Before continuing with C S Navartnam’s pages to show Brahmin’s role in Sri Lanka, I want to add what Mudaliyar C Rasanayagam says in his book ANCIENT JAFFNA (Year 1926).
He says that Arya Chakravarti Dynasty which ruled Northern Sri Lanka for 400 years had Brahminical origin. They were the one who established Hindu Samrajya in Sri Lanka like Shivaji in India. But the great Vijayanagara Hindu Empire and Veera Sivaji’s Hindu Samrajya wiped out Muslim invaders; in Sri Lanka it was quite opposite; Portuguese, Dutch (Holland) and British demolished all Hindu Temples and converted a lot of Hindus after killing the last Arya Chakravarti. They were Christian fanatics. Then Hindu Renaissance happened in the nineteenth century and Saivite saint Arumuga Navalar and Tamil Nagarathar Chettiyars helped to re construct Hindu temples.
Arya Chakravarti has two Sanskrit words. This Arya has nothing to do with the wrong interpretation of Max Muller gang. They said that Aryans came from outside India. But Tamil and Sanskrit scriptures never gave an ethnic connotation to the word or attributed outside origin. They used ARYA for Himalayan saints, speakers of refined language, and civilized and cultured people in general.
Rasanayagam says there was another Malava Chakravarti as commander and this Arya Chakravarti was a minister cum commander in Rameswaram. At that time, that is 800 years ago, Rameswaram was under Sri Lankan kings. Interpreting an inscription at Tiruppullani near Rameswaram, he said that this Arya Chakravarti married a Kalinga princess living in Jaffna. His descendants were called Arya Chakravarti and he used both her and his royal titles and symbols. Singai Aryan or a handicapped king known as Koolangai Chakravarti was the first king.
First let me give Rasanayakam’s page and then continue with Navaratnam pages:
சிவாஜி மஹராஜ், இந்தியாவில் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவியது போல இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்து ஆட்சியை நிறுவியவர்கள் ஆரிய சக்கரவர்த்திகள்; 400 ஆண்டுகளுக்குக் கொடி கட்டிப் பறந்தார்கள் . போர்ச்சுகீசிய , டச்சு (ஹாலந்து நாடு), பிரிட்டிஷ் பறங்கியர்கள்கள் இலங்கையை ஆக்ரமித்து இந்து மதத்தை எள்ளி நகையாடும் வரை, ஆரிய சக்கரவர்த்திகள் இடிபட்ட 500 கோவில்களையும் புனர் நிர்மாணித்தார்கள் . இந்த சக்ரவர்த்திகளின் தோற்றம் பிராமண தொடர்புடையது. இவர்கள் ராமேஸ்வர பகுதியிலிருந்து வந்தவர்கள். முதல் சக்ரவர்த்தி 50 சதவிகித பிராமணன்; ராவணனைப் போல 50 சதவிகித பிராமணன்.
ஆரிய சக்ரவர்த்தி என்று ஏன் பெயர் வைத்துக் கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய வேண்டும். இரண்டு ஸம்ஸ்க்ருதச் சொற்களும் இந்திய மன்னர்களின் பெயர்களில் கூட கிடையாது. ஆரிய என்றால் இனம் அல்ல.பண்பாட்டின் உயர்மட்டத்தை அடைந்தவர்கள் என்று பொருள். அதாவது ஆங்கிலத்தில் CIVILIZED சிவிலைஸ்டு, CULTURED கல்ச்சர்ட் என்று சொல்லுவார்கள்; மாக்ஸ்முல்லர் கும்பல் இதை மாற்றி இவர்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ள பல நாடுகளைக்காட்டி அங்கிருந்து வந்தவர்கள் என்று சொல்லி வரலாற்றையே தலைகீழாக மாற்றியது. இந்திய பூமியில் உதித்து ஈரான் வரை சென்றவர்கள் ஆரியர்கள் என்பதை பாரசீக மதத்தினரின் வேத புஸ்தகம் ZEND AVESTA சென்ட் அவஸ்தா காட்டுகிறது
யாழ்ப்பாண ஆரிய சக்ரவர்த்திகளுக்கும் பாண்டியர்களுக்கும் உள்ள தொடர்பில் எவருக்கும் சந்தேகம் இல்லை; யாழ்ப்பாண சக்கரவர்த்திகள் முதலாமவர் சேதுக்கரை என்னும் ராமேஸ்வரம் , திருப்புல்லாணிப் பகுதியி லிருந்து வந்தவர்கள் என்பதிலும் ஐயப்பாடு இல்லை. யாழ்ப்பாண மன்னர்களே ராமேஸ்வரம், திருப்புல்லாணியில் செய்த கோவில் திருப்பணிகளையும் அவ்விரு இடங்களில் உள்ள கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. முதலாவது ஆரிய சக்ரவர்த்தி பிராமண க்ஷத்ரியருக்கும் பிறந்தவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர் .
யாராவது ஒரு மன்னனுக்கு அங்கஹீனம் இருந்தால், அதை வைத்தே மக்கள் அவனை அடையாளம் காண்பர்; நின்ற சீர் நெடுமாறன் முதலில் கூன் பாண்டியனாக இருந்தான்; அவனை மஹேந்திர பல்லவன் காலத்தில் வாழ்ந்த சின்னப்பையன் விபூதி தடவி வழுதி கூனை நிமிர்த்தினான். அந்தச் சின்னப்பையன் திருஞான சம்பந்தன் இல்லாவிடில் இந்தியாவிலும் இலங்கையிலும் சைவ சமயம் இருந்திராது. அவனுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் , கீரந்தை என்னும் பிராமணன் வீட்டைக் காப்பதற்காக தனது கையையே வெட்டிக்கொண்டான் . பின்னர் சித்த, ஆயுர் வேத நிபுணர்கள் வந்து அவனுக்கு ஆபரேஷன் செய்து தங்கக் கையைப் பொருத்தினர் . அந்த மன்னன் பெயரே நமக்குத் தெரியாது ஆனால் பொற்கைப் பாண்டியன் என்றால் நமக்கு உடனே தெரியும். அவன் கதை பழைய காப்பியங்களில் வருவதால் அவன் சங்க கால மன்னன் என்று நமக்குத் தெரிகிறது.
இஃதே போல யாழ்ப்பாணத்தை ஆண்ட முதல் மன்னனுக்கு Polio Attack போலியோ தாக்குதல் காரணமாக குறுகிய கை இருந்தது. அவனை கூழங்கை சக்ரவர்த்தி என்று அழைத்தனர்.
சரி, முதல் சக்ரவர்த்தி, ராவணனைப்போல 50 சதவிகித பிராமணன்.
என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ?
முதலியார் சி ராஜநாயகம் புராதன யாழ்ப்பாணம்ANCIENT JAFFNA, MUDAIYAR C. RASANAYAGAM, 1926 என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதில் திருப்புல்லாணி க் கல்வெட்டையும் மஹா வம்சக் குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு பின் வருமாறு கூறுகிறார் மாளவ சக்ரவர்த்தி என்பவர் முன்னர் இலங்கையுடன் சண்டையிட்டதையும் குறிப்பிட்டுவிட்டு அவர் சொல்வதாவது–
ராமேஸ்வரத்திலுள்ள ஒரு பிராமணர் யாழ்ப்பாணத்தில் இருந்த கலிங்க வம்சத்து உக்ர சிங்கனின் இளவரசி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, தந்தை வழி பெயரான ஆர்ய என்பதையும் வைத்துக்கொண்டார் பெண்வழி வம்சப் பெயரான கலிங்கத்தையும் வைத்துக்கொண்டார் என்பது தெரிய வருகிறது . சேது என்ற பெயரையும் கலிங்க வம்ச சின்னங்களையும்( ராஜ முத்திரை ) வைத்துக்கொண்டனர் .
ஆர்ய சக்ரவர்த்தி என்பது ஒரு படைத்தளபதியின் பெயர் ;
மஹாபாரத துரோணர் , அஸ்வத்தாமன் காலத்திலிருந்தே பிராமணர்கள் படைத் தளபதிகளாகவும் இருந்ததை அறிகிறோம். இதனால் முதல் மன்னர் 50 சதவிகித பிராமணர் என்பதில் வியப்பதற்கொன்றுமில்லை.. ஆயினும் ஆட்சி என்று வருகையில் அ வர்கள் க்ஷத்ரியனாகவே (கலிங்க வம்சம்) காட்டிக்கொள்வார்கள்.
உலக வரலாற்றில் சிங்கமே இல்லாத, சிங்கத்தையே பார்த்திராத சிங்கபுரி (சிங்கப்பூர்), இலங்கை, ஈரான் ஆகிய நாடுகளின் கொடி அல்லது சின்னத்தில் சிங்கம் இருப்பதற்குக் காரணம் இந்துக்கள் உலகம் முழுதும் வீறு நடை போட்டதே.
இந்துக்களின் ஆதிக்கம் ஐரோப்பா வரை பரவியதால், சிங்கமே இல்லாத ஐரோப்பாவில் ஜுவலியஸ் சீசர்/CAESAR அகஸ்டஸ் சீசர் என்று சிங்கத்தின் அடைமொழியை சேர்த்து க்கொண்டனர். கேசரி ( கேச + அரி = மயிர் மிருகம் ) என்பதை ரோமன் லிபியில் எழுதுகையில் கேசர்= சீசர் ஆகிவிடும் ; இன்றும் நான் சார்ல்ஸ் CHARLES என்றும் கேரக்டர் CHARACTER என்றும் C சி எழுத்தை மாறி மாறி பயன்படுத்துவது இந்த சி குழப்பத்தால்தான்.
இதை எதற்காக இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்கை நகர், சிங்கை ஆரியன் ஆகிய எல்லாம் இந்தியத் தொடர்புள்ள கலிங்க வம்சம் என்பதைக்காட்டவே.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரிய சக்கரவர்த்திகள் என்பது பாண்டிய + கலிங்க கலப்பு ரத்தம் உடையவர்கள். மஹா வம்சமும் ஓரிடத்தில் இவர்களில் ஒருவரைக் குறிப்பிடுகையில் ஆரியன் அல்லாத என்ற சொற்றோடரைப் பயன்படுத்தக் காரணம் அந்த இளவரசி யாழ்ப்பாணத்தில் இருந்த கலிங்க வம்ச அரசி என்பதால்தான்.
இவ்வளவையும் படிக்கையில் இலங்கையின் முதல் மன்னனே கலிங்க வம்சத்தவன் எனபதையும் மறந்துவிடக்கூடாது ; கலிங்கம், வங்கம் என்பன அடுத்தடுத்தது உள்ள பிரதேசங்கள்; அவனைக் கப்பல் ஏற்றி நாடு கடத்தி விரட்டிவிட்ட இடம் வாங்க மாநில துறைமுகம்; வங்கம் என்றால் கப்பல்; அது புறப்பட்ட மாநிலத்துக்கே இப்போது வங்கம் என்று ஆகிவிட்டது. பழைய தமிழ் பாடல்களில் வங்கம் என்ற சொல் கப்பல் என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளது கப்பல் கீழைக்கடலை நாம் இன்றும் வங்காள விரிகுடா என்றே அழைக்கிறோம் ; வளைந்த (BANGA/ BEND/ VANTHANA/ VANANGUTHAL are cognate words) எல்லாப் பொருளும் வங்கம் ஆகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாலைமலர் தீபாவளித் திருநாள் சிறப்புக் கட்டுரை. 10-11-23 அன்று வெளியான கட்டுரை இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே!
(முதல் பகுதி)
ச.நாகராஜன்
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே
– தீப ரகசியம் பற்றி திருமூலர் ஏழாம் தந்திரம் – 10
உன்னைக் கண்டு நானாட, என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா ஆ ஆ ஆ ஆ
உறவாடும் நேரமடா!
-கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
அறம் வெல்லும் திருநாள்
உலகின் பல நாடுகளிலும் இப்போது தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.
அறத்திற்கும் மறத்திற்குமான போரில் அறம் வென்ற நாள் இது.
மலர்ச்சி, மகிழ்ச்சி, நம்பிக்கை, ஒளி, செல்வம், ஆரோக்கியம், ஆயுள், மேன்மை உள்ளிட்ட ஏராளமான நலன்களை தீப ஒளி போல வரிசையாகத் தருவதால் இது தீபாவளி ஆகிறது. தீபம் + ஆவளி = தீப வரிசை)
லட்சுமி தேவி பாற்கடலில் அவதரித்த நாள் இதுவே.
இந்த நன்னாளில் லட்சுமி தேவி சர்வ அலங்காரபூஷிதையாக பூமியில் வருகிறாள். அவளை இல்லந்தோறும் வரவேற்கும் வண்ணம் வீட்டில் இருக்கும் அழுக்குகளையும் குப்பைகளையும் போக்கி, வீட்டை, தீப ஒளி ஏற்றி, பிரகாசமாக வைத்து புத்தாடை புனைந்து தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு பெண்டிரும் ஆண்களும் குழந்தைகளும் வெடி வெடித்து இனிப்பு வழங்கி லட்சுமியை வரவேற்கத் தயாராக இருக்கின்றனர்.
லட்சுமி பூஜை செய்வது இந்த நாளின் சிறப்பு அம்சம்.
ஐந்து தினக் கொண்டாட்டம்
தீபாவளியை ஐந்து தினங்களாக வடக்கே கொண்டாடுகின்றனர்.
முதல் நாள் ‘தன் தேரஸ்’ என்று அழைக்கப்படுகிறது. தன் என்றால் பணம் அல்லது செல்வம் தேரஸ் என்றால் திரயோதசி திதியைக் குறிக்கிறது. செல்வத்தை வரவேற்கத் தயாராகும் நாள் இது. தன்வந்திரி பாற்கடலிலிருந்து வெளிவந்து அவதரித்த தினம்.துளசி செடியின் அருகில் இருந்து யமனை வழிபடும் தினமாக இது அமைகிறது.
அடுத்த நாள் நரக சதுர்தசி. இது கண்ணபிரான் நரகாசுரனை வதம் செய்த நாள்.
அடுத்த நாள் அமாவாசை – தீபாவளித் திருநாள். லட்சுமி பூஜை தினம்.
அதற்கடுத்த நாள் கோவர்தன் பூஜை தினம்.
கடைசியாக பாய் துஜ் என அழைக்கப்படுகிறது. இந்த நாள் யமன் தனது சகோதரியான யமுனையை சென்று பார்த்த நாள். இந்த நாளில் எந்த சகோதரன் தனது சகோதரியைச் சென்று பார்க்கிறானோ அவனுக்கு அனைத்துப் பாவங்களும் போய்விடும் என்று யமன் அனுக்ரஹித்தான்.
குபேர பூஜையை அனைத்து இல்லங்களும் சிறப்பாகச் செய்து செல்வ வளத்தைப் பெற வழி வகுப்பது தீபாவளி பண்டிகை தினங்களே!
நரகாசுரனின் வதமும் இராமன் அயோத்தி திரும்புதலும்
நரகாசுரன் தனது தாயான பூமிதேவி மட்டுமே தனக்கு மரணத்தைத் தர முடியும் என்ற வரத்தை வாங்கிக் கொண்டான். அகங்காரம் தலைக்கு ஏற அட்டகாசம் செய்து அனைவரையும் அவன் கொடுமைப்படுத்த தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் இறைவனை வேண்ட சத்யபாமை பூமிதேவியின் அம்சமாகத் தோன்றி கண்ணபிரானுடன் சென்று அவனுடன் போரிடுகிறாள். நரகன் எய்த அம்பு கண்ணபிரானை மார்பில் தாக்க, சத்யபாமை கண்ணனைக் காப்பாற்றித் தானே நரகாசுரனை வதம் செய்ய உதவுகிறாள். நரகாசுரன் தனது பிழையை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு தான் இறந்த இந்த நாளை புவியில் உள்ளோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய நாளாக அமைய வரம் வேண்ட கண்ணன் அப்படியே அருள்கிறான். அதிலிருந்து தீபங்களை ஏற்றி ஒளிமயமாக இந்த நாளை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
இராமபிரான் இராவணனை வதம் செய்து அயோத்தி மீண்டு அரியணை ஏறிய நாள் தீபாவளி நன்னாளே. ஆகவே நாடு முழுவதும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் பல லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாள் தீபாவளி என்பதால் மக்கள் அவர்களை தீபங்களை ஏற்றி நகரத்தை ஒளிரச் செய்து வரவேற்றதும் தீபாவளி நன்னாளிலேயே!
விக்ரமாதித்தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த நாள் தீபாவளியே.
ஜைன, புத்தம், சீக்கியம் கொண்டாடும் தீபாவளி
ஜைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மஹாவீரர் நிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி தினமே. ஆகவே ஜைனர்கள் இந்த தினத்தை புனித நாளாக அனுஷ்டிப்பதோடு தமது முன்னோர்களையும் இந்த நாளில் நினைவு கூர்கின்றனர்.
முகலாய மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்த சிங் இந்த நாளில் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆகவே சீக்கியர்கள் இதை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இதே நாளில் அவருடன் 52 மன்னர்களும் விடுவிக்கப்பட்டனர். ஆகவே அந்தந்த மன்னர் ஆண்ட பிரதேசங்களிலும் இது வழிவழியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கலிங்கத்துப் போரினால் மனம் மாறி அஹிம்சையை வலியுறுத்தும் புத்தமதத்தை அசோகன் தழுவியது இந்த நாளில் தான். ஆகவே புத்தமதத்தினர் இதைக் கொண்டாடுகின்றனர்.
கந்தபுராணத்தின் படி சக்தி தேவியானவள் 21 நாள் விரதம் அனுஷ்டித்து தனது கேதாரகௌரி விரதத்தை முடித்த நாள் இதுவே.
அன்றே சிவபிரான் தேவியை தனது தேகத்தில் பாதியாக ஏற்று அர்த்தநாரீசுவரர் ஆனார். ஆகவே பெண்கள் அனைவரும் இந்த நாளைப் போற்றித் துதிக்கின்றனர்.
விவேகானந்தரால் உத்வேகம் பெற்று கணிதப் பேராசிரியராக இருந்த ஸ்வாமி ராமதீர்த்தர் சந்யாசம் பெற்றது (1899இல்) தீபாவளித் திருநாளிலேயே. இவர் பிறந்ததும் தீபாவளித் திருநாளில் தான் (22-10-1873). ஜலசமாதி அடைந்ததும் ஒரு தீபாவளி நாளில் தான் (17-10-1906)! இப்படி பல மகான்களுடன் தீபாவளி நாளின் அதிசயிக்கத் தக்க தொடர்பு உண்டு!
ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு சிறப்பு அம்சம்
நாட்டில் உள்ள பல பகுதிகளும் இதைப் பலவிதமாகக் கொண்டாடுவது ஒரு வியப்பான சிறப்பான செய்தியாகும்.
தமிழகத்தில் தலையில் எண்ணெய் வைத்து நீராடி வெடிகளை வெடித்து அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைக் கூறி மகிழ்வது தமிழர் மரபு. அன்று இல்லத்தில் கங்கை வருவதாக ஐதீகம். ஆகவே ‘கங்கா ஸ்நானம் ஆயிற்றா?’ என்று ஒருவரை ஒருவர் விசாரித்து மகிழ்வர்.
கர்நாடகத்தில் நரகாசுரனை கண்ணபிரான் வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக நரக சதுர்த்தசி அல்லது சோடி தீபாவளி என்று இது அழைக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.
மஹராஷ்டிரத்தில் வசு பரஸ் என்று அழைக்கப்பட்டு மணமான மங்கையர் பசுக்களையும் கன்றுகளையும் சிறப்பாக இந்த தினத்தில் வழிபடுகின்றனர்.
குஜராத்திலோ ‘சோப்டா பூஜன்’ என்ற பெயரில் எல்லா வணிகர்களும் தங்களது வணிகம் வளமுற இந்த நாளில் சிறப்பு வழிபாடு நிகழ்த்துகின்றனர். புதுக்கணக்கு தொடங்க உகந்த நாள் இது. ஸ்டாக் மார்க்கெட் கூட சிறப்பு வணிகத்தை இந்த நாளில் அறிமுகப்படுத்துகிறது.
“ஒருவனுடைய நெற்றியில் பிரம்மா எழுதிவைத்த அளவே அவனுக்கு செல்வம் கிடைக்கும். அவன் பாலைவனத்தில் வசித்தாலும் இது கிடைக்கும். மேரு மலையில் வசித்தாலும் இதைவிடக் கூடுதலாக எதுவும் கிடைக்காது. ஆகையால் பொறுமையுடன் இரு. பணக்காரர்களிடம் சென்று அடிபணிந்து முகத்துதி செய்யாதே. ஒரு குடத்தைக் கடலில் முக்கினாலும், கிணற்றில் முக்கினாலும் குடத்தின் அளவுக்கே தண்ணீர் கிடைக்கும்”.
44. Whatever is the wealth written on one’s forehead, a little or lots, one will attain that even in a desert, and not more even on the golden mountain, Meru. Therefore, be fearless and do not grovel before the rich. Know that a pitcher takes in the same quantity of water from a well as from the ocean.
கிட்டத்திலுள்ள கிணற்றில் முகத்தாலும்
எட்டி கடலில் எடுத்தாலும் — ஒட்டுநீர்
ஒன்றேயா மேருவினும் ஊழின் படியன்றி
இன்றேயாம் பொன் எண் –44
தலைவிதிப்படியே செல்வம் கிட்டும் என்பதை விளக்க ஒரு கதை, இந்து சமய நூல்களில் உள்ளது:–
வித்யாரண்யர் என்பவர் தென்னாட்டில் துலுக்கர்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த பெரிய மஹான். அவர் இளம் வயதில் செல்வம் வேண்டி தவம் இருந்தார். இவரது தவத்தை மெச்சிய தேவி, அவர் முன் தோன்றி,
அன்பனே! உன் தவத்தை மெச்சுகிறோம் ஆனால் இந்த நற்பிறப்பில் உமக்கு செல்வம் கிடைக்க வழியில்லை. உமது தலைவிதி அப்படி.
ஆயினும் வேறு ஏதாவது ஒரு வரம் கேள்; அதைத் தருகிறேன் என்றாள்.
வித்யாரண்யர் யோசித்தார். தேவியயையே மடக்கி விடுவோம் என்று ஒரு கிடுக்கிப் பிடி போட்டார். நான் ஸந்யாஸம் வாங்கினால் அது அடுத்த பிறவிதானே. இப்போதே ஸந்யாஸி ஆகிறேன். அடுத்த பிறவிக்கான செல்வத்தைக் கொடு என்று கேட்டார்.
தேவியும் சிரித்துக் கொண்டே ‘டன்’ கணக்கில் அவர் முன் தங்கப் பாளங்களை வைத்துவிட்டு மறைந்து விட்டாள்
வித்யாரண்யரோ ஸத்யம் தவறாத மஹா யோகி. ஸந்யாஸம் எடுத்த அடுத்த நிமிடமே அவருக்குப் புரிந்தது; எதிலும் பற்று இருக்கக் கூடாது என்பது.
அடடா! தேவியிடம் ஏமாந்துவிட்டோமே. ஸந்யாசமும் செல்வமும் ‘சூடான ஐஸ்க்ரீம் என்பது போல ஆயிற்றே’ என்று உணர்ந்தார். அந்தக் காலத்தில் துலுக்கர்களின் அட்டஹாசம் பெருகிக்கொண்டே வந்தது; இந்து தர்மம் அழிபட்டு வந்தது. அவர் கண் முன்னால் இரண்டு ஆட்டு இடையர்கள் தென்பட்டனர். அவர்களிடம் பிரம்மாண்டமான செல்வத்தைக் கொடுத்து படை திரட்டச் சொன்னார். அவர்களும் உரிய பயிற்சி பெற்று மாபெரும் படை திரட்டி விஜய நகரப் பேரரசை நிறுவி தென்னாட்டில் புகுந்த துலுக்கப் படைகளை விரட்டி அடித்தார் கள்.
விதிப்படி செல்வம் கிட்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. பர்த்ருஹரி சொல்லுவது போல, பாலைவனத்தில் இருந்தாலும் செல்வம் கிட்டும் என்பதற்கிணங்க ஹரிஹரன், புக்கன் என்ற இருவருக்குச் செல்வம் போய் சேர்ந்து விஜய நகரப் பேரரசு உதயமானது.
விதியே வலியது என்னும் வள்ளுவன் கருத்து
திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் மிகத் தீவிரமாக விதியின் வலிமையை விளக்குகிறார்.
கர்ம வினை என்பதுதான் இந்துமத்தின் சிறப்புக் கொள்கை. இந்து மதத்தைத் தொடர்ந்து பாரதத்தில் எழுந்த பிற மதங்களான சமணம், பவுத்தம்,
சீக்கியம் ஆகியனவும் கர்மவினைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன.
இதோ விதியை வலியுறுத்தும் முக்கியக் குறள்கள்
வள்ளுவனும் விதியின் காரணமாகவே ஒருவனுக்கு செல்வம் கிடைக்கிறது என்னும் பர்த்ருஹரி கருத்தை ஆதரிக்கிறான்:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி- 371
பொருள்
ஒருவனுக்கு பணம் வரக்கூடிய தலைவிதி இருக்குமானால் அவனுக்கு முயற்சி தோன்றும்;அவன் தலைவிதி பணம் வரக்கூடாது என்றால் அவனை சோம்பல் ஆட்கொள்ளும்
பிரம்மாதான் நெற்றியில் எழுதுகிறான் என்பதை வள்ளுவனும் ஒப்புக்கொள்கிறான்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது- 377
கோடி கோடியாகப் பொருள் சேர்த்து இருந்தாலும் நம் விதியை வகுக்கும் இறைவன் எழுதியபடியே நடக்கும்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்- 380
தலை விதியை விட, வேறு வலி மையானது ஏதேனும் இருக்கிறதா?
அவ்வையார்
ஒரு குடத்தை எவ்வளவு தண்ணீரில் முக்கினாலும், குடத்தின் கொள் அளவுக்கே தண்ணீர் மிஞ்சும் உள்ளே தங்கும் என்பதை பர்த்ருஹரியிடமிருந்து அவ்வையாரும் எடுத்தாண்டுள்ளார்.
இதோ அந்தப் பாடல்
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.
18.Though you dip the measure deep in the deep sea water, it will not contain four measures. O Maid ! Though riches and husband are choice, the happiness of the couple hangs on fate or destiny.
மூதுரைப் பாடல் இது. இதை எழுதிய அவ்வையார் சங்க கால அவ்வையார் அல்ல. பர்த்ருஹரிக்குப் பல நூறு நூற்றாண்டுகள் பிறப்பட்டவர். பர்த்ருஹரி சொன்ன பல கருத்துக்கள் அவருக்குப் பின்னர் தோன்றிய பதினென் கீழக்கணக்கு நூல்களிலும் உள.
இன்னொரு சிறப்பு- பிரம்மாதான் ஒருவனுடைய தலையில் அல்லது நெற்றியில் எல்லாவற்றையும் எழுதிவைக்கிறான் என்பதாகும்.
எழுத்துமுறையைக் கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. கல்வி, எழுத்து, படைப்பு, விதி ஆகியவற்றுக்குப் பிரம்மாவும், அவருடைய மனைவி ஸரஸ்வதியுமே அதிதேவதைகள் என்பது இமயம் முதல் குமரி வரையுள்ள நம்பிக்கை.
XXX
SLOKA 45
अकरुणत्वम् अकारणविग्रहः
परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता
प्रकृतिसिद्धम् इदं हि दुरात्मनाम् ॥ 1.45 ॥
Ruthlessness, unfounded hostility, desire for another’s wealth and wife, envy towards good people and relatives – these are naturally found in the wicked–45
எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.
திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079
பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.
ஈசாப் கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில் பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.
பிறன் மனை நோக்காத பேராண்மை
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146
பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–
பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.
Xxx
picture of a snake charmer
பாம்பு நீர் குடித்தால் விஷமாகும்; பசு நீர் குடித்தால் பால் ஆகும்!
SLOKA 46
दुर्जनः परिहर्तव्यो
विद्ययाஉलकृतोஉपि सन् ।
मणिना भूषितः सर्पः
किम् असौ न भयङ्करः ॥ 1.46 ॥
துர்ஜனஹ பரிஹர்தவ்யோ வித்யயாஅலக்ருதோ அபிஸன்
மணினா பூஷிதஹ ஸர்பஹகிம் அஸௌ ந பயங்கரஹ- 1-46
கற்றவர்களாயினும் தீய குணம் இருந்தால் அவர்களைத் தவிர்க்க வேண்டும். பாம்பின் தலையில் மாணிக்கம் இருந்தாலும் அது ஆபத்தானதல்லவா? –பாடல் 46
46. An evil person is to be avoided, even if adorned with learning. Is the cobra, despite being decorated with a gem, not fearsome?
அரவின் தலையில் அருமணி உண்டேனும்
விரவும் பயத்தால் விலக்க — விரைகுவ போல்
தீயவர்பாற் கல்வி சிறந்தாலும் மற்றவரை
நீயகன்று தூரத்தில் நில்
XXXXX
தீயவர்பால் கல்வி சிறந்தாலு மற்றவரைத்
தூயவரென்றெண்ணியே துன்னற்க– சேயிழையே!
தண்ணொளிய மாணிக்க சர்ப்பந் தரித்தாலும்
நண்ணுவரோ மற்றதனை நாடு– நீதிவெண்பா
பொருள்
பாம்பிடம் ஒளிமிக்க மாணிக்கக் கல் இர்ந்தாலும் யாராவது அதை நெருங்குவார்களா? அதே போல கெட்டவர்களிடம் கல்வி அறிவு இருந்தாலும் நாடக் கூடாது.
பசுவுக்கு நீர்–பால்; பாம்புக்கு நீர் – விஷம்
பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படு ஹெண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு
ஒளிஆய்ம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்
களியாம் கடையாயார் மாட்டு– –அறநெறிச்சாரம்
பொருள்
பாம்புகள் குடிக்கும் நீர் எல்லாம் விஷமாக மாறுகிறது;
கயவர்கள் கற்கும் ஞன நூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்;
பசு மாடுகள் குடிக்கும் தண்ணீர் இனிய பாலாக மாறும்;
உயர்ந்தோர் கற்கும் ஞான நூல்கள் அவர்கள் மாட்டு அறிவினை வளர்க்கும்.
தீயோர்கள் கற்றாலும் கற்றதையெல்லாம் தவறாக வியாக்கியானம் செய்வர்.
It is amazing to read that Brahmins ruled Sri Lanka for 50 years in the very early stage of its history. They ruled Sri Lanka 2400 years ago, before Devanampiya Tissa introduced Buddhism in the country. C S Navaratnam in his book A Short History of Hindusim in Ceylon (1964) has beautifully summarised it.
My reading of seven other 100 year old books available in London British Library and SOAS (University of London ) library shows that Brahmins lived there from Northern Jaffna to Southern Galle; and they were not just temple priests but they held high positions in government. They were living in Lanka even during Tamil Elara rule ; Sri Lankan Cleopatra , notorious Anula , married a palace Brahmin as well. She murdered her husband and married a lot of men like Elizabeth Taylor and Henry VIII.
Many people now have a wrong notion that only Jaffna area bought Brahmin priests from India and they were the only Brahmins. But Buddhists themselves can’t avoid mentioning Brahmins in all their books from earlier period. Devanampiya Tissa and other early kings gave Brahmins first place like Asoka who in all his inscriptions mentioned Brahmins first. Asokan inscriptions are worded as ‘Brahmana Sramana’ giving priority to Brahmins. Buddha himself praised Brahmins in a whole chapter in Dhammapada and in two other slokas say that even murders by Brahmins and throwing out kings are justified.
Sri Lankan Brahmins were authors as well. They wrote astrology books and created Panchangas (almanacs) for Hindus. Even Sri Lankan kings followed all that is said in Hindu scriptures and when they died, they were cremated with Vedic mantras.
In another book, the Arya chakravartis are shown having Brahminical origin. A lot of research is required to collect all Brahmin references in Mahavamsa, Choola vamsa, Rajavali, Inscriptions, Pali and Sinhalese books.
It is also interesting to see that Sri Lankan authors were so influenced by Kalidasa, who lived in the first century BCE. Following Kalidasa’s Raghu VAMSA, they wrote Maha VAMSA and Chula VAMSA. Following Megha Sandesa, they wrote several Sandesa (Messenger Poems) kavyas. A comparative study would bring out more truths.
Please see the attachments from C S Navaratnam’s book below,
to be continued………………………………………..
tags– Brahmin rule, in Sri Lanka, Ceylon, Brahmin Kings of Sri Lanka, C S Navaratnam
மட்டக் களப்பில் ராம நாதன் என்ற பிராமணனுக்கு முதலாவது ராஜ சிம்மன் அளித்த சாசனம் நமக்குக் கிடைக்கிறது. பல நாட்டுப் பகைவர்களை முறியடித்து மன்னர்களைவென்ற ராஜ சிம்ம மஹாராஜா
ராமநாத பிராமணனுக்கு , பின் வரும் நிலங்களை தானம் செய்கிறான் .
……….. …..இந்த சாசனத்துக்கு ஊறு விளைவிப்பவன் , காசி ராமேஸ்வரம், கதிர்காமம், மாணிக்க கங்கை ஆகிய இடங்களில் பாவம் செய்வதால் கிடைக்கும் பலன்களுக்குச் சமமான துன்பத்தை அனுபவிக்கக்கடவது என்று சாசனம் முடிகிறது.
xxxx
கண்டி மன்னன் இரண்டாவது ராஜசிம்மன்
இலங்கை மன்னர்களின் ராஜ சபையில் பிராமண வேத பண்டிதர்கள் இருந்து வேத மந்திரங்களை ஓதி வாழ்த்தியதை சேவுள் சந்தேசய (அழகையா வண்ண Thotagamuwe Sri Rahula Thera (1408 – 1491) என்ற காவியமே பாராட்டுகிறது. ராஜ சிம்மன் அரசவையில் சேர, சோழ , பாண்டியர்கள் மற்றும் தோல்வி அடைந்த மன்னர்கள் வணங்கி நிற்க, வேத மந்திரங்களை பிராமணர்கள் உச்சரிக்க , அரசன் தெய்வம் போல் வீற்றிருந்தான் என்கிறது ஒரு செய்யுள் .
xxxx
இது ஒரு புறமிருக்க 1640ம் ஆண்டில், இரண்டாவது ராஜ சிம்மன் படேவியாவுக்கு பிராமண அமைச்சரை தூது அனுப்பிய செய்தியும் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிராமண குடும்பங்கள் ஹாலந்து நாட்டுக்குக் குடியேறி கல்வி கற்று, பெரிய பதவி வகித்ததும் தெரிகிறது. 400 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படிப் பிராமணர்கள் வெளிநாட்டுகுச் சென்று கல்வி கற்றதை வேறு எங்கும் காணமுடியவில்லை..
படேவியா – இந்தோனேஷியாவின் ஜாகர்த்தா
Batavia was the capital of the Dutch East Indies. The area corresponds to present-day Jakarta, Indonesia. Batavia can refer to the city proper or its suburbs and hinterland, the Ommelanden, which included the much larger area of the Residency of Batavia in the present-day Indonesian provinces of Jakarta, Banten and West Java.
அசோக மாமன்னன், எப்படி பிராமணர்களை கல்வெட்டுகளில் முதலில் குறிப்பிட்டு மதிப்பு கொடுத்தானோ அவ் வாறே இலங்கையின் சமகால மன்னனான தேவநாம்பி(ரி)ய திஸ்ஸவும் பிராமண ர்களுக்கு மதிப்பு கொடுத்தான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்புகோளத்தில் (சம்பந்துறை ), புனித அரசமரம் / போ தி மரம் வந்து இறங்கியபோது அங்கு இரண்டாவது ஸ்தானம், திவக்க (திவாகரன்) என்ற பிராமணருக்கு அளிக்கப்பட்டது . அசோகன் மகள் சங்கமித்திரா, தேரர் மஹிந்தர், பிராமணர் திவாக ஆகிய மூவர் தான் அரசமர வரவேற்பு விழாவை முன்னின்று நடத்தினர்.
பதித்யாவின் (Batitya) ஆட்சிக்காலத்தில் வினய நூல் பற்றி பிக்குகளிடையே மோதல் ஏற்பட்டது. அதற்கான வியாக்கியானத்தை இரண்டு கோஷ்டிகள் வெவ்வேறுவிதமாக விளக்கியது. உடனே மன்னன் , சகல கலா வல்லவனான ஆன ஒரு பிராமண மேதாவியை நடுவராக நியமித்தான். அவர் சொன்னதை எல்லோரும் ஏற்றார்கள் . அந்த அளவுக்கு மன்னரும், பெளத்தர்களும் பிராமணர்களை மதித்தார்கள்.
xxx
சோதிட நூல் சரஜோதி மாலை
இலங்கையில் மிகவும் பிரபலமான ஜோதிட நூல் சரஜோதி மாலை. இதை 700 ஆண்டுகளுக்கு முன்னர் , 1310ல் போஜ ராஜன் என்ற பிராமணர் இயற்றினார்.இன்றும் தமிழ் ஜோதிடர்கள் இதை பயன்படுத்துகின்றனர்.அவர் மூன்றாம் பராக்கிரம பாஹு காலத்தில் வாழ்ந்தவர்.
பின்னர் யாழ்ப்பாண மன்னர் ஒருவர் காலத்தில் செகராஜசேகரமாலை என்ற இன்னும் ஒரு சோதிட நூல் , சோமன் என்ற பிராமணரால் இயற்றப்பட்டது வடக்கு வன்னி பிரதேச வரலாற்றைக் கூறும் வையா பாடல் என்பதை வையாபுரி அய்யர் இயற்றினார்.
ஆறாம் பராக்கிரம பாஹு காலத்தில் வாழ்ந்தவர்..ஸ்ரீ ராமச்சந்திர கவி பாரதி இந்தியத் தமிழரான அவர் , இலங்கையில் வாழ்ந்துவந்தார்; அவர் புத்தர் மீது சம்ஸ்க்ருத மொழியில் 100 பாடல்களை பக்தி சதகம் என்ற பெயரில் பாடினார்..
அராலி ராமலிங்க ஐயர், முதல் பஞ்சாங்கத்தை 1667-ல் இலங்கை இந்துக்களுக்காக கணித்தார்;. 400 ஆண்டுகளாக அதைத் தமிழர்கள் பின்பற்றிவருகிறார்கள் .
கடந்த சில நூற்றாண்டுகளில் வாழ்ந்த புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் பிராமணர்கள் :–
வட்டுக்கோட்டை கணபதி ஐயர் 1709-1784
இணுவில் நடராஜ ஐயர் 1854-1905
வண்ணார் பண்ணை சுவாமிகள் பெரியதம்பி ஐயர் ; அவர் 120 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து சேவை ஆற்றினார்..
xxx
அரசவையில் பிராமணர்கள் ; இலங்கை கிளியோபாட்ரா
இலங்கை வரலாற்றில் மிகவும் கெட்ட பெயர் எடுத்த அரசி Anulka அனுலா. அவள் CLEOPATRA கிளியோபாட்ரா போன்ற்வள் .சோர நாகனின் மனைவி; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தாள் BCE 12-16 . அவள் கணவனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு , அடுத்தடுத்துப் பலரை மணந்தாள் . நெளியா என்ற பிராமண புரோகிதரையும் மணந்தாள் .
xxxx
ஆறாம் பராக்கிரம பாஹு ஆண்ட காலத்தில் பிரமணர்களுக்குக் கிடைத்த சலுகைகள் குறித்து கோகில சந்தேச (குயில்விடு தூது )விரிவாகவே பேசுகிறது.
சங்க காலத்துக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாசன் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்தான். அவன் ரகுவம்சம் இயற்றியதை அறிந்த இலங்கை அறிஞர்கள் மஹாவம்சம், சூள வம்சம் என்ற பெயர்களில் வம்ச வரலாறுகளை எழுதினர்க;ள். காளிதாசன் எழுதிய மேக சந்தேசம் உலகப் புகழ்பெற்ற தூத காவியம் ஆகும். இதைப் பார்த்து இலங்கை எழுத்தாளர்கள் ஏராளமான சந்தேச (தூத்து ) காவியங்களை எழுதினார்கள் .
xxx
பிராமணர்களுக்கு கிடைத்த நில தானம், ஸ்வர்ண / gold தானம் முதலியன பற்றி எழுதினால் அது நீண்ட பட்டியல் ஆகிவிடும் . தமிழ்நாட்டில் மங்கலம் ஏ நிற பெயரில் முடியும் கிராமங்கள் அனைத்தும் பிராமணர்களுக்கு மன்னர்கள் கொடுத்த ஊர்கள் ஆகும். இதை பிரம்மதேயம் என்பார்கள்; இறைவனுக்காக கொடுத்தால் அதை தேவதானம் என்பார்கள் .
இலங்கையில் பிராமணர்களுக்கு கிடைத்த தானங்கள் பற்றித் தனியாக எழுதுகிறேன்.
வேத சடங்குகள்
இலங்கை மன்னர்கள் பெளத்தர்களாக இருந்தாலும் பலரும் வேத கால பட்டாபிஷேக சடங்குகளைப் பின்பற்றினார்கள் . இன்னும் பல இடங்களில் பெளாத்தர்களே வேத மாடலில் Vedic Model புதிய சடங்குகளை உண்டாக்கி மன்னர்களைத் திருப்திப்படுத்தினர்
ஆறாவது பராக்கிரம பாஹு அளித்த நில தானம் , குடுமுரி ராசா கல்வெட்டில் விரிவாக உள்ளது. பெயர்களை பார்க்கையில் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதும் தெரிகிறது . இந்த மன்னனின் தகனச் சடங்குகள் வேத மந்திரங்கள் ஒலிக்க நடந்தது.
xxxxx
கரிகாலன் காலத்து பிராமணர்கள்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழநாட்டை ஆண்ட கரிகாலன் பருந்து (எருவை) வடிவ யாக குண்டம் அமைத்து பெரும் யாகம் செய்தது சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது. அவன் ரிக் வேதத்தில் சொன்னபடி ஏழு அடிகள் நடந்து சென்று விருந்தினருக்கு குட் பை Good Bye சொன்ன செய்தியையும் பாவலர்கள் பாடிச்சென்றனர். அவன்தான் இலங்கை ஏழாரன் என்றும் இல்லை அவன் சமகாலத்தில் ஆண்டவன் ஏலாரன் (7 மன்னர்களை வென்று ஏழு ஆரம் /மாலை அணிந்தவன்) என்றும் பேசுவர் பலர். பெளத்த மத நூல்களே அவனை மிகவும் புகழ்ந்து பேசும். அவன் காலத்தில் த்வார மண்டல என்னும் கிராமத்தில் வாழ்ந்த குண்டலி என்ற பிராமணன் மூலமாக துத்தகாமினி பல பொருட்களை பெற்றான் என்ற செய்தியும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.
xxxx
பிராமண புரட்சியும் தமிழர் ஆட்சியும்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் வல கம்பாவின் (29-17 BCE ) முதல் ஆட்சி ஆண்டில் மஹாகாமத்தில் திஸ்ஸ என்ற பிராமணன் மன்னருக்கு எதிராக, சாணக்கியன் போல புரட்சிக்கொடி உயர்த்தினான். அப்போது பெரும் குழப்பம் ஏற்பட்டது தமிழ் நாட்டிலிருந்த 7 தமிழ்த் தலைவர்கள் பெரும் படைகளுடன் வந்து ஆட்சியைக் கைப்பற்றினர் .
மஹாசேனன் என்ற மன்னன் இந்துக்கோவில்களை இடித்து பெளத்த விஹாரங்களை எழுப்பிய செய்தி மகாவம்ச நூலில் உள்ளது. அவன் அப்படி புத்த விஹாரை கட்டிய ஊர்களில் ஒன்று காலந்த என்ற பிராமணன் ஊராகும். அவன் பெயரைக் குறிப்பிட்டு அந்த ஊரிலும் மஹாசேனன் புத்த விஹாரம் எழுப்பினான் என்று சொல்லுவதால் அந்தப் பிராமணன் எவ்வளவு புகழ்பெற்றவன் என்பதும் புலனாகிறது.
இந்தியாவில் புத்தர் காலத்தில் மிகப்புகழ்பெற்ற பிராமணர்கள் பெளத்த மதத்தை தழுவினார்கள்; ஏனெனில் புத்தருக்கு பிராமணர்கள் மீது அபார மதிப்பு; பிராமணர்கள் படுகொலை செய்தாலும், அவர்கள் ஆட்ச்சியைக் கவிழ்த்தாலும் அவர்கள் செய்தது சரியே என்றும், அவர்களைத் தண்டிக்கக்கூடாது என்றும் தம்மபதம் என்னும் வேதப் புஸ்தகத்தில் இரண்டு ஸ்லோகங்களில் பாடியுள்ளார் (முழு விவரம் எனது பழைய கட்டுரையில் உள்ளது)
தம்மபதம் என்னும் புஸ்தகம் பெளத்தர்கள் வேத புஸ்தகம். . அதில் கடைசி அத்தியாயம் முழுவதும் பிராமணர்களின் புகழ்பாடுகிறது. அதில் பிராமணர்கள் யார் என்று மனு ஸ்ம்ருதி போலவே வரையறையும் செய்துள்ளார். இலங்கையில் புத்தரைப் பின்பற்றிய காம தேவ என்ற பிராமணன் சபரகமுவவில் சமன் தேவாலயத்தை நிறுவினான்
இலங்கையில் உள்ள பாலி மத நூல்களை படிக்கையில் ஒரு விஷயம் தெளிவாகிறது. ஏதோ யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக்கோவில்களுக்கு வந்த தமிழ் நாட்டுப் பிராமணர்தான் இலங்கையில் வசித்தனர் என்று கருதி விடக்கூடாது விஜயன் காலத்துக்கு முன்னரே, அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் வடகோடி யாழ்ப்பாணம் முதல் தென் கோடி கதிர் காமம், காலி Galle நகர்வரை பிராமணர்கள் இருந்ததையும் அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே 50 ஆண்டுகள் இலங்கையை ஆண்டதையும் பெளத்த மத நூல்கள்தான் நமக்குச் செப்புகின்றன. அமைசர்களாகவும் புரோகிதர்களாகவும், அரசர்களாகவும், தூதர்களாகவும், நூலாசிரியர்களாகவும் பிராமணர்கள் இருந்தனர் .
அடுத்து இந்து சாம்ராஜ்யத்தை இலங்கையில் நிறுவிய ஆரிய சக்கரவர்த்திகள் பிராமணர்களா ? என்பதை ஆராய்வோம்
74 வருடங்களாக ஒரு பூச்சியின் தொல்லை தாங்க முடியாமல் அவஸ்தை பட்ட இந்தியாவை மோடிஜி காப்பாற்ற நினைத்தார்.
காப்பாற்றி விட்டார்.
முப்பது நிமிடத்தில் மூட்டையைக் கட்டு என்று சொல்லி விட்டார் அதிரடியாக!
என்ன விஷயம்?
யுனைடெட் நேஷன்ஸ் மிலிடரி அப்ஸர்வர் க்ரூப் (UNITED NATIONS MILITARY OBSERVER GROUP) என்று ஒரு குழு.
1948லிருந்து இந்தக் குழு இந்தியாவில் இயங்கி வந்தது.
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் என்ன அணுகுமுறையை மேற்கொள்கிறது என்பதைக் கண்காணிப்பதே இதன் வேலை. பூச்சி கடிப்பது போல இது இந்தியாவைக் கடித்துக் கொண்டே இருந்தது.
இந்தக் குழுவில் இருக்கும் அனைவருக்கும் சம்பளம், இருப்பிடம், அலவன்ஸ் – இவை அனைத்தும் இந்தியாவின் செலவு. இவர்கள் பொழுதுபோக்கு, சாப்பாடு, பயணம், ஆட்டம், பாட்டம் எல்லாம் இந்திய மக்களின் வரிப்பணத்தில்.
ஆனால் இதன் அறிக்கைகளோ தவறாமல் இந்தியாவிற்கு எதிராக இருக்கும்!
காஷ்மீர் பிரச்சினை என்பது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கான இரு தரப்பு பிரச்சினை இல்லை என்பது இதன் வாதம். இது முத்தரப்பு பிரச்சினையாம்!
அதாவது காஷ்மீர், பாகிஸ்தான், இந்தக் குழு ஆகிய மூன்று தரப்பினருக்குமான பிரச்சினையாம் காஷ்மீர் பிரச்சினை. இதற்கும் இந்தியாவிற்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம்?!
இதை இங்கு அமர்த்திய பெரியவர் யார் தெரியுமா?
ஜவஹர்லால் நேரு.
74 வருடங்களாக இது செய்த வந்த அட்டகாசத்தை மோடி பார்த்தார்; ஒரு வழி செய்தார்.
இன்னும் முப்பதே நிமிடங்களில் மூட்டையைக் கட்டுங்கள்; நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று அதிரடி உத்தரவு போட்டார்.
அவர்களுடைய விசா, தங்குமிடம் அனைத்தையும் ரத்து செய்தார் அவர்.
பத்து நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவையும் போட்டார்.
40 பேர்கள் இந்தக் குழு முழித்தது.
இந்த பிரிட்டிஷ் குழு ஒரு வழியாக நாட்டை விட்டு வெளியேறியவுடன் மொத்த இந்தியாவும் நிஜமாக பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுதலை பெற்றது என்று சொல்லலாம்.
இந்தச் செயலில் பெரிய பங்கு வகித்தவர் வெளியுறவு மந்திரி திரு எஸ்.ஜெய்சங்கர்.
இந்தக் குழுவின் ஆதங்கம் என்ன தெரியுமா?
“இந்தியா எங்களுக்குக் கொடுக்கும் தொகை போதாது; எங்கள் அலவன்ஸை இந்தியா அதிகரிக்க வேண்டும்” என்றது இந்தக் குழு!
வைக்கப்பட்டது ஆப்பு!
மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டிய செய்தி இது.
அனைவருக்கும் சொல்வோம்; மகிழ்வோம்!
***
முக்கிய குறிப்பு : இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்தே இந்தக் குழு வெளியேற்றப்படும் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் செப்டம்பர் 26, 2023 அன்று இந்தக் குழு மூட்டை கட்டப்பட்டு விட்டதாக இணையதள பதிவுகள் கூறுகின்றன. பெரிய அளவில் பேசப்பட வேண்டிய இந்த விஷயத்தை இந்திய பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லையா அல்லது இந்தக் குழு இன்னும் அகற்றப்படவில்லையா? பொறுத்திருந்து இன்னும் செய்தித்தாள்களைக் கவனிப்போம்.
Source : Net
Please read the original given underneath:
*New India under Modi Regime kicking out the UNMOG in another 10 days
74 years = 30 minutes
What’s UN M O G
India was suffering from a bug for the last 74 years,
Whose name is… *United Nations Military Observer Group*.
Now Modi government has abolished it.
Our Foreign Minister S Jaishankar played a very important role in this.
In just 30 minutes, this entire committee was ordered to leave India within the next ten days!
India has shown the way out of India to the UN Military Observer Group, a committee of the United Nations!
This committee was working in India since 1948 and was keeping a close watch on the attitude of India and Pakistan, especially India itself, on the Kashmir issue.
India was bearing all the expenses of working, traveling, living, eating, getting up and down!
This committee had given very strong statements against India.
It tried to declare Kashmir a trilateral issue rather than a bilateral one and also made serious allegations against India such as *”India is obstructing the work of the United Nations Military Observer Group between us, India and Pakistan so that the committee does not function properly.”*
The committee did not stop here… It further said “The amount that India gives us does not cover our expenses.
So India will have to increase our allowances and expenses and India will have to pay for it!”
It so happened that the dog we had kept was eating ours and was barking at us and had even started biting.
On this the Government of India only said to the Committee : “We have suffered a lot because of your drama. Now you leave from here immediately”. “There is no place left for you in India!”
In just 30 minutes, the Modi Govt. cancelled their visa/s and asked them to leave India and go to their country/ies immediately /
within the next 10 days!!!
For the last 74 years, India has been home to more than 40 of these people and
was bearing their expenses.
Now they have been exiled!
And you know who brought them 74 years ago…?
Brother-in-law of Congressmen *”Jawahar Lal Nehru”!*
*99% of the public would not even know that a British team was ruling India till today because of these Congressmen*.
Today Modi ji has done the work of uprooting the last pillar of the British from India.
40. An impoverished man desires a handful of grains. When he is affluent, he considers the world as equal to just a blade of grass. Hence, due to the variability of worth or triviality of things, (we can say that) it is one’s position that enhances or reduces (the value of) objects.
ஏழையாய் இருப்போனுக்கு ஒரு சில தானிய மணிகள் கிடைத்தால் மகிழ்ச்சி; ஆனால் அவனுக்கே நிறைய செல்வம் கிடைத்து கோடீஸ்வரன் ஆகிவிட்டாலோ உலகத்தையே ஒரு சிறு புல் என மதிப்பான். ஆக செல்வத்தின் தன்மை நிலையற்றது. ஒருவனுடைய சூழ்நிலையைப் பொறுத்தே அதன் முக்கியத்துவம் உள்ளது– பர்த்ருஹரி நீதி சதகம் , ஸ்லோகம் 40
பரிக்ஷீணஹ கஸ்சித் ப்ருஹயதி யவானாம் ப்ரஸ்ருதயே
ஸ பஸ்சாத் ஸம்பூர்ணஹ கலயதி தரித்ரீம் த்ருண சமம்
அதஸ்சானே காந்தா குருலகுதயார்தேஷு தனினா
மவஸ்தா வஸ்தூனி ப்ரதயதி ச ஸங்கோசயதி ச- 40
இது செல்வம் வந்துவிட்டால் ஒருவன் தலைகால் புரியாமல் திரிவான் என்பதைக் காட்டும்.
பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு ஸர்மன் இதை இன்னும் அழகாக வருணிப்பான். முதலில் சோர்ந்து கிடந்த எலிகள், வயிறு கொழுக்கச் சாப்பிட்டவுடன் எகிரிக் குதிக்க ஆரம்பிக்கும் இதுவே செல்வம் வந்தவர்களின் நிலையும் என்பது விளங்கும்.
xxxx
SLOKA 41
राजन्दुधुक्षसि यदि क्षितिधेनुम् एतां
तेनाद्य वत्सम् इव लोकम् अमुं पुषाण
तस्मिंश्च सम्यगनिशं परिपोष्यमाणे
नानाफलैः फलति कल्पलतेव भूमिः ॥ 1.41 ॥
41. O King, if you wish to milk the cow that is this earth, nourish now the people of the world, like a calf. When the calf is well-cared, the earth yields all fruits, like the desire-granting creeper.
காசினியாங் காராம்பசுப்பால் கறப்பதெனின்
மாசிலா வேந்தனே ஆண் கன்றை — நேசமுடன்
உண்பிப்பதுபோல் உலகளிக்க கற்பகம்போல்
மண்மா துநக்களிப்பால் வாழ்வு
வரி விதிப்பது எப்படி?
ஓ அரசனே! இந்தப் பூமி என்னும் பசுவிடம் இருந்து பால் கறக்க விரும்பினால், முதலில் கன்றுகள் என்னும் மக்களுக்கு உணவளித்துப் பாதுகாக்க வேண்டும். உனது மக்களை அன்புடனும் பரிவுடனும் போற்றிப் பாதுகாத்தால், பூமியானது கற்பக மரம் போல வேண்டியதை எல்லாம் உனக்கு அளிக்கும்.–41
காளிதாசனும் கூட இதை வேறு விதமாகச் சொல்லுவான். ஆயிரம் கிரனணங்களால் கடல் நீரை சூரியன் உறிஞ்சுவது எதற்காகத் தெரியுமா? அதை மழை போல பூமியில் கொட்டதான் என்பான். ஆக அரசனுடைய வரிவிதிப்பு மக்களுக்காகவே!
வரி விதிப்பது பற்றி சாணக்கியன் எழுதிய அர்த்த சாத்திரத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது. அது உலகின் முதலாவது பொருளாதார நூல். ஆகையால் அதில் வியப்பேதும் இல்லை ஆனால் வள்ளுவன், காளிதாசன், மனு முதலானோர் பொருளாதார விடயங்களை எழுத வரவில்லை. ஆயினும் அவர்களும் இவ்விஷயத்தைத் தொட்டுக்காட்டியுள்ளனர்.
அட்டை போல உறிஞ்சு!
மனுவின் வரிவிதிப்பு அணுகுமுறையும் சிறிது வேறுபட்டது.
ஒரு அரசனானவன், அட்டை போல, கன்றுக்குட்டி போல, தேனீ போல கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆண்டுக்கான வட்டியைப் பெறவேண்டும்.(7-129)
அட்டை போல (இரத்தத்தை) உறிஞ்சு என்று சொல்லுவது அவ்வளவு நன்றாக இல்லையே என்று எண்ணலாம். ஆனால் இது பணக்காரர் விஷயத்தில் பொருந்தும். நான் வாழும் லண்டனில் கூட அதிக பணம் சம்பாதிப்போரின் பணத்தில் 60 சதவிகிதத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். இது என்னடா பகற்கொள்ளை? என்று எண்ணுவோம். ஆயினும் கம்பெனிகள் வாரி வழங்குவதால் இந்தக் கட்டுப்பாடு.
அட்டை என்னும் பூச்சி இரத்தத்தை உறிஞ்சியதாலோ, கன்றுக்குட்டி பால் குடித்ததாலோ, தேனீக்கள் தேன் எடுத்ததாலோ எந்தப் பிராணியும் எந்தப் பூவும் அழிவதில்லை.
பணக்கார்களுக்கு அட்டை போலவும், மத்திய தர வர்கத்துக்கு கன்று போலவும் ஏழைகளுக்கு தேனீ போலவும் வரி விதிப்புக் கொள்கை இருக்கட்டும் என்று மனு சொல்லாமல் சொல்லுவான்.
வள்ளுவன் சொல்லுவான்:
அதிக வரி விதிப்பது பாலைவனத்தில் கள்ளர்கள் வழிமறித்து எடுக்கும் பகற்கொள்ளைக்கு நேர் நிகர் என்று.
வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு (குறள் 552)
பொருள்:- ஒரு அரசன் குடிமக்களை வருத்தி கட்டாயப்படுத்தி வரி வாங்குவது, வேல் ஏந்திய வழிப்பறிக் கொள்ளைக்காரன் வழி மறித்து பொருளைப் பறிப்பதற்குச் சமம்.
காளிதாசன், அவனது ரகுவம்ச காவியத்தில் சொல்லுவான்:-
ப்ரஜானாமேவ பூத்யர்த்தம்
சதாப்யோ பலிமக்ரஹீத்
சஹஸ்ர குணமுத்ஸ்ரஷ்டும்
ஆதத்தே ஹி ரசம் ரவி: (ரகு 1-18)
சூரியன் தன் ஆயிரம் கிரணங்களால் பல வகையான இடங்களிலிருந்து நீரை எடுக்கிறான். நீரை எடுக்கும் போது நீர் நிலைக்குத் தீங்கு செய்வதில்லை. எடுத்த நீரை மழையாக திருப்பித் தரும்போது பயிர்களும் உயிர்களும் செழிக்கின்றன. மழை எந்த வேறுபாடுமின்றி எல்லோருக்கும் உதவுவது போல அரசனும் உதவுவான்.
இந்துமத நுல்களில் நாடும் பூமியும் பசுவுடன் ஒப்பிடப்படுகிறது. பசு பால் தருவது போல பூமியும் வற்றாது வளம் கொழிக்கும்.
Xxxx
SLOKA 42
सत्यानृता च परुषा प्रियवादिनी च
हिंस्रा दयालुरपि चार्थपरा वदान्या ।
नित्यव्यया प्रचुरनित्यधनागमा च
वाराङ्गनेव नृपनीतिरनेकरूपा ॥ 1.42 ॥
42. Now true, now false, sometimes harsh, sometimes pleasing, hurtful and merciful at different times, greedy and generous by turns, always spending and accumulating lots of wealth – the policy of kings, like a courtesan, has many forms.
சில்லிடத்து மன்னீதி சீராருஞ் சத்தியமாய்ச்
சிலிடத்து சத்தியம் சேர்ந்ததாய்ச்- சில்லிடத்தில்
காதுக்கினியதாய் கடினமாய்ச் சில்லிடத்தில்
ஓது நிஷ் டூரமாய் ஓரிடத்தில் — தீதில்
கருணையாய் ஓரிடத்தில் காதல் பொருள்மேல்
மருவுவதாய் ஓரிடத்தில் மற்றும் – ஒருபால்
பொருட்செலவு செய்வதாய் ப் பூண்டொ ருபால் செய்வித்
திருப்பதாய் ஓரிடத்தில் செல்வம் —பெருக்குவதாய்ப்
பற்பல நாலாறா னோர் பாலாறா மாறுபோல்
நிற்பதால் என்றுணர்க நீ
xxxxx
அரசனும் விலை மாதும்
ஒரு அரசன் விலை மாதர் போன்றவன் என்று பர்த்ருஹரி சொல்லுவான். இக்கருத்து சங்க இலக்கிய நூலான புற நானூற்றிலும் (365) உள்ளது.
ஸத்யான்ருதா ச பருஷா ப்ரியவாதினீ ச
ஹிம்ஸ்ரா தயாலுஅபி சார்த்தபரா வதான்யா
நித்யவ்யயா ப்ரசுரனித்யதனாகமா ச
வாராங்கனேவ ந்ருபனீதிரனேகரூபா -42
ஒரு அரசனுடைய வாழ்வு ஒரு விபசாரியைப் போல பல உருவங்களை எடுக்கும். அவன் பொய்யும் பேசுவான்; மெய்யும் உரைப்பான். அவன் சுடு சொற்களும் பெய்வான்; இனிய சொல்லும் அருள்வான். கருணையுடன் இருப்பான்;சில நேரங்களில் கொடுங்கோலனாகக் காட்சி தருவான். அவன் கொடயாளியாகவும் இருப்பான்; கருமியாகச் செல்வத்தையும் சேர்ப்பான். சில நேரங்களில் பணத்தை விரயமும் செய்வான்- ஸ்லோகம் 42
இதை அடுத்த ஸ்லோகத்தில் என்ன சொல்கிறான் என்று பார்த்து ஒப்பிட வேண்டும். ஒருவனுடைய போக்கு எப்படியும் இருக்கலாம். அவனுடைய அப்போதைய மனநிலையே இதற்குக் காரணம் என்றும் கொள்ளலாம் அல்லது அரசனானவன் இப்படி எல்லாம் இருக்கும் நிர்பந்தம் உண்டு என்றும் கருதலாம். ஆனால் அடுத்த ஸ்லோகத்தில் ஆறு நல்ல குணங்களைப் பட்டியலிட்டு விடுகிறான். ஆகையால் பர்த்ருஹரியின் கொள்கை நமக்குத் தெளிவாகி விடுகிறது.
xxxx
SLOKA 43
आज्ञा कीर्तिः पालनं ब्राह्मणानां
दानं भोगो मित्रसंरक्षणं च
येषाम् एते षड्गुणा न प्रवृत्ताः
कोஉर्थस्तेषां पार्थिवोपाश्रयेण ॥ 1.43 ॥
ஆக்ஞா கீர்த்திஹி பாலனம் ப்ராஹ்மணானாம்
தானம் போகோ மித்ரஸம்ரக்ஷனாம் ச
யேஷாமேதே ஷட்குணா நப்ரவ்ருத்தாஹா
கோஅர்த்தச்தேஷாம் பார்த்திவோபாஸ்ரயேண- 43
பொருள்
ஒரு அரசனுக்கு கீழ்க் கண்ட ஆறு குணங்கள் இல்லாவிடில் அந்த அரசனின் கீழ் வாழ்வதில் அர்த்தமே இல்லை; அரசனுக்குத் தேவையான ஆறு குணங்கள்– ஆணை இடும் அதிகார தோரணை, புகழ், பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்கல், நண்பர்களைக் காப்பாற்றுதல், தானம், அதே நேரத்தில் இன்பமான வாழ்வு– 43
43. What is the use of seeking sanctuary with kings, to those who do not cultivate these six qualitites : power to command, fame, the nurturance of Brahmanas, charity, gratification and the protection of friends.
அருந்தண்டம் நற்கீர்த்தி அந்தணரைக் காத்தல்
பெருந்தானாம் போகம் பிரியம் –மருவுமொரு
நட்பா தர வாறு நற்குணமில்லா அரசன்
கட் சேவை செய்தென்ன காண் –43
வள்ளுவனும் இவைகளைச் சொல்லுகிறான்.
அரசனுடைய நீதி வழுவினால், பசுக்கள் பால் தராது; பிராமணர்களுக்கு வேதம் மறந்துவிடும் என்பான். இதன் பொருள்
கோ ப்ராஹ்மணேப்ய ரக்ஷதி (பசுவையும் பார்ப்பனர்களையும் போற்றுவதே நல்லாட்சியின் சின்னங்கள்)- குறள் 560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் -560
ஆக பாரதீய சிந்தனை இமயம் முதல் குமரி வரைஒன்றே!
—-subham—-
tags-வரி விதிப்பது, விலை மாது, நீதி சதகம் ,Bhartruhari, Nitisataka , in Tamil, in Hindi, Part 14, பர்த்ருஹரி ,ஸ்லோகங்கள் 40,41,42, 43