மதுரையில் வடக்குமாசி வீதி யாதாவா ஸ்கூலில் (யாதவர் ஆரம்பப்பள்ளி) 65 ஆண்டுகளுக்கு முன்னர் படித்தபோது நண்பன் சுடலைமுத்துவுடன் அடிக்கடி ‘டூ’ விடுவேன். பின்னர் ‘சேத்தி’ விடுவேன்
ஏன் இன்று சுடலைமுத்து வரவில்லை? என்று அம்மா கேட்பாள்; அவனுடன் ‘டூ’ என்பேன் .
எனக்குத் தெரியாமல் அம்மா, அந்தப்பக்கம் பார்த்துச் சிரித்து இருப்பார் என்பது இப்போது தெரிகிறது.
நீங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா ? எத்தனை மாணவ மாணவிகளுடன் டூ போட்டுவிட்டு மறு நாளே சேர்ந்திருப்பீர்கள் ?
இப்படிச் செய்ததால்தான் 65 ஆண்டுக்குப் பின்னரும் சுடலைமுத்துவை எனக்கு ஞாபகம் இருக்கிறது.
இப்போது எதற்கு இந்த சுய புராணம் என்று வியாக்காதீர்கள். சேத்தி என்பது தமிழ்ச் சொல் என்பது விளங்குகிறது. ‘டூ’ தமிழ்ச் சொல்லா என்பதே இன்றைய ஆராய்ச்சி.
டூ என்றால் என்ன?
ஆள்காட்டி விரல் அல்லது சுட்டு விரலையும் நடுவிரலையம் சேர்த்து வில் போல வளைத்து நம் தற்காலிக எதிரியிடம், அதாவது பிடிக்காமற் போய்விட்ட நண்பனிடம் உன் கூட சேரமாட்டேன் போ! என்று சொல்வதாகும்.
கணவன்- மனைவி ஊடல் போல மறுநாளே நட்பு மலர்ந்தவுடன் சேத்தி என்று நடு விரல் இரண்டையும் மடித்துக்கொண்டு (மற்ற இரண்டு விரல்களும் நேராக நிற்க) காட்டுவேன் .
சில இடங்களில் காயா ? பழமா? என்பதை டூ , சேத்தி என்பதற்குப் பயன்படுத்துகின்றனர் .
இதில் சேத்தி , அதாவது இருவரும் சேர்ந்துவிடுவோம், அல்லது நான் உன்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளுவேன் என்பது தமிழ்ச் சொல் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
டூ என்பது பற்றி ஊகிப்போம்.!
ஆள்காட்டி விரல் அல்லது சுட்டு விரல் என்பது எதிரே உள்ள ஆளைக்குறிக்கிறது . நடு விரல் நம்மைக்குறிக்கிறது போலும் ! இரண்டையும் சேர்த்துப் பிரித்துவிடும் போது இனி நாம் நண்பர்கள் இல்லை என்று சொல்லி விடுகிறோம்.
இப்படி யூகிப்பதுசரியா?
மறு நாள் , அதே நண்பனைச் சேர்த்துக்கொள்ளும்போது ஆள்காட்டி (சுட்டு) விரலையும் சுண்டு விரலையும் அவனை நோக்கிக் காட்டுவது ஏன் ?
இதற்கு அறிவுபூர்வ விளக்கமே கிடைக்காது போலும்.
ஆயினும் இரண்டு விரல்கள் இருவரைக் குறிப்பது விளங்குகிறது .
பேச்சு வழக்கு இந்தியில் (TU IN HINDI) தூ என்றால் நீ. ஆனால் நாம் தமிழில் உண்டாக்கும் சப்தமோ ஆங்கில மொழி DO டூ (செய் என்ற வினைச் சொல்). ஆகையால் அதிலும் எந்தத் தொடர்பும் இல்லை
எவ்வளவு ஆராய்ச்சி செய்த்தாலும் விடை கிடைக்காத சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. ஆங்கிலத்தில் நாய் என்பதை DOG டாக் என்று சொல்லுகிறோம். இதற்கு மூலமே இன்று வரை தெரியவில்லை.
தொல்காப்பியர் , பொறாமை என்பதற்கு நிம்பிரி என்ற தமிழ்ச் (?????) சொல்லைப் பயன்படுத்துகிறார். இது உலகில் வேறு எங்கும் காணப்படவில்லை! சம்ஸ்க்ருத வேர்ச் சொல்லும் அல்ல!.
DOG/டாக், நிம்பிரி, டூ பற்றி நீங்களும் ஆராயுங்கள்; விடை கிடைத்தால் பகிருங்கள் .
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநாவலூர் அருகில் உள்ள பரிக்கல் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயில் இருக்கிறது . 22-2-2023 அன்று கும்பகோண வட்டார கோவில்கள் தரிசனத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்புகையில் பரிக்கல்லுக்குச் சென்றோம். ஆனால் சிறிது ஏமாற்றம். நாலு ஆண்டுகளாக நடைபெறும் திருப்பணி வேலைகள் ஆமை வேகத்தில் அல்லது நத்தை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆகையால் மூலவரை தரிசிக்கமுடியாதபடி பக்கத்துக் கொட்டகையிலுள்ள உற்சவரைத் தரிசித்தோம் , கடந்த நான்கு வருடங்களாக அருள்மிகு நரசிங்கப்பெருமாள் பாலாலயம் செய்து கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது.
நான்கு வருடங்களாக மூலவர் சன்னதி மூடப்பட்டது உள்ளது பற்றி இந்துக்கள் குரல்கொடுத்து வருகின்றனர். பழைய அரசு போய், புதிய அரசும் வந்துவிட்டது. திருப்பணிக்குத் தடை ‘மனமா, பணமா’ என்று தெரியவில்லை.
XXX
நரசிம்மர் மஹிமை
இந்தக் கோவில் ஆயிரம் ஆண்டுப் பழமை உடையது. மத்வ பீடத்தைச் சேர்ந்த வியாசராஜ சுவாமிகள் 738 இடங்களில் ஆஞ்சனேயர் கோவில் அமைக்க எண்ணி இந்தக் கிராமத்தையும் தேர்ந்தெடுத்தார் . ஆனால் பல தடைகள் ஏற்பட்டன. பின்னர், வசந்த ராஜா என்பவர் கோவில் கட்ட முற்பட்டபோதும் தடைகள் ஏற்பட்டதாம். அதற்குப்பின்னர் கனகவல்லி சமேத லட்சுமி நரசிம்ம மூர்த்தி ஸ்தாபிக்கப்பட்டது. தாயாரை அணைத்தவண்ணம் பெருமாள் இருப்பதால், நரசிம்மனின் உக்கிரம் தணிந்து , அருள் சுரக்கும் கோவில் இது .
இங்கு வருவோருக்குப் பதவி உயர்வு கிடைக்கும், திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் மன நோயால் பாதிக்கப்பட்டோரின் நோயும் நீங்கும்.
திரை போட்டிருந்ததால், நாங்கள் வரிசையில் நின்று காத்திருந்தோம். மன நோயால் பாதிக்கப்பட்ட ஒரு TEEN AGE BOY டீன் ஏஜ் பையனை அவனது தந்தை அழைத்து வந்திருந்தார். அவன் ஆடிக்கொண்டும் சப்தம் போட்டுக்கொண்டும் இருந்தான். கோவிலுக்குப் பலரும் எண்ணெயும் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
இங்கு மூலவருடன் ஆஞ்சனேயரும் உள்ளார். நாங்கள் மூலவரைப் பார்க்க முடியவில்லை. கொட்டகைக்கு வெளியே கல்லும் மண்ணும் நிறைந்து இருந்ததால் யாரும் செல்ல முடியவில்லை.
விரைவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை.
XXX
கிராம மக்கள் திரித்த ஊர்ப்பெயர் !
PRAHLADA, DEMON’S SON = PARAKALA= PARIKKAL
இரு முறை கோவில் கட்டுவதில் தடை ஏற்பட்டதற்கு பரகால என்ற அசுரனே காரணம் என்றும் அதனால் அவன் வேண்டிக்கொள்ள, ஊர்ப்பெயரை பெருமாள் பரகால என்றிருக்க அனுமத்தித்ததாகவும் தவறாக கதை கட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் நரசிம்மர் அழித்தது ஹிரண்ய கசிபு என்ற அசுரனை. அவர் அப்படிச் செய்ததற்கு காரணம். நாராயணன் பெயரை சொல்லிக்கொண்டிருந்த பிரஹ்லாதனைக் காப்பாற்றுவதற்காக என்பது எல்லோரும் அறிந்த கதை .
பிரஹலாதன் பெயர் மருவி பரகால என்றும் பரிக்கல் என்றும் மருவியது என்பதே பொருத்தம்!!
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று நரசிம்மரை நமக்குக் காட்டிய பிரஹலாதன் பெயரை கிராம மக்கள் தெளிவாக எழுதி ஒட்டவேண்டும் . பரகால அரக்கன் அல்ல; பக்தன்; அதாவது பிரகலாதன்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்!
ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து எழுவார்களா? – 2
ச. நாகராஜன்
முகமது நபியைத் தெரியாமல் தவறாகச் சித்தரித்து விட்டு ஒரு சின்ன செய்தியோ அல்லது ஏதாவது படமோ வந்தால் போதும், ஊரெல்லாம் கலாட்டா, ரத்த ஆறு ஓடும்.
இதை அரசு கவனிக்கவே கவனிக்காது; கண்டிக்காது.
ஆனால் அதே சமயம் ஹிந்துக் கடவுளை ஆபாசமாகச் சித்தரித்து லயோலா காலேஜ் உள்ளிட்ட இடங்களில் கண்காட்சி நடைபெறலாம்.
அதைக் கண்டித்து ஓவென்று கத்திய பின்னரே அரசு காதில் அப்படிப்பட்ட கண்காட்சி பற்றிய செய்தி சென்று சேரும்.
சரஸ்வதியை ஆபாசமாகச் சித்தரித்து ஓவியம் வந்தால் அது ஓவியரின் கருத்துச் சுதந்திரமாம்.
ஆனால் ஹிந்து பத்திரிகையில் நபிகள் நாயகம் பற்றிய செய்தி தெரியாமல் வந்த போது கூட கல்லெறி, கலாட்டா, நிர்வாகம் மன்னிப்புக் கேட்க, அரசு ஓடி வர … அப்படி ஒரு ஆர்ப்பாட்டம்.
ஏன் என்று கேளுங்கள்,
செகுலரிஸம் என்று பதில் வரும்.
ஒரு முஸ்லீம் கும்பல் ஹாஜ் க்வாஜியில் ஒரு கோவிலை இடித்துத் தள்ளியது. ஆனால் உடனே அங்கு இஸ்லாமிய நண்பர்கள் அங்குள்ளோருக்கு எப்படி உணவை வழங்குகிறார்கள் என அவசரம் அவசரமாக ஒரு போடோ ஷூட் எடுத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
அங்குள்ள சிலை மீது சிறு நீர் கழித்து விட்டு உடைத்து விட்டு ஒரு ‘நல்ல’ வீடியோவும் வெளியிடப்பட்டது.
ஹிந்து வாலிபன் ஒருவன் ஆசை வயப்பட்டு ஒரு இஸ்லாமியப் பெண்ணை மணம் செய்து கொண்டால் அவன் நிச்சயமாக மதம் மாறி இஸ்லாமியராக ஆக வேண்டும்.
ஒரு ஹிந்துப் பெண்ணை இஸ்லாமியர் ஒருவர் மணம் புரிந்து கொண்டால் அந்தப் பெண்மணி மதம் மாற வேண்டும். இல்லையேல் சித்திரவதை தான்.
ராஹுல் ரஜ்புட் கேஸ் (Rahul Rajput Case) தான் முதல் கேஸ் என்றில்லை.
இதனால் ஒவ்வொரு இஸ்லாமியரும் தவறானவர் என்று அர்த்தமில்லை.
கள்ளம்கபடற்ற, அனைவருக்கும் மதிப்பு தரும் நாட்டை நேசிக்கும், மற்றவரையும் சமமாகக் கருதும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் அன்றும் இன்றும் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
ஆனால் கள நிலவரத்தை எடுத்துக் கொண்டால் எண்ணிக்கையில் குறைந்த சில நபர்கள் மத ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீரழிக்கப் பார்க்கிறார்கள் என்பது தான் உண்மையாக இருக்கிறது.
கண் மூடிய குருடர்களாக ஹிந்துக்கள் இருக்கக் கூடாது; அதே சமயம் அற்புதமான நல்லிணக்கத்தை மனதில் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களும் ஹிந்துக்களுக்கு எதிரான செயல்கள் இழைக்கப்படும் போது கண்ணை மூடிக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது.
அஹிம்ஸா பரமோ தர்ம: என்பது பாதி ஸ்லோகம் தரும் உண்மை தான்; அதற்கடுத்த பாதி தான் முக்கியம்.
தர்ம ஹிம்ஸா ததைவ ச|
தர்மத்திற்கு தீங்கு பயப்பதும் பிரம்மாண்டமான ஹிம்சை ஆகும்.
அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து இணைய வேண்டும்;
நல்ல இஸ்லாமியர்களும் ஒன்று கூடி இணைந்து பரஸ்பர நல்லிணக்கம், மதிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றை உலகம் போற்றும் விதத்தில் உயர ஏற்ற வேண்டும்.
நன்றி & ஆதாரம் : ட்ரூத் வார இதழ் கட்டுரை – The Burden of ‘Secularism’.
Truth Weekly Kolkata Volume 88 Isssue 32 date 26-2-2021
Last month we saw 31 Divine sayings of Sri Ramana; April 2023 calendar covers more quotations from Sri Ramana Maharishi Talks and writings:
April 2023 Good Thoughts Calendar
Festival Days- April 4- Mahavir Jayanti, 5- Panguni Utsava, 7-Good Friday, 9- Easter Sunday, 14-Tamil New Year’s Day, 22-Ramzan, 23- Akshaya Trtyai, 25- Adi Shankara Jayanti
Full Moon Day -5; New Moon Day – 19; Ekadasi Fasting Days – 1,16
Auspicious Days- 10,23, 26, 27
xxx
April 1 Saturday
Give up regarding yourself as this despicable body and realise your Real Nature which is one of Eternal Bliss.
xxx
April 2 Sunday
Seeking to thyself while still anxious about the welfare of the body, s like attempting to cross a stream with the aid of a crocodile for a raft.
xxxx
April 3 Monday
The Puranas speak of Arunachala Hill as being hollow with cities and streets inside it. I have also seen such things in vision.
xxx
April 4 Tuesday
The books speak of the heart as a cavity. But penetration into it proves it to be an expansion of light. Similarly Arunachala Hill is one of light. The caves etc are covered up with that light
xxx
April 5 Wednesday
The Brihadaranyaka Upanishad says AHAM is the first name of God. The first letter in Sanskrit is A and the last letter Ha and Aha thus includes everything from the beginning to the end.
xxx
April 6 Thursday
Swami Ramtirtha advertised, Wanted Reformers- but reformers who will reform themselves first.
xxx
April 7 Friday
No two persons in the world can be alike or can act alike. External differences are bound to persist, however hard we may try to eliminate them. The only solution is for each man to realise his True Nature.
xxx
April 8 Saturday
All the people after writing long treatises on the indestructability of their bodies, after giving medical and yogic recipes to perfect the body and keep it alive for ever, pass away one day.
xxx
April 9 Sunday
The Yogi may be definitely aiming at rousing the Kundalini (the Serpent Power) and sending it up the Sushumna (Yogic nerve). The Jnani may not have this as His object, but both achieve the same result, that of sending he life forceup the Sushumna and severing the chit jada granthi( the knot binding the sentinent and the inert).
xxx
April 10 Monday
Kundalini is another name for Self or Atma or Sakti. We talk of it as being inside the body because we conceive ourselves as limited to the body. But it is in reality inside and outside being no other than the Self or Sakti.
xxx
April 11 Tuesday
He whose mind is not attached to any desires, does no action in reality, though his body may act. He is like one who hears a story with his mind elsewhere.
xxx
April 12 Wednesday
The man whose mind is full of desires is really acting though his body may be actionless. A man may be sleeping here with his body inert and yet he may be climbing and falling from them in dream at the same time.
xxxx
April 13 Thursday
The non action of the sage is really unceasing activity. His stillness is like the apparent stillness of a very fast rotating top. Its speed cannot be followed by the eye and so it appears to be still. This must be explained , as people generally mistake the stillness of the sage for inertness.
xxxx
April 14 Friday
The Jnani does not think He is the body. He does not even see the body. He sees only the Self in the body. If the body is not there, but only the Self, the question of its disappearing in any form does not arise.
xxx
April 15 Saturday
The statement that the Jnani retains Prarabdha while free from Sanchita and Agamya karmas is only a formal answer to the questions of the ignorant. Of several wivws none escapes widowhood when the husband dies; even so when the doer goes, all three Karmas vanish
xxx
April 16 Sunday
Everything is predetermined. But a man is always free not to identify himself with the body, and not to be affected by the pains or pleasures consequent on the body’s activities.
xxx
April 17 Monday
Giving up activities means giving up attachment to activities or the fruits thereof giving up the notion I am the doer. The activities the body is destined to to perform will have to be gone through. There is no question of giving up such activities, whether one likes it or not.
xxx
April 18 Tuesday
Ishta Devata (Deity of one’s choice)and Guru are aids, very powerful aids on this path. But for an aid to be effective requires your effort also.Your effort is sine quo non. It is you who should see the sun. Can spectacles and sun see for you?
xxxx
April 19 Wednesday
Seeing God in any form and speaking to Him is as real as your own entity. In other words when you identify yourself with the body in the waking state, you see gross objects, in dream subtle objects, dreamless sleep nothing. The objects seen bear a relation to the state of the seer.
xxx
April 20 Thursday
By long practice, the figure of God as meditated upon appears in dream, and may later appear even in the waking state.
xxxx
April 21 Friday
There was a saint by the name Namdev. He could see, talk and play with Vithoba, the God of Pandharpur. God had to teach himthat was not enough, and one must press on further and realise the Self, where seer and seen are one.
xxx
April 22 Saturday
Thee thought I am the body is ignorance. That the body is not apart from the Self is knowledge.
xxx
April 23 Sunday
The moral behind the story of Ashtavakra and Janaka is simply this: The disciple himself surrenders to the Master. That means there is no vestige of individuality retained by the disciple. If the surrender is complete, all sense of individuality is lost and there is no cause for misery. The Eternal Self is only happiness and that is revealed.
xxx
April 24 Monday
The more we control thought, activity and food, the more we will be able to control sleep.. but moderation ought to be the rule for the Sadhak (aspirant)
xxx
April 25 Tuesday
As explained in the Gita, sleep is the first obstacle for all Sadhakas
xxx
April 26 Wednesday
The second obstacle is asid to be Vikshepa, or the sense of the world which divert one’s attention .
xxx
April 27 Thursday
The third is aid to be Kashaya or thoughts about previous experiences with sense objects
xxx
April 28 Friday
The fourth Ananda (bliss) is also called an obstacle, because in that state a feeling of separation from the source of Ananda, making the enjoyer say, I am enjoying Ananda is persistent. Even this has to be surmounted.
xxx
April 29 Saturday
And the final stage of Samadhana or Samadhi has to be reached, where one becomes Ananda or one with the Reality and the duality of enjoyer and enjoyment ceases in the ocean of Satchidananda or the Self.
Sat Chit Ananda= existence- Consciousness- Bliss
xxx
April 30 Sunday
Our real nature is Mukti. But we imagine that we are bound and are naking strenuous attempts to become free., while we are all the time free. That will be only understood that we reach that state. We will be surprised that we were frantically tying to attain something which we have always been and are.
-source book : Gems from Bhagavan, selected by A Devaraja Mudaliyar, Sri Ramanshramam, Tiruvamnnamalai.
A good book with more stories, anecdotes and imageries. One must buy it to understand Ramana better.
—subham—-tags- Ramana Maharishi, April 2023 Calendar, Golden sayings, Guru, Samadhi, Sleep, Dhyana, Obstacles
பண்டிகை நாட்கள்- ஏப்ரல் 4- மஹாவீர் ஜயந்தி , 5- பங்குனி உத்திரம் , 7-புனித வெள்ளி 9- ஈஸ்டர் , 14-தமிழ் புத்தாண்டு தினம் , 22-ரம்ஜான் , 23- அக்ஷய திருதியை , 25- ஆதி சங்கர ஜயந்தி
பெளர்ணமி -5; அமாவாசை – 19; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 1,16
சுப முகூர்த்த தினங்கள் – ஏப்ரல் 10,23, 26, 27
சென்ற மாத காலண்டரில் 31 ரமணர் பொன்மொழிகளைக் கண்டோம்; இதோ ரமண மஹரிஷியின் மேலும் 30 தெய்வீக அருள்மொழிகள்:
Xxx
ரமணரின் அருள் வாக்குகள்
ஏப்ரல் 1 சனிக் கிழமை
மனத்தை உள்நோக்கிச் செலுத்துவது என்பது பயிற்சியினாலும் வைராக்கியத்தினாலும் கிட்டும் . அது படிப்படியாக வெற்றி தரும்.
xxx
ஏப்ரல் 2 ஞாயிற்றுக் கிழமை
என்னால் மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை என்ற எண்ணமே ஒரு தடைதான்.அந்த எண்ணம் ஏன் எழவேண்டும்?
Xxx
ஏப்ரல் 3 திங்கட் கிழமை
தன்னை உணர தெய்வீக அருள் கட்டாயம் தேவை. உண்மையான பக்தனுக்கு அல்லது யோகிக்கு மட்டுமே அருள் கிட்டும் . விடுதலைப் பாதையில் கடுமையாக உழைப்பவர்க்கே அது தரப்படுகிறது .
xxx
ஏப்ரல் 4 செவ்வாய்க் கிழமை
அருள் எப்போதும் உண்டு; ஆனால் பயிற்சியும் அவசியம். முயற்சி செய்து ஆன்மாவில் நிலைத்தல் என்பது , அடங்காது திரியும் காளைமாட்டைப் புல்லைக்காட்டித் தறியில் கட்டிவைப்பது போன்றது.
xxx
ஏப்ரல் 5 புதன் கிழமை
நாம் முயற்சி செய்யவும் வேண்டும்.குருவின் உதவியும் நமக்குக் கட்டாயம் தேவை
xxx
ஏப்ரல் 6 வியாழக் கிழமை
சிலர் வந்தவுடனேயே ஞானியாக நினைக்கின்றனர்.. அதற்கான முயற்சியை அவர்கள் ஒதுக்கிவிடுகின்றனர்.
xxx
ஏப்ரல் 7 வெள்ளிக் கிழமை
மோக்ஷத்திற்குக் குறுக்கு வழி உண்டா என்ன? அது என்ன கடையில் விலைக்கு வாங்கக் கூடிய பொருளா ?
xxx
ஏப்ரல் 8 சனிக் கிழமை
தியானிக்கும்போது தூக்கம் வருகிறது என்கிறீர்கள்.தூங்க ஆரம்பித்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.ஆனால் விழித்து இருக்கும்போது எல்லா எண்ணங்களிலிருந்தும் விலகியிருக்க முயற்சி செய்யுங்கள் .
xxx
ஏப்ரல் 9 ஞாயிற்றுக் கிழமை
தூங்குவதற்கு முன்னர் உள்ளநிலை தூங்கி விழித்த பின்னர் தொடரும். தூங்கத் தொடங்கும்போது எங்கே விட்டீர்களோ அங்கு தொடர்வீர்கள்.
xxx
ஏப்ரல் 10 திங்கட் கிழமை
செயல்படும் எண்ணங்கள் இருக்கும் வரை தூக்கமும் உண்டு ; எண்ணமும் தூக்கமும் ஒரே பொருளின் இரு பக்கங்கள்.
xxx
ஏப்ரல் 11 செவ்வாய்க் கிழமை
நாம் அதிகமாகவும் தூங்கக்கூடாது ; தூங்காமலும் இருக்கக்கூடாது . மிதமாகத் தூங்க வேண்டும் . எண்ணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.சத்துவ குணத்தை வளர்க்கும் உணவினை அளவாக உண்ண வேண்டும். அதிகமான உடல் செய்கைகளில் ஈடுபடக்கூடாது .
xxx
ஏப்ரல் 12 புதன் கிழமை
தூக்கம்தான் முதல் தடை; இரண்டாவது நம் கவனத்தை ஈர்க்கும் உலகப் பொருட்கள்; மூன்றாவது, பழைய அனுபவங்களை பற்றிய எண்ணங்கள். நாலாவது தடை, ஆனந்தம். அந்த நிலையிலும் நான் அனுபவிக்கிறேன் என்ற எண்ணம் இருக்கும் . இறுதியில் சமாதி நிலைய அடையும்போது உண்மையான ஆனந்தத்தில் மூழ்கி விடுவோம்.
Xxx
ஏப்ரல் 13 வியாழக் கிழமை
சாதுக்களின் சத் சங்கம் கிடைத்து விட்டால் பின்னர் சமயச் சடங்குகள் எதற்கு? குளிர்ந்த தென்றல் வீசும்போது கை விசிறியால் என்ன பயன்?
Xxx
ஏப்ரல் 14 வெள்ளிக் கிழமை
குளிர்ந்த சந்திரன் வெப்பத்தைப் போக்கும். கற்பக மரம் வறுமையை நீக்கும். கங்கை நதி பாவங்களைப் போக்கும். ஆனால் ஒப்புயர்வற்ற சாதுக்கள் தரிசனத்தாலேயே இவை எல்லாம் நடக்கும்.
xxx
ஏப்ரல் 15 சனிக் கிழமை
மிதக்கும் பொருள் மூழ்க வேண்டுமானால் அதன் மீது கனமான எடையை வைக்க வேண்டும் . அது போல சாதுக்கள் சங்கம் மனத்தை இதயத்தில் ஆழ்த்திவிடும்.
xxx
ஏப்ரல் 16 ஞாயிற்றுக் கிழமை
சத் சங்கத்தால் உலகத் தொடர்புகள் நீங்கும். அதனால் மனத்திலிருந்து வாசனைகள் அழியும்.. அவை செயலற்றுப் போகும்.ஆகவே சீவன் முக்தி உண்டாகிறது .
xxx
ஏப்ரல் 17 திங்கட் கிழமை
மூர்த்திகளும் தீர்த்தங்களும் மகாத்மாக்களோடு ஒப்புமை ஆக மாட்டா . ஆ, என்ன ஆச்சரியம்! மூர்த்திகளும் தீர்த்தங்களும் பல நாட்களுக்குப் பின்னரே மனத் தூய்மையை அளிக்கின்றன.ஆனால் சாதுக்களைத் தரிசித்த உடனேயே மனது தூய்மை அடையும் .
Xxxx
ஏப்ரல் 18 செவ்வாய்க் கிழமை
குருநாதரின் சந்நிதியில் வாசனைகள் வலுவிழக்கின்றன. மனம் நிச்சலமாகிறது. சமாதி வாய்க்கிறது. ஆகவே குருவின் சந்நிதியில் சீடன், உண்மை அறிவும் சரியான அனுபவமும் பெறுகிறான். அதில் அசையாது நிற்க மேலும் முயற்சி தேவை.
xxx
ஏப்ரல் 19 புதன் கிழமை
தம்மை உணர்ந்த ஞானிகளோடு தொடர்பு கொள்ளுவதால் ஒருவர் படிப்படியாக அறியாமையை இழக்கிறார். இறுதியில் அறியாமை முற்றும் நீங்குகிறது. பின் நித்திய ஆத்மா வெளிப்படுகிறது.
xxx
ஏப்ரல் 20 வியாழக் கிழமை
நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு .அவரிடத்து, சாந்தி, மன்னிக்கும் மனப்பாங்கு, பொறுமை போன்ற நல்ல குணங்கள் அமைந்திருக்க வேண்டும் .
xxx
ஏப்ரல் 21 வெள்ளிக் கிழமை
கனவில் சிங்கத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே யானை விழித்துக்கொள்ளும். . அது போல குருவின் அருட்பார்வை மூலம், சீடன் அறியாமை என்னும் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்கிறான் .
xxx
ஏப்ரல் 22 சனிக் கிழமை
அருளின் உயர்ந்த வடிவம் மெளனம் .அதுவே மிக உயர்ந்த ஆன்மீக உபதேசம் . மற்ற எல்லா உபதேசங்களும் மெளனத்திலிருந்தே பெறப்படுகின்றன .
xxx
ஏப்ரல் 23 ஞாயிற்றுக் கிழமை
மெளன விரதம் என்பது ஒரு விரதமே. அது தியானத்திற்கு ஓரளவு உதவும். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலைபாய்வதில் என்ன பலன்?
xxx
ஏப்ரல் 24 திங்கட் கிழமை
எந்த நிலையில் நான் என்ற எண்ணம் சிறிதுகூட எழவில்லையோ அது மெளனம் என்கின்றனர் முனிவர்கள்.
xxx
ஏப்ரல் 25 செவ்வாய்க் கிழமை
மெளனமே சிறந்ததும் மிக வலிமை வாய்ந்ததுமான தீக்ஷை . தக்ஷிணாமூர்த்தி அனுஷ்டித்ததுவும் அதுவே .ஸ்பர்ச தீக்ஷை, சக்ஷு தீக்ஷைஆகியவை அதைவிடத் தரம் குறைந்தவையே .மெளன தீக்ஷை, எல்லோர் இதயங்களையும் மாற்றிவிடும் .
xxx
ஏப்ரல் 26 புதன் கிழமை
எண்ணமில்லாது இருக்கும்போது உலகப் பொதுமொழியாம் மெளனத்தால் நாம் ஒருவர் மற்றொருவரைப் புரிந்து கொள்கிறோம்.பல ஆண்டுகள் வாத்தைகளால் புரியவைக்க முடியாததை மெளனத்தின் மூலம் உடனே புரியவைக்கலாம் . இதற்கு தக்ஷிணாமூர்த்தி சிறந்த எடுத்துக்காட்டு .
xxx
ஏப்ரல் 27 வியாழக் கிழமை
மெளனமே மிக உயர்ந்ததும் மிகப் பயன் தருவதுமான மொழி.
xxx
ஏப்ரல் 28 வெள்ளிக் கிழமை
நான் செய்கிறேன் என்ற எண்ணம் இருக்கும்வரை செயலின் பயனை, அது நல்லதோ கெட்டதோ, அனுபவித்தே ஆக வேண்டும்.
சுதந்திரமும் விதியும் யாருக்கு என்று கண்டுபிடி. அவை அப்போது வெல்லப்படும்.
xxx
ஏப்ரல் 29 சனிக் கிழமை
குரு கட்டாயமாகத் தேவை. புத்தியாலும் பொறி புலன்களாலும் ஆன கட்டிலிருந்து மனிதனை விடுவிக்க குருவால் மட்டுமே முடியும் என்று உபநிஷதங்கள் உரைக்கின்றன.
xxx
ஏப்ரல் 30 ஞாயிற்றுக் கிழமை
குரு, ஆத்ம சாட்சாத்காரத்தைக் கொண்டு வருவதில்லை. மாறாக அதற்கான தடைகளை அகற்றுகிறார்.
— subham —
Tags – தூக்கம், தடைகள் , தியானம், ரமணர், பொன்மொழிகள், ஏப்ரல் 2023, காலண்டர், மெளனம், குரு , சத்சங்கம் ,ஞானி,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செகுலரிஸத்தின் பேரால் தர்ம ஹிம்ஸை செய்யப்படும் ஹிந்து மதம்!
ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்து எழுவார்களா? – 1
ச. நாகராஜன்
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
செகுலரிஸத்திற்கு பலிக் கடா ஆனவன் ஹிந்து!
செகுலரிஸம் என்றால் மதச் சார்பின்மை.
1947ஆம் ஆண்டிலிருந்து செகுலரிஸம் என்றால் ஹிந்துக்கள் மற்ற மதத்தினருக்கு அசாத்திய சலுகைகள், முன்னுரிமைகள் கொடுக்க்ப்பட வேண்டும், இதர மதங்களைப் போற்றோ போற்று என்று புகழந்து தள்ளிக் கொண்டிருப்பதோடு இருந்தால் போதாது, தங்கள் மதக் கடவுள்களை, சம்பிரதாயங்களை இழிவு படுத்தும் போது தட்டிக் கேட்கக் கூடாது, இது தான் செகுலரிஸம் என்று சொல்லப்பட்டு வருகிறது; நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது.
கோவில் நிலத்தை லயோலா கல்லூரி ஆக்கிரமித்து லீஸ் முடிந்த பின்னும் தரவில்லை.
கேட்காதே. கல்வி சொல்லித் தருகிறார்கள் ஐயா! கல்விக் கூடம் அது.
ஐயையோ, பிள்ளையார் கோவிலை இடிக்கிறார்கள் ஐயா?
“இடித்தால் என்னா, ரோடை அகலப் படுத்தப் போகிறார்கள், ஊருக்குத் தானே நன்மை!
ஐயையோ, மதுரை டவுன்ஹால்ரோடில் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தை ஆக்கிரமித்து சுற்றிலும் கடைகள் போட்டு விட்டார்கள் ஐயா!
“அதனால் என்ன? ஏழை வியாபாரிகள் வாழ வேண்டாமா என்ன?
எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்றன? அவை உங்களை வாழ்த்துமே.
“ அரசாங்க நிலம்த்தில் ஊருக்கு நடுவில் சர்ச் கட்டி விட்டார்கள் ஐயா!”
“அதனால் என்ன? அவர்கள் வழிபாடு நடத்த வேண்டாமா? சகிப்புத்தன்மையே உங்களுக்குக் கிடையாதா? அரசாங்க நிலம் தானே, உடனே ஒரு பக்கத்தில் மனு ஒன்றைக் கொடுத்து விடுவோம். அதிலேயே அதில் கட்டுவதற்கான அல்லது கட்டியதை நியாயப்படுத்தியதற்கான ஆணையை வாங்கி விடுவோம்.”
ஆயிரக் கணக்கில் அடுக்கடுக்காக, ஆதாரங்களுடன் பாரத நாடு முழுவதும் செக்குலரிஸத்தின் பேரால் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் தவறாக எதைச் செய்தாலும் அதைச் சொல்வது கூட செக்குலரிஸத்திற்கு எதிரானது என்பது எப்போது போகும்?
ஏன் இந்த தேசத்தை ஹிந்து ராஷ்டிரம் என்று அறிவிக்கக் கூடாது?
ஒரு ஹிந்துவுக்கு ஏசுவும் தெய்வம் தான்; அல்லாவும் தெய்வம் தான்; புத்தரும் தெய்வம் தான், சிவனும் விஷ்ணுவும் விநாயகரும், முருகனும், துர்க்கையும் தெய்வம் தான்.
ஆனால் கிறிஸ்தவர்களுக்கோ ஏசு ஒருவரே ரக்ஷிப்பவர். அவரை ஏற்காவிட்டால் ஏற்காதவர்கள் பாவிகள்.
முஸ்லிம்களுக்கோ அல்லாவை ஏற்காதவர்கள், காபிர்கள்.
ஆக அனைவரையும் மதித்து போற்றி உயர ஏற்றி வைப்பவர்கள் ஹிந்துக்களே!
ஆனால் அவர்களுக்கு மத வழிபாட்டில் சுதந்திரம் இல்லை; கோவிலுக்கும் அதன் சொத்துக்கும் பாதுகாப்பு இல்லை.
கோவிலின் பிரகாரத்தில் பிரம்மாண்டமான கார்; கோவில் சொத்தில் அதிகாரிக்கு கார். அது நிற்கும் இடம் கோவில் பிரகாரம்.
கோவில் அர்ச்சகருக்கு நினைக்கவே நெஞ்சம் பதறும் வகையில் குறைந்த சம்பளம்!
யூடியூபில் ஆதாரத்துடன் காண்பிக்கப்படும் இது போன்ற காட்சிகளை நூற்றுக் கணக்கில் பார்க்கிறோம்.
ஆனால் ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து இதைத் தட்டிக் கேட்பதில்லை.
தட்டிக் கேட்கும் ஹிந்து முன்னணி போன்ற இயக்கங்களுக்கு உரிய விதத்தில் ஆதரவும் தருவதில்லை.
ஒரு பெரிய வாதம் முன் வைக்கப் படுகிறது.
என்ன அது?
அஹிம்ஸா பரமோ தர்ம: என்ற உலகப் பிரசித்தி பெற்ற ஸ்லோக வரி எடுத்துக் காட்டப் படுகிறது.
ஆனால் செகுலரிஸத்திற்கு என்ன கதியோ அந்த கதி தான் இந்த ஸ்லோகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.
பாவிகள், பாதி ஸ்லோகத்தைத் தான் மேற்கோளாகக் காட்டி ஹிந்துக்களின் வாயை அடைத்து விடுகிறார்கள்.
அஹிம்ஸா பரமோ தர்ம: என்பதற்கு அடுத்தாற் போல வருவதை யாருமே சொல்வதில்லை.
அது என்ன?
“அஹிம்ஸா பரமோ தர்ம: தர்ம ஹிம்ஸா ததைவ ச”
அஹிம்சையே உயரிய தர்மம்; தர்மத்தைச் செய்யும் போது அதைச் செய்ய விடாது ஹிம்சை செய்வதும் தவறு.
செகுலரிஸத்தின் அர்த்தத்தையும் நடைமுறையில் மாற்றி விட்டார்கள்; ஸ்லோகத்தையும் பாதியில் வெட்டி நொண்டி ஆக்கி விட்டார்கள்.
I have posted over 100 paintings out of 220 paintings on the walls of Ramaswami temple at Kumbakonam. There are hundreds of beautiful sculptures on pillars throughout the temple. Thy need full protection.
There is a bad habit among Hindus. They act like goat herds. If someone puts some garland around a statue another person comes and lights a lamp. Third person applies butter or oil on it. The sculpture is completely spoiled.
When there are numerous gods and goddesses in many shrines in the same temple, I don’t know why some do this to many statues.
When I was standing in the Qs in temples like Tiruvannamalai, Kanchipuram and other places, one stupid person suddenly jumps up to touch the gold plated gods in the gate. Then all the people following ‘that goat’ and did the same thing.
We already know the story where a hat/cap vendor lost all his hats or caps because all the monkeys saw him wearing the cap. Each one took one cap. Then when he threw his cap all the monkeys did the same. He collected his caps and cycled away.
We know another story where a Guru tied the cat to the pole before every morning Puja. He did it because it was jumping on his lap. After his death his disciples thought that it was an important ritual part of Puja. They all bought one cat each and tied it in their Puja rooms.
I myself have seen how the Durga shrine in Madurai Meenakshi temple was soiled and spoiled. Somebody said that if a lemon lamp is lighted in Her shrine, girls will get married quickly. Though we can appreciate their faith in God, we should not encourage damaging statues and shrines . I have been visiting the temple for many decades. It started very late and not an old custom.
When we give them 100s of opportunities in the same temple to do rituals in the proper shrines they find short cuts.
When I went to Sri Mushnam temple, 10 to 15 school girls surrounded a small shrine and did some funny things, placing the notebooks, pens, text books on the head , feet, shoulder of the Goddess. When we approached them, they stopped it. After we lef,t they started it again. In course of time the statue may be disfigured.
When I went to Uttarakosamangai Shiva temple to see the famous Nataraja, renovation work was going on. The priest took us around to show he important places. In a dark corridor, a teenage girl was taking a selfie with a particular goddess. Probably she thought it was a short cut for success in exam or love affair etc.
Swami Kripananda Varaiar, Swamil Chitbhavananda and other famous speakers have shown the right path to youngsters. We need more such good speakers.
Temples must display boards not to spoil any statue with oil or flowers etc.
Let us encourage faith in God but should not encourage stupid, unknown, NEW superstitious customs or rituals.
Look at the beautiful sculptures from Kumbakonam Ramaswami Temple. I took these pictures on 19th February 2023.
திருவண்ணாமலைக்கு எத்தனையோ முறை போய்விட்டேன். ஆனால் 2022 இந்திய விஜயத்தின்போது நான் உள்ளே நுழையும் போது சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமக் கதவைப் பூட்டிவிட்டார்கள். எல்லோரும் தட்டு நிறைய தயிர் சாதம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். என்னையும் என் மனைவியையும் பிரசாதம் வாங்கிக் கொள்ளுங்கள், முடியப்போகிறது என்று சொன்னார்கள். நாங்கள் சென்றதோ அருட் பிரசாதத்துக்கு; பொருட் ப்ரசாதத்துக்கு அன்று. ஆகையால் உள்ளே சென்று கம்புக்கிராதி வழியாக பூட்டிய சந்நிதியைப் பார்த்தோம். திருப்தி இல்லை.
ஆகையால் 2023 பிப்ரவரி இந்திய விஜயத்தின்போது , ஒரே நோக்கத்தோடு, சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரம தரிசனம் என்னும் ஒரே நோக்கத்தோடு ,காரை எடுத்துக்கொண்டு சென்னையிலிருந்து பறந்தோம். என்னுடன் வர வேண்டியவர்களால் வர முடியவில்லை. ஆக நானும் டிரைவரும் மட்டும்தான்.
திருவண்ணாமலையில் இரண்டே மணி நேரத்துக்குள் என்ன செய்ய முடியும் என்று திட்ட மிட்டோம். மாலை 3 மணிக்குப்பின்னர் அண்ணாமலை குன்றினை காரிலிருந்து தரிசித்தோம். ரமணாஸ்ரமம் இரண்டு மணிக்கே திறக்கும் என்பதால் முதலில் ராமணருடைய ஆசிரமத்துக்குள் நுழைந்தேன்.
இந்த முறை இந்தியப்பயணத்தில் வினோத அனுபவங்கள்; நான் சென்ற 30 கோவில்களில் ஆகம ரீதியிலான பக்தி மார்க்கம் . அதாவது தேங்காய், பூ, பழம் , தட்டு, நெய் தீப ஆராதனை (Ritual worship)முதலியன.
கோவிந்தபுரம் முதலிய இட ங்களிலோ ஆட்ட பாட்டங்களுடன் (Dance and Music) சேர்ந்த பஜனை வழி பக்தி. இது முன்னர் சொன்னதிலிருந்து வேறுபட்டது.
ரமண ஆச்ரமத்திலோ வித்தியாசமான ஞான மார்க்கம். அவரது சமாதிக்கு முன்னர் தியான மண்டபத்தில் (Meditation) உட்கார்ந்துகொண்டு “நான் யார் ? Who am I ? என்று சிந்திக்க வேண்டும். மெளனமான தியானத்தின் மூலமே ஆனந்தம் பெறலாம். மனத்தை உட்புறமாகத் திருப்பி உன்னையே நீ எண்ணிப்பார் ; நாம் எல்லோரும் பிறந்ததே ஆனந்தத்துடன்தான். அதைத் தேடத் தேவையே இல்லை . மூடி மறைத்ததுள்ள திரைகளை அகற்றினால் போதும்” என்ற உபதேசம்.
நானும் தியான மண்டபத்தில் அமர்ந்து சுமார் 50 பேருடன் அரை மணி நேரம் தியானம், துதிப்பாடல் மனனம் ஆகியவற்றைச் செய்துமுடித்தேன்.
எனக்குப் பின்பக்கத்தில், தியான மண்டபத்தில், ஒரு நாய் மிகவும் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் மட்டும் அவ்வப்போது திரும்பிப் பார்த்துக்கொண்டே தியானம் செய்தேன் . வழக்கமான விஷ்ணு சஹஸ்ர நாமம் முதலியவற்றைப் படித்தேன்
முதல் தடவையாக ரமண ஆஸ்ரமம் முழுவதையும் சுற்றிப்பார்த்தேன் காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்ற பாரதி வாக்கினை அங்கே செயலில் கண்டேன் . ரமணர் நேசித்த பல பிராணிகளின் சமாதிகள் பின்புறத்தில் மண்டபங்களுடன் அமைக்கப்பட்டிருந்தன . காகத்தின்(Crow ) சமாதியையும் பல பிராணிகளின்
சமாதிகளையும் கண்டேன் . அங்கு ரமண பக்தர்களின் சமாதிகளும் இருக்கின்றன .
ரமணர் தொடர்பாக என் தந்தை வாங்கிச் சேகரித்த பொக்கிஷம் அனைத்தும் என் சகோதரர்களிடம் இந்தியாவில் இருந்ததால், லண்டனுக்கு எடுத்துவர, ஒரு தமிழ், ஒரு ஆங்கிலப் பொன்மொழி புத்தகங்களையும் அங்குள்ள புத்தகக கடையில் வாங்கினேன். அருமையான புத்தகங்கள். (அதிலுள்ள தமிழ் ஆங்கிலப் பொன் மொழிகளை போன மாத, இந்த மாத காலண்டர் பகுதியில் என் பிளாக் BLOG குகளில் காணலாம் ).
மணி 4 ஆகிவிட்டது. சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் GATE கேட் திறந்தவுடன் முதல் ஆளாக உள்ளே நுழைந்தேன். என்னுடன் 3, 4 பேர் மட்டுமே இருந்தனர் . அவருடைய சமாதி அமைந்த கோவில் இது. பல முறை அவரது கோவிலை வலம் வந்தேன் அலுவலத்துக்குச் சென்று காணிக்கை செலுத்தி ரசீதும் பிரசாதமும் பெற்றுக்கொண்டேன் . பரம திருப்தி
சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை முழுதுமே அற்புதச் செயல்கள் நிறைந்தது; இதே பிளாக்கில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய கட்டுரைகள் இருப்பதால் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் வரலாற்று அற்புதங்களைத் திருப்பி எழுதத் தேவை இல்லை..
அங்கு உமாதேவியார் , கண்ணாடி சுவாமிகள் என்று பல பக்தர்கள், சித்தர்களின் சமாதிகளும் இருக்கின்றன .
அவரை நம்பி வேண்டிக்கொண்டபோது எனக்கும் அவை நிறைவேறியதால் அபரிமித நம்பிக்கை. அவருடைய வரலாற்றை முறையாக விவரிக்கும் சேஷாத்ரி சுவாமிகள் சரிதத்தை எனது அண்ணன் சீனிவாசன் எப்போதும் படித்து எங்களுக்குச் சொல்லுவான். ஏய் , உன் பைபிள் எங்கே? என்று கிண்டல் செய்வோம். அந்த ஒரிஜினல் புஸ்தகம் இப்போது கிடைப்பதில்லை.. ஆக 60 ஆண்டுக்கால பக்தர்கள் நாங்கள். ரமண மகரிஷி புஸ்தகங்களையும் எனது தந்தை தினமணி சந்தானம் வாங்கிக் குவித்து வைத்திருந்தார்.
60, 65 ஆண்டுகளுக்கு முன்னர், மதுரையிலுள்ள சொக்கப்ப நாயக்கன் தெரு ரமணர் வீட்டில் உட்கார்ந்து தியானம் செய்தபோதும் அவருடைய உபதேசங்களை இப்போதுதான் படிக்கிறேன்.
இன்னும் விட்டுப்போன ஒரே ஆஸ்ரமம் யோகி ராம் சுரத் குமார் ஆஸ்ரம ம்தான் .
பின்னர் நேராக திருவண்ணாமலைக் கோவிலில் நுழைந்தேன். பல முறை தரிசித்த கோவில் என்பதால் நேராக சுவாமி, அம்மன் சந்நிதிகளைத் தரிசித்துவிட்டு சென்னை திரும்பினேன்.
பிரம்மாண்டமான கோவில். எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். எப்படி எனில் ……………
லண்டன் அருகிலுள்ள ஒரு ஊரில் வசிக்கும் ஈஸ்வரி கமல பாஸ்கரன் என்ற இந்துப் பெயருடைய ஒரு ஆங்கிலப் பெண்மணி திருவண்ணாமலை கோவில் பற்றி எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்துக் கொஞ்சம் புண்ணியம் சம்பாதித்து இருந்தேன். அதில் எழுதிய விவரங்கள் எல்லாம் வேகமாக மனத்திரையில் ஓடின.
சென்ற முறை கிரிவலம் பற்றி எழுதி புகைப்படங்களையும் இங்கே போட்டிருக்கிறேன்.
அண்ணாமலைக்கு அரோஹரா என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறி ‘சிட்’ டாகப்பறந்தேன் சென்னைக்கு.
–சுபம்—
Tags- திருவண்ணாமலை, கோவில், ரமண, ஆஸ்ரமம் , சேஷாத்ரி சுவாமிகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நித்யானந்த மர்மம்!
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா! – 2
ச.நாகராஜன்
ஜெனிவாவில் உள்ள ஐக்கியநாடுகளின் சபையில் அவ்வப்பொழுது பல மாநாடுகள், கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.
சென்ற மாதம், பிப்ரவரி 2023இலும் அப்படிப்பட்ட கூட்டங்கள் நடைபெற்றன.
Committee on Economic, Social and Cultural Rights (CESCR) மற்றும் Committee on the Elimination of Discrimination against Women (CEDAW) ஆகியவற்றின் கூட்டங்களும் ஜெனிவாவில் யு.என். தலைமை அலுவலகத்தில் நடைபெற்றன.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பலாய்ஸ் வில்ஸன் (Palais Wilson Building) கட்டிடத்தில் மாநாடுகளின் பங்கு பெறுவோர், என் ஜி ஓக்கள், நிரந்தரமான குழுக்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பல நாடுகளிலிருந்தும் வந்திருக்க, அந்த அறையே ஜே ஜே என்று இருந்தது.
அதில் ஒரு விசித்திரமான காட்சி இந்தத் தடவை இருந்தது. பத்து பன்னிரெண்டு பெண்மணிகள் ஆரஞ்சு வண்ண சேலைகளைக் கட்டிக் கொண்டு தங்க நகைகளை அணிந்து கொண்டு முடி அலங்காரம் செய்து கொண்டு திலகம் தீட்டிக் கொண்டு வந்திருந்தனர். அவர்கள் பின்னால் இருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் இருந்த போர்டு ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாஸா” என்று இருந்ததால் அந்த நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் அவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. விஜயபிரியா நித்யானந்தா தான் அந்த நாட்டின் நிரந்தர தூதுவர்.
அவர்கள் தங்களது சுப்ரீம் மதகுரு எப்படி எல்லாம் ஹிந்து விரோத சக்திகளால் கொடுமைப்படுத்தப் படுகிறார் என்று எடுத்துரைக்க ஆரம்பித்தனர்.
சோஷியல் மீடியா அசந்து போனது.
கைலாஸா நாடு இல்லவே இல்லையே உலக வரைபடத்தில்?
நித்யானந்தா தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடர் அருகே ஒரு இடத்தை வாங்கி ‘கைலாஸாவை’ நிர்மாணித்தார் என்று சொல்லப்படுகிறது.
ஈக்வேடாரோ அவர் வந்தது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டது.
ஆனால் எந்தத் தீவையுமோ அல்லது இடத்தையோ அவருக்கு விற்கவில்லை என்று உறுதிபடச் சொன்னது.
ஈக்வேடாருக்கு ஏன் நித்யானந்தா சென்றார்? அந்த நாட்டுடன் தேவையானோரை திருப்பி அழைக்கும் உடன்படிக்கையை இந்தியா செய்து கொள்ளவில்லை என்பது தான். ஆகவே அங்கு சென்று புகலிடமாக அதை அடைந்த ஒருவரை இந்தியாவிற்கு நினைத்தபடி மீண்டும் கொண்டு வர முடியாது.
அது சரி, ஐநா சபை கூட்டங்களில் கைலாஸா நாட்டினர் எப்படிக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்?
இதற்கு ஐ நா அதிகாரிகள் பதில் கூறி விட்டனர்.
இது போன்ற கூட்டங்களில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், தங்கள் பிரச்சினைகளைப் பற்றி மனுக்களைத் தரலாம். அவற்றைப் பெற்ற பின்னர் அவற்றின் உண்மைத் தன்மை பற்றி அதற்கான குழுக்கள் ஆராயும் என்றனர் அவர்கள்.
VIJAYAPRIYA
இது ஒரு புறமிருக்க கைலாஸா நாடு அமெரிக்காவில் உள்ள 30 நகரங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது.
நெவார்க் நகரம் (Newark City) ‘Sister City’ ஒப்பந்தம் ஒன்றை கைலாஸா நாட்டுடன் செய்து அலுவலக சீல் சகிதம் நிறைவேற்றியுள்ளது.
ஒப்பந்தம் முடிந்த ஆறாம் நாளில் தான் அந்த நகரம் கைலாஸா நாடு பற்றிய ‘உண்மையை’ அறிந்து திகைத்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அறிந்து சங்கடப்பட்டது.
ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அனுப்பிய கைலாஸா நாட்டு ஈமெயில் தாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளது.
கைலாஸா நாடு எல்லையே இல்லாத சேவையையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு உண்மையான நாடு என்று அது தெளிவுபடுத்தியது.
கைலாஸா நாடு ஒவ்வொரு ஆண்டும் வரும் ஜனவரி 3ஆம் தேதியை நித்யானந்தா டே என்று அறிவித்துள்ளது.
கைலாஸா நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் அதன் அதிகாரபூர்வமான விமான சர்வீஸான கருடாவில் ஏறிச் செல்லலாம்.
மூன்று நாட்கள் தங்கலாம்.
தங்குமிடம், உணவு இலவசம்.
பாஸ்போர்ட், விசா எல்லாம் உண்டு.
என்றாலும் கூட கோவிட் பாதிப்பு உலகையே கலக்கிய காலத்தில் இந்தப் பயண அனுமதி நிறுத்தப்பட்டது.
யார் என்ன சொன்னாலும் நித்யானந்தாவின் உறுதியான சீடர்கள் உலகெங்கும் உள்ளனர். சென்னையிலும் உள்ளனர்.
அவர்களில் பலர் – பெண்மணிகள் உட்பட – நித்யானந்தாவின் உருவத்தைத் தங்கள் கைகளில் பச்சை குத்திக் கொண்டுள்ளனர்.
உலகின் ஒரே ஹிந்து தேசம் என்று தன்னை உறுதிபடச் சொல்லும் கைலாஸா தங்கள் நாடு சிறந்த முறையில் திறம்பட உலக நன்மைக்காக இயங்குகிறது என்று கூறுகிறது.
**
நன்றி, ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை, 26-3-2023 இதழ்
கட்டுரை தலைப்பு:
“Decoding the fictional country of Kailasa that catfished 30 US cities”