nagarajan

 

 

The amazing power of  subconscious mind has been explained by Joshph Murphy in his book titled, “ The Power of Your Subconscious Mind”.

 

 

     Miraculous cure could be obtained by this mind power. In his book he has explained about this thus:    

    “Some years ago, I was invited to lecture at the Yoga Forest University, in Rishikesh, India. While I was there, I had a long conversation with a surgeon who was visiting from Bombay. From him, I learned the astonishing story of Dr. James Esdaille.

 

 

        Esdaille was a Scottish surgeon who practiced in Bengal during the 1840s. This was before ether or other modern methods of chemical anesthesia began to be used. Nevertheless, between 1843 and 1846, Dr. Esdaille performed some four hundred major surgical operations of  all kinds. These included amputations, removal of tumors and cancerous growths, and operations on the eye, ear, and throat. All these operations were performed under mental anesthesia only. Patients said  they felt no pain, and none of them died during surgery.

 

 

      Just as amazing, the mortality rate of Esdaille’s patients following surgery was extremely low. This was well before Western scientists such as Louis Pasteur and Joseph Lister pointed out the bacterial origin of infection.

 

 

    No one realized that postoperative infections were due to unsterilized instruments and virulent organisms. Nevertheless, when Esdaille suggested to his patients, who were in a hypnotic state, that no infection or septic condition would develop, their subconscious minds responded to his suggestion. They set in motion the processes needed to fight off the life-threatening dangers of infection.

 

 

Think of it: Over a century and a half ago, this Scottish surgeon who had gone halfway around the world discovered how to use the miraculous wonder-working powers of the subconscious mind. It is enough to cause you to be seized with awe. The transcendental powers that inspired Dr. Esdaille and that protected his patients from mortal danger can  be yours, too.

 

 

        Your subconscious mind can give you independence of time and space. It can make you free of all pain and suffering. It can give you the answer to all problems, whatever they may be. There is a power and an intelligence within you that far transcends your intellect, causing you to marvel at the wonder of it all. All these experiences cause you to rejoice and believe in the miracle-working powers of your own subconscious mind.”

 

 

 

So in order to get the full positive power we have to remove all negative thoughts and nurture positive thoughts in our mind.

This will pave way for our success in every sphere.

***

350 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தையானந்தர்! (Post No.4181)

Written by S.NAGARAJAN

 

Date: 3 September 2017

 

Time uploaded in London- 7-17 am

 

Post No. 4181

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Pictures are representational only; no relationship to the article.

 

 

சென்னையிலிருந்து வெளி வரும் சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் செப்டம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

விஜயதசமியன்று தனது நான்காவது சமாதி நிலையை எய்தியவர். சுமார் 350 ஆண்டுகள் வாழ்ந்தவர். தனது முந்தைய சமாதிகளைத் தனதே என்று கூறி அருளியவர். ஸ்ரீகுழந்தையானந்தரின் வியக்கத்தகும் சரித்திரம் இதோ!

 

350 ஆண்டுகள் வாழ்ந்த குழந்தையானந்தர்!

 

                      ச.நாகராஜன்     

 

குழந்தையானந்தரின் அவதார தோற்றம்

மீனாட்சியின் அருள் விளையாடல்கள் அன்றும் நிகழ்ந்தன, இன்றும் நிகழ்கின்றன, என்றும் நிகழும்.

அவற்றை உணர்ந்து அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கும் பக்தர்கள் அம்பிகையின் செல்லக் குழந்தைகளே!

ஸ்ரீ குழந்தையானந்தர் என்ற பெயரில்  மதுரையில் உலாவி வந்து ஏராளமானோருக்கு அருள் பாலித்த பெரும் மகானின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு  முன்னர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர். அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப் போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது. குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய அந்த தம்பதியினர்  குழந்தை வரம் வேண்டி அம்பிகையை உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும் செய்து கொண்டனர்.

 

ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும் நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐயர் உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப் பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம் இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து, “ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர். “கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.

“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர் நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அவரை அவர்கள் வாழ்த்தினர்.

நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது. நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம் செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை.  கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.

அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி, “எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே நீ தான் அனுப்ப வேண்டும்” என்று  மீனாட்சியம்மனை வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி தவிக்க கோபம் ஆறாத ஐயர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.

அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம், பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.

ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்” என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.

ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு  பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று மறைந்து விட்டான். எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை. ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி அது அம்பிகையின் திருவிளையாடலே என்று உறுதி படக் கூறினாள்.

 

சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது. இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.

இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்

இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது? தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம் சென்றனர்.

அங்கு பட்டருக்கு அருள் வந்து எந்தக் குழந்தைக்கு காலில் சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம் இருக்கிறதோ அந்தக் குழந்தையை விடு என்று உத்தரவு பிறந்தது.

அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக் குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டன்ர்.

அங்கு குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே மீனாட்சியம்ம்னை நோக்கித் தவழ்ந்து சென்றது.

பிரிய மனமின்றி ராமனை கோவிலில் விட்டு விட்டு தம்பதியினர் வீடு திரும்பினர்.

இரவு வந்தது. குழந்தையை என்ன செய்வது என பட்டர் யோசித்தார். (அந்தக் காலத்தில் பட்டரின் கவனிப்பிலேயே கோவில்கள் இருந்தன) அப்போது அசரீரி ஒன்று குழந்தையை கோவிலிலேயே விடுமாறு உத்தரவைப் பிறப்பித்தது.

அது முதல் ராமன் கோவிலில் வளர ஆரம்பித்தான்.

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலைத் தந்த அம்பிகை குழந்தையானந்தரையும் பால் கொடுத்து வளர்த்தாள்.

ஏழு வய்தான போது ராமனுக்கு உபநயனம் செய்விக்க உத்தரவு ஆகவே உபநயனமும் கோவில் பட்டர்களால் செய்து வைக்கப்பட்டது.

பின்னர் 900 ஆண்டுகள் வாழ்ந்து வரும் பெரிய சித்தரான ஸ்ரீ கணபதி பாபாவைக் குருவாகக் கொள்ளுமாறு அருள் ஆணை பிறந்தது.

கணபதி பாபாவை கணபதி ப்ரம்மம் என்று கூறுவார்கள். அவரது சமாதி இன்றும் காசியில் பஞ்சலிங்க கட்டத்தில் உள்ளது. இன்றும் வெள்ளைச் சலவைக் கல்லிலானான அவரது சிலையை அங்கு பார்க்கலாம்.

முதல் சமாதி

குருநாதரிடம் சகல சாஸ்திரங்களையும் பயின்ற ராமனுக்கு ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள்  என்ற பெயர் ஏற்பட்டது. இமயமலை பகுதிகளில் சஞ்சாரம் செய்த அவரை ஏராள்மானோர் தரிசித்து அருள் பெற்றனர்.

த்ரிலிங்க ஸ்வாமிகளின் முதல் ஜீவ சமாதி காசியில் ஏற்பட்டது. கணபதி பாபா சமாதிக்கு அருகிலேயே இது உள்ளது.

இரண்டாவது சமாதி

பின்னர் அவர் நேபாளம் சென்றார். நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குஷ்ட நோய் பீடிக்கவே அவர் ஸ்வாமிகளிடம் சரணடைந்தார். அவருக்கு ஸ்வாமிகளின் அருளால் குஷ்ட்ம் நீங்கிற்று. ப்ல காலம் நேபாள அரசரின் அரண்மனையில் அவர் பூஜிக்கப்பட்டார்.

ஸ்வாமிகள் எப்போதும் அணிந்திருந்த மகர கண்டியும், கௌரிசங்கர ருத்ராட்ச மாலையும் நேபாள அரசர் கொடுத்தவையே. ஸ்வாமிகளின் இரண்டாவது சமாதி நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் உள்ளது.

ஸ்ரீ த்ரிலிங்க ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் தரிசித்திருக்கின்றனர்.

மூன்றாவது சமாதி    

நேபாள சமாதியிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் வட இந்தியா முழுவதும் சஞ்சரித்துப் பின்னர் ஆந்திர பிரதேசம் வந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏராளமான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்தார்.

பின்னர் தென்காசியில்  மூன்றாவது சமாதியை எய்தினார். இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது.தென்காசியில் சன்னதி மடம் தெருவில் சங்கரன் பிள்ளை என்ற பக்தர் வீட்டில் இந்த சமாதி உள்ளது.

நான்காவது சமாதி

மூன்றாவது சமாதி நிலையிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் மதுரையம்பதிக்கு எழுந்தருளினார். அங்கு அவர் இருபது வருஷங்களுக்கும் மேலாக நடத்திய அருள் லீலைகளை ஆனந்தமாக அனுபவித்தோர் சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்.

சதா யோகநித்திரையில் இருந்த அவரது திருவாக்கிலிருந்து எழும் அமுத மொழிகள் மூவாண்டுகளே நிரம்பப் பெற்ற குழந்தை பேசும் மழலை மொழி போல்வே இருந்தது. அத்துடன் மட்டுமன்றி அவர் வாயிலிருந்து அமுதூற்றை ஒத்த சாளவாய் வழிந்து கொண்டிருந்தது. இதனால் குழந்தையானந்தர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்

பருத்த தொந்தி. அருள் பொங்கும் முகம். பத்ம பாதங்களோ மஹாவிஷ்ணுவின்  அம்சத்தைக் குறிக்கும் சங்கு சக்ரங்களைக் கொண்டவை. நிகழ்த்திய திருவிளையாடல்களோ மெய்சிலிர்க்க வைத்தவை.

இறுதியாக 1932ஆம் ஆண்டு, ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் நான்காவது சமாதியை அடைந்தார்.

1932ஆம் ஆண்டு மதுரை லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் 4அம் நம்பர் கிருஹத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்வாமிகள் சுமார் 300 பவுன்களில் செய்து வைத்திருந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.

எட்டாம் நாளன்று சிஷ்யர் ராமலிங்கய்யர் வெந்நீர் கொண்டு வந்து வைக்க மகாலிங்க பண்டாரம் என்பவர் நெய்யை ஸ்வாமிகளுக்கு தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். ம்காலிங்க்ம் அவரது கையில் ஏற்பட்ட பிளவையைக் கண்டு அவர் அடங்கி விடப் போகிறாரா என்று ராமலிங்கய்யரிடம் கேட்க, குழந்தையானந்தர், “என்னடா சொல்கிறான் திருட்டுப் பயல்! அதெல்லாம் ஒண்ணுமில்லையடா! எல்லாம் நாளன்னிக்கி தான்!” என்று அருளினார்.

சனிக்கிழமை சரஸ்வதி பூஜை முடிந்தது. மதியம் மூன்று மணிக்கு ஸ்வாமிகளே என்று கூப்பிட்ட போது மூன்றாம் முறை கண்ணை விழித்துப் பார்த்தார் அவர். ராமலிங்கய்யர் சிறிது பாலை வாயில் ஊற்ற இரண்டு வாய் உள்ளே சென்ற பால் அப்படியே நின்று விட்டது.

அவர் அடங்கி விட்டாரா? யார் நிர்ணயிப்பது?

அனைவரும் பிரமித்து நின்றனர். பின்னர் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஸ்வாமிகள் சமாதியடைந்ததை நிர்ணயித்து ஊர்ஜிதம் செய்தார்.

 

மதுரையில் அரசரடி அதிஷ்டானம்

ஸ்வாமிகளை பலகாலம் ஆஸ்ரயித்து வந்த மிராசுதார் கன்கசபாபதி செட்டியார் ஆனையூரில் உள்ள தன் மனையில் அடக்கம் செய்ய விரும்பினார். சௌராஷ்டிர பக்தர்களோ திருப்பரங்குன்றம் ரோடில் தற்போது விவேகானந்த ம்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.மற்றொரு சாரார் சின்னமணி ஐயர் என்பவரால் யதிகள் சமாதிக்காக விடப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர். இறுதியில் அனுமார் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் வந்த இடம் சின்னமணி ஐயரின் இடம். அது அரசரடியில் காளவாசல் சந்திப்பில் உள்ளது.

இன்றும் ஸ்வாமிகளின் அரசரடி அதிஷ்டானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அருள் பெற்று வருகின்றனர்.

அவர் சமாதியின் உள்ளே இருக்கிறார, அடுத்து வெளிக் கிளம்பி எங்கேனும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரா? யார் சொல்ல முடியும் அதை?!

முந்தைய சமாதிகளை ஊர்ஜிதம் செய்த சம்பவங்கள்

ஸ்வாமிகள் மதுரையில் தங்கியிருந்த வீடு ஒன்றில் த்ரிலிங்க ஸ்வாமிகள் படம் மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள், “அடே, என்னுடைய அந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? இங்கே தான் நம்மைக் குழந்தையாக்கி விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் அவரே த்ரிலிங்க ஸ்வாமிகள் என்பது அவர் வாயாலேயே நிரூபணம் ஆயிற்று.

 

தன்னிடம் இருந்த 300 பவுனை வைத்து ஸ்ரீசக்ரம் செய்ய தென்காசி சென்றார் குழந்தையானந்த ஸ்வாமிகள். அவரது பக்தரான சங்கரன் பிள்ளை வீட்டுக்கு சென்ற ஸ்வாமிகள் திடீரென்று உள்ளே சென்று அங்கிருந்த சமாதியில் அமர்ந்து விட்டார். என்னதான் பக்தராக இருந்தாலும் தன்  முன்னோர் சமாதியில், பரம்பரையாக பூஜித்து வரும் இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட சங்கரன் பிள்ளைக்கு ச்மாதானமாயில்லை. கேட்கவோ துணிவில்லை.

குழந்தையானந்தர் அவர்கள் உள்ளத்திலிருப்பதை அறிந்து கொண்டு, “என் இடத்தில் உட்கார யாரையடா கேட்கணும்” என்றார்.

பின்னர் சங்கரன் பிள்ளையின் வமிசத்தின் பலதலைமுறையினரின் விருத்தாந்தங்களை விளக்கினார். எல்லோரும் பிரமித்து வியந்து அவரைத் தொழுது வணங்கினர்.

ஆக த்ரிலிங்க ஸ்வாமிகள் மற்றும் நெல்லையப்பர் சமாதி தன்னுடையவையே என்பதை ஸ்வாமிகளே அருளிக் கூறியிருப்பதால் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இப்போது மதுரை அரசரடி அதிஷ்டானத்தில் அவரை வணங்கி அருள் பெறலாம்!

                                                           ******

(இந்தக் கட்டுரை எங்கள் குடும்ப நண்பரும் பிரபல பத்திரிகையாளருமான திரு கே.எஸ்.வி. ரமணி அவர்களால் ஆராய்ந்து எழுதி ஜூன் 1965ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்ரீ குழந்தையானந்த மஹாஸ்வாமிகள் திவ்ய சரிதம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது – கட்டுரையாளர்)

பெங்களூர் சீனிவாசன் உலகப் புகழ் பெற்றது எப்படி? (Post No.4180)

Written by London Swaminathan

 

Date: 2 September 2017

 

Time uploaded in London- 16-30

 

Post No. 4180

 

 

பெங்களூரில் 1917ஆம் ஆண்டில் நவம்பர் 13 தீபாவளித் திருநாள். ராமா சாஸ்திரி, வெங்கலெட்சுமி அம்மாளுக்கு தவப் புதல்வராக அவதரித்தார் ஸ்ரீனிவாசன்.  சிறு வயதில் நல்ல துணிசல் மிக்கவர். ஒரு அமாவாசை தினத்து மாலை வேளையில், இருள் சூழச் சூழ ஒரே பரபரப்பு.  இருள் சூழ்ந்த குளத்துக்கு பக்கத்தில் நின்ற சிறுவர்கள் குளத்தில் வசிக்கும் பேய்கள் பற்றி கிசுகி சுக்கத் துவங்கினர். பேய்கள் வாழும் குளத்துக்கு யார் தனியாகச் சென்று திரும்பி வர முடியும் என்று சவால் விட்ட வண்ணம் இருந்தனர். திடீரென ஒரு சிறுவன் விறு விறு என்று குளத்துக்கு நடந்தான்.கை, கால் கழுவி வந்தான். எல்லோரிடமும் காட்டினான். பேய்களும் இல்லை; அதைக் கண்டு பயப்படுபவனும் இல்லை என்ற செய்தி எல்லோருக்கும் கிடைத்தது. அவன் தான் ஸ்ரீனிவாசன்

 

குண்டு என்ற மாணவன் மகா சுட்டி. விஷமத் தனத்தின் உருவகம். விளையாடும் சிறுவர்களுக்கு இடையே சண்டைமூட்டி வேடிக்கை பார்ப்பவன். யாரும் அவனை அடக்கத் துணிவில்லை. ஒரு நாள் அவனைவிட ஒல்லியான ஒரு சிறுவன் குண்டுவுடன் மோதினான். குண்டுக்குத் திகைப்பு. எவ்வளவோ சமாளிக்க முயன்றும் முடியவில்லை. குண்டு மல்லாந்து விழவே அவன் மீது நின்றுகொண்டு ஒரு வெள்ளைத் தாளைக் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, அதில் இனி எந்தச் சிறுவர்க்கும் தொல்லை கொடுப்பதில்லை என்று எழுதி வாங்கினான். குண்டுவை வீழ்த்திய அவந்தான் ஸ்ரீனிவாசன்.

ராமா சாஸ்திரிகள் பெங்களூரில் ஒரு ஆரம்ப்பபள்ளி ஆசிரியர். சீனிவாசன் எட்டாம் வகுப்பு மாணவன். தனது மகன் சரியாகப் படிப்பதில்லை என்று எண்ணிய ராமா சாஸ்திரி பையனின் கையில் பிரம்பால் அடிக்கத் தொடங்கினார். அவன் ஒரு கையில் நிறைய அடி வாங்கி விட்டதால் அடுத்த கையை நீட்டினான். அதிலும் அடிக்கத் தொடங்கினார். அந்த வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்த வெங்கட்ரா மய்யர் என்னும் ஜோதிடர் ஓடி வந்து தடுத்து நிறுத்தி, கையைத் தடவிக் கொடுத்தார். வியப்பும் திகைப்பும் மேலிட்டது ஜோதிடருக்கு.

 

ராமா சாஸ்திரியிடம் சொன்னார்: நீங்கள் பெரும் பாக்கியசாலி. தலை சிறந்த யோகி இங் கே பிறந்துள்ளார். அடுத்த சங்கராச்சாரியாராக இவர் நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அப்போது நீங்களே உங்கள் மகன் காலில் விழ நேரிடும்.

வெங்கட்ரா மய்யர் சொன்னது உண்மயாயிற்று. சிருங்கேரி மடத்தின் 35ஆவது சங்கராச் சாசார்யாராக — அபிநவ வித்யா தீர்த்த மஹா சுவாமிகள் — என்ற பெயரில் பட்டம் ஏற்று 1989 வரை கொடி கட்டிப் பறந்தார்.

இது போன்ற பல நல்ல செய்திகளும் அவருடைய முக்கிய உபதேசங்களும் ஒரு சிறிய புத்தகத்தில் கிடைக்கிறது. சிருங்கேரி மடத்துக்குச் சென்றாலோ நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாங்கலாம்.

 

எங்கள் பாக்கியம்

சிருங்கேரி மஹாசந்நிதானம் ஒரு முறை மதுரைக்கு வந்தபோது, எங்கள் வீட்டிற்கு அழைத்து,  நாங்கள் பாத பூஜை செய்தோம். முடிவில் சஹோதர, சஹோதரியை தனித் தனியே அழைத்து பழம் கொடுத்து ஆசீர்வதித்தார

These pictures are the Rare Photographic Exhibition held at Madurai Setupati High School in August 2017.

—subham–

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 4 (Post No.4179)

Written by S.NAGARAJAN

 

Date: 2 September 2017

 

Time uploaded in London-5-44 am

 

Post No. 4179

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Pictures are representational only; no link to he article.

 

 

அறிவியல் துளிகள் ஏழாம் ஆண்டு 27வது கட்டுரை

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 4

 ச.நாகராஜன்

 

 

“இந்தப் புத்தகத்தில் இருப்பதை உங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவயவில்லை என்றால் நீங்கள் தத்துவம் பற்றிப் படிக்கவே வேண்டாம் – பேஸிலியஸ் வாலெண்டினஸ்

                              

           12 திறவுகோல்கள் (Twelve Keys) என்ற புத்தகத்தைப் புரிந்து கொண்டு அதன் படி செய்தால் ஈயம் தங்கமாக மாறும் என்று சத்தியம் செய்து கூறுகிறார் பேஸிலியஸ் வாலெண்டினஸ்.

 

     முதலில் எனது கொள்கை ரீதியான கருத்துக்களைப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை அது புரியாவிட்டாலும் கூட செய்முறையில் நான் கூறியதைச் செய்து பாருங்கள் என்கிறார் அவர்.

 

     “ஒரு மருத்துவர் எப்படி ஒருவரின் உடல் பாகங்களை நன்கு உணர்கிறாரோ அது போல தங்கத்தைப் பகுத்து அதன் மூலக்கூறுகளை நன்கு அறிந்து கொள்ளுங்கள். இப்படிச் செய்து தங்கம் தங்கமாக ஆகுமுன்னர் இருந்த நிலையை அடையுங்கள். அதன் விதை,நடு மற்றும் இறுதி நிலை பற்றி அறியுங்கள். அத்துடன் அதன் பெண் சக்தியையும் அறியுங்கள். – இப்படித் தன் விளக்கத்தை ஆரம்பிக்கிறார் அவர்.

 

       இதைப் படித்து ரஸவாதக் கல்லை அடையும் நீங்கள் பாக்கியவான்கள் என்ற ஆசீர்வாதத்துடன் தனது முதல் திறவுகோலை அவர் விளக்க ஆரம்பிக்கிறார்.

 

             எப்படி ஒரு மருத்துவர் முதலில் உடலின் உள் பாகங்களின் அழுக்கையெல்லாம் நீக்குகிறாரோ அதைப் போல எடுத்துக் கொள்ளும் உலோகத்தின் அழுக்கை நீக்குங்கள் என்பது அவரது முதல் அறிவுரை.

 

    தனது இரண்டாவது திறவுகோலில் அவர் தரும் உவமைகள் மிக்க சுவையானவை. ஒரு பெரிய மனிதரின் வீட்டில் பல விதமான பானங்கள் இருக்கும்.ஒவ்வொன்றுக்கும் ஒரு வித சுவை உண்டு.

 

ஒரு மணப்பெண் திருமணத்தின் போது தன் அழகுக்கு அழகூட்டும் விதமாக பல்வேறு ஆபரணங்களை அணிவாள். ஆனால் அவளது மண வாழ்க்கையின் முதல் இரவன்று எத வித ஆடை, அணிகலன் இன்றியே அவள் தன் வாழ்க்கையைத் துவங்குவாள்.

 

அது போலவே நமது தம்பதிகளான அபல்லோவும் டயானாவும் மிக பிரமாதமான ஆடைகளுடனேயே இருக்கின்றனர். அவர்களது தலையும் உடல்களும் வெவ்வேறு விதமான நீரால் கழுவப் படுகிறது. நமது மணமகனை வெவ்வேறு எதிரெதிரான நீரால் கழுவுவது முக்கியம்.

 

இங்கிருந்து சங்கேதமான வார்த்தைகளை பேஸிலியஸ் பயன்படுத்துகிறார்.

இதைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் தங்கமாக்கும் கலையை அறிவர்.

 

அடுத்த திறவுகோலில் கந்தக ஆவி பற்றியும் அதனுடன் சேர்க்க வேண்டிய பொருள்களைப் பற்றியும் விளக்குகிறார். அனைத்தும் சங்கேதச் சொற்களாலேயே தான்!

அடுத்த திறவுகோலில் அனைத்தையும் பாதுகாத்துப் பேணும் உப்பைப் பற்றி விளக்குகிறார்.

 

இவ்வாறு 12 திறவுகோல்களில் தங்கமாக மாற்றும் ரஸவாதக் கலையைச் சொல்லி தான் சொல்வது அனைத்தும் உண்மை, இதைப் பின்பற்றுவோர் ரஸவாதக்கல்லை நிச்சயம் அடைவர் என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

 

மிக்க பொறுமையுடன் பல்வேறு நூல்களைப் படித்து பல சோதனைகளை மேற் கொண்டால் பேஸிலியஸ் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆராய்ச்சியில் தான் இன்று பலரும் இறங்கியுள்ளனர்.

பிரின்ஸிப் 12 திறவுகோல்கள் நூலைப் படித்த பின்னர் அதில் தங்கம் ‘ஆவியான உருவில் (vapour form) உருவாகும் விதம் தரப்பட்டிருப்பதாகக் கருதினார்.

 

இதே போன்று ஆவியாக தங்கம் உருவாவது பற்றிக் கூறும் இதர ஆவனங்களை அவர் சேகரிக்க ஆரம்பித்தார். பாயிலின் ஆவணங்களைப் பார்த்த போது அதில் பிலாஸபர்ஸ் மெர்குரி அதாவது பாதரஸத்தின் ஒரு திரவ வடிவம் மிக மிக மெதுவாக தங்கத்தைக் கரைப்பது பற்றிக் கூறப்பட்டிருப்பதைப் படித்தார். இது தங்கத்தை உருவாக்குவதில் மிக முக்கியமான ஒரு படியாகும்.

 

நியூடன் பாயிலிடமிருந்து பிலாஸபர்ஸ் மெர்குரி பற்றி அறிய முயன்றார். ஆனால் பாயில் அதை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாகப் பாதுகாத்து வந்தார்.

 

நியூட்டனும் கூட தனது குறிப்புகளில் பல சங்கேத வார்த்தைகளையே பயன்படுத்தியுள்ளார். ரஸவாதம் பற்றி இதுவரை பிரசுரிக்கப்படாத நியூட்டனின் குறிப்புகள் பத்து லட்சம் வார்த்தைகளுக்கும் அதிகமாக உள்ளன என்பது விந்தையான ஒரு தகவல். அதில் அவர் க்ரீன் லயன் (green lion) நெப்டியூன் டிரைடெண்ட் (neptune trident)  என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இவற்றின் பொருள் என்னவென்று புரியவில்லை.

 

நியூட்டனை நன்கு புரிந்து கொள்ள பல சோதனைகளை நியூமேன் செய்ய வெண்டியிருந்தது. அதில் ஒரு சோதனையின் பெயர் டயானா மரம் (The Tree of Diana)  என்பதாகும்!

 

பழைய கால உலை, கருவிகள் ஆகையவற்றை இந்தியானா பல்கலைக் கழக இரசாயனப் பிரிவின் உதவியோடு உருவாக்கி பல சோதனைகளை அவர் செய்ய ஆரம்பித்தார்.

இந்த டயானா மர சோதனை பிரமிக்க வைக்கும் ஒன்றாகும்.

அதில் உலோகங்கள் மரம் போல ‘வளர்வதைப் பார்க்கலாம்!

 

       வெள்ளியையும் பாதரஸத்தையும் திடமாக இருக்கும் நிலையில் கலவையாக்கி, பின்னர் கரைக்கப்பட்ட வெள்ளி மற்றும் பாதரஸத்துடன் கூடிய நைட்ரிக் அமிலத்தில் மூழ்க வைத்தால் வெள்ளியின் சில துணுக்குகள் கிளைகள் போல உருவாகும் என்பதை நியூமேன் சோதனையில் தானே நேரில் கண்டறிந்தார்.

இன்று இரசாயனத்தில் இது ஒரு சாதாரண சோதனையாக ஆகி விட்டாலும் கூட நியூட்டன் காலத்தில் அவருக்கு உலோகம் வளர்க்கப்படக் கூடிய ஒன்றே என்பதை அறிய மிகவும் உதவியது.

நியூமேன் போலவே பிரின்ஸிப்பும் மிகப் பெரும் மேதைகளான நியூட்டன், பாயில், ஸ்டார்கி ஆகிய மூவர் கண்டறிந்த பிலாஸபர்ஸ் மெர்குரி என்பதை உருவாக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

இதற்கான செய்முறை மிக சிக்கலானது; நீண்டது.

பிரின்ஸிப் பிலாஸபிகல் மெர்குரியுடன் தங்கத்தைச் சேர்த்து அதை சீலிடப்பட்ட ஒரு முட்டை வடிவிலான கண்ணாடியில் வைத்து என்ன நடக்கிறது என்று பார்த்தார். என்ன ஆச்சரியம்! விசித்திரமான விஷயங்கள் ஆரம்பமாயின.

அந்தக் கலவை கொதிக்க ஆரம்பித்தது. பிறகு அது பசை போன்ற திரவமாக மாறியது. பல நாட்கள் கொதிக்க வைக்கப்பட்ட பின்னர் சுரங்கத்தில் தாங்கள் பார்த்ததாக பழைய காலத்தில் சுரங்கத் தொழிலாளிகள் சொன்னார்களே, அந்த விசித்திரத்தைப் பார்த்தார்.

ஆம், முட்டை வடிவிலான கண்னாடிக் குடுவையிலே தங்கமும் பாதரஸமும் (மரம் போல) வளர்ந்திருந்தன.

ஆனால் அந்த மரத்தில் அதிக அளவு தங்கம் உருவாகவில்லை. அவர் போட்ட தங்கத்தை விட புதிதாக உருவாகி இருந்த தங்கம் மிகக் குறைந்த அளவே தான் இருந்தது. என்றாலும் கூட மிகக் கடுமையான சோதனைச் சாலை கட்டுப்பாடுகளின் மூலமாக ஒரு திடமான உலோகம் மீண்டும் மீண்டும் சோதனை செய்யப்பட்ட நிலையில் கொப்பளித்து, நிறம் மாறி, ஒளி விடும் பொறிகளை உருவாக்கி வேறு ஒரு நிலையை அடையும் என்பதை உறுதியாகக் காண முடிந்தது

 

இது நியூமேனுக்கும், பிரின்ஸிப்புக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

(12 திறவுகோல்கள் புத்தகத்தில் உள்ள 12 படங்களைப் பார்க்க விரும்புவோர் கீழ்க்கண்ட இணையதளத்தில் பார்க்கலாம்: https://en.wikipedia.org/wiki/The_Twelve_Keys_of_Basil_Valentine  

புத்தகத்தை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் http://www.levity.com/alchemy/twelvkey.html உள்ளிட்ட பல தளங்களிலிருந்து புத்தகத்தைத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.)                                       (தங்க ரகசியம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

அமெரிக்காவில் பேரறிஞர் ஐன்ஸ்டீன் வாழ்ந்த காலத்தில்,

ஹாரி பாலட் க்ளாதியர்ஸ் (Harry Ballot Clothiers) என்பது பிரின்ஸ்டனில் நாஸா வீதியில் உள்ள ஒரு பெரிய ஆடை நிறுவனமாகப் புகழ் பெற்றிருந்தது. அங்கு நல்ல ஆடைகளை வாங்காதவர்களே இல்லை.

 

பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் தன் உடை விஷயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்துபவர் இல்லை. அவரது பழைய கோட் மிகவும் அழுக்காக இருந்தது.

 

அவரது உதவியாளராக இருந்த பெண்மணியான ஹெலன் ட்யூகாஸ் (Helen Dukas) அவரது அழுக்கு கோட்டை எப்படியாவது தூக்கி எறிய வேண்டும் என்று கங்கணம் பூண்டிருந்தார்.

ஆனால் ஐன்ஸ்டீனுக்கோ அதில் துளிக் கூட சம்மதம் இல்லை.

 

ஒரு போதும் அந்தக் கோட்டை தூக்கி எறியக் கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.

 

அதை டிரை க்ளீனரிடம் போட்டால் போதும் என்றார் அவர்.

அடுத்த நாள் ஹெலன் ஹாரி பாலட் கடைக்குச் சென்று அங்கிருந்த கடைக்காரரான வெண்ட் ராஃப் (Wendroff) என்பவரிடம் ஐன்ஸ்டீனின் கோட்டைக் காண்பித்து அதே போல ஒரு புது கோட் கிடைக்குமா என்று கேட்டார்.

புது கோட் கிடைத்தது.

 

அது புதிது என்பதற்கான சீட்டை அதிலிருந்து கிழித்து எறிந்து விட்டு அதை டிரை க்ளீனர் கொண்டு வரும் மூட்டையில் சேர்த்தார் ஹெலன்.

 

டிரை க்ளீனிங்கிலிருந்து வந்த கோட்டைப் பார்த்த ஐன்ஸ்டீன் ‘அட, நான் சொன்னது சரியாக இருக்கிறதே. டிரை க்ளீனிங் செய்யப்பட்ட கோட் எவ்வளவு ஜோராக இருக்கிறது! என்றார்.

 

      நடந்தது என்னவென்று யாருக்கும் தெரியாது. ஹெலனுக்கு மட்டுமே வெளிச்சம்!

****

 

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி (Post No.4178)

Written by London Swaminathan

 

Date: 1 September 2017

 

Time uploaded in London- 20-50

 

Post No. 4178

 

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி

எனது பழைய பள்ளிக்கு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 2017ல் சென்றேன். இதற்கு மு மதுரை சென்றபோதெல்லாம் இருள் சூழ்ந்திருக்கும் அல்லது நான் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்து கொண்டிருபேன்.இப்பொழுது சூரிய பகவான் ஒளிவீச, அதில் அப்பள்ளியில் பணியாற்றிய பாரதியின் சிலை புதுப் பொலிவுடன் மிளிர நல்ல புகைப் படங்கள் எடுத்தேன்.

வீர பாரதி! கம்பீர பாரதி!! எனது பள்ளியில் பாரதி!
இந்தப் படத்தைப் பயன்படுத்துவோர் படம் எடுத்தவர் லண்டன் சுவாமிநாதன் என்ற பெயரையும் சேர்த்தால் பாரதியின் பரிபூரண ஆசியைப் பெறுவர்

My brother Suryanarayanan adds

Santanam Suriyanarayanan 1966.sslc படித்த ஆண்டு.பாரதி பேச்சுபோட்டியில்first prize.இந்த சிலை திறப்புவிழா பசுமையாக நினைவில் உள்ளது.அந்த ஆண்டு ,பள்ளிவிழாவில் பாரதியின்,ரா.பி.சேதுப்பிள்ளை வசனம் பேசினேன்.பக்தவத்சலம் எங்களுக்கு பரிசளித்தாா்.thanks for reminding this

 

 

Santanam Suriyanarayanan சிலை திறப்பின்போது மிக அருகில் நின்றிருந்தேன்.thanks to teachers,especially திரு.வி.ஜி.சீனிவாசன்

 

 

ஏதோ ஒரு காரணத்தினால் நான் அன்று (1966) அப்பள்ளிக்குப் போகவில்லை. மதுரைக் கல்லூரியில் சேர்ந்த உற்சாகத்தில் பழைய பள்ளியை மறந்திருக்கலாம்

 

எப்படியாகிலும் எங்கள் தமிழ் குரு வி.ஜி.எஸ்,ஸை நினைவுகூற, இப்பொழுது, ஒரு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே.

முறுக்கு மீசையும் மொபைல் போனும் : எச்சரிக்கை

 

நான் படித்த, பாரதியார் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்குள் சென்றேன். சிருங்கேரி சங்கராசார்யாரின் அபூர்வ புகைப்படக் கண்காட்சியையும், எனது அருமை பாரதியார் சிலையையும் புகைப்படம் எடுப்பதற்கு முன்னர், ஒரு பெரிய போர்டு பளிச்செனத் தென்பட்டது. மொபைல் போன் பற்றி எச்சரிக்கை லண்டனிலுள்ள பள்ளிக் கூடங்களிலும் உள்ள து. ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மனின் முறுக்கு மீசைக்கும் தடை விதிக்கப்படதைப் பார்த்து ‘’சிரி சிரி’’ என்று சிரித்தேன். எங்கள் காலத்தில் யூனிfஆர்ம் (Uniform) கூடக் கிடையாது. இப்பொழுது எல்லோரும் சீருடையுடன் காணப்பட்டனர்.

MANAGEMENT STORIES (Post No.4177)

Compiled by S.NAGARAJAN

 

Date: 1 September 2017

 

Time uploaded in London-13-12

 

Post No. 4177

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

I  USED TO COLLECT MANAGEMENT STORIES FROM THE NET AND MANAGEMENT BOOKS.

Here are the two stories I could share regarding scheduling the work and team work

First things first means giving  due importannce to the important works. You have to put them in order according to the importance.

First Things First!

 

An exercise is known as ‘Stephen Covey’s Big Rocks’. Imagine a bucket. Put three or four big rocks in. “Is the bucket full? ” “No” you reply. “Of course not” I say and put some smaller rocks in it to fill in the gaps. “Full now? “, “No”. I put in some sand, then some water. It’s full.

 

So, what’s the learning here? It’s to do with the order. What would happen if you’d reversed the order? Put the water in first, then the sand, then the small rocks. There would be no room for the big rocks. These big rocks are the important things in your life. You need to schedule them first, not try to squeeze them in after arranging the water (writing pointless reports), sand (unnecessary travel) or small rocks (staff meetings where no-one listens and everyone looks at the clock).

What are the big rocks in your life? For many it’s things like family, time to watch the children grow up, time to write that novel, time for themselves, time to make a difference. You decide. You identify 3 or 4 things you believe are important. The 3 or 4 things that will make a difference at your funeral.

SourceReal Time Management by Byron Kalies

 

TEAM WORK COUNTS

A mother, who wanted to encourage her young son to continue playing the piano, bought tickets and took her son to a performance of the great pianist Ignace Paderewski.

They took their seats near the front of the concert hall the evening of the performance and eyed the majestic Steinway waiting on stage for the great pianist to begin.

Soon the mother found an old friend to talk to and didn’t notice that her boy had slipped away.

On the hour the lights in the hall began to dim and the spotlights came on. It was at that moment the little boy’s mother noticed him up on piano bench hammering out “Chopsticks.”

She was shocked and embarrassed, but it was too late to hurry up and get him as the Master of the night appeared on the stage and quickly moved to the keyboard where her little boy was focused in on his own masterpiece.

Paderewski gently whispered to the boy, “Don’t quit. Keep playing.” Leaning over, he reached down with his left hand and began filling in the bass part. Soon his right arm reached around the boy and improvised a delightful enhanced melody.

Together, the old master and the young beginning pianist mesmerized the audience with their blended and beautiful music.

Teams kind of work this way don’t they?

The novice to the expert on great teams work together to accomplish extraordinary things. There is little of what we do on teams that doesn’t require some type of help from someone. We can’t succeed without the help of others. Whether that is depending on someone to complete something for you, asking for a hand on something, asking a question, or simply working together – we need each other on teams!

***

செப்டம்பர் 2017 காலண்டர் (Post No.4176)

30 ஆழமான கருத்துடைய பழமொழிகள்

compiled by London Swaminathan

 

Date: 30 August 2017

 

Time uploaded in London- 16-59

 

Post No. 4176

 

4-ஓணம், 6-மாளயபட்சம் ஆரம்பம்,19-மஹாளய அமாவாசை,11 பாரதி நினைவு தினம்,

6-யஜூர் உபாகர்மா,21– நவராத்ரி ஆரம்பம் 28- சரஸ்வதி பூஜா, 30-விஜயதசமி,30- தசரா

பௌர்ணமி 6

சுபமுகூர்த்த நாட்கள்- 4, 8, 15

ஏகாதசி – 1 or 2, 16

 

 

செப்டம்பர் 1 வெள்ளிக்கிழமை

வைகறைத் துயில் எழு

 

செப்டம்பர் 2 சனிக்கிழமை

 

விஷத்துக்கு விஷம் மாற்று

செப்டம்பர் 3 ஞாயிற்றுக் கிழமை

 

ஆலும் வேலும் பல்லுல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

செப்டம்பர் 4 திங்கட் கிழமை

இலங்கணம் (பட்டினி கிடத்தல்) பரம ஔஷதம்

செப்டம்பர் 5 செவ்வாய்க்கிழமை

கண்கெட்ட பிறகா சூரிய நமஸ்காரம்?

செப்டம்பர் 6 புதன் கிழமை

பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்

ணாப் பெண்ணும் ஒரு உழக்கு உண்ணும்

செப்டம்பர் 7 வியாழக்கிழமை

ஈயான் தோட்டத்து வாழை இரண்டு குலை தள்ளும்

செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை

அகங் குளிர முகம் மலரும்

 

செப்டம்பர் 9 சனிக்கிழமை

சுத்தம் சோறு போடும்

 

செப்டம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை

அன்ன தானத்துக்குச் சரி, என்ன தானம் இருக்கிறது?

செப்டம்பர் 11 திங்கட் கிழமை

அன்றைக்குத் தின்கிற பலாக் காயை விட இன்றைக்குத் தின்கிற

களாக்காய் பெரிது

செப்டம்பர் 12 செவ்வாய்க்கிழமை

வாய் நல்லதானால் ஊர் நல்லது

செப்டம்பர் 13 புதன் கிழமை

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

 

செப்டம்பர் 14 வியாழக்கிழமை

 

ஊமைக்கு உளறுவாயன் சண்டப்பிரசண்டன்.

 

செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை

 

வைகுண்டத்துக்குப் போகிறவனுக்கு வழிகாட்டிக் கொடுக்க வேண்டுமா?

 

செப்டம்பர் 16 சனிக்கிழமை

பாலுக்குச் சீனி இல்லை என்பார்க்கும் கூழுக்கு உப்பு இல்லை என்பார்க்கும் விசாரம் ஒன்றே

 

செப்டம்பர் 17 ஞாயிற்றுக் கிழமை

 

ஓசிப் பொடி வாங்கி நாசியில் போட்டால், காசிக்குப் போனாலும் கருமம் தொ லையாது.

 

 

செப்டம்பர் 18 திங்கட் கிழமை

தன் ஊருக்கு ஆனை அயலூருக்குப் பூனை

 

செப்டம்பர் 19 செவ்வாய்க்கிழமை

 

ஈட்டி எட்டின மட்டும் குத்தும், பணம் பாதாளம் மட்டும் பாயும்

 

செப்டம்பர் 20 புதன் கிழமை

அலை மோதும்போதே தலை முழுகு; காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்

 

செப்டம்பர் 21 வியாழக்கிழமை

உட்கார்ந்தல்லவோ படுக்க வேண்டும்

 

செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை

அடியாத மாடு பணியாது

 

செப்டம்பர் 23 சனிக்கிழமை

பிச்சையிட்டுக் கெட்டவனும் இல்லை பிள்ளை பெற்றுக் கெட்டவளும் இல்லை

 

 

செப்டம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை

அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிரே

 

செப்டம்பர் 25 திங்கட் கிழமை

பனங்காட்டு நரி சலச்லப்புக்கு அஞ்சாது

 

செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை

 

கொல்லவரும் யானை மீது கல்லை விட்டு  எறியாதே

செப்டம்பர் 27 புதன் கிழமை

குரங்கின் கையில் கொள்ளி அகப்பட்ட கதை

 

 

செப்டம்பர் 28 வியாழக்கிழமை

கன்று கெட்டால் காணலாம் தாயருகே

செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை

 

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்

செப்டம்பர் 30 சனிக்கிழமை

கனவில் கண்ட கத்தரிக்காய் கறிக்காகுமா?

 

—-Subham–

 

பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்! (Post No.4175)

Written by S.NAGARAJAN

 

Date: 31 August 2017

 

Time uploaded in London-11-43 am

 

Post No. 4175

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

by ச.நாகராஜன்

 

 

அனுபவம் பேசுகிறது

பூர்வ குடியினரின் ஆத்திரமும் ஒரு விஞ்ஞானியின் திகைப்பும்!

 

ச.நாகராஜன்

 

லெப்டினண்ட் கர்னல் சிஷிர் கோகலே ராணுவத்தின் பாதுகாப்புத் துறையில் பல்லாண்டு பணியாற்றிய மூத்த டாக்டர். விஞ்ஞான மனப்பான்மை கொண்ட அவர் ஆதிவாசிகளின் “தாழ்ந்த” நிலைமையைக் கொண்டு வருத்தம் அடைந்தார்.

அவர்களை எப்படியேனும் “முன்னேற்ற” வேண்டும் என்று கங்கணம் பூண்ட அவர் தனது “நல்ல காரியத்தை” அந்தமான் தீவுகளில் ஆரம்பித்தார்.

 

நடந்தது என்ன?

 

அவரே தனது அனுபவத்தை ஒரு கட்டுரையில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

 

அந்தமானில் வாழ்ந்து வந்த பூர்வ குடிகளின் குடிசைகள் மிக மோசமாக இருந்தன.அவை மரத்தால் ஆனவை. ஓலைகள் வேயப்பட்டவை. திடீர் திடீர் என்று பெய்யும் கனமழையாலும் வெயிலாலும் பழங்கால முறையிலான கற்களை அடுப்பாக வைத்து விறகை வைத்து சமைக்கும் முறையினாலும் குடிசைகள் பார்க்கச் சகிக்க முடியாதவையாக் இருந்தன.

அதனால் அங்கு வாழ்பவரின் கண்கள் சிவந்திருந்தன; சுவாசக் கோளாறுகள் வேறு இருந்தன.

 

இதை எப்படிப் போக்குவது?

 

தீவிர சிந்தனைக்குப் பிறகு  புகையற்ற ஸ்டவ்களை அங்கு சில குடிசைகளில் நிரமாணித்தார் கோகலே. அவர்கள் இருமுவது குறைந்தது. சமைக்கும் போது புகையினால் கண்களிலிருந்து பெருகும் நீர் குறைந்தது. பார்க்க சந்தோஷமான காட்சி. கோகலே மகிழ்ந்தார்.

 

இதைப் பார்த்த பூர்வ குடியினரில் ஏனையோரும் இந்தப் புதிய முறையை விரும்பி ஏற்றுக் கொண்டனர்.

 

ஒரு வருடம் கழிந்தது.

 

தாங்கள் நிறுவி ‘புது வழி’ காட்டியதால் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு மிகிழ அங்கு சென்றார் கோகலே.

 

சந்தோஷமான முகங்களைக் காணப் போகிறோம் என்று சென்ற அவரது குழுவினருக்கு ஒரு திகைப்பூட்டுக் காட்சி காத்திருந்தது.

அங்கு கிராமத்தையே காணோம்.

 

திகைப்படைந்த அவர்கள் பூர்வ குடியினரைத் தேடி காட்டின் உட்பகுதிக்குச் சென்றனர்.

அங்கே புதிதாக அமைக்கப்பட்ட குடிசைகளில் அவர்கள் இருந்தனர்.

அவர்கள் அனைவரும் கோபத்துடன் கோகலே குழுவினரைச் சூழ்ந்து கொண்டனர்.

 

 

கோபமான குரலில், “ நீங்கள் எங்களுக்குப் பெரும் தீங்கு இழைத்து விட்டீர்கள். எங்கள் முன்னோர் எங்களுக்கு வலுவான வீடுகளை அமைத்துக் கொடுத்திருந்தனர். தலைமுறை தலைமுறையாக் அதில் வாழ்ந்து வந்தோம். அவற்றை ஒரே ஆண்டில் அழிக்க வகை செய்து விட்டீர்களே! உடனே இங்கிருந்து ஓடிப் போய் விடுங்கள்” என்று அவர்கள் கத்தினர்.

அனைவரும் திகைத்தனர்.

திகைப்புடன் திரும்பினாலும் அவர்களிடம் இருந்த விஞ்ஞான மனப்பான்மை அவர்களை பழைய குடிசைகளை நோக்கிப் போக வைத்தது.

 

அந்தக் குடிசைகளில் இருந்த மரங்கள் கறையானால் அரிக்கப்பட்டு உளுத்துப் போயிருந்தன. கூரை விட்டங்கள் வளைந்திருந்தன.பலவித பூச்சிகள் கட்டைகளையும் குடிசைப் பகுதிகளையும் விதம் விதமாக் ஆக்கிரமித்திருந்தன.

வாழவே முடியாத ஒரு கோரம்!

 

கொசுக்களும் பூச்சிகளும் குழுவினரைச் சூழ்ந்து கடிக்க உள்ளே அவர்கள் பார்த்த போது அவர்கள் தந்த புகையில்லா ஸ்டவ் மட்டும் அலங்காரமாக அப்படியே இருந்தது!

திகைப்பும் வியப்பும் ஆட்கொள்ள அவர்கள் தங்கள் கூடாரத்திற்குத் திரும்பினர்.

 

அப்போது வழியிலே அவர்களைப் பார்த்த பழங்குடியினரில் வயதான ஒருவர்,’என்ன கவலையுடன் இருக்கிறீர்களே! என்ன விஷயம்?” என்று கனிவாகக் கேட்டார்.

நடந்ததை எல்லாம் அவரிடம் சொல்ல அவர் உன்னிப்பாக அனைத்தையும் கேட்டார்.

 

 

“இன்று களைப்புடன் இருக்கிறீர்கள். மன உளைச்சல் வேறு.

ஆகவே நாளை உங்களுடன் நானும் வருகிறேன். அவர்களைப் பார்ப்போம்” என்றார் அவர்.

 

கோகலே குழுவினரைப் போல ஏராளமான “குழுவினரை”ப் பார்த்து விட்ட அனுபவம் அவர் முகத்தில் தெரிந்தது.

மறுநாள் அவரும் கூட வந்தார்.

பழைய குடிசைகளில் சிதிலமடைந்து கிடந்த கட்டைகள், சில பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றை ஆய்வுக்காக சேர்த்தது விஞ்ஞானக் குழு.

 

“அவர்களுக்கு உதவவே முன் வந்தோம். அவர்களோ எங்களைத் தீய ஆவிகளைக் கொண்டு வந்து விட்டு விட்டோம் என்கிறார்கள். நீங்களும் ஒரு பழங்குடியினர் தானே. நாங்கள் தீய ஆவிகளையா இங்கு விட்டோம், சொல்லுங்கள்” என்று கேட்டார் கோகலே.

“இல்லை, நீங்கள் தீய ஆவிகளை இங்கு விடவில்லை” என்றார் அந்தப் பெரியவர்.

 

 

அவர் சொற்கள் சற்று ஆறுதல் அளித்தன.

“ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கிருந்த நல்ல ஆவிகளை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று விட்டீர்கள்’ என்று தொடர்ந்து கூறினார் அவர்.

 

 

இதைக் கேட்ட குழுவினர் திகைத்தனர்.

 

அவர் தொடர்ந்தார்: “ தீ மூட்டி சமைப்பது புனிதமானது. அது நல்ல ஆவிகளையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. புகையும் சாம்பலும் குடிசை நீடித்திருக்க நமது உடலுக்கு உணவு போல அவசியமானது. புகையும் வெப்பமும் பூச்சிகள், கரையான் போன்ற தீய ஆவிகளை ஒண்ட விடாது. அந்த புகை என்ற நல்ல ஆவியை விரட்டி விட்டு கரையான் என்ற தீய ஆவிகளைத் தந்ததால் தான் அவர்கள் உங்கள் மீது கோபப் படுகிறார்கள்.இந்தக் குடிசைகளுக்குப் விறகு வைத்து கல்லினால் ஆன அடுப்பில் சமைப்பதே சிறந்த பாதுகாப்பு!”

 

 

படிப்பறிவே இல்லாத சாமானிய பூர்வீக பழங்குடிப் பெரியவரின் வார்த்தைகள் அவர்களை பிரமிக்க வைத்தன.

சிறிய வார்த்தைகள் மூலம் அரிய உண்மையை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

 

அந்தக் கணம் முதல் படிப்பறிவில்லாதவன், பழங்குடி என்றெல்லாம் சொல்லி அவர்களை கேலி செய்யக் கூடாது அவர்களின் அறிவுக்கும் அனுபவத்திற்கும் முன்னால் விஞ்ஞான மனப்பான்மை கூட பல சமயம் தோற்று விடும் என்பதை கோகலே உணர்ந்து கொண்டார்.

 

 

இந்த அனுபவத்தை ஒரு கட்டுரை வாயிலாக அவர் தெரிவித்து “விஞ்ஞானம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மட்டும் தானா கற்பிக்கப்படுகிறது? அறியப்படுகிறது?” என்ற கேள்வியையும் கட்டுரையின் முடிவில் எழுப்புகிறார்!

உண்மை தான்!

 

அறிய வேண்டிய நல்ல விஷயங்கள் எல்லா இடங்களிலுமே இருக்கின்றன.

 

பூர்வ குடியினரிடமும் கூட!

****