My Visit to Art Gallery in Sydney (Post No.14,236)

Written by London Swaminathan

Post No. 14,236

Date uploaded in Sydney, Australia – 23 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I went to the New South Wales Art Gallery in Sydney yesterday 22-2-2025. I spent two hours in both the wings of the art gallery. They are called NAALA BADU and NAALA NURA in aboriginal languages.

Naala Badu is an Aboriginal name that means “seeing waters” Naala Nura, which means “seeing Country”

There about 40,000 paintings and art objects. I have visited all the art galleries in London where I have been living from 1987. But the Sydney galleries are unique in showcasing aboriginal paintings and modern Australian paintings. The newly constructed buildings were opened a few year ago. The National Art Gallery in the capital city Canberra has original paintings of the aborigines. But Sydney gallery has commissioned works from living aborigines.

The attractions in Sydney include Asian paintings of Hindu Gods and Buddhist deities.  The paintings on women’s struggle for freedom are also good.

Art gallery is accessible from stations like Martin Place and St James in Sydney..

From the Art Gallery, one can walk through the Royal Botanical Gardens and reach other places such as Sydney Opera House and the harbour.

I saw at least three Ganesh paintings and sculpture from Indonesia.

The building named Nala badu has Yiribana gallery with aboriginal paintings. The were not ancient, but commissioned and painted by aboriginal artists.

The building named Naala Nura has very old and modern paintings. Asian paintings are exhibited there.

I liked painting on Greek Philosopher Diogenes and paintings on aborigines by the English migrants.

It isa  must for art lovers and students 

As soon as one enters the building one can take a map and go through the exhibits. The website also shows digitised pictures of paintings.

The entry is free; but occasional special exhibitions are ticketed events.

Following are the details:

Sydney’s must-see museum, where art, architecture and landscape connect. Art for all.

Art Gallery Road

The Domain

Sydney NSW 2000

Australia

Free general entry  Open daily 10am–5pm
Until 10pm Wednesdays.

Collections

all works (37,115) artists with profiles (248) highlights (100).

london swaminathan in front of art gallery in Sydney, Australia

Australian art (22,420)

The Australian collection of the Art Gallery of New South Wales connects Aboriginal and Torres Strait Islander art – from the oldest continuous cultures in the world – with stories told by a legion of Australian artists from the early 19th century to the present. These works of art come together to form an Australian collection that is among the finest and most representative in the country.

Works by Australian artists help reframe our history and its global connections, its deep past and its complex manifold futures. Highlights from the collection include 19th-century shields and ink drawings by Indigenous artists that reveal the impact of colonisation, as well as iconic visions of that same contested landscape that helped define a longstanding image of Australia. It also features 20th-century exemplars of the development of modernism in Australia and their echoes in contemporary art practices from around the country. In an art museum conceived for Australian artists, we recognise Australian art as having always been international, reflecting our more than 150-year history of being outward-looking and cosmopolitan.

International art (13,145)

From its home in Sydney, on Gadigal Country, the international collection of the Art Gallery of New South Wales connects multiple global histories, art periods, styles, meanings and inspirations.

Founded on a significant collection of British Victorian art and an early gift of ceramics and bronzes from Japan, the international collection has since expanded to include fine examples from 15th-century European Renaissance art; ceramics from across the centuries; an outstanding photography collection; works by avant-garde modernists; exceptional works by late 20th-century American and European artists, and contemporary art from across the globe.

We are a leading centre for Asian art, with a collection that takes visitors on a journey through arts and cultures stretching from Indonesia to Mongolia, Japan to Iran. And we especially recognise our place within the Pacific region, through a rich and diverse collection of works by our neighbours across the Great Ocean.

As new channels of global communication increasingly transcend national boundaries, the international collection grows in response to an ever more fluid and interconnected world.

Gallery’s website has digitised pictures.

–subham—

Tags–New South Wales, art gallery, Sydney, aborigins, paintings, london swaminathan, my visit

கங்கை நீர் பற்றிய புதிய ஆராய்ச்சியில் வெளியான அதிசயத் தகவல்! (Post.14,235)

Written by London Swaminathan

Post No. 14,235

Date uploaded in Sydney, Australia – 23 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

உலகிலேயே புனிதமான நதி கங்கை நதி என்பதால் உலகம் எங்கும் ஆதிவாசிகளும் பழங்குடி மக்களும் எல்லா நதிகளையும் கங்கை என்று அழைத்தனர். ஆப்பிரிக்காவின் அதி  பயங்கரக் காடுகளுக்கு இடையே பிக்மி என்னும் குள்ளர்கள் வாழும் காங்கோ நாட்டில் ஓடும் நதிக்கும் கங்கோ என்று பெயர். தென் கிழக்காசியாவில் பல நாடுகளை வளப்படுத்தும் மா கங்கா (மீ காங்) என்ற நதியும் இலங்கையில் ஓடும் பல நதிகளும் கங்கை என்றே அழைக்கப்படுகின்றன.

நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாது என்ற காரணத்தினால் கல்கத்தா துறைமுகத்திலிருந்து பிரிட்டனுக்குச் சென்ற கப்பல்கள் கங்கை நீரை ஏற்றிச் சென்று குடித்ததையும், பிரிட்டனுக்குச் சென்ற இந்திய மஹாராஜா பெரிய அண்டாவில் கங்கை நீரை கப்பலிலேற்றிச் சென்ரதையும் நாம் அறிவோம்..

இப்போது அறுபது கோடிபேர் கும்பமேளாவில் குளித்த பின்னரும் அதன் தூய்மை கெடாதது ஏன் என்று பிரபல விஞ்ஞானி அஜய் சோ ன்கர் Padma Shri scientist Dr Ajay Kumar Sonkar   விளக்கம் அளித்துள்ளார் . அவர் புற்று நோய் மற்றும் மரபியல் ஆராய்ச்சியில் வல்லவர். பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் .

கங்கை நீரில் ஆயிரத்து நூறு வகையான பாக்டீரியோபேஜஸ் வசிக்கின்றன. அவை அந்த நதி நீரின் பாதுகாவலர்கள் போல செயல்படுகின்றன என்றும் இதனால் பாக்டீரியாக்கள் வசிக்க முடியாத நீர், புனித கங்கை நீர் என்று அவர் விளக்குகிறார்

பாக்டீரியோ பேஜஸ் என்றால் என்ன?

இவை வைரஸ் வகையைச் சேர்ந்தவை. பாக்டீரியாவுக்குள் புகுந்து அவைகளை அழித்துவிடும் . இந்த வகை வைரஸ்களின் 1100 வகை கங்கை ஜலத்தில் உள்ளது .  வேறு எந்த நதியிலும் இல்லாத ஒரு அதிசயம் இது  அந்த வைரஸ்கள் அவற்றின் எண்ணிக்கையைப் போல ஐம்பது மடங்கு கிருமிகளை அழிக்கும் அபூர்வ சக்தி படைத்தவை. பாக்டீரியாவுக்கள் புகுந்து அவற்றின் மரபணுவையே மாற்றிவிடும் வல்லமை படைத்தவை

A bacteriophage is a type of virus that infects bacteria. In fact, the word “bacteriophage” literally means “bacteria eater,” because bacteriophages destroy their host cells. All bacteriophages are composed of a nucleic acid molecule that is surrounded by a protein structure.  They are known

‘security guard,’ of the river; these bacteriophages instantly purify the river.

பாக்டீரியோ பேஜஸ் பாக்டீரியாவைவிட ஐம்பது மடங்கு சிறியவை; இவை நல்ல பாக்டீரியாக்களை அழிக்காமல் கெட்டவற்றை மட்டும் அழிக்கின்றன. ஒவ்வொன்றும் 100 முதல் 300 வரை பெருகுகின்றன  இவை கடல் நீரிலும் வசிக்கின்றன. அதனால்தான் கடல் நீரும் அசுத்தம் அடையாமல் இருக்கிறது என்று சோன்கர் சொல்கிறார்

அஜய் சோன்கர் காலஞ்சென்ற ஜனாதிபதி அப்துல் கலாமால் பாராட்டப்பெற்றவர். செல் பயாலஜி எனப்படும் உடல் செல்கள் ஆராய்ச்சி ,ஜெனெடிக் கோட்  என்னும் மரபியல் ஆராய்ச்சியில் முன்னணியில் நிற்கும் விஞ்ஞானி. அவர் நோபல் பரிசை வென்ற ஜப்பானியருடன் பணியாற்றியவர்

கங்கை நீர் புனிதம் பற்றி பல அரசியல் கட்சிகள் தவறான தகவலைப் பரப்பி வரும் தருணத்தில் இவர் வெளியிட்ட ஆராய்சசி அறிக்கை , கெடு மதி படைத்தோரின் சவப்பெட்டியில் ஆணி அடித்துவிட்டது.

—subham—

Tags- கங்கை நீர், புதிய ஆராய்ச்சி, அதிசயத் தகவல்,

Hindu Crossword23225 (Post No.14,234)

Written by London Swaminathan

Post No. 14,234

Date uploaded in Sydney, Australia – 23 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 1 2 3  
      4
5      
      6← 
  7←     
       
 8     

Across

1.Carrying a pole on the shoulder with hanging baskets or water pots on either end.

5.Flute; Lord Krishna’s name is associated with this word.

6.English word NAME is derived from this Sanskrit word←

7. [Sanskrit adverb] even, indeed, also, just, always, at every time; [with] neg. not even ←

8. Girl’s name; meaning–1) Taken away, removed.2) Well trained, educated, disciplined.3) Refined, well-behaved.4) Modest, humble, meek, gentle.

Down

1. Carrying a pole on the shoulder with hanging baskets ; but Lord Skanda devotees carry a semi circular decorated thing made up of cloth or sticks. Peacock feathers are inserted on it.

2. In the Vedas, he is a demon associated with Vritra who is slain by Indra with foam. The story is told in the Rigveda, the Shatapatha Brahmana, and the Mahabharata

3.Non Violence advocated by Gandhiji; it is the important tenet of Jainism

4.English word BOND is derived from this. Same meaning Binding.

K 1AN2WA3R 
A A H B4
V5AMSI A
A U MAN6← 
DIC7←  S D
I H A H
 V8INITA

–subham—

Tags- Hindu Crossword23225

வியக்க வைக்கும் டிடிகாகா ஏரி! (Post No.14,233)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,233

Date uploaded in Sydney, Australia – –23 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

18-2-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

வியக்க வைக்கும் டிடிகாகா ஏரி!

(TITICACA LAKE)

ச.நாகராஜன்

தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள பொலிவியாவிற்கும் பெரு நாட்டிற்கும் இடையே உள்ள எல்லையில் ஆண்டஸ் மலையின் மேலே 3200 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது டிடிகாகா ஏரி. (TITICACA LAKE)

பழம் பெரும் இங்கா நாகரிகம் தோன்றிய இடம் டிடிகாகா என்ற இடம் தான் என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

சூரிய பகவான் தனது குழந்தைகளை எங்கு ஒரு தங்கத்தினால் ஆன தடி பூமியில் ஊடுருவி இருக்கிறதோ அந்த இடத்திற்குச் சென்று வசிக்குமாறு கூற அவர்களும் அப்படியே வந்து டிடிகாகா பகுதியில் அதைக் கண்டனர். அங்கேயே வசிக்கலாயினர். புது நாகரிகம் உருவாயிற்று. இது தான் டிடிகாகா பற்றிய பழம் வரலாறு.

ஆண்டஸ் மலையில் 12500 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த ஏரி உலகத்திலேயே உயரமான இடத்தில் உள்ள ஏரிகளுள் ஒன்று என்ற பெருமையைப் பெறுகிறது. 177 கிலோமீட்டர் அகலம் கொண்டிருப்பதால் உலகின் மிக அகலமான ஏரி என்ற பெருமையும் இதற்கு உண்டு.

1862ம் ஆண்டு இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்ட யாருவி என்ற நீராவிக் கப்பலே முதன் முதலாக இதில் செலுத்தப்பட்ட கப்பலாகும்.

இதன் அதிக ஆழம் 922 அடி. சராசரி ஆழம் 351 அடி.

பத்தாயிரம் வருடங்களுக்கு முன் இதன் கரையோரப் பகுதி இன்னும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டிசம்பர் முதல் மார்ச் வரை மழைக்காலம் என்பதால் ஏரியின் மட்டம் 16 அடி வரை உயரும்! இந்த ஏரியின் பெரும்பகுதி நீர் மழையினாலேயே பெறப்படுகிறது. மீதி நீர் பல்வேறு நதிகளாலும் நீரோடைகளாலும் கொண்டு வரப்படுகிறது.

டிடிகாகா ஏரி உள்ள இடத்தின் உஷ்ணநிலை 11 டிகிரி சென்டிகிரேட். எவ்வளவு குளிரான ஏரி இது என்பதை ஊகித்துக் கொள்ளலாம். ஆகவே இந்தக் குளிர் பிரதேசத்தில் அவ்வளவாக மலர்க்கொடிகளும் செடிகளும் இல்லை.

மீன்களின் வகையும் இந்த ஏரியில் குறைவு தான்!

இதன் அடியில் ஆய்வு செய்யச் சென்ற ஆய்வாளர்கள் இரண்டு அடி நீளமுள்ள ஏராளமான தவளைகளைக் கண்டு அதிசயித்தனர். தன் தோல் பகுதி மூலம் இவை சுவாசிப்பவை என்பதால் இவை ஏரியின் மேல்பகுதிக்கு வருவதே இல்லை. அரிதாகவே காற்றை சுவாசிக்க வரும்.

இந்தப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் நாணலினால் (REED) ஆன படகுகள் மூலமாகவே பயணத்தை மேற்கொள்வது வழக்கம். பழைய கால தோணிகள் போல் வடிவமைப்பைக் கொண்ட இந்த நாணல் படகுகள் பழைய கால எகிப்திய நாகரிகத்தை நினைவு படுத்துகிறது.

ஆகவே, தோர் ஹையர்தால் என்ற நார்வே நாட்டு ஆய்வாளர், இந்த நாகரிகம் எகிப்திலிருந்தே இங்கு பரவி இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்.

நாணலை வைத்து எப்படிப் படகுகள் செய்ய முடியும் என்று திகைப்பவர்கள் ஆறரை அடி கனமுள்ள நாணல்கற்றைகளால் அமைக்கப்படும் படகைப் பார்த்தால் பிரமித்துப் போவர். நகரும் தீவுகள் போல இவை செயல்பட்டு அங்குள்ளவர்களின் வாழ்வாதாரங்களைப் பெற வழி வகுக்கின்றன.

இங்குள்ள நகரும் தீவுகள் யூரோஸ் (UROS) என்று கூறப்படுகின்றன.

இதில் என்ன அதிசயம் என்றால் இந்த நகரும் தீவுகளுக்குள்ளேயே பள்ளிக்கூடம், சர்ச் மற்றும் வீடுகள் உள்ளன. இதில் மணலைப் பரப்பி செடிகளை நட்டு பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

பல்லாண்டுகளாக இப்படி இந்த மக்கள் வாழ்ந்து வருவது உலகின் மிகப் பெரிய அதிசயமாகக் கருதப்படுகிறது!

பிரமிக்க வைக்கும் டிடிகாகா, வேறு உவமையே கூறமுடியாத  டிடிகாகா தான்!

***

சிட்னி ஆர்ட் காலரிக்கு விஜயம்- 28 (Post.14,232)

Written by London Swaminathan

Post No. 14,232

Date uploaded in Sydney, Australia – 22 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Buddhist Demon

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 28

சிட்னி ஆர்ட் காலரிக்கு விஜயம்

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 28

லண்டனில் நேஷனல் ஆர்ட் காலரி, போட்ரைட் ர் காலரி, டேட் காலரி என்று பல இடங்களில் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது போல சிட்னி மாநகரில் வைத்துள்ளார்கள்; அனுமதி இலவசம். நான் மார்ட்டின் பிளஸ் ஸ்டேஷனிலிருந்து தாவரவியல் பூங்கா வழியாக நடந்து சென்றேன்.  இன்று 22-2-2025  அன்று கால் வலியையும் பொருட்படுத்தாமல் ஆர்ட் கலரியின் இரண்டு பிரிவுகளையும் பார்த்துவிட்டு தாவரவியல் பூங்கா வழியாக நடந்து வந்தேன். ஆக ஓரே நாளில் இரண்டு தரிசனங்கள்.

இதை நியூசவுத் வேல்ஸ் ஆர்ட்  காலரி என்று அழைக்கிறார்கள் . இதில் நால பாடு,  நால நூரா என்று இரண்டு பிரிவுகள்.

நாலா பாடு என்றால் தண்ணீரைப் பார்த்தல் என்றும் நால நூறா என்றால் நிலப்பரப்பைக் காணுதல் என்றும் பொருள்.

Naala Badu is an Aboriginal name that means “seeing waters” Naala Nura, which means “seeing Country”

சுமார் 45,000  ஓவியங்கள், கலைப்பொருட்கள் இருக்கின்றன.

ஆசிய ஓவியப்பிரிவில் கிருஷ்ணர், கணபதி ஓவியங்களும், நிறைய புத்த சமய ஓவியங்களும் உள்ளன. எரிமலைப் பாறையில் செய்த கணபதியை ஒருவர் மியூசியத்துக்கு நன்கொடையாக அளித்துள்ளார்  (ஒருவேளை இந்தோனேஷியாவிலிருந்து வந்திருக்கலாம். அதுபோன்ற எரிமலைப்பாறை அகஸ்தியர் சிலை லண்டனில் விக்ட்டோரியா ஆல்பர்ட் மியூஸியத்தில் இருக்கிறது).

உலகின் பல பகுதிகளில் இது போல ஓவிய மியூசியங்கள் இருந்தாலும் ஆஸ்திரேலிய ஆதிவாசி மக்களின் ஓவியங்களையும் அவர்களை பற்றி வெள்ளைக்காரர்கள் வரைந்த ஓவியங்களையும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணலாம் . இதைவிட பெரிய ஓவிய மியூசியம் தலைநகர் கான்பெர்ராவில் உள்ளது.

பல ஓவியங்களை டிஜிடைஸ் செய்தும் போட்டிருக்கிறார்கள் ; அவைகளை வெப்சைட்டில் பார்க்கலாம் .

இவை எல்லாம் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்களில் சமீபத்தில்தான் காட்சிக்கு வைக்கப்பட்டன.

நிரந்தரக் காட்சிகளைத் தவிர அவ்வப்போது சிறப்புக் காட்சிகளை       யும் ஏற்பாடு செய்கிறார்கள்.

–subham—

Tags–சிட்னி ஆர்ட் காலரி, விஜயம் ,

GNANAMAYAM 23-2-2025 BROADCAST PROGRAMME

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

23-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan speaks on Tamil Poet Villippuththurar

***

Mrs. Brahannayaki Sathyanarayan speaks on  Pandharpur Temple

***

SPECIAL TALK BY SINGAPORE DR RAJI SRINIVASAN

Kalyanji  anchoring from India.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு  பண்டரிபுரம் ஆலயம்

. ***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு – வில்லிப்புத்தூரார்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

சிறப்புச் சொற்பொழிவு சிங்கப்பூர் டாக்டர் ராஜி சீனிவாசன்

***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

tags–  GNANAMAYAM ,23-2-2025 BROADCAST,  PROGRAMME

ஆஹா ஏஐ AI! ஐயையோ ஏஐ AI !! (Post No14,230)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,230

Date uploaded in Sydney, Australia – –22 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

16-2-25 கல்கிஆன்லைன் -இல் பிரசுரமாகியுள்ள கட்டுரை 

ஆஹா ஏஐ AI!

  ஐயையோ ஏஐ AI !!

ச. நாகராஜன் 

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி நாளுக்கு நாள் நூற்றுக் கணக்கான கட்டுரைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

நோபல் பரிசு பெற்ற மேதைகள் உட்பட பலரும் ஐயையோ ஏஐ என்று பயப்படக் காரணம் உண்டுங்க!

சுற்றுப்புறச் சூழலுக்காக நீங்கள் கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று AI CHATBOT சொல்ல ஒரு நல்ல மனிதன் தற்கொலையே செய்து கொண்டான்..

DEEPFAKE பெண்களுக்கு மிக ஆபத்தானது என்று விவரிக்கும் பெண்கள் அது முகங்களை FAKE செய்யும் என்றும் அதைக் கண்டுபிடிப்பது கஷ்டம் என்றும் கூறுகின்றனர். சில நாடுகளே சட்டபூர்வமான நடவடிக்கைக்கு ஆயத்தம் செய்கின்றன என்று கூறும் இந்தப் பெண்கள் ஆபாசமான போர்ன் வீடியோக்கள் உலவ ஆரம்பித்து விட்டன என்கின்றனர்.

படைப்பாளிகளோ – இசை அமைப்பாளர்களாகட்டும், பாடகர்களாகட்டும் – தங்கள் படைப்புகளையும் குரலையும் செயற்கை நுண்ணறிவு காப்பி அடிப்பதைக் கண்டு அதிர்ந்து போயிருக்கின்றனர்.

சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம் என்றால் எந்தக் காலத்தில் கேஸ் முடியும்? எவ்வளவு செலவாகும்?

DEEPFAKE உண்மையைத் திரித்து வெளியிடும். இது உலகிற்கே ஆபத்தாக முடியும்.

மக்கள் குழப்பமடைவர். முக்கியமானவற்றை சுலபமாக நழுவ விடுவர். முக்கியமல்லாதவற்றை எடுத்துக் கொண்டு போராட்டத்தில் இறங்குவர்.

படைப்பாற்றல் கொண்டவர்களை இமிடேட் செய்து அவர்களைத் தவிக்கவிடும் AI.

மனிதர்களுக்குத் தேவையானவற்றை எதிர்த்து புது லட்சியங்களை AI உருவாக்கிவிடும்.

தீர்ப்பைத் தருகிறேன் என்று AI தவறான தீர்ப்புகளை அளிக்க ஆரம்பித்தால் மனித குலமே  அவ்வளவு தான்!

AIக்கு ஆதரவு தருவோர் அது மகாத்மா காந்திஐன்ஸ்டீன் போன்றோரை உருவாக்கும் என்கின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அதே AI ஒரு ஹிட்லரையோஒரு ஸ்டாலினையோ ஒரு மாசேதுங்கையோ உருவாக்கி விட்டால் ஒட்டு மொத்த மனித குலமே போய்விடுமே என்கின்றனர்!

AIக்கு ஒழுக்கம் அறவுணர்வு MORAL – என்பதே கிடையாது.

டிராக்கில் கட்டுப்பாட்டை இழந்து ஓடும் ஒரு டிராலி அதே பாதையில் சென்றால் ஐந்து பேரைக் கொன்று விடும். அந்த ஆபத்தைப் பார்த்து அதை வேறு டிராக்கில் செலுத்தினால் ஒருவன் மட்டுமே கொல்லப்படுவான். என்ன செய்வது?

அற உணர்வின் படி ஒருவன் சாவது சரி, டிராக்கை மாற்றலாம் என்று சொல்லும் போது AI தனக்குக் கொடுத்த கட்டளையின் படி அதே டிராக்கில் தான் டிராலி போக வேண்டும் என்று முடிவு எடுத்தால், ஆறு பேரும் கொல்லப்படுவர்.

இப்படி ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன.

AI எவ்வளவு உதவி செய்கிறது தெரியுமா? இந்திய போலீஸ் பத்தாயிரம் குற்றவாளிகளை ஃபேஸ் ரிகாக்னிஷனைப் பயன்படுத்திப் பிடித்திருக்கிறது என்று ஆஹா AIகாரர்கள் வாதிக்கின்றனர்.

அடடா, 50 குறிப்புகளைக் கொடுத்தால் அது 1000 வார்த்தைகள் கொண்ட கட்டுரையைத் தருகிறது என்கின்றனர் அவர்களில் இன்னும் பலர்!

இதே AI பல்வேறு புலனாய்வுக் குழு போலச் செயல்பட்டு டிஜிடல் அரெஸ்ட் செய்வதாகக் கூறி பல கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கும் செய்திகள் தினமும் எத்தனை வெளி வருகின்றன, அதைப் பாருங்கள் என்கின்றனர் ஐயையோ AIகாரர்கள் 

முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் ஐக்கியநாடுகளின் சபையை அணுகி இதைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றன.

இதையும் AI தடுத்து விடாமல் இருக்க வேண்டுமே என்று ஐயையோ AIகாரர்கள் புலம்புகின்றனர்.

நீங்கள் எந்தப் பக்கம் சார்?!

ஆஹா ஏஐ AI யா?

  ஐயையோ ஏஐ AI யா??

***

Hindu Crossword 21225 (Post No.14,229)


Written by London Swaminathan

Post No. 14,229

Date uploaded in Sydney, Australia – 21 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1  2 3 4  
         5
6    7    
          
8    910   
          
          
11         

ACROSS

1.Boy who got boons from Yama, God of Death.

6.musical note, tone

7.Sound, musical sound

8.Disease in Vedas

9.Crocodile in Sanskrit

11.Food Donation

DOWN

1.Vedic Twins

2.Ganesh name; protector of the weak.

3.By whom, by what is the meaning; Beginning word  of the Upanishad

4.Woman devil killed by Rama when he accompanied Vishwamitra.

5. short sound- dance jargon; long sound- reason or cause in Indian languages

10.Disease of the eyes in Sanskrit

N1ACH2IK3ET4A 
A  E E A K5
S6WARAN7ADHA
A  A A A R
T8AKMAN9A10KRA
H  B  RA N
Y  H  M  A
A11NNADHANAM

–subham—

Tags– Hindu Crossword 21225

கெடா, கடாரம், கிடாரங்காய் ஊறுகாய்  பெயர் காரணம் (Post No.14,228)

Written by London Swaminathan

Post No. 14,228

Date uploaded in Sydney, Australia – 21 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மலேசியாவில் தமிழ் கல்வெட்டுகள்

கிடாரங்காய் ஊறுகாயைப் பார்த்த மாத்திரத்தில் நாவில் உமிழ்நீர் சுரக்கும் ; எலுமிச்சங்காய் ஊறுகாயை விட ஒரு படி மேலே நிற்கும் ; ஆனால் இதுவும் அதே எலுமிச்சை குடும்பத்தைச் சேர்ந்ததுதான்

கெடா , கடாரம் , கிடாரங்காய் எல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்கள் !

மலேசியா நாட்டின் வட பகுதியில் உள்ள மாகாணம் கெடா. அதுதான் தமிழில் கடாரம் என அழைக்கப்பட்டது. ‘கெடா’ தேசத்தை கைப்பற்றி சோழ பேரரசின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததால் ராஜேந்திர சோழன் ‘கடாரம் கொண்டான்’ என்ற பெயரை பெற்றார்.

மலேசியாவுக்கு — அதாவது மலேயா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடுகளுக்கு தமிழர்களை கூலி வேலைக்கும், ராணுவப்பணிகளுக்கும் கொண்டு சென்றார்கள். அவ்வாறு தமிழ் நாட்டிலிருந்து போன மக்கள் கப்பலில் திரும்பி வரும்போது கிடாரங்காய்களைக் கொண்டு வரு வா ர்காளாம் . இதனால் இதற்கு மதிப்பு அதிகம்

அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேந்திர சோழன் அங்கு சென்று வெற்றி வாகை சூடியதால் அவன் பெயரிலும் கடாரம் ஒட்டிக்கொண்டது .

கடாரம் என்பது கெடா மாநிலத்தின் பழைய பெயராகும். பழங்காலத்தில் இருந்து, இப்போது மலேசியாவின் வரை படத்தைக் காண்போர் கெடா என்ற பெயரைக் காணலாம்

பட்டினப்பாலை என்னும் சங்கத் தமிழ் நூலில் கடாரத்தின் பெயரை காழகம் என்று உருத்திரன் கண்ணனார் குறிப்பிட்டுள்ளார் . ஆகவே ராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காழகமும் தெரியும்; அதைத்தாண்டி பவளம் கிடைக்கும்  செஷெல்ஸ் மொரீஷியஸ் (ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பவளம் கிடைக்கும் மிகப்பெரிய திட்டு இரண்டு தீவுகளுக்கிடையே இருக்கிறது), மாலத் தீவுகளும் தெரியும்.

இதோ பட்டினப்பாலை வரிகள் ………

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்,

காலின் வந்த கருங்கறி மூடையும்,

வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்,

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென் கடல் முத்தும், குண கடல் துகிரும்,

கங்கை வாரிதியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்

அரியவும், பெரியவும் நெரிய ஈண்டி,

வளம் தலை மயங்கிய நனந்தலை மறுகு

(பட்டினப்பாலை 185–193)

(குண கடல் துகிரும்= மேலைக்கடலிலிருந்து பவளமும்)

*****

மலேசியத் தமிழ் கல்வெட்டுகள்

தகூபா என்னும் இடத்தில் கிடைத்த கல்வெட்டு மிகவும் பிரசித்தமானது.

பண்டைய கெடாவில் ஒரு இந்துக் குடியேற்றம் இருந்துள்ளது, இது கர்னல் லோவின் கண்டுபிடிப்புகள் மூலம் அறியப்படுகிறது.

ராஜேந்திர சோழன் காலத்துக்கு முந்தைய கல்வெட்டுகள் மலேஷியா, வியட்நாம், தாயலாந்து நாடுகளில் கிடைத்துள்ளது ; இந்தோனேஷியா, போர்னியோ தீவின் காடுகளிலும் சம்ஸ்க்ருத தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவர்கள் எழுதும் லிபி/ எழுத்து எல்லாம் பல்லவர் கால வட்டெழுத்து, பிராமி ஆகியவற்றிலிருந்து வந்ததை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்; அவர்களுக்கு இலக்கியத்தை உண்டாக்கிக்கொடுத்ததும் ராமாயணம், மஹா பாரதம், புத்தமத ஜாதக கதைகள்தான்.

மணிக்கிராமத்தார் என்னும் வணிக்கக்குழு அங்கே சென்று வியாபாரம் செய்ததை பல கல்வெட்டுகள் காட்டுகின்றன. விஷ்ணு  கோவிலில் ஒரு பக்தர் குளம் வெட்டியதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது . நாலாம் நூற்றாண்டு.

பல புத்த விஹாரங்களில் இந்திய பெயர்கள் இருக்கின்றன. இந்தோனேஷியாவைப் பொறுத்த மட்டில் மூலவர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு யாகங்கள் தானங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன  வியட்நாமில் ஸ்ரீமாறன்/ தமிழில் திருமாறன் கல்வெட்டு இருக்கிறது இதுதான் மிகப் பழைய கல்வெட்டு (இரண்டாம் நூற்றாண்டு).

*****

தகூபா தமிழ் கல்வெட்டு அவனிநாராயணன் என்ற குளத்தை நாங்கூர் உடையான் வெட்டியதாகச் சொல்கிறது

Tamil inscriptions

An inscription at Takuapa on the Malay Peninsula that indicates that Nangur-Udaiyan dug an artificial lake called Avani-naranam

****

வணிக கட்டுப்பாடுகளை குறித்து நெசெவ் கல்வெட்டு பேசுகிறது

The Neusu Inscription, which may have dealt with trading regulations

****

கீழ்க்கண்ட கல்வெட்டுகள் மலாயாவுக்கு வெளியே உள்ளவை:

போர்னியோவின் குடாய் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் தமிழ் இந்து மன்னர்கள்  யாக யக்ஞம் செய்து தானம் செய்ததை விரிவாக விளம்புகிறது. நாலாம் நூற்றாண்டு.

அவனைத் தொடர்ந்து மேற்கு ஜாவா தீவில் பூர்ணவர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன . இவை எல்லாம் 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இந்துக்கள் அங்கு சென்றதைக் காட்டுகின்றன ; காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள் வர்மன் என்ற பட்டத்தை தாங்கி ஆட்சி செய்தனர்.

4th century Sanskrit Yupa inscriptions of Mulavarman, Kutei East Kalimantan, Indonesia

The oldest inscriptions in Indonesia are the Kutai inscriptions, which are found on stone pillars in Borneo. They are written in Sanskrit and date to the 4th century CE.

Why are the Kutai inscriptions significant?

They suggest that Tamil Hindu traders and priests were established in Indonesia by 350–400 CE

They show that Vedic ideas were popular with the Tamils

They indicate that the Tamils used Sanskrit to praise a king in Indonesia.

Purnavarman followed Mulavarman (West Java Sanskrit Inscription)

Old Malay inscriptions

The Kedukan Bukit Inscription from South Sumatra, Indonesia, which dates from the 7th century CE

The Sojomerto inscription from Central Java, which dates from the 7th century CE

Other inscriptions from the 7th to 10th centuries discovered in Sumatra, Java, and other islands of the Sunda archipelago

Sanskrit inscriptions

Many Sanskrit inscriptions have been found in Malaysia and Indonesia

The Buddhist Bodhigarbhālaṅkāralakṣa-dhāraṇī (mantra) inscription was found in Gua Berhala, a cave in Perlis, Malaysia

Other inscriptions

The Tarumanegara Stone in West Java, which is believed to bear the oldest known Malay script dating as far back as 400 CE

 —subham—

Tags- கெடா, கடாரம், கிடாரங்காய் ஊறுகாய் , பெயர் காரணம், மலேசியாவில் தமிழ் கல்வெட்டு

ப்ளாக் வாரண்ட் : தொலைக்காட்சித் தொடர் (Post No.14227)

 Charles Chopraj

  Tihar Jail Delhi

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,227

Date uploaded in Sydney, Australia – –21 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

  4-2-25 kalkionline இதழில் வெளிவந்துள்ள கட்டுரை 

அதிர்ந்து பதற வைக்கும் ஒரு டி.வி. தொடர்!

சின்னத்திரை

ப்ளாக் வாரண்ட் : தொலைக்காட்சித் தொடர்

ச. நாகராஜன்

நெட்ஃப்ளிக்ஸில் ஜனவரி 10, 2025 முதல் பார்த்து மகிழ (இல்லை, நடுங்க) வைக்கும் ஹிந்தி சீரியல் ப்ளாக் வாரண்ட்.

ப்ளாக் வாரண்ட் என்றால் சுருக்கமாக தூக்கு தண்டனை என்று அர்த்தம்!

 டெல்லியில் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திஹார் ஜெயிலை அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்தெடுத்துச் சித்தரிக்கும் இது  The Snake, Gallows, Macho, Team Player, Prison Food,  The Blanket, Double Life Sentence ஆகிய ஏழு எபிசோடுகளைக் கொண்டுள்ளது.

 சுனித்ரா சௌத்ரி மற்றும் சுனில் குப்தா படைத்த ப்ளாக் வாரண்ட் என்ற தொடரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இதை விக்ரமாதித்த மோத்வானெ, சத்யன்ஷு சிங், அர்கேஷ் அஜய்,  ரோஷின் ரவீந்திர நாயர் மற்றும் அம்பிகா பண்டிட் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

 சிறை என்றும்  கைதி என்றும் ஒரு நிமிடம் பேசிவிட்டு அதை மறந்து போவது அனைவரது இயல்பு தான். ஆனால் திஹார் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது, என்பதையும் அங்குள்ள கைதிகளிடையே உள்ள அதிகாரப் போட்டியையும், அதில் வெற்றி பெற்று தலைமையிடம் வகிக்கப் போராடும் குழுக்களைப் பற்றியும் இதில் பார்த்துத் திகைக்கலாம்.

தூக்கு தண்டனை எப்படி போடப்படுகிறது என்பதை ஒரு முறை அல்ல மூன்று முறை இதில் பார்த்து வேதனைப்படலாம்.

டிஎஸ்பி தோமராக நடிக்கும் ராகுல் பட் நம்மை நடிப்பால் வியக்க வைக்கிறார்.

காயத்ரி மந்திரம் சொல்லும் ஜெயிலர் சுனில்குப்தாவாக வரும் ஜஹன் கபூரின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது.

ஜெயிலுக்குள் பாம்பு, போர்வைத் திருட்டு, கள்ள வியாபாரம் அடிதடி, கொலை ஆகியவற்றையெல்லாம் பார்த்து வியக்கிறோம்.

 ஜெயிலருக்கும் கைதிகளுக்கும் இடையே இருக்கும் உறவு அதிசயமானது. பங்காளி உறவா அது? அட்ஜஸ்ட்மெண்ட் உறவா?

 சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜின் ஆதிக்கம் ஜெயிலில் எப்படி இருந்தது, அவனது ராஜ வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை இதில் பார்த்து பிரமிக்கலாம்.

தனிக் குரலுடனும் தனி நடையுடனும் சோப்ராஜாக வரும் சிதாந்த் குப்தா நமது பாராட்டுக்குரியவர்.

 இந்த ப்ளாக் வாரண்ட்- சீரியலை எழுதிய சுனில் குமார் குப்தா 35 வருடம் திஹார் ஜெயிலி ல் ஜெயிலராக இருந்தவர். சோப்ராஜ் உள்ளிட்ட கைதிகளை அன்றாடம் பார்த்தவர்.

தனிப் பேட்டியில் கீழ்க்கண்ட பல தகவல்களை \அவர் தெரிவிக்கிறார் (இந்தத் தொடரில் அல்ல)

 அப்ஜல் குரு என்ற தீவிரவாதிக்கு ப்ளாக் வாரண்ட் கொடுத்து தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட போது அவன் பாடிய பாலிவுட் பாடல்: அப்னே லியே ஜியே (நீ உனக்காக வாழ்ந்தால் நீ வாழ்ந்தது வீண், உலகிற்காக வாழ்) –தூக்கு தண்டனையே கூடாது என்ற கொள்கையை முன் வைக்கிறார் குப்தா. 82 சதவிகித கைதிகள் ஒருவித வசதியுமின்றி மிக மோசமான பின்னணியில் இருந்து வருபவர்கள். அவர்களில் குற்றமிழைக்காதோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வக்கீலை வைத்துக்கொள்ளக் கூடப் பணமில்லதவர்கள். ஒரு நாளைக்கு 78 கொலைகள் நடக்கும் தேசத்தில் ஜெயில் தண்டனை ஒரு தீர்வு அல்ல. ஏராளமான சீர்திருத்தங்களை வெளியிலும் செய்ய வேண்டும். ஊழல் ஊறிக் கிடக்கும் சிறைகளிலும் செய்ய வேண்டும் என்கிறார் இவர்.

ஒரு கேஸ் முடிய ஆகும் காலம் யாராலும் சொல்ல முடியாத ஒன்று என்று கூறி வேதனைப்படும் இவர் தனது அடுத்த புத்தகமானது ஜெயில் எஸ்கேப் பற்றி இருக்கும் என்கிறார். ஒரு கைதி போலீஸ் ஆபீஸர் உடையில் தப்ப, இன்னொரு கைதி தூங்கிக் கொண்டிருந்த ஜெயில் அதிகாரியின் யூனிபார்மை அணிந்து தப்ப இது போன்ற விவரங்கள் எல்லாம் இவரது அடுத்த புத்தகத்தில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் பரிதாபகரமான ஜெயில் கைதிகளின் வாழ்க்கை மிகவும் சீர்திருத்தி அமைப்பட வேண்டிய ஒன்று என்ற விழிப்புணர்ச்சியை ப்ளாக் வாரண்ட் ஏற்படுத்துகிறது.

ப்ளாக் வாரண்ட் தொலைக்காட்சியின் ஏழு எபிசோடுகளையும் பார்த்தால் நமக்குத் தோன்றுவது –

ப்ளாக் வாரண்ட் – வேண்டவே வேண்டாம், யாருக்கும், எப்பொழுதும்!

***