இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 15
28.கருணாகர பிள்ளையார் , உரும்பிராய், யாழ்ப்பாணம்
தமிழ் நாட்டின் கருணாகரத் தொண்டைமான் பெயரால் அழைக்கப்படும் பிள்ளையார் இவர். மேலும் கோவில் சம்பந்தமான கல்வெட்டு உடைய ஒரே கோவிலும் இதுதான் .
இந்தக் கோவிலின் இன்னும் ஒரு புதுமை, கோவிலின் ஒரு பகுதி இணுவில் கிராமத்திலும் மற்றும் ஒரு பகுதி உரும்பிராய் கிராமத்திலும் அமைந்திருப்பதாகும்.
தமிழ் நாட்டில் குலோத்துங்க சோழனிடம் (1070-1118) படைத்தளபதியாக பணியாற்றியவர் கருணாகரத் தொண்டைமான். அவரை உப்பு வாங்கி வருவதற்காக சோழ மன்னன் அனுப்பினான். அவர் அத்தோடு நிற்காமல் பல நற்பணிகளையும் செய்தார். தொண்டைமான் ஆறு என்ற பெயரால் அழைக்கப்படும் கால்வாயை வெட்டியவரும் அவரே. கடலுடன் இணைக்கும் இக்கால்வாய் உள்நாட்டுப் பொருட்களை நேரடியாக கப்பலில் ஏற்ற உதவியது . அவர் இணுவில் கிராமத்தில் தங்கிய காலத்தில் ஏற்கனவே இருந்த பிள்ளையார் கோவிலை மேம்படுத்தி கட்டிடம் எழுப்பினார். அதற்குப்பின்னர் கூழங்கை ஆரிய சக்ரவர்த்தி எல்லாக் கோவில்களுக்கும் திருப்பணி செய்தது போலவே இக்கோவிலுக்கும் திருப்பணி செய்தார். இந்தத் தகவல் எல்லாம் யாழ்ப்பாண வைபவ மாலை, மற்றும் ராஜநாயகம் இயற்றிய பழங்கால சிலோன் என்ற நூல்களிலிருந்து நமக்குக் கிடைக்கினறன.
.
கோவில் தொடர்பான கல்வெட்டுகள் உள்ள ஒரே இடம் இதுதான் என்றாலும் அவை மிகவும் அழி ந்த நிலையில் உள்ளன. ஆயினும் வாக்கியங்கள், அதிலுள்ள விஷயங்கள், எழுத்தமைதி ஆகியன பல செய்திகளைத் தருகின்றன. கோவிலுக்கு வழங்கப்பட்ட தானம் பற்றிப் பேசும் இக்கல்வெட்டு, சோழர் காலத்துக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த கல்வெட்டுதான்.
நயினாத் தீவு நாகபூஷணி அம்மன் கோவிலில, மேலும் ஒரு கல்வெட்டு இருக்கிறது. ஆயினும் அது கோவில் தொடர்பான கல்வெட்டு அல்ல.
போர்ச்சுகீசியர்களின் மதவெறி அட்டூழியங்களிலிருந்து இந்தக் கோவிலும் தப்பவில்லை. கோவில்களை இடிப்பதே அந்த கலியுக அரக்கர்களின் தொழிலாக இருந்தது. அவர்கள் கஜினி முகமது, மாலிக்காபூர் போல தங்க வெறி படைத்த கயவர்கள்; கோவிலுக்குள் தங்கத்தினால் ஆன விக்கிரகங்களும், நகைகளும் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியவே யாழ்ப்பாணத்தில் இருந்த நூற்றுக்கு கணக்கான கோவில்களைத் தரை மட்டம் ஆக்கினார்கள். ஆனால் புத்திசாலியான குருக்கள்களும் பக்தர்களும் அவர்கள் வரும் முன்னரே விக்கிரகங்களைக் குளத்திற்குள்ளும் கிணற்றுக்குள்ளும் மறைத்து வைத்தனர். இன்று அவை புத்துயிர் பெற்றுவிட்டன
பிற்காலத்தில் இக்கோவிலுக்கு புத்துயிர் ஊட்டியவர் பெயரும் கருணாகரன்தான். கருணாகர ஐயர் என்பவர் முறையான கோவிலை நிறுவி, பூஜை புனஸ்காரங்களைக் கொணர்ந்தார். இன்று வரை அவர்தம் பரம்பரை ஆகம விதிகளின் படி நித்திய பூஜைகளை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்குள் நடராஜர் , சுப்பிரமணிய சுவாமி விக்கிரகங்களும் வழிபடப்படுகின்றன .
கல்வெட்டுகள் தரும் தகவல்
பேராசிரியர் இந்திரபால இந்தக் கல்வெட்டுகளை ஆராய்ந்து 1973-ம் ஆண்டு கும்பாபிஷேக மலரில் தான் கண்ட விஷயங்களைத் தொகுத்து அளித்திருக்கிறார் . வைத்தீஸ்வர குருக்கள் காலம் வரை கோவிலுக்கு வெளியே கேட்பாரற்றுக் கிடந்த கல்வெட்டைக் கோவிலுக்குள் அவர் கொண்டு வந்தபின்னர்தான் அதன் மதிப்பு தெரிந்தது.. 1928ம் ஆண்டில் ANCIENT JAFFNA ஏன்ஷியண்ட் ஜாப்னா நூல் எழுதிய முதலியார் சி. ராசநாயகம் கல்வெட்டின் காலம் 1567ம் ஆண்டு என்று கணித்தார் . பின்னர் பேராசிரியர் இந்திரபால இரண்டு கல்வெட்டுகளையும் நுணுகி ஆராய்ந்தார் .
முதல் கல்வெட்டில் 11 வரிகள் உள்ளன. தமிழ் நாட்டுக் கல்வெட்டுகளைப் போலவே ஸ்வஸ்தி ஸ்ரீ என்ற சம்ஸ்க்ருத வாழ்த்துடன் துவங்கி இறுதியில் கல்வெட்டு சொல்லும் விஷ்யங்களை மீறுவோருக்கு சாபங்களும் இடப்பட்டுள்ளன. கல்வெட்டில் பிரபவ, சித்திரை என்ற சொற்கள் உள்ளதாலும் அதன் எழுத்து எந்தக் கால வடிவம் உடையவை என்பது தெரிவதாலும் 1567 CE என்று கணிக்கப்பட்டது . வைரவ சூலக் குறியும் கல்வெட்டில் உள்ளது. கோவிலுக்கு விடப்பட்ட நில தானம் பற்றிய கல்வெட்டு என்றும் ஊகிக்கப்படுகிறது .
இரண்டாவது கல்வெட்டு
முதல் கல்வெட்டுக்கு மேல் இது இருக்கிறது காலத்தில் பிந்தியது; அதாவது 16ம் நூற்றாண்டு.
ஐந்தே வரிகள்தான் இருக்கின்றன. கோவில் பண்டாரத்துக்கு 5 பணம் தானம் அளிக்கப்பட செய்தி இதில் கிடைக்கிற்றது .
வருங்காலத்தில் வரப்போகின்ற ஆபத்துக்களை எண்ணித்தான் இவைகளைக் கற்களில் வடித்தனர் போலும். கோவிலுக்கு ஊரு செய்வோர் கங்க நதிக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்களாக என்ற சாபம் கல்வெட்டில் இருக்கிறது. போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்கள் மீது இடப்பட்ட சாபம் இது
வரலாற்றை உற்று நோக்குகையில் யாழ்ப்பாணக் கோவில்கள் எப்படி அழிக்கப்பட்டன என்பது தெரிகிறது
1544 – மன்னார் மீது போர்ச்சுகீசியர் தாக்குதல்
1560- யாழ்ப்பாணம் மீது போர்ச்சுகீசியர் தாக்குதல்
1565 – இந்து மத பாதுகாவலன் சங்கிலி மரணம்
1575- முன்னேஸ்வரம் கோவிலை மத வெறியர்கள் தரை மட்டம் ஆக்கினார்கள்.
1589- திருக்கேதீஸ்வரத்தில் பூஜைகள் நிறுத்தம்
அதிசயத்திலும் அதிசயம்
இந்துக்களை யாராலும் ஒழிக்க முடியாது; ஒழிக்கப் புறப்பட்டவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை வரலாறு காட்டுகிறது இந்து மதம் சனாதன தர்மம். அதாவது என்றுமே அழிக்க முடியாதது.
புத்தர், சமணர் பெயரில் சில கும்பல்கள் செய்த அட்டூழியங்களை ஆதி சங்கரர் அழித்தார் ;
தமிழ் நாட்டில் சில கடவுள் விரோதக் கும்பல்கள் செய்த அட்டூழியங்களை சம்பந்தரும் மாணிக்கவாசகரும் அழித்தார்கள் ;
முஸ்லீம் மதவெறியர்கள் அழித்த கோவில்களை விஜய நகரப் பேரரசும், நாயக்க மன்னர்களும் மீண்டும் உண்டாக்கி அவுரங்க சீப் கும்பல்களை அழித்தார்கள் .
இலங்கையில் நடந்த அழிவு வேலைகளுக்கு, ஆறுமுக நாவலர் முற்றுப்புள்ளி வைத்து, இந்து மறுமலர்ச்சியை உண்டாக்கினார்.
உரும்பிராய் வட்டாரத்தில் 1959-ம் ஆண்டில் கோவில் பாதுகாப்பு சபை தோன்றியது . 1965-ம் ஆண்டில் தேர்களை பாதுகாக்க அமைப்புகள் கட்டப்பட்டன
ஆவணி சதுர்த்தியில் துவங்கும் வருடாந்திர விழா பத்து நாட்களுக்கு நடை பெறும். தேர்த் திருவிழா நாளில் யாழ்ப்பாண பக்த்ர்கள் இங்கே குவிகின்றனர். அப்போது கருணாகர விநாயக மூர்த்தி கருணை மழை பொழிகிறார் .
கோவில் பற்றிய முழு விவரம் உள்ள பதிப்பு ,
1973ம் ஆண்டில் கோவில் வெளியிட்ட கும்பாபிஷேக மலர்.
–SUBHAM—
Tags- கருணாகர பிள்ளையார் , உரும்பிராய், யாழ்ப்பாணம் , சோழ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
SNR Article Index : SEPTEMBER 2023
SEPTEMBER 2023
16-9-23 12490 பாரதியின் பன்முகத் திறன் – (பகுதி 1) 10-9-2023 அன்று மாலைமலரில் வெளியான கட்டுரை 17-9-23 12492 பாரதியின் பன்முகத் திறன் – (பகுதி 2) 10-9-2023 அன்று மாலைமலரில் வெளியான கட்டுரை 18-9-23 12495 S Nagarajan Article Index August 2023 19-9-23 12499 ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்! (முதல் பகுதி) மாலைமலர் 14-9-23 இதழில் வெளிவந்தது. 20-9-23 12503 ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்! (இரண்டாம் பகுதி) மாலைமலர் 14-9-23 இதழில் வெளிவந்தது. 21-9-23 12506 72000 நாடிகளும் ஆரோக்கியம் தரும் ஆசனங்களும்!ஹெல்த்கேர் செப்டம்பர் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 22-9-23 12509 திண்டுக்கல் யாகத்தில் பர்மாக்காரருக்கு கிடைத்த தரிசனம்! (குழந்தையானந்த ஸ்வாமிகளின் அற்புதம்) 23-9-23 12517 கலெக்டரை விரட்டிய நாகப் பாம்பு! (குழந்தையானந்த ஸ்வாமிகளின் அற்புதம்) 24-9-23 12519 தகுதி உள்ளவர்களுக்கே தரிசனம் கிடைக்கும்! – ஷீர்டி சாயி பாபாவின் அற்புதம்! 25-9-23 12522 பிச்சைக்காரர் மீது கோபம் கொள்ளாதே! – ஷீர்டி சாயி பாபாவின் அற்புதம்! 26-9-23 12526 ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா 27-9-23 12529 வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்! – உலக நதிகள் தினம்! (பகுதி 1). செப்டம்பர் 23, 2023 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை.28-9-23 12532 வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்! – உலக நதிகள் தினம்! (பகுதி 2). செப்டம்பர் 23, 2023 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை.29-9-23 12534நடுங்கும் சீனா! வளரும் பாரதம்!!30-9-23 12537மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம் அளித்த மகான்!
only three words are split; others are given in full.
B
C
H
A
T
U
R
A
N
A
N
A
L
R
D
R
U
H
I
N
A
H
P
T
O
S
A
T
M
A
B
H
U
H
A
A
K
U
H
T
H
I
R
H
E
R
V
M
H
A
S
R
J
A
D
S
A
P
I
T
A
M
A
H
A
H
M
I
A
J
R
R
V
N
S
T
Y
N
K
E
V
H
Y
A
I
A
D
A
Y
O
Y
A
S
E
P
E
J
N
H
A
B
A
N
A
M
H
D
U
S
A
C
A
J
J
K
I
G
A
T
A
R
H
P
H
N
A
A
A
H
A
L
I
S
V
T
A
I
A
H
H
R
A
A
A
A
T
S
W
A
Y
A
M
B
U
H
N
H
H
I
H
D
I
V
A
A
ANSWERS
1.Brahma = Big, Supreme, creator; To breathe is also another meaning. We can see him as the life breath of every creature or one who crated all that breathes. 2.Atmabhu = self existent 3.Surajyeshta = elder of the Devas/Deities 4.Parameshti = Giver of supreme desire, Moksha; he who stays in the lotus of heart; also who is worshipped with Yajnas (ishti). 5.Pitamahah = Grandfather 6.Hiranyagarba = Golden Egg 7.Lokesah = Lord of the world 8.Swayambhu = self existent (originated) 9.Chaturanana = Four faced 10.Datha = exalted; leader 11.Abjayonih= Lotus born 12.Druhinah= creator of the world 13.Kamalasanah = Lotus seated 14.Prajapatih = Lord of all creatures 15.Veda = Vedas come from him 16.Vidhata = Exalted in heaven (leader) 17.Vidhih = Lord of Vedas; one who is in charge of Vidhi/fate 18.Andajah = Egg born 19.Purvah = First 20.Satyakah = Truthful 21.Hamsavahanah = one who has swan as vehicle 22.Virinchi = Creator
Foreigners from different countries attended the Durga Sapta Sati Purvanga workshop for four days in Wembley, London. They recited Durga Suktam, Devi Mahatmyam, Ratri Suktam, Kilaka Stotram etc for four days. I attended the concluding function along with the priest London Kalyanji. Sai devotees made good arrangement for the foreign delegates. Food was served all the four days for over 25 delegates. I gave my English books to the foreign delegates.
DURGA SAPTA SATI WORK SHOP IN LONDON WITH DEVOTEES FROM USA, GERMANY, CZECH, CROATIA, SINAGAPORE, UK, AND MANY OTHER COUNTRIES WAS HELD FOR FOUR DAYS AND IT CONCLUDED TODAY AT WEMBLEY 1-10-2013. LONDON KALYANJI DID THE PUJA FOR FOREIGNERS. LONDON SWAMINATHAN ATTENDED IT AND TOOK PICTURES.
–subham—
Tags —Durga Sapta Sati, London Workshop, Foreign delegates, London swaminathan
பிரிட்டனில் உள்ள சங்கமம் (Sangamam UK) என்ற தமிழ் அமைப்பின் ஆண்டுவிழா நேற்று ரெடிங் Reading நகரில் நடந்தது. 150 தமிழர்கள் பங்கு கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். தமிழக ஆளுநர் ரவி அவர்கள் On line ஆன் லைன் மூலமாக சிறப்புரை ஆற்றினார்.
ரெடிங் READING நகர் லண்டலிலிருந்து ஒன்றரை மணி தூரத்தில் உள்ளது.
வந்தவர்கள் அனைவரும் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று தலைப்புகளில் விவாதம் நடத்தினர் பாரதம் ஒரே நாடு; அனைவரும் ஒரு தாய் மக்கள்; இந்து மதப் பண்பாடுகளைக் பாதுகாத்துப் பேணுவதில் தமிழர்களின் பங்கு தலையாய பங்கு என்பதை எல்லா குழுக்களில் பேசியோரும் வலியுறுத்தினர் .
நிறைய சிறுவர் சிறுமியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் , நடனம் இசைத்துறைகளில் தமிழர்கள கொடுத்த பங்களிப்பையும், பாரதப் பண்பாட்டையும் காட்டுவதாக அமைந்தன அவர்களுக்கு இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் முஸ்லீம், கிறிஸ்தவ சிறுவர், சிறுமியரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது . நானும் நிகழ்ச்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்
Chief Guest London Swaminathan distributing certificates
சமீப காலமாக தமிழ்ப் பண்பாட்டையும் , இந்து மதத்தையும் அழி க்கப் புறப்பட்ட வாட்டிகன் VATICAN பக்தர்களுக்கும் தேச விரோத சக்திகளுக்கும் சாவு மணி அடிப்பது போல இருந்தது இறுதியில் கேட்ட சிறப்புரை. அதை நிகழ்த்தியவர் டாக்டர் ரவீந்திர சுரேங்கே . அவர் தமிழ் நாட்டில் பல்லாண்டுகள் வசித்த மராட்டியர். இப்பொழுது இங்கிலாந்தில் வசிப்பவர் . சங்கமம் அமைப்பில் முக்கியப்பொறுப்பு வகிப்பவர் .
அவர் சொற்பழிவில் சொன்னார்:
“முதலில் பஞ்சதந்திரக் கதை ஒன்றை சொல்கிறேன். அதன் நீதியைக் கடைசியில் பார்ப்போம் . ஒரு காட்டில் வேட்டை ஆடுபவன் பறவைகளைப் பிடிக்க வலை விரித்து அதன் கீழே தானியங்களைத் தூவியிருந்தான் எல்லாப் பறவைகளும் தானியத்ததைத் தின்னும்போது கால்கள் சிக்கிக் கொண்டன. ஒவ்வொரு பறவையும் பலம் கொண்ட மட்டும் சிறகடித்தும் வலையிலிருந்து மீள முடியவில்லை .
அதிலுள்ள ஒரு புத்திசாலிப்பறவை நாம் எல்லோரும் சேர்ந்து முயற்சிப்போம் என்று சொல்லி 3….2…1.. என்று சொன்ன மாத்திரத்தில் எல்லாப் பறவைகளும் சிறகுகளை அடிக்கவே வலை பிய்த்துக் கொண்டது; அனைத்தும் பறந்து சென்று, எலி அரசனின் உதவியை நாடின . எலிகள் அந்தப் பறவைகளின் வலைகளைக் கடித்துத் துண்டிக்கவே பறவைகள் விடுதலை பெற்றன .
இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன். ஒரு பெரிய காளை மாட்டின் மீது ஒரு கொசு வந்து உட்கார்ந்தது ; அது ஏதோ அந்தப் பெரிய மாட்டினுக்குத் தொல்லை கொடுப்பதாக நினைத்து பெருமைப்பட்டது; அந்த மாடு வாலை அசைத்தவுடன், அது மாட்டின் காதுக்கு அருகில் வந்து கிசு கிசுத்தது ; பார்த்தாயா உன் வால் அருகில் உட்கார்ந்தேன் ; உன் வாலை அசைத்தேன்.
மாடு சொன்னது; அப்படியா நீ உட்கார்ந்ததே எனக்குத் தெரியாதே; அந்த உணர்வு கூட எனக்கு இல்லையே என்று; கொசுவும் ஒன்றும் செய்ய முடியாது என்று பறந்து போயிற்று; இப்போது சிலர் இந்து மதத்தை ஒழிப்பேன் என்று கிளம்பியிருக்கிறார்கள். அவர்கள் பெரிய காளை மாட்டின் மீது உட்கார்ந்து பறந்தோடிப்போன கொசுக்கள் போன்றவர்கள். இந்து மதம் சனாதனம் ஆனது. அதாவது என்றும் இருப்பது இதை யாரும் அசைக்க முடியாது.
“நான் முதலில் தங்கிய வீட்டின் அருகில் தினமும் மலையில் சினிமா நடக்கும் கொட்டகை இருந்தது. அங்கு தினமும் ஒரு தமிழ்ப் பாடல் ஒலிக்கும் அதை ஆறு ஆண்டுகள் கேட்டுக் கேட்டு மனப்பாடம் ஆகிவிட்டது. அது பிள்ளையார் துதி. திரைப்படங்களும் கூட கணேஷ் வந்தனத்துடன் துவங்கியது, நாடு முழுதும் வழிபடும் தெய்வங்களும் ஒன்று என்பதைக் காட்டியது. துவக்கத்தில் எல்லாம் வேறு போலவும் நாம் புதிய இடத்திற்கு வந்து இருக்கிறோம் என்ற உணர்வும் இருந்ததது. அவர்கள் பேச்சில் பயன்படுத்திய ஸம்ஸ்க்ருத சொற்களைக் கேட்டபோது இன்னும் நெருக்கம் ஏற்பட்டது . இதே போல வரலாற்றைப் படித்தாலும் தமிழ் வணிகர்கள் சென்ற இடமெல்லாம் கோவில்களைக் கட்டியுள்ளனர். சீனாவில் கூட கல்வெட்டும் தமிழர் அமைத்த கோவிலும் உள்ளது
ராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசியாவில் பல இடங்களை வென்று இந்துப் பண்பாட்டினை அங்கெல்லாம் நிறுவினான் பல மொழிகளில் பாடும் பாடல்களும் பாரதத்தின் பல பகுதிகளின் சிறப்பை இணைத்துப் பாடுகின்றன.
சமீபத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் வருத்தமுள்ள நிகழ்சசி நடந்தது. இறந்து போனவர் கேரளத்தைச் சேர்ந்தவர். இறுதிச் சடங்கை செய்ய வந்தவரோ பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சாஸ்திரி அவர் சொன்ன ஸ்லோகம் :
கங்கே ச யமுனே சைவ கோதாவரீ சரஸ்வதி.
நர்மதே சிந்து காவேரீ ஜலே அஸ்மின் ஸன்னிதிம் குரு.
गंगे च यमुने चैव गोदावरी सरस्वति |
नर्मदे सिन्धु कावेरी जले अस्मिन् सन्निधिं कुरु ||
இதிலும் பாருங்கள் ; கங்கை முதல் காவேரி வரை வருகிறது; ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சொல்லும் ஸ்லோகங்களும் ஒரே நாடு ஒரே பண்பாடு என்பதைக் காட்டுகிறது .
இப்போது நான் முதலில் சொன்ன கதையின் நீதியை, செய்தியைக் காண்போம் எல்லாப் பறவைகளும் சேர்ந்து முயற்சித்தபோது அவைகளைக் கட்டிப் பிணித்த வலை பிய்ந்தது . அது போல இந்துக்கள் அனைவரும் சேர்ந்து முயற்சித்தால் அவர்களுக்கு யாரும் தீங்கிழைக்க முடியாது “
பல் மொழி வித்தகரான ரவீந்திர சுரேங்கே . இடை இடையே பல மொழிகளில் இருந்து பாடல்களையும் எடுத்துக் காட்டினார் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சுவை ஊட்டும், உணர்ச்சியூட்டும் உரையாக அமைந்தது அவர்தம் சொற்பொழிவு .
ரெட்டிங் READING நகரில் நடத்திய தமிழர் விழா வந்தே மாதரம், பாரத வந்தே மாதரம் என்ற சங்கப் பாடலுடன் இனிதே நிறைவு அடைந்தது. காலை பத்து மணி முதல் மாலை 5 வரை நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளும் பெரியோர்களும் அலுக்காமல் சலிக்காமல் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது
சங்கமம் சார்பில் அகில உலக தமிழ் சங்கமம் கோவையில் நடைபெற உள்ளது உலகத் தமிழர்கள் ஒன்று கூடும் மாபெரும் விழாவாக அது அமையும் என்பதில் ஐயமில்லை; கவர்னர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரும் அதில் பங்கேற்கவுள்ளனர்.
—subham—
Tags- ரெட்டிங் , சங்கமம், தமிழர் விழா, கவர்னர், ரவீந்திர சுரேங்கே
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 14
25.வெயிலுகந்த பிள்ளையார் கோவில், நல்லூர், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்திலுள்ள கைலாசநாத பிள்ளையார் கோவிலை நேற்று தரிசித்தோம் .
நல்லூரிலுள்ள புகழ் பெற்ற பிள்ளையார் , வெயிலுகந்த பிள்ளையார் ஆவார்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய மன்னன் சிங்கை ஆரியன். அவன்தான் ஆர்ய சக்ரவர்த்தி வம்சத்தின் முதல் மன்னன். யாழ்ப்பாண நல்லூரை நிறுவி, நடுவில் முருகன் கோவிலை நிறுவிய காலத்திலேயே நான்கு திசைகளிலும் 4 கோவில்களைக் கட்டினான். கிழக்கு திசையில் அவன் கட்டிய கோவிலே புகழ்பெற்ற வெயிலுகந்த பிள்ளையார் கோவில் ஆகும். இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் மூலஸ்தானம் வரை சூரிய ஒளி செல்வதாகும். சூரிய பகவான் தினமும் விநாயகரை வழிபடுகிறார். சூரிய ஒளி தினமும் மேலே படுவதால் வெயில் உகந்த என்ற அடை மொழியுடன் சிறப்பிக்கப்படுகிறார்.
1621ம் ஆண்டில் மத வெறி பிடித்த போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்தவர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பறினார்கள் . அவர்கள் இடித்ததுத் தள்ளிய 500 க்கும் மேலான இந்து ஆலயங்களில் இதுவும் ஒன்று.
ஆயினும் இந்து தர்மத்தின் ஒரிஜினல் ORIGINAL பெயர் சநாதன தர்மம்; அதை யாராலும் அழிக்க முடியாது. அதற்குச் சான்று யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்கள். கிறிஸ்தவர்கள் இடித்த அத்தனை கோவில்களும் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றன ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தப்படுகின்றன
இப்போது நாயன்மார் கட்டுவில் உள்ள இந்தக் கோவிலில் பத்து நாள் உற்சவம் பங்குனி உத்தரத்தன்று தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடைகிறது.
Xxxxx
26. இணுவில் பரராஜ சேகர பிள்ளையார் கோவில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ் நகரிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்லும் பாதையில் 4 மைல் தொலைவில் இணுவில் கிராமம் அமைந்துள்ளது . இங்கு குறைந்தது 15 கோவில்கள் இருக்கின்றன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா தந்த அற்புத விளக்கங்கள்!
ச.நாகராஜன்
மஹேந்திர நாதர் தன்னை அணுகுவோரிடம் இறைவனைப் பற்றியும் அவனது அற்புத லீலைகளையும் பரமஹம்ஸரின் அருள் வாக்குகளையும் பற்றியே பேசுவார்.
தினசரி நடக்கும் உரையாடல்களில் அவர் திருவாய் மலர்ந்தருளும் ரகசியங்கள் எத்தனையோ!
காயத்ரி மகத்துவம்!
பரமஹம்ஸர் காயத்ரி மஹிமையைப் பற்றி கூறுவார் அடிக்கடி.
காயத்ரியானது சந்த்யாவை விட மேலானது. காயத்ரியை விட மேலானது ஓம்காரம். சந்த்யா காயத்ரியில் அடங்குகிறது. காயத்ரி ஓம்காரத்தில் அடங்குகிறது. அதாவது ஒருவர் காயத்ரியைத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால் அவருக்கு சந்த்யா தேவை இல்லை.தொடர்ந்து இடைவிடாமல் ஒருவர் ஓம்காரத்தை ஜபித்துக் கொண்டிருந்தால் அவருக்கு காயத்ரி தேவை இல்லை. காயத்ரி அதிகமாகி விடும். ஓம்காரத்தை ஒரு தடவை உச்சரித்தாலேயே கோடிக்கணக்கான சந்த்யாக்களின் மகிமை கிடைக்கிறது. ப்ரஹ்மத்தை உணர்ந்த ஒருவருக்கோ, சமாதியை அடைந்த பின்னர் ஒன்றுமே தேவை இல்லை.
ஓம்கார வழிபாடு கூட இருக்கவே இருக்கிறது. அ, உ, ம – இந்த மூன்று சப்தங்களும் ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிக்கிறது என்பது அனைவருடைய நம்பிக்கையுமாகும்.
அவை மனித மனத்தின் மூன்று நிலைகளையும் குறிக்கிறது. ஜாக்ருதி (விழிப்பு நிலை பிரக்ஞை) ஸ்வப்னம் (கனவு நிலை) மற்றும் சுஷுப்தி (கனவற்ற உறக்கம்)
அவை விஸ்வம்(பருப்பொருள்), தேஜஸ் (அறிவு) மற்றும் ப்ரக்ஞா (ஆன்மீகம்) ஆகிய மூன்றையும் குறிக்கிறது.
இப்படி தொடர்ந்து இன்னும் பல விளக்கங்களை மகேந்திரநாதர் குறிப்பிட்டார்.
நெப்போலியனின் துரதிர்ஷ்டமும் அவனது உயர்வும்
நெப்போலியனைப் பற்றி மகேந்திரநாதர் கூறியது இது:
ஒருவரும் துரதிர்ஷ்டத்தைக் கண்டு அஞ்சக் கூடாது.
நெப்போலியன் ஒரு படைவீரனாகத் தான் இருந்தான். திடீரென்று அவனுக்கு வேலை போய் விட்டது. அவனது வீட்டிலிருந்து அவனது தாயார் அவனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “என் அருமைக் குழந்தாய்! நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். தயவு செய்து பணம் அனுப்பவும்” என்று எழுதியிருந்தார்.
ஆனால் நெப்போலியனிடமோ பணமே இல்லை. தனது தாயாரின் கஷ்டத்தை அறிந்தவுடன் அவரால் அதைப் பொறுக்க முடியவில்லை.
தண்ணீரில் குதித்து உயிரை விட்டு விடலாம் என்று அவர் முடிவு செய்தார்.
ஆற்றங்கரைக்குச் சென்றார் அவர். நீருக்குள் குதிக்க இருந்த தருணத்தில் அவரது நண்பர் ஒருவர் அவரது சட்டையைப் பிடித்து இழுத்தார்.
“என்ன ஆச்சு உனக்கு நெப்போலியன்?உனது முகத்தை ஒருபோதும் இப்படி பார்த்ததே இல்லையே” என்றார் அவர்.
நெப்போலியன் தனது நிலைமையை நண்பரிடம் கூறினார். ஆனால் அதற்காகத் தற்கொலை செய்து கொள்ள விழைந்ததை மட்டும் கூறாமல் மறைத்தார்.
அவரது நண்பர் தனது மடியிலிருந்த இரண்டாயிரம் மதிப்புள்ள காசுகளை நெப்போலியனிடம் கொடுத்தார்.
நெப்போலியன் அதை தபால் அலுவலகம் சென்று தாயாருக்கு உடனடியாக அனுப்பினார்.
திரும்பி வந்து பார்த்தால் நண்பரைக் காணோம்.
பல வருடங்கள் ஓடின.
பின்னர் நெப்போலியன் இத்தாலி, எகிப்துக்குச் சென்றார்.
பெரிய தளபதி ஆனார்.
மெதுவாக அவர் முன்னேறினார். ஜெனரல் ஆனார். பின்னர் சக்கரவர்த்தி ஆகி விட்டார்.
ஒரு நாள் நகரில் மாபெரும் ஊர்வலத்தில் நடுநாயகமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இரு புறமும் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது.
மக்கள் ஆரவாரித்து சக்கரவர்த்தியை உற்சாகமாக வரவேற்றனர்.
அப்போது நெப்போலியன் தனது பழைய நண்பர் கூட்டத்தின் நடுவில் இருந்ததைக் கவனித்தார்.
உடனே ஒருவரை அனுப்பி அவரைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தார்.
தன்னுடன் அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். நண்பரோ ஒரு முறை கூட அவருக்குத் தான் கொடுத்த பணம் பற்றிப் பேசவே இல்லை. மாறாக தனது பழைய நண்பர் இப்படி மாபெரும் சக்கரவர்த்தி ஆனதை எண்ணி மகிழ்ந்து பெருமைப்பட்டார்.
மிகவும் வற்புறுத்தி அந்த நண்பரை நெப்போலியன் ஒரு உயரிய பதவியில் அமர்த்தினார். அவருக்குப் பெரும் செல்வம் சேரும்படி செய்தார்.
இப்படி மகேந்திரநாதர் கூறி முடித்தவுடன் அருகில் இருந்த ஒரு பக்தர், “ஆஹா! அருமை! இதே போலத் தான் ஸ்வாமிஜி (விவேகானந்தர்)
கூட அல்மோராவில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற போது ஒரு வெள்ளரிக்காயைத் தந்து தன்னைக் காத்த ஒருவரை அடையாளம் கண்டு அவருக்கு பெரிய மரியாதையை அனைவருக்கும் முன் செய்து அவரை பரிசுகள் தந்து கௌரவித்தார்” என்றார்.
மகேந்திரநாதர் இது தான் உயர்ந்தோரின் குணம் என்று முத்தாய்ப்பாகக் கூறி முடித்தார்.
1.இந்தியாவில் எத்தனை வெந்நீர் ஊற்றுகள்(Hot Springs )இருக்கின்றன ?
xxx
2.இயற்கையின் அதிசயம் இந்த வெந்நீர் ஊற்றுகள் ; அவை எப்படித் தோன்றுகின்றன?
Xxx
3.இமய மலையில் யமுனை நதி உற்பத்தியாகும் யமுனோத்ரிக்குப் போகும் வழியில் என்ன வெந்நீர் ஊற்று இருக்கிறது?
Xxx
4. பத்ரிநாத் செல்லும் வழியிலும் சுட்டு நீர் ஊற்று இருக்கிறதா?
xxx
5.லடாக் பிரதேசத்தில் ஒரு பகுதியையே வெந்நீர் ஊற்றுகள் (ஹாட் ஸ்பிரிங்ஸ்) என்று அழைப்பது ஏன்?
xxxx
6. இந்தியாவில் அதிக வெந்நீர் ஊற்றுகள் உள்ள பகுதி எது ?
xxxx
7. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 5 புகழ்பெற்ற சுடு நீர் ஊற்றுக்களின் பெயர்கள் என்ன?
xxx
8.இந்தியாவிலேயே அதிக வெப்பம் உடைய ஊற்று எது ?
xxxx
9.வெப்ப நீர் ஊற்றுகளில் குளிப்பது ஆரோக்கியம் தரும் என்பது உண்மையா?
xxx
10.வெப்ப நீர் ஊற்றுகளினால் சுற்றுலா வளர்கிறது; கடுங் குளிர்ப் பிரதேசங்களில் குளிப்பதற்கு உதவுகிறது; அதிலுள்ள கந்தகத் தன் மை ஆரோக்கியம் அளிக்கிறது; இவை தவிர அவைகளுக்குப் பயன் உண்டா ?
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – Part 13
24.நல்லூர் கயிலாய நாத பிள்ளையார் கோவில்
பிள்ளையார், கணபதி, கணேசர், விநாயகர் , யானை முகன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பிள்ளையார் கயிலாயம் முதல் இலங்கையின் தென் கோடியில் உள்ள கண்டி நகர் வரை எங்கும் காட்சி தருகிறார். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் எல்லா நாடுகளிலும் பிள்ளையார் விக்கிரகங்கள் கிடைத்துள்ளன. இத்தாலி நாட்டுத் தலைநகர் ரோமாபுரியில் கணேஷ் என்பதை ஜானேஷ் (Janus) என்று வழிபட்டனர் ; ஜப்பானிலும் பிள்ளையார் கோவில்கள் உண்டு
சங்க இலக்கியத்தில் பதிகப் பகுதியில் மட்டும் பிள்ளையார் பற்றிய ஒரு குறிப்பு இருப்பதைப் பலரும் பிற்காலச் சேர்க்கை என்பர். ஆயினும் எனது ஆராய்ச்சியில் கபிலர் என்ற பிராமணப் புலவர் பெயரே பிள்ளையார் பெயர் என்பதைக் காட்டியுள்ளேன் . அந்தப் பார்ப்பனர்தான் சங்க இலக்கியத்தில் அதிகப் பாடல்கள இயற்றியவர். அவர் தனது புறநானுற்றுப் பாடலில் புல் , எருக்கம் , இலை , நீரைக் கொடுத்தாலும் இறைவன் மறுப்பதில்லை என்று பாடுகிறார்.
புறநானூறு பாடல் 106
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன், பாரி கை வண்மையே.
இது பகவத் கீதையின் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் — என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு என்பதும் அவர் குறிப்பிடும் புல் இலை எருக்கம் என்பது விநாயகர் வழிபாட்டில் மட்டுமே பயன்படும் அருகம்புல் எருக்கம் இலை , பூ என்பதும் நான் ஆராய்ச்சியில் கண்ட விஷயங்கள் ஆகும்.
மேலும் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்த அப்பரும் சம்பந்தரும் தேவாரத்தில் பிள்ளையாரைப் பல இடங்களில்……………………..