ராமாயணத்தில் சாபங்கள் (13) – கௌதமர் அகல்யைக்கு தந்த சாபம்! (Post.13,280)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.280

Date uploaded in London – –28 MAY 2024             

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (13)

ராமாயணத்தில் சாபங்கள் (13) – கௌதமர் அகல்யைக்கு தந்த சாபம்!

ச.நாகராஜன்

இந்திரனைச் சபித்த கௌதம முனிவர் தன் மனைவியான அகல்யாவை நோக்கினார். அகல்யாவையும் சபித்தார்.

பாலகாண்டம் 48-ம் ஸர்க்கம் 32,33,34,35, 36 ஸ்லோகங்களில் இந்த சாபம் விரிவாகக் கூறப்படுகிறது.

அத சப்த்வா ச வை சக்ரம் பார்யாமபி ச சப்தவான் |

இஹ வர்ஷ சஹஸ்ராணி பஹூனி த்வம் நிவத்ஸ்யஸி ||

சக்ரம் – இந்திரனை

சப்த்வா ச – சபித்தவுடன்

அத வை – உடனேயே

பார்யா அபி ச – (கௌதமர்) தன் மனைவியையும் கூட

சப்தவான் – இவ்வாறு சபித்தார்.

த்வம் பஹூனி – “நீ நீண்ட

வர்ஷ சஹஸ்ராணி – ஆயிரம் வருஷங்கள்

இஹ – இங்கே

நிவஸ்யஸி – இருப்பாய்”

வாயுபக்ஷா சிலா பூத்வா தப்யந்தி  பஸ்மசாயினீ |

அத்ருஷ்யா சர்வபூதாநாமாஸ்ரமேஸ்மின் பவிஷ்யதி ||

சிலா – “கல்லாய்

பூத்வா – சமைந்து

வாயுபக்ஷா – காற்றையே ஆகாரமாய் உண்டு

தப்யந்தி – மனம் தவித்துக் கொண்டு

பஸ்மசாயினீ – புழுதியில் கிடப்பவளாய்

சர்வபூதானாம் – சகல பிராணிகளுக்கும்

அத்ருஷ்வா – கண்ணுக்குப் புலப்படாதவளாய்

அஸ்மின் – இந்த

ஆஸ்ரமே – ஆசிரமத்தில்

பவிஷ்யஸி – கிடப்பாயாக”

யதா சைதத்வனம் கோரம் ராமோ தசராத்மஜ: |

ஆகமிஷ்யதி துர்தர்ஷஸ்ததா பூதா பவிஷ்யஸி ||

யதா – “எக்காலத்தில்

துர்தர்ஷ” – எதிர்க்க முடியாத தனி வீரனாக

தசராத்மஜ: – தசரதபுத்திரனான

ராம: – ஶ்ரீ ராமன்

கோரம் – பாழான

ஏதத் வனம் – இந்தக் காட்டிற்கு

ஆகமிஷ்யதி – வருவாரோ

ததா ச – அப்போதே

பூதா – பரிசுத்தையாக

பவிஷ்யஸி – ஆவாய்”

தஸ்யாதித்யேன துர்விருத்தே லோபமோஹவிவர்ஜிதா |
மத்சகாஷம் முதா யுக்தா ஸ்வம் வபுர்தாரயிஷ்யஸி ||

துர்விருத்தே – நடத்தை கெட்டவளே!

தஸ்ய – அவருக்கு

ஆதித்யேன –  அதிதி பூஜை செய்வதால்

லோபமோஹவிவர்ஜிதா – துராசையும் கண்மூடித்தனமும் நீங்கியவளாய்

மத்சகாஷம் – என்னருகில்

சுதா – சந்தோஷத்துடன்

யுக்தா – கூடியவளாய்

ஸ்வம் – உன் சொந்த

வபு: – வடிவை

தாரயிஷ்யஸி – வஹிப்பாய்!”

(பால காண்டம் 48-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 32 முதல் 36 முடிய)

கௌதமர் இவ்வாறு அகல்யையை சபித்து விட்டு அந்த ஆசிரமத்தை விட்டு  சித்தர்களும் சாரணர்களும் தங்கும் அழகிய ஹிமயமலை உச்சியில் பெரும் தவம் செய்யச் சென்றார்.

விஸ்வாமித்திரர் இப்படி அகல்யை மீதான சாபத்தையும் ராமருக்கு எடுத்துரைத்தார்.

**

75 Beautiful Quotations from Vishnu Sahasranama Commentary -Part 7 (Post No.13,279)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,279

Date uploaded in London – –   28 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Purusha -Word No.14 in the Vishnu Sahasranama (VS)

One who abides in the body or Pura.

Mahabharata Santi Parva 21-37 says,

Nava-dvaram puram punyam etair bhavaih samanvitam

Vyaapya sete mahaatmaa yah tasmaat purusa ucyate

Meaning

The great being resides in and pervades the mansionof the body, having all the features described before and provided with nine gateways; because of this He is called Purusa. Or by interpreting the word as Puraa aasit, the word can be given the meaning of one who existed always. Or it can mean one who is Puurna, perfect.  Or one who makes all things Puurita.i.e. filled by pervading them.

The Mahabharata Udyoga  Parva 7-11 says,

Puuranaat sadanaat ca’iva tato’sau purusottamah – He is called Purusottama , because He infills everything and sustains them all.

My comments

Body is described as a fort with Nine Gates is in all Sanskrit and Tamil scriptures. This description shows unity and uniformity in thought  throughout India.  This description is not found in any other culture.

सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी |
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् || 5-13||

sarva-karmāi manasā sannyasyāste sukha vaśhī
nava-dvāre pure dehī naiva kurvan na kārayan

BG 5.13: The embodied beings who are self-controlled and detached reside happily in the city of nine gates free from thoughts that they are the doers or the cause of anything.

xxxx

Yogah – Word No.18 in the V. S.

One attainable through Yoga. Yoga is defined as follows:

Jnaan’endriyaani sravaani nirudhya manasaa saha

Ekatva bhaavana yogah ksetrajnaa-paramaatmanoh

That is : The contemplation of the unity of the Jivaatmaa and the Paramaatmaa ,with the organs of knowledge and the mind withheld, is Yoga.

xxxx

Sarvah – Word No.25 in the V. S.

The omniscient source of all existence.

Mahabharata Udyoga Parva 70—11 says,

Asatas ca satas ca’iva sarvasya prabhavaapyayaat

Sarvasya sarvadaa jnaanaat  sarvamemam pracaksate

Meaning

As He is the source of all things gross and subtle and as He knows all things at all times, he is called Sarva.

xxxx

Krsnah – Word No.57 in the V. S.

The Existence- Knowledge-Bliss. Says Mahabharata Udyoga Parva 70-5,

Krsir bhuuvaacakah sabdo nas ca nivrti vaacakah

Visnus tad bhaava-yogaac ca Krsno bhavati saasvatah

Meaning

The syllable Kr denotes existence.

The syllable Kr denotes bliss. Vishnu in both these so He is always Krsna.

(Existence- Knowledge-Bliss= Sat-chit- Ananda)

xxxx

Mangalam param- Word No.63 in the V. S.

Supremely auspicious. Vishnu purana says,

Asubhaani niraacaste tanoti subha -santatim

Smrti maatrena yat pumsaam Brahma tan Mangalam viduh

Meaning

That whose very remembrance removes the inauspicious   and bestows the auspicious in abundance – that Brahman is called Mangalam by the wise. With the qualification Param, supremely, Mangalam forms one single name.

xxxx

Vrsaakapih –Word No.101 in the V. S

Shankara gave three meanings; one of them is from Mahabharata, where Kapih means Varaaha- a BOAR.

Mahabharata Saanti Parva 342-89 says

Kapir varaahah sresthas ca dharmas ca vrsa ucyate

Tasmaat vrsaakapim praaha kasyapo maam prajaapatih

Meaning

Kapi means Varaaha ( a boar) and also the Superior One (Sresthah). Therefore Kaasyapa-Prajapati calls Him Vrsaakapi.

To be continued……………….

Tags- 75 Beautiful Quotations , Vishnu Sahasranama,  Adi Sankara Commentary , Part 7, Vrsakapi, Mangalam, Krshna, Varaha

பூனையிடம் அகப்பட்ட கிளி! நாயாய்ப் பிறப்பவர் யார்? திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-17 (Post No.13,279)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,279

Date uploaded in London – –   27 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே

அளிவுறு வாரம ராபதி நாடி

எளியனென் றீசனை நீசர் இகழில்

கிளியொன்று பூஞையிற் கீழது வாகுமே.-509

திருவடி யுணர்வுடையார் சிவபெருமானை விண்ணவர் முதலியோர் தொழுது அவன் திருவருளைப் கீழோர் சிவபெருமானை எளிமையாக எண்ணிப் புறக்கணிக்கின்றனர். அதனால் அவர்கள் பிறவித்துன்பத்தில் உழல்கின்றனர். அவர்கள் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளி  போலாகின்றது.

Abuse of Siva Brings Misery

Those who have Jnana attained,

Rid of all doubts in their thoughts

Seek Him in love intense

Shall reach the World of Celestials;

If the low-born think any the less of Him,

Dismal indeed is their fate-

Unto the parrot in cat’s claw.

xxxxx

நாயாய்ப் பிறப்பவர் யார்?

ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய

சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்

ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்

வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.-514

ஓம் என்ற ஓரெழுத்தை ஓதிவரும்  சிவனடியாரை மனம் வருந்தும்படி செய்பவர், ஊழிக்காலம் நாயாய்ப் பிறந்து  துன்புறுவர். பலவூழிக்காலம் புழுவாய்ப் பிறந்தும்  துன்புறுவர்..சுணங்கன் – நாய். ஓருகம் – ஒரு யுகம் ;. .கிருமி – புழு.

Do not Abuse Guru

Those who wounded feelings,

Of Holy Guru who taught,

The One-lettered mantra, “AUM”

Will be a dog born,

And after a hundred dog incarnations

Will die a human out-caste.

xxxx

கடைவாசலைக்  கட்டிக்  காலை எழுப்பி

இடைவாசலை நோக்கி இனிதுள் இருத்தி

மடைவாயிற் கொக்குப்  போல் வந்தித்திருப்பார்க்கு

குடையாமல் ஊழி இருக்கலுமாமே ( 571 )

மூலாதாரத்தில் பிராணன் கீழ்ப்போகாதவாறு கட்டி வாயுவை மேல் நோக்கி திருப்பி ஒவ்வொரு நிலையையாக தாண்ட, சகஸ்ரம் அடைந்து பரவெள்ளி திறக்கும். மடையில் மீன் வரும் வரை காத்து இருக்கும் கொக்கு போல் பரவெளி அடைந்த நிலையில் இருந்தால் ஊழிக் காலம் வரையில் உடல் அழியாமல் என்றென்றும் இருக்கும்.

Practice of Kundalini Yoga

Bind the Muladhara

Raise the Prana breath upward

Through the spinal hollow course it

And within in aptness retain,

And like a stork at stream’s head

Sit calm

In singleness of thought;

Well may you live forever and ever.

xxxxx

சிவனெனு நாமம்  தனக்கே யுடைய   செம்

மேனியம்மான்

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து

ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்

ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்

ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 2764

அந்தி வானத்தின் வண்ணம் கொண்டவன் சிவன்; அமரர்கள் குலக் கொழுந்து சிவன்; பெரிய பாம்பைத் தன் உடலில் அணிந்தவன்; அவன் வான் மயமாக விளங்குவான்; அறிவுப் பேரொளியாகவும் விளங்குவான். அவனே நெருப்பை போன்ற சிவந்த நிறம் படைத்த நம் சிவபெருமான்.

He Fills Space and Outer-Space

He fills the space;

He is the darling of Celestials;

He wears the serpent;

Having filled the space

He stands as outer-space

He the Fire-Hued.

மாசுணம்Python, Big Snake

xxxxx

பாம்புத் தோலும் பறவை முட்டையும்

நாகம் உடலுரி போலும் நல் அண்டசம்

ஆக நனாவில் கனா மறந்து அல்லது

போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று

ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே- 2093

ஆங்கிலத்தில் உள்ள விஷயம் :

நாம் விழித்துக்கொண்டிருக்கையில் முன்னிரவில் கண்ட கனவுகள்மறந்துபோகின்றன. பாம்பு தோலை உரிப்பது போலவும் பறவைகள் முட்டையிலி ருந்து வெளிப்படுவதுபோலவும் நாமும் பல உடல்களில் மாறி மாறி பிறக்கிறோம். முன் பிறப்பு நினைவு இருப்பதில்லை இறைவன் அருள் கிடைக்கும் வரை இருவினைப் பயன்களை அனுபவிக்கிறோம்

XXXX

ஆருயிர் ஓர் உடம்பைவிட்டு மற்றோர் உடம்பை வினைக்கீடாக எடுக்கும். அதற்கிடையில் இருவினைப் பயனுள் தீவினைப் பயனின் ஒரு பகுதியை விண்ணுலகில் நுகரும். அவ்வுயிர்கள் ஆண்டு நுகருங்கால் தாம் செய்த வினைவகையும், அதன் பயனை அவ்வவ்வாறே இப்பொழுது அடைகின்றோம் என்னும் நினைவும், வரும்; யமனின் ஏவலாளர் சொல்லும் செய்கையும் அவர்களைத் துன்புறுத்தும்.. இதுபோல் நல்வினைப் பயனுக்கும் உண்டோ என்பது உரைகள்  மூலம் அறிய  முடியவில்லை. ஆனால் இன்பப்பயன் நுகரும் தேவர்கள் செருக்குறுவதும்  கஷ்டம் வருகையில் அஞ்சிமுறையிடுதலானும் அவர்களுக்கு வழிகாட்டுவோர் ஆங்கு இலரென்பதே துணிபு.

இவ்வுண்மை வரும் சிவஞானசித்தியார் திருப்பாட்டானும் உணரலாம்:

“அரசனும் செய்வ தீச னருள்வழி யரும்பா வங்கள்

தரையுளோர் செய்யிற் றீய தண்டலின் வைத்துத் தண்டத்து

உரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்

நிரயமுஞ் சேரார் அந்த நிரயமுன் னீர்மை யீதாம்.”

சித்தியார், 2. 2 – 29.

மீண்டு நிலவுலகத்துப் பிறக்கும்போது அவ்வுயிர்கள் இவற்றை மறந்துவிடுகின்றன. பருவுடம்பைவிட்டுப் போவதற்கு ஒப்பு, பாம்பு தோலைக்கழற்றிப் புதுத்தோலை எடுப்பதாகும். குஞ்சு முதற்கண் முட்டையைவிட்டு வெளிவந்து கூட்டில் சின்னாட்கள் தங்கும்; பின்பு பறந்து புறத்துப்போகும்; இடவேறுபாட்டிற்கு இஃதொப்பாகும். அறிவு வேறுபாட்டிற்கு நனவின்கண் நினைவோடியற்றிய செயல்கள் எல்லாவற்றையும் கனவில் மறந்துவிடுவது ஒப்பாகும். அரனருளாலே ஆருயிர்கள் இம்முறையாகப் பாம்பு தோலுரிப்பதும், முட்டையிலிருந்து குஞ்சு வெயிப்படுவதும், நனவை மறந்து கனவிற்செல்லுவதும் போற்சென்று ஆண்டுப்பயன் உழந்து மீண்டு பிறக்கும்

In the Waking State Dreams are Forgotten;

So it is Through Successive Lives

Even as the snake sloughs off its skin

And another assumes;

Even as the bird its shell leaves

And another life pursues;

In its waking state the Jiva forgets

Happenings of the dream state;

Thus does Jiva from one body to another migrate;

Until with Grace of Hara

It reaches where it is destined to be;

And there experiences

The Karmas two, good and evil.

To be continued……..

Tags— பூனை, கிளி, நாய், பிறப்பு, மாசுணம், திருமந்திர ஆராய்ச்சி, கட்டுரை 17, பாம்புத் தோல்  , பறவை முட்டை

ராமாயணத்தில் சாபங்கள் (12) – கௌதமர் இந்திரனுக்கு தந்த சாபம்! (Post.13,278)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.278

Date uploaded in London – 27 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (12) 

ராமாயணத்தில் சாபங்கள் (12) – கௌதமர் இந்திரனுக்கு தந்த சாபம்!

ச.நாகராஜன்

விஸ்வாமித்திரர் ராம லக்ஷ்மணர்களுடன் மிதிலையை நோக்கிப் பயணித்தார்.

அழகிய மிதிலை நகரை அடைந்த அவர்கள் ஒரு அழகிய ஆச்ரமத்தை அடைந்தனர். அந்த ஆசிரமத்தைப் பார்த்த ஶ்ரீ ராமர் மிகுந்த அழகுள்ளதாக விளங்கும் இது யாருடைய ஆசிரமம் என்று விஸ்வாமித்திரரை வினவினார்.

உடனே விஸ்வாமித்திரர் மறுமொழி அளித்தார்:

ஹந்த தே கதயிஷ்யாமி ச்ருணு தத்வேன ராகவ |

யஸ்யை ததாச் ரம பதம் சபதம் கோபான்மஹாத்மா ||

பாலகாண்டம் 49-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 12

ஹந்த – நல்லது!

ராகவ – ஓ ராகவா

ஏதத் – இந்த

ஆச்ரமபதம் – ஆசிரம ஸ்தானம்

யஸ்ய – எந்த

மஹாத்மா – எந்த மகாத்மாவால்

கோபாத் – கோபத்தினால்

சபதம் – சாபத்துக்குள்ளானது என்பதை

தே – உனக்கு

தத்வேன – நடந்தபடி

கதயிஷ்யாமி – சொல்கிறேன்

ச்ருணு – கேள்!

விஸ்வாமித்திரர் நடந்ததைக் கூற ஆரம்பித்தார்.

, “ஓ! ராமா! இது முன்னொரு காலத்தில் மகாத்மாவான கௌதமருடைய ஆசிரமமாக இருந்தது. அவர் தன் மனைவியான அகல்யையுடன் நெடுங்காலம் இங்கேயே இருந்து தவம் புரிந்தார்.

ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்த போது இந்திரன் அவர் வேஷம் தரித்து அகல்யையைப் பார்த்து ஒரு மொழியைச் சொன்னான்.

ருதுகாலே ப்ரதிக்ஷந்தே நார்தின: சுசமாஹிதே|

சங்கமம் த்வஹமிச்சாமி த்வயா சஹ சுமத்யதே ||

சுசமாஹிதே – நன்றாய் அமைந்தவளே!

அர்தின – காமத்தால் கலவியில் ஆசையை உடையவர்கள்

ருது காலம் – ருது ஸ்நானமான சமயத்தை

ப்ரதீக்ஷந்தே – எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க

ந – மாட்டார்கள்

அஹம் து – நானோ

சுமத்யதே – இடையழகி!

த்வயா சஹ – உன்னுடன்

சங்கமம் – கலவியை

இச்சாமி – அடைய விரும்புகிறேன்.

முனிவேஷம் சஹஸ்ராக்ஷம் விஞ்ஞாய ரகுநந்தன |

மதிம் சகார துர்மேதா தேவராஜ குதூஹலாத் ||

ரகு நந்தன – ஓ! ரகு நந்தன

முனி வேஷம் – முனி வேஷம் பூண்டவனை

சஹஸ்ராக்ஷம் – இந்திரனென்று

விஞ்ஞாய – அறிந்தே

துர்மேதா – அந்த துர்புத்தி (கொண்ட அகல்யை)

தேவராஜ குதூஹலாத் – தேவர்களுக்கெல்லாம் ஆகும் என்ற உற்சாகத்தால்

மதி – மனம்

சகார – இசைந்தாள்

அதாப்ரவீத் சுரக்ஷ்ரேஷ்டம் க்ருதார்தேனாந்ந்தராத்மா |
க்ருதார்தாஸ்மி சுரச்ரேஷம் கச்ச சீக்ரமித: ப்ரபோ ||

அத – பிறகு

க்ருதார்தேன – சந்தோஷமடைந்த

அந்தராத்மனா – உள்ளத்துடன்

சுர ச்ரேஷ்டம் – தேவ ராஜனைப் பார்த்து (அகல்யை)

அப்ரவீத் – மொழிந்தாள்

சுர ச்ரேஷ்டம் – தேவராஜனே!

க்ருதார்தா – தன்யை

அஸ்மி – ஆகிறேன்

ப்ரபோ – பிரபோ!

இத – இங்கிருந்து

சீக்ரம் – சீக்கிரமாக

கச்ச – போய் விடுங்கள்

ஆத்மானம் மாம் ச தேவேஷ சர்வதா |
இந்த்ரஸ்து ப்ரஹஸன் வாக்யமஹஸ்யாமிதமப்ரவீத் ||

தேவேஷ – தேவராஜனே

ஆத்மானம் – உம்மையும்

மாம் ச – என்னையும்

சர்வதா – எப்போதும்

மானத — மானத்தைக் காப்பவரே!

ரக்ஷ – உள்ளது வெளிப்படாமல் காத்துக் கொள்வீராக!

இந்த்ர ச – இந்திரனும்

ப்ரஹஸன் – சிரித்துக் கொண்டே

அஹல்யாம் – அகல்யைப் பார்த்து

இதம் – இவ்வாறு

வாக்யம் – மறுமொழியை

அப்ரவீத் – சொன்னான்

பரிதுஷ்டோஸ்மி சுஸ்ரேணி கமிஷ்யாமி யதாகதம் |

சுஸ்ரேணி – அழகிய ஜகனம் உடையவளே

பரிதுஷ்ட – திருப்தி அடைந்தவனாய்’

அஸ்மி – ஆகிறேன்

யதாகதம் – வந்த வழியே

கமிஷ்யாமி – திரும்பி விடுவேன்

இப்படிச் சொல்லி விட்டு இந்திரன் கிளம்பிய சமயம் கௌதமர் அங்கு உள்ளே பிரவேசித்தார்.

நடந்த சகல உண்மைகளையும் புரிந்து கொண்ட அவர் கோபாவேசத்தால் இப்படி சபித்தார்:

மம ரூபம் சமாஸ்தாய க்ருதவானஸி துர்மதே |

அகர்தவ்யமிதம் தஸ்மாத்விபலஸ்தவம் பவிஷ்யாமி ||

துர்மதே – புத்தி கெட்டவனே

மம ரூபம் – எனது உருவத்தை

சமாஸ்தாய – எடுத்து

அகர்தவ்ய – செய்யக்கூடாத

இதம் க்ருதவான் – இதைச் செய்து

அஸ்மி – இருக்கிறாய்

தஸ்மாத் – ஆகையால்

த்வம் விபல: – நீ விருக்ஷணங்களை இழந்தவனாய்

பவிஷ்யஸி – ஆகக் கடவாய்

பாலகாண்டம் 49-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 18 முதல் 22 முடிய

இப்படி கௌதமர் சபித்தவுடன் இந்திரனின் இரு அண்ட பீஜங்களும் (பீஜ கோளம்) அகன்றன.

நடுநடுங்கிய இந்திரன் அக்னி உள்ளிட்ட தேவர்களை வேண்ட, அவர்கள் பித்ரு தேவதைகளை வேண்டினர்.

பித்ரு தேவதைகள் உடனே ஒரு ஆட்டுக்கடாவின் இரு பீஜங்களை எடுத்து அவற்றை இந்திரனுக்குத் தருமாறு சொன்னார்கள்.

அவற்றை இந்திரன் பெற்றான்.

அன்றிலிருந்து அவனுக்கு ‘மேஷ – வ்ருக்ஷண’ என்ற பெயர் உண்டானது!

**

75 Beautiful Quotations from Vishnu Sahasranama Commentary -Part 6 (Post No.13,277)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,277

Date uploaded in London – –   26 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Vishnuh Word No.2 in the VS

He pervades everything.

Vishnu Puraana says,

Yasmaad vistam idam sarvam tasya saktyaa mahaatmanah

Tasmaad evo’cyate Visnur viser daatoh pravesanaat

Meaning

The power of that Supreme Being has entered within the universe. The root Vis means ‘enter into’.

The following Rig Vedic mantra  also advocates the adoration of Vishnu for the attainment of spiritual enlightenment,

Tamu stotaarah puurvyam yathaavida

Rtasya garbham janusaa pipartana

Aasya jaananto naama cidvikaktana

Mahas te Visno sumatim bhajaamahe

It means : O hymnists ! Put an end to your recurring births by attaining the real knowledge of that Ancient Being who is eternal and true. Understanding these names of Vishnu , repeat them always. Let other people repeat or not repeat Thy Holy names: we, O Vishnu, shall adore Thy changing effulgence.

xxxx

Vaikuntah – Word No.405 in the VS Vishnuh Word No.2 in the VS

The bringing together of the diversified categories is Vikuntha.  He who is the agent of it is Vaikunthah.

There is the following verse,

Mayaa samslesitaa bhuumir adhbir vyoma ca vaayunaa

Vaayus ca tejasa saardham vaikunthatvam tato mama

I united earth with water, the sky with air and the air with fire. So I have got the status of Vaikuntha.

The word can also mean one who is without any limitation or opposing factor.

xxxx

ijyah – 446th word

one who is fit to be worshipped in sacrifices. Harivamsa 3-40-27 says,

ye yajanti makhair punyair devat’aadin pitrnapi

aatmaanam aatmanaa nityam vishnum eva yajanti te

those who adore divinities and Pitrs with holy sacrifices are verily adoring Vishnu who is the self of all.

xxxx

Suvratah – 455th word

One who has taken the magnanimous vow to save all refuge seekers.

Vaalmiiki Raamaayanaa 6-18-33 says,

Sacrd eva prapannaaya tavaa’smiti ca yaacate

Abhayan sarva-bhuutebhyo dadaamy etat vratam mama

सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३
अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |

33. yaachate = he who seeks; prapannaaya = refuge; sakR^ideva = just once; iti = saying that; asmi = I am; tava = yours; dadaami = I shall give; abhayam = assurance of safety; sarva bhuutebhyaH = against all types of beings; etat = this; mama = is my; vratam = pledge.

“He who seeks refuge in me just once, telling me that I am yours’, I shall give him assurance of safety against all types of beings. This is my solemn pledge

xxxx

Trivikramah -530th word

One whose three strides covered the whole world. Sruti says,

Trini paadaa vicakrame- by His feet, He covered three measures.

Harivamsa says,

Trir ity’eva trayo lokaah kirtitaa munisattamaih

Kramate taams tridhaa sarvaams trivikrama iti srutah

Meaning

By the sound tri the sages mean the three worlds. The Lord crossed them three times. So He is famous as Trivikrama.

xxxx

cakra-gadaa- dharah – 546th word

one who has discus and Gadaa in His hand. it is said

manas tttv’aatmakam cakram

buddhi tattv’aatmikaam gadaam

dhaarayan loka -raksaartham

uktas cakra-gadaa-dharah

meaning

the Lord is called cakra-gadaa- dharah because for the protection of the world He hold in His hand the discus representing the category of mind and Gadhaa (mace) representing Buddhi.

xxxx

Nakshatra-nemih- 440th word (Star)

There is the following verse

Nakshatra – taakaih saardham Sandra suuryaadhayo grahaah

Vaayupaasa- mayair bandhair nibaddhaa  Dhruva-samjnite.

Heavenly bodies like moon and sun along with all Nakshatras and Taarakas (STARS) are tied to Dhruva with bonds constituted by of air.

According to this statement all these heavenly bodies are included in the tail of Dhruva or  Sisumaara Cakra. In the heart of the Sisumaara Cakra, the lord dwells as its operator. The Veda says describing Sisumaara , Vishnur hrdayam – Vishnu is its heart.

To be continued……..

Tags- Nakshatra , Vishnu, Vaikunta, Vishnu Sahasranama, Adi Sankara, Commentary, Part 6

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—38 (Post No.13,276)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,276

Date uploaded in London – –   26 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 38

xxxx

பி

449. மேகவெட்டைக்கு

பிரமிசை மூலத்தைப் பாலில் உபயோகித்து வந்தால் கிரந்தி- சூலை- மேகவெட்டை-  இவை தீரும். நீடித்து உண்டு  வந்தால் சுயம்பாக வல்லமையுண்டாகும்.

xxxx

கார்வாய் ஜன்னிக்கு

பிரமி இலையை துளி விளக்கெண்ணெய் குத்தி வதக்கி பெண்களின் கால் பாதத்திலிருந்து கணுக்கால் வரையிலும் கன மாய் வைத்துக்கட்டினால் கார்வாய் ஜன்னி நிவர்த்தியாகும்.

xxxx

பதினெட்டு வண்டு  கடிக்கும்

பிராயான் சமூலத்தைப் பாலில் உட் கொண்டு  வந்தால் பதினெட்டு வண்டு  கடி, எலி கடி உடம்பில் உண்டாகும் சுரசுரப்பு  இவை தீரும்.

xxxx

வாதக் குடைச்சல் மந்தத்திற்கு

பிண்ணாக்குப் பூண்டைக் கொண்டுவந்து கடுக்காய் தோல்- மிளகு- சுக்கு இதுகள் கால் பங்கு கூட்டி கிஷாயமியட்டு 4, 5 வேளை கொடுக்க சதக் குடைச்சல் தீரும். இதைத் தனியாக கிஷாயமிட்டுக்  கொடுக்க மேக அனல் தணியும்.

xxxx

பீ

வெள்ளைக்கு

பீச்சங்கன் இலையை அரைத்துப் புன்னைக்காயளவு எடுத்து புளித்தயிர் அரைக்கால்  படியில் கலக்கி காலையில் சாப்பிடவும். இப்படி 3 நாள் சாப்பிடவும். உப்பில்லாத பத்தியம் இருக்கவும்.

இதுவுமது

பீச்சங்கன் இலை, பழம் பாசிலை கீழா நெல்லியிலை இவை மூன்றும் சமனாய்  எடுத்து முன்மாதிரி சாப்பிட்டாலும் வெள்ளை விழுகிற வியாதி தீரும்.

xxxxx

வயிற்றுப்  பிடுங்கலுக்கு

பீத ரோகணியை கிஷயத்தை குடிக்க வயிற்றுப் பிடுங்கல் நிவர்த்தியாகும். . சிலது நாள் விடாமல் சாப்பிட்டால்  காமாலை ரோகத்தைச் சாந்தியாக்கும் .

xxxx

படர் தேமல் நீங்க

பீத ரோகணியை தேனில் உரைத்துப் பூசிவந்தால் படர்தாமரை முதலிய தேமல்களை நிவர்த்தியாக்கும். .

xxxx

வாய்வுகளுக்கு

பீநாரிப் பூண்டு என்னும் மூலிகையை சுக்கு மிளகு கூட்டி கிஷாயமிட்டு உட்கொள்ள வாய்வுகளைக் கண்டிக்கும்.

xxxx

பு

சுக்கிலமேகம் அதிசாரத்திற்கு

புளியம் வித்தின்  மேற்றோலை பாலில் அரைத்துக் கலக்கியுண்டுவந்தால் சுக்கிலமேகம் அதிசாரம் இவை தீரும். . உந்திப்புண் சவுக்கியமாகும்.

xxxx

எலி விஷத்திற்கு

புரசு மூலத்தை பாலில் உட் கொண்டுவந்தால் எலி விஷம், குன்மம், வாய்வு வாதம் இவை தீரும்.

xxxx

வயிற்றுப்   பூச்சிக்கு

புரசு வித்தை எருமைச்சாணிக்குள் பொதிந்து காலையில் எடுத்து  சுமார் இரண்டு விதையைத் தோல் நீக்கி அரைத்துப் பாலில் கலந்து கொடுக்க வயிற்றிலுள்ள பெருங் கிருமிகள்  வந்துவிடும்; வயிற்றுவலியும் தீரும்.

xxxx

புண் புரை அரையாப்புக்கு

புங்க மரத்தின் மூலத்தைப் பாலில் அரைத்து உட் கொண்டுவந்தால்  புண் புரை நோய் சூலை அரையாப்புக்கட்டி  இவை கரையும் .

xxxx

மேகத்திற்கு அல்லது வெள்ளைக்கு

புங்கன் கொழுந்து கொண்டுவந்து நெகிழ அரைத்து நல்லெண்ணெயில் கூட்டிக்கொடுக்க வெள்ளை தீரும்; கடும் பத்தியம்.

xxxx

குழந்தைகட்கு பேதி கண்டால்

புளியாரை வாழைப்பூ சமன் கூட்டி பிட்டலத்து தேன் குத்திக் பிசைந்து கொடுக்க சாந்தியாகும்.

xxxx

பசி தீபனத்திற்கு

புதினா ரசம் ஒரு பலம் எலுமிச்சம்பழ ரசம் 2  பலம்  கொஞ்சம் சக்கரை கூட்டிக் கொடுக்க தீபனமுண்டாகும்.’

xxxx

பூ

உடல் புஷ்டியாக

பூசணி வித்தை பருப்பையெடுத்து பொடித்துக் காய்ச்சி பாலில் கலந்து உட் கொண்டுவந்தால்  உடம்பு புஷ்டியாகும் .

xxxx

இரத்தக் கழிச்சலுக்கு

பூனைக்காலி விரையை பாலில் காய்ச்சிஉண்டுவந்தால்  இரத்தக் கழிச்சல் நிவர்த்தியாகும்; விந்து கட்டுப்படும் .

xxxx

வாத நோய்களுக்கு

பூத விருட்ச மூலத்தைப் பாலில் அரைத்து கலக்கியு ண்டுவந்தால்  வாத நோய்கள் நிவர்த்தியாகும்; பல விஷக்கடிகளும்  தீரும்.

xxxx

சொறி கிரந்தி கரப்பானுக்கு

பூவரசு மூலத்தைப் பாலிற் கொள்ள  சொறி கிரந்தி கரப்பான்   வீக்கம் இவை தீரும்.. சில்லறை விஷம் சாந்தியாகும்

xxxx

கை கால் குடைச்சலுக்கு

பூமி சக்கரைக் கிழங்கை தண்ணீர் விட்டரைத்து கை கால் குடைச்சலுக்குப் பூசிவரவும். சில தடவைகள் பூசிவந்தால்  சவுக்கியமாகும்.

xxxxx

மூச்சு அடைப்புக்கு

பூமி சக்கரைக் கிழங்கை தேனில் உரைத்து உள்ளுக்குக் கொடுக்க மூச்சு அடைப்பு  தீரும். நாட்பட்ட இருமல் சாந்தியாகும்.

xxxx

வீரிய விருத்திக்கு

பூனைக்காலி வித்து கட்டு விரை வெங்காய விரை இது சமனிடை கூட்டி ஆலம்பால்  அல்லது அத்திப்பாலில் அரைத்து ஒருவேளைக்கு இரண்டு விராகன் எடையாகப் பசும்பாலில் குழைத்துச் சாப்பிடவும். இப்படி ஏழுநாள் இருவேளையும் தின்றால் தாது விருத்தியாகும். இடுப்புவலிவுண்டாகும் .

xxxx

471. காது நோய்க்கு

பூண்டு திரிகளை பஞ்சுபோல் நசுக்கி துணியில் முடிந்து விளக்கில் வாட்டி 2,3, துளி காதில் பிழிய காது நோய் தீரும் .

தொடரும் ……

Tags- முனிசாமி முதலியார் ,மூலிகை அதிசயங்கள் 38 , பூண்டு, பூனைக்காலி, பூமி சக்கரைக் கிழங்கு

மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர்- 2 (Post.13,275)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.275

Date uploaded in London – 26 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

22-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.

மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் (Brenda Milner) – 2

ச. நாகராஜன் 

நினைவாற்றல்

 நினைவாற்றல் ஆய்வில் இறங்கிய ப்ரெண்டா, இருவகை நினைவாற்றல் நமக்கு இருப்பதைக் கண்டுபிடித்தார். ஒன்று நிகழ்வு நினைவாற்றல் இன்னொன்று செய்முறை நினைவு.

 தகவல்களை ஒழுங்கு படுத்துவதில் மூளையின் முன் மடல்களுக்கும் (Frontal lobes) நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பை அவர் கண்டுபிடித்தார். இப்படி அவர் கண்டுபிடித்த தகவல்கள் மூளை கோளாறுகள், நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட தீவிரமான வியாதிகளைத் தீர்க்க வழிவகைகளைக் கண்டுபிடிக்க உதவியது.

‘வாடா’ (WADA) என்ற ஒரு சோதனை மூலம் இடது பக்க மூளையே மொழி பற்றிய அறிவில் முன்னிலைப் பங்கு வகிக்கிறது என்பதை அவர் நிரூபித்தார்.

சாதனையான சோதனை

ஒரு முறை ஹார்ட்ஃபோர்ட் என்ற இடத்திற்கு ஒரு நோயாளியைப் பார்க்க உடனே வருமாறு ப்ரெண்டாவிற்கு அழைப்பு வந்தது. அங்கு விரைந்த அவர் ஹென்றி மொலைஸன் (ஹெச் எம் என்று பின்னால் அனைவராலும் குறிப்பிடப்பட்டார் இவர்) என்பவரைக் கண்டார்.

அவருக்கு தான் அன்றாடம் செய்யும் செயல்களே நினவில் இல்லை. இதைப் பார்த்து அதிர்ந்து போன ப்ரெண்டா இரு சோதனைகளை அவரிடம் மேற்கொண்டார். 1955, ஏப்ரல் 26-ம் தேதி நடந்த சோதனை பற்றியும் 1957-ல் ஹெச். எம் மீது நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையும் 1957-ல் உலகிற்குத் தெரிய வந்தது. சுமார் 2500 ஆய்வுப் பேப்பர்களில் இந்த சோதனை மேற்கோளாகக் காட்டப்படும் அளவு இது வரலாற்று பிரசித்தி பெற்ற சோதனையாக ஆனது.

இதில் தான் ஹிப்போகாம்பஸ் என்ற மூளையின் பின் மேடு, இதுவரை நினைவாற்றல் பற்றிய எந்த விஷயத்திலும் அறிஞர்களால் பார்க்கப்படாமல் இருந்ததையும் அதன் முக்கியத்துவத்தையும் ப்ரெண்டா சுட்டிக் காட்டினார்.

ஒரு சுவையான விஷயம் ஹெச். எம். மீதான அவரது தொடர் சோதனை ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்தன.

குறுகிய கால நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் ஆகியவை பற்றிய பல புதிய உண்மைகள் உலகிற்குத் தெரிய வந்தன.

வலிப்பினால் அவதிப்பட்ட ஒரு நோயாளி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தனது பழைய காலம் பற்றிய அனைத்தையும் மறந்தார். ஆனால் அவரால் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் மனித மூளையில் நினவாற்றலைக் கொள்ளும் பல்வேறு அடுக்குகள் உள்ளன என்பதை ப்ரெண்டா தன் ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்தார். மூளையின் பல்வேறு பகுதிகள் எப்படி இயங்குகின்றன என்பதைக் கண்டுபிடிக்க இவரது ஆராய்ச்சிகள் பெரிதும் உதவின.

விருதுகள்

ஏராளமான விருதுகள் இவருக்கு வந்து குவிந்தன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இவரை கௌரவித்தன.

2020-ல் மில்னெர் 25 கௌரவ பட்டங்களைப் பெற்றிருந்தார்.

நன்கொடை

அவருக்கு வந்த பரிசுத் தொகை ஏராளமாகக் குவிந்தது. ஆகவே பத்து லட்சம் டாலர்களை அவர் மாண்ட்ரீல் நியூராலஜிகல் இண்ஸ்டிடியூட்டுக்கு நன்கொடையாக அளித்தார்.

குடும்பம்

1941-ல் ப்ரெண்டாவிற்கான நிதி உதவி தீர்ந்து விடவே அவர் பிரிட்டனின் சப்ளை அமைச்சகத்தில் சேர வேண்டி நேர்ந்தது. அங்கு ராடாரை இயக்கும் ஆபரேட்டர்களில்  எந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவை என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. அங்கு தான் அவர்  பீட்டர் மில்னெர் என்ற ஆய்வாளரைச் சந்தித்தார். ராடார் ஆய்வில் ஈடுபட்டிருந்த இருவரும் 1944-ல் மணம் புரிந்து கொண்டனர். கணவருடன் கனடா சென்று அங்கு குடியேறினார் ப்ரெண்டா.

ஆனால் 1970-ல் தனது கணவரை விவாகரத்து செய்தார் ப்ரெண்டா.

நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம்

2018-ம் ஆண்டு தனது நூறாவது பிறந்த நாளை ப்ரெண்டா கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில், ‘தான் இன்னும் பல பிறந்த நாள்களைப் பார்க்க வழி கோலப் போவதாகச்’ சொன்னார்.

நூறாவது வயதிலும் அவர் தனது வேலையை விடவில்லை. ஆராய்ச்சிகளையும் விடவில்லை.

101 வயதிலும் கூட மாண்ட்ரீலில் உள்ள மக்-கில் பல்கலைக் கழகத்தில் ப்ரெண்டா பணியாற்றி வந்தார் என்றால் நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இது உண்மை!

இளைஞர்களுக்கு ப்ரெண்டாவின் அறிவுரைகள்

 பொருள் பொதிந்த வழிகாட்டுகின்ற அறிவுரைகளை ப்ரெண்டா அனைத்து இளைஞர்களுக்கும் தருகிறார். அவற்றில் மிக முக்கியமான ஒன்று இது:

தப்பான ஒரு பணிக்களத்தில் அல்லது வேலையில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் அதை உடனே மாற்றத் தயங்காதீர்கள். (நான் மட்டும் என் பணியை மாற்றிக் கொள்ளாமல் இருந்திருந்தால்) சாதாரண ஒரு பள்ளிக்கூடத்தில் நான் ஒரு கணித ஆசிரியையாகவே இருந்திருப்பேன்”

மிகத் துணிச்சலுடன் தனக்கு ஒவ்வாத ஒரு தொழிலில் தான் இருப்பதை உணர்ந்து கொண்ட ப்ரெண்டா உடனே நரம்பியலில் தன் பணியைத் தொடங்கி அதிலேயே ஆய்வு செய்து முன்னேறினார்.

ஆகவே நீங்கள் விரும்பும் ஈடுபாடுடன் கூடிய வேலையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள் என்பதே இவரது முக்கியமான அறிவுரை!

இப்போது இவருக்கு வயது 105.

மூப்பின் முதிர்ச்சியில் இருப்பதாகக் கூறும் இவர் தொடர்ந்து தன் ஆய்வுப் பணியைத் தொடர்கிறார்!

மூளை இயலில் புது வழி காட்டிய இவரை சாமான்யன் முதல் மேதை வரை (மூளை உள்ள அனைவரும்) மறக்க முடியுமா என்ன?

***

 6-6-2024 குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழ் இன்று முதல் 25-5-2024 நியூஸ் ஸ்டாண்டுகளில் கிடைக்கிறது. 

இதில் சா.நாகராஜன் எழுதிய இமயமும் இராமாயணமும் கட்டுரை இணைப்புப் புத்தகமாக தரப்படுகிறது. 

இமயமும் இராமாயணமும் – இமயமலையில் இராமாயணம் சம்பந்தப்பட்ட கோயில்கள், குகைகள், இடங்கள், புராண வரலாறுகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.

வசிஷ்ட குகை, அனுமார் பெயர்த்தெடுத்து வந்த சஞ்சீவனி மலை, ஊர்மிளாவின் விரதம். லக்ஷ்மணனின் தவம், ஶ்ரீ நகரில் இராமர் புஜை செய்த சிவஸ்தலம், இராவணன் பெயர்த்தெடுக்க முயன்ற கைலாயம் உள்ளிட்ட சுவையான விவரங்கள் இந்தக்  கட்டுரையில் உள்ளன.

படித்து மகிழுங்கள்! 

 —subham—

75 Beautiful Quotations from Vishnu Sahasranama Commentary- Part 5 (Post No.13,274)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,274

Date uploaded in London – –   25 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Part 5

Sarva praharaaayudhah – Word No.1000 in the VS

There is no rule that the Lordhas got only the above mentioned weapons. All things which can be used for contacting or striking are His weapons.

Brhan- naaradiiya 1-51-10 says,

Omkaaras ca’tha-sabdas ca dvaav etau brahmanah puraa

Kantham bhitvaa viniryaatau tasmaad mangalikaa vubbau

Meaning

Omkara and the sound Atha came out of Brahma’s mouth. They are both , therefore, cause of auspiciousness. Namah is added a the end  to indicate worship. The Veda says Bhuyisthaam te mama uktim vidhema- We offer you our  salutations again and again.

There are the following verses about the great merits attached to making salutations to Hari:

Dhanyam tad eva lagnam tan nakshatram tad eva punyam ahah

Karanasya ca  saa siddhir yatra Harih praang namaskritye

Meaning

Whatever Lagna (zodiacal sign)there is in which Hari is first saluted that indeed is blessed, that Nakshatra is blessed and that day is holy. That gives also fulfilment to the senses.

In this the word Praak (first) indicates also the end indirectly.  The fruit accruing from salutations is already give. Further

Eko’pi krshnasya krtah pranaamo

Dasa’svamedhaa vabhrthena tulyah

Dasa’svamedhi punareti janma

Krsna  pranaami na punarbhavaaya

-=-Mahabharata, Saanti Parva 47-91

Meaning

One prostration done to Sri Krishna is equal to ten Asvamedha sacrifices and the concluding baths. A man who performed ten Asvamedha sacrifices has to be born again but not so one who prostrates to Krishna.

Saanti parva 47-90 says,

Atasii-puspa- sankaasam pita-vaasasam acyutam

Ye namasyanti Govindam na tesam vidyate bhayam

Meaning

No fear overcomes one who salutes Govinda  who is ever without a fall , who wears a yellow cloth and who is blue in colour.

Loka trayaadhipatim apratima prabhaava

Misad pranamya  sirasa prabhavisnum iasm

Janmaantara-pralaya-kalpa-sahasra- jaata

Maasu prasaantim upayati narasya paapam

Meaning

If a man bows down his head in salutation to the Creator and Lord of all the three worlds who is endowed with limitless powers, the sins committed by him in innumerable past births  and numberless Kalpas are destroyed.

xxxx

Daamodarah – Word No.367 in the VS

One who has very benevolent (Udaara) mind because of disciplines like self-control (Dama).

Brahmaanda Puraana 76-13-14 says,

Dadarsa c’aalpa dantaasyam, smita-haasam ca baalakam

Tayor Madhya-gatam baddham daamnaa gaadham tathodare

Tatas ca Damodarataam sa yayau  daama-bandhanaat

Meaning

The inhabitants of Gokula  saw the boy smiling with teeth, passing between tow trees  with the rope tied tightly round his waits. As He was thus tied up with he rope(Daama), He got the name Daamodarafrom that time.

There are the following verses of Vyaasa :

Daamaani loka-naamaani taani yasy’odaraantare

Tena daamodaro  devah sriidharah sri-samaasritah

Meaning

Dama means the worlds. He in whose abdomen these worlds have their existence, that Lord, known alsoas Sriinivaasa and Sriidhaara, is Daamodara.

My comments

The name Daamodara is the name of one of the Tamil poets in Puranaanuru, Part of Sanagam Tamil Works. That means Tamils had thee names 2000 years ago. We also find Kesava and Vishnu in Tamil poets names.

Vishnudaasan = Vinnandaayan in Tamil Sangam works

Daayankannan = Kannadaasan in Tamil Sangam works

xxxx

Ksobhanah – Word No.374-

One who at the time of creation entered into Purusa and Prakruti and caused agitation.

Prakrtim Purusam c’aiva pravisy’aatmecchayaa Harih

Pravisya Ksobhayaamsa sarga kale vyayaa’vyayau

Meaning

The eternal Lord Hari , at the time of creation, entered at His own willthe changeful Prakriti and the changeless Purusa and created agitation in them.

(I have already explained that this is the Big Bang)

xxxx

Havir-Harih – Word No.359-

Shankara in his commentary says, Hari can mean one who is blue in complexion. We know Krishna means black.

Krishna says

Haraami agham ca smartrnaam havir bhaagam kratusv’aham

Varnas ca hariih sresthas tasmaad harira ham smrtah

I destroy away the sins of those who remember Me. I  take away also the portion of rice in sacrifics. My complexion is the delightfully beautiful blue. I am therefore called Hari.

xxxx

Atulah – Word or naamaa No.355

One who cannot be compared to anything else.

Svetaswatara Upanishad  4-19 says,

Na tasya pratimaa’sti yasya naama mahad yasah-

There is none equal to Paramatman whose name is most glorious.

Also the portion of rice in the sacrifices. My complexion is the delightfully beautiful blue. I am therefore called Hari.

Bhagavad Gita 11-43 says,

पितासि लोकस्य चराचरस्य
त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान् |
 त्वत्समोऽस्त्यभ्यधिककुतोऽन्यो
लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव || 43||

pitāsi lokasya charācharasya
tvam asya pūjyaśh cha gurur garīyān
na tvat-samo ’sty abhyadhikaḥ kuto ’nyo
loka-traye ’py apratima-prabhāva

BG 11.43: You are the Father of the entire universe, of all moving and non-moving beings. You are the most deserving of worship and the Supreme Spiritual Master. When there is none equal to You in all the three worlds, then who can possibly be greater than You, O Possessor of incomparable power?

xxxx

Krsnah – Word or naamaa No.550

One who is known as Krsna-dvaipayana. Says Vishnu Purana,

Krsna -dvaipaayanam vyaasam viddhi naaraayanam prabhum!

Ko hy anyah pundarikaaksanMahaabhaarata- krt bhavet!!

Meaning

Know that the Vyaasa known as Krsna dvaipaayana was the Lord Naaraayana Himself. Who except the lotus eyed Lord can produce a work like Mahaabhaarata?

To be continued……

 tags- 75 Beautiful Quotations , Vishnu Sahasranama , Part 5 , Adi Sankara commentary

கருட மந்திரம் செய்யும் அதிசயம்!  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-16 (Post.13,273)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,273

Date uploaded in London – –   25 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கூகை, பாம்பு, கிளி, பூனை

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்

நாகையும் பூழும் நடுவில் உறைவன

நாகையைக் கூகை நணுகல் உறுதலும்

கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 2851

ஆங்கிலத்தில் உள்ள விஷயம்

உடலில் வாழும் 6 தீய சக்திகளுக்கு ஆண்டவன் எச்சரிக்கை !

ஆந்தை/கூகை , பாம்பு, கிளி, பூனை, மைனா, காடை  ஆகியன வாழ்கின்றன.மைனாவை ஆந்தை நெருங்கும்போது எலியானது கீச்சிட்டு மைனாவை எச்சரிக்கிறது.

xxx

.கூகையாகிய அறியாமையும், பாம்பாகிய சுட்டறிவும், கிளியாகிய அறமும், பூஞையாகிய பாவமும், நாகையாகிய சிற்றறிவும், பூழாகிய அறுபகையும், உடம்பின் நடுவாகிய எண்ணம் என்னும் சித்தத்தின்கண் உறைவன.  நாகையாகிய சிற்றறி வினைக் கூகையாகிய அறியாமை நணுகமுயலும். அப்பொழுது அருள் ஒளிபெற்ற வெள் எலியாகிய ஆருயிர் சிவனை நினைந்து கூவும். சிவனும் வெளிப்பட்டுக் கூகையை அடக்கியருளவன்.

கூகை – அஞ்ஞானம். பாம்பு – காமம். கிளி – அறம். பூஞை – மறம். நாகை – சிற்றறிவு. ;. எலி – சீவன்.

XXXX

ஒன்றுக்கொன்று ஒவ்வாத  சேர்ந்து இருக்கமுடியாத ஜீவன்கள் இந்த பூமியில் வாழ்கின்றன. எல்லாம் இறைவன் சித்தம்.  உதாரணமாக  ஒரு கோட்டானும், அதை விழுங்கும்  பாம்பும்,  அழகிய  பச்சைக் கிளியும்  அதைக்  கொல்லும்  பூனையும், நாகணவாய் பறவையும்,  காடையும் ஒன்றால் ஒன்று பாதிக்காமல் மொத்தத்தில் உயிர் வாழ்கின்றன.     உடலிலும்   இப்படி ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக வாழ்கின்றன.  அறியாமை என்பது கோட்டான் ;காமம் என்பது ஒரு பாம்பு. ;  தர்மம் சாத்வீகம்  கிளி என்றால்,  அதர்மம்  என்பது பூனை.   அதிகம் வளராத, சிற்றறிவுதான்  நம்மில் நாகணவாய் பறவை. அதை அறியாமை எனும் கோட்டான்  அணுகும்.  அந்த நேரத்தில் தான் அறியாமையாகிய  கோட்டானை, ஞானம் ஆகிய  எலி  ஓங்கார நாதமாகிய ஒலியை  எழுப்பி, சிற்றறிவை  சிதறாமல்   பாதுகாக்கும்.

The Six Evils Dwell Within and God’s Warning to Them

The Owl, the Snake, the Parrot and the Cat,

The Mynah and the Quail

They, all, within dwell;

As the Owl nears the Mynah

The Mouse warns Mynah, screeching loud.

xxxx

கூகை- நாகம்

கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்

மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து

நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்

பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே. 2880

XXX

ஆங்கிலத்தில் உள்ள விஷயம்

ஜீவன் சிவன் ஆகலாம்; குண்டலினி யோகத்தால் இது நிகழும் .ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது ஆந்தை குருந்த மரம் ஏறியபோது புரியும். அப்போது நடுவில் நிற்கும் பாம்பு ஞானத்தை கற்பிக்கும் . ஜீவன் சிவனாகி விடும்

XXX

இருளில் மூழ்கி இருக்கும் கோட்டானைப் போலச் சீவன் அறியாமை என்ற இருளில் மூழ்கிக் கிடைக்கும். குருவின் உபதேசத்தால் உண்மையை உணர்ந்து கொண்ட சீவன் ஒளிமயமான குருந்தின் மீது ஏறும்.

இந்த உலகத்துக்குக் காரணம் முக்குணங்கள் கொண்ட மாயை என்ற உண்மையைச் சீவன் அறிந்து கொள்ளும். மண்டலமிட்ட பாம்பு போன்ற குண்டலினி சக்தி உடலின் ஆதாரங்களின் வழியே மேலே ஏறிச் செல்லும்.
அது சென்னியில் உள்ள மேல் நோக்கிய சகசிரதளத்தில் சென்று பொருந்தும். அங்கு நாதத்தை எழுப்பும்! அதனால் பொறிகளின் வசப்பட்டுப் பிறந்து இறந்து கொண்டிருந்த சீவன்பிறவிப் பிணியைத் துறந்துவிட்டுத் தானும் சிவம் ஆகிவிடும்.

XXXX

அருட்கண்ணாகிய அகக்கண் திறக்கும் வரை ஆருயிர்க்கிழவர் ‘பொருட் கண்ணிழந்து உண்பொருள் நாடிப் புகலிழந்த’ பகல் குருடராவர். அதனால் அவர் கூகை என உருவகிக்கப்பட்டனர்.

சிவகுரு வீற்றிருக்கும் தவநிறை திருமரம் குருந்தம் என்பது பொருந்தும்.அதனால் சிவகுருவின் திருவடியிணையினைச் சேர்வதைக் ‘குருந்தம தேறி’ என உருவகித்தனர். அஃது மாணிக்கவாசகருக்கு ‘திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்த மேவி’ ஆட்கொண்டருளினமையான் உணரலாம்.

சிவகுருவின் திருவருளால் சுட்டியுணரப்படும் உடலும், உலகும், உலகியற் பொருள்களும் முக்குண விரிவாயுள்ளன; மயக்கும் தன்மையன என்னும் உண்மையினை உணர்தல் வேண்டும். உணரவே நாகமாகிய மனக்குரங்கு பாகம் எய்தி அடங்கும்.

‘காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட’ எனத் தாயுமானவர் (30 – 1) அருளியவாற்றான் உணர்க. மனமடங்கவே திருவைந்தெழுத்தைச் ஓதிவரும் தாவாச் செவ்வியராவர். எண்குணம் நிறைந்த சிவப் பண்பருமாவர்.

Jiva Becomes Siva by Kundalini Yoga

When the Owl gets to the top of Kurunda tree

And realizes desire is the source of world

Then the Snake standing in the Center teaches (Jnana)

And Jiva, Siva becomes.

XXXX

கருட மந்திரம் செய்யும் அதிசயம்

கருடன் உருவங் கருதும் அளவிற்

பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்

குருவின் உருவாங் குறித்தஅப் போதே

திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.2611

பாம்பும் கருடனும் எதிரிகள்; கருட மந்திரத்தைப்  பல நாள் உருவேற்றிய மந்திர சித்தர்கள்  கண்ணாற் பார்க்கவே அந்நஞ்சு அப்பொழுதே அகலும்.  அதுபோல் சிவகுருவின் திருவடியிணையினைக் குறிப்பதாகிய சிந்தனை செய்த அப்பொழுதே மும்மலப் பிணிப்பு முற்றும் அகன்றடங்கும். அவ் வுயிரும் சிவனடிப் பேறு பெற்றுச் சிவனவனாக விளங்கும் திருவைந் தெழுத்தே பிறவிப் பெரும் பகையறுக்கும் அருமருந்தாகும்.

At the Thought of Guru’s Form Impurities Vanish

At the thought of Garuda’s form

The serpent’s poison leaves

Its terrors lose;

Unto it,

At the thought of Guru’s form

The triple Malas leave instant;

The Jiva then Siva becomes.

கருடபாவனை வருமாறு : “ஆதிபௌதிக கருடன், ஆதி தைவிக கருடன், ஆத்தியான்மிக கருடன் எனக்கருடன் மூவகைப்படும். , உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதி தெய்வமாய் அது போல வைத்துத் தியானஞ் செய்து கணிக்கப்படும் மந்திரம் ஆதிதைவிக கருடன். அம் மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் எனப்படும் அவற்றுள், ஈண்டுக் கருடனென்றது ஆதி தைவிக  கருடன் (சிவஞான முனிவரர், 9 2-3பேருரை.)

xxxx

சிவன் ஒரு கருடன்!

நோக்குங் கருடன் நொடியேழு லகையும்

காக்கும வனித் தலைவனுமங்குள

நீக்கும் வினையென் நிமலன் பிறப்பிலி

போக்கும் வரவும் புணர வல்லானன்றே 2989

எல்லாவற்றையும் கூர்ந்து பார்க்கும் கருடன் அவன்

; விண்ணிலிருந்துகொண்டே மண்ணுலகில் உள்ள எல்லாவற்றையும் கூர்ந்து பார்க்க வல்லது கருடன் ;சிவபெருமான் கருடனுக்கு ஒப்பானவர்.ஏழு உலகங்களையும் பார்த்து பக்தர்களுக்கு நொடிப்பொழுதில் உதவுவான்.பாசங்களிலிருந்து நீங்கியவன் ஆதலால் நிர்மலன்; போக்கும் வரவும் இல்லாத பிறப்பற்றவன் (சிவனுக்கு திருமால் போல அவதாரங்கள் இல்லை; ஆகையால் பிறப்பிலி)

He Has No Entry, Exit and Stay

He is unto the Garuda Bird, that in an instant sees all;

He protects the seven worlds entire,

He removes my Karmas,

He, the Pure One, the Birthless One,

xxxxx

பன்றியும் பாம்பும்

பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்

தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்

குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்

குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 2877

மனித மனம் பன்றியைப் போலத் தூய்மை இன்மையில் விருப்பம் கொண்டது. பாம்பு போலப் பகைமையில் சீற்றம் கொண்டது. பசு போலத் தீமையில் அடக்கம் கொண்டது. வானரம் போல அடங்காமல் திரிவது. இத்தகைய உள்ளத்துடன் பொருந்தாமல் மனிதன் சிவத்துடன் பொருந்த வேண்டும். தராசுத் தட்டுக்கள் போல இவை இரண்டும் சமம் ஆனால் அந்த சீவனின் குறைவுகள் குறைந்து அதன் நிறைவுகள் வளரும்.

XXXX

துங்கிக் கிடக்கும் பன்றியனைய தோல்வியும், பாம்பின் சீற்றமனைய வெற்றியும், பசுவாகிய ஆடனைய அடக்கமும், முசுவானர மனைய அடங்காமையும் எங்கணும் விரவிக்கிடந்தன.  சிறுநரிக் கூட்டமாகிய பயனில்லாத நினைப்புகளுள், ஒருவன் சோர்வடையாது திருவடி நினைப்பிற் கூடித், தராசின் நாநுனிபோன்று எண்ணத்தால் உணரும் உணர்ச்சியினைச் சிவபெருமான் மாட்டு மாறின்றி நிறுத்தினால் பன்றியனைய இருள்மலமிகுதியை நாளும் ஒளிவரக் குன்றிமணியொப்பச் சிறிது சிறிதாகக் குன்றவைத்தல் கூடும்.

இருண்மலம் பன்றி; மருண்மலம் அன்னம்; 

 பன்றியும் பாம்பும் – தோல்வியும் வெற்றியும். பசு – முசுவானரம்; அடக்கமும் அடங்காமையும்.

Conquer Indriyas and Reach Iruvinai-Oppu and Nalapari

Pakam

Pig and Snake, Cow and Monkey

Together were in the lowly Jackal herd;

Joining them not and debasing himself not,

When, in balance, deeds good and bad are equal weighed

The Jiva, tinier than crab’s-eye berry,

Its ego’s diminution saw.

–subham—

Tags- கருட மந்திரம், ,அதிசயம், கூகை , கிளி, பூனை, எலி, ,பன்றி , திருமந்திரம், ஆராய்ச்சி, கட்டுரை

மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் -1 (Post.13,272)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.272

Date uploaded in London – 25 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

22-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.

மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் (Brenda Milner) – 1

ச. நாகராஜன்  

ப்ரெண்டா மில்னெர்

உத்வேகம் ஊட்டும் இந்தப் பெண்மணி தான் நியூரோ பிஸியாலஜி எனப்படும் மூளை இயலை முதலில் நிறுவியவர். மனித மூளை, நினவாற்றல் உள்ளிட்ட மூளை சம்பந்தமானபல்வேறு ஆய்வுகளையும அதன் அடிப்படையிலான உண்மைகளையும் கண்ட “மூளைப் பெண்மணி” இவர். 105 வயதான இவர் இன்றும் துடிப்புடன் இயங்குகிறார் என்பது ஆச்சரியகரமான ஒரு உண்மை!

பிறப்பும் இளமையும் 

இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் 15-6-1918 அன்று ப்ரெண்டா மில்னெர் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சாமுவேல் லாங்க்போர்ட் ஒரு இசை விமரிசகர்,  பத்திரிகையாளரும் கூட. தாயார் ஒரு பாடகர். தந்தை, தாய் ஆகிய இருவரும் இசைத் துறையில் நிபுணர்களாக இருந்தாலும் கூட ப்ரெண்டாவிற்கு இசையில் ஒரு லயிப்பு ஏற்படவில்லை.

1918-ல் ஏற்பட்ட இன்ஃபுளுயென்ஸா நோயில் தாயாரும் குழந்தையும் பீடிக்கப்பட்டு ஒரு வழியாக பிழைத்துக் கொண்டனர்.

கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சேர்ந்த ப்ரெண்டா உளவியல் பிரிவில் சேர்ந்தார். பட்டத்தையும் பெற்றார்.

19 வயதிலேயே பணியாற்றத் தொடங்கிய இவருக்கு மூளை பற்றிய ஆய்வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது.

நியூரோ பிஸியாலஜி என்று அறியப்படும் நரம்பு  இயங்கு இயலை ஒரு புதிய துறையாக இவரே கண்டுபிடித்து நிறுவினார்.

நினைவாற்றல், அறிவுத் திறன் ஆகியவற்றில் இவர் ஆய்வு நடத்தி பல சாதனைகளை நிகழ்த்தினார்.

மூளை

மனித மூளை ஒரு சிக்கலான உறுப்பு. இதைப் பற்றிய ஆயிரம் அதிசய தகவல்கள் உண்டு. பிரமிக்க வைக்கும் சில தகவல்கள் இதோ:

மூளையில் 73% நீர் தான்.

2 சதவிகிதம் டீ-ஹைட் ரேஷன் ஏற்பட்டால் நமது கவனிக்கும் சக்தி, நினைவாற்றல் எல்லாம் போய்விடும்.

மூளையின் எடை ஆண் என்றால் 1370 கிராம். பெண் என்றால் 1200  கிராம்.

உடல் எடையில் இது 2 சதவிகிதம் தான்.  ஆனால் 20 சதவிகித ஆக்ஸிஜனை இது எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறது.

நமது மூளையில் எத்தனை செல்கள் (உயிரணுக்கள்) இருக்கின்றன என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்று போல் இன்னொரு உயிரணு இல்லை. 3300 வகையான உயிரணுக்கள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் நூறு பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) உயிரணுக்கள் இருக்கலாம். நூறு கோடி நரம்பிணைப்புகள் இருக்கலாம். இவை தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தகவலைப் பரிமாறிக் கொண்டே இருக்கிறது.

மூளை செய்திகளை உணர்ந்து அறியும் திறன் இன்றைய அதி நவீன கணினியை விட வேகமானது. இங்கு தகவல் மணிக்கு 268 மைல் வேகம் என்ற வேகத்தில் செல்கிறது. (பார்முலா ஒன் ரேஸ் காரின் உயர்ந்தபட்ச வேகம் மணிக்கு 240 மைல் தான்!) ஒவ்வொரு நியூரானும் ஒரு விநாடிக்கு ஆயிரம் நரம்புத்தாக்கம் (IMPULSE) ஏற்பட பல்லாயிரம் நரம்பிணைப்பு தொடர்புகள் மற்ற நியூரான்களுடன் ஏற்படுகின்றன

 ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் மூளையின் மூலம் 70000 எண்ணங்களை எண்ணுகிறோம். அதாவது ஒரு நிமிடத்திற்கு 48.6 எண்ணங்கள் என்ற அளவில் எண்ணுகிறோம்.

 மூளையால் 50000 வாசனைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது.

 ஒவ்வொரு நிமிடமும் 750 முதல் 1000 மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியே பாய்கிறது.

 கண் இமைக்கும் நேரத்தை விடக் குறைவான நேரத்தில் –  நீங்கள் பார்க்கும் காட்சியை கண் அனுப்ப அதை 13 மில்லி வினாடிகளில் மூளை உணர்ந்து கொள்கிறது.

 மூளையில் 400 மைல் நீளம் என்ற அளவில் ரத்த நாளங்கள் உள்ளன.

25 வயதில் தான் மூளை முழு வளர்ச்சியை அடைகிறது.

தொடர்ந்து மூளை இயக்கத்திற்கு ஆக்ஸிஜன் தேவை. ஐந்து நிமிடம் ஆக்ஸிஜன் இல்லையென்றால் மூளை சேதப்படும்.

 மூளையின் சேமிக்கும் திறனை முழுதுமாக இன்னும் அறிய முடியவில்லை. எல்லையற்ற அளவில் அது சேமிக்கும் திறனைக் கொண்டது.

இப்படி மூளை பற்றிய விவரங்களை சொல்லிக் கொண்டே போகலாம் – முடிவில்லாமல்!

 ஒன்பது வகை அறிவு

மனிதனுக்கு ஒன்பது வகை அறிவு உண்டு என்று அறிவியல் சோதனைகள் நிரூபிக்கின்றன.

மொழி வகையிலான அறிவு- LINGUISTIC 2) தர்க்கரீதியிலான அறிவு – LOGICAL – MATHEMATICAL  3) பார்ப்பதன் மூலம் வருகின்ற அறிவு, மற்றும் இடம் பற்றிய அறிவு – VISUAL AND SPATIAL  4) உடல் இயக்கத்தில் இருக்கும் அறிவு – BODILY KINESTHETIC   

5) இசை அறிவு- MUSICAL 6) தனி மனித உறவு சார்ந்த அல்லது நபர்களுக்கு இடையேயான அறிவு – INTERPERSONAL 7) தன்னைப் பற்றிய அறிவு – INTRAPERSONAL 8) இயற்கையின் அறிவு – NATURALISTIC.   9) புறநிலை பற்றிய அறிவு – EXISTENTIAL.     

 ஆக இவற்றை கல்விப் பயிற்சியின்  மூலம் திறம்படக் கூட்டிக் கொள்ளலாம்.

மூளையைப் பற்றிய பல தவறான தகவல்களை அறிவியல் தகர்த்து வருகிறது.

மூளையைத் தீவிரமாக ஆராய்ந்த ப்ரெண்டா, அறிவியல் ரீதியாக மூளை பற்றிய சரியான புது தகவல்களைத் தந்தார்.

 to be continued…………………………….

******