விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-21 (Post No.13,453)

Indra 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,453

Date uploaded in London – 18 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

வரலாறு தொடர்ச்சி

உபேந்திரா, மஹேந்திர – நாம எண்கள் 151, 268–

இந்திரனுக்குத் தம்பியாகியவர்  அல்லது இந்திரனுக்கும் மேலாகிய இந்திரன் ஆனவர் .

ஹரிவம்சம் சொல்கிறது-

மமோபரி  யதே ந்த்ரஸ்த்வம் ஸ்தாபிதோ கோபி ரீஸ்வரஹ

உபேந்த்ர இதி க்ருஷ்ணத்வாம்  காஸ்யந்தி புவி தேவதாஹா

பசுக்கள் உன்னை, எனக்கும் மேலான எஜமானனாக நியமித்துவிட்டன. ஆகையால் ஆகையால் உன்னை தேவர்கள் உபேந்த்ரன் என்று துதி பாடுவார்கள்.

தென் கிழக்கு ஆசியா முழுதும் இந்துக்கள் இருப்பதால் இந்திரன் பெயர்கள் அங்கும் உள்ளன.

xxxx

தனஞ்ஜயஹ– நாம எண் 660–

அர்ஜுனனாக இருப்பவர்.

கீதையில் பகவானே நான்  பாண்டவர்களில் தனஞ்ஜயன் என்கிறார் 10-37

அர்ஜுனன் நான்கு திசைகளுக்கும் சென்று பல இடங்களை வென்றதால் நிறைய செல்வம் கிடைத்தது இதனால் அவன் பெயர் தனம் = செல்வம் , ஜயன் =வென்றோன்.

பாண்டவானாம் தனஞ் ஜயஹ – என்பது கண்ணன் வாக்கு.

वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जय: |
मुनीनामप्यहं व्यास: कवीनामुशना कवि: ||10- 37||

என் கருத்து

மதுரையை உண்டாக்கிய செட்டியார் பெயரும் தனஞ்ஜயன் ; இது செட்டியார்களிடையே அதிகம் பயன்படுத்தப்படும் பெயர்.. புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலில் பொற்றாமரைக் குள தூண்களில் ஒன்றில் தனஞ்ஜயன் சிலை உள்ளது.அதை பாண்டவர் சிலை என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் திருவிளையாடல் புராணத்தைப் படிப்போருக்கு அது செட்டியார் சிலை என்பது புரியும்.

முன்காலத்தில் மதுரைக்குப் பக்கத்தில் பாண்டியர் தலைநகர் இருந் தது ; இப்போதைய மதுரை கடம்பவனக்காடாக இருந்தது . தனஞ்ஜயன்  என்ற வணிகர் பக்கத்து ஊர்களில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்புகையில் கடம்ப வனம் வழியாக வந்தார். அதற்குள் இருட்டிவிட்டது . பயந்துகொண்டே வந்த அவர் காட்டில் ஒரு அரிய காட்சியைக் கொண்டார். ஒளிமயமான ஓரிடத்தை நாடிச் சென்று மறைந்திருந்து பார்த்தபோது தேவர்கள் வந்து ஒரு லிங்கத்துக்கு பூஜைசெய்வதை பார்த்தார். மறு  நாள் பாண்டிய மன்னனைச் சந்தித்து தான் கண்ட அரிய காட்சியைச் சொன்னவுடன் , மன்னனும் பரிவாரம் சூழ காட்டிற்குள் சென்று சிவ லிங்கம் இருப்பதைக் கண்டான்; அதன் மீது கோவிலை எழுப்பி நாற்புறமும் வீதிகளை உருவாக்கி புதிய மதுரையை எழுப்பி, அதைத் தலை நகரமாக்கினான் ; இப்போதும் மீனாட்சி கோவிலுக்குள் ஒரு கடம்ப மரத்தைச் சுற்றி மேடை அமைத்து மரத்திற்கு வெள்ளிக்கு கவசம் பூட்டிருப்பதைக் காணலாம்.அதுதான் மதுரையின் தல விருட்சம். உள்ளூர் பக்தர்கள் மரத்தை வலம் வந்து அடுத்த சந்நிதிகளுக்குப் போவார்கள் .

xxxx

குப்தஹ – நாம எண் 545-

வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாது மறைந்திருப்பவர்.;

ஏஷ  ஸர்வேஷு  பூதேஷு கூடோத்மா  ந ப்ரகாஸதே – கடோபநிஷத் 3-12;

பகவானை அறிந்த பூர்வாச்சார்யார்களால் ரக்ஷிக்கப்பட்டவர். அவர்களின் ஸம்பிரதாயமின்றி  மற்ற எவ்வகையிலும் அறியக் கூடாதவர் .

என் கருத்து

இதே குப்த என்ற பெயருடன்  400 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆண்ட வம்சம்தான் எல்லோரின் பாராட்டையும் பெற்றது. இந்தியாவின் பொற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது; அவர்கள் அடித்த தங்கக் காசுகளை பிரிட்டிஷ் மியூஸியம்  முதல் எல்லா காட்சியகங்களிலும் காணலாம். பாஹியான் போன்ற வெளிநாட்டு யாத்ரீகர்கள் வீட்டுக்குப் பூட்டுப் போடாமல் நல்லாட்சி நடந்ததாக புகழ் கின்றனர்.

இன்னும் ஒரு அர்த்தம் சித்ர குப்தன் போன்றது ஒருவர் இறந்துவிட்டால் எம தர்ம ராஜன் தன்னுடைய தூதர்களை அனுப்பி உயிரைப் பறிப்பான்  என்றும் யமனின் அக்கவுண்டண்ட் / கணக்குப்பிள்ளை அந்த உயிரின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அனுப்புவார் என்றும் சொல்லுவார்கள். இதில் பெரிய ரகசியம் உள்ளது.

சித்ர என்றால் ஓவியம்/ வரைபடம் ;குப்த  என்றால் ரகசிய அல்லது மறைவான ;

நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் நினைக்கும், செய்யும், எல்லா பாவ புண்ணியச் செயல்களும் ரிக்கார்ட்/ பதிவு ஆகிறது இதுதான் குப்த சித்திரம். இது சூப்பர் பாஸ்ட் கம்பியூட்டர் போல கணக்கிட்டு  யமன் முன்னால் காட்டும். அதற்கேற்ப நமக்குப் பலன் கிட்டும். சித்ர குப்தன் என்பது ஆள் அல்ல. நம் பாவ புண்ணியக் கணக்கு.

சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதற்கும் அதை இயக்கி மீண்டும் பூமிக்குக் கொண்டுவரவும் பல கோடி கணக்குகள் செய்யவேண்டும். இப்போது அதை எல்லாம் கம்யூட்டரே செய்துவிடுகிறது . அது போல நம்முடைய  சொல், செயல், சிந்தனை மூன்றையும் மறைவாக- அதாவது நாம் அறியாமல்– கணக்கிடுவதே சித்ர குப்த .

இதையெல்லாம் அறிந்துதான் சந்திர குப்தனும் , சமுத்திர குப்தனும் பெயர் வைத்துக் கொண்டார்கள் போலும் !

xxxx

தாமோதரஹ , தாமன் — நாம  எண்கள் – 367

தாம -நாம  எண் 211

தாம-211

ஒளியாயிருப்பவர் ;  அல்லது விரும்பினவற்றிற்கு எல்லாம் இருப்பிடமாகியவர்..

பரப்ரஹ்ம பரந்தாம   பவித்ரம் பரம் பவான் என்று கீதையில் வருகிறது 10-12

अर्जुन उवाच

परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् ।

पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् ॥१०- १२॥

அர்ஜுந உவாச

பரம் ப்³ரஹ்ம பரம் தா⁴ம பவித்ரம் பரமம் ப⁴வாந் |

புருஷம் ஸா²ஸ்²வதம் தி³வ்யமாதி³தே³வமஜம் விபு⁴ம் || 10- 12||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்

ப⁴வாந் = நீங்கள்

பரம் ப்³ரஹ்ம பரம்தா⁴ம = பரப்பிரம்மம்; பரம பதம் (வீடு பேறு)

பரமம் பவித்ரம் = தூய்மை அனைத்திலும் சிறப்புடைய தூய்மை

ஸா²ஸ்²வதம் தி³வ்யம் புருஷம் = என்றும் உள்ளவர் – என்றும், தெய்வீகமான புருஷன் என்றும்

ஆதி³தே³வம் அஜம் விபு⁴ம் = ஆதி தேவன் என்றும்; பிறப்பற்றவன் என்றும்; எங்கும் நிறைந்தவர் என்றும்

அர்ஜுனன் சொல்லுகிறான்: நீயே பரப்பிரம்மம், நீயே பரவீடு, தூய்மை யனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை; உன்னையே ‘நித்திய புருஷ’னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், கடவுளென்றும்,முனிவரெல்லாரும் மொழிகிறார்கள்

xxxxx

தாமோதர – 367

தமம் என்னும் தன்னடக்கம் முதலிய குணங்களால் அறியப்படுபவர்.

தமாதி  ஸாதனேன உதரஹ  உத்க்ருஷ்டஞ் மாதிரியா தயா கம்யதே  இதி  தாமோதரஹ

மஹாபாரத உத்யோக பர்வம் சொல்கிறது ,

தமாத்  தாமோதரம்  விதுஹு – கயிற்றால் யசோதையால் கட்டப்பட்டவர் .

மற்றும் ஒரு பொருள் – உதார குணம் உடையவர்..

தாமம் என்னும் உலகங்களை தன் வயிற்றில் வைத்திருப்பதால் தாமோதரன் – தாமானி லோக நாமானி  ஹ்யுதரே யஸ்ய சந்தி ஸஹ

தாமோதர இதி க்யாதோ யசோதா தாம பந்தனாத்.

தாமம் = கயிறு

என் கருத்து

2000 ஆண்டு தமிழ்ச் சங்க பாடல்களை இயற்றியவர்களில் தாமோதரன், கேசவன் பெயர்கள் உள்ளன.

ருத்ர தாமன் என்ற மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்து புகழ்பெற்ற கல்வெட்டை செதுக்கியுள்ளான். அவன் ஆப்கானிஸ்தான் முதல் குஜராத் வரை ஆட்சி செய்தான்.

தாமம் என்பதற்கு கயிறு என்ற பொருளும் உள்ளதால் எல்லோரையும் கட்டுக்குள் வைத்திருப்பவன் என்ற பொருளும் உண்டு.. இப்படியாக 2000 ஆண்டாக புழங்கும் சொல் இது. இன்றும் தாமோதரன் என்ற பெயரை இந்தியா முழுதும் காண்கிறோம்

—சுபம்—

tags–விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் 21 

நரசிம்மசுவாமி கோவில் ,  உருகொண்ட (Post No.13,452)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,452

Date uploaded in London – 18 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்; PART- 10

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் உருகொண்டா Urukunda is a small village in Andhra Pradesh ஆகும். புகழ்பெற்ற மந்திராலயம் ராகவேந்திரா சுவாமி சமாதி அருகில் இருக்கிறது. மந்திராலயத்திலிருந்து 44 கிலோமீட்டர் தூரம்தான் .

இந்தக்கோவிலை ஈரண்ண அல்லது வீரண்ணா  சுவாமி கோவில் என்றும் அழைப்பார்கள்.அங்கு  வீரண்ணா என்ற முனிவர் தவம் செய்ததால் இந்தப் பெயர். கோவிலின் சிறப்பு என்ன வென்றால் நரசிம்ம சுவாமி சந்நிதிக்குப் பின்னால் வளரும் அரச மரம் ஆகும். இதனால் கோவிலுக்கு கூரை கிடையாது. மரத்தினையும் அஸ்வத்த நாராயணன் என்ற பெயரில் கிராம மக்கள் வலம் வருகிறார்கள்.

நரசிம்மர் சிலை அருகில் வெள்ளியிலான வீரண்ணா சுவாமியின் விக்கிரகமும் உளது . மஹாசிவராத்ரியின் போதும் ஆவணி மாத மூன்றாவது திங்கள்கிழமையிலும் சிறப்பு ஆராதனைகளை நடக்கும். அப்போது லட்சக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். ராகவேந்திர சுவாமிகளும் இங்கு வந்து தர்சித்ததாக கர்ண பரம்பரைக் கதைகள் இருப்பதால் கோவிலின் மகத்துவம் அதிகரிக்கிறது . சந்நிதிக்கு முன்னர் பெரிய மண்டபம் உளது கோவில் பூட்டப்பட்டபோதும் கோவிலுக்கு கூரை இல்லாததால் மக்கள் கோவிலைச் சுற்றி வரமுடியும்..கோவிலுக்குள் கணபதி சிலையும் இருக்கிறது. வேறு ஒரு மரத்தின் கீழ் நாகர் சிலைகளும் இருக்கின்றன.

அருகிலேயே துங்கபத்ரா நதியிலிருந்து வரும் பெரிய கால்வாய் ஓடுவதால் பக்தர்கள் அதில் குளித்துவிட்டு தாங்களாகவே சமைத்தும் சாப்பிடுகின்றனர் . கோவிலில் அன்னதான திட்டத்தின் கீழ் தயிர்சாதமும், புளியஞ்சாதமும் வழங்கப்படுகிறது . கோவில் தரிசனத்துக்கு கட்டணம் உண்டு.

கார்கள் முதலிய வாகனங்களை நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து உருகொண்ட செல்ல 576 கி.மீ. அங்கிருந்து 44 கி.மீ.யில் மந்த்ராலயம்..

Contact Number: 094910 00738  and 99663 90671

Temple Timing:   6 AM to 10 PM

Distance Between Chennai to Urukunda is 576 Kms

Distance between Mantralayam to Urukunda is 44 Kms

நரசிம்ம சுவாமி கோவில் பற்றி கோவில் வெப்சைட்டில் வீடியோ காட்சியும் உளது. நேரில் செல்ல முடியாதோர் வீடியோவில் தரிசிக்கலாம்.

xxxxx

யாகந்தி உமா மகேஸ்ஸ்வரர் கோவில்

மந்திராலயம் அல்லது கர்நாடகத்திலுள்ள ஹம்பி செல்லுவோர் சுமார் 150 கி.மீ தொலைவிலுள்ள யாகந்தி சிவன் கோவிலுக்கும் செல்லலாம். இது இருப்பது ஆந்திர மாநிலத்தின்  நந்தியால் மாவட்டம் ஆகும்.

சங்கம வம்ச மன்னர் ஹரிஹரபுக்க ராயர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோவிலைக் கட்டினார்

கோவிலைப் பற்றி சில கதைகள் இருக்கின்றன. அகத்திய முனிவர் விஷ்ணு சிலையை நிறுவ முயற்சி எடுத்துக் கொண்டார். ஆனால் விக்கிரகம் கொஞ்சம் சிதிலம் அடைந்ததால் மன வருத்தம் ஏற்பட்டது. அப்போது சிவபிரான் தோன்றி இந்த இடம் கயிலாயம் போல இருப்பதால் சிவன் சிலையை நிறுவும்படி கூறினாராம். அகத்தியரும் உமையுடன் இருக்கும் சிவனை வேண்ட, அவரும் அப்படியே அருளினாராம்.

இன்னொரு கதை சிட்டப்பா என்ற பக்தர் கதை. சிவ பக்தரான அவருடைய முன்னே, ஒரு புலி தோன்றவே அவர் சிவனைக் கண்டுவிட்டேன் என்று மீண்டும், மீண்டும் சொல்லி ஆனந்தக் கூத்தாடினாராம். பின்னர் அங்கே சிவன் கோவில் உருவானது.

புஷ்கரிணி

இந்தக் கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு. மலை அடிவாரக்  கோவில் இது. மலையிலிருந்து ஓடிவரும் தண்ணீர் ஒரு நந்தியின் வாய் வழியாக வரும்படி சிலை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதில் குளித்து சுவாமியை வழிபடுகின்றனர். அந்த நீர் ஒரு புஷ்கரிணியாக தேங்கி நிற்கிறது.

மூன்று குகைகள்

அடுத்த சிறப்புகள் மூன்று குகைகளாகும் . வீர பிரம்மேந்திர சுவாமி குகை, வெங்கடேஸ்வரா குகை,  அகஸ்தியர் குகை குறிப்பிடத்தக்கவை.

வீர பிரம்மேந்திர சுவாமி ஆந்திரத்தில் புகழ்பெற்றவர். அவர் எழுதிய கலா ஞானம் என்ற நூலில் இங்குள்ள வெங்கடேஸ்வரா குகையை திருப்பதி போன்றது என்று புகழ்ந்துள்ளார். அந்தக் குகையில் சேதமடைந்த பெருமாள் உருவமும், அகஸ்தியர் குகையில் தேவி உருவமும் உள்ளன. வீர பிரம்மேந்திர குகையில் அமர்ந்துதான் அவர் கலா ஞானம் நூலை எழுதினார்.

வளரும் நந்தி

இங்குள்ள நந்தி சிலை பெரிதாகிக்கொண்டே வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர் . சிலவகைப் பாறைகள்  நாளடைவில் பெரிதாகும் என்றும் சொல்லப்படுகிறது .

அகத்திய முனிவரை காகங்கள் தொந்தரவு செய்ததால் அவை குகைக்குள் வரக்கூடாது என்று அகஸ்தியர் சபித்ததால் குகையில் காகங்கள் இல்லை என்றும் சொல்லுவார்கள் .

கோவில் இருப்பிடம்

இது நந்தியால் மாவட்டத்தில் உள்ளது

கர்னூல் நகரத்திலிருந்து யாகாந்தி 100 கி.மீ.

பங்கனப்பள்ளியிலிருந்து 14 கி.மீ.

கட்டுரையிலுள்ள படங்கள் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டன. நன்றி.

—Subham—

Tags –யாகந்தி , உருகொண்ட , உமா மகேஸ்வர, கோவில், நரசிம்ம, வீரண்ண , குகைகள், , வீரபிரம்மேந்திர

ராமாயணத்தில் சாபங்கள் (45)  பதிவிரதைகள் ராவணனுக்குக் கொடுத்த சாபம்! (Post No.13,451)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.451

Date uploaded in London – 18 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (45) 

ராமாயணத்தில் சாபங்கள் (45) பதிவிரதைகள் ராவணனுக்குக் கொடுத்த சாபம்!

ச. நாகராஜன்

 உத்தர காண்டத்தில்  இருபத்திநான்காவது ஸர்க்கமாக அமைவது, “தண்டகாவனத்தில் கரன் முதலியவர்களை வசிக்கச் செய்வது’ என்ற ஸர்க்கம்.

வருணாலயத்திலிருந்து கிளம்பிய ராவணன் ராஜ, ரிஷி, தேவ, கந்தர்வ கன்னிகளை துஷ்ட புத்தியுடன் அபஹரித்தான்.

கல்யாணமானவள், கல்யாணமாகாதவள் ஆகிய பெண்களில் அழகியாக யார் இருந்தாலும் சரி அவர்களை ராவணன் அபஹரித்து புஷ்பகவிமானத்தில் தூக்கி வைத்தான்.

அவர்களின் துக்கப் பெருமூச்சால் விமானமே உஷ்ணமானது.

அவர்கள் பலவிதமாகப் புலம்பிக் கொண்டே வந்தனர்.

யஸ்மாதேஷ பரக்யாஸு ரமதே ராக்ஷஸாதம: |

தஸ்மாத்தை ஸ்த்ரீக்ருதேன ப்ராப்ஸ்யதே துர்மதிர்வதம் |\

–    உத்தரகாண்டம், 24-ம் ஸர்க்கம், 18-ம் ஸ்லோகம்

ஏஷ: – இந்த

துர்மதிஹ்: – துஷ்ட

ராக்ஷசாதம: – அரக்கப்பதர்

பரக்யாஸு – அயலார் மனைவிகளிடத்தில்

ரமதே – காம விகாரம் கொள்கிறான்

யஸ்மாத் தஸ்மாத் – ஆதலால்

ஸ்த்ரீக்ருதேன ஏவ – ஒரு பெண் மூலமாகவே

வதம் வை – மரணத்தையும்

ப்ராப்ஸ்யதே – அடையப் போகிறான்

பதிவிரதைகளால் ஒரே காலத்தில் பயனுள்ள பலிக்கத்தகும்படி இப்படி ராவணன் சபிக்கப்படுகிறான். இந்தப் புலம்பலைக் கேட்டுக் கொண்டே ராவணன் இலங்கைக்குத் திரும்பினான்.

யுத்த காண்டத்தில் 114-வது ஸர்க்கத்தில் ராவணன் வதமான பின்னர் இந்த சாபத்தை மண்டோதரி குறிப்பிட்டு இறந்து கிடக்கும் ராவணனை நோக்கிப் புலம்புகிறாள் இப்படி:

யாஸ்த்வயா விதவா ராஜன்க்ருதா நைகா: குலஸ்த்ரிய: |

     பதிவ்ரதா தர்மபரா குருசுஷ்ரூஷணே ரதா: || 

               தாபி” ஷோகாபிதப்தாபி: சபத: பரவஷம் கத |\

–    யுத்த காண்டம், 114வது ஸர்க்கம், (மண்டோதரி விலாபமும், ராவணனது சரமக்ரியையும்) – ஸ்லோகங்கள் 64 & 65

ராஜன் – அரசரே!

பதிவ்ரதா: – பதிவிரதைகளும்

தர்மபரா: – தரமத்தையே சர்வமுமாகக் கொண்டவர்களும்

குருசுஸ்ரூஷணே – பெரியோர்களை உபசரிப்பதில்

ரதா: – அசஞ்சலப் பற்று உடையவர்களுமான

யா: = எந்த

நைகா: – அநேக

குலஸ்த்ரீய: – குல ஸ்த்ரீகள்

த்வயா – உம்மால்

விதவா: – பதியை இழந்தவர்களாய்

க்ருதா: – ஆக்கப்பட்டார்களோ

ஷோகாபிதப்தாபி: – சோகத்தால் பரிதவிக்கும்

தாபி: – அவர்களால்

சபத: – சபிக்கப்பட்டு

பரவஷம் கத: – பகைவருக்கு ஆட்பட்டு விட்டீர்

த்வயா விப்ரக்ருதாபிர்யத்ததா சபதம் ததாகதம் |

த்வயா – தேவரீரால்

விப்ரக்ருதாபி: – தீங்கிழைக்கப்பெற்றவர்களால்

யத் – எது

ததா – அப்பொழுது

சப்தம் – சபிக்கப்பட்டதோ

தது – அது

ஆகதம் – ;பலித்து விட்டது.

இந்தப் பதிவிரதைகளின் கண்ணீர் நிஷ்காரணமாய் இந்தப் பூமியில் விழுவதில்லை என்பது முற்றிலும் உண்மையே

இவ்வாறு ராவணனின் உடலை நோக்கிப் புலம்புகிறாள் மண்டோதரி.

இவ்வளவு பேருடைய சாபத்தை வாங்கி இருக்கிறான் ராவணன் என்பது தெளிவாகிறது!

**

Sankara’s Famous Quotation- ‘Brahma Satyam Jagan Mithya’ (Post 13,450)

My Research Notes on VC – Part 14

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,450

Date uploaded in London – 17 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Some men shed streams of tears because sons are not born to them, others eat away their hearts in sorrow because they cannot get riches. But alas! How many are there who sorrow and weep for not having seen the Lord. Very few indeed! Verily who he seeks the Lord, who weeps for Him, attain Him.

— Sri Ramakrishna Paramahamsa

If you weep for the God, you will get Him said Manikkavasagar, one of the greatest Tamil Saivite saints,

யானே பொய் என் நெஞ்சும்

பொய் என் அன்பும் பொய்

யானால் வினையேன் அழுதால்

உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்

தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன்

உனைவந்துறுமாறே – Tiruvasagam

Slokas 17,18,19, 20 of Viveka Chudamani (VC)

विवेकिनो विरक्तस्य शमादिगुणशालिनः ।
मुमुक्षोरेव हि ब्रह्मजिज्ञासायोग्यता मता ॥ १७ ॥

vivekino viraktasya śamādiguṇaśālinaḥ |
mumukṣoreva hi brahmajijñāsāyogyatā matā || 17 ||

17. The man who discriminates between the Real and the unreal, whose mind is turned away from the unreal, who possesses calmness and the allied virtues, and who is longing for Liberation, is alone considered qualified to inquire after Brahman.

साधनान्यत्र चत्वारि कथितानि मनीषिभिः ।
येषु सत्स्वेव सन्निष्ठा यदभावे न सिध्यति ॥ १८ ॥

sādhanānyatra catvāri kathitāni manīṣibhiḥ |
yeṣu satsveva sanniṣṭhā yadabhāve na sidhyati || 18 ||

18. Regarding this, sages have spoken of four means of attainment, which alone being present, the devotion to Brahman succeeds, and in the absence of which, it fails.

XXXX

आदौ नित्यानित्यवस्तुविवेकः परिगम्यते ।
इहामुत्रफलभोगविरागस्तदनन्तरम्
शमादिषट्कसम्पत्तिर्मुमुक्षुत्वमिति स्फुटम् ॥ १९ ॥

ādau nityānityavastuvivekaḥ parigamyate |
ihāmutraphalabhogavirāgastadanantaram
śamādiṣaṭkasampattirmumukṣutvamiti sphuṭam || 19 ||

19. First is enumerated discrimination between the Real and the unreal; next comes aversion to the enjoyment of fruits (of one’s actions) here and hereafter; (next is) the group of six attributes, viz. calmness and the rest; and (last) is clearly the yearning for Liberation.

XXXX

ब्रह्म सत्यं जगन्मिथ्येत्येवंरूपो विनिश्चयः ।
सोऽयं नित्यानित्यवस्तुविवेकः समुदाहृतः ॥ २0 ॥

brahma satyaṃ jaganmithyetyevaṃrūpo viniścayaḥ |
so’yaṃ nityānityavastuvivekaḥ samudāhṛtaḥ || 20 ||

20. A firm conviction of the mind to the effect that Brahman is real and the universe unreal, is designated as discrimination (Viveka) between the Real and the unreal.

Taken from wisdomlib.com

https://www.wisdomlib.org/hinduism/book/vivekachudamani/d/doc144465.html

xxxx

Swami Vivekananda gives some relevant quotations:-

We pass from this valley of life and death to that ONE, where death and life do not exist and we know the  Real and become the Real.

****

The Real is one and it is the mind which makes it appear as many.

****

The more a man advances towards oneness, the more ideas of I and You subside

****

Tamil Poet Valluvar also sings about Ahamkara (I-ness) and Mamakara (My-ness)

யான்எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்- Kural 346

Who curbs the pride of I and mine
Gets a world rare for gods to gain.

Or

Who kills conceit that utters ‘I’ and ‘mine’,
Shall enter realms above the powers divine.

xxxx

First let us compare sloka 20 with poems of other great poets or composers

Upanishad says.

Ekamevādvitīyam

एकमेवाद्वितीयम्
[one without a second]. [Chānd. 6.2.1]

xxxx

Brahmam okate,  Telugu composition of Annamachaya, also gives the same message.

brahmamokaTE para brahmamokaTE brahmamokaTE para brahmamokaTE

Meaning of full song (It is available on Youtube and other music channels)


pallavi: “Tandanana” is a word giving the punch of rhythm in the song. Ahi, Pure, Bhala are the words expressing the excitement or ecstasy or appreciation. The absolute spirit is one & only one.

caraNam 1: There are no differences of low & high. “Srihari”  is the indwelling Spirit to one and all. All the beings in creation are one because the indwelling spirit in every creature is one and the same.

caraNam 2: Sleep is same to all, be it a king or a servant. Be it a “Brahmin” or “Chandala, the earth they live on is the one and the same.

caraNam 3: The sensual pleasure is one and the same either for angels or for the insects and animals. The day and night are equal to the rich as well as to the poor.

caraNam 4: One could afford to eat tasty food and the other the condemned food. But the tongues that taste the food are alike. An object of fragrance or an object of foul smell, the air that carries the smell is one and the same.

caraNam 5: Be it an elephant or a dog, the sun shines alike on both of them. For the good and the bad, Lord Venkateshwara alone is “The Savior”.

xxxx

In Tamil Avvaiyar gives the same message

ஒன்றாகக் காண்பதே காட்சி; புலனைந்தும்
வென்றான்தன் வீரமே வீரம் – என்றானும்
சாவாமற் கற்பதே கல்வி; தனைப்பிறர்
ஏவாமல் உண்பதே ஊண்–(ஒளவையார்-தனிப்பாடல்)

Real vision

is that which sees
the One only
beyond the many;
Real valour
is that of the person
who has conquered for good
the senses five;

Real learning
is that which places
you in the state
of Deathlessness;
And real food
is what you consume
when you are totally
Liberated
and where you are not
under any command
and where you are neither
slave nor servant… Avvaiyar, Tamil Poetess of Middle Period of Tamil Literature.

xxxxx

Other three Slokas talk about the qualifications and fitness of the seeker of God/Brahman

Sloka 17 says one should have

Discrimination/ viveka

Detachment / vairagya

Calmness/ sama

Mumukshutva / burning desire for liberation

Sloka 18 mentions  four qualifications mentioned in the previous sloka.

Sloka 19 mentioned six qualifications– Calmness etc (No commentator listed the six essential things; but one can easily guess.

For instance, Bhagavad Gita 16-1,2,3 says

1: Fearlessness (abhayam), 2: Purification of one’s existence (sattva samshuddhi), 3: Steadfastness (jnanayogavyavasthithi), 4: Alms-giving (dana), 5: Self-restraint (dama),6: Performance of sacrifice (yajnas ), 7: Right study of the scriptures (swadhyaya), 8: Self- discipline (tapas), 9: Straightforwardness (arjavam), 10: Non-injury (ahimsa), 11: Truth (satya), 12: Absense of wrath (akrodha), 13: Renunciation (tyaga), 14: Peace (shanthi) , 15: Absence of fault-finding and calumny (apaishunam), 16: Compassion toward all beings (daya), 17: Non-covetousness, absence of greed(aloluptvam), 18: Gentleness (mardavam), 19: Modesty (hri), 20: Absence of restlessness (achapalam), 21: Radiance of character (tejas), 22: Forgiveness (kshama), 23: Patience or fortitude (dhriti), 24: Cleanness of body and purity of mind (shaucha), 25: Non-hatred (adroha) 26: Lack of conceit (na atimanita).

These are the sattvic or good qualities that lead Spiritual seekers (sadhaks)devotees to Self-realization.

xxxx

Ramakrishna Paramahamsa explains what is burning desire for God/ Brahman

Be Mad for God

If you must be mad, be it not for the things of the world. Be mad with the love of God.

As the drowning man pants hard for breath, so must one’s heat yearn for the Lord, before one can find Him .

Story from Sri Ramakrishna Paramahamsa

A devotee asked the Master,

By what means He can be seen? And the Master replied,

Can you weep for Him with intense longing?

Men weep jug full of tears for children, wife, money etc. but who weeps for God? So long as a child  is engrossed in play with its toys, the mother engages herself in cooking and other household works.  But when the little one finds no more satisfaction in toys, throws them aside and loudly cries for its mother, she can no longer remain in the kitchen. She perhaps drops down the rice pot from the hearth and runs in hot haste to the child and takes it up in her arms.

In this Kali Yuga three days ardent yearning to see god is enough for a man to obtain Divine grace .

(Ramakrishna is right. According to Tamil Periya Purana, hunter Kannappa Nayanar saw Lord Shiva in a few days’ time; he lived 1500 years ago in Tamil Nadu forest.)

xxxx

The Child said, Mother dear, wake me up when I shall be hungry.

The mother replied, Darling the hunger itself will awaken you.

(Please read Teachings of Sri Ramakrishna for more quotations and anecdotes under this topic)

To be continued………………………………….

Tags- Brahma Sathyam Jagan mithya,  Weep to see god, Qualifications, Devotees, Truth seekers, Brahman, Ekamevaadvitiyam, Avvai, Oneness, Manikkavasagar, My Research Notes on VC – Part 14

CARTOONS ARE MIRRORS OF CURRENT AFFAIRS 17 JULY 2024

 MORE CARTOONS FROM DECCAN CHRONICLE.

POSTED HERE ON 17 JULY 2024

–SUBHAM—

CARTOONS, JULY 17, 2024

திருமூலரும் ஆதிசங்கரரும்- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை- 36 (Post No.13,449)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,449

Date uploaded in London – 17 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 36

திருமூலர் பசுபதி,பாசம் எனும் சைவ சித்தாந்த கருத்துக்களை முன்வைத்தவர். ஆதிசங்கரரோ  அஹம்  பிரம்மாஸ்மி , தத்வ மசி  என்ற அத்வைத கருத்துக்களை முன் வைத்தவர். ஆயினும் திரு மூலர் ஏனைய 17 சித்தர்களிலிருந்து வேறுபட்ட ஒரு சித்தர் என்பதால் சங்கரருக்கும் மூலருக்கும் இடையே சில ஒற்றுமைகளைக் காணமுடிகிறது’.

கீழ்கண்ட பாடல்கள் அவர் சங்கரர்  சொல்லும் அத்வைதத்துக்கு நெருங்கியவர் என்பதைக் காட்டுகின்றன

ஆதி சங்கரர் சொன்ன எல்லாவற்றையும் அறிந்தவர்,   தான் என்பதைக் காட்டுவதற்காக கடைசி பாடலை நெருங்கும் பொழுது ஆதிசங்கரர்  பெயரையே பகிரங்கமாக அறிவித்து விடுகிறார் திருமூலர், 

புஸ்தகம் எழுதுவோர் முன்னுரையில் இன்னார் இன்னாருக்கு தான் நன்றிக் கடன்பட்டவர் என்று பெயர்களை எல்லாம் எழுதுவார்கள். கம்பன் கடைசியில் முக்கியமான ராமன் மகுடாபிஷேகப் பாடலில் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலுக்கு நன்றி சொல்லுவார். அது போல ஆதி சங்கரர்  பெயரை  திருமந்திரத்தின் இறுதிப்   பாடலுக்கு சற்று முன்னர் காண்கிறோம்.

எல்லாப்  பாடல்களையும் கொடுக்காமல் எடுத்துக் காட்டாக சில பாடல்களைத் தருகிறேன்

ஆதி சங்கரன்

2998. பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன்

செலவறி வாரில்லை சேயன் அணியன்

அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி

பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே.

3043: He is One and Many

The Lord is with creation all

None know His coming and going,

He is distant, He is near;

He is constant, He is Sankara,

He is the Primal Being;

Multiple He is, One He is,

He Our Primal Lord.

இறைவன் சர்வ வியாபி என்ற தலைப்பில் அவர் இதைச் சொல்கிறார் . இறைவனை நம்பும் அடியார்க்கு அவர் நெருக்கமானவர். அல்லாதோருக்கு தொலைவில் நிற்பவர்.இதுவும் உபநிஷத் வாக்கியம் ஆகும்.

xxxx

தேவதத்தன்

தேவதத்தன் என்பவனை உதாரணமாகக் காட்டுவதை சங்கரர் துதிகளிலும் புத்தர் உரைகளிலும் காணலாம்.

ஆகிய வச்சோயந் தேவதத் தன்னிடத்

தாகிய விட்டு விடாத விலக்கணைத்

தாகுப சாந்தமே தொந்தத் தசியென்ப

ஆகிய சீவன் பரன்சிவன் ஆமே.

2493 Jiva in Different Places and Times

Deva Datta is one and same person;

But through time and place he different appears;

Unto it,

If Jiva transcends time and place,

He and Siva one becomes (So-ham)

In Thom-Tat-Asi,

Jiva in body one with Primal Cause is;

Attaining True Jnana

Jiva becomes Para Siva.

சோயம்‌ தேவதத்தன்‌ = அவனே தேவதத்தன்‌ .

தேவதத்தன்‌ என்பவன்‌ ஓரிடத்தில்‌ இல்லறத்தானாக

இருந்தபோதும்‌, பிறிதோரிடத்தில்‌ அரசனாயிருந்தபோதும்‌,

மற்றோரிடத்தில்‌ துறவியாயிருந்தபோதும்‌, இவையனைத்தும்‌

ஒழிந்து நின்றபோதும்‌, தேவதத்தனே ஆவான்‌. அதுபோல

விட்டும்‌ விடாத இலக்கண வாய்பாட்டால்‌ சீவன்‌ சிவன்‌

இணைந்த நிலை (ஜீவப்பிரஉற்ம ஐக்கியம்‌ ) சுபாவ சித்தமாக

இருக்கின்றது என்று அறிவது.

தேவ தத்தன் என்ற பெயரை பரிகாசப் பெயராகப் பயன்படுத்துவர்; புத்தரின் வம்சத்தில் தோன்றிய இளவரசன் தேவ தத்ததன் ; ஒரு முறை  புத்தரை அணுகி தன்னை வாரிசாக நியமிக்கக் கோரினான் . புத்தர் மறுக்கவே போட்டி சங்கத்தை ஆரம்பித்தான். புத்தரைக் கொல்ல  முயற்சி செய்தான் . பின்னர்  கடும் நோய்வாய்ப் பட்டபோது புத்தரைக் காண எண்ணி புறப்பட்டான். அப்போது  பள்ளத்தில் விழுந்து புதையுண்டு இறந்த பின்னர்  நரகத்துக்குச் சென்றான் என்று பெளத்த நூல்கள் செப்புகின்றன ; ஆகையால் இது கிண்டல் , கேலி செய்ய உதவும் பெயர்

Xxxxxx

தத்வமஸி- நீயே அதுவாக இருக்கிறாய் = தத்+ த்வம் + அசி = நீயே  கடவுள் = நான்கு மகா வாக்கியங்களில் ஒன்று

ஆறா றகன்ற வணுத்தொம் பதஞ்சுத்தம்

ஈறான தற்பர மெய்துப சாந்தத்துப்

பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து

வீறான தொந்தத் தசி தத்வ மசியே.

தத்வமஸி- 2526- 27,28, 33

xxx

2490. தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே

அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு

அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து

உந்து முறையில் சிவன்முன்வைத்து ஓதிடே. 3

2490 Tvam-Tat-Asi Becomes Tat-Tvam-Asi

Attain the State of Tvam-Tat-Asi

Through coursing breath (in Yogic Way)

Consider it as the Tenth State of (Turiya) experience;

Endless is that Experience;

Alter that expression so

That Siva (Tat) stands first

(That is Tat-Tvam-Asi, or Tatvamasi)

Thus meditate on it and ascend.

xxxx

 வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து

உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை

மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து

அத்தற்கு அடிமை அடைந்துநின் றானே. 4

2491 As Tatvamasi, Practise Yoga

Thus altering the expression

Into Tatvamasi with Siva (Tat) first

Fix your thought on bliss of Svarupa;

And gently hold to your heart

The Pranava mantra (that is “Aum”);

When Jiva thus practises Yoga

He realizes Truth

And stands, in Grace accepted.

xxxxx

பாரதி அறுபத்தாறு கவிதையில் பாரதியும் அதையே சொல்லுவார்

பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்

பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:

சாமி நீ;   சாமி நீ;   கடவுள் நீயே;

தத்வமஸி;  தத்வமஸி;   நீயே அஃதாம்;

பூமியிலே நீ கடவு ளில்லை யென்று

புகல்வது  நின் மனத்துள்ளே புகுந்த மாயை;

சாமிநீ   அம் மாயை தன்னை நீக்கிச்

சதாகாலம் ‘சிவோஹ’மென்று சாதிப் பாயே!— பாரதி

Xxxx

வேதாந்தம்

வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதி பொருளைக் காண்பதாகும். உலகம் முழுதும் இந்தச் சொல்லை அத்வைத தத்துவத்தைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். திருமூலரும் இதைச் சொல்கிறார்.

துவந்தத் தசியே தொந்தத் தசியும்

அவைமன்னு மந்நுவயத் தேக மான

தவமன்னு தத்துவ மசிவே தாந்த

சிவமாகும் அதுஞ்சித் தாந்த வேதமே.

xxxx

இரண்டு பறவைகள் – உபநிஷத் கதை 2894, 1969

அன்ன மிரண்டுள ஆற்றங் கரையினில்

துன்னி யிரண்டுந் துனே ப் பிரியாதன

தன்னிலே யன்னம் தனியொன்ற தென்றக்கால்

பின்ன மடவன்னம் பேறனுகாதே. (2006)  1969

சிவனும் சீவனும் பிரியாது உடனுமாறு கூறுகின்றது..

2006 Cosmic Bindu and Micro-Cosmic Bindu Are Inseparate

Two the swans on the river bank (of life)

The two swans separation know not,

If one Jiva says he is by himself,

Then that foolish swan, Grace receives not.

இரண்டு பறவைகள் கதையை காஞ்சிப் பெரியவர் (1894-1994) நீண்ட காலத்துக்கு முன்னரே சொற்பொழிவில் விளக்கியுள்ளார் அவை ஜீவாத்மா, பரமாத்மா. அந்தக் கதையை பைபிள் எடுத்துக்கொண்டு ஆத்மா என்பதை ஆதாம் என்றும் ஜீவ என்பதை ஈவ்= ஏவாள் என்றும் மாற்றிவிட்டார்கள். காஞ்சி மஹா சுவாமிகள் சொன்ன இந்த விஷயத்தை நான் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பைபிளில் சம்ஸ்க்ருதம் என்ற கட்டுரையிலும் உலகை மாற்றிய மூன்று ஆப்பிள்கள் என்ற கட்டுரையிலும் எழுதியுள்ளேன்.

xxxx

போதிரண் டோதிப் புரிந்தருள் செய்திட்டு

மாதிரண் டாகி மகிழ்ந்துட னேநிற்கும்

தாதிரண் டாகிய தண்ணம் பறவைகள்

வேதிரண் டாகி வெறிக்கின்ற வாறே.

பொழிப்புரை : இருவகை மலர்களின் வண்டுகள் போல்வன வாகிய உயிர்கள், தாம் தாம் விரும்பும் வழியில் வேட்கை மிக்குச் செல் கின்றவாற்றால், அவற்றது நெஞ்சத் தாமரையில் வாழ்கின்ற சத்தியும் இருவேறு வகைப்பட்டு, உரிய காலத்தில் இருவேறு நூல்களைக் கற்கச் செய்து அவைகட்குக் கருணை புரிந்து, எஞ்ஞான்றும் அவைகளோடு உடனாய் நிற்பாள்.

xxxx

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரையிலிருந்து

ஒன்றாகக் காண்பதே காட்சி

ஒன்றாகக் காண்பதே காட்சி (அவ்வை பாடல் வரி) என்ற வாசகம் — இரண்டு இருக்குபோதுதான் பயம் இருக்கும் என்ற உபநிடத வாக்கியத்தில் இருந்து உண்டானதே. 1-4-1

கடவுள் தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டார்: கணவன் மனைவி என்று. மனைவியை கணவனின் மற்றொரு பாதி (தி அதர் ஹாப்) என்று கூறுவதற்கு இதுதான் முக்கியக் காரணம். பிற்காலத்தில் வந்த அர்த்தநாரீஸ்வரன் உருவத்துக்கு (மாதொருபாகன்) மூர்த்திக்கு இதுவே மூலம். இதையே பைபிள் ஆதாம் என்பவர் இடது பக்க விலா எலும்பை முறித்து பெண்ணை உருவாக்கியதாகச் சொல்லுகிறது. இடது பக்கத்தில் தேவி இருப்பது இந்து மதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஆதாம் என்பது ஆத்மா என்பதன் திரிபு. பரம ஆத்மா தன்னை ஜீவ ஆத்மா என்று இரண்டாக வேறு படுத்தியதே இக்கதை. இதையே உபநிடதத்தில் இரண்டு பறவைகள் கதையாகவும் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இது பற்றி அற்புத விளக்கம் கொடுத்துள்ளார். நானும் ஏற்கனவே ‘த்ரீ ஆப்பிள்ஸ் தட் சேஞ்ட் த ஓர்ல்ட்’ என்ற கட்டுரையிலும் , ‘பைபிளில் சம்ஸ்கிருதம்’ என்ற கட்டுரையிலும் எழுதி இருக்கிறேன்.

xxxx

மஹாவாக்கியம்-2287

தத்துவ ஞானம் – 2291

xxxx

உபநிஷத் எதிரொலி

அப்பு/ உப்பு-2905

சேயன், அணியன் –2296/ பகவத் கீதை 1515

உன்னை நீ அறிவாய் எனும் கருத்து  -2315, 2290/ உபநிஷத், சாக்ரடீஸ் எதிரொலி

மறை ஈறு= உபநிஷத் = வேத அந்தம்- 2318,2329, 2343-2348, 2353-56, 2746

ஓம்- 410, 560, 839, 864, 897, 902, 923, 924, 031-934, 936, 941, 949, 988, 1049, 1182, 1188, 1198, 1217, 1257, 1380, 1381, 1516, 1531, 1585, 1680, 1721/22,  2119, 2194, 2435, 2447, 2452, 2455, 2530, 2626-31, 2781

–SUBHAM–

TAGS–திருமூலர், ஆதிசங்கரர்,- திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 36, அத்வைதம், சைவ சித்தாந்தம், இரண்டு பறவைகள் , உபநிஷத் கதை

ராமாயணத்தில் சாபங்கள் (44) அனரண்யன் ராவணனுக்குக் கொடுத்த சாபம்! (Post.13,448)

Ravana lifting Kailsh

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.448

Date uploaded in London – 17 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (44) 

ராமாயணத்தில் சாபங்கள் (44) அனரண்யன் ராவணனுக்குக் கொடுத்த சாபம்!

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில் பதினேழாவது ஸர்க்கமாக அமைவது, “அனரண்யன் சபித்தல்’ என்ற ஸர்க்கம்.

ராவணன் தனது பலத்தில் செருக்கு கொண்டு மருத்தரை அடக்கி விட்டு ஒவ்வொரு நகரமாகச் சுற்றலானான். எல்லா மன்னர்களிடமும் சென்று, “ஒன்று என்னுடன் போர் புரி அல்லது தோற்றதாக ஒப்புக் கொள்” என்றான். அனைவரும் தோற்றதாகவே ஒப்புக் கொண்டனர்.

அயோத்தி நகரை ஆண்டு வந்த அனரண்யன் என்ற அரசர் மட்டும் ராவணனைத் தன்னுடன் போரிட அழைத்தார். உக்கிரமான போர் நடைபெற்றது. ராவணன் அவரது தலையில் அடிக்க அவர் தேரிலிருந்து கீழே விழுந்தார்.

ராவணன் அவரை பரிகசித்தான். அனரண்யன் ராவணனை நோக்கி, “உன்னால் நான் ஜெயிக்கப்படவில்லை. விதி வசத்தால் நான் மரணமடைகிறேன். நீ ஒரு காரண கருவி தான். இக்ஷ்வாகு வம்சத்தை அவமானம் செய்து விட்டாய்” என்று கூறிவிட்டு, ராவணன் மீது சாபத்தை விடுத்தார்.

யதி தத்தம் யதி ஹுதம் யதி மே சுக்ருதம் தப: |

யதி குப்தா: ப்ரஜா: சம்யத் ததா சத்யம் வசோஸ்து மே ||

மே – எனது

ப்ரஜா: – பிரஜைகள்

சம்யக் – தருமத்திற்கு குறைவின்றி

குப்தா: – பரிபாலிக்கப்பட்டார்கள்

யதி -என்னும் பட்சத்தில்

தப: – தவ பாக்கியமும்

சுக்ருதம் – புண்ணியங்களின் பயனும்

யதி – இருக்கும் பட்சத்தில்

துத்தம் – செய்யப்பட்ட தெய்வ சமர்ப்பணங்களின் பயனும்

யதி – இருக்கும் பட்சத்தில்

தத்தம் – கொடுக்கப்பட்ட தானங்களின் பயனும்

யதி – இருக்கும் பட்சத்தில்

ததா – அப்போது

மே வச: – எனது வாக்கு

சத்யம் – அப்படியே நடைபெற்றதாக

அஸ்து – விளங்கட்டும்.

உத்பத்ஸ்யதே குலே ஹ்ராஸ்மின்னிக்ஷ்வாகூணாம் மஹாத்மனாம் |

ராமோ தாசரதிர்நாம யஸ்தே ப்ராணான்ஹரின்யதி ||

மஹாத்மனாம் – மிக்க மேன்மை பெற்றவர்களாகிய

இக்ஷ்வாகூணாம் – இக்ஷ்வாகுக்களின்

அஸ்மி – இந்த

குலே ஹி – குலத்திலேயே

தாசரதி: – தசரதன் என்பவனுக்குப் புதல்வனாய்

ராம: – ராமன்

நாம – எனப் பெயருள்ளவன்

உத்பத்ஸ்யதே – அவதரிக்கப் போகிறான்

ய: – அவன்

தே – உனது

ப்ராணான் – உயிரை

ஹரின்யதி – ஒழிப்பான்

உத்தரகாண்டம் 19-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 29 & 30

இப்படி அனரண்யன் சாபம் இடவே வானத்திலிருந்து பூமாரி பொழிந்தது. தேவ துந்துபி மேக முழக்கத்திற்கு ஈடாக அடிக்கப்பட்டது.

இவ்வாறாக அகத்திய முனிவர் அனரண்யன் வரலாறை ஶ்ரீ ராமருக்கு உரைத்தார்.

**

Time and Place -My Research Notes on VC – Part 13 (Post No.13,447)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,447

Date uploaded in London – 16 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Let us take three more verses from Viveka Chudamani (VC)

https://www.wisdomlib.org/hinduism/book/vivekachudamani/d/doc144464.html

अधिकारिणमाशास्ते फलसिद्धिर्विशेषतः ।
उपाया देशकालाद्याः सन्त्यस्मिन्सहकारिणः ॥ १४ ॥

adhikāriṇamāśāste phalasiddhirviśeṣataḥ |
upāyā deśakālādyāḥ santyasminsahakāriṇaḥ || 14 ||

14. Success depends essentially on a qualified aspirant; time, place and other such means are but auxiliaries in this regard.

XXXX

अतो विचारः कर्तव्यो जिज्ञासोरात्मवस्तुनः ।
समासाद्य दयासिन्धुं गुरुं ब्रह्मविदुत्तमम् ॥ १५ ॥

ato vicāraḥ kartavyo jijñāsorātmavastunaḥ |
samāsādya dayāsindhuṃ guruṃ brahmaviduttamam || 15 ||

15. Hence the seeker after the Reality of the Ātman should take to reasoning, after duly approaching the Guru – who should be the best of the knowers of Brahman, and an ocean of mercy.

XXXX

मेधावी पुरुषो विद्वानुहापोहविचक्षणः ।
अधिकार्यात्मविद्यायामुक्तलक्षणलक्षितः ॥ १६ ॥

medhāvī puruṣo vidvānuhāpohavicakṣaṇaḥ |
adhikāryātmavidyāyāmuktalakṣaṇalakṣitaḥ || 16 ||

16. An intelligent and learned man skilled in arguing in favour of the Scriptures and in refuting counter-arguments against them – one who has got the above characteristics is the fit recipient of the knowledge of the Ātman.

xxxx

Adi Sankara gives simple advice to novices,

Aspiration and qualification, then time and place are necessary for Success.

Tamil poet Tiru Valluvar also insists time and place but in a different context, i.e.  a ruler who wants to win over his enemy; but it is a general advice too.

Next, Sankara advises to get a Guru; there also he says about the Guru’s qualification; Guru must be ocean of mercy. Sankara used a beautiful word for guru ‘DAYAA SINDHU’-Ocean of Mercy.

The third thing he insists is knowledge of arguments and counter arguments. This shows the age of Sankara. He lived in a time when arguments were held in big university centres like Varanasi, Pataliputra and Daksha Sila. Sankara won so many scholars and converted them to his side. We know how he won Mandanamishra and his wife Sarasavaani in a debate. When Buddhism and Jainism had the full support of the rulers, Sankara had a difficult time, yet won great scholars in debates. Moreover, if one argues his case again and again, he becomes firm in his belief.

Tamil poet Valluvar also insisted conviction, time and place.

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.—483

Is there anything impossible if the right means are adopted and the right hour chosen – Kural 483

Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?- Kural 483

We may compare it with Shakespeare and Napoleon

Impossible is a word to be found only in the dictionary of fools–Napoleon Bonaparte

And Shakespeare agrees

There is a tide in the affairs of men

Which, taken at the flood, leads on the fortune.( Macbeth of Shakespeare)

xxxx

Time and Place from Valluvar’s Tiruk Kural

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.– குறள் 484:

The pendant world’s dominion may be won,

In fitting time and place by action done.- Kural 484

Or

A man, aspiring to conquer the whole world too, will succeed

If he chooses the right time and place- 484

We know how Netaji Subash Chandra Bose and Hitler lost. Both invaded at the wrong time. Weather was against them

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற் கரிய செயல்.–குறள் 489:

‘Use the right opportunity’– is a very important advice. If we miss the opportunity, we will regret later. Great Gurus were there even in the recent past. But we didn’t realise their greatness at that time. Now we regret that we did not meet them. When we become older and older we regret how we missed the Himalayan shrines. And now we regret how we missed Bharat Ratnam musicians Bhimsen Joshi and M S Subbulakshmi.

xxx

About aspirations and attempts

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.–குறள் 616:

Effort brings fortune’s sure increase,
Its absence brings to nothingness.- Kural 616

xxxx

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும். –619

Though fate-divine should make your labour vain;
Effort its labour’s sure reward will gain-619

Valluvar believed in Newton’s third law of motion

Sir Isaac Newton’s third law of motion states that “every action has an equal and opposite reaction”.

Even if you involve yourself in bad actions, you will have proportional success. It is a natural law. The harder you try, more successful you will be. We see even bad opposition parties win in an election because of hard work. So an aspirant must try hard to go higher and higher.

In Tamil there is a proverb “if you want to climb palmyra tree one can lift you up to his height, then you must try to go up”.

—subham—

Tags- Viveka Chudamani (VC), aspiration, time, place, Guru, ocean of mercy., Newton, Macbeth

வர்கல் சரஸ்வதி கோவில் (Post No.13,446)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,446

Date uploaded in London – 16 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்; PART- 9

வா்கல் சரஸ்வதி கோவில் (Wargal Saraswati Temple) , அல்லது ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில், தெலுங்கானாவில் உள்ள சித்திப்பேட்டை என்னும் மாவட்டதில் இருக்கிறது . இந்த சரஸ்வதி கோவிலை காஞ்சி சங்கர மடம் பராமாிக்கிறது.  யயவரம் சந்திரசேகர சா்மாவின் முயற்சியால் இது கட்டப்பட்டது.. இங்கு சனீஸ்வரன் (சனைச்சரன் = மந்தமாக நகர்பவன் ) கோவிலும் உள்ளது.

கோவிலானது கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு மலையில் அமைந்துள்ளது. அதே மலையடிவாரத்தில் வேறு பல தெய்வங்களின் கோவில்களும் உள்ளன:

ஸ்ரீ லட்சுமி கணபதி கோவில்

ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில்

சனீஸ்வரன் (சனைச்சரன் ) கோவில்

சிவன் கோவில்

ஒரு சில வைஷ்ணவ கோவில்கள், இப்போது முற்றிலுமாக சேதமடைந்து, மூலஸ்தானத்தில் விக்ரகங்கள் ” இல்லாமல் காணப்படுகிறது.

வர்கல் சரஸ்வதி கோவிலில்  பல வித சேவைகள் உண்டு . இந்துக்களின் கல்வித் தெய்வம் சரஸ்வதி ஆதலால்

பல குடும்பங்கள் தங்களின் குழந்தைகளுக்கு அக்ஷர அப்பியாசம் செய்வதற்குக்  குழந்தைகளை அழைத்து வருகின்றனர்..இதற்கு சிறிய கட்டணம் உண்டு. கோவிலில் பக்தா்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இந்த  நித்ய அன்னதானம்த்துக்கு நன்கொடை கொடுக்கலாம் .

ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் வசந்த பஞ்சமி மற்றும் சரத் கால  நவராத்திாி திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கோவிலின் ஒரு சிறப்பு வேத பாடசாலை ஆகும்.பல மாணவா்கள் வேதங்களைக் கற்பதற்காக இந்தப் பள்ளிக்கூடத்துக்கு (பாடசாலை) வருகின்றனர்.

கோவில் வரலாறு 

ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் |

அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

सदाशिव-समारम्भां शङ्कराचार्य-मध्यमाम्।

अस्मदाचार्य-प्रयन्तां वन्दे गुरु परम्पराम् ॥

Beginning from Lord sadaashiva himself, jagadguru shankaraachaarya in the middle, up until my own guru – I prostrate to the entire guru-paramparaa.

சந்திரசேகர சர்மா என்ற அறிஞரின் முயற்சியில் இந்தக் கோவில் உருவானது . கோவிலைக் கட்டுவதற்கான இடத்தைத் தேடியபோது வார்கல் மலையில் முன்னரே மேலும் பல கோவில்களும், ஒரு குகையில் சிவன் கோவிலும் இருந்ததால் அந்தக் குன்றினையே தேர்ந்தெடுத்தனர்.

1989–ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992–ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது  .புஷ்பகிரி பீடம் ஸ்ரீ வித்யா நரசிம்ம பாரதி சுவாமிகள் முன்னிலையில் இது நடந்தது. கோவிலைத் துவக்கியவரே இதைக் காஞ்சி காமகோடி சங்கராச்சார்யார் மடத்தின் பராமரிப்பில் விடவேண்டும் என்று 1999–ம் ஆண்டில் கேட்டுக் கொண்டதைக் கோவில் நிர்வாகக் கமிட்டியும் ஏற்றது. மடத்தின் வழிகாட்டுதலின் பேரில் பூஜைகள் நடக்கின்றன.

தெலுங்கானாவில் பாசர் என்னுமிடத்தில் உள்ள புகழ்பெற்ற ஞான சரஸ்வதி ஆலயம் பற்றி முன்னரே கட்டுரை வெளியிட்டோம். அதற்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்று விளங்கும் சரஸ்வதி கோவில் இது.

சரஸ்வதி கோவில், சனீஸ்வரன் கோவில், வர்கல், தெலுங்கானா

கோவிலின் வெப் சைட்டில் முழுவிவரங்களும் உள்ளன

https://sriwargalvidyasaraswathi.org

xxxx

எப்படிப் போவது?

ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீ ட்டர் , வாரங்கல்லிலிருந்து 92 100 கிலோமீட்டர் தொலைவில் மாவட்டத் தலை நகர் சித்திப்பேட்டை உள்ளது . சித்திப்பேட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் வார்கல் கோவில் இருக்கிறது

xxx

கோவில் திறக்கும் நேரம்

Temple Timings

Monday to Thusday

Morning Session காலையில்

06.00 am to 01.00 pm

Friday to Sunday

Morning Session

06.00 am to 02.00 pm

All days எல்லா நாட்களிலும் மாலையில்

Evening Session

04.00pm to 08.00pm

xxxx

தொடர்பு முகவரி

Sri Vidya Saraswathi Sri Shaneshchara Temples,

(Under Kanchi KamaKoti Peetham) Vill & Mandal: Wargal – 502279, District: Siddipet, Telangana

Mobile: 9247851122, 9291277118, 9248151122

–subham-

Tags- வர்கல் ,சரஸ்வதி கோவில், ஆந்திர மாநிலத்தின் , 108 கோவில்கள்,  PART- 9

ராமாயணத்தில் சாபங்கள் (43) வேதவதீ ராவணனுக்குக் கொடுத்த சாபம்! (Post No.13,445)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.445

Date uploaded in London – 16 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (43) 

ராமாயணத்தில் சாபங்கள் (43) வேதவதீ ராவணனுக்குக் கொடுத்த சாபம்!

ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில் பதினேழாவது ஸர்க்கமாக அமைவது, “வேதவதீ சாபம்’ என்ற ஸர்க்கம்.

ஒரு காலத்தில் ராவணன் பூமண்டலத்தில் திரிந்து கொண்டிருந்த சமயம் இமயமலைச் சாரலில் தவம் புரிந்து கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணைக் கண்டான்.

“பெண்ணே, நீ யார்? உனது யௌவனத்திற்கு ஒவ்வாத இதை ஏன் அனுஷ்டிக்கிறாய்?” என்று கேட்டான்.

அந்தப் பெண் அதிதி பூஜையை உரிய படி செய்து விட்டு, “எனது தந்தை குசத்வஜர் என்ற பிரம்ம ரிஷி. பிரஹஸ்பதியின் புதல்வர். அவரது பெண்ணான எனது பெயர் வேதவதீ. என்னை தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்டோர் மணப்பதற்காகப் பெண் கேட்டு வந்தனர். தந்தையார் விஷ்ணுவையே மருமகனாக மனதில் நிர்ணயித்து விட்டார். அந்தச் சமயத்தில் சம்பு என்ற ராக்ஷஸ அரசன் எனது தந்தையார் தூங்கிக் கொண்டிருந்த போது அவரைக் கொன்றான். இதனால் துக்கமடைந்த எனது தாயார் அவரது உடலுடன் அக்கினியில் பிரவேசித்தாள். நான் என் தந்தையாரின் மனோரதத்தை நிறைவேற்றுவதாக சங்கல்பம் கொண்டு நாராயணனையே மனதால்  ஸ்திரமாய் வரித்து வருகிறேன்” என்றாள்.

ராவணன், “ நான் தசக்ரீவன். லங்கா அதிபதி. எனது மனைவியாக நீ ஆகி விடு” என்றான்.

‘இப்படி எல்லாம் உளறாதே’ என்று வேதவதீ சொல்லிக் கொண்டிருக்கும் போது அவளது கூந்தலை ராவணன் உள்ளங்கையால் தொட்டான்.

உடனே கோபம் கொண்ட வேதவதீ அந்தக் கூந்தலை அறுத்தாள். அவளது கையே கத்தியாக ஆனது. அக்கினியை வளர்த்து உடலை அதில் அர்ப்பணிக்க தீர்மானித்த அவள் கோபம் கொண்டு ராவணனைப் பார்த்து இப்படி மொழிந்தாள்:

யஸ்மாத் தர்ஷிதா சாஹம் த்வயா பாபாத்மா வனே |

தஸ்மாத்த்வம் வதார்தம் ஹி சமுத்பத்ஸ்யே ஹ்ருஹம் புன: ||

அஹம் – நான்

பாபாத்மா – பாபாத்மாவாகிய

த்வயா – உன்னால்

வனே – காட்டில்

தர்ஷிதா – கை தீண்டப்பட்டேன்

யஸ்மாத் தஸ்மாத் – அந்தக் காரணத்தால்

தவ – உனது

வதார்தம் ச – மரணத்திற்காகவே

அஹம் ஹி – நானே

புன: து – இன்னொரு தரமும்

சமுத்பஸ்யே – ஆவிர்ப்பவிக்கப்போகிறேன்

ந ஹி சக்யம் ஸ்திரியா ஹன்ந்தும் புருஷ: பாபநிஸ்சய: |

சாபே த்வயி மயோத்ப்ருஷ்டே தபசஸ்ச வ்யயோ பவேத் |\

ஸ்திரியா – பெண்ணாகிய

மயா – என்னால்

த்வயி – உன் பேரில்

சாபே – சாபம்

உத்ருஷ்டே ச – இடப்பட்டதேயாகில்

தபஸ: – தவப் பெருமைக்கு

வ்யய: – குறைவு

பவேத் – ஏற்படும்

பாபநிஸ்சய: – பாவத் தொழிலே புரியும்

புருஷ ஹி – புருஷனாக இருந்தும்

ஹந்தும் – கொன்று விட

சக்யம் ந – விதியில்லை

யதி த்வம்ஸ்தி மயா கிஞ்சித்க்ருதம் தத்தம் ஹுதம் ததா |

தஸ்மாத்த்வயோனிஜா சாத்வீ  பவேயம் தர்மிண: சுதா ||

தஸ்மாத் – ஆகையால்

மயா – என்னால்

க்ருதம் து – செய்யப்பட்ட புண்யங்களின் பலனும்

தத்தம் து – கொடுக்கப்பட்ட தானங்களின் பலனும்

ஹுதம் ததா – செய்யப்பட்ட தெய்வ சமர்ப்பணங்களின் பலனும்

கிஞ்சித் – கொஞ்சமேனும் இருக்கிறதென்றால்

அயோனிஜா – அயோனிஜையாக – (கர்ப்பவழி இல்லாமல் பிறப்பவளாய்)

தர்மிண: – ஒரு தர்மாத்மாவின்

சாத்வி – அருமை

சுதா – பெண்ணாக

பவேயம் – விளங்குவேன்

 உத்தரகாண்டம், பதினேழாவது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 31 முதல் 34 முடிய

இவ்வாறு சொல்லி விட்டு வேதவதீ  அக்னியில் குதித்து விட்டாள்.அப்போது ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது.

அகத்திய முனி இப்படிக் கூறிவிட்டு, “தேவரீர் நீரே விஷ்ணு. சீதையே வேதவதீ” என்று  உண்மையை ஶ்ரீ ராமருக்குக் கூறுகிறார்.

யுத்தகாண்டத்தில் வேதவதீயின் இந்த சாபத்தையும் ராவணன் நினைவு கூர்கிறான்.

அறுபதாவது ஸர்க்கம், ஸ்லோகம் 10, 11

சபதோஹம் வேதவத்யா ச யதா ஸா தர்ஷிதா புரா |

சேயம் சீதா மஹாபாகா ஜாதா ஜனகநந்தினீ ||

புரா – முன்னால்

யதா – எப்பொழுது

ஸா – அவள்

தர்ஷிதா – தீண்டப்பட்டாளோ அப்போது

வேதவத்யா  – வேதவதீ என்ற அவளால்

அஹம் – நாம்

சபத: – சபிக்கப்பட்டேன்

ஜனக நந்தினி – ஜனகரின் மகளாய்

மஹாபாகா – பேரெழில் வாய்ந்தவளாய்

ஜாதா – பிறந்து

சீதா – சீதா என்ற பெயருடன் விளங்கும்

இயம் – இவள்

ஸா ச – அவளே தான்.

இப்படி ராவணன் தனக்கு முன்னால் கொடுக்கப்பட்ட சாபத்தை யுத்த காண்டத்தில் நினைவு கூர்கிறான். இதை அடுத்து நந்தீஸ்வரர், ரம்பை, வருணனின் மகள் கொடுத்த சாபத்தையும் கூறுகிறான்.

**