மாற்றப்பட்ட 4 வார்த்தைகள்! நடந்தவைதான் நம்புங்கள் (Post No.12,681)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,681

Date uploaded in London –  –  7 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 9 

ச.நாகராஜன்

மாற்றப்பட்ட நான்கு வார்த்தைகள்! 

ரவீந்திரநாத் தாகூர் நோபல் பரிசு பெற்ற இந்திய கவிஞர்.

அவர் தனது கீதாஞ்சலி மூலம் உலகப் புகழ் பெற்றார்.

வங்க மொழியில் இருந்த கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய விரும்பினார். அப்படிச் செய்தால் அது உலக மக்களை அடையும் என்பது அவரது எண்ணம்.

இந்த மொழியாக்கத்தை வேறு யாரிடமும் செய்யச் சொல்லாமல் தானே அவர் செய்தார்.

தனது மொழியாக்கம் சரியானது தானா என்ற சின்னச் சந்தேகம் அவர் உள்ளத்தில் எழுந்தது.

ஆகவே அவர் தனது நண்பரான சி.எப். ஆண்ட்ரூஸை (C.F.Andrews) அணுகி தான் செய்த மொழியாக்கம் சரிதானா என்று சரபார்க்கச் சொன்னார்.

சி.எப். ஆண்ட்ரூஸை சிறந்த கல்வியாளர். ஆங்கில மொழி இலக்கணத்தை நன்கு அறிந்தவர். அவர் கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை முழுவதுமாகப் படித்துப் பார்த்தார்.

பின்னர் தாகூரிடம், “எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது, நான்கு இடங்களில் மட்டும் மாற்ற வேண்டும்” என்று சொல்லி நான்கு இடங்களைச் சுட்டிக் காட்டினார்.

உடனே தாகூரும் அந்த நான்கு இடங்களில் உள்ள வார்த்தைகளை மாற்றினார்.

இப்போது கீதாஞ்சலியின் ஆங்கில வடிவம் தயார்!

பிறகு அவர் லண்டனுக்கு முதன்முறையாகச் சென்றார்.

அங்கு கூடியிருந்த கவிஞர்கள் சம்மேளனத்தில் தனது கீதாஞ்சலியை வாசித்தார்.

அந்தக் கவிஞர்கள் கூட்டத்தை பிரபல ஆங்கிலக் கவிஞரான ஈட்ஸ் (Yeats) தான் ஏற்பாடு செய்திருந்தார்.

அனைவரும் கீதாஞ்சலியைக் கேட்டனர்.

பின்னர் தாகூர், “ஏதாவது மாற்ற வேண்டுமா? எல்லாம் சரியாக இருக்கிறதா? ஆங்கிலம் எனது தாய்மொழி இல்லை” என்றார்.

உடனே ஈட்ஸ், “எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. ஆனால் நான்கு இடங்களில் மட்டும் வார்த்தைகளை மாற்ற வேண்டும்” என்றார்.

பின்னர் அந்த நான்கு இடங்களை அவர் சுட்டிக் காட்டினார்.

என்ன ஆச்சரியம்! எது தப்பு என்று  சி.எப். ஆண்ட்ரூஸ் மாற்றச் சொன்னாரோ அதே நான்கு மாற்றப்பட்ட வார்த்தைகளைத் தான் ஈட்ஸ் சுட்டிக் காட்டினார்.

தாகூர் உடனே தனது முந்தைய வார்த்தைகளை அங்கு போட, அதுவே சரி என்று அனைவரும் கூறினர்.

எப்படி இப்படி குறிப்பாக அந்த நான்கு வார்த்தைகளை மட்டும் ஈட்ஸ் கூறினார்?!

ஈட்ஸ் ஒரு கவிஞர். கவிஞர் உள்ளத்தை ஒரு கவிஞரே நன்கு அறிய முடியும். சி.எப். ஆண்ட்ரூஸ் கவிஞர் இல்லை. கல்வியாளர், இலக்கணவாதி. அவருக்குக் கவிதை ஓட்டம் புரியாது.

ஈட்ஸ் கூறினார் : ”அந்த நான்கு இடங்களில் மட்டும் கவிதை ஓட்டம் தடைப்படுகிறது. அங்கு ஃப்ளோ – FLOW – இல்லை என்றார்.

ஆக கவிஞன் ஒருவனே இன்னொரு கவிஞனின் உள்ளத்தை நன்கு அறிய முடியும் என்பது நிதர்சனமானது.

கீதாஞ்சலி தாகூருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

ஆதாரம் : ஒஷோ எழுதிய Yoga : The alpha and omega நூல்.

என்னை விடுவி! என்னை விடுவி!!

சூபி யோகியான ஷேக் ஃபரீதை (Sheikh Farid) ஒரு சூதாடி அணுகினான்.

அவன் அவரிடம்,“சூதாட்டத்தை என்னால் விட முடியவில்லை. எப்படி அதிலிருந்து விடுபடுவது. அது என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதே! ஒரு வழி சொல்லுங்களேன்” என்று வேண்டினான்.

உடனே ஷேக் ஃபரீத் அருகிலிருந்த ஒரு கம்பத்தைக் கெட்டியாக தன் கைகளினால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டார். பின்னர் கத்தினார் : “ஓ! என்னை விடுவி! என்னை விடுவி!” என்று அலறினார்.

இதைப் பார்த்த சூதாடி திடுக்கிட்டு ஆச்சரியப்பட்டான். அவன் அவரிடம், “ஐயா! கம்பம் உங்களைப் பிடிக்கவில்லை. நீங்கள் தான் சுற்றி வளைத்துக் கைகளினால் கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் அரை நொடியில் கம்பத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள முடியும்” என்றான்.

கம்பத்திலிருந்து தன் கைகளை எடுத்தவாறே ஷேக் ஃபரீது கூறினார் அவனை நோக்கி, “அப்பனே! இதே போலத் தான், சூதாட்டம் உன்னைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. நீதான் அதை விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீ நினைத்தால் அரை நொடியில் அதை விட்டு விடலாம்” .

சூதாடி என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டான்.

**

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 11 (Post No.12,680)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,680

Date uploaded in London – –  –  6 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 11

பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 31,32,33 ஆகியவற்றில் வரும் அறிவியல் செய்திகளை முன்னரே ஒரு கட்டுரையில் விளக்கி விட்டேன்

SLOKA 31

வஹதி புவனேஸ்ரேணிம் சேஷஹ பணாபலகஸ்திதாம்

கமடபதினா மத்யே ப்ருஷ்டம் ஸதச தார்யதே

தமபி குருதே க்ரோடாதீனம் பயோதிரநாதராத்

தஹஹ மஹதாம் நிஸ்ஸீமாநஸ்சரித்ர விபூதயஹ – 31

वहति भुवनश्रेणिं शेषः फणाफलकस्थितां

कमठपतिना मध्येपृष्ठं सदा स च धार्यते ।

तम् अपि कुरुते क्रोडाधीनं पयोधिरनादराद्

अहह महतां निःसीमानश्चरित्रविभूतयः ॥ 1.31 ॥

பெருந்தன்மை கொண்டபெரியோர்கள்கொடையாளிகளின் சக்திக்கும் பெருமைக்கும் அளவே இல்லை. இந்த பூமியை ஆதிசேஷன் என்னும் பாம்பு தாங்குகிறான். அந்த சேஷ நாகத்தை ஆமை தன் முதுகில் தாங்குகிறது. அநத ஆமையை கடல் தனது அடித்தளத்தில் தாங்கி நிற்கிறது’.—1-31


XXX

SLOKA 32

வரம் பக்ஷச்சேதஹ ஸமதம கவன்முக்தகுலிஸ

ப்ரஹாரைருத்ரச் சதூபஹலதஹனோத்ரார குரூபிஹி

துஷாரத்ரேஹ்ஹே ! பிதரி க்லேசவிவசே

ந சாசௌ ஸம்பாதஹ பயஸி பயஸாம் பத்யூருசிதஹ -32

वरं पक्षच्छेदः समदमघवन्मुक्तकुलिशप्रहारैर्

उद्गच्छद्बहुलदहनोद्गारगुरुभिः ।

तुषाराद्रेः सूनोरहह पितरि क्लेशविवशे

न चासौ सम्पातः पयसि पयसां पत्युरुचितः ॥ 1.32 ॥

‘தேவர்களின் தலைவனான இந்திரன் இமயமலை மீது தன் வஜ்ராயுதத்தை வீசித் தாக்கினான். அப்போது இமயத்தின் மகனான மைநாக பர்வதம் தந்தையை விட்டு ஓடிப்போய் கடலில் அடைக்கலம் புகுந்தது. இது சரியான செயலன்று. மகன் என்னும் பெயருக்கு ஏற்ற செயலுமன்று’ – 1-32

32. It would have been better for the son of Himavan (Mainaka) to have his wings cut by the terrible strokes of the Vajra thrown by the proud Indra, spitting rising thick flames. It was not appropriate to plunge into the waters of the ocean, when his father was powerless due to pain.

இந்த பர்த்ருஹரி ஸ்லோகத்தில் சொல்லவரும் நீதி ஒருவருக்கு ஆபத்து ,, வருகையில் — குறிப்பாக தந்தைக்கு ஆபத்து வருகையில் — மகன் ஓடிப்போவது — உதவாமல் பயந்து ஒளிவது — முறையன்று– வீரமும் அன்று என்பதாகும்.

XXX

SLOKA 33

சூர்யகாந்தக் கல், சூரிய ஒளியை நெருப்பாக கக்குவதை காளிதாஸன், தமிழில் திருமூலர் போன்ற ஏராளமான புலவர்கள் பயன்படுத்துவதால், லென்ஸ் (Lens), உருப்பெருக்கு ஆடி (Magnifying glass) பற்றி இந்துக்களுக்கு முன்னரே தெரிந்ததை நாம் அறிய முடிகிறது.

யதசேதனோபி பாதைஹி ஸ்ப்ருஷ்டஹ ப்ரஜ்வலதி ஸவிதுரினகாந்தஹ

தேஜ்ஸ்வீ புருஷஹ பரக்ருதநிக்ருதிம் கதம் ஸஹதே – 33

यदचेतनोऽपि पादैः स्पृष्टः प्रज्वलति सवितुरिनकान्तः ।

तत्तेजस्वी पुरुषः परकृतनिकृतिं कथं सहते ॥ 33

இதோ பாட்டின் பொருள்

சூரிய ஒளிபட்டவுடன் உயிரே இல்லாத ஜடப்பொருளான சூர்ய காந்த மணி கூடப் பிரகாஸிக்கிறது; நெருப்பை உமிழ்கிறது. அப்படி இருக்கையில் பெரியோர்களை யாரேனும் அவமதித்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? 1-33

33. When even the insentient sun-jewel blazes when touched by the feet (rays) of the sun, how can a powerful man tolerate an insult done by others?

—-subham—–

Tags- Bhartruhari part11, பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 31,32,33

Nagarathar Chettiyar Community’s  Contribution to Hindu Culture in Sri Lanka – Part 1 (Post.12,679)

London Swaminathan speaking

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,679

Date uploaded in London – –  –  6 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I was invited by the London Nagarathar Sangham to give a talk on Nagarathar’s role in reviving Hinduism in Sri Lanka . Their contribution to Hindu culture is documented  already in South East Asian countries, but not in Sri Lanka. I wanted to document it in respect of Sri Lanka as well. Occasional references only are available here and there but not a full report is tried so far.

Here is what I told the meeting of over 100 people on 28th October, 2023 held at London Murugan Temple Hall in East London.

Several temples in Colombo and other towns are run by the Nagarathar community. They run Tamil schools and religious classes in temple premises ; this is a country where we see Chettikulam, Chettiar Street, Chettiar  temple etc.

Portuguese invaders and Dutch invaders destroyed hundreds of Hindu temples throughout the country and used the temple stones to build churches.  The government has listed nearly 4000 temples today. Four hundred years ago almost all the 500 temples in Jaffna area were completely demolished. Portuguese were the worst and Dutch allowed some Hindu activities after getting money. When British rule began Hindu revival also began. Saivite Scholar Arumuga Navalar inspired Hindus and made them rebuild the temples. But everything needs money, and this came from Nagarathar community

About 350 years ago, Chettiars (Nagarathar) came to Ceylon to do business. They have migrated to South East Asian countries earlier .

Vira Narayana Chettiyar

The manual of the Vanni, by J P Lewis (1895) has the following–  The  Division of  Cheddikulam is said to have been colonised in the  Kaliyuga 3348, about 247 CE ,by a chetti from Madurai, who with some Parava  pearl fishers had been ship wrecked on the coast of Ceylon (now called Sri Lanka). this is the account given of it:

“Vira Narayana Chetti came to Adankapattu , settled in   Cheddikulam, built or dug the keni called  Vavalai and erected a temple to Santhirasekaran. He buried a treasure in the well nearby and left a devil Chadamuni  to watch over it. Sixty elephants were used to carry the treasure. And local tradition has that this treasure will be revealed by the Muni to anyone who rebuilds the temple that was destroyed  by the Portuguese “.

xxxx

Thiruvilanga Nagarathar in Colombo

During the days of Dutch regime there was a little islet in this island and a man known as Captain received all the spices and loaded them on the outgoing vessels. He had quite a large gathering of an Indian Chetti community called Thiruvilanga Nagarathar, who were associated with him in this mercantile undertaking. When the Dutch rule finished, the business dwindled off.

However, during the heyday of the life of Nagarathars, they had established a Ganesh shrine. In 1817, Sivan Poothaparar, a devotee donated 5 and half acres of land for the Vinyakar/Ganesh Temple

During those years a Chettiyar couple had no issue. They made a vow to build a temple for Siva if they were blessed with a child. When they were blessed with a child , they built Kailasa Nathan Sivan Kovil. Thus, two temples came up in the Captain Gardens area of Colombo.  

Xxx

Chettiar Sivan Kovil in Jaffna

Vaitheeswara Sivan Kovil at Vannarpannai in Jaffna is also called Chettiar Sivan Kovil/temple.

Vaithilinga chettiar, son of Gopala chettiyar built this temple, obtaining special permission granted by the Dutch rulers of Ceylon in 1791. This is one of the few instances where Dutch Government eased their tolerance to other religions.

A .Mootootamby pillay, in his  Jaffna History,  had written that  Vaithilinga chettiyar, a leading merchant and one who enjoyed great influence with the government, obtained the release of  Nalla Mappana Vanniyan, Chief of Panakamam . Vannian was held by the government for treason. Chettiyar obtained his release and paid the necessary ransom money of 1200 rix dollars.

Later Vannian showed his gratitude by donating 20,000 palmyra trees to build the temple. He also donated a village with paddy fields and a tank to the temple. Following this. Chettiar built a proper temtemple. 

Mahara Nonbu Meeting beegan with Chief Priest Sri Naganatha Sivam shooting an arrow at the target

to be continued………………………..

Tags – chettiyar, nagarathar, in Sri Lanka, Vira Narayana, Vaithilinga,

ராவணன் விமான நிலையம்: இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள்- Part 50 (Post.12,678)

Ramayana Lanka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,678

Date uploaded in London – –  –  6 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 50

119.ராவணன் விமான நிலையம்

ராவணன் 6 விமான தளங்களை வைத்திருந்தான்.அவைகளில் ஒன்று வேரகந்தோட Weragantota ; சிங்கள மொழியில் விமானம் இறங்கும் இடம் என்று பொருள். ராவணனுடைய விமானம் மயில் உருவத்தில் இருந்ததாக வால்மீகி எழுதியுள்ளார். சிங்கள மொழியிலும் ராவணன் விமானத்தை பறக்கும் மயில் Dhandu Monara”  என்றுதான் அழைக்கிறார்கள்  5000  ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயணம் நடந்திருந்தாலும் இன்று கூடச் செவி வழிச் செய்திகளும் கதைகளும் மாறாமல் உள்ளன. சங்க இலக்கியத்தில் உள்ள 2 ராமாயாணச் செய்திகளும் வால்மீகியிலோ , கம்பனிலோ இல்லை என்பதைப் பார்க்கையில் இலங்கையில் நமக்குக் கிடைக்கும்  செய்திகளையும் சேர்த்து பெரிய ராமாயணம் இயற்றலாம்.

ராவணனின் விமான தளங்கள் / நிலையங்கள்

பெயர்களைப் பார்த்தாலே  அவைகள் விமானம் தொடர்புடையவை என்பது சொல்லாமலே விளங்கும்

Thotupolakanda (“Mountain Port” in Sinhala) at Horton plains மலை வழி / துறை

Weragantota (“Place of Aircraft” landing in Sinhala) in Mahiyangana விமான நிலையம்

Ussangoda (“Area of Lift” in Sinhala) in the Southern coast மேலே புறப்படும் இடம்

Wariapola (“Aircraft Port” in Sinhala) in Matale and Kurunagala. விமான இருப்பிடம்

Dolukanda, part of Sanjeevini hill fell here.

120.நாகத் தீவுக்கு பெயர் காரணம்

இலங்கையை நாகர் நாடு  Nagadipa என்று மணிமேகலை, மஹாவம்சம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன . அனுமான்  இலங்கைக்குப் பறந்து வருகையில் 3 தடைகளை சந்தித்தான். அவர்களில் ஒருவரான சுரஸா தேவி, நாகர் இன பெண் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும். இதனால்தான் மணிமேகலை முதலிய தமிழ்க் காப்பியங்கள் இலங்கையை நாகர் தீவு என்று அழைத்தது. பிற்கால சீன யாத்ரீகன் கூட நாகர் இனப் பெண்களின் கொடூரச் செயல்களை குறிப்பிடுகிறான் .

121.கொண்ட கலை Kondagala, ; சீதையின் முடி

Ussangoda உசன கொட எனும் இடத்தில் கரிய மணல் காணப்படுவதற்கு அனுமன் இலங்கையை எரித்தபோது ஏற்பட்ட கரி என்றும் மக்கள் பகர்வர். 5000 ஆண்டுகள் கழிந்தாலும் சில இடங்களாவது ராமாயணத் தடயங்களைக் காப்பாற்றி வருகிறது. அதைவிட மக்களின் வாய்மொழி வரலாறு நமக்குச் சான்றாகத் திகழ்கிறது .

இதே வட்டாரத்தில்  Kondagala கொண்ட கல என்று ஒரு ஊர் இருக்கிறது. விமான வேகத்தில் சீதா தேவியின் தலைமுடி கலைந்து பறந்ததை  மக்கள் பார்த்துச் சொன்ன இடம் இது. கொண்டை கலைந்தது என்பதன் மரூஉ கொண்டகல ஆகும் .

122.சீதா கோலி – அரிசி உருண்டை

இலங்கையில் உள்ள ஒவ்வொரு கல்லையும் மண்ணையும் பெளத்த மதத்தைச் சேர்ந்த சிங்கள மக்களே ராமாயணத்துடன் தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். காலத்தினால் அழியாத காவியம் அன்றோ ராமாயணம். இந்த வட்டாரத்தில் அரிசிச் சோறு சிதறினால் போல் காணப்படுகிறது. இதை சீதா கோலி என்று கிராம மக்கள் குறிப்பிடுகிறார்கள். இராவணன் கொடுத்த  அரிசிச் சோற்றை சீதை தூக்கி எறிந்ததன் மிச்சம் மீதி என்பது கிராம மக்களின் நம்பிக்கை. இந்த அரிசி மணியை பெட்டிக்குள் வைத்திருந்தால் நல்ல அறுவடை கிடைக்கும்  என்று விவசாயிகளும், குழந்தைகளின் வயிற்று நோயைத் தீர்க்க இதைக் கொடுக்கவேண்டும் என்று தாய்மார்களும்  நம்புகின்றனர் .

123.சீதையின் அக்கினி பரீட்சை , ராவணன் கோட்டை

சீதையின் அக்கினி பரீட்சை  பற்றி முந்தைய கட்டுரையில் எழுதிவிட்டேன். அந்த இடத்தின் பெயரே சீதை செய்த சத்தியப் பிரமாணதின் பேரில் உள்ளது திவு ரும்போல என்ற இடத்தின் பெயருக்கு

Divurumpola is the place where it happened and the name itself means “the Place of Oath”. சபதம்/ சத்தியம் செய்த இடம் என்று பொருள்.

அருகில் ராவண கொட Ravanagoda என்ற இடம் இருக்கிறது , இங்கு குகைகளும் சுரங்கங்களும்  அதிகம் அருகில் ஸ்த்ரீ புரம் Istripura இருக்கிறது Istripura means “Area of Women” in Sinhala. ராவணன் சீதையையும் மற்ற பெண்களையும் வைத்திருந்த இடம் இது. இவை அனைத்தும் காலகால மாகச் சொல்லப்பட்டுவரும் விஷயங்கள். இன்று நேற்று இட்டுக்கட்டப்பட்ட கதைகள் அல்ல.

124.கொண்ட கட்டு கல Konda Kattu Gala

கொண்ட கட்டு கல என்பது பின்னல் போல பல குகைகள் இருக்கும் இடம் ராவணனின்  ஆட்சிக்குட்பட்ட அத்தனை இடங்களையும் இணைக்கும்

வழித் தடங்கள் இவை. ஏனெனில் இவை யற்கையாக அமைந்த குகைகள் அல்ல, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள எல்லோரா, அஜந்தா, எலிபெண்டா குகைகளைப் பார்க்கையில் இதில் வியப்பு ஒன்றும் இல்லை. கலுதர  Kalutara was once where King Ravana’s palace and a tunnel existed என்னும் இடத்தில் இப்போது புத்தர் கோவில் இருக்கிறது அங்குதான் குகை வாயில், ராவணன் கோட்டை/ அரண்மனை இருந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சி யாளரின் முடிவு.

125.பாதாள லோகம் வரை ராவணன் சுரங்கம்

மனிதர்களால் உண்டாக்கப்பட்ட குகை வாசல்கள் இருக்கும் இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

வெலிமட  Welimada,,பண்டாரவெல Bandarawela, சேனபிடிய Senapitiya (Halagal), ராம்போட  Ramboda, லபுக்கெல்லா Labookelle, வரியப்போல Wariyapola/Matale, சீதா கொடுவா (Sitakotuwa/Hasalaka).

மயில் ராவணன் கோட்டை  கதை தமிழில் மிகவும் பிரசித்தம் அஹிராவண் என்பவன் ராவணவனுடை ய  சகோதரன் . அவனைத் தமிழில் கொச்சை மொழியில் மயில்ராவணன் என்பார்கள் . அவன் கோட்டைக்குள் புகுந்தவர்கள் வெளியே வரமுடியாது. ஏனெனில் எல்லாம் சிக்கலான குகை (MAZE) வழிகள் . அவனைப் பார்க்க ராவணன் அந்தக்கோட்டடைக்குள் செல்லும் வாசலும் உளது . மஹா பலி பாதாள லோகத்துக்கு அனுப்பப்பட்டார் என்று வாமனாவதாரத்தில் படிக்கும்போது அவர் தொலை தூர தீவுகளுக்கு அனுப்பப்பட்டார் என்றே பொருள். ஆகையால் மயில்ராவணன் லோகமும் பிற தீவுகளுக்குச் செல்லும் ரகசிய பாதைகள் ஆகும். ஏனெனில் சில சுரங்க வாசல்கள் கடலுக்கு அருகிலுள்ள மலைகளில் இருக்கினறன. இதனால்தான் ராவணன் முதலிய அரக்கர்களை தந்திரம் மிக்கவர்கள், மாயா ஜாலக்காரர்கள் என்று வருணிக்கின்றனர் . அதாவது ஒளிவு மறைவுகளும் நெளிவு சுழிவுகளும் நிறைந்த நேர்மையற்ற பாதை அரக்கர் பாதை .

To be continued……………………………………..

*****************************

Tags– Ramayana Lanka, Tourist places,  Part 49, இலங்கை, 108 புகழ்பெற்ற , இந்து ஆலயங்கள், ராவணன் விமான நிலையம்

S Nagarajan October 2023 Article Index (Post No.12,677)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,677

Date uploaded in London –  –  6 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

SNR Article Index : OCTOBER  2023

OCTOBER  2023

1-10-23 12540  மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா தந்த அற்புத

                            விளக்கங்கள்!                                                                                                       2-10-23 12545 SNR Article Index : SEPTEMBER  2023.                                                                3-10-23 12549 மா ஆனந்தமயி! – 1                                                                                     4-10-23 12551 மா ஆனந்தமயி! – 2                                                                                      5-10-23 12554  தெய்வீக மாயக் கண்ணாடி!                                                                   6-10-23 12557 ஶ்ரீ கௌடபாதர் – 1.                                                                                                 7-10-23 12561 ஶ்ரீ கௌடபாதர் – 2.                                                                                              8-10-23. 12564 முட்டாள்களின் உளறல்!                                                                                  9-10-23 12566 கந்தர் அலங்காரம் (அருணகிரிநாதர் அருளியது) கவின்    

                              மிகு சொற்றொடர்கள்          

10-10-23 12569 நள வெண்பா – கவின் மிகு சொற்றொடர்கள்                        11-10-23 12574 நாலடியார் – கவின் மிகு சொற்றொடர்கள் – (சமண

            முனிவர்கள் பலர் இயற்றியது)                                                           12-10-23  12578 மாறி வரும் சிகிச்சை முறைகள்!                                                           13-10-23 12582 மூதுரை – ஔவையார் இயற்றியது – கவின் மிகு

                                சொற்றொடர்கள்                                                                                                                             14-10-23 12585 இந்தியாவில் ஹிந்துக்களுக்கு சம உரிமை தேவை!                       15-10-23 12588 ஶ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி – (திருவரங்கத்தமுதனார்

                              அருளியது) – கவின் மிகு சொற்றொடர்கள்                                 16-10-23 12592 வியாஸர் யார்?                                                                                    17-10-23 12596 ஐந்திணை ஐம்பது – கவின் மிகு சொற்றொடர்கள்               18-10-23 12601 அயல் தேச சொத்து!                                  19-10-23 12605 திருமூலர் கண்ட தச நாதங்கள்!  20-10-23 12610 பார்த்தாலும் கேட்டாலும் தொட்டாலும் மகிழ்ச்சி தரும்

             தேவி! – சுபாஷிதம்                                    21-10-23 12615 காஷ்மீர் ஃபைல்ஸ்!                                                                                       22-10-23 12619 நந்திக் கலம்பகம் – கவின் மிகு சொற்ரொடர்கள்!                                                                                       23-10-23 12624 அருங்கலச் செப்பு – கவின் மிகு சொற்றொடர்கள்!             24-10-23 12628 பசுவைப் போற்றி வணங்கிய துகாராம்! (மகான்கள் வாழ்வில்)

25-10-23 12632 திருவெம்பாவை – கவின் மிகு சொற்கள்!                                  26-10-23 12636  துர்காதாஸின் விஸ்வாசம்! – ராஜஸ்தான் ஃபைல்ஸ்!          27-10-23 12640  அறநெறிச்சாரம் – கவின் மிகு சொற்கள்!            28-10-23 12643 நீதிநெறி விளக்கம் – (குமரகுருபர சுவாமிகள் இயற்றியது)  –      

                               கவின் மிகு சொற்றொடர்கள்                                                                29-10-23 12647  மாரதான் நம்பிக்கை – நடந்தவை தான் நம்புங்கள் பாகம்2

            அத்தியாயம் 8                                                                                              30-10-23 12652 வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!   முதல் பகுதி – மாலைமலர் 27-10-23 இதழில் வெளியான கட்டுரை        31-10-23 12656 வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்!
           இரண்டாம் பகுதி – மாலைமலர் 27-10-23 இதழில் வெளியான.         கட்டுரை

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 10 ( Post No.12,676)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,676

Date uploaded in London – –  –  5 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

SLOKAS 28

பர்த்ருஹரியின் நீதி சதகம் ஸ்லோகங்கள் 28,29,30

நீதி சதகத்தில் நூறு பாடல்கள் இருப்பதை அறிவோம். இதுவரை 27 பாடல்களை குறள் கீதை முதலிய நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். நமது அறிவு வேட்டையைத் தொடர்வோம்.

பாடல் 28

பரிவர்தினி ஸம்ஸாரம் ம்ருதஹ கோ வா ந ஜாயதே

ஸ ஜாதோ யேன ஜாதேன யாதி வம்சஹ ஸமுன்னதிம் –28

परिवर्तिनि संसारे
मृतः को वा न जायते ।
स जातो येन जातेन
याति वंशः समुन्नतिम् ॥ 1.28 ॥

நிலையற்ற இந்த உலகத்தில் யார் பிறப்பு- இறப்புச் சுழலில் விழவில்லை? ஒருவனுடைய குடும்பத்தின் செல்வ வளத்தையும் பெருமையையும் அதிகரிக்கும் பிறப்பே சிறந்தது.

28. In the ever-changing world, who does not attain birth or death? (Every one does.) He is (truly) said to be born, by whose birth his family attains eminence.

பிறப்பிறப்புப் சேர் குடும்பப் பேராழி  தன்னிற்

பிறந்தும் இறைவாப் பெரிய- திறைமுடையோன்

யாவெனெனிற் கீர்த்தி எவனாற்  குலமெல் லாம்

மேவு வவனாற் றென்று விளம்பு –28

பிராணிகளும், தாவரங்களும் இறக்கின்றன, பிறக்கின்றன. ஆனால் மனிதனுக்கும் அவைகளுக்கும் வேறுபாடு இல்லாவிடில் மனிதர்களும் அவைகளுடன் எண்ணப்படும். ஆகையால் வளத்தையும் நல்ல பெயரையும் சம்பாதிக்கும் வாழ்வே வாழ்வு ஏனையவை மிருக வாழ்வு.

இவை மேற்கூறிய பர்த்ருஹரியின் கருத்தை எதிரொலிக்கும்.

xxx

 SLOKAS 29

குஸுமஸ்தபகஸ்யேவ த்வயீ வ்ருத்திர் மனஸ்வினஹ

மூர்த்னிவா ஸர்வலோகஸ்ய சீர்யதே வன ஏவ வா –29

कुसुमस्तवकस्येव
द्वयी वृत्तिर्मनस्विनः ।
मूर्ध्नि वा सर्वलोकस्य
शीर्यते वन एव वा ॥ 1.29 ॥

பூங்கொத்து இருக்கிறது; அது காட்டிலும் இருக்கலாம்; அல்லது பெண்களின் தலையிலும் இருக்கலாம் இதே போலத்தான் ஒவ்வொருவருக்கும் இரண்டு நிலைகள் இருக்கின்றன.

29. A high-minded person has (only) two kinds of existence, like that of a bunch of flowers. Either they adorn the crest of all the world, or wither away  in wilderness.

பூவைப்போல் வல்ல புருஷன் தனக்கெவரும்

ஆவலாய்ச் சென்னியணி லாக்கலொன்று தாவிலா

மாவனத்திலேஇருந்து மட்கலொன்று வேறுவித

மாவதில்லை ஆவதில்லையாம் —29

பூங்கொத்து, பெண்களின் தலையை அலங்கரிக்கையில் சிறப்பு பெறும்; அதே பூங்கொத்து காட்டில் மலர்ந்து, யாரும் பார்க்காமல் உதிர்ந்தும் போவதுண்டு. ஆக புகழ் பெறுவதும் புகழ் இல்லாமல் வாழ்வதும் நம் கையில் இருக்கிறது.

வள்ளுவன் இந்த உவமையை வேறு ஒரு இடத்தில் பயன்படுத்துகிறான்.

வள்ளுவன் சொன்னான்:-

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

தான் படித்த விஷயத்தை அழகாக விளக்கத் தெரியாதவர்கள், மலர்ந்தும் மணம் வீசாத மலர்களுக்கு ஒப்பாவர்

நல்ல குலத்தில் பிறந்து அழகாக, இளமையுடன் தோன்றினாலும், படிக்கா விட்டால், வாசனை இல்லாத கிம்சுக (கல்யாண முருங்கைப் பூ போலத்தான்) மலர் போலவே இருப்பர்.

ரூப யௌவன சம்பன்னா விசால குல சம்பவா:

வித்யாஹீனா ந சோபந்தே நிர்கந்தா இவ கிம்சுகா:


xxxx

SLOKAS 30

சூரியனையும் சந்திரனையும் பாம்பு விழுங்குவது ஏன்?

செயற்கரிய  செயல் செய்தால்தான் பெருமை; இதை பர்த்ருஹரி அழகாக விளக்குகிறார்

ஸந்த்யன்யேஅபி ப்ருஹஸ்பதி ப்ரப்ருதயஹ ஸம்பாவிதாஹா பஞ்சஷா

ஸ்தான்ப்ரத்யேஷ விஷேஷ விக்ரமருசீ ராஹுர்ந வைராயதே

த்வாவேவ க்ரஸதே திவாகர நிசா ப்ராணேஸ்வரௌ பாஷ்யவரௌ

ப்ராதஹ பர்வணி பஸ்ய தானவபதிஹி சீர்ஷாவசேஷா க்ருதிஹி-30

வானத்தில் குரு போன்ற கிரஹங்கள் பிரகாசிக்கின்றன. ஆனால் ராஹு அவைக   ளை விழுங்குவதில்லை. கிரஹண காலத்தில் சூரியனையும் சந்திரனையும் அல்லவா ராஹு விழுங்குகிறான். இவ்வளவுக்கும் அவன் தலை மட்டும்தான் இருந்தது!

सन्त्यन्ये‌உपि बृहस्पतिप्रभृतयः सम्भाविताः पञ्चषास्
तान्प्रत्येष विशेषविक्रमरुची राहुर्न वैरायते ।
द्वावेव ग्रसते दिवाकरनिशाप्राणेश्वरौ भास्करौ
भ्रातः पर्वणि पश्य दानवपतिः शीर्षावशेषाकृतिः ॥ 1.30 ॥

30. O Brother! There are five or six other respected planets, such as Brhaspati, but Rahu, keen on (facing) superior valour, does not oppose them. He, the chief of Asuras, with only his head left in his body, eclipses only two of them, the Sun and the Moon (the Lords of day and night respectively), on the new moon and full moon days.

குரு முதலாம் ஐந்தாறு கோள்களிருந்தும்

கிருகணத்தில்  ராகு பெருங் கீர்த்தி மருவுதற்குச்

சூரியனையேதான் தொடர்ந்து பிடிக்கின்ற

காரியத்தைத் தேருங்கள் கண்டு – 30

இந்துக்களுக்கு ராஹு கேது ஆகிய இரண்டும் சாயா (shadows) கிரஹங்கள் (நிழல்கள்) என்பது தெரிந்தும், பாமர மக்களுக்குப் புரியவைப்பதற்காகவும், கிரஹண காலத்தில் சில செயல்களைச் செய்யக்கூடாது என்று எச்சரிக்கவும் சூரியனையோ, சந்திரனையோ ராஹு அல்லது கேது விழுங்குவதாகச் சொல்லுவர். உண்மையில் கிரஹண காலத்தில் , சூரியனோ சந்திரனோ பாம்பின் வாயில் போய்விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவது போலவே தோன்றும். மேலும் அமிர்தத்தைத் திருட முயன்ற ராஹு என்னும் பாம்பை விஷ்ணு வெட்டியதால் தலை மட்டுமே எஞ்சியதாகப் புராணக் கதைகள் புகலும். இதில் பர்த்ருஹரி உவமையாகக் காட்டி சொல்ல விழைவது என்ன வென்றால்,

பெரிய செயல்களைச் செய்தால்தான் புகழ். நோஞ்சானை அடித்துப் போட்டுவிட்டு பயில்வான் என்று பெயர் வாங்குவதில் பொருள் இல்லை.

செத்த பாம்பை அடித்துவிட்டு வீரன் என்று சொல்வதிலும் பொருள் இல்லை. ஆக செயற்கரிய செயலைச் செய்க.

இதை வள்ளுவனும் ஒரு குறளில் விளம்புவான்:-

நிலவரைநீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு –குறள் 234

ஒருவன் பூவுலகத்தில் புகழ் மணக்கும் செயல்களைச் செய்வானாகில், தேவலோகத்தில்  அவனுக்குத் தான் வரவேற்பு கிடைக்கும்; தேவர்களைப் போற்றமாட்டார்கள்.

–subham–

Tags-  Bhartruhari part10, Nitisataka part 10, Slokas , பர்த்ருஹரி, நீதி சதகம் ,ஸ்லோகங்கள் 28,29,30

ராவணன் குகை: இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள்-49 (Post 12,675)


RAVANA CAVES  AT ELLA IN SRI LANKA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,675

Date uploaded in London – –  –  5 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxx 

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 49 

இலங்கையிலுள்ள 52 ராமாயண ஸ்தலங்களில் ராவணன் தொடர்பான இடங்களைக்  காண்போம் .

நுவர எலியா காயத்ரி பீடம்

நுவரெலியா நகரில் சீதைஅம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக தரிசிக்க வேண்டிய இரண்டு இடங்கள், காயத்ரி தேவி மந்திரும் ஸ்ரீலங்காதீஸ்வரர் சிவன் கோவிலும் ஆகும். முருகேசு சித்தர் என்பவரின் சமாதியும் இங்கு உளது. அவர் ஜெர்மனி நாட்டிற்குக் கடத்திவரப்பட்ட நர்மதை நதிக்கரை பாணலிங்கங்களைக் கொண்டுவந்து இங்கே ஸ்தாபித்தார் . அவர் 2007-ம் ஆண்டில் சமாதி அடைந்தார். இந்தக் கோவில்கள் 1970 முதல் இருக்கின்றன. ராவணன் மகன் மேகநாதன், சிவனை வழிபட்ட இடம் இந்தப் பகுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை.

MANDODARI PALACE AND SITA BATHING GHAT STEPS

115.சீதா தேவி சிறை இருந்த அசோக வனம்

நுவரெலியாவில் சீதை அம்மன் கோவிலை முன்னொரு கட்டுரையில் தரிசித்தோம். அதன் அருகிலேயே தாவரவியல் பூங்கா இருக்கிறது ; இதுதான் ராமாயண காலத்தில் அசோக வனம் Ashoka Vatika Converted as a Botanic Gardens) இதன் பெயர் Hakgala Botanical Garden ஹக்கல தாவரவியல் பூங்கா; இங்கு 10,000 வகைத் தாவரங்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆர்க்கிட் மலர்களும் ORCHID FLOWERS ரோஜா மலர் வகைகளும் ஆகும் .

xxx

116.சீதா கொடுவா என்றால் சீதையின் கோட்டை. என்று பொருள்; இங்கு மண்டோதரி அரண்மனை இருந்ததாகவும் சீதையும் இங்கு சில காலம் சிறை வைக்கப்பட்டதாகவும் செவி வழிச் ‘செய்திகள் கூறுகின்றன. இது அடர்ந்த காட்டுக்குள் குருளுபோதா கிராமத்தில் இருக்கிறது. (Sita Kotuwa’ is situated in ‘Gurulupotha’ village in thick forest of ‘Uwa’ region of Sri Lanka. ‘Kotuwa’ means fort.) அடர்ந்த காட்டுக்குள் ஒன்றரை கி.மீ நடந்தால் இந்த இடத்தை அடையலாம் . அங்கே பெரிய, உயரமான கருங்கல் படிகளைக் காணலாம். சீதா தேவி தினமும் குளிப்பதற்கு இந்தப் படிகள் வழியாகத்தான் போவாளாம் . அடர்ந்த காட்டுக்குள் இப்படிப் படிகள் இருப்பதைப் பார்த்தால் இங்கே ஒரு பெரிய கட்டிடம்  இருந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

அரண்மனையின் உடைந்த தூண்களும், கற்களும் இருக்கின்றன .Gurulupotha’, there was a big palace of Ravana’s queen Maharani Mandodari.

ராவணன் வைத்திருந்த 18 விமானங்கள்

பரத்வாஜ முனிவர் எழுதிய வைமானிக சாஸ்திரம் இப்பொழுதும் ஸம்ஸ்க்ருதத்தில் கிடைக்கிறது . இதன் அடிப்படையில் ராவணன், 18 வகை விமானங்களை வைத்திருந்தான். அவைகளில் குபேரனிடமிருந்து பறித்த புஷ்பக விமானம் ஒன்று. அவனுடைய விமானங்கள் இறங்குவதற்காக ஆறு இடங்களில் விமான தளங்களை அமைத்திருந்தான் ; அவையாவன Veragantota வரகந்தோட , Thodupol Kanda தொடுபோல கண்ட , Ussangoda உஸ்ஸன்கோட்டை , Variyapola வரியபோல , Vatariyapolaவாதாரியபோல  and Gurulupotha குருளுமபோத  என்ற ஆறு விமான நிலையங்கள் ஆகும்.

xxx

SITA DEVI FIRE WALKING PLACE, BIG KEY TO SITA TEMPLE AT ELLA

117.சீதா தேவி அக்கினி பரீட்சை

சீதா தேவி தனது தூய்மையை நிரூபிக்க அக்னி பரீட்சை நடந்த இடம் ஒன்றும் இலங்கையில் உள்ளது . அங்கு இப்பொழுது புத்த விஹாரம் இருக்கிறது ( Buddhist temple built at the place where Sitamata went through Agni-pariksha, is named as ‘Divirumpola Rajmahaviharay’). அந்த விஹாரையின் பெயர்  திவிரும்போல ராஜ மஹா விஹாரை. அங்கு நிறைய புத்தர் சிலைகளும் சுவரில் ராமாயண ஓவியங்களும் உள்ளன. அவைகளைப் பார்க்க கட்டணம் உண்டு. அங்குள்ள புத்த பிட்சு ராமாயணக் கதைகளையும் ஆங்கிலத்தில் சொல்கிறார்

சின்மயா மிஷன் இலங்கையில் ராமாயணம் என்ற புஸ்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் நாம் அறியாத பல தகவல்கள் உள்ளன ( book published by Chinmaya Mission titled ‘Ramayana in Lanka’). இலங்கையிலுள்ள பெளத்தர்கள் Extremists தீவிரவாதிகள்; ஆதலால் ராமாயணத்தின் சுவடுகளை மறைத்துவிட்டனர் . இந்துக் கோவில்களுக்கு அருகில் புத்த விஹாரங்களைக் கட்டி, பழைய கோவில்களை இடம் தெரியாமல் செய்துவிட்டனர் .

அருகில் அஸ்வத்தத மரமும் சிறிய அறையும் உளது. அந்த இடத்தில் உள்ள சீதா தேவி சிலைகளையும் ஓவியங்களையும் சத்குரு அஞ்சலி காட்கில் பார்த்து வந்து பல தகவல்களைத் தெரிவித்தார் .சீதா தேவி அக்கினிக்குள் நுழையும் பெரிய உருவம் அங்கே இருக்கிறது.

சீதா தேவி அக்கினி பரீட்சை நடந்த சிறிய கோவில் அறைக்கு மிகப்பெரிய பூட்டும், மிகப்பெரிய சாவியும் உள்ளன

சீதா தேவி தீயில் புகுந்ததை நினைவு கூறும் வகையில் இன்று இந்தியா முழுவதும்இலங்கை முழுவதும், பூக்குழி இறங்கல்தீ மிதி விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த தீ மிதி வைபவத்தைத் துவக்கிவைத்தவள் சீதா தேவி. 5000 ஆண்டுகளாக இன்றும் தமிழர்கள் இதைச் செய்து வருகின்றனர்.

118. ராவணன் குகை, ராவணன் எல்லா / நீர்வீழ்ச்சி

எல்லா (Ella) என்னும் சிற்றூர்  நுவர எலியாவிலிருந்து ( ‘Nuwara Eliya’) 51 கி.மீ. தொலைவில் மலைப் பிராந்தியத்தில் இருக்கிறது. இந்த  ஊரை ராவணன் எல்லா என்றும் கூறுவார்கள். ஊரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் நீர்வீழ்ச்சி (எல்லா ) இருக்கிறது. அருகிலேயே ராவணன் குகையம் உளது

ராவணன் குகையின் நுழை வாயிலிலேயே பாறை வடிவமே கோர ராட்சத உருவத்தில் இருக்கிறது. குகைக்குள் சென்றாலும் அதே போல இராக்கத முகம் கொண்ட வடிவில் பாறைகள் இருக்கின்றன. குகைக்குள் சுரங்கப் பாதைகளும் உள்ளன. அவை வண்டிகள் செல்லும் அளவுக்குப் பெரிய சுரங்கப்பாதைகள். தமிழில் மயில்ராவணன் கோட்டை என்ற சொல் வழக்கு உண்டு. அதில் சென்றவர்கள் வழி தெரியாமல் திணறி அகப்பட்டுக் கொள்வார்களாம் . இதே போல கிரேக்க நாட்டிலும் இருந்தன அவைகளை மேஸ் MAZE என்பர்

ராவவன் கோட்டைக்குள் 200 மீட்டர் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. அரசாங்கமே பெரிய ராட்சத உருவத்தைக் காட்டி பெரிய பாறையையும்  வழியை அடைக்கும்படி வைத்ததுள்ளது . ஊர்மக்கள் சொல்லும் காரணம் உள்ளே விஷ ஜந்துக்களும் வௌவால்களும் வசிக்கின்றன என்பதாகும். சாதாரண மனிதர்கள் சென்றாலே மூச்சுத் திணறலும், வாந்தியும் ஏற்படும் ஒரு சூழ்நிலை.

ராவணன் பல உரு எடுக்க வல்லவன், மாயா ரூபம் உண்டாக்கி ஜாலங்கள் செய்பவன் என்று வால்மீகி எழுதியது  உண்மையே என்று இந்த குகைங்கள் நிரூபிக்கின்றன.

RAVANA ELLA (PICTURES ARE FROM JANA JAGRUTI WEBSITE; THANKS)

மேலும் காண்போம் .

TO BE CONTINUED……………………………..

TAGS- RAVANA CAVES, RAVANA ELLA, SITA ASOKA VANA, PART 49, SRI LANKAN TEMPLES, FIRE WALKING BY SITA, AGNI PAREEKSHA, ராவணன் குகை, ராவணன் எல்லா, நீர்வீழ்ச்சி

சம்ஸ்கிருத மொழியின் பெருமை!- 1 (Post No.12,674)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,674

Date uploaded in London –  –  5 November , 2023               

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சம்ஸ்கிருத மொழியின் பெருமை! – 1

ச.நாகராஜன்

பாரதீய பண்பாட்டிற்கான தேசீய மொழி சம்ஸ்கிருதம். அதில் இல்லாதது எதிலும் இல்லை.

கோடிக் கணக்கான நூல்களைக் கொண்ட ஞானப் பொக்கிஷம் சம்ஸ்கிருதம்.

உலகில் உள்ள மொழிகளில் மிக மிக அதிகமான சொற்களைக் கொண்ட ஒரே மொழி சம்ஸ்கிருதமே.

102078 கோடியே 50 லட்சம் வார்த்தைகள் சம்ஸ்கிருத மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றை கணினிப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்த ஆரம்பித்தால் இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு இவற்றைப் பயன்படுத்த முடியும்.

மற்ற மொழிகளை விட குறைந்த வார்த்தைகளை வைத்து ஒரு வாக்கியத்தை அமைத்து, சொல்ல வந்த கருத்தை இந்த மொழியில் மட்டுமே சொல்ல முடியும்.

அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகமே சம்ஸ்கிருதத்திற்காக உள்ளது.

ஃபோர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் படி (Forbes July 1987) சம்ஸ்கிருதமே கணினிப் பயன்பாட்டிற்கு உகந்த மொழியாகும்.

திருத்தப்பட்ட செம்மொழி சம்ஸ்கிருதம். நாஸா சம்ஸ்கிருதத்தைப் பற்றிக் கூறுகையில், “Only unambigouous spoken language on the planet” – நேரடியாகப் பொருள் விளக்கம் தரும்படி பூமியில் பேசப்படும் ஒரே மொழி சம்ஸ்கிருதமே – என்று கூறுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் சம்ஸ்கிருதமே அதிகாரபூர்வமான அங்கீகரிக்கப்பட்ட மொழியாகத் திகழ்கிறது.

சம்ஸ்கிருத மொழியின் அடிப்படையில் ஆறாவது மற்றும் ஏழாவது தலைமுறை சூப்பர் கணினிகள் அமெரிக்காவில் உருவாக்கப்படுவதாக நாஸா அறிவித்துள்ளது.

ஆறாவது தலைமுறை கணினி உருவாக்கத்திற்கான இலக்கு 2025ஆம் ஆண்டு என்றும், ஏழாவது தலைமுறை கணினி உருவாக்கத்திற்கான இலக்கு 2034 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு இலக்கையும் எட்டிய நிலையில் உலகெங்கும் சம்ஸ்கிருதம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பெருமளவில் உருவாகும்.

மிக மேம்பட்ட விஞ்ஞான நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இவை வேதங்கள், உபநிடதங்கள், ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள், மஹாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட நூல்களாகும். நாஸா 60000 சுவடிகளைக் கொண்டுள்ளது. (Reference : Russian State University, NASA etc. NASA posseses 60,000 palm leaf manuscripts, which they are studying).

சம்ஸ்கிருதம் கற்பதால் மூளைத் திறன் கூடுகிறது. இதைக் கற்கும் மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர்.

லண்டனில் உள்ள ஜேம்ஸ் ஜூனியர் ஸ்கூல், சம்ஸ்கிருதம் கற்பதை கட்டாயமாக ஆக்கியுள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் முதல் இடத்தை ஆண்டுதோறும் பிடிக்கின்றனர்.

இதைப் பின்பற்றி அயர்லாந்திலும் இப்போது சம்ஸ்கிருதம் பயில்விக்கப்பட்டு வருகிறது.

சம்ஸ்கிருதத்தைப் பேசும் போதும் படிக்கும் போதும் உடலில் உள்ள ஆற்றல் புள்ளிகள் செயல்படுத்தப்படுகிறது.  இதனால் மன அழுத்தம் குறைகிறது. வியாதிகள் வருவது தடுக்கப்படுகிறது. ஆற்றல் கூடுகிறது. மனம் சாந்த நிலையை அடைகிறது.

நாக்கில் உள்ள அனைத்து நரம்புகளையும் பயன்படுத்த வைப்பது சம்ஸ்கிருத மொழி ஒன்றே தான். அதைப் பேசும் போது ஆற்றல் புள்ளிகள் ஊக்குவிக்கப்படவே இரத்த ஓட்டம் சீர்படுகிறது.

இரத்த அழுத்தம், டயபடீஸ், கொலஸ்ட்ரால் மிகுதி உள்ளிட்டவை கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன, (ஆதாரம் அமெரிக்கன் ஹிந்து யுனிவர்ஸ்டியின் தொடர் ஆராய்ச்சி முடிவுகள்)

இது வெறும் மொழி மட்டுமல்ல. மனித சிந்தனைக்கும் ஆன்மாவுக்கும் பாலமாக செயல் படும் ஒன்று. பௌதிகத்திற்கும் உளவியலுக்கும்; பரு உடலுக்கும் நுண்ணுடலுக்கும்; கலைக்கும் பண்பாட்டிற்கும்; இயற்கைக்கும் அதைப் படைத்தவனுக்கும்;  படைக்கப்பட்ட அனைத்திற்கும் அதைப் படைத்தவனுக்கும் இடையிலான ஒரு மொழியாகத் திகழ்கிறது. 

உலகின் தலையான மதங்களான ஹிந்து மதம், புத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றிற்கான அறிவு சால் மொழியாக சம்ஸ்கிருதம் விளங்குகிறது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

(புத்த மதத்தில் பாலி மொழியுடன் கூட; ஜைன மதத்தில் ப்ராக்ருத மொழியுடன் கூட)

உலகின் நாட்காட்டியில் (காலண்டரில்) சிறந்து விளங்குவது

(சம்ஸ்கிருதத்தில் அமைக்கப்பட்டுள்ள) ஹிந்து நாட்காட்டியே. ஏனெனில் இது நிலவியலின் படி சூரிய மண்டல இயக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. (ஆதாரம் ஜெர்மன் ஸ்டேட் யுனிவர்ஸிடி).

 ஹிந்து ஶ்ரீ சக்ர அமைப்பை ஒட்டி பாதுகாப்பு அமைப்பு ஒன்றை இங்கிலாந்து இப்போது ஆராய்ச்சி செய்து வருகிறது.

 சான்ஸ்கிரிட் எஃபெக்ட் – SANSKRIT EFFECT –  இந்த வார்த்தை நியூரோ விஞ்ஞானியான ஜேம்ஸ் ஹார்ட்ஸெல் என்பவரால் (NEURO-SCIENTIST JAMES HARTZELL) உருவாக்கப்பட்டது. வேத மந்திரங்களை ஓதி மனனம் செய்வதன் மூலம் மூளையில், மூளைச் செயல்பாட்டில் நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவுத்திறனுக்கான பகுதிகள் பெரிதாக ஆகின்றன. இதுவே சான்ஸ்கிரிட் எஃபெக்ட்.

 இன்னும் இது போன்ற ஏராளமாம சிறப்புகள் சம்ஸ்கிருத மொழியில் உள்ளன.

அதை அடுத்துப் பார்ப்போம்.

                                      ***********************************

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 9 (Post No.12,673)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,673

Date uploaded in London – –  –  4 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

SLOKA 25

क्षुत्क्षामो‌உपि जराकृशो‌உपि शिथिलप्राणो‌உपि कष्टां दशाम्
आपन्नो‌உपि विपन्नदीधितिरिति प्राणेषु नश्यत्स्वपि ।
मत्तेभेन्द्रविभिन्नकुम्भपिशितग्रासैकबद्धस्पृहः
किं जीर्णं तृणम् अत्ति मानमहताम् अग्रेसरः केसरी ॥ 1.25 ॥

சிங்கம் புல்லைத் தின்னுமா?

க்ஷுத்க்ஷாமோஅபி ஜராக்ருசோபி சிதிலப்ராணோபி கஷ்டாம் தசா

மாபன்னோபி விபன்னதீதிரபிப்ராணேஷு நஸ்யஸ்வபி

மத்தேபேந்த்ர விபின்னகும்பபிசிதக்ராஸைகபத்தஸ்ப்ருஹஹ

கிம் ஜீர்ணம் த்ருணமத்தி மானமஹதாமக்ரேஸரஹ கேஸரீ 1-25

சிங்கத்துக்கு பசியால் வாட்டம்ஆனால் கிழடுஉடலில் பலம் குன்றிவிட்டதுஉடல் ஊனம்பலஹீனம்மனத் தளர்ச்சிகாம்பீர்யம் போய் மரணப் படுக்கையில் இருந்தாலும் மதம்பிடித்த யானையின் மீது பாய்ந்து அதை உண்ணவே எண்ணும். அப்பேற்பட்டவர்களே மஹத்தான சாதனையாளர். சிங்கம் என்றாவது புல்லைத் தின்னுமா?  

சிங்கம் பசித்தாலும் தீரவிளைத் தோய்ந்தாலும்

மங்கியுடல் வாடி மடிந்தாலும் — பொங்குமத  யானையையே

கொல்லவெண்ணும்  அன்றி யுலர் வைக்கோலைத்

தீனியென தின்னுமோ சென்று – 25

25. Even when weak with hunger, thin due to old age, largely unsteady and in a pitiable condition, with his lustre and vitality lost, will the lion, foremost among the proud and great, eat dry grass? His desire is fixed on devouring mouthfuls from the crown of a rutting elephant split open (by himself.)–25

Xxx

SLOKA 26

स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसम् अप्यस्थि गोः
श्वा लब्ध्वा परितोषम् एति न तु तत्तस्य क्षुधाशान्तये ।
सिंहो जम्बुकम् अङ्कम् आगतम् अपि त्यक्त्वा निहन्ति द्विपं
सर्वः कृच्छ्रगतो‌உपि वाञ्छन्ति जनः सत्त्वानुरूपं फलम् ॥ 26

 ஸ்வல்பஸ்னாயுவஸாவ சேஷமலினம் நிர்மாம்ஸமப்யஸ்திகோஹோ

ஸ்வா லப்த்வா பரிதோஷமேதி ந ச தத்தஸ்ய  க்ஷுதாசாந்தயே

ஸிம்ஹோ ஜம்புகமங்கமாகதமபி  த்யக்த்வா நிஹந்தி த்விபம்

ஸர்வஹ க்ருச்ரகதோபி வாஞ்சந்தி ஜனஹ ஸத்வானுரூபம் பலம் 1-26

சதைப்பற்று இல்லாத எலும்பைக் கண்டாலும் நாய் சந்தோஷப்படும்ஆயினும் அது அதன் பசியைத் தீர்க்காது. சிங்கமோ தன் பிடியில் ஒரு முயலே சிக்கினாலும் அதை விட்டுவிட்டு பலம் பொருந்திய யானையயே கொல்ல விழையும். பெரியவர்கள் தங்கள் பெருமைக்கேற்ற செயலைச் செய்தே குறிக்கோளை அடைவர்.

 சாரமிலா வெள்ளெலும்பைத் தான் கண்டு சந்தோஷம்

கூரு நாய் கொண்டதனால் பசிதீராது

சேர நரி வாழ்ந்தாலும் சிங்கம் அதைவிட்டுத்

தூரவன  மதனில்  தூங்கும் மதயானைதனைக் 

கோர நகத்தால் கொல்லும்  அது போல ,

பார வறுமைபல பாய்ந்தாலும் மாந்தர் தந்

தார தம்மியப் படி தக்க பலன் வேட்பதன்றி

ஆற வேறொன்றை எண்ணார் –26

A dog gets satisfaction with a small bone, with a little fat and muscle on it, even if it is fleshless and not enough to satiate its hunger. A lion rejects a jackal available at hand, and kills an elephant. Everyone desires a goal matching his strength, even if he has to go through difficulty.–26

கோப்பெருஞ்சோழன் செப்புவது 1-26

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்…………….

–புறம் 214, கோப்பெருஞ்சோழன்

யானை வேட்டைக்குப் போனவன் யானையை பெறலாம். ஆனால் குறும்பூழ் பறவையைப் பிடிக்கப் போனவன் வெறும் கையுடனும் வரக்கூடும்; ஆகையால் உயர்ந்த குறிக்கோளுடன் செல்க.

Xxxxx

SLOKA 27

लाङ्गूलचालनम् अधश्चरणावपातं
भूमौ निपत्य वदनोदरदर्शनं च ।
श्वा पिण्डदस्य कुरुते गजपुङ्गवस्तु
धीरं विलोकयति चाटुशतैश्च भुङ्क्ते ॥ 27॥

லாங்கூலசாலநமதஸ்சரணாவபாதம்

பூமௌ நிபத்ய வதனோதரதர்சனம் ச

ஸ்வாபிண்டதஸ்ய  குருதே கஜபுங்கவஸ்து

தீரம் விலோகயதி சாடுசதைஸ்ச புங்தே- 27

நாய் வாலை ஆட்டும்எவன் ரொட்டித் துண்டுபோட்டாலும் அவன் காலடியில் விழும். அது கீழே புரண்டு வயிற்றையும் வாயையும் காட்டி மேலும் உணவு பெற முயலும். ஆனால் பெரிய பலம் மிக்க யானையோ இனிமையான வார்த்தைகள் சொல்லி அழைத்தாலும்கூட உணவைப் பற்றி கவலைப்படுவதுமில்லைஅதை ஏற்பதுமில்லை.–27

கவள மிடுகின்றவனைக்  காணு நாய்  வாலைத்

துவள மிக வாட்டுந் துள்ளுந் தவள நிறப்

பல்லைவயிற்றைக்காட்டும் – பார்மேல் விழுமெழும்

எல்லையிலா ஏழ்மை இயற்றுமே – சொல்லரிய

யானை மதங்கொண்டதனால் யாரையு ம் பாராமலே

மான முடன் வீரமுடன் மாவோட்டி தானளிக்கும்

பெருங்கவலளந் தின்று பெருமையாய் வாழும்

இரும் புவியின் தன்மை இது  — 27

27. A dog wags his tail, falls at his feet and rolls on the ground displaying its maw, to its feeder. A majestic elephant looks calmly (at the feeder) and eats only after many persuasive words.–27

xxxx

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

வள்ளவனும் கண்ணனும் புகல்வது யாதெனின்

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596

உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.

xxxxx   subham   xxx

tags—Bhartruhari, 4 languages, part 9

விபீஷணன் கோவில்-இலங்கைத் தீவின் 108 ஆலயங்கள்- Part 48 (Post No.12,672)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,672

Date uploaded in London – –  –  4 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 48

இலங்கையிலுள்ள 52 ராமாயண ஸ்தலங்களில் மேலும் சில முக்கியமானவற்றைக் காண்போம் .

111.விபீஷணன் கோவில் VIBHISHANA DEVALAYA, Kelaniya

உலகிலேயே முதல் முதலில் வெளிநாட்டு அரசாங்கத்தை (FIRST EXILE GOVERNMENT IN THE WORLD) அறிவித்தது இந்துக்கள்தான். ராவணன் தம்பி விபீஷணனை  ராமபிரான், இலங்கை மன்னனாக அறிவித்து இந்தியாவில் முடி சூட்டினார் . இதை ஆங்கிலத்தில் exile government எக்ஸைல் கவர்மெண்ட் என்பார்கள். விபீஷணனுக்கு ராமேஸ்வரத்திலும்  இலங்கையிலும் கோவில்கள் உள்ளன. ராவண வதத்துக்கு முன்னதாகவே இலங்கை மன்னனனாக விபீஷணனுக்கு ராமர் முடிசூட்டினார்.)

கொழும்பு நகரிலிருந்து 5 மைல் தொலைவில் களனிய என்ற இடம் இருக்கிறது ; இங்கு களனி கங்கை நதி ஓடுகிறது. இதன் கரையில்  விபீஷணனுக்குக்  கோவில்  கட்டப்பட்டுள்ள்ளது. இலங்கை முழுவதும் நதிகளை கங்கை என்ற பெயருடன் அழைப்பதைக் கவனிக்க வேண்டும். இந்து இலங்கை பின்னர் புத்த மத இலங்கையாக மாறியதற்கு இவை எல்லாம் சான்று.

(ராமேஸ்வரம் – தனுஷ்கோடி செல்லும் சாலையில் ராமேஸ்வரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் கோதண்டராமர் கோவில் இருக்கிறது ; அங்கு ராமபிரானை விபீஷணன் வணங்கும் கோலத்தில் இருப்பதைக் காணலாம்) .

களனியா என்னும் இடத்தில் இப்பொழுது புத்த விஹாரமும் இருக்கிறது. இதன் பழைய பெயர் கல்யாணி. பழைய கல்யாணி 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரலைத் தாக்குதலில் கடலுக்குள் சென்றுவிட்டது பின்னர் களனிய  தலை நகர் ஆனது. 

ராவண வதததுக்குப் பின்னர் இங்கு விபீஷணன் முறையாகப் பட்டம் சூட்டிக்கொண்டு ஆட்சி செய்ததால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆண்ட மன்னன், இன்று விபீஷணனுக்கு கோவிலை எழுப்பினான்

களனி விஹாரையில் முன்வாசல் தோரணத்தைக் கடந்ததும் வலது பக்கம் ஓர் சிறிய கட்டிடம் காணப்படுகிறது. இதுவே  விபீஷணன் கோயிலாகும். இங்கு கப்புறாளைகள் பூஜைகளை செய்து வருகின்றனர். பெளத்தர்களும் வணங்கிச் செல்கிறார்கள் .

விபீஷணன் கோவிலை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர்  போச்சுகீசிய மத வெறியர்கள்  இடித்துத்  தரைமட்டமாகினார்கள் .விக்கிரகங்களை  ஆற்றில் வீசினார்கள். 1767 இல் கண்டியை ஆட்சி செய்த கீர்த்தி ஶ்ரீ ராஜசிங்க மன்னன்,   களனி விபீஷணன் கோவிலையும் , பெளத்த  விஹாரையையும் மீண்டும் கட்டினார்  .

12–ம் நூற்றாண்டு முதல் கோவில் பற்றிய செய்திகள், நூல்கள் மூலம் கிடைக்கின்றன. அண்மைக் காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. கோவில் தூண்கள் , சுவரிலுள்ள சிற்பங்கள் முதலியவற்றில் இந்து மத செல்வாக்கைக்   காணலாம்

ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் இலங்கையில் ராவணனுக்கு கோவில் கிடையாது. ஆனால் பல இடங்களில் விபீஷணன் கோவில்கள் இருக்கின்றன. மேலும் இளநகையைக் காக்கும் 4  காவல் தெய்வங்களில் விபீஷணன் பெயர்தான் உள்ளது. ராமாயண தர்மத்தை புராதன இலங்கை நூலிழை பிசகாமல் கடைப்பிடித்தது . விபீஷணன் ஒரு நியாய வாதி என்பதால், பல குடும்ப , சமூக பிணக்குகளைத் தீர்ப்பதற்காக சிங்கள மக்கள் விபீஷண பகவானுக்கு நேர்த்திக் கடனும் வேண்டிக்கொள்கின்றனர்

ராம பிரான், , 14 ஆண்டு முடியும் தருவாயில் , பரதனைக் காப்பாற்றுவதற்காக நந்திக்கிராமத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக விரைந்து சென்றார் என்றும் அதனால் விபீஷண னுக்கு  பட்டாபிஷேகம் செய்யும் பொறுப்பு லட்சுமணனிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் கதை போகிறது. ஆகையால் இங்கு அதைக்காட்டும் சிலைகளும் பெரிய ஓவியங்களும் உள்ளன .

அருகில் குருகுலாவ என்ற இடமும் இருக்கிறது. இது, ராமர் அனுப்பிய குரு , புரோகிதர், பிராமணர்கள் தங்கி குருகுலம் நடத்திய இடம் ஆகும்  .

Xxxx

112. சஞ்சீவி மலையின் ஐந்து துண்டுகள்

ராமாயண ஸ்தலங்கள் 52–ல் மூலிகை மலையான சஞ்சீவி  மலையின் ஐந்து துண்டுகள் விழுந்த 5 இடங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்துடன் வில்லூண்டி தீர்த்தம்கன்னியா வெந்நீர் ஊற்றுகள் ஆகியவற்றையும் சேர்த்தால்  7 இடங்களுக்கு  கணக்கு  கிடைத்து விடும் . அவைகளையும் சுருக்கமாகக் காண்போம்..

ராமனும் ராவணனும் கடும் போரிட்டனர் . அதில் லெட்சுமணன் மூர்ச்சை அடைந்தவுடன் அவனுக்கு மரணம்  சம்பவிக்காமல் இருக்க சஞ்சீவினி என்ற மூலிகை தேவைப்பட்டது.ஆயுர்வேத சிகிச்சையை நன்கு அறிந்த அனுமன், அந்த மூலிகைகக்காக இமய மலைக்குச் சென்றான். குறிப்பிட்ட மூலிகையைக் கண்டு பிடிக்க அவகாசம் இல்லை; இது URGENT MATTER அர்ஜென்ட் மேட்டர்; பெரிய எமர்ஜென்சி EMERGENCY என்பதால் மலையையே தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ் AMBULANCE வேகத்தில் பறந்து வந்தான். அப்பொழுது ஐந்து இடங்களில் அதன் துண்டுகள் விழுந்தன. அவையாவன :– தொளு கண்ட (குருநாகல ), ரீதிகல , ருமசால (ராம சைலம் )மலை , கச்சத் தீவு, தள்ளாடி (மன்னார் )

There are 5 Sanjeevani Mountains in Sri Lanka namely, Dolukanda (Kurunegala) / Ritigala Nature Reserve (Habarana) / Rumassala Mountain (Galle) / Kachchativu island (Jaffna) / Thalladi (Mannar)

Xxxx

113. இரண்டு ஊற்றுகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள வில்லூண்டி தீர்த்தம் இராமாயண ஸ்தலங்களில் ஒன்றாகும்  ராமேஸ்வரம்- தங்கச்சி மடம் அருகில் கடலுக்கு நடுவில் உள்ள தூய நீர் வில்லூன்றித் தீர்த்தம் போலவே இதுவும் ஒரு அதிசய ஊற்று. யாழ்ப்பாண நகரின் மத்தியில் உள்ளது .. ராமர் படையின் தாகத் தைத் தீர்ப்பதற்காக ராமர் தனது வில்லினால் எய்த அம்பில் பொங்கிய ஊற்று இது.  இப்போது 100 x 100 அடி குளமாக இருக்கிறது. பூமியிலுள்ள ஊற்றுகளில் இருந்து நீர் சுரக்கிறது

கன்னியா நீர் ஊற்றுகள்

நான் செப்டம்பர் மாதம் (2023) இலங்கை சென்றபோது 100 ரூபாய் கொடுத்து ஆர்வத்தோடு டிக்கெட் வாங்கினேன். அதில் உண்மையை மறைத்து , ராமர் பெயரை அடியோடு மறைத்து இது அனுராதபுர காலத்திலிருந்து இருந்துவரும் புத்த மத தலம்  என்று அடித்த டிக்கெட்டைக் கொடுத்தனர். இது தொல்லியல் துறையின் சார்பில் அச்சிடப் பட்டுள்ளது.

இங்கு 7 ஊற்றுக்கள் இருக்கின்றன . இதுவும் ராமபிரானால் உண்டாக்கப்பட்டது என்பது ஐதீகம். அருகிலுள்ள இந்துக் கோவிலை சர்ச்சை- வழக்கு காரணமாக மூடி வைத்துள்ளனர்

இந்த வெந்நீர் ஊற்றுகளில் வெவ்வேறு வெப்ப நிலையில் நீர் வருவது ஒரு அதிசயம்தான் .

இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை இப்படி அதிசய ஊற்றுகள் இருக்கின்றன. அத்தனையும் இறைவன் சம்பந்தப்பட்டதே.  ஆகையால் கன்னியா வெந்நீர் ஊற்றுகளும்  ராம பகவானுடன் தொடர்புடையன என்று சொல்லுவதில் பொருள் உண்டு 107 டிகிரி முதல் 86 டிகிரி வரை வெப்பம் இருப்பதும் அந்த நீரில் நோய் தீர்க்கும் ரசாயன உப்புக்கள் இருப்பதும் ஆராய்சசியில் தெரிய வந்துள்ளது. நான் சென்ற போது ஆண்களும் பெண்களும் குளித்துக் கொண்டிருந்தனர். வெளியே வரும் வழி நெடுகிலும் கடைகள். அங்கு பல மூலிகைகளும் விற்கப்பட்டன.

Xxxxx

யாழ்ப்பாணம் முதல் கண்டி /கதிர்காமம் வரை ராமர் பெயர் கொடி கட்டிப் பறக்கிறது . மன்னார் அருகில் ராமர் அமைத்த  ராமர் சேது பாலமும் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது  அதுவும் 52 புனித இடங்களில் ஒன்று .

114. ராம சேது (சிங்களத் தீவினுக்கோர் பாலம்)

இதுவும் 52 புனித ஸ்தலங்களில் ஒன்று.

ராமர் கட்டிய பாலத்தை நாஸா NASA விண்வெளி புகைப்படங்களும்  உறுதி செய்கின்றன . இதை மக்கள் பயன்படுத்தும், இந்தியா- இலங்கை கடல் பாலமாக மாற்றவேண்டும் INDIA- SRI LANKA SEA BRIDGE  . பாரதியார் சொன்ன ஆரூடங்களில் இன்னும் இரண்டு பலிதமாகவில்லை.

சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் என்று பாடினார் பாரதி. ஆகையால் பங்களா தேஷ், பாகிஸ்தான் என்ற எல்லைகள் மறைந்து அகண்ட பாரதம் உருவாவது சத்தியமான உண்மை.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

என்று பாடியதால் பாலம் அமைந்ததே தீரும் என்று  11 September  2015 கட்டுரையில் இதே பிளாக் BLOG கில் எழுதியுள்ளேன்

இந்தியா- இலங்கை ரயில்வே மற்றும் சாலைப் பாலம் அமைந்தே தீரும் .

மேலும் பல ராமாயண ஸ்தலங்களை அடுத்ததாகக் காண்போம்

தொடரும்…………………………………

Tags – இலங்கை, ராமாயண , தலங்கள் , 52, பகுதி 48, புனித ஆலயங்கள் , விபீஷணன், கோவில் சிங்களத் தீவினுக்கோர் பாலம்