Swami Swaroopananda, Global Head of Chinmaya Mission , gave Talks on Sacred Sounds (Siva Panchakshara Stotram).
On the last day a young dancerVarun danced for Siva Shambo song for ten minutes. All gave him a big applause.
All the five days the attendance was very good- ranged between 800 to 1000 devotees; no food Prasad but only a new booklet prasad.
Started right on time like RSS meetings and finished on time like RSS meetings.
A lot of youths like RSS meetings. No old goose sleeping like in religious discourses and Bhajans.
Swamiji explained PANCHA AKSHARA -one letter each day Na, Ma, Si, Va, Ya. That removed all the five fears including death.
Dhyana for ten minutes and Stotra recitation every day for ten minutes in the beautiful voice of Madhu.
Big difference between Chinmaya meetings and other meetings:
1 A lot of boys and girls, youths.
2.Book shop with lot of Hinduism books, puzzles, toys etc.
3. No food prasad but the attendance was 1000.
4.Admission is absolutely FREE like RSS meetings and Sathya Sai Baba meetings/Bhajans
5. Voluntary donations as Guru Dakshina was accepted on the last day.
I always buy books and give Guru Dakshina. Anyone who listened to his in-depth lectures would voluntarily give Guru Dakshina.
If you have missed this year in London, you may listen to him in Lincolnshire this month.
For details and regular classes in Chinmaya Keerti in Hendon ,London please visit their website.
Make it Happen
(MiH) is a 6-day intensive in-person course followed by 12 months of comprehensive online support, designed to guide you through an inward journey of self-discovery and empowerment. Led by renowned spiritual teacher, Swami Swaroopananda, the course combines impactful workshop exercises, introspection tools, and thought-provoking classes to illuminate your life’s unique purpose and help you overcome the deepest limitations of your mind.
️ 29th Sept 2024 to 4th October 2024
The Vedanta, Lincoln Rd, Branston, Lincolnshire, United Kingdom, LN4 1PD
London Swaminathan’s 125th is Book for Sale! (Post No.13,733)
Thanks to Dr Rajesh Devadas’ Pustaka .co.in , my 125th book is out. Now readers can fread all my 123 English and Tamil books at putaka.co.in
Other two books 125-123= 2 were published way back in 1991 and before 1987. They were my BBC Tamil Q and A my lessons at Journalism Course I taught at the University of Madurai. Now its is name Madurai Kamaraj University where I ran the Journalism Diploma course in the evening college.
Please go through the list and download the books u r interested. Please know that there is a small fee .In London and Washington money it is a peanut!
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.
Mahalaya Amavasya Day is on 2nd October for the year 2024. Already the ancestors and departed souls of each family are here for the past two weeks. Hindus believe they descend on earth from their abode up above the sky. They eagerly wait for our offerings.
Believe it or not! Hinduism is the cheapest religion in the world, cost wise. Their Gods don’t expect you to pour down gold coins and gemstones. They don’t even expect honey and milk. They want the Bilva leaves or Tulsi leaves or Arka grass or flowers or water! All these are available for a few pennies or paisas or free. Departed souls are also very humble and simple; they expect a cup of water and a spoon of sesame seeds.
So, tomorrow, 2-10-2024 , millions of Hindus will march towards seas and rivers, tanks and lakes, to salute their forefathers. Even Christians go to their family graves on the death anniversaries of their family members. Those who want to remember their ancestors can simply offer some flowers to their pictures.
Mr Venkateswaran Sarma of London , my friend and regular reader of our posts in this blog, has shared with me two amazing anecdotes of departed members coming to the respective families on their death anniversaries. Brahmins never miss such days and do Sraardham or Tithi . The very word Sraardham means faith (sradhdhaa). If you do it with faith, you get their blessings.
****
Two Anecdotes
Mr V Sarma writes
“At this weekend, I was listening to 2 renowned living vaidhikas perhaps in the whole of south India, one namely Sundararama Vajpaye and another Kannamani Dikshithar. The later definitely is of the Sengalipuram lineage. Both were super informative and were speaking on “Shardham” related topic and both sponsored by Veda Dharma Sastra Paripalana Sabha.
Experience 1:
There was a jaw dropping experience narrated by Kannamani Dikshithar wherein he said in Chennai he was officiating a shardham. He said that family was conducting it for the mother. In the Brahmana Bhojanam (meals) he said the Brahmana for “pithir” ate 13 pooris after having the full meal. He was wanting more and the household had only one or two left and so fretting. Once the bhojan is finished the Dikshithar when speaking with the family was informed that the deceased mother is so fond of Pooris. In addition the brahmana after completing the meal had said he has never eaten this much ever before and felt someone had entered his body. I was awestruck.
Experience 2:
Another incident was narrated previously (last Friday) by another person , a grandson of Sengalipuram, Dikshithar namely Sundarama Dikshithar. He quoted an incident that is related to the great “Gnananandagiri Swamigal”.
Apparently, there was one devotee who had sought Swamiji’s blessings the day before doing shraddha to his father as he couldn’t find a “brahmana”. Swamigal had blessed him saying “not to worry everything will be okay”.
The next day before shradham. also they had gone for darshan of swamigal as they couldn’t find one and again Swamigal had said to them to go home and everything will be okay to perform the shradham. When they returned, a Brahmana was sitting in their outside veranda. He looked very fresh, smiling and had full “namam” on his forehead. When asked who he is he had said the “sastrigal” who they had promised to come for brahman bhojan couldn’t come; so ihe had sent him on his behalf. The shardha went well and after the completion later in the day they have gone again to “Gnana nandagiri Swamigal” to prostrate and to thank him.
Swamigal was smiling and had inquired how the shradham was. The couple said to him what had happened. To that swamigal had said that He had asked “Lord Narayana” Himself to help to complete their shardha and had said it is the Lord Himself who was the “Brahmana” at the shrardha. He had asked the Lord himself. I was stunned listening to this. In fact I cried.
Everyday listening to upanyasam on Shardha over this Mahalaya Period I feel I have educated myself so much. “- Sarma
****
These anecdotes will inculcate more faith in us. I am also surprised to read Manu Smriti where he insists extreme cleanliness and utmost attention to such ceremonies. That shows the departed souls visit us on those days. In Ramayana also, we read about Rama meeting Dasaratha again on such Tithi days.
-ddham 1 A funeral rite or ceremony performed in honour of the departed spirits of dead relatives; श्रद्धया दीयते यस्मात्तस्माच्छ्राद्धं निगद्यते (śraddhayā dīyate yasmāttasmācchrāddhaṃ nigadyate).
It is of three kinds:-नित्य, नैमित्तिक (nitya, naimittika), and काम्य (kāmya); यः संगतानि कुरुते मोहाच्छ्राद्धेन मानवः (yaḥ saṃgatāni kurute mohācchrāddhena mānavaḥ) Manusmṛti 3. 14.
2) An obsequial oblation, a gift or offering at a Śrāddha; विहाय शोकं धर्मात्मा ददौ श्राद्धमनुत्तमम् (vihāya śokaṃ dharmātmā dadau śrāddhamanuttamam) Mahābhārata (Bombay) 14.62. 1; सर्वं श्रद्धया दत्तं श्राद्धम् (sarvaṃ śraddhayā dattaṃ śrāddham) Pratimā 5.
Śrāddha (श्राद्ध).—This term indicates the duty by its proper name. Śrāddha is the name of the rite laid down as to be done in honour of one’s ancestors, on the amāvasyā day; and the whole process of that rite is indicated by the name śrāddha.
Rites in honour of the gods shall he performed in the forenoon; that in honour of the pitṛs in the afternoon; the śrāddha offered to a single person shall be performed at mid-day, while that in connection with auspicious rites shall be performed in the morning.
27 Apr 2023 — Mahalaya Amavasai and Ancestors Worship (Post No.11,943) · Post No. 11,943 · Date uploaded in London – – 27 APRIL 2023 · Contact – swami_48@yahoo.
25 Oct 2014 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. 96 Salutes to Departed Souls! Rameswaram on Mahalaya Amavasya (new moon …
பழமொழிகள் விஷயத்தில் ஸம்ஸ்க்ருதத்துக்கு அடுத்த நிலையில் நிற்பது தமிழ்ப் மொழி. சம்ஸ்க்ருத மொழியில் சுபாஷிதம் என்ற பெயரில் இருபதாயிரத்துக்கும் மேலான பொன் மொழிப் பாடல்கள் உள்ளன. இவைதவிர சாணக்ய நீதி, விதுர நீதி , மகாபாரத சாந்தி பர்வம், அனுசாசன பர்வம் முதலிய நூல்களில் பல்லாயிரக் கணக்கான நீதிகள் இருக்கின்றன. சுபாஷித ரத்ன பாண்டாகார என்ற ஒரே நூலில் மட்டும் 16,000 சம்ஸ்க்ருத பொன்மொழிகள் உள்ளன.
சம்ஸ்க்ருத நீதி நூல்களின் காலம் மஹாபாரத காலம் வரை செல்கிறது. இதை விதுர நீதி முதலியவற்றிலிருந்து அறிகிறோம். தமிழ் மொழியும் சளைக்கவில்லை; மஹேந்திர பல்லவன் காலத்தில். (600 CE) அப்பர் பழமொழிகளை வைத்தே ஒரு தேவாரப் பதிகம் பாடிவிட்டார், பழமொழி 400 என்ற கீழ்க்கணக்கு நூலில் மட்டுமே, சம்ஸ்க்ருத சுபாஷிதம் போல, பாடல் வடிவில் 400 பழமொழிகள் உள்ளன. கம்பனும் ராமாயணத்தில், நூற்றுக்கணக்கில் பழமொழிகளை உதிர்த்த ள்ளான். மூன்று ஆங்கிலேயர்கள் 20,000 தமிழ்ப் பழமொழிகளை நமக்கு நூல் வடிவில் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அச்சடித்துக் கொடுத்துவிட்டனர்.
ஒரு சுவையான விஷயம் என் கண்ணில் பட்டது. லண்டன் பல்கலைக் கழக நூலகத்துக்குச் சென்ற வரம் போனேன். ஐரோப்பிய தூரக்கிழக்கு நாடுகளின் ஆசிய நாடுகளின் பழமொழிகள் என்ற நூலைப் புரட்டினேன். தமிழ் மொழி, சம்ஸ்க்ருத தேவ நாகரி எழுத்துக்களையும் கண்டு, உடனே வீட்டிற்கு எடுத்து வந்தேன் தூரக்கிழக்கு என்பது ஜப்பான், கொரியா, சீனா முதலிய நாடுகள் ; அங்குள்ள சுமார் இரு நூறு பழமொழிகளை லத்தீன் உள்பட ஐரோப்பிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ஐந்து மொழிகளுடன் ஒப்பிடுவதே நூலின் குறிக்கோள். ஆயினும் போகிற போக்கில் ,தமிழ்ப் பழமொழி தொகுப்பு நூல்களிலிருந்து தமிழ் பழமொழிகளையும் பஞ்ச தந்திரம் மஹாபாரதம் நூல்களிலிருந்து சம்ஸ்க்ருத பழமொழிகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்கள். பெரியோர்கள் சிந்தனை ஒரே மாதிரி இருக்கும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த நூலில் அப்பழமொழிகளின் பின்னாலுள்ள கதைகளும் சம்பவங்களும் நாலைந்து வரிகளில் சுருக்கமாக உள்ளன. அவர்கள் சொல்லாத தமிழ்ப் பழமொழிகளையும் நான் கண்டேன்.
இதோ உங்கள் பாவைக்கு பார்……..
நமது நாட்டில் மஹாபாரதம், ராமாயணம் முதலிய நூல்களுக்கு மிகவும் பின்னால் புத்தரும் மகாவீரரும் அவதரித்தனர். அவர்களின் காலமே 2600 ஆண்டுகளுக்கு முன்னர். அதற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் லாவோ ட்சே மற்றும் கன்பூசியஸ் என்ற சீன தத்துவ ஞானிகள் அவதரித்தனர். அந்த சீன ஞானிகளும் பழமொழிகளை உதிர்த்துச் சென்றுள்ளதை இந்த நூல்களின் வாயிலாகக் காணலாம்.
Chinese philosopher Confucius (Kong Zi or Koshi or Kong Ja belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.
Chinese philosopher Lao Tse (Lao Zi or Roshi or Noja ) also belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.
பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!
புத்தமதம், சமணமதம், பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம்,
நாமமுயர் சீனத்துத் “தாவு” மார்க்கம்,
நல்ல “கண் பூசி” மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள்பல உளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.
—–பாரதி பாடல்
*****
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
Strike the iron while it is hot
இதற்கு இணையான பழமொழி இரும்பினை சூடாக இருக்கும்போதே அடித்து வளை என்பதாகும். இது தூரக்கிழக்கு நாடுகள் முழுதும் ஒலிக்கிறது.
இந்த சூடான இரும்பை அடிக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டினை ஆதி சங்கரரும் விவேக சூடாமணியில் பயன்படுத்தியுள்ளார்.
****
இதோ ஒரு சுவையான கதை
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
Constant dropping wears the stone
இதற்கு இணையான பழமொழி– சொட்டுச் சொட்டாக தண்ணீர் கொட்டினால் பாறையும் பிளக்கும் என்பதாகும் இது ஐரோப்பிய, தூரக்கிழக்கு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் உள்ளது
இதற்குப் பின்னால் சீனாவில் ஒரு கதையும் உள்ளது.
சொங்கியாங் என்ற இடம் சீனாவில் இருக்கிறது அதன் நீதிபதி சாங் குவையா அங்கு நடக்கும் கஜானா வேலைகளைக் கண்காணிக்க வந்து கொண்டிருந்தார் . அப்போது ஒரு ஊழியர் டர்பனில் (தலைப்பாகை) ‘டக்’ கென்று ஒரு செப்பு நாணயத்தை மறைத்து வைத்துக் கொண்டார். இதை பார்த்த நீதிபதி சாங் குவையா அவனை நீதி மன்றத்தில் நிறுத்தினார்.
டேய் நீ என்ன செய்தாய் தெரியுமா?
உடனேயே அவன் கத்தினான்–
ஐயா, ஒரு செப்புக்காசில் என்னய்யா வந்தது?
உடனே நீதிபதி எழுந்தார்; சிவப்பு மையில் ஒரு பிரஷ்ஷைக் தோய்த்தார் ; அவர் எழுதினார்
நாள் ஒன்றுக்கு ஒரு செப்புக்காசு !
ஆயிரம் நாளில் ஆயிரம் காசு !!
அவ்வளவுதான் அந்த ஊழியருக்கு மரண தணடணை !
இந்தியாவிலும் குப்தர் ஆட்சியில் திருட்டுக் குற்றங்களுக்கு மரண தணடனை இருந்தது இதனால் திருடர்களே இல்லை; மக்கள் வீட்டில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டே தூங்குகின்றனர் என்று சீன யாத்ரீகன் பாஹியான் எழுதி வைத்துள்ளான். அதிலிருந்து வந்ததே இந்த சொட்டு நீர் பாறையையும் பிளக்கும்; எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பதாகும்.
*****
Easier said than done
சொல்லுதல் எளிது செய்வது கடினம்
வாய்ச்சொல் வீரர்கள்தான் உலகில் அதிகம். இதை இன்றும் பேஸ்புக், ட்விட்டர் ,டிக் டாக முதலிய சமூக தொடர்பு மேடைகளிலும் அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலும் காண்கிறோம். இதை நம் வள்ளுவர் தமிழ் வேதத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே செப்பிவிட்டார்:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்–குறள் 664
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்..
****
Do not do to others what you do not want to be done to you
மற்றவர்கள் உனக்கு எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ அதை நீயும் பிறருக்குச் செய்யாதே
மஹாபாரத விதுர நீதி யிலுள்ள இந்த ஸ்லோகம் பைபிளில் மத்தேயு சுவிசேஷத்திலும் காணப்படுகிறது
ந தத் பரஸ்ய சந்தத்யாத் ப்ரதிகூலம் யதாத்மன: — 7-17, விதுர நீதி
தஸ்மாத் தர்ம ப்ராதீனேன பவிதவ்யம் யதாத்மனா
ததா ச சர்வபூதேஷு வர்திதவ்யம் யதாத்மனீ
–மஹாபாரதம், சாந்தி பர்வம், 167-9
வள்ளுவனும் தமிழ் வேதத்தில்
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல் – குறள் 318
xx
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.–குறள் 96:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமையான சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய, அறம் வளர்ந்து பெருகும்.
xx
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல் – குறள் 314
This book is full of Tamil proverbs
TO BE CONTINUED…………………………………
TAGS- மஹாபாரதம், விதுர நீதி, குறள், பாரதி பாடல் , உலகம் முழுதும் , தமிழ்ப் பழமொழிகள் -1, சம்ஸ்க்ருத பழமொழிகள், சுபாஷிதம்
எனது நல/லுங்குப் பாடல் தொகுப்புக்கு லண்டன் திருமதி தயா நாராயணன் கீழ்கண்ட பாடலை அனுப்பி இருக்கிறார். மேலும் நலங்குப் பாடல்கள் இருந்தால் எழுதி அனுப்பும்படி நமது வாசகர்களை வேண்டுகிறேன் ; இவைகள் அழிந்து வருகின்றன; நாம், எதிர்காலத்துக்கு அவைகளைப் பாதுகாத்து அளிப்போம்.
சம்பந்திப் பாட்டு
சம்மந்தி அம்மா வந்தாளாம்
சந்தோஷமாகவே
சம்மந்தி அம்மா வந்தாளாம்
சந்தோஷமாகவே
பானைபோல் வயிறும் பட்டாணிக்கண்ணும்
யானை ரூபமும் எலி வால் பின்னலும்
சம்மந்தி அம்மா வந்தாளாம்
வெகு சந்தோஷமாகவே
ஜப்பான் குள்ளம் ஜெர்மனி உயரம்
ஹிட்லர் மூக்கும் சர்ச்சில் வாயும்
சம்மந்தி அம்மா வந்தாளாம்
வெகு சந்தோஷமாகவே !
வெகு சந்தோஷமாகவே !
வெகு சந்தோஷமாகவே !
குறிப்பு – இது இரண்டாம் உலகப் போர் காலப் பாட்டு ; அந்தக் காலத்தில் ஹிட்லர், சர்ச்சில் படங்கள், கார்ட்டூன்கள் அடிகடிப் பத்திரிகைகளில் வெளியானதால் இதை மக்கள் ரசித்து இருப்பார்கள்.
அந்தக் காலத்தில் மிக இளம் வயதில் கல்யாணங்கள் நடந்தன கோவலன் , இராமபிரான் ஆகியோருக்கெல்லாம் 18 வயதுக்குள்ளேயே திருமணங்கள் நடந்ததாக நமது இலக்கியங்கள் செப்புகின்றன. அந்த சூழ் நிலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் கூட இந்தப் பாடல்களை ரசித்து இருப்பார்கள்.
இப்போது போல எருமைக்கடா வயதில் கல்யாணங்கள் நடக்கவில்லை!.
நலுங்கு பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன் . ரிக் வேதத்திலும் நலுங்குப் பாடல்கள் இருக்கின்றன. அது பற்றி தனியாக எழுதுகிறேன். இதோ லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்த பழைய நலுங்குப் பாடல் புஸ்தகம். வாசகர்களும் காமெண்ட் பத்தியில் நலுங்குப் பாடல்களையும் அது பற்றிய தகவல்களையும் கொடுத்தால் எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்தரும்
நூலின் தலைப்பு – நூதன நலுங்குப் பாட்டு
ஆண்டு- 1937
வெளியிட்டவர்- சென்னை திருவொற்றியூர் நாக்கை சரவண முதலியார்
அவர்களது கலை மகள் பிரஸ்
மேலும் ஒரு நலுங்குப் பாடல் புஸ்தகம் (Post No.7688)
Post No.7688
Date– 13 March 2020
நலுங்குப் பாடல்கள் ஆராய்ச்சி என்ற தலைப்பில் மார்ச் எட்டாம் தேதி இங்கு ஒரு கட்டுரை வெளியிட்டேன். இதோ பிரிட்டி லைப்ரரியில் கிடைத்த மேலும் ஒரு நூல்
நூலின் பெயர் – கல்யாண கீதம் எழுதியவர் – குன்றத்தூர் அரங்காச் சாரியார்.
ஆண்டு -1906
மொத்த பக்கங்கள் 26
PLEASE SEND ME MORE NALANGU WEDDING SONGS.
—subham—
Tags– நலுங்குப் பாட்டு , நலங்கு, சம்பந்திப் பாட்டு , ஆராய்ச்சி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேடம் க்யூரி! – 2
ச. நாகராஜன்
போர்க்களத்தில் எக்ஸ்-ரே மெஷின்
கதிரியக்கம் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவர் ஒரு எக்ஸ்-ரே மெஷினை உருவாக்கினார். அதை அவர் முதலாம் உலகப் போரில் போர்க்களத்தில் பயன்படுத்தியது ஒரு சுவையான செய்தி. போர் மூண்ட போது அந்தக் கால கட்டத்தில் எக்ஸ் ரே எடுப்பது
மருத்துவ மனைகளில் மட்டுமே முடியும்!
ஆகவே அவர் ஒரு “ரேடியாலஜிகல் காரை” உருவாக்கினார்.
அதில் எக்ஸ்ரே மெஷினை நிறுவினார். அதை இயக்க மின்சக்தி
வேண்டுமே! அதற்காக ஒரு டைனமோவையும் காரில்
நிறுவினார்.
பிரெஞ்சு ராணுவத்திடமிருந்து இதற்கென எந்த உதவியும்
கிடைக்கவில்லை.
மிகவும் ஏமாற்றமடைந்த கியூரி பிரான்ஸில் இருந்த பெண்கள்
சங்கத்தை நாடினார். அந்தச் சங்கமும் தேவையான பணத்தைக்
கொடுத்தது.அதை வைத்து முதல் காரை உருவாக்கினார்.
அதற்கு லிட்டில் க்யூரி என்று பெயரிட்டார். அது 1914ஆம்
ஆண்டு முதன் முதலாக போர்க்களத்தில் செயல்பட ஆரம்பித்தது.
அவரே இதை ஓட்டினார். இதற்காக வண்டியை ஓட்டவும் அவர்
கற்றுக் கொண்டார்.
ஒரு முறை அந்தக் காரின் டிரைவர் அதை ஒரு குழியில்
விடவே கார் கவிழ்ந்தது. க்யூரி சளைக்கவில்லை. காரை
நிமிர்த்தி சேதமான காரின் பாகங்களை சரி செய்து காரை ஓட்டிச்
சென்றார்.
போர்க்களத்தில் காயமடைந்த வீரர்கள் எக்ஸ் ரேயின்
உதவியினால் அறுவைச் சிகிச்சையை உரிய விதத்தில்
மேற்கொண்டு உயிர் பிழைத்தனர்.
போர்க்களத்தில் 200 எக்ஸ்ரே மெஷின்களை நிலையான
இடங்களிலும் அவர் நிறுவினார்.
செயல் திறம் மிக்க அபூர்வமான பெண்மணியாக அவர்
திகழ்ந்தார்.
நோபல் குடும்பம்
1921-ல் மேரி தனது இரு பெண்களுடன் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு வரலாறு காணாத அளவில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல பல்கலைக்கழங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்தன. ஒவ்வொரு முறை அமெரிக்கா சென்ற போதும் ஊடகங்களின் மூலம் அவர் பெற்ற புகழை அவரது பெண்கள் கண்ட போது தான் தனது தாயார் எப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்திருக்கிறார் என்று உணர்ந்தனர்.
ஐரீன் தனது தாயாருக்கு ரேடியம் நிறுவனத்தில் உதவி புரிய ஆரம்பித்தார். அங்கு ப்ரெடெரிக் ஜோலியட் என்பவரைச் சந்தித்து அவரையே 1926-ல் மணந்தார். 1935-ல் ரேடியோஆக்டிவ் அணுக்களைச் செயற்கையாகச் செய்யும் வழியைக் கண்டுபிடித்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஈவ் ஐரீன் பிறந்ததற்கு ஏழு வருடங்களுக்குப் பின்னர் பிறந்தார். ஈவ் சிறந்த எழுத்தாளரானார். மேடம் க்யூரி என்று தனது தாயின் சரிதத்தை அவர் எழுதினார். இந்தப் புத்தகம் பிரபலமாகி ஏராளமாக விற்பனை ஆனது. 1965ல் யூனிசெப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டபோது ஈவின் கணவர் ஹென்றி லபாய்ஸ் அதன் சார்பில் நோபல் பரிசைப் பெற்றார். ஆக க்யூரி குடும்பத்தில் நோபல் பரிசைப் பெற்ற ஐந்தாவது நபராக இவர் ஆனார். 2007-ம் ஆண்டு 102-ம் வயதில் ஈவ் மரணமடைந்தார்.
அமெரிக்க மக்களின் விசேஷ பரிசு
நூறு விஞ்ஞானிகள் முன்னிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதியான வாரன் ஹார்டிங்கைச் சந்திக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றார் மேடம் க்யூரி. அவருக்கென அமெரிக்க மக்களின் விசேஷ பரிசு ஒன்றை அளித்தார் ஜனாதிபதி. ஒரு சின்னப் பெட்டி. ஈயம் பூசிய எஃகினால் ஆன அந்தப் பெட்டி நீலம் மற்றும் வெள்ளை ரிப்பன்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. உள்ளே திறந்து பார்த்தால் ஒன்றும் இல்லை!
ஆம், வெள்ளை மாளிகைக்குள் பாதுகாப்பு காரணமாக உள்ளே வைத்திருக்க வேண்டிய பொருளைக் கொண்டு வர முடியவில்லை. அந்தப் பொருள் மேடம் க்யூரி வசிக்கும் பிரான்ஸுக்கு அனுப்பப்படும் முன்பாக அந்தப் பெட்டியில் வைக்கப்படும். அது என்ன? ஒரே ஒரு கிராம் ரேடியம் தான் அது! ரேடியத்தைக் கண்டுபிடித்தவருக்கு ஒரு கிராம் ரேடியம் பரிசாகத் தரப்பட்டது. அதன் அன்றைய விலை ஒரு லட்சம் டாலர்!
மறைவு
1934-ம் ஆண்டு தனது 66ம் வயதில் பிரான்ஸில் பாஸி என்ற இடத்தில் சான்ஸில்லெமா சானிடோரியத்தில் அதிக கதிர்வீச்சு உடலை பாதித்ததன் காரணமாக அவர் மரணமடைந்தார்.
மேடம் க்யூரியின் அனுபவ மொழிகள்
தன் வாழ்நாள் முழுவதும் ஊக்கமூட்டும் உரைகளை அவர் அளித்து வந்தார். குறிப்பாக அவர் பெண்கள் பெரிதும் முன்னேறுவதற்கான வழிகளைக் காட்டி வந்தார். அவரது பொன்மொழிகளில் சில:
“என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. இன்னும் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை மட்டுமே பார்க்கிறேன்.”
“வாழ்க்கையில் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. அதைப் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்.”
“மனிதர்களைப் பற்றி அறிவதில் குறைவாகவே ஆர்வத்தைக் காட்டுங்கள்; கருத்துக்கள் பற்றி அறிவதில் மட்டுமே அதிக ஆர்வத்தைக் கொண்டிருங்கள்.”
“எதையும் மிக மிக நேர்த்தியாகச் செய்ய வேண்டுமே என்று பயப்படாதீர்கள்; அதை ஒரு போதும் உங்களால் அடைய முடியாது.”
“முன்னேற்றத்திற்கான வழி விரைவானதும் அல்ல; சுலபமானதும் அல்ல என்பது எனக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது.”
“எனது வாழ்க்கை நெடுக இயற்கையின் புதிய காட்சிகள் என்னை ஒரு குழந்தை போல மகிழ வைத்திருக்கிறது.”
NOBLE நோபல் பெண்மணி
பல்லாயிரக் கணக்கானோர் இன்று எக்ஸ்-ரே மூலம் நல்ல மருத்துவ சிகிச்சை பெற காரணமாக அமைந்தவர், கதிரியக்கத்தின் நன்மை தீமைகளை உலகிற்கு உணர்த்தியவர் என்ற வகையில் உலக மக்கள் அனைவரும் நினவு கூர்ந்து போற்றும் ஒரு ‘நோபிள்’ (நோபல்) பெண்மணி மேடம் க்யூரி என்றால் அது மிகையாகாது.
Great Men Think alike even in Proverbs It is very interesting to see that proverbs in Mahabharata and Panchatantra are found in different parts of the world; Tamil proverbs are also echoed in South East Asia, Japan and China. Like we have many stories behind proverbs Chinese and Japanese have stories. Chinese is older than to Tamil but younger than Sanskrit. Confucious and Lao Tse have contributed to Chinese culture.
A book titled European, Far Eastern and some Asian proverbs compared about 200 proverbs. Though the author compared only ten Sanskrit, Tamil Proverbs I see more similarities. The reason is they did not look at Hindu proverbs in India. Their purpose was to compare South East Asian countries’ proverbs with Far Eastern countries proverbs.
Chinese philosopher Confucius (Kong Zi or Koshi or Kong Ja belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.
Chinese philosopher Lao Tse (Lao Zi or Roshi or Noja ) also belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.
Here are some interesting things I found in the book.
1.Constantdropping wears the stone
It is found in Far East and South East Asia.
Story
Zhang Guaia, the Magistrate of Chongyang , making a round of inspection saw a junior keeper leaving the coffers building in a hurry with a copper coin hidden under his turban. Taken to the court room, the keeper cried out:
What does a copper coin amount to?
Zhang Guaia picked up a red ink writing brush and wrote:
A copper a day makes a thousand coppers in a thousand days.
A hemp rope can saw up wood and drips of water can penetrate a rock.
Then he killed the keeper.
This is in Tamil proverb book as
1678. எறும்பு ஊரக் கல் தேயும்.
By the continual creeping of ants a stone will wear away.
There is another saying
ஆனை கட்டின தறியும் தேய்ந்து போகும்
Even the pole where the elephant is tied with strong or rope makes it’s mark.
****
Strike the iron while it is hot
It is similar to Make hay while the sun shines.
Even Adi Shankara used this in his Viveka Chudamani .
191. Owing to Its connection with the super-impositions, the Supreme Self, even thou naturally perfect (transcending Nature) and eternally unchanging, assumes the qualities of the superimpositions and appears to act just as they do – like the changeless fire assuming the modifications of the iron which it turns red-hot. –Verse 191 in Viveka Chudamani.
****
Easier said than done
Tiru Valluvar said it in Tamil Veda Tirukkuraal.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.(குறள் 664)
Easy to every man the speech that shows the way; Hard thing to shape one’s life by words they say!.
Or
To give advice is easy for all; but to act according to one’s advice is indeed difficult.
Or
Easy to make a plan and speak about it, but a rare achievement is
To accomplish the plan as stated and then speak
Or
To break into noble maxims and sage counsels is easy; to act up to them is difficult.
****
Do not do to others what you do not want to be done to you – Vidura Niti in Mahabharata and Confucius in Chinese
Thiruvalluvar, the great Tamil saint in his Thirukkural says:
When a man has experienced pain caused by harm done to him, how can he cause pain to others? (Couplet 318)
‘The best way to punish those who harm you is to make them feel ashamed by doing them well and thinking no more of it’ (couplet 314).
Na tath parasya sandhadyath pratikuulam yadatmana: 7-17
“Do not do unto others as you wish others not to do unto you – Vidura Niti
Mahabharata Santiparva 167-9 also repeats the same message in a positive way:
Tasmaad dharma praaadheenena bhavitavyam yataatmanaa Tathaa cha sarvabhuutesu vartitavyam yathaatmani
Hence, by self control and by making right conduct (dharma) your main focus, treat others as you treat yourself- Mahabharata
Jesus Christ also said the same in the Bible,
Therefore all things whatsoever ye would that men should do unto you, do ye even so unto them (Matt.7,12)
–subham—
Tags– Sanskrit, Tamil Proverbs around the World!-1, Great Men Think alike even in Proverbs , Vidura Niti, Mahabharata, Tamil Veda, Tiru Valluvar, Confucius , Viveka Chudamani
முந்தைய கட்டுரைகளில் சம்ஸ்க்ருதம் கற்ற முதல் ஐரோப்பியனையும் பகவத் கீதையை ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்திய ஜெர்மானிய அறிஞரையும் கண்டோம்.
இன்று நாம் ஸம்ஸ்க்ருதம், ஹிந்தி முதலிய மொழிகளை எழுதப் பயன்படுத்தும் தேவ நாகரிலிபியை ஐரோப்பாவுக்குக் கொண்டுசென்று, முதல் புஸ்தகத்தை தேவ நாகரி லிபியில், சம்ஸ்க்ருத மொழியில், அச்சிட்டவரின் பெயர் ஆகஸ்ட் வில்லியம் வான் ஸ்லெகல் AUGUST WILHELM VON SCHLEGEL (1767-1845) .
அவர் ஸம்ஸ்க்ருதத்துக்கு மட்டுமின்றி ஆங்கில மொழிக்கும் சேவை செய்தார்; ஷேக்ஸ்பியர் நாடகங்களை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். முதல் இந்தியவியல் – INDOLOGY இண்டாலஜி– துறையை ஐரோப்பாவில் ஏற்படுத்தினார்.
ராமாயணத்தை எட்டு தொகுதிகளாக வெளியிட அவர் திட்டமிட்டார் ஆயினும் முதல் இரண்டு காண்டங்கள் மட்டுமே லத்தீன் மொழியாகத்துடன் வெளியாகின.
ஹிதோபதேசக் கதைகளை ‘எடிட்’ செய்து வெளியிட்டார் அவர்க்கு லஸ்ஸன் LASSEN என்பவர் துணையாக நின்றார்; லத்தீன் மொழியில் அவற்றைக் கொணர்கையில் மொழியியல் கொள்கைகளை பயன்படுத்தினார் .
இந்திய நூல்கள் INDISCHE BIBLIOTHEK என்ற இதழ்களைக் கொண்டுவந்து அதில் சம்ஸ்க்ருத நூல்கள் பற்றியும் எழுதினார்.
பாரீஸ் நகரிலிருந்து பான் நகருக்கு தேவ நாகரி அச்சுக்களைக் கொண்டுவந்து முதல் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தினார் அவர் தேவநாகரி எழுத்தில் வெளியிட்ட முதல் புஸ்தகம் பகவத் கீதை; லத்தீன் மொழிபெயர்ப்புடன்!
ஐம்பது வயதில் !
இவ்வளவுக்கும் அவர் சம்ஸ்க்ருத மொழியைக் கற்றபோது அவருக்கு வயது ஐம்பது!
ஹனோவர் நகரில் பிராட்டஸ்டண்ட் பிரிவு கிறிஸ்தவ பிரசாரகரின் நாலாவது மகனாக -8-9-1867 ல் பிறந்தார்; ஆம்ஸ்டர்டாம், பெர்லின் நகர்களில் வேலை பார்த்துவிட்டு பாரீஸ் நகரில் சுவீடன் நாட்டு தூதரின் பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்தார். அவர்களுடன் இத்தாலிக்கும் ரஷ்யாவுக்கும் சென்றார். பின்னர் தான் பிரான்சில், பிரான்ஸ் பாப் என்பவரிடம் சம்ஸ்க்ருதம் கற்றார்.
இண்டாலஜி துறையை ஜெர்மனியில் துவக்கியோர் முதலில் இவரை துறைத்தலைவர் GERMAN UNIVERSITY INDOLOGY DEPARRTMENT பதவியில் அமர்த்தினர்.
ஸ்ஷ்லகல் முயற்சியில்தான் பான் நகரம் சம்ஸ்க்ருத மொழியின் முக்கியக் கேந்திரமாக விளங்கியது. அவர் 12-5-1945–ல் இறந்தார். ஆயினும் அவருடைய மாணவர் கிறிஸ்டியன் லாசன் CHRISTIAN LASSEN அவரது பணியைத் தொடர்ந்தார்
*****
இன்னும் ஒரு ஸ்லெகல் – பிரடெரிக் ஸ்லெகல் 1772- 1829
பிரெடெரிக் ஸ்லெகல் FRIEDRICH SCHLEGEL அகஸ்டஸ் ஸ்லெகலின் சகோதரர். இவரை இந்தியவியல்- சம்ஸ்க்ருத அறிஞர் பட்டியலில் சேர்க்கமுடியாது. ஆனால் இவர் செய்த பெரிய சேவை இந்தியவியல் படிப்புத் துறையை உண்டாக்கி அதில் தனது சகோதரர் வில்லியம் ஸ்லெகலை, துறைத்தலைவராக அமர்த்தியதாகும்.
இவரும் ஹனோவரில்தான் 10-3-1772– ல் பிறந்தார். இவருக்கு தத்துவத்தில் மிகவும் ஆர்வம் உண்டு. ஆகையால் அண்ணனுடன் சேர்ந்து அத்தீனியம் என்ற ஆராய்ச்சிப் பத்திரிக்கையை நடத்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு சம்ஸ்க்ருதம் பயின்றதால், பாரீஸ் சென்றபொழுது அந்த நூலகத்தில் சம்ஸ்க்ருத சுவடிகள் இருப்பதைக் கண்டார் . கிறிஸ்தவ மிஷனரிகள் அவைகளை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து அங்கே வைத்திருந்தனர்.
பிரெடெரிக், தனது சகோதரர் வில்லியத்துக்கு எழுதிய கடிதத்தில் இன்னும் நாலே ஆண்டுகளில் காளிதாசனின் சாகுந்தலத்தைப் படித்துவிடுவேன்; இப்போதைக்கு மொழிபெயர்ப்புடன் படித்து வருகிறேன் என்று கூறியிருந்தார். பிரெடெரிக் மூன்று புஸ்தகங்களை எழுதினார் 1. தத்துவம் , 2.இந்திய ஞானம், 3.வரலாற்று யோசனைகள்; இது மொழியியல் ஒப்பீட்டுக்கு வழிவகுத்தது. இந்திய மொழிகளையும் இந்திய தத்துவத்தையும் படிப்பது, மனிதனின் சிந்தனைப்போக்கினை ஆழமாக அறிய உதவும் என்கிறார். பின்னர் பகவத் கீதை, ராமாயணம், சாகுந்தலம் தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டார். அவருக்கு அரசாங்க பதவிகள் கிடைத்ததால் இந்தியவியலைத் தொடரமுடியவியலை; ட்ரெஸ்டன் நகரில் சொற்பொழிவாற்றச் சென்ற அவர் 12-1-1829 — இல் இறந்தார்.
இரண்டு ஸ்லெகல் சகோதரர்களுக்கு மூத்த்தவர் கார்ல் ஆகஸ்ட் CARL AUGUST ஆவார். . அவர் இந்திய ராணுவத்துடன் சென்றார். இந்திய புவி இயல் பற்றி புஸ்தகம் எழுதினார். ஆனால் அது வெளியிடப்படவில்லை சர் ஜான் டார்லிங் என்பவருடன் சென்ற கார்ல்,1789 – ல் சென்னையில் இறந்தார்.
–சுபம்—
Tags- தேவ நாகரி லிபி, சம்ஸ்க்ருத மொழி ,ஆகஸ்ட் வில்லியம் வான் ஸ்லெகல் , ஐரோப்பாவில். முதல் சம்ஸ்க்ருத புஸ்தகம், ஆகஸ்ட் வில்லியம் வான் ஸ்லெகல் ,
ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் -35 யாகந்தி உமாமஹேஸ்வரர் கோவில் -35
கர்னூல் மாவட்டக் கோவில்கள்
யாகந்தி சிவன் கோவில் எங்கே இருக்கிறது ?
ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் , கர்னூல் நகரிலிரிருந்து நூறு கி.மீ தொலைவில் யாகந்தி உமா மஹேஸ்வரர் ஆலயம் உள்ளது கிழக்குத் தொடர்ச்சி மலையின் குன்றுகள் சூழ ஒரு கிராமத்தில் இது இருக்கிறது. பங்கனப்பள்ளியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த ஆலயம் அகஸ்திய மஹரிஷியுடன் தொடர்புடையது. . ஐந்தாம் நூற்றாண்டு முதல் இதன் வரலாறு துவங்குகிறது ஆயினும் இப்போதுள்ள கட்டிடங்கள் 15-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின், சங்கம வம்சத்தின் மன்னரான ஹரிஹர புக்க ராயாரால் கட்டப்பட்டது.
கோவில் வரலாறு
முதலில் அகஸ்திய மகரிஷி இந்த இடத்தில் விஷ்ணுவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப திட்டமிட்டார்.
ஆனால் சிலையில் ஒரு குறை ஏற்பட்டது . எத்தனையோ தடவை முயன்றும் சிலை முழுமை பெறவில்லை. அகத்தியர் சிவனை வேண்டி தவம் செய்ததில் அவரும் தோன்றி இது கையிலை போல உள்ளதால் விஷ்ணுவுக்கு உகந்த இடம் இல்லை என்று கூறவே, முனிவரும் மகேஸ்வரரைத் தன் தேவியுடன் அங்கேயே தங்குமாறு வேண்டினார் . சிவனும் , உமாமகேஸ்வரராக ஒரே கல்லில் ஓருருவாக எழுந்தருளினார். இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். இக்கோயில் வைஷ்ணவ மரபின் கீழ் கட்டப்பட்டது.
ஒரு பக்தர் கதையும் இங்கே பிரசித்தமாகியிருக்கிறது.
சித்தப்பா என்னும் சிவ பக்தர் ஒருவர், இறைவனைக் காண வேண்டித் தவமிருந்தார். அவரது பக்தியை கண்டு மகிழ்ந்த இறைவன் புலி உருக் கொண்டு அவர் முன் தோன்றினார். வந்திருப்பவர் சிவனே என்றுணர்ந்த சித்தப்பா ஆனந்தக் கூத்தாடினார். ‘நேனு சிவனே கண்டி (நான் சிவனை கண்டு கொண்டேன்) என்று கூவினார். அதுதான் நேனுகண்டி என்றாகி பின் யாகந்தி என்று மருவியது.
ஆந்திரத்தில் புகழ்பெற்ற வீரபிரம்மேந்திர ஸ்வாமி, இங்குள்ள குகையில் சில காலம் தங்கியிருந்து கால ஞானம் என்னும் நூலை இயற்றினார்.
சிறப்புகள் என்ன ?
ஒரே கல்லில் உமா மஹேஸ்வரர் காட்சி தருகின்றனர். இது அர்த்த நாரீஸ்வர வடிவம் ஆகும்
‘புஷ்கரணி’ என்னும் சிறிய குளம் உள்ளது. நந்தியின் வாய் வழியாக விழும் நீர், வருடம் முழுவதும் வந்து கொண்டே இருக்கிறது.
ஆகாச தீபம்
கோவிலுக்குப் பின்புறமுள்ள பாறை உச்சியில் தினமும் ஆகாச தீபம் ஏற்றப்படுவது இன்னும் ஒரு சிறப்பு அம்சமாகும். இரண்டு மீட்டர் நீளமுள்ள திரியும் நாலு நான்கு லிட்டர் எண்ணெயும் நாள்தோறும் தேவைப்படுகிறது!
தூண்களிலிலும் குளத்தின் சுவர்களிலும் புராண இதிஹாஸக் காட்சிகள் இருக்கின்றன.
விழாக்கள்
ஒவ்வொரு ஆண்டும் இங்கு மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது,
மூன்று குகைகள்
கோவிலைச் சுற்றியுள்ள குன்றுகளில் அகஸ்தியர் குகை , வீர பிரம்மேந்திர சுவாமி குகை, வெங்கடேஸ்வரர் குகை என்று மூன்று குகைகள் இருக்கின்றன. செங்குத்தான படிகளில் எறிச் செல்ல முடிந்தவர்கள் மேலே செல்லலாம் .
வளரும் நந்தி !
இங்குள்ள நந்தியும் வளர்ந்து வருவதால் இந்த இடம் மேலும் பிரபலமடைந்துவிட்டது. சில வகைப் பாறைகள் காலப்போக்கில் பெரிதாகும் தன்மை படைத்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதால் நந்தி வளருவது உண்மைதான்
—subham—
Tags- ஆந்திர மாநில, 108 புகழ்பெற்ற, கோவில்கள் -35, யாகந்தி உமா மஹேஸ்வரர் கோவில், வீர பிரம்மேந்திர சுவாமி, Yaganti temple