GNANAMAYAM 16-2-2025 BROADCAST SUMMARY

GNANAMAYAM 16-2-2025 BROADCAST SUMMARY

மலேசியாவிலிருந்து புகழ்பெற்ற லாஸ்ய ஆர்ட்ஸ் அகாடமி ஸ்தாபகர் திருமதி மதுர நாட்ய மாமணி குருவாயூர் உஷாதுரை பேட்டி அளித்தார்

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

பிப்ரவரி 16-ம் தேதி

16-2-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team- Mr Bala Subrahmanyan and Mrs Padma Bala Subrahmanyan from London.

World Hindu News in Tamil was  presented by Vaishnavi Anand from London

***

Bengaluru Nagarajan spoke on Tamil Poet Kambar

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on  Bhavani Sangameswarar Temple

***

INTERVIEW WITH FAMOUS DANCER & TEACHER MALAYSIA  Mathura Natya Mamani Nrithya Aacharya Kalai Thaai Guruvayoor Usha Dorai .

LONDON SWAMINATHAN INTERVIEWED Mrs Usha Durai, founder and principal of Laasya Arts Academy .

GURUVAYUR USHA DURAI INTRODUCING NATYA ICON 

Guru Srimati Mathura Natya Mamani Guruvayur Usha Dorai 

Mathura Natya Mamani Nrithya Aacharya Kalai Thaai Guruvayoor Usha Dorai, is no stranger to the world of music as she was born into a family of acclaimed Carnatic singers and musicians from Kerala, India. It is to her father, Mridangam Maestro Guruvayur Dorai and her aunt, Tamilisai Maestro Guruvayur Ponnamal that she owes her artistic and creative visions.

The founder and principal of Laasya Arts Academy, Guruvayur Usha is a Bachelor Degree holder from Madras University, graduated in Sociology with music as an elective subject. She has made her dance debut under the tutelage of Smt.Indra Rajan and Shri Pandanallur Srinivasa Pillai with her “Arangetram” in 1983. As a testament of her dedication to her profession, the title of ‘MADURA NATYA MAMANI’ was conferred to her in 1986. She later pursued a diploma in Bharatanatyam. Her combination of talents as a dance/music teacher, choreography,composer and instrumentalist mastering not only the Nattuvangam but also mridangam, tabla and veena have made her an exceptionally rare breed of teacher.

Laasya Arts is her dream school which serves not only as a dance academy, but also as creativity hub where a lot of ideas are created and applied in musical, dance and theater arrangements. To date, Guruvayur Usha Dorai conducted 49 arangretrams, including 3 vocal arangetrams which each one is uniquely presented and far different from each other. Apart from that, she also has produced and backboned a lot of in-house and collaboration productions. Some of her significant productions are MURUGA CHARANAM, GOVINDA, MAA..!-A TRIBUTE TO MOTHERS, NRITHYA YOGA, SAMARPANAM, and MANTHRA TANTHRA.

Recently, she toured her production KAAPIYAM, all over India and received many good critics and credits to her effort in spreading the Tamil Literature works. Besides that, Guruvayur Usha serves her passion involving herself in choreography and orchestration. LAHARI, a production by Damaru Creations, crystallizes the teachings of Aadi Sankara into a well-received dance and musical production in Malaysia and Singapore which intensified credits to her talent in choreography. In addition, AMRAPALI HARMONY FUSION PROGRAMME by a Singapore based production company, GR Vision also utilizes her expertise in music  dance and theater orchestration and it has been successfully touring the world. Not stopping there, she has indulged in some literary work where she has written 4 padha varnham lyrics, 3 shabdams and 7 padhams which is definitely helping her to soar higher in this artistic world.

All her efforts through these years had been fulfilled when she was conferred the title ‘Nrithya Aacharya’ and ‘Kalai Thaai’. It is also worth to note down that she aptly received the award ‘Queen of Nattuvangam’ in 2016 & Kappiya nattiya nayaki, Nattuva perarasi and along with Nattuvanga ratnakara award in the same year. Adding more to the list are  Aryabhatta award,  KARTANATAKA ( INDIAN AWARD) and KALA SAMMAN award by Bharatiya Samskrithi Club Kolkata in Kuala Lumpur. Other highlights in her life include life time achievement award by AIDA International and Natya Icon award by Veharra Arts Kuala Lumpur in 2020.

Life time achievement award by Sugam organisation in 2021.

Honorary Doctorate in 2022 from Kolkata university

Invitation by ICC to perform in Ayodhya in2022

2022 musical ensemble 

Eesha Sarvesha

2023

Staged in three places in Tamilnadu

Eesha Sarvesha

Comprising 50 students 

2024 

Meenakshi a warrior princess ( music dance artistic director) Singapore Sarva fine arts

London Swaminathan interviwed her from Sydney, Australia 

***

Kalyanji  anchoring from India.

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர் லண்டன் திரு. பாலசுப்ரமணியன் திருமதி பத்மா பாலசுப்ரமணியன்

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு – பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்

. ***

பெங்களூர் நாகராஜன் சொற்பொழிவு – தலைப்பு – கவிச் சக்ரவர்த்தி கம்பர்

***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

மலேசியாவிலிருந்து புகழ்பெற்ற லாஸ்ய ஆர்ட்ஸ் அகாடமி ஸ்தாபகர் திருமதி மதுர நாட்ய மாமணி குருவாயூர் உஷாதுரை பேட்டி அளித்தார்   – லண்டன் சுவாமிநாதன் – லண்டன் சுவாமிநாதன் ; – லண்டன் சுவாமிநாதன் பேட்டி கண்டார்

 ***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- Gnanamayam, Summary, 16-2-25, broadcast

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-5 ; என்னை யறிவித்து எனக்கருள் செய்து (Post.14,216)

Written by London Swaminathan

Post No. 14,216

Date uploaded in Sydney, Australia – 17 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-5;

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

…….

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

*****

இந்த வரிகளில் அவ்வையார் நிறைய யோக ரகசியங்களை சொல்கிறார். இங்கும் எண்களைப் பயன்படுத்துகிறார் . மிகவும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் — நமது உடலில் மூலாதாரத்தில் பாம்பு போல ஒரு மாபெரும் சக்தி உறைந்து  கிடக்கிறது ; அதை மூச்சுப் பயிற்சியின் மூலம் மேலே கொண்டுவந்தால் முக்தி கிடைக்கும்; அது நடக்கும் காலத்திலேயே பல அற்புகங்களும் நடக்கும். இது பற்றி எழுதுவோரும் பேசுவோரும் லட்சக் கணக்கில் உள்ளனர் . இதை அனுபவத்தில் செய்து காட்டியோர் வெகு சிலரே.

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

இதில் பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியில் வரும் சொற்கள் வருகின்றன ; இடகலை, பிங்கலை, சுழுமுனை , மூலாதாரம் ஆறு ஆதாரம், சதுர்முக சூக்கம், குண்டலினி , அசபை .

இவைகளுக்கு அர்த்தம் தெரியாமல் இந்த வரிகளை விளங்கிக்கொள்ள முடியாது. ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேச மஞ்சரியிலும் விவேகானந்தர் ராஜ யோக புஸ்தகத்திலும் விளக்கங்கள் உள்ளன. அவர்கள் அனுபவித்து எழுதியவர்கள்; மற்றோர் பிறர் சொன்னதை — என்னைப் போல — கிளிப்பிள்ளை போல திரும்பச் சொல்கின்றனர்.

அவ்வையார் வேண்டுவது குண்டலினி சக்தியை எழுப்பி அதை மேலே செலுத்தி முக்தி பிற அருளுக என்பதாகும்.

குண்டலினி சக்தி பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது அனுபவங்களின் வாயிலாக விரிவாக எழுதியுள்ளார் .

மனத்தின் ஏழு நிலைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).

மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.

மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.

தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.

இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம்ஸ்வாதி ஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.

முதலில் சொற்களின் பொருளைக் காண்போம் . இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதுவரை விஞ்ஞானிகளுக்குத் தெரியாது; அவர்களே அனுபவிக்கும்வரை புரியவும் புரியாது

*****

ஆறு ஆதாரங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினேயம்

xxxxxx

இடைகலை – இடது துளை வழியாக மூச்சு விடுதல் /சந்திரன்

பிங் கலை  வலது துளை வழியாக மூச்சு விடுதல் / சூரியன்

சுழுமுனை — இருதுளை வழியாகவும் மூச்சுக்காற்று சென்று வருதல் /அக்கினி

xxxx

பாம்பு- மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும் குண்டலினி என்னும் மகத்தான சக்தி

அசபை — அஜபா என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; நாம் வாயால் சொல்லாமலேயே நம் மனது முனுமுனுக்கும் மந்திரம்; இதை ஹம்சம் என்றும் சொல்லுவார்கள்; அதை உணர்ந்தவர்களை பரம ஹம்சர் என்று அழைப்போம். வெளியேறும் மூச்சின் ஒலி – ஹம் ; உள்ளே இழுக்கும் மூச்சின் ஒலி- சம் .பிராணாயாமம் செய்வோர் இதை ஊமை எழுத்து என்றும் சிவோஹம் என்றும் சொல்லுவர்.

xxxxxx

யோகத்தின் மூலம் இறைவனை அடைய முயலுவோருக்கு ஏற்படும் அனுபவம் இது. குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள ஆறாவது சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும்.

எட்டு என்பது- ஓசை, ஊறு , ஒளி, சுவை, நாற்றம் என்ற ஐந்து உணர்வுகளுடன் இறுப்பு , எழுச்சி, மனம் என்ற மூன்றும் சேர்த்து எட்டு.

xxxx

புற உலகில் சதாசிவனையும், மனம் ஆகிய அக உலகில் சிவலிங்கத்தையும் காட்டுவாயாக. ஆத்மலிங்கம் பஜரேஅதி அத்புத லிங்கம் பஜரே” — என்று பஜனையில் பாடல்கள் பாடுவதும், உள்ளே உறையும் இறைவனை  நினைத்தே!

xxxx

கரும்பு போல் இனிமையைச் சுரக்கும் வழியைக் காட்டி, அஞ்செழுத்தாகிய நமசிவாய என்பதன் பொருளும் காட்டி, என்னை ஆட்கொண்ட விநாயகனை சரண் அடைகிறேன்.  உன்னுடைய திருவடிகளே எனக்கு புகலிடம் ஆகிறது.

xxxx

மூன்று மண்டலம் என்பது உடலிலுள்ள சந்திர, சூரிய அக்கினி மண்டலம் என்பர் ஆன்றோர்.

ஆதித்தன்- சூரிய மண்டலம், குமுதா சகாயம்- நிலவின் தோழன் குமுதா மலர்= சந்திர மண்டலம் .

ஈரெட்டு நிலை = பதினாறு கலை= பிராணாயாமம் செய்வோரின் அகரத்தியில் உள்ள சொல்.

சண்முக = ஆறு+ சதுர் முக = நான்கு ; ஆறு பருமைப் பொருள்; நான்கு நுண்மைப்பொருள்

எண்முக= எண்சாண் உடம்பு   .

காலால் எழுப்பி = காற்றுப் பொய்யெச்சியால் குண்டலினியை எழுப்பி;  

****

இவை பற்றி ஏராளமானோர் எழுதுகின்றனர் ; அவை எல்லாம் வேற்றுப் பேச்சு உண்மையில் இவைகளை பயின்று அனுபவித்த ராமகிருஷ்ணர், விவேகானந்தர் , சுவாமி சிவானந்தர் ஆகியோர் எழுதியதை மட்டும் படித்தறிய வேண்டும்.

தாயுமானவர் பராபர்க் கணினியிலும், பட்டினத்தாரிபூரண மாலையிலும் இவை பற்றிப் பாடியுள்ளனர்.

இவ்வாறு குண்டலினி என்னும் பாபிம்பினை — அக்கினியை எழுப்பி உடலிலுள்ள ஆறு சக்கரங்களை வழியாக தலைக்கு கொண்டு சென்றால் ஆயிரம் இத்தலத் புகழ்  தாமரை போலுள்ள சஹஸ்ராரத்தை அடைந்தவுடன் அமுதம் சுரப்பதால் எல்லையில்லாத ஆனந்தம் சுரக்கும்; இறைவனும் காட்சி தருவான்; சமாதி நிலை ஏற்படும்  என்பது அனுபவித்த யோகியர் வாக்கு

******

என்னை அறிவித்து — இது உபநிஷத கட்டளை

இதை சாக்ரடீஸ் பின்பற்றி உன்னையே நீ அறிவாய் என்கிறார் .

இதை திருமூலர் இதை அழகாக தூய தமிழில் சொல்கிறார்

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.

—-திருமூலரின் திருமந்திரம்:

தன்னை அறிந்தால் என்ன பலன் ?

முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்

பின்னை வினையைப் பிடித்துப் பிசையலான் என்கிறார் திருமூலர்

இவையெல்லாம் பகவத் கீதையிலுந்து லிருந்து வந்த கருத்துக்கள்

கீதையில் கிருஷ்னும் தானே தனக்கு நண்பன் என்கிறார்

BG 6.5: உங்கள் மனதின் சக்தியால் உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்ஏனென்றால் நீங்களே உங்களுக்கு நண்பன்நீங்களே உங்களுக்கு எதிரி.

उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् |
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मन: || 6-5||

uddhared ātmanātmāna nātmānam avasādayet
ātmaiva hyātmano bandhur ātmaiva ripur ātmana

உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவஸாதயேத் |

ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: ||6-5||

இதனால்தான் அவ்வையாரும்

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

என்கிறார் .

தொடரும்…………………..

Tags-விநாயகர் அகவல் ,ஆராய்ச்சிக் கட்டுரை-5, என்னை யறிவித்து ,எனக்கருள் செய்து

ஆஸ்திரேலியாவில் அழகான சிவன் கோவில் -25 (Post No.14,215)

Written by London Swaminathan

Post No. 14,215

Date uploaded in Sydney, Australia – 17 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 25

சிட்னி மாநகரிலிருந்து  ஒரு மணி நேரம் பயணம் செய்தால் மிண்டோ( Minto,  NSW 2566)  என்ற நகரினை அடையலாம் அங்கு அமைதியான சூழ்நிலையில் ஒரு அழகான சிவன் கோவில் இருக்கிறது. நான் என் குடும்பத்துடன் பிப்ரவரி 16 ஆம் தேதி (2025) அங்கு சென்றேன். சூலூர்  சிவ சண்முக  குருக்கள் எங்களை வரவேற்று நல்ல தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தார்; பிரசாதமும் கிடைத்தது .

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் குஜராத் மாநில மக்கள் கட்டிய இந்தக் கோவில் வடக்கத்திய தெற்கத்திய கோவில்களின் அம்சத்தைக் கொண்டு விளங்குகிறது.

இலங்கைத் தமிழர்களும் இங்கு ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். நாங்கள் சென்றபோது நிறைய நேபாள இந்துக்களும் ஆஸ்திரேலிய நகரத்தார் சமூக மக்களும் வந்திருந்தனர் . அவர்களுடைய வருடாந்திர காவடி உற்சவம் நடந்ததால் முருகப்பெருமானின் உற்சவ கோலத்தையும் பக்தர்களின் காவடியையும் தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டியது

கோவிலின் அமைப்பு

கோவில் பிரதான சந்நிதி காசி விஸ்வநாதர் ஆவார். பெரிய, அழகான சிவலிங்க உருவத்தில் அவரைத் தரிசிக்கலாம். இந்த விக்கிரகத்துக்கு மட்டும் தமிழ் ஆகம கோவில்களைப் போல அபிஷேக ஆராதனைகள் உண்டு அவருக்கு ஒரு புறம் அஷ்ட தச

புஜ  துர்க்கையும்  மறு புறம் ராம லெட்சுமணர் சீதாதேவி அனுமன் சகிதமும் காட்சி தருகின்றனர். இந்த துர்கா, ராம பரிவார் வடக்கத்திய பாணியில் உள்ளன. வெறும் உடை அலங்காரம் மட்டுமே .

கோவிலுக்குள் நுழையும் போதே கணபதியையும் முருகனையும் தரிசிக்கலாம்.முக்கிய சந்நிதிதிகள் மூன்றினைத் தவிர குட்டி சந்நிதிகளில் கிருஷ்ணர், புவனேஸ்வரி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், கால பைரவர் முதலானோரின் விக்கிரகங்களும் இடம்பெற்றுள்ளன .

கோவிலின் தனிச் சிறப்பு

வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத சில சிறப்புகள் இங்கே காணப்படுகின்றன. மிகப்பெரிய சிவன் சிலையும் அனுமன் சிலையும் கோவிலுக்கு மெருகு ஊட்டுகின்றன. அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிலைகளை படம் பிடிப்பதோடு செல்பி எடுக்கவும் தவறுவதில்லை .

இவை தவிர இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களின் மாடலும் ஒரு மண்டபத்தில் இருக்கின்றன. இந்தியா சென்று தரிசிக்க முடியாதவர்கள் இந்த மண்டபத்தை வலம் வந்தால் போதும்;  கோவிலில் யாக சாலை இருப்பதோடு எதிர்கால விரிவாக்கத்  திட்டங்களும் உள்ளன .

****

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !

நாங்கள் சென்ற நாளில், நகரத்தார் சமூகத்தினர் ஆண்டு தோறும் நடத்தும் காவடி, பால்குட நிகழ்ச்சியும் நடந்தது ; நூற்றுக்கும் மேலானோர் கலந்து கொண்ட இந்த விழாவில் பெண்களும் ஆண்களும் காவடி மந்து வர, முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியும் வலம் வந்தார் . சூலுர் சிவ சண்முக குருக்கள் சொன்ன நீண்ட தமிழ் சங்கல்பத்தை அவர்கள் பக்தி சிரத்தையோடு சொன்னார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில், லண்டன் முருகன் கோவிலில் நடந்த நகரத்தார் உற்சவத்துக்கு என்னைச்   சிறப்பு விருந்தினராக அழைத்து  சொற்பொழிவாற்றச் சொன்னார்கள். இன்றைய உற்சவத்தைப் பார்த்தபோது அந்த நினைவலைகள் உள்ளத்தில் கிளர்ந்து எழுந்தன

சிவராத்திரி நிகழ்ச்சிகள்

அடுத்து வரப்போகும் சிவராத்திரி நாளில் சிவனுக்கு பக்தர்களே பாலபிஷேகம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கணபதி ஹோமம் முதல் ஏகாதசரருத்ர ஹோமம் /அபிஷேகம் வரை நடத்தும் அறிவிப்புகளையும் கோவில் வெளியிட்டுள்ளது சென்ற  ஆண்டு தமிழ் அன்பர்கள் அங்கு திருவாசக முற்றோதலையும் நடத்தி இருக்கிறார்கள் . எல்லா சமூகத்தினரும் கோவிலைப் பயன்படுத்துவது ஒரு சிறப்பு .சிட்னி நகருக்கு வரும் அன்பர்கள் ஒரு மணி நேரம் பயணம் செய்து பார்க்க வேண்டிய கோவில் இது

இதோ கோவிலின் முகவரி :

The full address of the temple is

Shri Shiva Mandir

Address: 201 Eagleview Rd,

Minto New South Wales 2566

—subham—

Tags- ஆஸ்திரேலியாவில், அழகான சிவன் கோவில் -25

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 25, மிண்டோ( Minto,  NSW 2566

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல் 16-2-2025 (Post.14,214)

Written by London Swaminathan

Post No. 14,214

Date uploaded in Sydney, Australia – 17 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை ; பிப்ரவரி 16- ஆம் தேதி ; 2025-ம் ஆண்டு

முதலில் மஹா கும்பமேளா செய்திகள்

மகாகும்பமேளாவில்  புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரிப்பு!

 பிரயாக்ராஜ் மகாகும்ப மேளாவில் 50 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். உலகின் பல நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகமான இந்த எண்ணிக்கை, இந்த விழாவை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றியுள்ளது.

கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் மகாகும்ப நகரத்திற்கு வருகை தந்ததால், உலகின் இரண்டு பெரிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நகரமாக இது மாறியுள்ளது. ஒன்றரை மாதங்களில் பிரயாக்ராஜுக்கு வந்த மொத்த மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும் .

ஐம்பது கோடி மக்கள் நேரடியாக பங்கேற்ற உலகின் முதல் விழா இது.

மனித வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவில் மக்கள் பங்கேற்றதற்கான சான்றுகள் எதுவும் இல்லை

உலகிலேயே மிகப்பெரிய விழாவான மகா கும்பமேளாவில் 55 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக உ.பி., அரசு கூறியுள்ளது.

‘பூர்ணிமா’ சிறப்பு வாய்ந்த தினம் என்பதால், திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்; பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் ரோஜா இதழ்கள் தூவப்பட்டன. உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அதிகாலை 4 மணி முதல் லக்னோவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணித்து வருகிறார்.

பிப்ரவரி பத்தாம் தேதி கும்பமேளாவுக்கு வந்து திரிவேணி சங்கமத்தில் பாரத ஜனாதிபதி திரவுபதி முர்மு புனித நீராடினார்.

பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த ஜனாதிபதியை உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் படேல் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர். அவர் அக்ஷயவத்  என்னும் புகழ்பெற்ற புனித ஆலமரத்தையும் படே ஹனுமான் கோவில் அனுமனையும் வணங்கினார்

கடந்த 5-ம் தேதி கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார். அதற்கு முன்னதாக பூட்டான் மன்னர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரபலங்களும் புனித நீராடினர்.

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த மாதம் 13-ந் தேதி பவுர்ணமி அன்று தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஒட்டகம், குதிரைகளில் ஊர்வலகமாக வந்து சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீராடி வருகின்றனர்.

****

கும்பமேளாவை ஆடம்பர விழாவாக சித்தரிப்பதற்கு சாதுக்கள் கண்டனம்

மஹா கும்பமேளா என்பது ஆன்மிகம் மற்றும் மத நம்பிக்கைக்கானது. இதில் தேவையில்லாத விஷயங்களையோ, 5 ஸ்டார் கலாசாரமாகவோ சித்தரிக்க வேண்டாம்’ என, சாதுக்கள் வலியுறுத்தி உள்ளனர்

மாடலாக இருந்து சன்னியாசியான ஹர்ஷா ரிசாரியா, மாலை விற்கும் மோனலிசா, ஐ.ஐ.டி., பாபா அபய் சங், நடிகை மம்தா குல்கர்னி போன்றவர்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இதுவா மஹா கும்ப மேளா? மஹா கும்பமேளாவின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல், ஊடகங்கள் செயல்படுகின்றன. இது சாதுக்கள், ஆன்மிகவாதிகளுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுபோல கூட்டத்தை சமாளிக்க உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் நதிக்கரையில், மணலில், திறந்த வெளியில் துாங்குகின்றனர். பஜனை செய்கின்றனர். புனித நீராடிய பின், சொந்த ஊர் திரும்புகின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம், புண்ணிய நதியில் நீராடுவதுதான். என்று.  ஹிந்து துறவி. மஹந்த் தர்மேந்திர தாஸ் கூறினார்,

*****

மைசூரில் மூன்றுநாள் கர்நாடக கும்பமேளா

மைசூர் கும்பமேளா பிப். 10 ம் தேதி-தொடங்கியது

தெற்கின் பிரயாகராஜ்’ என்று அழைக்கப்படும் டி.நரசிபுரா, திருமகூடலுவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடினர். முதல் நாளன்றே இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

காவேரி-கபில-ஸ்பதிகா, நதிகளின் புனித சங்கமமாக விளங்குவது திருமகூடலி.   இங்கு கும்பமேளா பிப்ரவரி பத்தாம் தேதி  முதல் 12 ஆம்  தேதி வரை மூன்றுநாள் நடந்தது

வெள்ளி ரதத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகளின் ஊர்வலம் வந்தனர். கும்பமேளாவின் இரண்டாவது நாள் பிப்ரவரி. 11 ம் தேதி மாலையில், வாரணாசியில் கங்கை நதியில்  நடைபெறுவது போல மஹா ஆரத்தியும் நடத்தப்பட்டது

*******

டில்லி மாநகரத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் புதிய கட்டிடம்

உலகத்திலேயே மிகப்பெரிய இந்து சமய தொ ண்டர் படையான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின்– அதாவது ஆர் எஸ்.எஸ். அமைப்பின்- புதிய கட்டிடம் டில்லி மாநகரத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி திறக்கப்படுகிறது .

புதுடில்லி :ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்காக டில்லியில், 150 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

டில்லியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு, ஜண்டேவாலா பகுதியின் கேசவ் குஞ்சில் புதிய அலுவலகம் கட்டுவதற்காக 2016ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நீடித்த, கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த அலுவலகம், 4 ஏக்கர் பரப்பளவில் 150 கோடி ரூபாய் செலவில், தலா 12 மாடிகளைக் கொண்ட மூன்று பிரமாண்ட கட்டடங்களுடன் அமைந்துஉள்ளது.

சாதனா, அர்ச்சனா, பிரேரனா என அவற்றுக்கு பெயரிடப்பட்டுள்ளன.

சாதனா கட்டடம், நிர்வாக அலுவலகமாக செயல்படும். அதன் 10வது மாடியில் அதிநவீன வசதிகளுடன் நுாலகம் உள்ளது.

இந்த புதிய அலுவலகத்தில் மொத்தம் 300 அறைகள்; 1,300 பேர் அமரும் வகையில் மூன்று அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் ஒன்றுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்காலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வளாகத்தில் மையமாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தோற்றுவித்த கேசவ் பாலிராம் ஹெட்கேவரின் சிலை வைக்கப்பட்டுஉள்ளது. நாடு முழுதும் இருந்து வரும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின் தங்கும் வசதி உள்ளிட்டவற்றுக்காக அர்ச்சனா, பிரேரனா கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வளாகத்தினுள் அனுமன் கோவில், மருத்துவமனை அமைந்துள்ளன. 270 கார்களை நிறுத்தும் வகையிலான பார்க்கிங், 20 சதவீதம் சூரிய மின் சக்தியை பயன்படுத்தும் வசதி என ஏராளமான வசதிகளுடன் அமைந்துள்ள இந்த வளாகத்தில், தினமும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் கூட்டம், கலாசார நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம், மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அலுவலகம் போன்றவற்றை வடிவமைத்த குஜராத்தை சேர்ந்த அனுப் தேவ் என்பவர் தான், இதையும் வடிவமைத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 75,000 பேரிடம் இருந்து 5 ரூபாய் முதல் லட்சங்கள் வரை பெற்ற நன்கொடையில், புதிய அலுவலகத்தை கட்டியதாக ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம், வரும் 19ல் திறக்கப்பட உள்ளது.

****

கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு அலுவலர்கள் முறையாக செய்வதில்லை – ஐகோர்ட் அதிருப்தி

கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பை அரசு அலுவலர்கள் முறையாக செய்வதில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோவிலுக்கு அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ. 54 இலட்சத்தை வசூலிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் கடமையுள்ள அலுவலர்களே வாடகையை செலுத்த காலம் தாழ்த்தியது ஏன் எனவும், வழக்கு தொடர்ந்த பின்பும் வாடகை பாக்கி செலுத்த கால தாமதமானதற்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி 54 லட்சத்தை வசூலிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துது.

திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அலுவலக வாடகை பாக்கி ரூ 54,35,660 அரசிடமிருந்து பெற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது என அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ததை ஏற்று வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

xxxxxxx

அர்ச்சனை தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கை அர்ச்சகர்களுக்கு சொந்தமில்லை! வெளியான சுற்றறிக்கையால் பரபரப்பு!

கோவில் அர்ச்சகர் தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி உண்டியலில் செலுத்த கோவிலை கண்காணிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுத சுவாமி கோவில் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. பாலதண்டாயுத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்துவது சுவாமிக்கும் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை புடுங்கி உண்டியலில் போடும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக அர்ச்சகர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கை இணை உண்டிகளில் செலுத்த உத்தரவிடப்படுகிறது இவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வர பெரும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை திருக்கோயில் மணியம் மற்றும் காவலர்கள் கவனித்தல் வேண்டும் எனவும் தட்டு காணிக்கை உண்டியல் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,

இப்படிக்கு திருக்கோவில் செயல் அலுவலர்”

அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அர்ச்சகர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது .

*****

பக்தர்களை தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கும் தமிழக அரசு : இந்து முன்னணி கண்டனம்!

கோயிலுக்கு செல்லும் பக்தர்களை திமுக அரசு தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கி வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

தைப்பூசத்தன்று முருகன் கோயில்களில் அதிகளவு பக்தர்கள் கூடுவார்கள் என தெரிந்தும் அறநிலையத்துறை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

உண்டியல் காணிக்கை, பிரசாத விற்பனை உள்ளிட்ட வழிகளில் இந்து சமய அறநிலையத்துறை பல கோடி வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ள அவர், தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

பக்தர்களை அவதிக்குள்ளாக்கினால் ஏழ்மையான பக்தர்கள் கோயிலுக்கு வர மாட்டார்கள் என திமுக அரசு நினைப்பதாக விமர்சித்துள்ள அவர், திமுக இந்து விரோத அரசு என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

*****

திருப்பதி லட்டு கலப்பட புகாரில் நால்வர் கைது

திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் திண்டுக்கல் ராஜசேகரன் உட்பட 4 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி வெங்கடாசலபதி  கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரித்த  நெய்யில் மாட்டு கொழுப்பை கலப்படம் செய்ததாக எழுந்த விவகாரத்தில் திண்டுக்கல் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் உட்பட 4 பேர் சிறப்பு புலனய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணைகளின் போது திருப்பதி லட்டுக்காக நெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் உத்தரகாண்ட் மற்றும் தமிழக நிறுவனங்களின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், அந்த லட்டில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டு வினியோகிக்கப்பட்டதாக தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்தாண்டு புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

லட்டு கலப்பட விவகாரத்தில் விபின் ஜெயின், பொமில் ஜெயின், அபூர்வ சாவ்டா, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர் உள்பட நான்கு பேரை, அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் லட்டு விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

*******

பழநி தைப்பூசத் திருவிழா: அண்ணாமலை நேர்த்திக்கடன்

பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர்  அண்ணாமலை,48 நாள் விரதத்தை நிறைவு செய்து பழனி கோவிலில் காவடி சுமந்து வழிபாடு செய்தார்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

 தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ‘எக்ஸ்’ சமூக வலை தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் தைப்பூச வாழ்த்துகள். முருகன் நமக்கு வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்தை வழங்கட்டும். இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

*****

சுருக்கமான செய்திகள்

திருப்பதியில் சொகுசு ஓட்டல்அர்ச்சகர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

 திருப்பதி திருமலையில் மும்தாஜ் சொகுசு ஹோட்டல் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கோவில் அர்ச்சகர்கள் துவங்கினர்.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், – பா.ஜ., – ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2014 – 2019 வரை சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, தேவலோகம் என்ற திட்டத்துக்காக திருப்பதி திருமலையில் அலிபிரி அருகே 20 ஏக்கர் அரசு நிலம் சுற்றுலா துறைக்கு ஒதுக்கப்பட்டது.

அடுத்து வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சிக் காலத்தில் அந்த இடத்தில் மும்தாஜ் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

*****

கோவில் விழாவில் பட்டாசு வெடித்த போது யானைகள் மோதல்- 3 பேர் பலி

கோழிக்கோடு, மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருவிழாவின் போது இரண்டு கோயில் யானைகள் பட்டாசு வெடித்து ஓடிய கொடூரமான சம்பவத்தில் 3 முதியவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இறந்தவர்கள் குருவங்காட்டைச் சேர்ந்த லீலா மற்றும் அம்முக்குட்டி மற்றும் கொயிலாண்டியைச் சேர்ந்த ராஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், காயமடைந்த முப்பது பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வேல் யாத்திரை : பாரத் இந்து முன்னணி அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரையை வேறு இடத்தில் நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 14ம் தேதிக்குள் பதிலளிக்க பாரத் இந்து முன்னணி அமைப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை காக்க வலியுறுத்தி சென்னையில் வேல் யாத்திரை நடத்த பாரத் இந்து முன்னணி அமைப்பு திட்டமிட்டது.


xxxxxx

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு ,

பிப்ரவரி 23- ம் தேதி லண்டன் நேரம் நண்பகல் 12 மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும்,

ஆஸ்திரேலிய நேரம் இரவு 11 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

வணக்கம்.

—SUBHAM—

 tags-ஞானமயம், வழங்கும், உலக இந்துமத செய்தி மடல்,  16-2-2025, (Post.14,214)

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் (Post.14,213)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14,213

Date uploaded in Sydney, Australia — 17 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

16-2-2025 அன்று ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பான உரை!

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

முத்து ஏர் நகையாள் இடமாகத் தம் மார்பில் வெண்நூல் பூண்டு

தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த

அத் தேன் அளி உண் களியால் இசை முரல ஆலத்தும்பி

தெத்தே என முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே

–    திருஞானசம்பந்தர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது கொங்கு நாட்டில் அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவில் கொண்டுள்ள திருநணா திருத்தலமாகும். பவானி என்று இப்போது இந்தத் தலம் அறியப்படுகிறது.

தமிழ்நாட்டில் பவானி நகரம் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வடமேற்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்றது இந்தத் திருத்தலம்.

இறைவர் : சங்கமேஸ்வரர் (அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு)

இறைவி :  வேத நாயகி, பவானி, சங்கமேஸ்வர், பந்தார் விரலம்மை உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.

தீர்த்தம் :    காவிரி, பவானி, அமிர்த நதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் உள்ளிட்டவை.

,

தல விருக்ஷம் : இலந்தை

திருநணா என்றும் பவானி முக்கூடல் என்றும் புராணங்களால் இத்தலம் சிறப்பிக்கப் பெறுகிறது. வானி என்பது பவானி நதியின் பழம் பெயராகும். பவானி, காவிரி, மற்றும் மறைந்திருக்கும் அமுத நதி ஆகிய மூன்றின் சங்கமமே பவானி சங்கமம் ஆகும். இது தட்சிணப் பிரயாகை என்றும் கூடுதுறை என்றும் அழைக்கப்படுக்கிறது.

இத்தலமானது சங்ககிரி, நாககிரி, மங்கலகிரி, வேதகிரி, பதும கிரி ஆகிய ஐந்து மலைகளுக்கு நடுவில் இருப்பதால் பஞ்சகிரி மத்தியப் பிரதேசம் என்றும் குறிக்கப்படுகிறது.\

இங்கு சுவாமி சந்நிதிக்கும் அம்மன் சந்நிதிக்கும் இடையே முருகன் சந்நிதி இருப்பதால் இது சோமாஸ்கந்த மூர்த்தி சிறப்புடையதாக ஆகிறது.

இக்கோவிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. வடக்கு நோக்கியே பிரதான வாயிலான ராஜ கோபுரம் உள்ளது. இது ஐந்து நிலை கோபுரமாகும். கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் வாயிலின் மேற்புறம் ராஜ விநாயகரும், கீழ்ப்புரம் முத்துகுமாரசுவாமியும் காட்சி அளிக்கின்றனர்.

அடுத்து மேல்புறத்தில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலும் சௌந்தரவல்லித் தாயார் கோயிலும் உள்ளன.

இந்தத் திருத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

குபேரன் ஒரு நாள் தன் விமானத்தில் வரும் போது இங்கு காவிரியாற்றின் கரை ஓரத்தில் புலி, மான், பசு, யானை, சிங்கம் உள்ளிட்டவை பகை இன்றி இருப்பதைப் பார்த்தான். அங்கு ஒரு இலந்தை மரத்தையும் பார்த்தான். அப்போது தெய்வீக அசரீரி ஒன்று “இந்த இலந்தை மரத்தின் அடியில் ஜோதி மயமான லிங்கம் இருக்கிறது. இதை வழிபடுவாயாக” என்றது.

அதன்படி குபேரன் இங்குள்ள ஸ்வயம்பு லிங்கத்தை வழிபட சிவபிரான் அவனுக்கு காட்சியளித்து அருளினார். அவனது வேண்டுதலின்படி அழகாபுரியைப் போல இத்தலம் திகழ ஆரம்பித்தது. இது தட்சிண அளகை என்ற திருப்பெயரைப் பெற்றது. இறைவனுக்கு  அளகேசன் என்ற நாமமும் உண்டாயிற்று.

இத்தலத்தைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

1802ம் ஆண்டில் இங்கு கலெக்டராக இருந்தவர் வில்லியம் காரோ என்னும் ஒரு துரை. அவர் இங்கு பத்து பன்னிரெண்டு ஆண்டுகள் பதவி புரிந்ததால் கூடுதுறை மகத்துவமும் வேதநாயகியின் பெருமையும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. சுவாமியை தரிசிக்க அவர் விரும்பினாலும் ஆங்கிலேயர் என்பதால் கோவிலுக்குள் நுழைய அவருக்கு அனுமதி இல்லை.

இதனால் வேதநாயகி சந்நிதிக்கு எதிரே மதிலில் மூன்று துவாரங்களைச் செய்து அதன் வழியே அம்மனை தரிசிக்கலானார்.

ஒரு நாள் இரவு வேதநாயகியைப் போல அலங்காரம் கொண்ட பெண் ஒருத்தி அவர் கனவில் வந்து அவரை வெளியே போகும் படி சொல்ல அவரும் எழுது வெளியே சென்றார். சில நிமிடங்களில் அந்த பங்களாவின் கூரை இடிந்து கீழே விழுந்தது. அவர் தனது உயிர் தப்பியது வேதநாயகின் கருணையினால் தான் என்பதை உணர்ந்தார்.

உடனே தந்தத்தினாலேயே ஒரு கட்டிலை – அதாவது பல்லக்கு ஊஞ்சலைச் செய்து காணிக்கையாகக் கோவிலுக்கு அளித்தார். அது கொடுக்கப்பட்ட தேதி 11-1-1804 என்று அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை இன்றும் கோவிலின் உள்ளே காணலாம்.

இந்தக் கோவிலில் இன்னொரு அதிசயம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சூரிய பகவானின் ஒளியானது, மாசி மகம், ரத சப்தமிக்கு மூன்றாவது நாளன்று, சங்கமேஸ்வரர், சுப்ரமண்யர், வேதநாயகியம்மன் சந்நிதிகளில் காலை நேரத்தில் பூஜை செய்வது போல மூர்த்திகளின் மீது படுகிறது.

இங்குள்ள கூடுதுறையில் ஒவ்வொரு அமாவாசையன்றும் பக்தர்கள் திரளாக வந்து குளிப்பது வழக்கம். ஆடி பதினெட்டாம் நாளில் ஆயிரக்கணக்கில் இங்கு மக்கள் குழுமி நீராடுகின்றனர்.

இங்குள்ள அபிஷேக மண்டபத்தின் வடபால் அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. அமுதமே இங்கு லிங்கமாக மாறியிருக்கிறது. இந்த அமுதலிங்கம் அதற்குரிய ஆவுடையாரின் மேல் இருக்கிறது. எளிதிலே இதை எடுக்கலாம்; திரும்பவும் வைக்கலாம்.  குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து இந்த அமுதலிங்கத்தை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு மகப்பேறு அடைவதற்காக கோயிலை வலம் வருகின்றனர். இப்படிச் செய்வதால் மகப்பேறு அடையமுடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தை இந்தத் தலத்தில் அருளியுள்ளார்.

இன்னும் ஏராளமான சிறப்புகளையும் புராண வரலாறுகளையும் இந்தக் கோவில் கொண்டிருக்கிறது.

அவற்றை அருணகிரிநாதரின் திருப்புகழ், பவானி கூடல் புராணம், வேதநாயகி பிள்ளைத் தமிழ், வேதநாயகி அம்மன் சதகம் உள்ளிட்ட பல நூல்களின் வாயிலாக அறியலாம்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சங்கமேஸ்வரரும் அன்னை வேதநாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

 tags–பவானி சங்கமேஸ்வரர் ஆலயம்

விஞ்ஞானிகளை பயப்பட வைத்த கண் திருஷ்டி! (Post No.14,212)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,212

Date uploaded in Sydney, Australia – –17 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

7-2-25 கல்கி ஆன் லைன் கட்டுரை 

விஞ்ஞானிகளை அரண்டு மிரண்டு பயப்பட வைத்த ஒரு விஞ்ஞானியின் கண் திருஷ்டி! 

ச. நாகராஜன் 

திருஷ்டி பற்றிய திரைப்படப் பாடல்!

1992ம் ஆண்டு வெளி வந்த சின்ன கவுண்டர் படத்தில் வரும் ஒரு பாடல் இது.

ஆண் கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே
சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே
உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே… ஹே

இதைத் தொடர்ந்து நடனக் குழுவும் இதையே பாடுகிறது.

பின்னர் தீமை தரும் கண் திருஷ்டிகளின் பட்டியலும் பாட்டில் இடம் பெறுகிறது.

குழு ஊரு கண்ணு உறவு கண்ணு
நாய் கண்ணு நரி கண்ணு
நோய் கண்ணு நொல்ல கண்ணு
நல்ல கண்ணு கொல்லி கண்ணு
கண்ட கண்ணு முண்ட கண்ணு
கரிச்சி கொட்டும் எல்லா கண்ணும்
கண்ட பிணி தொலையட்டும்
கடுகு போல வெடிக்கட்டும்
நல்லதெல்லாம் நடக்கட்டும்
நாடும் காடும் செழிக்கட்டும்

பாடலை எழுதி படத்தை இயக்கியவர் ஆர். வி. உதயகுமார். இசை அமைத்துப் பாடியவர் இளையராஜா.

திரு விஜயகாந்த் (1952-2023) அவர்களே வியக்கும் படி படம் சக்கை போடு போட்டது. அனைவரும் இந்தப் பாடலையும் சின்னக் கவுண்டர் விஜயகாந்த் நடையையும் வெகுவாக ரசித்தனர்.

பகுத்தறிவுவாதிகளுக்கு இந்தப் பாட்டு கொஞ்சம் சங்கடத்தைத் தந்தது.

கண் திருஷ்டியாவது தீமையைத் தருவதாவது என்பது அவர்களின் கொள்கை.

ஆனால் உலக நாடுகள் எல்லாவற்றிலும் திருஷ்டி பற்றிய நம்பிக்கை உண்டு. அதற்கு அந்தந்த நாட்டு பரிகாரங்கள் விதம் விதமானவை.

விஞ்ஞானிகள் இந்த கெட்ட திருஷ்டி (EVIL EYE) பற்றிய மூடநம்பிக்கையைப் பற்றிக் கை கொட்டிச் சிரித்தார்கள்.

ஆனால் நடந்தது என்ன?

அவர்களே அரண்டு மிரண்டு பயப்படும் வண்ணம் ஒரு விஞ்ஞானி இதர விஞ்ஞானிகளை பயமுறுத்தினார். அந்த சம்பவம் தான் இது!

பாலி இருந்தாலே பயம் தான்! 

உல்ப்கேங் பாலி (1900-1958) ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க கருதியற்பியல் விஞ்ஞானி. 1945ல் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். அடாமிக் ஃப்யூஷன் பற்றிய அவரது பார்முலா உலகப் புகழ் பெற்றது!

அவரைக் கண்டாலேயே விஞ்ஞானிகளுக்குப் பயம்

அவர் சோதனைச்சாலையில் இருந்தாலோ எதையாவது பார்த்தாலோ நிச்சயமாக ஏதாவது கோளாறு ஆகி விடும் என்பது நடைமுறை வழக்கமாக இருந்தது! பாதி சோதனையின் போது மின்சக்தி போய்விடும். வாக்குவம் டியூபுகள் லீக் ஆகும், சாதனங்கள் உடையும் அல்லது பழுதுபடும் , இப்படி நிச்சயம் ஏதாவது ஒரு விபரீதம் நடக்கும். சோதனை உருப்படாது. ஆகவே அவர் சோதனையின் நடுவில் வந்தாலே விஞ்ஞானிகள் நடுநடுங்குவர்.

ஒரு நாள் புரபஸர் ப்ராங்க், கோட்டிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஸிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் தனது லாபரட்டரியில் ஒரு முக்கிய சோதனையை நடத்திக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு காரணமும் இல்லாமல் ஒரு சாதனம்  உடைந்து விட்டது. அந்தச் சமயத்தில் பாலி டென்மார்க்கிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் அந்தக் கட்டிடத்தில் இருக்க சான்ஸே இல்லை!

ஆனால் பின்னால் தான் ஒரு உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சாதனம் உடைந்த அதே வினாடியில் தான் ஜூரிச்சிலிருந்து கோபன்ஹேகனுக்கு பாலியை ஏற்றிக் கொண்டு சென்ற புகைவண்டி கோட்டிங்டன் இரயில் நிலையத்தில் வந்து நின்றதாம்! அடேயப்பா, ரயில் நிலையத்தில் அவர் வந்த போதே இந்த ‘எபக்ட்’ என்றால்  ஒருவேளை சோதனை செய்யும் லாபரட்டரிக்கு அவர் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தங்களுக்குள் ‘பாலி விளைவைப்’ பற்றிப் பேசி மகிழ்ந்தனராம்!

நீல்ஸ்போரின் குதிரைலாடம்! 

அதிர்ஷ்டம், கண் திருஷ்டி ஆகியவற்றை எல்லாம் நம்பாத இன்னொரு

இயற்பியல் விஞ்ஞானி நீல்ஸ் போர் (1885-1962).

1922ல் நோபல் பரிசைப் பெற்றவர்.

அவரைப் பார்ப்பதற்கு அவரது சக விஞ்ஞானி ஒருவர் கோபென்ஹேகனுக்கு வந்தார். அவரைச் சந்திக்கும் போது அவரது மேஜைக்கு அருகில் இருந்த சுவரில் குதிரை லாடம் ஒன்று பதிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியமுற்றார்.

ஏனெனில் அதிர்ஷ்டத்தை நம்பும் எல்லோரும், குதிரை லாடத்தை (Horseshoe) வீட்டில் பதித்து வைத்துக் கொண்டால் மிக்க அதிர்ஷ்டம் வரும் என்று அதை வீட்டுச் சுவரில் பதித்து வைப்பது வழக்கம். 

ஆனால் விஞ்ஞானியான நீல்ஸ் போர் இதை மூட நம்பிக்கை என்று சொல்பவர் ஆயிற்றே!

வியப்புற்ற அமெரிக்க நண்பர், “என்ன, குதிரை லாடம் அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதை நிச்சயம் நீங்கள் நம்பாதவர் தானே!! அப்படி என்றால்..? என்று இழுத்தார். 

நீல்ஸ் போர், “நண்பரே! அது அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதை நான் நம்பவே இல்லை. அது சுத்த அபத்தம்! என்றாலும் கூட அதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது அதிர்ஷ்டத்தைத் தரும் என்கிறார்களே! அந்த லாஜிக்கிற்காகத் தான் அதை மாட்டி வைத்துள்ளேன்” என்றார்.

இந்த லாஜிக்கைக் கேட்டு நண்பர் அசந்து போனார்!

 இப்படி ஏராளமான பகுத்தறிவு விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் சுவையான முரண்பட்ட நம்பிக்கைகளும் செயல்களும் உண்டு!

***

tags–  கண் திருஷ்டி! 

My Visit to Minto Shiva Temple in Australia (Post No.14,211)


 
MINTO SHIVA TEMPLE, AUSTRALIA 

Written by London Swaminathan

Post No. 14,211

Date uploaded in Sydney, Australia – 16 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I went to Minto Shiva Temple today 16-2-2025 with my family; the temple is in Minto in New South Wales in Australia. It is at a distance of one hour drive from Sydney.

The temple is a beautiful temple and it won’t take more than half hour to have darshan (holy viewing).

It is a Shiva temple with a huge Shiva Linga in the main shrine. On both sides we have Ashtabhuja Durga and Ram parivar shrines.

Apart from these , there are shrines for Ganesh, Subrahmanya, Bhuvaneswari, Navagraha, Krishna and Kala Bhairava

The main attractions are huge Shiva and Hanuman sculptures outside the main shrine. The temple construction is a mixture of North and South Indian styles. The main Shiva Linga has Archana and Aradhana (PUJA) like every Tamil temple. Other gods have beautiful dress like North Indian temples.

Another unique feature of the temple is installation of Twelve Jyotirlingas’ – exact replica of Indian Shrines – but in smaller scale.

The temple is run by Gujaratis with the support of other communities in the area. I saw a lot of Nepali Hindus vising the temple.

The huge Shiva and Anjaneya sculptures gave lot of opportunities for youngsters to take photos and selfies.

It is in a quite area and new extensions are also planned.

Sulur Siva Shanmuka Kurukkal and another Pandit ji helped us to have good Darshan and gave us Prasad.

Sri Siva Shanmuka Kurukkal ji explained that the main Shiva linga is worshipped with Abhisheka Aradhanas like South Indian Agama temples.

***

Nagarathar Kavadi Function

LONDON SWAMINATHAN WITH SRI SULUR SIVA SHANMUKA KURUKKAL

We had two birds in one stone today. The Nagarathar community celebrated the annual Kavadi function today and Sulur Shiva Shanmuka Kurukkal officiated it. Hundreds of Nagarathar community devotees attended it and scores of gentlemen took Kavadis and others Paal Kudam (milk pots). Lord Muruga (Skanda) was taken in procession. They went round the temple. That reminded me my participation as Chief Guest at London Nagarathar annual event held in London Sri Murugan temple two years ago. The event added more divine atmosphere.

Sri Lankan Tamils organise several events in the temple now and then. Shivaratri on 26th February 2025 will attract a huge crowd and special Homams and Shiva linga abishekam are already announced.

The full address of the temple is

Shri Shiva Mandir

Address: 201 Eagleview Rd,

Minto NSW 2566

LONDON SWAMINATHAN IN MINTO MANDIR, AUSTRALIA

–subham—

Tags- My Visit, Minto Shiva Temple,  Australia , Nagarathar, Kavadi, Event

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4; ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி(Post.14,210)

Written by London Swaminathan

Post No. 14,210

Date uploaded in Sydney, Australia – 16 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4;

சீதக் களபச் செந்தா மரைப்பூம்

………..

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

இந்த வரிகளில் தனக்கு என்ன வேண்டும் என்று அவ்வையார் வேண்டுகிறார்.

1.இறைவனே குருவாக வேண்டும்

2.முந்தை வினைகளை நீக்கவேண்டும்

3.உபதேசம் செய்தருளவேண்டும்

4.ஐம்புலன்களை அடக்க அருள்புரியவேண்டும்

5.ஒன்பது வாசல்களைக் கொண்ட உடம்பினை என் வசத்தில் வைத்துக்கொள்ள இவையெல்லாம் தேவை.

இதற்குப்  பின்னர் வரும் வரிகளில் யோக விஷயங்கள், மூச்சுப் பயிற்சி , குண்டலினியை எழுப்புவது முதலியன பற்றி வேண்டுகிறார்

இந்த வரிகளில் 3, 4, 5, 9  ஆகிய எண்களை அவ்வையார் பயன்படுத்துவத்தைக் கவனிக்கவேண்டும் ; இந்த பரிபாஷையை  எல்லா ஆன்மீகப் பாடல்களிலும் , துதிகளிலும் காணலாம். இவை எல்லாம் பகவத் கீதையிலிருந்து துவங்குகிறது அங்கும் ஒன்பது வாயில், மூன்று மலங்கள், ஐந்து புலன்கள் வருகின்றன வள்ளுவனும் துறவு என்னும் பகுதியில் இதை ஜூஸ் பிழிந்து தந்து விடுகிறான்.

நீக்க வேண்டியது மூன்று மலங்கள்

வேண்டிப் பெறுவது நான்கு நலன்கள்

அடக்க வேண்டியது ஐந்து மத யானைகள் (புலன்கள்)–

உடலுக்கு ஒன்பது வாசல்கள் —- அவ்வையார்

****

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே……….

மும்மலங்களுக்கு சைவர்கள் கூறும் விளக்கம் – ஆணவம்,கன்மம், மாயை என்பதாகும் .

இன்னுமொரு விளக்கம் :–

மூன்று மலங்கள் – காமம் க்ரோதம் லோபம் ; அதாவது வேண்டாத ஆசைகள் காமம்; அவை கிடைக்காதபோது ஏற்படும் சினம் என்னும் கோபம்; சிறிது கிடைத்துவிட்ட பின்னர் எழும் பேராசை, குறிப்பாக பண விஷயத்தில்-லோபம் .

த்ரிவிதம் நரகஸ்யேத3ம் த்3வாரம் நாஶனமாத்மன: |

காம: க்ரோதஸ்ததா லோபஸ்தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத் ||16-21||

त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मन: |

काम: क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् || 16-21||

tri-vidhaṁ narakasyedaṁ dvāraṁ nāśhanam ātmanaḥ

kāmaḥ krodhas tathā lobhas tasmād etat trayaṁ tyajet

த்ரி-விதம்–—மூன்று வகையான; நரகஸ்ய——நரகத்தின்; இதம்–—இது; த்வாரம்——வாயில்கள்; நாஶனம்—— அழிவிற்கு; ஆத்மனஹ–—சுய; காமஹ——காமம்; க்ரோதஹ——கோபம்; ததா——மற்றும்; லோபஹ—-—பேராசை; தஸ்மாத்——எனவே; ஏதத்–—இவை; த்ரயம்——மூன்றை; த்யஜேத்–—கைவிட வேண்டும்- பகவத் கீதை 16-21

சிறைச்சாலைக்குச் செல்லுவோர் பற்றிய செய்திகளைப் படித்தால் எல்லோரும் இந்த மூன்று காரணங்களுக்காகவே சிறையில் அடைக்கப்படுவதைக் காலம்; ஆகையால் கீதையில் கண்ணன் இந்த மூன்றினையும் நரகத்தின் வாசல்கள் என்று வருணிக்கிறான் .

******

chocolate Ganesh 

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி….

சரியை, கிரியை, யோகம், ஞானம் இவை நான்கினையும் தந்து அவற்றின் மூலம் சாலோகசாமீப, சாரூப சாயுஜ்ய நிலையை அடைய வேண்டும்.

दर्शनाद् यस्य सालोक्यं

सामीप्यं स्पर्शनात् तथा

सारूप्यं स्नानतो याति

सायुज्यं तन्-निवासतः– கார்க சம்ஹிதா 

darśanād yasya sālokyaṃ

sāmīpyaṃ sparśanāt tathā

sārūpyaṃ snānato yāti

sāyujyaṃ tan-nivāsataḥ

sAlokyam.. சாலோக்யம் – இறைவனை வணங்கும் அடியார் குழாத்தில் சேருதல்; 

sAmeepyam.. சாமீப்யம்- இதன் வாயிலாக இறைவனை நெருங்கிச் செல்லுதல்;

sArupyam.. ஸாரூப்யம்-  அவனது உருவினை அடைதல் ;

sAyujyam..சாயுஜ்யம் –  அவனோடு ஐக்கியமாதல்

சிவன் என்று சொல்லக் சொல்ல சிவமயமாவதை திருமூலரும் பாடுகிறார் .இறுதியில் ஆதி சங்கரர் போதித்த அத்வைத நிலை வரும்; அதாவது

அஹம்  பிரம்மாஸ்மி; தத்துவமசி என்னும் உபநிஷத வாக்கிய நிலை ; நானே கடவுள்; அது நீயே.

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்

சிவ சிவ என்னச் சிவகதி தானே! (பாடல்-2716) திருமூலர் அருளிய திருமந்திரம்.

பாரதியும் இந்த நாலாவது நிலையைப் பாடுகிறான்

பூமியிலே வழங்கி வரு மதத்துக் கெல்லாம்

பொருளினை நாமிங் கெடுத்துப் புகலக் கேளாய்;

சாமி நீ சாமி நீ கடவுள் நீயே ;

தத்வமஸி தத்வமஸி நீயே யஃதாம் ;

பூமியிலே நீ கடவு ளில்லையென்று

புகல்வது நின் மனத்துள்ளே புகுந்த மாயை;

சாமி நீ அம் மாயை தன்னை நீக்கி

ஸதாகாலம் சிவோஹ‘ மென்று ஸாதிப்பாயே.——பாரதி அறுபத்தாறு

*****

குருவடி வாகிக் குவலயந் தன்னில்

திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்………………..

முதலில் இறைவனே குருவாக வேண்டும் என்றும் அவ்வை வேண்டுகிறார். இந்த குரு பற்றிய கொள்கை இந்து மதத்துக்கே உரியது அருணகிரிநாதருக்கு முருகனே குரு ஆனான். மாணிக்கவாசகருக்கு சிவனே குரு வடிவில் தோன்றினார்

குரு இல்லாமல் ஆன்மீக முன்னேற்றம் கிடையாது என்பது இந்துக்களின் கொள்கை; அவரிடமிருந்து உபதேசம் பெறவேண்டும் என்பதும் இந்துக்களின் கொள்கை. இதை உபநிஷதங்கள் தெளிவாக இயம்புகின்றன. பிராமணர்கள் இரண்டாவது பிறவி எடுக்கையில்– அதாவது பூணூல் போடுகையில் — தந்தை மூலமாக காயத்ரீ மந்திர உபதேசம் பெறுகிறார்கள்; அப்போது தந்தையே குரு.

பாரதி , திருமூலர் போன்றோர் குருவின் பெருமையை புகல்கிறார்கள்:

காற்றுள்ள போதே நாம் தூற்றிக் கொள்வோம்;

கனமான குருவை யெதிர் கண்ட போதே

மாற்றான அஹந்தையினைத் துடைத்துக்கொள்வோம்;

மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;

கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;

குலைவான மாயைதனை யடித்துக் கொள்வோம்;

பேற்றாலே குரு வந்தான்; இவன்பால் ஞானப் [ளே

பேற்றை யெல்லாம் பெறுவோம் யாம்“ என்றெனுள்

சிந்தித்து:— ”மெய்ப் பொருளை யுணர்த்தாயையே!—பாரதியார்

குருவின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் விலகி சிவோஹம் என்னும் நிலையைப் பெறலாம் என்பார் திருமூலர்:–

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருஉரூச் சிந்தித்தல் தானே.

இன்னும் ஒரு அதிசய விஷயத்தையும் திருமூலர் கூறுவார்: கருடன் உருவத்தை மனதில் நினைத்துப் பிரார்த்திதாலோ கருட மந்திரத்தைச் சொன்னாலோ பாம்பு விஷம் பறந்தோடிப் போகுமாம்.அதே போல குருவை மனதாரப் பிராத்திப்பவனுக்கு மும்மலமும் அறுபட்டு முத்தி அடைய முடியுமாம்.

கருடன் உருவம் கருதும் அளவில்

பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்

குருவின் உருவம் குறித்த அப்பொழுதே

திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே

— திருமூலரின் திருமந்திரம்

*****

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி……………………

ஒன்பது வாசல் வீடு/  நகரம் என்று உடலை வருணிப்பதை வேத மந்திரத்திலேயே காண்கிறோம். பின்னர் தமிழ் அடியார்கள் இதைக் கூறி வந்தனர்.

இதோ அதர்வண வேத மந்திரம்:

ஒன்பது வாசல் உடைய இந்த உடலை நன்கு அறிந்து உனது சக்தியைப் பெருக்கு; அல்லது உனக்குப் பலன் இல்லை (5-16/9)

பகவத் கீதையில் கண்ண பிரானும் இதையே சொல்லுவார்:

இந்திரியங்களை வசப்படுத்திய புருஷன் மனத்தால் எல்லாக் கருமங்களையும் துறந்து, சுகமாக — ஒன்பது வாயிலுடைய நகரில் (நவத்வாரே புரி) – ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருக்கின்றான். (பகவத் கீதை – 5-13)

सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी |

नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् || 5-13||

sarva-karmāṇi manasā sannyasyāste sukhaṁ vaśhī

nava-dvāre pure dehī naiva kurvan na kārayan–(பகவத் கீதை – 5-13)

அதிசயம்: காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள்

15-10-1932-ல் சென்னையில் ஆற்றிய உபந்யாசத்தில் காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) கூறிய அதிசயப் பாடல்:

“ ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார் நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமன்று; இந்த உடம்பில் இருக்கிற ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

நவத்வாரே சரீரே அஸ்மின் ஆயு: வசதி சந்ததம்

ஜீவததீ த்யத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்

அதைப் போலவே பலவிதமான ஸந்தேஹங்களுக்கும் வித்யாஸங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ வருஷங்களாக இருக்கிறதே என்பதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது”.

—பக்கம் 109, ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற் பாகம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், சென்னை-1, முதல் பதிப்பு ஆண்டு 1933, இரண்டாம் பதிப்பு 1957

*****

ஐம்புல அடக்கத்தைப் பாடாத புலவர் இல்லை வள்ளுவன் குறள் இதோ:-

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:24)

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

பரிமேலழகர் உரை: உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.

வீட்டு நிலம் – மோட்சம், வீடுபேறு அல்லது மேலான நிலை

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:27)

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பனனிடத்தில் உலகம்  வசப்படும் ; முனிவர்கள், சாது சந்யாசிகள் இப்படிக் கட்டுக்குள் வைத்திருப்பதால் அவர்களை உலகமே வணங்குவதைக் காண்கிறோம்.

*****

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்………

முன் வினையின் பயனால் ஆன்மீக முன்னேற்றம் தடைபடலாம்; அதை நீக்கும் சக்தி இறைவன் ஒருவனுக்கே உண்டு

பிரம்மன் எழுதிய தலை எழுத்து முருகனின் கால் பட்டு அழிந்தது என்று அருணகிரிநாதர் பாடுகிறார் . முந்தை வினையின் முடிச்சை அவிழ்ப்பதை திருமூலரும் பாடுகிறார் கோவிந்தனின் புகழ் பாடினால் அவை எல்லாம் தீயினில் பஞ்சுபோலக் கருகிச் சாம்பலாகும் என்று ஆண்டாளும் உறுதி செய்கிறார்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே– கந்தர் அலங்காரம்

“தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவார்கள்

சென்னியில் வைத்த சிவன்அரு ளாலே”.— திருமந்திரம்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர்  தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.– ஆண்டாள் பாடிய திருப்பாவை

To be continued………………………………..

Tags-  விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4,  ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி….

தமிழ் தெரியுமா16225 ? – (Post No.14,209)

Written by London Swaminathan

Post No. 14,209

Date uploaded in Sydney, Australia – 16 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக்குறிகளைப் பின்பற்றுக

16 2 25

1 2  
 ↑3   
4    
 5   
    ←↑6

Across குறுக்கே

1.-தியாகராஜரின் சமாதி உள்ள திருத்தலம் 

3.எல்லோரும் முன்னோர்களுக்கு சிரார்த்தம் கொடுக்கும் தலம்; பெளத்தர்களுக்கும் புனிதமான இடம் 

4- தாமரையின் ஸம்ஸ்க்ருதப் பெயர்; தமிழ்ப் பெண்களும் சூடும் பெயர் 

5. குதிரை ; மாணிக்கவாசகரின் வரலாற்றில் அடிபடும் பிராணி.

6. ← பன்றி; ஒரு அவதாரம்

Down கீழே

2. பழனிக்குள்ள இன்னுமொரு பெயர்; ஆண்கள் சூடும் பெயர் ; பெரிய தமிழ் அறிஞரின் பெயரும் கூட  

3.↑- இருட்டு நிறம் 

3.கம்பம்- கொடி பறக்க உதவும்; தேனிக்குப் பக்காத்திலுள்ள ஊரும் ஆகும் 

6. ↑ இடம் என்பதன் எதிர்ப்புறம்

தி1ருவை2யாறு
 க↑3யா  
அ4ம்பும்
 ப5ரி 
 ம்ராவ←↑6

–subham—

Tags- தமிழ் தெரியுமா16225 ? –

நம்முடைய கேள்விகளும், அறிஞர்களின் பதில்களும்! (Post No.14,208)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,208

Date uploaded in Sydney, Australia – –16 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 கல்கி ஆன் லைன் இதழில் 11-2-25 அன்று வெளியானது.

 MOTIVATION

 நம்முடைய கேள்விகளும்அறிஞர்களின் பதில்களும்!

ச. நாகராஜன் 

கேள்விகள் நம்முடையவை. பதில்கள் பல்வேறு அறிஞர்களுடையவை!

1.   எந்த உரையாடல்- பேச்சு -மோசமானது?

      உரையாடலில் மோசமானது விவாதம் தான்! – ஜோனாதன்    

     ஸ்விப்ட்

2.   எவனுடன் போட்டி போடக் கூடாது?

எவனிடம் இழப்பதற்கு ஒன்றுமே இல்லையோ அவனிடம் போட்டி போடக் கூடாது. – பல்டாசர் க்ரேசியன்

3.   உறுதி என்பது என்ன?

     ஏழு தடவை விழுந்தாலும் எட்டாவது முறை எழுந்து நிற்பது!

–    ஜப்பானியப் பழமொழி

4.   வணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி?

      வணிகத்தில் வெற்றி பெற – தைரியமாக இரு, முதலாவதாக   

      இரு, வித்தியாசமாக இரு.   – யாரோ

5.   பொறுமையாக இருப்பவனுக்கு என்ன பயன்?

மிகவும் பொறுமையாக இருப்பவன் எல்லாவற்றிலும் நிபுணன் ஆவான்! – ஜார்ஜ் சவில்

6.   அதிக அதிகாரம் உள்ளவன் அதை என்ன செய்ய வேண்டும்?

     அதிக அதிகாரம் உள்ளவன் அதை குறைவாகப் பயன்படுத்த   

     வேண்டும்! – செனேகா

7.   பார்வைகள் பலவிதமாக இருப்பது எப்படி?

     மூன்று பேர்கள் செங்கலை அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.

     முதலாமவனிடம் கேட்கப்பட்ட கேள்வி: நீ என்ன செய்து    

      கொண்டிருக்கிறாய்?

     அவன் கூறினான்: செங்கல்லை அடுக்கிக் கொண்டிருக்கிறேன்.

     இரண்டாவது மனிதனிடம் கேட்கப்பட்ட கேள்வி: நீ எதற்காக       

     வேலை செய்து கொண்டிருக்கிறாய்?

     அவனது பதில்: ஒரு நாளைக்கு ஐந்து டாலர் கிடைக்கிறது,     

     அதனால்!

     மூன்றாமவனிடம் கேட்கப்பட்டது : நீ என்ன செய்து  

     கொண்டிருக்கிறாய்?

     அவன் பதில் கூறினான்: நான் ஒரு பெரிய சர்ச்சைக் கட்ட உதவி     

     செய்து கொண்டிருக்கிறேன்.  –  சார்ல்ஸ் எம். ஷ்வாப்

8.   எப்போது ஒரு கடையை திறக்கக் கூடாது?

புன்சிரிப்புடன் பழகத் தெரியாவிடில் ஒரு கடையைத் திறக்காதே! – யூதப் பழமொழி

9.   நன்மதிப்பை யார் இழக்க மாட்டார்கள்?

வெற்றி பெற்ற ஒருவன் ஒருபோதும் நன்மதிப்பை இழக்கமாட்டான். – தாமஸ் ஆல்பர்ட் கார்ல் ஃபுல்லர்

10. உயர்ந்த நிலையைப் பெறுவது எப்படி?

உயர்ந்த நிலையைப் பெறுவதற்கான விலை – பொறுப்புடன் இருப்பது! – வின்ஸ்டன் சர்ச்சில்

11. மேலே உயர்வதற்கான வழி என்ன?

பணிவதும் அனைவரையும் தயவுடன் அணுகுவதுமே மேலே உயர்வதற்கான வழி. – பென் ஜான்ஸன்

12. தந்திரம் என்பது என்ன?

ஒரு கருத்தை எதிரிகள் யாரையும் உருவாக்காமல் எடுத்துரைப்பது தான் தந்திரம்! – ஹோவர்ட் டபிள்யூ. நியூடன்

13. நல்ல நடையுடன் எழுதுவது எப்படி?

ஒருவன் நல்ல நடையுடன் எழுத விரும்பினால் அவன் தனது சிந்தனையில் தெளிவுடன் இருக்க வேண்டும். – ஜோஹன் டபிள்யூ வான் கதே

14. அதிஜாக்கிரதையாக ஒருவன் இருந்தால் என்ன நடக்கும்?

அதிஜாக்கிரதையாக செயல்படும் ஒருவன் குறைவாகவே சாதிப்பான்! – ஜோஹன் ஷில்லர்

15. மனித இயற்கையில் ஒருவன் மிகவும் அதிகமாக விரும்புவது எதை?

மனித இயற்கையில் ஒருவன் தன்னை மற்றவர்க்ள் பாராட்டுவதையே அதிகமாக விரும்புகிறான். – வில்லியம் ஜேம்ஸ்

***