Warning to HRCE Officers: Story of a Dog in Valmiki Ramayana (Post No.11,708)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,708

Date uploaded in London – –  24 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx

Here is a story from Valmiki Ramayana which says people who are appointed as officials in Hindu temples, Go Saalas and Anna Chatras easily go to hell. Rama appointed a Brahmin as an officer in a monastery as a punishment. But he was happy thinking that it was a reward.

Now and then we hear about government officers in Tirupati Balaji temple and HRCE controlled Tamil Nadu temples abusing and misusing the temple money.  We also hear about the frauds in Food Distribution Centres. There is a proverb in Tamil Sivan Sothu Kula Naasam meaning Those who steal temple property will be destroyed lock, stock, and barrel.

Stealing is bad according to all religious books. Stealing holy property is worse. All the Tamil inscriptions in temples and brahmin lands say that those who violate the king’s orders will go to hell. If we keep it in the background of our mind and read the dog story we will fully understand what the dog said at the end.

xxxx

Uttara Kaanda of Ramayana is the seventh and last section of the great epic Ramayana. Some people consider it an appendix written by someone else. Others say it was written by Valmiki himself, but there are some interpolations. Whatever it is, the stories and the morals they teach are interesting and valid today.

Here is a story of a dog told by the great saint Valmiki.

Rama, the king, held morning consultations, with his ministers and senior citizens of the state. They included Brahmins and representatives of the business community.

After the consultation, he asked his brother Lakshmana to go to the gate and bring all the citizens with petitions. He went to the palace gate and called for petitioners to come forward. There was none but an injured dog sitting and howling there.

It was a real Ram Rajya. There was neither poverty nor disease and earth filled with grains and herbs. Neither children nor the young nor those of middle age met with death. The kingdom was ruled with equity and there was no adversity. Thus during Rama’s administration none was to be seen who was in need of justice.

But he dog at the gate was howling unceasingly.

Lakshmana said,

“O fortunate one, who brought you here, speak without fear”.

The dog said,

I wish to communicate something to Rama who is the refuge of all beings who confers fearlessness on all. But we are not allowed inside the temples, palaces, or Brahmins houses. So please get the permission of the king. Lakshmana went back to Rama and reported what the dog said. Rama asked him to bring the dog inside the hall.

The dog told Rama, a Brahmin by name Sarvartha siddhi who lives on alms, hit it on the head and injured it without any reason.

Rama sent for the Brahmin. and he came to the assembly hall.

Rama said

“O Brahmin! you have injured this dog. What offence did it commit? You hit it severely with your staff.”

 The Brahmin said, “I was wandering about the whole day in search of alms. I was overcome with hunger. The dog was sitting in the centre of a street. I asked it to move but it didn’t move. So I became angry and struck it with my staff. I am guilty, punish me.”

 Rama consulted his eight ministers and the business representatives who were present in the hall. They said to him, “A Brahmin is exempt from punishment. So make him the head of a monastery”.

 Rama posted him as the head of a monastery. The Brahmin was mounted on an elephant and left the palace happily.

 The dog said,

“Oh Ragava, this Brahmin given to anger is impious. He will by no means be able to discharge the duties. He who wishes to see his children, friends and beasts fall into hell is made chief of the gods’ temples, shelter for cows and Brahmins’ Anna Chatras/choultries. Oh, Raghava , he perishes who deprives the Brahmins, women or children of their legitimate possessions; one who misappropriates the offerings of Brahmins goes to the lowest hell”.

 Hearing the words of the dog ,Rama’s eyes opened wide in astonishment. Then the dog departed and went to the holy city of Kashi. It went on a fast unto death. In its former birth it was a good person but born as a dog because of its bad .behaviour.

This story implies that if a man is appointed as a higher official and he doesn’t discharge his duties faithfully he is in danger of going to hell.

–subham— 

Tags-   HRCE, Valmiki, warning, Dog story, Ramayana, Uttara Kanda

கோவில் அதிகாரிகளுக்கு நரகம் கிடைக்கும்:  வால்மீகி எச்சரிக்கை (Post No.11,707)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,707

Date uploaded in London – –  24 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வால்மீகி  இராமாயண உத்தர காண்டத்தில் வியப்புமிகு செய்திகள் பல உள . ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டம் நிறைய இடைச் செருகல்களைக் கொண்டு இருப்பதால் பலரும் இதை வால்மீகி  மஹரிஷி எழுதி இருக்க முடியாது என்பர். ஆயினும் பகதர்கள் எல்லாவற்றையும் நம்புகின்றனர். என்னிடமுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பான ஹரிப் பிரசாத் சாஸ்திரி புஸ்தகத்திலும் எல்லா ஸ்லோக மொழிபெயர்ப்புகளும் உள்ளன. அவர் இடைச் செருகல் (INTERPOLATIONS)  என்ற தலைப்பில் நாய் கதை, கழுகு-ஆந்தை சண்டைக் கதை (VULTURE AND OWL) முதலியவற்றைக் கொடுத்துள்ளார்.

நேற்று நாய்க் கதையைச் சொன்னேன். இன்று அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

நாய்க் கதையின் சுருக்கம்:

ராமபிரான், பிராஹ்மணர்களையும் பிசினஸ் கம்யூனிட்டி வி.ஐ.பிக்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தியபின்னர் , “தம்பி லெட்சுமணா, குறைதீர்க்கும் மனுக்களுடன் வாசலில் காத்திருப்போரை அழைத்து வா” என்கிறார்; அவனும் அரண்மனை வாசலுக்குச் சென்றான். தலையில் அடிபட்ட நாய் ஒன்று மட்டுமே நின்றது. ஒரு பிராமணன் தன்னைக் காரணமின்றி தாக்கியதாக சொல்லவே பிராமணனையும் அழைத்து விசாரித்தார் ராமபிரான். அவன் பசி, கோபத்தில் இவ்வாறு செய்ததாக உண்மையை விளம்பினான். உடனே அவனுக்கு மணியக்காரர் பதவியைக் கொடுத்து அனுப்பினார். அவன் சந்தோஷமாக யானை மீது ஏறி வீட்டுக்குச் சென்றான். அடிபட்ட நாய், மீண்டும் தன் இருப்பிடத்துக்குச் சென்றுவிட்டு, பின்னர் காசிக்குச் சென்று சாகும் வரை உண்ணாவிரத நோன்பு அனுஷ்டித்து உயிர் நீத்தது .

இதற்கு அடுத்துவரும்  ஸ்லோகம்தான் மிகவும் சுவையானது :

யமிச் சேந் நரகம் நேதும் ஸ புத்ர பசு பாந்தவம்

தேவேஷ்வ திஷ்டிதம் குர்யாத் கோஷு ப்ராஹ்மணேஷு ச

நிரயாந் நிரயம் ஸைஷ பதத்யேவ  நராதமஹ

மக்கள், விலங்கினங்கள் , உறவினர்கள் இவர்களுடன் கூடிய எவனை நரகத்திற்கு அனுப்ப விருப்பமுண்டோ அவனைக்  கோவில்களிலும், பசு மடங்களிலும் , பிராமணர்களின் அன்ன  சத்திரங்களிலும் அதி காரியாகச் செய்துவிடவேண்டும் . அவன் ஒரு நரகத்திலிருந்து இன்னொரு நரகத்துக்குப் போய்க்கொண்டே இருப்பான் .

வால்மீகி முனிவர் ஏன் இப்படிச் சொன்னார்? என்று ஆராய்வோம். பொதுவாகவே பிறர் பொருளுக்கு ஆசைப்படுவது குற்றம் என்பதை , எல்லா மத நூல்களும் செப்புகின்றன. அதிலும் புனிதமான பொருள்களைத் திருடுவது பெரிய குற்றம்; அவர்கள் நரகத்துக்குச் செல்வார்கள் என்று எல்லா தமிழ்க் கல்வெட்டுக்களும் எச்சரிக்கின்றன. ஏனெனில் அது வேலியே பயிரை மேய்ந்ததற்குச் சமம்  ஆகும்.

மேலும் சிவன் சொத்து குல நாசம் என்ற தமிழ்ப் பழமொழியை எல்லோரும் அறிவர். கோவில்கள், பசு மடங்கள் , அன்ன சத்திரங்களில் பொய்க் கணக்கு எழுதி பணத்தைச் சுருட்டுவது எளிது. தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் இவ்வாறு (H R C E) கோவில் ஊழியர்கள் திருடுவதும், லஞ்சம் வாங்கி கோவிலின் புனிதத்தைக் கெடுப்பதும் நாம் .அறிந்ததே. திருடர்களுக்கு நரகம் கிடைக்கும் என்பதை எல்லா சமயங்களும் எழுதியுள்ளன . இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வால்மீகி மகரிஷியும் எழுதியுள்ளது அடிக்கோடிட்டுக் காண்பிப்பது போல பளிச்சிடுகிறது.

வாழ்க வால்மீகி ; வளர்க ராமாயணம்

–SUBHAM—tags- கோவில் அதிகாரி, நரகம் ,  வால்மீகி,  எச்சரிக்கை 

பகைக்காதே! பகைக்காதே! 15 பேரைப் பகைக்காதே! (Post No.11,706)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,706

Date uploaded in London – –  24 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அறப்பளீசுர சதகம் எழுதிய அம்பலவாணக் கவிராயர், பகைக்கக்கூடாதவர்கள் யார் யார் என்று ஒரு லிஸ்ட்/ List பட்டியல் தருகிறார்.; அந்த 15 பேரைக் கனவிலும் பகைக்கக்கூடாது என்கிறார். யார் அந்த 15 பேர்?

அரசர், மந்திரிகள், தீயோர், கோள் சொல்லுவோர்,

தூதர்,மர்மமான ஆசாமிகள் , வலிமையுடையோர்கணக்கர்,

சமையற்காரர், மந்திர வாதிகள், பணக்காரர், இழிந்தோர்,

உபதேசியர், மருத்துவர்,  புலவர்கள்.

நல்ல அறிவுரைதான். சமையல்காரனை பகைத்தால் சாப்பாட்டில் உப்பு அல்லது விளக்கெண்ணெயை சேர்த்துவிடுவான்; டாக்டரைப் பகைத்தால் ஊசி மருந்து  ஏற்றுவதாகச் சொல்லி தண்ணீரை ஏற்றிவிட்டு காசு வாங்குவார். கீழோரைப் பகைத்தால் தூக்கணங் குருவிக்கூட்டைப் பிய்த்தெறிந்த பஞ்ச  தந்திரக் கதை நினைவுக்கு வரும். பலசாலியைப் பகைத்தால்  கைகால்கள் முறியக்கூடும்; பணக்காரர்களைப் பகைத்தால் அடியாட்களைக் கொண்டு தாக்குவார்கள். புலவர்களை பகைத்தால் அறம்பாடி நம்மைக் கொன்றுவிடுவார்கள் .அரசர்/ ஆளும் கட்சியினரைப் பகைத்தால் போலீஸ் கேஸ் கூட பதிவு செய்ய மாட்டார்கள். அம்பலவாணர் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான்.

Xxxx

அடுத்த பாடலில் இன்னுமொரு அறிவுரை வழங்குகிறார்; கரும்பு போன்ற பொருள்களைக் கசக்கிப் பிழிந்தால்தான் பலன் கிடைக்கும். சாறு வேண்டுமென்றால் நசுக்க வேண்டும். திருவள்ளுவர் கூட கருமிகளை கையை முறித்து முகவாக்கட்டையில் ஒரு குத்துவிட்டால்தான் காசு தருவான் என்று சொல்கிறார் (காண்க வள்ளுவரும் வன்முறையும் என்ற எனது கட்டுரை). இன்னும் சிலரைப் புகழ்ந்து வேலை வாங்க வேண்டும். சின்னப் பையனாக இருந்தால், அட என் ராஜா , உன்னைப்போல இன்டெலிஜெண்ட் INTELLIGENT  யாரும் கிடையாது ; உன் டீச்சர் என்னிடம் சொன்னார். வா, வா, ஹோம் ஓர்க்கை HOME WORK வேகமாக செய் என்று சொன்னால் செய்வான். ஒரு பெண்ணை விரும்பினால், உன்னைப்போல அழகியை நன் உலகிலேயே கண்டதில்லை. அடடா, நீ நல்ல குணங்களுக்கு இலக்கணம்.BEAUTY AND FULL OF GOOD VIRTUES என்று புகழ் வேண்டும். அந்த அசடும் ( DIMWIT)மயங்கி, சொக்கிப் போகும். இது அம்பலவாணர் கண்ட உண்மை.

XXXXXXXXX

இதோ பாடல் எண் 92

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 92

        92. பகை கொள்ளத் தகாதவர்

மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு

     மாறாத மர்மம் உடையோர்,

  வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்

     மடையர்,மந் திரவா தியர்,

சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்

     சூழ்வயித் தியர்,க விதைகள்

  சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்

     சொப்பனந் தனில் ஆகிலும்

நன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந்

     நானிலத் தென்பர் கண்டாய்!

  நாரியோர் பாகனே! வேதாக மம்பரவும்

     நம்பனே! அன்பர் நிதி யே!

அன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) நாரி ஓர் பாகனே – உமையொரு பங்கனே!, வேத ஆகமம்

பரவும் நண்பனே – மறையும் ஆகமமும் போற்றும் சிறப்புடையவனே!,

அன்பர் நிதியே – அன்பரின் சேமப்பொருளே!, அன்னம் ஊர் பிரமனும்

கண்ணனும் காணாத அண்ணலே – அன்னத்தில் ஊர்ந்து வரும் நான்முகனும்

திருமாலும் கண்டுபிடிக்க இயலாத பெரியோனே!, அருமை …….. தேவனே!,

மன்னர் – அரசர், அமைச்சர் – மந்திரிகள், துர்ச்சனர் – தீயோர், கோளர் –

கோள் சொல்லுவோர், தூதரொடு – தூதர்களுடன், மாறாத மர்மம்

உடையோர் – நீங்காத செற்றம் கொண்டவர்கள்,

வலுவர் – வலிமையுடையோர், கருணீகர் – கணக்கர், மிகு பாகம் செய்து

அன்னம் இடும் மடையர் – சிறந்த சமையல் செய்து உணவிடும் சமையற்காரர்,

மந்திர வாதியர் – மந்திரஞ் செய்வோர் சொன்னம் உடையோர் – செல்வ

மிக்கவர்கள், புலையர் – இழிந்தோர், உபதேசமது செய்வோர் – உபதேசியர்,

சூழ் வயித்தியர் – ஆராய்ச்சியுடைய மருத்துவர், கவிதைகள் சொற்றிடும்

புலவர் – செய்யுள் இயற்றும் புலவர்கள், இவர் பதினைந்து பேரொடும்

சொப்பனந்தனில் ஆகிலும் நன்னெறி அறிந்தபேர் இந்நானிலத்து பகை

செய்திடார் – இவர்கள் பதினைவருடனும் கனவிலும் நல்ல நெறி

அறிந்தவர்கள் இவ்வுலகிற் பகை கொள்ளார், என்பர் – என்று கூறுவர்.

     (வி-ரை.) கண்டாய் : முன்னிலை அசைச் சொல் : நன்மை + நெறி –

நன்னெறி, மடை – சோறு. மடையர் – சமையல் செய்வோர். உபதேசம்

புரிவோர் – ஆன்மநெறி கற்பிக்கும் ஆசிரியர்.

Xxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 93

 93. நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்

சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்

     சொல்லும்நல் நெல்லை எள்ளைத்

  தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்

     தொண்டரைத் தொழுதொ ழும்பை

நவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்

     நற்றமிழ்க் கவிவா ணரை

  நலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்க

     நயமுள்ள நாரியர் தமைப்

புவிமீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்

     போர்வீர ரைத்தூ யரைப்

  போதவும் பரிவோ டிதஞ்செய்ய மிகுபயன்

     புகழ்பெறக் கொள்வர் கண்டாய்

அவமதி தவிர்த் தென்னை ஆட்கொண்ட வள்ளலே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அவமதி தவிர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே – தீய

அறிவை நீக்கி என்னை அடிமை கொண்ட வள்ளலே!, அண்ணலே –

தலைவனே!, அருமை ….. தேவனே!, சுவைசேர் கரும்பை – சுவை பொருந்திய

கரும்பையும், வெண் பாலை – வெண்மையான பாலையும், பருத்தியை –

பருத்தியையும், சொல்லும் நல் நெல்லை – சொல்லப்படுகின்ற நல்ல

நெல்லையும், எள்ளை – எள்ளையும், தூய தெங்கின் கனியை – தூய்மை

பொருந்திய தென்னம் பழத்தையும், எண்ணாத துட்டரை – மதிக்காத

தீயவர்களையும், தொண்டரை – அடிமையாளரையும், தொழு தொழும்பை –

குற்றேவேல் செய்வோரையும், நவைதீருமாறு – குற்றம் நீங்கும்படி, கண்டித்தே

– கண்டனம் செய்தே, பயன் கொள்வர் – அவர்களால் ஆன பயனைப்

பெறுவார்கள், நல் தமிழ் வாணரை – நல்ல தமிழைக் கற்றுச் சிறந்த

புலவரையும், நலம் மிக்க செழுமலரை – நன்மை மிகுந்த செழித்த பூவையும்,

ஓவியம் எனத் தக்க நயம் உள்ள நாரியர் தமை – ஓவியத்தில் எழுதிய

பாவை என்று சொல்லத் தகுந்த அழகுள்ள பெண்களையும், புவி மீதில்

உபகார நெஞ்சரை – பூமியின் மீதில் உதவி செய்ய வேண்டுமென்று மனம்

படைத்தோரையும், சிறுவரை – சிறுவரையும், போர் வீரரை – போர்

வீரர்களையும், தூயரை – தூய்மை பொருந்திய பெரியோர்களையும், போதவும்

பரிவோடு மிகுபயன் புகழ் பெறக் கொள்வர் – மிகுதியான அன்போடு மிகுந்த பயன்களை அவர்களுக்குப் புகழ் உண்டாகும்படி கொள்வார்கள்.

     (வி-ரை.) தொழும்பர் – குற்றேவல் செய்வோர். நவை – குற்றம்.

Xxxx

To be continued……………………………………………

 tags- அறப்பளீசுர சதக,  பாடல் எண் 93,  பகை,  தகாதவர், பகைக்காதே 

பட்டிப் பெருமான் பள்ளனான கதை! (Post No.11,705)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,705

Date uploaded in London  24 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பட்டிப் பெருமான் பள்ளனான கதை!

ச.நாகராஜன்

கொங்குமண்டல சதகம் பாடல் எண் 18.

இறைவனின் அருளுக்கு ஜாதி பேதம் கிடையாது, உயர்ந்தோர், பட்டியல் இனத்தோர் என்ற வேறுபாடு கிடையாது என்பதை நமது  பண்டைய இலக்கியம் தெளிவு பட விளக்குகிறது.

பின்னால் அரசியல் காரணங்களுக்காக  வேறுபாடு உருவாக்கப்பட்டு பல்வேறு சொற்றொடர்களில் அமைக்கப்பட்டு பட்டியல் இனத்தோர், தலித், ஹரிஜன், முன்னேறிய வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் என்றெல்லாம் சொல்லப்பட்டு பிளவை ஏற்படுத்தியது.

சுந்தர மூர்த்தி நாயனார் வாழ்வில் இடம் பெற்ற ஒரு சுவையான வரலாறு இறைவனின் அருள் எல்லோருக்கும் பொது என்பதை விளக்குகிறது.

இறைவனே பள்ளன் ஆன நிஜ வரலாறு இது.

சுந்தரர் தனது உளத்திலிருந்து எழுந்த அருள் பாடல்களைப் பாடியவாறே ஒவ்வொரு தலமாகச் சென்று சிவபிரானைத் தரிசித்து வந்தார்.

‘சுந்தரர் பாடிக் கொண்டே வருகிறார். அவருக்குத் தேவையான பொன்னைக் கொடுக்க என்னிடம் பொன் இல்லையே’ என்று ஒளிந்தாற் போல ஒரு திருவிளையாடலை நடத்தத் திருவுள்ளம் கொண்ட பட்டிப் பெருமான் ஒளிந்து கொண்டார்.

இந்த வரலாறு நடந்ததும் கொங்குமண்டலத்திலே தான் என்று பெருமையுடன் இதைப் பதிவு செய்கிறது கொங்குமண்டல சதகம் பாடல் எண் 18.

பாடல் :

கடுவாள் விழியினை யாரூர்ப் பரவை கலவிவலைப்

படுவார் தமிழ்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்

நெடுவாளை பாயும் வயலூடு போகி நெடியபள்ள

வடிவாகி நின்றதும் பேரூர்ச்சிவன் கொங்கு மண்டலமே

பொருள் :  ‘சுந்தரர் பாடி வருவார், அவருக்குக் கொடுக்க பொன் இல்லையே நம்மிடம்’ என்று ஒளிந்தார் போலப் பட்டிப் பெருமானார், பள்ள வடிவு கொண்டு ஒளிந்ததும் பேரூரில், அந்தப் பேரூரும் கொங்குமண்டலத்தைச் சார்ந்ததே என்பதாம்.

உயர்ந்தவுந்தாமே யிழிந்தவுந்தாமே யெனமறையோலமிட்டுரைக்கும்

வியந்ததஞ்செய்கை யிரண்டினுளொன்று வேதியனாகி முன்காட்டிப்

பயந்தரு மிறையவர் மற்றதுங்காட்டப் பள்ளனாய்த் திருவிளையாட்டால்

நயந்தபூம் பணையின் வினைசெய வன்பர் நண்ணிமுனண்ணிரம்மா

  என்று பேரூர்ப் புராணம் இதைக் கூறுகிறது.

பேரூர் தலம் பற்றிய குறிப்பு :

கோவை மாநகரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி பேரூர் பட்டீஸ்வர கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் கரிகால் சோழ மன்னனால் கட்டப்பட்டது. பச்சைநாயகி அம்மன் பட்டிஸ்வரருடன் இருந்து அருள் பாலிக்கும் தலம் இது. இங்குள்ள லிங்கம் ஸ்வயம்பு லிங்கம்.

இதற்கு பிப்பலாரண்டயம், பட்டிபுரி, காமதேனு புரி எனப் பல பெயர்கள் உண்டு.

ஒரு முறை பிரம்மா அயர்வுற்று, தூங்கி, படைப்புத் தொழிலைச் செய்யவில்லை. இதை அறிந்த மஹாவிஷ்ணு காமதேனுவை அழைத்து, ‘நீ சிவனை நோக்கித் தவமிருந்து அவர் அருள் பெற்று படைப்புத் தொழிலைச் செய்வாயாக’ என்றார். அதன் படி காமதேனு இமயமலையில் சிவனை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தது. ஆனால் சிவன் அருள் சித்திக்கவில்லை.

நாரதர் ஒரு சமயம் அங்கே சென்றார். ஆதிலிங்க மூர்த்தியாக காஞ்சியில் அருள் பாலிக்கும் சிவபெருமான் பற்றிச் சொல்ல, காமதேனு அங்கு சென்று தினமும் சிவபெருமானுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது.

ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி அந்த லிங்கத்தின் மேல் எழுந்திருந்த புற்றை விளையாட்டாய்க் கலைத்து விட்டது.

கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியின் மீது படிந்து விட்டது.

இதை அறிந்த காமதேனு பெரிதும் வருத்தமுற்றது.

காமதேனுவின் வருத்தத்தைப் போக்க சிவபிரான் காமதேனு முன் தோன்றினார்.

“கவலையுற வேண்டாம். பட்டியின் குளம்படித் தழும்பை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.இங்கே தொடர்ந்து நீ தவம் செய். எனது நடன தரிசனத்தை நீ எப்போதும் இங்கு காணலாம். இந்தத் தலம் பட்டீஸ்வரம் என இனிப் புகழ் பெறும்.” என்று கூறி அருளினார்.

இன்றும் சிவபிரான் திருமுடியில் இந்தக் குளம்படித் தழும்பு உள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக இறைவன் பட்டீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார்.

இந்தத் தலத்தில் பல அருளாளர்களும் வருகை புரிந்து பாடல்களைப் பாடித் தொழுதுள்ளனர்.

இன்றும் பக்தர்கள் அனைவரும் வருகை புரிந்து சிவபிரானை வணங்கும் மாபெரும் தலமாக பட்டீஸ்வரம் உள்ளது.

***

.

உத்தர காண்டத்தில் வால்மீகி சொல்லும் சுவையான நாய்க் கதை (Post No.11,704)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,704

Date uploaded in London – –  23 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

உலகத்தில் தோன்றிய  காவியங்களில் முதல் காவியம் வால்மீகி ராமாயணம் ஆகும். இது ஆதி காவியம் என்று அழைக்கப்படுகிறது . இதில் 7 காண்டங்கள் உள்ளன; அவை ஒவ்வொன்றும் சர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன . எளிய சம்ஸ்க்ருதம்; ஆனால் அற்புதமான கதையும் சொல்லாக்கமும் உடையது. சம்ஸ்க்ருதத்தில் பிற்காலத்தில் எழுதிய எல்லோரும் ஏதாவது ஒரு விஷயத்தில் அவரைப் பின்பற்ற்றியதைக் காணலாம். சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் ராமாயணம் பரவியிருந்ததை அகநானூற்றுப் புறநானூற்றுப் பாடல்களில் காண்கிறோம். ராவணனை அரக்கன் என்றும் சங்கப் புலவர் வசை பாடுகிறார். பிற்காலத்தில் தேவாரம் பாடிய மூவரும் ராவணனை வசைபாடுவதோடு ராமனைப் புகழ்வதையும் காண்கிறோம். அதே போல ஆழ்வார்களின் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திலும் படிக்கிறோம் .

ராமாயணத்திலுள்ள 7 காண்டங்கள் – பால, அயோத்தியா , ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்தர காண்டங்களாகும். இதில் கடைசி காண்டம் உத்தர காண்டம். இதை சிலர் பிற்சேர்க்கை என்றும்  வால்மீகி  எழுதாதது என்றும் செப்புவர். ஆனால் இது பிற்சேர்க்கையாக இருந்தாலும்   வால்மீகி தான் எழுதியிருக்க வேண்டும் என்பது சம்ஸ்க்ருத மொழியை அறிந்தோரின் வாதம். எது எப்படியாகிலும் அதிலுள்ள சுவையான விஷயங்கள் உண்மையில் நடந்தவையே.

இந்து மத்தில் நிறைய நாய்க் கதைகள் இருக்கின்றன. இது ரிக் வேதத்தில் துவங்குகிறது. சரமா, சரமேயஸ் என்ற நாய்கள் பற்றி ரிக் வேதத்தில் படிக்கிறோம். மஹாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் வடக்கு நோக்கி நடந்து உயிர் விடுகையில் யுதிஷ்டிரனை கடைசி வரை ஒரு நாய் தொடர்ந்து சென்ற கதையை நாம் கேட்கிறோம். அது போலவே ராமாயண உத்தர காண்டத்தில் ஒரு நாய்க் கதை வருகிறது. பலரும் கேட்டிருக்க மாட்டார்கள்.

காலையில் செய்யவேண்டிய கடமைகளை முடித்த பின்னர் பிராமணர்களையும் , BUSINESS COMMUNITY பிசினஸ் கம்யூனிட்டியைச் சேர்ந்த வர்த்தகர்களையும் சந்தித்து ராமர் ஆலோசனைக்  கூட்டம் நடத்தினார்.

பின்னர் லெட்சுமணனை அழைத்து இன்று நம்மிடம் மனுக்கொடுக்க வந்துள்ள பொதுமக்களை அழைத்து வா என்கிறார்.

(இதில் கவனிக்க வேண்டிய விசயங்கள் — ராமபிரான் அரசன் என்ற முறையில் பிஸினஸ் கம்யூனிட்டி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தியதாகும் . அதற்குப்பின்னர் பொது மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியதையும் கவனிக்க வேண்டும் ).

இதற்குப்பின்னர் நடந்த சுவையான கதை இதோ:

ததா ப்ரபாதே விமலா க்ருத்வா பெளர்வாஹ்நிகீம் க்ரியான்

ராஜதர்மானவேக்ஷன் வை ப்ராஹ்மணைர்  நைகமைஸ் ஸஹ

அத ராமோ  அப்ரவீத் தத்ர லக்ஷ்மணம் சுபலக்ஷணம்

கார்யார்த்தி நச்ச ஸெளமித்ரே வ்யாஹார்த்தும் த்வமுபக்ரம

ஏவ முக்தஸ்து ஸெளமி த்ரீ :நிர்ஜகாம ந் ருபாலயாத்

அபச் யத் த்வார தேசே வை ச்வானம் தாவதிஸ்திதம்

இவ்வாறு கூறப்பட்ட லட்சுமணன் அரண்மனையிலிருந்து வெளியே சென்று ஒரு நாய் நிற்பதைக் கண்டான் ; புத்திசாலியான அவன், நாயை உள்ளே அழைத்துச் சென்று ராமனிடம் நாயை அறிமுகம் செய்துவைத்தான் .

அதா பச்யத தத்ரஸ்தம் ராமம் ச்வா பின்ன மஸ்தகஹ

ராமஸ்ய வசனம் ச்ருத்வா ஸாரமேயோ அப்ரவீத் இதம்

உடைந்த தலை யுடைய அந்த நாய், ராமரைப் பார்த்தது .

ராமரின் அனுமதி பெற்ற பின்னர் பேசத்  தொடங்கியது.

பிக்ஷூ ஸர்வார்த்த சித்திச்ச பிராஹ்மணா வஸதே வஸத்

தேன தத்தஹ ப்ரஹாரோ மே நிஷ்காரண மாநாகசஹ

ஸர்வார்த்த சித்தி என்ற ஒரு  பிராஹ்மண பிக்ஷூ ,அக்ரஹாரத்தில்

வசித்து வந்தான் . ஒரு பாவமும் அறியாத என்னை அவன் காரணமின்றி அடித்துவிட்டான்

ஆநீ தஸ்து ததஸ்தேன ராமம் த்ருஷ்ட்வா மஹாத்யுதிஹி

த்விஜஹ ஸர்வார்த்த சித்திஸ்து அப்ரவீத் ராம ஸன்னிதெள

பின்னர் அவனால் அழைத்துவரப்பட்ட , ஒளியுடன் கூடிய ஸர்வார்த்த சித்தி என்னும் அந்தணன் ராமன் முன்னிலையில் சொன்னான் :

மயா தத் தஹ ப்ராஹாரோ அயம் க்ரோதே நாவிஷ்ட்ட சேதஸா

பிக்ஷார்த்த மட மானேன காலே விகத பைக்ஷகே

பிக்ஷையின் பொருட்டு அலைந்தும் பிக்ஷை கிடைக்காததால் கோபம் வந்தபோது இந்த அடி என்னால் கொடுக்கப்பட்டது .

ஏதத் ச்ருத்வா து ராமேண கெளலபத்யே அபிசேஷிதஹ

ப்ரய யெள பிராஹ்மணோ ஹ்ருஸ்டோ கஜஸ் கந்தேன சோர்ச்சிதஹ

இதனைக் கேட்ட ராமனால் அவன் மணியக்காரர் பதவியில் அமர்த்தப்பட்டான். உடனே அந்த வேதியனும் மகிச்சியுடன் யானையின் முதுகில் அமர்ந்து சென்றான் ..

 ச்வாப்ய கச்சன் மஹாதேஜாஹா யாத ஏவா கதஸ்ததஹ

வாரணஸ்யாம்  மஹாபாகஹ ப்ராயம் சோபவிவேசஹ 

ஒளிமிகுந்த முகத்துடன் அந்த நாயும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பிச் சென்றது .பின்னர் அந்த மஹிமைவாய்ந்த பிராணி , காசியில் சாகும் வரை உபவாசம் இருந்தது .

XXXXX SUBHAM XXXXXX

TAGS–பிராமணன் , நாய், தலையில் காயம், ராமன், உத்தர காண்டம்

மன்மத லீலை பற்றி அம்பலவாணர் தரும்  முழு வருணனை (Post No.11,703)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,703

Date uploaded in London – –  23 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மன்மதன்- ரதி பற்றி அறியாத இந்துக்கள் எவருமில்லை. சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் ஒரே வருணனைதான் காணப்படுகிறது. அவனிடம் 5 மலர் அம்புகள் உள்ளன. அதை அவன் எய்தால் ஒருவர், காதல் வசப்படுவர். பின்னர் அவர்கள் செய்யும் வேலையை அப்பர் சுவாமிகள் முதல் பலரும் வருணித்துள்ளனர். அப்பர் இந்தக் காதலை சிவன் மீதுள்ள காதலாக வருணிக்கிறார். அவரோ காமனை  எரித்தவர். பற்றுக  பற்றற்றான பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு  என்ற வள்ளுவன் வாக்கினுக்கிணங்க சிவனை நினைத்தவர் மன்மத லீலையில் இருந்து விடுபடுவர்.

வேறு எங்கும் சொல்லாத ஒரு விஷயத்தை அம்பலவாணர் கற்பனை செய்து சொல்லுவது நன்கு ரசிக்கத்தக்கது. அதாவது ஒவ்வொரு மலரும் காதல் வயப்பட்டோரின் உடலில், மனதில் என்ன செய்யும் என்பது கவிஞரின் புது கற்பனை.

Xxxxx

காதல் வயப்பட்ட ஆணோ பெண்ணோ என்ன செய்வார்கள் என்று வடமொழியில் ஒரு அழகான ஸ்லோகம் இருக்கிறது

அஷ்டாங்க மைத்துனம்

ஸ்மரணம் கீர்த்தனம் கேலி: ப்ரேக்ஷணம் குஹ்யபாஷணம்

சங்கல்போ(அ)த்யவசாயஸ்ச க்ரியாநிஷ்பத்திரேவ ச 

——விருத்த வசிஷ்டர் 

பொருள்:-

ஒரு பெண்ணை நினைத்த்ல், அவளைப் பற்றிப் பிதற்றல், , அவளுடன் விளையடல், அவளைப் பார்த்தல் (அடிக்கடி), அவளுடன் கிசுகிசு ரஹசியம் பேசல் (மொபைல்போன், பேஸ்புக், ஈ மெயில் மூலம்), அவளுடன் அனுபவிக்க வேண்டியது பற்றி எண்ணுதல்/கனவு காணுதல், அவைகளை அடைய திட்டமிடல்/முயற்சி செய்தல், இதன் காரணமாக செய்ய வேண்டிய கடமைகளை மறந்துபோதல் என்று அஷ்டாங்க மைதுனம் (எண்வகைப் புணர்ச்சி) பற்றி முது வசிட்டன் சொல்லுகிறான். 

இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:. இதுதான் மன்மத லீலை.

அப்பர் தேவாரம்

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்

தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே

—–தேவாரம், ஆறாம் திருமுறை, பாடல் 258 

சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காதலியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்..

Xxxxxxxxxxxx

தமிழ் நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கிய எம். கே  தியாகராஜ பாகவதர் பாட்டு

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

திரைப்படம் : ஹரிதாஸ்

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஆண்டு: 1944

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு

என்மதி மயங்கினேன் நான்

என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்

என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை

எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை

எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?

உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?

ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?

ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? –  மனம் கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

xxxxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண் 90.

காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்

வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,

     மலர்நீலம் இவைஐந் துமே

  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி

     மனதிலா சையையெ ழுப்பும்;

வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;

     மிகஅசோ கம்து யர்செயும்;

  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;

     மேவும்இவை செயும்அ வத்தை;

நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,

     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,

  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்

     நேர்தல், மௌனம் புரிகுதல்,

அனைவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அத்தனே – தலைவனே!, அருமை …….. தேவனே!, வனசம்

செழுஞ்சூதமுடன் அசோகம், தளவம், மலர்நீலம் இவை ஐந்துமே மாரவேள்

கணைகள் ஆம் – தாமரைவளமிகுந்த மாஅசோகுமுல்லைமலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும், இவை

செயும் குணம் – இவை (உயிர்களுக்கு) ஊட்டும் பண்புகள், முளரி மனதில்

ஆசையை எழுப்பும் – தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும்,

வினவில் ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும் – வினவுமிடத்துச்

சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும், அசோகம் மிகத் துயர்செயும் – அசோக மலர் மிகவும்

துன்பத்தைத் கொடுக்கும், குளிர் முல்லை வீழ்த்திடும் – குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும், நீலம் உயிர் போக்கிவிடும் – நீலமலர் உயிரை ஒழிக்கும், மேவும் இவை செயும் அவத்தை – பொருந்தும் இவை உண்டாக்கும்

நிலைகளாவன : நினைவில் அதுவே நாக்கம் – எண்ணத்தில் அதுவே

கருதுதல், வேறு ஒன்றில் ஆசை அறல் – மற்றொன்றில் ஆசை நீங்கல்,

நெட்டுயிர்ப்பொடு பிதற்றல் – பெருமூச்சுடன் பிதற்றுதல்நெஞ்சம் திடுக்கிடுதல்- உள்ளம் திடுக்கிடல், அனம் வெறுத்திடல் – உணவில் வெறுப்புகாய்ச்சல் -உடல் வெதும்புதல், நேர்தல் – மெலிதல்மௌனம் புரிகுதல் – பேசாதிருத்தல்,அனைய உயிர் உண்டு இல்லை என்னல் – ஆசையுற்ற உயிர் உண்டோ

இல்லையோ என்னும் நிலையடைதல், ஈரைந்தும் ஆம் – (ஆகிய இவை)

பத்தும் ஆகும்.

xxxxx

அறப்பளீசுர சதகப் பாடல் எண்  91. காமன் துணைப்பொருள்கள்

வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;

     மேல்விடும் கணைகள் அலராம்;

  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;

     வேழம்கெ டாதஇருள் ஆம்;

வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய

    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;

  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;

    மனதேபெ ரும்போர்க் களம்;

சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;

    சார்இரதி யேம னைவிஆம்;

  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்

    தவறாதி ருக்கும் இடம்ஆம்;

அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்

    அமுதமே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

    அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) எளியோர்க்கு எலாம் அமுதமே – ஆற்றல் அற்றவர்கள்

எல்லாருக்கும் அமுதம் போன்றவனே!, அருமை …… தேவனே!, அஞ்சுகணை

மார வேட்கு – ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு, வெம் சிலை செழுங்

கழை – கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும், நாரி கருவண்டு இனம்

– அம்பு கரிய வண்டின் கூட்டம் (ஆகும்). மேல் விடும் கணைகள் அலர்

ஆம் – (உயிர்களின்) மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும், தேர் வீசிடும்

தென்றல் – தேர் உலவும் தென்றற் காற்று (ஆகும்)பரிகள் பைங்கிள்ளையே

– குதிரைகள் பச்சைக் கிளிகளே (ஆகும்). வேழம் கெடாத இருள் ஆம் –

யானை அழியாத இருளாகும். பெருஞ்சேனை வஞ்சியர் – மிகுபடை பெண்கள்

(ஆவர்), உடைவாள் கைதை – உடைவாள் தாழை மடல் (ஆகும்), முரசம்

நெடிய வண்மைபெறு கடல் ஆம் – போர் முரசு நீண்ட கொடைத்தன்மை

பொருந்திய கடலாகும், பதாகை மகரம் – கொடி மகர மீன் ஆகும், காகளம்

வரு கோகிலம் – சின்னம் (வேனிலில்) வரும் குயிலாகும், பெரும்

போர்க்களம் மனதே – பெரிய போர்க்களம் (உயிர்களின்) உள்ளமே ஆகும்,

பாடல் சஞ்சரிக இசை – பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும், கவிகை

குமுதம் நேயன் – குடை சந்திரன் (ஆவான்); மனைவி சார் இரதியே ஆம் –

காதலி (அழகு) பொருந்திய இரதியே ஆவாள், மகுடம் தறுகண் மடமாதர்

இளமுலை ஆம் – அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள்

முடி ஆகும், தவறாது இருக்கும் இடம் அல்குல் ஆம் – எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் (பெண்களின்) அல்குல் ஆகும், என்பர் – என்று அறிஞர் கூறுவர்.

Tamil Hindu Encyclopaedia – 16 (Manmatha மன்மதன் …

https://tamilandvedas.com › tamil-hin…

2 Nov 2022 — Hinduism is the only religion in the world that showed sex is holy and necessary. They included in the four values of life Dharma, Artha, KAMA …

Tags-மன்மதன், ரதி, லீலை, அம்பலவாணர், சதகம், ஐந்து மலர் அம்பு

பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமா? (Post No.11,702)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,702

Date uploaded in London –  23 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாபாரத மர்மம்

பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமா?

ச.நாகராஜன் 

பாண்டவர் ஐவர் திரௌபதி ஒருத்தியை மணம் புரிந்தது சரியா?

காலம் காலமாகக் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு மஹாபாரதத்திலேயே பதில் உள்ளது.

மஹாபாரத கதாபாத்திரங்களுக்கும் இந்த சந்தேகம் வர அது கேட்கப்பட்டது; உரியவரால் உரிய பதில் அளிக்கப்பட்டது.

வேதமே அனைத்து தர்மங்களுக்கும் ஆதாரம்.

“வேதத்தில் அன்னையைத் தெய்வமாகக் கொள், தந்தையை தெய்வமாகக் கொள்” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே தாயும் தந்தையும் எதைச் சொல்கிறாரோ அதைச் செய்ய வேண்டுமென்பது பெறப்படுகிறது.

ஆனால் அதே வேதத்தில் இதற்கு முரணான ஒன்றும் காணப்படுகிறது.

“அயுக்தமாக – அதாவது யுக்திக்குப் பொருந்தாத – ஒன்றைப் பெரியோர் சொன்னால் அது பெரியோர் வாக்கியமாயினும் , குரு வாக்கியமாக இருந்தாலும் அதை அங்கீகரிக்கக் கூடாது” என்று இப்படி வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படி இரு வகையான அறிவுரைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடு போல உள்ளவை கூறப்பட்டுள்ளனவே என்ற சந்தேகம் யாருக்கும் எழலாம்.

ஆனால் சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள், சாஸ்திரங்களை முற்றிலுமாகப் படித்து உணர்ந்தவர்கள் இதை முரண்பாடான வாக்கியங்களாகக் கருதவில்லை.

யுக்திக்குப் பொருத்தமில்லாத ஒன்றை குரு  சொன்னாலும் அதைக் கேட்கும் அவசியம் இல்லை என்பது யாருக்குப் பொருத்தமானது?

குரு சொல்வதை அப்படியே கேட்டுக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது யாருக்குப் பொருந்தும்?

குரு சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற வாக்கியம் குருவையே அண்டி அவருடனேயே வசிக்கும் பிரம்மசாரிகளுக்கே பெரிதும் பொருந்தும்.

குரு வாக்கியமும் தள்ளத் தக்கதே என்ற வாக்கியம் பிரம்மசாரி அல்லாத இதர ஆச்ரமங்களில் உள்ளவர்களுக்கே பொருந்தும்.

இதற்கு ஆதாரமாக உள்ள  மனு வாக்கியம் இதோ:

“அக்நியாதானம், பூமியில் சயனம், பிக்ஷாடனம், குரு சொல்வதைச் செய்தல் ஆகிய இவைகளை உபநயனமான குருகுலவாசம் செய்யும் பிரம்மசாரியானவன், அவன் குருகுலவாசம் முடியும் வரையில் செய்து தீர வேண்டும்.”

இது அதிகாரி நிர்ணயத்தின் கீழ் வந்திருப்பதால் குரு சொல்வதைச் செய்தே ஆக வேண்டும் என்று ஏற்படுகிறது.

இந்த குருத்வம் மூவகையாகச் சொல்லப்படுகிறது.

,மாதா, பிதா, குரு ஆகிய இம்மூவர்களுமே குரு என நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரு வேளை தந்தை இறந்து போனால் அந்த குருத்வமும் தாயிடமே வந்து சேரும்.

அதே போல ஒரு ஆசார்யர் தன் சீடர்களை யாரிடம் ஒப்புவித்திருக்கிறாரோ அவரும் குருவே தான்.

முதலில் பாண்டு மஹராஜன் குந்தியிடம் பாண்டவர்கள் ஐவரையும் ஒப்புவித்தான். துரதிர்ஷ்டவசமாக மாண்டு போனான்.

பின்னர் ஆசாரியர் துரோணர் வந்தார். அவரும் பாண்டவர் ஐவரையும் குந்தியிடமே ஒப்புவித்தார்.

ஆக இப்படி பாண்டவர்களை நோக்கும் போது குந்தி தேவியின் குருத்வம்  மூன்று வகையாலும் நிரம்பி உள்ளது.

அவளுக்கு மூன்று வகை குருத்வ அதிகாரம் ஏற்பட்டுள்ளபடியால், குந்தியின் வார்த்தையைத் தட்டவே  முடியாது என்பது பெறப்படுகிறது.

ஆதிபர்வத்தில் 12வது உபபர்வமாக அமைவது ஸ்வயம்வர பர்வம்.

அர்ஜுனன் வில்லை வளைத்து லக்ஷியத்தை நோக்கி அடித்து பந்தயத்தில் வென்றவுடன் திரௌபதி அவனுக்கு உரியவளாகி விட்டாள்.

அன்னையிடம் தாங்கள் வென்றதைச் சொன்ன போது, குந்திதேவி, “ஐவரும் புஜியுங்கள்” என்று கூறினாள்.

ஆகவே ஐவரும் திரௌபதியை மணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.

ஆனால் துருபதனோ இதை ஆக்ஷேபிக்கிறான்.

யுதிஷ்டிரர் தனது தாயின் சொல்லையே கேட்பேன் என்ற திடத்துடன் இருந்தார்.

ஜடிலை, ஸப்த ரிஷிகளிடம் இருந்ததையும் அவர் சொல்கிறார்.

அப்போது வியாஸர் அங்கு வருகிறார். நளாயினியே குந்தி தேவி என்ற ரகசியத்தை அவர் கூறி அருள்கிறார்.

சங்கரர், நளாயினிக்கு அவள் ஐந்து முறை கேட்டதால் ஐந்து கணவரை வரமாக அளித்தார்.

இப்படி விவரமாக வியாஸர் கூறியதைக் கேட்ட துருபதன் திரௌபதியை பாண்டவர் ஐவருக்கும் மணம் முடித்துத் தர சம்மதித்தான்.

பாண்டவர் வரிசைப்படி கிருஷ்ணையை (திரௌபதியை) மணம் செய்து கொண்டனர்.

திரௌபதியை பந்தயத்தில் ஜெயித்து வந்த போது, ‘ஐவரும் புசியுங்கள்’ என்று தான் சொன்ன வாக்கியம் நடக்காமல் போய்விடக் கூடாது என்ற கவலையுடன் இருந்த குந்தி தேவி கூறினாள் :

“தர்மசாரியாகிய யுதிஷ்டிரர் சொல்லுவது உசிதமே. நான் அந்ருதத்திலிருந்து எப்படி விடுபடப்போகிறேனோ, எனும் பயம் எனக்கு மிகவும் உள்ளது. இந்த அந்ருதத்திலிருந்து எப்படி விடுபடப்போகிறேனோ”

இப்படி தன் தாயான குந்தி தேவி வருத்தப்படுவதைக் கேட்டுப் பொறுக்காத தர்மர், ஐவர் ஒருத்தியை மணம் புரியக்கூடாது என்பது சரியே என்றாலும் கூட, பிதா, மாதா, குரு ஆகிய மூவரின் குருத்துவமும் ஒருங்கே கொண்ட தன் தாயான குந்தியின் வார்த்தையின் படி நடக்காமல் போனால் அதுவே மஹாபாபம் என்பதை உணர்ந்து ஐவரும் ஒருத்தியைக் கல்யாணம் செய்வதை ஏற்றுக் கொள்ளத் துணிந்தார்.

துருபதன் கூறுகிறான்” “ ஓ, குருநந்தனரே, ஒருவனுக்குப் பல மனைவி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருத்திக்குப் பல கணவன்மார்கள் விதிக்கப்பட்டதாக ஓரிடத்திலும் காணப்படவில்லையே”

“ஓ, கௌந்தேயரே! உலகத்திற்கும் வேதத்திற்கும் எதிராக உள்ள அதர்மத்தைத் தர்மம் போலச் செய்வது சரியல்ல. உமக்கேன் இப்படி புத்தி போகிறது?” என்று இப்படி துருபதன் தர்மரை நோக்கிச் சொல்ல,

அவர் பதில் கூறுகிறார்:-

“ஓ! மஹாராஜனே! தர்மம் மிக்க சூக்ஷ்மமாய் உள்ளது. இதன் கதியை எம்மால் அறிய இயலவில்லை. முன்னோர்கள் சென்ற வழியை அநுசரிக்கின்றோம்.

என் வாக்கு அந்ருதத்தில்  செல்வதில்லை. மனம் அதர்மத்தில் செல்லாது. இவ்விஷயத்தில் என் மனம் செல்லுகின்றபடியால் இது எந்த வகையிலும் அதர்மமாகாது.”

முன்னோர் வழியையே பின்பற்றுவேன் என்பதனால் ஶ்ரீ ராமர் எவ்வளவு பாபமாயினும் பிரம்மசாரியானவன் குரு சொன்னபடி நடப்பதே தர்மம் என வாழ்ந்து காட்டியதைச் சுட்டிக் காட்டுகிறார். தாடகையை பெண் என்ற போதும் கூட குரு வாக்கியத்தை மேற்கொண்டு வதம் செய்தார் ஶ்ரீராமர்.

“குருவின் வாக்கியமே தர்மம் என தர்ம தத்துவம் உணர்ந்த பெரியோர் சொல்லுகின்றனர். மூன்று வகையாலும் குருவாயுள்ள எனது தாயே எமக்குப் பரம குரு” என்கிறார் தர்மர்.

இதுவே தர்ம ரஹஸ்யம்.

இதைக் கேட்ட வியாஸர், “இதுவே விஹித தர்மமாம். யாதொரு காரணத்தினால் இதுவே சனாதனமோ, தர்ம புத்திரர் எப்படிச் சொல்கின்றாரோ அப்படியே தர்மம் உள்ளது. இதில் சந்தேகமில்லை.”

என்று உறுதிபடக் கூறுகிறார்.

இப்படிப்பட்ட இதிஹாஸ நிகழ்ச்சிகளினாலேயே, முரண்பாடு உள்ளது போலத் தோன்றும் நிகழ்வுகளில், உள்ளே புதைந்திருக்கும் தர்ம ரகசியங்களை அறிய முடிகிறது.

இதையே முன்னோர் விளக்கமாக இப்படிக் கூறியுள்ளனர்:

“இதிஹாஸ புராணங்களால் வேதத்தின் அர்த்தம் விளங்கச் செய்யப்பட்டுள்ளது”.

இனி, ஐவருடன் சேர்ந்து வாழ திரௌபதி பல நிபந்தனைகளை விதித்தாள். இதனால் கதையில் பல நிகழ்வுகள் ஏற்பட்டன. அதை மஹாபாரதத்தில் படித்து பிரமிக்கலாம்.

இனி விதண்டாவாதிகளுக்கு ஒரே பதில் தான்:

“ஐவர் ஒருத்தியை மணந்த போது நாங்கள் விதண்டாவாதிகள் ஐவரும் ஒருத்தியை மணக்கப்போகிறோம். இதில் என்ன தப்பு?” என்று கேட்டால் பதில் இது தான்: “ நீங்கள் ஐவரும் தர்மர், பீமன், அர்ஜுனன், நகுல, சகாதேவன் போன்றவர்களைப் போன்ற வீரமும் இதர குணாதிசயங்களுக் கொண்டவர்கள் என்றால், நீங்கள் மணக்கத் துடிக்கும் பெண்ணும் யாக அக்கினியில் திரௌபதியைப் போல நெருப்பிலே உதித்தவள் என்றால், உங்கள் ஐவரின் அன்னை, அதற்குச் சம்மதித்தால் அப்படியே செய்யலாம்” என்பதே.

கிரிமினலான புத்தி தரும் விதண்டாவாதம் எப்போதும் தோற்கும்! தர்மமே வெல்லும்.

***

tags- திரவுபதி , பஞ்சபாண்டவர்

Hollywood and Bollywood Directors follow Valmiki Maharishi (Post.11,701)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,701

Date uploaded in London – –  22 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Poet Valmiki’s Ramayana is considered Aadhi Kavya; it means the oldest Kavya and Original one. He did not copy any one. It is in beautiful but simple Sanskrit. His one sloka/ couplet in Kishkindaa Kaanda, Fourth Chapter in his Ramayana, shows how clever he is and how he visualises scenes like a film director.

Hindus are banned from showing death scene on stages. Bharata’s Natya Shastra bans all inauspicious things on stage and says death can be hinted by someone crying for the loss of near and dear one. So Indian film directors showed only an oil lamp going off to mean some one is dead. In the same way, Indian censor board don’t allow rape scenes in films. So the film directors show a crushed rose flower or  a withering flower to indicate that someone lost her virginity.

Steven Spielberg showed us the water in the bowl sending ripples with bang, bang noises in the background and then showed us the huge dinosaurs in his 1993 Jurassic Park film. All these people followed the great poet Valmiki.

Before going into his sloka, I would like to tell one more thing about Hindu Shakuna Shastra; it is the book about good and bad omens. One of the omens is twitching eyes or throbbing eyes. If the left eye throbs it is good for women and bad for men.

Here is the scene in Kishkinda kanda of Valmiki Ramyana. Hanuman, minister of Monkey king Sugreeva ,introduced his king Sugreeva to Rama and requested a friendship agreement. Rama agreed to it because Sugreeva was also in same condition like Rama. Like Rama’s wife Sita was abducted by demon king Ravana, Sugreeva’s wife was abducted by his brother Vali.

When the Friendship Treaty was finalised in front of Fire , three left eyes throbbed, says Valmiki. Sita’s, Vali’s and Ravana’s left eyes twitched at the same time. It portends the death of Ravana and vali and release of Sita from Ravana’s Lanka. Because left eye throbbing is good for women.

Had it been our film directors they would have shown all the three people on the same screen and got the appreciation of one and all. But they will never tell anyone where from they stole the idea.

Here is the famous sloka/ couplet:

सीता कपीन्द्रक्षणदाचराणां

राजीवहेमज्वलनोपमानि।

सुग्रीवरामप्रणयप्रसङ्गे

वामानि नेत्राणि समं स्फुरन्ति4.5.32।।

सुग्रीवरामप्रणयप्रसङ्गे while Sugriva and Rama were making a friendly alliance, सीताकपीन्द्रक्षणदाचराणाम् Sita’s, Vali’s and also Ravana’s, राजीवहेमज्वलनोपमानि lotuslike and blazing like gold, वामानिनेत्राणि left eyes, समम् equally, स्फुरन्ति throbbed.

While Sugriva was making a friendly alliance with Rama, Sita’s left eye, like lotus, Vali’s left eye glittering like gold and Ravana’s left eye blazing (like fire) twitched at the same time for a moment (Twitching of left eye is considered auspicious to a woman and ominous to a man).

Xxxx

Throbbing Eye or Eye Twitching

Four years ago I wrote an article here,s howing how Sangam Tamil poets also copied  Kalidasa and Valmiki in this matter. The belief is same from Kashmir to Kanyakumari  in India. Though Greeks, Shakespeare and Jonathan swift also talked about eye ‘itching ‘and the bad bad news that followed. they were slightly different in this matter because hey did not say ‘twitching’ . But Sangam Tamil poets approached it in the same way as their counter parts in the North.

Here is the link for my old article:

eye twitching | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › eye-twitching

14 Oct 2018 — In Other places Kalidasa shows that the throbbing or twitching of right shoulder or right eye is good for men (Raghu vamsa 6-68, …

–subham—

Eye, twitching, throbbing, bad omen, Valmiki, film directors, Bollywood

வால்மீகி முனிவர் BOLLYWOOD பாலிவுட் திரைப்பட டைரக்டரா ? (Post No.11,700)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,700

Date uploaded in London – –  22 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கண்துடிப்பு (Twitching eye, throbbing eye) சாஸ்திரம் பற்றி உலகெங்கிலும் நம்பிக்கை இருக்கிறது. கிரேக்க அறிஞர், ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், கதாசிரியர் ஜொனதான் ஸ்விப்ட் (Shakespeare and Jonathan Swift) ஆகியோர் சொன்னதை என்னுடைய 2018-ம் ஆண்டுக்  கட்டுரையில் சொன்னேன். அத்தோடு சங்கப்  புலவர் கபிலன், அவருக்கு முந்தைய காளிதாசன் ஆகியோர் சொன்னதையும் எழுதினேன்.

ஆனால் இவர்களையெல்லாம் தோற்கடித்து விடுகிறார் வால்மீகி முனிவர்;

அவரிடமிருந்துதான் (Bollywood, Hollywood ) பாலிவுட், ஹாலிவுட் டைரக்டர்கள் எல்லாம் சில உத்திகளைக் கற்றார்கள் போலும்.

மனிதர்கள் இறந்து போகும் காட்சிகளை மேடையில் காட்டக்கூடாது என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனிவர் (Natya Shastra by Bharata Muni) சம்ஸ்க்ருத நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறார். அதை ஒருவர் அழுகை, ஓலமிடுதல் மூலமே குறிப்பால் உணர்த்தலாம்.  தமிழ் சினிமா டைரக்டர்கள் இதே செய்தியை ஒரு விளக்கு அணைவது மூலம் காட்டினார்கள் . அதேபோல ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட காட்சியைக் காட்டாமல் ரோஜா மலர் கசங்கி அழிவதையோ வாடி வதங்கி விழுவதையோ காட்டினார்கள்.

1993-ம் ஆண்டில் ஜுராஸ்ஸிக் பார்க் திரைப்படம் எடுத்து டைனோசர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய (Jurassic Park  directed by Steven Spielberg) ஸ்டீவன் ஸ்பீல்பர்க் என்ன செய்தார்? முதலில் டைனோசர் என்னும் ராட்சத மிருகங்களைக் காட்டாமல், பிரமாண்டமான சப்தத்தையும் அப்போது மேஜை மீதிருந்த கண்ணடிக் கோப்பையில் தண்ணீர் சலசலப்பதையும் காட்டினார். இவர்களுக்கு எல்லாம் கற்றுக்கொடுத்தவர் வால்மீகி முனிவர். கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகத்தை நமக்கு அளிக்கிறார்.

மூன்று கண் துடிப்புகள் 

ராமனும் சுக்ரீவனும் நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்டபோது மூன்று பேரின் கண்கள் ஒரே நேரத்தில் துடித்ததாம்.

வாலி, ராவணன், சீதாதேவி ஆகிய மூன்று பேரின் இடது கண்களும் துடித்தன என்று ஸ்லோகம் செய்து இருக்கிறார். பெண்களுக்கு இடது கண்ணும், ஆண்களுக்கு வலது கண்ணும் துடித்தால் நல்ல சகுனம்; ஆனால் இங்கே மூன்று பேர்களுக்கும்  இடது கண் துடிப்பதை அவர் அப்படியே மனக் கண்களில் பார்த்து பாடல் செய்கிறார். இதன் மூலம் ராவணன், வாலி ஆகியோரின் மரணத்தையும் சீதைக்கு விடிவு காலம் வந்து விட்டது என்ற செய்தியையும் அழகுபட மொழிகிறார்.

இதோ அந்த ஸ்லோகம் ,

सीता कपीन्द्रक्षणदाचराणां

राजीवहेमज्वलनोपमानि।

सुग्रीवरामप्रणयप्रसङ्गे

वामानि नेत्राणि समं स्फुरन्ति4.5.32

ஸீதா கபீந்த்ர க்ஷண தாசராணாம்

ராஜீவ ஹேமஜ்வல நோபமாநி

ஸுக்ரீவ ராமப்ரணய ப்ரஸங்கே

வாமானி நேத்ராணி ஸமம் ஸ்புரந்தி

——–கிஷ்கிந்தா காண்டம் , ஐந்தாம் சர்க்கம்  வால்மீகி ராமாயணம்

பொருள்

சுக்ரீவனும் ராமனும் தோழமை கொண்டபொழுது தாமரை மலர்போன்ற  ஸீதையின் இடது கண்ணும்  , தங்க நிறமுள்ள வாலியின்  இடது கண்ணும், நெருப்பைப் போன்ற ராவணனின் இடது கண்ணும் ஒரே சமயத்தில் துடித்தன. .

என்ன அற்புதமான வருணனை ; நம்மூர் திரைப்பட டைரக்டர்கள் உடனே மூவரையும் மியூசிக் ஸஹிதம் மாற்றி, மாற்றி காண்பித்திருப்பார்கள். உடனே பத்திரிகை விமர்சனங்களும் அடடா! அடடா! அற்புதம்! என்று அந்த டைரக்டரைப் புகழ்ந்து தள்ளி இருப்பார்கள்; இந்த ஐடியாவை எங்கிருந்து திருடினார் என்பதை டைரக்டரும் சொல்லமாட்டார்!!!!!!

XXXX

MY OLD RTICLE

கண் துடிப்பது நல்லதா – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

·

14 Oct 2018 — காளிதாஸன், கபிலன், ஷேக்ஸ்பியர் செப்புவது என்ன? கண் துடிப்பதற்கு டாக்டர்கள் …

—-subham—

Tags–ஹாலிவுட் , பாலிவுட்,  வால்மீகி , கண்துடிப்பு , இடது, வலது

English தமிழ் Tamil हिन्दी Hindi Words for Important Food Items -4 (Post No.11,699 )

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,699

Date uploaded in London – –  22 JANUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

FOURTH (FINAL )PART

RICE

Chaaval चावल , धान paddy, rice, मूंजी

Arisi, soru அரிசி, சோறு

Xxx

Rice flakes

Chivdaa चावल के दाने

chaaval ke daane, चावल के गुच्छे

POHAA போஹா पोहा Poha (चिवड़ा)

Aval அவல்

Xxx

Ridge gourd

तोरई toree

Peerkakng kaay பீர்க்கங்காய்

Xxx

Saffron

Kesarकेसर

Kunkuma puu குங்குமப்பூ

Xxx

Sago

Saabu dhaanaaसाबूदाना

Javvarisi ஜவ்வரிசி

Xxx

Echinochloa Frumentacea, Panicum Miliare, Panicum miliare

Saavan  सावन Kutki

Saamai சாமை

Xxx

Sappota

Chiku · चिक्कू ·

Sappottaa சப்போட்டா பழம்

Xxxx

Sesame, see til

Sesame, gingelly oil

Naala ennei நல்ல எண்ணெய்

Xxx

Snake gourd

 चिचिण्डा chichinda

Pudalang kaay புடலங்காய்

चचेंडा

चिचिंडा

snake gourd, trichosanthes anguina

Xxx

Soya beans

Soyaa beans सोया सेम

Soyaa mochai சோயா மொச்சை

Xxx

Spinach

Paalak पालक

Pasalaik keerai பசலிக் கீரை

Xxx

Suji

Suji सूजी

Ravai ரவை

Xxx

Turkey Berry -Solanum torvum

bhankatiya , Bhukat in  Hindi

Sundaik kaay சுண்டைக்காய்

Xxx

Sweet potato

 शकरकंद  shakarakand

Sarkkarai vallik kizangu சர்க்கரை வள்ளிக்கிழங்கு

Xxx

Tapioca

साबूदाना(m) saabudhaanaa

कसावा(m) kasaavaa

टैपिओका topiyokaaa

Maravallik kizangu  மர வள்ளிக்கிழங்கு

Xxx

Tamarind

Imliइमली

imalee

Puli புளி

Xxx

Tomato

Tamaatarटमाटर

tamaatar

Thakkaali தக்காளி

Xxx

Turmeric

Haldi हल्दी

haldee

Manjal மஞ்சள்

Xxx

Turnip

शलजम  shalajam

Tarnip டர்னிப்

Xxx

Thymol seeds

Ajowanअजवायन (Thyme)

Omam ஓமம்

Xxx

Foxtail  millet Varagu

Koden कोडो , कोदो

Varagu வரகு

Xxx

Vermicelli

Semiyaaसेवई

sevee

Semiyaa சேமியா

Xxx

Wheat

Gehoom गेहूं

gehoon

Gothumai கோதுமை

Xxx

Wood apple

Bel  बेल

bel

Vilaam pazam விளாம்பழம்

Xxxx

Cheese

Panneer पनीर

paneer

Paalaadai katti சீஸ் , பாலாடைக்கட்டி

Xxx

Cumin  seeds

Jeera जीरा

Seerakam ஜீரகம் , சீரகம்

Xxx

Milk

Dhooth दूध

doodh

Paal பால்

Xxx

Sweet

Mitaayi मिठाई

Inippu இனிப்பு

Xxx

Savouries

Chevdaa Marathi चिवडा (civḍā), Gujarati ચેવડો (cevḍo).

Mixture பாம்பே மிக்ச்சர்

Xxx

Roti, chappathi

Rottiरो टी    चपाती

chapaatee

rotee ரொட்டி/ ரோட்டி  , சப்பாத்தி 

— SUBHAM— 

TAGS- English ,தமிழ், Tamil ,हिन्दी ,Hindi ,Words , Important Food Items -4