பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -1(Post No.12,387)

Picture of Sawlumin Inscription with Sanskrit words

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,387

Date uploaded in London – –  8 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -1

பர்மாவில் பாலி , பியூ , மோன் , பர்மிய மொழிகள் பேசப்பட்டன அல்லது பயன்படுத்தப்பட்டன இந்த நான்கு மொழிகளிலும் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு கிடைத்ததால், தெரியாத மொழிகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. பாலி என்பது சம்ஸ்கிருத மொழியின் பேச்சு வழக்கு; . சம்ஸ்க்ருதம் தெரிந்த எவரும் பாலி சொற்களை புரிந்து கொள்ளலாம்.

பிராமி என்பது சரஸ்வதியின் பெயர். பிரம்மா என்பவர் அவளுடைய கணவர். இந்த பிராமி எழுத்திலிருந்துதான் தமிழ் உள்பட, தென் கிழக்காசிய மொழிகள் உள்பட, தென் ஆசிய மொழி எழுத்துக்கள்  வந்தன. சுருங்கச் சொன்னால் தெற்காசியா முழுதும் இந்துக்கள் நாகரீகத்தையும் மொழி அறிவையும் பரப்பினர்.

பர்மா என்ற பெயர் பிரம்மா தேசம் என்பதன் மரூஉ ; சிலர் இது பாமர் என்னும் பர்மிய மக்களின் பெயரிலிருந்து வந்ததாக செப்புவார்கள். ஆனால் அந்த பாமர் என்னும் சொல் எங்கிருந்து வந்தது என்று சொல்ல முடியாமல் திகைக்கின்றனர் . பர்மா, மியன்மார் என்பனவெல்லாம் பிரம்மன் (கடவுள் ) அல்லது பிரம்மா (மும் மூர்த்திகளில்  ஒருவர்) அல்லது பிராமணர்கள் — என்ற மூன்று சொற்களில் இருந்துதான் வந்திருக்க முடியும் என்று மொழி இயல் அறிவுடையோர் வாதிடுகின்றனர்.

xxxx

ஒரே தமிழ் கல்வெட்டிலும் சம்ஸ்க்ருதம்

பர்மாவில் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் , பெரும்பாலும் தூய சம்ஸ்க்ருத வரிகளில்தான் துவங்குகிறது . தமிழ் மொழியும் இதற்கு விலக்கல்ல. சுமார் 800 ஆண்டு பழமை உடைய ஒரே தமிழ் கல்வெட்டுதான் பார்மாவில் கிடைத்தது. அதுவும் குலசேகர ஆழ்வார் எழுதிய முகுந்தமாலா என்ற சம்ஸ்க்ருத நூலிலுள்ள ஒரு ஸ்லோகத்துடன்தான் துவங்குகிறது!

இப்போது சம்ஸ்க்ருத சொற்களின் பட்டியலைக் காண்போம் :-

1.ஸ்ரீ க்ஷேத்ரம் –  முக்கியமான ஊரின் பெயர் ஸ்ரீ க்ஷேத்ரம்; இது காஷ்மீ ரிலுள்ள ஸ்ரீநகரம் போன்றது. ஒரிஸ்ஸாவில் உள்ள புரி நகருக்கும் இந்தப் பெயர் உண்டு . இதை பர்மிய உச்சரிப்பில் சரே க்ஷேத்தரா என்பர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க என்பதை சிறி என்று இலங்கையர் எழுதுவது போல.

2.மும்பை என்ற தேவியின் பெயரை வெள்ளைக்காரர்கள் பம்பாய் என்றது போல. பர்மா என்பதை பர்மிய மொழியில் மியான்மா என்பர் .

3.பர்மாவின் முக்கிய அரசர்களில் ஒருவர் பெயர் அநிருத்த (1044-1077); இது விஷ்ணு ஸஹஸ்ரநாம பெயரில் ஒன்று. இதை பர்மிய உச்சகரிப்பில் அனவ்ரஹ்தா என்பர் .

4. இன்னும் ஒரு மன்னரின் பெயர் நரசிங்கன் . அதை பர்மியர்கள் நரதெய்ங்க என்கிறார்கள் .

உலகம் முழுதும் இந்த த = ஷ ச = த மாற்றத்தைக் காணலாம். தமிழர்களும், ஆங்கிலேயர்களும் இப்படி உச்சரிப்பை  மாற்றுவதால் பர்மியர்களைக் குறை சொல்ல முடியாது !

பாஷை என்பதை தமிழ்ப்படுத்தி பாடை என்றும் , விஷயம் என்பதை விடயம் என்றும் எழுதுகிறோம் .

ஆங்கிலத்திலும் எடுகேடியன் என்று எழுதிவிட்டு அதை  எஜுகேஷன் என்கிறோம். ஏராளமான சொற்களில் TION என்பதை SION என்றுதான் உச்சரிக்கிறோம். இது உலகம் முழுதும் இந்துக்கள் பரப்பிய மொழி. அதே போல ஜே என்பதை ஒய் (J=Y) என்று மாற்றுவதும் இந்துக்கள் உலகம் முழுதும் பரப்பியதே; இதனால் தான் யூத என்பதை  ஜுத என்றும் ஏசு என்பதை ஜீசஸ் என்றும் ஜோசப் என்பதை யூசுப் என்றும் ஜேக்கப் என்பதை யாகூப் என்றும் எழுதுகின்றனர்.

மூன்று நான்கு மொழி இயல் விதிகளைத் தெரிந்து கொண்டால் அத்தனை பர்மிய சொற்களின் சம்ஸ்க்ருத மூலத்தையும் கண்டுபிடித்து விடலாம்  . 

5.பஞ்ச கல்யாணி

அநிருத்த என்ற புகழ் பெற்ற மன்னன் இறந்தபோது அவனுக்கு  இரண்டு மகன்கள் . ஒருவர் மன்னராவதற்கு முன்னர் மணந்துகொண்ட பெண்ணுக்குப் பிறந்த சாவ்ளு ; மற்றோர் மகன் இந்திய இளவரசி 

பஞ்ச கல்யாணி  என்பவருக்குப் பிறந்தவர-.ஞான சித்த ; . அருமையான சம்ஸ்க்ருதப் பெயர் பஞ்ச கல்யாணி. அவருடைய இன்னும்  ஒரு பெயர் வைசாலி .; நாம் காந்தார திலிருந்து வந்த ராணியை காந்தாரி என்றும் , மிதிலா நகரிலிருந்து வந்த சீதையை மைதிலி என்றும் அழைப்பது போல..

6.வைசாலி

வைசாலி என்பது புத்தரின் வாழ்க்கையில் மிகவும் தொடர்புடைய பீஹார் மாநில ஊராகும். இதே பெயரில் பர்மாவிலும் ஒரு நகர் உண்டு.

7.ஞான சித்த

பஞ்ச கல்யாணிக்குப் பிறந்த மகன் பெயர் கியான் சித்து. இது ஞான சித்த என்பதன் திரிபு.

8.ஸ்ரீ வஜ்ர ஆபரண (மான லோல ; சாவ்ளு )

சாவ்ளு பதவி ஏற்கையில் வைத்துக் கொண்ட பெயர் ஸ்ரீ வஜ்ர ஆபரண; உலகம் முழுதும் ப= வ B=V ஆக மாறுவதையும் மொழியியல் அறிஞர்கள் அறிவர் ஆகையால் பஜ்ராபண  என்று பர்மியர் உச்சரிப்பர். வங்கம் என்பதை பெங்கால், பங்களாதேஷ் என்பது போல..

9.சந்திரா தேவி.

தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் ஒரே நேரத்தில் மூன்று தலைநகர்களில் இருந்து ஆண்டதைப் போல பர்மாவிலும் ஒரே நேரத்தில் பல ஆட்சிகள் இருந்தன. பெகு நகர மன்னனின் மனைவியின் பெயர் சந்த / சந்திரா தேவி. இன்னும் ஒரு பெயர் மணி சந்தா ; அவளுடன் ஞானசித்தாவுக்கு (கியான் சித்து) கள்ளத் தொடர்பு இருந்ததாக ஒரு பேச்சு .

10..நராதிபதி

இந்தியாவில் ஜனாதிபதி என்று சொல்கிறோம். இதற்கு இணையான சொல் நர +அதிபதி = நராதிபதி.

நராதிபதி 1256- முதல் 1287 வரை பகான் (Pagan) பிரதேசத்தை ஆண்டார். பர்மிய எழுத்துக்களில் இவர் பெயரை நரதிஹபதே என்பர்

11.வேலுவதி

இது பாதி தமிழ், பாதி சம்ஸ்க்ருதம் உடைய பெயர்.. இவர் ஒரு பர்மிய மஹாராணி. வதி , மதி, பதி என்று முடியும் சொற்களை வேத காலத்தலிருந்து இந்துக்கள் பயன்படுத்திவருகின்றனர் வதி , பதி என்ற சம்ஸ்க்ருத பின்னொட்டுக்களை  இன்றும் பார்வதி, சுமதி போன்ற பெயர்களில் காண்கிறோம். அவ்வகையில் வேலு வதி சிறப்புடையது

12.ஸ்வர்ண பூமி

சம்ஸ்க்ருத நூல்கள் பர்மா என்பதை சொர்ணபூமி என்றே குறிப்பிடுகின்றன. இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு தங்க நாடு அல்லது தங்கம் கொழிக்கும் நாடு என்று பொ ருள்

To be continued……………………………………………

tags- பர்மா ,சம்ஸ்க்ருதம்

கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை-2 (Post No.12,386)

  

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,386

Date uploaded in London –  8 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மாலைமலர் 3-8-2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

–     

கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை

                     (இரண்டாம் பகுதி )

ச. நாகராஜன்

ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட தலம்

தசரத  மஹாராஜா புத்திரர்களை வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடத்த விழைந்தபோது அந்த யாகத்திற்கு தலைமை ஏற்று அதை நடத்தி வைத்தவர் ரிஷ்ய சிருங்கரே. கவிச் சக்கரவர்த்தி கம்பன் ரிஷ்யசிருங்கரை, ‘அருமறை வடிவு போன்று ஒளிர் விசிட்டன்’ (மறையே உருவெடுத்தது போன்று விளங்கும் சிறந்தவன்) என்று வர்ணிக்கிறான்.

அப்படிப்பட்ட அரும் முனிவரே ராமரின் ஜனனத்திற்கும் காரணமாக அமைகிறார். ஆக சிருங்கேரி ராமாயண காலத்துடன் தொடர்பு கொண்ட ஒரு பழம்பெரும் அரிய தவ பூமியாக மிளிர்கிறது.

இக்காலத்திலும் கூட தவம் புரிய விழைவோர் இந்த அழகிய மலைத் தொடரைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்து வருகின்றனர்.

சாரதாம்பிகை

சிருங்கேரி பகுதியில் உள்ள வர்ஷா என்ற மலையிலிருந்து பாய்கின்ற நதியே துங்கா நதி. கிழைக்குத் திக்கில் துங்காவோடு கலக்கும் நதியே பத்ரா. அமைதி மிக்க அழகிய வனாந்தரப் பிரதேசத்தில் இந்த இரு நதிகளின் சங்கமத்தில் அமைந்த இடமே சிருங்கேரி.

இங்கு சாரதா தேவியை பிரதிஷ்டை செய்தார் ஆதி சங்கரர். முக்கிய தெய்வங்கள் சாரதாம்பிகை – சந்திர மௌலீஸ்வரர்.

தீர்த்தம் – துங்கபத்ரா தீர்த்தம்.

சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள்.

சரத் காலத்தில் ஆராதிக்கப்பட்டவள் சாரதை. சரத்காலம் என்பது இலையுதிர் காலம். இது ஐப்பசி கார்த்திகை மாதங்களைக் கொண்டது. இந்தக் காலத்தில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி எனப்படும். வசந்த காலத்தில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி எனப்படும். இந்த இரு நவராத்திரி காலங்களும் அம்பிக்கைக்கு மிகவும் உகந்த பூஜை காலமாகும். ஆகவே இந்தக் காலத்தில் சிறப்பு பூஜைகள் இங்கு நடத்தப்படுகின்றன. ஆயிரக் கணக்கில் பக்தர்கள் இங்கு திரண்டு விழாவில் கலந்து கொண்டு சாரதையை வழிபடுகின்றனர்.

‘சாரத’ என்ற சொல்லுக்குப் பண்டிதர்கள் என்ற பொருளும் உண்டு. இவர்களால் பூஜிக்கப்படுபவள் சாரதை.

நுண்ணறிவை அதிகம் கொண்டு மேதையாக ஆக சாரதா வழிபாடு மிகவும் அவசியம்.

லலிதாம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் 123 திருநாமமாக அமைவது சாரதாராத்யா என்னும் திருநாமம். மேற்கண்ட அர்த்தங்களுடன் சாரதா ஆராத்யா என்று இந்தச் சொல்லைப் பிரித்து விஷ்ணு, ப்ரம்மா ஆக்யோரால் ஆராதிக்கப்பட்டவள் சாரதை என்ற பொருளையும் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆகவே சாரதாம்பிகையை வழிபட்டோருக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் கிட்டுகிறது என்பது ஐதீகம்.

சாரதாம்பிகை ஆலயம்

சிருங்கேரி மடத்தின் உள்ளே இருக்கும் ஸ்ரீ சாரதை, சங்கர பகவத்பாதர், வித்யா சங்கரர், ஜனார்த்தனர், சக்தி கணபதி, வாகீஸ்வரி, ராமர் உள்ளிட்ட ஏராளமான கோவில்களை தரிசித்து அன்பர்கள் பக்திப் பரவசம் அடைகின்றனர்.

ஆதியில் பாறையில் செதுக்கப்பட்ட ஶ்ரீ சக்ரத்தின் மீது சந்தனத்தில் செதுக்கப்பட்ட சாரதா தேவியின் மூல விக்கிரகம் அமைக்கப்பட்டது.

அந்நியரின் படையெடுப்பால் சிதிலமடைந்திருந்த ஆலயத்தை சிருங்கேரி மடத்தின் 12வது மடாதிபதியாகத் திகழ்ந்த வித்யாரண்யர் புதுப்பித்தார். இப்போது காணப்படும் சாரதா தேவியின் சுவர்ண விக்கிரகத்தை அவரே சந்தன விக்கிரத்தின் மீது அமைத்தார்.

தினமும் இங்கு சாரதாம்பிகை- சந்திரமௌளீஸ்வர் பூஜை ஶ்ரீ சங்கராசாரியரால் நடைபெறுகிறது.  ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தம், சாரதா தேவியின் குங்கும பிரசாதம், ஆசாரியர் அருளித்தரும் மந்திர அட்சதை ஆகியவற்றைப் பெற்று பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.

சிருங்கேரி சாரதாம்பிகையை தரிசிப்பதன் மூலம் பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

சாரதாம்பிகையே சரஸ்வதி என்பதால் கல்வியை ஆரம்பிக்கும் இளம் சிறார்கள் இங்கு வந்து அதைத் தொடங்குகின்றனர்.

இருக்கும் இடம்

சிருங்கேரி, கர்நாடகத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ளது. பங்களூரிலிருந்து சிருங்கேரி சுமார் 258 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இதிலிருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்தலம் உடுப்பியாகும். சென்னையிலிருந்து சாலை வழியாகச் சென்றால் சுமார் 648 கிலோமீட்டர் தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

சாரதாம்பிகை தோத்திரம் சாரதையை வணங்குவோர் ‘பரம வித்யாவை’ அடைகின்றனர் என்று கூறி அருளுகிறது.

***

QUIZ தேன் பத்து QUIZ (Post No.12,385)

QUIZ தேன் பத்து QUIZ

QUIZ SERIES No.62

1.தேன் என்ற சொல்லுக்கு நிகரான மூன்று தமிழ் சொற்களை சொல்ல முடியுமா?

XXXXXX

2.தேன்களில் பல வகை உண்டு குறைந்தது மூன்று தமிழ் சொற்களை சொல்ல முடியுமாபூக்கள்பழங்கள் பெயரைச்  சொல்லாதீர்கள் .

XXXXX

தேனுடன் தொடர்புடைய எல்லோருக்கும் தெரிந்த ஒரு பறவை எது?

XXXXXX

4.உலகிலேயே பழைய தேன் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது ?

Xxxx

5.காடுகளில் மக்களும் வேடர்களும் என்ன சாப்பிட்டனர் ? காடுகளில் முனிவர்கள் எல்லோரையும் உபசரிக்க என்ன கொடுத்தனர் ?

XXXXXX

6.பழைய நூலான சரக சம்ஹிதை சம்ஸ்க்ருத மொழியில் தேன் பற்றி என்ன சொல்கிறது?

XXXXX

7.சர்க்கரைக்கும் தேனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

xxxxx

8.தேனீக்கள் பூக்களிலிருந்து தேனைச் சேகரிப்பதை எல்லோரும் அறிவோம்வேறு எந்தப் பிராணி அல்லது பூச்சியாவது தேன் உற்பத்தி செய்கிறதா ?

xxxx

9.தேன் ஏன் கெடுவது இல்லை ?

xxxx

10.தேன் எப்படி உற்பத்தியாகிறது?.

Xxx

விடைகள்

1.கள் , பிரசம், நறவு, (மது)

xxxx

2.மலைத் தேன், கொம்புத் தேன், பொந்துத் தேன் , புற்றுத் தேன் , மனைத்  தேன்

xxxxx

3.தேன் சிட்டு 

xxxxx

4.எகிப்திய பிரமிடுகளில் பழைய தேன் கண்டுபிடிக்கப்பட்டது

xxxxx

5.மக்களும் வேடர்களும் சாப்பிட்ட உணவு:தேனும் தினைமாவும் ; முனிவர்கள் எல்லோரையும் உபசரிக்கமது பர்க்கம் கொடுத்தனர் — இதில் தேனுடன் தயிர், நெய் அல்லது பால் கலந்து கொடுப்பது பெரிய உபசாரம் என்று இதிஹாச புராணங்கள் கூறுகின்றன.

xxxx

6.சரகர் எடுத்திய நூலில் மக்ஷிக , பிரமர செளத்ர பைத்தக என்ற நான்கு வகித்த தேன் களைக் குறிப்பிட்டு  (Makshika, Bhramara, Kshaudra and Paittaka) செந்நிற தேனீக்கள் கொண்டுவரும் தேன்தான் மிகச் சிறந்தது என்கிறார். அது நல்லெண்ணெயின்  நிறத்தில் இருக்கும் என்றும் சொல்கிறார் .

xxxx

7.சர்க்கரை அல்லது சீனியில் உள்ள இனிப்பு சுக்ரோஸ்; ஆனால் தேனிலுள்ள இனிப்பு குளூக்கோஸ், ப்ரக்டொஸ் .

தேனிலுள்ள சத்துக்கள்

பிரக்டோஸ்:fRUCTOSE 38.2%

குளுக்கோஸ்:Glucose 31.3%

மால்டோஸ்: Maltose 7.1%

சுக்ரோஸ்Sucrose 1.3%

நீர்: Water 17.2%

சர்க்கரை: Sugar 1.5%

சாம்பல்: Ah 0.2%

மற்றவை : Other ingredients 3.2%

xxxxx

8.ஆம்; குளவி வகைகளில் சில தேனை சேகரிக்கின்றன. அவை தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் காணப்படுகின்றன Some wasp species, such as Brachygastra lecheguana and Brachygastra mellifica, found in South and Central America, are known to feed on nectar and produce honey.

xxxxx

9.அதில் எந்த கிருமிகள் அல்லது பாக்டீரியாக்கள் வளரமுடியாது ; அதனால் கெடுவது இல்லை ;தேன் கெடாமல்  இருப்பதற்குக்  தேநீக்கள் அதை செய்யும் முறையும்  ஒரு காரணம்.

xxxxx

10.தேனீக்களில் , பூக்களுக்குச் சென்று தேனை சேகரித்துக் கொண்டுவரும்  ஒரு பிரிவு (Forager Bees)  உண்டு. அவை .அதை தொழிலாளர் பிரிவு தேநீக்களிடம் (Worker Bees)  அளிக்கும்.

தொழிலாளர் பிரிவு தேனீக்கள் அதை குடிக்கும்; கொப்பளிக்கும் ; இவ்வாறு பலமுறை செய்து கொண்டே இருக்கும் . இதனால் அந்தத் தேனில் உள்ள நீர்ச் சத்து குறைந்துவிடும். இப்படிச்  செய்கையில் அவற்றின் வயிற்றில் உள்ள என்சைம்  தேனில் இருக்கும் குளுக்கோஸ் என்னும் சர்க்கரைச் சத்தை குளுகோனிக் அமிலமாக (Gluconic Acid)  மாற்றிவிடும் தே ன் இவ்வாறு அமில ச் சத்துடன் ஆக்கப்படும்போது ஹைட்ரஜன் பெராக்ஸைட் (Hydrogen Peroxide) என்ற வாயுவும் உற்பத்தியாகும் . அதுமட்டுமல்ல . தேன் அடைகளின் அறைகளில் தேனை வைத்து தனது  சிறகுகளால் விசிறிக் கொண்டே இருக்கும். இதனால் தண்ணீர் சத்து மேலும் ஆவியாகும் .மொத்தத்தில் அமிலத் தன்மையும் நீரின்மையும் இதைக் கெடாமல் பாது காக்கிறது. ஹைட்ரஜன் பெராக் ஸைட் வாயுவுக்கும் பாக்டிரீயா (Anti bacterial)  கிருமிகளைக் கொல்லு ம் சக்தி உண்டு . ஆகையால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேன் , பல ஆண்டுகள் ஆனாலும் கெடுவதில்லை .

XXXX

—subham—

Tags– தேன் , வகைகள், கெடுவதில்லை, உற்பத்தி ஆகும் விதம், குளவி , பெயர்கள், பழைய தேன்

பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள் -2 (Post No.12,384)

Burmese King Anirudh

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,384

Date uploaded in London – –  7 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART 2

நராதிபதி 1256- 1287

பர்மிய மன்னன் நராதிபதியின் லீலைகளைத் தொடர்ந்து காண்போம்.. அவரை எதிர்த்து நாட்டின் சில பகுதிகளில் கலகம் வெடித்தது ; உடனே முதல் மந்திரி தலைமையில் படைகளை அனுப்பி அதை அடக்கினார். முதலமைச்சர் 62 வயதில் காலமானார். தனது மகன்களும் கலகக்காரர்களுடன் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அரண்மனையிலேயே அவர்களும் வாழ ஏற்பட்டு செய்தார். தினமும் அவர்களுடனே சேர்ந்தும் சாப்ப ட்டார் . அப்படி சாப்பிடுகையில் மாற்றா ம்தாய் மனப்பான்மையுடன் உணவு பரிமாறினார். மூத்த மகன்களுக்கு பன்றி இறைச்சியின் நல்ல பாகங்களையும் இளைய மகன்களுக்கு பலரும் விரும்பாத பாகங்களையும் பரிமாற ஏற்பாடு செய்தார். அவர்கள் வெவ்வேறு மனைவியருக்குப் பிறந்தவர்கள் . இதை அறிந்த இளைய மகன்களின்  தாய் சமையல்காரனிடம் சொல்லி , இறைச்சியின் நல்ல பகுதிகளை தனது மகன்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்தாள் . இது மன்னருக்குத் தெரிந்துவிட்டது. உடனே சமையல்காரனுக்குத் தக்க தண்டனை கொடுத்துவிட்டு, இளைய மகனை டேய், பன்றிக்கால் திருடா என்று ஒவ்வொரு நாளும் ஏசிவந்தார் .

மங்கோலிய தாக்குதல்

இது ஒரு புறமிருக்க, சீனாவிலிருந்து மங்கோலிய அரசன் குப்ளாய்கான்  Kublai Khan பர்மாவின் Pagan பகான் அரசைத் தாக்கி வெற்றி கொண்டான். படைகளின் வெற்றிக்குப் பின்னர் குப்ளாய்கான் , பீகிங் நகரிலிருந்து தூதர்களை அனுப்பி கப்பம் செலுத்த உத்தரவிட்டான் . ஆனால் கப்பம் செலுத்தாமல், பீகிங் நகருக்கு Peking/ Beijing  புத்தரின் பற்களில் ஒன்றை அனுப்பி அதை வணங்குமாறு கேட்டுக்கொண்டான் . குப்ளாய்கான், ஒரு கடிதம் அனுப்பினான். நல்லெண்ணத்தைக் காட்ட, உங்கள் சீனியர் அமைச்சர் அல்லது ஒரு சகோதரனை பீகிங்  நகருக்கு அனுப்பி வையுங்கள் என்பது கடிதத்த்தின் சாராம்சம் .

குப்ளாய்கான் தூதர்கள், அரண்மனைக்குள் வந்த போது காலணிகளைக் கழற்றவில்லை. செருப்புகளைக் கழற்றிவிட்டு அமருங்கள் என்று சொன்னதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர்.அவர்களுக்கு உடனடி மரண தண்டனை விதித்தான் நராதிபதி. அவனுடைய அமைச்சர்கர்கள் அது தவறு; தூதர்களை அவமதிக்கக் கூடாது. எய்தவன் ஒருவன் இருக்க அம்பு என்ன செய்யும் ? என்ற பழமொழிகளை எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் மூர்க்க மன்னன் அதைக் கேளாமல் தூதர்களைக் கொன்றான்.அதோடு நிற்காமல் எந்த பர்மிய பகுதிகளை குப்ளாய்கான் வென்றானோ அந்தப் பகுதிகளை மீட்பதற்காக படையும் எடுத்தான் . அந்தப் பகுதி குறுநில மன்னர்கள், குப்ளாய்கான் உதவியை நாடினர் . மங்கோலியப் படைகள் மீண்டும் உள்ளே வந்தவுடன் நராதிபதி  தன் பகான் பிரதேசத்தை விட்டு ஓடி , டெல்ட்டா பகுதியில் தங்கினான் . பின்னர் தான், குப்ளாய்கானின் ஆட்சியை ஒப்புக்கொண்டு கப்பம் கட்டுவதாகச் சொல்லி பகானை நோக்கி பயணம் மேற்கொண்டான். ஆனால் அவனது மகன்களில் ஒருவனே அவனைக் கொன்றுவிட்டான்.

பகான் வம்ச ஆட்சி The Pagan Dynasty அத்துடன் முடிவுக்கு வந்தது. 250 ஆண்டுகளுக்கு முன்னர் 1044ம் ஆண்டு அநிருத்தன் துவக்கிவைத்த புகழோங்கிய ஆட்சி அவமானத்துடன் வெளியேறியது..

பர்மாவில் ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளை வெவ்வேறு அரசர்கள் ஆண்டார்கள். தமிழ் நாட்டில் சேர, சோழ , பாண்டிய மன்னர்களும், பல குறுநில மன்னர்களும் ஒரே காலத்தில் ஆட்சி செய்தது போல மியன்மாரில் நடந்தது. யாருடைய கை மேலோங்குகிறதோ , அப்போது அவர்கள் பெரும்பகுதியைப் பிடித்து சாம்ராஜ்யத்தை நிறுவினர். சில நே ரங்களில்  அவர்கள் ஆட்சி தாய்லாந்து , கம்போடியா, லாவோஸ் பகுதிகள் வரை நீடித்தது.

மலேயா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் துலுக்கர் வசம் சிக்கி, முஸ்லீம் நாடுகள் ஆனபோதும் பர்மா அதில் சிக்க வில்லை . இன்றுவரை புத்தமதமே நீடிக்கிறது .

—SUBHAM—-

Tags- பர்மா, வரலாறு, நராதிபதி, குப்ளாய் கான், பன்றி இறைச்சி

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 18 (Post No.12,383)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,383

Date uploaded in London – –  7 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

83.பேலூர் BELUR CHENNA KESAVA TEMPLE

பேலூரூ சென்ன கேசவ ஆலயம் / கோவில்

ஹாசன் நகரிலிருந்து 38 கி.மீ.இது யாகாச்சி நதியின் கரையில் அமைந்தது. பழைய பெயர் வேலூர், வேலாபுரி. தென் பாரதத்தின் காசி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இது கி.பி (பொது ஆண்டு) 1117ல் கட்டி முடிக்கப்பட்டது ஏனைய ஹொய்சாளர் கோவில்களைப் போல நட்சத்திர வடிவ மேடையில் அமைந்தது . இத்தகைய கோவில்களில் சுவாமியை வலம் வருவதற்கு, மேடையிலிருந்து இறங்கி பிரதட்சிணம் செய்ய வேண்டி இருக்கும்

இந்தக் கோவிலைக் கட்டி முடிக்க 103 ஆண்டுகள் ஆயின.

கர்ப்பாக்கிரகத்தில் விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ சென்னை கேசவப் பெருமாள் ஆறு அடி உயரத்தில் காட்சி தருகிறார்.சங்கு சக்ரம், கதாயுதம் , தாமரை மலர்களைக் கைகளில் ஏந்த, பூதேவி ,ஸ்ரீ தேவி சூழ, நிற்கிறார். கோவிலில் தசாவதாரக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக பார்க்க வேண்டிய சிற்பங்கள்

தர்ப்பண சுந்தரி என்னும் கண்ணாடியில் முகம் பார்க்கும் அழகி ;

நிறைய நகைகள் அணிந்த மதனிகா ;

மேல் மாட கல் ஜன்னல்கள் ;

கிழக்கு வாயிலில் ரதி மன்மதன் ;

கோவிலைச் சுற்றி யானை, சிங்கம், குதிரை;

மேல் பாகத்தில் அழகு சுந்தரிகள்

அழகியுடன் பாடும் கிளி ;

வெற்றிலையுடன் பெண்மணி ;

காதல் கடிதம் எழுதும் அழகி;;

பெண்ணின் புடவையை இழுக்கும் குரங்கு;

சிகை அலங்காரம் செய்யும் அழகி;

உடலை திரி பங்கி வடிவத்தில் வளைத்து நடனமாடும் அழகி ;

நாட்டிய மோகினி;

வாத்யத்துடன் காட்சிதரும்  அழகி ;

மாம்பழத் தோட்டக்காரி

தேளைக் கண்டு நடுங்கும் அழகி

இந்து மத கடவுளர்  என்று நூற்றுக்கணக்கில் சிலைகள் உள்ளன.

ஹளபீடு போல மியூசியக் கோவில் அல்ல  இது;  இரண்டு நேரங்களிலும் பூஜை நடக்கும் கோவில் இது.

48 தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.

மன்னன் விஷ்ணுவர்தனனின் மனைவி மஹாராணி சாந்தலா தேவியும் ஒய்யாரமாகக் கட்சி தருகிறாள் ஒரு சிலையில் .

சென்ன கேசவ ஆலயத்தின் பின்புறத்தில், வீர நாராயண கோவில், ஸெளம்ய முகீ ஆலயம், ஆண்டாள் /ரங்க நாயகி கோவில்கள் உள்ளன. எல்லா இடங்களிலும் எண்ணிலடங்காத சிற்பங்கள் !!

XXXXX

84.சிரவண பெலகோலா SHRAVANABELAGOLA GOMATESHWRA STATUE

இது இந்துக்களின் கோவில் இல்லை என்றாலும் இன்று அதிகமாக இந்துக்ளே செல்கின்றனர்

2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தில் தான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன்  துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.அந்த மலையின் மீது பிரமாண்டமான ஒற்றைக் கல் சிலையாக நிற்கும் பாஹுபலி — கோமடேஸ்வர் — ஆயிரம் ஆண்டுப் பழமையுடையவர். உலக அதிசயங்களில் ஒன்று. இது பற்றி 12 ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு நடக்கும் மஸ்தகாபிஷேகம் பற்றி அற்புதமான படங்கள் , காட்சிகள் யூ ட்யூபில் கிடைக்கின்றன.

57 அடி உயரம் உடைய கோமடேஸ்வர் (பாஹுபலி) நிற்கும் மலை 2000 அடி உயரம். அதுவும் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும்

மேலே ஏறுவதற்கு 45 நிமிடம்! இறங்குவதற்கும் 45 நிமிடம்! மேலே சென்றவுடன் செலவழிக்கும் நேரம் நம் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனால் செருப்பு போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இது சமணர்களின் கோவில். அங்கே ஒரு அர்ச்சகர் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்கிறார்.

சிரவண பெலகோலா , கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை கி.பி.980-ஐ ஒட்டி, கங்க வம்ச மன்னர் ராஜமல்லனின் தளபதி சவுண்டராயன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

கோமடேஸ்வர் என்பவர் முதல் தீர்த்தங்கர ரிஷபதேவரின் புதல்வர். ஒரு சமண துறவி. ஒரு யோகி, புலன்களை வென்ற நிலையில், தவம் செய்யும் காட்சி இது. அவர் மீது, செடி கொடிகள் வளரும்; பாம்புப் புற்றுகள் தோன்றும். வால்மீகி முனிவரைப் போல!! அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்கள் சிற்பிகள்  இங்கே. மாபெரும் சிலை மீது செடிகொடிகள் படருவது போல சிற்பம். கீழே பாம்புகள்; அதில் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்து வால் மற்றும் தெரியும் காட்சி. அதைச் சுற்றிலும் சமண தீர்த்தங்கரர், சமண துறவிகளின் அற்புதமான சிலைகள்.

பெல  கோலா என்பது தூய தமிழ்ச் சொற்கள் – சமண முனிவரின் ‘வெள்ளைக் குளம்’ என்பது சிரவண ‘பெல குலா’ என்று திரிந்து விட்டது!

இங்கு 800-க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. கோமடேஸ்வர்– பாஹு பலியின் காலடியில் பிராக்ருத, தேவநாகரி லிபி கல்வெட்டு உள்ளது. கி.பி. 600 முதலான கல்வெட்டுகள் உள்ளன.

Xxxxx

TO BE CONTINUED………………………………………….

tags- பேலூர், சென்ன கேசவ பெருமாள், கோவில், சிரவண பெலகோலா , கோமடேஸ்வர் , மகா மஸ்தகாபிஷேகம் 

கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை- 1 (Post No.12,382)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,382

Date uploaded in London –  7 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

மாலைமலர் 3-8-2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை

(பகுதி 1)

ச. நாகராஜன்

.

சங்கர மடம் அமைந்துள்ள தலம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சிருங்கேரி மகத்தான புண்ணிய தலமாகும்.

துங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் சிருங்கேரி நுண்ணறிவையும் ஆன்மீக ஞானத்தையும் தந்து இகவாழ்வை சிறப்புறச் செய்து முக்தியையும் நல்கும் சிறப்பைப் பெற்றதாகும்.

தொன்றுதொட்டு இருந்து வரும் ஹிந்து தர்மத்திற்கு புத்துயிர் கொடுக்க அவதரித்த ஆதி சங்கரர் சிருங்கேரியின் பெருமையை நன்கு உணர்ந்ததோடு உலகிற்கும் உணர்த்தினார். அங்கு சங்கர மடத்தை நிறுவினார்.

சங்கர மடம் அமைந்த வரலாறு

இதற்கான வரலாறு சுவையானது

பூர்வ மீமாம்ஸகர்களின் கொள்கையை வலியுறுத்திய குமாரில பட்டரின் சீடரான மண்டனமிஸ்ரரை, அவர் வாதத்திற்கு அழைத்தார். வாதப் போரைத் தொடங்கிய போது அந்த வாதப் போருக்கு நீதிபதியாக இருந்தவர் மண்டனமிஸ்ரரின் மனைவி உபயபாரதி. இருவர் கழுத்திலும் மாலையை அணிவித்துக் கொள்ளச் சொன்ன உபயபாரதி,  வாதத்தில் யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர், என்று அறிவித்தார். பதினேழு நாட்கள் நடந்த வாதத்தில், மண்டனமிஸ்ரரின் கழுத்தில் இருந்த மாலை வாடியது. சங்கரர் வெற்றி பெற்றார்.

பின்னர் உபயபாரதியுடனும் வாதம் செய்து, அவரையும் வென்றார் சங்கரர்.

போட்டி விதியின் படி மண்டனமிஸ்ரர் துறவு மேற்கொண்டார். அவருக்கு சுரேஸ்வரர் என்ற சந்யாச நாமம் அளிக்கப்பட்டது.

தனது சீடர்களுடன் தெற்கு நோக்கி வந்த சங்கரர் சிருங்க கிரியை வந்தடைந்தார்.

சிருங்க கிரி, மஹரிஷி ரிஷ்ய சிருங்கர் தவம் புரிந்த புண்ய தலமாகும். பவித்ரமான துங்கா நதிக்கரையில் அமைந்துள்ள சிருங்க கிரியின் அற்புதமான இயற்கை வனப்பில் மூழ்கினார் சங்கரர். 

அவர் அங்கு ஓரிடத்தில் ஒரு அரிய காட்சியைக் கண்டு பிரமித்தார்.      

கர்ப்பமுற்ற தவளை ஒன்று வெயிலின் கொடுமை தாங்காமல் தவிக்க, நல்ல பாம்பு ஒன்று இரக்கம் கொண்டு அதன் மீது படம் எடுத்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தது. இதுவே தவம் செய்ய சிறந்த இடம் என நிர்ணயித்த சங்கரர்  அங்கே ஸ்ரீ சக்ரத்தை ஸ்தாபித்து சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தை நிறுவினார்.

அந்த பீடத்திற்கு சுரேஸ்வரரை முதல் ஆசாரியராகச் செய்து வேத பிரசாரம் செய்யுமாறு ஆணையிட்டார். அதிலிருந்து அந்த ஆசாரிய பரம்பரை, தொடர் சங்கிலியாக இருந்து வருகிறது. இப்போது 36வது பீடாதிபதியாக பல்மொழி வல்லுநரான ஸ்ரீ பாரதி தீர்த்தர் சிருங்கேரி மடாதிபதியாக அருளாட்சி புரிந்து வருகிறார்.

சிருங்கேரி : பெயர்க் காரணம்

சிருங்கேரி என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.

விபாண்டகர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு ஊர்வசி என்ற அப்ஸரஸின் மூலாமாக அபூர்வமான  ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் தலையில் மான் கொம்பு ஒன்று பிறக்கும்போதே முளைத்திருந்தது. ஆகவே அந்தக் குழந்தைக்கு ரிஷ்ய சிருங்கர் என்று பெயர் சூட்டப்பட்டது. காட்டுக்குள்ளேயே வளர்ந்த குழந்தை வாலிபப் பருவத்தை அடைந்தது. என்றாலும் தந்தையைத் தவிர வேறு யாரையும் ரிஷ்யசிருங்கருக்குத் தெரியவில்லை. அத்தோடு ஆண்-பெண் வேறுபாடு கூட அவருக்குத் தெரியவில்லை.

அந்தச் சமயத்தில் அங்க தேசம் என்ற பிரதேசத்தில் மழையின்றி மக்கள் வாடத் தொடங்கினர். அதை ஆண்டு வந்த ராஜாவான ரோமபாதர் தனது மந்திரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது ரிஷ்யசிருங்கரைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்த மந்திரிமார் அவரது காலடி இங்கு பட்டால் உடனே மழை பெய்யும் என்று கூறினர்.

அவரை அழைத்து வருவது எப்படி என்று யோசித்த பின்னர், காட்டிற்குள் உள்ள அவரைக் கண்டுபிடித்து அழைத்து வர பேரழகி ஒருத்தியை அனுப்பினார் ரோமபாதர்.

ரிஷ்யசிருங்கரின் தந்தை தம்மைப் பார்த்தால் கோபப்படுவார் என்பதை உணர்ந்த அழகி அவர் இல்லாத நேரத்தைத் தேர்ந்தெடுத்து ரிஷ்யசிருங்கரின் குடிலை அணுகினாள்.

ஆண்- பெண் வேறுபாடு தெரியாத குழந்தைத் தன்மையை உடைய ரிஷ்யசிருங்கர் அந்த அழகியைப் பார்த்தவுடன் விநோதமான ஒரு ஈர்ப்பு உணர்வை அடைந்தார். அந்தச் சமயத்தில் அவரது தந்தை குடிலுக்குத் திரும்பி வர அழகியும் அவசரம் அவசரமாக தான் பக்கத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இருப்பதாகக் கூறி அங்கிருந்து அகன்றாள்.

அவள் சென்ற பின்னர் அவள் பால் உள்ள ஈர்ப்பு அதிகமாக அவளைத் தேடிப் புறப்பட்டார் ரிஷ்ய சிருங்கர். அவரது பாதங்கள் ரோமபாதரின் அங்க தேசத்தில் பட்டவுடன் மழை பொழியத் தொடங்கியது.

அவரை வரவேற்ற மகாராஜா மிக்க மகிழ்ச்சி அடைந்தார்; தனது பெண்ணான சாந்தையை அவருக்கே மணமுடித்தும் கொடுத்தார். சாந்தையுடன் அங்கு வாழ்ந்து தன் தவத்தைத் தொடர்ந்தார் அவர்.

சில காலம் கழித்துத் தன் உடலை விட அவர் எண்ணினார். அப்போது அவருடைய உடலிலிருந்து ஒரு மின்னல் தெறித்தது. அது ஒரு லிங்கத்தின் மீது பட்டு மறைந்தது. அந்த லிங்கம் சிருங்கேரியிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜிக்கா என்னும் இடத்தில் உள்ளது. லிங்கத்தின் உச்சியில் கொம்பின் வடு இன்றும் இருக்கிறது.

அதைக் காணலாம்.

ரிஷ்யசிருங்கரின் காலடி பட்டு செழிப்புற்ற பிரதேசமாக ஆனதோடு அவர் தவம் புரிந்த தலமாதலால் இந்தப் பகுதி ரிஷ்ய சிருங்க கிரி என்ற பெயரைப் பெற்றது.

நாளடைவில் இந்தப் பெயர் மருவி சிருங்கேரி ஆயிற்று.

–    தொடரும்

QUIZ வள்ளல்கள் பத்து QUIZ (Post No.12,381)

Tamil Philanthropist  Athiyaman with Avvai

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,381

Date uploaded in London – –  6 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ வள்ளல்கள் பத்து QUIZ

QUIZ SERIES No.61

1.கடையெழு வள்ளல்களின் பெயர்கள் என்ன ?

XXXXX

2.முல்லைக்கொடிக்குத் தேர் கொடுத்தவன் பாரிமயிலுக்குப் போர்வை கொடுத்த்தவன் யார்?

3.பேகன் ஆண்ட இடம் எங்கே இருக்கிறதுபாரி ஆண்ட பறம்பு மலை எங்கே உள்ளது ?

XXXXX

4.பாரி செய்ததை நாம் அறிவோம்காரியும் ஓரியும் என்ன கொடுத்து வள்ளல் பட்டியலில் சேர்ந்தனர் ?

XXXXX

5.அதியமான் செய்த கொடை யாது?

xxxx

6.இவர்களை கடை எழு வள்ளல் என்று சொல்கிறோம் அவர்கள் வாழ்ந்த காலம் எது?

XXXXX

7.முதல் எழு வள்ளல்கள் உண்டா அவர்கள் யார்?

XXXX

8.சிவ பெருமானுக்கு நீல நாகன் கொடுத்த ஆடையை அளித்து வள்ளல் பெயர் பெற்றவன் யார் ?

XXXX

9.இடை எழு வள்ளல்கள்  யார் ?

XXXXX

10.நள்ளி என்ற வள்ளலின் சிறப்பு என்ன ?

xxxxx

Tamil Philanthropist  Bekan with peacock

Answers

1.பாரி,  காரி,ஓரி,

ஆய், அதியமான்,

பேகன், நள்ளி

xxxx

2.மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்.

XXXXX

3.பறம்புமலை என்கிற பிரான்மலை தற்போது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ளது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை நகரங்களுக்கு நடுவில் உள்ளது.

பேகன், பொதினி மலையின் சிற்றரசன் . இந்த இடம் பழனி மழைப் பகுதி ஆகும்

xxxx

4. ஓரி -(கொல்லிமலை) தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன். புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய நாடுகளைக் கூத்தருக்குக் கொடுத்த ஓரி என்று சிறுபாணாற்றுப்படை அவனைப் புகழ்கிறது.

காரி – (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன். அருள்மொழி மிக்கவன். ஒளி மிக்க அச்சம் தரும் நீண்ட வேலினை உடையவன். தடக்கையையும் (பெரிய கை), காரி என்ற குதிரையையும் உடையவன். இம்மன்னனின் கொடைத்திறத்தை சிறுபாணாற்றுப்படை (91-95 அடிகள்) குறிப்பிடுகிறது.

உலகமே வியக்கும் வகையில் போரில் புகழ்மிக்க தன் குதிரையையும், பெரும் பொருளையும் இரவலர்க்குக் கொடுத்தான்.

xxxxx

5.அதியமான் – நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன் (தர்மபுரி). இது அரிய நெல்லிக்கனி; சாவை ஒத்திப்போடும் மருத்துவ குணங்கள் உள்ள கனி . அதிகன், ஒருமுறை வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குச் சென்றான். அங்கு உள்ள மலைச்சாரலில் மருத்துவத் தன்மை உடைய நெல்லி மரத்தில் ஒரே ஒரு பழம் பழுத்துத் தொங்கியது. அதை அதிகன் பறித்து வந்தான். அக்கனியை உண்போர் நீண்ட நாள் உயிர் வாழ்வர் என்பதை இவன் அறிந்து கொண்டான். அத்தகு சீரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஒளவையாருக்கு வழங்கினான் (ஒளவையார் சங்க காலத்து மிகச் சிறந்த பெண் புலவர்). இச்செய்தியை,

அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த…………….. …………………. …………….. ………..

அரவக் கடல்தானை அதிகனும்…

(சிறுபாணாற்றுப்படை 101-103) சுட்டுகிறது.

XXXXX

6.சிறுபாணாற்றுப் படை என்னும் சங்க கால நூல் இவர்கள் அனைவரையும் ஒரு அணி ஆக்கி கடை எழு வள்ளல் என்பதால் இவர்கள் சங்க காலத்தின் துவக்கத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் . எங்கங்கோ வாழ்ந்த 7 பேரின் சிறப்பும் பெருமளவில் பேசப்பட்ட பின்னரே இப்படி ஒரு தொகுப்பு உருவாகும்.

Xxxxx

Tamil Philanthropist  Nalli

7..முதல் எழு வள்ளல்கள்

1.       குமணன்

2.       சகரன்

3.       சகாரன்

4.       செம்பியன் (சிபிச் சக்கரவர்த்தி)

5.       துந்துமாரி

6.       நளன்

7.       நிருதி

இதிலுள்ள குமணன் சங்க காலத்துக்கு முந்தைய வேறு ஒரு குமணன் என்றே கருத வேண்டியுள்ளது

xxxxx

8.ஆய் – நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன் (பொதிகை மலை)

xxxxx

9.இடைக்கால ஏழு வள்ளல்கள்

அக்ரூரன், அந்திமான், அரிச்சந்திரன், கன்னன் (கர்ணன்),சிசுபாலன், சந்திமான், தந்திவக்கிரன்

அக்குரன் ; இவர் ஒருவேளை மகாபாரதம் சொல்லும் அக்குரன் ஆக இருக்கலாம் என்பது உ,வே.சா .கருத்து

Xxxxxx

10. நள்ளி தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகை . மேலும் இக்கண்டீரக் கோப்பெரு நள்ளி வரையாது அளித்த வண்மை காரணமாக இவனிடம் பரிசில் பெற்ற பாணர்கள் மாலை வேளையில் வாசித்தற்குரிய செவ்வழிப் பண்ணை வாசிக்க மறந்தனர் ;, காலைப் பொழுதின்கண் வாசித்தற்குரிய மருதப் பண்ணை வாசிக்க மறந்தனர் என்று வன்பரணர் என்னும் புலவர் இவன் புகழைப் பாடுகிறார்.

Tamil Philanthropist  Pari

—-subham—

Tags– 21 வள்ளல்கள், கடை எழு , இடை எழு , தலை எழு , சிறுபாணாற்றுப் படை

HINDUSIM CROSSWORD PUZZLE 6 8 2023( Post No.12,380)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,380

Date uploaded in London – –  6 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Find out 21 words; Words across are in yellow colour.

1 2345 6 7
          
8         
     9    
 9a10 10a  111212a
 13        
          
 14    15   
          
16         
17         

Across

1.Madhuparka  – A dish of curds, ghee and honey, to be offered to a respectable guest on his arrival.

8.Laksha- one hundred thousand in Indian languages

9.Vyala- also called sardula, popular motif in Indian art, consisting of a composite leonine creature with the head of a tiger, elephant, bird, or other animal

10.Halayudha- A name of Balarama. Because he is carrying  plough, to spread agriculture all over India

13.Yaman– also called Kalyan (meaning “blessed” in Sanskrit), belongs to the Kalyan scale because it uses the sharp variant of the fourth note (M). This ancient raga is very important in both Carnatic (South Indian) and Hindustani music

14.Kavyam- is a form of literature that uses aesthetic and often rhythmic qualities of language − such as phonaesthetics, sound symbolism;  refers to the Sanskrit literary style used by Indian court poets flourishing between c.200 BCE and 1200 CE.

16.Alankaram- Ornament, decoration; used both in religion and music; When Gods are decorated in various forms,  this word is sued

17.Madhuram – sweet in Sanskrit and other languages

 Down

1.Mallinatha was an eminent critic, known for his commentaries on five mahakavyas (great compositions) of Sanskrit. During his times, His commentary on Kalidasa’s works is the best.

2.Dakshayaga In Hindu mythology,  it is an important event, which is narrated in various Hindu scriptures. It refers to a sacrifice organized by one, where his daughter Sati immolated herself. The wrath of god Shiva, Sati’s husband, thereafter destroyed the sacrifice.

3.Hasyam- laughter, comedy

4.Usha- morning, dawn

5.Plavangama- an ape, monkey in Valmiki Ramayana; not Vanara

6.Reva- another name for Narmada River

7.Alpa- small, little

9a.Vyakula- Agitated, perplexed, bewildered, distracted ;troubled; frightened

10a.Lasya- is a female dance form that originated in India. In Hindu mythology, Lasya refers to the dance innovated and performed by the goddess Parvati, described to be gentle and graceful.

11.Usnisa- is a three-dimensional oval at the top of the head of the Buddha. In Pali scriptures, it is the crown of Lord Buddha, the symbol of his Enlightenment and Enthronement.

12.Dhal-  Lentil, Lentil soup

12a.Angara – Mars, Red, Fire in charcoal

15.Mara- the Evil One; the tempter; death personified; killing, destroying in Sanskrit

M1AD2H3U4P5AR6KA7
A AASL E L
L8AKSHA V P
L SYAV9YALA
IV9aH10AL10aAYU11D12A12a
NY13AMAN SHN
AAY SG NAG
TK14AVYAM15ILA
HUG AMAS R
A16LANKARAMA
M17ADHURAM  

Answers

Across

1.Madhuparka  8.Laksha, 9.Vyala- ,10.Halayudha, 13.Yaman, 14.Kavyam, 16.Alankaram, 17.Madhuram

Down

1.Mallinatha , 2.Dakshayaga , 3.Hasyam, 4.Usha-,5.Plavangama, 6.Reva-, 7.Alpa-,9a.Vyakula, 10a.Lasya, 11.Usnisa-, 12a.Angara, 12.Dhal-  , 15.Mara

–subham—

சனி பகவான் பற்றிய இரண்டு பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் ! (Post No.12,379)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,379

Date uploaded in London – –  6 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ராமேஸ்
போப்ம்
னாட்
லுனினு
ம்ட்க்
த்தில்கு
விடாதுனின்
னிஸ்

Answers

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது

அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி —–subham—-

பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள்  வெற்றிலை எச்சிலால் ராஜா பதவி போச்சு !- 1 (Post No.12,378)

Mongol Invader

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,378

Date uploaded in London – –  6 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பர்மா வரலாற்றில் சுவையான சம்பவங்கள்  வெற்றிலை எச்சிலால் ராஜா பதவி போச்சு !- 1 (Post No.12,378)

பர்மா நாட்டின் தற்போதைய பெயர் மியன்மார்.;லட்சக் கணக்கான தமிழர்கள் வசித்த, வசிக்கும் நாடு.தமிழர்களின் பழைய கல்வெட்டும் வணிகர் தொடர்பைக் காட்டுகிறது. அங்கிருந்து கொண்டு வந்த தேக்கு மரம் இன்று செட்டி நாட்டில் வீடுகளை அலங்கரிக்கிறது. பர்மாவிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் காலனிகள் அமைத்த இடங்களில் அங்கிருந்து கொண்டுவந்த கைப்பிடி மண்ணை வைத்து எழுப்பிய  தமிழ்நாட்டுக் கோவில்களில் இன்றும் பர்மாவில் கொண்டாடியது போலவே விழாக்களை மக்கள் நடத்துகின்றனர். மணிப்பூரில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மோரே என்னும் இடத்திலும் கோயில் கட்டி இன்றும் வழிபடுகின்றனர்..

பர்மாவில் ஆங்கிலக்  கதைகளிலும் கூட தமிழ்ச் சொற்களான பந்தல் ,கோயில், செட்டியார் என்பன அப்படியே மொழி பெயர்க்காமல் பயன்படுத்தப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக பர்மா என்பதே பிரம்ம தேசத்தின் திரிபுச் சொல் என்பதும் இந்து மத தாக்கத்தைக் காட்டி நிற்கிறது . பாமர் என்ற இன மக்களால் அந்தப் பெயர் உண்டாகியது என்று வாதிடும் மக்களுக்கும் அந்தச் சொல்லின் தோற்றம் தெரியவில்லை. பர்மாவைப் பற்றிய ஆங்கிலப் புஸ்தகங்கள் இந்துமதத்தை பிராஹ்மிணிகல் Brahmanical Religion மதம் என்றே குறிப்பிடுகின்றன. இதற்கு மூ ன்றே பொருள் தான் உண்டு. பிரம்மன் என்பவரை வழிபடும் மதம் ; பிரம்மன் என்பது உபநிஷத்துகளில் கடவுள் என்று பொருள்படும் ; இரண்டாவது பொருள், மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா என்னும் கடவுளை வழிபடுவோர் நிறைந்த இடம்; மூன்றாவது அர்த்தம், பிராமண குருக்கள், பட்டர்கள் வந்து பூஜைகளைத் துவக்கிய நாடு. இந்த மூன்றுக்கும் அங்கே சான்றுகள் உள

பிரம்மாவுக்கு பல வண்ணங்களில் தபால் தலைகளை 100 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்ட லாவோஸ் Laos என்னும் நாடும் இதை ஒட்டி இருக்கிறது. அதன் பெயரே லவன் என்ற ராம பிரானின் மகன் பெயர். பர்மா கல்வெட்டுகள் தங்கம் , வெள்ளிக் குடங்களில் புனித நீர் நிரப்பி மன்னருக்கு பிராமணர்கள் பட்டாபிஷேகம் செய்த செய்தி ஒரு கல்வெட்டிலும், அந்த மன்னர்கள் ராமனின் சூரிய குலத்தில் வந்தவர்கள் என்று பெருமை பேசும் கல்வெட்டுகளும் பர்மாவில் கிடைத்துள்ளன. எல்லா வற்றிற்கும் மேலாக பக்கத்து நாடான தாய்லாந்தின் பழைய தலைநகர் பெயரே அயோத்யா தான். அதை அயுத்தியா என்று எழுதுவார்கள் .

பர்மாவில் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. வேலுவதி மற்றும் பல தமிழ் மன்னர்கள் பெயர்கள் உள்ளன வர்மன் என்று முடியும் பல்லவர் போன்ற மூன்று மன்னர்கள் உள்ளனர். இவர்கள் யார் என்பது பர்மியர்களுக்கே தெரியாது  பொது ஆண்டு (கி.பி. 439 முதல் 200 ஆண்டுகளுக்கு அங்கு மொக்கன், திட்டம்/தித்தன் முதலிய 5 தமிழ் மன்னர்கள் ஆண்டு வந்தனர். அசோகர் காலத்தில் சோனா, உத்தரா என்ற இருவர் புத்த மதத்தைப் பரப்ப பர்மா சென்றதை இலங்கை வரலாற்று நூல்களிலிருந்து அறிகிறோம். சம்ஸ்க்ருத நூல்களில் பர்மாவை சொர்ண பூமி / தங்க நாடு என்றே அழைக்கின்றனர் ;அவைகளை தனி வரலாற்றுக் கட்டுரைகளில் காண்போம். இப்போது வெற்றிலை துப்பிய எச்சில், பன்றிக் காலின் கரி  முதலிய சுவையான வரலாறுகளை மட்டும் காண்போம் .

xxxx

தூ— என்று துப்பியதால் மன்னர் பதவி போச்சு !

கியாசுவா 1234-1250 King Kyaswaa

கியாஸ்வா ஒரு திறமையான அரசர். 1249ல் அவர் வெளியிட்ட கல்வெட்டு நீண்ட வாசகமுள்ள கல்வெட்டு. அதில் என்னன்ன குற்றங்களுக்கு என்னன்ன தண்டனைகள் என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தர்மராஜா என்ற பட்டப்பெயர் ஏற்பட்டது.அவர் புத்த மத நூல்களான த்ரி பிடகா (மூன்று பெட்டி) வை ஒன்பது முறை படித்தவர். 57ஆவது வயதில் கத்திச் சண்டை போட்டு விளையாடுகையில் காயம் ஏற்பட்டு செத்துப் போனார் .

xxxx

உசனா 1250-1256 Uzanaa

இவர் கியாஸ் வா வின் மகன் ; வேட்டை ஆடுவதிலும் குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதிலும் பொழுதைச் செலவிட்டார் ; 38 வயதில் யானையால் மிதிபட்டு உயிரைவிட்டார்.

Xxxxx

நராதிபதி 1256- 1287 Narathihapati

உசனாவுக்கு இரண்டு மகன்கள் ; முறையான மஹாராணி மூலம் பிறந்தவர் திங்கத்து ; காமக்கிழத்தி மூலம் பிறந்தவர் நராதிபதி .அப்போது முதன் மந்திரியாக இருந்தவர் யஜாதிங்கியான் Yazaathinkyaan. ஒரு முறை அவர் நடந்து செல்லுகையில் பின்னால் திங்கத்து வந்துகொண்டிருந்தார். அவருக்கு மந்திரி முறையான மரியாதை செலுத்தவில்லை என்று கோபம் பொங்கியது. பர்மா மக்கள், நம்மூர் தஞ்சாவூர்க்காரர்கள் போல வெற்றிலை போடும் பழக்கம் உடையவர்கள் வாயில் இருந்த வெற்றிலை எச்சிலை தூ என்று முதமந்திரி மீது துப்பினார். மன்னர் மகன் ஆயிற்றே ; ஆகையால் முதல் மந்திரி வாய் திறக்காமல் வீட்டுக்குச் சென்றார். ஆனால் அவர் போட்டுக்கொண்ட துணி மணிகளை துவைத்து அலசாமல் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாத்தார் . யானையைப் போல நினைவு வைத்துக்கொண்டு பழிவாங்கக் காத்திருந்தார் . மன்னர் உசனா இறந்த செய்தி வந்தது இதுதான் தருணம் என்று கருதிய முதலமைச்சர் பெரியோர்கள், ஊர்  மக்களின் பிரதிநிதிகள், புத்த பிட்சுக்கள் கூட்டத்தைக் கூட்டி, பெட்டிக்குள் வைத்திருந்த எச்சில் கறை பட்ட சட்டையைக் காட்டி அதைச் செய்த திங்கத்து மன்னர் பதவிக்கு அருகதையற்றவர் என்று அறிவித்தார். அனவைவரும் அதை ஆமோதித்தனர் .காமக்கிழத்தியின் மகனான நராதிபதி மன்னன் பதவியில் அமர்த்தப்பட்டார் . அவரோ சரியான சாப்பாட்டு ராமன்; பெருந்தீனி;தினமும் 300 வகை கறிகளை சாப்பிடுகிறேன்எனக்கு 3000 அந்தப்புர அழகிகள் இருக்கிறார்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டார் . அவருக்கு மக்கள் வைத்த பெயர் வேறு ; அவர்கள் சூட்டிய பெயர் தரூப் யி. அதாவது துருக்கர்களைக் கண்டு பயந்தோடியவன் . அவர்கள் துருக்கர் என்பது சீனாவிலிருந்து படை எடுத்த மங்கோலியர்கள் ஆவர் .

அந்தக் கதையைத் தனியாகக் காண்போம் .

—–to be continued

Tags- பர்மா வரலாறு , மியன்மார் சுவையான சம்பவங்கள்,  வெற்றிலை எச்சில், ராஜா பதவி , போச்சு