எல்லா ஜாதியினரும் சந்தியாவந்தனம்   செய்யலாம்- PART 2 (Post No.12,691)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,691

Date uploaded in London – –  –  9 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

PART ONE WAS POSTED YESTERDAY

4. பிராமண ராவணன் சந்தியா வந்தனம்

ராவணன் பிறப்பால் 50 % பிராமணன். குணத்தால் 100 % ராக்ஷஸன்; பிராமணனைக் கொன்றதால் ராமனை பிரம்மஹத்தி  பாபம் பீடித்ததால் ராமபிரான் ராமேஸ்வரம் உள்பட 4 இடங்களில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதை எல்லோரும் அறிவார்கள் . ராவணனின் தாயார் ராக்ஷஸி;  தந்தை பிராமணன்; இதனால் ராவணன் சிவ பூஜை, சந்தியாவந்தனம் ஆகியவற்றில் குறை வைக்கவில்லை. அவன் சிவனிடமிருந்து ஆத்ம லிங்கத்தைப் பெற்றும் அதை நினைத்த இடத்துக்குக் கொண்டுபோக இயலவில்லை; காலைக் கடன்களுக்காக வு ம் , சந்தியா வந்தனத்துக்காகவும் அவன் சிவலிங்ககத்தைக் கீழே வைத்தவுடன் அது அங்கேயே நிறுவப்பட்டது . ராவணன் , இவ்வாறு சந்தியா வந்தனம் செய்த பல குறிப்புகள் ராமாயணத்தில் உள்ளன.

ஆத்மலிங்கத்தை அவன் கொண்டுபோகக்கூடாது என்பதற்காக விஷ்ணு பகவானும் தந்திரம் செய்தார். திடீரென்று மேகங்களை உண்டாக்கி மாலைப்பொழுது போல ஆகாயத்தை மாற்றினார். மாலை சந்தியாவந்தன நேரம் வந்துவிட்டதென்று மயங்கிய ராவணன் , அங்கிருந்த இடைச் சிறுவன் ஒருவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்து , டேய் பையா ! கீழே வைத்துவிடாதே ! இதோ சந்தியா வந்தனம் செய்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப்போன ராவணன் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இடையனும்  லிங்கத்தைக் கீழே வைத்துவிட்டுக் காத்திருந்தான் ; லிங்கத்தைக் கொடுத்த சிவ பிரான் ஒரு கண்டிஷன்/ CONDITION நிபந்தனை விதித்தித்திருந்தார் ; எங்கேயாவது கீழே வைத்தால் அதை எடுக்க முடியாதென்றார். இதை நினைத்த ராவணனுக்கு கோபம் வந்து இடைச் சிறுவனை அடித்தார்; அவன் விநாயகர் ரூபத்தில் தோன்றி, மகனே நீ இங்கேயே பூஜை செய் என்னு சொல்லிவிட்டுப் போனார். ராவணனுக்கு சிவ பெருமானின் லீலைகள் புரிந்தன.

5. குரங்கு அரசன் வாலி சந்தியா வந்தனம்

வாலி, சுக்ரீவன், அனுமன் ஆகியோர் குரங்கு அடையாளம் அணியும் பழங்குடி மக்கள்; நாம் தற்காலத்தில் உடலில் பச்சை குத்திக்கொள்வது போலவும், ஆப்பிரிக்க, தென் அமெரிக்க பழங்குடி மக்கள் உடலில் ஒரு அங்கத்தினை சிதைத்து க்கொள்வது போலவும் குரங்கினை அடையாளமாகக் கொண்ட மனிதர்கள் அவர்கள். குணமும் குரங்கு போல சட்ட திட்டம் இல்லாத வாழ்க்கையினை உடையவர்கள். இதே காலத்தில் கரடி அடையாளம் உடைய ஜாம்பவான், கழுகு அடையாளம் உடைய ஜடாயூ ஆகியோரும் வாழ்ந்தனர். ரிக் வேத ரிஷிகளின் பெயர்களும் பாரத்வாஜ (காகம்)கெளசிக (ஆந்தை) பிராணிகளின் பெயராகவே இருக்கும். இவை அவர்கள் ஒவ்வொருவரும் வைத்துக்கொண்ட அடையாளப் பெயர்கள்; ஆங்கிலத்தில் TOTEM SYMBOLS டோ ட்டம் சிம்பல் என்பர்; இதே போல மஹாபாரதத்தில் வரும் பாம்பு யக்ஞம் (பரீட்சித் சம்பவம்) , தவளை படுகொலை ஆகியன உண்மையில் பாம்போ தவளையோ அல்ல; அந்த இன மக்களுடன் நடந்த போர்கள் அவை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயண, மஹாபாரதம் நடந்ததால் உபன்யாசகர்கள் அவற்றின் சுவையைக் கூட்டுவதற்காக குரங்கு, பாம்பு என்று சொல்லிவிட்டனர் ராமாயண, மஹாபாரத நூல்களை  விஞ்ஞான அணுகு முறையில் படித்துப் பார்த்ததால் அவர்கள் மனிதர்கள்தான், பிராணிகள் அல்ல என்பது நன்கு விளங்கும். அனுமனை நவ வியாகரண பண்டிதன் என்று வால்மீகி , கம்பன் ஆகியோர் போற்றுவதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.. இந்தப் பின்னணியில் வாலி என்ற மன்னனின் சந்தியா வந்தனத்தைப் படிக்க வேண்டும்  .

வாலி , கிஷ்கிந்தா என்னும் நாட்டின் மன்னன்; தற்காலத்தில் கர்நாடகத்தில் இருக்கும் ஹம்பி HAMPI என்னும் இடம் கிஷ்கிந்தை என்று பலரும், திருப்பதியில் உள்ள அஞ்சனாத்ரி மலை என்று  சிலரும் சொல்கிறார்கள் . அதை ஆண்டு வந்த வாலி, மூன்று சமுத்திரக் கரையில் சந்தியா வந்தனம் செய்தான் என்றும் அப்போது இராவணன் அவனைத்  தாக்கவே அபார சக்தி படைத்த வாலி, அவனைப் பந்தாடினான் என்றும் படிக்கிறோம்; அது முதல் வாலியுடன் ராவணன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவனிடம் வம்பு செய்யாமல் இருந்தான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது வாலியின் சந்தியா வந்தனம். நமக்கு புராண இதிகாசங்களை விட்டுச் சென்ற முன்னோர்கள் ஆங்காங்கே  இப்படி சந்தியா வந்தனம் பற்றியும் குறிப்பாகச் சொல்லுவது அதன் முக்கியத்தைக் கோடிட்டுக்காட்டவே (Underline) என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

(என்னுடைய யாதவ ஜாதி  நண்பர் ஒருவர் பூணூல் அணிந்து காயத்ரீ சொல்லி வருகிறார்; சத்ய சாய் பாபாவின் பல லட்சம் பக்தர்கள், காயத்ரீ மந்திரத்தை தினமும் ஜபிக்கின்றனர் ; கீழ் ஜாதி பக்தர்  ஒருவருக்கு பாரதியார் பூணூல் போட்ட கதை எல்லோருக்கும் தெரியும் சந்தியா வந்தனம் என்பதே காயத்ரீ மந்திரத்தை தினமும் சொல்லுவதற்காக உண்டாக்கப்பட்டதுதான் ; குறித்த நேரத்தில் அதை அனுஷ்டிக்க வேண்டுமென்பதற்காக சூரியனையும் அத்துடன் இணைத்துவிட்டனர்.)

7. சீதா தேவி சந்தியா வந்தனம்

இலங்கையில் சீதா தேவியைக் கண்டுபிடிக்க  மூலை, முடுக்கெல்லாம் அனுமன் தேடிக்கொண்டிருந்தான் ; அசோக வனத்தை அடைந்த பொழுது சூரியோதய நேரம் வந்துவிட்டது. அசோக வனத்தின் அருகில் இன்றும் ஆறு RIVER ஓடுகிறது . ஒருவேளை சீதாதேவி இங்கிருந்தால் சந்தியா வந்தனம் செய்ய இங்கே வருவாள் என்று மரத்தின் மீது அமர்ந்து காத்திருந்தார் ஆஞ்சனேயர் (அனுமன்). அங்கு வந்தவள் சீதைதான் என்று அவரால் அடையாளம் காண முடிந்தது . ஏனெனில் சீதை கடத்தப்பட்டதை ஏற்கனவே பல வானரங்கள் பார்த்து இருந்தன ; சீதையைத் தேடப்போன அனுமனுக்கு எல்லா தகவல்களும் தெரியும் (சீதை தூக்கி எறிந்த நகைகளை குரங்குகள் எப்படிப் போட்டுக்கொண்டன என்ற நகைச்சுவை செய்தி 2000 ஆண்டு புறநானூற்றுப்  பாடலில் (378)  மட்டுமே உளது )!!!

8.ஆஞ்சநேய சந்தியாவந்தனம்

கிஷ்கந்தா என்னும் நாட்டின் முதலமைச்சர் பதவியில் இருந்தவர் ஆஞ்சநேயர்.. இலங்கையில் போர்க்களத்தில் லெட்சுமணன் மயக்கம் போட்டு விழுந்தான். அவனை எழுந்திருக்கச் செய்ய விசேஷ மூலிகை தேவைப்பட்டது. ஸஞ்சீவினி என்ற ஆயுர்வேத  மூலிகை தேவை என்று கரடி இன அடையாளம் அணியும் ஆயுவேர்வேத ஸ்பெஷலிஸ்ட் AYURVEDA SPECIALIST ஜாம்பவான் சொல்கிறார். உடனே ஆஞ்சநேயர் சிட்டாகப் பறந்து சென்று மூலிகையை IDENTIFY /அடையாளம் பண்ண முடியாததால் ஒரு மலைத்துண்டையே (ROCK) கையில் ஏந்தி வறுகிறார். அப்போதும் சந்தியா வந்தனம் செய்ய மறக்காமல் தங்கிச் செல்கிறார். அவர் குரங்கு அல்ல . ரிக் வேத காலம் முதல் ஒவ்வொரு ரிஷியும் எப்படி தங்களை பறவை அல்லது பிராணியின் பெயரில் அழைத்துக் கொண்டார்களோ அப்படி அவர்  குரங்கு இதைச் சேர்ந்தவர் . அந்த வகையில் எல்லா மனிதர்களைப் போல அவரும் சந்தியா வந்தனம் செய்ததை நமது மத நூல்களில் காண முடிகிறது .

9. ராம ராஜ்ய சந்தியா வந்தனம்

ராமாயணத்தின் முடிவிலும் சந்தியா வந்தனத்தைக் காண்கிறோம் . ராமர் மீண்டும் அரசனாக பதவி ஏற்று ராம ராஜ்யம் நடைபெற்றது அப்போதும் தினசரி ராஜ்ய பரிபாலனத்தில் நாள்தோறும் நடந்த நிகழ்ச்சிகளில்/ சடங்குகளில் சந்தியா வந்தனமும் ஒன்று.

ஆகவே கடிகாரமே இல்லாவிட்டாலும் எளிதில் காணக்கூடியது  அந்திப் பொழுதுகள்; அப்படி மூன்று சந்திப்பு / சந்திப் பொழுதுகள் வருகையில் இறைவனை நினைவு கூற வேண்டும் என்பதே சந்தியா வந்தனம் ; முஸ்லீம்களில் சிலர் 5 வேளைகளில் தொழுவதைக் காண்கிறோம். அவர்கள் விமானம், ரயில், பஸ் நிலையம் என்று பாராமல் ஒரு துணியை விரித்து மண்டியிட்டுத் தொழுதைக் காண்கிறோம். இது போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா இந்துக்களும் மூன்று பொழுதுகளில் தொழுதனர் . இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.

(இலங்கையில் எனக்கு திருகோண மலை செல்லக் கார் ஒட்டிய முஸ் லீம் கிடைத்த இடைவேளையில் ஸார் தொழுகையை முடித்துவிட்டு ஓடி வந்து விடுகிறேன்; நீங்கள் லஞ்ச் LUNCH சாப்பிட்டுக்கொண்டிருங்கள்  என்று சொல்லிவிட்டுச் சென்றார் ; கதிர்மகத்துக்குக் கார் ஓட்டி வந்த வேறு ஒரு முஸ்லீம் இளைஞர் தொழுகை பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. இவ்வளவுக்கும் அவர் GULF COUNTRIES கல்ப் கண்ட்ரீக்களில் பல்லாண்டுகள் வசித்தவர்.

ஆயினும் மூன்று வேளையும் தவறாமல் சந்தியா வந்தனம் செய்த ஒரே மனிதனையும் நான் கண்டுள்ளேன். மதுரையில் தினமணி பத்திரிகையில் என்னுடன் சீனியர் சப் எடிட்டர் ஆக வேலை பார்த்தவர் தானப்பமுதலித்தெரு எஸ். வெங்கடராமன். பாதி நியூஸ் NEWS  எழுதிக்கொண்டிருந்தாலும் உச்சி வேளையிலும் மாலை வேளையிலும் குழாயடிக்குச் சென்று அதிலுள்ள தண்ணீரை சிறிதாகத் திறந்துவிட்டு சந்தியா வந்தனம் செய்துவிட்டு ஓடி வந்துவிடுவார். அங்கே சாப்பாட்டுத் தூக்குச் சட்டிகளுடன் வரும் தொழிலாளர்களும் அமைதியாக விலகி நின்று அவர் சந்தியா வந்தனத்தை முடிக்கும் வரை காத்திருப்பர்.  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு .

(மேலே கண்ட கட்டுரையில் உள்ள விஷயங்களை ஆங்கிலத்தில் எழுதியவர் Shri Gaurang Damani  ஸ்ரீ கெளரங் தாமனி . அவர் எழுதிய புஸ்தகத்தில் பெயர் Untold Stories of Ramayana”. நமக்குத் தெரியாத ராமாயணக் கதைகள்/ விஷயங்கள். அனைவரும் வாங்கிப் படிக்கவும்)

XXXX

E MAIL RECEIVED ON 9-11-2023

திரு.சுவாமிநாதன் அவர்கட்கு,

வணக்கம்.

காரைக்குடி, நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த, சுப.அண்ணாமலை என்ற நான் (தற்போது ஜாம்பியா நாட்டில்-லுசாகா நகரில் வசிக்கும்) உங்களுக்கு தெரிவிக்க விரும்பும் ஒரு தகவல் – எங்களது சமூகத்தில் பெண்களும் சந்தியா வந்தனம் உபதேசம் கேட்டு, தினமும் செய்து வரும் பழக்கம் தொன்று தொட்டு இன்று வரை உள்ளது. எங்களில், ஆண்-பெண்களுக்கு தனித் தனியான குருவினால், பஞ்சாட்சர மந்திர உபதேசம் (காயத்திரி அல்ல) செய்யப்பட்டு, சந்தியா வந்தனம் செய்து வருகிறோம்.

இந்த தகவல் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

SP Annamalai

—சுபம்—

Tags– ராமாயணம், சந்தியாவந்தனம், இராவணன், வாலி , அனுமன் , சீதை

விதி குறி வைத்து விட்டால் விடாது! (Post No.12,690)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,690

Date uploaded in London –  –  9 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxx

சுபாஷித செல்வம்

விதி குறி வைத்து விட்டால் விடாது!

ச.நாகராஜன்

விதி குறி வைத்து விட்டால் விடாது!

கைவர்தக கர்ஷகரக்ரஹணச்யுதோபி

     ஜாலே புனர்நிபதித: ஷபரோ வராக: |

ஜாலாத் புனர்விகலிதோ கிலிதோ பகேன

     வாமே விதௌ பத் க்ருதோ வ்யஸநாக்னிவ்ருத்தி: ||

மீனவன் ஒருவன் கையிலிருந்து ஒரு மீன் தப்பியது. அது விழுந்த இடம் அவனது வலை தான்! அந்த வலையிலிருந்து அந்த அப்பாவி மீன் மீண்டும் தப்பியது – ஆனால் இந்த முறை அது ஒரு நாரையின் வாயில் விழ அது மீனை முழுங்கியது. விதி ஒரு மனிதனைக் குறி வைத்து விட்டது எனில் அவனது துன்பத்திற்கு முடிவே இல்லை.

கூரிய புத்தி வெற்றி தரும்!

கேசித் தைவாத் ஸ்வபாவாத் வா காலாத் புருஷகாரத: |

சம்யோகே கேசிதிச்சந்தி பலம் குஷலபுத்தய: ||

சிலர் தனக்குத் தேவையானதை,

விதியால் பெறுகின்றனர்.

சிலரோ இயற்கையாகவே தற்செயலாகப் பெறுகின்றனர்.

சிலரோ காலத்தினால் பெறுகின்றனர்.

சிலரோ மனித முயற்சியினால் பெறுகின்றனர்.

சிலரோ இவை அனைத்தும் சேர்ந்ததினால் பெறுகின்றனர்.

சிலர் தமக்கான வெற்றியை கூரிய புத்தியால் பெறுகின்றனர்.

பலாசமரத்தில் பாம்பு!

கேதாரகாஹசமயே க்ருஷ்ணசர்போ விலோக்யதே |

சேத் பலாசத்ருமாரூட: சுபிக்ஷம் ச வதேன ததா ||

வயல்வெளிக்கு ஒருவன் சென்று அதில் நுழையும் போது, பலாச மரத்தின் மீது அவன் ஒரு கருநாகத்தைக் கண்டால் அது காட்டும் சகுனம் என்னவெனில் அந்த வருடம் அவனுக்குச் செழிப்பான அறுவடை கிடைக்கும் என்பதைத் தான்.

சோகம் போக்கும் இரண்டு எழுத்துக்கள்! (மி, த்ர)

கேனாம்ருதமிதம் ச்ருஷ்டம் மித்ரமித்யக்ஷரத்வயம் |

ஆபதாம் ச பரித்ராணம் சோகசந்தாபபேஷஜம் ||

யார் இந்த அம்ருதம் போன்ற இரண்டு எழுத்துடைய மித்ர என்பதை உருவாக்கியது?! (மி-த்ர – நண்பன் என்று பொருள்) துன்பங்களுக்கு எதிராக பாதுகாக்கும், சோகம், துக்கம் ஆகியவற்றைப் போக்கும் இதை உருவாக்கியது யார்?

செய்ய வேண்டியது என்ன?

கே யூயம் நோ வயமபி ச வ: கே பவாமோ பவாப்தௌ

   கர்மோர்மோணாம் விஷமவலநை: பேனவத் புஞ்ஜிதா: ஸ்ம: |

தத் க்ஷேபோய: க்ஷயிணி நிசயே சித்தமாதாய புத்ரா:

  சர்வாரம்பைர்லகத ஜகதாமந்தராத்மன்யநந்தே ||

நீ யார் எங்களுக்கு?

நாங்கள் உனக்கு யார்?

இந்த கடல் போன்ற இந்த உலக வாழ்க்கையில் நாம் யார்?

நமது செயல்கள் வடிவில்  அலைகளில் அடித்துச் செல்லப்படும் நுரைகள் போன்றவர்களே நாம்!

ஆகவே அழியக்கூடிய பொருள்களிலிருந்து மனதை இழுத்து விடுவித்து அதை முடிவற்ற பிரபஞ்ச ஆன்மாவின் மீது நிலை நிறுத்தி,

ஓ, குழந்தைகளே! அனைத்து முயற்சியையும் செய்து அதன் மேலேயே பற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

WHO AM I -நான் யார் என்ற விசாரத்தைச் செய்து பிரம்மத்தையே நினைத்து அதை அடை என்பது திரண்ட பொருள்.

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 13 (Post No.12689)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,689

Date uploaded in London – –  –  8 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 13

பர்த்ருஹரி ஸ்லோகங்கள்  37,38, 39

பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல்களைத் தொடர்ந்து காண்போம்

SLOKA 37 நீதி சதகம் 37

அரசனுக்கு ஆபத்து கெடு மதி உடையவரின் ஆலோசனை;

சந்யாசிக்கு ஆபத்து பந்தங்கள் (மடம், சொத்து, சுகம்);

புதல்வனுக்கு  ஆபத்து அதிக செல்லம்;

அறிவாளிக்கு ஆபத்து தொடர்ந்து படியாமை;

குடும்பத்துக்கு ஆபத்து கெட்ட மகன்/ மகள்;

நற்பெயர்க்கும் மரியாதைக்கும்  ஆபத்து கெட்டவர் சஹவாசம்;

புத்திக்கு ஆபத்து கள் குடித்தல்;

விவசாயத்துக்கு ஆபத்து நிலத்தைக் கவனியாமை/ பராமரிக்காது இருத்தல்;

அன்புக்கு ஆபத்து உறவினரை விட்டு வெளிநாடு செல்லல்;

வளத்துக்கு ஆபத்து விவேகமின்மை;

செல்வத்துக்கு ஆபத்து மெத்தனம்.– நீதி சதகம் 37

xxxx

மன்னன் மதியில்லா மந்திரியால் மா ஞானி

துன்னு சங்கத்தால் சுதன்- செல்வந்  தன்னாலோர்

வேதியன் வேத மறப்பால் விளங்கு  குலம்

தீதுசெறி மைந்தனால் சீரொ ழுக்கம் — நீதியிலாத்

தீ நட்பால் நாணம் தி யங்கு மது பானத்தால்

ஆன பயிர் மேற்பார்வையற்றதனால் -தூ நட்பு

தேசாந்தர வாழ் க்கை செய்வதால் மெய்க்காதல்

மா சாந்த மற்ற மனமதலா ல் – தேசார்

பெருஞ்செல்வம் நீதியிலாப் பேதமையால் நீர்மை

சுருங்குமென்று நீயறிந்து சொல்– 37

வள்ளுவன் ஈரடியில் ஏழுக்கும் மேலான சொற்களில் சொல்லுவதை பர்த்ருஹரி மிகச்சொற்பமான சொற்களில் சொல்கிறான்.

दौर्मन्त्र्यान्नृपतिर्विनश्यति यतिः सङ्गात्सुतो लालनात्

विप्रो‌ नध्ययनात्कुलं कुतनयाच्छीलं खलोपासनात् ।

ह्रीर्मद्यादनवेक्षणादपि कृषिः स्नेहः प्रवासाश्रयान्

मैत्री चाप्रणयात्समृद्धिरनयात्त्यागप्रमादाद्धनम् ॥ 1.37 ॥

த்ரௌர் மந்த்ர்யான் ந்ருபதிர் விநஸ்யதி யதிஹி சங்காத் ஸுதோ லாலனாத்

விப்ரோ அனத்யயனாத் குலம் குதநயாத்சீலம் கலோபாசனாத்

ஹ்ரீர்மத்யாதனவேக்ஷணாதபி க்ருஷிஹி ஸ்நேஹக  ப்ரவாஸாஸ்ரயான்

மைத்ரீ சா ப்ரணயாத் ஸம்ருத்ததிரனயா த்யாகப்ரமாதாத்தனம்

37. A king is ruined by evil counsel, a Sanyasi by attachment and a child by indulgence. A Brahmin is ruined by not studying (the Vedas), a family by a wicked son and good conduct by serving an evil-doer. Modesty is lost by wine, cultivated land by neglect, and affection by a sojourn abroad. Friendship is destroyed by lack of solicitude, abundance by mismanagement, and wealth by careless spending.

வள்ளுவன் சொல்லுவான்,

நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்பதாகும் அறிவு – 451

நல்ல மழை நீர் எந்த நிலத்தில் விழுகிறதோ, அதன் குணத்தை அடையும்; அது போல நல்லவர்கள் யாருடன் சேருகிறார்களோ அந்த குணத்தையே அடைவர் என்பான் வள்ளுவன்

ஆக வள்ளுவனும் பர்த்ருஹரியும் உரைப்பது ஒரே உண்மையையே!

கள் குடிப்பது பற்றி இந்துக்கள் அறைவது போல வேறு எவரும் பறைந்தது இல்லை. வள்ளுவனுக்குத் தெரியும்- தமிழர்கள் குடியால் அழிவர் என்று; ஆகையால் பத்துக் குறள்களில் பிட்டுப் பிட்டு வைக்கிறான். பர்த்ருஹரி ஒரே வரியில் சொன்னான்.

கள்ளுக் குடிப்பவன் ஒளியிழப்பர் (921)- அதாவது முகத்தில் தேஜஸ் போய்விடும்; மதிப்பும் மரியாதையும்  அழிந்து விடும்

‘நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’- 926; என்ன அழகான வாக்கியம்; வள்ளுவனுக்கு இணை வள்ளுவனே! அவர்கள் நடைப்பிணங்கள் என்றும் அதே குறளில் சாடுகிறார்.

xxxx

SLOKA 38

தானம் போகோ நாசஸ்திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய

யோன ததாதி  ந புங்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி – 38

दानं भोगो नाशस्तिस्रो

गतयो भवन्ति वित्तस्य ।

यो न ददाति न भुङ्क्ते

तस्य तृतीया गतिर्भवति ॥ 1.38 ॥

பொருள்

“ஒருவனுடைய செல்வம் மூன்று வழிகளில் கரைகிறது; தானம் கொடுப்பதாலோ, தனக்குப் பயன்படுத்துவதாலோ, இழப்பதாலோ போய்விடும். முதல் இரண்டு வழிகளைப் பயன்படுத்தாதோருக்கு மூன்றாவது வழி திறந்தே இருக்கிறது”.-38

சாணை கடைமணியுஞ் சத்திரந் தேய்க்கை க்கழுந்து

பேணு மதி சூரனும் பீடார் மதம் பொழிந்து

மா ணு  முடல் வாடகரு வாரண முங்கவி கார்த்திகையிற்

காணுமணல் மேடு திகழ் காணாரும் பூரணையில்

வானிலவும் நல்வழியிலன் வாய்ந்த தருமந்தன்னில்

நாணுதலி ல் செல்வமும் நன்று– 38

38. Charity, enjoyment, and ruin are the three ways of wealth to go spent. He who neither gives nor enjoys has the third course (left for his wealth).

பணத் தழிவுக்கோரருஞ்சற் பாத்திரதானம்

கணக்கின்றி தானுகர்தல் காணா -திணக்கமற்ற

கள்ளன் எடுத்தலென்று காசினியிற் கண்டவழி

உள்ளபடி மூவா உ ணர்ந்தெவரும்  கொள்ளுவதால்

முன்னிரண்டிற் செல்லவிடான் மூன்றாம் வழிய தனில்

அன்னதிழப்பான் அயர்ந்து –38


xxx

பழமொழி 400 என்னும் தமிழ் நூல் இதை இன்னும் அழகாகச் சொல்லும்.

நாய் கையில் கிடைத்த தேங்காய் போல என்று

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி

வேய்முற்றி முத்து திரும் வெற்ப  அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்  –பழமொழி 216

பொருள்

“ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !

மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம்  நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”

நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.

Xxx

SLOKA 39

மணிஹி  சனோல்லீடஹ  ஸமரவிஜயீ ஹேதிதலிதோ

மதக்ஷீணோ நாகஹ சரதி ஸரிதஹ ஸ்யானபுலினாஹா

கலாசேஷஸ் சந்த்ரஹ  ஸுரத்ம்ருதிதா பால வனிதா

தனிம்னா சோபந்தே கலிதவிபவாஸார்திஷு நராஹா – 39

मणिः शाणोल्लीढः समरविजयी हेतिदलितो

मदक्षीणो नागः शरदि सरितः श्यानपुलिनाः ।

कलाशेषश्चन्द्रः सुरतमृदिता बालवनिता

तन्निम्ना शोभन्ते गलितविभवाश्चार्थिषु नराः ॥ 1.39 ॥

பொருள்

ரத்தினக் கல்லை அறுத்து அறுத்து பட்டை தீட்டினாலும் ஜொலிக்கத்தான் செய்கிறது;

விழுப்புண் அடைந்தாலும் வெற்றி பெற்ற வீரனின் முகம் பெருமித ஒளி வீசுகிறது;

யானையானது மத நீர் அனைத்தும் வடிந்தும் கம்பீரமாகக் காட்சி தருகிறது;

நதியானது தண்ணீர் குறைந்த காலத்திலும் அழகுடன் தோன்றுகிறது;

அமாவாசைக்கு அடுத்த இரண்டாவது நாளிலும் நிலவு அழகாகத்தான் ஒளிர்கிறது;

காதலனுடன் கட்டிப் புரண்டு காலையில், களைப்புடன் எழுந்தபோதும் மனைவியின் அழகு குன்றவில்லை;

பணக்காரன், அவனது செல்வம் முழுதையும் தர்மம் செய்தபோதும் பொலிவுடன் திகழ்கிறான்.

39. A gem polished on a grindstone, a victor of a battle injured with weapons, an elephant weakened by rutting, a river’s sandy bed shrunken in autumn, the moon with a single digit left, a young woman weary with love sports and people whose wealth is reduced by giving to seekers – all these shine due to their emaciation.

இவற்றில் ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து ரஸிக்கலாம்.

இருந்தபோதும் கவிஞன் சொல்ல வரும் விஷயம், கையில் உள்ள எல்லாவற்றையும் தானம் கொடுத்தபோதும் செல்வந்தனுக்குப் புகழும் புண்ணியமும் எஞ்சி நிற்கும் என்பதாகும்.

காளிதாசனின் ரகுவம்ஸ காவியத்திலும், சங்க இலக்கியப் புற நானூற்றிலும் தானத்தினால் ஒருவனுக்கு ஏற்பட்ட வறுமையை புலவர்கள் புகழ்கிறார்கள்.

அதே போல ஒரு வீரனுக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் அழகு தருமேயன்றி அழகைக் குறைக்காது என்பதையும் தமிழ், ஸம்ஸ்க்ருத நூல்கள் பன்முறை பகர்கின்றன.

To be continued………………………………………….

Bhartruhai, Niisataka, in Tamil, 37,38,39

New Tamil Lesson 13 (Exercise) Post 12688

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,688

Date uploaded in London – –  –  8 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Translate மொழிபெயர்க்கவும் the following   sentences

1.Do you have money? Have you got money?

உன்னிடம் பணம் இருக்கிறதா?

Unnidam , panam, irukirathaa?

On your person, money, is?

இருக்கிறது +ஆ = இருக்கிறதா?

இருக்கிறது = is (normal verb)

இருக்கிறது = have or has (impersonal Verb)

EXAMPLE

சுவாமிநாதனிடம் கார் இருக்கிறதா?

Has Swaminathan got (a) car?

xxxxx

2.Do you have a Car? Have you got a Car?

உன்னிடம் கார் இருக்கிறதா?

Unnidam car irukkirathaa?

On your person, car, is@

xxxxx

3.Is this your school?

இது உன் (னுடைய  உனது ) பள்ளிக்கூடமா ? பாடசாலையா?

Ithu , your, pallikkoodamaa? Paatasaalaiyaa (Sri Lanka use this word

xxxx

4.How many trees are there in the garden?

Thottaththil , eththanai, marangkal, irukkinrana?

தோட்டத்தில், எத்தனை ,மரங்கள், இருக்கின்றன?

xxxx

5.I have two eyes/ two ears/ two feet-legs/two hands

எனக்கு இரண்டு கண்கள் /  இரண்டு  காதுகள்/  இரண்டு கால்கள் ;  இரண்டு  கைகள்

Enakku irandu kankal/ irandu kaathukal/ irandu kaalkal/ irandu kaikal

எனக்கு= to me; irandu= two;

xxxx

6.I have one head and one nose

எனக்கு ஒரு தலையும் ஒரு மூக்கும்

Enakku , our, thalaiyum , mookkum

To me one head and, one nose and

xxx

7.John and Mary came to my house

ஜானும் மேரியும் வீட்டுக்கு வந்தார்கள்

Jaanum , meriyum , veettuku, vantharkal

John and, Mary and, o house, came

உம் = and ias added with John and Mary

xxxx

8.Raman and Krishnan went to the shop

ராமனும் கிருஷ்ணனும் கடைக்குச் சென்றார்கள்

Raamanum , Krishnanum, Kadaikkuch sendraarkal

Rama and, Krishna and, to shop, went.

Rama and Krishna went to (the) shop.

xxxx 

9.Is it a good book/fruit/house?

இது நல்ல புஸ்தகமா? பழமா? வீடா ?

Ithu Nalla, pusthakamaa? Palamaa?veedaa?

This good book? Fruit? house?

interrogative AA is added with Pustakaam/book, Pazam/fruit, Veedu/ house.

xxxx

10.who is a beautiful girl?

யார் அழகான பெண் ?

Yaar , Alakaana, Pen?

Who, beautiful, girl?

Who is interrogative word; so you don’t need interrogative AA

—subham—-

Tags- New Tamil Lesson 13

எல்லா ஜாதியினரும் சந்தியாவந்தனம்   செய்யலாம் ! – Part 1 (Post No.12,687)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,687

Date uploaded in London – –  –  8 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிராமணர்கள் எல்லோரும் பூணுல் போட்ட நாளிலிருந்து சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என்பது தற்போதுள்ள நடை முறை. இதை மூன்று வேளைகளில் செய்ய வேண்டும். அதுவும்  5 அல்லது 7 வயது முதல் சாகும் வரை செய்ய வேண்டும். அதுவும் காணாமல்கோணாமல் கண்டு கொடுக்க வேண்டும் . அதாவது சூரியனைக் காணாதபோது , உதய காலத்தில் செய்; நிழல் கோணாத நேரம், அதாவது பகல் 12 மணிக்கு செய்; சூரியன் மறையும் முன், அதாவது கண்டு , சூரியனைக் கண்டு, செய். இப்போது பிராமணர்கள் கல்யாணத்துக்கு முதல் நாள் கூட பூணுல் போட்டுக் கொள்கிறார்கள். அதற்கு முன்னர் 7 வயதில் போட்டுக்கொண்டாலும் சந்தியா வந்தனம் செய்வதில்லை. அப்படியே செய்தாலும் 3 வேளை காணாமல், கோணாமல், கண்டு சூரியனுக்கு நீர் (அர்க்யம்) கொடுப்பதில்லை. ஆனால் ராமாயண காலத்தில் பிராமணர் முதல் சூத்திரர் வரை சந்தியாவந்தனம் செய்ததாக வால்மீகி சொல்கிறார். சீதா தேவியும் சந்தியாவந்தனம் செய்தாராம். இந்த வியப்பான விஷயங்களைக் காண்போம்.

‘சந்தியா’ ‘வந்தனம்’ என்ற இரண்டு சொற்களும் தமிழிலும் உள்ளன. சந்திப்பு என்றால் இரண்டு,  ஒன்றை ஒன்று பார்ப்பது;  உதய காலத்தில் ஒரு சந்தி ; பின்னர் காலைப்  பொழுது மதியத்தை சந்ததிக்கும் போதும்,  மதியப்  பொழுது, மாலை நேரத்தைச்  சந்ததிக்கும் போதும் மூன்று சந்திகள் ஏற்படும். தமிழிலும் கூட ,  அந்திப் பொழுது என்று சொல்வோம். வந்தனம் என்பது வணக்கம் என்பதுடன் தொடர்புடைய சொல். ஆக தமிழும் ஸம்ஸ்க்ருதமும் சிவ பெருமானின் உடுக்கை ஒலியிலிருந்து வந்தவைதான். இதை பாரதியாரும் பாணினியும் பாடி வைத்துள்ளனர் .

பாரதி பாடல்  தமிழ்த்தாய்

ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் – என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்,

ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் — பாரதி பாடல்

உடுக்கையின் இரு புறத்திலிருந்து வரும் ஒலியை இரு தரப்பினரும் சிறிது மாற்றிக் கேட்பதும் இயல்பே.  நாய் லொள் லொள் என்று  குரைத்ததாக அல்லது வள் வள் என்று  குரைத்ததாக  நாம் தமிழில் சொல்லுவோம். ஆயினும் ஐரோப்பிய மொழி ஒவ்வொன்றும் வெவ்வேறு சப்தத்தை நாய் குரைப்பதாக எழுதுகிறது. இதை கூகுள் google செய்து பாருங்கள்; வியந்து போவீர்கள் ஆகவே வணக்கம் என்பதும் வந்தனம் என்பதும் ஒன்றே .

சந்தியா வந்தனத்தில் மூன்று வேளைகளிலும் மூன்று தேவியரையும் வணங்குவோம் ; காயத்திரி,சாவித்திரி சரஸ்வதி என்ற 3 தேவியரையும் இருதயத்தில் ஆவஹித்து (மனதுக்குள் வரவழைத்து) காயத்ரி ஜபத்தை சொல்லுவார்கள். முன்னும் பின்னும்  நீரையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.

உலகிலேயே மிகப்பெரிய செல்வம் தண்ணீர். நீரின்றி அமையாது உலகு என்று இந்து மதப் புலவன் வள்ளுவன் இயம்புவான். இந்துக்கள் இந்த பூமியில் பிறந்ததால் தண்ணீரை வைத்தே நல்ல ,  கெ ட்ட சடங்குகளை செய்வார்கள். தனது வாழ்நாளில் இந்தியாவுக்கே வராத, ஒரு இந்துவின் தினசரி சடங்கினையும் பார்த்திராத, மாக்ஸ்முல்லர் கும்பல், இந்துக்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லுவது அபத்தம் என்பது தண்ணீர் சடங்குகளை பார்த்தாலே புரியும். வெள்ளைக்காரன் தண்ணீரைத் தொடக்கூட மாட்டான. அவன் வசிப்பது குளிர்ந்த பூமியில்..

1.சூத்திரன் செய்த சந்தியாவந்தனம்

தசரதன் வேட்டைக்குப் போனான்.  அந்தக் காட்டில் ஒரு நதி ஓடியது. சிரவணன் என்ற சூத்திரப் பையன் அவனுடைய அப்பாவுக்காக அந்த ஆற்றில், குவளையில் தண்ணீரை மொண்டு எடுத்தான். அந்த சப்தத்தை யானை என்று எண்ணி தசரதன் அம்பினை எய்ய, அது சிரவணன் உடலில் பாய்ந்த்து. கதறி விட்டான் ; ஆ என்று அலறினான். மனிதன் குரலைக் கேட்டு வியப்பும் அச்சமும் மேலிட்ட தசரதன் வந்து பார்த்தபோது தான் செய்த தவறு புரிந்தது;  அவன் தந்தை தாய் இருக்குமிடத்திற்கு தசரதனே தூக்கிச் சென்றான்.

பயந்து ஓடவில்லை. மேலை நாடுகளில் யார்மீதாவது கார் மோதினால் அவர்கள் ஒடி ஒளிந்து கொள்வார்கள். சாகும் தருவாயில் உள்ளவனுக்கு உதவ மாட்டார்கள்; ; அப்படி இல்லாமல் தசரதன் அங்கே சென்று வைசிய குலத்தில் பிறந்த தந்தையையும் சூத்திர குலத்தில் பிறந்த தயையும்ம் (ஆதாரம் வால்மீகி , அயோத்யா காண்டம், அத்தியாயம் 63)  புத்திர சோகத்தை தணிவிக்கிறான். ஆயினும் அவர் தசரதனுக்கும் புத்திர சோகம் ஏற்படக்கடவது என்று சபிக்கின்றார் . அதற்கு முன்னர், சிரவவணன் நாள்தோறும்  சந்தியா வந்தனம்  தவறாமல் செய்தான் என்று  குறிப்பிடுகிறார் ( இந்தக் கதை மஹாபாரதத்திலும் , புராணங்களிலும்  வெவ்வேறு விவரங்களுடன் வருகிறது ). சிரவணனை,  இந்திரனே நேரில் வந்து தேரில் அழைத்துச் செல்கிறான். அவனது தந்தையும் காட்டில் துறவி போல வாழ்ந்து வந்தார்  என்பதும் குறிப்பிட்டது தக்கது .

2. பிராமண / க்ஷத்ரிய விச்வாமித்திரன்

ராமனையும் லெட்சுமணனையும் காட்டிற்கு  அழைத்துச் சென்றவர் விச்வாமித்திர மகரிஷி; அவர் பிராமணர்  அல்ல; பிறப்பில் க்ஷத்ரியர் ; மூவரும் காட்டில் இருந்த போது சந்தியா வந்தனம் செய்ததை வால்மீகி பாடி வைத்துள்ளார். ராமர், தாடகையைக் கொன்ற பின்னர், சீதையை மணந் ததை நாம் அறிவோம். விசுவாமித்திர மகரிஷி கடும் தவம் இயற்றி பிராமண ரிஷியாகி மாறி, வசிட்டர் வாயால் பிரம் ம ரிஷி ஆனதையும் நாம் படிக்கிறோம். அவர்தான் பிராம ணர் சொல்லும் காயத்ரீ மந்திரத்தையும் தந்தவர் .

3.தேரோட்டி சுமந்திரன்

தேரோட்டி ஜாதி என்றால் க்ஷத்ரியர்களுக்கும் தாழ்வான ஜாதி என்று மஹாபாரதத்தில் படிக்கிறோம். இதனால் கர்ணனை பாண்டவர்  இகழ்ந்தவுடன். அங்கிருந்த துரியோதனன், உடனே அவனை அங்க தேச மன்னனாக அறிவிக்கிறான். இப்படிப்பட்ட ஒரு தேரோட்டிதான் ராமாயணத்தில் வரும் சுமந்திரன். கைகேயியின் சொற்படி ராம லட்சுமண, சீதை ஆகியோரை தேரில் ஏற் றிச் சென்ற சுமந்திரன் காட்டிற்குச் சென்று குதிரைகளைத் தேரிலிருந்து அவிழ்த்துவிட்டு சந்தியா வந்தனம் செய்கிறான்.; மறுநாள் கங்கைக் கரையில் சிருங்கி வேரபுரத்தில் இறக்கி விடுகிறான்

தொடரும்……………..

Tags -சந்தியாவந்தனம், பிராமணர், சூத்திரர்,க்ஷத்ரியர்

இலங்கையில் பிராமணர் ஆட்சி – PART 1 (Post No.12,686)

Ramayana Tour Route  in Sri Lanka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,686

Date uploaded in London – –  –  8 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கையில் பிராமணர் ஆட்சி – PART 1

பிராமணர்கள் யார் என்று வில்லியம் ஹண்டர் சொல்கிறார் ,

“உலக வரலாற்றின் ஆரம்ப கட்டத்திலேயே தங்களுக்கு சட்ட திட்டங்களை வகுத்துக்கொண்டு கட்டுக்கோப்புடன் வாழ்ந்த ஒரு பிரிவினரை  பிராமணர்கள் என்று அழைக்கின்றனர் . தன்னடக்கமும், தனி பண்பாடும் அதன் முக்கிய அம்சங்கள். அவர்கள் தங்கள் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டதாலும், இளம் வயதிலேயே கல்யாணம் செய்துகொண்டு, பிள்ளைகளைப் பெற்றதாலும் , போர் முனைகளில் இளம் வயதிலேயே இறக்காததாலும்  அவர்களுடைய மிகச் சிறந்த குணங்களை, மிக மிக அதிக அளவில் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றனர்” — ஸர் வில்லியம் வில்சன்  ஹண்டர் (1840-1900)

SIR Willam Wilson Hunter, known for his work The Imperial Gazetteer of India

xxx

2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சங்கத் தமிழ் நூல்கள் பிராமணர் பற்றி செப்புவது யாதெனின்,

“இவர்கள் வீடுகளில் முத்தீ (Three different Fire Altars) வளர்த்து வழிபட்டனர் . வேதங்களை ஓதி வேள்விகள் செய்தனர். சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களை வழிபட்டனர். விவாதங்களில் பங்கு கொண்டனர் ; அவர்களுடைய வீடுகள் தூய்மையாகவும், எளிமையாகவும் இருந்தன.. இரண்டு மன்னர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், பிராமண தூதர்களை மட்டுமே அனுப்பி அறிவிப்புகளை வெளியிட்டனர் . நாய்களும் கோழிகளும் நுழைய முடியாத சுத்தமான தெருக்களில் வசித்தனர். மரக்கறி உணவை உண்டனர்.”

xxx

இதே காலத்திலும் இதற்கு முன்னரும் இலங்கையில் பிராமணர்கள் வசித்ததாக மிகவும் பழைய பெளத்த மத நூல்கள் எழுதியுள்ளன .

அசோகர், 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட எல்லா கல்வெட்டுகளிலும் பிராமணஸ்ரமண என்றே எழுதினார். அதாவது பிராமணர்களையே முதலில் குறிப்பிட்டு விட்டு பெளத்த, சமணர்களைக் குறிப்பிடுவார்.

இலங்கையில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் காலடி எடுத்தும் வைக்கும் முன்னரே பிராமணர்கள் வாசித்ததை இலங்கை  வரலாற்று நூல்கள் காட்டுகின்றன.

பிராமணர் ஆட்சி Brahmin’s Rule in Sri Lanka

விஜயன் இறந்தவுடன் இலங்கையை ஆள தகுதியுடைய அரசர்கள் இல்லை. தமிழ் நாட்டிலிருந்து ஒரு க்ஷத்ரிய வம்ச மன்னரை அல்லது இளவரசரை கொண்டுவருவதற்கு அமைச்சர்கள் முடிவு செய்தனர். அப்போது ஓராண்டுக் காலத்துக்கு உபதிஸ்ஸ Upatissa 505- 504 BCE என்ற பிராமணர் தலைமையில் ஆட்சி நடந்தது. எப்போதுமே பிராமணர்தான்  முதல் மந்திரியாக இருக்க முடியும் ..அந்தப்  பிராமணர் அனுராதபுரத்துக்கு வடக்கிலுள்ள கம்பீரா நதிக்கரையில் உபதிஸ்ஸ காம என்ற கிராமத்தை உண்டாகிக்கினார் .

கிராமம் Grama என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை சிங்களத்தில் காம gama என்றும் ஆங்கிலத்தில் காம் Gham என்றும் உச்சரிப்பர் . பிரிட்டன் முழுதும் நிறைய ஊர்கள் காம் (Birmingham, Nottingham, Eastham etc) என்றே முடிவடையும்.

பாண்டுகாபயன் (437- 367 BCE) பதவி ஏற்கும் வரை  அந்த கிராமமே தலைநகர் ; பின்னர் அனுராதபுரம் தலை நகர் ஆயிற்று.

நாகர் என்ற பெயரில் முடியும் 20 புலவர்கள் பழந் தமிழ் நாட்டில் வசித்தனர். அவர்களும் பிராமணர்களோ என்று எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இலங்கையை ஆண்ட ஸ்ரீ நாகன் (189- 209 CE) பிராமண குலத்தில் பிறந்தவன் அவன் 20 ஆண்டுகள் நாட்டை ஆண்டான் அதற்கு முன்னர்  அவனுடைய மைத்துனன் குஞ்ச நாக, ஒரே ஆண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தான் .ஸ்ரீ நாகன்,  மகன் வொஹரிக திஸ்ஸ Voharika Tissa புதிய சட்டங்களை நடை முறைக்குக் கொண்டுவந்தான். உடலில் காயங்கள் ஏற்படுத்தினால் அதுவும் தண்டனைக்குரிய குற்றமே என்று சட்டம் கொணர்ந்தான் ( இது மனு ஸ்ம்ருதியிலும் உள்ளது ).

இந்த பிராமண ஆட்சி 50 ஆண்டுகளுக்கு நீடித்தது .

இதற்குப் பின்னர் சில நூற்றாண்டுகள் உருண்டோடின. சீனாவிலிருந்து வந்த தூதனை வரவேற்க இலங்கை மன்னன் 30 கப்பல்களுடன் ஒரு பிராமணனை அனுப்பினான். இது நடந்தது கிபி CE  607ல். சுமார் 140 ஆண்டுகளுக்குப் பின்னர் CE 746-ம் ஆண்டில் ஒரு பிராமணர் சீனாவுக்கு அனுப்பப்பட்டார். அவர் புத்த மத பிரக்ஞா சூத்திரத்தையும் 40 கட்டு பருத்தித் துணியையும் எடுத்துக் கொண்டு சென்றார்.

போர்ச்சுகீசிய ஆட்சிக்காலத்திலும் மன்னர்கள் பிராமண தூதர்களையே பயன்படுத்தினர். அவர்கள் சத்தியத்தை மீறாதவர்கள்லஞ்சம்  கொடுத்து அவர்களை வசப்படுத்த முடியாது ; ரகசியத்தை வேறு யாருக்கும் சொல்லாமல் செயல்படுவர் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். ஏழாவது புவனேக பாஹு தன்னுடை பேரன் தர்ம பால ஆட்சிக்கு எந்த ஊறும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரு பிராமணர் மூலம் லிஸ்பன் நகருக்கு பேரனின் சிலையை, அனுப்பிவைத்தார் . அங்கிருந்தவாறே போர்ச்சுகீசிய மன்னர் தனது பேரனின் பட்டாபிஷேகத்தை அங்கீகரிக்க இந்த ஏற்பாடு.

லிஸ்பன் Lisbon, Capital of Portugal , போர்ச்சுகல்  நாட்டின் தலைநகர் .

Xxx

பிராமண ஆசீர்வாதம்

மன்னர்கள் தலை வணங்குவது  இரண்டு முறைதான்; கோவிலில் இறைவனுக்கு முன், சிரம்தாழ்த்தி வணங்குவார்கள் ; பிராமணர்கள் மந்திரம் சொல்லி ஆசீர்வதிக்கும் பொழுது  மன்னர்கள் , சிரம் தாழ்த்தி, கரம் குவித்து வணங்குவார்கள் ; இதை புறநானூற்றில் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாட்டை ஆண்ட முதுகுடுமிப் பெருவழுதி இரண்டு முறை மட்டுமே தலை வணங்குவான் என்று புலவர் பாடுகிறார். நமது காலத்திலேயே யாருக்கும் தலை வணங்காத முதலமைச்சர் ஜெயலலிதா, துக்ளக் பத்திரிகை ஆசிரியர்  சோ ராமசாமி மற்றும் அவருடைய மனைவியின்  கால்களில் விழுந்து ஆசீர்வாதம்  வாங்கியதைப்  பார்த்தோம்.

இவ்விஷயத்தில் முதலாவது இரண்டாவது ராஜ சிம்மர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் காண்போம் .

தொடரும்……………………………………………

Tags- இலங்கை, பிராமணர், ஆட்சி, பகுதி 1

ஹிட்லர் அழைத்த விஸ்வநாத சாஸ்திரி! இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! (Post No.12,686)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,686

Date uploaded in London – –  –  8 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!

அத்தியாயம் 17

ஹிட்லர் அழைத்த விஸ்வநாத சாஸ்திரி!

ச.நாகராஜன்

பகுதி 21

பிரம்ம ஶ்ரீ தண்டிபட்லா விஸ்வநாத சாஸ்திரி என்பவர் ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்.  சிறந்த வேத விற்பன்னர். வியாகரணத்தில் நிபுணர்.

அவரை சில ஜெர்மானிய விஞ்ஞானிகள் 1938ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வருமாறு அழைத்தனர். எதற்காக?

சில சம்ஸ்கிருத துதிகளில் உள்ள அர்த்தத்தைச் சரியாக விளக்குமாறு அவரை ஜெர்மனிக்கு அழைத்தனர்.

யஜுர் வேதம் மற்றும் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரங்கள் இவை.

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் போரில் பயன்படுத்த ராக்கட்டுகள் மற்றும் விண்ணில் ஏவும் ஆயுதங்களை எப்படித் தயாரிப்பது என்று ஜெர்மானிய விஞ்ஞானிகள் ஹிட்லரின் உத்தரவின் பேரில் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர். அவர்களுக்கு இப்படிப்பட்ட அபூர்வ ஆயுதங்களைத் தயாரிக்கும் முறைகள் விரிவாகவும் நுட்பமாகவும் ஹிந்து வேதங்களில் இருப்பதாகத் தெரிய வந்தது.

உடனே இதில் நிபுணர் யார் என்பதை ஆராய ஆரம்பித்தனர். விஸ்வநாத சாஸ்திரியைப் பற்றி அவர்கள் அறிந்தனர். அவர் இளமையிலேயே மேதையாக விளங்கியவர். தர்க்கம், இலக்கணம், மீமாம்ஸை உள்ளிட்ட அனைத்திலும் வல்லவர். யஜுர் வேதத்தில் கர்ம காண்ட பாகத்திலும் அதர்வண வேதத்தில் ப்ரயோக பாகத்திலும் அவர் தேர்ந்தவர்.

குறிப்பிட்ட சில ரகசிய மந்திரங்களின் உள் அர்த்தத்தை விளக்கமாகச் சொல்லுமாறு அவர் கோரப்பட்டார்.

நாஜிகள் தங்களது வி-8 ராக்கட்டுகளுக்கான பல்ஸ் ஜெட் எஞ்ஜின்களை (PULSE-JET ENGINES FOR V-8 ROCKET) முதலில் உருவாக்கியவர்கள். இதை ‘பஸ் பாம்ப்’ (BUZZ BOMBS) என்பார்கள்.

இந்த வகை ராக்கெட்டுகளை உருவாக்க இந்திய மற்றும் திபெத்தைச் சேர்ந்த அறிஞர்களால் மட்டுமே முடியும் என்பதை நாஜி விஞ்ஞானிகள் உணர்ந்தனர். ஆகவே ஆயிரத்திதொள்ளாயிரத்து முப்பதுகளில் அவர்கள் சரியான அறிஞரைத் தேட ஆரம்பித்து இறுதியில் விஸ்வநாத சாஸ்திரியே உகந்த அறிஞர் என்று முடிவு செய்தனர்.

அவரை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றனர். அவர் அங்கேயே வாழ்ந்தார்.

அவரது படம் இன்னும் ஜெர்மனியில் பிராங்க்பர்ட் பல்கலைக்கழகத்தில் மாட்டப்பட்டிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு சீனர்கள் லாஸாவில் சில சுவடிகளைக் கண்டுபிடித்தனர். அதில் விண்கலம் அமைக்கும் முறை பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அவற்றை மொழிபெயர்க்க சண்டிகர் பல்கலைக் கழகத்திற்கு அந்தச் சுவடிகளை அனுப்பினர்.

லகிமா என்ற அமைப்பின் படி ஆன்டி கிராவிடேஷனல் எனப்படும் புவி ஈர்ப்பு எதிர் விசை எல்லா ஈர்ப்பு விசைகளையும் எதிர்த்து நிற்கும் வல்லமை படைத்தது.

சித்திகள் எட்டில் இந்த லகிமாவும் ஒன்று. இதில் வல்லவர்கள் புவி ஈர்ப்பு விசையை மீறி ஆகாயத்தில் உயர எழும்பலாம்; பறக்கலாம்.

இராமாயணத்தில் ஹனுமான் ஆகாயத்தில் உயர எழும்பி மிக அதிக வேகத்தில் பறந்ததை நாம் படிக்க முடிகிறது.

இந்திய விஞ்ஞானிகள் இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. ஆனால் உலகளாவிய விதத்தில் பல நாடுகளின் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தை இந்திய சாஸ்திரங்களின் மீது செலுத்துகின்றனர்.

இப்படிப்பட்ட சம்பவங்களில் விஸ்வநாத சாஸ்திரி ஜெர்மனிக்கு அழைக்கப்பட்ட சம்பவமும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது.

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 12 (Post No.12,684)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,684

Date uploaded in London – –  –  7 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 12

பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 34, 35, 36

Sloka 34

सिंहः शिशुरपि निपतति

मदमलिनकपोलभित्तिषु गजेषु ।

प्रकृतिरियं सत्त्ववतां

न खलु वयस्तेजसो हेतुः ॥ 1.34 ॥

ஸ்லோகம் 34

சிங்கக் குட்டியானாலும் கூட அது மிகப் பெரிய யானையைத் தாக்க விரும்பும்; இளம் வயதானாலும் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆசைப்படுவது வீர தீரர்களின் செயலாகும். பெருமை அடைய, புகழ் பெற வயது ஒரு தடை இல்லை.-34

ஸிம்ஹக சிசுரபி நிபததி மத மலின கபோலபித்திஷு கஜேஷு

ப்ரக்ருதிரியம் ஸத்வவதாம்ந கலு வயஸ் தேஜஸாம் ஹேதுஹு-34

34. A lion, though young, attacks elephants whose wall-like cheeks are stained with rut. This is the nature of the brave. Age, indeed, is not the cause of valour.

சிங்கஞ் சிறிதேனும் சிந்தூரம் மேற் பாய்வதற்கு

பங்கமுறா தோ டுகின்ற பான்மை போல் —  இங்குப்

பலமுளார் அஞ்சார் பராக்கிரமத்திற்குக்

குலவு வயதில்லையென்று கூறு–34

“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்

அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்

அன்பு குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்

சீற்றம் குறைவதுண்டோ?

சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே

மாற்றம் காண்பதுண்டோ?

மாற்றம் காண்பதுண்டோ?”

என்ற திரைப் படப் பாடலை இது நினைவு படுத்துகிறது. இயற்றியவர் கண்ணதாசன்; படம்- பாகப் பிரிவினை

xxxxx

Sloka 35

जातिर्यातु रसातलं गुणगणैस्तत्राप्यधो गम्यतां

शीलं शैलतटात्पतत्वभिजनः सन्दह्यतां वह्निना ।

शौर्ये वैरिणि वज्रम् आशु निपतत्वर्थो‌உस्तु नः केवलं

येनैकेन विना गुणस्तृणलवप्रायाः समस्ता इमे ॥ 1.35 ॥

நம்முடைய பரம்பரை எக்கேடு கெட்டுப் போகட்டும்; நம்முடைய குணங்கள் அதல, பாதாளத்துக்குப் போகட்டும்; நம்முடைய அடக்கம் மலை உச்சியிலிருந்து விழட்டும்; நம்முடைய பெருந்தனமை தீயில் கருகட்டும்; நம்முடைய துணிவை வஜ்ராயுதம் துண்டிக்கட்டும்; இப்படியெல்லாம் நடந்தாலும் பணமும் வசதியும் இருந்துவிட்டால் நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம்;  பணமும் வசதியும் இல்லாவிடில் மற்ற குணங்கள் அனைத்தும் புல்லுக்குச் சமானம்!–35

ஜாதிர்யாது ரஸாதலம் குணகணஸ்தத்ராப்யதோ கச்சதாம்

சீலம் சைலதடாப்தத்வபிஜனஹ ஸந்தஹ்யதாம் வஹ்னினா

சௌர்யம் வைரிணி வஜ்ரமாசு நிபதத்வர்த்தோ அஸ்து நஹ கேவலம்

யேனைகேன வினா குணாஸ்த்ருண லவப்ராயாஹா ஸமஸ்தா இமே – 35

35. Let caste go underground, and all good qualities go further down. Let conduct tumble down a mountain, and noble birth be consumed by fire. May thunder strike instantly at bravery towards foes. Let wealth alone be ours, without with, all these virtues are but like blades of grass.

சாதியிழி ந்தென்ன சற்குணம் தாழ்ந்தென்ன

ஓதுமொ ழுக்கம்  ஒழிந்தென்ன — தீதில்

குடி மடிந்தாலென்ன கொண்ட தொரு வீரம்

முடிந்தழி ந்தாலென்ன மூவா-  நெடுஞ் செல்வம்

பெற்றிருந்தாற் போதும் – பெறாவிட்டால்  மேற்சொன்ன

சற்குணமெலாமி ருந்தும் தாழ்வுண்டாம் –புற்குமவை

ஒவ்வாப் புகழான் உலக வழக்கென்றென்றும்

இவ்வாறு இருக்கும் இயல்பு –35

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’

1961ம் ஆண்டு வெளி வந்த திரைப்படத்தின் பாடல் வரிகள் 

‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’

 மிகவும் பொருள் பொதிந்தவை. ஆயினும் இதை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பர்த்ருஹரியும், அதற்கு முன்னர்  தெய்வப் புலவன் வள்ளுவனும் செப்பிவிட்டனர்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு – குறள் 247

பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்வு இன்பமாக அமையாது. கருணையற்றவர்களுக்கு சுவர்க்க போகம் கிடைக்காது

பர்த்ருஹரி சொல்கிறார்,

பணம் இருந்தால் போதும்; குணம் உதவாது என்ற உலக நடைமுறையை பர்த்ருஹரி அழகாகப் பறைந்தார்.

பர்த்ருஹரி அடுத்த ஒரு ஸ்லோகத்திலும் இக்கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவார்:-

xxxxx

Sloka 36

यस्यास्ति वित्तं स नरः कुलीनः

स पण्डितः स श्रुतवान्गुणज्ञः ।

स एव वक्ता स च दर्शनीयः

सर्वे गुणाः काञ्चनम् आश्रयन्ति ॥ 1.36 ॥

யஸ்யாஸ்தி வித்தம்ஸ நரஹகுலீனஹ

ஸ பண்டிதஹ ஸச்ருதவான் குணக்ஞஹ

ஸ ஏவ வக்தா ஸ ச தர்சநீயஹ

ஸர்வ குணாஹா காஞ்சனமாஸ்ரயந்தி – 36

பணமுள்ளவன்தான் படித்தவன், ப்ரபு; அவன் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்; அவன்தான் வழிகாட்டி; அவன் ஒருவனே அழகன்; பேச வல்லவன்; உண்மைதான்! எல்லா குணங்களும் தங்கத்திலே அடங்கிவிட்டது.

36. A man who has wealth is high-born and a scholar. He is learned and discerning. He alone is eloquent and handsome. All virtues depend on gold (wealth).

உலகிற் பணமுள்ளான் ஓங்கு குலமுள்ளான்

அலகில் புலமையுள்ளான்  ஆன கலை ஞான

நிலவியுள் ளான்  நீத்தி நெறியுள்ளான் சங்கப்

புலமையுள்ளான் பேரழகு பூண்டுள்ளான் என்று

பலரால் புகழப்படுவான் பணத்தான்

 பல கு ணத்தான் என்பதனைப் பார்–36

இவ்வாறு பர்த்ருஹரி புலம்புவதின் உள் அர்த்தம் வெள்ளிடை மலை என விளங்கும். இது உலக நடைமுறை.

சங்க இலக்கியப் பாடலான குறுந்தொகையும்

இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு –பாடல் 120

பணம் இல்லாதவன் இன்பத்துக்கு ஆசைப்பட்டது போல என்று காட்டும்

பணம் இல்லாதவன் பிணம் என்று நாலடியார் செய்யுள் அறையும்:

ஒத்த குடிப் பிறந்த கண்ணும் ஒன்றில்லாதார்

செத்த பிணத்திற் கடை- பாடல் 281

திரைப்படம்: பணம் பந்தியிலே (1961)

பாடல்: பணம் பந்தியிலே -குணம் குப்பையிலே

இசை: கே.வி .மஹாதேவன்

பாடல் வரிகள்: கா .மு. ஷெரீப்

பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்

*******

பணம் பந்தியிலே

குணம் குப்பையிலே

இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே

பிழைக்கும் மனிதனில்லே (பணம்)

ஒன்றும் தெரியாத  ஆளானாலும் பணமிருந்தாலே

அவனை உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே (ஒன்றும்)

என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை (என்ன)

உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்கமாட்டாதே (பணம்)

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத்தான்

பணம் அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மைதான்

ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை (ஏழ்மை)

இதை எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை (பணம்)

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்களுண்டு

அவர்கள் உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள்  கண்டு

மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு(மண்ணாய்)

நாளும் முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு.(பணம்)

Xxxx  subham  xxxxxx

Tags– பர்த்ருஹரி நீதி சதகம், Slokas 34,35, 36

Bhartruhari,  Nitisatakafour languages , Part 12

Nagarathar /Chettiyar Community’s  Contribution to Hindu Culture in Sri Lanka – Part 2 (Post No.12,683)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,683

Date uploaded in London – –  –  7 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part two of my speech:

Pasupathy Chettiyar in Tirukketiswaram

C S Navaratnam in his book A short history of Hinduism in Ceylon (1964) writes,

December 13, 1893 is a Red Letter Day in the history of the Ceylon Hindus for on that day the jungle land to the extent of 40 acres, the old site of the temple of Tirukketiswaram ,was bought in public auction by the Nagarathar of Jaffna in spite of the opposition of Catholics. The Saiva Paripalana Sabhai through their treasurer S M Pasupathy Chettiyar spent large sums of money in 1894 to trace the old site of the temple and its premises. In 1903 a temple was built and the images were installed. From thence the temple was managed by the Nagarathar of Matota and from 1919 by the Nagarathar of Jaffna. Subsequently the temple came under the management of old and new Kathiresan temples of Colombo. Thus, the Chettiyars saved the most important Siva shrine of Hindus. (Tiukketheeswaram Shiva Temple was praised in Thevaram by Tiru Jnana Sambandar 1400 years ago. Later the Portuguese invaders destroyed over 1000 Hindu temples in Sri Lanka)

xxx

Nallainatha Chettiyar

Nallainatha Chettiyar’s name is associated with Chitra Velayutha Swami Kovil at Verugal near Trincomalee.

The story of how Nallainatha Chettiyar came to build this temple later is faithfully recorded in local tradition. The Chettiar , a merchant  from Tirunelveli in Tamil Nadu, was making his pilgrimage to Kadirgamam, through Trincomalee, when he stopped for a night at Verugal, as all pilgrims do, even now.

During the night Murugan appeared before him and told  Chettiyar to build him a proper temple. The Chettiyar was overjoyed at this divine manifestation; he soon became aware, where a hidden treasure could be discovered by him, with the proceeds of which a temple of Muruga Vel was erected in Verugal. On hearing about this through the Chettiar, the King of Kandy made endowments to the temple. And enriched Chettiyar also. Then the temple grew very fast.

xxxx

Tirunelveli Chettiyars & Colombo Muthumari Amman Temple

The origin of Colombo Muthumari Amman Shrine commences in the year 1856, when some members of the Thiruvilanga Nagarathar Chetty community brought some token soil from their village at Irukkankudi in Kovilpatti area in Tamil Nadu, India and commenced the  temple work. After vast improvements Kumbabishekam ceremony was done in 1954.

xxxx

A priest from the temple shooting arrows at the tree

Request to Chettiyars

London Swaminathan, before concluding his speech requested the chettiyar community to record their forefathers’ achievements abroad. A Facebook page lists over 50 towns in Burma and said that Hindu temples were built by Nagarathars in those towns. Except Yangoon (Rangoon) neither the town nor any Hindu temple is traceable oday. So it is very important that  everything must be documented. If the elderly in a family can’t write anything,  at least oral history must be recorded and posted in Nagarathar website or You Tube. This will perpetuate their memories and would help future researchers. Now there is more negative propaganda about chettiars and the interest rate they charged 100 or 200 years ago. At least the Brahmins repeat names of the family’s three generations  in wedding ceremony and monthly ancestor ceremony. Tracing Family History is a big business in Western countries. I see lot of people coming to British library to trace their English parents. So, every family must draw a family tree, write down their community service or at least record Oral History by video or audio devices.

Earlier Mr Manikandan of London Nagarathar Sangam (L N S) introduced London swaminathan and welcomed him. At the end Mr Nachiappan thanked him. And swaminathan was adorned with a shawl.

The event was attended by about 150 people including children and women. Makara Nonbu was celebrated in the temple on behalf of L N S. Chief Priest Sri Naganatha Sivam performed Puja and began shooting the first arrow at the Banana tree in the hall. The tree was used instead of the traditional Vanni Tree. All the children and elders tried their hands with the arrows. The  event began with a sumptuous lunch and Puja to goddess.

–subham—

Tags- Nagarathar, contribution, Hindu religion, in Sri Lanka, swaminathan talk

லட்சுமணன் கோவில்:இலங்கைத் தீவின்108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- 51 (Final Part)Post.12,682

RAVANA PRAYING TO SHIVA IN TRINCOMALEE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,682

Date uploaded in London – –  –  7 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள்- 51(Final Part)

126. யுத்த கணவ ராம – ராவண போர்க்களம்

ராமனும் ராவவணனும் சண்டையிட்ட இடத்தை யுத்த கணவ Yudhaganawa என்று சிங்களத்தில் சொல்கிறார்கள் . இது வஸ்கமுவ , Wasgamuwa என்னும் ஊரில் இருக்கிறது . இங்குதான் ராவணன் மகன் மேகநாதன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்ததால் லெட்சுமணன் நினைவிழந்து கீழே விழுந்தான்; உடனே ஜாம்பவானின்  ஆலோசனையின் பேரில் அனுமன் இமய மலைக்குச் சென்று ஸஞ்சீவினி பர்வதத்தைக் கொண்டுவந்தான். இதை மெய்ப்பிக்கும் வகையில் இமயமலை ஆல்பைன் வகைத் Alpine flowers தாவரங்கள் இங்கு வளர்கின்றன. இவை ஐஸ்கட்டி snowy regions உண்டாகும் மலை உயரத்தில் மட்டும் வளரக்கூடியவை 

தமிழர்களின் மிகப்பெரிய முருகன் தலமான கதிர்காமத்தையும் கூட ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவர். ராமனின் படைகளுக்கு உதவுமாறு கதிர்காம முருகனை இறைவன் பணித்தாராம்.

127.ராமன் போட்ட அணுகுண்டு Dunuvila lake தனு விலா ஏரி

மஹாபாரதத்தில் கர்ணன், ராமாயணத்தில் மேக நாதன், இறுதியில் ராமபிரான் போட்ட பிரம்மாஸ்திரங்கள், அணு ஆயத்தங்கள் NUCLEAR WEAPONS என்று 15 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரை எழுதினேன்.  இவை வெவ்வேறு சக்தி உடைய அணுகுண்டுகள். ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா 2 அணுகுண்டுகளை வீசி பல லட்சம் அப்பாவி  மக்களை  படுகொலை செய்ததை உலகம் அறியும். அந்த குண்டுகள் கொசுவுக்கு சமானம். இப்போது அமெரிக்கா , ரஷ்யாவிடமுள்ள அணு குண்டுகள் இமய மலைக்குச் சமம். இது போல எதிரிக்குத் தக்க அணு ஆயுதங்களையே ராமன், கர்ணன், மேகநாதன் முதலியோர் பிரயோகித்தனர் . ராமபிரான் போட்ட அணுகுண்டு தனுவிலா ஏரி  பகுதியிலிருந்து போடப்பட்டது  “Dhunu” means “arrow” and “Vila” means “Lake,”. தனு என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் வில்லினைக் குறிக்கும். எல்லா என்பது நீர்நிலை/ ஏரி ; அப்போது ராவணன் போரினை லக்கலா ( Laggala is derived from the Sinhala term “Elakke Gala“, which means Target Rock) என்ற இடத்திலிருந்து வழி நட த்தினான் . சிங்களம் என்பதில் பாதி சம்ஸ்க்ருதம் பாதி தமிழ் இருப்பதை மொழி அறிந்தோர் அறிவர். இங்கு இலக்கு என்பதே லக்கல. உண்மையில் அதுவும் லட்சியம் என்ற ஸம்ஸ்க்ருதச்  சொல்லில் இருந்து பிறந்ததே. ராவணன் அங்கிருந்தே ராமன் படைகளைக் குறிவைத்தானாம்.

பிரம்மாஸ்திரத்தினால் இறந்த ராவணனின்  சடலம் யஹங்கல (Yahangala) என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. (meaning “Bed Rock” in Sinhala. This is situated along the Mahiyanganaya – Wasgamuwa road. King Ravana’s body was kept upon this rock so his countrymen could pay their last respects to their dear departed king). இந்தப் பாறையை தொலை தூரத்திலிருந்தும் காண முடியும் .

128.ராமன் பூஜித்த லிங்கங்கள்

ராவணன் 50% பிராமணன்; ஆகையால் அவனைக் கொன்றதால் பிரம்ம ஹத்தி பாவம் ராமனைப் பற்றிக்கொண்டது அதைப் போக்குவதற்கு அவன் 4 இடங்களில் சிவ லிங்கங்களை ஸ்தாபித்து பூஜித்தான். அவைகளில் ஒன்று உலகப் பிரசித்திபெற்ற ராமேஸ்வரம்  . ஏனைய மூன்றும் இலங்கையில் உள்ளன. அவை சிலாவம் அருகிலுள்ள மானா வாரிதிருக்கே தீஸ்வரம், திருகோணமலை . இவைகளை முந்தைய கட்டுரைகளில் விரிவாகப் பார்த்துவிட்டோம். மானாவாரி ராமலிங்கம் கோவில் முன்னேஸ்வரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.. அத்தோடு ராமபிரான், முன்னேஸ்வரம் கோவிலிலும் வழிபட்டதாக ஐதீகம். .Chilaw, Manavari Temple is the first place where Lord Rama installed and prayed the Shivalinga. It is called as Ramalingam .

129.ராவணன் சிலை, திருகோணமலை

ராவணன் வெட்டு

திருகோணமலை கோவிலுக்கு வலது புறத்தில் ஒரு பெரிய பாறை வெட்டப்பட்டது போல, இரண்டு பகுதிகளாக நிற்கின்றன. இதை ராவணன் வெட்டு என்று அழைக்கிறார்கள் ; ராவணன் தன் வாளால் வெட்டியதால் பாறை பிளந்ததாக கதை. அருகில்  ராவணன் சிலையும் உள்ளது ; இந்தப் பகுதி சுமார் 300 அடி ஆழம்  உடையது; கடல் நீர் சுழற்சி காரணமாக அருகில் சென்றால் படகுகளையும் இழுப்பதாக  மீனவர் கூறுவர்  .

XXXXXX

அனுமன் கொண்டுவந்த சஞ்சீவி மலை 5 இடங்களில் விழுந்ததைக் கண்டோம். இதில் ஒரு இடத்தின் பெயர் தள்ளாடி. மலை யின் பாரம் தாங்காமல் அங்கு அனுமன் தள்ளாடியதால் இந்தப் பெயர் என்று சி.எஸ். நவரட்னம் 1964-ம் ஆண்டில் எழுதிய  புஸ்தகத்தில் A SHORT HISTORY OF HINDUISM IN CEYLON கூறுகிறார். அந்த இடம் மன்னார் அருகில் உள்ளது.

HANUMAN- NIKUMBHA FIGHT FROM WIKIPEDIA

130.லெட்சுமணன் கோவில்

சபரகமுவவில்  லட்சுமணன் வழிபாடு  நடப்பதாக சி.எஸ் நவரட்னம் தன்னுடைய ஆங்கில நூலில் குறிப்பிடுகிறார். இது பற்றிய விவரங்கள் இல்லை ஆனால் சிங்கள பெளத்தர்களும் லட்சுமணன் பெயரை வைத்துக் கொள்கின்றனர். மேலும் பல கோவில்கள் புத்தமதமாக்கப்பட்டுவிட்டன. இந்துக்கோவில்களை இடித்து பெளத்த விஹாரங்களை மன்னர்கள் கட்டியதை மஹாவம்சம் என்ற நூலே பெருமையாக எழுதியுள்ளது.

ராவணனின் சகோதரன் கும்பகர்ணன். அவனுடைய மகன் நிகும்பன். கொழும்பு அருகிலுள்ள ஊரின் இன்றைய பெயர் நீர்க்கொழும்பு. இதுவே நிகும்பன் என்ற பெயரின் மரூஉ என்று CONVERTED CHRISTIAN சைமன் காசி செட்டி SIMON CASIE CHETTY (1807-1860) எழுதியுள்ளார் .

COBRA HOODED CAVE

131. பாம்பின் படத்துடன் உள்ள குகை Cobra Hooded Cave

சிகிரியா என்னும் மலை, குகை ஓவியங்கள் முதலியன இந்தியாவின் அஜந்தா குகை ஓவியம் போல பிரசித்தமானவை . அங்கு பாம்பு படம்  விரித்தாடுவது போலத் தோன்றும் மலை முகடு Cobra Hooded Cave

இருக்கிறது . அங்குள்ள குகையிலும்  சீதாதேவி சிறை வைக்கப்பட்டதாக கர்ண பரம்பரைக் கதைகள் சொல்லப்படுகின்றன. Parumaka naguliya lene’.  பருமக நகுலீய லேனே என்று எழுதி வைத்துள்ளனர். இதில் நகுலிய the word ‘naguliya’ refers to Sita என்பது சீதா தேவியைக் குறிக்கும் சொல் ஆகும்.

இவை தவிர மேலும் பல மலைக்  குகைகளையும் ராமபிரான், ராவணன் ஆகியோருடன் தொடர்புபடுத்திப் பேசுவார்கள். இவைகளை ஆராய்வதைவிட இவை பற்றி பாமர மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை  நாம் போற்ற வேண்டும்; அது பக்தியையும் சுற்றுலாவையும் வளர்ப்பதோடு ராமாயணம் போதிக்கும் நற்குணங்களையும் தக்க வைக்கிறது . சொல்லாலும்  கல்லாலும்  வில்லாலும் புகழ் பெற்ற ராமாயணத்தை எல்லாரும் போற்றுவதில் வியப்பும் உண்டோ !!

இலங்கையில் புகழ்பெற்ற 108 இந்து ஆலயங்கள் கட்டுரைத் தொடர் இத்தோடு முடிவடைகிறது 4000 கோவில்களில்  ஒரு சிறு பகுதியையே கண்டோம். இதை எழுதி முடிக்கும் தருவாயிலே மேலும் பல கோவில்கள் உருவாகாகக்கூடும் .

பக்தி பெருகட்டும்; முக்தி கிடைக்கட்டும்

–சுபம்—

Tags- லட்சுமணன் கோவில், ராவணன் சிலை, ராவண போர்க்களம் , 108 Sri Lankan Temples, Final part, கட்டுரைத் தொகுப்பு நிறைவு, இலங்கைத் தீவின், 108 புகழ்பெற்ற, இந்து ஆலயங்கள்- 51,