BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN AND S NAGARAJAN ARE DISPLAYED IN STALL NO.499 AT CHENNAI BOOK FAIR..
ONLY 20 BOOKS ARE DISPLAYED OUT OF 200++++ BOOKS WRITTEN BY BOTH OF US.
IF YOU WANT PRINTED BOOKS PLEASE LET THEM KNOW WHEN YOU VISIT PUSTAKA.CO. STALL
ONLY FOR PRINTED BOOKS, YOU HAVE TO INFORM THEM.
YOU MAY GIVE YOUR NAME , E MAIL OR MOBILE PHONE NUMBER WITH THE BOOK NAME/S YOU WOULD LIKE TO BUY.
BOOKS ARE ALWAYS AVAILABLE ON LINE.
PLEASE NOTE THE BOOK FAIR ADDRESS GIVEN ABOVE.
POSTED ON 6-1-2023
சென்னை புத்தகக் காட்சி 2023 –
நாள் : 06-01-2023 முதல் 22-01-2023 நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்: ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 600035.
Another name given to such spirits is சூர் Suur; they live in mountainous areas. Tamils believed that they even kill people. Even the mountain goats won’t touch the plants grown in such Suur inhabited areas in the hills.
“உருமும், சூரும், இரைதேர் அரவமும்,
வழுவின் வழாஅ விழுமம், அவர்
குழுமலை விடரகம், உடையவால் எனவே”
(குறிஞ்சி.255-261) kurinjip
Xxxx
Mountain goats won’t eat the plants
“வாடல கொல்லோ தாமே –அவன் மலைப்
போருடை வருடையும் (mountain goats) பாயா,
கூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே?’
(நற்.359:7-9) natri
xxxx
They also scare you to such an extent that you would shiver and shake at the sight of them
சூர்ப்பனிப்பு அன்ன தண்வரல்.
ஆலியொடு(அ௧.304:3)
Xxx
KARAIKKAL AMMAIYAR
One man compares his lady love to Suurara Makalir (Suur Nymphs) who is not only a rare being but also troublesome
Tamil men used such divine women to make vows or promises . A man holding his lady love’s hand and says I swear in the name of Suur Nymphs
“எக்கர் நண்ணிய எம்ஊர் வியன் துறை,
நேர்இறை முன்கை பற்றி,
சூரர மகளிரோடு உற்ற சூளே‘ (குறுந்.53:5-7)
xxx
One may be reminded of the great Saivite Woman Saint Karaikkal Ammaiyar (Madame of Karaikkal- previously French ruled territory in Tamil Nadu). When she got one mango fruit in a miraculous way, her husband refused to live with her saying she is a divine woman. Then she assumed the form of an ugly woman and called herself Peyaar= Miss Ghost.
Tamils gave us detailed description of the Suur Ladies’ appearance as well. They wear red colour Kanthal flowers and blue colour Kuvalai flowers on their hair and dance to the tune of thundering waterfalls.
“கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தட்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டி,
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்’ (நற்.34:1-5),
xxxx
Tiru murugatrupadai gives us more details about their dance. They wear red sarees, and body full of jewels from head to foot. The scene is an enthralling one according to poet Nakkirar.
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி,
கணைக்கால், வாங்கிய நுசுப்பின். பணைத்தோள்.
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்:
பல் காசு நிரைத்த சில்காழ் அல்குல்.
கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்,
நாவலோடு பெயரிய பொலம்புனை அவிர் இழை.
சேண் இகழந்து விளங்கும் செயிார் தீர் மேனி
குரர மகளிர் ஆடும் சோலை — (முருகு Murugu. 12-41)
To be continued…………………………………………………………
Tags- Attacking, troublesome, Nymphs, Sur Women, attacking women, வருத்தும் தெய்வம், தாக்கு அணங்கு, சூரர மகளிர்
ஒருமுறை, பகவான் ரமணரிடம் அமிர்த நாத யதீந்திரர் என்னும் பெரியவர் ஒருவர் வந்தார்.
‘ரமணன் யார்?’ என்று கேட்டு ஒரு பாட்டை எழுதிக் கொடுத்தார்.
அதற்கு ரமணர் உடனடியாக அருளித் தந்த பதில் இது:
‘அரியாதியி தரசீவர தகவாரிச குகையில்
வறிவாய்ரமி பரமாத்தும னருணாசல ரமணன்’
இப்படி எங்கும் ஒளிரும் பரமாத்மனே தானாய் ஒளிர்வதை அவரே இந்தப் பாடல் மூலம் விளக்கி அருளி விட்டார்.
ஆனால் அன்றாடம் அன்பர்கள் வந்து பேசும் போது அவர், ‘நான் இதைக் கேட்டேனே, நான் அதை எழுதினேனே’ என்பார்.
இங்கு அவர் குறிப்பிடும் நான் என்ற சொல் அன்றாட வாழ்க்கைக்கு உரியதான நடைமுறை வழக்கில் இருக்கும் விவகாரச் சொல்.
ஆனால் உண்மையில் அவர் நான் என்று எப்போதும் தன்மயமாய் பிரகாசிக்கும் ஆன்மாவிலேயே உறைந்திருந்தார் என்பதுவே உண்மை.
பிரம்மத்தை அறிந்த ஞானி அதற்குப் பின்னர் நாம் கண்ணால் காணும் உலகைக் காண மாட்டான்.
ஆனால் ஒரு அஞ்ஞானியோ தனது கற்பனா உலகையே உண்மை என்று எண்ணுவதால் ஆதாரமான உலகை அறிய மாட்டான்.
இதுவே ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் உள்ள வேறுபாடு.
ஒரு அஞ்ஞானி ஞானியாக முடியுமா?
முடியும் என்று அருளினார் மஹரிஷி.
எப்படி என்ற கேள்விக்கும் அவர் விடையைத் தெளிவாகத் தந்துள்ளார்.
‘நான் யார்’ என்ற விசாரத்தைப் பயிற்சியாக மேற்கொள்.
அப்போது உன்னை நீ யார் என்று உணர்வாய்”
இதுவே அவரது உபதேசம்.
இதில் ஒரு பெரிய அதிசயம் என்னவெனில் இந்தப் பேருண்மையை, அறிதற்கு அரிய ரகசியத்தை அவர் எந்த நூலையும் படித்து அறியவில்லை; யாரையும் நாடித் தெரிந்து கொள்ளவில்லை.
அருணாசலனின் கருணையால் தன் அனுபவத்தால் சுயமாக உணர்ந்து கொண்டார்.
அதை கருணை மனத்துடன் உலகினர் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
ரமண மஹரிஷி பிறந்த நாள் ; 30-12-1879 – திருவாதிரை நன்னாள்
உலகப்புகழ் பெற்ற வரலாற்று அறிஞர், தொல்பொருட் துறை பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி இன்று நம்மிடையே இல்லாத போதும் அவர்தம் ஆராய்ச்சி அரிய பல தகவகல்களைத் தந்த வண்ணமுள்ளன. அவர் சிவபுரம் நடராஜர் சிலையை லண்டன் கோர்ட்டில் வாதாடி வென்ற கதை அனைவருக்கும் தெரியும். நான் இப்போது சொல்லப்பபோவது வேறு கதை.
கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா ? ஆண் முதலில் பிறந்தானா , பெண் முதலில் பிறந்தாளா? என்பதெல்லாம் திருப்திகரமான பதில் சொல்ல முடியாத கேள்விகள் . இதே பாணியில் நடராஜர் சிலை முதலில் வந்ததா, ஆடல் வல்லானின் வர்ணனை முதலில் வந்ததா? என்பது அறிஞர் பெருமக்கள் விவாதிக்கும் ஒரு விஷயம்.
நடராஜர் சிலை என்பதை இன்று கல்லிலும் விக்ரகத்திலும் கண்டு உலகமே வியக்கிறது. இது சோழர் காலத்தில் வந்தது என்பது பெரும்பாலோர் நம்பிக்கை. “இல்லை இல்லை அதற்கும் பின்னர் வந்தது” என்பர் வெள்ளைக்காரர்கள் . கிபி.600-ல் ஞான சம்பந்தர் காலத்திலேயே நடராஜர் என்ற சொல் புழக்கத்தில் இருந்ததை தேவார பாடல்கள் பாடல்கள் மூலம் காட்டுகிறார டாக்டர் இரா. நாகசாமி. அவர் எழுதிய ஆங்கில நூலில் (Tamil Nadu The Land of Vedas) இது பற்றி விரிவான கட்டுரை எழுதியுள்ளார்.
அதைப் படித்துவிட்டு, சிதம்பரத்தில் பல அற்புதங்களைச் செய்த மாணிக்க வாசகர் இது பற்றி சொல்லி இருக்கிறாரா என்று பார்த்தால் அவரும் ஆடல் வல்லானை, நட ராஜப் பெருமானை நாம் இன்று சிலையில் காண்பது போலவே வருணிக்கிறார் . தேவார மூவருக்கும் , காலத்தால் முந்தியவர் மாணிக்க வாசகர்.
முதலில் டாக்டர் நாகசாமி சொல்வதன் சுருக்கத்தைத் தருகிறேன்
கலை வரலாற்றை எழுதிய சில மேல்நாட்டார் (Art Historians) நட ராஜ என்ற சொல் 14-ஆவது நூற்றாண்டினை ஒட்டி எழுந்தது . ஆகையால் இதில் வைதீக தொடர்பு (Nothing to do with Vedic Tradition) — ஏதுமில்லை என்று கூறுவார்.கள் . ஆனந்த குமாரசாமி காட்டிய சில இலக்கியக் குறிப்புகளை பார்த்தும் கூட நடராஜ என்ற சொல் பிற்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டது என்பர்.
சம்பந்தர் தேவாரத்தில் நடனம் ஆடிய ராஜா என்றே குறிப்பிடுகிறார் . ஆகவே கி.பி.600க்கு முன்னதாகவே இந்த தத்துவம் இருந்தது தெரிகிறது .
இதோ திருப்புகலி திருத்தலப் பாடல்
திருப்புகலி –தேவாரம் 1-30-9
324 மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்
தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி
நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்
பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே. 1.30.9
நடம் ஆடிய வேந்தன் = நட ராஜா ;
(வேந்தன்= ராஜா)
Xxxx
சம்பந்தர் ஊரான சீர்காழியில், அவர் பாடிய பாடலில் சொக்க நிருத்த நடனம் பற்றிப் பாடுகிறார். இது பரத முனி எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தில் உள்ளது நாட்டிய சாஸ்திரத்தின் ஆறாவது அத்தியாயத்தில் சுத்த ந்ருத்தத்தை , சிவ பெருமான், நந்தி கேஸ்வரருக்குச் சொல்லிக்கொடுத்து, அவர் அதை பரத முனிக்குக் கற்பித்ததாக காணப்படுகிறது. இதோ சீர்காழி திருத்தலப் பாடல் :-:-
சீறு ஆர் வீறு ஆர் போர் ஆர் தாருகன் உடல் அவன் எதிரே
புக்கிட்டே வெட்டிட்டே, புகைந்து எழுந்த சண்டத்தீப்
போலே, , நீர், தீ, கால், மீ, புணர்தரும் உயிர்கள் திறம்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை செங்கதத்
தோடு ஏயாமே, மா லோகத் துயர் களைபவனது இடம்
கைக்கப் போய் உக்கத்தே கனன்று மிண்டு தண்டலைக்
காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே. 1-126-5
பின்னர் டாக்டர் சாமி, சுத்த நிருத்தம் , 108 கரணங்களில் இருப்பது பற்றி விளக்குகிறார். அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் சொக்க தாண்டவம் என்பதும் கி.பி.600க்கு முந்தியதுதான் என்பதை சம்பந்தர் தேவாரம் காட்டுவதாச் சொல்கிறார்.
திருச்சிற்றேமம் என்னும் தலத்தில் சம்பந்தர் பாடிய பாடல் அனைத்திலும் சிவன் ஆடலைக் குறிப்பிடுவதோடு அவருடைய முக்கியப் பணியே அது தான் என்றும் பாடுகிறார்:–
தேவாரம் மூன்றாம் திருமுறை
42. திருச்சிற்றேமம் – கொல்லிக்கௌவாணம்
3244. நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக்
குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்-
சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ்
சிற்றேமத்தான்;
“இறைவன்!” என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே. 3-42-1
கடுவெங்கூற்றைக் காலினால் காய்ந்த கடவுள் அல்லனே! 3-42-3
Xxx
Shiva likes dance of others as well
இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாகசாமி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.. சிவனுக்கு, தான் ஆடுவது மட்டும்தான் பிடிக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. அழகான பெண்கள் பாடிக்கொண்டே ஆடுவதையும் சிவன் ரசிக்கிறாராம் . இதோ அந்தப் பாடல் .
2649.
பங்கயம்மலர்ச்சீறடி, பஞ்சு உறு மெல்விரல், அரவு அல்குல், மங்கைமார் பலர் மயில், குயில், கிளி, என மிழற்றிய மொழியார், மென் கொங்கையார் குழாம் குணலை செய் கோட்டூர் ;நற்கொழுந்தே! என்று எழுவார்கள் சங்கை ஒன்று இலர் ஆகி, சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே.
(அவருடைய ஆங்கிலக்கட்டுரையை மொழிபெயர்ப்பதில் ஏதேனும் தவறு இருக்குமானால் அது என்னுடையதே)
xxxxx
என் கருத்து
சிவனை நாம் இன்று நடராஜராகக் காண்பதும் சிதம்பரத்தில் அவர் நடனமாடும் காட்சி கொடுப்பதும் சோழர் காலத்துக்கும் முந்தியது. அதாவது மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்துக்கும் முந்தியது.. அப்பர், சம்பந்தர் தேவாரம் மட்டுமின்றி காலத்தால் அவருக்கும் முந்தி வாழ்ந்த மாணிக்க வாசகர் பாடலிலும் இதே செய்தியைக் காண்கிறோம். குறிப்பாக மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பாடிய திருவெம்பாவையில் இந்த ஆடல் செய்தி வருவது டாக்டர் நாகசாமி சொன்ன செய்திக்கு மேலும் வலுவூட்டுகிறது
திருவெம்பாவை பாடல் 12
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல்தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டுஆர்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்
சிதம்பரத்தில் அவர் பாடிய பாடல் இது. கையில் அனலை வைத்துக்கொண்டு ஆடும் கூத்தன் என்பதால் நாராஜர் உருவத்தைக்கண்டே பாடியிருக்க வேண்டும் . இதோ மேலும் தெளிவான பாடல்,
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்
பதப்பொருள் : காது ஆர் குழை ஆட – காதில் பொருந்திய குழை அசையவும், பைம்பூண் கலன் ஆட – பசிய பொன்னால் ஆகிய அணிகள் அசையவும், கோதை குழல் ஆட – பூமாலை கூந்தலில் இருந்து அசையவும், வண்டின் குழாம் ஆட – மாலையைச் சுற்றும் வண்டின் கூட்டம் அசையவும்,
இதில் உடல் பகுதிகள் மட்டுமின்றி அணிகலன்களின் ஆட்டத்தையும் காண்கிறோம் ; தற்போது நமக்குக் கிடைக்கும் நடராஜர் விக்ரகங்களில் அவர் சடை கூட இரு புறமும் பறப்பதைப் பார்க்கிறோம் . தேவார மூவருக்கும் , காலத்தால் முந்தியவர் மாணிக்கவாசகர்.
இது ஒருவர் கற்பனையில் உதித்த காட்சி அல்ல என்பது நால்வர் வர்ணனையிலும் வருவதால், — தில்லைக்கூத்தன் சிலை — அதாவது நடராஜர் வடிவம்—- சம்பந்தர் காலத்துக்கும் முன்னரே இருந்திருக்க வேண்டும் அதிகை வீரட்டானத்தில்கூட , ஆடும் காட்சியை சம்பந்தர் பாடுகிறார்.
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்
கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வனின் றாடும்வீரட் டானத்தே. 1.46.7
இதில் வரும் அருமையான வரி, உமா பாட, சிவன் ஆடினார் என்பதாகும். அதிகை வீரட்டானத்தில் சம்பந்தர் பாடிய தேவாரம் இது.
ஆக சிவன் ஆடிய காட்சி, சுவற்றில் படமாகவோ கற்சிலையாகவோ, விக்ரகமாகவோ எங்கும் இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் அது மேலும் மேலும் மெருகேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அப்பர் பாடிய காலத்துக்குப் பின்னர் வந்த கங்கை கொண்ட சோழபுரத்தில்குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமின் சிரிப்பும் என்பதை அப்படியே காண முடிகிறது உலகிலேயே அழகான, அற்புதமான சிலை அது.
1977ம் ஆண்டில் எங்கள் 45 பேரை டாக்டர் இரா நாகசாமி தமிழ்நாடு தொல்பொருட் துறை பேருந்தில் திருவனந்தபுரம் முதல் சிதம்பரம் வரை சுற்றிக் காட்டியபோது இச்சிலையின் முன் நின்று அப்பர் தேவாரத்தை எடுத்துரைத்தார் ; கண்களை விட்டு அகலாத காட்சி அது.
ஆருத்ரா தரிசன நாளான இன்று அவன் ஆடலை மனக்கண் முன் கண்டு பாடிப் பரவுமோவாக
–subham—
Tags- நடராஜா , நடனம் , வேந்தன், டாக்டர் நாகசாமி, , நிருத்தம்
ஜோதிடம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு; முதலாவது வானில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்களின் பாதையைக் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப யாக யக்ஞங்களைச் செய்வது. இரண்டாவது அப்படி உலவும் கிரகங்கள் நட்சத்திரங்களைக் கொண்டு இனி என்ன நடக்கும் என்பதைச் சொல்லுவது (Future Predictions) ஆகும். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது.
உலகிலேயே ஜோதிடத்தை சிலபஸில் — பாட திட்டத்தில் சேர்த்தது இந்துக்கள்தான். வேத பாடசாலைக்குச் செல்லுவோர் ஆறு துணைப்பாடங்களைப் (Six Ancillary Subjects) படிக்க வேண்டும். அப்போதுதான் குருநாதர் கான்வ கேஷன் Convocation தினத்தன்று (பட்டமளிப்பு விழா) சர்ட்டிபிகேட்டைக் கையில் கொடுப்பார் .
தமிழர்களைப் பொருத்த மட்டில் சங்க காலத்திலேயே இந்த நம்பிக்கை ஆழ வேரூன்றிவிட்டது.சங்க இலக்கியத்தில் நூற்றுக்கனக்கான சோதிடக் குறிப்புகளைக் காண்கிறோம். சகுன சாஸ்திரம், பறவை சாஸ்திரம், பல்லி ஜோதிடம், குறி கேட்டல், மணல் ஜோதிடம், கயிறு சோதிடம், சோழி ஜோதிடம் என ஏராளமான விஷயங்களை நம்முடைய இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஸம்ஸ்க்ருதத்தை விட அதிகமான பெயர்களை நட்சத்திரப்பட்டியலில் காண முடிகிறது. தும்மல் சாஸ்திரம், கண்துடிப்பு சாஸ்திரம், சகுனங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்றுவரை சூரிய சந்திர கிரகங்கணளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும் சோதிடர்கள் பொய் சொல்ல முடியுமா? என்ற வினாவை எழுப்புகிறார் அம்பலவாணர்.
இதே போல, ஒவ்வொரு சாஸ்திரத்துக்கும் எது நிதர்சனமான சான்று (unquestionable evidence) என்றும் அடுக்குகிறார் அம்பலவாணர். பேதிமருந்தின் பலனைப் பார்த்தாலேயே வைத்திய சாஸ்திரம் உண்மை என்பதை அறிவீர்கள்; ஒருவன் ஏன் அரசனாக இருக்கிறான், இன்னும் ஒருவன் ஏன் அடிமையாக இருக்கிறான் என்பதே பாவ புண்ணியத்தைக் காட்டிவிடும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பொன்மொழியும் “அறத்தாறு இதுவென வேண்டா” என்ற வள்ளுவன் குறளும் (37) பாவ புண்ணிய பலன்களைச் சு ட்டிக்காட்டுகின்றன.
அரிச்சுவடியில் ஹரி என்றோ ஓம் நமோ நாராயணா என்றோ எழுதுவதன் மூலம் திருமாலின் பெருமையும், யஜுர் வேதத்தில் நம சிவாய என்ற மந்திரத்தைத் தாங்கிவரும் ருத்ரம் -சமகம் என்ற மந்திரத்தின் மூலம் சிவ பெருமானின் பெருமையும் புலப்படும் என்கிறார்
Xxxxx
அடுத்த பாடலில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைக்கிறார். ஒருவர் பிறவியின் காரணமாக குண நலன்கள் வருகிறதா, அல்லது அவரை வளர்க்கும் சூழ்நிலையால் குண நலன்கள் வருகின்றனவா என்ற கேள்விக்கு பிறவிதான் காரணம் என்கிறார் புலவர். தற்காலத்தில் இரண்டையும் (Nature or Nurture) ஆதரித்து கட்டுரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன (Environment or Genetics)
பழங்காலத்தில் கொங்குமண்டலத்தில் சிறப்புற அமைந்துள்ள பகுதி கொல்லி மலை.
இந்தக் கொல்லி மலைக்குப் புகழ் சேர்க்கும் வண்ணம் பெரும் வள்ளலாக வாழ்ந்து வந்தான் ஓரி என்னும் மன்னன்,
தமிழ் நாட்டு மூவேந்தரும் ஆவல் கொள்ளும் படி எல்லா வளப்பமும் பொருந்தியதாக அமைந்திருந்தது கொல்லி மலை. கொல்லிமலையையும் அதனைச் சூழ்ந்த பகுதியையும் ஆண்டு வந்தான் ஓரி.
அவன் அல்லும் பகலும் தமிழை வளர்ப்போர்க்கு அள்ளி அள்ளிக் கொடுத்தான்.
கடையெழு வள்ளல்களில் ஒருவன் என்ற பெயரையும் பெற்றான்.
இவனை ஆதனோரி என்று வல் வில் ஓரி என்றும் கூறுவர்.
அகநானூறு, “ஒரி பல்பழப்பலவின் பயங்கெழு கொல்லி” என்றும் குறுந்தொகை, “ வல்விலோரி கொல்லிக் குடவரை” என்றும் கூறுவதைப் பார்க்கலாம்.
கொல்லிக் குடவரை என்பதால் கொல்லி மலையின் மேற்குப் பகுதியே இவனது பகுதி எனத் தோன்றுகிறது.
கொல்லி மலையின் மேற்குப் பகுதி பூந்துறை நாட்டின் இணை நாடான ஏழூர் நாட்டின் தொடர், ராசிபுர நாட்டின் பகுதி, வாளவந்தி நாட்டின் பங்கான தூசியூர் நாட்டினிடமும் இது பொருந்தியுள்ளது.
கடையெழு வள்ளல்களில் இன்னொருவனான காரிக்கு இவன் பகைவன். பரணர் நற்றிணையிலும் (265ஆம் பாடல்), கபிலர் 320ஆம் பாடலிலும், குறுந்தொகை 100ஆம் பாடலிலும் இவன் சிறப்பிக்கப்பட்டிருக்கிறான்.
கொல்லி மலையின் மேற்குப் பகுதிகள் இன்றும் சிறப்புற இருக்கின்றன. வாளவந்தி நாடு – வலப்பூர் நாடு – அரியூர் நாடு – குண்டூர் நாடு – தேவானூர் நாடு – சேவூர் நாடு – தின்னனூர் நாடு – ஆகிய இந்த ஏழு நாடுகளும் சேலம் மாவட்டத்தில் நாமக்கல் பகுதியில் உள்ளன.
பயில நாடு – பிறக்கரை நாடு – சித்தூர் நாடு – இடைப்புளி நாடு – திருப்பளி நாடு – குண்டுனி நாடு – ஆலத்தூர் நாடு ஆகிய இந்த ஏழு நாடுகளும் ஆற்றூர் பகுதியைச் சார்ந்தனவாக இருக்கின்றன.
இப்படிப்பட்ட ஓரியை கொங்குமண்டல சதகம் பாடல் 43இல் பாராட்டிப் புகழ்கிறது இப்படி:
Children in Britain, including my own children and grand children , don’t know the atrocities the British committed around the world. They aren’t taught the history outside Britain, particularly the history of empire. Teenagers who have watched films like Gandhi may know a little. British children did not know how many Indians they massacred ,how many Zulus they massacred, how many Australian aborigines they had killed etc. The economic plunder was not known even to leaders like Gandhi . Only few Indian Independent Movement leaders highlighted that aspect. In today’s calculations it runs to billions. Even the British wrote that laying railway lines in India was not a charity work. It was a planned move to pump out Indian treasures to England.
Robert Cilve was a rogue and thug. He committed suicide. But yet they have erected many statues for him in Britain in appreciation of his enslaving Indians. Clive was widely loathed during his life time, who according to Samuel Johnson , ‘has acquired his fortune by such crimes that his consciousness of them impelled him to cut his own throat’ and who when he committed suicide in 1774 was ecretly buried in an unmarked grave. But around 300 treasures he robbed are on display in a museum In Wales.
Historian William Dalrymple has described as a real problem the fact that in Britain, study of the empire is still largely absent from the history curriculum. Many historians and public figures praised British empire was glorious. If it was so glorious why not, they teach it to its own children?
Crime against Humanity
On a visit to Algiers in early 2017, French President Macron gave a speech in which he said that his country’s colonialism was a ‘crime against humanity, a real barbarity. It is a past we must confront squarely, and we must apologise to those we have harmed.
Britain has not apologised to Indians. But it apologised for the crimes it did against the Afro Caribbean community.
Warren Hastings, Governor General of India, expressed dismay at how the East India Company was looting Bengal, writing in 1762 of the oppression carried out under the sanction of English name which he has observed in his travels.
This evil, I am well assured is not confined to our dependants alone, but is practised all over the country by people assuming the habit of our sepoys or calling them elves our managers.
Simon J Harrison tells us how in the nineteenth century British soldiers serving in the colonies sometimes collected even enemies body parts. When Hinsta, a chief of the Xshosa in the sixth frontier war of 1834-6 was killed, his ears were cut off as souvenirs. A military surgeon was seen to extract some of his teeth and someone even tried to cut out the emblems of Histas manhood.
Through out the 1846-7 Xhosa War, native heads were taken and traded as trophies , with one Stephen Lakeman, leader of the regiment of irregulars, in the early 1850 s admitting to a campaign of annihilation in the Watercloof and Kat river valleys which involved one of his men carrying a broken sickle to slice the throats of the women and children captured on night patrols:
Tribal Heads were ‘cooked’ for a Doctor
Dr A of the 60th had asked my men to procure him a few native skulls of both the sexes. This was a task easily accomplished. One morning they brought back to camp about two dozen heads of various ages. As these was not supposed to be in a presentable state to the doctor’s acceptance, the next night they turned my vat in a cauldron for the removal of superfluous flesh. And there these men sat, gravely smoking their pipes during the live long night, and stirring round and round the heads in that seething boiler, as though they were cooking black apple dumplings.