Date uploaded in Sydney, Australia – 20 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 27
The aboriginal peoples of Australia
சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மட்டம் குறைவாக இருந்தது; அப்போது ஆதிவாசிகள் நீண்ட படகுகளில் நட்சத்திரங்களையும் விடி வெள்ளி (venus) போன்ற கிரகங்களையும் துணையாக வைத்துக்கொண்டு துணிகரப் பயணம் மேற்கொண்டனர். நிலப்பரப்பைக் கண்ட இடத்தில் அப்படியே தங்கத் துவங்கினார்கள். இதனால் பிரம்மாண்டப் பரப்புடைய ஆஸ்திரேலியாவின் எல்லா பகுதிகளிலும் வெவ்வேறு இன ஆதிவாசிகள் காணப்படுகின்றனர். இந்த இனங்களின்– அவர்கள் பேசும் மொழிகளின் -எண்ணிக்கை 250.
மீன்பிடித்தும், கங்காரு போன்ற மிருகங்களை வேட்டையாடியும் வாழ்க்கை நடத்தினர் அவர்கள் பூமராங் என்ற வினோத ஆயுதத்தையும் , டிட்ஜ்ரோடு போன்ற இசைக் கருவிகளையும் கண்டு பிடித்தனர் . குடியேறிய கதைகளைப் பாடல்கள் மூலம் பரம்பரை பரம்பரையாகப் பரப்பி வந்தனர் .
ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் மிகவும் குறைவான ஆடைகளையே பயன்படுத்தினர்; பலர் நிர்வாணமாகவும் இருந்தனர்; கால நிலைக்கேற்ப உடைகளை மாற்றிக்கொண்டனர்.
நாட்டின் குளிர் பிரதேசங்களில் வசித்தோர் மிருகத்தின் தோலினால் ஆன ஆடைகளை அணிந்தனர் ; பாலைவனப் பகுதிகளில் நாடோடி வாழ்க்கை நடத்தியோர், உடைகளை அணியவில்லை சிட்னி நூலக வாயிலில் உள்ள கதவுகளில் காணப்படும் படங்கள் அவர்களை இவ்வாறு காட்டுகின்றன. தோலாடைகள் மேல் சாயங்களைப் பூசிக்கொண்டனர்.
உள்ளே உள்ள காட்சி சாலையில் தோலாடை அணிந்தவர்களையும் காண முடிகிறது .
****
உணவு வகைகள்
மீன்களையும் மிருகங்களையும் பெரும்பாலும் உண்ட ஆதிவாசிகள் செடி கொடிகளின் பழங்கள், விதைகளையும் சாப்பிட்டனர். அவைகளின் மருத்துவப் பலன்களையும் அனுபவத்தின் வாயிலாக அறிந்து வைத்திருந்தனர்
பழங்குடி மக்கள் நிலத்திலிருந்து கிடைக்கும் வெள்ளை அல்லது செம்மண் நிற களி மண்ணினால் உடலில் பலவகையான படங்களையும் கோடுகளையும் வரைந்து கொண்டனர்; உடலில் விபூதி போல வெண்ணிறக் கோடுகளை பூசிக்கொண்டனர்
இவைகளை வைத்தே எந்த இனம் என்று அடையாளமும் காண முடியும். அவைகளுக்கு அவர்கள் பல ஆன்மீக விளக்கத்தையும் முன்னோர்களின் கதைகளையும் கூறினார்கள்
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து வியாபாரத்துக்காக வந்தவர்கள் மூலம், முதல் வெளி உலகத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் வெள்ளைக்காரர்கள் வந்து பல இடங்களை ஆக்ரமித்தனர் . முதலில் குற்றம் செய்த , சிறையில் அடைக்கப்பட்ட, கைதிகளைக் குடியமர்த்த ஆஸ்திரேலியாவைப் பயன்படுத்தினர். பின்னர் பல இடங்களில் தங்கம் கிடைப்பதை அறிந்தவுடன் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து மக்கள் குடியேறினர் நவீன யுகத்தில் வியாபாரத்துக்காகவும், உயர் கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் மக்கள் வரத்துவங்கினர்[; மருத்துவ மற்றும் கம்பியூட்டர் தொழில் நிமித்தம் இந்தியர்கள் குடியேறினர். இலங்கையிலிருந்து நிறைய தமிழ் அகதிகளும் பஞ்சாபிலிருந்து பல சீக்கிய அகதிகளும் குடியேறினார்கள் .
இப்போது ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் அவர்கள் உரிமைக்காகப் போராட முடியவில்லை. ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய வெள்ளைக்காரர்கள் கொண்டாடும் ஆஸ்திரேலியா டே AUSTRALIA DAY என்னும் நாளை அவர்கள் ஆக்ரமிப்பு தினம் என்று சொல்லி எதிர்ப்பு தினமாகக் கடைப் பிடித்து வருகிறார்கள்
.
****
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரையையும் இணைத்துள்ளேன்
ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் சுவையான வரலாறு
சுமார் 50,000 முதல் 60,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் இங்கே குடியேறியதாக இப்போதைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மற்றொரு ஆய்வு, இந்தியர்கள் இங்கே 5000 ஆண்டுகளுக்கு முன்பு வந்து, புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியதாகக் கூறும். ஆனால் இத்தகைய ஆய்வுகளை அப்படியே நம்பிவிடக்கூடாது. இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு இதை மறுத்து வேறு ஒரு தகவல் வரும்!
20, 30 ஆண்டுகளுக்கு முன் தினமணிச் சுடரில் பிலோ இருதயநாத் என்பவர் எழுதிய இந்தியப் பழங்குடி மக்கள் வரலாற்றையும், மஞ்சரியில் மாதம் தோறும் வெளியான பழங்குடி மக்களின் வரலாற்றையும் படித்து பேப்பர் கட்டிங் சேகரித்து வைத்துள்ள எனக்கு ஆஸ்திரேலிய வரலாற்றில் அதிகம் புதுமை இருப்பதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு இன மக்களும் பிறப்பு, இறப்பு, ஆவிகள், திருமணம், தொடக்கூடாதவை, தீட்டு, இசை, நடனம் ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் மாறுதலுடன் பல விநோதக் கொள்கைகளையுடவர்களாய் இருப்பார்கள். இந்தியப் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளில் இந்துமதத்தின் தாக்கமும், சம்ஸ்கிருத மொழியின் தாக்கமும் ஆழமாகவே தெரிகிறது. இப்போது கோண்ட்வானா லாண்ட் என்று சொல்லப் பாடும் சொல்லே, காண்டவ வனம் என்பதன் மரூஉ என்பதையும் “கோண்டு”கள் என்போர் அர்ஜுனனும், கிருஷ்ணனும் எரித்த “காண்ட”வ வன மக்கள் என்பதையும் நான் முன்னரே என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் பற்றி தமிழில் அதிக விஷயங்கள் கிடைக்காததால், சிட்னி நகர ஆஸ்திரேலிய மியூசியத்தில் நான் சேகரித்த விஷயங்களை மொழிபெயர்த்துத் தருகிறேன்.
250மொழிகள், 250குழுழுக்கள்
ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் ஒரே மொழியைப் பேசவில்லை. 250 மொழிகளையும், கிளை மொழிகளையும் பேசுகின்றனர். கடல் என்பதற்குக் கூட ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல்! ஏன் இவ்வளவு மொழிகள் வந்தன என்பது ஆச்சரியமான விஷயமே. அருகிலுள்ள நியூகினி தீவுகளில் 750 மொழிகள் உள்ளன. மொழியியலாரின் கொளகைகளை எல்லாம் பொய்மையாக்கிவிடும் நிலவரம் இது.
இதே போல ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் அனைவரும் ஒரே அணி அல்ல. அவர்களிடையே 250 பிரிவுகள் உண்டு.
ஒவ்வொருவரும் தனது இடத்தை நாடு என்றும், அதிலுள்ள குழு எல்லாம் ஒரே இனம் என்றும் கருதுவர். ஆயினும் ஒரு குழு, மற்றொரு குழுவில் தலையிடாது. மேலும் அத்தகையோர் போற்றும் புனிதமான மிருகத்தை மற்றொரு குழுவினர் புசிக்கமாட்டார்கள். அவர்களிடையே, பல பொதுவான அம்சங்களும் இருக்கின்றன.
முன்னொரு காலத்தில்
“இப்பொழுது ஆஸ்திரேலியாவில் காணப்படும் பிராணிகள் எல்லாம், மிகப் பழைய காலத்தில், கடலுக்கு அப்பாலுள்ள வேறு ஒரு பிரதேசத்தில் வசித்தன. அப்போது அவை எல்லாம் மனித உருவில் இருந்தன. அவை எல்லாம் ஒரு நாள் ஒன்று கூடி நமக்கு நல்ல வேட்டை நிலம் வேண்டும் என்று முடிவு செய்து ஒரு படகில் ஏறி இங்கு (ஆஸ்திரேலியாவுக்கு) வந்தன” என்பது பழங்குடியினர் கூறும் கதை.
முதல் குடியேறிகள்
சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் தாழ்வாக இருந்தது. ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்குப் படகுகள் மூலம் போவது எளிதாக இருந்தது. அவர்கள் அக்காலத்தில் குடியேறிய ஆஸ்திரேலிய நிலப் பகுதிகளை இப்பொழுது கடல் கொண்டுவிட்டது. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் பூர்வ கதைகளும் இதையே சொல்லுகின்றன. தாங்கள் படகுகள் மூலம் வேறு ஒரு இடத்திலிருந்து வந்ததாகவும், மழை மேகங்களைப் பின்தொடர்ந்து உள்நாட்டிற்குள் சென்றதாகவும் அவர்கள் கதைகள் சொல்லுவர்.
உலகில் இந்திய இலக்கியங்கள் மட்டுமே தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறுவதில்லை. வேறு சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் தங்களை வந்தேறு குடிகள் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். உலகின் நாகரீக தோற்றத்துக்கு இந்தியாவே மூல முதல்வன் என்பதை நமது இதிஹாச புராணங்கள் தெள்ளத் தெளிவாக உரைக்கின்றன. நிற்க
சுமார் 40000 ஆண்டுகளில், இவர்கள் ஆஸ்திரேலிய கண்டம் முழுதும் பரவிவிட்டனர். இந்தியர்கள் 56 தேசங்கள் வைத்து ஆண்டது போல இவர்கள் 250 “நாடு”களை உருவாக்கினர். 1700-ம் ஆண்டுகளில், இந்தோநேஷியத் தீவுகளிலிருந்து பலர் மீன் வியாபாரத்தின் பொருட்டு இங்கேவந்தனர். அதுதான், ஆஸ்திரேலியாவின் முதல் வெளி உலகத் தொடர்பு. பின்னர் கேப்டன் குக் முதலான வெள்ளையர்கள் வந்தனர்.
1788–ல் முதல் காலனி
உலகில் வடபகுதியில் நிலப்பரப்பு இருப்பதுபோலவே தென் பகுதியிலும் நிலப்பரப்பு இருக்க வேண்டும், அப்படியில்லாவிடில் பூமியின் சமநிலை கெட்டு அது ஆட்டம் காணும் என்று கிரேக்க தத்துவ ஞானிகள் ஊகித்தனர். (இந்துக்கள், கீழ் ஏழு பாதாள லோகங்களில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றைச் சேர்த்திருந்தது வெள்ளைக்காரர்களுக்கு தெரியாது. எனது மாயா- நாகர் தொடர்பு கட்டுரைகளைப் படிப்போருக்கு இது விளங்கும்). பின்னர் 1570 ஆம் ஆண்டில் ஆர்டீலியஸ் என்பவர் டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்று தனது வரைபடத்தில் ஆஸ்திரேலியாவை வரைந்தார். இதைத் தொடர்ந்து டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனியார் அங்கு போய் நியூ ஹாலந்து எனப் பெயரிட்டு, அது ஒன்றுமில்லாத இடம் என்று திரும்பிப் போய்விட்டர்கள்.
விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஜோசப் பாங்க்ஸ் என்பவருடன் லெப்டினண்ட் கேப்டன் குக் 1770 ஆம் ஆண்டில் வந்தார். பாங்ஸ் நிறைய படங்களை வரைந்தார். பின்னர் நியூ சவுத் வேல்ஸில் குடியேறி வசிக்கலாம் என்று அறிவுரை வழங்கினார். 1788ஆம் ஆண்டில் ஒரு கப்பல் நிறைய ஆட்கள் வந்து ஆஸ்திரேலியாவை ஆக்ரமிக்கத் தொடங்கினர். ஆனால் முதலில் இங்கு அனுப்பப்பட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள். வெள்ளைக்காரர்கள், நமது சுதந்திரப் போராட்டவீரர்களை அந்தமான் தீவுக்கு அனுப்பியதுபோல இங்கு பலரை அனுப்பினர்.
கேடயங்கள்
ஒவ்வொரு குழுவும் ஒருவகை பாணியில் கேடயங்களைத் தயாரித்தனர். இவை பாதுக்காப்புக்கு மட்டுமின்றி கலாசார சின்னங்களாகவும் விளங்கும். ஒவ்வொரு இளைஞரும் அந்தக் கேடயத்தில் ஒரு புது வடிவு செய்து தனது தனித்துவத்தையும் காட்டுவார். கேப்டன் குக் வந்த போது அவரது பீரங்கி, துப்பாக்கிகளுக்கு , பழங்குடி மக்கள் ஈடு கொடுக்க முடியவில்லை. தங்கள் கேடயங்களைப் போட்டுவிட்டு காட்டிற்குள் சென்று மறைந்தனர். கேப்டன் குக் எடுத்துவந்த இந்த கேடயங்களே முதல் நினைவுப் பொருட்களாகும். இப்பொழுது ஆஸ்திரேலிய மியூசியத்தில் நூற்றுக்கணக்கான கேடயங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.
வெள்ளையர்களுக்கு உதவிய இருவர்
ஆஸ்திரேலியாவை காலனியாக்க வந்த வெள்ளையர்களுக்கு இரண்டு பழங்குடி இன மக்கள் உதவினர். ஒருவர் பெயர் வைலி. 1840 ஆம் ஆண்டில் எட்வர்ட் ஜான் அய்ர் என்பவருக்கு உதவினார். பின்னர் இவருடன் வந்த வேறு இரு பழங்குடி இனத்தவர் (யார்ரி, ஜோயி) அவருடன் வந்த ஜான் பாக்ஸ்டர் என்பவரைக் கொன்றுவிட்டனர். வைலி மட்டும் இறுதிவரை அய்ருக்கு உதவி பின்னர் அரசு பென்ஷனும் பெற்றார். ஆஸ்திரேலிய கண்ட ஆராய்ச்சிகள் இப்படிப் பல படுகொலைகள் நடக்கக் காரணமாயின.
ஜாக்கி ஜாக்கி என்று புனைப்பெயருடைய கல்மாரா என்ற பழங்குடி இனத்தவர் எட்மண்ட் கென்னடி என்பவருக்கு உதவினார். ஆனால் ஒரு பழங்குடி இனக் குழு கென்னைடியை ஈட்டியால் துளைத்துக் கொன்றுவிட்டனர். கல்மாரா ஓடிச் சென்று, கப்பலில் இருந்த வெள்ளையரிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு கென்னடியின் சடலத்தை மீட்க மீண்டும் புதர்களுக்குத் திரும்பிவந்தார். இதனிடையே அந்த ஆராய்ச்சிக் குழுவில் இருந்த பலர் காணாமற்போயினர். இரண்டுபேர் தவிர அனைவரும் மறைந்தனர். இப்படி ஐரோப்பியர்கள் சென்றவிடம் எல்லாம் இரத்தக் களரியுடந்தான் வரலாறு துவங்கும். பின்னர் அதைக் காரணம் காட்டி, குருவி சுடுவதுபோல, பழங்குடி இனமக்களைச் சுட்டுக்கொல்லுவர். வட அமெரிக்க, தென் அமெரிக்க வரலாற்றைப் படிப்போருக்கு இது நன்கு விளங்கும்.
—subham—-
TAGS- ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 27, ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் யார், பழங்குடி மக்கள்
நமது சாஸ்திரங்கள் கனவுகளின் பலன்களை வெகுவாக விரித்துக் கூறுகின்றன.
அன்றாட சூரிய வழிபாட்டில் துர் ஸ்வப்னத்தைத் தராதே என்று தொழுது வேண்டிக் கொள்கிறோம்.
சுமார் 15000 ஸ்லோகங்கள் கொண்ட அக்னி புராணம் 229ம் அத்தியாயத்தில் கனவைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறி நம்மை பிரமிக்க வைக்கிறது.
நல்ல கனவுகள் வந்தால் பின்னர் தூங்கக் கூடாது என்பது அது தரும் அறிவுரை. முதல் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் ஒரு வருடத்திலும், இரண்டாம் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் ஆறு மாதத்திலும், மூன்றாம் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் மூன்று மாதத்திலும் நான்காம் ஜாமத்தில் காணப்படும் கனவுகள் 15 நாட்களிலும் சூரிய உதய சமயத்தில் காணப்படும் கனவுகள் பத்து நாட்களிலும் பலிக்கும் என்கிறது இந்த புராணம்.
கனவில் யானை,குதிரை, தங்கம், எருது அல்லது பசுவைப் பார்த்தால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.
இதே போல்ச சுஸ்ருத சம்ஹிதாவும் கனவின் பலன்களை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
கனவுகள் இல்லாத இலக்கியமே இல்லை.
சிலப்பதிகாரத்தில் கனாத்திறம் உரைத்த காதை என்றே ஒரு காதை இருக்கிறது. அதில் கண்ணகி நடக்கப்போவதைக் காண்கிறாள்.
சீதை அசோகவனத்தில் துன்பத்துடன் வருந்தும் போது திரிஜடை தான் கண்ட கனவை சீதையிடம் கூறி ஆறுதல் தருவது பிரசித்தமானது.
பத்து இடங்களில் கனவு என்னும் சொல்லை ஆளும் திருவள்ளுவர் கனவு நிலை உரைத்தல் என்ற ஒரு அதிகாரத்தையே கனவிற்காக ஒதுக்குகிறார்.(குறட்பாக்கள்: 819,1054,1211,1213,1214,1215,1216,1217,1219,1220
உலகின் ஆகப் பெரும் கணித மேதையான ராமானுஜன் “நாமகிரி அம்மன் கனவில் எனக்கு உள்ளொளி தருகிறாள்” (Namagri would bestow insight in dreams)என்று கூறி தனது கணிதக் கண்டுபிடிப்புகளுக்குக் காரணம் கனவுகளே என்கிறார்.
ஆப்ரஹாம் லிங்கன் 1865ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் கண்ட கனவை நண்பர்களிடம் விரிவாகக் கூறினார். அதன்படி தனது மாளிகையில் கிழக்கே இருந்த அறையை நோக்கி அவர் செல்கையில் அங்கு ஏராளமானோர் குழுமி இருக்க சவப்பெட்டி ஒன்றையும் அவர் காண்கிறார். யார் அது என்று கேட்டபோது ஜனாதிபதி என்ற பதில் வருகிறது. தனது மரணத்தை முன்பாகவே கனவில் காண்கிறார் லிங்கன். இதை வார்ட் ஹில் லமோன் என்பவர் ரிகலெக் ஷன்ஸ் ஆஃப் லிங்கன் என்ற நூலில் விவரிக்கிறார்.
கனவு பற்றி வாழ்நாள் முழுவதும் ஆராய்ந்த, வித்தியாசமான பெரும் விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் கார்ல் ஜங். (பிறப்பு 1875 மறைவு 1961)
ஒரு சமயம் அவரிடம் சிகிச்சை பெற வந்த பெண்மணி தான் கண்ட கனவை விவரித்துக் கொண்டிருந்தார். அவர் தனது கனவில் ஒரு மதிப்புள்ள நகை தனக்குத் தரப்பட்டிருந்ததையும் அது வண்டு போலச் செய்யப்பட்ட அணிகின்ற கல் என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார்.
அப்போது ஜன்னலை யாரோ தட்டும் சப்தத்தைக் கேட்ட ஜங் ஜன்னலைத் திறக்க அவர் கையில் ஒரு பொன்வண்டு வந்து உட்கார்ந்தது. “இதோ நீங்கள் கூறும் வண்டு” என்று ஜங் அந்தப் பெண்மணியிடன் அந்த வண்டைக் காட்ட தான் கனவில் கண்ட அதே வண்டை அவர் பார்த்து பிரமித்து விட்டார்.
ஜங் தன்னிடம் வருவோரிடம் அவர்கள் கண்ட கனவுகளைப் பற்றித் தீவிரமாக விசாரிப்பார். அதற்குத் தக சிகிச்சையை அளிப்பார். ஏராளமான சுவையான கேஸ்கள் அவரிடம் வந்தன. அதையெல்லாம் பார்த்து வியந்த அவர் கனவிற்கான பலன்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
உலகெங்கிலுமிருந்து அவருக்குப் பேசுவதற்கான அழைப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. அங்கெல்லாம் அவர் தனது ஆய்வைப் பற்றி எடுத்துரைத்து அனைவரையும் திகைக்க வைத்தார்.
அறிவியலும் நமது சாஸ்திரங்களும் ஆமோதிக்கும் பல விஷயங்களில் முக்கியமான ஒன்று கனவு!
நல்ல கனவைக் காணலாம்; “கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே” என்று கூடப் பாடலாம்!
Date uploaded in Sydney, Australia – 19 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
I went to the State Library ,NSW in Sydney today 19th February 2025. The library always runs special exhibitions in separate halls. It has rare collections like the British Library in London which I frequently visit. Like the British Library the entry is free. But if you need books from the special collections, you must become a member, which is also free. I went round the exhibitions and browed through some books. Library has a huge collection of books, archives and paintings.
Directions
The library is a short walk from Martin Place station.
The library’s phone number is (02) 9273 1414.
The library’s email address is enquiries@sl.nsw.gov.au.
Features
The library has two public reading rooms: the State Reference Library and the Mitchell Library.
The library has a cafe, bookshop, and galleries.
The library has free entry and Wi-Fi.
The library has free exhibitions and a public events program.
The library has a collection of over five million items.
The library has rare and valuable books, manuscripts, paintings, and more in its underground stacks.
Address
1, Shakespeare Place,
Sydney, NSW 2000 Australia
The library has 5000 books on Shakespeare. It is in a separate hall called The Shakespeare room.
****
London Swaminathan near the NSW State Library in Sydney
Temporary Events and Exhibitions
Some exhibitions are temporary and are on show for a limited period of time only
PIX Exhibition
PIX was Australia’s first pictorial news weekly. It hit the newsstands from 1938 . PIX was popular for over thirty years and ceased publication in 1972. It was full of sensational pictures.
Peter Kingston’s beautiful paintings are displayed in the library. Photography is allowed in Exhibitions.
The library has something for everyone even if one is not a serious reader. I took lot of pictures. After viewing all that is on display one can have coffee and snacks in the Café. Opening hours and more information about the day to day events are available from the Library’s website.
All book lovers must visit the library.
–Subham—
Tags– State Library, My visit, Sydney, PIX Magazine Exhibition, Peter Kingston’s paintings.
Date uploaded in Sydney, Australia – 19 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
.ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 26;
லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்கு அடிக்கடி போய் புஸ்தகங்களைப் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போடும் பழக்கம் இருப்பதால் எந்த நாட்டுக்குப் போனாலும் நூலகத்துக்குச் செல்லும் வழக்கம் உண்டு. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நூலகம் தலைநகர் கான்பெர்ராவில் இருந்தாலும் அதற்கடுத்த முக்கியத்துவம் பெற்ற நூலகம் சிட்னி நகரில் உள்ளது .
நியூசவுத் வேல்ஸ் ஸ்டேட் லைப்ரரி என்ற பெயருடைய இந்த நூலகத்தில் ஐம்பது லட்சம் புஸ்தகங்களும், ஓவியங்களும் கலைப் பொருட்களும் ஆவணங்களுமுள்ளன. அவ்வப்போது தற்காலிக பொருட் காட்சிகளும் நடக்கும்.
பிரிட்டிஷ் லைப்ரரியைப் போலவே அனுமதி இலவசம். புகைப்படங்களும் எடுக்கலாம். ஆனால் ஸ்பெஷல் கலெக்சன் எனப்படும் அரிய நூல்கள் வேண்டுமானால் மெம்பர் ஆக வேண்டும்..அதுவும் இலவசமே.
நூலகத்தில் ஷேக்ஸ்பியர் அறை என்ற இடத்தில் ஷேக்ஸ்பியர் பற்றி ஐயாயிரம் புஸ்தகங்கள் உள்ளன.
அவ்வப்போது நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை லைப்ரரியின் வெப் சைட்டிலிருந்து பெறலாம்
நான் பிப்ரவரி 19 ஆம் தேதி, 2025 அங்கு சென்றபொழுது நூலகத்துக்குள் சென்று புஸ்தகங்களைப் புரட்டிப்பார்த்தேன் உட்கார்ந்து படிக்க நேரமில்லை; இரண்டு சிறப்பு கண்காட்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
பீட்டர் கிங்ஸ்டன் என்பவரின் அருமையான ஓவியங்கள் பெரிய அறைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. அதே போல ஆஸ்திரேலியாவின் முதல் படங்கள் மட்டுமே உள்ள வாராந்திர இதழ் பற்றிய காட்சியும் உள்ளத்து; பிக்ஸ்PIX (1938 to 1972) என்னும் அந்த வாராந்திர பட இதழ், பரபரப்பு ஊட்டும் படங்களை வெளியிட்டு மக்களை மகிழ்வித்தன. அந்த முப்பது ஆண்டு இதழ்களின் படங்கள் காட்சியில் உள்ளன; அதுவும் இலவசமே.
நூலகத்தில் ஷேக்ஸ்பியர் அறை என்ற இடத்தில் ஐயாயிரம் புஸ்தகங்கள் ஷேக்ஸ்பியர் பற்றி உள்ளன.
பீட்டர் கிங்ஸ்டன் வரைந்த ஓவியங்கள் அற்புதமாக இருக்கின்றன
அவ்வப்போது நடக்கும் இது போன்ற காட்சிகளைத் தவிர எப்போதும் காட்சியில் உள்ள விஷயங்களும் இருக்கின்றன.
நூலகத்தின் முகவரி
State Library ,NSW in Sydney
Directions
The library is a short walk from Martin Place station.
The library’s phone number is (02) 9273 1414.
The library’s email address is enquiries@sl.nsw.gov.au.
· Address
· 1, Shakespeare Place,
· Sydney, NSW 2000 Australia.
புஸ்தகக் காதலர்கள் அனைவரும் போகவேண்டிய நூலகம் இது.
–subham—
Tags–பீட்டர் கிங்ஸ்டன், ஓவியங்கள் ,ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள், அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!, Part 26, சிட்னி நூலகம், விஜயம்
கம்பன் சீதையை அறிமுகப்படுத்தும் அறிமுகக் கவிதை இது:
பொன்னின் ஜோதி போதினி னாற்றம் பொலிவே போல்
தென்னுன் டேனிற் றீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத் தும்பரின் மாடே களிபேடோடு
அன்னம் மாடு முன் துறை கண்டாங் கயனின்றார்
(பால காண்டம், மிதிலைக் காட்சிப் படலம் செய்யுள் 23)
தனது காவிய நாயகியை அறிமுகப்படுத்தும் கம்பன் ‘செம் சொல் கவி இன்பம்’ போல கவிதை இருக்க வேண்டும் என்று சொல்வதை இங்கேயே தானே கையாண்டு காண்பிக்கிறான்.
தங்கத்தின் ஜோதியென மின்னும் தகதகப்பு, மலர்கள் தரும் சுகந்த மணம், வண்டுகள் உண்ணும் தேனின் இனிமையான சுவை, கவிஞர்கள் இயற்றும் கவிதையில் தரப்படும் செம் சொல் கவி இன்பம் இவை அனைத்தும் சேர்ந்தால் எப்படி இருக்கும்?
ஒளி, நாற்றம், சுவை, ஓசை இந்த நான்கு புலனின்பத்தையும் உதாரணம் காட்டி விட்டான் கம்பன் – தங்க ஒளி, மலர் வாசம், தேனின் சுவை, இனிய கவிதையின் ஓசை – கண்ணுக்கு ஒளி, நாசிக்கு வாசம், வாய்க்கு சுவை, காதுக்கு ஓசை என நான்கு புலன் இன்பத்தையும் கூறியவன் ஊற்றின்பத்தை மறைமுகமாக அறிய வைக்கிறான்.
உருக்கமான ஒரு இடத்தை அவன் தனது கவிதா வரிகளினாலேயே காண்பிக்கிறான் இப்படி:
‘”கண்ணே வேண்டும்” என்னினும், ஈயக் கடவேன்; என் உள் நேர் ஆவி வேண்டினும், இன்றே உனதன்றோ? பெண்ணே! வண்மைக் கேகயன் மானே!- பெறுவாயேல், மண்ணே! கொள் நீ; மற்றையது ஒன்றும் மற‘ என்றான். 32
கெஞ்சுகின்ற சந்தத்தில், ராமனை காட்டுக்கு அனுப்பாதே என்று சொல்லக் கூட முடியாமல், மற்றைய வரத்தை மட்டும் மற என்கிறான்மன்னன் தசரதன்.
ஆங்காங்கே நகைச்சுவையையும் அவன் தருவதற்குத் தவறவில்லை.
எடுத்துக்காட்டாக அனுமன் ராவணனிடம் வாலியைப் பற்றிக் கூறுவதைக் காணலாம். வாலி தன் வாலில் ராவணனைச் சுற்றிச் சுழற்றிக் கொண்டு போனான். ஆகவே ராவணனுக்கு வாலியின் வால் மீது பயம்.இது அனுமனுக்குத் தெரியும்.
ஆகவே ராவணனிடம் வாலியைப் பற்றி அவன் கூறும் போது.,
அஞ்சலை அரக்க! பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே
வெஞ்சின வாலி, மீளான், வாலும் போய் விளிந்ததன்றே”
என்கிறான்.
வாலி போய் விட்டான். மீளமாட்டான். அவன் வாலும் போய் விட்டது, பயப்படாதே என்று ராவணனைக் கிண்டல் செய்கிறான் அவன்.
இலங்கையின் பெருமையைச் சொல்ல வந்த கம்பன் இந்திரஜித்தின் மாளிகை பற்றிய காவலைச் சொல்கிறான்.
அந்த வீரர்கள் காவல் காத்த லட்சணத்தை அவன் சொல்லும் போது நகைச்சுவையும் தவழ்கிறது; இலங்கையின் அளப்பற்ற வீர பராக்ரம காவலும் புரிகிறது.
ஏதியேந்திய தடக்கையர் பிறை யெயிறிலங்க
மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களு மொழிவார்
ஓதி லாயிர மாயிர முணர்விலி யரக்கர்
காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான்
ஊர்தேடு படலம் பாடல் எண் 139
வாள் முதலிய ஆயுதங்களைக் கொண்ட பெரிய கைகளை உடையவர்கள் ,பிறைச் சந்திரன் போன்ற வக்கிரமான பற்கள் வெளியே விளங்க இருப்பவர்கள் அதாவது சிரித்தவாறு புன்முகத்துடன் இருப்பவர்கள், பழமொழிகளுடன் பெரிய சரித்திரங்களையும் விடுகதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்
இந்திரஜித்தின் வீட்டைக் காவலர்கள் காவல் காத்த லட்சணம் இது தான்.
கம்பன் கையாண்ட வண்ணங்கள் 96
10569 பாடல்களில் அவன் சுமார் 43 வகையான விருத்த வகைகளைக் கையாளுகிறான்.
கம்பனில் திளைத்துக் குளிக்கும் கவியான கே.என். சிவராஜ பிள்ளை கவி இலக்கணமாகச் சுட்டிக் காட்டுவது ஏழு பண்புகளை.
மாதுரியம், தெளிவு, வளம், பாவிகம் (Idealisation), அணி, இசை, தொனிப்பொருள் ஆகிய அந்த ஏழையும் கம்பன் தன் காவியத்தில் எப்படிக் கட்டிக் காத்து பரிமளிக்க வைத்தான் என்பதை கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை என்ற நூலில் அவர் 36 பாக்களில் விளக்குகிறார்.
கம்பனது கவிதைளில் தமிழ் யாப்பிலக்கணம் விவரிக்கும் 120 அணிகளையும் கணலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு யமகப் பாடலைப் பார்ப்போம்
சுந்தரகாண்டத்தில் ஊர் தேடு படலத்தில அடுத்தடுத்து நான்கு யமகப் பாடல்கள் வருகின்றன. அவற்றில் ஒன்று இது.
அஞ்சு வணத்தி னாடை யுடுத்தா ளரவெல்லாம்
அஞ்சு வணத்தின் வேக மிகுத்தா ளருளில்லாள்
அஞ்சு வணத்தி னுத்தரி யத்தா ளலையாரும்
அஞ்சு வணத்தின் முத்தொளி ராரந் தணி கொண்டாள்
இலங்கா தேவியின் தோற்றத்தை கம்பன் இந்தப் பாடலில் வர்ணிக்கிறான்.
பாடலின் பொருள்:
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் – வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை ஆகிய ஐந்து நிறங்கள் கொண்ட ஆடையை உடுத்தி இருந்தாள்
அரவெல்லாம் அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் – பாம்புகளெல்லாம் கண்டு பயப்படும் கருடனைப் போன்ற கடும் வேகம் கொண்டவள்
அருள் இல்லாள் – இரக்கம் என்பதே சற்றும் இல்லாதவள்
அம் சுவணத்தின் உத்தரியத்தாள் – அழகிய பொன்னாலான மேலாடையை உடையவள்
அலை ஆரும் – அலை பொருந்திய
அம் – கடல் நீரில்
சு – அழகான
வள் – ஒளி பொருந்திய
நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணி கொண்டாள் – சங்கினின்று பிறந்த முத்துக்கள் ஒளி வீசும் மாலையாகிய அணிகலனைத் தரித்திருந்தாள்.
எப்படி இலங்கா தேவியின் வர்ணனை?
ராவணனின் பெருமை, ராம ராவண யுத்தம், வாலி வதம், அனுமனின் சொல் நயம், பரதனின் மாண்பு, லட்சுமணனின் சேவை, குகனின் நட்பு என இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்து அவனது கவி நயத்தைச் சொல்லப் போனால் நாள் ஆயிரமும் போதாது; நா ஆயிரமும் போதாது.
கம்பன் திருவரங்கத்தில் தன் கவிதையை அரங்கேற்ற விரும்பினான். ஆனால் அங்குள்ளவர்கள் தில்லை திட்சிதர்கள் ஒப்புக் கொண்டால் இங்கு அரங்கேற்றம் செய்யலாம் என்றனர். தில்லை சென்ற கம்பன் அங்குள்ள 3000 தீட்சிதர்களையும் எப்படி ஒருங்கே கூட்டுவது என்று திகைத்தான். ஆனால் அங்கு ஒரு குழந்தை இறக்க 3000 தீட்சிதர்களும் ஒருங்கே கூடினர்.
நாகபாசப்படலத்தைக் கம்பன் பாட இறந்த குழந்தை உயிர் பிழைத்தது. இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அனுமதியும் கிடைத்தது. அரங்கேற்றமும் தடையின்றி நடந்தது. கம்பனின் வாழ்வில் ஏராளமான சுவையான நிகழ்ச்சிகள் உண்டு. இவற்றைப் பலத் தனிப்பாடல்கள் விளக்குகின்றன.
சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி, மும்மணிக்கோவை உள்ளிட்ட பல நூல்களையும் கம்பன் படைத்துள்ளான்.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்
என இவ்வாறு ராம நாமத்தின் சிறப்பைக் கம்பன் கூறுகிறான்..
ராம நாமத்தைத் துதிப்போம்; அதன் பெருமையை உணர்த்தும் கம்பனைப் போற்றுவோம்.
Date uploaded in Sydney, Australia – 18 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-6; final part; நிறைவு
வள்ளுவனும் அவ்வையாரும் இறைவனின் பாத கமலங்களைத் தொழுது நூல்களைத் துவக்கியதைக் கண்டோம் ; விநாயகர் அகவலில் அவ்வையார், பாதங்களில் சரணடைந்து நூலை/ துதியை நிறைவு செய்கிறார்
வித்தக விநாயக விரைகழல் சரணே – வரி 72.
அதற்கு முன்னர் ஐந்தெழுத்தின் மகிமையை, பொருளை உணர்த்தி , உயர்ந்த தத்துவங்கள் கூறும் நிலையை அடைய உதவியதாகவும் நன்றிப் பெருக்குடன் குறிப்பிடுகிறார்.
இது உண்மையில் பலசுருதி ஆகும். யார் யார் எல்லாம் இந்த அகவலைப் பொருள் உணர்ந்து படிக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் கிடைக்கும் நிலை இது
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட…….
…………………………..
என்னை யறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
இதோ கடைசி நான்கு வரிகள் :-
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.
அதற்கு முந்தைய இரண்டு வரிகளில்
திருநீறு பூசிய ,தவ வேடம் தாங்கிய, சிவனடியார்களின் சத் சங்கத்தில் தன்னைச் சேர்த்ததாலேயே இந்த உயர் நிலை கிடைத்தது என்றும் சொல்கிறார். துவக்கத்திலேயே குருவின் பெருமையைச் சொன்னார்; இப்போது சத் சங்கத்தின் / அடியாரின் பெருமையைச் சொல்கிறார்
அதாவது உயர் நிலையை அடைய தொண்டர் குழாத்தில் இருக்கவேண்டும்; அப்படியில்லாவிடில் சாண் ஏறி முழம் சறுக்கிய கதை ஆகிவிடும் .
இதை அவ்வையார், ஆதி சங்கரர் , அபிராமி பட்டர் எல்லோரும் வலியுறுத்துகின்றனர் :
சத் சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்
நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி —— (பாடல் 9, ‘பஜ கோவிந்தம் ஆதி சங்கரர்,’)
பொருள்; ஞானிகளின் சேர்க்கையினால், ஆசைகள் அறவே நீங்கும்; ஆசைகள் நீங்கினால் மோஹம் நீங்கும்; மோஹம் நீங்கினால் சஞ்சலமற்ற திடச் சித்தம் தோன்றும்; இந்த திடச் சித்தம் வந்துவிட்டால் முக்தி கிடைக்கும், அதாவது, உயிர் வாழும்போதே யோகிகள் ஆகிவிடுவோம்.
****
அவ்வையாரிடம், முருகப் பெருமான் ‘அம்மையே! இனியது எது?’ என்று கேட்டார்; அவ்வை சொன்னார்:
பொருள்: தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது இனிது. அதைவிட இனிது சத்சங்கம், அதாவது ஞானம் படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அந்த பெரியோரை நினைப்பதே! அதாவது அவர்களைப் பின்பற்றுவதே!
இதையே வாக்குண்டாம் என்ற பாடலில் மேலும் தெளிவாகச் சொல்கிறார்:
தமிழ் முனிவன், தெய்வப் புலவன் திருவள்ளுவரும் திருக்குறளில் பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினம் சேராமை எனப் பல அதிகாரங்களில் இந்தக் கருத்தை விளக்குவார்:
“ஒருவன் அடையும் பேறுகள் எல்லாவற்றிலும் அரிய பேறு எனப்படுவது தம்மைவிட மூத்த ஆறிவுடையோரப் போற்றித் தமக்கு சுற்றமாகக்கொள்ளும் செயலாகும் ( குறள் 443)
ஏறத்தாழ அவ்வையார், இனியது கேட்கின் தனிநெடு வேலோய் …பாடலில் சொன்ன கருத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார் வள்ளுவர் !
*****
அருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள்:
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்து புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று பாடுகிறார். சத் சங்கம் வேண்டும் என்பதை வள்ளலார் தூய தமிழில் கூறிவிட்டார்!
****
மாணிக்கவாசகரும் திருமூலரும், இதை அவ்வைக்கு முன்னரே பாடிவிட்டனர்
தாமே தமக்குச் சுற்றமுந்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 45. யாத்திரைப் பத்து
****
“தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனு மாமே.”
என்ற திருமூலர் வாக்கை இங்கு நினைவுகூர்க. இதனால், இறைவனது அடியார் கூட்டம் திருவடிப் பேற்றினை நல்கும் என்பது கூறப்பட்டது.
இந்தப் பாடல்களில் பகவத் கீதையில் கண்ணன் சொன்ன உத்தரேத் ஆத்ம நாத்மானம் (நமக்கு நமே நண்பன் நமக்கு நாமே எதிரி ) கருத்தும் வருவதைக் கண்டு மகிழ்க.
****
இதற்கும் முன்னதாக உபநிஷதம் சொல்லும் வரிகளை அவ்வையார் சொல்கிறார் –
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
“anor aniyan mahato mahiyan” (Katha Upanisad 1-2-20), meaning “God is smaller than the smallest and greater than the greatest.”
இறைவன் அணுவுக்கும் அணுவானவன்/ சிறியவன்; உலகில் / பிரபஞ்சத்தில் காணப்படும் பெரிய பொருளுக்கும் பெரியவன் என்று கடோபநிஷத் கூறுகிறது.
******
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து….
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ”
Brahman beyond speech & thought:
(Anuvaga 4 of Anandavalli) Taitriya Upanishad
When all words turn back as well as Manas, without reaching; he who knows Brahman’s bliss fears not at any time.
For the Yogi who sees the Self, the objective world does not exist, and so it is night. For the common man who sees the world, the Self does not appear and so it is a night for him.
பகவத் கீதை BG 2.69: எல்லா உயிரினங்களும் பகல் என்று கருதுவது ஞானிகளுக்கு அறியாமையின் இரவாகும், மேலும் அனைத்து உயிரினங்களும் இரவாகக் காணும் பகல் என்பது ஞானிக்கு பகலாகும்.
For the Yogi who sees the Self, the objective world does not exist, and so it is night. For the common man who sees the world, the Self does not appear and so it is a night for him.
இங்கே யோகிக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வேறுபாடு விளக்கப்படுகிறது
இதை நிஜமான இரவு பகலொடு ஒப்பிட்டுக் குழம்பிக்கொள்ளக் கூடாது ;அறியாமை என்பது – இரவு ;ஞானம் என்பது- ஒளி / வெளிச்சம் – பகவத் கீதை 2-69
******
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந் தம்அளித்து…………
ஏன் ஞானிகள் எல்லோரும் சேரவாறும் ஜகத்தீரே — என்று நம்மை அறைகூவி அழைக்கிறார்கள். அங்கு எல்லையில்லாத ஆனந்தத்தை அனுபவிக்கலாம் ஒரு உணவு விடுதி பற்றியோ சுற்றுலாத் தலம் பற்றியோ எழுதிய கட்டுரைகளைப் படித்தால் எப்படியாவது அங்கே போக வேண்டும் என்று நாம் துடிக்கிறோம் ; அதே போல அடியார்கள் எழுதியதைப் படித்தவுடன் நாமும் எல்லையில்லாத ஆனந்தத்தை அடையத் துதிக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் பலருக்கும் பிரம்மானந்தா, நித்யானந்தா, விவேகானந்தா, ஆனந்தா , யோகானந்தா என்றெல்லாம் தாய் தந்தையர் பெயர் வைக்கிறார்கள் எல்லையில்லாத ஆனந்தத்தைப் பெற வேண்டும் என்பதே அவர்களுடைய எதிர்பார்ப்பும் கூட .
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஒரு உபன்யாசத்தில் சொன்னதைப் போல இதை படிக்கப் படிக்க நாளுக்கு நாள் பொருள் விளங்கி ஞானம் பெருகும்.
விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை நிறைவு
****
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.– கபிலதேவ நாயனார்
மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை
–சுபம்- –
Tags– விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை 6, நிறைவு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
16-2-2025அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
கவிச்சக்கரவர்த்தி கம்பர்! – 1
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தந்த கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் பற்றி இன்று சிந்திப்போம்.
புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று மகாகவி பாரதியாரால் போற்றிப் புகழப்பட்ட கவிச்சக்கரவர்த்தியைப் பற்றி வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம்.
சோழநாட்டுக் காவிரித் தென்கரையில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே இரண்டு மைல் தொலைவில் உள்ள ஊர் தேரழுந்தூர் அல்லது திருவழுந்தூர் என்னும் திருத்தலத்தில் கம்பர் அவதரித்தார்.
கம்பன் பிறந்த ஊர் காவேரி தங்கும் ஊர்
கும்பமுனி சாபம் குலைந்த ஊர் – செம்பதுமத்
தாதகத்து நான்முகனும் தாதையும் தேடிக் காணா
ஓதகத்தார் வாழும் அழுந்தூர்
என்று தமிழ் நாவலர் சரிதை (பாடல் 185) பெருமையோடு திருவழுந்தூரைப் பற்றி விவரிக்கிறது.
இவரை ஆதரித்தவர் திருவெண்ணெய்நல்லூரிலே வாழ்ந்த பெரும் வள்ளலான சடையப்ப வள்ளல் என்பார். சேர சோழ பாண்டியர் ஆகிய தமிழ் வேந்தர் மூவரும் ஒருவருக்கொருவர் போர் புரிந்து வந்த காலத்திலும் அவர்கள் மூவரையும் தன் இல்லத்திற்கு ஒருங்கே அழைத்து விருந்து வைத்த பெருந்தகை சடையப்ப வள்ளல் ஆவார்.
இவர் வாழ்ந்த காலத்திலேயே குலோத்துங்கள் சோழ நாட்டை ஆண்டு வந்தான்; அவரது அவையை ஒட்டக்கூத்தர் என்னும் பெரும் புலவர் அலங்கரித்தார். இதே காலத்தில் நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவரும் வாழ்ந்து வந்தார்.
இந்த வரலாற்றுச் செய்திகள் மூலம் கம்பர் வாழ்ந்த காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்பது பெறப்படுகிறது.
சிறு வயதிலிருந்தே இராமன் பால் பெரிதும் ஈர்ப்புக் கொண்டிருந்த கம்பன் வால்மீகியின் ராமாயணத்தை முற்றிலுமாகப் படித்து உணர்ந்தான்.
தமிழ் மற்றும் வடமொழியில் வல்லவனாக இருந்ததாலும் திருவருள் பெற்றமையாலும் இராமாயணத்தைப் பாடுவது என்று உறுதி கொண்ட அவன் அற்புதமான இராமாயணத்தைத் தமிழில் இயற்றித் தமிழுக்கு ஏற்றமும் பெருமையும் அளித்தான்.
வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்
தீங்கவி செவிகளாரத் தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்
என்பது கம்பனின் வாக்கு.
வால்மீகியில் ஊறித் திளைத்த கம்பன் அவரது நான்கு பாதங்கள் கொண்ட ஸ்லோகத்தில் ஒன்றில் கூட ஒரு பாதத்தைக் கூட மாற்ற முடியாது என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறான். அதைப் பருகிப் பருகி உளம் களித்த அவன் அன்பு என்னும் தேனைக் குடித்து ஒரு ஊமை உளறுவதைப் போல உளறலானேன் என்று அவையடக்கமாகக் கூறுகிறான்.
நடையில் நின்றுயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோமறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல்லூர் வயின் தந்ததே
என்ற கம்பராமாயணப் பாயிரச் செய்யுள் மூலம் இக்காவியத்தை இயற்ற ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் சடையப்ப வள்ளலே என்பது தெரிய வருகிறது.
உத்தரகாண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களைக் கம்ப ராமாயணம் கொண்டுள்ளது. இதில் 116 படலங்கள் உள்ளன. பாடல்கள் 10500 முதல் 10569 அல்லது 10576 வரை உள்ளன.
இவற்றின் அருமையையும் பெருமையையும் முற்றிலுமாக உரைத்தவர் இதுவரை இல்லை. அவ்வளவு அற்புதமான சொற்சுவை மற்றும் பொருள் சுவை கொண்ட பாடல்கள் இவை.
கம்பனின் எல்லையற்ற தன்மையை விளக்கமாகக் கூற விரும்பிய மகாகவி பாரதியார் தமிழச்சாதி பாடலில், “எல்லையொன்றின்மை” எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் என்று குறிப்பிட்டு கம்பனின் infinity தன்மையைக் கூறுகிறார்
கம்பனை அணு அணுவாக, சொல் சொல்லாகச் சுவைத்து ரசிக்கும் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை தனது அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:
சொல் கண்டார் சொல்லே கண்டார்; சொல்லினுட் சொலிக்கும் ஞான
எல் கண்டார் எல்லே கண்டார்; இனிமையோடிகலுஞ் சந்த
மல் கண்டார் மல்லே கண்டார்; மகிழ்கவித் துறைகை போய
வல் கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?!!! (பாடல் 72)
வானதிகந் தருந்தகைய வருந்ததியா நெடுமலையை வணங்கி அப்பால்”
என்பது கம்பனின் வாக்கு.
அருந்ததி என்னும் மலையைக் குறிப்பிட வந்த கம்பன் சிவன் பெரியவன்; இல்லை விஷ்ணு பெரியவன் என்று சண்டை போடுகின்ற அறிவிலோர்க்கு – முட்டாள்களுக்கு – பரகதி – முக்திப் பேறு அடையவே முடியாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறான்.
கம்பனின் சொல்நயமும், நாடகபாணியில் ஒவ்வொரு காட்சியையும் அவன் சித்தரிப்பதும் நம்மை பிரமிக்க வைக்கும்.
கோசல நாட்டை வர்ணிக்கும்போது நம்மை திடுக்கிட வைக்கிறான்.
அங்கு வண்மை இல்லை; திண்மை;உண்மை இல்லை; ஒண்மை இல்லை.ஏன் என்று காரணத்தை அவன் விவரிக்கும் போது நாம் களிப்படைகிறோம்.
“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை ஓர் பொய் உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்”
இப்படி ஒரு வர்ணனையை எந்த இலக்கியத்திலும் காண முடியாது.
எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ என்று சுருக்கமாகச் சொல்லி நம்மை வியக்க வைக்கிறான்.