V for Varanasi –Know India Puzzle (Post No.12,478)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,478

Date uploaded in London – –  28 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find out eight towns beginning with letter V in India; here are the clues:

1.This town in Uttar Pradesh is the holiest place for the Hindus.

2.This place in Madhya Pradesh is famous for its Heliodorus Pillar where the Greek ambassador called himself Parama Bhagavatha ( Great devotee of Vishnu). Belsa and Besnagar are ancient names.

3.This town in Bihar is the birth place of Mahavira; also a big Buddhist centre. Asoka pillar with inscription is nearby.

4. Krishna’s play ground near Mathura in Uttar Pradesh; on the banks of River Yamuna.

5.This cave temple in Jammu Kashmir is very famous because of its Shakti temple.

6. This city in Andhra Pradesh is a major centre for Hindu and Buddhist pilgrimages. Noted sites include the Kanaka Durga temple, , and Gandhi Hill, where a statue of Gandhi overlooks the city.

7.Town in Tamil Nadu famous for its Jalakandeswara temple. Town is famous for leather goods and exports.

8.This beach town in Kerala is famous for its Janardhan swami temple. Tourists come to enjoy he beach.

answers 

1.Varanasi, 2.Vidisha , 3.Vaishali, 4.Vrindavan, 5.Vaishnodevi, 6.Vijayawada 7.Vellore , 8.Varkala.

—subham—

Interesting Titbits from Confucius life! (Post No.12,477)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,477

Date uploaded in London – –  28 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Chinese philosopher Confucius was a great teacher. His birthday September 28 is celebrated as Teachers Day by Taiwan (Nationalist China) like we Indians celebrate September 5 as Teachers day. Philosopher and President of India Dr Radhakrishnan was also a teacher and his birth day was September 5.

Confucius attracted a lot of students; they loved him, and they honoured him like their father. Most of them revered him a sage. He accepted whoever came to him. He said “I have never refused to teach anyone. Even if a student brings a bundle of dried meat as fees”. But he wanted only students who wish to learn and who are capable of understanding. “I do not display the truth to one who is not eager to know it. When I presented one corner of a subject to a student, and he cannot take for himself the other three, I do not repeat the lesson”.

This reminds us of the story of Sathyakama Jabala in the Upanishads. He told the teacher the truth he did not know his father; and that was what his mother told him. The Vedic teacher was moved and accepted him as a student at once. If one speaks truth that is enough; because the first lone the Vedic teacher teaches is Sathyan Vada- Speak the Truth.

 (सत्यं वद। घर्मं चर। स्वाध्यायान्‌ मा प्रमदः।’ ‘Satyam vada; dharmam chara; svãdhyãyãn mã pramadaha’ – ‘Speak the truth. Abide by your dharma. Never be idle in your studies’ (Taittireeya Upanishad: 1/11). ‘मातृदेवो भव। पितृदेवो भव। आचार्यदेवो भव। अतिथिदेवो भव।’ – ‘Matruvedo bhava, pitrudevo bhava, atithidevo bhava’ – ‘Know your mother to be like a goddess (i.e. serve her and please her as if she were a goddess), know your father to be like a god, know your teacher to be like a god, know a guest to be like a god’ (Taittireeya Upanishad: 1/11).

xxx

Sleeping Student in the Classroom!

Once he found a student asleep in the classroom. He did not punish him. He allowed him to sleep and said, “Rotten wood cannot be carved; one cannot build a wall with dung. Why should I even reprieve him?”

He was never given an opportunity to serve the people in high posts in the government; but several of his disciples got higher posts in local governments. One of them heard people were saying that he was greater than Confucius. “Let me compare our stature to a wall around a house”, he said. “My wall reaches to a man’s shoulders, anyone may look over it and see whatever is within. My Master’s wall is fathoms high; if one cannot find a door to enter it, he cannot know the beauties lie within; and few find the door.”

He also heard a courtier was speaking evil of his Master. “It is of no use to do that. My Master cannot be reviled. The talents and virtues of other men are mounds and hillocks; he is like the Sun or Moon which cannot be stepped over. What harm can anyone do to him?”.

Confucius was like a Vedic Rishi (seer). He said that he had nothing new to teach or preach. He is not founding a new doctrine. He said “I am a transmitter and not a maker. I love and believe in ancient sages.”

They were the legendary kings and the founders of the Chou dynasty.

Confucius longed for higher posts where from he could influence more. But no one gave him higher posts. He left his own province Lu and travelled abroad; several of his disciples followed him in carriages. He was honoured wherever he went but was not given influential posts; he was disappointed and came back to his own place and died at the age of 72. Later his wisdom was appreciated, and they built a temple at the place of his birth in Quipu in Lu province of China.

xxx

He once gave a very brief account of his life:

At 15, I set my heart on learning;

At 30, I stood firm;

At 40, I had no doubts;

At 50, I understood the Way of Heaven;

At 60, I obeyed it;

At 70, I could follow my own desires and do no wrong.

Xxxx

Although he wrote nothing except a brief chronicle of his own state Lu, his disciples have written down what he said. Teachings of Confucius were cherished by his disciples, and they spread it after he died. They exist in a book called The Analects (or Conversations) and in two short treatises called “The Doctrine of the Mean” and “The Great Learning”, which were in later centuries, added to the Five Classics and equally honoured. They are called the Four Books for another was added, written by Mencius, the greatest follower of Confucius.

Those who read Confucius teachings will find similarities with Indian scriptures. There is nothing contradictory. Several of his teachings are in Sanskrit and Tamil proverbs, ethical teachings of Bhartruhari and Tiru Valluvar (In Niti Satakas and Tirukkural).

Bharati and Confucius

Probably the Tamil Poet Bharati was the first one who introduced him to Indians. Bharatiyar died in 1921. He included in one of his poems Confucianism and Taoism as great religions of the world.

In September we celebrate both the great men; Confucius’ birth day and Bharati’s memorial day are observed by a large number of people in September every year.

–subham–

Tags- Confucius, Teachers Da, Bharati, Sleeping student, Quipu, The Analects

QUIZ ரிஷிகேஷ் பத்து QUIZ (Post No.12,476)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,476

Date uploaded in London – –  28 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ரிஷிகேஷ் பத்து

QUIZ SERIES No. 72

1.ரிஷிகேஷ் எங்கே இருக்கிறதுஅங்கிருந்து எந்த மலையைஎந்த நதியைக் காணலாம்?

XXX

2.ரிஷிகேஷ் என்னும் தலத்தை உலகிற்குப் பிரபலப்படுத்திய மஹான் யார் ?

XXX

3.சுவாமி சிவானந்தா ரிஷிகேஷில் துவங்கிய சங்கத்தின் பெயர் என்ன?

XXX

4.மகேஷ் யோகிக்கும் ரிஷிகேஷுக்கும் என்ன தொடர்பு ?

XXX

5.பீட்டில்ஸ் பாடகர்களுக்கும் ரிஷிகேஷுக்கும் என்ன தொடர்பு?

XXX

6.ரிஷிகேஷில் எத்தனை ஆஸ்ரமங்கள் இருக்கின்றன ?

XXX

7.ரிஷிகேஷ் பற்றி இந்துமத நூல்கள் குறிப்பிடுகின்றனவா ?

XXX

8.ராமலெட்சுமணர்களைத் தொடர்புபடுத்த்தும் இரண்டு விஷயங்கள் எங்கே உள்ளன ?

XXX

9.ரிஷிகேஷில் கோவில்கள் உள்ளனவா?

XXX

10.ரிஷிகேஷை பிரபலப் படுத்திய இன்னும் ஒரு யோகி யார் ?

XXX

விடைகள்

1.உத்தரகண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் உள்ளது. இமயமலை அடிவாரத்தில் கங்கை நதியின் கரையில் RISHIKESH அமைந்துள்ளது.

xxxx

2.சுவாமி சிவானந்தா (Sivananda Saraswati (or Swami Sivananda; 8 September 1887 – 14 July 1963)) ; நெல்லை ஜில்லா பத்தமடையில் பிறந்து, டாக்டராகப் பணியாற்றி இமயமலைக்குச் சென்று ஆஸ்ரமம் அமைத்தார்.

XXX

3.தெய்வ நெறிக் கழகம் DIVINE LIFE SOCIETY. 1936-ம் ஆண்டில் அவர் இதைத் துவக்கினார். தெய்வ நெறிக்க கழகத்துக்கு உலகம் முழுதும் கிளைகள் இருக்கின்றன .

XXX

4.பிரம்மானந்த ஸரஸ்வதி என்பவரிடம் மகேஷ் யோகி ஆன்மீகப் பயிற்சி பெற்று 1953ல் ரிஷிகேஷில் ஆஸ்ரமம் அமைத்தார்

XXX

5.லண்டனில் ஹில்டன் ஹோட்டலில் 1967ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடந்த மகேஷ் யோகி உபன்யாசத்துக்கு (சொற்பொழிவுக்கு) பீட்டில்ஸ் (THE BEATLES) பாடகர்களும் வந்திருந்தனர். அவரது உபதேசத்தால் கவரப்பட்ட அவர்கள், மகேஷ் யோகியைக் குருவாகஏற்றவுடன் யோகியின் புகழும் அவரது ரிஷிகேஷ் ஆஸ்ரமம் புகழும் மேலை நாடுகளில் பரவியது. அவர் கற்பித்த மனம்கடந்த ஆழ் நிலைத் தியானம் (TANSCENDENTAL MEDITATION) உலகம் முழுதும் பரவியது .

XXX

6.சுவாமி சிவானந்தா துவக்கிய ஆஸ்ரமத்துக்குப் பின்னர் நூற்றுக் கணக்கான ஆஸ்ரமங்கள் தோன்றிவிட்டன.இப்பொழுது அது உலகின் யோகா தலை நகர் Yoga Capital of the World and Gateway to the Garhwal Himalayas என்று அழைக்கப்படுகிறது.

XXX

7.கங்கை நதியின் கரையில் உள்ள எல்லா ஊர்களும் இந்துக்களுக்குப் புனிதமானவைதான். ஆயினும் இந்த இடம் ராம லட்சு மணர்கள் தவம் செய்த இடமாகக் கருதப்படுகிறது.கந்த புராணத்தில் ரிஷிகேஷின் பெருமை பேசப்படுகிறது.

XXX

8.லெட்சுமணன் கங்கை நதியைக் கடக்கப் பயன்படுத்திய கயிற்றுப் பால த்தின் பெயர் லட்சுமண் ஜுலா .இது பலமுறை கங்கை நதியால் அடித்துச் செல்லப்பட்டு மீண்டும் மீண்டும் புதுக்கப்பட்டுள்ளது .

XXX

9.ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கருதப்படும் சத்ருக்ன  மந்திர்,  பாரத் மந்திர், லக்ஷ்மண் மந்திர்  (மந்திர் என்றால் தமிழில் கோவில்கள்), முதலிய பல கோவில்கள் உள்ளன .

XXX

10.சுவாமி விஷ்ணு தேவானந்தா.Vishnudevananda Saraswati (31 December 1927 – 9 November 1993). இவர் சுவாமி சிவானந்தாவின் சீடர்.

மேலை நாடுகளுக்குச் சென்று ஆசனங்களைப் பயிற்றுவித்து சர்வதேச யோக வேதாந்த கேந்திரங்களை அமைத்தார். அத்தோடு நில்லாமல் உலக சமாதானத்தை நிலைநாட்ட, பெர்லின் சுவர் முதலியவற்றின்  மீது விமானத்தில் பறந்து  சென்று  உலகம் முழுதும் பறக்கும் சாமியார் என்று அழைக்கப்பட்டார் . இவர் மூலமாகவும் ரிஷிகேஷ் புகழ் பரவியது பிற்காலத்தில் இவரது பெண் சீடர்கள் இவர் மீது புகார்களையும் வீசினார்கள் .

—SUBHAM—

Tags- சுவாமி சிவானந்தா , சுவாமி விஷ்ணு தேவானந்தா, மகேஷ் யோகி, ரிஷிகேஷ், தெய்வ நெறிக் கழகம், DIVINE LIFE SOCIETY,Swami Sivananda

மூன்று மன்னர்களைத் திகிலடையச் செய்த வாணனைப் பிடித்த சூரிய காங்கேயன்! (Post No.12,475)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,475

Date uploaded in London –  28 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx  

கொங்குமண்டல சதகம் பாடல் 54

மூன்று மன்னர்களைத் திகிலடையச் செய்த வாணனைப் பிடித்த சூரிய காங்கேயன்! 

ச.நாகராஜன்

 ஆறகழூர் என்பது சேலம் மாவட்டமும் ஆற்காடு மாவட்டமும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊர். இது ஆறு அகழிகளால் சூழப் பெற்றதால் ஆறகழூர் என்ற பெயரைப் பெற்றது.

இது மகத மண்டலத்தைச் சேர்ந்தது.

அங்கு மாவலி வாண வம்சத்தைச் சேர்ந்த வாண அரசன் ஒருவன் மிக்க வலிமையோடு இருந்து அரசாண்டு வந்தான். மகதம் என்னும் நடுநாட்டு அதிபனாக அவனை மகதைப் பெருமாள் என்னும் மற்றொரு பெயரால் அனைவரும் அழைத்தனர். இவன் சேர சோழ பாண்டிய மன்னர்களை மதிப்பதே இல்லை. அவர்களுடன் வம்பு செய்வது இவன் பழக்கம்.

ஆனால் அதே சமயம் பல புலவர்களாலும் புகழ்ந்து பாடப்படுபவன் இவன்.

இவனது தொல்லை பொறுக்க மாட்டாத பாண்டிய மன்னன் யாரேனும் ஒருவர் இவனைப் பிடித்துத் தன் முன் நிறுத்தினால் வேண்டியதைத் தருவேன் என்று பறையடித்து அறிவித்தான்.

கீழ்கரைப் பூந்துறை மோரூரில் வாழ்ந்து வந்த கண்ண குலத்தானான சூரியன் என்னும் ஒரு வீர வாலிபன் இந்த அறிவிப்பைக் கேட்டான்.

இதனைத் தன்னால் செய்ய முடியும் என்று கூறிய அவன் அதற்கான சாதனங்களைப் பெற்று ஆறகழூர் சென்றான். அங்கு மாறுவேடம் தரித்து உளவு பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு நாள் சமயம் வாய்த்த போது உடன் வந்த தனது துணையாளர்களுடன் பல்லக்குத் தூக்கிகளாய் மாறி மகதைப் பெருமாள் அமர்ந்திருந்த பல்லக்கை தூக்கியவாறே எல்லை கடந்து செல்ல ஆரம்பித்தான்.

அங்கு தயாராகக் காத்திருந்த பாண்டிய வீரர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர்.

மலைமேல் சுற்றுக் கோட்டைகளுடன் அமைந்துள்ள சங்க கிரி துர்க்கத்தில் பாண்டிய ராஜன் முன் அவனைக் கொண்டு வந்து நிறுத்தினான் சூரியன்.

இவனைப் புகழ்ந்து கொங்கு மண்டல சதகம் பாடல் 54 பெருமையாகக் கூறுகிறது இப்படி:

வில்லாள ராகிய மூவேந்தர் போரின் வினைமுகத்து

நில்லா தகன்றிடச் செய்யாறை வாண நிருபதியைக்

கொல்லாது பற்றியப் பாண்டியன் முன்னங் கொணர்ந்து விட்ட

வல்லாண்மை மீறிய சூரிய னுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் :

தமிழ்நாட்டை ஆண்டை மூவேந்தர்களையும் திகிலுறும்படி செய்து வந்த வல்ல ஆறைகழூர் வாணனைப் பிடித்து, அவனைக் கொல்லாது பாண்டியன் முன்னர் கொண்டு வந்து நிறுத்திய வல்லாண்மை மிக்க சூரியனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனேயாம்.

ஆறைவாணனைப் பற்றிய பல பாடல்கள் உண்டு.

இவை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் வடக்குப் பக்கச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு பாடல்:

“கொங்குங் கலிங்கமுங் கொண்டகண் டாகொடித் தேருதியர்

தங்கும் படிகொண்ட வாணாதிபா தணியாத தென்கொல்

பொங்குஞ் சினப்படை வங்கார தொங்கன் புரண்டு விழச்

செங்குன்ற  பிணக்குன்ற மாக்கிய தேர்மன்னனே”

இவனைப் பற்றிய சாஸனம் ஆறகழூர் காமநாதேஸ்வரர் ஆலயத்திலும் இருக்கிறது. இவன் கி.பி, 1178இல் வாழ்ந்துள்ளான். அப்போது ஆண்டு வந்த சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் ஆவான்.

சூரியனைப் பற்றியும் பல பாடல்கள் உள்ளன.

மிண்டாறை வாணனை முன் வெட்டாமற் பாண்டியனேர்

கொண்டுவந்து நிற்கவிட்ட கொற்றவனு நீயலையோ

தெண்டிறைசேர் மோரூரிற் றென்னன்மகு டாசலனே

மண்டலிகர் தேர்ந்து மெச்ச வாழ் சூரிய காங்கேயனே (பழம் பாடல்)

இன்னொரு பழம் பாடல் இது:

பூதந் துனைகொண்ட போர்வாணன் மாறனிரு

பாதந் துனைகாணப் பண்ணினோர்-  ஓதுமிசை

ராமா யணங்கேட்டோர் நவலர் வைப் புப்பொருளாங்

கோமான்வாழ் மோரூர் குடி

போரூர் காங்கேயர் குறித்த பிரபந்தங்களுள் இந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.

இந்த சூரியனுக்குக் காங்கேயன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு எழுகரை நாடு அடங்கிய வடகொங்கு மன்னவன் என்றழைக்கப்பட்டான். இதற்கு அடையாளமாக வடகொங்குப்பட்டன் என்று இக்குடி பெயர் கொண்டு வாழ்கின்ற பலரும் இன்று உள்ளனர்.

விரகற நோக்கியு முருகியும் என்ற திருப்புகழில்,

“இமயவர் நாட்டினில் நிறை முடியேற்றிய

எழுகரை நாட்டவர் தம்பிரானே”

என அருணகிரிநாதர் குறிப்பிடுவது இங்கு உற்று நோக்கத் தக்கது..

***

U for Udaipur –Know India Puzzle (Post No.12,474)

Maha Kaleshwar Shiva Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,474

Date uploaded in London – –  27 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Find out 8 famous towns in India beginning with letter U. Here are the clues:

1.Jyotirlinga  shrine in Madhya Pradesh; Maha Kaleshwar is the name of Lord Shiva here.

2. This was ancient Choza town, now part of Trichy; Ther was a famous judicial court where from Karikal Choza settled the cases.

3.Town in Uttarakhand state on the banks of River Bhagirathi; Shive temple like Kashi is here. Mountaineering institute is popular.

4.Town in Uttar Pradesh ; famous for leather goods, ,Leather Factories, mosquito net, Zardozi and chemical industries.A historical town.

5. Major attractions in thisr city in Jammu- Kashmir include Gole Market, Devika Ghats, Jakahni Park, Ramnagar chowk (Pandav mandir and Kachalu), Salain Talab, and the Main Bazar.

6.Most famous Krishna temple in Karnataka and Madhwa was born very near this town.

7.This town in Tamil Nadu became famous when the Choza inscription describing the democratic process of election at village level was discovered. That even gives the qualifications for a candidate.8. THE CITY OF LAKES AND PALACES in Rajasthan.Often referred to as the ‘Venice of the East’. The famous Lake Palace, located in the middle of Lake Pichola is one of the most beautiful sights .

Answers

1.Ujjain; 2.Uraiyur; 3.Uttarkashi; 4.Unnao; 5.Udhampur; 6.Udupi; 7.Uttiramerur; 8.Udaipur

–subham—

QUIZ சங்கீதத்தில் ஊர்கள் பத்து QUIZ (Post No.12,473)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,473

Date uploaded in London – –  27 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 சங்கீதத்தில் ஊர்கள் பத்து

QUIZ SERIES No.71 

சங்கீதக் கச்சேரிகளினால் சின்ன கிராமங்களும் புகழ் பெற்றன ; உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் .

1.புதுக்கோட்டை  மாவட்டம் வலையப்பட்டி எப்படிப் புகழ் அடைந்தது?

xxxx

2.காருக்குறிச்சி என்றால் யார் நினைவுக்கு வருவார்ஏன் ?

xxx

3.வயலின் வித்வான் வைத்யனாதானால் பிரபலமான கிராமம் எது?

Xxxx

4.கிராமங்கள் மட்டுமல்ல நகரங்களும்தான் இசை உலகில் பெயர்பெற்றன. பாம்பே என்று ஒருவர் சொன்னால் எந்த கர்நாடக இசை மேதையின் பெயரைச் சேர்ப்பீர்கள் ?

xxxx

5.உமையாள்புரம் வாசிக்கிறார் என்றால்  என்ன பொருள்அது வெறும் ஊர்ப்பெயர் ஆயிரன்றே!

Xxxx

6. கர்நாடக இசை ரசிகர்கள், கீழ்கண்ட ஊர்களுடன் யார் பெயரைச் சேர்ப்பார்கள்?

6.நாமகிரிப்பேட்டை–

பாபநாசம் –

பாலக்காடு —

காரைக்குடி —

xxxx

7.மதுரை நகரைப் பெயருடன் இணைத்து மதுரைக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்த 2 கர்நாடக  இசைப் பாடகர்கள் யார் ?

xxxx

8.ஊத்துக்காட்டிற்கு புகழ் சேர்த்த வேங்கடசுப்பையர் எப்படிப்புகழ் சேர்த்தார் ?

Xxx

9.திருவாரூர் என்றால் சங்கீத முமூர்த்திகள் நினைவுக்கு வருவது ஏன்?

xxxx

10.ஜனவரியில் எல்லா பிரபல சங்கீதக் கலைஞர்கர்களும்  திருவையாருக்குப் பயணம் செய்வது ஏன்?

xxxx

விடைகள் 

Xxxx

1.வலையப்பட்டி தவில் :வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞராவார் .2014ல் சங்கீத கலாநிதி விருதினைப் பெற்றார்.

xxxx

2.காருக்குறிச்சி அருணாசலம் சிறந்த நாதசுரவித்வான்.

xxxx

3.குன்னக்குடி ; வைத்யநாதன் சிறந்த வயலின் வித்வான்

xxxx

4.பாடகி பாம்பே ஜெயஸ்ரீ

xxxx

5.உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன் (பி. டிசம்பர் 17, 1935), ஒரு மிருதங்க வித்வான் ,  பத்ம விபூசண் விருதை 2010-ஆம் ஆண்டு பெற்றார்;

xxxx

6.நாமகிரிப்பேட்டை– கிருஷ்ணன் 

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் (2 ஏப்ரல் 1924 – 30 ஏப்ரல் 2001)[1], தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர்

பாபநாசம் – சிவன்

பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 – அக்டோபர் 1, 1973) கருநாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிய இசை அறிஞர் ஆவார்.

பாலக்காடு –மணி ஐயர்

பாலக்காடு டி. எஸ். மணி ஐயர் (10 ஜூன் 1912 – மே 30, 1981) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். இவரை நேயர்கள், ‘கலியுக நந்திகேசுவரர்’ என்று செல்லப் பெயரால் அழைத்தனர்.

காரைக்குடி மணி– மிருதங்க கலைஞர் 

xxxx

7.மதுரை சோமு

பாரத ரத்னா  பட்டம் பெற்ற மதுரை எஸ் சுப்புலட்சுமி (மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி;16 September 1916 – 11 December 2004)

xxxx

8.ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்  (1715 – 1775) 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர். தமிழிலும் வடமொழியிலும் பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், ஜாவளி, தில்லானா, காவடிச்சிந்து போன்ற பல்வகை இசைவடிவங்களையும் இயற்றியவர் (வாக்கேயகாரர்)

xxx

9.கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்..

Xxxx

10.தியாகராஜர் சமாதி திருவையாற்றில் உள்ளதால் அவர் இறந்த திதியில் அங்கு ஆராதனை நடக்கும் . எல்லோரும் அதில் காலத்து கொண்டு பஞ்ச ரத்னக் கீர்த்த னைகளைப் பாடுவார்கள்.

—subham—

Tags– சங்கீதத்தில் , ஊர்கள் பத்து , Quiz, தியாகராஜர் சமாதி, ஊத்துக்காடு, பாபநாசம் சிவன், காருக்குறிச்சி காரைக்குடி மணி-, மிருதங்க கலைஞர் 

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 28 (Post No.12,472)

Kanakagiri Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,472

Date uploaded in London – –  27 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Pictures are taken from Wikipedia

 கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 28

119.கனககிரி கனகாசலபதி கோவில்  (Kanakachalapathi Temple)

இது ஒரு விஷ்ணு கோவில். இந்தப் பெருமாள் கோவில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது கொப்பல் Koppal என்னும் ஊருக்கு அருகில் உள்ளது கொப்பலிலிருந்து 3 கி.மீ. பழங்காலத்தில் சுவர்ண கிரி என்று அழைக்கப்பட்டது கனகம்ஸ்வர்ணம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்கு தங்கம் என்று பொருள்.

கனக முனி என்பவர் தவம் செய்தஇடம் ஆதலால் இந்தப்பெயர். பண்டைய கல்வெட்டுகளில் கோபனா என்று அழைக்கப்பட்டது. இதன் அருகிலுள்ள கிராமங்களான பாலிகுண்டு மற்றும் கவிமாதா ஆகிய இடங்களில் பேரரசர் அசோகரின் (BCE . 3 ஆம் நூற்றாண்டு) இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது.

முதலாம் அமோகவர்சனால் (CE  814-878) எழுதப்பட்ட மிகப்பழைய  கன்னட இலக்கியமான ‘கவிராஜமார்க ‘ என்ற நூலில், ‘விதித மகா கோபன நகரம்’ என்ற வாக்கியத்தில் இந்த ஊர் உள்ளது

கோயில் அமைப்பு

கனகாசலபதி கோயில் விஜயநகரக் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இது  பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.  கோவில் விசாலமான மண்டபம், பிரம்மாண்டமான யாளி தூண்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மூன்று நுழைவாயில்களில் நன்கு கட்டப்பட்ட கோபுரங்கள் காணப்படுகின்றன கோயிலில் உள்ள சிற்பங்களில் புராண உருவங்களும், கருங் கல்லில் மன்னர்களும், இராணிகளும் செதுக்கப்பட்டுள்ளனர். கன்னட பழமொழி : “கண்கள் உள்ளவர்கள் கனககிரியையும்கால்கள் உள்ளவர்கள் ஹம்பியையும் பார்க்க வேண்டும்.” என்று  கூறுகிறது  பங்குனி மாதத்தில்,  “கனகாசலபதி திருவிழா” என்ற பிரபல திருவிழா நடைபெறுகிறது.

xxx

120.தார்வாட் வட்டார கோவில்கள்

அம்ருதேஸ்வர் கோவில் Amruteshwara temple

இது சிவன் கோவில்.; இங்குள்ள கோவில்கள் சாளுக்கியர் கால கோவில்கள ஆகும். சுமார் 1000 ஆண்டு வரலாறு உடையவை.; ஹூப்ளி நகரிலிருந்து 35 கி.மீ.

கருங் கல்லில் அமைக்கப்பட்ட 76 தூண்கள் உள்ளன. கல்யாணி சாளுக்கிய வம்ச கால சிற்பிகளின் கைவண்ணத்தைக் காணலாம் .

சோமேஸ்வரர் கோவில் Someshwara temple

இதுவும் சிவன் கோவில் இது சுமார் 800 ஆண்டு பழமையானது . இரு புறத்திலும் பச்சைப் பசேலென்ற பயிர்களைக் காணலாம்.ஷால்மல நதி அருகில் ஓடுகிறது. சதுர் புஜ கணபதியையும், மஹிஷாசுர மர்தனியையும் தரிசிக்கலாம்..

நுக்கிகேரி  என்னும் இடத்தில் உள்ள ஹனுமார் கோவிலுக்கும் Hanuman temple at Nuggikeri பக்தர்கள் வருகின்றனர்.

xxxx

ஷண்முக லிங்கேஸ்வரர் கோவில் Shambhulingeshwara temple

சிவன், பார்வதி சிலைகளை வழிபடலாம் 11 ஆம் நூற்றாண்டு சாளுக்கியரின் அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன .நுழை வாயிலில் உள்ள சிங்கத்தின் சிலை அனைவரையும் கவரும் .

மஹாலக்ஷ்மி கோவில் Mahalaxmi temple situated in Kalghatagi sub division

ஆண்டு முழுவதும் லெட்சுமியை வழிபட்டு அனுக்கிரஹம் பெற பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர் .

தார்வாட் – ஹூப்ளி (பழைய தமிழ்ப் பெயர் பூப்பள்ளி ) ஆகிய இரண்டு நகரங்களும் சுமார் 20 கி.மீ

இடைவெளியில் அமைந்துள்ளதால் இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன ; இந்த வட்டார ராய்பூரில் ஹரே கிருஷ்ணா கோவில் இருக்கிறது  ISCKON temple at Rayapur . ஹூப்ளி சித்தாரூட மடம்  Siddharoodha Math தார்வாட் ஸ்ரீ முருக மடம்  Sri Murugu Math , சங்கர மட ம் , Shankara Math , தபோவனம் , பசவண்ண கோவில்  Basavanna temple  ஆகியன பக்தர்களைக் கவரும் இடங்கள் ஆகும்.

Xxxxx

121. சந்திரமெளலீஸ்வர கோவில் Chandramouleshwara Temple

சந்திரமௌலீசுவரர் கோவில் (Chandramouleshwara Temple) சிவன் கோவில்.உன்கால் ஏரிக்கரையில் அமைந்துள்ளது Unkal lake  உன்கால் ஏரி, ஒரு  அழகான, இயற்கையான நீர்நிலை.

கோவிலின் நான்கு திசைகளிலும் நான்கு கதவுகள் உள்ளன. மொத்தம் பன்னிரண்டு கதவுகள் உள்ளன. இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. சன்னதியின் பிரதான தெய்வமான சந்திரமௌலீசுவர் கிழக்கு நோக்கி உள்ளார் . மற்றொரு லிங்கமானது நான்கு முகங்களைக் கொண்டிருப்பதால் இது சதுர்முகலிங்கேசுவரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது, சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்ட 900 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்

xxxx

122.நாகரேசுவர் கோவில் Nageshwar temple Bankapura

ஹூப்ளி- தார்வாட்டிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் ஹவேரி Haveri நகரம் உள்ளது  இங்குள்ள நாகேஸ்வரர் கோவில் கோட்டை, அருகிலுள்ள மயில்கள் சரணாலயம் (Peacock Sanctuary)  ஆகியன பிரசித்தமானவை .

அடில்ஷா என்ற மன்னனின் முஸ்லிம்படைகள் இங்குள்ள கோவில்களை அழித்து சேதப்படுத்தியுள்ளன.

 கோட்டைப்  பகுதியில் 66 தூண்களைக் கொண்ட நாகரேசுவர் கோயில் உள்ளது (உள்ளூர்வாசிகள் இதை ஆரவட்டு கம்படா குடி என்று அழைக்கின்றனர் – அதாவது கன்னடத்தில் 60 தூண்கள் கோயில் என்று பொருள்) இது சிவன் கோவில் . முஸ்தபா கானின் ஆட்சியின் போது, அதிகமாகச் சேதமடைந்தன. ஆனால் தூண்கள், கலைச் செதுக்கல்கள் , கூரை வடிவமைப்புகள் அப்படியே உள்ளன.

xxxx

123.ஹூலி (HOOLI )வட்டார கோவில்கள்

பெல்காம் மாவட்டத்தின் சௌந்தட்டி(Saundatti) யிலிருந்து சுமார் 9 கி.மீ.தொலைவிலுள்ள ஒரு நகரம்.  இங்கு, பஞ்சலிகேசுவரர் கோயில், திரிகூடேசுவரர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன . , ஏராளமான கோவில்களையும் கோட்டையையும் கொண்டுள்ளது. முன்காலத்தில்  மகிசிபதிநகர் என்று அழைக்கப்பட்டது.

இங்குள்ள பஞ்சலிங்கேசுவரர் கோயிலின் அழகிய கட்டிடக்கலை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தக் கோயிலுக்கு எதிரே நவீன ஹரி மந்திர் ஒன்று உள்ளது. ஞானேஷ்வரால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ள சாந்த் கலாச்சாரம் அல்லது நாத சைவப் பாரம்பரியம் இங்கு செழித்தது.

ஹூலியில் உள்ள பிற கோவில்கள் பின்வருமாறு:

அந்தகேசுவரர் கோயில்

பவானிசங்கர கோயில்

காலமேசுவரர் கோயில்

காசி விசுவநாதர் கோயில்

மதனேசுவரர் கோயில்

சூர்யநாராயணன் கோயில்

தாருகேசுவரர் கோயில்

ஹூலி சங்கமேசுவர் அஜ்ஜனாவரு கோயில்

பீர்தேவர் கோயில், ஹூலி

xxxxx

124. குந்தோல் சம்புலிங்கேஸ்வர கோவில் Shambulingeshwara Temple Kundgol

ஹூப்ளியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு.

பாரத் ரத்னா பண்டிட் பீம்சென் ஜோஷியால் மேலும் புகழ் பெற்ற ஊர் இது .

பண்டிட் பீம்சென் ஜோஷி ஒரு குருவைத் தேடி நாடு முழுவதும் பயணம் செய்தார். கடைசியாக ஒரு குந்தோலில் சவாய் கந்தர்வன் என்ற இசைக்கலைஞரை கண்டறிந்து அவரிடம் சீடராக சேர்ந்தார்.

11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவில் இருக்கும் இடம்.

மேலைச் சாளுக்கியர்களால் கட்டப்பட்டது. . தூண்களில் உள்ள சிற்பங்களும் உருவங்களும் நன்கு வெட்டப்பட்டுள்ளன.

கோயிலின் கதவு படிகளின் பக்கத்தில், சிங்கத்தின் செதுக்கல்கள் அதன் வாயிலிருந்து ஒரு நீண்ட சுருளை வெளியிடுகின்றன.

இந்த கோயில் சிவன் மற்றும் பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தற்போது சேதமடைந்தாலும், கோயிலின் வெளிப்புறம் தாமரை மற்றும் கீர்த்திமுக முகங்களாலும், நூற்றுக்கணக்கான உருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் படைகாளால் சேதப்படுத்தப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்று .xxxx

Someswara temple at Lakshmaneswaram

125. லக்ஸ்மேஷ்வரர் சிவன் கோவில் Lakshmaneshwara Temple

இது கடக்GADAG கிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், ஹூப்ளி HUBLI யிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் உள்ளது.

முஸ்லீம்களால் கடுமையாக சேதமாக்கப்பட்ட கோவில் இது. இப்போது கோபுரங்கள் இல்லை

த்ரிகூட அமைப்புடையது; அதாவது மூன்று கருவறைகளையும் ஒரே மண்டபம் இணைக்கும் ஒன்றில் சிவலிங்கம் இருக்கிறது மற்ற இரண்டில் இல்லை

பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன; ஆயிரம் ஆண்டுக்கும் மேலான வரலாறு உடைத்து .

எஞ்சியுள்ள கட்டிடங்களின் சுவர்களில் சப்த மாத்ரிகா, கஜலட்சுமி, அன்னப் பறவைகள், பூ வேலைப்பாடுகள், அப்சரஸ்கள் குறிப்பிடத் தக்கவை

.xxxx

To be continued……………………………..

Tags: கர்நாடக மாநில, கோவில்கள் – Part 28, ஹூப்ளி, தார்வாட், கனககிரி

உடலுக்குச் சக்தி தரும் உணவுத் துணைப்பொருள்கள்! (Post No.12,471)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,471

Date uploaded in London –  27 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் மாத இதழில் ஆகஸ்ட் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உடலுக்குச் சக்தி தரும் உணவுத் துணைப்பொருள்கள்!

ச.நாகராஜன்

ஆற்றலைக் கூட்டும் உணவுத் துணைப் பொருள்கள்

நல்ல ஆரோக்கியத்துடனும் சக்தியுடனும் செயல்பட வேண்டும் என்ற முனைப்பு உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வேக யுகத்திலோ, நாம் உண்ணுகின்ற உணவிலோ இதற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துப் பொருள்களும் குறித்த விகிதத்தில் எப்போதும் சேர்ந்திருப்பது என்பது இயலாத ஒன்றாக அமைகிறது.

ஆகவே இந்தக் குறையை ஈடு செய்ய உணவுத் துணைப் பொருள்கள் இப்போது சந்தைக்கு வந்து விட்டன.

இவற்றைப் பற்றி முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் நமது குடும்ப மருத்துவரை நாடி அவரின் அறிவுரையையும் பெற்று உணவுத் துணைப்பொருள்களை உட்கொள்ளலாம்.

அப்போது சக்தியும் கூடும்; திறனும் கூடும்; வாழ்க்கையும் ஒளிரும்.

உடல் திறன், மனத்திறன் கூடும்

உடல் திறனும் மனத்திறனும் கூட ஒரு அருமையான மாத்திரை – Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும்  Folic Acid ஆகிய அனைத்தும் இணைந்த மாத்திரை.

அனைத்து ஊட்டச் சத்துக்களும் ஒருங்கிணைந்த அற்புதமான ஒரு மாத்திரையாக இது அமைகிறது.

இது நமது ஆற்றலைக் கூட்டுகிறது. நரம்பு மண்டல இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மூளையை நன்கு செயல்பட வைக்கிறது. இதய சம்பந்தமான் ஆரோக்கியத்தை நல்குகிறது. மொத்தமாக மனித உடலின் ஆரோக்கியத்தைக் கூட்டுகிறது.

மனோசக்தி, உடல் சக்தி மேம்பட!

மனதையும் உடலையும் ஆற்றல் வாய்ந்ததாக ஆக்க Methylcobalamin இல் விடமின் பி 12  சக்தி உள்ளது. இது ஆற்றல் வளர்சிதைமாற்றத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. உணவைப் பயன் தரும் ஆற்றலாக மாற்ற இது வழி வகுக்கிறது. உடல் மற்றும் மன பலத்தை அதிகரிக்கிறது.

Alpha Lipoic Acid ஒரு நல்ல சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகும். இது Methylcobalaminஇன் ஆற்றலைத் தூண்டும் விளைவுகளுக்குத் துணை செய்கிறது. மைட்டோகாண்ரியா இயக்கத்தை விரிவாக்கி இன்னும் அதிக ஆற்றலுக்கு வழி வகுக்கிறது.

இந்த ஊட்டச்சத்துக்களின் சேர்க்கையானது ஒரு மாத்திரை வடிவில் எளிதில் கிடைக்கிறது. அது மனதையும் உடலையும் வலுவாக்கி களைப்பு மற்றும் சோர்வை அகற்றுகிறது.

நரம்பு மண்டல இயக்கத்திற்கு உதவி செய்கிறது

விடமின் பி 1 என்று பொதுவாக அறியப்படும் Thiamine Monohydrate நரம்பு மண்டல இயக்கத்திற்குத் தேவையான இன்றியமையாத ஒன்று.  கார்போஹைட் ரேட்டுகளை ஆற்றலாக மாற்றி நரம்பு சமிக்ஞைகளை அனுப்புவதற்கு இது துணை செய்கிறது. விடமின் பி 6 அல்லது Pyridoxine HCl என்று அறியப்படுவது நரம்பு இயக்கத்தில் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் கூட்டுத்தொகுப்பால் முக்கிய பங்கை வகிக்கிறது.

இந்த இரண்டும் இணைந்து மாத்திரையாக வரும்போது அனைத்தும் இணைந்த வலுவான ஒரு உதவியானது நரம்பு மண்டல அமைப்பிற்குக் கிடைக்கிறது. இது மூளை சார்ந்த மற்றும் உடலின் பொதுவான ஆரோக்கியத்திற்கு நல்ல பங்கை அளிக்கிறது.

உள்ளத்தால் உணரும் தன்மையை ஊக்குவித்தல்

காக்னிடிவ் ஹெல்த் என்று சொல்லப்படும் உள்ளத்தால் உணர்ந்து அறியும் தன்மையை ஊக்குவிப்பது Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும் Folic Acid ஆகியவற்றின் கூட்டிணைப்பே. இந்த ஊட்டச் சத்துக்கள் மூளை ஆற்றலை ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகின்றன.இவற்றிற்கு மூளை ஆற்றலைப் பாதுகாக்கும் தன்மைகள் இருக்கலாம். குறிப்பாக Methylcobalamin மற்றும் Folic Acid ஆகிய இந்த இரண்டும் மனநிலையையும் முளை செயல்பாட்டு முறைகளையும் காப்பாற்றி நியூரோடிரான்ஸ்மிட்டர்களின் உற்பத்திக்கு உறு துணை செய்கிறது. மூளைக்குத் தேவையான சத்தைக் கொடுத்து மூளை தகவல் பரிமாற்றத்தைச் செய்வதன் மூலம், இந்த மாத்திரைகள் மூளைச் செயல்பாட்டையும் மனத் தெளிவையும் நன்கு இருக்குமாறு செய்ய உதவுகிறது.

இதயக் குழலியின் ஆரோக்கியம்

Cardiovascular  எனப்படும் இதயக் குழலியத்தின் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்று. இதை ஆரோக்கியமாகப் பாதுகாப்பது உடலின் முழு ஆற்றலுக்கு இன்றியமையாததாகும். மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்டான Alpha Lipoic Acid ஆக்ஸிஜன் குறைபாட்டால் வரும் மன அழுத்தத்திலிருந்து (oxidative stress) ஒருவரைப் பாதுகாக்கிறது. இது இதயக் குழலிய பிரச்சினைகளுக்கு காரணமான ஒன்றாகும்.

Thiamine Monohydrate மற்றும் Pyridoxine HCl ஆகியவை இதயக் குழலிய ஆரோக்கியத்திற்கு ஹோமோசிஸ்டெய்ன் வளர்சிதைமாற்றத்திற்கு (metabolism of homocysteine உறுதுணையாக இருக்கிறது. இதயநோய்க்குக் காரணமாக உள்ள அமினோ அமிலம் மேலெழும்போது அதைச் சரி செய்கிறது.  இதயக்குழலிய ஆரோக்கியத்தை உறுதிப் படுத்தி இரத்தம் உறைதல் மற்றும் ரத்தக் குழாய்களின் இயக்கம் ஆகியவற்றில் Folic Acid  முக்கியபங்கை வகிக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்களின் கூட்டு, ஒரு மாத்திரை வடிவில் இருக்கும் போது அது இதயத்தை முழுமையாக ஆரோக்கியமாகச் செயல்பட வைப்பதோடு ரத்தஓட்ட அமைப்பையும் நன்கு இருக்குமாறு செய்கிறது.

உடலின் மொத்த வலிமையைக் கூட்ட வழி

உடலின் மொத்த வலிமையைக் காப்பதோடு கூடுதல் வலிமையுள்ளதாக அதை ஆக்க Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும் Folic Acid ஆகியவை தக்க படி இணைக்கப்பட்டு மாத்திரையாக ஆகிப் பயன்பாட்டிற்குத் தரப்படும் போது அது உடலை மிக்க வலிமையாக்கும் டானிக்காக ஆகிறது.

ஆற்றல் உற்பத்தி, நரம்பு மண்டல இயக்கம், மூளை ஆற்றலின் ஆரோக்கியம், இதயக் குழலியத்தின் நலத்தன்மை ஆகியவை அனைத்திற்கும் உறுதுணையாக இருந்து இந்த மாத்திரைகள் மொத்தமான உடல் ஆரோக்கியம் மற்றும் வலிமையை உறுதி செய்கின்றன. இவை உடலின் முக்கியமான இயக்கங்களைத் தேவையான அளவு மட்டுமே இயங்க வழி வகுக்கின்றன. ஒவ்வொரு தனி மனிதரும் உயிர்த்துடிப்புள்ள, சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்க இந்த மாத்திரைகள் உதவுகின்றன.

பல நன்மைகளைப் பெற ஒரு மாத்திரை

சுருக்கமாகச் சொல்லப்போனால் Methylcobalamin, Alpha Lipoic Acid, Thiamine Monohydrate, Pyridoxine HCl, மற்றும் Folic Acid ஆகியவை சேர்ந்துள்ள மாத்திரைகள் மூளை ஆற்றல், பொதுவான மொத்த உடல் நலம், உடல் வலிமை, இதயக் குழலிய ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்தையும் நல்குகின்றன. பல நன்மைகளை ஒருங்கே பெற இவை வழி வகுக்கின்றன.

என்றாலும் கூட இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் முன்னர் உங்களது குடும்ப வைத்தியரைக் கலந்து ஆலோசிப்பது இன்றியமையாதது. சரியான வழிகாட்டுதல் கிடைக்கப்பெற்றால் உடல் ஆரோக்கியத்திற்கான முழு அணுகுமுறையைப் பெற்றவர்களாவோம். வாழ்க்கையை அனுபவிக்கும் திறன் படைத்தவர்களாவோம்!

***

Folic acid

T for Thanjavur Know Your India Puzzle (Post No.12,470)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,470

Date uploaded in London – –  26 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find out 8 towns beginning with letter T. Some tips are given below:

1.Cultural capital of Kerala;Famous Pooram festival with eephants is heled here.

2. World famous, richest temple is at the top of the Hill.

3.Famous Choza Brihadeeswara is built here.

4. A historic site in Karnataka.. Western Gangas ruled from 350 to 1050 AD until they were overthrown by the Cholas in the 11th century.

5.Kerala’s Capital; World’s richest treasure trove is in the Anantha Padmanabha swami Temple.

6. One of the 12  Jyotir Linga shrines situated in Maharashtra; three faced linga.

7.Tamil Nadu City with Rock fort and Ganesh temple at the top of the hill,

8. Town with temples; but famous for the comedian , jester Raman

Jyotirlinga Shrine

Answers

1.Thrissur; 2. Tirupati; 3.Thanjavur; 4.Talakadu,

5.Trivandrum (Thiruvananthapuram); 6.Trimbakeswar, 7.Tiruchi 8.Tenali ,

—subham—

கன்பூசியஸ் வாழ்வில் சுவையான சம்பவங்கள் (Post No.12,469)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,469

Date uploaded in London – –  26 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கன்பூசியஸ் வாழ்வில் சுவையான சம்பவங்கள் 

கன்பூசியஸ் CONFUCIUS  ஒரு சீன தத்துவ ஞானி. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார். அவர் சொன்ன பொன்மொழிகள் அனலெக்ட்ஸ் THE ANALECTS என்ற நூலில் உள்ளன. தமிழில் பாரதியார், இவரது மதத்தையும் தனது பாடலில் சேர்த்து தமிழ் கூறு நல்லுலகத்துக்கு இவரை அறிமுகம் செய்துவைத்தார்  செப்டம்பர் 28ம் தேதி (CONFUCIUS BIRTH DAY SEPTEMBER 28) இவரது பிறந்த தினத்தை.ஆண்டுதோறும்  தேசீய சீனா  எனப்படும் குட்டி நாடு தாய்வான் (TAIWAN) ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது..

சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் ஒரு கதை கேட்டிருப்பீர்கள் . வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருந்தாராம் ; ஒரு மாணவன் அதைக்  கவனிக்காமல் வேறு ஏதோ ஒன்றை சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண் டிருந்தானாம். வாத்தியார் , அவனை சுட்டிக்காட்டி, டேய் பையா! எழுந்திரு , இவ்வளவு நேரமாக நான் கத்திக்கொண்டிருக்கிறேனே ;  உனக்கு இதுவரை என்ன தெரிந்தது ? சொல்.! என்றாராம் .

சார் ! பொந்துக்குள் எலி போய்விட்டது; ஆனால் இன்னும் வால்  மட்டும் போகவில்லை என்றானாம் ; அவன் சொல்லைக் கேட்டு மற்ற மாணவர்கள் கொல் என்று சிரித்தார்களாம்.

அவன் அவ்வளவு நேரம் கவனித்தது ஓரி எலியின் நடமாட்டத்தை தான்!

இதே போல கன்பூசியஸ் CONFUCIUS  வாழ்வில் ஒரு சம்பவம் நடந்தது

அவர் உடனே சொன்னார் :

யாருக்கு உண்மையை அறிய பிரியமில்லையோ அவனுக்கு நான் சத்தயத்தைப் போதிப்பதில்லை.

எந்த ஒரு ஆர்வமுள்ள மாணவனையும் நான் திருப்பி அனுப்பியதில்லை ; அவன் காய்ந்த மாமிசத் துண்டுகளை தட்சிணையயாக கொண்டு வந்தாலும் அதை ஏற்பேன்

என்றார் .

நான் சொன்ன பாடத்தை திரும்பவும் சொல்லவும் மாட்டேன். 4 மூலைகள் உள்ள காகிதத்தின் ஒரு முனையைக் காட்டினால் அவனுக்கு மற்ற மூன்று முனைகளும் சொல்லாமலேயே  தெரிய வேண்டும் .

xxx

இப்படியெல்லாம் அவர் உபதேசம் செய்து கொண்டிருந்த ஒரு வகுப்பில் ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருந்தான் . கன்பூசியஸ் CONFUCIUS  ஒரு நல்ல ஆசிரியர் உடனே அவர் சொன்னார் :

உளுத்துப்போன மரத்தில் எந்த உருவத்தையும் செதுக்க முடியாது ; சாணியைக்கொண்டு சுவர் எழுப்ப முடியாது. அவனை நான் ஏன் கண்டிக்கவேண்டும்?

இவ்வாறு சொல்லி அவனைக் கண்டிக்கவும் இல்லை. அந்தப்பையன் சுகமாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தான்.

xxxxx

இன்னொரு சுவையான சம்பவம்,

கன்பூசியஸ் CONFUCIUS  பல வேலைகளைச் செய்தார்; வெறும் ஆசிரியர் வேலையோடு நிற்கவில்லை. அவர் சீன அரசாங்க அதிகாரியாகவும் இருந்தார் அவர் விரும்பிய பெரிய பதவிகள் அவருக்குக் கிடைக்கவில்லை; அதில் அவருக்கு ஏமாற்றம்தான்.

கற்றோருக்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு

உண்டோ குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு என்று தமிழில் படித்திருக்கிறோம் ; அது போல கன்பூசியஸுக்கும் சென்றவிடமெல்லாம் பெரியாத மரியாதை கிடைத்தது ; ஆனால் சீனாவின் குட்டி நாடுகளை ஆண்ட எந்த மன்னனும் இவருக்குப் பெரிய பதவியைக் கொடுக்கவில்லை; அவர் மிகவும் வருத்தப்பட்டு பிறந்த  Qufu கூஃபு  என்ற   இடத்துக்கே (QUFU  in China)  சென்று 72ஆவது வயதில் இறந்தார் .

இதே போல வருத்தப்பட்டு இறந்த பாரதியாருக்கு நாம் கோவில் கட்டியது போல சீனாவும் இன்று அவருக்குக் கட்டப்பட்ட கோவிலை பெரிய சுற்றுலாத் தலமாக பராமரித்துவருகிறது

அவர் பிறந்த இடம் சீனாவில் உள்ள  Qufu என்னும் நகரம்  .

சுவையான சம்பவம் இதோ ,

கன்பூசியஸ் CONFUCIUS  சிடம் பாடம் கேட்டப் பலருக்கு அரசாங்கத்தில் பெரிய பதவிகள் கிடைத்தன.. அட, இந்த அதிகாரி கன்பூசியஸை விட பெரியவர் என்று ஒருவர் சொன்ன  காமெண்ட்/ விமர்சனம் காதில் விழுந்தது . அப்போது ஒருவர் சொன்னார்

நான் நம்முடைய நிலை என்ன என்பதை ஒரு வீட்டின் உவமையைக் காட்டி சொல்கிறேன். நான் கட்டிய சுவர் ஒருவனுடைய தோள் உயரம்தான். யாரும் எட்டிப்பார்த்து உள்ளே என்ன நடக்கிறது என்பதை எளிதில் அறியலாம். ஆனால் என்னுடைய குருநாதன் கட்டிய வீட்டின் சுவரோ மதில் போல உயர்ந்தது. யாரும் எட்டிப்பார்க்க முடியாது. ஆனால் அந்த வீட்டிற்குக் கதவுகள் உண்டு ; கதவைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அதனுள்ளே அழகை யாரும் ரசிக்கமுடியாது;  சிலரே அந்தக் கதவு இருக்கும் இடத்தைக் காண்கிறார்கள் .

என்னுடைய மாஸ்டர் / குருநாதன் சூரியன், சந்திரன் போன்றவர்.; அவரை யாரும் குறை சொல்லமுடியாது; அவருடன் ஏனையோரை ஒப்பிட்டால் அவர்கள் வெறும் மணல் மேடுகள் தான் .

xxxxx

கன்பூசியஸ் ஒரு வேத கால ரிஷி போலவே பேசினார்

நான் எதையும் புதிதாகச் சொல்லவில்லை; பழங்கால அறிவினை, ஞானத்தை மீண்டும் உங்களுக்கு அளிக்கிறேன்

வேத கால ரிஷிகளும் இதையே சொன்னார்கள் நாங்கள் மந்த்ர த்ருஷ்டாக்கள். அதாவது காலத்தால் அழியாத உண்மைகளைக் காண்பவர்கள்; அதை உங்களுக்கு அப்படியே சொல்கிறோம்.என்றனர் ரிஷி முனிவர்கள்.

இதனால் வேதங்களுக்கு அபெளருஷேயம் என்று பெயர்; அதாவது புருஷர்களால் / மனிதர்களால் உண்டாக்கப்பட்டதல்ல .

இன்னும் ஒரு பெயர் ச்ருதி அதாவது கேட்கப்பட்டது; கேள்வி ஞானம் ;

சங்கத் தமிழ் புலவர்களும் வேதங்களை எழுதாக் கிளவி என்று போற்றினர்.

XXX

இன்னும் ஒரு சுவையான விஷயத்தைக் கேளுங்கள்

கன்பூசியஸ் தன் வாழ்க்கையை சுருக்கி வரைந்தார் ,

15 வயதில் கற்பதில் பெரிய ஆர்வம் ஏற்பட்டது; கற்க கசடறக்  கற்றேன்

30 வயதில் கற்றபின் அதற்குத் தக நின்றேன் ;

40 வயதில் ஐயங்கள் அகன்றன ;

50 வயதில் ஆன்மீக வாழ்வில் நுழைந்தேன்;

60 வயதில் ஆண்டவன் கட்டளையை மீறாமல் நின்றேன்;

70 வயதில் என்னுடைய வழிப்படி சென்றேன் ; ஒரு தவறும் நடக்கவில்லை .

XXXX

கன்பூசியஸ் சொன்னது எப்படி கிடைத்தது?

தேவாரம், திருவாசகத்தை நால்வரும் எழுதவில்லை. நால்வரைச் சூழ்ந்து நின்ற அடியார்கள் அவைகளை நினைவில் வைத்து நமக்கு எழுதி வைத்தனர். புத்தரும் புஸ்தகம் எழுதவில்லை; முக்கிய சீடர்கள் அவர் சொன்னதை தம்மபதம் என்ற நூலாக நமக்குத் தந்தனர். அதுபோலவே கன்பூசியஸும் நூல் எதையும் எழுதவில்லை அவர் சொன்ன பொன்மொழிகளை, உபதேசங்களை அவரது சீடர்கள் தொகுத்து அனலெக்ட்ஸ் என்ற ப்புஸ்தகமாக நமக்கு அளித்தனர். அவரோ தன் வாழ்நாளில் லூ மாகாணம் பற்றிக் கொஞ்சம் எழுதினார். 

கன்பூசியஸ் சொன்னதோடு அவரது பிரதான சீடர் மென்சியஸ் MENCIUS  சொன்னதையும் சேர்த்து நமக்கு அனலெக்ட்ஸ் ANALECTS  என்ற புஸ்தகமாக அளித்தனர் ; இதை தமிழில் தத்துவ முத்துக்கள் என்று மொழிபெயர்க்கலாம்.

–subham—

Tags- கன்பூசியஸ், சுவையான சம்பவங்கள்,  அனலெக்ட்ஸ்,The Analects