
AMERICAN DEVIL EXPOSED, DECCAN CHRONICLE CARTOON
HERO GANDHI WAS MADE A ZERO GANDHI BY CONGRESS PARTY

POTED BY LONDON SWAMINATHAN ON 2-10-2024


—SUBHAM-

AMERICAN DEVIL EXPOSED, DECCAN CHRONICLE CARTOON
HERO GANDHI WAS MADE A ZERO GANDHI BY CONGRESS PARTY

POTED BY LONDON SWAMINATHAN ON 2-10-2024


—SUBHAM-
Posted by Tamil and Vedas on October 2, 2024
https://tamilandvedas.com/2024/10/02/american-devil-exposed-deccan-chronicle-cartoon/

Post No. 13,736
Date uploaded in London – 2 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மஹாளய அமாவாசையின் மஹிமை பற்றியும், பிராமணர்கள் 96 தர்ப்பணங்களை ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்றும் நான் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு லண்டனைச் சேர்ந்த எனது இனிய நண்பரும் நமது பிளாக்கின் ஆர்வமிக்க வாசகருமான ஸ்ரீ வெங்கடேஸ்வரன் சர்மா கீழ்கண்ட இரண்டு அதிசய சம்பவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
“வார இறுதி நாட்களில் இரண்டு புகழ்பெற்ற உபன்யாசகர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன் அவர்களில் ஒருவர் தென் இந்தியா முழுதும் கீர்த்தி பெற்ற சுந்தர ராம வாஜ்பாயி. இன்னும் ஒருவர் கண்ணா மணி தீட்சிதர்.
இரண்டாமவர் சேங்காலிபுர அனந்த ராம தீட்சிதரின் வழிவந்தவர் ; இருவரின் உரைகளும் சிரார்த்தம் பற்றிய நிறைய செய்திகளைத் தெரிவித்தன. வேத சாஸ்திர தர்ம பரிபாலன சபை இந்த உபன்யாசங்களை ஏற்பாடு செய்திருந்தது.

முதல் அதிசய சம்பவம்
கண்ணா மணி தீட்சிதர் சொன்ன விஷயம் : நான் ஒரு குடும்பத்திற்கு திதி /சிரார்த்தத்தை நடத்திவைக்கச் சென்று இருந்தேன் அந்தக் குடும்ப நபர் அவரது தாயாரின் சிரார்த்தத்தைச் செய்தார். பிராமண போஜன நிகழ்ச்சி வந்தது; அதில் உட்கார்ந்த பிராமணர் வழக்கமான சாப்பாட்டோடு 13 பூரிகளைச் சாப்பிட்டார். அது மட்டுமல்லாமல் ‘மேலும் போடுங்கள்’ என்று சொன்னவுடன் குடும்பத்தினர் தவியாய்த் தவித்தனர் . ஏனெனில் மிச்சம் ஒரு சில பூரிகளே இருந்தன. ஒருவாறாக போஜனம் முடிந்தது . அப்போதுதான் இதன் பின்னுள்ள விஷயம் புரிந்தது. அந்தக் குடும்பத்தில் இறந்து போன தாயாருக்கு பூரி என்றால் மிகவும் இஷ்டமாம். சாப்பிட்ட பிராமணரும், தான் இது போல எங்கும் சாப்பிட்டதில்லை. யாரோ ஒருவர் என் மீது பிரவேசித்து மேலும் மேலும் சாப்பிட்டததாகவே நான் உணர்ந்தேன் என்றும் சொன்னார்.
இதைக் கேட்டவுடன் எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. மெய் சிலிர்த்தது “.
****

இரண்டாவது அதிசய சம்பவம்
சேங்காலிபுரம் வம்சத்தில் வந்த ஸ்ரீ சுந்தர ராம தீட்சிதர் சொன்ன விஷயம்:
“இது ஞானானந்த கிரி சுவாமிகள் தபோவனத்தில் நடந்தது . சுவாமிகளின் பக்தர் ஒருவர் வீட்டில் சிரார்த்தம் செய்யவேண்டிய நாள் வந்தது. ஆனால் அதற்கான பிராமணர் யாரும் கிடைக்கவில்லை . இதனால் முதல் நாளே சென்று ‘யாருமே கிடைக்கவில்லையே சுவாமிஜி, ஒரே கவலையாக இருக்கிறது’ என்று முறையிட்டனர் ; சுவாமிஜியோ ஒரு கவலையும் வேண்டாம்; நாளைக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்லிவிட்டார். மறுநாள் காலை வரை எந்த பிராமணரும் உறுதியாகச் சொல்லாததால் கணவனும் மனைவியும் மீண்டும் அங்கே போய், சுவாமிகளை நமஸ்கரித்து கவலையைத் தெரிவித்தனர். வீட்டுக்குப் போங்கள்; எல்லாம் முறையாக நடக்கும் என்று சொல்லி அனுப்பிவிட்டார். கவலையுடன் திரும்பிய தம்பதிகள், வீட்டு வராண்டாவில் யாரோ ஒரு பிராமணர் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு நீங்கள் யார்? என்று விசாரித்தனர்.
சிரார்த்தத்துக்கு வரவேண்டிய பிராமணர் வரமுடியாததால் தன்னை அனுப்பியதாக அவர் பதில் கொடுத்தார். நெற்றியில் நல்ல பெரிய நாமம்; முகத்தில் புதுப் பொலிவு; சிரார்த்தமும் முறையாக நடந்தது .
அன்று மாலையே சுவாமிகளுக்கு நன்றி தெரிவிக்க இருவரும் ஆச்ரமத்துக்குச் சென்றனர். அவரும் புன்சிரிப்புடன் என்ன ? சிரார்த்தம் எல்லாம் நல்லபடியாக நடந்ததா? என்று கேட்டார். தம்பதிகளோ வியப்புடன் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். சுவாமிகளும் நான்தான் நாரா யணனைக் கேட்டுக்கொண்டேன்; வந்தவர் வேறு யாருமில்லை; சாட்சாத் நாராயணனேதான் என்றார்”.
****

எனது கருத்து
ராமாயணத்திலும் இறந்துபோன தசரதனை ராமர் சந்தித்த நிகழச்சிகளைக் காண்கிறோம். மதுரை ஆதீனகர்த்தராக இருந்து மறைந்த யாழ்ப்பாண அறிஞர் இதுபோல பல சம்பவங்களை அவருடைய புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.
சிரார்த்தம் என்ற சொல் சிரத்தா= நம்பிக்கை என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததே இதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் என்பதே தாத்பர்யம்.
மனு ஸ்ம்ருதி நூலும், சிரார்த்தம் குறித்து மிகவும் கடுமையாகப் பேசுகிறது. அனறைய தினம் கடைப்பிடிக்க வேண்டிய மடி, ஆசாரம் ஆகியன பற்றி அவர் எச்சரிக்கிறார். இந்த சம்வங்களும் மனுவின் எச்சரிக்கயும் நமக்குச் சொல்லும் விஷயம் அன்றைய தினம் இறந்து போன முன்னோர்கள் உண்மையாகவே அந்த வீட்டில் பிரவேசிக்கிறார்கள் என்பதே.
இந்தக் கட்டுரையை எழுதும் இந்நாள் மஹாளய மாவாசை நாள் 2-10-2024 . எல்லா ஜாதியினரும் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செலுத்த கடல், ஆறு, குளம், ஏரிகளுக்கு லட்சக் கணக்கில் செல்கிறார்கள்; கிறிஸ்தவர்கள் கூட இறந்த முன்னோர்களின் கல்லறைக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று பூக்களையும் படைப்புகளையும் அளிக்கின்றனர்
வெளியே செல்ல முடியாதவர்கள், இறந்துபோன உறவினர்கள் படத்தில் பூக்களை வைத்து அஞ்சலி செய்யலாம். சடங்குகளை விட அவர்களை நன்றியுடன் நினைப்பது மிகவும் அவசியம்.
READ MY OLD ARTICLES

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1371: தேதி 26 அக்டோபர் 2014
தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145
“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145
CONTINUE………………………………
Tamil and Vedashttps://tamilandvedas.com › ம…
27 Apr 2023 — Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.
Tamil and Vedashttps://tamilandvedas.com › வி…
13 Oct 2019 — வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய அமாவாசை! (Post No.7090). Research Article written by London …
Tamil and Vedashttps://tamilandvedas.com › 2023/04/27 › mahalaya-am…
27 Apr 2023 — 8 Dec 2021 — Anumati- Divine Grace, personified as a Goddess representing the God’s favourable acceptance of worship and oblations. Though …
Missing: மஹாளய | Show results with: மஹாளய
Tamil and Vedashttps://tamilandvedas.com › tag
28 Dec 2017 — மஹாளய அமாவாசை – அமாவாசை. இப்படி திதிகளை வைத்தே பல முக்கிய தினங்களை நாம் …
–சுபம்—
மஹாளய அமாவாசை, சிரார்த்தம், திதி, அதிசய சம்பவம், , முன்னோர்கள், பூமி , வருகை, திதி
Posted by Tamil and Vedas on October 2, 2024
https://tamilandvedas.com/2024/10/02/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%99/
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.735
Date uploaded in London – —2 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி தினம்.
மகாத்மாவிற்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
காந்திஜியின் வாழ்க்கையில்…!
ச.நாகராஜன்
1
டிக் டிக் பையன்!
ப்ரதாப் ஒரு குழந்தை. ஒரு நாள் பாபுஜியின் வாட்ச் அவர் இடுப்பிலிருந்து தொங்குவதை அவன் கவனித்தான். அவனுக்கு ஒரே ஆவல் அது என்ன என்று தெரிந்து கொள்ள!. தன் தாயாரின் புடவையைப் பிடித்து இழுத்த அவன், அந்த வாட்ச் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தான்.
காந்திஜிக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். என்றாலும் கூட தேவையற்ற விஷயங்களில் குழந்தைகள் பிடிவாதம் பிடித்தால் அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதை நல்லவிதமாக நயமாகச் சொல்லித் திருத்த வேண்டும் என்பார்.
ஆகவே வாட்சைக் கேட்ட ப்ரதாபின் அருகில் வந்த காந்திஜி அதை அவன் காதுகள் அருகே ஆட்டி, “ இதோ பார்! இது எப்படி டிக் டிக் என்று அடிக்கிறது என்று. ஆனால் இது உன்னுடைய பொம்மை இல்லை. இது என்னுடையது. ஆகவே இது உனக்குக் கிடைக்காது” என்று மெதுவாகச் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அன்றிலிருந்து அந்தப் பையனை காந்திஜி பார்க்கும் போதெல்லாம், இருவரும் டிக் டிக் என்று அழைத்துக் கொள்வார்கள்.
அத்துடன் அந்த விஷயம் முடிந்தது!
2
பொதுமக்கள் பணத்தில் வீண் செலவு கூடாது!
பாபுஜியின் பேரனான காந்திலால் மைசூரில் மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் பாபுஜியின் ஆசிரமத்திற்கு வந்த போது ஒரு பெரிய விவாதம் இருவருக்கும் இடையே நடந்து கொண்டிருந்தது. எப்போது ஆரம்பித்தது என்று தெரியாத நிலையில் அந்த விவாதம் நடக்கும் போது ராம்நாராயண் சௌத்ரி அங்கு சென்று சேர்ந்தார். அவர் இருக்கும் போது இன்னும் 15 நிமிடங்கள் விவாதம் தொடர்ந்தது.
விஷய்ம் வேறொன்றுமில்லை. காந்திலாலுக்கு இன்னொரு வேஷ்டி வேண்டுமாம். அதற்காக அவர் காந்திஜியிடம் அதைக் கேட்க காந்திஜி அது அனாவசியம் உள்ளதே போதும் என்று சொல்லி விட்டார். இதற்காகத் தான் இருவருக்குமிடையே பெரிய விவாதம்!
காந்திஜி தர மாட்டேன் என்று சொல்லவே காந்திலால் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
உடனே ராம்நாராயண் காந்திஜியிடம், “பாபுஜி, உங்கள் நேரம் விலை மதிப்பற்றது. இந்த சாதாரண விஷயத்திற்கா இவ்வளவு பெரிய விவாதம்” என்று சொல்ல ஆரம்பித்தார்; இடை மறித்தார் காந்திஜி.
“நீங்கள் சொல்ல வருவது என்ன என்று எனக்குப் புரிகிறது.விஷயம் சிறிதா பெரிதா என்பது முக்கியம் அல்ல. அதில் அடங்கி இருக்கும் கொள்கை என்ன என்று பார்க்க வேண்டும். நிச்சயம் அவசியம் என்றால் ஆயிரம் ரூபாய் கூட செலவழிக்கலாம். மனிதனின் நிச்சயமான தேவைக்கு முன்னால் பணம் ஒரு பொருட்டே அல்ல. பால்கோபாவின் சிகிச்சைக்கு பணத்தைத் தண்ணீராக நான் செலவழித்தது உங்களுக்குத் தெரியும். அதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவே இல்லை. ஆனால் இன்னொரு வேஷ்டி வேண்டும் என்று காந்தி கேட்கும் போது, அதை எப்படி என்னால் அளிக்க முடியும்?” என்றார் காந்திஜி.
பொதுமக்கள் பணத்தைக் கையாளுவதில் அவர் எவ்வளவு கவனமாக இருந்தார் என்பதற்கு இது போல் ஏராளமான சம்பவங்கள் உண்டு.
3
பாரம்பரியப்படி பெரியோருக்கு மரியாதை!
இந்திய பாரம்பரியத்திற்கு இணங்க பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் காந்திஜிக்கு விருப்பம் அதிகம்.
ரவீந்திரநாத் தாகூரின் அண்ணனான போரா தாதாவைக் கண்டால் அவர் எழுந்து நின்று வரவேற்பார். அவர் விடை பெறும் போதும் நின்று வழி அனுப்பி வைப்பார்.
பண்டிட் மதன் மோகன் மாளவியா இதை நேரில் பார்த்தவர்.
தனக்குப் பிடித்தவர்களின் செல்லப் பெயரைச் சொல்லியே அவர்களை அழைப்பது பாபுஜியின் வழக்கம் – அவர்கள் வயதில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதிலும் கூட!
காகா, மாமா, குருதேவ் என்று இப்படி காந்திஜி செல்லப் பெயர்களைச் சூட்டுவது வழக்கம்!
**
அற்புதமான வாழ்க்கையில் கணம் தோறும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை வாழ்ந்து காட்டியவர் மகாத்மா.
செயலில் ஒவ்வொரு கணமும் அதை அவர் செய்து காட்டிய போது ஆசிரமத்தில் அவர் கூட இருந்த அனைவரும் அதை நன்கு கற்றுக் கொண்டனர்.
மேற்கூறிய சம்பவங்கள் அனைத்தும் RAM NARAYAN CHAUDHARY அவர்கள் எழுதிய BAPU AS I SAW HIM என்ற ஆங்கிலப் புத்தகத்தின் சில தமிழாக்கப் பகுதிகளாகும்.
நன்றி NAVAJIVAN TRUST , 1959
Posted by Tamil and Vedas on October 2, 2024
https://tamilandvedas.com/2024/10/02/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/


Post No. 13,734
Date uploaded in London – 1 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Swami Swaroopananda, Global Head of Chinmaya Mission , gave Talks on Sacred Sounds (Siva Panchakshara Stotram).
On the last day a young dancerVarun danced for Siva Shambo song for ten minutes. All gave him a big applause.
All the five days the attendance was very good- ranged between 800 to 1000 devotees; no food Prasad but only a new booklet prasad.
Started right on time like RSS meetings and finished on time like RSS meetings.
A lot of youths like RSS meetings. No old goose sleeping like in religious discourses and Bhajans.
Swamiji explained PANCHA AKSHARA -one letter each day Na, Ma, Si, Va, Ya. That removed all the five fears including death.
Dhyana for ten minutes and Stotra recitation every day for ten minutes in the beautiful voice of Madhu.
Big difference between Chinmaya meetings and other meetings:
1 A lot of boys and girls, youths.
2.Book shop with lot of Hinduism books, puzzles, toys etc.
3. No food prasad but the attendance was 1000.
4.Admission is absolutely FREE like RSS meetings and Sathya Sai Baba meetings/Bhajans
5. Voluntary donations as Guru Dakshina was accepted on the last day.
I always buy books and give Guru Dakshina. Anyone who listened to his in-depth lectures would voluntarily give Guru Dakshina.
If you have missed this year in London, you may listen to him in Lincolnshire this month.
For details and regular classes in Chinmaya Keerti in Hendon ,London please visit their website.
Make it Happen
(MiH) is a 6-day intensive in-person course followed by 12 months of comprehensive online support, designed to guide you through an inward journey of self-discovery and empowerment. Led by renowned spiritual teacher, Swami Swaroopananda, the course combines impactful workshop exercises, introspection tools, and thought-provoking classes to illuminate your life’s unique purpose and help you overcome the deepest limitations of your mind.
️ 29th Sept 2024 to 4th October 2024
The Vedanta, Lincoln Rd, Branston, Lincolnshire, United Kingdom, LN4 1PD
Register today!
https://www.chinmayabooks.com/product-category/make-it-happen/









C U ALL NEXT YEAR IN SWAMIJI’S TALKS.
–subham—
Tags- Swami Swaroopananda, Talks, September 2024, Siva Panchakshara Stotra
Posted by Tamil and Vedas on October 1, 2024
https://tamilandvedas.com/2024/10/01/london-events-from-my-mobile-phone-swami-swaroopananda-talks-post-no-13734/
Post No. 13,733
Date uploaded in London – 1 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
London Swaminathan’s 125th is Book for Sale! (Post No.13,733)
Thanks to Dr Rajesh Devadas’ Pustaka .co.in , my 125th book is out. Now readers can fread all my 123 English and Tamil books at putaka.co.in
Other two books 125-123= 2 were published way back in 1991 and before 1987. They were my BBC Tamil Q and A my lessons at Journalism Course I taught at the University of Madurai. Now its is name Madurai Kamaraj University where I ran the Journalism Diploma course in the evening college.
Please go through the list and download the books u r interested. Please know that there is a small fee .In London and Washington money it is a peanut!
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
****
English Book List is at the end:
இதுவரை நான் எழுதி வெளியிட்ட 125 நூல்கள்:
1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!
2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்
3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்
4.பெண்கள் வாழ்க –
5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு
6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்
7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?
8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?
9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!
10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!
11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!
12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை
பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி
13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்
14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்
15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்
16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!
கிரேக்க நாட்டில் இந்துமத சடங்குகள், கதைகள்!!
17.சிங்கப்பூரில் சிவபெருமான் !
சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!
18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?
19.தொல்காப்பிய அதிசயங்கள்
20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்
21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்
22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு
23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!
24.மனைவி ஒரு மருந்து
25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!
26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்
27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
28.பறவைகள் சகுனம் உண்மையா?
கடவுளுக்கு வாகனம் எதற்காக?
29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர்
பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!
30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு
யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!
31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்
தரும் சுவையான செய்திகள்
33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்
34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்
35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை
திகைக்கவைக்கும் கவிதைகள் !
36. முக்கிய கோவில்கள், சமாதிகளை
தரிசிக்க உதவும் கையேடு
37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!
38.சுவையான யானை பூனை கதைகள்,
உண்மைச் சம்பவங்கள்
39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்
40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர், சாணக்கியன் சொன்ன கதைகள்
41. மஹாபாரதப் போர் நடந்ததா?
42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்
43.அற்புத மூலிகைகள் பற்றி
வேதம் தரும் செய்திகள் (title)
44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில் பெண்கள்
45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்
46. பரத நாட்டியக் கதைகளும்
பழமொழிக் கதைகளும் (title)
47.அதர்வண வேத பூமி சூக்தம்
சொல்லும் வியப்பான செய்திகள்
48. தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?
ஏசு கிறிஸ்து இந்தியா வந்தாரா?
49.லண்டன் பார்க்க வாறீங்களா !
சிட்னி பார்க்க வாறீங்களா?
50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி
(கட்டுரைத் தொகுப்பு)
51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்
அரிய அறிவியல் செய்திகள்
52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’
53.உபநிடதத் தென்றலும் வேத மழையும்
(கட்டுரைத் தொகுப்பு)
54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?
(கட்டுரைத் தொகுப்பு)
55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்
56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி
சொல்லும் அதிசயச் செய்திகள் (book title)
57.கட்டுரைக் கதம்பம்
(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title
58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்
59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)-
60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் ) book title
61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்
62. தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்
63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்
64.தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’ (Tamil- English Bilingual Hindu Quiz Book)
65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக
அற்புத ஒற்றுமைகள்
66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்
67. மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்?
68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்
69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்
600 கேள்வி–பதில்கள் !!
70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !
(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )
71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு
72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்
73. இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)
74.Second part
75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!
xxxxxx
ENGLISH BOOKS
(1)Is Brahmastra a Nuclear Weapon?
(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS
(3).Famous Trees of India
(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?
(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,
KUMARIK KANDAM AND TOLKAPPIAM
(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
(7). Interesting Anecdotes from the World of Music
(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES
(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature
(11) THE WONDER THAT IS HINDU TEMPLE
(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!
(13). Date of Mahabharata War & other Research Articles
(14). Miracles of Hindu, Parsi, Jain &
Buddhist Saints
(15). HINDU STORIES ABOUT MONKEYS,
DONKEYS AND ELEPHANTS
16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE
17. Mayan Civilization and Hindu Nagas
Asuras, Rishis and Gandharvas
18.Hindu Wonders in Muslim Countries (book title)
19.Hindu Influence in Mesopotamia and Iran
20. Hinduism in Sangam Tamil Literature
21.Interesting Titbits from Bhagavad Gita
22.Om in Rome; Manu Smriti in London Church
23.Tamil Hindus 2000 Years Ago!
24. Rewrite Indian History
25.Beautiful Hindu Women and
Wonderful Weddings
26.Woman is an Adjective, Man is a Noun
27. Amazing and Unknown Names of Hindu Gods,
Himalaya, Water and Sea!
28. 1000 Hindu Quotations for Speakers and Students
29.History is a Mystery in India
30. Thousand More Hindu Quotations for Speakers and Students
31. Controversial and interesting Laws in Manu Smriti
(First Part)
32. Controversial and interesting Laws in Manu Smriti
(Second Part)
33.Linguistic and Language Wonders in India- Old Theories Binned
34.Interesting Anecdotes for Partygoers and Essay Writers
35.More Interesting Anecdotes for Partygoers
36.Third Book of Anecdotes for Students and Speakers
37.Brahmins in Tamil and Sanskrit Literature
38.Gandhiji’s Views on Controversial Matters
39.Guide to Hindu Homa (Havan) and Festivals
40.Guide to 108 Famous Temples in Maharashtra
41.Tamil Hindu Encyclopaedia
42.Strange Stories about Hindu Saints Temples and
Historical Atrocities
வேறு பதிப்பகம் மூலம் :-
1.வினவுங்கள் விடைதருவோம்
(பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)
2.இதழியல்
–Subham—
Tags: London Swaminathan, book list, 125 Tamil and English books, Pustaka.co.in, Dr. Rajesh Devadas
Posted by Tamil and Vedas on October 1, 2024
https://tamilandvedas.com/2024/10/01/london-swaminathans-125th-is-for-sale-post-no-13733/
Post No. 13,732
Date uploaded in London – 1 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Mahalaya Amavasya Day is on 2nd October for the year 2024. Already the ancestors and departed souls of each family are here for the past two weeks. Hindus believe they descend on earth from their abode up above the sky. They eagerly wait for our offerings.
Believe it or not! Hinduism is the cheapest religion in the world, cost wise. Their Gods don’t expect you to pour down gold coins and gemstones. They don’t even expect honey and milk. They want the Bilva leaves or Tulsi leaves or Arka grass or flowers or water! All these are available for a few pennies or paisas or free. Departed souls are also very humble and simple; they expect a cup of water and a spoon of sesame seeds.
So, tomorrow, 2-10-2024 , millions of Hindus will march towards seas and rivers, tanks and lakes, to salute their forefathers. Even Christians go to their family graves on the death anniversaries of their family members. Those who want to remember their ancestors can simply offer some flowers to their pictures.
Mr Venkateswaran Sarma of London , my friend and regular reader of our posts in this blog, has shared with me two amazing anecdotes of departed members coming to the respective families on their death anniversaries. Brahmins never miss such days and do Sraardham or Tithi . The very word Sraardham means faith (sradhdhaa). If you do it with faith, you get their blessings.
****
Two Anecdotes
Mr V Sarma writes
“At this weekend, I was listening to 2 renowned living vaidhikas perhaps in the whole of south India, one namely Sundararama Vajpaye and another Kannamani Dikshithar. The later definitely is of the Sengalipuram lineage. Both were super informative and were speaking on “Shardham” related topic and both sponsored by Veda Dharma Sastra Paripalana Sabha.
Experience 1:
There was a jaw dropping experience narrated by Kannamani Dikshithar wherein he said in Chennai he was officiating a shardham. He said that family was conducting it for the mother. In the Brahmana Bhojanam (meals) he said the Brahmana for “pithir” ate 13 pooris after having the full meal. He was wanting more and the household had only one or two left and so fretting. Once the bhojan is finished the Dikshithar when speaking with the family was informed that the deceased mother is so fond of Pooris. In addition the brahmana after completing the meal had said he has never eaten this much ever before and felt someone had entered his body. I was awestruck.
Experience 2:
Another incident was narrated previously (last Friday) by another person , a grandson of Sengalipuram, Dikshithar namely Sundarama Dikshithar. He quoted an incident that is related to the great “Gnananandagiri Swamigal”.
Apparently, there was one devotee who had sought Swamiji’s blessings the day before doing shraddha to his father as he couldn’t find a “brahmana”. Swamigal had blessed him saying “not to worry everything will be okay”.
The next day before shradham. also they had gone for darshan of swamigal as they couldn’t find one and again Swamigal had said to them to go home and everything will be okay to perform the shradham. When they returned, a Brahmana was sitting in their outside veranda. He looked very fresh, smiling and had full “namam” on his forehead. When asked who he is he had said the “sastrigal” who they had promised to come for brahman bhojan couldn’t come; so ihe had sent him on his behalf. The shardha went well and after the completion later in the day they have gone again to “Gnana nandagiri Swamigal” to prostrate and to thank him.
Swamigal was smiling and had inquired how the shradham was. The couple said to him what had happened. To that swamigal had said that He had asked “Lord Narayana” Himself to help to complete their shardha and had said it is the Lord Himself who was the “Brahmana” at the shrardha. He had asked the Lord himself. I was stunned listening to this. In fact I cried.
Everyday listening to upanyasam on Shardha over this Mahalaya Period I feel I have educated myself so much. “- Sarma
****
These anecdotes will inculcate more faith in us. I am also surprised to read Manu Smriti where he insists extreme cleanliness and utmost attention to such ceremonies. That shows the departed souls visit us on those days. In Ramayana also, we read about Rama meeting Dasaratha again on such Tithi days.
****
More details from Wisdomlib.org
Śrāddha (श्राद्ध).—a. [śraddhā hetutvenāstyasya aṇ] Faithful, believing.
-ddham 1 A funeral rite or ceremony performed in honour of the departed spirits of dead relatives; श्रद्धया दीयते यस्मात्तस्माच्छ्राद्धं निगद्यते (śraddhayā dīyate yasmāttasmācchrāddhaṃ nigadyate).
It is of three kinds:-नित्य, नैमित्तिक (nitya, naimittika), and काम्य (kāmya); यः संगतानि कुरुते मोहाच्छ्राद्धेन मानवः (yaḥ saṃgatāni kurute mohācchrāddhena mānavaḥ) Manusmṛti 3. 14.
2) An obsequial oblation, a gift or offering at a Śrāddha; विहाय शोकं धर्मात्मा ददौ श्राद्धमनुत्तमम् (vihāya śokaṃ dharmātmā dadau śrāddhamanuttamam) Mahābhārata (Bombay) 14.62. 1; सर्वं श्रद्धया दत्तं श्राद्धम् (sarvaṃ śraddhayā dattaṃ śrāddham) Pratimā 5.
Śrāddha (श्राद्ध).—This term indicates the duty by its proper name. Śrāddha is the name of the rite laid down as to be done in honour of one’s ancestors, on the amāvasyā day; and the whole process of that rite is indicated by the name śrāddha.
Rites in honour of the gods shall he performed in the forenoon; that in honour of the pitṛs in the afternoon; the śrāddha offered to a single person shall be performed at mid-day, while that in connection with auspicious rites shall be performed in the morning.
My old article on Mahaalaya Amaavaasai:
Mahalaya Amavasai and Ancestors Worship (Post No.11943)
https://tamilandvedas.com › 2023/04/27 › mahalaya-am…
27 Apr 2023 — Mahalaya Amavasai and Ancestors Worship (Post No.11,943) · Post No. 11,943 · Date uploaded in London – – 27 APRIL 2023 · Contact – swami_48@yahoo.
https://tamilandvedas.com › 2014/10/25 › 96-salutes-to…
25 Oct 2014 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. 96 Salutes to Departed Souls! Rameswaram on Mahalaya Amavasya (new moon …
–subham—
Tags- Mahalaya Amavasai, departed souls, ancestors, Sraddha, Sraardham, Tithi, salute, worship,
Posted by Tamil and Vedas on October 1, 2024
https://tamilandvedas.com/2024/10/01/let-us-salute-the-departed-souls-on-mahalaya-amavasya-day-post-no-13732/
Post No. 13,731
Date uploaded in London – 1 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பழமொழிகள் விஷயத்தில் ஸம்ஸ்க்ருதத்துக்கு அடுத்த நிலையில் நிற்பது தமிழ்ப் மொழி. சம்ஸ்க்ருத மொழியில் சுபாஷிதம் என்ற பெயரில் இருபதாயிரத்துக்கும் மேலான பொன் மொழிப் பாடல்கள் உள்ளன. இவைதவிர சாணக்ய நீதி, விதுர நீதி , மகாபாரத சாந்தி பர்வம், அனுசாசன பர்வம் முதலிய நூல்களில் பல்லாயிரக் கணக்கான நீதிகள் இருக்கின்றன. சுபாஷித ரத்ன பாண்டாகார என்ற ஒரே நூலில் மட்டும் 16,000 சம்ஸ்க்ருத பொன்மொழிகள் உள்ளன.
சம்ஸ்க்ருத நீதி நூல்களின் காலம் மஹாபாரத காலம் வரை செல்கிறது. இதை விதுர நீதி முதலியவற்றிலிருந்து அறிகிறோம். தமிழ் மொழியும் சளைக்கவில்லை; மஹேந்திர பல்லவன் காலத்தில். (600 CE) அப்பர் பழமொழிகளை வைத்தே ஒரு தேவாரப் பதிகம் பாடிவிட்டார், பழமொழி 400 என்ற கீழ்க்கணக்கு நூலில் மட்டுமே, சம்ஸ்க்ருத சுபாஷிதம் போல, பாடல் வடிவில் 400 பழமொழிகள் உள்ளன. கம்பனும் ராமாயணத்தில், நூற்றுக்கணக்கில் பழமொழிகளை உதிர்த்த ள்ளான். மூன்று ஆங்கிலேயர்கள் 20,000 தமிழ்ப் பழமொழிகளை நமக்கு நூல் வடிவில் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அச்சடித்துக் கொடுத்துவிட்டனர்.
ஒரு சுவையான விஷயம் என் கண்ணில் பட்டது. லண்டன் பல்கலைக் கழக நூலகத்துக்குச் சென்ற வரம் போனேன். ஐரோப்பிய தூரக்கிழக்கு நாடுகளின் ஆசிய நாடுகளின் பழமொழிகள் என்ற நூலைப் புரட்டினேன். தமிழ் மொழி, சம்ஸ்க்ருத தேவ நாகரி எழுத்துக்களையும் கண்டு, உடனே வீட்டிற்கு எடுத்து வந்தேன் தூரக்கிழக்கு என்பது ஜப்பான், கொரியா, சீனா முதலிய நாடுகள் ; அங்குள்ள சுமார் இரு நூறு பழமொழிகளை லத்தீன் உள்பட ஐரோப்பிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ஐந்து மொழிகளுடன் ஒப்பிடுவதே நூலின் குறிக்கோள். ஆயினும் போகிற போக்கில் ,தமிழ்ப் பழமொழி தொகுப்பு நூல்களிலிருந்து தமிழ் பழமொழிகளையும் பஞ்ச தந்திரம் மஹாபாரதம் நூல்களிலிருந்து சம்ஸ்க்ருத பழமொழிகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்கள். பெரியோர்கள் சிந்தனை ஒரே மாதிரி இருக்கும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த நூலில் அப்பழமொழிகளின் பின்னாலுள்ள கதைகளும் சம்பவங்களும் நாலைந்து வரிகளில் சுருக்கமாக உள்ளன. அவர்கள் சொல்லாத தமிழ்ப் பழமொழிகளையும் நான் கண்டேன்.
இதோ உங்கள் பாவைக்கு பார்……..
நமது நாட்டில் மஹாபாரதம், ராமாயணம் முதலிய நூல்களுக்கு மிகவும் பின்னால் புத்தரும் மகாவீரரும் அவதரித்தனர். அவர்களின் காலமே 2600 ஆண்டுகளுக்கு முன்னர். அதற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் லாவோ ட்சே மற்றும் கன்பூசியஸ் என்ற சீன தத்துவ ஞானிகள் அவதரித்தனர். அந்த சீன ஞானிகளும் பழமொழிகளை உதிர்த்துச் சென்றுள்ளதை இந்த நூல்களின் வாயிலாகக் காணலாம்.
Chinese philosopher Confucius (Kong Zi or Koshi or Kong Ja belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.
Chinese philosopher Lao Tse (Lao Zi or Roshi or Noja ) also belongs to Sixth Century BCE, contemporary of Buddha and Mahavira.
பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!
புத்தமதம், சமணமதம், பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம்,
நாமமுயர் சீனத்துத் “தாவு” மார்க்கம்,
நல்ல “கண் பூசி” மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள்பல உளவாம் அன்றே
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.
—–பாரதி பாடல்
*****
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
Strike the iron while it is hot
இதற்கு இணையான பழமொழி இரும்பினை சூடாக இருக்கும்போதே அடித்து வளை என்பதாகும். இது தூரக்கிழக்கு நாடுகள் முழுதும் ஒலிக்கிறது.
இந்த சூடான இரும்பை அடிக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டினை ஆதி சங்கரரும் விவேக சூடாமணியில் பயன்படுத்தியுள்ளார்.
****
இதோ ஒரு சுவையான கதை
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
Constant dropping wears the stone
இதற்கு இணையான பழமொழி– சொட்டுச் சொட்டாக தண்ணீர் கொட்டினால் பாறையும் பிளக்கும் என்பதாகும் இது ஐரோப்பிய, தூரக்கிழக்கு நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் உள்ளது
இதற்குப் பின்னால் சீனாவில் ஒரு கதையும் உள்ளது.
சொங்கியாங் என்ற இடம் சீனாவில் இருக்கிறது அதன் நீதிபதி சாங் குவையா அங்கு நடக்கும் கஜானா வேலைகளைக் கண்காணிக்க வந்து கொண்டிருந்தார் . அப்போது ஒரு ஊழியர் டர்பனில் (தலைப்பாகை) ‘டக்’ கென்று ஒரு செப்பு நாணயத்தை மறைத்து வைத்துக் கொண்டார். இதை பார்த்த நீதிபதி சாங் குவையா அவனை நீதி மன்றத்தில் நிறுத்தினார்.
டேய் நீ என்ன செய்தாய் தெரியுமா?
உடனேயே அவன் கத்தினான்–
ஐயா, ஒரு செப்புக்காசில் என்னய்யா வந்தது?
உடனே நீதிபதி எழுந்தார்; சிவப்பு மையில் ஒரு பிரஷ்ஷைக் தோய்த்தார் ; அவர் எழுதினார்
நாள் ஒன்றுக்கு ஒரு செப்புக்காசு !
ஆயிரம் நாளில் ஆயிரம் காசு !!
அவ்வளவுதான் அந்த ஊழியருக்கு மரண தணடணை !
இந்தியாவிலும் குப்தர் ஆட்சியில் திருட்டுக் குற்றங்களுக்கு மரண தணடனை இருந்தது இதனால் திருடர்களே இல்லை; மக்கள் வீட்டில் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டே தூங்குகின்றனர் என்று சீன யாத்ரீகன் பாஹியான் எழுதி வைத்துள்ளான். அதிலிருந்து வந்ததே இந்த சொட்டு நீர் பாறையையும் பிளக்கும்; எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பதாகும்.
*****
Easier said than done
சொல்லுதல் எளிது செய்வது கடினம்
வாய்ச்சொல் வீரர்கள்தான் உலகில் அதிகம். இதை இன்றும் பேஸ்புக், ட்விட்டர் ,டிக் டாக முதலிய சமூக தொடர்பு மேடைகளிலும் அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளிலும் காண்கிறோம். இதை நம் வள்ளுவர் தமிழ் வேதத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே செப்பிவிட்டார்:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்–குறள் 664
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்..
****
Do not do to others what you do not want to be done to you
மற்றவர்கள் உனக்கு எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ அதை நீயும் பிறருக்குச் செய்யாதே
மஹாபாரத விதுர நீதி யிலுள்ள இந்த ஸ்லோகம் பைபிளில் மத்தேயு சுவிசேஷத்திலும் காணப்படுகிறது
ந தத் பரஸ்ய சந்தத்யாத் ப்ரதிகூலம் யதாத்மன: — 7-17, விதுர நீதி
தஸ்மாத் தர்ம ப்ராதீனேன பவிதவ்யம் யதாத்மனா
ததா ச சர்வபூதேஷு வர்திதவ்யம் யதாத்மனீ
–மஹாபாரதம், சாந்தி பர்வம், 167-9
வள்ளுவனும் தமிழ் வேதத்தில்
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல் – குறள் 318
xx
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.–குறள் 96:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமையான சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய, அறம் வளர்ந்து பெருகும்.
xx
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல் – குறள் 314
This book is full of Tamil proverbs
TO BE CONTINUED…………………………………
TAGS- மஹாபாரதம், விதுர நீதி, குறள், பாரதி பாடல் , உலகம் முழுதும் , தமிழ்ப் பழமொழிகள் -1, சம்ஸ்க்ருத பழமொழிகள், சுபாஷிதம்
Posted by Tamil and Vedas on October 1, 2024
https://tamilandvedas.com/2024/10/01/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
Post No. 13,730
Date uploaded in London – 1 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நலுங்குப் பாட்டு
அனுப்பியவர் திருமதி தயா நாராயணன் ,
Mrs Daya Narayanan from London.
எனது நல/லுங்குப் பாடல் தொகுப்புக்கு லண்டன் திருமதி தயா நாராயணன் கீழ்கண்ட பாடலை அனுப்பி இருக்கிறார். மேலும் நலங்குப் பாடல்கள் இருந்தால் எழுதி அனுப்பும்படி நமது வாசகர்களை வேண்டுகிறேன் ; இவைகள் அழிந்து வருகின்றன; நாம், எதிர்காலத்துக்கு அவைகளைப் பாதுகாத்து அளிப்போம்.
சம்பந்திப் பாட்டு
சம்மந்தி அம்மா வந்தாளாம்
சந்தோஷமாகவே
சம்மந்தி அம்மா வந்தாளாம்
சந்தோஷமாகவே
பானைபோல் வயிறும் பட்டாணிக்கண்ணும்
யானை ரூபமும் எலி வால் பின்னலும்
சம்மந்தி அம்மா வந்தாளாம்
வெகு சந்தோஷமாகவே
ஜப்பான் குள்ளம் ஜெர்மனி உயரம்
ஹிட்லர் மூக்கும் சர்ச்சில் வாயும்
சம்மந்தி அம்மா வந்தாளாம்
வெகு சந்தோஷமாகவே !
வெகு சந்தோஷமாகவே !
வெகு சந்தோஷமாகவே !
குறிப்பு – இது இரண்டாம் உலகப் போர் காலப் பாட்டு ; அந்தக் காலத்தில் ஹிட்லர், சர்ச்சில் படங்கள், கார்ட்டூன்கள் அடிகடிப் பத்திரிகைகளில் வெளியானதால் இதை மக்கள் ரசித்து இருப்பார்கள்.
*****
நலங்குப் பாட்டு
ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா
ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா
ராஜ கோபாலா
கனகாம்பரதாரா கெளஸ்துப ஹாரா
கவச குண்டல தாரா
வனமா தாரா வாசுதேவா காலி
வைகுண்ட ஜகன்னாதா
ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா
பக்தவத்சல பரமதயாளா
பரிபூரணானந்தா நித்யானந்தா
உத்தம புருஷா
சித்தடி நலுங்கிடரே
ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா
ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா
நலுங்கு நிகழ்ச்சிகளில் பெண் வீட்டுக்காரர்கள் மணப் பெண்னைப் பாராட்டியும் மணமகனைக் கிண்டல், கேலி, பரிகாசம் செய்தும் பாடுவார்கள் .
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மணப் பெண்னைக் கிண்டல், கேலி, பரிகாசம் செய்தும் மணமகனைப் பாராட்டியும் உயர்த்தியும் பாடுவார்கள் .
அந்தக் காலத்தில் மிக இளம் வயதில் கல்யாணங்கள் நடந்தன கோவலன் , இராமபிரான் ஆகியோருக்கெல்லாம் 18 வயதுக்குள்ளேயே திருமணங்கள் நடந்ததாக நமது இலக்கியங்கள் செப்புகின்றன. அந்த சூழ் நிலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் கூட இந்தப் பாடல்களை ரசித்து இருப்பார்கள்.
இப்போது போல எருமைக்கடா வயதில் கல்யாணங்கள் நடக்கவில்லை!.
Previous Articles
நலுங்கு பாடல்கள் ஆராய்ச்சி (Post No.7666)
Post No.7666
Date – 8 March 2020
.
நலுங்கு பாடல்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன் . ரிக் வேதத்திலும் நலுங்குப் பாடல்கள் இருக்கின்றன. அது பற்றி தனியாக எழுதுகிறேன். இதோ லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கிடைத்த பழைய நலுங்குப் பாடல் புஸ்தகம். வாசகர்களும் காமெண்ட் பத்தியில் நலுங்குப் பாடல்களையும் அது பற்றிய தகவல்களையும் கொடுத்தால் எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்தரும்
நூலின் தலைப்பு – நூதன நலுங்குப் பாட்டு
ஆண்டு- 1937
வெளியிட்டவர்- சென்னை திருவொற்றியூர் நாக்கை சரவண முதலியார்
அவர்களது கலை மகள் பிரஸ்
மேலும் ஒரு நலுங்குப் பாடல் புஸ்தகம் (Post No.7688)
Post No.7688
Date– 13 March 2020
நலுங்குப் பாடல்கள் ஆராய்ச்சி என்ற தலைப்பில் மார்ச் எட்டாம் தேதி இங்கு ஒரு கட்டுரை வெளியிட்டேன். இதோ பிரிட்டி லைப்ரரியில் கிடைத்த மேலும் ஒரு நூல்
நூலின் பெயர் – கல்யாண கீதம் எழுதியவர் – குன்றத்தூர் அரங்காச் சாரியார்.
ஆண்டு -1906
மொத்த பக்கங்கள் 26
PLEASE SEND ME MORE NALANGU WEDDING SONGS.
—subham—
Tags– நலுங்குப் பாட்டு , நலங்கு, சம்பந்திப் பாட்டு , ஆராய்ச்சி
Posted by Tamil and Vedas on October 1, 2024
https://tamilandvedas.com/2024/10/01/%e0%ae%a8%e0%ae%b2%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-post-no-13730/
Post No. 13.729
Date uploaded in London – —1 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேடம் க்யூரி! – 2
ச. நாகராஜன்
போர்க்களத்தில் எக்ஸ்-ரே மெஷின்
கதிரியக்கம் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவர் ஒரு எக்ஸ்-ரே மெஷினை உருவாக்கினார். அதை அவர் முதலாம் உலகப் போரில் போர்க்களத்தில் பயன்படுத்தியது ஒரு சுவையான செய்தி. போர் மூண்ட போது அந்தக் கால கட்டத்தில் எக்ஸ் ரே எடுப்பது
மருத்துவ மனைகளில் மட்டுமே முடியும்!
ஆகவே அவர் ஒரு “ரேடியாலஜிகல் காரை” உருவாக்கினார்.
அதில் எக்ஸ்ரே மெஷினை நிறுவினார். அதை இயக்க மின்சக்தி
வேண்டுமே! அதற்காக ஒரு டைனமோவையும் காரில்
நிறுவினார்.
பிரெஞ்சு ராணுவத்திடமிருந்து இதற்கென எந்த உதவியும்
கிடைக்கவில்லை.
மிகவும் ஏமாற்றமடைந்த கியூரி பிரான்ஸில் இருந்த பெண்கள்
சங்கத்தை நாடினார். அந்தச் சங்கமும் தேவையான பணத்தைக்
கொடுத்தது.அதை வைத்து முதல் காரை உருவாக்கினார்.
அதற்கு லிட்டில் க்யூரி என்று பெயரிட்டார். அது 1914ஆம்
ஆண்டு முதன் முதலாக போர்க்களத்தில் செயல்பட ஆரம்பித்தது.
அவரே இதை ஓட்டினார். இதற்காக வண்டியை ஓட்டவும் அவர்
கற்றுக் கொண்டார்.
ஒரு முறை அந்தக் காரின் டிரைவர் அதை ஒரு குழியில்
விடவே கார் கவிழ்ந்தது. க்யூரி சளைக்கவில்லை. காரை
நிமிர்த்தி சேதமான காரின் பாகங்களை சரி செய்து காரை ஓட்டிச்
சென்றார்.
போர்க்களத்தில் காயமடைந்த வீரர்கள் எக்ஸ் ரேயின்
உதவியினால் அறுவைச் சிகிச்சையை உரிய விதத்தில்
மேற்கொண்டு உயிர் பிழைத்தனர்.
போர்க்களத்தில் 200 எக்ஸ்ரே மெஷின்களை நிலையான
இடங்களிலும் அவர் நிறுவினார்.
செயல் திறம் மிக்க அபூர்வமான பெண்மணியாக அவர்
திகழ்ந்தார்.
நோபல் குடும்பம்
1921-ல் மேரி தனது இரு பெண்களுடன் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு வரலாறு காணாத அளவில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல பல்கலைக்கழங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்தன. ஒவ்வொரு முறை அமெரிக்கா சென்ற போதும் ஊடகங்களின் மூலம் அவர் பெற்ற புகழை அவரது பெண்கள் கண்ட போது தான் தனது தாயார் எப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்திருக்கிறார் என்று உணர்ந்தனர்.
ஐரீன் தனது தாயாருக்கு ரேடியம் நிறுவனத்தில் உதவி புரிய ஆரம்பித்தார். அங்கு ப்ரெடெரிக் ஜோலியட் என்பவரைச் சந்தித்து அவரையே 1926-ல் மணந்தார். 1935-ல் ரேடியோஆக்டிவ் அணுக்களைச் செயற்கையாகச் செய்யும் வழியைக் கண்டுபிடித்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஈவ் ஐரீன் பிறந்ததற்கு ஏழு வருடங்களுக்குப் பின்னர் பிறந்தார். ஈவ் சிறந்த எழுத்தாளரானார். மேடம் க்யூரி என்று தனது தாயின் சரிதத்தை அவர் எழுதினார். இந்தப் புத்தகம் பிரபலமாகி ஏராளமாக விற்பனை ஆனது. 1965ல் யூனிசெப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டபோது ஈவின் கணவர் ஹென்றி லபாய்ஸ் அதன் சார்பில் நோபல் பரிசைப் பெற்றார். ஆக க்யூரி குடும்பத்தில் நோபல் பரிசைப் பெற்ற ஐந்தாவது நபராக இவர் ஆனார். 2007-ம் ஆண்டு 102-ம் வயதில் ஈவ் மரணமடைந்தார்.
அமெரிக்க மக்களின் விசேஷ பரிசு
நூறு விஞ்ஞானிகள் முன்னிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதியான வாரன் ஹார்டிங்கைச் சந்திக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றார் மேடம் க்யூரி. அவருக்கென அமெரிக்க மக்களின் விசேஷ பரிசு ஒன்றை அளித்தார் ஜனாதிபதி. ஒரு சின்னப் பெட்டி. ஈயம் பூசிய எஃகினால் ஆன அந்தப் பெட்டி நீலம் மற்றும் வெள்ளை ரிப்பன்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. உள்ளே திறந்து பார்த்தால் ஒன்றும் இல்லை!
ஆம், வெள்ளை மாளிகைக்குள் பாதுகாப்பு காரணமாக உள்ளே வைத்திருக்க வேண்டிய பொருளைக் கொண்டு வர முடியவில்லை. அந்தப் பொருள் மேடம் க்யூரி வசிக்கும் பிரான்ஸுக்கு அனுப்பப்படும் முன்பாக அந்தப் பெட்டியில் வைக்கப்படும். அது என்ன? ஒரே ஒரு கிராம் ரேடியம் தான் அது! ரேடியத்தைக் கண்டுபிடித்தவருக்கு ஒரு கிராம் ரேடியம் பரிசாகத் தரப்பட்டது. அதன் அன்றைய விலை ஒரு லட்சம் டாலர்!
மறைவு
1934-ம் ஆண்டு தனது 66ம் வயதில் பிரான்ஸில் பாஸி என்ற இடத்தில் சான்ஸில்லெமா சானிடோரியத்தில் அதிக கதிர்வீச்சு உடலை பாதித்ததன் காரணமாக அவர் மரணமடைந்தார்.
மேடம் க்யூரியின் அனுபவ மொழிகள்
தன் வாழ்நாள் முழுவதும் ஊக்கமூட்டும் உரைகளை அவர் அளித்து வந்தார். குறிப்பாக அவர் பெண்கள் பெரிதும் முன்னேறுவதற்கான வழிகளைக் காட்டி வந்தார். அவரது பொன்மொழிகளில் சில:
“என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. இன்னும் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை மட்டுமே பார்க்கிறேன்.”
“வாழ்க்கையில் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. அதைப் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்.”
“மனிதர்களைப் பற்றி அறிவதில் குறைவாகவே ஆர்வத்தைக் காட்டுங்கள்; கருத்துக்கள் பற்றி அறிவதில் மட்டுமே அதிக ஆர்வத்தைக் கொண்டிருங்கள்.”
“எதையும் மிக மிக நேர்த்தியாகச் செய்ய வேண்டுமே என்று பயப்படாதீர்கள்; அதை ஒரு போதும் உங்களால் அடைய முடியாது.”
“முன்னேற்றத்திற்கான வழி விரைவானதும் அல்ல; சுலபமானதும் அல்ல என்பது எனக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது.”
“எனது வாழ்க்கை நெடுக இயற்கையின் புதிய காட்சிகள் என்னை ஒரு குழந்தை போல மகிழ வைத்திருக்கிறது.”
NOBLE நோபல் பெண்மணி
பல்லாயிரக் கணக்கானோர் இன்று எக்ஸ்-ரே மூலம் நல்ல மருத்துவ சிகிச்சை பெற காரணமாக அமைந்தவர், கதிரியக்கத்தின் நன்மை தீமைகளை உலகிற்கு உணர்த்தியவர் என்ற வகையில் உலக மக்கள் அனைவரும் நினவு கூர்ந்து போற்றும் ஒரு ‘நோபிள்’ (நோபல்) பெண்மணி மேடம் க்யூரி என்றால் அது மிகையாகாது.
**
Posted by Tamil and Vedas on October 1, 2024
https://tamilandvedas.com/2024/10/01/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-2/

Posted by London Swaminathan on 30-9-2024










Here are more informative and educative cartoons from Deccan Chronicle newspaper until 30-9-2024
—Subham—
Tags- Wonderful Cartoons, Deccan Chronicle, 3092024
Posted by Tamil and Vedas on September 30, 2024
https://tamilandvedas.com/2024/09/30/wonderful-cartoons-from-deccan-chronicle-until-3092024/