Sanskrit in Muslim Countries (Post.12,397)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,397

Date uploaded in London – –  10 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Sanskrit in Muslim Countries (Post No.12,397)

Many Sanskrit manuscripts, records in Indian languages and alphabets have been unearthed in Central Asia , Siberia and former Soviet Union countries .

All countries end with Sanskrit word STHAANAM (land, area, reion)

Uzbekistan

Afghanistan

Kazakhstan

Turkmenistan

Kucha in Central Asia is called Kuch now. Kumaravijaya , a famous Buddhist monk had come from tis area. A fragmentary work in Brahmi script found here is appears have been composed by him. Several Sanskrit works on Buddhism were translated into the language of Kuchi . Kumara Vijaya lived during second century CE.

The ancient Agnidesa was located on the way from Kuchi to tun Hwang. Many Sanskrit manuscripts in Brahmi script were preserved in the library here.

Statue of Ganesh was discovered in Khotan.

German Professor Gruenwedel and French scholar Pelliot have discovered a number of Sanskrit manuscripts including tripitakan in Sanskrit.

The bower manuscript was discovered by bower in 1890 at Kasghar. It contains treatises on medical science, cubomancy, remedies for snake bites.

Fragments of the Sariputraprakarana by Asvaghosa and two other Sanskrit dramas of unknown authorship were found in Turfan.

The Weber manuscript is a Kiychean translation of a collection of Sanskrit medical recipes.

At Bamien many cave temples are there where Sanskrit manuscripts were found.

Endere in Central Asia have yielded seal depicting he figures of Kubera, Ganesa; Siva and Vishnu statues were also unearthed.

KHOTAN (Hotan), a town (lat 37°06′ N, long 79°56′ E) and major oasis of the southern Tarim Basin in the Xinjiang Uyghur Autonomous Region of China and an important kingdom with an Iranian-speaking population.

Kashgar lies in far western China in the Uygur Region of Xinjiang. The city is situated at the western end of the Tarim Basin in a fertile oasis of loess and alluvial soils watered by the Kashgar River and by several springs.

Great scholar Lokesh Chandra draws attention of scholars to the close similarities between Sanskrit culture and that represented by Turkic.

The Berlin collection contains more than a hundred Turkik fragments in Brahmi script.  In most of them Sanskrit words are followed by their Turkic equivalents

Here is a small list :

Vishnu – Visnu

Patra – Batir

Jaataka- Cadik

Vihaara- Vrxar

Rsi- Irzi

Here is some detail about The Berlin Collection

The Berlin Turfan-Collection (lifted from another site and I have summarised it)

by Simone-Christiane Raschmann

Among the archaeological expeditions from numerous countries to explore the ruins in the deserts of Central Asia, then terra incognita, there were also four German expeditions to the oasis of Turfan. Between 1902 and 1914 German scholars under the leadership of Albert Grünwedel and Albert von Le Coq made excavations in the area of Turfan, Hami, Kucha and Karashahr.

After these first sensational publications, the Orientalische Kommission at the Berlin Academy of Sciences was founded in March 1912. It was to coordinate research on the more than 30,000 fragments of the so called “Turfan Collection”.

Other manuscripts written in Brahmi script in an until then unknown language, which included some Indo-European elements, were discovered in the Kucha region The language became known as Toxri or Tokharian.

The Turkish part of the collection is a good example for the great variety of the Turfan texts. It consists of about 8,000 fragments of various size.

A small number of the fragments was written in Turkish Runic writing, but also in Syrian, Tibetan and Brahmi script. In a seal of a Mongolian document there is an Uigur signature written in ‘Phags-pa script.

it is possible to say that most of the Manichaean Turkish texts and the oldest Buddhist texts were written between the 8th and the 10th century. Most of the Buddhist and non-religious texts and documents are from the 10th – 13th century. The Buddhist texts form the greatest part of the Turkish part of the Berlin Turfan collection.

The discoveries of the four German Turfan expeditions were sent home in wooden boxes. Already at the site of discovery the manuscripts were wrapped in paper by the members of the expedition. On the top of every package a notice was placed of the contents together with a abbreviation signifying the number of the expedition and the site.

A systematical arrangement of the Turfan manuscripts, especially the Sanskrit texts was attempted, but never successfully completed. The first important publications of Turfan texts apart from those mentioned above are for instance: Central Asian Sanskrit texts in Brahmi script from Idikutshahri, Chinese Turkestan by Heinrich Stönner (1904), Fragments of the Sanskrit canon of the Buddhists from Idykutshari, Chinese Turkestan (1904); Fragments of a Sanskrit grammar from Chinese Turkestan by Emil Sieg (1907 and 1908); Fragments of buddhist dramas (1911) and Medical Sanskrit texts (1927) by Heinrich Lüders; Türkische Manichaica from Chotscho by Albert von Le Coq published in three volumes between 1911-1922; Türkische Turfan-Texte (I-VII) published by Willi Bang, Annemarie von Gabain and Gabdul Reshid Rachmati between 1929-1936.

As result of the division of Germany after World War II, the Turfan collection was split as well. Those parts, which had been sent to places in what was to become the Soviet Zone of Occupation, were returned by the Soviet forces in August 1945 to the rooms of the Orientalische Kommission, Berlin, Unter den Linden. This institution was newly constituted as Institut für Orientforschung at the newly founded Deutsche Akademie der Wissenschaften zu Berlin. Other parts of the collection, from places in the western occupation zones, for instance Ansbach, were handed over to the Mainzer Akademie der Wissenschaften und Literatur only in 1947. Because of the absence of specialists for several groups of the manuscripts this collection was split again. A number of manuscripts (especially Iranica) were sent to the Hamburg University where Wolfgang Lentz was working. Another part, mostly Sanskrit texts, was sent to Göttingen.

Further work on the large group of Sanskrit texts was done for the first years after World War II in cooperation between Göttingen under the direction of Ernst Waldschmidt and Berlin, where his pupil, Dieter Schlingloff, was working up to 1961 and where the main part of fragments of this text group is preserved still today. Also under the direction of Ernst Waldschmidt and with the support of the Akademie der Wissenschaften zu Göttingen several publication series concerning the Sanskrit Turfan texts were founded, for instance Sanskrittexte aus den Turfanfunden and Sanskrit Wörterbuch der buddhistischen Texte aus den Turfan-Funden. Soon after the foundation of the project of a union catalogue of oriental manuscripts in Germany (Katalogisierung der orientalischen Handschriften in Deutschland), Ernst Waldschmidt and his colleagues began to prepare a catalogue of Sanskrit fragments. This work is still continuing today, now under the direction of Heinz Bechert. Up to now 7 volumes of the catalogue Sanskrithandschriften aus den Turfanfunden have been published. A supplementary volume by Lore Sander deals with palaeographic aspects of the Sanskrit manuscripts of the Berlin Turfan collection.

xxxxx

 A lot of research is required to find out the influence of Sanskrit in Central Asia.

(lifted from another site and I have summarised it- London swaminathan)

—subham—

The Weber collection, The Berlin Collection, The Bower Manuscripts, Sanskrit, in Central Asia

QUIZ கன்பூசியஸ் பத்து QUIZ (Post No.12,396)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,396

Date uploaded in London – –  10 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ SERIES No.64

QUIZ கன்பூசியஸ் பத்து  QUIZ

1.கன்பூசியஸ் Confucius/ Kong Fuzi  எந்த நாட்டைச் சேர்ந்தவர்எப்போது வாழ்ந்தார்?

xxxxx

2.பாரதியார் கன்பூசியஸ் மதம் பற்றி என்ன சொன்னார் ?

xxxx

3.கன்பூசியஸ் மதத்தை கோட்பாடுகளைப் பின்பற்றுவோர் எத்தனை பேர்?

xxxxx

4.அவர் ஆற்றிய முக்கியப் பணி எந்தத் துறையைச் சேர்ந்தது ?

xxxxxx

5.கன்பூசியஸ் என்று சொல்லுவது சரியா ?

xxxx

6.கன்பூசியஸ் ஆறு விஷயங்களை சொன்னார் அவை யாவன ?

xxxxx

7.அவர் பிறந்த இடம் எதுஇறந்த இடம் எது ?

xxxxx

8.அவர் பிறந்த தேதியை  எப்படிக் கொண்டாடுகிறார்கள் ?

xxxxx

9.அவர் புஸ்தகம் எழுதினாரா அதன் பெயர் என்ன ?

xxxxx

10.இந்துமத நூல்களை ஒப்பிட்டால் அவர் சொன்னதில் புதுமைகருத்து வேறுபாடு உண்டா ?

Xxxxx

விடைகள்

1.சீனாவைச் சேர்ந்தவர். அவருடைய காலம் கிட்டத்தட்ட புத்தர் காலம் கி.மு 551-479 BCE அவர் பெரிய தத்துவ ஞானி

xxxxx

2.பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!

புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்து மதம், இஸ்லாம், யூதம்,

நாமமுயர் சீனத்துத் “தாவு”மர்க்கம்,

நல்ல “கண் பூசி”மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே– பாரதியார்

Xxxxx

3.கடைசியாக எடுத்த சர்வேயின் படி 61 லட்சம் பேர்.

xxxx

4.கல்வித் துறை ; பிரபுக்கள் மட்டுமே கல்வி பயின்ற காலம் அது. எங்கே கல்வி அறிவு பரவுகிறதோ அங்கு வகுப்பு வேற்றுமைகள் குறையும் என்று உபதேசித்து  கல்வியைப் பரப்பினார். 3000 மாணவர்களை அழைத்து போதித்தார்.

xxxx

5.இல்லை. இது வந்தேன் மொழி உச்சரிப்பு; சீன மொழியில் அவர் பெயர் குங்-புட்ஜு . Confucius  = Kong Fuzi 

புட்ஜு என்றால் ஆசிரியர் என்று பொருள் ;

xxxxxx

6.சடங்குகள், இசை, வில் வித்தை ,ரதம் ஓட்டுதல் , எழுத்தறிவு, கணிதம் “rites, music, archery, chariot driving, writing and mathematics.

****

இன்னும் ஒரு 6 விஷயங்கள் :-

Ren (மனிதாபிமானம் humanity, benevolence), Yi (தர்மம் righteousness), Li (சொத்துரிமை propriety, rites), Zhi (விவேகம் wisdom, knowledge), and Xin ( நம்பகத்தன்மை trustworthiness). Wen – உயர்ந்தோர் பண்புகள் a refined intellectual of the gentry class

xi, zhi, li, yi, wen, and ren.

xxxx

7.சீனாவின் லூ மாநிலத்தைச் சேர்ந்த ட்சவ் என்ற சிறு நகரத்தில்  கி.மு 551 ஆம் வருடம் செப்டம்பர் 28 பிறந்தார்

தந்தை பெயர் ஷ லியாங் ஹி; .தாயின் பெயர் ஜென் சென் ட்சாய். அவர் இரண்டாவது மனைவியின் குழந்தை

அவர் இறந்த இடம் லூ; அங்கு அவருக்கு பெரிய கோவில் கட்டி இருக்கிறார்கள் .

xxxx

8.அவர் பிறந்த தேதி-செப்டம்பர் 28.

பார்மோசா என்னும் சுதந்திர சீனா நாட்டில் செப்டம்பர் 28ம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறார்கள் தத்துவ ஞானியும் இந்திய ஜனாதிபதியும், ஆசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தேதியான செப்டம்பர் 5-ம் தேதியை நாம் , ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவதைப் போன்றது இது..

xxxx

9.அவருடைய உரைகளும் அவரது சீடர்களின் உரைகளும் Analects அனலெக்ட்ஸ் என்ற புஸ்தகத்தில் கிடைக்கின்றன . இது சீனாவிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

xxxxx

10.இல்லவே இல்லை; அவர் சொன்ன அத்தனை கருத்துக்களும் திருக்குறளில் உள்ளன. விதுர நீதியில் உள்ளன.

—-Subham—

Tags- கன்பூசியஸ் , தத்துவ ஞானி, ஆசிரியர் தினம், சீனா  , பார்மோசா, Confucius, The Analects

சாணக்ய நீதி! (Post No.12,395)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,395

Date uploaded in London –  10 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சம்ஸ்கிருத செல்வம்

சாணக்ய நீதி!

ச.நாகராஜன்

நீதிகளைச் சொல்வதில் சாணக்யர் வல்லவர். அவரது சாணக்ய நீதி அரசர்களாலும் மந்திரிகளாலும் அனைத்து மக்களாலும் மதிக்கப்பட்ட நீதி சாஸ்திரம்.

அவற்றில் சில இதோ:

செய்யக்கூடாதவற்றைச் செய்யாதே!

அகர்தவ்யம் ந கர்தவ்யம் ப்ராணை: கண்டகதைரபி|

கர்தவ்யமேவ கர்தவ்யம் ப்ராணை: கண்டகதைரபி ||

இறப்பே வந்தாலும் செய்யக்கூடாதவற்றைச் செய்யக் கூடாது.  செய்ய வேண்டியதைச் செய்வதில் இறக்கவே நேரிடினும் அதைச் செய்தல் வேண்டும்.

உலகம் சுழல்வது எதனால்?

அகாரணம் வ்யாகரணம் தந்த்ரஷப்தோபகாரணம் |

அகாரணம் த்ரயோ வேதாஸ் தண்டுலாஸ்தர காரணம் ||

உலகம் இலக்கணத்தைச் சுற்றிச் சுழல்வதில்லை.

உலகம் ஒரு இழையிலிருந்து வரும் ஒலியைச் சுற்றிச் சுழல்வதில்லை.

உலகம் மூன்று வேதங்களைச் சுற்றிச் சுழல்வதில்லை.

அது அன்றாட ஒரு பிடி உணவைச் சுற்றியே சுழல்கிறது!

பெண்ணையும் ஆணையும் இணைப்பது யார்?

அக்னிகும்ப சமா நாரி த்ருதகும்ப சமோ நர: |

உபயோரபி சம்யோக: கஸ்ய விஸ்வாசகாரக: ||

ஒரு பெண் அக்னி கும்பம் போல இருக்கிறாள்.

ஒரு ஆண் நெய் குடம் போல இருக்கிறான்.

இந்த இரு பொருள்களையும் சேர்ப்பது யார்?

அறுவரிடம் ஜாக்கிரதையாக இரு!

அக்னிநராப: ஸ்தீரியோ மூர்கா: சர்பா ராஜகுலானி ச |
நித்யம் யத்னேன சேவ்யானி சத: ப்ராணஹாரிணி ஷட் ||

அக்னி, நீர் (நதிகள்), பெண்கள், முட்டாள்கள், பாம்புகள், ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆகிய ஆறு பேரிடமும் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், சமயம் வாய்த்ததெனில் அவர்கள் உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பர்.

செல்வம் பெறுவதன் பலன் எதில் ஏற்படுகிறது?

அக்னிஹோத்ர பலா வேதா

:  சீலவ்ருத்தபலம் ச்ருதம் |

ரதிபுத்ரபலா தாரா தத்தபுக்தபலம் தனம் ||

வேதம் கற்றதன் பயன் அக்னிஹோத்ரம் செய்வது.

கல்வி கற்பதன் பலன் ஒழுக்கமாக வாழ்வது

மனைவியைக் கொள்வதன் பலன் காமத்தால்  இன்பம் அடைந்து புத்திரனைப் பெறுவது;

செல்வத்தைப் பெறுவதன் பலன் மற்றவர்க்கு கொடுத்து இன்பம் அடைவது!

நல்லவையும் தீயவையும் உரிய காலத்தில் பலன் தரும்!

அசோத்யமானானி யதா புஷ்பானி ச பலானி ச |

ஸ்வகாலம் நாதிவர்தந்தே  ததா கர்ம புராக்ருதம் ||

பூக்களும் பழங்களும் எவராலும் தூண்டப்படாதபடி தானாகவே தங்களுக்கான உரிய காலத்தில் பூக்கிறது பழுக்கிறது. அது போலவே முன்னால் செய்த செயல்கள் உரிய காலத்தில் வந்து தோன்றுகிறது.

(அதாவது முந்தைய ஜென்மத்தில் செய்த நல்ல மற்றும் தீய காரியங்கள் உரிய காலத்தில் இந்த ஜென்மத்தில் தோன்றி பலனைத் தருகின்றன)

சாணக்யர் சந்திரகுப்த மௌர்யரின் அரசவையில் மந்திரியாகப் பதவி வகித்தவர். அவர் கூறும் நீதிகளாக ஏராளமான நீதி மொழிகள் உள்ளன. அனைத்துமே அருமையானவையாகும்.

***

B for Bhuvaneswar- Know India Puzzle (Post No.12,394)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,394

Date uploaded in London – –  9 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

You solved A for Agra puzzle yesterday ; To day I have given eight towns beginning with the letter B

8       1        
                 
              2  
                 
                 
                 
                 
                 
7       B       3
                 
                 
                 
                 
                 
              4  
                 
6       5        

1.Baramullaa – Gateway of Jammu Kashmir; Kashmiris call this town Warmul Summer capital of the state; Sanskrit name Varahamula Kshetra.

2.Bhilai- Famous for the Steel Plant, one of the largest in India, this industrial city is in Chattisgarh. The Steel Plant is renowned as the sole manufacturer of rails in India that are used by the Indian Railways.

3.Bodh Gaya- Bodh Gaya is a village in Bihar. Considered one of the most important Buddhist pilgrimage sites, it’s dominated by the ancient brick Mahabodhi Temple Complex, built to mark the site where the Buddha attained enlightenment beneath a sacred Bodhi Tree; Hindus go there for Pitru Karya.

4.Bhopal-  Union Carbide Gas Leak killed 4000 people in 1984 in this city in Madhya Pradesh

5.Bengaluru – In this city HAL is making planes; sending computer personnel around the world

6.Badrinath- One of the four Char Dhams; Vishnu temple is visited by all the Vaishnavites and other Hindus

7.Bikaneer- Pakistani border city in Rajasthan; famous for its Junagarh Fort.

8.Bishnupur- This is Vishnu’s town. Same name is for two towns in Manipur and West Bengal

r8       a1        
 u      l        
  p     l     2  
   u    u    i   
    n   m   a    
     h  a  l     
      s r i      
       iah       
7reenakiBodhgaya3
       aeh       
      d n o      
     r  g  p     
    i   a   a    
   n    l    l   
  a     u     4  
 t      r        
h6       u5        

Answers1.Baramullaa; 2.Bhilai; 3.Bodh Gaya; 4.Bhopal; 5Bengaluru; 6.Badrinath; 7.Bikaneer; 8.Bishnupur

—subham—-

பர்மா முழுதும் சம்ஸ்க்ருதம் -2 (Post No.12,393)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,393

Date uploaded in London – –  9 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

13.மூன்று + இரண்டு சம்ஸ்க்ருத விக்ரம /வர்மன் மன்னர்கள்

தமிழ் நாட்டில் பல்லவ மன்னர்களின் பெயர்கள் வர்மன் என்று முடிவதை நாம் அறிவோம். ஆனால் மஹேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் ஆகிய பெயர்களுக்கும் முன்னதாக போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் மூல வர்மன் யாகம் செயது நட்ட ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டைக் கண்டுபிடித்தவுடன் உலகம் முழுதும் வியப்பு ஏற்பட்டது. இப்பொழுது இந்தோனேஷியா என்னும் உலகின் மிகப்பெரிய முஸ்லீம் நாட்டின் ஒரு பகுதியான போர்னியோ காடுகள் கன்னி வனம் — அதாவது மனிதர்கள் கால் சுவடே படாத VIRGIN FOEST வர்ஜின் பாரஸ்ட் என்று கருதினர். ஆனால் அந்தக் காட்டுக்குள்ளே யாகம் செய்து நட்ட யூப நெடுந்தூண்களின் மூலவர்மனின் ஸம்ஸ்ருதக் கல்வெட்டுகள் இருந்தன .இவை நாலாம் , ஐந்தாம் நூற்றாண்டுக் (CE) கல்வெட்டுகள் .

இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் யூபம்  என்ற வேதகால ஸம்ஸ்க்ருதச் சொல் புறநானூறு முதலிய 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழ் நூல்களில் காணக்கிடைப்பதால் அந்த வர்மன் மன்னர்கள் தமிழர்களாக இருக்கக்கூடும் . தென் கிழக்காசிய நாடுகளில் காணப்படும் லிபி/ எழுத்து பல்லவ கிரந்த எழுத்துக்கள் மூலம் பரவியது அறிஞர்கள் அறிந்ததே!

இதே போல பர்மாவிலும் ஒரு அதிசயம்!

ப்ரோம் நகரில் பியூ எழுத்தில் உள்ள மூன்று அஸ்தி கலசங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிலுள்ள ஆண்டுகள் எந்த சகாப்தம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் எழுத்து அமைதி முதலியவற்றை ஆராய்ந்து நிபுணர்கள் கால நிர்ணயம் செய்தனர் ; அந்தக் கணக்குப்படி  பெயர்களும், மன்னர்களின் வயதும் பின்வருமாறு :

678 சூர்ய விக்ரம  மரணம் , வயது 64

695 ஹரி விக்ரம மரணம் , வயது 41

718 சிஹா விக்ரம மறைவு , வயது 44

இவை தூய ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்; மேலும் இவர்கள் ஆண்ட விக்ரம வம்சம் பற்றியும் தகவலே இல்லை .

இவை தவிர வேறு சில இடங்களில் பிரபு வர்மன்ஜெய சந்திர வர்மன்  ஆகிய பெயர்களும் கிடைத்தன. ஆகவே விக்ரம வம்சம் பல்லவ வம்சம் ஆகியனவும் அங்கு இருந்திருக்க வேண்டும். அருகிலுள்ள கம்போடியாவில் இதுபோன்ற பெயர்கள் பின்னால்தான் வந்தன.

புத்தர் சிலை ஒன்றின் பீடத்தில் உள்ள ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் ஹரி விக்ரமனின்  மூத்த  சகோதரன் ஜெய்ச சந்திர வர்மன் என்றும் அவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுடைய ஆன்மீக ‘குரு’க்கள் இரு வேறு நகரங்களை ஒரே மாதிரியில் கட்டி அவர்களை தனியாக வாழச் செய்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

14.அரிமர்தனபுரம்

ஹமாவசா  என்பது ஸ்ரீ க்ஷேத்ரத்தின் வேறு பெயர். இதை பர்மிய உச்சரிப்பில் சிசித் என்றும் சுருக்கிவிடுவர். நாமும் ஐராவத நல்லூர் என்பதை அயிலானூர் என்றுதானே சொல்கிறோம் ; ஆரல்வாய் மொழி என்பதை ஆராம்பொலி  என்றுதானே சொல்கிறோம்

நகரங்களின் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் காணப்படுகின்றன பகான்  என்று அழைக்கப்பட்ட நகரின் பெயர் கல்வெட்டில் அரி மர்தன புரம் என்று குறிக்கப்பட்டுள்ளது. எதிரிகளை துவம்சம் செய்யும் ஊர் என்பது இதன் பொருள்.

இன்னும் ஒரு நகரின் பெயர் பிஷ்ணுமாயா; ஸம்ஸ்க்ருதப் பெயர் விஷ்ணு மயம் என்பதை இப்படித்  திரித்து விடுகின்றனர் இந்த நகரத்தின் மஹாயான புத்த மதப் பிரிவு எழுதிய வரலாற்றில் இதை சண்டி தேவி, பரமேஸ்வரன், கருடன் உதவியுடன்  விஷ்ணு , உருவாக்கியதாக எழுதப்பட்டுள்ளது

15.ஐராவதி

இந்தியாவில் இப்போதும் ஷராவதி, வேகவதி, அமராவதி,ஹேமாவதி நதிகளைக்  காண்கிறோம். இதே போல பர்மாவின் மிகப் பெரிய, முக்கியமான நதிக்கு ஐராவதி என்ற ஸம்ஸ்க்ருதப் பெயரைச் சூட்டியுள்ளனர். இமய மலையிலும் ஒரு ஐராவதி நதி உண்டு; ஐராவதி என்பது காஸ்யபருக்கும், க்ரோதவசா என்ற பெண்ணுக்கும் பிறந்த 10 புதல்விகளில் ஒரு பெண்ணின் பெயர் ஆகும்  மஹாபாரதம் முதலிய பல நூல்களில் இந்தச் சொல் பல பெண்களின் பெயர்களாக வருகிறது .

உலகிலேயே நகரங்களுக்கும் நதிகளுக்கும் பெண்களின் ஸம்ஸ்க்ருதப் பெயரைச் சூட்டியது இந்துக்கள் மட்டுமே.

பிரபல புத்த மத கோவிலின் பெயர் ஆனந்தா கோவில். நம் ஊரில் இன்றும் யோகானந்தா , பரமானந்தா , பிரும்மானந்தா போன்ற பெயர்களில் சன்யாசிகளைக் காண்கிறோம். ஆனந்த என்பது பேரின்பத்தைக் குறிக்கும் ஸம்ஸ்க்ருதச் சொல்

16.மூன்று புதிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள்

வெள்ளைக்கார ஆட்சிக் காலத்தில் படியெடுத்த கவெட்டுகளில் சுமார் 330 கல்வெட்டுகளில் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கினறன. அதற்குப்பின்னர் 3 புதிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் கிடைத்தன. இவை இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தை ஒட்டிய அரக்கான் பிரதேசத்தில் ஆட்சி செலுத்தியோர் பற்றியவை.

17. தர்ம சாஸ்திரம்

தர்ம என்பதை பாலி மொழி கொச்சைப்படுத்தி தம்மம் என்றும், தர்ம சாஸ்திரம் என்பதை தம்மதத் என்றும் சொல்லும். முன்னரே த = ச  மாற்றம்  ஆங்கிலம் தமிழ் மொழியில் இருப்பதைக் காட்டியுள்ளேன்

மனு தர்ம சாஸ்திரத்தை ஒட்டியே பர்மிய சட்டப்புஸ்தகங்களும் இயற்றப்பட்டன. மனு ந்யாய / நீதி என்பதை மனு க்யாய என்பர்

1600ம் ஆண்டு வாக்கில் வேத பண்டிதர்கள், குறிப்பாக பர்மிய அரசவையில் அதர்வண வேத பண்டிதர்க்கள் இருந்தமைக்கு சான்றுகள் உள

18.த்வாரா வதி லவ புரி

இப்போது இந்த ஊர்கள் பர்மாவின் பூகோள எல்லைக்குள் இல்லாவிடினும் மோன் அரசாட்சியின் கீழ் இருந்த இடங்களும் த்வாராவதி , லவ புரி போன்ற தூய ஸம்ஸகுதத்தில் இருக்கின்றன ; பழங்கால பர்மா என்னும்போது இவைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் .

பம்பாய் டில்லியில் கேட் வே GATE WAY இருப்பது போல த்வாரா (வாசல்) என்ற பெயரில் நகரம் இருந்தது . ஆங்கிலச் சொல்லான DOOR= DWAAR டோர் / கதவு என்பதே சம்ஸ்க்ருத த்வார  என்னும் சொல்லிலிருந்து வந்ததே .

லவ என்ற ராமனின் மகன் பெயரிலிருந்து லவ புரி , லாவோஸ் நாடு ஆகியன உண்டாயிற்று  ஹமாவா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு ஐந்தாம் நூற்றாடுக்கு முன்னரே இந்து மதம் பின்பற்றப்பட்டதைக் கூறுகிறது. கல்வெட்டுச் சான்றுகளை மட்டும் எடுத்துக்கொண்டால் புத்த மதம் இதற்குப்  பின்னர்தான் பர்மாவுக்கு வந்தது 1422ம் ஆண்டு தேதியிடப்பட்ட பகான் கல்வெட்டில் 255 புஸ்தகங்கள் புத்த மத சங்கத்துக்கு நன்கொடை கொடுத்த செய்தி கிடைக்கிறது ; அதில் பல சம்ஸ்க்ருத நூல்கள் பெயர்களும் உள்ளன.

 –SUBHAM—-

Tags- பர்மா, சம்ஸ்க்ருதம், பகுதி 2, ஐராவதி, அரிமர்தனபுரம்

ஒன்பது நரசிம்மர் சிலைகள்! கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 19 (Post No.12,392)

picture of Anekare temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,392

Date uploaded in London – –  9 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 19

85.சென்ன கேசவ பெருமாள் கோவில், ஆனகரே Shri Chennakeshava Temple, Anekere

இந்த வட்டாரத்தில் மட்டுமே 500-க்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன .சென்னராய பட்டணத்திலிருந்து 5 கி.மீ.தொலைவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலும் ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உடைய ஹொய்சளர் கோவில்தான் அழகான தூண்கள் இருக்கின்றன. கல்வெட்டும் இருக்கிறது கிராம தேவதை ஆனக்கரம்மா , பஞ்சசலிங்கேஸ்வரர் கோவில்களும் இருக்கின்றன. ஒரே குறை, கோவில்களைச் சுற்றி வீடுகள் வந்துவிட்டதால் அதற்கிடையே இந்தக் கோவில் மறைந்து கிடக்கிறது கோவிலில் அண்ணாந்து கபார்த்துக்கொண்டே செல்லவேண்டும் .. ஏனெனில் கூரையில் உள்ள ஒவ்வொரு வட்டவடிவ டிசைனும் வெவ்வேறு மாதிரி இருக்கும். கலைடாஸ்க்கோப்பில் பலவடிவங்களைக் காண்பது போல பல வடிவங்கள் !

முக்கிய கன்னட மொழிக் கல்வெட்டு The Halmidi inscription is the oldest known Kannada-language inscription i

பேலூர் வட்டாரத்துக்கு வந்தவர்கள் ஹல்மிதியில் உள்ள கன்னட சாசனத்தைப்  பார்க்காமல் போக மாட்டார்கள். ஏனெனில் கன்னட  மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் இதுதான் மிகப்பழைய  கல்வெட்டு..450 CE – 500 CE. . இது 1500 ஆண்டுப் பழமை உடைத்து. இதன் ஒரிஜினல் மைசூரில் மியூசியத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இங்கே இருப்பது வெறும் அச்சுதான் .கடம்ப லிபியில் கன்னட மொழியில் கல்வெட்டு அமைந்துள்ளது.

சமண சமய கோவில்கள் நிறைந்த இடம் இது.

86.கொரவங்கலா பூச்சேஸ்வரர் கோவில் Bucesvara Temple, Koravangala

ஹாசன் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைதியான சூழ்நிலையில் அமைந்த ஹொய்சாளர் கோவில் இது.

வல்லாள மன்னர் ஆண்ட காலத்தில் பூச்சி என்பவர் கட்டிய கோவில். மன்னரின் பட்டாபிஷேகத்தை ஒட்டி கட்டப்பட்ட கோவில் என்று கல்வெட்டு சொல்கிறது. 800 ஆண்டு வரலாறு கொண்டது இக்கோவில். சிவன் சந்நிதி , பெருமாள், சூரியன் சந்நிதிகளைக் கண்டு தரிசிக்கலாம்.கோவிந்த்தேஸ்வரநாகேஸ்வர கோவில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. ராமாயண, மஹாபாரத, பாகவத காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.

ஹாசன் வட்டாரத்தில் கோவில் இல்லாத ஊரே இல்லை எண்ணுமளவுக்கு ஏராளமான கோவில்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு சில புகழ்பெற்ற சிற்பிகளால் உருவாக்கப்பட்டதால் ஒரே மாதிரி தோன்றும். ஆயினும் அவை சில இடங்களில் நன்கு பாதுகாக்கப்பட்டதால் அதிக பயணிகளை ஈர்க்கின்றன

87.ராமநாதபுர சுப்ரமண்ய சுவாமி கோவில் Ramanathapura Sri Subramanya , Rameshwara, Pattabhirama and Agasthyeshwara temples

ஹாசன் நகரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ராமநாதபுரத்தைக் கோவில் நகரம் என்றும் தட்சிணா காசி என்றும் அழைப்பதுண்டு; காவிரி நதிக்கரையில் அமைந்த பல கோவில்களும் தரிசிக்க வேண்டியவைதான்.

மார்கழி மாதத்தில் நடக்கும் சுப்ரமண்ய சுவாமி கோவில் ரத உற்சவத்துக்கு பல மாநில மக்கள் வருகின்றனர்.அக்ஸ்த்யேச்வர சுவாமி கோவிலில் பெரிய லிங்கம் இருக்கிறது கணபதி, பரசுராமர், லட்சுமி, சாமுண்டீஸ்வரி திரு உருவங்களும் இருக்கின்றன

சோழர் கால , ஹொய் சாளர் கலை அம்சங்கள் நிறைந்த பல கோவில்கள் இருக்கும் இடம். ராமேஸ்வரபட்டாபிராம கோவில்கள் இருக்கின்றன.

88.சாந்திகிராம சென்ன கேசவர் கோவில் Shantigrama

ஹாசன் நாரிலிருந்து 13 கி.மீ. தொலைவு; 4 கோவில்கள் உள்ள ஊர். பெரிய கோவில் ஸெளம்ய கேசவர் கோவில்.

கர்நாடக மன்னர்களில் விஷ்ணுவர்தனரும் அவர் மனைவி சாந்தாலா தேவியும் புகழ் பெற்றவர்கள். மஹாராணி சாந்தலா ஆடலிலும் பாடலிலு ம் வல்லவள் . அவள் இந்தக் கோவிலில் திருப்பணிகளை செய்திருக்கிறாள். பெரிய கலை வேலைப்பாடுகள் எதுவும் இல்லை.

ஒன்பது நரசிம்மர் சிலைகள்!

யோக நரசிம்மர் Shantigrama Sri Varada Yoga Bhoga Narasimha Swamy.

இங்குள்ள கோவில்களில் பக்தர்கள் அதிகம் வருவது ஸ்ரீ வரத யோக போக நரசிம்ம சுவாமி கோவிலுக்குத்தான் 12ம் ஆம் நூற்றாண்டில் அசல பிரகாச முனி கட்டியது தியான நிலையில் உள்ள நரசிம்மர்.

சோழர் கால கலையின் தாக்கத்தைக் காணலாம் இங்கு கூரையில் செதுக்கப்பட்ட நவ நரசிம்மர் வேறு எங்கும் காணப்படாத அற்புத சிற்பங்கள். உக்ர க்ரோத,வீரவிளம்பகோபயோகஅகோரசுதர்சனலெட்சுமி நரசிம்மர் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன Ugra, Krodha, Veera, Vilamba, Kopa, Yoga, Aghora, Sudharshana and Lakshmi Narasimha).

மஹாராணி சாந்தலாதேவியின் தந்தை 1123ம் ஆண்டு கட்டிய , அருகிலுள்ள , தர்மேஸ்வர கோவில் , பல திருப்பணிகளால் உருமாறிக்கிடக்கிறது

மன்னர் விஷ்ணுவர்தனரும் அவருக்கு முந்திய அரசர்களும் சமணர்கள் ஆகையால் சாந்திநாத பஸதியையும் கட்டியுள்ளார்

பெங்களூரு- ஹாசன் தேசீய நெடுஞ்சாலை 75ல் இடம்பெறும் இக்கோவில்  வளாகம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

89.கூடலி கோவில்கள் Koodali  Rushyashrama, Brahmeshwara, Narasimha and Rameshwara temples.

சிவமொக்காவிலிருந்து 16 கி.மீ தொலைவு; தென்பகுதி வாரணாசி என்று இதை அழைப்பர். துங்க  நதியும் பத்ரா நதியும் கூடும் இடம்.

ருஷ்யாஸ்ரம, பிரம்மேஸ்வர, நரசிம்ம, ராமேஸ்வர கோவில்கள் இருக்கும் இடம்.

சங்கராசார்யார் ஸ்தாபித்த ஒரு மடமும் இருக்கிறது ; கல்வெட்டுகள் இருப்பதால் வரலாற்றுச் சிறப்பும் உண்டு.

சங்கராசார்யார் , சாரதாம்பா ஆகியோரை தரிசிக்கலாம். மடத்துக்கு வெளியே பிரம்மேஸ்வர, நரசிம்ம, ராமேஸ்வர கோவில்கள் அமைந்துள்ளன Brahmeshwara, Narasimha and Rameshwara temples. இஸ்லாமியப் படையெடுப்புகளில் நாசமாக்கப்பட்ட ஊர் இது.

இங்குள்ள கோவில்களில் பழமையானது எட்டாம் நூற்றாண்டு சங்கமேஸ்வரர் கோவில் ஆகும் .

picture of shantigrama temple

To be continued…………………………………

Tags- கர்நாடகம், பகுதி 19, 108 கோவில்கள், நவ நரசிம்மர், 9 நரசிம்மர் சிலைகள்

நாரத பக்தி சூத்ரம் (Post No.12,391)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,391

Date uploaded in London –  9 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நாரத பக்தி சூத்ரம்

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 8

ச.நாகராஜன்

இறைவனை அடையும் வழிகளான ஞான மார்க்கம், கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் ஆகியவை பற்றி ஹிந்து சாஸ்திரங்கள் மிக நுட்பமாக விளக்குகின்றன.

பக்தி மார்க்கத்தைப் பற்றி விளக்குவதில் ஶ்ரீமத் பாகவதம் மற்றும் புராணங்கள் பல்வேறு விஷயங்களை கதைகள், வரலாறுகள், சம்பவங்கள் மூலமாக விளக்குகின்றன.

பக்தி என்ற பெரும் கடலை சூத்திர வடிவில் தருவது நாரத பக்தி சூத்ரம்.

பக்திமான்களில் மிகச் சிறந்தவரான நாரத முனிவர் இதை விளக்குவது மிகவும் பொருத்தமானது; அதை அடையும் நமது பாக்கியம் சிறப்பானது.

மிக அற்புதமான நாரத பக்தி சூத்ரத்தை ஒவ்வொருவரும் படித்துத் தேர்ந்து அதன் படி நடத்தல் இன்றியமையாதது – இந்தக் கலி யுகத்தில்!

இதில் 84 சூத்ரங்கள் உள்ளன. முதல் 24 சூத்ரங்கள் பக்தியின் இயற்கைத் தன்மை பற்றி விளக்குகின்றன.

அடுத்த ஒன்பது சூத்திரங்கள் (25 முதல் 33 முடிய) பக்தி மார்க்கமானது ஞான மார்க்கம், கர்ம மார்க்கம் மற்றும் யோக மார்க்கத்தை விட எப்படி உயர்ந்தது என்பதை விளக்குகின்றன.

அடுத்த பதினேழு சூத்திரங்கள் (34 முதல் 50 முடிய) பக்தி  மார்க்கத்தை எப்படி அப்யசிப்பது என்பதை அழகுற விரிவாக விளக்குகின்றன.

அடுத்த பதினாறு சூத்ரங்கள் (51 முதல் 66 முடிய) உண்மை பக்தனை அடையாளம் காண்பிக்கும் லக்ஷணங்களை விளக்குகின்றன.

கடைசி பதினெட்டு சூத்ரங்கள் (67 முதல் 84 முடிய) பக்தியில் திளைத்து பக்தி மார்க்கத்தை வாழ்ந்து காண்பிக்கும் ஆத்ம சாக்ஷாத்காரம் அடைந்த மகான்களைப் பற்றிக் கூறுகின்றன.

மொத்தத்தில் பக்தி பற்றிய ஒரு கலைக் களஞ்சிய நூலாக இது திகழ்கிறது.

அதாதோ பக்திம் வியாக்யாஸ்யாம் என்பது முதல் சூத்ரம்.

பக்தியைப் பற்றி இப்போது விவரிப்போம் என்பது இதன் பொருள்.

சாதஸ்மின் பரமப்ரேமரூபா என்கிறது அடுத்த சூத்ரம்.

இறைவனிடம் கொள்ளும் ‘பரம ப்ரேமை’ என்பது கணவன் – மனைவி அல்லது இதர குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடன் கொள்ளும் ப்ரேமையை விட மிக மிக உயர்ந்தது என்பது இதன் பொருள்.

அம்ருதஸ்வரூபாச என்பது அடுத்த சூத்ரம்.

இந்த பக்தியை அடைவதனால் என்ன பயன் ஏற்படுகிறது?

இந்த ரகசியத்தை மிக மிக அருமையாகச் சொல்கிறது அடுத்த சூத்ரம்.

அதை அடைந்தவன் சித்தோ பவதி அம்ருதோ பவதி த்ருப்தோ பவதி

பக்தியில் சிறந்து விளங்குபவன் சித்தனாகிறான்.

அமரத்தன்மையை அடைகிறான்.

திருப்தியை அடைகிறான்.

இப்படி படிப்படியாக பக்தி சம்பந்தமான ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து முத்தாய்ப்பாக சூக்ஷ்ம விவரங்களை சூத்ரமாக எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய விதத்தில் இந்த நூல் தருகிறது.

பக்தியின் சிகரமாக அமைந்த ப்ருந்தாவன கோபியர்கள் 21ஆம் சூத்ரத்தில் சுட்டிக்காட்டப்படுகிறார்கள்.

பக்திக்கு நிரூபணம் பக்தியே தான் என்று நாரதர் அறுதியிட்டு உறுதி கூறுகிறார். (சூத்ரம் 30 மற்றும் 59)

ஸத்சங்க மகான்களின் சேர்க்கை கிடைப்பது துர்லபம் என்றும் அதை அடைய வேண்டியதன் அவசியத்தையும் 39ஆம் சூத்ரம் கூறுகிறது.

பக்தனின் லக்ஷணங்களும் செய்கைகளும் விரிவாக கூறப்படுகின்றன சூத்ரம் 67,68,69,70 முதலிய சூத்ரங்களில்.

பக்தி என்பது ஒன்றே தான் என்றாலும் அது 11 விதங்களில் பரிமளிக்கிறது. (சூத்ரம் 82)

இந்த நூலுக்கு பல விரிவுரைகள் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ளன.

1952இல் ஸ்வாமி சதானந்த சரஸ்வதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள விரிவுரையை ‘The Yoga Vedanta Forest University m Divine Life Society, Rishikesh வெளியிட்டுள்ளது.

Narada Bhakti Sutras –  A study என்ற நூலை ஸ்வாமி ஹர்ஷானந்தா கன்னடத்தில் எழுதியுள்ளார். இவர் ஶ்ரீ ராமகிருஷ்ணமடத்தைச் சேர்ந்த சந்யாசி ஆவார். இந்த நூலில் 21 அத்தியாயங்கள் உள்ளன. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிக அருமையான நூல் இது.

பக்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ஆதாரமான அடிப்படை நூல் இது என்பதால் அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நூல் நாரத பக்தி சூத்ரம்!

***

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 8 7 2023 (Post No.12,390)

Fossil Trees Near Viluppuram in Tamil Nadu

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,390

Date uploaded in London – –  8 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில் 16 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

12345
 6 
 7 8
910 
11
12  
13
14

குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்

1.சொற்களுக்கு பொருள் தரும் தொகுப்பு நூல்

 5.பார்வதியின் இன்னுமொரு  பெயர்;ஆனந்த சொரூபம் 

6.வியாழன் கிரகத்தின் பெயர்

7.ஊர்வலம், சுவாமி வீதி உலா

8.மகாபாரத சூதாட்ட நிபுணன்; துரியோதனாதிகள் வெல்ல உதவியவன்

9. தமிழ் இலக்கியத்தில் முதலை என்பதற்கான சொல்

11.சிவப்புக்கல்

12. சூரியனைக் கண்டால் மலரும் .

13. புறநானூற்றில் காணப்படும், 62, 65, 270, 288, 289, 368 ஆம் பாடல்கள் இப்புலவரால் பாடப்பட்டவை..;கரிகாலன்-நெடுஞ் சேரலாதன் போர் பற்றிச் சொல்கிறார்.

14. பாடியே சுவர்க்கம் புகுந்த நாயனார்

கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1. ஸ்ரீரங்கத்தின் தமிழ்ப்பெயர்

2கிரகண காலத்தில நிலவை விழுங்கும் பாம்பு

3. தேசிய கல் மர பூங்கா (National Fossil Wood Park,) ஒரு புவியியல் பூங்காவாகும். இந்த பூங்கா  விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

4. வறுமை; இந்தத் தலைப்பில் திருக்குறளில் ஒரு அதிகாரம் இருக்கிறது

5. இந்து மதத்தில் அறு சமயம் வகுத்தவர்

10. ராஜாவின் மனைவி.

xxxxxxx

விடைகள்

அ1ரா2தி3ந்ந4ஆ5
 கு6ரு ல்தி
ங் ப7னிகு 8
க9ரா10ம்க் ங்
மா11ணிக்ம்வு
தா12ரை  
க13ழாத்லையார்
ர்னாநானா14ஆ

—-subham—-

A for Agra — Know India Puzzle (Post No.12,389)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,389

Date uploaded in London – –  8 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Here are some towns in India; all beginning with letter A; find them .

1.Kerala Town; on the banks of Periyaru; annual Shivaratri festival in the palace is famous.

2. This town is famous for its alluring beauty, panoramic view of the Himalayas, rich cultural heritage, unique handicrafts, and delicious cuisines.

3.This is the island where Veer Savarkar was imprisoned

4.Famous Rama Temple is almost ready in this town

5.  This is an important pilgrim center and a small industrial township located at a distance of 26kms from Thane and about 60 kms to the east of Mumbai. Literally means ‘Lord of the sky’, the place is famous for 11th century Ambreshwar Shiva Temple.

6. Once the power centre of mighty rulers, this town is known for spectacular palaces like the Ujjayanta Palace, stunning lakes and several beautiful temples. The city, which is the second-largest in Northeast India after Guwahati, is surrounded by pristine forests, beautiful valleys and roaring waterfalls.

7. it is the site of zoological-horticultural gardens and of Belvedere House, the onetime residence of the former British lieutenant governor of Bengal and now the location of the National Library. The town has a college affiliated with the University of Calcutta in Kolkata

8.It  is one of the oldest cities in Rajasthan. Paradoxically, the city is also the most recent of the Rajput kingdoms. Its traditions can be traced back to the realms of Viratnagar that flourished here around 1500 BC. Also known as Matasya Desh, this is where the Pandavas, the mighty heroes of the Mahabharata, spent the last years of their 13-year exile.

        1     2 
   8            
                
                
                
                
 7      A      3
                
                
                
                
                
                
               4
6       5       

Answers

1.Alwaye; 2.Almore; 3.Andaman ; 4.Ayodhya ; 5.Ambarnath ; 6.Agartala ;; 7.Alippur ; 8.Alwar

        1     2 
   8    e    a  
    r   y   r   
     a  a  o    
      w w m     
       lll      
 7ruppilAndaman3
       gmy      
      a b o     
     r  a  d    
    t   r   h   
   a    n    y  
  l     a     a 
 a      t      4
6       H5       

 — subham—-

QUIZ மாதப்  பத்து QUIZ (Post No.12,388)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,388

Date uploaded in London – –  8 August, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

QUIZ SERIES No.63

QUIZ மாதப்  பத்து QUIZ (Post No.12,388)

1.மாதங்களில் நான் மார்கழி என்று யார் சொன்னார் ?எங்கே சொன்னார் ?

xxxx

2.ஆடி மாதத்துக்கும் சாகுபடிக்கும் என்ன தொடர்பு?

xxxx

3.ஐப்பசியையும் கார்த்திகையையும் சேர்த்து தமிழர்கள் சொல்லுவது என்ன?

xxxxxxx

4.தமிழ் மாதங்கள் என்று நாம் சொல்லும் மாதங்கள் அனைத்தும் என்ன மொழியில் உள்ளன ?

xxxxx.

5தமிழர்கள் என்று பெருமை பேசுவோருக்கு 12 மாதங்களும் தெரிவதில்லை என்று ஒரு  சர்வே காட்டுகிறது. உங்களுக்கு 12 மாதங்களின் பெயர்களும் தெரியுமா? சொல்லுங்கள்

xxxxx

6.ஏதோ ஒரு மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்கள் நம்புகின்றனர். அது என்ன மாதம்? ஏன் அப்படி நம்புகிறார்கள் ?

xxxxx

7.தமிழர்களும் பெரும்பாலான இந்தியர்களும் சந்திரனும் ஒரு நட்சத்திரமும் கூடி வானத்தில்  காட்சி தரும் அடிப்படை யில் பெயர் சூட்டினர் ;ஆனால் மலையாளிகளும் வேறு சிலரும் வேறு ஒரு முறையில் மாதத்துக்குப் பெயர் சூட்டுவர் . அது என்ன முறை?

xxxx

8.ஆங்கிலக் காலண்டரில் எந்தக் காலத்தில் (எப்போது) ஒரு தமிழ் மாதம் துவங்கும். ஆங்கில மாதங்களின் மடத்தியில் தமிழ் மாதம் துவங்குவதைக் காணலாம்?

xxxx

9.தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் வெங்கட் ராமா கோவிந்தா என்ற கோஷத்தையும், சாமியே சரணமய்யப்பா என்ற கோஷத்தையும் எப்போது அதிகம் கேட்கலாம் ?

xxxx

10.தெலுங்குகன்னடம் பேசுவோரும் மாதத்தைத் துவக்கும் நாள் எது ? அதிக மாசம் என்றால் என்ன ?

Xxxx

விடைகள்

1.பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் விபூதி யோகத்தில் மாதங்களில் நான் மார்கழி என்று சொன்னார். பின்னர் சினிமாப் பாடலில் கண்ணதாசன் சொன்னார்

xxxxx

2.ஆடிப்பட்டம் தேடி விதை என்பது தமிழ்ப் பழமொழி.

xxxxx

3.ஐப்பசி கார்த்திகை அடை மழைக் காலம். அப்போது வடகிழக்குப்

பருவமழை வருவதால் இந்தப் பழமொழி .

xxxxx

4.சம்ஸ்க்ருத மொழியில் உள்ளதை நாம் தமிழில் மொழிபெயர்க்காமல் அதை தமிழ்ப் படுத்தியுள்ளோம்

எடுத்துக்காட்டாக ஆஷாட என்பதை ஆடி என்போம்;. ச்ராவண என்பதை ஆவணி என்போம். இது பற்றி காஞ்சி சுவாமிகள் (1894-1994) ஒரு அற்புதமான சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

Xxxxxx

5.சித்திரை, வைகாசி, ஆனி , ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை,  மாசி, பங்குனி .

xxxxxx

6. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பயிர்கள் அறுவைடையாகி வந்திருப்பதால் சோற்றுக்கும் , நெல்லை விற்றுக்கிடைக்கும் பணத்துக்கும் பஞ்சமிராது . மேலும் மழை ஓய்ந்து வெய்யிலும் அதிகம் இல்லாத மாதம் ; பாரம்பரியமாக சுப மாதம் என்பதால் எல்லோரும் எதிர்பார்க்கும் கல்யாணங்களும் நடக்கும். இவை முக்கியக் காரணங்கள் உத்தராயண புண்ய காலம் துவங்கி விடும்

Xxxx

7சூரியன் எந்த ராசிக்குள் பிரவேசிக்கிறானோ அதை வைத்து மாதத்துக்குப் பெயர் சூட்டுவர்.சித்திரையை மேஷ மாதம் என்பர். இதே போல மீனம் சிம்மம் என்றெல்லாம்   மாதங்களை அழைப்பர் .

xxxxxx

8.இதை நினைவில் வைத்துக்கொள்ளுவது எளிது. பெரும்பாலும் ஜனவரி 14ல் தை மாதமும், ஏப்ரல் 14ல் சித்திரை மாதமும் துவங்குவதைக் காண்கிறோம்

xxxxx

9..புரட்டாசி மாதத்தில் நேர்த்திக் கடன் கழிக்க வேண்டிக்கொண்டவர்கள் வீடு வீடாகச் சென்று வெங்கட் ராமா கோவிந்தா கோஷம் எழுப்பி அரிசி அல்லது பணம் வசூலிப்பர். கார்த்திகை மாதம் முதல் நாள், ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டுக்கொண்டு தை மாத மகர ஜோதி வரை, சாமியே சரணம் ஐயப்பா கோஷம் இடுவர்.

xxxxxxx

10.அவர்கள் அமாவாசைக்கு அமாவாசை ஒரு மாதம் என்று கருதுவதால் அமாவாசை அன்று புதிய மாதம் துவங்கி விட்டது என்று கணக்கிடுகிறார்கள் இதனால் மாதப்பெயர்களில் கொஞ்சம் குழப்பம் ஏற்படும்.

இது தவிர அதிக மாசம் என்பதாலும் குழப்பம் வரும்

அதிக மாசம் என்றால் என்ன ?

இது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும். அதை புருஷோத்தம மாதம் என்று சொல்லி சுப காரியங்களை விலக்குவார்கள்  சந்திரனின் சுழற்சியை வைத்து கணக்கிடும் போது ஒரு ஆண்டுக்கு 365 நாள் வராது. குறையும்; இப்படித் துண்டு விழும் நாட்களை சேர்த்து 13 ஆவது சந்திர மாதமாக காலண்டரில் சேர்ப்பர் . இது அதிக மாச/ மாத எனப்படும்.

–subham—

Tags- மாதங்கள் , பெயர்கள், அதிக மாதம் , புருஷோத்தம மாதம், பழமொழி, தை பிறந்தால்